இப்படியான தன்னலமற்ற பாசப்பரிவர்தனைகள், நமக்கென ஒரு குடும்பம்
ஆனபிறகும் நடக்கிறதெனில் அது சந்தேகமேயின்றி அஃக்மார்க் அம்மா வடு ீ தான்.
அழையா விருந்தாளியாய் நாம் அதிகாரம் செலுத்துமிடம் அம்மா வட்டில்
ீ மட்டும் தான்
நமக்கானதொரு குடும்பம்,அதுகுறித்த கவலைகள்,பொறுப்புகள்,கடைமைகள் என
எல்லாவற்றையும் மறந்து ,தற்காலிக பொறுப்பற்ற தன்மையில், சின்னதாய் ஒருநாள் சுற்றுலா போல சந்தோஷமாய் நாமிருக்க நமக்கானதொரு இடமல்லவா நம் அம்மா வடு!! ீ
பாதி எழுதாமல் வைத்த பாட நோட்டுகள்,போட்டிகளில் வாங்கிக் குவித்த
கோப்பைகள்,சான்றிதழ்கள்,பள்ளி கல்லூரிக்காலத்து அடையாள அட்டைகள்,க்ராஃப்ட் வகுப்பில் சேர்ந்து வாங்கி நிரப்பிய க்ரோஷா ஊசி, வுல்லன் பந்துகள் ,ஃபர் பொம்மைகள், அளவு சிறியதாய் போன நம் ஆடைகள், மேட்சிங் பார்த்து பார்த்து வாங்கிய குடை ஜும்காக்கள், ஹேர் க்ளிப்புகள், நிறம் மாறி ஜவ்வுபோல் ஆன நகப்பூச்சு பாட்டில்கள், தோலுரிந்து திரௌபதிகளாய் ஆன கைப்பைகள் என, நம் வட்டில்,நம்முடைய ீ அறையில் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை உபயோகித்து விட்டுச்சென்றனவற்றையெல்லாம் பொக்கிஷமாய் அருங்காட்சியகம் போல ரசித்து ரசித்துப் பாதுகாக்கும் இடம் நம் அம்மா வடு ீ தானே!
மனதை அழுத்தும் பாரமானாலும்,உடலை வருத்தும் உபாதையானாலும் நமக்கான
வேடந்தாங்கல் அம்மாவடுதானே ீ !
வெறும்கையோடு சென்று கைநிறைய பொருட்களோடு வரக்கூடிய ஒரேஇடம் பூமியில்
உண்டெனில் அது அம்மா வடு ீ மட்டும் தான்!
வாயிலில் காலணியை கழட்டியபடியே "ம்மா எனக் குரலெழுப்பி உள்ளே நுழையும்
பொழுதே மலையைப்புரட்டும் தெம்பு நமக்குள் எங்கிருந்துதான் வருகிறதோ ....!இன்று வரை புரியாத ரகசியம்..
திருமணத்திற்குப் பின் அம்மா வட்டிற்கு
ீ செல்வதில் ஆண் பெண் பேதமென்ன? பெண்களுக்கான ப்ரத்யேக புத்தாக்க முகாம் அம்மா வடெனில், ீ
போகாமல், அப்பாவின் நிழலை விட்டு பொறுப்புகளைத் தன்னந்தனியாய் கையாள்வதில் மூழ்கி மறந்து போகாமல் உங்கள் மகனாய் அதே பாசத்தோடுதானிருக்கிறேன், என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிசெய்யும் பயணம் அது ..
நமக்கு எத்துணை வயதானாலென்ன நம் அம்மா அப்பா இருக்கும்வரை அவர்களுக்கு
நாம் குழந்தைதான். அதே போல், நம் பெற்றோர் வடு ீ என்னும் நம் சொர்க்கத்தின் பெயர் "அம்மா வடு" ீ தான்..
கணவன் மனைவிக்குள் புரிதல் என்ற கடவுச்சீட்டு ஒன்று போதும்.....
நமக்குத்தள்ளாட்டம் வரும் வரை/வந்தாலும் அம்மாவட்டுக்குச்செல்ல