Professional Documents
Culture Documents
ந.பச்சைபாலன் நூல் வெளியீடு
ந.பச்சைபாலன் நூல் வெளியீடு
அடர் மழைக்காட்டின் அந்தி சாயும் பொழுதொன்றின் தொடர் குயில் ராகத்தைப் போல் இடர் எது
நேர்ந்தாலும் சுடர் பொங்கும் புன்னகையால் தமிழும் தமிழரும் தவழும் இடமெல்லாம் அமிழ்தாய் அழகாய்
பற்றிப் படரும் தொட்டுத் தொடரும் எம் பாட்டுடைத் தலைவன் பட்டுடை முருகன் மாண்புமிகு நெருப்பு
டத்தோஶ்ரீ எம். சரவணன் அவர்களே..
எழுத்து எனும் பெருந்தவத்தின் இச்சைப் பெற்றெடுத்த இளையப்பிள்ளை பச்சை நிறம் அணிந்த
கவிதைப் பந்தல், நூல் என்னும் பால் சிந்தும் இன்றைய பொழுதின் மாலைநிலா அன்புச் சகோதரர்
கவிஞர் ந.பச்சைபாலன் அவர்களே..வாழ்த்துரை வழங்க வந்திருக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கம் எனும் சிங்கப்படை நடத்தும் சமகால தங்கம் திரு ஞான சைமன் அவர்களே, இலக்கியம் பேசும்
துப்பாக்கி..மலேசியக் காவல் துறையின் கோபுரத்தில் பறக்கும் எங்கல் சேவற்கொடி டத்தோ ஶ்ரீ
ஆ.தெய்வீகன் அவர்களே, இளைய சுவர்முழுக்க இலக்கியம் கிறுக்கி பின் இனிமை தவழும் மோர்
சரித்திரம் படைத்த எம் இலக்கியக் காவலர் பி.எம் மூர்த்தி அவர்களே..
நொய்வமரநெடுகே
தோய்நத
் ிருந்த
வாசனை போல்
காலப்பெருவெளியில்
கரைந்து விட்ட
காதலி போல்
நகரப் புகைநடுவே
நுகரவொரு நூல் கொடுத்தால்
பகர பதில் மறந்து
பறந்தோடி வரும்
தமிழ்ப்படித்த, தமிழ்குடித்த, தமிழ்பிடித்த
அத்தனை உறவுகளையும்
முரண் ஏதும் முளைக்காத
நூல்களின் நகரத்திலிருந்து
மனக்கண் கசிய வரவேற்கிறோம்..
வரவேற்கிறோம். வணக்கம். வருக..வாழ்க
கனவுகள்
விற்கும்
கடைவீதி எங்கும்
கடவுளோடு
நடக்கிறார்கள்
நம் கவிஞரும் அப்படியொரு கலைஞர்தான்
மேகம் திரண்டு
வானம் குளிர்நத
் பின்
பூமி வணங்கி
மழையில் நனையும் முன்
அந்த இடைப்பட்ட இனிப்பு நிமிடத்தில்
தோகை விரிக்கும் மயிலுக்காய்
தொடர்நத
்
தலைமையுரை என் தலைவன் உரை