Professional Documents
Culture Documents
அனுப்புநர்
அனுப்புநர்
பெறுநர்:
பொருள் - ஊர் பொது மக்களின் சேமிப்புப்பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை
மீட்டுத்தர வேண்டி மனு.
மதிப்பிற்குரிய ஐயா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகின்றேன், நான் கடந்த 2 வருடமாக ஊர் பொதுமக்களால் (200
குடும்ப மக்களால்) தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர் பொறுப்பில் இருந்துவருகிறேன். பொதுமக்களாகிய
நாங்கள் நன்கொடை வசூலித்து திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இதே ஊரில் வசிக்கும் மாசிலாமணி த/பெ செல்லத்துரை (TNSTC-நடத்துநர் ஓய்வு) என்பவர்
நன்கொடையில் மீதமுள்ள பணம் ரூ.1,30,000 (ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ) திருப்பித்தருவதாக
ஓராண்டுக்கு முன்னதாக பெற்றுக்கொண்டு, திருப்பித்தராமல், நீங்கள் முடிந்தால் என்னவேண்டுமானாலும்
செய்துகொள்ளுங்கள் பணத்தை திரும்பத்தரமுடியாது என்று தவறான வார்தைகளில் திட்டுகிறார்.
அவருடைய மனைவி அருள்மேரியும் தவறான வார்தைகளில் திட்டுகிறார். இருவரும் சேர்ந்து கூட்டு சதி
செய்து, நம்பிக்கை மோசடி செய்து, 200 குடும்பத்துக்கும் துரோகம் விழைவித்து அவர்களின் பணத்தை
மோசடி செய்துவிட்டார்கள். என்னையும் மிரட்டி வருகின்றார்கள்.
ஆகவே, தயவு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணம் ரூ. 1,30,000 த்தை மீட்டு பாமர ஏழை
விவசாய மக்களின் கண்ணீர் துடைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
.இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள