Professional Documents
Culture Documents
Horai
Horai
சந்திர ஹோரை : ஆடை, ஆபரணங்கள் அமைய, பிரயாணம் செய்ய, பாஸ்போர்ட் எடுக்க, மாடு
வாங்க, வியாபாரம் செய்ய, கல்வி கற்க உகந்தது.
புதன் ஹோரை : புதிய கணக்குகள் எழுத, கடித போக்குவரத்து, தேர்வு எழுத, ஜோதிடம், அறிவியல்
ஆராய்ச்சிகளில் ஈடுபட, பெண் பார்க்க, தரகு வேலை மேற்கொள்ள ஏற்றது.
குரு ஹோரை : சேமிப்பு கணக்கு தொடங்க, முதலீடுகள் செய்ய, பெரிய மனிதர்களை சந்தித்து பேச,
குருவை சந்தித்து ஆசி பெற, சுபகாரியங்கள் செய்ய, பயிர் செய்ய ஏற்றது.
சனி ஹோரை : இரும்பு பொருட்கள் வாங்க, மின் சாதனங்கள் தொடர்பான பணிகளுக்கு, ஏர் உழ,
எருவிட உகந்தது.
சென்ற வாரங்களில் வேத ஜோதிடத்தின் ஒரு நுண்ணிய கால அளவான ஹோரை என்பது பற்றிய
விளக்கங்களைப் பார்தத
் நிலையில் நிறைவாக ஹோரை செய்யும் பலன்களைப் பற்றி இப்போது
பார்க்கலாம்.
ஒருவருக்கு ஹோரை பார்க்கத் தெரிந்து விட்டாலே ஒரு புது உலகம் கைகளில் பிடிபட்டு விட்டது போல
உணர முடியும். ஹோரை பார்க்கத் தெரிந்தவனையும். பட்சி சாஸ்திரம் அறிந்தவனையும் பகைத்துக்
கொள்ள வேண்டாம் என்று ஒரு தமிழ்ப் பழமொழி சொல்வதில் இருந்தே பழங்காலம் முதற்கொண்டே
தமிழகத்தில் ஹோரையின் முக்கியத்துவம் அறியப்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும்.
கிரகங்களின் ஆளுமையை மிகவும் நுணுக்கமாக சொல்லும் ஒரு கால அளவு ஹோரை என்பதால்,
உங்களின் பிறந்த ஜாதகப்படி எந்தச் செயலை ஒரு கிரகம் தருவதற்கு விதிக்கப்பட்டதோ, அது
சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் உங்களின் தினசரி வாழ்வில் அந்த ஹோரையில் நடக்கும்போது
ஜோதிடத்தின் அற்புதத்தை அனுபவித்து மெய்சிலிர்க்க முடியும்.
உதாரணமாக வியாழக்கிழமை மதியம் 1.30 மணியில் இருந்து, 3 மணி வரை ராகு காலம் என்பது ஒரு
கணக்கு. அதேநேரத்தில் அன்று மதியம் 1.00 மணியில் இருந்து 2.00 வரை குரு ஹோரையாக
வருகின்ற நிலைமையில் இங்கே ராகு காலத்தை விட குருஹோரைக்கே முக்கியத்துவம்
கொடுக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் சுப காரியங்களை செய்யலாம். இந்த அமைப்பின்படிதான்
சமீபத்தில் ஒரு ராஜ குடும்பத்து திருமண முகூர்தத
் ம் ராகுகாலத்தில் ஜோதிடர்களால் குறித்துக்
கொடுக்கப்பட்டது.
ராகுகாலமும், குரு ஹோரையும் கலந்து நிற்கும் அமைப்பில் குரு ஹோரையின் நல்ல பலன்கள்
மட்டுமே முன் நிற்கும். அதிலும் பிறப்பு ஜாதகப்படி ராகு ஒருவருக்கு நல்லவிதத்தில் அமைந்து
ராகுகாலம் எப்போதுமே நற்பலன்களைத் தரும் விதத்தில் இருக்கும்போது, அதனுள் வரும் குரு
ஹோரை இரட்டிப்பு நன்மைகளைச் செய்யும்.
எல்லா ஊர்களிலும் சூரியன் ஒரேநேரத்தில் உதிப்பது இல்லை. கிழக்கே இருக்கும் ஊர்களில் உதிக்கத்
துவங்கி, மேற்கில் மெதுவாக சூரியன் நகரும் நிலையில் அனைத்து ஊர்களுக்கும் சூரிய உதயம்
வேறுபடும். இது காலை 5.40 மணியில் இருந்து காலை 6.40 மணி வரைகூட இருக்கலாம்.
எல்லா நாட்களிலும் சூரியன் அனைத்து ஊர்களிலும் 6.00 மணிக்கு உதிப்பது இல்லை. ஆகவே 6.00
மணிக்கு ஹோரை ஆரம்பம் என்பது தோராயமான கணக்கு தான். ஹோரை என்பது ஒரு
துல்லியமான கணிதம் என்பதால் ஹோரை பார்க்கும் போது அந்த இடத்தின் சூரிய உதயம்
நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டும்.
நீங்கள் மதுரையில் இருந்து, அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாகி, சூரிய உதயம் காலை 6.15 மணி
என்றால், அன்றைய முதல் ஹோரையான சூரிய ஹோரை 6.15 முதல் 7.15 வரையிலும், அதனை
அடுத்த சுக்கிர ஹோரை 7.15 முதல் 8.15 வரையிலும் அமையும். இதன்படியே மற்ற ஹோரை
வரிசைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொதுவாக 6-7 என ஹோரை வரிசையை வைத்துக்
கொண்டு, சூரிய உதயத்தை கவனிக்கவில்லை என்றால் மாறானவைகள் நடக்கும். இந்த சூரிய உதய
கணக்கு ராகுகாலத்திற்கும் பொருந்தும்.
இன்னும் ஒரு நுணுக்கமாக பகைக் கிரகங்களின் நாளில் வரும் பகை ஹோரைகள் ஒரு மனிதனுக்கு
சாதகமான பலன்களைச் செய்வதில்லை. நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் குருவுக்கும்,
சுக்கிரனுக்கும் சமரசமற்ற கடும் பகை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்காகவே தேவகுரு,
அசுரகுரு கதைகள் நமக்கு சொல்லப்பட்டன. அதைப் போலவே இருள் கிரகமான சனிக்கும், ஒளிக்
கிரகங்களான சூரிய, சந்திரர்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதும் நமக்கு அறிவுறுத்தப்பட்டு
இருக்கிறது.
நிறைவாக எந்த ஹோரையில் எதைச் செய்யலாம், ஒரு ஹோரையில் பொதுவாக என்ன நடக்கும்
என்பதோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்வோம்.
சூரிய ஹோரை:
சூரியன் அரசாங்கம் மற்றும் தலைமைப் பதவி சம்பந்தப்பட கிரகம் என்பதால் ஒரு அமைச்சர், அரசு
அதிகாரி அல்லது உயர்பதவியில் இருப்பவரை சந்தித்து சாதகங்களை பெறுவதற்கு சூரியஹோரை
மிகவும் ஏற்றது. தகப்பனார், பூர்வீகம் போன்ற விஷயங்களை செய்தல், பதவி ஏற்பு. தொழில்
ஆரம்பித்தல். அரசாங்க ஏலங்களில் பங்கு பெறுதல் போன்றவைகளுக்கு சூரிய ஹோரை ஏற்றது.
சந்திர ஹோரை:
செவ்வாய் ஹோரை:
வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்கு செவ்வாய் ஹோரை மிகவும் ஏற்றது. அதே நேரத்தில் கடன்
வாங்குவதற்கு இந்த ஹோரை நல்லதல்ல. செவ்வாய் ஹோரையில் ஒருவரிடம் கடன் பெற்றால்
அதனை திருப்பி கொடுக்க இயலாமல் போகலாம். முக்கியமாக பயணத்தின் ஆரம்பத்தை செவ்வாய்
ஹோரையில் செய்யக் கூடாது. கொடிய விபத்திற்கு செவ்வாய் காரணம் என்பதால் செவ்வாய்
மருத்துவமனை சூழல்களை உருவாக்குவார். ரியல் எஸ்டேட், சிகப்பு நிறம், சகோதர
சம்பந்தப்பட்டவைகளை இதில் செய்யலாம். ஜாதகத்தில் செவ்வாய் சுபர் எனில் ஆபரேஷன்களை
இதில் வைத்துக் கொள்ளலாம்.
புதன் ஹோரை:
புதன் வித்யாக் காரகன் என்பதால் கல்வி சம்பந்தப்பட்ட எதையும் புதன் ஹோரையில் செய்யலாம்.
தூது அனுப்புவது, தபால் அனுப்புவதை இந்த ஹோரையில் செய்தால் வெற்றி நிச்சயம். எழுத்துக்கும்
புதனே காரணம் என்பதால் புத்தகம், எழுத்து, கவிதை, போன்றவைகளை புதன் ஹோரையில்
செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்க, தொழிலை விரிவாக்கம் செய்ய, தொழில் ஆரம்பிக்க, கடை
திறக்க, எந்த வியாபாரமும் செய்ய புதன்ஹோரை ஏற்றது.
குரு ஹோரை:
ஜோதிட சாஸ்திரத்தில் ஹோரைகளின் உச்ச நிலையாக குரு ஹோரை சொல்லப் படுகிறது. எனவே
எதையும் செய்ய இந்த ஹோரை மிகவும் ஏற்றது. வாழ்க்கையின் ஆரம்ப விஷயங்களான கல்வி,
வேலை, திருமணம் மற்றும் மனிதருக்கு தேவையான அனைத்தையும் குரு ஹோரையில் செய்யலாம்.
ஒரு விஷயத்தை குரு ஹோரையில் துவங்கினாலே அது பாதி முடிந்தாற் போல என்பது அனுபவ
உண்மை.
சுக்கிர ஹோரை:
சனி ஹோரை:
செவ்வாயைப் போன்றே இதுவும் ஒரு பாப ஹோரைதான். ஜாதகத்தில் சனி கெடுதல்களைச் செய்யும்
நிலையில் இருப்பின் அவரது அனைத்து அம்சங்களும் இந்த ஹோரையில் நடக்கும். ஆயினும்
கடனைத் திருப்பித் தர இந்த ஹோரை ஏற்றது. ஆனால் கடன் வாங்கக் கூடாது. உங்களுக்கு எது
தேவையில்லை என்றும், எது உங்களுக்கு வரக் கூடாது என்றும் நினைக்கிறீர்களோ அதனை இந்த
ஹோரையில் செய்யலாம்.
ஹோரா வரிசை ஒரு சக்கரம் போல ஒன்றன் பின் ஒன்றாக சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி,
குரு, செவ்வாய் மீண்டும் சூரியன் என்று முடிவில்லாத வட்டம் போல அமையும். இது வளையம்
போன்றது என்பதால் முதலில் சனி ஹோரையை ஆரம்பமாக கொண்டு, ஒருநாள் விட்டு ஒருநாள்
பின்புறமாக கிழமைகளை நினைவில் வைத்துக் கொண்டால் ஹோரையை சுலபமாக மனதில் நிலை
நிறுத்தலாம்.