Professional Documents
Culture Documents
(A)
Part-1
இந்த நேரத்தில் மாற்று மத சகோதரர்கள் குர் ஆனை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் அறிவியல்
தவறான விளக்கத்தை கொடுத்தால் நாம் கண்மூடித்தனமாக அதில் விழுந்துவிட கூடாது ,அது
அவர்களுடைய விளக்கம் என்று எடுத்து கொண்டால் பிரச்சனையில்லை ..மாறாக அதை
கண்மூடித்தனமாக நம்பி கொண்டு ,மாஷாஅல்லாஹ் என்றும் ஷேர் பட்டனை தட்டி ஷேர் செய்து
பறக்க விடும் முன் சற்று யோசிப்பது நல்லது..உதாரணமாக
இந்த (2020) வருடத்தின் துவக்கத்தில் வாசுகி மோகன் எனும் பெயரில் பேஸ்புக்கில் ஒரு புது கணக்கு
துவங்கப்படுகிறது. வாசுகிமோகன் எனும் அந்த நபர் பிராமணப் பெண் என்றும், இலங்கை அகதியாக
நார்வேயில் குடியேறியவர் என்றும் அறிமுகம் செய்யப்படுகிறது.
நார்வேயில் குடியேறிய பிறகு குர்ஆனில் ஆய்வு செய்து phd பட்டம் பெற்றவர் என்று கூடுதல்
அறிமுகம் செய்யப்படுகிறது.
வாசுகி மோகன் என்பவர் குர்ஆனில் அறிவியல் எனும் தலைப்பில் 167 குர்ஆண் வசனங்களை
அறிவியலுடன் உரசி அவற்றில் அறிவியல் இருப்பதாக நிரூபித்து நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்
(இன்றைய மதிப்பில் முப்பது லட்சம் இந்திய ரூபாய்) பரிசு பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த
167 கட்டுரைகளை ஒவ்வொன்றாக தினமும் தமிழில் எழுதப்போவதாகும் சொல்லிவிட்டு தினமும்
“அறிவியலை அதிரவிடும் திருக்குரான்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிடப்படுகிறது...இதன்
பின்னணி என்ன காண்போம்
Part-2
வாசுகி மோகன் எனும் பேஸ்புக் அக்கவுண்டில் வாசுகி மோகன் எனும் நபர் பல விஞ்ஞான
ஆய்வுக்கூடங்களுக்கு கடிதம் எழுதி அவர்களிடமிருந்து அறிவியல் தகவல்களை வாங்கி அவற்றை
குர்ஆனுடன் அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதியதாக சொல்லப்படுகிறது
பேஸ்புக்கில் இருக்கும் முஸ்லிம்கள் சமீபத்தில் பரபப்பாக பகிரும் (ஷேர் செய்யும்) ஒரு முகநூல்
பதிவுதான் "அறிவியலை அதிரவிடும் திருக்குரான்" என்ற தொடர் பதிவு.
வாசுகி மோகன் என்ற பிராமண குலத்தைச் சார்ந்த ஒரு இந்து பெண்மனி திருக்குர்ஆனை ஆராய்ந்து
ஒரு கட்டுரை எழுதி அதில் வெற்றி பெற்றதாக சொல்லப்படுவதுதான் முஸ்லிம்களின் பரவசத்திற்கு
காரணம்.
முஸ்லிம்கள் ஹலால் முறையில் அறுத்து சாப்பிடுவதைப் பற்றி நல்லவிதமாக பேசும் ஒரு பிறமத
மருத்துவரின் வீடியோவை பகிர்ந்து அவருக்கு நன்றிக்கடன் செலுத்தியதை உதாரணமாகக் கூறலாம்.
அதுபோல, மதுரை ஆதீனம் அவர்கள் அல்ஹம்து சூராவை ஓதியதை பகிர்ந்து அவருக்கு நன்றிக்கடன்
செலுத்தியதையும் நினைவுகூறலாம்.
இதுபோன்று, வாசுகி மோகனின் பதிவுகள் வெறும் நன்றிக்கடனாக பகிரப்பட்டால் அது நல்ல விஷயமே.
குறைகான ஒன்றுமில்லை. ஆனால், இந்த பதிவுகள் அப்படி பரப்பப்படவில்லை.
ஆனால், வாசுகி மோகன் என்பவரின் அறிவியல் புரிதல் மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில் அந்த
பலவீனமான புரிதல்கள் குர்ஆனுடன் பொருந்திப்போவதாக அவர் கூறுவது குர்ஆனின்
நம்பகத்தன்மைக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமையும்.
குர்ஆன் கூறும் அறிவியல் என்ற பெயரில் முஸ்லிம் அறிஞர்கள் பலரும் ஏற்கனவே பல தவறான
புரிதல்களை வெளிப்படுத்தி அவை மோசமான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் அதுபோன்ற
நிலைமையை வாசுகி மோகன் என்பவரின் பதிவுகள் ஏற்படுத்திவிடும் என்ற எச்சரிக்கையை விடுவது
மட்டுமே நமது பதிவின் நோக்கம்.
வாசுகி மோகன் என்பவரின் அறிவியல் புரிதலில் இருக்கும் குறையை அவருடைய ஒரு பதிவில்
இருந்தே பார்ப்போம்.
//நபியே
வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டு உள்ளது என்று சிந்திக்க வேண்டாமா?
என்று தொடங்குகிறார்.
//வானம் பல கோடி உயரத்தில் இருப்பதால் தான் சூரியனின் வெட்பம் பூமியை நேரடியாக தாக்காமல்
பாதுகாக்க படுகிறது.//
இறைவா............
இந்த வியப்பு
அறிவியல் உலகத்தை வியப்பில் ஆழ்த்துகிறது. //
ஒரு நட்சத்திரம் சூரியனைவிட்டு விலகிவிடும் நிலை வந்தால் அப்போது அந்த நட்சத்திரத்தை சூரியனில்
உள்ள கருங்குழி உள்ளிளுத்து விடுகிறது என்கிறார். சமீபத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்
கருந்துளையில் புகைப்படம் வெளிவந்த பிறகு கருந்துளை பற்றி தெரியாத ஆளே இல்லை என்று
சொல்லும் அளவுக்கு கருந்துளை என்றால் என்னவென்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் சூரியனில் கருந்துளை இருப்பதாக இவர் கூடுவது கருந்துளை என்றால் என்னவென்றே
இவருக்கு தெரியவில்லை என்பதை காட்டுகிறது.
இந்த தகவலை நான் நாசா ஆய்வுக்கூடத்தில் இருந்து பெற்றேன் என்பது உலகத்தில் இன்றுவரை
சொல்லப்படாத பொய்யாகும்.
இப்படி ஒரு நிகழ்வு வானில் நிகழ்வதாக இவர் கூறுவது இவருடைய அறியாமையே தவிர இது
உண்மையல்ல.
வாசுகி மோகன் என்று சொல்லப்படும் முகநூல் பக்கத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிட்ட நிலையில் அந்த
சந்தேகத்தில் தெளிவுபெறும் நோக்கில் அந்த முகநூல் பக்கத்தை விரிவாக பார்ப்போம்.
https://web.archive.org/web/20200806094413/https://m.facebook.com/story.php?
story_fbid=173802767483348&id=100045608762643
Part-3
நார்வே நாட்டில் ஆறுவருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்று
முதல்பரிசை வாங்கியதாக வாசுகி மோகன் என்பவரின் அறிமுகம் தொடங்குகிறது.
இந்து மதத்தின் பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண் என்று சொல்லப்படுகிறது. இந்து பெண்ணான இவர்
குர்ஆனை ஆய்வு செய்து அதில் Phd பட்டம் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது.
Phd பட்டம் பெற்றது எகிப்தா? அல்லது நார்வேவா? என்ற சந்தேகத்தை வாசுகி மோகன் என்பவரே
கிளப்பிவிடுகிறார்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அதுபோல இவர் முதுகலை பட்டம் (M.Com)
வாங்கியதாக சொல்லப்படும் ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்பதுதான் அடுத்த கோணல்.
//டெல்லி டவ் லால் ராம் பல்கலை கழகத்தில் (Dau lal ram university of delhi) Mcom படிப்பை படித்து
முடித்தேன்//
இப்படி ஒரு பல்கலைகழகம் டெல்லியில் இல்லை. இல்லாத கல்லூரியில் பட்டம் பெறும் வித்தையை
தெரிந்தவர் வாசுகி மோகன் என்று கூறினால் அது மிகையில்லை.
¶¶ "பைபிள்/குரான்" என்ற தலைப்பில் போட்டி நடந்ததாக சொல்கிறார். (இது என்ன தலைப்பு என்றே
தெரியவில்லை)
ஆனால், மேற்கண்ட எந்த நிகழ்வுகளுக்கும் சாட்சியம் இல்லை என்பதுதான் வாசுகி மோகன் என்பவரின்
மீது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
அதாவது, கட்டுரைப் போட்டி நடந்ததற்கும், அவர் முதல் பரிசு பெற்றதற்கும் வாசுகி மோகன் என்பவர்
மட்டுமே சாட்சியாக இருக்கிறார். வேறு எவருக்கும் அது தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்கவில்லை
என்பதுதான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.
குர்ஆனில் இருந்து 167 வசனங்களுக்கு தேவையான அறிவியல் விளக்கங்களை உலகில் உள்ள ஆய்வு
கழகங்களிடம் இருந்து பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
//உலகில் பல ஆய்வு கூடங்களுக்கு மெயில் அனுப்பி (எனது ஐ டி, நான் வாங்கிய பட்டங்கள் காப்பி)
எதற்காக இந்த விபரங்கள் தேவை என்பதை ஆதாரத்துடன் மெயில் அனுப்பும்போது அவர்கள் லிங்க்
கொடுப்பார்கள்.
நடக்காத போட்டியில் எழுதாக கட்டுரையை வைத்து இல்லாத முதல் பரிசை வென்ற வாசுகி மோகன்
என்பவர் உலகத்தையே அதிர விடுகிறார்.
---+ +++++-----+-
நார்வேயில் Phd
https://web.archive.org/web/20200806094900/https://www.facebook.com/permalink.php?
story_fbid=149705069893118&id=100045608762643
கைரோ (எகிப்து)
https://web.archive.org/web/20200806095120/https://www.facebook.com/permalink.php?
story_fbid=166683981528560&id=100045608762643
டெல்லி யூனிவர்சிட்டி
https://web.archive.org/web/20200806095207/https://www.facebook.com/permalink.php?
story_fbid=123596299170662&id=100045608762643
ஆய்வக லிங்க்
https://web.archive.org/web/20200806095258/https://www.facebook.com/permalink.php?
story_fbid=151992972997661&id=100045608762643