தவறுகள் !!! -திரு.இரா.சிவா- வாக்கியம் அமைத்தல் 1. வாக்கியங்கள் இறந்த காலத்தில் எழுதப்படுவது • மீனா காலணிக்கு வெள்ளைப் பூசினாள்.
2. கொடுக்கப்பட்ட படத்திலுள்ள வினைகளைக்
கவனத்தில் கொள்வதில்லை.. • தீ மூட்டுதல்/முகாம் அமைத்தல்
3. மிக எளிமையான வாக்கியங்கள் அமைப்பது
• அமுதா வெங்காயம் நறுக்குகிறாள். • இம்மாதிரியான வாக்கியங்களுக்கு 1 அடிப்படை புள்ளி மட்டுமே வழங்கப்படும் 4. காட்சிக்கு / வினைச்சொல்லுக்கு ஏற்ற கலைச்சொற்கள் இருப்பதில்லை • அமுதரசி துடைப்பதைக் கொண்டு முறையாகக் கூட்டுகிறாள். • விமலன் முதியவர் ஒருவருக்குக் கனிவாக உணவு பரி மாறு கிறான்.
5. அதிகமான எழுத்துப்பிழைகளுடைய வாக்கியங்கள் • ரா வி பு த் தகளை அ டி க்கி கு கி றாண்.
6. கருத்துப்பிழை மிகுந்த வாக்கியங்கள் • சுகுமாறன்மரம் நறுக்குகிறான். • எ ழு த் து ப ் ப ிழை இல ் ல ா த வ ாக ் க ிய ம ் எனினும் புள்ளிகள் வழங்கப்படாது.
படக்கட்டுரை 1. முன்னுரை சிறுகதைபோல் இருப்பதில்லை • ஓர் ஊரில் ரவி என்ற பையன்......
2. முடிவுரை வித்தியாசமாக / சுவாரசியமாக /
திருப்பங்களுடன் / நகைச்சுவையாக இருப்பதில்லை.
3. கதாப்பாத்திரங்களைக் குழப்பமாகப் படைப்பது
4. கொடுக்கப்பட்ட உரை குமிழ்களைப்
பயன்படுத்துவதில்லை.
5. தேவையற்ற நீளம்/கதைக்குத் தேவைப்படாத நீளமான முன்னுரையும் முடிவுரையும்.
6. ஒற்றுப் பிழைகள், குறில் நெடில் எழுத்துப் பிழைகள், தவறான கொம்புச் சொற்களின் பயன்பாடு, நிறுத்தற்குறிகளை மறந்து விடுவது போன்ற பலவகையான எழுத்துப் பிழைகள்
7. வாக்கிய அமைப்பு முறையாக இருப்பதில்லை /
கதை தெளிவில்லாமல் குழப்பமாக இருப்பது. திறந்த முடிவு கட்டுரை 1. முன்னுரை, அதிகபட்சம் 5 கருத்துகள், குறைந்த பட்சம் 4 கருத்துகள், முடிவுரை என்று பத்திகள் பிரிக்கப்படாதது.
2. தலைப்புக்கேற்ற வலுவான கருத்து அவற்றின் விளக்கம், அவற்றிற்கான எடுத்துகாட்டுகள் இல்லாமல் கட்டுரை எழுதுவது / எல்லா கருத்துகளும் ஒரே பத்தியில் இருப்பது.
3. அமைப்புக் கட்டுரைகளின் அமைப்பை மறந்து /
மாற்றிக் கட்டுரை எழுதுவது (உரை,அறிக்கை,கடிதங்கள்) 4. கற்பனை கட்டுரைகளில் இரண்டாம் பத்தி வரை முன்னுரையை நீட்டிப்பது / போதுமான கற்பனை வளம் இல்லாமல் கருத்துகளை விவரிப்பது / எதிர்காலத்தில் எழுதாமல் நிகழ்காலத்தில் அல்லது இறந்த காலத்தில் எழுதுவது / கற்பனை செய்து எழுதாமல் இப்போது உலகில் இருப்பதை ஒட்டி எழுதுவது.
5. உரை எழுதும்போது அவற்றிற்கான முன்னுரை
கடிதத்தில் முகமன் கூறும் முதல் வரி ஆகியவற்றை மறந்து விடுவது / உரையில் ஆங்காங்கே மாணவர்களே.. அவையோர்களே போன்ற சொற்களைப் பயன்படுத்தாதது.
6. தேவையற்ற நீளம் / உபயோகமில்லாத கருத்துகள் / மொழியணிகள் பயன்படுத்தாதது