Professional Documents
Culture Documents
தண்ணீர் இல்லாத குளத்தில் தத்தளிக்கும் மீன் போல என்
தண்ணீர் இல்லாத குளத்தில் தத்தளிக்கும் மீன் போல என்
சொந்தக்காரர்களின்
உண்மையான முகம்
அப்பா இல்லாத
போது தான் தெரிகிறது...
அப்பாவின் கை பிடித்து
சாலையை கடந்து
நியபகங்கள் நிறைந்து
வழிகிறது என் கண்ணீராக...
அப்பாவின் கையை
பிடித்துக்கொண்டு
வாழ்க்கையை கடந்து விடலாம் என்றிருந்தேன்...ஆனால்
அவர் பாதியில் இப்படி
விட்டு செல்வார் என்று
தெரியவில்லை...
என் அப்பாவின் கண்களில்
கண்ணீரை நான் பார்த்ததே
இல்லை; அதனால்தான் தானோ என்னவோ அவர் இருந்த
வரை அவரை நான் புரிந்து
கொள்ளவே இல்லை..
மனதார அப்பாவின்
அன்பை உணரும் போது
அரவணைக்க என்
அப்பா இல்லை
துவண்டு விழுந்த
போதெல்லாம் என்னை
தூக்கிவிட்ட தூங்கா
விளக்கு தான் என் அப்பா...
அப்பா இல்லாத போதுதான் தெரிந்தது,அப்பா இருந்தால்
தான் எல்லா சொந்தங்களும் நிலைக்கும்;அவர் இல்லை
என்றால் நடிக்கும் என்று
இளமையில் ஆயிரம்
உறவுகள் நம்முடன்
இருந்தாலும் அப்பா
என்ற உறவு உன் அருகில்
இல்லை என்றால் நாம்
அனாதைக்கு சமம் தான்
அன்பினில் சிறந்தது
தந்தையின் அன்பே
அதுபோல், வலிகளில்
பெரியது
தந்தையின் இழப்பே...
இப்பதான் நடந்ததாய்
தெரியும் பொழுதுகளெல்லாம்
எப்பவும் தொட முடியாத திக்கில்
உறைந்து விட்ட சித்திரங்களாய்...
ஆற்றாத் துயர் அணை மேவினும்
நெருங்க முடியாத தூரங்களாய்....
பசிய இலையொன்றின்
அந்திம காலத்து உதிரும்
தவிப்பில் அப்பாவை கண்ட
இறுதிப் பொழுதுகளில் தான்
வாழ்வின் நிதர்சனம்
எனக்குள் புகுந்து கொண்டது...
பெரும் மரமாய்
சூறைக் காற்றாய்
அலை எழும் கடலாய்
நான் கண்ட அப்பாவின்
உடல் தீயில் உருகிய
தருணங்களி தான்
வாழ்வின் வனப்பும் புரிபட்டது..
இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன
இப்படியான சில
கணங்களில்
நானே அவராக மாறிவிடுவம்
இல்லை அவரே நானாக
ஆகிவிடுவதும்
நடக்கத்தான் செய்கின்றன...
மென்மையான பேச்சு
துயரங்கள் கோடி இருந்தாலும்
கண்ணீரில் குளிக்காத
கண்களுக்கு சொந்தக்காரர்
அப்பாவின் சட்டையை
அனிந்துக்கொள்ளும்
வயதுவரை அவரின் துயரத்தை
அனிந்துக்கொள்ள தவறிய
மூத்தப்பாவி நான்
ஒருநாள்
என்னைவிட்டுப் பிரிந்தார்
நான் ஆரிருளில் தள்ளப்பட்டேன்
இன்றும் நடுநிசியில் விழித்துக்கொள்கிறேன்
அப்பாவை நினைத்ததும்
என் கண்களில் மழைப்பெய்கிறது
இருக்கும்போது அவர்
அருமை தெரிவதில்லை
இழந்தப்பின் தான் புரிகிறது
அவரின் அருமையும் பெருமையும்...