You are on page 1of 2

5/26/23, 4:03 PM Tamil Bible

வார்த்தை: சோம் பேறி (நீ திமொழிகள் - நீ திமொழிகள் )

நீதிமொழிகள் 6:6 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப்


பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

நீதிமொழிகள் 6:9 சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்?


எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

நீதிமொழிகள் 10:26 பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும்


எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு
இருக்கிறான்.

நீதிமொழிகள் 12:24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்;


சோம்பேறியோ பகுதிகட்டுவான்.

நீதிமொழிகள் 12:27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச்


சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

நீதிமொழிகள் 13:4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;


ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

நீதிமொழிகள் 15:19 சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்;


நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

நீதிமொழிகள் 19:24 சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத்


திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.

நீதிமொழிகள் 20:4 சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே


பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.

நீதிமொழிகள் 21:25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச்


சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.

நீதிமொழிகள் 22:13 வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று


சோம்பேறி சொல்லுவான்.

நீதிமொழிகள் 24:30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய


திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

https://www.tamil-bible.com/search.php 1/2
5/26/23, 4:03 PM Tamil Bible

நீதிமொழிகள் 26:13 வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம்


இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

நீதிமொழிகள் 26:14 கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும்


படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.

நீதிமொழிகள் 26:15 சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்


வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.

நீதிமொழிகள் 26:16 புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும்


ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

Total Number of verses matched = 16


Total Number of words = 16

https://www.tamil-bible.com/search.php 2/2

You might also like