Professional Documents
Culture Documents
Paper-I-திருக்குறள் 1st chapter
Paper-I-திருக்குறள் 1st chapter
fhg;Ghpik
Mizah;>
Ntiytha;g;G kw;Wk; gapw;rpj;J Jiw
திருக்குறள் / Thirukkural (கட்டுரைகள்)
2 |
கட்டுரை தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் இருத்தல் வேண்டும்.
சமயச்சார்பின்மை
”எம்மதமும் சம்மதம்; அனைவரின் வழிபாடுகளும் சடங்குகளும் அவரவர் உரிமை; அரச�ோ, தனிநபர�ோ
இவ்விடயத்தில் தலையிட உரிமையில்லை” – இதுவே மதச்சார்பின்மை.
அடையாளம் இன்மை
திருக்குறளின் எந்தக் குறட்பாவிலும் ஒரு குறிப்பிட்ட கடவுளர�ோ, சமயம�ோ, அடையாளங்களள�ோ
முன்னிலைப்படுத்தப்படவில்லை.
ப�ொதுமைப் பண்புகள்
இறையியல்புகள்
• ”வேண்டுதல் வேண்டாமை இலான்”- விருப்பு வெறுப்பு அற்றவன்.
• ”தனக்கு உவமை இல்லாதான்” – ஒப்பற்றவன்; இணையிலாதவன்.
• ”ப�ொறிவாயில் ஐந்த வித்தான்” – புலன் நுகர்வுகளை அழித்தவன்; ஐம்புலன் நுகர்ச்சிக்கு அப்பாற்பட்டவன்,
என்பன ப�ோன்ற த�ொடர்கள் மனித குலம் கடைபிடிக்கும் இறையன்பின் வெளிப்படை!
பெருமை
பிறப்பொக்கும்! ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற க�ோட்பாடு இயற்கை, நியதி. ”பிறப்பினால்
அனைவரும் சமம் (All are equal by birth) என்பது அனைத்துலகச் சட்டம்; அறிவியல் அணுகுமுறை. அவரவர்
செய்யும் த�ொழிலால் மட்டுமே மக்கள் வேறுபடுவர் என்கிறது வள்ளுவம்.
முப்பொருள் நூல்
இந்தியத் தத்துவம் ”அறம்-ப�ொருள்-இன்பம்-வீடு” (தர்மம்- அர்த்தம்-காமம்-ம�ோட்சம்) பற்றிக் கூறத்
திருக்குறள�ோ முதல் மூன்றனுக்கே முதன்மை தந்து ஆக்கப் பெற்றது. சமயம் சார்ந்த ”ச�ொர்க்கம்-ம�ோட்சம்-
முக்தி” (Heaven) பற்றி இந்நூல் எங்கும் பேசவில்லை.
மனிதமே புனிதம்
வள்ளுவம் இவ்வுலக வாழ்வை மதிப்பிடும் நூல்; பாயிரவியல் கூறும் வான்சிறப்பும் அறன் வலியுறுத்தலும்
புனிதத்தின் உச்சம். வான் மழையின் சிறப்பை கூறுகையில் ”விண்ணின் மழைத்துளி மண்ணன்
உயிர்த்துளி” என்று ”இயற்கை வழிபாட்டுக்கு வழி செய்கிறார் வள்ளுவர்.
• ”வாழ்க்கை வாழ்வதற்கே” (Life for Life Sake) என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் க�ொண்டவர்
வள்ளுவர்.
அறத்தான் வருவதே!
• ”அறத்தான் வருவதே இன்பம்” என்பதால் நேர்மையான வழிகள் மூலம் அடைவதே உண்மையான
இன்பம் என்பதை வலியுறத்துகிறார். இக்கூற்று ”சமயவழி இன்பத்திற்குக் கதவைச் சாத்துகிறது.
மானுடத்தை மகிமைப்படுத்துகிறது.
• முகப்புரையின் முன்னோடி! இந்திய அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தத்தில் சேர்க்கப்பட்ட
”சமயச்சார்பற்ற” (Secular) என்ற ச�ொல்லுக்கு இலக்கணம் வகுத்ததும் முன்னோடியாக விளங்குவதும்
திருக்குறள்!
• உலகப் ப�ொதுமுறை: இந்தியக் குடிமைப் பணி அலுவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள்
குறிப்பிட்டதைப் ப�ோல இந்நூல் ”உலகப்பொது மறையன்று; உலகப் ப�ொதுமுறை” அதாவது ----
கடைபிடிக்க வேண்டிய நூல்.
• இனம், ம�ொழி, மதம், பண்பாடு, தேசம் கடந்து எல்லைகளற்று விரிந்துள்ள ஒப்பற்ற விடயங்களைக்
க�ொண்ட ”திருக்குறள்-ஓர் சமயச் சார்பற்ற நூல்” என்பதே நடைமுறை உண்மை.
த�ொடர்புடைய அதிகாரங்கள்
1. கடவுள் வாழ்த்து
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு“.
விளக்கம்: எழுத்துகளுக்கெல்லாம் முதன்மையானது அகரம்; அதுப�ோல, உலக உயிர்களுக்கெல்லாம்
முதன்மையானவன் இறைவன்.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் த�ொழாஅர் எனின்“.
விளக்கம்: தூய அறிவினை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காவிடின், நூல்களைக்
கற்றதனால் ஆன அறிவினால் பயனில்லை.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்“.
விளக்கம்: மலர்மேல் அமர்ந்தவனாகிய இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தோரே, இவ்வுலகில் நீடு
வாழத் தகுதி பெற்றோர்.
2. வான்சிறப்பு
i) இயற்கை வழிபாடு, சிலம்பின் ஞாயிறு, திங்கள், மாமழை, புகார் நகரச்சிறப்புகள்.
“மாமழை ப�ோற்றதும் மாமழை ப�ோற்றதும்
நாமநீர் வேலி உலகிற்கு
அவனளிப�ோல் மேல்நின்று தான் சுரத்தலான்” - சிலப்பதிகாரம்
“விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி“
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு“
ஒழுக்கு – ஒழுக்கம், வாழ்க்கை.
ii) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பு – உணவு; வலிமை; துப்பார் – உண்பவர்.
iii) “சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வான�ோர்க்கும் ஈண்டு“.
பூசனை – வழிபாடு
விளக்கம்: வானம் வறண்டு ப�ொய்த்து விடுமாயின், விண்ணுலகத் தேவர்களுக்கும் வழிபாடுகள்
நடைபெறா.
iv) “தானம்தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காத தெனின்“.
3. அறன் வலியுறுத்தல்
i) ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற“.
விளக்கம்: மனதில் குற்றமற்று இருத்தலே அறம் ஆகும்; பிறவகையான அறங்கள் எல்லாம் ஆரவாரத்
தன்மையுடையன.
ii) ”ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்”.
விளக்கம்: நம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் அறச்செயல்களை இடைவிடாது செய்தல் வேண்டும்.
4. பெருமை (Greatness):
i) ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்“.
6 |
விளக்கம்: பிறப்பினால் அனைவரும் சமம், அவரவர் செய்யும் செயல்களால் / த�ொழில்களால் மட்டுமே
அவர்கள் வேறுபட்டவர்கள்.
ii) ”மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்”.
5. Hospitality : விருந்தோம்பல்
“ம�ோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
ந�ோக்கக் குழையும் விருந்து“.
ப�ொருள்: அனிச்ச மலர் முகர்ந்தவுடனே வாடும். அதுப�ோல, மாறுபட்ட முகத்துடன் ந�ோக்கினால் விருந்தினர்
மனம் வாடுவர்.
மாதிரிக் கட்டுரை-1
முன்னுரிமை
ந�ோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மக்கள் அன்றாட வாழ்வில் எழுந்த வாக்கு. இது பிற்காலத்தில்
இலக்கிய வாக்காக, சான்றோர் வாக்காக மாறிவிட்டது. ப�ொது வாழ்வில் பணியாற்றுபவர்கள் உள்ளத்தின்
உறுதியும், அறிவின் தெளிவும் கெடாமல் காத்து க�ொள்ள வேண்டும். இதற்கு முக்கியமாக வேண்டப்படுவது
நாவடக்கம். இதனை வள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தின் மூலம் கூறுகிறார்.
உண்ணும் முறை
பழங்காலத்து மருத்துவ முறைப்படி ஒருவனுடைய கையில் நாடி பார்த்து அவன் உற்றந�ோய் இன்னது
என்று காண முடியும். அவ்வாறு காணும் ப�ோது உடலில் வாதம், பித்தம், சிலேத்துவம் என்னும் மூன்றும்
மிகாமலும், குறையாமலும் இயற்கையான அளவில் இருந்தால் ந�ோயற்ற நிலை என்று கூறுவார்கள். இந்த
மூன்றில் ஒன்றோ, இரண்டோ மிகுதியானாலும், குறைந்தாலும் ந�ோய் உண்டாகும்.
”மிகினும் குறையினும் ந�ோய் செய்யும் நூல�ோர்
வளமுதலா எண்ணிய மூன்று.”
12 |
முன் உண்ட உணவு எவ்வாறு சீரணமானது என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்த அளவைக் கடைப்பிடித்துப்
ப�ோற்றிப் பிறகு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், உடம்பிற்கு மருந்து
என்று ஒன்று வேண்டியதில்லை.
”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது ப�ோற்றி உணின்”.
முன் உண்ட உணவு செரிமானம் ஆன பிறகு, உண்ண வேண்டியதை இன்ன அளவுதான் வேண்டும்
என்று உறுதி செய்து க�ொண்டு அதன் பிறகு அந்த அளவு உணவை உண்ண வேண்டியது கடமை. அதுவே,
உடம்பைப் பெற்றவன் உடம்பை நெடுங்காலம் காத்துச் செல்லும் வழியாகும்.
”அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”.
உணவே நஞ்சு
உடலுக்குத் தேவையான உணவை ஆராய்ந்து தெளிந்து அந்த உணவின் குறைந்த அளவு இன்னது
என்று உறுதி செய்து உண்கின்றவரிடம் இன்பம், உடல் நலம் தலைதூக்கி நிற்கும். அதுப�ோல, மனத்தின்
விருப்பத்திற்கு இயைந்த அளவு புலால் மிகுதியாக உண்பவனிடம் ந�ோய் தலைகாட்டி நிற்கும்.
”இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் ப�ோல நிற்கும்
கழிபேர் இரையாண்கண் ந�ோய்.”
பசித்தவன் அளவிற்கு ஏற்றவாறு நாவை கட்டுப்படுத்தாமல் ஒன்றையும் ஆராயாமல், அளவு மீறி மிகுதியாக
உண்டால் ந�ோயும் எல்லை மீறித் தலைக்காட்டும்.
”தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்
ந�ோய் அளவு இன்றிப் படும்.”
மருந்து
ந�ோய் தீர்க்கும் மருத்துவர் வந்த ந�ோய் என்ன ந�ோய் என்று ஆராய்ந்து அந்த ந�ோய் என்ன காரணத்தால்
வந்தது என்று உறுதி செய்து அதனைத் தணிக்கும் வழி என்ன என்று உறுதி செய்து ப�ொருத்தமான
முறையைக் கையாள வேண்டும்.
”ந�ோய்நாடி ந�ோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
ந�ோயாளி, ந�ோயைத் தீர்க்கும் மருத்துவன், மருத்துவனுக்குத் துணையாகும் மருந்து. அம்மருந்தினைத்
தப்பாமல் செய்து ந�ோயாளிக்குக் க�ொடுப்பவன் என்று மருந்து 4 உட்பிரிவுகளைக் க�ொண்டது எனக்
குறிப்பிடுகிறார்.
முடிவுரை: இங்ஙனம் வள்ளுவர் ஒரு மனிதன் ந�ோயில்லாமல் வாழ உணவு உண்ண வேண்டிய
முறையினைப் பற்றியும், ந�ோய் ஏற்படின் அதனைக் கண்டறிந்து குணமடையும் வழிமுறையும் குறிப்பிடுகிறார்.
மாதிரிக் கட்டுரை-02
முன்னுரை
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகும். அச்சமூகத்தில் பெண்கள்
இல்லத்திற்குரியவர்களாக மட்டுமே இருந்துள்ளனர். ஆண்கள் புற உலகில் செல்வாக்குடன் ஆதிக்கம்
பெற்றும் இருந்துள்ளனர். அச்சமூகச் சூழலில் அறம் உரைக்கப் பாடிய திருக்குறளில் அக்காலப் பெண்களின்
வாழ்வியல் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இடம் பெற்றுள்ள பெண்மைக் குணமான
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 13
கற்பு, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு, இல்லத்தைப் பேணும் பண்பு முதலானவற்றை இக்காலப்
பெண்ணிய பார்வையில் இங்கு காணலாம்.
கற்புத்தன்மை
புராதனப் ப�ொதுவுடைமைச் சமூகத்தில் பாலியல் வேறுபாடு இல்லாமல் உறவு வைத்து வாழ்ந்து
வந்துள்ளனர். நிலவுடைமை வர்க்கம் த�ோன்றிய பின் ச�ொத்துக்களைத் தம் வாரிசுக்குத்தான் க�ொடுக்க
வேண்டும் என நினைத்து நிலவுடைமையாளர்கள் தம் குழந்தைதான் என்பதை நிரூபிக்க பெண்களைக்
கற்பு எனும் க�ோட்பாட்டில் நிலை நிறுத்தியுள்ளனர். இங்குதான் ஆணாதிக்கச் சமூகம் த�ோற்றம் பெறுகிறது.
அக்கற்புக் க�ோட்பாட்டை வள்ளுவரும் தம் குறட்பாக்களால் கூறியிருப்பதால் அதை ஓர் ஆணாதிக்க சமூக
கருத்தியலாகவே காண முடிகிறது.
இவ்வாழ்வில் கற்பு என்னும் உறுதி இருக்க பெற்றால், அம்மனைவியை விட வேறு செல்வம் கிடையாது.
”பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்”.
கற்பு நெறியில் தன்னையும் காத்துக் க�ொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த
புகழையும் காத்து தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது.
கணவன்-மனைவி உறவு
பண்டைக்காலச் சமூகத்தின் ஆண்கள் மிகுதியாக உழைப்பில் பங்கெடுத்தால் அவர்களே சமூகத்தில்
முன்மையானவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். வள்ளுவர் வாழ்ந்த காலக் கட்டத்திலும் அதேநிலை என்பதால்
பெண்கள் கணவனின் உழைப்பைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அந்நிலையை
வள்ளுவர் தன் படைப்பில்
”பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு”.
பெண்கள் கணவரைப் ப�ோற்றி தம் கடமைகளையும் செய்வாரானால் பெருஞ்சிறப்புடைய மேல் உலக
வாழ்வைப் பெறுவர்.
மனைவி நற்குணம் ப�ொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் ப�ொருந்திய
மனைவி அமைந்தால் பயனற்றதாகும். “நற்குணம் ப�ொருந்திய மனைவி அமையாவிட்டால் வாழ்க்கை
சூன்யமாகிவிடும். இந்த பண்பு மற்றும் நற்குணம் என்பது ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக
வரையறுத்துள்ளனர்.” ஆண்களின் பண்பாட்டை எதிர் ந�ோக்கும் சமூகம் அதை வற்புறுத்தவில்லை. ஆனால்
பெண்களிடம் பண்பாட்டையும், மரபையும் வற்புறுத்தியுள்ளனர். பெண்களை இல்லத்திற்குரியவர்களாகக்
கூறிவிட்டு இல்லச் சுமைகளிலிருந்து ஆண்கள் விலகிக் க�ொள்கின்றனர்.
இல்லமும், பெண்ணும்:
தந்தை வழிச்சமூகத் த�ோற்றத்திற்குப் பின் பெண்களின் இயக்கத்தை இல்லறத்தில் நிலை நிறுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு “இல்லாள்” “மனையாள்” “வீட்டுக்காரி” என்ற இடம் க�ொடுத்து அவர்களை இல்லத்தில்
அடைத்துள்ளனர். வீட்டில் கணவன், பிள்ளை, விருந்தினர் இவர்களிடம் பரிவுடனும், பணிவுடனும் நடந்து
க�ொள்ள வேண்டும் என நீதி ப�ோதிக்கப்பட்டுள்ளது.
”மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்”.
இல்லத்திற்குத் தேவையான நற்பண்பு பெண்ணிடம் இல்லாவிட்டால் அவள் எவ்வளவு சிறப்புடையவளாக
இருந்தாலும் பயனில்லை.
மாதிரிக் கட்டுரை-03
இல்வாழ்க்கை
கணவனும்-மனைவியுமாக அமைகின்ற இல்வாழ்க்கையில் இருவரும் ஒருவர்க்கொருவர் உற்ற
துணையாக இருத்தல் வேண்டும் என்பதை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரம் வலியுறுத்துகிறது.
”மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”.
இக்குறள், குடும்பத்தின் பெருமைக்கு மனைவியையே காரணியாக்குகிறது. பெற்ற பிள்ளைகளை
நல்லவராக்கிச் சமூகத்திற்குத் தருவது அவளது மிகச்சிறந்த அணிகலன் என்கிறது. பிள்ளைகளை மிகச்
சிறந்தவர்கள் ஆக்குவதை விட மிகச்சிறந்த செல்வம் இல்லை என்கிறார் வள்ளுவர். சிறந்த பிள்ளைகளை
உருவாக்கி விட்டால் எப்பிறவியிலும் தீமைகள் சேரா என்பது வள்ளுவர் தரும் நம்பிக்கை.
மனைவியின் பெருமை
மிக அரிதான நற்குணங்கள் உடையவராக மனைவி அமைந்து விட்டால், ஒருவனின் வாழ்வில் எல்லாமே
நல்லதாகி விடும். ”இல்லதுஎன் இல்லவள் மாண்பானால்?” எனக் கேட்கிறது வள்ளுவம். பெண் ஆனவள்
தன்னைக் காத்துத் தன்னைக் க�ொண்டவன் ஆகிய கணவனையும் பேணி இணையராக இன்புற்று
வாழ்வதே மிகச்சிறந்த குடும்பத்திற்கு அடிப்படை என்கிறது திருக்குறள்.
”தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்
ச�ொற்காத்துச் ச�ோர்விலாள் பெண்”
இல்லறக் கடமைகள் பெரும்பாலும் பெண்ணையே நம்பியிருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 15
கணவனின் கடமை
ஆகச்சிறந்த குடும்பஸ்தன் என்பவன், இடைவிடா முயற்சிகளில் முனைந்து தன் குடியை உயர்த்துவதையே
ந�ோக்கமாகக் க�ொண்டிருப்பான் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குடும்பத்தலைவனின்
ப�ொறுப்புகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவதே இக்குறளின் ந�ோக்கம்.
”இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை”
துறவியர், வறுமையர், இரப்போர் அனைவருக்கும் இல்லத்தலைவனே துணையாக இருத்தல் கடமை
என்கிறது வள்ளுவம்.
”துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இரந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை”
இக்குறள் இல்லறத்தில் உள்ளோரின் ப�ொதுக் கடமைகளையும், விருந்தோம்பற் பண்பினையும் விளக்குகிறது.
அறமே அடிப்படை
”அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல”
என்ற குறள், இல்லவாழ்வோர், அறவழிகளின் மூலமே இன்பம் பெற வேண்டும் என்பதையும், மற்ற
மறவழிகளின் வழிப்பெறும் இன்பம் இழிவானது என்பதையும் கூறுகிறது. இல்லறத்தின் ந�ோக்கம்
இவ்வுலகியம் இன்பம் அதனை அடையும் வழிமுறைகள் நேர்மையானவையாக இருத்தல் நலம் என்பதே
இதன் சாரம்.
ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், ந�ோயாளிகள் மற்றும் முதிய�ோர், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும்
குடும்பஸ்தன் என்பான் துணைவனாக இருக்க வலியுறுத்துகிறது திருக்குறள். பழிச்சொற்களுக்கு அஞ்சி,
பகுத்து உண்ணும் குணம் உடையவனே சிறந்த குடும்பத்தலைவன் என்கிறது வள்ளுவம்.
”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
இக்குறள் இல்வாழ்க்கை நிறைந்த பயனடைய, அன்பும் அறமுமே அடிப்படை என்கிறது. இவ்விரண்டும்
இல்லாத குடும்ப அமைப்பு எவ்வளவு வசதிகளை உடையதாயினும் மேம்பட்டதன்று என்பது வள்ளுவக்
க�ொள்கை.
மக்கட்பேறு !
”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே –
அது நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”
என்ற பாடல், மனைவி, தாய் என்ற இருவகைப் பாத்திரம் ஏற்கும் பெண்களின் பெருமையைப் பேசுகிறது.
விருந்தோம்பல்
இல்லறத்தில் இருந்து இல்வாழ்வுக்குரிய ப�ொருள்களையும், வீட்டையும் ப�ோற்றிக் காத்து வாழ்வதெல்லாம்
தன்னை நாடி வந்த விருந்தினர், துறவியர், ஆதரவற்றோர், யாசகர் ஆகிய�ோரைக் காத்துப் ப�ோற்றவே
என்பதனை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் ப�ொருட்டு”
ஆக மிகச்சிறந்த குடும்பக் கட்டமைப்பு என்பது ஊரும், பேரும், காரும் அல்ல. நல்ல கணவன், நல்ல மனைவி,
நல்ல பிள்ளைகள் என்பதனை வான்புகழ் வள்ளுவம் நிறுவுகிறது !
16 |
மாதிரிக் கட்டுரை-04
இல்வாழ்க்கை
வள்ளுவப் பேராசான் கூறுவது, குடும்பப் பெருமையை மனைவியையே சாரும்; நல்ல பிள்ளைகளே
அவளின் சிறந்த அணிகலன்கள் என்கிறது.
”மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
மனைமாட்சி
மிக அரிதான நற்குணங்கள் உடையவளாக மனைவி அமைந்து விடின், அக்குடும்பத்திற்கு வேறு
பெருமையே இல்லை என்பது வள்ளுவம்.
”இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை?”
இல்லத் தலைவியாகிய பெண், தன்னையும் காத்துத் தான் க�ொண்டவனையும் காக்கும் ப�ொறுப்புடையவள்
என அறிவுறுத்துவது வள்ளுவத்தின் சிறப்பு.
”தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
ச�ொற்காத்துச் ச�ோர்விலாள் பெண்”
கணவனின் கடமை
ஆகச்சிறந்த குடும்பத் தலைவன், இயல்வான வழிகளில் முயன்று தனது குடியை உயர்நிலைக்குக்
க�ொண்டுசெல்பவனே என்கிறார் வள்ளுவர்.
”இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை”
பாராது, துறவியர், வறியவர், இரப்போர் ஆகிய�ோரை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பது இக்குறள்.
நேர்மையே அடிப்படை
நேரிய வழிகளில் அடையக் கூடிய மகிழ்வே நிம்மதி; மாறான வழிகளில் இன்பம் துய்ப்பது நிலையானதன்று.”
”அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல” - என்கிறது குறள்.
வாழ்க்கையின் ந�ோக்கம் இன்பமே. எனினும் அதனை அடையும் வழிமுறை நேர்மையே என்பது
திருக்குறளின் முழுமையும் பரந்து காணப்படும் அறம். எது வாழ்க்கை? அன்பு, அறம் ஆகிய இரண்டும்
உடைய வாழ்க்கை சிறந்த பயன்களைத் தரும். இவையிரண்டும் இல்லாக் குடும்பம் எவ்வளவு வசதிகளை
உடையதாயினும் மேம்பட்டதன்று என்பது வள்ளுவம்.
”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 17
மக்கட்பேறு
விருந்தோம்பல்
இல்லற வாழ்வின் இலக்குகளில் முதன்மையானது விருந்தோம்பல். விருந்தினர், துறவியர், ஆதரவற்றோர்,
யாசகர் ஆகிய�ோரைப் பேணுதலும் ஒன்று. இதனை வலியுறுத்தும் வள்ளுவம்,
”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் ப�ொருட்டு”
த�ோன்றின் புகழ�ொடு!
”மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்;
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று ப�ோற்றிப் புகழ வேண்டும்” - கவிஞரின் கருத்து.
”த�ோன்றின் புகழ�ொடு த�ோன்றுக” என்பது வள்ளுவரின் கட்டளை.
தாயிற் சிறந்த!
”ஈன்ற ப�ொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”.
சான்றோன் ஆனவன், ”அன்பு நாண் ஒப்புவரவு கண்ணோட்டம் வாய்மை” ஆகிய உயர் பண்புகளின்
உறைவிடமாக விளங்க வேண்டும் என்பது குறட்கொள்கை.
பிள்ளைகளின் கடமை! இவனை பிள்ளையாகப் பெற்றமைக்கு இவன் தந்தை என்ன தவம் செய்தான�ோ
என ஊரார் வியக்கும் வண்ணம் நல்ல குடிமைப் பண்பு மிக்கவனாகத் திகழ விழைகிறது வள்ளுவம்.
”மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் க�ொல்லெனுஞ் ச�ொல்”
மக்கட்பேறு: பேறு – செல்வம். ஒருவரின் சிறந்த செல்வம் அவரின் பிள்ளைகளே என்பது குறட்கொள்கை.
”தம்பொருள் என்ப தம்மக்கள்” என்பது குறள்.
சிற்றினம் சேராமை
”சேரிடம் அறிந்து சேர்” என்பது பழம�ொழி. ஒருவனின் நட்பு அவன் ஆளுமையில் முதன்மைப் பங்கு
வகிக்கிறது. ”மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு” என்பது உண்மையான கருத்து. நல்லவன் கூடத்
தன் சேரிடத்தால் கெட்டவனாகக் கூடிய நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்தில் வெளிப்படை வள்ளுவரின்
எச்சரிக்கை நடைமுறை அறவுரை.
”மருவுக மாசற்றார் கேண்மை” என்கிறார் வள்ளுவர். அற்ற குளத்து அறுநீர்ப் பறவையாய் உள்ளோரின்
நட்பினை நீக்க வேண்டும்.
ஆடை நெகிழும் ப�ோது உடன் வந்து காக்கும் கை ப�ோன்றவரே சிறந்த நட்பினர் என்பது வள்ளுவம்.
ஒழுக்கமே உயர்வு தரும்! ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை”, ”ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற
குறளடிகள் மனித குலம் முழுமைக்கும் ப�ொருந்தக் கூடியன. ஏனெனில், ”தீய�ொழுக்கம் என்றும் இடும்பை
தரும்” என எச்சரிக்கிறார் வள்ளுவர்.
18 |
ஒத்தது அறிவான்! “பிறரின் உணர்வுகளைப் புரிந்த நடப்பவனே மனிதன்” என்ற கருத்தில்,
”ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” என்பது ஒப்புரவ நெறி!
தீயினும் அஞ்சுக! ”தீய விளைவுகளையே தருமாதலால் தீயவற்றைத் தீயைவிட அஞ்சவேண்டும்” என்ற
ப�ொருளில், ”தீயினும் அஞ்சப் படும்” என்பது குறள் நெறி.
”மறந்தும் பிறன்குடு சூழற்க” எனக் கட்டளையிடுகிறது திருக்குறள்.
பணமே தேவை! ஒருவனை மதிப்புமிக்கதாக்குவது ப�ொருள்.
”கையிலே காசில்லாதவன் கழுதை“ என்பது ச�ொலவடை.
ஒருவரைப் ப�ொருட்டாக மதிக்க செய்வது ப�ொருளே.
”ப�ொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்கிறார் வள்ளுவர்.
”இல்லாரை எல்லாரும் எள்ளவர்” எனவே, திறனறிந்திப் ப�ொருள் ஈட்டுக என்கிறது குறள்.
இதுகாறும் கூறியவற்றால் ”திருக்குறள் மக்களின் அன்றாட வாழ்வில்” செய்யும் பங்களிப்பு மிகப்பெரியது
என்பது உறுதியாகின்றது!
மாதிரிக் கட்டுரை-05
முகப்புரை
”இந்திய நாட்டு மக்களாகிய நாம் இறையாண்மை மிக்க சமத்துவச் சமயச்சார்பற்ற மக்கள் ஆட்சிக் குடியரசு
மற்றும் அதன் அனைத்துக் குடிமக்களையும் காப்பது” ”சமத்துவம்” ஆனது “சுதந்திரம், நீதி, சக�ோதரத்துவம்”
ஆகியவற்றை உள்ளடக்கியது.
சமநீதி
மனத்தளவில் ஒரு பக்கம் சாயாமல் நேர்மையுடன் நடந்து க�ொள்வது, பேசும் பேச்சினில் எதிர�ொலிக்கும்.
”ச�ொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் டஇன்மை பெறின்”
தனி மனிதரும் சரி, ஆள்வோரும் சரி விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகாமல் நடக்க வேண்டும் என்பது
வள்ளுவம்.
செங்கோண்மை
எந்த ஒரு விடயத்தையும் நன்கு ஆராய்ந்து எவர் பக்கமும் சாயாமல் ஆட்சி செய்து இன்னார்-இனியர் எனத்
தேர்ந்து அதன் வழி நிருவாகம் செய்வதே சமநீதி தவறா ஆட்சி.
”ஆர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை”
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 19
ஆட்சிப் பெருமை
ஆட்சியாளர்கள் குடிமக்கள் எவரும் தம்மை அணுவதற்கு எளியராகவும், கடுஞ்சொல் பேசாதவராகவும்
இருத்தல் வேண்டும் என்கிறது ”இறைமாட்சி” அதிகாரம்.
”காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”
- இக்குறள் அரச பரம்பரைக்கு மட்டுமன்றி, மக்களாட்சி நிலவும் இக்கால ஆள்வோருக்கு மிகவும் ப�ொருந்தும்.
சார்பின்மை
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” - பெருமை
”பிறப்பினால் அனைவரும்/அனைத்துயிர்களும் சமம். அவரவர் த�ொழில்களால் மக்கள் வேறுபடுகின்றனர்”
என்ற குறட் கருத்து உலகச் சமத்துவச் சிந்தனையின் உச்சம்.
”யாதும் ஊரே, யாவரும் கேளிர்”
என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றும் ”உலகமே ஒரு குடும்பம்” என்ற உண்மையை உணர்த்துகிறது.
”வசுதைவ குடும்பகம்” என்று வடம�ொழி வேதங்கள் காட்டும் க�ொள்கையும் இவண் நினைவு கூரத்தக்கது.
”பிறப்பு ஒக்கும்” – இரண்டு ச�ொற்களையும் ஒரே சீரால் “பிறப்பினால் சமம்” என்று ச�ொன்ன வள்ளுவத்தின்
மாண்பு வியக்கத்தக்கது.
சட்டத்தின் முன்!
”கடவுளின் முன் எல்லோரும் சமம்”
”சட்டத்தின் முன் அனைவரும் சமம்”
”இயற்கையில் அனவைரும் ஒன்றே” என்பன உலகளாவிய முழக்கங்கள்.
இம்முடிவுகளின் ஒட்டும�ொத்த சாரமாக விளங்குவது ”திருக்குறள்” எனில் அது மிகையன்று.
பாரதியின் அறைகூவல்!
“ஏழையென்றும் அடிமையென்றும் எவறுமில்லை சாதியில் – இழிவுக�ொண்ட மனிதர் என்போர்
இந்தியாவில் இல்லையே”- என்ற பாரதியின் ச�ொற்கள் திருக்குறளின் சாரமே ஆகும்.
ஒப்பற்ற உண்மைகள்!
1. உயிர்க்கொலை, புலால் மறுப்பு இல்லாதவரை உலகமே வணங்கும்.
2. ஆயிரம் வேள்விகளினும் சிறந்தது புலால் மறுப்பு - உயிர்க்கொலை செய்து உண்ணைாமை.
3. ”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற உலகம் ப�ோற்றும்
மெய்யியல்.
4. ”உள்ளவது எல்லாம் உயர்வுள்ளல்”.
5. மனித இனம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள், நடத்தைகளைக் க�ொண்டுள்ள உயர்நூல் திருக்குறள்.
6. ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூல�ோர்
த�ொகுத்தவற்றுள் எல்லாந் தலை”. -
உணவு, ப�ொது; எனது – உனது என்றில்லை. எல்லோருக்கும் ஈந்து உண்பதே நாகரிகச் சமூகத்தின்
நன்னெறிக் க�ொள்கை!
7. நம்மைவிட எளியவரிடம் இரக்கம் காட்டல் வேண்டும் ”வல்லான் வகுப்பதே வாய்க்கால்” என்ற நிலை
மாற வேண்டும்
20 |
”வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து” - உயர் சிந்தனை
8. அன்பே உயிர்!
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புத�ோல் ப�ோர்த்த உடம்பு”
அன்பு இருக்கும் இடத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளுக்கும் சற்றும் இடமில்லை. அன்பு உலகமாக ஆற்றலாக
விளங்கும் அரும்பெரும் மந்திரம். அன்பு சமநிலையில் மட்டுமே செலுத்தப்படும். அதில் கூடக்குறைவு
என்பதற்கே இடமில்லை.
9. உலகம் முழுவதும் சமயவழிச் சிந்தனைகளே முதன்மை பெற்று நின்ற காலத்தில், திருக்குறள் மட்டுமே
மதவழி வேறுபாடுகள் இன்றிச் சமத்துவ ந�ோக்கிலும், ப�ோக்கிலும் ”அறம்” ஒன்றையே முன்னெடுத்தது!
10. ப�ொதுமை: திருக்குறள் இறைவாழ்த்தில் தத்தும் சமயக் குறிப்புகள் உள்ளன எனக் கூறுவாரும், அதன்
ப�ொதுமையை, உட்கிடக்கையை மறுப்பது இல்லை. மதம்சார் நூலன்று, குறள், அது மனிதம் பேசம் புனித
நூல். 1. எச்சமயத்தவரும் - தத்தும் நூலாகக் க�ொள்ளுதல், 2. இறை மறுப்போரும் திருக்குறளை ஏற்றல்.
குடியியல்
அதிகாரங்கள் 96 முதல் 108 வரை குடியியல், குடிமை, மானம், சான்றாண்மை, பண்புடைமை, பெருமை
என்பதாக ஒரு சிறந்த குடிமகன்/குடிமகள் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது.
ப�ொருள்: மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது அறம், மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை
உடையவை. (ஆகுல நீர – ஆரவாரத் தன்மையுடையன).
(b) அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
ப�ொருள்: இன்பம் என்பது அறநெறியுடன் கூடிய வாழ்வில் இருந்து விளைவது. அறமல்லாத இன்பம்,
இன்பமன்று, புகழும் இல்லாதது. (புறத்த – அறத்துக்குப் புறம்பாவன).
5. Impartiality – நடுவுநிலைமை
(a) தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
ப�ொருள்: தகுதியுடையர், தகுதியற்றவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும், பழியாலும்
காணப்படும். (எச்சம் – மிச்சம்/ச�ொச்சம்).
(b) சமன்செய்து சீர்தூக்கும் க�ோல்போல் அமைந்தொருபால்
க�ோடாமை சான்றோர்க்கு அணி.
ப�ொருள்: தான் சமமாக இருந்து, தராசினைப் ப�ோல, ஒரு பக்கமாகச் சாயாமல் “நடுநிலை“ (Neutrality)
ப�ோற்றுவது சான்றோர்க்கு அழகு.
22 |
6. The Possession of Self-Restraint – அடக்கமுடைமை
(a) நிலையின் திரியாது அடங்கியான் த�ோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
ப�ொருள்: தன் நிலையிலிருந்து மாறாமல் அடங்கி நடப்பவனுடைய உயர்வு (த�ோற்றம்), மலையின் உயர்வை
விட மிகவும் பெரியதாகும். (மாண-மிகவும்/very/too).
(b) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
ச�ோகாப்பர் ச�ொல்இழுக்குப் பட்டு.
ப�ொருள்: ஒருவன் எவற்றை காக்கா விட்டாலும், நாவை மட்டுமாவது காக்க வேண்டும். தவறினால்
ச�ொற்குற்றத்தில் துன்பம் வந்து சேரும். (ச�ோகாப்பர் – துன்புறுவர்).
மனிதகுல மதிப்புகள்
அறம், இல்வாழ்க்கை, பிள்ளைச் செல்வம், அன்பு, விருந்தோம்பல், இனியவை கூறல், அடக்கம், ஒழுக்கம்,
ப�ொறுமை, அழுக்காறாமை, புறம் பேசாமை, ஒப்புரவு, ஈகை, புகழ், அருள், கூடாவ�ொழுக்கம், வாய்மை, கல்வி,
கேள்வி, அறிவு, மானம், குடிமை, சுற்றந்தழால், பெருமை, பண்புடைமை மற்றும் சான்றாண்மை.
ந�ோய் - துன்பம்
26 |
4. Compassion - அருளுடைமை:
5. Friendship - நட்பு:
ப�ொருள்: சிரித்துப் பேசிப் பழகுவதற்கு மட்டுமே நட்பு அன்று, நண்பன் தவறிழைக்கும் ப�ோது
முற்பட்டுச் சென்று இடித்துத் திருத்துவதே நட்பு.
6. Courtesy - பண்புடைமை:
7. Hearing - கேள்வி:
ப�ொருள்: நல்ல விடயங்கள் எவ்வளவு சிறிதாக இருப்பினும் கேட்க, அவை நிறைந்த பெருமையைத்
தரும்.
ப�ொருள்: பலன் எதிர்பாராது செய்யும் உதவி, கைம்மாறு வேண்டாமல் ப�ொழியும் மழைக்குச் சமம்.
ப�ொருள்: உதவி என்பது முன் செய்த உதவியின் அளவைப் ப�ொறுத்தன்று, உதவி செய்யப்பட்டவரின்
குணத்தைப் ப�ொறுத்ததாகும்.
வரை – அளவு.
1. Impartiality : நடுவுநிலைமை:
துள்ளற்க – நினையாதே.
விளக்கம்: நெய்யினைப் ப�ொழிந்து செய்யும் ஆயிரம் வேள்விகளை விட, ஒரு உயிரைக் க�ொன்று
அதன் புலாலை உண்ணாமலிருப்பது பல மடங்கு நன்மையைத் தரும்.
விளக்கம்: திருட்டுத் தனத்தால் கிடைத்த செல்வம் பெருகுவது ப�ோலத் த�ோன்றி அழிந்து விடும்.
6. Hearing - கேள்வி:
ஒற்கம் – தளர்ச்சி.
9. Energy - ஊக்கமுடைமை:
விளக்கம்: ஊக்கமே ஒருவற்குச் சிறந்த செல்வம், அச்செல்வம் இல்லார் மக்கள் அல்லர், மரம்
இரண்டிற்கும் வேறுபாடு த�ோற்றமே.
ப�ொருள்: மழை என்ற வருவாயின் வளங்குறைந்தால் உழவர் ஏர் க�ொண்டு நிலத்தை உழமாட்டார்.
ப�ொருள்: துறவியர், ஏழையர் மற்றும் மறைந்த முன்னோர் ஆகிய மூவரையும் காக்கும் கடமை
இல்லறத்தார்க்கே உரியது.
முனிய – வெறுக்க.
5. Imposture - கூடாவ�ொழுக்கம்:
ப�ொருள்: மற்றவர் செல்வத்தின் மீது ஆசை க�ொண்டு அவர்கள் அறியாமல் திருடுவது, த�ொடக்கத்தில்
இனிதாக இருப்பினும், விளைவு வரும் ப�ோது தீராத துன்பத்தையே தரும்.
7. Poverty - வறுமை/இல்லாமை:
ப�ொருள்: ஒருவன் நெருப்பில் கூடத் தூங்கி விடலாம். ஆனால், வறுமையில் கண நேரம் கூடக்
கண்களை மூட முடியாது.
ப�ொருள்: தாம் கேட்ட இரகசியங்களை பிறருக்கு வலிய க�ொண்டு ப�ோய்ச் ச�ொல்லுவதால் கயவர்கள்,
பறை என்ற கருவிக்கு ஒப்பாவர்.
மாதிரிக் கட்டுரை - 1
செங்கோன்மை
”மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற ம�ோசி கீரனாரின் கூற்றுக்கு ஏற்ப, குடிமக்கள்
ஆட்சியாளரையே ந�ோக்கி வாழ்தலால், ஆள்வோரின் ஆளுமையும், நேர்மையும் முதன்மையாகக்
க�ொள்ளப்படுகிறது.
”மன்னவன் க�ோல்நோக்கி வாழும் குடி” என்பது குறள். எந்த ஒரு விடயத்திலும் ஆய்வு, நடுவு நிலை,
ஆளுமை மூன்றும் இணக்கமாக இருப்பதே அரச நீதியாக வள்ளுவம் உரைக்கிறது.
க�ொடுங்கோன்மை
க�ோள்நிலை திரியின் மாரி வறம் கூறும்” - மணிமேகலை என்ற காப்பிய அடிகள் ஒப்புந�ோக்கத்
தக்கது.
ஆட்சிப்பிழை
குடிமக்களிடம் இருந்து பெறப்படும் வரிகள் மூலமான வருவாய் (Income by Taxes) ஓர் ஒழுங்கிற்கு உட்பட்டு
அமைய வேண்டும். அளவிறந்த, நெறியற்ற வரிவசூல் வழிப்பறிக் க�ொள்ளைக்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.
ஆட்சியின் மாட்சி
ஒரு சிறந்த ஆட்சியாளன், குடிமக்கள் தன்னை எளிதில் அணுகக் கூடியவனாகவும், கடுஞ்சொல் பேசாதவன்
ஆகவும் இருக்க வேண்டுவதன் அவசியத்தைக் குறள் க�ோடிட்டுக் காட்டுகிறது. நீதி வழுவாது ஆளும்
ஆட்சியாளன், குடிமக்களுக்கு இறைவனாகக் கருதப்படுவான்.
வரவும்-செலவும்
இக்குறள், ஓர் அரசின் ஒவ்வோர் ஆண்டின் நிதிநிலையை மேலாண்மை செய்கிறது. ப�ொது விநிய�ோகம்
(Public Distribution) பற்றிய தெளிவான கருத்தையும் இதன் மூலம் வள்ளுவம் வகுக்கிறது.
34 |
இயற்றல் – வருவாய்க்கான வழிகள் - Sources; ஈட்டல் – த�ொகுத்தல் - வசூலித்தல் – Collection; காத்தல்
– சேமித்தல் – Banking; வகுத்தல் – திட்டமிடல் –(Scheming/Planning).
அமைச்சு
என்ற குறள், அமைச்சர், உயர் அரசு அலுவலர், மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ப�ோன்ற
எல்லா நிலையினருக்கும் ப�ொருந்துவதாகும்.
இடம்-ப�ொருள்-ஏவல்
வினையாற்றக் கூடிய காலம், செயல் ஆகியவற்றுடன் அது செயல்படத் தேவையான இடமும் கருத்தில்
க�ொள்ளப்பட வேண்டும் என்கிறது வள்ளுவம்.
இடிப்பார்
தவறு கண்டப�ோது திருத்தும் ஆற்றல் மிக்கோர் நிர்வாகம் என்பது, தனிய�ொருவன்பாற் பட்டதன்று, அது
கூடிச்செய்யும் க�ோட்பாட்டின் பாற்படும். எனவே, ஆள்வோர் எச்செயலலையும் சூழ்ந்து செயல்பட வேண்டும்.
நல்லவர்களின் த�ொடர்பை எக்காலத்தும் ஆட்சியில் உள்ளோர் விட்டுவிடல் கூடாது என்பது குறளாசானின்
அரசியல் நெறி.
குற்றம் கடிதல்
”குற்றமே காக்க ப�ொருளா” என்பதற்கேற்ப குற்றங்கள் அண்டாமல் காக்க வேண்டும் என்பது அரசியலில்
அறம் நிலைப்பதற்கான வழியாகும்.
36 |
படைச்செருக்கு (Military Spirit)
இக்குறள் ப�ோர்க்களத்தில் வெற்றி பெறும் வீரனை மட்டுமன்றி, எந்த ஒரு தனி மனிதனின் முயற்சியையும்
அவனது பேராண்மையின் அளவையும் பேசுகிறது. முயல் வேட்டையாடி வெற்றி பெறுவதை விட,
வெங்கொடுங்காட்டில் மதகளிறாம் ஆண்யானை வேட்டையில் த�ோல்வியுறுவதே மேல் என்ற
மேலாண்மைச் சிந்தனையை விதைக்கிறது இக்குறள்.
நாடு
நாட்டையாள்வோர் தமது குடிகளைப் பசி, பிணி, பகை இவை அண்டாது காக்க வேண்டியதன் அவசியத்தைப்
பட்டியலிடுகிறார் வள்ளுவர். ”சிலம்பு-மேகலை” ஆகிய ”இரட்டைக் காப்பியத்தில்”
மேலும், ஒரு நாடு, மக்கள் விரும்பிச் சென்று தேடும் வளங்கள் இல்லாமல், இயற்கையாகவே விளைந்து
வளங்கொழிக்கும் செழிப்பும், வளமும் மிக்கதாக அமைய வேண்டும் என்கிறார், வள்ளுவர்.
மாதிரிக் கட்டுரை - 2
முன்னுரை
உலகம் உருண்டு க�ொண்டே இருக்கிறது. கால ஓட்டத்திற்கு ஏற்ப அதன் காட்சி நிகழ்வுகள் மாறிக்
க�ொண்டே இருக்கின்றன. அந்தந்தக் காலத்தில் த�ோன்றிய நூல்கள் அவற்றைப் பதிவு செய்துள்ளன. சில
நூல்கள் மட்டும் காலத்தைக் கடந்து, எக்காலத்து நிகழ்வுக்கும் ப�ொருந்தும்படி கருத்துகளைக் கூறுகின்றன.
அவற்றுள் ஒன்று திருக்குறள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் த�ோன்றிய திருக்குறளின் கருத்துகள்
இன்றைய நிகழ்வுகளுக்கும் ப�ொருத்தப்பாடு உடையதாக இருக்கிறது.
மக்களைக் காத்தல்
ஓர் அரசின் தலையாய கடன் மக்களைக் காத்தலே ஆகும். இன்றைய அரசு மக்களை இரண்டு நிலைகளில்
காக்கின்றது. ஒன்று உள்நாட்டில் கள்வர்கள் உள்ளிட்ட தீய�ோரிடம் இருந்தும், சிறுத்தை உள்ளிட்ட
வனவிலங்குகளிடம் இருந்தும் மக்களைக் காப்பாற்றுதல், மற்றொன்று பகை நாட்டிடமிருந்து மக்களைக்
காப்பாற்றுதல், செயின் பறிப்பு, பெண்களைச், சீரழித்தல் ப�ோன்ற க�ொடுமைகள் நடக்கும் ப�ோது காவல்
துறை செயல்பட்டு அவை மேலும் நிகழா வண்ணம் தடுக்கின்றன. வெளிநாட்டுப் ப�ோர் நடக்கும் ப�ோது
இராணுவம் சிறப்பாக செயல்படுகின்றது.
இத்தகைய நிகழ்வுகளுக்கு,
“இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்“. (547)
படை நிர்வாகம்
நிதி நிர்வாகம்
வரவு-செலவு இல்லாத அரசே உலகில் இல்லை என்று ச�ொல்லிவிடலாம். அந்த அளவிற்கு நிதி முக்கியமானது.
எந்த ஒரு அரசுக்கும் இன்று மூன்று வழிகளில் தான் நிதி வருகின்றது.
2. வெளிநாட்டுப் ப�ொருள்களை இறக்குமதி செய்யும் ப�ோது அதன் மீது விதிக்கும் இறக்குமதி வரி.
முதலாவதாகிய தன் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரி குறித்துக் கூறும்போது, முதலில் வரி வசூல்
வழிகளைத் திட்டமிட வேண்டும். ச�ொத்து வரி, விற்பனை வரி, நீதிமன்றக் கட்டணம், பதிவுக் கட்டணம்,
வருவாய் வரி, கல்வி வரி, சேவை சரக்கு வரி, சாலை வரி என்பன ப�ோன்று ப�ொருள் வரும் வழிகளைப்
பெருக்குவதற்கான திட்டமிட வேண்டும். பின் அவற்றைச் செயல்படுத்திப் ப�ொருள் ஈட்ட வேண்டும். ஈட்டிய
ப�ொருளைக் காக்க வேண்டும். காத்த ப�ொருளை உரிய வழியில் செலவழிக்க வேண்டும். இதைத்தான்
இன்றைய அரசுகள் செய்கின்றன.
செலவினத்தின் வரையறை:
முடிவுரை
இங்ஙனம் வள்ளுவர் ஓர் அரசனின் தலையாய கடன் மக்களைக் காத்தல் என்றும், அதற்குத் துணையாய்
இருப்பது சிறந்த படை நிர்வாகம் என்றும், மக்களிடம் வரி வசூல் முறையினையும் அதனைத் திருப்பி
மக்களுக்குத் திட்டங்களாக முறைப்படிக் கூறுகிறார்.
மாதிரிக் கட்டுரை - 3
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூலாக, அனைத்துத் துறைகளுக்குமான ஏடாக ஒளிக்கிறது. அறம், அகம்,
அரசியல், தத்துவம் ப�ோன்றே வள்ளுவம் உரைத்த ப�ொருளாதாரக் கருத்துகள் மிகையானவை.
நூல் முழுமையும் இத்தலைப்பில் அடங்கியுள்ள கருத்துகளை இவண் பட்டியலிடுவ�ோம். திருக்குறள்
ப�ொருளாதாரத்தின் அடிப்படையினை எடுத்துரைக்கிறது. இக்கட்டுரையில் வள்ளுவம் தந்திட்ட அரிய
ப�ொருளியலைப் பட்டியலிடுவ�ோம்!
ப�ொருளின் சிறப்பு
என்ற குறள், இவ்வுலகம் ஒரு ப�ொருட்டாக மதியாதவரையும், மதிக்கச் செய்யும் மாண்புமிக்கது ப�ொருள்
என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
என்பதற்கேற்ப பணம் இருப்பவனுக்கு எந்நாடும் விலக்கன்று. எனவே, “ப�ொருள்“ என்பது ஒரு “ப�ொய்யா
விளக்கு“ என்பது உண்மை.
ஈட்டும் நெறி
தவறான வழிகளில் ப�ொருள் ஈட்டல் கூடாது என்பது குறள்நெறி. அவ்வாறு வரும் ப�ொருள் நிலைக்காது
என்பதே நெறி. அத்தகைய ப�ொருள் பச்சை மண் குடத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீருக்குச் சமம்
என்பது வள்ளுவம். தண்ணீரும் வீணாகி, பானையும் வீணாவது ப�ோல ஆகிவிடும் என எச்சரிக்கிறார்
வள்ளுவர். அதே நேரம், நல்வழியில் பணம் சம்பாதிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார்
வள்ளுவர்.
பணமே வலிமை
“ப�ொருள் உடையவரே இவ்வுலகில் வாழ முடியும்“ என்பதனை இக்குறள் வலியுறுத்துகிறது. எனவே, “செய்க
ப�ொருளை“ எனக் கட்டளையிடுகிறார் வள்ளுவர். அப்பொருளானது, பகைவரையும் நம்மிடம் மண்டியிடச்
செய்யும் கூரான வாள் ஆகும் என நிலைநாட்டுகிறது குறள்.
சங்க நூல்கள் காட்டும் பிரிவுகளில் “ப�ொருள் வயிற்பிரிவு“ என்பதும் ஒன்று. இல்லற வாழ்வில் ஈடுபட்டோரில்,
ப�ொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் பிரிதலை ஒரு துறையாகவே பாடுகிறது சங்கம். த�ொல்காப்பியரும்
இது பற்றிப் பேசுகிறார்.
அரசின் வருவாய்
நேரிய முறையில் ! ஆட்சியாளர், குடிமக்களிடம் இருந்து பெறும் வருவாய் வகையிலான வரிகளின் அளவு
ஓர் கட்டுக்குள் இருத்தல் வேண்டும். இன்றேல், அது அவ்வரசின் ஆட்சிக்கே கேடாய் முடியும் என்பது
வள்ளுவத்தின் எச்சரிக்கை !
குன்றேறி யானைப்போர்! ‘அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்“ (தன்கையே தனக்கு உதவி) என்பது
நிதர்சனம். உரிமையுடன் கூடிய வாழ்க்கையென்பது, தானே ஈட்டிய ப�ொருளால் வாழ்வது, பிறரை நம்பி
வாழும் முறை நிலையற்றது.
42 |
”குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்னகத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை
என்ற குறளில் தானே ஈட்டிய ப�ொருள் க�ொண்டு வாழும் வாழ்க்கை, குன்றில் இருந்து க�ொண்டு யானைச்
சண்டையைக் காண்பதற்கு ஒப்பாகும் என்று நிரூபணம் செய்கிறார் வள்ளுவர்.
வரும் வழி
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த ப�ொருள்”
என்பதற்கேற்ப, நேர்மையான முறையில் ஈட்டப்பட்ட ப�ொருளால் அறம், இன்பம் இரண்டும் விளையும்,
அவையே நிலைக்கும் என்பது வள்ளுவம்.
தனி மனிதாயினும், அரசு ஆயினும் அருள், அன்பு இரண்டுடன் வாராத ப�ொருள், விரும்பப்படக் கூடாது
என்கிறார் வள்ளுவர். ஈட்டுவதிலும் (Earning) இரக்கம் தேவை என்பது, ப�ொருளியல் அரிச்சுவடி! வல்லது
அரசு !
”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
இயற்றல் – Earning, ஈட்டல் – Collection, காத்தல் – Banking, வகுத்தல் - Planning.
அரசு, குடும்பம், தனியாள், நிறுவனங்கள் அனைத்திற்குமான வழிகாட்டல் இக்குறள்.
மாதிரிக் கட்டுரை - 4
துறவறவியல்
இதனையே திருமூலர்
தவம்
நிலையாமை
இவ்வதிகாரம் முழுமையும் நிலையாமைக் கருத்துகள் க�ொட்டிக் கிடக்கின்றன. நிலையில்லாத
ப�ொருள்களை எல்லாம் நிலையானது என்று உணர்கின்ற அறிவு மிக இழிவானது என்பதனால்
அவ்வறிவினைப் “புல்லறிவு“ (Little knowledge) என்கிறது குறள்.
”கூத்தாட்டு அவை“ (Theatre)-யில் கூடிக் களையும் கூட்டம் (Audience) ப�ோன்றது செல்வம், செல்வம்
நிலையானது அல்ல என்பது குறள் காட்டும் நெறி.
”இளமை, செல்வம், உடல், அழகு” ஆகியன நிலையானவை அல்ல என்ற கருத்து ”மணிமேகலை”
காவியத்தில் முன் வைக்கப்படுகிறது.
44 |
”நாளென ஒன்றுப�ோல் காட்டி உயிர்ஈரும்
”ஒரு நாள் என்பது நமது வாழ்நாளைக் குறைக்கின்ற வாள்” என்பது வள்ளுவக் க�ொள்கை. மேலும்,
என்பதற்கு ஏற்ப, நல்ல செயல்களை நம்மால் முடிந்த வரையில் செய்ய வேண்டும். “வாழ்க்கை சிறியது“(Life
is short) எனவே, ”மரணம் வரும் முன்னர், நல்வினைகள் செய்யப்பட வேண்டும்” என்பது குறள்நெறி.
ஒரு ப�ொழுதும்
தான் வாழும் நாள் எவ்வளவு என்று தெரியாதவர்கள், பலக�ோடிகளையும் தாண்டிக் கற்பனை செய்து
க�ொள்கின்றனர் என்பது வள்ளுவத்தின் சாடல்.
கூடுவிட்டு
இன்பம் எங்கே?
ஆம் அளவற்ற பற்றினை ஒரு ப�ொருளின் மீது செலுத்துவதால் வரும் தீமைகளை, அப்பற்றுகளை
விட்டுவிடுவதால் அகற்ற முடியும்.
இடுக்கண் வருங்கால்
“துன்பம் வரும்போது சிரிக்கவும்“ என்பது இதன் ப�ொருளன்று. ”துன்பத்தை எதிர்கொண்டு வெல்க“ என்பதே
இக்குறள் குறிப்பிடும் க�ோட்பாடு.