Professional Documents
Culture Documents
Video Marryiamman Tamil
Video Marryiamman Tamil
Menu
வடியோ
ீ மாரியம்மன்-இமையம்
“எதுக்குடா பயலெ அடுப்புக்கட்டிகிட்ட வந்து ஏறிகிட்டு நிக்குறவன்?”
“பாயி கொடு.”
“பாயி இல்லெ.”
“வடியோ
ீ படமோ ரேடியோ படமோ. எதா இருந்தாலும் சாக்குதான்.
ஊட்டுல ஒரு பாயிதான் இருக்கு. அதெ ஒங்கிட்ட கொடுத்துட்டு,
சொந்தக்காரங்க கூத்துப் பாக்கப் போவயிலெ நான் எதெக்
கொடுக்கிறது? பாயிகூட இல்லாத ஊடுன்னு கேப்பளமா நம்பள பேச
மாட்டாங்க?” என்று சொன்ன கம்சலை, அடுப்பில் இரண்டு விறகை
எடுத்துச் செருகினாள். “தண்ண ீ எடுக்கப் போன குட்டிய இன்னம்
காணுமே. கெணறு வெட்டித் தண்ண ீ எடுக்குறாளா?” என்று சொன்னவள்
முருகன் பக்கம் திரும்பி, “அக்காளப் பாத்தியாடா?” என்று கேட்டாள்.
“மசுரப் பாத்தன்” என்று சொல்லிவிட்டு அவன் மீ ண்டும் அழ
ஆரம்பித்தான். அழுதுகொண்டே, மூட்டைமீ து இருக்கும் பாயை
அவனுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓடி விடலாமா என்று
யோசிக்க ஆரம்பித்தான்.
தண்ணர்க்
ீ குடத்துடன் வட்டுக்குள்
ீ வந்தாள் ராணி. அவளிடம் “கெணறு
வெட்டித் தண்ணி எடுத்தியாடி?” என்று கேட்டாள் கம்சலை. ஏதோ
சொல்ல வந்த ராணியைப் பேசவிடாமல், “ஒம் போக்கு சரியில்லெ.
அவ்வளவுதான் நான் சொல்லுவேன். ஒரு புள்ளெ பெக்குறமுட்டுதான்
கண்ணே பொண்ணேம்பானுவோ” என்று ராணியைத் திட்டிக்கொண்டே
அடுப்பில் விறகைச் செருகினாள் கம்சலை. அந்த நேரத்தில் பாயை
எடுத்துக்கொண்டு நழுவப்பார்த்த முருகனை இழுத்து முதுகில் இரண்டு
அடி கொடுத்து, பாயைப் பிடுங்கிப் பரண்மீ து வைத்தாள். அதை பார்த்த
முருகனுக்கு அடக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் உண்டாயிற்று.
கிருஷ்ணன் வட்டுக்குள்
ீ வந்ததும் அழுதுகொண்டிருந்த முருகன்
விருட்டென்று எழுந்து உட்கார்ந்தான். சத்தம் காட்டாமல் பவுடர், சீப்பு,
கண்ணாடியுடன் வாசலுக்குப் போனாள் ராணி. வந்த வேகத்திலேயே
துண்டை விரித்துப் போட்டுப் படுத்தான் கிருஷ்ணன். “நல்ல நாளும்
பெருநாளுமா என்னா மொடக்கிக்கிட்டெ? எயிந்திரு, பாயப் போடுறன்”
என்று சொல்லிப் பரண்மீ து வைத்திருந்த பாயை எடுத்து
விரித்துப்போட்டாள் கம்சலை. பாயில் நகர்ந்து படுத்துக்கொண்டான்
கிருஷ்ணன். இனி பாய் தனக்குக் கிடைக்காதோ என்று
சந்தேகப்பட்டதும் விசும்ப ஆரம்பித்தான் முருகன் அவனைத் திரும்பிப்
பார்த்த கிருஷ்ணன், “இந்த பய எதுக்குடி அயிவுறான்?” என்று கேட்டான்.
முருகன் வட்டுக்குள்
ீ நுழைந்ததுமே “ரெண்டு பேரும் ஒத்துச் சேந்தாப்ல
வரலன்னுட்டாளுவளா?” என்று வேகத்துடன் கேட்டாள் கம்சலை.
“அப்புறம் வர்றன்னாங்க” என்று சொன்ன முருகன் கிருஷ்ணனைக்
காணாததால் பாயைச் சுருட்ட ஆரம்பித்தான். “யாண்டா பாய எடுக்குற?
வம்புக்காரிவோகிட்டெ
ீ என்னெப் பேச்சு வாங்கவைக்காதடா” என்று
சொல்லிக்கொண்டே வந்து முருகனின் கையிலிருந்த பாயைப்
பிடுங்கிப் பரண்மீ து வைத்தாள். பிறகு வட்டைக்
ீ கூட்ட ஆரம்பித்தாள்.
முருகன் கத்தி அழ ஆரம்பித்தான். கம்சலை முருகனின் அழுகையைச்
சட்டை செய்யாமல் “இந்தக் குட்டி எங்க போயிருப்பா?” என்று சொல்லி
ராணியைத் திட்ட ஆரம்பித்தாள். “இந்த பூபாலன் பயலயும் காணுமே.
எவகூட சுத்துறானோ” என்று முணுமுணுத்தாள்.
“என் ஊட்டு வாசக் கடெக்கி வராத சாமி என்னா மசுரு சாமிடா. இந்த
எடத்தெவிட்டு சாமி எப்பிடி நவுறுதுன்னு பார்க்கலாம்” என்று ஏழு
எட்டுப் பேர் சாமிக்கு முன் நின்று சத்தம்போட்டுக் கத்த ஆரம்பித்ததும்
சாமியைத் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் கோபத்தில், “தூக்குனா
தூக்குங்க, தூக்காட்டிப் போங்க. எங்களுக்கு மட்டும்தான் வேத்திருக்கா”
என்று சொன்ன வேகத்திலேயே சட்டென்று சாமியைக் கீ ழே
இறக்கிவைத்துவிட்டார்கள். முன்பு தனித்தனி வடுகளுக்கும்
ீ சாமி
வந்தாக வேண்டும் என்று தகராறு செய்தவர்கள் இப்போது
நடுத்தெருவில் எப்படிச் சாமியை இறக்கிவைக்கலாம் என்று கேட்டுச்
சண்டைபோட ஆரம்பித்தனர்.
கணேசன் வட்டுக்கு
ீ முன் கூட்டமாகக் கொஞ்சம் பேர்
நின்றுகொண்டிருந்தனர். வட்டுக்குள்
ீ நுழைந்து எப்படியாவது
வடியோக்காரனைப்
ீ பார்த்துவிட வேண்டும் என்று முருகனும்
பாண்டியனும் முட்டி மோதிப்பார்த்தனர். வாசல்படியைத் தாண்டி ஒரு
அங்குலம்கூட நகர முடியவில்லை. வடு
ீ முழுக்க ஆட்களாகவே
இருந்தார்கள். வட்டுக்குள்
ீ நுழைவதற்கு முருகனும் பாண்டியனும்
படாதபாடு பட்டும் காரியம் நடந்தபாடில்லை.
சாப்பிட்டுவிட்டு வடியோக்காரன்
ீ வெளியே வந்தான். மறு நொடியே
கூட்டம் அவனைச் சூழ்ந்துகொண்டது. ஒரு மந்திரியை
அழைத்துக்கொண்டு வருவது மாதிரி அவனைக் கோவிலுக்கு
அழைத்து வந்தனர். வடியோக்காரனுக்குப்
ீ பக்கத்தில் போகவும்
அவனைத் தொட்டுப் பார்க்கவும் முருகனும் பாண்டியனும் படாத
பாடுபட்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. இவர்களைப் போல ஐந்தாறு
பையன்கள் வடியோக்காரனுக்குப்
ீ பக்கத்தில் போவதற்காகக்
கூட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
வடியோக்காரன்
ீ கோவிலுக்கு வந்துவிட்டான் என்ற செய்தி பரவிய
சற்றைக்கெல்லாம் கோவில் முன் நல்ல கூட்டம் சேரத் தொடங்கியது.
வடியோக்காரன்
ீ கூட்டத்தைச் சற்றும் மதிக்கவில்லை. வட்டு
ீ மனைப்
பட்டா வழங்க, தண்ணர்க்
ீ குழாய் போட இடத்தைத் தேர்வு
செய்கிறவன் மாதிரி, தொலைக்காட்சிப் பெட்டியை வைப்பதற்குத்
தோதான இடத்தைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருந்தான்.
அவனுடைய கவனமெல்லாம் மொத்தக் கூட்டத்திற்கும் படம் தெரிய
வேண்டும் என்பதில்தான் இருந்தது. பல பேர் பல இடங்களைக்
காட்டினார்கள். எந்த இடமும் அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த இடம்,
இந்த இடம் என்று திரும்பத் திரும்பச் சொன்னவர்களை
வடியோக்காரன்
ீ முறைத்தான். அதற்காக அவன்மீ து ஒரு ஆள்கூடக்
கோபப்படவில்லை. அவனுடைய கை, கண் அசைவுக்காக மொத்தக்
கூட்டமும் காத்திருந்தது. கொஞ்ச நேரத்திலேயே மந்திரவாதி மாதிரி
வடியோக்காரன்
ீ மொத்தக் கூட்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துவிட்டிருந்தான். அவன் ஒரு வார்த்தை கூடப்
பேசவில்லை. ஆனாலும் மொத்தக் கூட்டமும் அவனுடய
15
வடியோக்காரன்
ீ பல இடங்களில் நின்றுநின்று பார்த்தான். ஒரு இடமும்
அவனுக்குப் பிடித்ததாகத் தெரியவில்லை. கடைசியில், ஊர்வலம்
முடிந்து வந்து சாமியை இறக்கிவைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுத்தான்.
உடனே கூட்டத்தில் சலசலப்பு உண்டாயிற்று, உடனே “இந்த எடத்திலெ
டி.வி.யை வச்சாதான் எல்லாருக்கும் நல்லாத் தெரியும். ஒரு நாளக்கி
மட்டும் சாமிய கோவுலுக்குப் பின்னால வையிங்க. சாமி
கோவிச்சிக்கவா போவுது?” என்று வடியோக்காரன்
ீ சொன்னதும், “சாமி
முக்கியமா படம் முக்கியமா?” என்று முன்பு கேட்டவர்கள்கூட
அடங்கிப்போய்விட்டார்கள்.
வடியோக்காரன்
ீ கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மின்சாரக் கம்பத்தைப்
பார்த்தான். “கம்பத்திலேருந்து நேர்த் துருவா கொக்கிபோட்டு கரண்டு
எடுக்கலாமா?” என்று கேட்டான். “ஒருத்தரும் ஒண்ணும்
சொல்லமாட்டாங்க. பொதுக் காரியத்துக்குத்தான எடுக்கிறம்” என்று ஏழு
எட்டுப் பேர் ஒரே நேரத்தில் சொன்னார்கள். வடியோக்காரன்
ீ மின்சாரம்
எடுப்பதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அவன் போகிற
இடத்திற்கெல்லாம் கூட்டமும் நகர்ந்து போய்க் கொண்டேயிருந்தது.
வடியோக்காரன்
ீ கணேசனிடம் சொன்ன விசயத்தைப் பலரிடமும்
சொல்ல ஆரம்பித்தான். அவன் சலித்துக்கொண்டதைப் பார்த்த பல பேர்
“இந்த ஊரு பஞ்சாயத்தே வயவய கொயகொயதான். கோயி
கூப்பிட்டாத்தான் வாயவே தொறப்பானுவோ” என்று
பஞ்சாயத்தார்களைத் திட்டினர். நேரமாக நேரமாக, பஞ்சாயத்தை
முடிக்கச் சொல்லி முனகுபவர்களின் எண்ணிக்கை பெருக
ஆரம்பித்தது. வடியோக்காரனைச்
ீ சுற்றிக் கூட்டம் சேர
ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டத்தில் முருகனும் பாண்டியனும்
நின்றுகொண்டிருந்தனர்.
22
வடியோ
ீ படம் போடுவதற்கு நேரமாகிறது என்று சொல்லிக்
கூட்டத்தில் சலசலப்பு உண்டாயிற்று. அதனால் எரிச்சலடைந்த
பஞ்சாயத்தார்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்தனர். பெருமாளையும்
கதிரேசனையும் அவர்களோட ஈடு சேர்ந்தவர்களையும் கண்டிக்கிற
விதமாகப் பேச ஆரம்பித்தனர். கூட்டத்திலிருந்தவர்களும்
பஞ்சாயத்தார்கள் சொல்வதுதான் சரி என்று பேச ஆரம்பித்தனர்.
அதனால் “மொதல்லியே ஏன் சாமி வல்லெ” என்று
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது கொஞ்சம் இறங்கி வந்து, “சாமி
இன்னிக்கும் வரணும். அதோட தெனுமும் வரணும். முடியாதின்னா
காலயிலெ பஞ்சாயத்த கூட்டி முடுவு சொல்லணும். இல்லன்னா
போலீஸ் ஸ்டேசனில் பிராது மனுதான் எங்க ஆளுவோ கொடுப்போம்”
என்று சாமியை மறித்தவர்கள் சொன்னார்கள். அவர்கள்
சொன்னதேபோதும் என்று கணேசன் பஞ்சாயத்தை முடிக்கச்
சொன்னான். “சாமியெ நடுத்தெருவுல போட்டு வச்சியிருக்கிறது
தெய்வக் குத்தமாயிடும். அதனால இப்ப சாமியத் தூக்குவம். காலயிலெ
பஞ்சாயத்தக் கூட்டி முடிவு பண்ணிக்கலாம்” என்று சொல்லிக்
கந்தசாமி ஆசிரியர் பெருமாளோடு சேர்ந்தவர்களையும் கதிரேசனோடு
சேர்ந்தவர்களையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில்
இதுதான் சமயம் என்று கணேசனும் அவனோடு சேர்ந்து மைனர்
பையன்களும் பட்டென்று சாமியைத் தூக்கினார்கள். அதற்காகவே
காத்திருந்தவர்கள் மாதிரி முருகனும் பாண்டியனும் “அரோகரா” என்று
சொல்லி உற்சாகமாகக் கத்தினார்கள்.
“இல்லியாட்டம் இருக்கு.”
nnn
******
REPORT THIS AD