சூரியன் ,சுக்கிரன், புதன் இணைவில் உள்ள சூட்சமங்கள். (ஆராய்ச்சி கட்டுரை)
முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன் ,சுக்கிரன் இந்த 3 கிரகங்களும்,
ஜாதகத்தில் ஒரே கட்டத்தில் அல்லது இரு கிரகங்கள் ஒரு கட்டத்தில் அல்லது அடுத்தடுத்த கட்டத்தில் கிரகங்கள் இருக்கும்.
பொதுவாக சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் ,உதாரணமாக
சூரியனுக்கு 10 டிகிரிக்குள் முன்னாலும், பின்னாலும் பின்னாலும் சுக்ரன் இருந்தால் அஸ்தமனம் அடைவார்.
புதனுக்கு அஸ்தமனம் தோஷம் இல்லை என்றாலும், சூரியனுக்கு 14
டிகிரிக்குள் இருக்கும் புதன் அஸ்தமனம் அடைவார்.
இதில் ,சூரியனுடன் நெருக்கமாக
5 பாகைக்குள் இருக்கும் புதன், உக்ர அஸ்தமனமாகி, தன்னுடைய
காரகங்களில் ஏதேனும் ஒரு குறை வைத்துவிடுவார்.
(சூரியனுடன் நெருக்கமாக 5 டிகிரிக்குள் இணையும் ஒரு கிரகம், தன்னுடைய
காரக ஆதிபத்ய பலனில், ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக குறை வைக்கும்.)
அஸ்தமனம் அடையும் கிரகங்கள், தன்னுடைய காரக பலன்களை
சூரியனிடம் இழந்துவிடும்.
இதில் அஸ்தமனம் அடைந்த கிரகங்களின் பலனை, சூரியனே அதன்
தசையில் எடுத்துச் செய்யும்.
புதனுக்கும், சுக்கிரனுக்கும் உள்ள அதிகபட்ச இடைவெளி 72 பாகை ஆகும்.
ஒரு ராசி கட்டம் என்பது 30 பாகை.
உதாரணமாக கும்பத்தில் புதன்
5 டிகிரிக்குள் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . மீ தம் 25 டிகிரி
மீ தமிருக்கும்.
மீ னம் முழுவதும் 30 டிகிரி.
30+25-55
மேஷத்தில், அதிகபட்சமாக சுக்கிரன், 17 டிகிரி வரை மட்டும்தான் செல்ல
முடியும்.
சுக்கிரனுக்கும் ,சூரியனுக்குமான அதிகபட்ச இடைவெளி 48 பாகை
சூரியனுக்கும், புதனுக்கும் ஆன அதிகபட்ச இடைவெளி 28 பாகை வரை.
சூரியன், புதன் இணைந்து இருப்பது புதாதித்ய யோகம்.
சூரியனும் புதனும் நண்பர்கள் என்றால் ,புதனும், சுக்கிரனும் உயிர் நண்பர்கள்
என்ற அமைப்பில் இருக்கும்.
தனித்த புதனும் அல்லது தன் நண்பரான சுக்கிரனுடன் சேர்ந்த புதனும் ,தான்
பார்க்கும் இடத்தை வளப்படுத்தவே செய்யும்.
சூரியனிடமிருந்து புதன் அதிக தூரம் விலகிச் செல்ல முடியாது என்பதால்
தனித்த புதன் ,சூரியனுடன் அஸ்தமனம் ஆகி (அடுத்தடுத்த கட்டங்களில்
இருக்கும்பொழுது) சனியின் தொடர்பையும், தன்னுடைய கடுமையான எதிரியான செவ்வாயின் பார்வையையும் ,ஒரு சேர பெற்றால், புதன் பலவனமடைந்து, ீ தன் காரக பலன்களை பாதி செய்யாது அல்லது பலனில் குறை வைக்கும்
அதுபோல்
உலகில் எந்த ஒரு உயிர்த் தோற்றத்திற்கும் ,ஆதாரமாக விளங்கும்,