Professional Documents
Culture Documents
உடல் நலம் பேணுவோம்
உடல் நலம் பேணுவோம்
சபையோர்களே,
வருகையாளர்களே,
நோயும் மனிதனும் மிக நெருக்கமாக வாழும் காலச் சூழல் இது. காய்ச்சல்
தலைவலி போன்ற சாதாரண வியாதிகளைக் கடந்து இன்று நாளொரு
வியாதியும், பொழுதொரு மருந்துமாய் மனித வாழ்க்கை நகர்கின்றது.
அக்கு பஞ்சர், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மற்றும்
ஆயுர்வேதம் என்று மருத்துவத் துறைப் பட்டியல் நீண்டுகொண்டே
செல்கிறது. தீராத மூட்டு நோய்க்கு நிரந்தரத் தீர்வு, மூன்றே மாதங்களில்
மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஆண்மைக் குறைவை நீக்க
அவசர சிகிச்சை போன்ற பயமுறுத்தும் பத்திரிக்கை விளம்பரங்கள்
ஒருபுறம் இருக்க, ஆங்கில மருந்துகளை உண்ணாதீர்கள் அதில்
பக்கவிளைவுகள் அதிகம் என்ற பத்திரிக்கை உபதேசங்களும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில்
ஆரோக்கிய வாழ்வை நாடும் நம் உள்ளங்களில் எழும் கேள்வி நோயற்ற
வாழ்விற்கு வழிதான் என்ன? என்பதுதான்.
சான்றோர்களே,