You are on page 1of 4

கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள்


இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு,
மற்றொருவன் சோமு. இருவரும் இணை
பிரியாத நண்பர்கள். ஒரு நாள் இருவரும் தேன்
எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றனர்.
செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ‘நீ
எதைப்பற்றியும் பயப்படாமல் என்னுடன் வா.
என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது.
என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக்
காப்பாற்றுவேன்’ என்று கூறினான்.
காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு
விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை
பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து
சென்றார்கள்.
அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம்
கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும்
வழியில் அந்தக் கரடி வந்தது. கரடியைக்
கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத்
தொடங்கினார்கள். ஓடத் தொடங்கிய சில
வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு
கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி
விட்டான். சோமுவுக்கு மரம் ஏறத்
தெரியாததால் என்ன செய்வதென்று
தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி
கரடியிடமிருந்து தப்புவது என்று யோசித்தான்.

இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக்


கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற,
பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக்
கொண்டு இறந்தவனைப்போல் படுத்துக்
கொண்டான். அப்பொழுது கரடியும் அங்கு
வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை
உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து
கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து
பார்த்தது. கரடி சோமுவை முகர்ந்து
பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி
சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று
தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன்
இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து
நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து


பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை
எழுப்பினான். ‘கரடி சென்று விட்டது இனி
எழும்பு நாம் தப்பி விட்டோம்’ என்று ராமு
கூறினான். சோமுவும் எழுந்து தன் யோசனை
வெற்றியடைந்ததை எண்ணி
நிம்மதியடைந்தான். கீழே படுத்திருந்தவன்
எழுந்து அமர்ந்தான். ராமு சோமுவிடம், கரடி
உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?’
என்று கேட்டான். அதற்கு சோமு, ‘ஆபத்தில்
உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது!
என்று சொல்லிவிட்டுப் போனது’ என்றான்.
இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை
எண்ணி நொந்து கொண்டான்.

You might also like