You are on page 1of 405

http://www.tamilsurangam.

in/astrology/general_a
strology/5_basic_sign/index.html

http://www.tamilsurangam.in/astrology/horoscop
e/index.html

ஒருவரின் தொழிலை தீர்மானிக்கும்


10-ம் இடம்
பதிவு: செப்டம்பர் 20, 2019 11:48 IST

 Share  Tweet  அ-அ+

ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தில் 10-ம் இடம், 10-ம்


அதிபதி, 10-ம் அதிபதி நின்ற சாரநாதன் ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை
தீர்மானிக்கிறது.
ஜோதிடம்

‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.. கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற பாடல்


வரிகளில் இருந்து தொழிலின் வலிமையை உணர முடியும். நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி
வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அரசு மற்றும்
தனியார் வங்கிகள் தொழில் கடன் கொடுப்பதால் பலர் சொந்த தொழில் செய்ய முன் வருகின்றனர்.
சிறிய பெட்டி கடை முதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள் வரை, அனைவரும் தொழிலில்
சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் தொழில் தொடங்குகிறார்கள்.

ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தின் மூலம் எளிதில் கண்டறிய


முடியும். அதன்படி 10-ம் இடம், 10-ம் அதிபதி, 10-ம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள்,
நவாம்சத்தில் 10-க்குரியவன் நின்ற ராசி, சனிக்கு 10-ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற
கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே
ஒருவரின் தொழிலை தீர்மானிக்கிறது.

ஒருவர் சொந்தமாக தொழில் செய்ய, லக்னம், லக்னாதிபதி வலிமை பெற வேண்டும். லக்னம்
வலிமை பெற்றவர்களின் செயல்பாடே சிறப்பாக இருக்கும். பத்தாம் அதிபதியும், பத்தாம் இடமும்
பலம் பெற்று, கேந்திர திரிகோண சம்பந்தம் இருந்தாலும் சொந்த தொழில் செய்யலாம்.

பத்தாம் அதிபதி இயற்கை சுபர் (குரு, சுக்ரன், புதன், வளர்பிறை சந்திரன்) ஆக இருந்து, கேந்திர
திரிகோணம் பெற்றால், நல்ல தொழில் அமைந்து வாழ்வு சிறக்கும். பத்தாம் இடத்தை குரு போன்ற
சுப கிரகம் பார்க்க வேண்டும் அல்லது பத்தாம் அதிபதியை குரு பார்க்க வேண்டும்.

பத்தாம் அதிபதி உச்சம் பெற்று சுப கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், பத்தாம் இடத்தில் உச்சம் பெற்ற
சுப கிரகங்கள் இருந்தாலும் அந்த நபர் தொழிலால் செல்வாக்கு, புகழ் பெறுவார். தொழில்
முன்னேற்றம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 2, 11-க்கான அதிபதிகள் பலம் பெற்றால் கூட சொந்தத்
தொழில் செய்யலாம். பெரும் லாபம் கிடைக்கும். தொழிலில் வெற்றியை எட்டியவர்களின்
ஜாதகத்தில் இந்த கிரக அமைப்புகள் இருக்கும்.

அதே நேரத்தில் பத்தாம் அதிபதி பகை, நீச்சம் பெற்று பாவிகள் சேர்க்கை பெற்று பலம் குன்றி
இருந்தால், தொழில் நல்லவிதமாக அமையாது. பத்தாம் வட்டில்
ீ 6, 8, 12-ம் வட்டின்
ீ அதிபதிகள்
இருந்தாலோ, பத்தாம் அதிபதி 6, 8, 12-ல் இருந்தாலோ சொந்தத் தொழில் செய்யும் எண்ணத்தைக்
கைவிடுவது நல்லது. பத்தாம் இடத்திற்கு வக்ர கிரகங்கள் சம்பந்தம் இருந்தால், தொழிலில் ஏற்ற
இறக்கங்கள் மிகுதியாக இருக்கும்.

* பத்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து,
கவுரவம் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் தேடி வரும். மிகப் பெரிய தொழிலதிபராக வலம்
வருவார்.

* பத்தாம் அதிபதி 2-ல் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தொழில்


செய்வார்கள். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பேச்சுத் திறமையால்
வாடிக்கையாளர்களை கவருவார்கள்.

* பத்தாம் அதிபதி 3-ல் இருந்தால் தன் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத தொழில் அல்லது பரிட்சயம்
இல்லாத தொழில் செய்து விரயத்தையும், சிரமங்களையும் சந்திப்பார்.
* பத்தாம் அதிபதி 4-ல் இருந்தால் நன்கு தெரிந்த பரிட்சயமான தொழில் செய்து வெற்றி வாகை
சூடுவர். அரசின் உதவித் தொகை, வங்கிக் கடன் பெற்று தொழில் செய்வார்கள். தொழிலின் நெளிவு
சுழிவுகளை அறிந்திருப்பர்.

* பத்தாம் அதிபதி 5-ல் இருந்தால் குலத்தொழில் அல்லது பூர்வகம்


ீ தொடர்பான தொழில் புரிவார்.
கடன் பெறாமல் சுய முதலீட்டில் தொழில் நடத்துவார்கள். குறைந்த உடல் உழைப்பு, மூளையை
அதிகம் பயன்படுத்தும் தொழிலை செய்வார்கள். உழைப்பை விட வருமானம் மிகுதியாக இருக்கும்.
பல சமயங்களில் இவர்கள் ஈடுபடும் தொழிலுக்கு முதலீடே தேவையற்றதாக இருக்கும்.

* பத்தாம் அதிபதி 6-ல் இருந்தால் தொழிலால் கடன்சுமை கூடிக் கொண்டே இருக்கும். அதனால் மன
உளைச்சல் அதிகரிக்கும். இவர்கள் தொழிலாளியாக பணியாற்றுவதே நல்லது.

* பத்தாம் அதிபதி 7-ல் இருந்தால் கூட்டுத் தொழில் சிறப்பான பலன் தரும்.

* பத்தாம் அதிபதி 8-ல் நின்றால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்காது. தொழில் மூலம் வம்பு,
வழக்கு, கட்டப் பஞ்சாயத்து இருக்கும். இந்த அமைப்பு உடையவர்கள் உழைப்பை விட
அதிர்ஷ்டத்தை மிகவும் நம்பி வாழ்வார்கள். ஆனால் அதிர்ஷ்டம் அவமானத்தையும், மன
வேதனையும் தரும்.

* பத்தாம் அதிபதி 9-ல் இருந்தாலும், 9-ம் அதிபதி 10-ல் இருந்தாலும் தர்ம, கர்மாதிபதி யோகம்
வாய்க்கும். இவர்கள் பரம்பரை பரம்பரையாக குலத்தொழில் செய்வார்கள். பத்தாம் அதிபதி 9-ல்
இருப்பதை விட, 9-ம் அதிபதி 10-ல் இருப்பது சிறப்பு.

* பத்தாம் அதிபதி 10-ல் இருந்தால் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் நுட்பம்
அறிந்தவர்களாக இருப்பர்.

* பத்தாம் அதிபதி 11-ல் இருந்தால் லாபம் இல்லாத தொழிலை செய்ய மாட்டார்கள்.


கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலை மட்டுமே செய்வார்கள்.

* பத்தாம் அதிபதி 12-ல் இருந்தால் தொழிலில் நிறைய நஷ்டம் ஏற்படும். பெரிய அளவில் தொழில்
செய்து பெரிய அளவில் இழப்பை சம்பாதிப்பார்கள்.

பரிகாரம்

தொழில் தொடர்பான பிரச்சினையை சந்திப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன்,


ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

“ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி:

தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்”

என்ற சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம்
செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

சுய ஜாதகம்

பத்தாம் அதிபதியை மட்டும் வைத்து ஒருவருடைய தொழிலை நிர்ணயிக்க முடியாது. அதற்கு வலு
சேர்ப்பது தொழில் காரக கிரகமான சனிதான். ஒருவருடைய ஜாதகத்தில் சனி பலம் பெற்றால்
தொழில் நன்றாக இருக்கும். பலர் தங்களின் ஜாதகத்தில் சுய தொழில் அமைப்பு இருக்கிறதா?
என்பதை சரியாக பார்ப்பது இல்லை. சுய ஜாதகத்தை சரி பார்த்து அமைப்பு சரியில்லை என்றாலும்,
என் மனைவி பெயரில் தொழில் செய்கிறேன்.

அம்மா, அப்பா, குலதெய்வம் பெயரில் தொழில் செய்கிறேன். என் அமைப்பிற்கு என்ன தொழில்
செய்யலாம் என சொந்த தொழில்தான் செய்வேன் என்பதில் விடாப்பிடியாக இருப்பார்கள்.
யாருடைய பெயரில் தொழில் செய்தாலும் தொழிலை இயக்குபவரின் சுய ஜாதகம், தசா - புத்திக்கு
ஏற்பவே ஜாதகரின் செயல்பாடுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

புதன் கிரகம் தரும் நன்மை-தீமைகள்

 Facebook   Twitter   Mail    Text Size   Print


அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம்.
பதிவு: ஜூன் 01,  2018 04:00 AM
நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது
ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து
விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும்,
நகைச்சுவையாகவும் பேசும் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம். ஒருவர்
ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த நபரிடம் ஆலோசனைக் கேட்க பலரும்
காத்திருப்பார்கள். அந்த நபர் மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயக்கலைகள், கைகடிகாரம்,
மோட்டார் தொழில் நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். புதன் கிரகம்
ஒருவருக்கு கவர்ச்சி நிறைந்த கம்பீர தோற்றம் தந்து அவரை வசீகரிக்க வைக்கும். பிறரால்
முடியாத வேலைகளைக் கூட புதன் யோகம் பெற்றவர்கள் எளிதாக செய்து விடுவார்கள். கணித
சாஸ்திரம், வான சாஸ்திரம், கணினி துறையில் சிறப்புற்று விளங்குவர். நாட்டு வைத்தியம்
செய்பவராக இருந்தால், கைராசியானவர் என்று பெயர் எடுப்பார்கள்.

புதன் யோகம் அல்லது உச்சம் பெற்றவர்கள், நவபாஷாணம் மற்றும் ரசவாத கலைகளிலும், யோகா
மற்றும் தியான கலைகளிலும் வல்லுனராக இருப்பார்கள். மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு
அதிபதியாகும் வாய்ப்பு புதனால் வரக்கூடியதுதான். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண
இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. கோவில்களில் இருக்கும் சிற்ப
வேலைபாடுகளுக்குரிய அறிவைத் தருபவரும் புதன் தான். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள், மேஜிக்
மற்றும் வேடிக்கை நிகழ்வு களை நடத்துபவராக இருப்பார்கள். ஒருவர் பல ஆண்டுகளாக பத்திரிகை
தொழிலில் முதன்மை பெற்றவராக திகழவும் புதனே காரணமாக உள்ளார்.

இனி புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்பு களுக்கு எல்லாம் ஒட்டு மொத்த
அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக
உள்ளார். தலைக்கு செல்லும் ரத்தம் குறைந்தாலும், அதிக ரத்தம் சென்றாலும் அதற்கும் புதன் தான்
காரணம். வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிப்பு, திருநங்கையாக மாறுதல் ஏற்பட,
தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கு புதனே காரணம் ஆவார்.
தூசி, மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு
தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்து பிடிப்பது போன்றவற்றிற்கு புதனே பொறுப்பு.

தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள்
மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும்
நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை சாவு, அறிவுக்கும்
புத்திக்கும் தெரிந்தே செய்யும் செயல்களால் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் புதனே
காரணமாக திகழ்கிறார்.

ஜாதகத்தில் புதன் தரும் பலன்

 புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம்,
முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.

 புதன் நீச்ச ராசியான மீ னத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும்.
ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.

 புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு
வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை
வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.

 புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில்
கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம்
இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.

 புதன், லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், புதன் மறைவைக் குறிப்பதாகும்.


இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குழாயில் கெட்ட கொழுப்பு அடைப்பு, உடல்
சோர்வுகள், மயக்க நிலை, புது வகையான நோய்கள் தென்படும்.
 புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியுடன் இணைந்து, அதன் நட்சத்திர
பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபரின் புத்தியும் செயலும் கெட்ட வழியில் சென்று நோய்களை
தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

 புதன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில்


நின்று இருந்தாலோ ஜாதகருக்கு நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. வாத நோய் உண்டாகும்.
பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். தலை உச்சியில் நரம்பு முடிச்சில் பாதிப்பு வரக்கூடும்.

 புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி


புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் உண்டாக்குவார். சோம்பேறியாக இருப்பதுடன் நோய்
நீங்குவதற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.

 புதன் பகை கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது பாதாதி பதியுடன் பார்வை இருந்தால்
புதிய தொற்று நோய்கள் தாக்கக்கூடும். நோய் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்.

புதன் கிரகத்தால் ஏற்படும் உலக பாதிப்பு

புதன் கிரகமானது பகை மற்றும் நீச்ச ராசிகளில் நின்றாலோ அல்லது பகை கிரகங்களுடன்
இணைந்தாலோ உலகில் காற்று புயல் பெருகும். காற்றில் தூசி கலந்து மூச்சு கூட விட முடியாமல்
பொது ஜனங்கள் இறப்பார்கள். காற்றில் விஷம் கலந்து மனிதர்கள் இறக்க நேரிடும். பத்திரிகை
சுதந்திரம் பறிக்கப்படுவதும், பத்திரிகைகள் முடக்கம் செய்வதும் நடைபெறலாம். எழுத்தாளர்கள்,
கவிஞர்கள், அறிஞர்கள், மருத்துவ கலைஞர்கள், விஞ்ஞானிகள் கொலை செய்வது நாடு கடத்துவது
போன்ற துஷ்டசம்பவங்கள் நடைபெறும். நாட்டை வழி நடத்த போதிய அறிவு திறன் படைத்த
மன்னர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்க மாட்டார்கள். பொதுமக்கள் நிம்மதியற்ற
நிலையில் வாழ்வார்கள். பயிர் விளைச்சல் குறையும். சூறாவளி காற்று வந்து விவசாயத்தை
அழிக்கும். ஆட்சியாளர்களுக்கு குறுக்கு வழி, குறுக்கு புத்தியை கொடுத்து நாட்டை நாசம்
செய்யக்கூடும்.

-ஆர்.சூரியநாராயணமூர்த்தி 

புதனுக்குரியவை

காரகன் - மாமன்

தேவதை - விஷ்ணு (பெருமாள்)

தானியம் - பச்சைப் பயறு

உலோகம் - பித்தளை

நிறம் - பச்சை

குணம் - தாமஸம்
சுபாவம் - சவுமியர்

சுவை - உவர்ப்பு

திக்கு - வடகிழக்கு

உடல் அங்கம் - கழுத்து

தாது - தோல்

நோய் - வாதம்

பஞ்சபூதம் - நிலம்

பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழு பார்வை. 3, 10-ம் இடம் கால்
பங்கும், 5,9-ம் இடம் அரை பங்கும், 4,8-ம் இடத்தை முக்கால் பங்கும் பார்ப்பார்கள்

பாலினம் - ஆணும், பெண்ணும் இல்லாத நிலை

உபகிரகம் - அர்த்தபிரகரணன்

ஆட்சி ராசி - மிதுனம், கன்னி

உச்சராசி - கன்னி

மூலத்திரிகோண ராசி - கன்னி

நட்பு ராசி - ரிஷபம், சிம்மம், துலாம்

சமமான ராசி - மேஷம், விருச்சிகம், தனுசு,

மகரம், கும்பம்

பகைராசி - கடகம்

நீச்ச ராசி - மீ னம்

திசை ஆண்டுகள் - பதினேழு ஆண்டுகள் 

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம்

நட்பு கிரகங்கள் - சூரியன், சுக்ரன்

சமமான கிரகங்கள் - செவ்வாய், குரு, சனி, ராகு-கேது


பகையான கிரகம் - சந்திரன்

அதிக பகையான கிரகம்- சந்திரன்

இதர பெயர்கள் - பாகன், கொம்பன், மால், மாலவன், கணக்கன், பண்டிதன், அருணன், சவுமியன்

நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி 

ராஜமரியாதை கிடைக்கும் ராஜயோக அமைப்பு எந்த


ஜாதகருக்கு இருக்கும் தெரியுமா? By C Jeyalakshmi| Published:
Monday, September 9, 2019, 14:00 [IST] நமக்கு செல்வம்,
செல்வாக்கு, பதவி, புகழ் கிடைக்க எப்படிப்பட்ட கிரக
அமைப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை பல ஜோதிடச்
சுவடிகள் நுட்பமாக சொல்லி இருக்கின்றன. ஜாதக அலங்காரம்,
பல தீபிகை, சந்திர காவியம், பிருகத் ஜாதகம் போன்ற பல
வகையான நூல்களில் இதற்கான மகாராஜா யோகம்,
சக்கரவர்த்தி யோகம், சிங்காதன யோகம் என பல
நூற்றுக்கணக்கான யோக அமைப்புகள் காணப்படுகின்றன.
அதன் அடிப்படையில் நம் ஜாதகத்தில் என்ன யோகம்
இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஒன்றுக்கும்
மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையாலும், ஒரு கிரகம்
மற்றொரு கிரகத்தின் சம்மந்தம் பெறுவதாலும், ஒரு கிரகம்
குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில்
இருந்தாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் யோகம் எனப்படும்.
இந்த யோகம், சுபயோகம், அவயோகம் என்று இரண்டு
வகைப்படும். பெரும்பாலான ஜாதகங்களில் சுபயோகங்கள் ராஜ
யோகங்கள் இருந்தும் அந்த ஜாதகர் வாழ்க்கையில் அடி மட்ட
நிலையில் இருப்பார். இதற்குக் காரணம் அந்த யோகங்கள்
பங்கமாகியிருக்கும். யோகம் தரும் கிரகங்களுக்கு, பகை
கிரகங்களின் சேர்க்கை யோகத்தை பங்கப்படுத்தும். யோகம்
தரும் கிரகங்கள் 6, 8, 12 ம் அதிபதிகளின் சேர்க்கை
பெற்றிருந்தால் யோக பங்கம். முக்கியமான வித) யோகம்
தரும் கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி பாவகப்படி 6, 8, 12
மறையக்கூடாது. யோகம் தரும் கிரகங்கள் பகை, நீச்சம்
பெற்றால் யோக பங்கம். ராசிக்கட்டத்தின்படி யோகம் தரும்
கிரகங்கள் பாவகச் சக்கரத்தின்படி பாவக மாற்றம்
அடைந்திருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகம் ராசிக்
கட்டத்தில் நிஷ்பலம் பெற்றிருந்தால் யோக பங்கம். யோகம்
தரும் கிரகங்கள் கிரகண தோஷம் அடைந்தோ, அஸ்தமனம்
அடைந்தோ இருந்தால் யோக பங்கம். யோகம் தரும்
கிரகங்கள் கிரக யுத்தத்தில் இருந்தால் யோக பங்கம்.
லக்கினம், லக்கினாதிபதி, ஐந்தாமிடம் ஒன்பதாம் இடம்
பழுதடைந்து பலவனமாக
ீ இருந்தால் யோக பங்கம். யோகம்
தரும் கிரகங்கள் பாப கர்தாரி யோகத்தில் இருந்தாலும் யோக
பங்கமே. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன்
படிக்க க்ளிக் செய்யவும் ராஜயோகம் தரும் கிரகங்கள் 3600
யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள்
காணப்படுகின்றன. இதில் முதலாவதாக வருவது பஞ்ச மஹா
புருஷ யோகம். இந்த யோகம் பஞ்ச மஹாபுருஷர்களால்
ஏற்படக்கூடியது. நவகிரகங்களில் செவ்வாய், புதன், குரு,
சுக்கிரன், சனி, இவ்வைந்து கிரகங்களுக்கும் பஞ்ச
மஹாபுருஷர்கள் என்று பொதுவாக ஒரு பெயர் உண்டு. இந்த
யோகத்தை, செவ்வாயால் ஏற்படக்கூடிய ருச்சக யோகம்.
புதனால் ஏற்படக்கூடிய பத்திரை யோகம். குருவால்
ஏற்படக்கூடிய ஹம்ச யோகம், சுக்கிரனால் ஏற்படக்கூடிய
மாளவியா யோகம் சனியால் ஏற்படக்கூடிய சச யோகம்,
என்று 5 வகையாக பிரிக்கலாம். இது தவிர ஜாதகத்தில்
இருக்கும் கிரகங்கனின் நிலையை பொருத்து சில முக்கிய
யோகங்களை பட்டியலிடுகிறோம் உங்க ஜாதகத்தில் இந்த
யோகங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். சுப மங்கள யோகம்
ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி உச்சம், ஆட்சி, கேந்திரம்,
திரிகோணம் போன்ற அமைப்பில் இருப்பது ஐஸ்வர்யமாகும்.
லக்னத்தில் 4, 5, 9 க்கு உடைய கிரகங்கள் இருந்தாலும்,
பார்த்தாலும் ராஜமரியாதை சுப கீ ர்த்தி யோகம் உண்டு. தனம்,
வாக்கு, குடும்ப ஸ்தானத்தை லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி,
ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி இதில் யாராவது ஒருவர்
பார்ப்பது சுபமங்கள யோகமாகும். குரு சுக்கிரன் சேர்க்கை
பிரகஸ்பதி எனப்படும் தேவகுரு வியாழனும், அசுர குரு
எனப்படும் சுக்கிரனும் சேர்ந்து இருப்பது திடீர் தன
பிராப்தத்தைத் தரும். ஆதாயம் லாபம் எனப்படும் 11 ம்
இடமும், 2 ஆம் இடமும் சம்பந்தப்பட்டால் பொன், பொருள்,
சேர்க்கை அதிகம் ஏற்படும். நாடாளும் யோகம் குரு, சந்திரன்
கடக ராசியில் இருந்தால் மந்திரி நாடாளும் யோகம் வரும்.
சந்திரன், புதன் கன்னி ராசியில் இருந்தால் தனதான்ய சம்பத்து
உடையவர். லக்னத்தில் சூரியன் அல்லது செவ்வாய் உச்சம்
பெற்று கடகத்தில் சந்திரன் இருந்தால் பூமி யோகம், அரச
யோகம். லட்சுமி யோகம் ராசியில் நீச்சம் பெற்ற கிரகம்
நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்து தசா வந்தால் நீச பங்க
யோக அம்சமாகும். ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னம்,
நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது ஐந்து, ஒன்பது. சில
நூல்களில் லக்னம் கேந்திரத்தில் இருக்கும், த்ரிகோணத்திலும்
இருக்கும். கேந்திரங்களுக்குரிய கிரகங்களும்,
த்ரிகோணத்திற்குரிய கிரகங்களும் பார்வை, சேர்க்கை,
பரிவர்த்தனை பெற்றால் லட்சுமி யோகம். விமல யோகம்
வளர்பிறை சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து பூமி பாக்ய
ஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்தால்: ரியல் எஸ்டேட்,
செங்கல், மணல், கட்டிட கட்டுமான பணிகள், விவசாய
வருமானம் என பூமி மூலம் லாபம் அடைவார்கள். 14. 3, 6, 8,
12 க்குரியவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும்,
6 க்குடையவன் 12 ல், 12 க்குடையவன் 6 ல் இருந்தாலும், 12 ஆம்
அதிபதி. 12 ல் இருந்தாலும் விமல யோகம். கணக்கிட முடியாத
செல்வ வளங்கள் வந்து சேரும். MOST READ: மகளின்
சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்... அறிவு
ஆற்றல் புகழ் ஜென்ம லக்னத்தில் உச்சம், ஆட்சி பெற்ற
கிரகங்கள் இருந்தாலும், லக்னத்தைப் பார்த்தாலும் புகழ், கீ ர்த்தி,
அதிகார பதவி கிட்டும். குரு, செவ்வாய், சூரியன் மூவரும்
ஜாதகத்தில் மிக பலமாக இருந்தால் அதிகார பதவிகள்
கிடைக்கும், அறிவு, ஆற்றலால் புகழ் உண்டாகும். வசிய
யோகம் புதன், சுக்கிரன் பலமாக அமைந்து, இரண்டாம் இடம்,
மூன்றாம் இடம் பலமாக இருந்தால் வித்வான், கலை, இயல்,
இசை, நாடகம், நாட்டியம், நடனத்தில் பாண்டித்யம்
உண்டாகும். சந்திரனுக்கு கேந்திரமான 7 ஆம் இடத்தில் சம
சப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது சௌந்தர்ய யோகம்,
வசிய யோகம். பெண்கள் மூலம் தனம் சேரும். யோகமான
அமைப்பு லக்னம் முதல் தொடர்ந்து 5 அல்லது 6 வடுகளில்

கிரகங்கள் இடைவிடாமல் இருப்பது யோக அம்சமாகும்.
லக்னத்திற்கு 4, 5, 6, 7, 8 என்று இருக்கலாம். லக்னத்திற்கு
எந்த இடத்தில் இருந்து கிரகம் ஆரம்பமாகிறதோ அந்த
வட்டிலிருந்து
ீ தொடர்ச்சியாக கிரகங்கள் இருப்பது சிங்காதன
யோகமாகும். வாழ்க்கையில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும்.
சக்ரவர்த்தி யோகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகங்கள்
இருப்பது முத்ரிகா யோகம். சந்திரனுக்கு 6, 7, 8 ல் கிரகங்கள்
தொடர்ச்சியாக அமைவது சந்திராதி யோகம். இதனால்
நற்கீ ர்த்தி, சக்கரவர்த்தி யோகம். தர்ம கர்மாதிபதிகள் எனப்படும்
9, 10 க்குடையாளர்களுடன் லாபாதிபதி எனும் 11 ஆம் அதிபதி
சம்பந்தப்பட்டால் சுய சம்பாத்தியத்தின் மூலம் பெரும் தனம்
சேரும். தர்ம ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள் அமைக்கும்
பாக்கியம் உண்டு. லக்னத்திற்கு 9, 10 க்குரியவர்கள் அல்லது
சந்திரனுக்கு 9, 10 க்குரியவர்கள் எந்த வகையிலாவது சம்பந்தம்
பெற்றால் பூமி, பொன், பொருள் உண்டு. கோவில்
திருப்பணிகள், தர்மஸ்தாபனம் அமைத்தல், அரச போக
வாழ்க்கை கிடைக்கும். லக்னத்திற்கு 10 ஆம் வடான
ீ தொழில்
ஸ்தானத்தில் சந்திரன், சனி சேர்ந்து இருந்தால் ஜாதகர்
ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பார். ராஜயோக
அமைப்பு லக்னம், நான்கு, எட்டாம் வடுகளில்
ீ சூரியனும்,
புதனும் சேர்ந்து இருப்பது ராஜயோக அமைப்பாகும். கல்வியில்
புகழ் அடைவார்கள், கணக்கு துறையில் சாதனை
படைப்பார்கள். பொதுவாக 6, 8, 12 க்குடையவர்கள், நீச்ச
கிரகங்கள், சுப ஸ்தானங்களாகிய 2, 5, 7, 9, 11 போன்ற
வடுகளில்
ீ சம்பந்தம் பெறாமல் இருப்பது சிறப்பான
ராஜயோகமாகும். MOST READ: உங்க அந்தரங்க வாழ்க்கை பற்றி
கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
தெரிஞ்சிக்கோங்க... சுநபா யோகம் அநபா யோகம் சந்திரனில்
இருந்து இரண்டாவது வட்டில்
ீ சூரியன் தவிர கிரகங்கள்
இருந்தால் சுநபா யோகம். அரசன் போல வாழ்க்கை அமையும்
புத்திமான் செல்வந்தர் கீ ர்த்தி உடையவர் சொந்தமாக செல்வம்
சேர்ப்பார். சந்திரனில் இருந்து 12 வது வட்டில்
ீ கிரகங்கள்
இருந்தால் அநபா யோகம். வசுமதி யோகம் உப ஜெய
ஸ்தானங்களில் கிரகங்கள் இருந்தால்,யாரையும் நம்பி வாழ
மாட்டார். எப்போதும் செல்வந்தராக இருப்பார். லக்னம் அல்லது
சந்திர லக்னத்தில் இருந்து 10 ஸ்தானத்தில் சுபர் இருந்தால்
அழியாத புகழ் பெறுவார் அப்பழுக்கற்ற குணசாலியாக
இருப்பார் வசதியாக வாழ்வார். மாளவியா யோகம் குரு
கேந்திரத்தில் அது தனது ஆட்சி வடு
ீ அல்லது உச்ச வடாக

இருக்க வேண்டும். அவரது காலில் மச்சம், சங்கு சக்கரம்,
மச்சம் அங்குசம் சின்னங்கள் இருக்கும். அவர் மனதிலும்
செயலிலும் ஒழுக்கமானவர். சுக்கிரன் தனது ஆட்சி வடு
ீ உச்ச
வடு
ீ கேந்திரத்தில் இருந்தால் அது மாளவியா யோகம்
பெறுகிறது. நன்றாக வளர்ந்த தேகம். மன உறுதி படைத்தவர்.
செல்வந்தர். மனைவி மக்களுடன் சந்தோசமாக செல்வாக்குடன்
இருப்பார். அதிக புத்திசாலி, வடு
ீ மனை வண்டி வாகனம் என
வசதியாகவும் புகழுடனும் வாழ்வார். துருதுரா யோகம்
சந்திரனுக்கு முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன் ராகு
கேதுவைத் தவிர இதர கிரகங்கள் இருந்தால் இந்த யோகம்
ஏற்படும். வண்டி வாகனங்கள் கிடைக்கும். சுகமாகவும்
சந்தோஷமாகவும் இருப்பார்கள். MOST READ: நல்லவர்களுக்கு
நல்லவர் சனிபகவான் - கைவிடாமல் காப்பாற்றுவார் யோக
பங்கம் ஜாதகங்களில் சுபயோகங்கள் ராஜ யோகங்கள்
இருந்தும் அந்த ஜாதகர் வாழ்க்கையில் அடி மட்ட நிலையில்
இருப்பார். இதற்குக் காரணம் அந்த யோகங்கள்
பங்கமாகியிருக்கும். யோகம் தரும் கிரகங்களுக்கு, பகை
கிரகங்களின் சேர்க்கை யோகத்தை பங்கப்படுத்தும். யோகம்
தரும் கிரகங்கள் 6, 8, 12 ம் அதிபதிகளின் சேர்க்கை
பெற்றிருந்தால் யோக பங்கம். முக்கியமான வித) யோகம்
தரும் கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி பாவகப்படி 6, 8, 12
மறையக்கூடாது. யோகம் தரும் கிரகங்கள் பகை, நீச்சம்
பெற்றால் யோக பங்கம். ராசிக்கட்டத்தின்படி யோகம் தரும்
கிரகங்கள் பாவகச் சக்கரத்தின்படி பாவக மாற்றம்
அடைந்திருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள்
கிரகண தோஷம் அடைந்தோ, அஸ்தமனம் அடைந்தோ
இருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள் கிரக
யுத்தத்தில் இருந்தால் யோக பங்கம். யோகம் தரும் கிரகங்கள்
பாப கர்தாரி யோகத்தில் இருந்தாலும் யோக பங்கமே.
யோகத்தின் பெயர்

எந்த கிரஹத்தின் சேர்க்கையால் அல்லது பார்வையால் யோகம் ஏற்படுகிறது ?

யோகத்தின் பலன்கள்

தர்ம கர்மாதிபதி யோகம்

9 க்கும் 10 க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது


பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். 

நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்


2

அஷ்டலஷ்மி யோகம்

இராகு 6 ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும்

எல்லாவித சுகங்களும் சந்#3021;தோஷங்களும் உண்டு.

அகண்டசாம்ராஜ்ய யோகம்;

2,9 அல்லது 11 க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு


ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகிகேந்திரங்களில் இருந்தால் இந்த
யோகமாகும்

தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

குரு சண்டாள யோகம்

பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை

ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.

5
வசுமதி யோகம்

சுபக்கிரகங்கள் உபசய வடுகளில்


ீ (3,6,10,11) இருப்பது.

நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.

கால சர்ப்ப யோகம்

லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது.

காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து


தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

நீசபங்க ராஜயோகம்

கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற


ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ
சந்திரனுக்கோகேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்'
வருகிறது.

இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.

விபரீத ராஜயோகம்

துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது


தனித்தனியாகவோ 6,8,12 வடுகளில்
ீ இருப்பது. 
இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென
நினைக்க இயலாதராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

சுனபா யோகம்

சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள்


இருப்பது

நிறைந்த அறிவு பெற்றவர், தன் சுய முயற்சியால் முன்னுக்கு வருபவர் , நிறைந்த


புகழ் உடையவர் , பெரும் செல்வந்தராக இருப்பார்.

10

அநபா யோகம்

சந்திரனுக்கு பன்னிரண்டாம் யிடத்தில் சூரியன் ராகு கேது தவிர மற்ற


கிரஹங்கள் இருப்பது 

தர்ம சிந்தனை மிக்கவர், பெரும் புகழ் உடையவர் , கம்பீரமான தோற்றம் ,


வசீகரிக்கும் உடல் அமைப்பு உடையவர்

11

கேம துரும யோகம்

சந்திரனுக்கு முன் மற்றும் பின் வடுகளிலும்


ீ கிரஹங்கள் இல்லாமலியிருப்பது

ஜாதகர் கடுமையான துக்கங்களை அனுபவிக்க நேரும்

12

துருதரா யோகம்
சந்திரனுக்கு இரண்டு பக்கங்களிலும் சூரியன் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள்
இருப்பது

உயர்தரமான வாழ்வு , மிகுந்த செல்வ சேர்க்கை , தலைமை தாங்கும் தகுதி

13

அமல யோகம்

லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் சுப கிரஹங்களான


சுக்ரன் , குரு மற்றும் புதன் போன்ற கிரஹங்கள் அமைத்திருப்பது

பெரும் தனவந்தராகவும் , பெரும் புகழ் உடையவராகவும் , கலை துறையில்


பேரும் புகழும் அடைவர்

14

அதி யோகம் 

சந்திரனுக்கு ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம் இடத்தில் சுபர்களான சுக்ரன் , குரு


மற்றும் புதன் அமைய பெற்றுப்பது

அறிநர்களால் புகழப்படுபவர் , நேர்மை , நாணயம் யுடையவர் , பெரும் செல்வந்தர்

15

வாசி யோகம்

சூரியனுக்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகு , கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற


கிரஹங்கள் இருப்பது,

பேச்சு திறன் மிக்கவர் , செல்வாக்கு மிக்கவர் , செல்வந்தர்

16
வேசி யோகம் 

சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் ராகு , கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற


கிரஹங்கள் இருப்பது,

அதிர்ஷடக்காரர் , நினைத்ததை முடிக்கக்கூடியவர்

17

உபய சாரி யோகம்

சூரியனுக்கு முன்னும் பின்னும் ராகு கேது தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது

பெயரும் புகழும் யுடையவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்

18

கஜ கேசரி யோகம்

சந்திரன் குருவுடன் சேர்ந்து யிருந்தாலும் , அல்லது சந்திரன் குருவுக்கு 4,7,10


போன்ற கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும் அல்லது சந்திரனை குரு
பார்வையிட்டாலும்

ஜாதகருக்கு நற்பெயர் , தலைமை தாங்கும் ஆற்றல் , புகழ் , நல்குணம் , ஈகை ,


பெருச்செல்வம் , நுண்ணறிவு , உயர்கல்வி , உயர்ந்த குடும்பம் , இறந்தபிறகும்
நிலைத்திருக்கும் புகழ் ஆகியவை ஏற்படும்.

19

ஜெய யோகம்

பத்தாம் அதிபதி உச்சம் பெற்றும் ஆறாம் அதிபதி நீச்சம் பெற்றும் காணப்படுவது

நீண்ட ஆயுள் , எதிரிகளை வெல்லுபவர் , பிரபல வழக்றிநகர் ஆக விளங்குவர் 

20
சகட யோகம்

குருவிற்கு 6,8,12 ல் சந்திரன்அமையப்பெறுவது

வறுமையில் வாடுவார், எல்லா காரியங்கிலும் தோல்வி , வாழ்க்கையே


போராட்டம் ஆக விளங்கும்

21

பந்தன யோகம்

ஆறாம் அதிபதியும் லக்கினாதிபதியும் ஒன்று சேர்ந்து சனிஉடன் கூடி 1,5,7,9,10 ல்


யிருப்பது

பிறருக்கு அடிமையாக இருப்பார் , நீண்ட கால சிறை வாசம் அனுபவிப்பர்

22

நள யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்களும் உபய ராசியான மீ னம் , மிதுனம் ,


கன்னி மற்றும் தனுசில் அமையப்பெறுதல் 

நாடோடியாக வாழ்வார் , அருவருப்பான தோற்றம் உடையவர்

23

மாத்ரு நாச யோகம்

சந்திரன் பாவ கிரங்களளுடன் கூடி யிருந்தாலும் ,பாவ கிரஹங்களின் மத்தியில்


அமையப்பெற்றாலும்

தாயின் ஆயுள் குறைவு

24
முசல யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்களும் ஸ்திர ராசியான ரிஷபம் , சிம்மம் ,


விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிகளில் சஞ்சரிப்பது

ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி உடையவர் , அணைத்து துறைகளிலும் மேம்பட்ட


அறிவு உடையவர், செல்வந்தராகவும் , தன்மான உணர்வு உடையவர்

25

ரஜ்ஜு யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்களும் சர ராசியான மேஷம் , கடகம் ,


துலாம் மற்றும் மகர ராசிகளில்அமையப்பெறுவது

வெளி நாடு சென்று பொருள் ஈட்டும் யோகம் , உயர்ந்த குறிக்கோள்களை


யுடையவர்

26

பாச யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 5 ராசிகளில் சஞ்சரிப்பது

நேர்மையான வழியில் செல்வம்ஈட்டுவராகவும் நீதி நெறிகளை


பின்பற்றுவராகவும் இருப்பர்

27

வல்லகி யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 7 ராசிகளில் சஞ்சரிப்பது

கலைத்துறையில் மற்றும் சங்கீ த துறையில் பெயரும் புகழும் பெறுவார்


28

கேதார யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 4 ராசிகளில் சஞ்சரிப்பது

பெரும் விவசாயீ , திரளான கால்நடைகளை பராமரிப்பார் , பூமி , வாஹனம்


போன்ற தொழில்களை மேற்கொள்வர்

29

தாமினி யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 6 ராசிகளில் சஞ்சரிப்பது

மிக்க அறிவு யுடையவர் , பகைவர்களை எளிதாக வெல்லக்கூடியவர் , தான ,


தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர்

30

௲ல யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 3 ராசிகளில் சஞ்சரிப்பது

கேடி , மற்றும் பிரபல ரவுடி ஆவார்

31

கோல யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 1 ராசியில் சஞ்சரிப்பது

ஜாதகர் தீமை குணம் நிறைந்தவர் ஆகவும் சமுதாயத்தால்


புறக்கணிக்கப்படுபவராகவும் இருப்பர்
32

யுக யோகம் 

ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 2 ராசிகளில் சஞ்சரிப்பது

சமுதாய நெறிமுறைகளை பின்பற்றாதவர், நல்லோர்களால் வெறுக்கப்படுவர் ,


சிறுமையான காரியங்களில் ஈடுபடுபவர்

33

விபரீத ராஜ யோகம்

· 6 ம் அதிபதி 8 இல் அல்லது 12 இல் யிருப்பது

· 8 ம் அதிபதி 6 இல் அல்லது 12 இல் யிருப்பது

· 12 ம் அதிபதி 8 இல் அல்லது 6 இல் யிருப்பது

சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னர் ராஜ வாழ்வு வாழ்தல்

34

கால சர்ப்ப யோகம்

ராகு கேது பிடியில் எல்லா கிரகங்களும் அமைவது

32 வயது வரை சாதாரண வாழ்க்கை ., பின்பு நல்ல முன்னேற்றம் 

35

சந்திரா மங்கள யோகம்

சந்திரனுக்கு 1,4,7,10 செவ்வாய் அமையபெற்றிடுப்பது


நல்ல புகழ் , உயர்ந்த செல்வம் உண்டாகும்

36

சதுரச யோகம் 

எல்லா கிரகங்களும் 1,4,7,10 யில் அமைவது

ஆட்சி செய்யும் ஆற்றல், நல்ல புகழ்

37

நீச்ச பங்க ராஜ யோகம்

நீச்ச கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி , யுச்சம் பெற்றிடுப்பது

பிறரால் செய்ய முடியாத சாதனை, ராஜ வாழ்வு வாழ்தல்

38

அகண்டசாம்ராஜ்யயோகம்

2 ம் 5 ம் அதிபதிகள் சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ வலுவாக உள்ள


நிலை

சாதாரண தொண்டனாக இருந்து பெரும் தலைவராக ஆகும் தன்மை

39

தேனு யோகம்

ஜாதகத்தில் 2 ம் அதிபதியை சுபர் பார்வையிட்டாலும் சேர்க்கை பெற்றாலும்

நல்ல பேச்சாற்றல் , உயர் கல்வி , நல்ல அறிவாற்றல்


40

பரிவர்த்தனையோகம்

கிரஹங்கள் தங்கள் வடு


ீ மாரி அமர்ந்திருப்பது உதாரணமாக விருச்சிகத்தில்
குருவும் தனுஷில் செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவது

பரிவர்த்தனை பெற்ற கிரஹங்களின் தசை மற்றும் புக்தி காலங்களில்


ஜாதகருக்கு நற்பலன்கள் ஏற்படுகின்றது

41

முக்தி யோகம்

லக்கினத்திலிருந்து 12 ல் ( மோட்ச ஸ்தானம் ) கேது அமையப்பெற்றால்

ஆன்மிக வாழ்வில் அதீத ஈடுபாடு , மறுபிறவி இல்லாத நிலை தீர்த்த யாத்திரை


ஈடுபாடு

42

புஷ்கலா யோகம்

சந்திரனுக்கு சுபர் பார்வை ஏற்பட்டு லக்கினாதிபதி லாப ஸ்தானத்தில்


அமையப்பெறுவது

நிலைத்த புகழ் , மற்றவர்களால் மதிக்கப்படும் தன்மை , பிறரிடம் அன்பு காட்டுதல்

43

ஸ்ரீ நாத யோகம்

லக்கினத்தில் இருந்து 4,7,10 ல் சுக்ரன் , புதன் மற்றும் சூரியன் இணைந்து


காணப்படுதல்

நிறைந்த புகழ் , செல்வம் , செல்வாக்கு , ஆன்மிகத்தில் ஈடுபாடு


44

கனக யோகம்

சர லக்கினமாகி 5.10 திற்கு உரியவர்கள் கேந்த்ரா ஸ்தானங்களில்


அமையப்பெற்றால் 

செல்வம் , செல்வாக்கு, நிலைத்த புகழ்

45

சக்கரவர்த்தி யோகம்
புதன் , சுக்ரன் , குரு ஜாதகத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று காணப்படுதல்

நாட்டை ஆளும் யோகம் , சிறந்த தலைவர் என்ற நற்பெயர்

46

விரின்சி யோகம்

குரு , லக்கினாதிபதி மற்றும் சனி பலமுடன் காணப்படுதல்

நிலைத்த புகழ் , வலிமை , பேராற்றல்


47

ரவி யோகம்

சூரியனுக்கு இரு புறமும் ஷுப கிரஹங்கள் அமைவது

உயர்ந்த சாதனை படைக்கும் திறன் , பெரும் புகழ் , திரண்ட செல்வம் 

48

சரஸ்வதி யோகம்
புதன் , குரு , ஷுக்ரன் கேந்திரத்திலிலோ அல்லது திரிகோணத்திலோ வலுவுடன்
அமைய பெற்றுஇருந்தால் 

எழுத்தற்றால் , பேச்சு வன்மை , மந்திரி பதவி

49

வசுமதி யோகம்

பலம் பெற்ற 3,6,11 ம் அதிபதிகள் அமையப்பெற்று காணப்பற்றால்

வலிமை , பேராற்றல். திரண்ட செல்வம் 


50

சங்க யோகம்

5,6 ம் அதிபதிகள் இணைந்து ஒரே வட்டில்


ீ யிருந்தாலும் அல்லது
ஒருவரையொருவர் சம சப்தமாக பார்வையிட்டாலும்

உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்

51

பூமி பாக்கிய யோகம்


4 ம் 9 ம் அதிபதிகள் துஷ்டானங்களான அமர்த்திருக்கக்கூடாது . நீச்சம்
பெறக்கூடாது. பாபர்கள் சேர்க்கை பெற்றிருக்க கூடாது.

பூமி வாகன மற்றும் திரண்ட சொத்து சேரும்

52

ராஜ யோகம்

9 ம் அதிபதி ஆட்சி பெற்று குருவின் பார்வை ஏற்பற்றிருந்தால்

வடு
ீ வாகன யோகம் , திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு ஏற்படுகிறது
53

வரிஷ்ட யோகம்

சூரியனுக்கு 3.6.9.12 ல் சந்திரன்அமைப்பெறுவது

உயர்ந்த அறிவு , நல்ல பழக்க வழக்கங்கள் , மனோ தைரியம் , செல்வாக்கு

54

லட்சுமி யோகம்
9 ம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று காணப்படுவது

வடு
ீ வாகன யோகம் , திரண்ட செல்வம்

55

தரித்திர யோகம்

9 ம் அதிபதி 12 ல் மறைந்து காணப்பட்டால்

வறுமையான வாழ்வு , சொத்துக்கள் சேதாரம் ஆகும் நிலை


56

கலாநிதி யோகம்

குரு 2 ல் 5 ல் ஆட்சி உச்சம் பெற்று காணப்பட்டாலும் 

சுக்ரன் , புதன் , குரு 2,5,9 ல் அமர்ந்திருந்தாலும்

நாட்டை ஆளும் யோகம் , திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு

57

அந்திய வயது யோகம்


1,2 ம் அதிபதிகள் பரிவர்த்தனை அடைந்து காணப்பட்டாலும் , லக்கினத்தில்
அமையப்பெற்றாலும்

இளமையில் வறுமை 50 வயதுக்கு மேல் செல்வந்தர்

58

பாப கத்திரி யோகம் 

சந்திரனுக்கோ , லக்கினத்திற்கோ இருபுறங்களிலும் பாபிகள்அமையப்பெறுவது

நிம்மதி இல்லாத வாழ்வு அமைகிறது


59

திரி லோசன யோகம்

செவ்வாய் , சூரியன் , சந்திரன் கேந்திர திரிகோணம் பெற்றுருந்தால்

திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு, எதிரிகளை வெல்லும் திறன்

60

அரச யோகம்
சந்திரன் லக்கினத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்று அப்படி பட்ட
சந்திரனை குரு சுக்ரன்பார்வையிட்டால்

ராஜ வாழ்க்கை அமையும்

61

பர்வத யோகம்

லக்கினாதிபதி நின்ற வட்டின்


ீ அதிபதி ஆட்சி உச்சம் பெறின் அல்லது
லக்கினத்திற்கு கேந்திரம் பெற்று காணப்பட்டாலும்

பெரும் புகழ், திரண்ட செல்வம் ,


62

வசீகர யோகம்

சனி புதன் மற்றும் சுக்ரன் ஒன்று சேர்ந்து காணப்பட்டால்

முக வசீகரம் , பிறரை எளிதாக வசப்படுத்த கூடியவர்

63

பிரம்மா யோகம்
சுக்ரன் கேந்திரத்தில் அமையப்பெற்று புதன் லக்கினத்திலோ அல்லது ஜீவன
ஸ்தானத்திலோ அமைய வேண்டும்.

உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்

64

கௌரி யோகம்

ஜீவன ஸ்தானத்தில் லக்கினாதிபதியுடன் ஒரு உச்ச கிரஹம் அமையப்பெற்ற


வேண்டும் 

உயர்ந்த அறிவு , நல்ல பழக்க வழக்கங்கள் ,


65

காம யோகம்

களத்ர ஸ்தானத்தில் சுபர் வற்றிருப்பதும்


ீ , ஏழாம் இடத்தை சுபர்
பார்வையீடுவதும்

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை , நல்ல மனைவி

66

சுமந்திர யோகம் 
லக்கினத்தில் கேது அமர , களத்திரஸ்தானத்தில் சந்திரன் அமர , லக்கினத்திற்கு
எட்டில் சூரியன் அமரவேண்டும். 

கிராம சபை , ஊராட்சி தலைவர்

67

மாருத யோகம்

3,6,11 ஆகிய எதாவுது ஒரு வட்டில்


ீ ராகு அமர்ந்து சுபர் பார்வை ஏற்பட்டிருக்க
வேண்டும்
பெரும் புகழ், திரண்ட செல்வம் ,

68

யவன யோகம்

இரண்டாம் வட்டில்
ீ சுபர் அமையப்பெற்று 2 க்கு உரிய கிரஹம் பலம் பெற்று
காணப்படுவது

உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ்

69
அசுபர யோகம்

லக்கினத்தில் சந்திரனும் குருவும் இனைந்து காணப்பட்டு , லக்கினாதிபதி ஷுப


கிரகத்துடன் இணைந்து காணப்படுதல்

40 வயதுக்கு பிறகு அரசியலில் யுயர்ந்த பதவி , புகழ்

70

நாக யோகம்

பாக்கிய ஸ்தானத்தில் குருவும் , 9 ம் அதிபதி 7 ல் அமையப்பெற்று , சந்திரன் சுபர்


சம்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்
நல்லஅறிவாற்றல்,உயர் கல்வி , பெரும் புகழ்

71

சாமர யோகம்

லக்கினம் சர லக்கினமாக அமைந்து , குரு பகவான் கேந்திர ஸ்தானங்களில்


அமையப்பெற்று , லக்கினாதிபதி 3,6,9,12 ஆகிய இடங்களில் எதாவது ஒன்றில்
அமையப்பெறவேண்டும்

திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு, எதிரிகளை வெல்லும் திறன்,


அரசியலில் யுயர்ந்த பதவி

72
குரு சண்டாள யோகம்

ராகுவும் குருவும் இணைந்து மற்றும் ஒருவரை ஒருவர் பார்வை இட்டாலும்

திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு

73

கபட யோகம்

ஷுக ஸ்தானாதிபதி பாபர் உடன் கூடினாலும் 4 ல் 4 ஆம் அதிபதி ஆட்சி பெற்று


காணப்பட்டாலும் 
ஜாதகர் கபடம் நிறைந்தவராக காணப்படுவர்

74

அஷ்ட லட்சுமி யோகம்

ராகு 6 ல் அமைத்திருக்க எற்படுவது

ராகு தசை நடைபெறும்போது ஜாதகருக்கு திரண்ட செல்வம் சேருகிறது

75
லட்சுமி யோகம்

சுக்கிரன் 2 ,11 ல் அமர்த்திருக்க வேண்டும்

ஜாதகருக்கு சுக்கிர தசை நடைபெறும் பொழுது செல்வ சேர்க்கை உண்டாகும்

76

குபேர யோகம்

இரண்டாம் அதிபதி பாக்ய ஸ்தானத்தில் அமையப்பெற்றாலும் , இரண்டாம்


வட்டில் 9
ீ ம் அல்லது 11 ம் அதிபதி அமையப்பெற்றாலும்
குபேரனுக்கு நிகராக செல்வ சேர்க்கை ஏற்படுகிறது

77

வெளி நாடு செல்லும் யோகம்

9,12 ம் அதிபதிகள் மீ னம் , கடகம் அல்லது மகரத்தில் அமையப்பெற்றால்,

9 , 12 ம் அதிபதிகள் பலம் பெற்று காணப்பெற்றாலும்

9 ,12 ம் அல்லது தசை புக்திகளில் ஜாதகர் வெளிநாடு செல்லும் யோகம்


ஏற்படுகிறது
78

விஷ கன்னிகா யோகம்

ஒரு பெண் சனி, ஞாயிறு , செவ்வாய் கிழமைகளில் பிறந்து , கிருத்திகை , சதயம் ,


ஆயில்யம் நட்சித்திரங்களில் பிறந்திருந்தால்

அப்பெண்ணின் கணவனுக்கு உடல் நிலை பாதிக்கப்படும் 

79

ஸ்ரீ கட யோகம்
அணைத்து கிரஹங்களும் திரிகோண ஸ்தானங்களில் இருப்பது

ஜாதகர் அரசாங்க பணி , சண்டை போடுவதில் விருப்பம் , நல்ல மனைவி ,


சந்தோஷமான வாழ்க்கை 

80

ரோககிரஹஸ்த யோகம்

லக்கினாதிபதி பலம் இழந்து 6,8,12 ல் அமர்ந்திருந்தாலும் , 6,8,12 கு உரியவர்


லக்கினத்தில் அமர்ந்து யிருந்தாலும்
ஜாதகர் ஒல்லியாக , மெலிந்த தேகம் உடையவராக இருப்பார்.

81

அமாவாசை யோகம்

சூரியனும் சந்திரனும் இணைந்து காணப்படுவது

ஜாதகரின் வாழ்வே போராட்டமாக அமையும் . இதில் சந்திரனோ அல்லது


சூரியனோ உச்சம் அல்லது ஆட்சி பெற்று காணப்பெற்றால் , நற்பலன்கள்
உண்டாகும்

82
வனா
ீ யோகம்

7 கிரஹங்கள் 7 ராசியில் அமையப்பெற்றிப்பது

நல்லஅறிவாற்றல்,உயர் கல்வி , பெரும் புகழ்

83

அரச கேந்திர யோகம்

கேந்திர ஸ்தானங்கிளில் உள்ள கிரஹங்கம்ள் யாவும் உச்சம் பெற்று


காணப்படுவது
அரசியலில் யுயர்ந்த பதவி , புகழ்

84

அன்னதான யோகம்

2 ம் அதிபதி பலமடைந்து புதன் அல்லது குரு சம்மந்தம் அடைந்திருப்பது

தொடர்ந்து அன்னதானம் செய்யும் யோகம்

85
கேதார யோகம்

7 கிரஹங்கள் 4 ராசியில் இருப்பது

தலை சிறந்த விவசாயீ

86

சதுரஸ்ஸ யோகம்

நான்கு கேந்திரங்களில் கிரஹங்கள் அமர்ந்திருப்பது


மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, அரசியலில் யுயர்ந்த பதவி

87

விமலா யோகம் 

12 ம் அதிபதி 12 ல் இருப்பது

பிறர்க்கு உதவி செய்யும் எண்ணம்

88
சாங்கியா யோகம்

லக்கினம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் ராகு, கேது தவிர மற்ற கிரஹங்கள்


அமைந்திருப்பது

சாந்த சொரூபி , தர்ம காரியங்களில் ஈடுபாடு , திரண்ட செல்வம்

89

ராஜ யோகம்

கேந்திரதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவது


வடு
ீ , வாகன யோகம் , மகிச்சியான குடும்ப வாழ்க்கை

90

பாக்கிய யோகம்

ஜீவன ஸ்தானத்தில் சுப கிரஹம் அமைந்திருப்பது மற்றும் ம் அதிபதியின்


பாக்கியாதிபதி உச்சமோ அல்லது ஆட்சி பெற்று சுவரின் பார்வை
பெற்றுயிருப்பது 

வாகன சுகம் , அழுகு , அறிவாற்றல்

91
உப ஜெய யோகம் யோகம்

உப ஜெய ஸ்தனங்களான 3,6,10,.11 இடங்களில் சந்திரன் , புதன் , குரு , மற்றும்


சுக்ரன் போன்ற சுபா கிரஹங்கள் அமையப்பெறுவது 

எல்லா காரியங்களிலும் வெற்றி , வசதியான வாழ்வு

92

லக்கின கர்மாதிபதி யோகம் 

லக்கினாதிபதியும் ஜீவனாதிபதியும் சேர்க்கை அல்லது பார்வை


பெற்றிருக்க வேண்டும்
ஜாதகர் சுய முயற்சியால் முன்னேறுவர்

93

அங்ககீ ன யோகம்

அயன சயன போக ஸ்தானாதிபதி கேந்த்ரா திரிகோண ஏறி ராகு பகவானுடன்


சம்மந்தம் பெற்றுப்பது

ஜாதகர் அங்ககீ னத்துடன் இருப்பார்

94
அசுர யோகம்

லக்கினாதிபதி ஸூபர் ருடன் கூடி யிருக்க , லக்கினத்தில் குருவும் மற்றும்


சந்திரனுடன் கூடி இருத்தல்

40 வயதுக்கு மேல் அரசியலில் ஈடுபடும் உயர்ந்த பதவி ஏற்படும்

95

சரள யோகம் 

அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் யிருப்பது


நீண்ட ஆயுள் , திறமைசாலி , உயர் பதவி , உயர் கல்வி

96

பாதாள யோகம்

12 ம் இடத்தில சுக்ரன் அமையப்பெற்று 12 ம் அதிபதி உச்சம் பெற்று குருவுடன்


சேர்ந்து காணப்பட்டால்

வாழ்வின் பின்பகுதியில் வசதியான வாழ்க்கை அமையப்பெறும்

97
சுமத்திர யோகம்

லக்கனத்தில் கேது அமையப்பெற்று 7 ம் இடத்தில சந்திரன் அமையப்பெற்று


சந்திரனுக்கு 8 ல் சூர்யன் அமையப்பெறுவது

இளம் வயதில் யோக வாழ்க்கை ஏற்படும் . கிராம சபை அல்லது நகர சபை
தலைவராக இருப்பர்

98

தன யோகம் 

· லக்கினத்திற்கு 2,9 ,10 அதிபதிகள் இணைந்து காணப்படுவது


· லக்கினத்திற்கு 2,5 ,6 அதிபதிகள் இணைந்து காணப்படுவது

· லக்கினத்திற்கு6,7,அதிபதிகள் பலம் பெற்று 2 ம் அதிபதியுடன் சம்பந்தம்


பெற்றுப்பது 

செல்வ சேர்க்கை செய்யும் தொழிலால் ஏற்படும்

99

வசுமதி யோகம் 

சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ 3,6.10.11 ல் ஷுப கிரஹங்கள்


அமையப்பெறுவது
நல்ல செல்வ சேர்க்கை

100

கௌரி யோகம் 

சந்திரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுவது

நல்ல குடும்ப வாழ்க்கை , ஆன்மிகத்தில் நாட்டம்

101
சந்திர யோகம்

சந்திரனுக்கு 2 ல் குருவும் சனியும் அமையப்பெற்றுப்பது

ஜாதகர் சுயநல வாதியாக யிருப்பர்

102

பிரபை யோகம் 

லக்கினாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து கேந்த்ரா ஸ்தானங்களில் அமையப்பெறுவது


வாழ்க்கையில் முற்பகுதியில் யோகத்தை அனுபவிப்பார். அரசியலில் ஈடுபாடு
ஏற்படும்

103

இந்திர யோகம் 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் அமையப்பெற்று , பூர்வ புண்ணிய


ஸ்தானாதிபதி மற்றும் லாபாதிபதி பரிவர்த்தனை அடையந்து காணப்படுவது

நல்ல புகழ் , மனோ தைரியம்

104
மாலா யோகம்

சந்திரனுக்கு 10 ல் குரு அமையப்பெறுவது

அரசு பணி, செல்வ சேர்க்கை

105

பாரி ஜாத யோகம்

லாபாதிபதி ஆட்சி உச்சம் பெற்று காணப்படுவது


செல்வம் , செல்வாக்கு , நற்குணங்கள்

106

மஹாலட்சுமி யோகம்

பாகியாதிபதியும் , ஷுக்ரனும் 1,4,5,7,9, 10 ல் அமர இந்த யோகம் ஏற்படுகிறது 

திருமணத்திற்கு பிறகு செல்வ சேர்க்கை உண்டாகும்.உயர் பதவி வாகன வசதி


ஏற்படும் 

107
காஹல யோகம்

சுபஸ்தானாதிபதி மற்றும் பாகியாதிபதியும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில்


அமைப்பெற்று லக்கினாதிபதி வலுவுடன் காணப்படவேண்டும்

ஜாதகர் பிடிவாதகராகவும் தைரியம் மிகுந்தவராகவும் காணப்படுவர்

108

களத்திர மூல தன யோகம்

இரண்டாம் வடு
ீ அதிபதியை ஏழாம் வட்டுஅதிபதி
ீ பார்வையிடுவது
மனைவி வழியில் திரண்ட செல்வ சேர்க்கை

109

மாத்ரு மூல தன யோகம்

இரண்டாம் வடு
ீ அதிபதியுடன் நான்காம் வட்டு
ீ அதிபதி சேர்ந்துஇருப்பது

தாய் வழியில் செல்வ சேர்க்கை உண்டாகும்

110
சதா சஞ்சார யோகம்

லக்கினாதிபதி சர ராசியில் அமையப்பெற்றிருப்பது

தொடர்ந்து தொழில் அல்லது வேலை நிமித்தமாக பிரயாணம் செய்வது , அதிக


அலைச்சல்

111

வசீகர யோகம்

சனி , புதன் மற்றும் சுக்ரன் ஒன்று கூடி இருப்பது


ஜாதகர் முக வசீகரம் உடையராவாகும் , நிறைந்த அழகோடு இருப்பார்

112

அங்கீ ச யோகம்

குரு பகவான் உச்சம் பெற்று சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ 5,7,9 ல்


அமைதல் வேண்டும்

நீண்ட ஆயுள் , திரண்ட செல்வம்

113
உதாந்திரி யோகம்

2,5,9 ம் அதிபதிகள் லக்கினத்தில் ஒன்று கூடி அமையவேண்டும்

மகிழிச்சியான குடும்பம் , பிரபல வழுக்குரைஞர்

114

சௌரிய யோகம்

லக்கினத்திலோ அல்லது லக்கினத்திற்கு மூன்றிலோ சுப கிரஹம் அமைவது 


வசதியான வாழ்க்கை

115

ஆன்மிக யோகம்

சனியும் குருவும் எந்தவிடத்திலாவது சம்பந்த பெற்றிருப்பது சேர்க்கை பார்வை


பரிவர்த்தனை

தெய்வகம்
ீ மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு

116
புத ஆதித்ய யோகம்

சூரியனும் புதனும் ஒன்று கூடி இணைந்திருப்பது 1,4,8 ல் இருந்தால் உயர்ந்த


பலன்கள்

நுண்ணிய அறிவாற்றல் , ஆராய்ச்சியில் ஈடுபாடு

117

இல்லற சந்நியாசி யோகம்

சனி வட்டில்
ீ சந்திரன் இருப்பது அல்லது சனி தன் இரு வடுகளில்
ீ ஒன்றை
பார்ப்பது
இல்லற வாழ்க்கையில் ஈடு படு அற்ற தன்மை

118

படுக்கை சுக யோகம்

12 கு உரிய கிரஹம் சுபர் சம்பந்தம் ஏற்பற்றிருப்பது 

கட்டில் சுகம் நிரம்ப உண்டு

119
பூமீ லாப யோகம் 

நான்காம் அதிபதி மற்றும் லக்கினாதிபதி பரிவர்த்தனை அடைந்து


காணப்பட்டாலும் அல்லது நான்காம் அதிபதி பலம் பெற்று காணப்பெற்றாலும்

நிறைய பூமி மற்றும் சொத்து சேர்க்கை ஏற்படுகிறது

120

பந்து பூஜ்ய யோகம்

4 ம் அதிபதி உச்சம் பெற்றோ அல்லது நடபு பெற்றோ குருவால் பார்க்க பெற


வேண்டும்
உறவினர்களை ஆதரிக்கும் பண்பு

121

சுவகார
ீ புத்ர யோகம்

கன்னி அல்லது மிதுன லக்கினமாக இருந்து 5 ல் சனி , செவ்வாய் இருந்து புதனின்


பரிவை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருப்பது

ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லை சுவகார


ீ புத்ரன் உண்டு

122
வாகன லாபயோகம்

4 கு உரிய கிரஹம் ஷுப கிரஹத்தினுடேன் கூடி 9 ல் அமையப்பெற்றிருந்தாலும்


அல்லது 9 ம் அதிபதியுடன் கூடி அமையப்பெற்றிருந்தாலும்

வடு
ீ வாகனம்

123

சூரனாகும் யோகம் 

குழந்தை இரவு பிறந்திருக்க வேண்டும் . செவ்வாய் லக்னோத்திலோ பத்திலோ


அமர்ந்துஇருக்க வேண்டும்
ஜாதகர் வரீ தீர பராக்கிரமசாலி

124

வர்யம்
ீ குறைவு யோகம்

ஒற்றை படை ராசியாக லக்கினம் அமையப்பெற்று அங்கு சுக்ரன்


அமையப்பெறவேண்டும்

மலட்டு தன்மை ஏற்படுகிறது

125
சர்ப்ப கண்ட யோகம்

2 ல் மாந்தியுடன் ராகு கூடியிருக்க வேண்டும் 

பாம்பு கடிப்பதினால் மரணம் சம்பவிக்கும்

126

விமலா யோகம்

12 ம் அதிபதி 12 ல் இருப்பது
தொண்டு காரியங்களில் ஈடுபாடு உடையவர்

127

மகா பாக்கிய யோகம் 

ஆண் ஜாதகர்களுக்கு ஆண் ராசியில் சூரியன் சந்திரன்அமையப்பெற்றிப்பதும்,


பெண் ஜாதகர்களுக்கு பெண் ராசியில் சூரியன் சந்திரன்அமையப்பெற்றிப்பதும்

நாட்டிற்கோ அல்லது மாகாணத்திற்கோ தலைமை தாங்கும் குணம்

128
சகோதர லாப யோகம்

3 ம் இடம் வலுப்பெற்று ,3 ம் அதிபதி வலுப்பெற்று, 3 ல் ஸூபர் அமையப்பெறுதல்

சஹோதர்களால் மேன்மை உண்டாகும்

129

தீர்க்க தேக யோகம்

புதனுக்கு 7 ம் இடத்தில செவ்வாய் அமர வேண்டும்


திடகாத்திரமான உடல் வாகு அமையும்

130

சன்யாச யோகம்

கடக லக்கினத்தில் பிறந்தவர்க்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் , சூரியன் ,


புதன் அமைதல் வேண்டும்

ஆன்மிக தலைவராகுவோ , மதத் தலைவரகுவோ இருப்பார்

131
மாத்ரு சாப புத்ர யோகம்

மீ ன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 5 ல் பாபர் அமர சந்திரன் பாபர் நடுவிலோ


அல்லது நீச்சம் பெற்றோ காணப்படுதல் .

மாத்ரு சாபத்தால் புத்ர தோஷம் ஏற்படுகிறது

132

திரவிய நாச யோகம்

9 ல் ராகு அமையப்பெற்றால்
பொருள் நஷ்டம் பெண்களால் ஏற்படுகிறது

133

அஷ்டலட்சுமி யோகம் :-

லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ 6 இல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில்


இருத்தல் அஷ்டலட்சுமி யோகம்உண்டாகும்

சுகபோகமான செல்வாக்கான வாழ்கை அமையும்.


134

ஜடா யோகம் :-

லக்கனத்தில் உச்ச கிரககள் இருந்து அதை செவ்வாய் பார்க்க 3 இல் 9 அதிபதி


இருதால் ஜடா யோகம் ஏற்படும்.

இந்த அமைப்பை உடைய ஜாதகர் இளம் வயதில் பெரும் செல்வந்தராக


அடைவர்.செல்வாக்கு உயரும்.

135
மலா யோகம்

10 இல் சந்திரன் இருதால்:-

இந்த யோகத்திற்கு மலா யோகம் எனப்படும்.

இந்த அமைப்பை உடைய ஜாதகர் பெரும் செல்வந்தராக அடைவர்.சுகமான


வாழ்கை அமையும்.அதிகாரம் செய்வதில் மிக திறமைசாலியாக இருப்பர் .

Top of Form

Bottom of Form
136

யாசக யோகம்;

லகினதிற்கு 1 இல் சந்திரன் இருக்க ,சனி கேந்திரத்தில் இருக்க,குரு 12 இல் இருக்க


யாசக யோகம் உண்டாகும்.

இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவார்கள்.6, 8 ,12,இல்


லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள்.

137

காம்ப யோகம் :

லகினதிற்கு 2 இல் குரு இருக்க,4 இல் சுக்கிரன் இருக்க, 7 இல் சந்திரன்


இருக்க,லக்கினதிபதி சுபகிரகள் உடன் 

சேர்திருதால் காம்ப யோகம் உண்டாகும்.

மனைவி அல்லது கணவன் மூலம் பெருத்த லாபம் உண்டு.பணவசதி


பெருகும்.பெயர் புகழ் செல்வாக்கு உயரும்.மேன்மையான வாழ்கை அமைவது
உறுதி.

138

திரியோகம் :

லக்னத்திற்கு 7,8,9,10 ஆகிய இடங்களில் மட்டும் கிரகங்கள் தேறி நிற்க


இச்சாதகனுக்கு திரியோகம் உண்டாகும் .

இந்த யோகம் உள்ளவர்கள் அவ்வமானம் தரும் காரியங்களைச்


செய்வார்கள்.சோம்பல் உள்ளவர்கள்.நேர்மையற்ற தொழிலைச்
செய்வார்கள்.பொதுமக்களிடம் அவமரியாதை பெற்றவர்.குலத்திற்கு தகுத்த
தொழிலை செய்யமாட்டார்கள்.

139

பரவை யோகம் :

10 லோ அல்லது 4 லோ பெரும்பாலான கிரகங்கள் இருத்தால் பரவை யோகம்


உண்டாகும் .

இந்த யோகத்தில் பிரதவர்கள் பல நாடுகள் சென்று வருவார்.ஞான மார்க்கம்


அறிந்தவர் .சந்நியாசி என்று பெயர் பெறுவார் .

141

கோ-யோகம்

ஒரு ஜாதகத்தில் குரு தனதுமூலதிரிகோணத்திலும், 2 ம் அதிபதி அந்த குருவுடன்


இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த
அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.

உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள்


குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார்

142
மகுட யோகம் 

ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9 ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து


9 ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9 ல் ஒரு நல்ல கிரகம்
அமைந்து,சனிலக்கினத்திற்க்கு 10 ல் அமர்ந்தால்

மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த தலைவனாக இருப்பார்கள்.


கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்


143

மாலவ்ய யோகம்

சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில்


நிற்பது.

நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான்,


வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்

144

பத்ர யோகம்
புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ
கேந்திரத்தில் நிற்பது.

கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.

145

சசயோகம்

சனி பகவான் ஆட்சி உச்சங்களில் கேந்திரத்தில் நிற்பது

நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத


குணம் உள்ளவன்.
146

ருசக யோகம்

அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ


அல்லதுசந்திரனுக்கோ கேந்திரதிரிகோணங்களில் இருப்பது.

நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை,


உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.

147

ஹம்ஸ யோகம்

குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில்


நிற்பது.

நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.


மாலவ்ய யோகம்

சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில்


நிற்பது.

நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான்,


வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்

பத்ர யோகம்

புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ


கேந்திரத்தில் நிற்பது.

கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.

சசயோகம்

சனி பகவான் ஆட்சி உச்சங்களில் கேந்திரத்தில் நிற்பது

நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத


குணம் உள்ளவன்.

ருசக யோகம்

அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ


அல்லதுசந்திரனுக்கோ கேந்திரதிரிகோணங்களில் இருப்பது.
நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை,
உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.

ஹம்ஸ யோகம்

குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில்


நிற்பது.

நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.

ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் பாவம் (திருமணம்)


பாவம் என்ன என்ன பலன் தரும்

ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் பாவம் (திருமணம்) பாவம் என்ன என்ன பலன்

தரும்?

ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வுசெய்து 7-ம் பாவம் என்ன என்ன பலன்களை

தருகிறது என்பதை பார்ப்போம். 7-ம் பாவம் காரகங்கள்.( பலன்கள்)

7-ம் பாவம் என்பது ஒரு ஆணுக்கு மனைவி ஸ்தானம்.

ஒரு பெண்ணுக்கு கணவர் ஸ்தானம், விட்டுக்கொடுத்து செல்பவர்கள் ,வெளி உலக பழக்கவழக்கம்

, வாடிக்கையாளர்கள் ,சமூக அங்கீ காரம் ,திருமண தகவல் மையம் ஆகியவற்றை குறிக்கும். 7-ம்

பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் வாயிலாக ஒன்பது கிரகங்களை தொடர்பு

கொண்டால் எப்படிபட்ட கணவர்/ மனைவி அமைவார் என்பதை பார்ப்போம்.


7-ம் பாவம் சூரியன் கிரகமாக அமைந்தால் அரசாங்க வேலையில் உள்ள கணவன் அல்லது

மனைவி அமைவார்.

7-ம் பாவம் சந்திரன் கிரகமாக இருந்தால் அன்பான,

இரக்க குணமுள்ள ,தாயின் பேச்சை கேட்கும் கணவன்/ மனைவி அமைவார்.

7-ம் பாவம் செவ்வாய் கிரகமாக அமைந்தால் துணிச்சல் மிகுந்த, கடின உழைப்பாளியான கணவன்/

மனைவி அமைவார்.

7-ம் பாவம் ராகு கிரகமாக இருந்தால் எதையும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம்

கொண்ட கணவன் /மனைவி அமைவார்.

7-ம் பாவம் குரு கிரகமாக இருந்தால் ஆசிரியர் பணி அல்லது கடவுள் பக்தி நிறைந்த கணவன்/

மனைவி அமைவார்.

7-ம் பாவம் சனி கிரகமாக இருந்தால் எதிலும் சந்தேக குணம் உள்ள கணவன்/ மனைவி அமைவார்.

7-ம் பாவம் புதன் கிரகமாக இருந்தால் புத்திசாலித்தனமான இளமையான கணவர்/மனைவி

அமைவார்.

7-ம் பாவம் கேது கிரகமாக இருந்தால் கிரிமினல் ஆன, கெட்ட எண்ணம் படைத்த கணவன்/ மனைவி

அமைவார்.

7-ம் பாவம் சுக்கிரன் கிரகமாக இருந்தால் அழகான மனதுக்கு பிடித்த கணவன்/ மனைவி அமைவார்.

7-ம் பாவம் 2, 6,8 ,12 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு 40 வயது வரை

திருமணம் நடைபெறாது. திருமணம் நடைபெற்றாலும் வழக்கு ஏற்பட்டு விவாகரத்து, கணவன்

மனைவிக்குள் கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஒரு ஆணுக்கு சுக்கிரன் கிரகம்

2,6, 8 ,12, ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டால் திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது.

ஒரு பெண்ணுக்கு செவ்வாய் கிரகம் 2 ,6 ,8 12 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டால் ஒரு

பெண்ணின் திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது.


அடிப்படைஜோதிடம்
posted Oct 15, 2009, 1:54 PM by V.PRAKASH UK   [ updated Dec 9, 2014, 10:18 AM ]

சோதிடம் என்றால என்ன?

சோதிடம் என்பது, வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் கதிர்கள் மனித


வாழ்வை எப்படி நிர்ணயிக்கிறது என்பது பற்றிய அறிவியலே சோதிடம்.

விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில்


கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.
ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம்
கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337
பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவனமானால்

கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ
பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான்
இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.

உதாரணமாக
12 ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம்
செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி.
இனி சோதிடத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்துக்ள்ளலாம்.

1.1 வாய்பாடுகள்

1 நாள் = 60 நாழிகை = 24 மணி


1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்
1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி

ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்


1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்
1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்
1 பாதம் = 3 பாகை 20 கலை

1 பாகை = 60 கலை
1 கலை = 60 விகலை
1.2 கிரகங்கள் 9

1. சூரியன்
2 சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

1.3 ராசிகள் 12       

  

1.4 நட்சத்திரங்கள் 27
1 அசுவனி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்த்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி.

1.5 ராசிகளும் அவற்றின் அதிபதிகளும் 


மேஷத்தின் அதிபதி செவ்வாய்
ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்
மிதுனத்தின் அதிபதி புதன்
கடகத்தின் அதிபதி சந்திரன்
சிம்மத்தின் அதிபதி சூரியன்
கன்னியின் அதிபதி புதன்
துலாத்தின் அதிபதி சுக்கிரன்
விருசிகத்தின் அதிபதி செவ்வாய்
தனுசுவின் அதிபதி குரு
மகரம் மற்றும் கும்பத்தின் அதிபதி சனி
மீ னத்தின் அதிபதி குரு.

1.6. கிரகங்களும் அவற்றின் நட்சத்திரங்களும்

1.7. நட்சத்திரத்தின் உட்பிரிவு

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.


ஒவ்வரு பாகத்தையும் “பாதம்” என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப்பிரிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது அசுவனியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் அசுவனி முதல் பாதம்


என்றும், இரண்டாம் பாகம் அசுவனி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம்
அசுவனி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் அசுவனி நான்காம் பாதம்
என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது பரணியின் நான்கு பாகங்களில் முதல் பாகம் பரணி முதல் பாதம்


என்றும், இரண்டாம் பாகம் பரணி இரண்டாம் பாதம் என்றும், மூன்றாம் பாகம்
பரணி மூன்றாம் பாதம் என்றும், நான்காம் பாகம் பரணி நான்காம் பாதம் என்றும்
அழைக்கப்படுகிறது.

இதே போல மற்ற நட்சத்திரங்களுக்கும் தெரிந்து கொள்க.

1.8 ராசிகளும் அவற்றில் அடங்கும் நட்சத்திரங்களும்

ஒரு ராசிக்கு ௨ ¼ நட்சத்திரங்கள் என்று முன்னமே தலைப்பு 1.1 – ல் பார்த்ததை


நினைவு கொள்ளவும். அதாவது ஒரு ராசிக்கு (2 x 4) + 1 = 9 பாதங்கள்

மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும்,


கார்திகையின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

ரிஷப ராசியில் கார்த்திகையின் மீ தம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும்,


மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4


பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும்,


ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின்


முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

கன்னி ராசியில் உத்திரத்தின் மீ தம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும்,


சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும்,


விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4


பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)

தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும்,


உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)

மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4


பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)

கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும்,


பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)

மீ ன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4


பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)

1.9 ராசிகளின் வகைகள்

1.9.1. சரம், ஸ்திரம், உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகையாகப்


பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்


ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீ னம் இந்நான்கும் உபய ராசிகள்.

1.9.2 & 3. ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில் இரண்டு
வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது...

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண்
ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீ னம் இந்த ஆறு ராசிகளும் பெண்
ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

1.9.4 & 5 மேலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற அடிப்படையிலும், கிழக்கு,
மேற்கு வடக்கு தெற்கு என்ற அடிப்படையிலும் நான்கு வகையாக
பிரித்திருக்கிறார்கள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.


ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீ னம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீ ர் ராசிகள்

1.10. ராசிகளில் கிரக பலம்.

1.10.1. உச்சம், நீ ச்சம்


சூரியன் மேஷத்தில் உச்சம், துலாத்தில் நீச்சம்
சந்திரன் ரிஷபத்தில் உச்சம், விருச்சிகத்தில் நீச்சம்
செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்
புதன் கண்ணியில் உச்சம், மீ னத்தில் நீச்சம்
குரு கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம்
சுக்கிரன் மீ னத்தில் உச்சம், கண்ணியில் நீச்சம்
சனி துலாதில் உச்சம், மேஷத்தில் நீச்சம்

1.10.2. ராசிகளில் பகை பெரும் கிரகங்கள் (புலிப்பாணி ஜோதிடத்தின்படி)

மேஷத்தில் சந்திரன் பகை

ரிஷபத்தில் சூரியன் பகை


மிதுனத்தில் சூரியன், சந்திரன் பகை
கடகத்தில் சூரியன், புதன், சனி பகை
சிம்மத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி பகை
கண்ணியில் சூரியன் பகை
துலாத்தில் சந்திரன், செவ்வாய் பகை
விருச்சிகத்தில் சூரியன், குரு, சுக்கிரன், சனி பகை
தனுசுவில் இல்லை
மகரத்தில் சூரியன், சந்திரன் பகை
கும்பத்தில் சூரியன், சந்திரன் பகை
மீ னத்தில் இல்லை

1.11 திதிஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான்


வாரம் 
ஆகும். திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி வரை உள்ள
பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள
பதினைந்து நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்.

1.12 வறண்ட ராசிகள்


மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி ஆகிய ராசிகள் வறண்ட ராசிகள்.

முரட்டு ராசிகள்

மேஷம்,விருச்சிகம் ஆகிய ராசிகள் முரட்டு ராசிகள் ஆகும்.

1.13 ஊமை ராசிகள்


கடகம்,விருச்சிகம்,மீ னம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.
நான்கு கால் ராசிகள்
மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.
இரட்டை ராசிகள்
மிதுனம்,தனுசு,மீ னம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.
1.14 லக்னம்  

ஒரு ஜாதகத்தில் இடம் பெறும் ராசிக் கட்டத்தில் 'ல' என்றோ, அல்லது 'லக்'
என்றோ, அல்லது 'லக்னம்' என்றோ குறிப்பிட்டிருக்கும் ராசியே முதல்
வடாகும்.
ீ இங்கே கொடுத்திருக்கும் ராசிக் கட்டத்தைப் பாருங்கள். இங்கே
'லக்னம்' என்று குறிப்பிட்டிருக்கும் ராசி மேஷ ராசி. எனவே இதுவே முதல் வடு.

இதிலிருந்து வரிசைக் கிரமமாக எண்ணினோம் என்றால் ரிஷபம் 2 வது வடு.

மிதுனம் 3 வது வடு.
ீ கடகம் 4 வது வடு.
ீ சிம்மம் 5 வது வடு.
ீ கன்னி 6 வது வடு.

துலாம் 7 வது வடு.
ீ விருச்சிகம் 8 வது வடு.
ீ தனுசு 9 வது வடு.
ீ மகரம் 10 வது வடு.

கும்பம் 11 வது வடு.
ீ மீ னம் 12 வது வடு

மீ னம் 12 மேஷம் 1 (லக்னம்) ரிஷபம் 2 மிதுனம் 3


கும்பம் 11 கடகம் 4
மகரம் 10 சிம்மம் 5
தனுசு 9 விருச்சிகம் 8 துலாம் 7 கன்னி 6

1.15 கேந்திர, திரி கோண, மறைவு வடுகள்


ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வடு



என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.

லக்கினத்தை - முதல் வடு


ீ என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

- 1 , 5 , 9 - ஆகிய வடுகள்
ீ - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)

- 1 , 4 , 7 ,10 - கேந்திர வடுகள்
ீ என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )
- 3, 6 , 8 , 12 - மறைவு வடுகள்
ீ என்று கூறுவர். அதாவது , இந்த வட்டில்
ீ இருக்கும்
கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..

- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

1 ஆம் வடு
ீ - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது
பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.

2 , 11 - வடுகளில்
ீ நின்றால் - பரவா இல்லை , நல்லது.

3 ஆம் வடு
ீ - சுமார்.

6 ,8 ,12 - ஆம் வடுகள்


ீ - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் ,
இந்த வடுகள்
ீ லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.

1.16 ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வடுகளில்


ீ இருந்தால்... பகை வட்டில்

இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான
நிலைமையில் இல்லை என்று பொருள்.

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.


சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.

குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.    

கிரகங்களின் பலன்கள்
1
மேஷ லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
**** குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்
களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்
களுக்கு 12 ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!
சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11 ஆம்
இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு
அதையும் மனதில் கொள்க!
மாரக அதிபதி: (killer) சுக்கிரன்
==================================================
2
ரிஷப லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், சனி


யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்
==================================================
3
மிதுன லக்கினம்

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி
====================================================
4.
கடக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்


யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
5
சிம்ம லக்கினம்

யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்


யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
6
கன்னி லக்கினம்:

யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
=======================================================
7.
துலா லக்கினம்

யோககாரகர்கள்: சனி, புதன்


யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
8
விருச்சிக லக்கினம்

யோககாரகர்கள்: குரு, சந்திரன்


யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும்
சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு (Jupiter if illrelated will become a Maraka)
========================================================
9
தனுசு லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்


யோகமில்லாதவன்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சன ீஷ்வரன்.
========================================================
10
மகர லக்கினம்:

யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்


யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
11
கும்ப லக்கினம்

யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்
======================================================
12
மீ ன லக்கினம்.

யோககாரகர்கள்: செவ்வாய், குரு


யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி: (killer) சனி, புதன்
_______________________________________________________________________________

குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்

நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு


பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீ ல் தொழில்,
கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வக
ீ விஷயங்கள், பூர்வக
ீ புண்ணியம்
போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க


வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது
அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு
தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார்.
பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி
விடும்.

கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு,
2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு
தனுசு மீ னத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார்.
குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர்.
சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக
சேர்க்கை போது உண்டாக்குவார்.

ஜென்மத்தில் குரு
குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க
வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான
நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து
இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற
இடையூறு உண்டாகும்.

குரு 2 ல் இருந்தால்
தன ஸ்தானமான 2 ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல
பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை
உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம்
உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண
கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

குரு 3 ல் இருந்தால்
குரு 3 ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து
செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய
சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன்
பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர
தோஷம் ஏற்படும்.
குரு 4 ல் இருந்தால்
கேந்திர ஸ்தானமான 4 ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு,
அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக
வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும்
நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய
தடை உண்டாகும்.

குரு 5 ல் இருந்தால்
5 ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம்,
சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி
உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன்
இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.

குரு 6 ல் இருந்தால்
குரு 6 ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம்,
சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு
பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை
உண்டாகும்.
குரு 7 ல் இருந்தால்
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7 ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர்
பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான
மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும்
யோகம் உண்டாகும். 7 ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும்
(கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால்
மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.

8 ல் இருந்தால்
குரு பகவான் 8 ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர்
தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக
இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ
இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை
உண்டாகும்.

9 ல் இருந்தால்
குரு பகவான் 9 ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வகத்தால்
ீ அனுகூலம்,
பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வக

பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி
உண்டாகும்.

10 ல் இருந்தால்
குரு பகவான் 10 ம் வட்டில்
ீ இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண
நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில்
பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது
காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல்
இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.

11 ல் இருந்தால்
குரு 11 ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன்
பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம்
உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர்
அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.

குரு 12 ல் இருந்தால்
குரு 12 ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வண்
ீ செலவுகள், சுப
காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8 க்கு அதிபதியாக
இருந்து 12 ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12 ல் குரு சுபர் பார்வை
உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு,
சிறப்பான கண் பார்வை உண்டாகும்.
_________________________________________________________________________

ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும்


பலன்கள்
ஜென்ம லக்கினத்தில்
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு,
வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல
குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால்
நல்லது அல்ல.

2 ல் இருந்தால்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2 ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம்
அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு
உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும்.
பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண்
தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

3 ல் சுக்கிரன்
சுக்கிரன் 3 ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம்,
வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால்
இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை,
இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4 ல்
சுக்கிரன் 4 ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து,
சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர்
பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.
பெண்ணுக்கு 4 ம் வடு
ீ கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால்
கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

5 ம் வடு

சுக்கிரன் 5 ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வக
ீ சொத்து, கல்வியில் மேன்மை,
மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன்
பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.
6 ல் இருந்தால்
சுக்கிரன் 6 ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள்,
வண்
ீ செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு
உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில்
பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள்
உண்டாகும்.

7 ல் இருந்தால்
சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில்
மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை
கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால்
கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில்
பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.

8 ல் இருந்தால்
சுக்கிரன் 8 ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வடு,
ீ வாகனம்
அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ
சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை,
கண்களில் நோய் உண்டாகும்.

9 ல் இருந்தால்
சுக்கிரன் 9 ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு
நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வகத்தால்
ீ அனுகூலம்,
மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு,
பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள்
சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

10 ல் இருந்தால்
சுக்கிரன் 10 ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள்
மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு
உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும்.
சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள்
சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

11 ல் இருந்தால்
சுக்கிரன் 11 ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன
சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம்
அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள்
சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும்
நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

12 ல் இருந்தால்
சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12 ல் இருந்தால் சுக வாழ்வு,
சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய
செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால்
தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள்
கண்களில் பாதிப்பு, வண்
ீ விரயம், ஏழ்மை ஏற்படும்.

___________________________________________________________________________

1 ல் அதாவது லக்கினத்தில் சனி

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.


ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்

வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்


குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீ ழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
2 ல்
Saturn in the Second House
Saturn makes one not above want and prone to lying.
Will live in foreign lands.
Will be a lover of justice.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
3 ல்
++++Saturn in the Third House
Saturn in the 3rd makes one very intelligent & liberal minded.
Will have strength of character and will be adventurous.
Will have subordinates and all the comforts of life.
துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
--------------------------------------------------------------------------------------------------
4 ல்
Saturn in the Fourth House
Affliction to the heart.
Will lack happiness and mental peace.
Will be crooked and will be a violator of social norms.
Will live in foreign lands.
மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
---------------------------------------------------------------------------------------------------
5 ல்
Saturn in the Fifth House
Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth.
Will lack intelligence and will be fickle minded.
Will have high longevity.
குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------------
6 ல்
Saturn in the Sixth House
Saturn in the sixth is the destroyer of enemies.
Will love all the pleasures of the mundane.
Will be a voracious eater.
Wealth will grace the native in no uncertain measure.
பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
----------------------------------------------------------------------

7 ல்
ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?

அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.


சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க
முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்
-----------------------------------------------------------------------
8 ல்
இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்

ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை


குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,


லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-------------------------------------------------------------------------
9 ல்
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல
பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்


கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.
----------------------------------------------------------------------
10 ல்
இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வரீ புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.
ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்

நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
11 ல்
இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.
This is the best postion for Saturn.
Saturn well posited in the eleventh makes one highly determined, healthy,
wealthy and wise.
Will have royal favour.
Will be a good sculptor.
Will have a lot of subordinates.
சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
---------------------------------------------------------------------------------
12 ல்
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
"போனால் போகட்டும் போடா" என்று பாடுவான்

ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும்


மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்
Saturn makes one devoid of happiness & wealth.
Will be tormented by many an illness
ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,


லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
_____________________________________________________________________________________
__

1. லக்கினத்தில் ராகு ஜாதகன்

சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது


தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது
வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து
தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும்
ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை
களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது.
சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வடும்,ஆயுள்காரகனும்

வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க
வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து
அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு
இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

2. ராகு 2 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க


நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த
சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில்
படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய
கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே
இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு
நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

3. ராகு 3 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து


விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச்
சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா
பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள
மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத்
செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை,
அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட
ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து
சேரும்!3 ஆம் வடு,
ீ 6 ஆம் வடு,
ீ 10 ஆம் வடு,
ீ 11 ஆம் வடு
ீ ஆகிய இடங்கள் தீய
கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.

4. ராகு 4 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது


நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து,
சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல்
செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும்
நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு
பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம்
ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு
தன் தாயின் மீ தே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு
இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும்.
வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.

5. ராகு 5 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு


வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன்.
உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள்
இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது
தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன்
குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.

6. ராகு 6 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும்


ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது
வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம
சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything
under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன்
சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல
ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான்.
அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர்
ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக
இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான்.
நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.

7. ராகு 7 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச்


செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும்
உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது.
சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக
இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி
இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க
நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை
மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

8. ராகு 8 ஆம் வட்டில்


ீ இருந்தால்: 

ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க்


குற்றச்சாட்டுக்களுக்கும் வண்
ீ பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த
அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!)
சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது
என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும்
இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த
அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில்
சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில்
தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப்
போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles
Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
9. ராகு 9 ஆம் வட்டில்
ீ இருந்தால்:

ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும்


ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம்
உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம்
அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும்
தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின்
தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக
இருக்கும்!

10. ராகு 10 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான்.


இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச்
செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வரதீ
ீ ரச் செயல்களைச் செய்பவர்களாக
இருப்பார்கள் மொத்தத்தில் வரம்,
ீ தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக்
கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக
இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில்
ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!

11. ராகு 11 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம்


படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை
உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும்
கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில்,
அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில்
எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக
இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது
அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக
ஜாதகன் இருப்பான்

12. ராகு 12 ஆம் வட்டில்


ீ இருந்தால்:

ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத


வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள்
உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும்.
வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை
அல்லது தொழில்களில் இருந்து வழ்ச்சி
ீ அடைய நேரிடும் இந்த இடத்து ராகு,
மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால்
வழ்ச்சி
ீ நிச்சயமாக உண்டு.
 ______________________________________________________________________

 கேது இருப்பதற்கான பலன்கள்

1 ல்
லக்கினத்தில் கேது

ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.


பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்

மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு


எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம்


செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த
லக்கினங்களாகும்
-----------------------------------------------------------------------------------------
2 ல்
இரண்டில் கேது!

ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk)


படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.

குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள்


மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
3 ல்
மூன்றில் கேது.

ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த


குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.
-----------------------------------------------------------------------------------
4 ல்
நான்கில் கேது

இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு


உகந்தது அல்ல!

நான்காம் வடு
ீ இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வட்டில்
ீ சுபக்கிரகங்களின் பார்வை அல்லது
சேர்க்கை இருந்தால் வராது.

ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று


எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.

சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.


---------------------------------------------------------------------------------------
5
ஐந்தில் கேது

ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக


ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.

இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்


பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக
மாறிவிடும்.
----------------------------------------------------------------------------------------
6
ஆறில் கேது

ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய


சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை
உடையவனாக
இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக
இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.

வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

----------------------------------------------------------------------------------------
7
ஏழில் கேது

ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை


சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்

இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி


அல்லது
கணவன் அமையக்கூடும்
------------------------------------------------------------------------------------
8
எட்டில் கேது

ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்

சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே


உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்

சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீ து மையல் இருக்கும். அடுத்தவன்


சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.

சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.


----------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் கேது

ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு,


பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன்.

சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி


விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.

சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்


--------------------------------------------------------------------------------
10
பத்தில் கேது

மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு


இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன்
உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services,
time and/or effort to support a socially beneficial cause, with a defined objective
and with no financial or material reward to the donor. In a more general sense,
activity intended to promote good or improve human quality of life.

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத்


தத்துவங்கள்
ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.

திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக


இருப்பான்.
கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.
This is the best place for professional enhancement.
---------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் கேது
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்

பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்


உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால்
பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
---------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் கேது

இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வடு



பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத்
தெரியவில்லை
பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.

ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு


பேச்சு
என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள்
பாதிப்பிற்குள்ளாகும்

பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.

சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்

சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்


---------------------------------------------------------------------------------------

லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர்


சுறுசுறுப்பானவர்.

செந்நிற மேனி உடையவர்.


தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும்


நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type


அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல


ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்;


வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்


ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

ஏழில் சூரியன் இருந்தால்


ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.


எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்


ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்


ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.


பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்


ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!

ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்


சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------

2
இரண்டாம் வட்டில்
ீ செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)

செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!


இரண்டாம் வட்டில்
ீ தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------

3
******மூன்றாம் வட்டில்
ீ செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.

தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்


சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------
4
நான்காம் வட்டில்
ீ செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வடு
ீ வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.

இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த


அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்


பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-))))


--------------------------------------------------------------------------------------

5
ஐந்தாம் வட்டில்
ீ செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்


எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6
********ஆறாம் வட்டில் ீ செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.
மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்


=======================================================
7
ஏழாம் வட்டில்
ீ செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.

சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,


அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.


--------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வட்டில் ீ செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.

சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்


நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------

9
ஒன்பதாம் வட்டில்
ீ செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்
ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10
*******பத்தாம் வட்டில் ீ செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வரன்.
ீ சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்


ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11
********பதினொன்றாம் வட்டில் ீ செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)

நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே


தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.

ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்


=======================================================
12
பன்னிரெண்டாம் வட்டில்ீ செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்

சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-)))

பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்


துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்
சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================

சந்திரன் ஒவ்வொரு வட்டிலும்


ீ இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

சந்திரன் முதல் வட்டில்


ீ இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால்
சந்திரனுக்கு அது சொந்த வடாகவோ
ீ அல்லது உச்ச வடாகவோ
ீ இருந்தால்
நல்லது நட்பு வடாக
ீ இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு
நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி
பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.

2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல


மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக
இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க
செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது
செய்வார்.

3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும்


தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை
அமையும். மூன்றாவது வடாக
ீ இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய
வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும்
எதிர்மறையாக இருக்கும்.

4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வடு


ீ வட்டை
ீ குறிப்பதால்
ஆறு குளம் கடலோரத்தில் வடு
ீ அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார்.
தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.

5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல
நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை
தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம்
அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால்
அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு


பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று
இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.

9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம்


இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீ தம்
நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு
இருக்கும்.

10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீ து பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார்.
நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல
காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும்
தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார்.


தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு
உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும்.
தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல
வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும்.
சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த


வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல
தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.
வெளிநாட்டு பயணங்கள் மீ து ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும்
புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில்


மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும்.
குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.

______________________________________________________________

குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:

In the first house.: Magnetic personality, good grammarian, majestic


appearance, highly educated, many children, learned, dexterous,
long-lived, respected by rulers, philologist political success, sagacious,
stout body, able, influential leader.

Second house.: Wealthy, intelligent, dignified, attractive, happy, fluent


speaker, aristocratic, tasteful, winning manners, accumulated fortune,
witty, good wife and family, eloquent, humorous, and dexterous.

Third house.: Famous, many brothers, ancestors, devoted to the family,


miserly, obliging, polite, unscrupulous, good agriculturist, thrifty, good
success, energetic, bold, taste for fine arts and literature, lived by
relatives.

Fourth house.: Good conveyances, educated, happy, intelligent, wealthy,


founder of charitable institutions, comfortable, good inheritance,
good mother, well read, contented life.

Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight,
high position, intelligent, skilful in trade, obedient children, pure-hearted,
a leader.

Sixth house.: Obscure, unlucky, troubled, many cousins and grandsons,


dyspeptic, much jocularity, witty, unsuccessful, intelligent, foeless.

Seventh house.: Educated, proud, good wife and gains through her,
diplomatic ability, speculative mind, very sensitive, success in agriculture,
virtuous wife, pilgrimage to distant places.

Eighth house.: Unhappy, earnings by undignified means, obscure, long


life, mean, degraded, thrown with widows, colic pains, pretending
to be charitable, dirty habits.
Ninth house.: Charitable, many children, devoted, religious, merciful,
pure, ceremonial-minded, humanitarian principles, principled, conservative,
generous, long-lived father, benevolent, God-fearing, highly cultured,
famous, high position.

Tenth house.: Virtuous, learned, clever in acquisition of wealth,


conveyances, children, determined, highly principled, accumulated
wealth, founder of institutions, good agriculturist, non-violent,
ambitious, scrupulous.

Eleventh house.: Lover of music, very wealthy, states manly ability,


good deeds, accumulated funds, God-fearing, charitable, somewhat
dependent, influential, many friends, philanthropic.

Twelfth house.: Sadistic, poor, few children, unsteady character,


unlucky, life lascivious later life inclined to asceticism, artistic taste,
pious in after-life.

மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின்


சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி
பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை.

ஆகவே அலசும் போதும் அலசிப் பிழியும் போதும் இன்னும் பத்து


வாளி தண்ண ீர் எடுத்துக் கொள்வது நல்லது!:-))))

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

முதல் பாவம்:
உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம்,
செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும்
கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் பாவம்:
குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு
உரியது

மூன்றாம் பாவம்:

சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீ த ஞானம், அரசின்


ஆதரவு, துணிவு, வரீ தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி
முதலியவற்றிற்கு முக்கியமானது.

நான்காம் பாவம்:

கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள்


ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய
முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

ஐந்தாம் பாவம்:

இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி –


குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம்
முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு
மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும்
ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி
நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:

தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய


முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன்,
பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

ஏழாவது பாவம்:

காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர


சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு.
விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம்
என்று பொதுவாகச் செல்வார்கள்.

எட்டாவது பாவம்:

ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல்


கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-
உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க
வேண்டும்.

ஒன்பதாம் பாவம்:

பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர


தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம
சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

பத்தாம் பாவம்:
இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம்,
அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி
முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய
பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

பதினொன்றாம் பாவம்:

லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை,


கல்வி, நகைகள், உடை, வடு,
ீ மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம்
பாவம் எடுத்துக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் பாவம்:

இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும்


சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப்
பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள்
நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி
பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில்
தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே
தீர்மானிக்க வேண்டும்.

யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்


2020-03-12@ 10:27:25

கிரக சேர்க்கைகள், பார்வைகள், பரிவர்த்தனைகள் என்பது ஜோதிட


சாஸ்திரத்தின் முக்கிய விதிகளாகும். இந்த சேர்க்கைகள் ஒவ்வொரு ஜாதக
கட்டத்திற்கும் கட்டாயமாக வேறுபடும். ஒருவருக்கு யோகத்தை செய்யும்
கிரகம் மற்றொருவருக்கு அவயோகத்தை, தடைகளை, தாமதத்தை தருகிறது.
இருந்தாலும் கிரக சேர்க்கை இருந்தால் தான் யோகங்களோ, தோஷங்களோ
உண்டாகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும்
இன்றியமையாத ஒன்றாகும். இதை ஜாதக கட்டத்தில் உள்ள கிரக
அமைப்புக்களே தீர்மானிக்கின்றன. தற்காலத்தில் ஆண், பெண் சரிசமம்,
ஆணாதிக்கம், பெண்ணாலா திக்கம் என பல விஷயங்கள் பேசப்பட்டாலும்.
எந்தக் காலத்திலும், எல்லா விஷயங்களுமே கிரகங்களின் ஆளுமையில்
தான் இருக்கிறது. இந்தக் காலத்தில் குடும்பம், திருமணம், இல்வாழ்க்கை
என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.

பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் ஒருவகை. இரு


குடும்பத்தினர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணங்கள் ஒருவகை. யார்
சம்மதமும் இல்லாமல் காதலர்களே செய்து கொள்ளும் திருமணங்கள் ஒரு
வகை. ஜாதி, மத, காதல் கலப்புத் திருமணங்கள் செய்து கொள்வது. அதனால்
உண்டாகும் பிரச்னைகள், இடையூறுகள், வழக்குகள், நிம்மதி இழப்பது,
விவாகரத்துக்கள், பிரிந்து வாழ்வது என குடும்ப வாழ்க்கை பல வகைகளில்
பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் நான் என்ற அகங்காரம், சகிப்புத்தன்மை
இல்லாதது, தவறானவர்களின் ஆலோசனைகளை கேட்பது, ஆடம்பரம்,
அந்தஸ்துக்கு மீ றிய ஆசைகள், செயல்பாடுகள் என்றாலும், கடைசியில்
ஜாதக கட்டத்தை ஆராய்ந்து பார்க்கும் போது கிரகங்களின் யோக,
தோஷங்கள் தசாபுக்திகள், கோச்சார கிரக சஞ்சாரங்கள் தான் முக்கிய பங்கு
வகிக்கிறது. இல்வாழ்க்கை பிரச்னைகளை உண்டாக்கக் கூடிய கிரக
சேர்க்கைகள் எவை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற ஜாதக
அமைப்புடைய ஜாதகங்களை ஒன்று சேர்ப்பதே சுப பொருத்தமாக அமையும்.

குரு சுக்கிரன் ராகு கேது

இல்லற வாழ்க்கையில் குருவின் ஆதிக்கம் மிக முக்கியமானதாகும். குரு


முழுமையான சுபக்கிரகமாக இருந்தாலும் தோஷங்களை தருவதில் முதல்
இடத்தில் இருப்பவர். தன, புத்தர காரகம் உள்ளவர். பெண்கள் ஜாதகத்தில்
பர்த்தா காரகர் என்ற ஆதிக்கம் உடையவர். குரு லக்னம், இரண்டு, ஐந்து,
ஏழில் தனித்து இருந்தால் ஏதாவது ஒரு வகையில் தோஷத்தை, பாதிப்பை
ஏற்படுத்துவார். கணவன் - மனைவிக்கிடையே பிரிவினை, நிச்சயமற்ற
தன்மை, வழக்குகள் இருக்கும் அல்லது நோய் பாதிப்பு காட்டும். குழந்தைகள்
பிறப்பதில் தாமதம் இருக்கும். அல்லது ஊனமுள்ள குழந்தைகள் பிறக்கும்.
ஏழாம் இடத்தில் தனித்து குரு இருந்தால் இல்வாழ்க்கையில் நிம்மதி
இருக்காது. கணவன், மனைவி இடையே பற்று, பாசம், நேசம் குறைவாக
இருக்கும். ஆண்களுக்கு பிறபெண்களின் தொடர்புகள் உண்டாகும். சந்தர்ப்ப
சூழ்நிலை காரணமாக பெண்களும் தடம் மாறுவதற்கு அதிக வாய்ப்புக்கள்
உள்ளது. இரண்டில் குருவுடன் கேது சேர்ந்து இருந்தால் பணம், பொன்,
பொருள், செல்வாக்கு இருக்கும்.

அதே நேரத்தில் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. சுக்கிரன் களத்திரகாரகன்


திருமணம், தாம்பத்யம், உடல்உறவு போன்றவற்றிற்கு அதிகாரம்
செலுத்துபவர். ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக அமையவில்லை என்றால்
வாழ்க்கையே போராட்டமாக மாறி விடும். காதல் திருமணம், கள்ளத்
தொடர்புகள், இரண்டாம் தாரம், விவாகரத்து, வழக்குகள், பிரிந்திருப்பது என
எல்லாம் சுக்கிரனின் லீலைகளாகும். இளம் வயதிலும், மத்திம வயதிலும்
பாலுணர்ச்சிகளை தூண்டி வாழ்க்கை பாதையை புரட்டிப் போடுவது
சுக்கிரனின் வேலையாகும். ஆகையால் ஜாதகத்தில் திருமண பொருத்தம்
பார்க்கும் போது சுக்கிரனின் நிலையை பார்ப்பது மிகவும் அவசியம். சுக்கிரன்,
ராகு கேதுவுடன் சம்மந்தம் ஏற்பட்டால் ஏதாவது ஒருவகையில் வாழ்க்கை
பாதிக்கப்படும்.

மிக முக்கியமான காதல் கலப்பு திருமண தோஷ அமைப்புக்கள் :

1). களத்திரகாரகன் சுக்கிரனுடன், ராகு, கேது சேர்ந்து இருப்பது.

2). சுக்கிரன், சனி, சந்திரன் தொடர்பு கொண்டு இருப்பது. அதாவது சந்திரன் 


சனி சேர்ந்து இருந்து சுக்கிரன் பார்ப்பது. அல்லது மூவரும் கூட்டு சேர்ந்து
ஒரே ராசியில் இருப்பது. சுக்கிரன், சனி சேர்ந்து சந்திரன் பார்ப்பது.

3). சந்திரனுடன், புதன் சேர்ந்து இருந்தால் தவறான பழக்க வழக்கங்கள், கூடா


நட்பு, தீய குணங்கள் எளிதில் வந்து பற்றும்.

4). குரு லக்கினத்திற்கு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்து இருப்பது.

5). ஏழாம் அதிபதி எந்தக் கிரகமாக இருந்தாலும் நீச்சம் அடையாமல் இருப்பது


மிக அவசியம், நீச்சமடைந்த கிரகத்துடன் சேராமல் இருப்பதும்
முக்கியமாகும்.

6). லக்கினத்தில் ராகு அல்லது கேது. இரண்டு, ஏழு, எட்டில் ராகு அல்லது கேது
இருப்பது சர்ப்ப தோஷம்.

7). பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேது சேர்ந்து இருப்பது தார தோஷம். ஆண்
ஜாதகத்தில் சுக்கிரன், கேது சேர்ந்து இருப்பது தார தோஷம்.

8). குடும்ப ஸ்தானமான இரண்டாம் வட்டில்


ீ நீச்ச கிரகம் இருப்பது,
இரண்டாம். அதிபதி நீசமாக இருப்பது. ஆறாம் அதிபதி இரண்டாம் வட்டில்

இருப்பது.

9). ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, புதன் சேர்ந்து இருந்தாலும். சனி,
சந்திரன் சேர்ந்து இருந்தாலும். சந்தேகம், கூடா நட்பு வர வாய்ப்புள்ளது
விதவையை திருமணம் செய்யும் அமைப்பாகும். இரண்டாம் திருமணம்,
தொடர்புகள் உண்டாகும்.

10). ஆண் ஜாதகத்தில் மூன்றாம் வட்டில்


ீ சனி, புதன், நீசக்கிரகம் இருந்தால்,
இல்லறம் சரிவர இருக்காது. நரம்புத்தளர்ச்சி, விந்து குறைபாடு,
ஆண்மைக்குறைவு இருக்கும். பெண் ஜாதகத்தில் ஒன்பதாம் வட்டில்
ீ சனி,
புதன், நீசக் கிரகங்கள் இருந்தால் கணவன்,  மனைவிக்கு தாம்பத்யம் சரிவார
இருக்காது. மனைவியை திருப்திபடுத்த முடியாத நிலை உண்டாகும்.
அதனால் மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள், ஏமாற்றம் இருக்கும்.

11). பெண் ஜாதகத்தில் சுக்கிரன், குரு இருவரும் சேர்ந்து ஆறாம் வட்டில்



இருந்தால் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படும். விந்தணு குறைபாடு
இருக்கும். ஆரோக்கியம் குறைவு, நோய்த் தாக்கம் அடிக்கடி ஏற்படும்.

12). பெண் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் நீச கிரகம் இருந்தால் கருச்சிதைவு


உண்டாகும். கர்ப்பப்பை கோளாறுகள் வரலாம்.

13). எந்த லக்கினமாக இருந்தாலும் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்து இருப்பது


அதீதமான காம சுகத்தை உண்டாக்கும். சுக்கிரன் குளிர்ச்சி, செவ்வாய்
உஷ்ணம், வரியம்
ீ என்பதால் போக இச்சையில் மூழ்கி இருப்பார்கள்.

14). பெண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரன், சுக்கிரன்


சேர்ந்து இருப்பதால் முதுமை தோற்றம் கொண்ட கணவர் அமைவார்
அல்லது இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படவேண்டி இருக்கும்.

15). ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால் 1,5,9 என்ற மூன்று ஸ்தானங்கள்


மிகவும் முக்கியமாகும். ஒன்று சொல்லக் கூடிய லக்னாதிபதி பலமாக
இருக்கும் ஜாதகங்கள் நல்ல யோகத்தை தருகிறது. பஞ்சம ஸ்தானம், பாக்கிய
ஸ்தானம் இரண்டும் பலம் பெறும் போது நல்ல குடும்ப வாழ்க்கை
அமைகிறது. குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் இரண்டாம் இடம் நன்றாக
அமைந்தால் மற்ற தோஷங்கள் இருந்தாலும். எந்த பாதிப்பும் ஏற்படாது.
பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று இவர்களுக்கே பொருந்தும். சந்தர்ப்ப
சூழ்நிலைகளுக்குக் கேற்ப சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் கலை
இவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து இருக்கும்.

16). லக்னத்திற்கு 6 ஆம் இடம் புத்திர ஸ்தானம். பூர்வ புண்ணியம் மற்றும் பல


யோக அம்சங்கள் பொருந்திய இடம். இந்த ஸ்தானத்தில் 6,8,12 க்குரியவர்கள்
நீச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சனி 5 ல் இருப்பது நல்ல
அமைப்பு கிடையாது. குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற  இடம் விருத்தி, குரு
பார்த்த இடம் விருத்தி, சனி பார்த்த இடம் பாழ் என்பது சாஸ்திர விதியாகும்.
சனி, 5 ஆம் வட்டில்
ீ இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வட்டையும்,
ீ தன,
குடும்ப, வாக்கு ஸ்தானமான இரண்டாம் வட்டையும்
ீ பார்ப்பதால் திருமண
வாழ்க்கையில் பல சிக்கல்கள் வர காரணமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளாத நிலை ஏற்படுகிறது. நெறி தவறிய வாழ்க்கை, விவாகரத்து,
பிரிந்து வாழ்தல். தீயோர் சேர்க்கை, அற்ப சிநேகிதம், கோர்ட், கேஸ்,
பஞ்சாயத்து. ஜீவனாம்சம். தன் வாயாலே கெடுவது என பல்வேறு
விரும்பத்தகாத நிகழ்வுகள் வாழ்க்கையில் ஏற்படும்.

புத்திர தோஷம், புத்திர சோகம், பிள்ளைகளால் பிரச்னை எனப் பலன்கள்


இருக்கும். மேலும் 2, 7 ஆகிய வடுகள்
ீ பாதிக்கப்பட்டு இருந்தால் நிலைமை
மேலும் சிக்கல் ஆகிவிடுகிறது. இந்த சனி பார்வை ஒருவருக்கு சஞ்சல சபல
புத்தியை கொடுத்து வாழ்க்கையை கெடுத்து விடுகிறது. காதல், கலப்பு
திருமணங்கள் பெரும்பாலும் இருப்பதால் தான் நடைபெறுகிறது. பொதுவாக
6,8,12 ஆம் இடங்கள் பிரச்னைகளை, நோய்களை, பற்றித் தெரிவிக்கும்
இடங்களாக இருக்கின்றது. பார்வைகளின் அடிப்படையில் எட்டாம்
இடத்திற்கும், இரண்டாம் இடத்திற்கும் சம சப்தம பார்வை உள்ளது. அதாவது
எட்டாம் வட்டில்
ீ இருக்கும் கிரகம் இரண்டாம் வட்டையும்,
ீ இரண்டாம்
வட்டில்
ீ உள்ள கிரகம் எட்டாம் வட்டையும்
ீ பார்க்கும். இதனால் இந்த வடுகள்

எல்லாம் பார்வைகள் மூலம். ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகின்றது.

இந்த அமைப்பு ராசி மற்றும் நவாம்சம். இரண்டு கட்டங்களிலும் பார்க்கப்பட


வேண்டும். ராசிக்கட்டத்தில் பாதிப்பு இல்லாமல் நவாம்ச கட்டத்தில் பாதிப்பு
இருந்தால் அந்த அமைப்பு தான் வேலை செய்யும். மாந்தி என்ற கிரகத்தை
பெரும்பாலும் யாரும் அதிகமாக கண்டு கொள்வதில்லை, கணக்கில்
எடுப்பதில்லை. ஆனால் தென் தமிழகம் தொடங்கி கேரளா மற்றும்
வடநாட்டில் மாந்தியின் நிலையை கண்டிப்பாக கவனிப்பார்கள். மேலும்
அனுபவ ரீதியாக மாந்தி தரும் பலன்கள் மிகச் சரியாக இருக்கின்றது.
கோயில்களில் பார்க்கப்படும் தேவப்பிரசன்னம், அஷ்ட மங்கள பிரசன்னம்,
மந்திர, தந்திர பிரச்ன்னங்களில் மாந்தியின் பங்கு மிக முக்கியமானது.
பழங்காலத்தில் மாய மந்திரத்திற்கு மாந்தி என்று சொல்வார்கள். மாந்தியின்
வரலாறு பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகிறது.

சனியின் பிரதிபிம்பம், அம்சம் தான் மாந்தி என்று சொல்கிறார்கள் சிலர்


சனியின் புத்திரன் மாந்தி என்றும் எமனின் புத்திரன் மாந்தி என்றும் பலர் பல
விதமாக சொல்கிறார்கள். எது எப்படியோ மாந்தி என்ற கிரகம் சகல
வல்லமை படைத்தது என்பது கேரள தாந்திரீக முறையில்
சொல்லப்பட்டுள்ளது.
மாந்திக்கு தசா, பரல், சொந்தவடு,
ீ உச்ச வடு,
ீ நீச்ச வடு,
ீ சமவடு,
ீ பகை வடு.
ீ என
எதுவும் கிடையாது. ஆனால் மாந்திக்கு சனி போல  மூன்று இடங்களை
பார்க்கும் வல்லமை உள்ளது. தான் இருக்கும் இடத்தில் இருந்து
முன்வட்டையும்,
ீ பின் வட்டையும்,
ீ ஏழாம் வட்டையும்
ீ பார்க்கும். அதாவது
மாந்தி லக்னத்தில் இருந்தால். இரண்டாம் வட்டையும்,
ீ பன்னிரண்டாம்
வட்டையும்,
ீ ஏழாம் வட்டையும்
ீ பார்க்கும் சக்தியுடையது. மாந்தி 2,8,12 ஆகிய
வடுகளில்
ீ இருந்தாலும், பார்வை ஏற்பட்டாலும் கண் சம்மந்தமான ரோகம்,
பிரச்னைகள் உண்டாகும். இரண்டாம் அதிபதி நீச்சமாக  இருந்தாலும், நீச்ச
கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும் 6,8,12 க்குடையவர்க்களுடன் சம்பந்தம்
பெற்றதும்.
கண் பார்வை கோளாறுகள் வரும். குறிப்பாக மாலைக் கண் நோய் வரும்.
இரண்டாம் வட்டில்
ீ நீச்ச கிரகம், ராகு, கேது போன்றவை இருந்தால் அந்த கிரக
தசா புக்தியில் கண் பிரச்னைகள் வரும். சனியுடன் கேது அல்லது செவ்வாய்
சேர்ந்து 2, 6, 8, 12-ஆகிய ஸ்தானங்களில் இருந்தாலும்
பார்த்தாலும் பார்வைக் கோளாறு வரும். நரம்பு கோளாறு காரணமாக பாதிப்பு
வரும். விபத்தில் கண்களில் அடிபடுவதற்கு இந்த அமைப்பு தான் காரணம்.
சூரியன் 6 ஆம் வட்டிலும்,
ீ சந்திரன் 12-ஆம் வட்டிலும்
ீ இருந்தால் பார்வை
மங்கும். சூரியன், சந்திரன் நீசமானால் கண்ணில் பிரச்னை நவாம்சத்தில் நீசம்
ஆனாலும் பார்வை பாதிப்பு, அறுவை சிகிச்சை உண்டாகும். சுக்கிரன் நீசம்
அடைந்தாலும், நீச்ச கிரகத்துடன் சேர்ந்தாலும். இனம் புரியாத கண் நோய்கள்
வரும். நிறக்குருட்டுத் தன்மை COLOUR BLINDNESS உண்டாகும்.

சந்திரன் 6, 8, 12-ஆம் வடுகளில்


ீ இருந்து சனி, செவ்வாய் சம்மந்தம்
ஏற்பட்டால் 30-வயதிற்கு மேல் கண் பார்வைக் குறைபாடுகள், அறுவை
சிகிச்சை உண்டாகும். நீச்ச சூரியன், நீசச் சந்திரனுடன் சுக்கிரன் தொடர்பு
ஏற்பட்டால். சிறு வயது முதலே கண்களில் பிரச்னைகள் இருக்கும்.
கண்களில் நீர் வடிதல், அலர்ஜி ஒற்றைத் தலைவலி போன்றவை உண்டாகும்.
இரண்டு, பன்னிரண்டாம் இடங்களுக்கு நீச்ச புதனின் பார்வை இருந்தால்
நரம்பு கோளாறு காரணமாக பார்வை கோளாறுகள் வரும். சூரியன் கடகத்தில்
இருந்தால் வலது கண்ணில் பிரச்னை வரும். சுக்கிரன் 5, 6, 7, 8, 12-ஆகிய
அதிபர்களுடன் சேர்க்கை பெற்று இருந்தால் அந்தந்த கிரக தசா புக்திகளில்
கண் பிரச்னைகள் வரும். சூரியன், சந்திரன் சேர்ந்து இருப்பது அமாவாசை
யோகமாகும். இந்த இரண்டு கிரகங்களையும் 6,8,12 க்குடையவர்கள், அல்லது
நீசம் பெற்ற கிரகங்கள் பார்த்தால்.

மாறு கண், விபத்தில் பார்வை இழத்தல், அடிக்கடி கண்ணாடியை மாற்ற


வேண்டிய சூழ்நிலைகள் வரும். சூரியன், சந்திரனுடன் ராகு அல்லது கேது
சேர்ந்தால் கண் பார்வை படிப்படியாக மங்கும். ஆறாம் வட்டில்
ீ சனி, கேது,
செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் இடது கண்ணில் பிரச்னை. எட்டாம்
வட்டில்
ீ சனி, கேது, செவ்வாய் இருந்தால் வலது கண்ணில் பிரச்னை. உச்சம்
பெற்ற சூரியனுடன் இரண்டு, பன்னிரண்டுக் குரியவர்கள் சம்மந்தம் பெற்றால்
கண்களில் எரிச்சல், அலர்ஜி, உண்டாகும். இரண்டாம் அதிபதி தசையில்,
ஏழாம் அதிபதி, எட்டாம் அதிபதி புக்தியில் கண்களில் பிரச்னை வரும்.
விபத்தில் பார்வை போகும் வாய்ப்புள்ளது. சனி, செவ்வாய் புக்திகளில்
கண்களில் அடிபடுவதற்கு வாய்ப்புள்ளது. சுக்கிரன் நீச்சமாகி தசா நடந்தால்
பார்வை மங்கும். மாலைக் கண்நோய் உண்டாகும்.

இரண்டாம் வட்டில்
ீ இருக்கும் புதனை சனி பார்த்தால் நரம்பு கோளாறு
காரணமாக பார்வை குறையத் தொடங்கும். செவ்வாய் பார்த்தால் கண்ணில்
வக்கம்,
ீ பூவிழுவது, அறுவை சிகிச்சை உண்டாகும். பொதுவாக இரண்டாம்
இடம், பன்னிரண்டாம் இடம். சூரியன், சந்திரன், சுக்கிரன், இரண்டாம் அதிபதி
இவர்களால் கண் பார்வை பிரச்னைகள் உண்டாகிறது. இந்த
அமைப்புக்களுடன் தசைகள் சரியில்லாத போது. கண்கள் பாதிக்கப்படும்.
கோச்சாரத்தில் 4 ல் சனி, 8 ல், 7 ல் சனி, 7½-சனி போன்ற காலங்களிலும். 2, 7, 8
ல் ராகு, கேது சஞ்சாரம் செய்யும் பெயர்ச்சிகளிலும் கண் நோய் அறுவை
சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள் உண்டாகும்.

ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?


2018-08-16@ 16:08:28

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக


அமைப்புக்கள். மூலம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலத்
திரிகோணம். பஞ்ச மகாபுருஷ யோகம், பலவகையான ராஜ யோகங்கள்
உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப
கத்திரி யோகம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க
ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது
அனுபவபூர்வமாகவும் மிகச்சரியாக பலன் தருகிறது. இதை கிராமப்
புறங்களில் உள்ள பெரியவர்கள் பேசும்போது அவருக்கு நீச்ச தசை அதுதான்
பல வகைகளில் பெரிய யோகத்தை செய்து விட்டது என்று சொல்வார்கள்.
அந்தளவிற்கு இந்த யோகம் மிகப் பிரசித்தமான ஒன்று. நீசம் என்பது மிகவும்
தாழ்ந்த நிலையை குறிக்கும். கிரகத்தின் வலிமை குன்றிய அமைப்பு, எந்த
கிரகம் நீச்சமோ அந்தக் கிரகத்தின் தன்மைகள், காரகத்துவங்கள் எல்லாம்
நீர்த்துப் போய்விடும்.

அந்தக் காலத்தில் ஒருவரை மிகவும் கடும் சொற்களால் ஏசும்போது அவன்


நீச்சன், நல்ல எண்ணம், நல்ல புத்தி இல்லாதவன். நீசத் தொழில், நீச்ச
சேர்க்கை உடையவன் என்று சொல்வார்கள். அது இந்த கிரக
நீச்சத்தன்மையை வைத்து சொல்லப்பட்டது. எல்லா கிரகங்களும் ஒவ்வொரு
வட்டில்
ீ நீச்சம் அடையும். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச தன்மையிலேயே
இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20
சதவிகிதம்கூட கிடைக்காது. அதேநேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச்ச பங்கம்
ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும். சூரியன்
துலா ராசியில் நீசம் அடையும். அதாவது ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு
சூரியன் நீசமாக இருப்பார். சந்திரன் விருச்சிக ராசியில் நீசம். குரு மகர
ராசியில் நீசம். புதன் மீ ன ராசியில் நீசம். சுக்கிரன் கன்னி ராசியில் நீசம். சனி
மேஷ ராசியில் நீசம். செவ்வாய் கடக ராசியில் நீசம்.
நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?

நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.


நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க  
ராஜயோகம்.

நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.


நீச கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச பங்க ராஜயோகம்.
சாஸ்திரம் காட்டும் வழி  ஜோதிட பரிபாடல் விளக்கம்

ஆதிரை பரணி கார்த்திகை


ஆயில்யம் மூப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ்சோதி
சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீ ளார்
பாய் தனிற் படுத்தார் தேறார்
பாம்பின் வாய்த் தேரை தானே!
விளக்கம்:
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி,
விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி. இந்த 12 நட்சத்திரங்களில் சில
விஷயங்களை செய்யக்கூடாது என ஜோதிடப் பாடல் நமக்கு
அறிவுறுத்துகிறது. குறிப்பாக இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் பணம் கடன்
கொடுத்தல், கொடுக்கல், வாங்கல் செய்வது கூடாது. கடன் கொடுத்தால்
வசூல் செய்வதில் சிரமங்கள், சிக்கல்கள், வழக்குகள் ஏற்படும். கடன்
பெற்றவருக்கு திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு எதிர்மறை பலன்கள்
உண்டாகும். அதேபோல் நகைகளையும் இரவில் தரக் கூடாது. வட்டு
ீ பத்திரம்,
நகைகளை அடமானம் வைக்கக் கூடாது. நீண்டதூர பயணங்களைத்
தவிர்ப்பது நல்லது. காரணம் பயணத்தில் தடைகள் உண்டாகும்.

பொருட்கள் தொலைந்துபோக வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் திரும்ப


முடியாத சூழ்நிலைகள் வரும். பயணத்தின் நோக்கம் நிறைவேறாமல்
போகும். மேலும் மருத்துவரை முதன் முதலாக சென்று சந்திக்கக் கூடாது.
மருத்துவமனையில் சாதாரண சிகிச்சைக்காகவோ, அறுவை
சிகிச்சைக்காகவோ சென்று சேரக் கூடாது என இந்த ஜோதிட பரிபாடல்
மூலம் நாம் அறிய முடிகிறது. பிரபலமாக உள்ளவர்களின் ஜாதக கிரக
அமைப்புக்களைக் கொண்டு, ஆதாரப் பூர்வமாக, அனுபவப் பூர்வமாக எப்படி
யோகத்தை தந்துள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இப்படிப்பட்ட யோக அமைப்புக்கள் நம் ஜாதகத்தில் இருந்தால் நாமும்
ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கையில் உச்ச நிலையை அடைய முடியும்
என்ற நம்பிக்கை உண்டாகும்.

இங்கிலாந்து மகாராணி குயின் விக்டோரியா ஜாதகம்:

மிகப்பெரிய அரச பரம்பரையில் பிறந்தவர். 26 நாடுகளுக்கும் மேலாக தன்


ஆட்சி, ஆளுமையில் வைத்திருந்தவர். இவரின் ஆட்சி காலத்தில்தான்
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பரந்து விரிந்தது. தனது 19 வது வயதில் அரச
யோகம் கிடைக்கப் பெற்றது. பாசம் மிகுந்த குடும்ப வாழ்க்கை மிக அதிகமாக
9 குழந்தைகள் வாரிசுகளாக பிறந்தன. ஒரு சில விஷயங்களை நம் பூர்வ
புண்ணிய கர்ம வினைப்படி இறைவன் கூட்டுவிக்கிறான். இந்த பிறவியில்
இவருக்கு மிகப்பெரிய அரிய உயர்ந்த ஸ்தானம் கிடைத்துள்ளது. ஜோதிட
சாஸ்திர கிரக அமைப்பின்படி இவரின் ஜாதகத்தில் உள்ள அமைப்புக்களை
தெரிந்து கொள்ளலாம். ரிஷப லக்னம், ரிஷப ராசி, ராசியில் சூரியன். இது மிக
அபூர்வ அமைப்பாகும்.

லக்னம் ராசி, சூரியன். அதாவது விதி, மதி, கதி என்ற மூன்றும் ஒரே ராசியில்
அமைந்திருப்பது. நான்காம் அதிபதி பூமியை, நாடாள்வதை குறிக்கும் இடம்.
அந்த சூரியன் உச்சம் பெற்ற சந்திரனுடன் சேர்ந்து அமாவாசை யோகம்,
சந்திரன் வர்க்கோத்தமம். பூமிக்காரகன் அங்காரகன் மீ ன ராசியில்
வர்க்கோத்தமம். தனம், குடும்ப, வாக்கு, பூர்வ புண்ணியம் ராஜயோகத்தை
தரக்கூடிய நவாம்சத்தில் உச்சம் பெற்று கன்னி ராசியில் இருக்கிறார்.
மீ னத்தில் ராகு, கன்னியில் கேது, வர்க்கோத்தமம். ரிஷப லக்னத்திற்கு
தர்மகர்மாதிபதியாக இருக்கும் சனியும், லாபாதிபதி குருவும் பரிவர்த்தனை
யோகத்தில் உள்ளார்கள். குரு, கேதுவைப் பார்ப்பது ஐஸ்வர்ய யோகம், குரு,
கேது ரிஷப ராசி வரை தொடர்ந்து இருப்பது பூமி புரந்தருளும் சக்கரவர்த்தி
யோகமாக பழைய சுவடிகளில் சொல்லப்பட்டுள்ளது.

மர்லின் மன்றோ ஜாதகம்

உலகத்தையே தன் அழகு, நடிப்பு, மாடலிங் என பல வகைகளில் கலக்கி


ஹாலிவுட்டையே தன் வசப்படுத்தி, வயது வித்தியாசம் இல்லாமல்
எல்லோரையும்  கிறங்கடித்த மிகப் பிரபல நடிகை, பாடகி மர்லின்
மன்றோவின் ஜாதகம். இந்த ஜாதகத்தில் பல சூட்சுமங்கள் மறைந்து
கிடக்கின்றன. சாதாரணமாக பார்க்கும்போது ஜாதகத்தில் யோகங்கள் எதுவும்
இல்லாததுபோல் தோன்றும். ஆனால், இந்த அளவிற்குத் தான் சார்ந்த
துறையில் உயர் உச்சத்தை தொட்ட இந்த பெண்ணின் ஜாதகத்தில் மிக
அபூர்வமான யோக அமைப்புக்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அதனால்தான்
பணம், புகழ், செல்வாக்கு அஷ்ட ஐஸ்வர்யங்கள் கொட்டியது. இவர் பிறந்தது
கடக லக்கினம். மகர ராசி. லக்னமும், ராசியும் மிகவும் பலமாக யோகத்துடன்
அமைந்துள்ளது.

லக்னாதிபதி சந்திரன் லக்னத்தைப் பார்ப்பது மிகவும் விசேஷம். அதேபோல்


ராசிநாதன் சனி துலா ராசியில் உச்சம் பெற்று சந்திரனுக்கு 10 ம் வட்டில்

அமைந்தது சசி யோகம். லக்னாதிபதி சந்திரன் கடக லக்னத்திற்கு
யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில்
இருப்பது. பிரபல ராஜயோகத்தைக் கொடுத்தது. 9, 10 க்குடைய
தர்மகர்மாதிபதிகள் சேர்க்கை பெற்று இருவரும் தனம், வாக்கு ஸ்தானத்தைப்
பார்ப்பது லட்சுமி யோகம். லக்ன கேந்திரத்தில் சந்திரன், சந்திர கேந்திரத்தில்
லக்னம், சந்திரனுக்கு 2 ல் குரு, செவ்வாய். சந்திரனுக்கு 4 ல் சுக்கிரன்,
சந்திரனுக்கு 5 ல் புதன் என சில சூட்சுமமான கணக்குகள் இந்த ஜாதகத்தில்
இருப்பதால் இவர் சிகரத்தை தொட்டார். அஷ்டவர்க்கப் பரல் கணித
அமைப்பில் இந்த ஜாதகம் சிறப்பாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி அவர்களின் முந்தைய நிலை, அவரின் அசுர வளர்ச்சி, புகழ்,


செல்வம், செல்வாக்கு என எல்லா விஷயங்களும் அனைவரும் அறிந்ததே.
இவருக்கு ஜாதக கிரக அமைப்பு, யோகங்களின் பங்களிப்பு எப்படி என்பதை
நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் குருவின் ஆதிக்கத்தில் பிறந்து இருக்கிறார்.
பிறந்த தேதி 12, அதாவது 3 ஆம் எண் விதி எண் அதாவது தேதி, மாதம்,
வருடம் ஆகிய மூன்றையும் கூட்டினால் வரும் எண் 3. இந்த எண் குருவின்
ஆதிக்கம் உள்ள எண்.
சிம்ம லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகிய குரு, ஏழாம்
இடத்தில் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார். நவாம்சத்தில் தனது சொந்த
வடாகிய
ீ தனுசில் ஆட்சியாக இருக்கிறார். புதன் நவாம்சத்தில் உச்சமாக
இருக்கிறார். சுக்கிரன் நவாம்சத்தில் ரிஷப ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.

இந்த அம்ச பலம் ஜாதகத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. பல வகையான


யோகங்கள் இருப்பதால்தான் இந்த அளவிற்கு உயர் உச்ச நிலைக்கு
வரமுடிந்தது லக்னாதிபதி சூரியன் சதுர்த்த கேந்திரத்தில் இருப்பது
சிறப்பாகும். நான்காம் அதிபதி செவ்வாய் மகர ராசியில் உச்சம் பெற்றதால்
மகா பாக்கிய யோகம். விரய ஸ்தானாதிபதியாகிய சந்திரன் தனது சொந்த
நட்சத்திரமான திருவோணத்தில் இருப்பதும், விரய ஸ்தானத்தைப் பார்ப்பதும்
மிக மிக சிறப்பான அமைப்பாகும். லக்னத்திற்கு 4, 5, 6, 7, 8 ஆகிய வடுகளில்

தொடர்ந்து கிரகங்கள் இடைவிடாமல் இருப்பது கிரக மாலிகா யோகம்.
வித்தைக்கு அதிபதியான புதனுடன், கலைகளுக்கு அதிபதியான சுக்கிரன்
சேர்ந்திருப்பது கலைத்துறையில் பெரும் புகழையும், பொருளையும் ஈட்டித்
தந்துள்ளது. இன்றும் சில நுட்பமான சார பரிவர்த்தனை யோகங்கள், பார்வை
யோகங்கள் காரணமாக மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தை  பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும்  தமது
கருத்துகளை  கூறி முடிக்கும்போது  இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம்
பார்த்தறிந்த  பின்பும் நன்கு அறிந்து  நிதானித்து  பலன்களை  கூறவேண்டும் என்று
எச்சரிக்கை செய்துள்ளனர்.   இவ்வாறு ஏன்  எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு
ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால்  அதற்குள்  பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள்
எல்லாம்  எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான்
கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் பொதுவாக இன்னின்ன  கிரகங்கள்
இன்ன முறையில்  இருந்தால்  இன்னின்ன பலன்கள்  நடக்கும்  என்று கூறியுள்ளனர்.
அதனால்தான்  ராசிகளில்  கிரகங்கள் நின்றதற்கு  தனியாக பலன்கள்  கூறியுள்ளனர்.  
அவற்றின் சில வற்றை   மதுரை   தொ.வே.இராகவன் அவர்கள் மக்கள் அறியும் பொருட்டு
1972 ம் ஆண்டு  ஓர் இதழில்  அளித்துள்ள வற்றை அன்னாருக்கு   நன்றி  தெரிவித்து   இங்கு
அதனை  ஈகரையினர் அறியும்  பொருட்டு...  பதிவு செய்கின்றேன்.
 
                      1.  சந்திரனுக்கு  7 ல்சனி இருக்க  பிறந்த ஜாதகன்  மாதா பிதாவுக்கு தோஷம்.

                      2.  செவ்வாய்  ஆட்சியாகி  சனி லக்கினத்திற்கு  3 ல் இருந்தால் ஜாதகன்குள்ளனாக


இருப்பான்.

                      3.  குரு புதன் 2 க்குடையவர் ஆகிய மூவரும்  கேந்திர திரி கோணத்தில் இருந்தால்


வித்தை உண்டு.                
                                 அத்தோடு புதன்  உச்சமாய்   இருந்தால்  அதிக வித்தை உண்டு.

                      4.  2 ல்  செவ்வாய்  இருந்தால்  மாதா பிதாவுக்கு  அடங்காதவன்  (அ)


பிடிக்காதவன்.அதி கோபி,  துர் விநியோக செலவு  துர்போதனையுடையவன்   சுப
காரியங்களில்  அடிக்கடிஈடுபடுவான்.பிதுர் சொத்து சேரும் பூமிலாபமுண்டு ( 6-8-
12 க்குடையவனாகிய செவ்வாய் 2-ல் இருந்தால் பூமி லாபம் பிதுர் சொத்து நில்லாது.)

                      5.லக்கினத்திற்கு 2-7-9 க்கு அதிபர்கள் ஆறு ராசிக்குமேல் மூன்று ராசிக்குள் இருந்து


6-க்கதிபன் கெட்டிருந்தால் ஜாதகன் ஊமையாவான்.

6. செவ்வாய் சுக்கிரன் ஜாதகத்தில் வலுத்திருந்தால் அதாவது கேந்திரத்தில் இருந்தால்


 இளமையில் விவாகம் நடக்கும். இருவரில் ஒருவர் வலு குறைந்திருந்தால் 24 வது
 வயதிற்கு பின் விவாகம் நடக்கும். இருவரும் வலு குறைந்தவர்களானால் 21 வயதிற்
 குப்பின் விவாகம் நடக்கும்.

7. 11 க்குடையவன் 9 க்குடையவனை பார்த்தால் பிதுர் ராஜ்ய சொத்து உண்டு.

8. சனி  செவ்வாய் தனித்தனி ராசியில் இருக்க சந்திரன்,சுக்கிரன் உடன் சேர்ந்திருந்தாலும்


  பார்த்தாலும் மனைவி இல்லாதவன் அல்லது அங்க்கஃகுறை உடைய மனைவியாவான்
  அல்லது புத்திர பாக்கியம் இல்லாதவனாக இருப்பான்.

9. சந்திரன் ரிஷபத்தில் இருக்க சுக்கிரன் துலாத்தில் இருந்தால் பல தீர்த்த யாத்திரை


  செய்வான் அல்லது பல ஊர் சுற்றுவான்.துலாத்தில் சந்திரனும்  ரிஷபத்தில் சுக்கிரனும்
  இருந்தால் இதே பலன்

10. பத்தில் கிரகம் இல்லாது இருந்து பத்தை கிரகம் பார்க்காமல் இருந்தால் வருமையால்
  அலைந்து திரிவான்.

11.   6 க்குடையவன் 4-5-9 ல் இருந்தால் சுயநலம்  அதிகமாக இருக்கும்.

12. 12 ம்இடத்தில் 8 க்குடையவனும் சந்திரனும் செவ்வாயும் நிற்கப்பெற்ற ஜாதகன் தமையன்


    மனைவியை இச்சிப்பவன்.

13. சுக்கிரனும் 7-6 க்குடையவர்களாகிய  மூவரும்  சேர்ந்து ஓர்  ராசியில் நிற்கப் பெற்ற
   ஜாதகனை நம்பி ஒரு பெண்ணையும்   விவாகம்  செய்யலாகாது.

14. லக்கினத்தில் சனியும்  4 ல் செவ்வாயும் 7 ல் சூரியனும் இருக்க இவர்களை சுப கிரகம்


   பார்க்காவிடில் குழந்தைபிறந்த உடனே  கண்டம்  அல்லது மரணம்.

15. செவ்வாய் லக்கினத்தில் இருக்க, திரேகாண லக்கினத்தில்  சனி இருக்கப் பிறந்தவன்


   சிறை படுவான்.

16. 1-7-8 ல் சந்திரன் பாபக்கிரகங்களோடு கூடியிருக்க சுபர் பார்வை இல்லாமல் இருந்தால்


குழந்தைஅழகில்லாமல் இருக்கும்.

17. 2 ல் குரு இருக்க புதன் பார்த்தால் ஜாதகன் தனது செல்வத்தை இழந்துவிடுவான்.

18. 5 க்குடையவர் 3 ல்இருந்தால் புத்திரர்கள் சொற்பம்.

19. 3 க்குடையவனும் செவ்வாயும் பெண் ராசியில் இருந்தால் பெண்சகோதரம்அதிகம்.

20. செவ்வாய் சனி கூடி ஓர் ராசியில் இருக்க எந்த ஸ்தானமானாலும் சுக்கிரனுக்கு
அல்லது சந்திரனுக்கு 7 ல்இருந்தால் விவாகம் இல்லை.

21. 10 ல் சந்திரன் 7 ல் சுக்கிரன் 4 ல்பாபர் இருக்க சந்த்திகள் இல்லை.

22. 7 ல் சூரியன்,சந்திரன் இருக்க சனி பார்த்தால் உலகத்தார் இகழும்படி நீச்சகிருத்தியங்


களை செய்வான்.
23. 10 ல் சந்திரன் 7 ல் செவ்வாய் சூரியனுக்கு 2 ல் சனி இருந்தால் அங்கஈனன்.

24. சந்திரன் லக்கினத்தில் சூரியன் 7 ல்சனி செவ்வாய் லக்கினத்திற்கு 2 ல் அல்லது 12 ல்


இருக்க சரீரத்தில் வெண்மை நிற குஷ்ட நோய் உண்டாகி கவலைப்படுவான்.

25. சந்திரனுக்கு இருபுறத்தில் சனி செவ்வாய் இருக்க சூரியன் மகரத்தில் இருக்கப்


பிறந்தவன்சுவாச காசம், சயரோகம், இடதுபக்கத்திலுள்ள மாம்ச கண்டமான ரோகம்
குன்மம் வயிற்றில் கட்டி பீலிகை நோய் இவற்றில் ஒன்று காட்டும்.

26.   சிம்மத்தில் சந்திரன் கடகத்தில் சூரியன் இருந்தால் க்ஷயம்காசம் என்னும் வியாதியால்


   துன்பப்படுவான்.

27.  சிம்மத்தில்  சூரியன்  சந்திரன் கூடி இருக்க க்ஷயரோகத்தினால் வருந்துவான். அல்லது


    சரீர பலமில்லாதவனாவான். கடகத்தில் சூரியன்சந்திரன் கூடி  இருந்தாலும் இதேபலன்.

28.  லக்கினத்தில் குரு 7 ல் செவ்வாய் இருக்க புத்தி நிலை மாறி மனம்  கலங்கி பித்தம்
    பொங்கி  பிரமைக் கொள்வான்.

29.  லக்கினத்தில்  குரு  7 ல் சனி  இருக்க பிறந்தவனுக்கு  வாதரோகம் கை கால் சோர்வு


    பக்ஷசவாதம்  உண்டாகும்.

30   சனி லக்கினத்தில்  இருக்க  5-7-9 ல்  செவ்வாய் இருக்க  துன்ப பட்டு சங்கிலத்து பித்தம்  
    ஓங்கி பிரமைக்கொள்வான்.

31.   தேய்பிறை சந்திரனும் சனியும் 12 ல் இருந்தால் மனம் கலங்கி வருத்தப்பட்டு  பித்தம்


     ஓங்கி  அதனால் பரமைக்கொள்வான்.

32.   5 அல்து 9 ல் செவ்வாய் இருக்க அவனை சூரியன் சனி பாம்பு  பார்க்க அங்க ஹீனன்.

33.   சனியும் சந்திரனும் கூடி இருந்தால் நிஷ்டூர வார்த்தை பேசுபவன். அத்தோடு செவ்வாய்
     பார்த்தால் அதி நிஷ்டூரனாவான்.

34.   சூரியன்  சுக்கிரன் 7 ல் இருந்தால் அங்க ஊனமுள்ள பெண்ணே களத்திரமாக வரும்.

35.   சூரியன் சுக்கிரன் 5, 9 ல் கூடி இருந்தாலும்  அங்க ஊனமுள்ள பெண்ணே  களத்திரமாக


     வரும்.  

36.  கன்னி லக்கினமாகி அதிலு சூரியன் இருக்க மகரத்தில் செவ்வாய்  இருந்தால் புத்திரன்
   பிறந்து மரணமாகும்.
37. கன்னி லக்கினமாகி அதில் சூரியன் இருக்க, சனி மீ னத்தில் இருந்தால் களத்திரம்
மரணமாகும்.

38.  சுக்கிரன் 3 ல் இருந்தாலோ அல்லது 3 க்கு உடையவனானாலோ ஏமாறும் குணமுண்டு.

39.  சுக்கிரன் 6-8-12 ல் இருந்து  சனியின் சாரத்தில்  இருந்தால் தனக்கு வரும் மனைவி
    களங்கமுள்ளவள்.( கற்பில் )இஃது ஆண் ஜாதகத்தில் இருந்து பார்க்க வேண்டியது.

40.  சிறு வயதில் 7 1/2 ( ஏழரை  ) நாட்டு சனி பிடித்தால் படிப்பு தடைபடும்.

41.  சூரியன் குரு சேர்ந்து  லக்கினத்திறகு வலுத்திருந்தால் ஆசிரியன் ஆவான்.  அல்லது


    தலைவனாவான்.  

42.  தான் பிறந்த நட்சத்திர பாதத்தில் மூன்று கிரகங்களுக்கு மேல்  சஞ்சரித்தால் மாரகம்.
     ( ஆதாரம் ராமாயணத்தில் தசரதர் கூகிறார் )

43.  லக்கினத்திற்கு 12 ம் வடு


ீ செவ்வாய் வடாகவும்,சந்திரனுக்கு
ீ 12 ம் வடு
ீ சூரியன்வடாகவும்

    வந்தால் அந்த ஜாதகனுக்கு அகால மரணம் ஏற்படும் அல்லது லக்கினத்திற்கு 12 ம் வடு

    சூரியன் வடாகவும்
ீ சந்திரனுக்கு 12 ம் வடு
ீ செவ்வாய் வடாகவும்
ீ வந்தால் இதேபலன்.

44.  ஒரு ஜாதகத்தில்  சனியும் குருவும் சம்பந்தப்பட்டால் சிரம்பஃபட்டே முன்னேறுவான்.


    கடைசியில்  ஞானம்தான் வரும்.

45.  சுக்கிரன் 2 ல் இருந்தால்,  பிறருக்கு உழைத்து கொடுத்தால் அதனால் யோகம் அல்லது


    ஜீவனம்  நடக்கும். சுருங்கச்சொன்னால்  கௌரவமான அடிமை.

46. ஒருவன் லக்கினம் எந்தம்சாலக்கினமாக இருக்கின்றதோ அந்தகிரகத்தின்


செய்கை உடையவனாகவும், சந்திரா அம்ச லக்கினம் எந்தராசியோ அந்த ராசிஅதிபனுடைய
மனத்தினாகவே இருப்பான்.

47. சனிக்கு 7 ல் வியாழன் இருந்து சந்திரன் லக்கினத்திற்கு 6 ல் இருந்தால்


பைத்தியம் பிடிக்கும். புத்தி மாறாட்டம் உண்டு.

48. குரு சந்திரன்4 ல் இருக்க சுப கிரகம் பாரா திருக்க ஜாதகனுடைய தாய்க்கு
கண்டம்.

49. செவ்வாய் சனி 4 ம் இடத்தில் இருக்க சந்திரன் நீச்சமாக அவரை சுபர்


பாரா திருக்க ஜாதகனுடைய தாயார் மரணமடைவாள்.
50. குரு சந்திரன் 7 ல் இருக்க அவர்களை சுபர் என்று சொல்லப் போகாது
ஜாதகனுடைய களத்திர தோசமும் வங்கிச நாசமும் கூறுக.

51. 7 ல் சுபருடன் சுக்கிரன் இருக்க அவரை பாபர் பாராதிருக்க ஜாதகனுடைய


களத்திரம் வாழ்வானது பெருகியும் குடும்பத்திற்கு லட்சுமி போலும் இருப்பாள்.

52. சந்திரனுக்கு திரிகோணத்தில் சனி இருந்தால் தாய் தந்தையாரை விட்டு


பிரிந்திருப்பான். அல்லது தாய் தந்தையரை பிடிக்காது.

53. சூரியனுக்கு திரி கோணத்தில் ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகனின்


தந்தை சிறு வயதிலேயே மரணமடைவார் அல்லது தந்தையின் சொத்துக்கள் அழிந்து
போகும்.

54. சந்திரன் நின்ற ராசியாதிபதி 3 ல நிற்க ஜாதகன் ஒருவனே ஆம். பிறகு


சகோதரர் பிறந்தாலும் நில்லாவாம்.

55. 3 க்குடையவரும் லக்கினாதிபதியும் பரிவர்தனையாகி செவ்வாய் 12 ல்


நிற்க சகோதர தோஷம்.

56. சுக்கிரன் 3 ல் நிற்க 8 க்குடையவன் பார்த்தால் சகோதர தோஷம்.

57. சுக்கிரன் தனியாக நிற்க சுபர் பார்த்தாதால் ஏக களத்திரம்.

58. சந்திரன்நின்ற ராசிக்கு 7 ல் சுக்கிரன் நிற்க ஏக களத்திரம்.

59. 9 ல் சனி இருக்க 3 ல வியாழன் இருக்க சந்திரன் 7 ல் அல்லது 8 லிருந்தால்


அவனுடைய இருகைகளும் துண்டிக்கப்படும்.

60. குருவும் சந்திரனும் தனித்தனியாக நீச்ச மடைந்து சுக்கிரன் மறைந்திருந்தால்


களத்திர தோஷம் விவாகம் இல்லை என்றும்கூறலாம்.

61. சுக்கிரன்நின்ற ராசியாதிபதி 6-8-12 ல் இருந்தால் களத்திரத்தால் கஷ்டம். சுகம் இராது.

62. சூரியனும் குருவும் சேர்ந்து 7 ஆம் இடத்திலாவது லக்கினத்திலாவது பார்த்தால்


களத்திரம் வந்த போதிருந்து ஜாதகனுக்கு சிரமங்கள் ஏற்படும். பெண் ஜாதகத்தில்
இப்படி இருந்தால் கனவன் வந்த போதிலிருந்து சிரமங்கள் ஏற்படும்.

63. 8 க்குடையவன் 6-8-12 ல் இருக்க அவனுடன் செவ்வாய் சேர்ந்தோ அல்லது தனித்


திருந்தோ இருக்கும் போது செவ்வாயை சனிபார்த்தால் விபத்துக்களால் கண்டம்.
64. 1-8 ல் கிரகமிருக்க 2-7-11 க்குடையவன் தசையோ அல்லது மேற்படி மாரக ஸ்தானத்தில்
இருக்கும் கிரக தசையோ நடந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களைக்கொடுக்கும்.

65. 1-4-9 க்கு உடையவர்கள் 8 ல் இருந்தால் தரித்திர யோகம் உடையவன்.

66. சூரியன் சந்திரன் சேர்ந்து ஒரேராசியில் இருந்தால் ஜாதகன் பல தொழில்கள் செய்வான்.


அல்லது பல சரக்குகள் நிறைந்த தொழிலில் இருப்பான்.

67. சூரியனுக்கு 7 ல் சந்திரனிருக்க பிறந்தவன் இயற்கையில் எந்த தொழில் வந்தமையுதோ


அந்த தொழில் செய்வதே நல்லது. மாற்றி வேறு தொழில் செய்வோம் என்றெண்ணி
இருக்கும் தொழிலை விட்டு வேறு தொழில் செய்தால் அதனால் கஷ்டமே ஏற்படும்.

68. வளர் பிறையில் பிறந்தவர்கள் உண்மை பேசி வாழ்ந்தால்தான் பலன் தரும். தேய்பிறை
யில் பிறந்தவர்கள் கள்ள மனதுடன் பொய்யும் மெய்யும் கலந்தே பேசி வாழ்ந்தால்தான்
பலன் தரும். ( குறிப்பு.. மனதைத்தான் கூறியிருக்கிறேன் அதற்காக பாவ வழியில் பணம்
தேட முயற்சி செய்ய வேண்டாம் )

69. சந்திரனுக்கு 6-7-8 ல் பாபக்கிரகம் இல்லாது புதன் சுக்கிரன் வியாழன் மட்டும் இருந்தால்
ஜாதகன் அரசனாகவோ அரசனுக்கு சமானமான எல்லாவித ஐசுவரியங்களோடு இருப்பான்.
இதனை அதியோகம் என்று காளி தாசர் கூறுகிறார்.

70. 2-5-9-11 ம் வட்டின்


ீ அதிபர்கள் ஒருவரோடு ஒருவர் சம்பந்தம் பெற்று பல்ம் பெற்றவர்
களாக இருப்பின் லட்சாதிபதி ஆவான். மேற்படி வட்டின்
ீ அதிபர்கள் துர்ஸ்தானம்
பெற்றால்ஜாதகனின் தனம் நாசம் அடையும் என்கிறார் காளிதாசர். 

71. எல்லா கிரகங்களும் 1-4-7-10 ல் இருந்தாலும் அல்லது 2-5-8-11 ல் இருந்தாலும்


ஜாதகன் யோகவான்.

72. ஒரு ஜாதகன் நடு பகலுக்குப்பின் அல்லது நடு இரவுக்குப்பின் 2 நாழிகைக்குள் ஜனன
மானால் நல்ல யோகமுடையவனாவான் ( ஆதாரம் காளிதாசர் ) இந்த ஜாதகனின்
ஜன்ம லக்கினத்திற்கு 2 ம் இடத்தில் ஓர் உச்ச கிரகமிருந்து மற்றொரு உச்ச கிரகம்
பார்த்தால் ஜாதகன் கோட்டீஸ்வரன் ஆவான். இவர்களுக்கு ஆட்சியில் உள்ள கிரகம்
ஒன்று பார்த்து விட்டால் லட்சாதிபதி ஆவான்.

73. சனி செவ்வாய் சூரியன் சர நவாம்சத்திலும் குரு சுக்கிரன் ஸ்திர நவாம்சத்திலும்


புதன் ராகு கேது சந்திரன் உபய நவாம்சத்திலும் இருந்தால் ஜாதகன் நல்ல யோகத்
துடன் தனது வாழ் நாளை கழிப்பான். ( ஹோராசாரர் )

74. சூரியன் சந்திரன் ராகு இம் மூவரும் எந்த ராசியில் கூடி இருந்தாலும் ஜாதகனுக்கு
28 வயது ஆயுள் எனலாம். இதில் குரு 12 ல் இருந்தால் நிச்சயம் 28 வயதில் மாரகம்.

75. லக்கினம் சர ராசியாகி அதில் சூரியன் செவ்வாய் நிற்க குரு 10 லும் சந்திரன் 5 அல்லது
9 ல் நிற்க பிறந்தவன் 20 வயது இருப்பான் ( ஹோரா சாரர் )

76. லக்கினாதி பதியும் ராசியாதி பதியும் இவ் இருவர் அம்சத்தில் நின்ற வட்டுக்குடையவரும்

ராசியில் அஸ்தமனம் அடைந்திருந்தால் அந்த குழந்தை சில நாட்கள் இருந்து மரிக்கும்.

77. எல்லா கிரகங்களும் 3-6-8-12 ல் இருந்தால் அந்த குழந்தையயின் வயது இரண்டு அல்லது
6 மாதமாகும் ( ஹோரா சாரம் )

78. ஜனனகாலத்தில் செவ்வாயும் சூரியனும் சந்திரனுக்கு 7 ல் இருந்து லக்கினத்தில் ராகு


இருப்பின்
அந்த குழந்தை 10 நாளில் குறைந்து போகும். ( ஹோராசாரம் )

79. லக்கின கேந்திரத்தில் சந்திரனும் 8 க்கு உடையவனும் கூடி இருக்க அதனுடன் 8 ல் ஓர்
பாவி
இருக்க குழந்தை ஜனித்துடன் மரணம். ( ஹோரா சாரம் )

80. இருகிரகம் சேர்ந்திருந்தால் அந்தகிரகங்கள் நட்பாக இருந்து லக்கினாதி பதிக்கு


அவ்விருவரும்
பகைவர்களாக இருந்தால் அவ்விருவரும் எந்தராசியில் சேர்ந்திருக்கின்றதோ அந்தராசியாதி
யின் தசாபுத்திகளில் யோகம்கொடுக்கும். ( தொடரும் )

81. சூரியனுக்கு 5 அல்லது 9 ல் சந்திரன் இருந்தால் அரச தரிசனத்தால் குற்றவாளி விடுதலை


அடைவதுபோல் அதிஷ்டம் நாசமடையும்.

82. 4 க்குடையவன் நின்ற நவாம்சாதிபதியின் தசையிலாவது அல்லது 4 ம் அதிபதியின் தசை


யிலாவது தகப்பனுக்கு கண்டம் அல்லது அந்த ராசியில் உள்ள கிரகத்தின் தசையில் கண்டம்.

83. ஜன்ம ராசியாதி பதிக்கும் லக்கினாதிபதிக்கும் சத்துருவான கிரகத்தின் தசையில்


சஞ்சாரமும்
அவமானமும் சத்துருவினிடம் அடைக்கலம் புகுந்து அவனால் அவமானம் அடைதலும்
உண்டாகும்.

84. 8 க்குடையவன் கேந்திரத்தில் இருப்பின் அவனுடைய தசை யோகத்தைக் கொடுக்கும்.


ஆனால்
சூரியன் ராகு சேர்க்கை பார்வை இருக்கக்கூடாது.

85. கும்பத்தில் சந்திரனும் கடகத்தில் செவ்வாயும் இருக்க பிறந்தவனுக்கு அன்னம் சிரமத்தின்


பேரில்
கிடைக்கும்.

86. சூரிய சந்திர புடங்களைக் கூட்டி வந்த ராசியிலாவது அதற்கு கேந்திர ராசியிலாவது
அல்லது
9 வது ராசியிலாவது ஒருபாபி இருப்பின் ஜலகண்டம் அல்லது விஷ பயம் உண்டு.

87. 4 க்குடையவனும் சுக்கிரனும் கூடி சூரியனுக்கு 10 ல் நின்றால் செல்வந்தன்.

88. சூரியன் சனி செவ்வாய் 9 ல் இருந்தால் துவேசபிள்ளை பிறக்கும்.

89. சுக்கிரன் சந்திரன் செவ்வாய் 9 ல் இருந்தால் தாயை பழிப்பான்.

90. 10 க்குடையவன் இருந்த ராசியாதிபதி 10 ல் நட்பாய் நின்றால் வறுமை இல்லாதவன்.

91. லக்கினாதிபதியும் சுக்கிரனும் 4 க்குடையவரும் லக்கினத்தில் நின்றால் நல்ல யோகம்.

92. சுக்கிரனுடைய ஸ்புடமும் 4 க்குடையவர் ஸ்புடம்ம் சேர்த்து 12 ராசிக்கு மேல்


இருந்தால்
12 ஐ கழிக்க மீ தம் எத்தனை ராசி பாகை கலையோ அந்தராசியில் குரு வரும்போது பூமி
லாபம்
அல்லது பொருள் லாபம் அல்லது கீ ர்த்தி பதவி லாபம்கிடைக்கும்.

93. லக்கினாதிபதி இருந்த ராசியாதிபதி ஆட்சி உச்சம் பெற்று செவ்வாய்க்கு திரிகோணம்


அடைந்தால் அதிகார யோகம் உண்டு.

94. சுக்கிரனுக்கு இரு புறத்திலும் பாபிகள் இருந்தால் அல்லது சுக்கிரனுக்கு 4-8 ல் பாபிகள்
இருந்தால் மனைவி அகாலமரணமோ அல்லது கண்டமோ ஏற்படும்.

95. பெண் ஜாதகத்தில் 2-7-9 ல் சுபர்கள் ஆட்சி அல்லது சுபர்கள் இருந்தால் மகனின் பேரன்
பேத்திகளை கண்டபின் சுமங்கலியாய் தன் வாழ்நாளை முடித்து மடிவாள்.

96. 5 க்குடையவன் 7 ல் இருந்தால் மானமுள்ளவன் தர்மங்கள் அறிந்தவனாகவும்


உன்னதமான
சரீரமுடையவனாகவும் பக்திமானாகவும் இருப்பான்.
97. 3 க்குடையவன் 8 லோ 7 லோ இருந்தால் அரசாங்கத்தினால் தொல்லை பால்ய
வயதில்
திருட்டுகுணம் ஆயுள்முழுவதும் கஷ்டம் காமப்பிரியன்.

98. 8 க்குடையவன் 2 லோ 7 லோ இருந்தால் இருமனைவிகள் உடையவன். ஈஸ்வர


துரோகி.

99. 4 க்குடையவன் 7 லோ 1 லோ இருந்தால் அநேக வித்தை அறிவான். பிதுர் சொத்து


இழப்பான். சபையில் ஊமைபோல் இருப்பான்.

100. 6 க்குடையவன் 7 லோ 11 லோ 1 லோ இருந்தால் கீ ர்த்தி மானாகவும் தனவானாகவும்


குணசீலனாகவும் புத்திரன்இலுலாத வனாகவும் இருப்பான்.

பாரம்பரிய ஜோதிடத்தை அடிப்படையாக


கொண்டு நவன
ீ காலத்திற்கு ஏற்ற வகையில்
மேம்பட்ட ஜோதிட விளக்கத்துடன் துல்லிய
பலனை கூறும் உயர் கணித சார ஜோதிடத்தில்
கீ ழ்கண்டவாறு விளக்கபடுகின்றது.

இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன்,


வளர்பிறை சந்திரன், புதன் ஆகியோர்கள்
இரண்டாம் பாவத்திற்கு உபாதிபதியாக வந்து
லக்னத்திற்கு துர்ஸ்தானங்களான 8,12 ம் பாவ
சம்பந்தம் இன்றி அமையும் ஜாதகர் மிகவும்
அழகாகவும், இனிமையாக பேச கூடியவராகவும்
லட்சணமாக இருப்பார்.

இரண்டாம் பாவத்திற்கு உபாதிபதியாக நின்ற


கிரகங்களின் பலன்கள்:

 சூரியன் : லக்னத்திற்கு சுப பாவங்களை


தொடரபுகொள்ளல் நன்று. இரட்டைபடை பாங்களை தொடர்பு
கொண்டால் சூடான வார்த்தை பேசுவார். 8, 12 பாவதொடர்பு
கண்நோய், முக ரோகம் ஏற்படும்.

 சந்திரன்: நல்ல முக வசியம் உண்டு. இனிமையாக பேச


கூடியவர்.

 செவ்வாய்: பேச்சில் சூடு பறக்கும்.


 புதன்: நன்றாக பேச கூடியவர்.

 குரு: வசிகரமான முக பொலிவு, அன்பு கலந்த பேச்சு.

 சுக்கிரன்: அழகு தோற்றம், கலையான முகம்.

 சனி: பொய் சொல்ல கூடியவர். குளறி பேசுவார்.

 ராகு: விஷ வாக்கு உள்ளவர். பொய்யை மெய்போல்


பேசுவார்.

 கேது: ஞானம் பேசுவார்.


   ஆரம்பம்   6.ம் பாவம் காரகங்கள்
1. நோய்
2. உத்தியோகம்
3. கடன்
4. எதிரிகள்
5. இடையூறு
6. பொருள் இழப்பு
7. சண்டை
8. கலகம்
9. சந்தேகபுத்தி
10. வம்பு வழக்கு
11. கோர்ட்
12. தாய்வழி மாமா
13. கருமித்தனம்
14. மனக்கவலை
15. கடுமையான வேதனை
16. பலருடன் பகைத்தல்
17.கண்நோய்
18. பிச்சை வாங்குதல்
19. நேரம் தவறி உணவு உட்கொள்ளும் முறை
20. பங்காளிகள் வழியில் பிரச்சினை
21. வயிறு வலி
22. சிறுநீ ரக கோளாறு
23. வேலை காரர்கள்.
24. விஷ ஜந்துகளால் ஏற்படும் கண்டம்.
25. ஜலகண்டம்
26. கபம்
27. வட்டு
ீ வாடகை
28. எதிலும் தடை
29. மர்ம உறுப்பில்  காயம்
30. போட்டிப் பந்தயம். இவற்றில் வெற்றி தோல்விகள்
31. வழக்குரைஞர்
வைத்திய மூலிகைகள்
32 ‌
33. சிறுதொழில்
34. உணவு விடுதி  தங்கும் விடுதி
35. பொருள் பதம் படுத்தும் மையம்
36. வைத்தியம் செய்யும் இடம்
37. வைசூரி
38. பால்வினை நோய்.
39. மற்றவருடன் கருத்து வேறுபாடு
40. ஆரோக்கிய சாஸ்திரம்
ஆயுதத்தால் காயம் படுதல்
41 ‌
42. எடை போடும் மையங்கள்
43. அறுசுவைகள்
44. கால்நடைகள்
45. கண்டனம்
46. சிறு பிராணிகளை கடனாக வாங்குதல்
47.  படகிலிருந்து  தவறி விழுதல்
48. பழிச்சொல்
49. மறதிபாவச் செயல்கள் புரிவது
50.சுய மரியாதையை  காப்பாற்றுதல்.
உத்தியோகம்                                                                                              
                          அரசு வடுகள்

மேஷம் கடகம்
சிம்மம் விருச்சிகம்                                                                                                   
அரசு கிரகங்கள்                                                                                                       
                                                   சூரியன்    செவ்வாய்
குரு.  சுக்கிரன்.   
4,ம் இடம்.   பதவி
6,ம் இடம். உத்யோகம்
10.  தொழில்  ஜீவனம்

       Rules
1.    4,10. ம்வடு
ீ அரசு வடுகளாகி 6,ம் அதிபதிஅமர்வது
ீ அல்லது
பார்ப்பது
2.  6,ம் அதிபதி  அரசுவடாகி 4,அல்லது 10 ம் அதிபதிஅமர்தல் அல்லது

பார்த்தல்
3.   செவ்வாயின் 4 ம்பார்வை அரசு வடாகிஅதில்அரசு கிரகம்அமர அரச

ாங்கம் அரசியல் ஈடுபாடு உண்டு
 4 குருவும்
செவ்வாயும் அரசுவடுகளில் இருந்து பார்ப்பது அரசியல் அரசாங்க

ஈடுபாடு
 ‌ 5 சனிபகவானின்10,ம் பார்வைஅரசு வடாகிஅதில் இருக்கும்

கிரகங்கள் அரசு வருவாயைதரும் Government related
jobs இருக்கும். 
6    10,ம்வடு 6,ம்வ
ீ டு 4,ம்வ
ீ டு
ீ திதிசூன்யம் பாதகம்
ஏற்பட்டால் உத்தியோகம் உயர்வுதடை இருக்கும்.
7 சூரியன் செவ்வாய்  லக்னபடி 6, 8, ‌12, ல்இருந்தாலும் சூரியனுக்கு
செவ்வாய் 6,  8, 12,ல். இருந்தாலும்  VRS  வாங்குவார்கள்
8.  செவ்வாய் சனி  சம்பந்தம் பார்வை சாரம்  இருந்தால் பிரமோஷன்
தடை தாமதங்கள் இருக்கும்.
9.  சனிக்கு 3,ல் செவ்வாய் இருந்தால் பதவிக்கு நல்லது (அதிகாரி)
10.அரசுகிரகம் அரசாங்க வட்டுக்கு
ீ தொடர்பு அரசியல் ஈடுபாடு
உண்டு
11 செவ்வாய்  4, ம். பார்வை அரசு
வடாகி அங்கு குரு+சூரியன் அமர்ந்தால் பெரும்பதவியில் இருப்பார்க

ள் (அமைச்சர் + மந்திரி)
12. 7,ம்பாவம் சனிசம்பந்தம் பொது சேவை செய்வார்கள்.
13 ‌ 4, 6, சம்பந்தம் உத்தியோகம்
கேது செவ்வாய் சம்பந்தம்.  யூனிபார்ம் இல்லாத போலீஸ் (சிஐடி).
14 ‌
மருத்துவ சோதிடம்
1. ஆறாம் அதிபதியை தொடும் கிரகங்களுக்கு மருத்துவ
செலவினங்கள் உண்டு.
2. செவ்வாய் ராகு சேர்ந்து பார்த்த பாவம் சர்ஜரி உண்டு அங்கு ஒரு
கிரகம் இருந்தால் அதற்கும் சர்ஜரி உண்டு
3. ராகு சாரம் பெற்ற கிரகத்தை செவ்வாய் பார்த்தாலும் செவ்வாய்
சாரம் பெற்ற கிரகத்தை ராகு பார்த்தாலும் சர்ஜரி உண்டு
4. சர்ஜரி எட்டாம் பாவம் செவ்வாய் ராகு எட்டாம் பாவம் சர்ஜரியை
கூறும்
5. அஷ்டமாதிபதி எங்கு இருந்தாலும் பார்த்தாலும் சர்ஜரி உண்டு
6. செவ்வாயை பார்க்கும் கிரகத்திற்கு வெட்டுக் காயம் தழும்பு
உண்டு
7. செவ்வாய் கேதுபல்லுக்குள் பல் பிரச்சினை தரும்.
8.செவ்வாய் சூரியன் முதுகு தண்டுவடம் வலி இருக்கும்
9. சனி சூரியன் எலும்பு உடைதல்
10. சனி அழுக்கு தாமதம்
11. சனியை தொட்ட கிரகங்கள் அதன் இயக்கத்தில் மெதுவாகவும்
உறுப்பில் அழுக்கும் இருக்கும்
12.  ஒரு வக்கிர கிரகம் பின்னத்தை (demage) கூறும்.
13. ஒருவக்ர கிரகத்தை இன்னொரு வக்ர கிரகம் பார்த்தால் பின்னம்
நிச்சயம்
14. வக்ர கிரகத்தை சனியோ அல்லது பன்னிரெண்டாம் அதிபதியோ
பார்த்தால் ஊனம் நிச்சயம். 
15. பலம் குறைந்த கிரகம் மாந்தியுடன் இணைந்தால் வியாதியின்
தாக்கம் அதிகம் இருக்கும். 
16.  மாந்தி அழிவை
கூறும்.  மருத்துவ ஜோதிடத்தில் அழுகியதைகூறும்
17.  கேது அடைப்பை சொல்லும்  உறுப்பு சிறியதாக இருப்பதை
கூறும். 
18.   ராகு விகாரம் அதிகப்படியான எண்ணிக்கை களையும் வெட்டி
எடுக்கப்படும்  உறுப்பையும் கூறும்.
19. நீ ர் கிரகங்கள் சந்திரன் சுக்கிரன் குரு. இந்த நீ ர் கிரகங்கள் 4 ம்
பாவத்திற்கு சம்பந்தப் பட்டாலோ
நீ ர்த் தன்மை அதிகரிக்கும் இந்த சூழலில் எந்த கிரகம் நெருங்கி
இருக்கிறதோ அந்த காரக உறுப்பில் நீ ர்த்தன்மை அதிகம் இருக்கும்.
(உம்) விருச்சிகம் லக்னம் கன்னியில் குரு சனி
அஸ்தம் நட்சத்திரத்தில் ல்.  4 ம் அதிபதி சனியைகுரு தொட brain ல்
நீ ர் சேர்தல் புத்திசலனம் ( Mind
disturb).  குரு.  மூளை சனி 4,ம்,அதிபதி                                                                  
                                    மருத்துவத்துறை
ஆறாம் பாவகம் மருத்துவர் ஆகும் யோகம். ஆக்சிஜன் தருபவர்
சூரியன்,
ஒளிக்கதிர்களால் சக்தியை தருபவர் சூரியன், மருத்துவத்துறையில்
வெற்றியை கொடுப்பவர் சூரியன். மருந்து கிரகம் என்றால்
சூரியன். செவ்வாய் என்றால்
தைரியம். தசை நார்கள், காயங்கள், விபத்து, அறுவை சிகிச்சை
இதற்கு காரணகர்த்தா.கதிர்வச்சு, ஹீ
ீ மோதெரபி,
ராகு கேது குரு நோயை குணப்படுத்தும் கைராசி டாக்டர் என்ற
பெயருக்கு காரணகர்த்தா. மக்கள் சக்தி மருத்துவமனை அமைக்க
பணியாற்ற. தீராத வலி வேதனை இதெல்லாம் சனியை
குறிக்கும். சனி பார்வை பட்ட கிரக நோய், கிரகத்தினால் உண்டாகும்
நோய் குணமாக நீ ண்ட நாள் ஆகும்.
ராகு கேது தொற்று
நோய், கிருமி, ஸ்கேன், எக்ஸ்ரே. இவையெல்லாம்.
மருத்துவ நட்சத்திரம்
அஸ்வினி, மகம், மூலம், மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, சுவாதி, 
உத்திராடம், அனுஷம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.
இதில் அஸ்வினி மகம் மூலம் மிருகசீரிடம் அனுஷம் சதயம் ரேவதி
இவர்கள் பேமஸ் டாக்டர் ஆக இருப்பார்கள்.
துல்லியமாக பார்த்தால், சதயம் நட்சத்திரம் கொண்டவர்கள்
டாக்டராக ரொம்ப பிரபலமானவராக இருப்பார்.
மருத்துவர்கள் சிம்மம், விருச்சிகம். சிம்ம ராசியாக வருவது
நல்லது.
சிம்ம லக்கினமாக வருவது நல்லது.
பத்தாம் இடமாக வருவது விருச்சிக ராசி அல்லது லக்னமாக
வருவது அல்லது பத்தாம் இடமாக வருவது.

ஆறாம் பாவம் நோயை குறிக்கும். இதன் காரகர் சனி.


செவ்வாய் மருத்துவராக பணியாற்றுவதை குறிக்கும்.
எட்டாம் பாவம் மருத்துவமனை மருந்து, தாய்சேய்
நலவிடுதி, இறப்பு, இறப்பின் தன்மை, தீராத வியாதியை குறைக்கும்.
பனிரெண்டாம் இடம் மருத்துவத்தில் நீ ண்ட காலம்
பணியாற்றுவது பெயர் பெறுவது

லக்னம் அல்லது லக்னாதிபதி 6, 8, 12, தொடர்பு


மருத்துவத்துறை 8, 12, சூரியன் செவ்வாய் தொடர்பு
இருந்தால், ஆறு எட்டு பாபங்களும் அல்லது சூரியன் செவ்வாய் குரு
இவர்கள் பலம் பெற்றால் மருத்துவத்துறையில் பெயர் வாங்க
முடியும்.
புதனுக்கு அடுத்து ராகு அல்லது சூரியன் இருக்க மருத்துவ படிப்பு.
இரண்டாம் அதிபதிக்கு அடுத்து சூரியன் செவ்வாய் கேது
மருத்துவத்துறையில் வருமானம் இருக்கும்.

இரண்டாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது


தொழில் காரகன சனிக்கு அடுத்து சூரியன், செவ்வாய், ராகு, கேது
இருப்பது மருத்துவத்துறையில் வருமானம் இருக்கும்.

நீ ர் ராசியில் ஒரு கிரகம் இருந்தால் மருத்துவத்துறைக்கு


வரமுடியும்.
சுக்கிரன் அல்லது செவ்வாய் நீ ர் ராசியில் இருந்தால் சிறந்த
மருத்துவம்.
ராகு + மாந்தி, கேது + மாந்தி கொலைப்பழிக்கு ஆளாவார்கள்.
அஸ்வினி, சதயம் நட்சத்திரம் அரசு வருவாய் உள்ள நட்சத்திரம்.
சூரியன் சனி பரம்பரை வைத்தியன்.
சூரியன் புதன் சனி இணைவு வெண்குஷ்டம்.
6, 8, 12,  ஆம் அதிபதிகள் காற்று ராசியில் இருந்தால்
கூட்டத்தில் சினிமா தியேட்டருக்கு போக கூடாது.
ஆறில் நீ ச்ச கிரகம் அல்லது ஆறாம் அதிபதி நீ சம் ஆவது
இரணியா வரும்.
குரு அல்லது சுக்கிரன் பலமற்று ஆறாம் இடத்தை பார்த்தால்
சர்க்கரை நோய் வரும் திதி சூனியத்தை பார்க்க வேண்டும்.
சுக்கிரதிசை என்றால் யூரியன் பிரச்சனை வரும்.
செவ்வாய் திசை என்றால் பல் பிரச்சனை வரும்.
ராகு திசை என்றால் சர்ஜரி வரும்
கேது தசை என்றால் பல் சம்பந்தமான பிரச்சனை இருக்கும்.
புதன் திசை என்றால் தோல் சம்பந்தமான பிரச்சனை வரும்.
நான்கில் ராகு நான்காம் அதிபதி ராகுவை தொட்டால் மன நிம்மதி
குறைவு.
கும்பத்தில் சூரியன் இருதய நோய் பாதிப்பு உண்டு சுக்கிரன் சனி
சிறுநீ ரகக் கல் சூரியன் செவ்வாய் 5 பாகைக்குள் இருந்தாலும்
அல்லது சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றாலும் மரணம்
இயற்கைக்கு மாறாக இருக்கும்.                                                                         
பலமற்ற சந்திரன் சனி எட்டில் இருந்து பார்த்த காரக
உறவுக்கு  நீ ரில் கண்டம் சந்திரன் நீ சம் புதன் உச்சம் இது ஆகாது
மனநிலை பாதிப்பு
இருக்கும்                                                                                                             செ
வ்வாய் மாந்தி இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது
நான்கு கிரகங்கள் சுயசாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பாக
இருக்கும்.
செவ்வாய், ராகு மனைவிக்கு நோய் சிகிச்சை இருக்கும்
சனி, சுக்கிரன் வட்டில்
ீ இருந்தால் முக அழகு கெடும்
பாதிக்கப்பட்ட சுக்கிரனை சனி பார்த்தால் முக அழகு கெடும்.
மேச சனி யாரை பார்க்கிறதோ யாரை தொடுகிறதோ அந்த
உறவுக்கு ஆயுள் குறைவு.
சூரியன் மீ து செவ்வாய் போனாலும் அல்லது புதன் மீ து
செவ்வாய் போனாலும் நகம் வெட்ட கூடாது.
மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்றில், சுக்கிரன் இருந்தால்
பெண்  சுகபோகம் உண்டு. காதலில் வெற்றி உண்டு. சுக்கிர காரக
உறவுகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.
நாலில் சுக்கிரன் இருந்தால் வட்டில்
ீ பழம் தரக்கூடிய மரம்
இருக்கும்.
நான்கில் செவ்வாய்  இருந்தால் வட்டில்
ீ முள்மரம் வளரும்.
மேஷ ராசி பித்தம்
ரிஷப ராசி வாதம்
மிதுன ராசி பித்தம் வாதம் கபம்
கடக ராசி கபம்
சிம்மராசி பித்தம்
கன்னி ராசி வாதம்
துலா ராசி பித்தம் வாதம் கபம்
விருச்சக ராசி
தனுசு ராசி பித்தம்
மகர ராசி வாதம்
கும்ப ராசி பித்தம் வாதம் கபம்
மீ னராசி கபம்
வாத நோய்க்கு உண்டான கிரகம் சனி ராகு கேது
பித்த நோய்க்கு உண்டான கிரகம் சூரியன் செவ்வாய்
கபம் நோய்க்கு உண்டான கிரகம் குரு கபம்
வாதம் இதற்கு உண்டான கிரகம் சந்திரன் சுக்கிரன் பித்தம் வாதம்
கபம் இதற்கு உண்டான கிரகம் புதன்
மருத்துவத்திற்கு முதலில் லக்னம் லக்னம் நின்ற சாரம்
லக்னாதிபதி நின்ற இடம் லக்னாதிபதி பெற்ற சம்மந்தம் லக்னத்தை
பார்த்த கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்த கிரகம் பார்க்க வேண்டும்
ராசியில் நின்ற சந்திரனுக்கு அம்சத்தில் லக்னாதிபதி நின்ற இடம்
பார்க்க வேண்டும் அல்லது லக்னம் லக்னாதிபதி வர்கோத்தமம்
உள்ளதா என்று பார்க்க வேண்டும் இதையும் பார்க்க வேண்டும்
வியாதி குணமாக அந்தரம் பார்க்க வேண்டும் 22 ஆவது
திரேகாணம் 64 ஆவது நவாம்சம் பாதகாதிபதி லக்ன சுபர் லக்ன
பாவி இவையெல்லாம் பார்க்க வேண்டும் 1, 4 , 7, 10 பாதுகாப்பு
தரும் இதில் சுபர்கள் இருந்தால் கேந்திராதிபத்திய தோசம்
இருக்கும் 1, 4, 7, 10 இதில் பாவிகள் இருந்தால் பாதுகாப்பு
குறைவு.                                                                                                                          
3, 6, 10, 11  ல் இந்த உபஜெய ஸ்தானங்களில் சுபர்கள் இருந்தால்
நன்மையை தரும் பாவிகள் இருந்தால் நன்மையும் தரும் நோய்கள்
தரும்
வக்ர கிரகங்கள் எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவ
சம்பந்தப்பட்ட வியாதி வரும்.
அம்சத்தில் விருச்சக ராசியில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த
கிரகத்தின் சம்பந்தப்பட்ட நோய் உண்டு.                                                          
சனி, செவ்வாய் சேர்ந்த எந்த பாவத்தை பார்க்கிறதோ அந்த
பாவத்தின் காரகனும் கெடும் அந்த பாவமும்
கெடும் வாதத்தை குறிக்கும் நட்சத்திரங்கள் அஸ்வினி திருவாதிரை
புனர்பூசம் உத்திரம் ஹஸ்தம் கேட்டை மூலம் அவிட்டம் பூரட்டாதி
பித்தத்தைக் குறிக்கும் நட்சத்திரங்கள் பரணி மிருகசீரிடம் பூசம்
பூரம் சித்திரை அனுஷம் பூராடம் சதயம் உத்திரட்டாதி
கபத்தைக் குறிக்கும் நட்சத்திரங்கள் கிருத்திகை ரோகிணி மகம்
சுவாதி விசாகம் உத்திராடம் திருவோணம் ஆயில்யம் ரேவதி

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் அதிபதி


எந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கிறாரோ அதைப் பொறுத்து
அவர்களுடைய நோயை தீர்மானிக்கலாம்.
சூரியனுடைய நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி நின்றால்
உஷ்ணம் தொடர்பான நோய்கள் உண்டாகும்.
சந்திரனுடைய நட்சத்திரங்களிலேயே இந்த ஆறாம் அதிபதி
நின்றால் சிலேத்துமம் தொடர்பான வியாதிகள் உண்டாகும்.
செவ்வாயினுடைய நட்சத்திரங்களிலேயே இந்த ஆறாம் அதிபதி
நின்றால் விபத்து, வெட்டுக்காயம், எலும்பு முறிவு நெருப்பினால்
பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
புதனின் நட்சத்திரங்களில் ஆறாம் அதிபதி நின்றால் அவர்களுக்கு
வாயு சம்பந்தமான கோளாறுகள், முடக்கு வாதம், பக்க
வலிப்பு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
குருவின் நட்சத்திரங்களை ஆறாம் அதிபதி நின்றால் சம்பந்தமான
பாதிப்பு அமைப்புகள மூளை சம்பந்தமான பாதிப்பு, தோல் மற்றும்
தசை ஆகிய உறுப்புகள் பாதிக்கக்கூடும்
சுக்கிரனின் நட்சத்திரங்களில் அதிபதி நின்றால் சிறுநீ ரக
கோளாறுகள், ரகசிய வியாதிகள், பெண்களிடம் தகாத உறவுகளை
வைப்பதன் மூலமாக வரக்கூடிய நோய்கள் ஏற்படும்.
சனியின் நட்சத்திரங்களில் ஆறாம் அதிபதி நின்றால் நரம்பு
சம்பந்தமான கோளாறுகள், மூட்டு வலி,  பாதங்களில் பித்த
வெடிப்புகள் போன்றவை ஏற்படும்
ராகுவின் நட்சத்திரங்களில் ஆறுக்குடையவர் நின்றால் பூர்வ
ஜென்ம கர்ம நோய்கள், குணப்படுத்துவதற்கு சிரமமான
நோய்கள், தொழு நோய் ,புற்று
நோய், ரத்தசோகை ,கருச்சிதைவு, மூளைக்காய்ச்சல், இது போல
எளிதிலே குணப்படுத்த முடியாத நோய்கள் வரலாம்.
கேதுவின் உடைய நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி இருந்தால்
தொழுநோய் , மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்க
விளைவுகள். விஷஜந்துக்கள்
பாதிப்பு , முதுகெலும்புகோளாறுகள் ,காச நோய் போன்றவை
ஏற்படுத்தக் கூடும்.

ஆறாம் அதிபதி
சூரியன் நட்சத்திரங்களிலும் செவ்வாயுடன் நட்சத்திரங்களில்
நின்றால் அவர்களுக்கு ஆங்கில மருத்துவம், யுனானி
மருத்துவம், அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்தலாம்.
ஆறாம் அதிபதி சந்திரனின் நட்சத்திரங்களில்
அல்லது சுக்கிரனின் நட்சத்திரங்களில் நின்றிருந்தால், திரவ
சம்பந்தமான மருந்துகள், டானிக் சிறப்பு. அதேபோல ஹோமியோபதி
மருந்துகள், மூலிகைச் சாறு இதுபோன்ற வைத்திய முறைகளால்
நோய்களை குணப்படுத்தலாம்.
புதனுடைய நட்சத்திரங்களிலேயே ஆறாம் அதிபதி நின்றிருந்தால்
குளிகைகளை உட்கொள்வதன் மூலமாகவும் தைலங்களை
பயன்படுத்துவது மூலமாகவும் நோய்களை பண்ணலாம்.
குருவினுடைய நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி இருந்தால்
பஸ்பம் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளால்
குணப்படுத்தலாம்.
சனியுடன் நட்சத்திரங்களிலேயே
ஆறாம் அதிபதி இருந்தால் இவர்களுக்கும் மூலிகைத்
தைலங்கள், சாறுகள், பவுடர் போன்ற மூலிகை தூள் மூலமாக
இவர்களின் நோய்களை குணப்படுத்தலாம்.
ராகுவின் சாரத்தில் ஆறாம் அதிபதி இருந்தால்
சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இது உடன் மகான்கள்
யோகிகள்  தரக்கூடிய மருந்துகள் நோய்களைக் குணப்படுத்தும்.
கேது  நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி நின்றிருந்தால் இந்த
சித்தர்களுடைய ஜீவசமாதிக்கு சென்று வழிபடுவது மூலமாகவும்.  
மருந்துகள் அவர்கள் கையால் வாங்கியவர்கள் அந்த மருந்துகளை
உட்கொள்வதன் மூலமாகவும் இவருடைய கர்மவினைகளின்
காரணமாக ஏற்படக்கூடிய அந்த நோய் நொடிகள்
எல்லாம்  ஓடிவிடும்.

 வியாதிகள் ஒரு கண்ணோட்டம்
1.  வாதம். 84,வகைகள்
2. பித்தம் 48,வகைகள்
3. சிலேட்டுமம் 96 வகைகள்
4.  வாயு. 300
5. காசநோய் 7
6. பெருவியாதி  8
7. சூலை (கக்குவான் அம்மை) ‌
. 200
8.  ரத்த சோகை
10. வகைகள்
9. கண். நோய் 96
10. சிலந்தி. 60
11 குன்மம்  8
12. ஜன்னி. 76
13. கழலை (தைராய்டு) 95
14. மகோதரம் (தொப்பை). 7
15. தலைவக்கம். 5

16. உடல்வக்கம்.16

17. கட்டி. 10
18  கரப்பான் ( ஊறல்) 90
19. குலை  நோய் 46
20. நாக்குபல் நோய். 76
21. உடம்பில் நீ ர் கோர்ப்பது. 200
22. உதடு நோய் 100
23. பிள்ளை நோய். 100
24. கடி தோஷம் 500
25. வாயு ரோகம் 90
26. கல்லடைப்பு 80
27. மூட்டுசீழ் 30
28. மேகநீ ர். 21,வகைகள்.  பண்டைய
காலங்களில் நடைமுறையில்காணப்பட்ட  நோய்கள்
 சூரியன் காரக நோய்கள்
1.  இருதயநோய்
2. எலும்பு முறிவுகள்
3. ஒற்றை தலைவலி
4. வலது கண்ணில் பிரச்சினை
5. மஞ்சள் காமாலை
6. காய்ச்சல்.  நவாம்சத்தில் விருச்சிகத்தில்
சூரியன் இருந்தால் இந்த நோய் இருக்கும்                                                     
சூரியன் சூரியன் சாரம் பெற்றால்
1. தாங்கமுடியாத எரிச்சல்காய்ச்சல். வந்தால் நீ டித்து
இருக்கும் ஆறாதபுண் அரிப்பு இருக்கும் சொறியும் தன்மை அதிகம்
உண்டு                                                                                                                            
‌2.  சூரியன் சந்திரன் சாரம் பெற்றால்
1.  உணர்ச்சி வசப்படுதல் கண்நோய் தன்னம்பிக்கை குறையும்
3.  சூரியன் செவ்வாய்
சாரம் பெற்றால்                                                                            1. Low pressure
High pressure தலைசுற்றல் முதுகுவலி (backpain)
4. சூரியன் புதன் சாரம் பெற்றால்
1. ஒற்றை தலைவலி கண்ணாடி அணிதல்
5. சூரியன் குரு சாரம் பெற்றால்
1. பித்தம் கிறுகிறுப்பு
6. சூரியன் சுக்கிரன் சாரத்தில்
1. கல்லடைப்பு யூரின்பிராப்ளம்
7.  சூரியன் சனி சாரத்தில்
1. கண்பிரச்சனை இருதயநோய் இருக்கும்
8. சூரியன் ராகு சாரத்தில்
1. மனநோய் நிம்மதி குறையும்
9. சூரியன் கேதுசாரம்
1. இருதயம் அடைப்பு பிரச்சினை ரத்தம்குறைவு
சந்திரன்  காரக நோய்கள்
1. நுரையீரல்
2. இருதயம்
3. ஆஸ்துமா
4. வசிங்

5. மாதவிடாய் பிரச்சனை
6. கர்ப்பப்பை
7. தலைசுற்றல்
8. ரத்தம் கெடுதல்
9. குடல் நோய்
10. கண்நோய் கண்புரை.  நவாம்சத்தில் விருச்சிகம் சந்திரன்
இருந்தால் வசிங்சளி தொல்லைவரும் 4
ீ ம்பாவம்நீ ர்
தத்துவம் வெள்ளை படுதல் பிரச்சினை தரும்
சந்திரன் சூரியன் நட்சத்திரத்தில்  இருந்தால்
1. கண்நோய் தலைவலி உணர்ச்சி வசப்படுதல்
சந்திரன் சந்திரன் நட்சத்திரத்தில்  இருந்தால்
1. நல்ல கற்பனை வளம் உண்டாகும்
2.கவலையற்ற வாழ்க்கை இருக்கும்
சந்திரன் செவ்வாய் நட்சத்திரத்தில் இருந்தால்
1. சிறுநீ ர் பிரச்சினை யூரினில்இரத்தம் வருதல் சிறு நீ ரகத்தில்
பிரச்சினை இருக்கும்                                                                                                 
சந்திரன் புதன் நட்சத்திரத்தில் இருந்தால்
1. கற்பனைவாதி எப்போதும் மனக் கவலை தாய்ஊந்தையை பிரிந்து
வாழ்வது
சந்திரன் குரு நட்சத்திரத்தில் இருந்தால்
1. நல்ல உடல் நலம் இருக்கும் வியாதி வந்தால் தீரும் மீ ண்டு
விடுவார்கள்    சந்திரன் சுக்கிரன்  நட்சத்திரத்தில் இருந்தால்
1. நோய் எதிர்ப்பு கம்மிஇருக்கும் பாலியல் நோய் இருமல்நோய்
சந்திரன் சனி நட்சத்திரத்தில் இருந்தால்
1.மனநோய் அமைதிகுறைதல் 5 ம்இடம்(புத்தி) நல்ல இருக்கணும்
சந்திரன் ராகுநட்சத்திரத்தில் இருந்தால்
1. கற்பனை வளம் நிறைந்தவர் மனக்குழப்பம் இருக்கும்
சந்திரன் கேது நட்சத்திரத்தில் இருந்தால்
1.எரிச்சலூட்டும் பேச்சு
2.மன இறுக்கம் இருக்கும்
சந்திரன் 8 ல் பாதிப்பு அடைந்தால் சிறுநீ ரக கோளாறு
வரும் செவ்வாய் சனிக்கு இடையே சந்திரன் இருந்தால்
மூச்சுத்திணறல் கண்டிப்பாக வரும் சந்திரன் புதன்
பாதிக்கப்பட்டால் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள் (லூஸ்
டாக்கிங்) தனக்கு தானே பேசிக்கொண்டு இருப்பார்
செவ்வாய் காரக  நோய்கள்
1.வெட்டுக் காயங்கள்
2. சோர்வான கண்கள்
3. கொப்பளங்கள்
4. தீக்காயங்கள்
5. எரிச்சல்
6. எலும்பு முறிவுகள்
7. மஞ்சள் காமாலை
8.ரத்தம்வடிதல்
9. காக்கா வலிப்பு
10. ஆசனவாய் நோய்
11. இரத்த கொதிப்பு
12. கட்டிகள்
செவ்வாய் சூரியன் சாரத்தில் இருந்தால்
1.  ரத்தசோகை ரத்தம் சம்பந்தமான நோய் இருக்கும்
2. ஹீமோ குளோபின் டெஸ்ட் அடிக்கடி எடுக்க வேண்டும்
3. சிவந்த கண்கள் இருக்கும்
4 முதுகு வலி இருக்கும்
செவ்வாய் சந்திரன் சாரத்தில் இருந்தால்
1. தோல் வியாதி இருக்கும்
செவ்வாய் செவ்வாய் சாரத்தில் இருந்தால்
உடல்நலம் சிறப்பாக இருக்கும்
செவ்வாய் புதன் சாரத்தில் இருந்தால்
மனச் சிதறல்கள் இருக்கும்
செவ்வாய் குரு சாரத்தில் இருந்தால்
உடல் நலம் நல்ல சிறப்பு தரும்
செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருந்தால்
1 பாலியல் நோய்
2. சிறுநீ ர் தாரையில் அரிப்பு                                                                                   
செவ்வாய் சனி சாரத்தில் இருந்தால்
1. தற்கொலை எண்ணங்கள் இருக்கும்
2. சின்ன விஷயத்திற்கு மன உளைச்சல் ஏற்படும்
3. அடிக்கடி சிறு விபத்துகள்
4. பல் தொந்தரவு
செவ்வாய் ராகு சாரத்தில் இருந்தால்
1. காமக் கோளாறுகள்
2. தற்கொலை எண்ணம்
செவ்வாய் கேது நட்சத்திரத்தில் இருந்தால்
 1 ரத்த அழுத்தம்
2. பொறுமையின்மை                                                                                                  
 நவாம்சத்தில் விருச்சிக வட்டில்
ீ செவ்வாய் இருந்தால் மேற்கண்ட
செவ்வாய் காரங்க நோய்கள் இருக்கும்
புதன் காரக  நோய்கள்
1. புதன் புத்தி மூளையில் ஏற்படும் மாறுதல்கள்
2. ஐந்தாம் பாவம் பிளஸ் புதன் கெட்டால் புத்தி ஸ்தானம்
பாதிப்படையும் இவர்களுக்கு தலையில் அடிபட கூடாது
3. மறதி ஏற்படும்
4. மனம் பாதிப்பு ஏற்படும்
5. ஐந்தாம் இடத்தை செவ்வாய் சனி சேர்ந்து பார்த்து புதன் சனி
கேட்டாலும் ஒரு நாளாவது மனநிலை பாதிப்பு வரும்
6. பேச்சுக் குரல் (மிமிக்கிரி)
7. நரம்பு தளர்ச்சி
8. ஆண்மை குறைவு  புதன்+சனி புதன்+கேது சேர்ந்து மூன்றாமிடமும்
கெட்டால் வரியம்
ீ பாதிப்பு ஏற்படும் குடும்பப்பற்று இருக்காது
9. சொரி சிறங்கு டைபாய்டு
10. அதிக வியர்வை வருதல்
11. அதிர்ச்சி கூடாது புதன் கெட்டிருந்தால் அவர்களிடம் அதிர்ச்சி
தரும் செய்தியை கூறக்கூடாது
12 ENT problem
13. Skin problem
14. விஷக் காய்ச்சல்
15. வெண் குஷ்டம்
16. சூரியன் புதன் சனி சேர்க்கை இருந்தால் தோலில் வெண்குஷ்டம்
வரும்.
17. ரோகிணி உத்திரம் பூராடம் இம்மூன்றும் தோல் நோய் வரும்
நட்சத்திரங்களாகும்
( உம்) ஆறாம் அதிபதி புதன் ஆக வந்து ரோகிணி உத்திரம்
பூராடம் மூன்று நட்சத்திரங்களின் நின்றால் தோல் நோய்
உண்டு                                                                                                                              
                18. பரணி மகம் உத்திரட்டாதி இம் மூன்று நட்சத்திரங்களும்
மனநோய் நட்சத்திரங்கள் ஆகும்   புதன் சனி கெட்டாலும்
புதன் சூரியன் சாரம்பெற்றால்
1. அரிப்பு இருக்கும்
2. நரம்பு பிரச்சினை
3. தோல்வியாதி
புதன் சந்திரன் நட்சத்திரத்தில் என்றால்
1 மிகவும்அதீத கற்பனாவாதி
புதன் செவ்வாய்⭐ என்றால்
1. தலைவலி
2 மனச்சிதறல்
புதன்புதன் நட்சத்திரத்தில் என்றால்
1. தன்னம்பிக்கை உடையவர்
2. மிகுந்த மனம் கட்டுப்பாடு உடையவர்
புதன் குரு நட்சத்திரத்தில்  என்றால்
1.  சக்தி உடையவரர்
2. நோய் இருந்தாலும் குணமாகும்
புதன் சுக்கிரன்  நட்சத்திரத்தில் என்றால்
1. Skin பிரச்சினை
2. அறிவாற்றல் மிக்கவர்
3. சிந்தனை திறன் அதிகம்
புதன் சனி நட்சத்திரத்தில் என்றால்
1. மனநோய்
2. பிட்ஸ்வரும்
3. தாமதமான பேச்சு இருக்கும்
4. நாக்கில் மச்சம்
5. கரிநாக்கு
புதன் ராகு நட்சத்திரத்தில்
1.தாழ்வு மனப்பான்மை இருக்கும்
புதன் கேது நட்சத்திரத்தில்
1  மனநோய்
2. விரல்களில் காயம் ஏற்படும்
நவாம்சத்தில் விருச்சிகம் புதன்
கண்டிப்பாக Skin பிரச்சினை விரல்களில் காயம் நரம்பு
பிரச்சினை உண்டு
குரு காரக நோய்கள்
1.  கல்லீரல்
2. கனையம்
3. கிட்னி
4. வாதநோய்
5. நுரையீரல்
6. தொடைபகுதி
7. கொழுப்பு
8. மூளை
9. மூட்டுகள்
10. நாக்கு
ஒரு ஜாதகத்தில் பலம் குறைந்த குருவுக்கு சனி தொடர்பு
இருக்குமேயானால் கட்டாயம் கிட்னி கணையம் கல்லீரல்
தொடைப்பகுதி பாதிப்பு ஏற்படும்
(உம்) மேஷத்திற்கு ஒன்பதாம் இடமான குருவுக்கு சனி சேர்க்கை
தொடர்பு கிட்னி கல்லீரல் பிரச்சனை கொடுக்கும் தந்தைக்கு
கண்டிப்பாக இருக்கும்
உடைபட்ட நட்சத்திரங்கள் பூராவும் ஜாயிண்ட்   பற்றிக்கூறும்.
1. சூரியன்  2. செவ்வாய்  3. குரு   இம்மூன்றும் உடைபட்ட
நட்சத்திரங்கள் ஆகும். இம்மூன்றில் ஒரு கிரகம் கேட்டால் கூட
ஜாயிண்ட் பிரச்சனை உண்டா என்று கேட்டால் மிகவும் சரியாக
வரும் குரு நீ சம் செவ்வாய் நீ சம் சூரியன் நீ சம் கண்டிப்பாக
ஜாயிண்ட் பிரச்சனை இருக்கும் கெட்டால் கூட உடைபட்ட
நட்சத்திரங்களில் களத்திரம் அமைந்தால் சில காலமாவது பிரிந்து
வாழ்வார்கள்
1. சர்க்கரை வியாதி
2. மஞ்சள் காமாலை
3. 6 8 12 சம்பந்தம் இருந்தால் உடல் வலி இருக்கும்
4. தலை சுத்தல்
5. வயிற்றுக் கோளாறுகள்
6. விரை வக்கம்

7. கொழுப்பு கட்டிகள்
குரு  சூரியன் நட்சத்திரத்தில் நின்றால் பலன்
1. தொற்றுநோய் (கிளைமேட் மாற்றத்தால்வரும்)
2. அஜீரணம்
3. உணவை குறைத்து எடுத்துக் கொள்வது இருக்கும்
குரு சந்திரன் நட்சத்திரத்தில் நிற்க பலன்
1. நல்ல உடல்நலம் இருக்கும் பயணம் அதிகம் இருக்கும்
குரு  செவ்வாய் குரு சந்திரன் நிற்கபலன்
1. சிறுநீ ர்த் தாரையில் கல் அடைப்பு
2. யூரினில் உப்பு வருவது
3. குடல் நோய்
4. வயிறு வலி
5. அடிக்கடி பாத்ரூம் போவது இருக்கும்
குரு புதன்  நட்சத்திரத்தில்  குரு சந்திரன் நட்சத்திரத்தில்   நிற்கபலன்
1 விரை வக்கம்

2 மூலம் நோய் (Piles)
3. மலச்சிக்கல்
ஆசனவாய் நோய் இருக்கும்
4 ‌
குருகுரு நட்சத்திரத்தில் நிற்க பலன்கள்
1. நல்ல உடல்நலம் இருக்கும் நோய் இருந்தாலும் குணமாகும்
குரு சுக்கிரன் நட்சத்திரத்தில் நிற்க பலன்கள்
1. தலை சுத்தல்
2. வாந்தி
3. ஏப்பம்
4. குடும்ப வாழ்வில் பற்றில்லாமை உடலுறவில் பற்று இல்லாமல்
இருத்தல்
குரு சனி  நட்சத்திரத்தில் நிற்க பலன்கள்
1. வியாதி குணமாக நீ ண்ட நாள் ஆகும்
குரு ராகு நட்சத்திரத்தில் நின்றால்
1. வயிற்று போக்கு சர்ஜரி இருக்கும் (. ஹிரண்யா) குடல் நோய்
குரு கேது நட்சத்திரத்தில்
1 கல்லீரல் வக்கம்

2  தொற்று நோய்கள் இருக்கும்

Tips
1. நவாம்சத்தில் உள்ள கிரக காரக நோய்கள் ஜாதகருக்கு உண்டு
2. நவாம்ச விருச்சிகத்தில் ராகு இருந்தால் உடல் உறுப்பில் விகாரம்
இருந்து வெட்டி எடுத்து இருப்பார்கள்
சுக்கிரன் காரக  நோய்கள்
1. பாலியல் நோய்
2. sugar
3. அழகு படுத்துவதின் மூலம் வரும் நோய்கள்
4. மூத்திரப்பை
5 கண்புரை
6. மயக்கம்
7. வெண் குஷ்டம்
8 வெள்ளைப் படுதல்.
9. மாதவிடாய் கோளாறு
10. கண்பார்வை கோளாறு போன்றவை வரும்
சுக்கிரன் சூரியன் நட்சத்திரத்தில் நிற்கபலன்
1. கண் நோய் பார்வைக் குறைபாடுகள்
2. யூரின் பிரச்சனை நீ ர் அதிகம் குடிக்க வேண்டும் நாக்கு வறண்டு
போகும்
சுக்கிரன் சந்திரன் நட்சத்திரத்தில் நிற்கபலன்
1. விந்தணு குறைபாடு
2. நீ ர்த்த விந்து
3. ஆண் வாரிசு தடை. முதல் குழந்தை பெண் குழந்தை இருக்கும்.
4. விரைவில் விந்து வெளியேறும் தூக்கத்தில் விந்து வெளியேறுதல்
5. பிறப்பு உறுப்பில் குறைகள் இருக்கும்
சுக்கிரன் செவ்வாய் நட்சத்திரத்தில்
1. பாலியல் நோய் வரும்
சுக்கிரன் புதன் நட்சத்திரத்தில் இருந்தால்
1. தோலில் புள்ளிகள்.
2. எரிச்சல் உண்டு
சுக்கிரன் குரு நட்சத்திரத்தில் இருந்தால்
1. பலவனமான
ீ காமம்
2. தலைசுற்றல்
3. மயக்கம்
சுக்கிரன் சுக்கிரன் நட்சத்திரத்தில்  இருந்தால்
1.நல்ல உடல்நலம் இருக்கும்.
சுக்கிரன் சனி நட்சத்திரத்தில்
1. கல்லடைப்பு
2. சுகபோகம் தடை
3. விந்தணு குறைவு
4. மிகவும் தாமதமான விந்து வெளியேறல்
சுக்கிரன் ராகு நட்சத்திரத்தில் இருந்தால்
1. நரம்புத் தளர்ச்சி
2. பாலியல் நோய்கள்
3. கண் நோய்கள்
சுக்கிரன் கேது நட்சத்திரத்தில்  இருந்தால்
1. கண்நோய் பார்வை சம்பந்தமான பிரச்சனை இருக்கும்
2. விந்து கோளாறு
3. இரத்த அணுக்கள் குறைவு.
சுக்கிரன் சந்திரன் இருவரும் ஒரு கணவன் மனைவி ஜாதகத்தில்
பாதிப்படைந்தால் பலம் இல்லை என்றால்
கரு உற்பத்தி நடைபெறுவது  இல்லை.
சனிபகவான் நோய்கள்
1. சுற்றுச்சூழல் மாற்றத்தால் மாசுபாட்டால் வரக்கூடிய வியாதிகள்
இருக்கும்
2. மனச் சிதறல்கள்
3. வயிற்றுக் கோளாறு
4. உணவு செரியாமை
5. குடலில் ஏற்படும் மாறுபாடுகள்.
6. பல் நோய்
7. சிராய்ப்பு காயங்கள்
8. மனநோய்
9 கட்டிகள்
10. காது கேளாமை
11. மூட்டு தளர்வு
12. பக்கவாதம்
13. யானைக்கால் நோய் (நீ ண்ட நாட்களாக குணமடையாத
நோய்கள்)
14. சனி காற்று ராசியாக வந்து மூன்றாம் அதிபதி சம்பந்தம்வந்தால்
காது சம்பந்தமான நோய்கள் வரும்
சனி சூரியன் நட்சத்திரத்தில் நிற்கபலன்
1. கண் நோய்
2. காசநோய்
3.(கக்குவான் இருமல்)
சனி சந்திரன் நட்சத்திரத்தில்
1.  மாதவிடாய் கோளாறுகள் இருக்கும்
2. எதிர்காலம் பற்றிய பயம் இருக்கும்
3. கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்
4. உழைக்காமல் எதையும் பெற மாட்டார்கள்.
சனி செவ்வாய் நட்சத்திரத்தில் நின்றால் பலன்
1. அடிக்கடி காய்ச்சல் வரும்
2. கட்டிகள் கொப்பளங்கள்
3. வயிறு வலி
4 ரத்தம் சம்பந்தமான வியாதிகள் போன்றவை வரும்
சனி புதன் நட்சத்திரத்தில் நின்றால் பலன்
1. நரம்புத் தளர்ச்சி
2. ஞாபக சக்தி குறைவு இருக்கும்
[சனிகுரு நட்சத்திரத்தில் நின்றால்பலன்
1. சோம் பேறித்தனம்.
2. தூங்கி விழுதல்
3. மஞ்சள் காமாலை
4. உயர் ரத்த அழுத்தம்
5. அதிக உணவு எடுத்தல் இருக்கும்
சனி சுக்கிரன் நட்சத்திரத்தில் இருந்தால்
1. பாலியல் நோய்
2. கண் சம்பந்தப்பட்ட நோய் உண்டு
3. உணவு பாதையில் கோளாறு இருக்கும்
சனி சனி நட்சத்திரத்தில்
1. நல்ல உடல் நலம் இருக்கும்
2. அவநம்பிக்கை மேலோங்கும்
  சனி ராகு நட்சத்திரத்தில்
1.கண்டு பிடிக்க முடியாத வியாதிகள் இருக்கும்
2. ஆண் தன்மையை  குறைக்கும்
சனி கேது நட்சத்திரத்தில்
1. உடம்பில் நீ ர் வற்றி போகும் நீ ர்சத்து குறைதல்
2. பிட்யூட்டரி சுரப்பியில் மாற்றம்
ராகு நோய்கள்
1. மூலநோய்
2. கனையம்
3. அட்ரீனல் சுரப்பிகள்
4. தமனிகள்
5. ரத்த நாளங்கள்
6. மேலிருந்து கீ ழ் விழுதல் (tower.   மேலிருந்து கீ ழே குதித்தல்)
7. குரல் நோய் அறிவு குறை
8 தோல்நோய்
9. உதடுநோய் கண்டறிய முடியாத நோய்கள்.
(சந்திரன்.  மதி.   புதன்.   புத்தி  ராகு.தகவல் தொடர்பு
Communication   Knowledge.
லக்னத்தில் ராகு உடல் நலம்கெடும்.
ஆயுள் பலம் 5,ல் ராகு. இருந்து பாவர்கள் பார்வை பெற்றால்
ஞாபகம் மறதி+ புத்திபேதலித்தல்
இருக்கும்.   (உம்).  சனி+செவ்வாய்.  பார்வை.  5 ம். அதிபதி கெடுவது. 
கோச்சார ராகு வரும் காலங்களில் ஜாக்கிரதை
யாக இருக்கவேண்டும்   6 ல் ராகு இருந்தால் நரம்பு மண்டலத்தில்
நோய். 
8 ல். ராகு இருந்தால் கைகால் மூட்டு வலிகள் இருக்கும்
நரம்புகள். இயங்காமை. 
12. ல் ராகு இருந்தால்  தொடர் நோய் வரும்.  மாதாமாதம் மெடிக்கல்
செல்வு இருக்கும்
(ராகு+குரு) 8 ல் இருக்க. செவ்வாய் பார்த்தாலும் கூடினாலும்
வயிற்றில் அறுவை சிகிச்சை உண்டு.
சந்திரனுக்கு 5 ல் ராகு இருந்தால் அடிக்கடி விபத்து நீ ரில் கண்டம்
இருக்கும். ஒரு ஜாதகத்தில் ராகு அல்லது கேது. 6 அல்லது 12 ல்
அமர்ந்தால் அதன் திசாபுத்தி காலங்களில் நரம்பு சம்பந்தமான
பிரச்சினை உண்டு.  
சனிவடு
ீ லக்னமாகி செவ்வாய் சம்பந்தம் வந்தால் எப்போதும்
காமசிந்தனை இருக்கும்.
(ராகு+சந்திரன்.) சேர்க்கை மனக்குழப்பம் இருக்கும். பேச்சை
மாற்றிமாற்றி பேசுவார்கள். 
லக்னாதிபதி+சந்திரன். இருவரையும் ராகு கூடினாலும் பார்த்தாலும்
உடலில்அரிப்பு உண்டு. 
நவாம்சத்தில் விருச்சிகம் ராகு அடிக்கடி கீ ழே விழுதல்
இருக்கும்.  விஷக்கடிஉண்டு அறுவைசிகிச்சை உறுப்பு மாற்றங்கள்
உண்டு.
கேது காரக நோய்கள்
1  மண்ண ீரல் வங்குதல்

2  கண்புரை இருக்கும்
விரை வக்கம்உண்டு.
3 ‌ ீ
4. விஷகாய்ச்சல் (சிக்கன் குனியா டெங்கு)போன்ற நோய்கள். 
5. நுரையீரல் பாதிப்பு
6. வயிறு வலி.  வாந்திபேதி
7. கொப்புளம்
8. தற்கொலை எண்ணங்கள்
9. கண்டறிய முடியாதநோய்கள்.
1. கேது+சனி இனைந்து 7 ல் இருந்தால்
கொப்புளம் வரும் லக்னத்தில் கேது உடல்நலம் குறைவு. தொடர்
மருந்து உண்ணுதல்
புதன் கேது இணைந்து புதன் வட்டில்
ீ இருந்தால் முதுகுத்தண்டு
பிரச்சனை வரும்
3,ல் கேது இருந்தால் கை கால் தோள் பட்டை வலி உண்டு.
ஐந்தில் கேது இருந்தால்  வயறு பிரச்சனை மனப்போராட்டம்
இருக்கும்.
7 ல் கேது யூரின் பிரச்சனை
8 ல் கேது மறைவிட நோய் இருக்கும்
10 ல் கேது வாயுத் தொல்லை இருக்கும். 
மிதுன கேது வாய்க்கோளாறு
துலாம் கேது தோல் நோய்
கன்னி கேது செரிமானக் கோளாறு. உண்டு.
ஆறாம் வடு
ீ சனியின் வடாக
ீ வந்து பாவி இருந்தால் நோயின்
தாக்கம் இருக்கும்.
நவாம்ச விருச்சிகத்தில் கேது இருந்தால் விஷக் காய்ச்சல் பல
தொந்தரவு அம்மை நோய் இருக்கும்
பொதுவாக சுய சாரம் பெற்ற கிரகமாக இருந்தால் நோயின் தன்மை
குறைவாக இருக்கும் மருந்து மாத்திரையில் குணமாகும் தன்மை
இருக்கும்
6 ம் வடு
ீ திதி சூனியம் பாதகம் சம்பந்தப்பட்டு 6-க்குடையவர் எட்டில்
அமர்ந்து ஏதாவது நட்சத்திரத்தில் அமரும் பொழுது
அந்த நட்சத்திரத்தில் நோய் அதிகமாகும் சுயசாரம் அதிக பாதிப்பை
தராது.
மருத்துவம் நட்சத்திரங்கள்
1. அஸ்வினி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. திருவாதிரை (பல்) டாக்டர் வரும்
5. பூசம்
6. மகம்
7. உத்திரம்
8. சித்திரை

9. swathi
10. விசாகம்
11 அனுஷம்
12 மூலம்
13. சதயம்
14. ரேவதி
மன நோய் நட்சத்திரங்கள்
1. பரணி
2. கேட்டை
3. மகம்
5 ம் பாவம் பலம் குறைந்தால் மனநோய் இருக்கும்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கு? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? என்பது பலரின்
கேள்வியாக இருக்கிறது. நான் பணக்காரன் ஆக முடியாதா? எனக்கு எப்போது கோடீஸ்வன் ஆகும்
யோகம் வரும் நான் எப்போ அம்பானி மாதிரி பணக்காரன் ஆவேன் என்றுதான் பலரது கேள்வியாக
இருக்கிறது.
ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு, அவை அமர்ந்திருக்கும் வடுகள்,
ீ உச்சத்தில் இருக்கிறதா? நீச்சமா?
பகையா? நட்பா என்றெல்லாம் ஜோதிடர்கள் ஆராய்ந்து பலன் சொல்வார்கள்.
12 ராசிகளிலும் 9 கிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வடுகளைப்
ீ பொறுத்தும், இணைந்திருக்கும்
கிரங்களைப் பொறுத்தும் ஒருவருக்கு யோகங்களும், பலன்களும், நன்மை தீமைகளும் நடைபெறும்.
நவக்கிரகங்கள் என்று சொல்லக் கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு,
கேது. அனைத்து கிரகங்களுக்கும் ஒளி ஊட்டக் கூடிய கிரகம் சூரியன். ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஆட்சி
வடுகள்
ீ இருக்கின்றன. சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரு ஆட்சி வடுதான்
ீ இருக்கிறது. அதே நேரத்தில்
பிற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்கு இரண்டு ஆட்சி வடுகள்

இருக்கின்றன.
ஒருவருக்கு சூரியன்தான் அப்பா. சிம்ம ராசியில் ஆட்சி, மூலத்திரிகோணம். மேஷம் ராசியில் உச்சம்,
துலாம் ராசியில் நீசம். சந்திரன் அம்மா ஸ்தானத்தில் இருக்கிறார். கடகம் ராசியில் சந்திரன்
ஆட்சி,மூலத்திரிகோணம். ரிஷபம் ராசியில் உச்சம் விருட்சிகத்தில் நீசம். சந்திரனுக்கு பகை கிடையாது.

யாருக்கு எந்த வடு



மேஷம்,விருச்சிகம் ராசிகளில் செவ்வாய் ஆட்சி. மகரம் ராசியில் உச்சம் ,கடகம் ராசியில் நீசம். ரிஷபம்,
துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி. மீ னம் ராசியில் உச்சம். கன்னி ராசியில் நீசம். மிதுனம்,கன்னி ராசிகளில்
புதன் ஆட்சி. கன்னி ராசியில் உச்சம். மீ னம் ராசியில் புதன் நீசம்.

குரு, சனி
தனுசு ,மீ னம் ராசிகளில் குருபகவான் ஆட்சி. கடகம் ராசியில் உச்சம். மகரம் ராசியில் நீசம். மகரம்
,கும்பம் ராசிகளில் சனி ஆட்சி. துலாம் ராசியில் சனி உச்சம். மேஷம் ராசியில் நீசம். ராகு- கேது நிழல்
கிரகங்கள் என்றும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் . இவற்றிர்க்கு சொந்த வடு
ீ கிடையாது.
திடீர் ராஜ யோகங்கள்
வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத
ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார்.

கோடீஸ்வரர்கள்
கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு
சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர்
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக
இருப்பர்.

தசா புத்தி யோகங்கள்


ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின்
அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம்
விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீ னம்
தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை
என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள்
ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும்.

விபரீத ராஜ யோகம்


'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர்
கோடீஸ்வரராகிவிடுவர். விபரீத ராஜயோகம் பலர் ஜாதகத்தில் இருந்தலும் சிலருக்கு தான் யோகத்தின்
பலனை முழுமையாக அனுபவிக்கும் யோகத்தை தருகிறது. அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவனை
கோபுரத்தில் வைக்கும் சக்தி பெற்ற பலமான யோகம்.

திடீர் அதிர்ஷ்டம்
சாதாரண மட்டதில் அடிமை தொழில் செய்தும் கொண்டும்,ஜீவனத்துக்கு கூட கஷ்டம் அனுபவிக்கும்
பலரும், சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்று நாம் நினைக்கும் பலர் இந்த
யோகத்தின் மூலம் சமூகத்தில் உச்ச நிலையை அடைகின்றனர். லாட்டரி சீட்டுக்கள் மூலம் யோகத்தை
கொடுத்து திக்கு முக்காட வைத்து தகுதிக்கு மீ றிய வாழ்வு தந்து அதை அனுபவிக்கும் யோகத்தை தந்து
விடுகிறது.
மறைவு ஸ்தானங்கள்
ஜாதகத்தில் 3, 6, 8, 12 ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3 ம் அதிபதி 6, 8, 12 ம் இடத்திலோ, 6 ம் அதிபதி 3, 8,
12 ம் இடத்திலோ, 8 ம் அதிபதி 3, 6, 12 ம் இடத்திலோ, 12 ம் அதிபதி 3, 6, 8 ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12 ம்
அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன்
கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை
நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில்
நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.

நீ ச பங்க ராஜ யோகம்


ஒரு கிரகம் உச்சம் பெற்றால் 100 சதவிகித பலன் கிடைக்கும் என்றும் நீசம் பெற்றால் பூஜ்யம் பலன்தான்
கிடைக்கும் என்பது விதி. எப்பொழுதுமே விதி என்று ஒன்று இருந்தால் விதி விலக்கு என்று ஒன்று
உண்டு. நீசம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெறும் போது மிகவும் வலுவான நிலையை அடைந்து
அபரிமிதமான பலனைத் தருகிறது. நீசம் பெற்ற கிரகத்திற்கு வடு
ீ கொடுத்த ராசி அதிபதி ஆட்சி, உச்சம்
பெற்றால் அது நீசபங்க ராஜ யோகம் என்ற அமைப்பைத் தருகிறது.

நீ சனை நீ சன் பார்த்தால்


நீசம் பெற்ற ஒரு கிரகம் நீசம் பெற்ற மற்றொரு கிரகத்தை பார்ப்பது நீச பங்க ராஜ யோகம், உதாரணமாக
மேஷத்தில் நீசம் பெற்ற சனி, துலாம் ராசியில் நீசம் பெற்ற சூரியனை பார்ப்பது நீசபங்க ராஜ யோக
அமைப்பாகும். சூரியன் நீசம் பெற்றால் அரசு வேலை கிடைக்காது என்பார்கள். ஆனால் மாமன்னர் ராஜ
ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் சூரியன் நீசமான நிலையில் பிறந்தவர். இவருக்கு
நீசபங்க ராஜ யோகத்தால் நாடாளும் வாய்ப்பு கிடைத்தது.
சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த
ஜாதகனின் வடு
ீ தெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத்
விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும்
புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வரனாக

விளங்குவான். அதே சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த
ஜாதகன் சொற்ப அளவே பலன் பெறுவான். மேலும் வியாதி, கண்ணோய் முதலியன
உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் விரோதமும் ஏற்படும்.

சந்திரன்: நன்மை தரும் சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும்


திரிகோண ஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2 ம் இடத்திலும் லாப ஸ்தானமான 11 ம்
இடத்திலும் நிற்பாரேயாகில் நிறைந்த வருமானமும் நல்ல வடும்
ீ விளை நிலமும் பசு
மாடுகளும் சேர்ந்து வளமான வாழ்க்கை அமையும். இந்த ஜாதகனுக்கு மிகவும் சுகமும்
சொந்த நாட்டிலும் பிற நாட்டிலும் அரசாங்க ஆதாயம் அதிகம் உண்டாகும். அதே சமயத்தில்
பாவக் கிரகங்களின் பார்வை சந்திரனுக்கு இல்லாமல் இருப்பது முக்கியம்.

வெற்றி கொள்ளும் சந்திரன் 3, 5, 7, 11 ஆகிய இடங்களில் தனித்து நிற்க அத்தகைய ஜாதகன்


பெரும் செல்வம் படைத்தவன். மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி
காண்பான். வாக்குவாதம் செய்வதில் வல்லவன். மருத்துவம் படித்து அத்துறையில் சிறந்து
விளங்குவான். நல்ல வருமானம் பெற்று அவன் குடும்பம் விருத்தி அடையும். பகைவர்கள்
அழிவார்கள். ஏனைய மற்ற இடங்களில் சந்திரனால் பலன் இல்லை. எனினும் மற்ற
கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வைக்கேற்றவாறு பலன்கள் அமையும்.

குரு: வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில்


இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபலமான யோகங்கள் உண்டாகும். லட்சுமி கடாட்சம்
பரிபூரணமாக இருக்கும். பொன், பொருள் அதிகம் சேரும். மேலும் 2 ம் இடத்தின் அதிபதி
குருவைப் பார்க்க இவன் கீ ழ் பலர் வேலை செய்ய பல குடும்பங்களை ஆதரிப்பான். குரு 8 ம்
இடத்தில் நின்றால் மனைவியிடம் பகை கொண்டவனாகவும் விரோதிகளால் கண்டம்
அடைபவனாகவும் இருப்பான். பொருள் விரயம் ஆகும். பல வகைகளில் அவமானம் வந்து
சேரும். 6 ம் இடத்தில் குரு இருந்தால் அரசாங்க வகைகளில் பகை உண்டாகும். வியாதியால்
துன்பம் ஏற்படும். 12 ல் குரு நின்றால் பண விரயங்கள் உண்டாகும். இருப்பினும் அந்த வடு

குருவின் அட்சி வடாக
ீ இருந்தால் எந்த துன்பமும் அண்டாது என்பதாம்.

சுக்கிரன்: அசுரர்களில் குருவான சுக்கிரன் ஜாதகனின் கேந்திர கோண ஸ்தானங்களில் நிற்க


மிகவும் நல்ல பலன்களைத் தருவார். பாவக் கிரகங்கள் சுக்கிரனைப் பார்த்த போதிலும் கவலை
அடையவேண்டாம். அவன் பங்களா போன்ற சொத்துக்களும் பொன், முத்து ஆபரணங்களும்
பெற்று சுகம் அடைவான். சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் பலமுடன் இருந்தால் அந்த
ஜாதகனுக்கு ஆயுள் குறைவு ஏற்படும். மேலும் வியாதி, வாத நோய் இவை உண்டாகும்.
வடு, பொன், பொருள்
ீ நஷ்டம் ஏற்படும். அதே சமயத்தில் சுக்கிரன் 12 ல் இருந்து அது ஆட்சி
வடானால்
ீ இறைவன் அருளால் நல்ல யோகமும் சயன சுகமும் உண்டாகும், இது திண்ணம்.

சனி: சூரியனின் குமாரனான மந்தன் எனப்படும் சனி பகவான் 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் நிற்க


ஆயுள் தீர்க்கம் உண்டாகும். நிறைய பொருள் சேரும். சனி 9 ல் இருக்க பிதுர் தோஷம் உண்டு.
விரோதிகளை வெற்றி காண்பான். அரசு மூலம் லாபம் அடைந்து பேரும் புகழும் விளங்க
வாழ்வான். அதிக லாபம் உண்டாகும். சனி 10 ல் இருந்தாலும் நற்பலன்களையே தருவான்.
வாகன யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் முன்னேறி புகழ் அடைவான். சனி
பகவான் 11 ல் இருக்க தேவகுருவான குரு பகவான் 7 ம் இடத்திலும் பாம்பான ராகு 4 ம்
இடத்திலும் செவ்வாய், சூரியன் இவர்கள் 3 ம் இடத்திலும் நிற்க சனி ஜாதகனுக்கு சில
தொல்லைகள் கொடுத்தாலும் ஆயுள் தீர்க்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செவ்வாய்: செவ்வாய் கிரகமானது 1, 2, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து இருந்தால் அந்த


ஜாதகனுக்கு நல்ல பூமி வாய்த்தலும் பெரும் பொருள் சேர்க்கையும் நல்ல விளை நிலமும்
பொன் ஆபரணமும் கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகி பல குடும்பங்களை
காக்கும் திறமை பெற்று பகைவர்களை வெற்றி கொள்ளும் வரனாவான்
ீ என அறிக. சேய்
என்று அழைக்கப்படும் செவ்வாய் 3, 6, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் நின்றால் இருக்கும்
நிலமும் பொருளும் விரயமாகும். குடும்பத்தில் பிரிவு உண்டாகும். திருமணம் முதலிய சுப
காரியங்கள் தள்ளிப் போகும். திருமணம் முடிவதில் கால தாமதம் ஆகும்.

 
உங்கள் ஜாதகத்தில் 10 வட்டதிபதி
ீ சொந்தவடான
ீ பத்தாவது (கர்மஸ்தானம்) வட்டிலேயே
ீ இருப்பது மிக

உன்னதமாக யோக பாவமாகும். எல்லா விஷயங்களில் நன்மையே கிட்டும். சிறந்த கோட்பாடுகள் உள்ள

சுறுசுறுப்பானவர்கள் நீங்கள். உயர்கல்வி பெறுவர்கள்.


ீ மனச் சாந்தியுடன் வாழ்வர்கள்.
ீ தன்பொன்னான

நேரத்தையும். கவனத்தையும் முழுமையாகத் தன் தொழிலில் செலுத்துவர்கள்


வருங்கால கணவர் இப்படித்தான்!

             வருங்கால கணவர் இப்படித்தான்!

 
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்� என்பார்கள் ஆன்றோர்கள். நம்
வாழ்வில் எண்களுக்கான பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த
அடிப்படையிலேயே எண்ணியல் ஆய்வாளர்கள் பலரும்
எண்கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்கள்.
எண்கணித ஜோதிடத்தின் முக்கிய அங்கங்களாக பிறவி எண்ணையும்
விதி எண்ணையும் குறிப்பிடுவார்கள். இவற்றைப் போன்று லக்ன
எண்ணையும் கவனத்தில் கொண்டால், விரிவான பலாபலன்களை
அறிய முடியும் என்கிறார்கள், சில எண்கணித ஆய்வாளர்கள்.

 
இங்கே, லக்ன எண் அடிப்படையில்� கல்யாணத்துக்குக் காத்திருக்கும்
கன்னிப்பெண் களுக்கு, அவர்களுடைய வருங்கால கணவருடைய
இயல்புகளை அறியும் விதமாக ஓர் அட்டவணையையும், உரிய
பலாபலன்களையும் கொடுத்திருக்கிறோம். பலனை அறிய
விரும்புவோர் முதலில் பெண்ணுக்கான லக்னத்தை தெரிந்துகொள்ள
வேண்டும் (பிறந்த வேளையில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ
அதுவே லக்னம் ஆகும்). ஜாதகத்தில்- ராசிக்கட்டத்தில் �ல� என்ற
குறிப்பை வைத்து லக்னத்தை அறியலாம். உதாரணமாக �ல� எனும்
குறியீடு மேஷ ராசிக்கான கட்டத்தில் இருந்தால், அந்த ஜாதகரின்
லக்னம் மேஷம் ஆகும் (உதாரணப் படமும் இங்கே இடம்பெற்றுள்ளது).

 
லக்னத்தை அறிந்துகொண்டீர்களா? இனி, அட்டவணையில் உங்கள்
லக்னத்துக்கு உரிய லக்ன எண், கணவர் எண், அதிபதியை
கவனியுங்கள். உதாரணமாக உங்கள் லக்னம் மேஷம் எனில்� லக்ன
எண் � 9; கணவர் எண் � 6; கணவருக்கான அதிபதி சுக்ரன்.
ஆக �சுக்ரன்� தலைப்பிலான பலா பலன்கள், உங்களின் கணவரது
இயல்பைச் சொல்லும்.

 
இனி பலாபலன்களை தெரிந்துகொள்ளலாமா�

 
சூரியன்: கள்ளம் கபடமறியா கும்ப லக்னக்காரர்களுக்கு
கணவருக்குரிய எண் சூரியனை குறிக்கும் ஒன்றாம் எண்ணாகும்.
இவர்களுக்கு அமையும் கணவர் முன்கோபக்காரர். இவரை
புரிந்துகொள்வது கடினம். குடும்பப் பற்று உள்ளவர். பெரும்பாலும்
பொருத்தமில்லாத கணவரே அமைவர். சித்திரை மாதம் பிறந்த
பெண்கள் எனில், கணவருடன் அடிக்கடி வாக்குவாதங்கள்  ஏற்பட
வாய்ப்பு உண்டு. ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் எனில், உங்கள் பேச்சுக்கு
அடங்கிநடக்கும் கணவர் வாய்ப்பார்.

 
பரிகாரம்: தினம் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு.
இதனால், அன்பான கணவர் வருவார். சூரிய பகவானுக்கு அர்ச்சனை
அபிஷேகம் செய்வதும், சூரியனார் கோயில் சென்று தரிசித்து
வருவதும், நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற்றுத் தரும்.

 
சந்திரன்: எதிலும் முன்யோசனை, தன்னம்பிக்கைக் கொண்ட மகர
லக்னக்காரர் களுக்கு கணவரின் எண் சந்திரனின் இரண்டாம்
எண்ணாகும். பொருத்தமான கணவர் கிடைப்பார். வாழ்க்கையில்
மற்றவர்களைவிட ஒருபடி மேலே இருக்கவேண்டும் எனும்
துடிப்பும், முயற்சியும் கொண்டவராக திகழ்வார். நீங்கள் உங்களின்
பிடிவாதக் குணத்தை மாற்றிக்கொண்டால் குடும்பம் மேன்மை பெறும்.
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் எனில், எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றும் நல்ல கணவர் வாய்ப்பார். கடக ராசியில் பிறந்த
பெண்கள் எனில், உங்கள் கணவர் கற்பனா சக்தி மிகுந்தவராகத்
திகழ்வார்.

 
பரிகாரம்:  மூன்றாம் பிறை வழிபாடு,  அழகான � அன்பான கணவர்
கிடைக்கச் செய்யும். சந்திரனார் கோயிலுக்குச் சென்று
அபிஷேகம், அர்ச்சனை செய்வதால் தீர்க்க சிந்தனையுள்ள கணவர்
வாய்ப்பார்.

 
 
 
குரு: எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் மிதுன லக்ன பெண்கள்
மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு கணவரின் எண் குருவின்
மூன்றாம் எண்ணாகும். மிதுன லக்னக் காரர்களுக்கு தாமத
திருமணம்தான் சிறப்பான கணவரைத் தரும். குடும்ப வாழ்க்கை நல்ல
முறையில் அமையும். கன்னி லக்னக்காரர்களுக்கு இன்பகரமான
குடும்ப வாழ்க்கை கிடைக்கும். பிரியமான, அடக்கமான கணவர்
அமைவார். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடந்துகொள்வர்.

 
பரிகாரம்: மிதுன, கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பாதகாதிபதி
என்பதால் வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு
வாருங்கள். திருச்செந்தூர் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு
வருவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

 
புதன்: தனுசு மற்றும் மீ ன லக்னக் காரர்களுக்கான கணவரின் எண்
புதனின் ஐந்தாம் எண்ணாகும். புதன் இவர்களுக்கு பாதகாதிபதியாக
வருவதால், தாமதத் திருமணம் நல்ல கணவரைத் தரும்.
இல்லையெனில் அதிருப்தியுடன் வாழ நேரிடும். கணவர் அறிவாளி.
அவர் விருப்பப்படியும் சொல்படியும் நடந்தால் நன்மை. அவரது
கருத்துக்கு இணைந்து செயல்பட்டால், வாழ்க்கை இனிக்கும்.

 
பரிகாரம்: மதுரை ஸ்ரீமீ னாட்சியம்மையையும் ஸ்ரீசொக்கநாதரையும்
வழிபட்டு வாருங்கள். நவக்கிரகத்தில் புதபகவானை வழிபடுவதால்
நன்மைகள் வந்து சேரும்.

 
சுக்கிரன்: குடும்ப பொறுப்புமிக்க மேஷ லக்னக்காரர்கள் மற்றும் சுய
மரியாதை மிக்க விருச்சிக லக்னக்காரர்களுக்கான கணவரின்
எண், சுக்ரனுக்கு உரிய ஆறாம் எண்ணாகும். மேஷ லக்னம்
எனில், குடும்பப் பற்று மிக்க கணவர் வந்துசேர்வார். அவருக்கு
பெண்கள் விரோதிகளாக இருப்பர். குடும்பப் பொறுப்புக்களை நீங்களே
ஏற்கவேண்டியது இருக்கும். விருச்சிக லக்னக்காரர்களுக்கு கணவரின்
ஒத்துழைப்பு கிடைக்காது. உறவினர்களால் கணவரிடம் அந்நியோன்யம்
குறையும்.

 
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதர் � ஸ்ரீரங்கநாயகி தரிசனம் நன்மை அளிக்கும்.
நல்ல பண்புள்ள கணவர் வாய்ப்பார். வெள்ளிக்கிழமைகளில் அருகில்
உள்ள கோயிலுக்குச்சென்று நவக்கிரகங்களில் சுக்ரபகவானுக்கு
அர்ச்சனை செய்து வழிபட்டால், வரப்போகும் கணவருக்கு வாழ்வில்
வெற்றி கிடைக்கும்

 
சனி: எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய கடக லக்னக்காரர்கள் மற்றும்
சுதந்திர விரும்பிகளான சிம்ம லக்னக்காரர்களின் கணவருக்கான எண்
சனியின் எட்டாம் எண் ஆகும். கடக லக்னக்காரர்களுக்கு மாற்று
சிந்தனையும், பாசமும் மிகுந்த கணவர் வாய்த்தாலும் திருப்தி
அடையமாட்டார்கள். சிம்ம லக்னக்காரர்களுக்கு  மனதுக்கு இனிய
கணவர் வாய்ப்பார். உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார்.
நீங்களும் அவரிடம், உங்கள Ĭ
அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள
மனைவி யாருக்கெல்லாம் அமையும்
ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பது பழமொழி. இதுபோன்ற அதிர்ஷ்டமான
மனைவி ஒருவருக்கு கிடைக்க அவரது ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

பதில்: அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்பு உள்ள பெண் ஒருவருக்கு மனைவியாக அமைய


சம்பந்தப்பட்ட ஆணின் ஜாதகத்திலும் சில அமைப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
களத்திரகாரகன் (சுக்கிரன்) நல்ல நிலையில் அமைந்திருப்பதுடன், சப்தமாதிபதியும் (7 ஆம் வட்டிற்கு

உரிய கிரகம்) சிறப்பாக இருக்க வேண்டும்.

பணக்கார வட்டுப்
ீ பெண்களுக்கு மட்டும்தான் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்பு உள்ளது என்று சில
நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறானது. பணக்கார வட்டில்
ீ பிறந்து, செல்வச் செழிப்பில்
வளர்ந்திருந்தாலும், திருமணமாகி புகுந்த வட்டிற்கு
ீ சென்ற பின்னர் அந்தக் குடும்பத்தையும்
வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றால்தான் அந்தப் பெண் அதிர்ஷ்டக்கார ஜாதக அமைப்பு
உடையவராக கருதப்படுவார்.

ஒரு சில பெண்கள் ஏழை வட்டில்


ீ இருந்தாலும், நடுத்தர குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு அந்தக்
குடும்பத்தின் செல்வநிலை, கௌரவம் ஆகியவற்றை உயர்த்துவார்கள். அந்தப் பெண் வந்த
நேரம்தான் அந்தக் குடும்பம் தழைப்பதற்கு காரணமாக இருக்கும்.

செல்வ நிலையை மட்டும் வைத்து ஒரு பெண்ணுக்கு லட்சுமி கடாட்ஷம் உள்ளது என்று கூறிவிட
முடியாது. அனைத்து தரப்பினரிடமும் மரியாதையாகப் பழகும் விதம், கணவனின்
வருமானத்திற்குள் குடும்பம் நடத்துவது, கணவரை பெரிய சங்கடங்களில் சிக்க வைக்காமல்
தவிர்ப்பது போன்ற குணங்களை ஒருகிணைந்து பெற்ற பெண்களே உண்மையில் அதிர்ஷ்டக்கார
மனைவிகளாகத் திகழ்கின்றனர்.

சார ஜோதிடம் என்றால் என்ன?


February 19, 2018ammanveera
ஒரு ஆய்வு நோக்கிற்கு கீ ழ்க்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம், அதன்படி, கீ ல
வருடம் ஆடி மாதம் 13 ம் நாள் (28-07-1968) ஞாயிற்று கிழமை மாலை 5 மணி 15 நிமிடத்திற்கு
பாளையங்கோட்டையில் பிறந்த ஆண் குழந்தையின் ஜாதகம் பின்வருமாறு::
 பிறப்பு கால தசா இருப்பு: சுக்கிர
தசை 13 வருடம், 2 மாதம், 29 நாட்கள்

நவாம்ச கட்டத்தை கொண்டே கிரகங்களின் சாரத்தை அறியலாம். இருப்பினும் வாசகர்களுக்காக


ஒவ்வொரு கிரகத்தின் சாரத்தினை தருகிறேன்.

சூரியன் ——– பூசம் 3 இல் ——– சனி சாரம்


சந்திரன் ——– பூரம் 2 இல் ——– சுக்கிரன் சாரம்
செவ்வாய் ——– புனர்பூசம் 4 இல் ——– குரு சாரம்
புதன் ——– புனர்பூசம் 4 இல் ——– குரு சாரம்
குரு ——– பூரம் 1 இல் ——– சுக்கிரன் சாரம்
சுக்கிரன் ——– ஆயில்யம் 2 இல் ——– புதன் சாரம்
சனி ——– அஸ்வினி 1 இல் ——– கேது சாரம்
ராகு ——– ரேவதி 1 இல் ——– புதன் சாரம்
கேது ——– ஹஸ்தம் 3 இல் ——– சந்திரன் சாரம்

இனி இந்த ஜாதகத்திற்கு பலனை பாரம்பரிய முறைப்படி எப்படி நிர்ணயிக்கப்படும் என்பதை


பார்ப்போம். அதன் படி இந்த ஜாதகத்திற்கு சுமார் ஏழு கேள்விகளை முன்வைத்து பலனை எப்படி
நிர்ணயிப்பது என பார்ப்போம்.

கேள்விகள்:
1. ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2. ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
3. ஜாதருக்கு குழந்தை பாக்கியம் உண்டா?
4. ஜாதரின் தொழில் ஸ்தானம் எப்படி இருக்கும்?
5. ஜாதகர் மாத சம்பளம் பெறும் அமைப்பு உள்ளதா?
6. அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பொருளாதார
முன்னேற்றம் உண்டா?
7. ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்?
இனி மேற்கண்ட கேள்விக்கான விடைகளை இந்த ஜாதகருக்கு பாரம்பரிய முறை மூலம் எப்படி
எல்லாம் நிர்ணயிக்கபடுகிறது என பார்ப்போம்.
கேள்வி 1 :
ஜாதகரின் லக்னமான தனுசுவின் அதிபதி குரு ஆகும், லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை, மேலும்
எந்த கிரகமும் லக்னத்தை பார்க்கவில்லை. லக்னாதிபதி குரு இந்த ஜாதகத்தில் பாக்கிய
ஸ்தானமான ஒன்பதில் உள்ளார். மேலும் தன்னுடைய வட்டை
ீ பார்க்கிறார். எனவே லக்னம்
பலபடுகிறது. இதனால் ஜாதகரின் ஆரோக்கிய நிலை சிறப்பாக உள்ளது.
அதே நேரத்தில் லக்னாதிபதி குரு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வட்டில்
ீ இருந்தாலும்
லக்னத்திற்கு எட்டாம் அதிபதியான சந்திரனுடன் சேர்ந்து இருப்பதாலும் மேற்கண்ட குரு சந்திரன்
இருவரும் எட்டாம் வட்டில்
ீ உள்ள சுக்கிரன் சாரத்தில் உள்ளதாலும் (சுக்கிரன் ஆறுக்கும் அதிபதி)
ஜாதகரின் லக்னம் பலமிழக்கும். எனவே ஜாதகரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது என்றும்,
உடல் ஆரோக்கியத்திற்கு இரண்டு விதமான பலன்களை நிர்ணயம் செய்யலாம்.

கேள்வி 2:
7-ம் வட்டில்
ீ எந்த கிரகமும் இல்லை, 7-ம் வட்டின்
ீ அதிபதியான புதன், லக்னதிபதியும் ஒன்பதாம்
வட்டில்
ீ உள்ள கிரகமான குருவின் சாரத்தில் உள்ளதாலும், லக்னத்திற்கு பூர்வ புண்ணிய மற்றும்
பாக்கியஸ்தானம் செவ்வாய் மற்றும் சூரியனுடன் சேர்ந்திருப்பதாலும் மேலும் களத்திரகாரனான
சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதாலும் ஜாதகரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதே
நேரத்தில் ஏழாம் வட்டு
ீ அதிபதியான புதன் எட்டாம் வட்டில்
ீ இருப்பதாலும் கலத்திரகாரகனான
சுக்ரனும் எட்டாம் வட்டில்
ீ மறைந்தாலும், மேலும் சுக்ரன் எட்டாம் வட்டில்
ீ உள்ள புதனின் சாரத்தில்
உள்ளதாலும், நவாம்ச சக்ரத்தில் களத்திரகாரகன் சுக்ரன் சனியின் (நீச்சமான) வட்டில்
ீ உள்ளதாலும்
திருமண வாழ்க்கை என்பது ஜாதகருக்கு சிறப்பாக இல்லை, என்றும் இந்த ஜாதகரின் ஏழாம் வட்டு

பலன் நிர்ணயிக்கப்படும்.
மேலும் எட்டில், ஏழாம் வட்டு
ீ அதிபதி புதன் மற்றும் களத்திரகாரகன் சுக்ரன் இவர்கள்
மட்டுமில்லாமல் இவர்களுடன் சூரியனும், செவ்வாயும் இணைந்திருப்பது பலமான களத்திர
தோஷத்தை தரும் என்பதை பெரும்பாலான பாரம்பரிய முறையை பின்பற்றும் ஜோதிடர்கள்
கூறுவார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

கேள்வி 3:
இரண்டாம் வட்டிற்குரிய
ீ (குடும்பாதிபதி) சனி, ஐந்தாம் வட்டில்
ீ (புத்திரஸ்தானம்) நீச்சமானாலும்
கூட, சனி நின்ற சார அதிபதி கேது, லக்னத்தில் பலமான கேந்திரமான பத்தாம் வட்டில்
ீ உள்ளதாலும்,
லக்னாதிபதி மற்றும் புத்திரகாரகனான குரு (முழுசுபர்) புத்திர ஸ்தானத்தை தன்னுடைய ஒன்பதாம்
பார்வையால் பார்பதாலும் ஜாதகருக்கு குழந்தை என்பது திருமணமான உடனே பிறக்கும். புத்திர
தோஷம் என்பது எதுவும் இந்த ஜாதகத்தில் இல்லை.
அதே நேரத்தில் ஐந்தாம் வட்டு
ீ அதிபதியான செவ்வாய் எட்டில் நீச்சமடைந்திருப்பதாலும்
இரண்டாம் வட்டு
ீ (குடும்பாதிபதி) அதிபதி சனி ஐந்தில் நீச்சமடைந்திருப்பதாலும் மேலும் சனி,
செவ்வாய் இரண்டும் நவாம்ச சக்கரத்திலும் நீச்சமாக இருப்பதாலும், இது மட்டுமல்லாமல் புத்திர
காரகன் குரு, லக்னத்திற்கு எட்டாம் அதிபதியான சந்திரனும் சேர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல்,
எட்டாம், வட்டில்
ீ உள்ள தன்னுடைய பகை கிரகமான சுக்கிரனின் (அசுர குரு) சாரத்தில் இருப்பதால்,
ஜாதகருக்கு வளமான புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறப்பை கூட தடுத்து நிறுத்தும், என்பதை
நிச்சயமாக பெரும்பாலான பாரம்பரிய முறையை பின்பற்றும் ஜோதிட அறிஞர்கள் கூறுவார்கள்
என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.
கேள்வி 4:
பத்தில் (தொழில் ஸ்தானம்) ஒரு பாம்பாவது (ராகு (அ) கேது) இருக்கவேண்டும் என்பது ஜோதிட
பழமொழி. அதன்படி இந்த ஜாதகத்தில் பத்தாம் வட்டில்
ீ கேது இருப்பதும், கேது லக்னத்திற்கு
பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சந்திரனின் சாரத்தில் உள்ளதாலும், பத்தான் அதிபதி புதன்,
லக்னாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ளவருமான குருவின் சாரத்தில் உள்ளதாலும்
ஜாதகருக்கு தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது.
மேலும் பத்தாம் அதிபதி புதன், நவாம்ச லக்னத்திற்கு பத்தில் இருப்பதும் ஒருவகையில் தொழிலில்
சிறப்பை தரும். அதே நேரத்தில் பத்தாம் வட்டு
ீ அதிபதி புதன், லக்னத்திற்கு எட்டில் மறைவதும்,
தொழிலுக்கு காரகமான சனி ராசி சக்கரத்திலும், நவாம்சசக்கரத்திலும் நீச்சமாக இருப்பதும், பத்தாம்
வட்டில்
ீ உள்ள காது, லக்னத்திற்கு எட்டாம் வட்டு
ீ அதிபதியான சந்திரனின் சாரத்தில் இருப்பதாலும்
ஜாதகருக்கு அடிக்கடி தொழிலில் பிரச்சனைகள் அதிக அளவு வரும் என்றும் ஒரு சாரார் பலனை
நிர்ணயம் செய்வார்கள்.

கேள்வி 5:
அடிமை தொழிலில் அதாவது மற்றவரிடம் மாதசம்பளம் பெறுவதை குறிக்கும் கிரகம் சனி ஆகும்.
சனி ராசியிலும் நவாம்சதிலும் நீச்சமாக இருப்பதால் அடிமை தொழில் அதாவது உத்யோகம் என்பது
ஜாதகருக்கு அமையாது. மேலும் ஆறாம் வடு
ீ அடிமை தொழிலை குறிக்கும். ஆறாம் வட்டு
ீ அதிபதி
எட்டில் இருப்பதாலும், எட்டில் உள்ள புதனின் சாரத்தில் உள்ளதாலும் அடிமை தொழில் அதாவது
உத்யோகம் என்பது ஜாதகருக்கு விதிப்படி அமையாது.
அதே நேரத்தில் அடிமை தொழிலின் காரகனான சனி நீச்சமடைந்தாலும், லக்னாதிபதியும்,
முழுசுபருமான குரு சனியை பார்ப்பதால், மற்றும் சனி பத்தாம் வட்டில்
ீ உள்ள கேதுவின் சாரத்தில்
உள்ளதால் ஜாதகருக்கு மாத சம்பளம் வாங்கும் உத்யோகம் விதிப்படி உண்டு. மேலும் ஆறாம் வட்டு

அதிபதி சுக்ரன் எட்டில் இருந்தாலும், பத்தாம் வட்டு
ீ அதிபதியான புதனின் சாரத்தில் உள்ளதால் மாத
சம்பளம் பெரும் அமைப்பு விதிப்படி ஜாதகருக்கு உண்டு எனவும் வேறு ஒரு சாரார் பலனை
நிர்ணயம் செய்வார்கள்.

கேள்வி 6:
அரசாங்கத்திற்கு காரகனான சூரியன் எட்டில் இருந்தாலும் சூரியன் நின்ற சார அதிபதி சனி
லக்னத்திற்கு பூர்வ புண்ய ஸ்தானமான ஐந்தாம் வட்டில்
ீ இருப்பதாலும், சூரியன் லக்னத்திற்கு ஐந்து
மற்றும் பத்தாம் அதிபதிகளான புதனின் சாரத்தில் உள்ளதால் மாத சம்பளம் பெரும் அமைப்பு
விதிப்படி ஜாதகருக்கு உண்டு எனவும் வேறு ஒரு சாரார் பலனை நிர்ணயம் செய்வார்கள்.
அதே நேரத்தில் சூரியன் எட்டில் மறைந்ததும், சூரியன் நின்ற சார அதிபதி சனி ராசி, நவாம்சத்தில்
நீச்சமானதும், பத்தாம் வட்டு
ீ அதிபதி புதனும் எட்டில் மறைந்ததும் (உத்யோகத்திற்கே பிரச்சனை
தரும் அமைப்பு) மேலும் ராஜ கிரகமான செவ்வாய் ராசியிலும் நவாம்சத்திலும் நீச்சமடைந்ததும்,
ஜாதகத்தில் (ராசி கட்டத்தில்) செவ்வாய் எட்டில் இருப்பதும் (மறைந்ததும்) ஜாதகருக்கு அரசாங்கம்
மூலம் எவ்வித வருமானமும் கிடைக்க ஜாதகத்தில் வழி இல்லை என பெரும்பாலான பாரம்பரிய
முறையை பின்பற்றும் ஜோதிட அறிஞர்கள் பலனை நிர்ணயம் செய்வார்கள் என்பதை
வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

கேள்வி 7:
இரண்டாம் வட்டு
ீ அதிபதி (தனாதிபதி) சனி, லக்னத்திற்கு பூர்வபுண்ணிய வடான
ீ இன்தாம் வட்டில்

இருப்பதாலும், சனி நின்ற சாரநாதன் கேது, லக்னத்திற்கு பலமுள்ள கேந்திரமான பத்தாம் வட்டில்

இருப்பதாலும், ஜாதகர் தன்னுடைய வாழ்நாளில் எப்போதும் பொருளாதார ரீதியில் சிறந்து
விளங்குவார் என்று பலனை ஒரு சாரர் நிர்ணயம் செய்வார்கள்.
மேலும் லக்னாதிபதியும் இயற்க்கை சுபருமான (தேவ) குரு, இரண்டாம் வட்டு
ீ அதிபதியான சனியை
பார்ப்பதால் தன நிலையில் சிறந்தே ஜாதகர் விளங்குவார் என தங்களுடைய கருத்தினை மேலும்
வலியுறுத்தி கூறுவார்கள்.

அதே நேரத்தில் இரண்டாம் அதிபதி சனி ராசியிலும், நவாம்சதிலும் நீட்சமாக உள்ளதாலும், சனி
நின்ற ராசியின் (மேலும்) அதிபதி செவ்வாயும், ராசியிலும் நாவம்சதிலும் நீட்சமாக உள்ளதாலும்,
மேலும் செவ்வாய் ஏட்டில் மறைந்தாலும் தன ஸ்தானம் கேட்டுவிடுகிறது. மேலும் சனி நின்ற சார
நாதன் கேது கேந்திர ஸ்தானமான பத்தில் இருந்தாலும், சனி கேதுவும் 6, 8 என்ற நிலையில்
இருப்பதால் தன் ஸ்தானம் பலம் குறைந்த நிலையிலேயே இருக்கும் என ஒரு சாரார் தங்களுடைய
கருத்தினை வலியுறுத்தி கூறுவார்கள். மேற்கண்ட இரண்டு விதமான பலனை (நன்மை, தீமை) ஒரு
ஜாதகத்திற்கு நிர்ணயம் செய்வது எப்படி? அறிவுக்கும், அறிவியலுக்கும் ஏற்புடையதாக இருக்கும்?
ஒரேமாதிரியாக ஜாதகத்தை கணித்த இவர்களால் பலனை ஏன் ஒரே மாதிரியாக உருவாக்க
முடியவில்லை என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்

மேற்கண்ட ஜோதிடர்கள், ஜோதிடத்தை சரியாக கற்க வில்லை என்ற அவசர முடிவுக்கு நம்மால்
வரமுடியாது, வரவும் கூடாது. ஏனெனில் மேற்கண்ட ஏழு கேள்விகளை ஆய்வு செய்த விதம்
அனைத்தும், நம் முன்னோர்கள் எழுதிய நூல்களையே ஆதாரமாகவும், அடிப்படையாகவும்
கொண்டு நிர்ணயிக்க பட்ட பலன்கள் என்றால் அது மிகையாகது.

ஆனால் இந்த பழமையான நூல்களில் ஏதேனும் கருத்தொற்றுமை உள்ளதா என பார்த்தோமானால்


ஒரு புத்தகத்தில் இருப்பதை முழுமையாக மறுத்து வேறு புத்தகத்தில் இருப்பதை நிறைய
இடங்களில் காணலாம். உதாரணமாக கீ .பி பத்தாம் நூற்றாண்டில் எழுதிய புத்தகத்தை, பதினோராம்
நூற்றாண்டில் எழுதிய நூல்கள் மறுத்தும், வேறுபடுத்தியும் சில கருத்துகளை கூறுகின்ற
வேளையில், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் உருவான சில நூல்கள், பத்தாம் நூற்றாண்டில்
உருவான நூல்களை வரவேற்றும், பதினோராம் நூற்றாண்டில் உருவான நூல்களின் கருத்துகளை
மறுத்தும் உள்ளன என்பது தான் நம் பாரம்பரிய ஜோதிட முறையின் வளர்ச்சி (?) என்பதை
அறிவியல் ரீதியாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

அதாவது ஒருதுறை வளர்ச்சி அடையும் போது (அடுத்த பரிமானத்திற்கு), ஏற்கனவே மரபுவழியில்


தொன்று தொட்டு வந்து, நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகளை எல்லாம் களையெடுத்து,
உரமாக புதிய கருத்துகளை கொண்டு அந்த துறை ஒரு அடிமேல் நோக்கி அடுத்த தளத்திற்கு
செல்லும்.

அதேநேரத்தில் அடுத்த தளத்திற்கு சென்ற உடனே மீ ண்டும் சில பத்து வருடங்கள் களைத்து ஒரு
பரிமான வளர்ச்சி ஏற்படும் போது மீ ண்டும் மேல்நோக்கி தான் புதிய கருத்துகளுடன் வளர்ச்சி
அடையுமே தவிர, பழைய நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகளை மீ ண்டும் ஏற்றுக்கொண்டு
தன்னுடைய வளர்ச்சி பயணத்தை எந்த அறி(வு) சார்ந்த துறையும் கீ ழ் நோக்கி எடுத்து செல்லாது.
ஆனால் ஜோதிட துறை சற்று பரிதாபத்திற்கு என்றால் அது மிகையல்ல. ஏனெனில் ஜோதிட துறை
ஒவ்வொரு நூற்றாண்டிலும் சில, புதிய கருத்துகளுடன் தன்னை வளர்த்து கொள்கின்ற அதே
வேளையில், ஏற்கனவே இருக்கும் களைகள் போன்ற அறிவுக்கும், அறிவியலுக்கும்,
நடைமுறைக்கும் ஒத்துவராத மரபு வழிகளை தைரியமாக தூக்கி எறியாமல், அந்த களைகளுடனே
ஜோதிடம் என்ற பயிர் வளர்கின்றது என்பதை மிகவும் ஆழ்ந்த மன வேதனையுடன் தங்களுடன்
பகிர்ந்து கொள்கின்றேன்.

அந்த வகையில் நம் முன்னோர்களால், நல்ல அடிதளத்துடன் சிறப்பான முறையில்


வடிவமைக்கப்பட்ட மாளிகை போன்ற ஜோதிட துறைக்கு அவ்வப்போது வந்து சேர்ந்த பல
அறி(வு)வியல் சாராத குப்பைகள் அந்த அற்புதமான மாளிகையில் இருந்து கொண்டு, அதில் ஆய்வு
செய்ய வருவோரை உள்ள நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி தாங்களே (குப்பைகளே) இன்றுவரை
ஜோதிட துறையை ஆதிக்கம் செய்து வருகின்றன என்பது இந்த சிறியவனின் தாழ்மையான கருத்து.

எனவே ஜோதிட துறையை செழுமை படுத்த நினைக்கும் ஜோதிட ஆர்வலர்கள், முதலில் ஜோதிட
துறையில் இன்று வரை உள்ள அறி(வு)வியல் சாராத குப்பைகளை களைய தைரியமுடன் முன்
வரவேண்டும். அப்படி குப்பைகளை களைந்தால் இனி ஜோதிடத்தை அறிவும், அறிவியலும் போட்டி
போட்டு அடுத்த சில வருடங்களிலேயே ஜோதிடத்தை தங்களின் ஆதிக்கத்தின் கீ ழ் கொண்டு
சென்று ஜோதிட துறையை செழுமைபடுத்திவிடும் என்றால் அது மிகையல்ல. அதன்படி ஒரு
ஜாதகத்தை ஆய்வு செய்து பலன்களை நிர்ணயிக்க இதுவரை நாம் கையாண்ட முறையில்
அறிவியல் தன்மை உள்ளதா என சீர்தூக்கி பார்க்கவேண்டும். உதாரணமாக ஒரு ஜாதகத்தை ஆய்வு
செய்வதற்கு பாரம்பரிய முறையில் கையாளும் அணுகு முறைகளை இந்த சிறியவன்
பட்டியலிடுகின்றேன். இதில் ஏதேனும் அறிவியல் கூறுகள் உள்ளனவா என்பதை தீர்மானிக்கும்
பொறுப்பை வாசகர்களாகிய உங்களிடமே விட்டு விடுகிறேன்.

உதாரணமாக ஒரு பாரம்பாரிய முறையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகத்திற்கு


பலனை (அதாவது அதன் தசா – புத்தி காலத்தில்) நிர்ணயிக்க பிவரும் அணுகுமுறைகள்
அத்தனையும் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதன் படி.

1. முதலில் அந்த கிரகம் இயற்கை சுபரா அல்லது பாவியா என பார்க்க வேண்டும்.

2. லக்னத்திற்கு ஆதிபத்திய ரீதியில் சுபரா அல்லது பாவியா என பார்க்க வேண்டும்.

3. மேற்கண்ட கிரகம் ராசி கட்டத்தில் லக்னத்திற்கு எங்கு உள்ளார் மற்றும் எந்த எந்த வட்டிற்கு

அதிபதியாக உள்ளார் என பார்க்க வேண்டும்.

4. மேற்கண்ட கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆம் வட்டு


ீ குரியவர்களுடன் சேர்த்து உள்ளதா அல்லது 6, 8,
12 ஆம் வட்டதிபதிகள்
ீ அந்த கிரகத்தை பார்க்கின்றதா என கவனிக்க வேண்டும்.

5. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரகத்துடன் லக்னத்திற்கு கேந்திரதிபதிகள், திரிகோனாதிபதிகள்


போன்றவர்கள் சேர்ந்து உள்ளார்களா எனவும், மேற்கண்ட கேந்திர கோணதிபதிகள் அந்த கிரகத்தை
பார்க்கிறதா எனவும் கவனிக்க வேண்டும்.
6. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் ராசிகட்டத்தில் எந்த நிலையில் உள்ளது என்றும் அதாவது
ஆட்சி, உட்சம், நீச்சம், நட்பு, பகை, சமம், மூலதிரிகோணம் போன்றவற்றினை கொண்டு அதன்
பலனை அறிவதற்கு கவனிக்க வேண்டும்

7. மேற்கண்ட கிரகத்துடன் பாதகாதிபதிகளோ அல்லது மாரகாதிபதிகளோ ராசிகட்டத்தில் சேர்ந்து


உள்ளார்களா அல்லது பார்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

8. மேற்கண்ட கிரகம் ராசிகட்டத்தில் வக்கிரமாகவோ அல்லது அஸ்தனமாகவோ உள்ளதா என்பதை


கவனிக்க வேண்டும்.

9. மேற்கண்ட கிரகம் திதி சூன்ய ராசியில் உள்ளாரா என கவனிக்க வேண்டும்

10. மேற்கண்ட கிரகம் ராகு, கேது பிடியில் உள்ளதா அல்லது பாவ கிரகங்களுக்கு மத்தியில் உள்ளதா
என கவனிக்க வேண்டும்.

11. மேற்கண்ட கிரகம் ராசிகட்டத்தில் பாசகர், போதகர், காரகர், வேதகர் போன்ற நிலைகளில் எந்த
நிலையில் உள்ள என கவனிக்க வேண்டும்.

12. மேற்கண்ட கிரகம் ராசிகட்டத்தில் வேறு சில கிரகங்களுடன் இணைந்து உள்ளதை யோகம் என்று
கூறுவார்கள். இதில் சுப யோகமும் உண்டு, அசுப யோகமும் உண்டு. ஆய்வுக்கு எடுத்து கொண்ட
கிரகம் எந்த யோகத்தை தரும் என கவனிக்க வேண்டும்.

குறிப்பு:
யோகங்கள் மட்டும் சுமார் ஐநூறுக்கு மேற்பட்டு உள்ளது. இந்த ஐநூறு யோகத்தையும் ஒருவர்
மனப்பாடம் செய்து ஒரு ஜாதகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு கிரகத்திற்கு பயன்படுத்தினால்
அந்த கிரகம் அசுப யோக பலனையும், சுபயோக பலனையும் சில ராஜ யோக பலனையும் தரும்
வண்ணமாகவே பெரும்பாலும் அமையும். எனவே இந்த யோகங்கள் ஜோதிடத்தில் உள்ள
அறி(வு)வியல் சாராத குப்பைகள் என்பது எளியவனின் தாழ்மையான கருத்து.

13. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகத்திற்கு இயற்க்கை சுபரான குரு மற்றும் இயற்க்கை
பாவிகளான சனி மற்றும் செவ்வாயின் பார்வைகள் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்

14. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் ராசிகட்டத்தில் காரக பாவ நாஸ்தி என்ற தோஷத்தை
பெற்றுள்ளதா என கவனிக்க வேண்டும்.

15. மேற்கண்ட கிரகத்துடன் எந்தெந்த கிரகங்கள் சேர்ந்து உள்ளதோ, அதன் கிரக காரக
தன்மைகளையும், பாவ காரக தன்மைகளையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

16. மேற்கண்ட கிரகம் நவாம்ச கட்டத்தில் ஏதேனும் சில கிரகங்களுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதா
என கவனிக்க வேண்டும்.
17. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் நின்ற வட்டு
ீ அதிபதி ராசிகட்டத்தில் எங்கு உள்ளார், அவரின்
நிலை என்ன என பார்க்க வேண்டும்.

18. மேற்கண்ட கிரகம் பின்ன அஷ்டவர்க்கத்தில் எத்தனை பரல்களை பெற்றிருக்கின்றது என


கவனிக்க வேண்டும்.
குறிப்பு:
குறைந்தது ஐந்து பரல்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி.

19. மேற்கண்ட கிரகம் இரு ராசி சமுதாய (சர்வ) அஷ்டவர்க்கத்தில் எத்தனை பரல்களை
பெற்றிருக்கின்றது என கவனிக்க வேண்டும்.
குறிப்பு:
குறைந்தது 27 பரல்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி.

20. மேற்கண்ட கிரகம் இந்து லக்னத்திற்கு எத்தனையாவது வட்டில்


ீ உள்ள என பார்க்க வேண்டும்
குறிப்பு:
இந்து லக்னம் என்பது, ஒருவர் பிறந்த லக்னதிர்க்கும், அவரது ராசிக்கும் ஒன்பதாம் வட்டிக்கு
ீ உரிய
ஆட்சி கிரகங்களின் எண்களை கூட்டி பிறந்த ராசியில் இருந்து அத்தனை ராசிகள் எண்ணி வரும்
ராசியே இந்து லக்னமாகும். கிரகங்களின் எண்கள் (கதிர்கள்) விவரம் பின்வருமாறு அமையும்.
சூரியன் – 30 கதிர், சந்திரன் 16 கதிர், செவ்வாய் – 6 கதிர், புதன் – 8 கதிர், குரு – 10 கதிர், சுக்கிரன் – 12
கதிர், சனி – 1 கதிர்.

21. ஆய்வுக்கு எடுத்து கொண்ட ஜாதகத்தில் உள்ள கிரகம் கேந்திரதிபதி தோஷம் பெறுகின்றதா
அல்லது கேந்திரதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் சாரத்தில் உள்ளதா என பார்க்க வேண்டும்.

22. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் ராசிகட்டத்தில் எந்த நட்சத்திர பாதத்தில் உள்ளது என்று
கவனித்து, மேற்கண்ட நட்சத்திர அதிபதி ராசிகட்டத்தில் எங்கு உள்ளார், மற்றும் எந்தெந்த
வடுகளுக்கு
ீ அதிபதியாக வருகின்றார் என பார்க்க வேண்டும்
குறிப்பு:
அதாவது ஒரு கிரகம் தன்னுடைய காலத்தில் (தசா, புத்திகளின்) தரக்கூடிய பலன்கள், அதன் பாவ
ஆதிபத்தியம், கிரக சேர்க்கை, ராசியில் இருத்தல், பார்வைகள் போன்ற இவைகள்
எல்லாவற்றையும் விட அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதன் அதிபதியை பொறுத்தே
பலனை தரும், அதாவது அந்த கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி எந்த வட்டில்
ீ உள்ளாரோ அந்த
வட்டின்
ீ பலனையும், எந்தெந்த வட்டிற்கு
ீ அதிபதியாக உள்ளாரோ அந்த வடுகளின்
ீ பலனையும்
தரும். இதற்கு சார பலன் என்றும், இவ்வாறு பலனை நிர்ணயம் செய்வது “சார ஜோதிடம்” என்றும்
பெயர். பலன் கூறுவதில் பாரம்பரிய ஜோதிட முறையின் அடுத்த பரிணாம வளர்ச்சி “சார ஜோதிட
முறை” என்பதும் இதன் அடிப்டையில் ஆய்வு செய்து ஒருஅடி முன்னோக்கி ஜோதிடம் தன்னை
செழுமைபடுத்தி கொண்டது என்பது என்னுடைய கருத்து.

23. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம், ஷட் பலத்தில் எவ்வளவு பலத்தை பெற்றுள்ளது என்பதை
பார்க்க வேண்டும்.
குறிப்பு:
ஷட் பலம் என்பது ஆறுவகையில் ஒரு கிரகத்தின் வலிமையை ஆராய்ந்து மதிப்பிட வேண்டும்.
அவை முறையே

1. ஸ்தான பலம்
2. திருக் பலம்
3. நைசர்க்கிக பலம்
4. சேஷ்ட பலம்
5. திக் பலம்
6. கால பலம்
இந்த ஆரின் பலம் என்பது இருபது பங்காகும் இவை முறையே,
ஸ்தான பலம் – 5 பங்கு
திருக் பலம் – 1 பங்கு
நைசர்க்கிக பலம் – 1 பங்கு
சேஷ்ட பலம் – 5 பங்கு
திக் பலம் – 1 பங்கு
கால பலம் – 7 பங்கு ஆகா மொத்தம் 20 பங்கு வருகின்றது.

24. ஜென்ம லக்னம் கணித்து அதன்படி பலன் காணுவது போலவே, மேலும் பலனை துல்லிய படுத்த
ஜென்ம லக்னதுடன், மேலும் பன்னிரண்டு வகையான லக்னங்கள் கணித்து பலன் காண்பது துவாதச
லக்னம் எனப்படும்.

அதன்படி, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஜாதகத்தில் உள்ள கிரகம் இந்த பன்னிரண்டு வகையான


லக்னத்தில் எங்கெங்கு உள்ளது என்று ஆய்வு செய்து அதன்படி பலனை நிர்ணயிப்பது.
குறிப்பு:
துவாதச லக்னம் என்பது முறையே
1.ஜென்ம லக்னம்
2. ஓரா லக்னம்
3. கடிகா லக்னம்
4. ஆருட லக்னம்
5. நட்சத்திர லக்னம்
6. காரக லக்னம்
7. ஆதெரிச லக்னம்
8. ஆயுர் லக்னம்
9. திரேக்காண லக்னம்
10. அங்கிச லக்னம்
11. நவாங்கிச லக்னம்
12. பாவ லக்னம் போன்றவை ஆகும்.

இவற்றில் ஜென்ம லக்னத்தை தவிர மற்ற 11 லக்னமும் எவ்வித அறிவியல் தன்மையுடனும்


உருவாக்கப்படவில்லை. மற்ற 11 லக்னத்தை பற்றி எவ்வித தெளிவான நூல்களும் நம்
முன்னோர்களால் நமக்கு தரபடவில்லை. அதற்கு காரணம் மற்ற 11 வகையான லக்னத்தையும் ஒரு
ஆய்வு நோக்குக்காக எடுத்தார்கள் ஆனால் அவற்றின் மூலம் தெளிவான பலனை நிர்ணயிக்க
முடியாததால் அவற்றை பற்றி தனியாக, விரிவாக அவர்கள் நமக்கு தெரிவிக்கவில்லை என்பதே
உண்மை.

25. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஜாதகத்தில் உள்ள கிரகம், தசவர்க்க சகரங்களில் உள்ள நிலைகளை
கவனித்து அதன் பலத்தை அறிய வேண்டும்.
குறிப்பு:
தசவர்க்கம் என்பது ராசி கட்டம் போன்று வேறு 10 வகையான கட்டங்களை (சக்கரங்களை)
கொண்டது ஆகும். இந்த கட்டங்கள் அனைத்தும் ராசி கட்டத்தை பல கூறுகளாக பிரிந்து கையாண்ட
விதம் ஆகும். தசவர்க்க சக்கரங்கள் முறையே

1. ராசி சக்கரம்
2. ஓரை சக்கரம் (ராசியை 2 பாகமாக பிரிப்பது)
3. திரேக்காணம் (ராசியை 3 பாகமாக பிரிப்பது)
4. நவாம்சம் (ராசியை 9 பாகமாக பிரிப்பது)
5. துவதாம்சம் (ராசியை 12 பாகமாக பிரிப்பது)
6. திரிம்சாம்சம் (ராசியை 6 பாகமாக பிரிப்பது)
7. சப்தாம்சம் (ராசியை 7 பாகமாக பிரிப்பது)
8. சதுர்தாம்சம் (ராசியை 4 பாகமாக பிரிப்பது)
9. சோடாம்சம் (ராசியை 16 பாகமாக பிரிப்பது)
10. தசாம்சம் (ராசியை 10 பாகமாக பிரிப்பது)
11. சஷ்டியாம்சம் (ராசியை 60 பாகமாக பிரிப்பது)

நம் முன்னோர்கள் குறைந்த கால இடைவெளியில் பிரப்பவர்களை வேறுபடுத்தி காட்ட, ராசி


கட்டத்தோடு மட்டும் நிற்காமல் அதை பல பிரிவுகளாக பிரிந்து மேற்கண்ட தசவர்க்க சகரங்களை
உருவாக்கி, குறிகிய கால இடைவெளியில் பிரப்பவர்களை (சுமார் 5 முதல் 10 நிமிட
இடைவெளியில் பிறந்தவர்கள்) எப்படியாவது வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்ற ஆய்வு
நோக்கத்தில் உருவான அவர்களின் முயற்சியே மேற்கண்ட சக்கரங்கள் என்றால் அது
மிகையாகாது.

அதே நேரத்தில் மேற்கண்ட சக்கரங்கள் லக்ன பாவத்தையும், கிரகங்களையும் மட்டுமே கருத்தில்


கொண்டு உருவாக்கப்பட்டது. மற்ற 11 பாவங்களை இந்த சக்கரங்கள் கருத்தில் கொள்ள வில்லை.
கிரகங்கள் மெதுவாக செல்வதால் அன்றைய நாளில் பிறந்த அனைவருக்கும் (சந்திரனை தவிர)
மேற்கண்ட தசவர்கதில் உள்ள கிரக நிலைகள் கிட்டதட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும்.

எனவே மேற்கண்ட சக்கரங்கள் அறிவியல் பூர்வமான முறையில் அமைய வில்லை என்பது


எளியவனின் தாழ்மையான கருத்து. நம் முன்னோர்களால் இந்த சக்கரங்களை கொண்டு தெளிவான
ஒரு பலனை நிர்ணயிக்க முடியாததால் தான் அவர்கள் இந்த தசவர்க்க சக்கரத்திற்கு என தெளிவாக
எந்த நூலையும் உருவாக்க வில்லை என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

அதே நேரத்தில் மேற்கண்ட தசவர்க்க சக்கரத்தில் நவாம்ச சக்கரத்திற்கு மட்டும் ஓரளவிற்கு நம்
முன்னோர்களால் முக்கியத்துவம் தரப்பட்டது. ராசி, நவாம்ச கட்டங்களை தவிர மற்ற
கட்டங்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் நம் முன்னோர்களால் பிறகு வந்த காலங்களில்
தரப்படவில்லை என்பது உண்மை.

நவாம்ச கட்டத்தை நம் முன்னோர்கள் வைத்து கொண்டதற்கு காரணம் லக்னம் உள்ளிட்ட


கிரகங்களின் சாரத்தை எளிதாக அறிந்து கொள்வதற்குத்தான் என்பது இந்த சிறியவனின் கருத்து.
ஏனெனில் லக்னம் உள்ளிட்ட கிரகங்களின் சாரம், (நட்சத்திர பலம்) பலனை அந்த ஜாதகத்திற்கு
நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற கருத்தில் நம் முன்னோர்கள் உறுதியாக
இருந்தனர் என்றால் அது மிகையல்ல.

ஆனால் நம்மில் சிலர் நவாம்ச கட்டத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து அப்படியே ராசி
கட்டத்தில் பலனை நிர்ணயிப்பது போல (நவாம்ச லக்னத்தில் இருந்து) பலனை நிர்ணயம்
செய்கின்றார்கள். இந்த அணுகுமுறையில் எவ்வித அறிவியல் கூறுகளும் இல்லை என்பதை
வாசகர்கள் சிந்திக்க வேண்டுகின்றேன்.

26. ஆய்வுக்கு எடுத்து கொண்ட இந்த கிரகத்தை, சந்திரன் நின்ற வட்டை


ீ லக்னமாக கொண்டு ஆய்வு
செய்ய வேண்டும். கிட்டதட்ட லக்னத்தை மையமாக வைத்து எப்படி இந்த கிரகத்தை ஆய்வு
செய்தோமோ ( 1 முதல் 25 விதிகளை கொண்டு) அதே போல் சந்திரா லக்னத்தை மையமாக வைத்து
ஆய்வுகள் செய்ய வேண்டும்.

27.ஒரு சில ஜோதிட அறிஞர்கள் சூரியனையும் லக்னமாக வைத்து, ஆய்வுக்கு எடுத்து கொண்ட
ஜாதகத்தில் உள்ள கிரகத்தினை ஆய்வு செய்யுமாறு கூறுவார்கள்.
குறிப்பு:
இது குறிப்பிட்ட அந்த மாதத்தில் பிறந்து அனைவருக்கும்(சந்திரனை தவிர) பெரும்பாலும் ஒரே கிரக
அமைப்பை காட்டும். இந்த முறையை சிந்திக்கும் எந்த ஜோதிடரும் ஏற்று கொள்ளமாட்டார் என்பதே
உண்மை. மேற்கண்ட 50 க்கும் மேற்பட்ட வழிகளில் (25+ சந்திர லக்னம் (25) + சூரிய லக்னம்) ஒ௦ரு
குறிப்பிட்ட ஒரு கிரகத்திற்கு மட்டும் பலனை நிர்ணயிக்க எடுத்து கொள்ளும் நேரம் கிட்டத்தட்ட 3
மணி நேரமாவது ஆகும். 9 கிரகத்திற்கு 9×3=27 மணி நேரம் கிட்டதட்ட 1 நாளை ஒரு ஜாதகத்தை
ஆய்வு செய்வதற்கு எடுத்து கொள்வது என்பது அறிவிற்கு ஏற்புடையதல்ல என்பது வாசகர்களாகிய
நீங்கள் நன்கு அறிவர்கள்.

அதே நேரத்தில் இவ்வளவு நேரத்தில் வழிமுறைகளை கொண்டு ஒரு ஜடகதிற்கு ஒரே மாதிரியான
பலனை தரமுடியுமா என்றல் அதுவும் நிச்சயமாக முடியாது என்பதையும் இங்கு வாசகர்கள்
கவனிக்க வேண்டுகிறேன்.

உதாரணமாக இந்த கட்டுரையில் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 28-07-1968 அன்று


பாளையங்கோட்டையில் மாலை 5.15 மணிக்கு கணித்த ஜாதகத்தை மீ ண்டும் நினைவு படுத்த
வேண்டுகிறேன்.
இந்த ஜாதகத்திற்கு பலனை நிர்ணயிக்க 7 முக்கிய கேள்விகளை ஒரு ஆய்வு நோக்குக்காக கேட்டு
அதற்க்கு இரண்டு விதமான முற்றிலும் மாறுபட்ட பலனை தான் நிர்ணயிக்க முடிந்தது.
மேலும் இந்த ஜாதகத்தை ஆய்வு செய்த விதம் இதற்கு முன் பார்த்த 25-க்கும் மேற்பட்ட
வழிமுறைகளில் ஒரு சிலவற்றை மட்டும் (அடிக்கடி பழக்கத்தில் இருக்கும்)
எடுத்துக்கொண்டதற்கே இவ்வளவு முரண்பாடுகள் என்றால், அனைத்து விதிகளை எடுத்து ஆய்வு
செய்தால் குழப்பங்கள் அதிகரிக்கதான் வாய்ப்பே தவிர குறைய நிச்சியமாக வாய்ப்பு இல்லை.

(குறிப்பு: இதே ஜாதகத்தை K.B. ஜோதிட முறையில் எளியவன் இந்நூலின் கடைசி கட்டுரையில்
இதே கேள்விகளை கொண்டு ஆய்வு செய்து உள்ளேன் வாசகர்கள் கடைசியில் கவனிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.)

நேர்மையும், தொழில் பக்தியும் உள்ள ஒரு ஜோதிடன் நீண்ட வருடங்கள் இதே வழி முறைகளை
கையாண்டாலும் குழப்பமற்ற பலனை நிர்ணயிப்பது முடியாத விஷயம் தான். எனவே ஆரம்பத்தில்
உண்மையான முறையில் ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்த பெரும்பாலான பாரம்பரிய ஜோதிடர்கள்
சலிப்புற்று, தங்களுடைய வாடிக்கையாளரின் ஜாதகத்திற்கு பலனை கோட்சார சனி மற்றும்
குருவை கொண்டு மட்டும் நிர்ணயம் செய்து தங்களை கிணற்று தவளை போல் சுருக்கி
கொள்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.

மேலும் இன்று ஜோதிடம் சில பல்கலை கழகங்களில் பாட திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளதை


நினைத்து மகிழ்ச்சியுறும் அதே வேளையில், அந்த பல்கலை கழக பாட திட்டங்களை உற்று
நோக்கினால், நடைமுறைக்கு ஒத்துவராத மரபு வழி ஜோதிட விதிகளையும், யோகங்களையும்,
பழைய நூல்களில் இருந்து அப்படியே மொழி மாற்றம் மட்டுமே செய்து உள்ளனர்.

3 ஆண்டு கால ஜோதிடவியல் பட்ட படிப்பில், முதல் வருட கருத்தினை முழுமையாக மறுத்து
இரண்டாம் வருட பாட திட்டமும், மூன்றாம் வருட பாட திட்டத்தில் இரண்டாம் வருட பாட
திட்டத்தை எதிர்த்தும், முதல் வருடத்தில் உள்ள சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்
சில கருத்துகளையும் கொண்ட ஒரு பாட திட்டத்தையே வைக்கும் அளவிற்குதான் இன்று பல்கலை
கழகங்களும் உள்ளன என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மற்ற துறைகளை போல் ஜோதிடமும் கருத்தொற்றுமையுடன் இருக்க, இத்துறைக்கு


இனிவரும் காலங்களில் ஆராய்ச்சி சிந்தனையுடன் கூடிய இளைஞர்கள் மற்றும், நேர்மையான
முறையில் தைரியமாக சில நடைமுறைக்கு ஒத்துவராத மரபு வழி விதி முறைகளை மாற்றும்
மூத்த ஜோதிட அறிஞர்களின் ஒத்துழைப்பும் வழிக்காட்டுதலும் முதல் தேவையாகின்றது.

எனவே ஜோதிடம் என்ற பெயரை செழுமையாக வளர்க்க, ஆண்ட பயிருக்கு வெளியில் இருந்து
தரமான உரத்தை இடுகின்ற அதே வேளையில் அந்த பயிருக்கு உள்ளிருக்கும் கலைகளை
முழுவதுமாக களைய வேண்டும். அதற்க்கு முன் ஜோதிடம் என்ற வயலில் எது பயிர் (நெல் மணி)
எது களை என்பதை வேறுபடுத்தி பார்க்கும் ஜோதிட பொது அறிவை நாம் வளர்த்துக்கொண்டால்
ஒழிய, ஜோதிடத்தை செழுமை படுத்த முடியாது என்பது எளியவனின் தாழ்மையான கருத்து.

அந்த வகையில் நம் முன்னோர்களின் பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவில், ஒருமித்த


கருத்துக்களுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் (அறிவியல் கூறுகள் உள்ள) அவர்கள்
நமக்கு தந்தது “சார ஜோதிட முறை” என்ற நட்சத்திர ஜோதிட முறையாகும். நீண்ட காலமாக
தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் அவர்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது. அது என்னவென்றால்
ஒவ்வொரு கிரகமும், தன்னுடைய காலத்தில் (தசா, புத்திகளில்) தன்னுடைய கிரக காரகத்தை விட
தான் நின்ற நட்சத்திர அதிபதியின் கிரக காரகதையே பெரும் அளவு செயல் படுத்தியதை அவர்கள்
தெளிவாக அறிந்து வைத்து அதற்கே (சாரபலத்திற்கே) முக்கியத்துவம் கொடுத்து ஜோதிடத்தை மிக
சரியான பாதையில் செல்ல வழி வகுத்தனர்.

இரவில் வெறும் தீப்பந்தங்களுடன் இருந்த மனித வர்க்கம், அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா
எடிசன் அவர்கள் உலகிற்கு வழங்கிய மின்சார பல்பு மூலம் இன்று அபயாகரமான தீப்பந்தங்களுக்கு
விடுதலை தந்ததை போல்,”சார ஜோதிட முறை” ஜோதிட துறையில் தீப்பந்தங்களாக இருந்த
பல மூட நம்பிக்கைகளுக்கு விடுதலை கொடுத்து, ஜோதிடத்திற்கு ஒழி விளக்காக அமைந்தது
என்றால் அது மிகையல்ல.
அடுத்து ஜோதிடத்துரைக்கு ஒரு சவாலாக இருந்தது ஜோதிட கணிதம் ஆகும். நும் முன்னோர்கள்
வாழ்ந்த காலத்தில் மக்கள் தொகை மிகவும் குறைவு அதனால் பிறப்பு விகிதமும், குறைவாகத்தான்
இருந்திருக்கும். எனவே வெறும் ராசிக்கட்டத்தையும்,அதிலுள்ள கிரகங்களின் சரபலதியும் கொண்டு
அவர்கள் நிர்ணயித்த பலன்கள் அப்போது நடந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை வேறு, சுமார்
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையை விட இன்று சுமார் 10 மடங்கு அதிகம்.
அதனால் பிறப்பு விகிதங்களும் மிகவும் அதிகம். அதனால் சுமார் 500 வருடங்களுக்கு முன் இருந்த
ஜோதிட கணக்கீ டுகளை விட இன்று மிகவும் துல்லிய நுண்ணிய கணக்கீ டுகள் தேவை என்பது
ஜோதிட துறையின் மீ து காலம் செலுத்தும் ஒரு ஆதிக்கமே என்றால் அது மிகையாகாது.

எனவே, கிரகங்களையும், பாவங்களையும் ஒரு சரியான அறிவியல் தன்மையுடன் நுட்பமாக பிரிக்க


வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும். இதற்கு ஜோதிடத்தில் மிக நுண்ணிய,
தெளிவான ஒவ்வொரு நொடிக்கும் வான சாஸ்திர ரீதியாக கணிதம் தேவை, ஏனெனில் இந்த
உ;லகில் எந்த இரு மனிதர்களும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கொண்டிருக்கவில்லை.
அதாவது ஒவ்வொரு மனித வாழ்க்கையும் தனித்தன்மை வாய்ந்தது.

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில், சென்ற நூற்றாண்டில் ஜோதிட உலகிற்கு (சார


ஜோதிடம்) காலம் வழங்கிய இரு சிறந்த மேதைகள் திரு R. கோபாலகிருஷ்ணராவ் (மீ னா)
அவர்களும் திரு K.S.கிருஷ்ணமுர்த்தி அவர்களும் ஆவார்கள். இவர்கள், மேற்கண்ட ஆராய்ச்சியின்
முடிவில் ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம், உபனட்சத்திரம் இவைகள் மூலமாக தான் பலனை
தருகின்றது என்ற கருத்தினை கண்டுபிடித்து சார ஜோதிட முறையை ஒரு அடி முன்னோக்கி
நகர்த்தி அதை மேம்படுத்தினார்.

திருமீ னா அவர்கள், ராசி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும், விம்சோததரி தசா


அடிப்படையில் 9 பாகமாக பிரித்து (27×9=243) 243 பிரிவுகளாக வான மண்டலத்தை பிரித்தார். இந்த
உப பிரிவுகளுக்கு உபநட்சத்திரம் என்று பெயர்.

திரு.மீ னா அவர்களின் அடித்தளத்தில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்ட திரு.K.S.


கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த 243 உபபிரிவுகளை மேலும் மேம்படுத்தி சூரியன், குரு
நட்சத்திரங்களில் உள்ள சந்திரன், ராகு உப பிரிவுகள் இரண்டு ராசிகளில் வருவதால் 243 உப
நட்சத்திரங்களுடன் மேலும் 6 உப நட்சத்திரங்களை சேர்த்து 249 உப பிரிவுகளாக ராசி மண்டலத்தை
பிரித்து மேம்படுத்தினார்.
குறிப்பாக திரு.K.S.K அவர்கள் இந்த உப நட்சத்திரங்களை, பாவங்களுக்குள் புகுத்தி, ஜோதிட
கணிதத்தை, கணக்கீ டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு அதனை பல ஆய்வுகள் செய்து
மேம்படுத்தினார். மேலும் ஜாதக பலனை நிர்ணயிப்பதில், ஜோதிட துறையை ஒரு அடி முன்நோக்கி,
அதன் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு முதன்முதலில் வித்திட்டார்.

ராசிமண்டலம் என்பது 360 0 (டிகிரி அல்லது பாகை) யை கொண்டது. ராசிமண்டலத்தை 12


பிரிவுகளாக பிரித்து அதன் ஒரு பிரிவுக்கு ராசி என்று பெயர். ஒரு ராசி என்பது 300 யை கொண்டது
அதாவது 3600 + 12 = 300 என்று பிரிக்கபடுகின்றது. அதே போல் ராசி மண்டலத்தை 27 பிரிவுகளாக
பிரித்து, அந்த பிரிவுகளுக்கு நட்சத்திரம் என்று பெயர் சூட்ட படுகின்றது. அதன் படி ஒரு நட்சத்திரம்
என்பது 130.20’ யை கொண்டது. அதாவது 360 + 27 = 130 பாகையும் 200 கலையும் (மினிட்).

(குறிப்பு: பாகை என்பதை டிகிரி எனவும், கலை என்பதை மினிட் எனவும், விகலை என்பதை
செகண்ட் எனவும் ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதே போல் 10 டிகிரி என்பது 60 மினிட்டை
கொண்டது 1‘ மினிட் என்பது 60” செகண்டை கொண்டது).

ஒரு நட்சத்திரத்தை நாலு சம பாகங்களாக பிரித்து, அந்த பிரிவுகளுக்கு பாதம் என்று பெயர்
சூட்டப்படுகின்றது. அதன்படி ஒரு நட்சதிரபாதம் என்பது 30.20’யை கொண்டது. அதாவது 13.20 / 4 =
30.20’. இது எப்படி வந்தது என்று குழம்பும் ஆரம்ப நிலை அன்பர்களுக்கு இதை
தெளிவுபடுத்துகின்றேன். அதாவது
130.20’ யை மினிட் ஆக மாற்றினால் 13 * 60 = 780 + 20 = 800 மினிட் வரும் 800 / 4 = 200’ மினிட். இதை
டிகிரி ஆகா மாற்றினால் 60 ஆல் வகுக்க வேண்டும். அதன் படி 200 / 60 = 30.20’ ஆக வரும்.

ஒரு ராசி என்பது 300 கொண்டது என ஏற்கனவே பார்த்தோம்.. அதன்படி ஒரு ராசியில் இரண்டே கால்
நட்சத்திரங்கள் உள்ளன. அதாவது ஒன்பது பாதங்கள் (9×3.20=270+180’=300) மேற்கண்ட சுருக்கமாக
பார்த்தால்,

ராசி மண்டலம் = 3600


1 ராசி = 300
1 நட்சத்திரம் = 130.20’
1 பாதம் = 3.20’
1 ராசி என்பது 2 முழு நட்சத்திரம் மற்றும் ஒரு நட்சத்திர பாதம். அதாவது 9 பாதம். ராசிமண்டலம்
என்பது 108 பாதங்களை கொண்டது (27 * 4 = 108 பாதம்) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும் ஆரம்ப நிலை நண்பர்களுக்காக இதை எழுதுயுள்ளேன்.
எல்லா கிரகமும் ஏதாவது ஒரு ராசியில் இருக்கத் தான் செய்யும். ஒரு கிரகம் ஒரு ராசியில்
இருகின்றது என்று கூறுவது அந்த கிரகம் இருக்கும் இருப்பிடத்தை பொதுத்தன்மையாக
கூறுவதாகும். அந்த கிரகம், அந்த ராசியில் ,உள்ள நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்தில் உள்ளது
என்று கூறுவது தனித்தன்மையாக அமையும்

அதாவது ஒரு கிரகம் என்பது ஒரு மனிதராக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு மனிதர்
இந்தியாவில் வசிகின்றார் என்பது அந்த கிரகம் ஒரு ராசியில் உள்ளது என்பதற்கு ஒப்பாகும். மேலும்
அந்த மனிதர் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வசிகின்றார் என்பது, அந்த கிரகம் அந்த
ராசியில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் உள்ள என்பதற்கு ஒப்பாகும்.
எனவே மேலே குறிப்பிட்ட மனிதர் இந்தியாவில் வசிக்கிறார் என்பது உண்மையே, ஆனால்
தன்மொழி, இனகலாச்சார பழக்கவழக்கங்களை அணைத்து இந்தியர்களை போல இவர்
கொண்டிருப்பார் என உறுதியாக இங்கு நம்மால் கூற முடியுமா? இந்தியர்களுக்கென உள்ள சில
பொதுவான கலாச்சார பழக்கவழக்கங்களை கொண்டிருந்தாலும் இவைகளை விட தன்
மாநிலத்திற்கென உள்ள மொழி, இன, கலாச்சார பழக்கவழக்கங்களை அந்த மனிதர்
கொண்டிருப்பார்.

மேற்கண்ட மாநில மக்களின் தனித்தன்மை, இந்தியர்களுக்கென உள்ள பொது தன்மையுடன்


பெருமளவு ஒத்திருக்க.வேண்டும். என்ற கட்டாயம் இல்லை (இந்தியர்கள் என்ற ஒன்றை தவிர)
எனவே ஒரு கிரகம் ஒரு ராசியில் இருகின்றது என்று கூறுவதை விட அந்த ராசியில் உள்ள எந்த
நட்சத்திரத்தில் உள்ளது என கூறுவதே தனித்தன்மையாகும்.

அதாவது பின்வரும் படத்தை கவனிக்கவும்.

புதன் என்ற கிரகம் சிம்ம ராசியில் உள்ளது. என்பது பொதுதன்மை வாய்ந்தது. ஏனெனில் சுமார் ஒரு
மாதம் வரை இது சிம்ம ராசியிலேயே இருக்கும். இதே புதன், சிம்ம ராசியில் 15.30 / உள்ளார் என்று
புதன் இருக்கும் இருப்பிடத்தை துல்லியமாக கூறுவது தனித்தன்மை வாய்ந்தது.
இப்படி தனித்தன்மையுடன் கூறுவதால் என்ன பயன்?
புதன், சிம்ம ராசியில் உள்ள மகம் மற்றும் உத்திர நட்சத்திரத்தில் இல்லை என்ற பதிலும், பூரம்
நட்சத்திரத்தில் உள்ளார். அதுவும் பூரம் ஒன்றாம் பாதத்தில் உள்ளார் என்ற வேறுஒரு பதிலையும்
நாம் ஒருசேர பெறமுடிகின்றது. இதனால் அந்த கிரகம் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் காரக
பலனையும் தான் (புதன்) நின்ற நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரனின் காரக பலனையும் சேர்த்தே புதன்
தரும் என பலனை நிர்ணயிக்கலாம்.

அதாவது ஒரு கிரகம் தனகென்று உள்ள பலனை விட தான் எந்த ராசியில் உள்ளதோ அந்த
பலனையும் (ராசிஅதிபதியின் பலன்) அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அந்த
நட்சத்திரத்தின் அதிபதியின் பலனையும் தரும் என்பதே நம் முன்னோர்களின் முறைபடுதபட்ட
கருத்து.
இவற்றின் ராசியதிபதியின் பலனை வலிமையாக தருமா? அல்லது நட்சத்திர அதிபதியின் பலனை
வலிமையாக தருமா என்று பார்க்கும் போது ராசி என்பது பொது தன்மை கொண்டது. நட்சத்திரம்
என்பது தனித்தன்மை கொண்டது. ஜோதிடத்தில் பொதுதன்மை என்பதை விட தனித்தன்மை பலம்
வாய்ந்தது.

எனவே ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் (அதிபதியின்) பலனை தான் தனித்தன்மையுடன்
தரும் ஏனெனில் ராசி 0 டிகிரி முதல் 30 டிகிரி என்ற நீண்ட இடைவெளியில் (இந்தியா) கொண்டது.
ஆனால் ஒரு நட்சத்திரம் என்பது 13 டிகிரி 20 மினிட் என்ற காரணத்தினால் நட்சத்திரம் என்பது
ராசியை விட தனித்தன்மை வாய்ந்தது.

மேற்கண்ட செய்திகளை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் ஒரு பாவத்தின் (அல்லது
வட்டின்)
ீ பலனை வலிமையாக எடுத்து நடத்தும் கிரகம் பின்வரும் ஏறுவரிசை படி அமையும் என
கூறினார்கள். அதன்படி,
1. ஒரு வட்டின்
ீ ராசிஅதிபதியை விட அந்த வட்டில்
ீ அமர்ந்திருக்கும் கிரகமே வலிமையானது. இதை
தான் ஸ்தானாதிபதியை விட அவனுடைய வட்டில்
ீ உள்ளவன் பலவன் என்று முன்னோர்கள்
கூறினார்

2. அதேபோல் ஒரு வட்டில்


ீ அமர்ந்திருக்கும் கிரகத்தை விட அதனுடைய சாரத்தில் உள்ள கிரகமே
வலிமையானது. இதைநான் நம் முன்னோர்கள் ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் பலனை
தரும் என கூறினார்கள். இதேதான் பாரம்பரிய முறையில் சாரபலம் என்று கூறுகின்றார்கள்.
இதனை சிறிய உதாரணத்துடன் விளக்குகின்றேன்

மேற்கண்ட ராசிகட்டத்தில் சூரியன் மற்றும் புதன் என்ற இருகிரகங்களும் பூரம் நட்சத்திரத்தில்


(சுக்கிர சாரம்) இருப்பதாக கொள்வோம். குரு, ரேவதி நட்சத்திரத்திலும் (புதன் சாரம்) சனி,
கிருத்திகை நட்சத்திரத்திலும் (சூரிய சாரம்) இருப்பதாக கொள்வோம்.

இந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களில் ஜாதகருக்கு பணத்தை தரும் கிரகம் எது என்பது கேள்வி?
பொதுவாக நாம் என்ன செய்வோம் இரண்டாம் வட்டில்
ீ உள்ள சூரியன், செவ்வாய், புதன் என்ற
மூன்று கிரகங்களும் பணத்தை தரும் என்று கூறுவோம், மேலும் சூரியன் இரண்டாம் வட்டின்

அதிபதியாகி சிம்ம லக்னத்திற்கு ஐந்திற்கும், பத்திற்கும் உடைய செவ்வாயும் இரண்டாம் வட்டில்

இருப்பதால் இவர்கள் இருவரும் ஜாதகருக்கு பணத்தை வாரி வழங்குவார்கள் என்ற பொது பலனை
நிர்ணயம் செய்வோம்.

சூரியனும் புதன் செவ்வாயும் சுமார் ஒரு மாதம் ஒரு ராசியில் இருப்பதால் சிம்ம லக்னத்தில் அந்த
மாதத்தில் பிறந்த அனைவருக்கும் ஒரே பலனை சூரியனும் புதன் செவ்வாயும் தஹ்ருவார்கள்
என்பது பெரும்பாலும் தவறாகவே அமைகின்றது. இதை மேம்படுத்த நம் முன்னோர்கள் சூரியனும்
செவ்வாயும், சிம்ம ராசியில் இருந்தாலும் அவர்கள் வெவ்வேறு நட்சத்திரங்களில் இருக்க
பெரும்பாலும் வாய்ப்புண்டு

ஒருவேளை மூன்று கிரகமும் ஒரே நட்சத்திரத்தில் இருந்தாலும் ஒரு மாதத்தில் மூன்று முறை
தங்களின் நட்சத்திரத்தினை இம்மூன்று கிரகங்களும் மாற்றி கொள்வதால் அந்த ஒரு மாதத்தில்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை ஓரளவு வேறுபடுத்தி காட்ட முடியும். எனவே ஒரு கிரகம்
இருக்கும் இடத்தை விட தான் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதன்படி தன்னை மாற்றி கொண்டு
பலனை தரும். இது அந்த கிரகத்தின் சார பலம் என்றும் இவ்வாறு ஒரு கிரகத்தின் சரத்தை மட்டும்
அடிப்படையாக கொண்டு பலனை நிர்ணயிக்கும் முறைக்கு சார ஜோதிட முறை என்று பெயர்.

அதாவது ஒரு கிரகம் தன்னுடைய காலத்தில் (தசா புத்திகளில்) தரக்கூடிய பழங்கள் அதன் பாவ
ஆதிபத்தியம், கிரக சேர்க்கை, ராசியில் இருத்தல், பார்வைகள் போன்ற இவைகள்
எல்லாவற்றையும் விட அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதன் அதிபதியை பொறுத்தே
பலனை தரும் என்பது சார ஜோதிடமாகும்.

கிரகங்களின் சார பலத்தை அறிந்து கொள்வதர்ககாகவே நவாம்ச சக்கரத்திற்கு நம்


முன்னோர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நவாம்ச லக்னத்தை கொண்டு ஜாதகர் பிறந்த
லக்னம் எந்த நட்சத்திரத்தில் விழுகின்றது என்பதை அறிந்து கொள்ளமுடியும். இதன் மூலம் அன்று
அந்த லக்னத்தில் பிறந்தவர்களை வேறுபடுத்தலாம்.

ஆனால் மேற்கண்ட செய்திகளை கருத்தில் கொள்ளாமல் சக்கரத்தில் உள்ள கிரக நிலைகளிலும்


ஆட்சி, உச்சம், நீச்சம், பகை, நட்பு, பார்வை கிரக சேர்க்கை என சில ஜோதிடர்கள் பயன்படுத்தி பலன்
கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதே எளியவனின் தாழ்மையான
கருத்து.

நம் முன்னோர்கள் குறுகிய கால இடைவெளியில் பிறப்பவர்கள் வேறுபடுத்தி காட்ட வேண்டும்


என்ற நோக்கில் ராசிக்கட்டதில் வெவ்வேறு அளவுகளில் உட்பிரிவுகளாக பிரித்தனர். அதை வைத்து
ஆய்வுகள் செய்ததில் அவர்கள் நவாம்ச கட்டத்தை மட்டும் எடுத்து கொண்டு மற்றவைகளுக்கு
முக்கியத்துவம் தரமால் விட்டுவிட்டனர்.

இதற்கு காரணம் கிரகங்களின் சார பலம் என்ற ஒன்றிற்கு அவர்கள் தந்த முக்கியத்துவம் தான்
என்று நான் கருதுகின்றேன்.எனவே ஜோதிடத்தை மேம்படுத்த நினைக்கும் ஒரு ஆராய்ச்சியாளர்
நட்சத்திரத்தை பிரிக்கும் பணியிலிருந்து தனது ஆராய்ச்சியினை தொடங்க வேண்டும்.
ஏற்கனவே ராசியில் இருக்கும் நட்சத்திரத்தை பிரித்து விட்ட பிறகு ஏன், நட்சத்திரத்தையும் பிரிக்க
வேண்டுமென்று ஒரு சில வாசகர்கள் நினைக்க கூடும். இந்த உலகத்தில் எந்த துறையும் இனிமேல்
தன்னை வளர்த்து கொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்து விட வில்லை. ஒரு துறையின் வளர்ச்சி
என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த துறைக்கு கிடைக்கும் தகவல்களை கருத்தில்
கொண்டே அமைகிறது.

உதாரணமாக வாசகர்களுக்கு ஒன்றை கூறுகின்றேன். இன்று அனைவர் கையிலிருக்கும்


செல்போனை பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்திருப்போமா? சாதாரண தொலைபேசியே
(Land line) அன்றைய காலகட்டத்தில் அரிதான விஷயம். சாதாரண தொலைபேசியை ஓரிடத்தில்
இருந்து அடுத்த இடத்திற்கு எடுத்து செல்ல முடியாது. இதற்க்கு என்ன தீர்வு என்று தகவல் தொடர்பு
முறை சிந்தித்ததின் விளைவு, நம் கையில் செல்போன் என்பது சாதரணமாக ஆகிவிட்டது.

அதாவது எல்லா துறையிலும், எந்த காலகட்டத்தில் அத்துறையில் உள்ள கடினங்கள்


உணரபடுகின்றதோ அந்த காலத்திலிருந்து, அந்த துறை தன்னை வளர்த்து கொள்ள ஆரம்பித்து
கொள்கிறது. இதற்கு ஜோதிடத்துறை மட்டும் விதிவிலக்கல்ல என்பதை வாசகர்களுக்கு தெரிவித்து
கொள்கிறேன்.

மேற்கண்ட கருத்தினை அடிப்படையாக கொண்டு சார ஜோதிட முறை தன்னை வளர்த்து


கொண்டது. அதாவது ஒரே நட்சத்திரத்தில் பிறந்த மூன்று கிரகங்களின் தசா, புத்திகளில் முற்றிலும்
மாறுப்பட்ட வெவ்வேறு பலனை தந்ததின் காரணமாகவே சார ஜோதிடத்தை மேம்படுத்தும்
எண்ணம் ஏற்பட்டது.

நடைமுறையில் தசா, புத்திகள் மாறும் போது ஜாதகரின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதை


கண்கூடாக பார்கின்றோம். எனவே தசா, புத்திகள் என்பது ஜோதிடத்தை தாங்கி பிடிக்கும் தூண்கள்
என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.

சுக்கிரன் தரும் யோக பலன்


சுகபோகம் தரும்
  பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்யமான நீ ண்ட
ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு
உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக
இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்ய வாழ்க்கை
மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி
வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.  ஒருவருக்கு  பொன், 
பொருள்,   அழகமைந்த   மனைவி,   சுகமான   வாழ்க்கை,  உயர் பதவி,  கலை,   வாகன்   யோகம்  
போன்றவைகளை   சிறப்புடன்   வாழும் யோகத்தை தருவது சுக்ரன் ஆகும்.

அசுர குரு   சுக்ரன்  ஆவார்.  இவர்   இகலோக   ஆசையை   அளிப்பவர்.   சுக்ரன்   விடி  வெள்ளி  பிரகாஷமாக   தெரியும் 
- இளமையாக   இருப்பவர்கள்   ஜொலிப்பார்கள்  ஆக   இளமையும்,  ரசனையையும்  அளிப்பவர்.  ஆடல்  பாடல்  
முதலான   நளின   கலைகளுக்கு   நாயகன்,  மனைவியைக்   கொடுத்து    மகிழ்ச்சிகாரமான    இல்லற  
வாழ்க்கையைத்  துவக்கி   வைத்துப்   பரிபாலனம்  செய்வர்.

சுக்ரன் தொழில்
வேஷக்காரன்,   நடிகர்கள்,    கலைத்துறைக்காரன்கன்,  ஒப்பனைப் பொருட்கள்,  அலங்கார   வஸ்த்துக்கள்,  ஆடம்பர 
வஸ்துகள்,  சுக்ரன்  என்றால்    வெள்ளை   என்று  பொருள்,  வெண்மை   பொருள்கள்   அனைத்துக்கும்   காரகன்,   
சுக்கில  பட்சம் ,  வைரம்   மிக    பிரகாஷம்  ஜொலிப்பது  போல்  எல்லாம்   சுக்கிரன் ,  இளம் பெண்   குறிப்பது  சுக்ரன்,
விடியற்  காலை   பொழுத்தைக்  குறிப்பவர்   இவர்,   வான்   மண்டலத்தில்   விடியல்   காலை  பொழுதில்   சுக்ரன்  
தெரிகிறார்.   அதிகாலையில்   மனிதனுக்கு  காமக் கிளர்ச்சியை   ஏற்படுத்துவதும்   இவர்  தான்.  காமத்துக்   காரன்  
சுக்ரன்.

களத்திரகாரகன் சுக்ரன்
சுக்ரன்    இல்லற்   வாழ்வுக்குறியவர்,  சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு   மனைவியைப்பற்றியும், 
பெண்ணுக்கு  மண   வாழ்க்கையைப்  பற்றியும்  சொல்லுகின்றவர்.   உலக   வாழ்கையில்     இன்பமும் 
செளபாக்கியங்களையும்   சுக  போக    செளரியங்களையும்  தருபவன்  சுக்ரன்.   வாகன  வசதிகளை       அளிப்பவர்  
இவர்,  மிக  உயர்ந்த    வாகனமா,  நடுத்தரமான   வாகனமா,  கடைசி   நிலை    வாகனமா,  ஒன்றுக்கு   மேற்பட்ட  
வாகனமா  என   குறிப்பவர்   இவர்தான்.

ஒருவரின்   தேவைகளை  பூர்த்தி   செய்யக்  கூடியவர்  இவர்.


கையில்   காசுடையவர்களாய்   வைப்பரும்,   சொந்த  வடு
ீ அளிப்பவரும்  இவர்தான்,  கலை  உலகில்   சிறப்பான  
நிலையை  அளிப்பவர்.  பெண்களிடம்  மோகத்தை  அளிப்பவரும்,  வாழ்நாள்   முழுவதும்   அதே  நினைப்பில்   இருக்க 
வைப்பவர்  இவர்தான்.

ஜாதகத்தில் சுக்கிரன் தரும் யோக பலன்கள்


வலுப்  பெற்ற  சுக்ரன்  (சுக்ரன் ஆட்சி, சுக்ரன் உச்சம்) கலாரசனை என்கின்ற   அற்புத  உணர்வு அளிப்பவர்,  அழகு, 
அழகின்   படைப்பான  ஆரணங்கு,  அந்த    ஆரணங்கத்தின்  மீ து  காதல்   கொண்டு   சுகமடையும்   தகுதி, சிற்றின்பம்,   
திருமணம்  முதலான  ஆணுக்கு  அளிப்பவர்.  அதே  போல்  பெண்களுக்கு   நளினத்   தன்மையையும்   அழகான 
தோற்றம்,  கவர்ச்சி,   வரியசக்தி, 
ீ அறிவாற்றல்,   மனத்துக்கிசைந்த   கணவனை   அடையும்   தகுதியையும்,  சுக 
போகங்களில்   திளைத்து   மகிழும்  ஆற்றலையும்  வழங்குவார்.  மாட   மாளிகையில்     வாழ்க்கை   நடத்தும் 
பாக்கியத்தை  இரு  பாலருக்கும்  அளிப்பவர். தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள்
தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால்
சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய
இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20
வருடங்களில்  மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால்  எதிர்மறையான பலன்கள்
ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம
ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம். ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகம்
யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும்
பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று
இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிட்டும்.

கார் - பங்களா நிலம், பூமி ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். ஆனால், அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள்
அடுக்குமாடிகள் சொகுசு பங்களாக்கள், தோட்ட வடுகள் 
ீ போன்ற நவன
ீ கட்டிடங்களுக்கு அதிபதி
சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் சுக்கிர பலம் இருந்தால்தான் இதைப் போன்ற வசதியான யோகம் கிடைக்கும்.
அதேபோல், சுக்கிரனின் அருள் யோகம் இருந்தால்தான் ஒருவருக்கு விதவிதமான வாகனங்கள், ஆடம்பரகார்கள்
சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

சுகங்களைத் தரும் சுக்ரன்


சுக்ரன்  என்றால்   இன்பம்   என்று பொருள்  கொள்ளலாம்.   அன்பு,  பாசம்,  காதல்  ஆகிய   மூன்று   இன்பங்களை 
அளிக்கக்  கூடியவர்.   இன்பம் என்கிற   ஆனந்தத்தை  அடைவதற்குரிய    மனநிலையை   உருவாக்குகிறவர்  சுக்ரன்.  
இவர் கலை   உணர்வால்  இன்பம்  உண்டாக்குவார்.    அழகு,  ஆராதனையால்   இன்பம்   ஏற்படுத்துவார்.
                       
கலையம்சமுள்ள    பொருட்  சேர்க்கையால்  இன்பம்  தருவார்.  அழகு    வனிதையால்   ஆடவருக்கு  சுகம் ,வாசனைத்   
திரவியங்களால்    உற்சாகம்   ஊட்டுவார்.    இசையால்,   இசையுணர்வால்     இன்பம்  தருவார்,  கற்பனை   வளத்தால்  
மாபெரும்  இன்பம்   தருவார்

வாசனை  திரவியங்களால்  சுகானுபவம்    அளிப்பவார்.   கவியின்பம்  தருவார்.   காவிய  இன்பம்   தருவார்.    கற்பனை  
வளத்தால்  மா பெரும்   இன்பம்   தருவார்.   நடன   நாகரீக   மணிகளை   உருவாக்குவார்.   நாடகக்  கலைஞர்களைத்  
தோற்றுவிப்பார்.  வெண்  திரைச்   சலனப்படத்திற்கு   ஆதாரம்  அவர்.  கண்களைப்   பிரதிபலிப்பவர்,  ஜனன   
உறுப்புகளைக்   காப்போன்.

மேலே   குறிப்பிட்ட   இன்பத்தை   யாருக்கு   தருவார்  என்றால்   மீ னத்தில்   சுக்கிரன்  உச்சம்  பெற்று   இருக்க,  
அவருக்கு   நட்பு   கிரகங்களின்    தொடர்பும்,  பகை   கிரக  தொடர்பு   இன்றி   இருத்தால் கண்டிப்பாக   கிடைக்கும்.  அதே 
போல்    சுக்ரன்  ஆட்சி   வடான   
ீ ரிஷபம்  மற்றும்   துலாமில்   இருந்தாலும்   சுக   வாழ்வு  உண்டு.    [சுக்ரனுக்கு  
புதன்   நட்பு     கிரகம்.   புதனின்   வடான 
ீ கன்னியில்   சுக்ரன்    நீ சம்  அடைகிறார்.  அங்கு   நீச   பங்கம்  பெறாமல்   
இருந்தால்  சுக   வாழ்வு   எதிர்பார்க்க   முடியாது...

ஜோதிடத்தில் சுக்ரன் தரும் யோக பலன்கள்


சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல்
அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம்
இழந்தால் நல்லது அல்ல.

சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2 ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள்
சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும்.
பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம்
உண்டாகும்.

சுக்கிரன் 3 ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும்.
குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை
பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4 ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள
தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.
பெண்ணுக்கு 4 ம் வடு
ீ கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக
இருப்பாள்.

சுக்கிரன் 5 ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வக


ீ சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண்
குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

சுக்கிரன் 6 ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வண்


ீ செலவுகள், திருமணம்
காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண
வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

 சுக்கிரன் 7 ல் இருந்தால் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம்
வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள்
சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு
உண்டாகும்.
சுக்கிரன் 8 ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வடு,
ீ வாகனம் அமையத் தடை உண்டாகும்.
பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத
நிலை, கண்களில் நோய் உண்டாகும்.

சுக்கிரன் 9 ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு,
வசதி, வாய்ப்பு பூர்வகத்தால்
ீ அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப
வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர்
வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரன் 10 ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள
தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும்.
சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான
செயல்களில் ஈடுபட நேரிடும்.

சுக்கிரன் 11 ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து
சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள்
சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால்
தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

சுக்கிரன் 12 ல் இருந்தால் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12 ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல்
உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று
பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வண்

விரயம், ஏழ்மை ஏற்படும்.

ஜாதகத்தில் சுக்ரன் நிலையும் காமக் கலையும்

துலாம் லக்னத்திற்கு சுக்கிர பகவான் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார்.


துலாம் ராசி சுக்கிரனுக்கு மூலத்திரிகோண வலுவுள்ள இடமும் ஆகும்.

இங்கிருக்கும் சுக்கிரன் சனியும்சேர்ந்து , உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் அதீத காம ஈடுபாட்டுடன் இருப்பார். பெண்


பித்தராகவும் இருக்கலாம். ஜாதகர் சும்மா இருந்தாலும் பெண்கள் அவரைச் சும்மா இருக்க விட மாட்டார்கள். சனியும்
பலம் பெற்றிருப்பதால் ஜாதகர் கடின உழைப்பிற்கு அஞ்சாதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும், கருணையற்ற
முடிவுகளை எடுப்பவராகவும், பிடிவாதக்காரராகவும், உயரம் குறைந்தவராகவும் இருப்பார். அதேநேரம் சனி வக்ரம்
அடைந்திருந்தாலோ அல்லது வேறு வகையில் பலம் இழந்திருந்தாலோ இந்த பலன்கள் மாறும். மற்றபடி இங்கு
தனித்த நிலையில் வலுவுடன் இருக்கும் சுக்கிரனின் தசையில் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சிறந்த மாளவ்ய
யோகம் கிடைக்கும்.லக்னாதிபதிக்கு வேறு கெட்ட ஆதிபத்தியங்கள் இருந்தாலும் லக்ன பலனே வலுப்பெறும் என்று
நமது கிரந்தங்கள் கூறினாலும் அனுபவத்தில் அது சரியாக வரவில்லை. துலாம் லக்னத்திற்கு அஷ்டமாதிபத்திய
பலனையும் சுக்கிரன் செய்யத்தான் செய்கிறார்.வலுவுடன் இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகர் சிறந்த கலாரசிகராக
இருப்பார். திறந்தமனது, அழகுணர்ச்சி, வெளிப்படையான பேச்சு. உண்மைக்குணம் ஆகியவை ஜாதகரிடம்
நிரம்பியிருக்கும். சிற்றின்பப் பிரியராக இருப்பார். உண்மைக் காதலராக இருப்பார் என்பதால் பெண்களால்
விரும்பப்படுவார். சிறந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை சுக்கிரனால் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மேலான
நிலைக்குச் செல்ல முடியும்.

விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை அளிப்பார். சுக்கிரன் இங்கிருப்பது
களத்திர தோஷத்தை அளிக்கும் என்பதால் இங்கு அவர் பலம் பெறும் நிலையில் தாமத
திருமணம் அல்லது முறையற்ற திருமணத்தை அளிப்பார்.

ஆயினும் இயற்கைச் சுபரான சுக்கிரன் இங்கிருந்து லக்னத்தைப் பார்வையிடுவார் என்பதால் ஜாதகர் நல்ல
குணங்களைப் பெற்றிருப்பார்.
இந்த லக்னத்திற்கு சுக்கிரன் பனிரெண்டுக்குடைய போக ஸ்தானாதிபதியுமாவார். அவர் அயன
சயன போகஸ்தானத்திற்க்கு எட்டில் மறைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது ஒரு வகையில் நல்ல நிலை
தான்.விருச்சிக லக்னத்திற்கு ஏழாமிடத்தில் பலம் பெற்று தசை நடத்தும் நிலையில் இங்கிருக்கும் சுக்கிரன்
பெண்கள், காதல், காமம் சம்பந்தப்பட்ட பலன்களையே பெரும்பாலும் செய்வார். மேலும் ரிஷபம் சுக்கிரனின்
பெண்ராசி என்பதாலும் அது பற்றிய பலன்கள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும். விருச்சிக லக்னத்தவர்களுக்கு
சுக்கிரனின் காரகத்துவங்களான வடு,
ீ வாகனம் போன்றவைகளை சுக்கிரன் செய்வது கடினம். தனது தசையில் அவர்
பெண்கள், காமம், உல்லாசம், கேளிக்கை, வெளிநாட்டு வேலை, அயல்தேசவாசம், பெண்களால் செலவு, முறை தவறிய
போகம் ஆகிய பலன்களையே செய்வார்.சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு
வாழ்க்கைத்துணையின் வழியாக ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார்.

தனுசு லக்னத்திற்கு நான்காம் இடமாகிய மீ னத்தில் சுக்ரன் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை சுக்கிரன் செய்வார். 
தனுசு லக்னத்திற்கு ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி இவர். ஒரு சூட்சும நிலையாக
தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் அவரது காரகத்துவங்களை வலிமையாகச் செய்ய வேண்டுமெனில் சுக்கிரனை விட
லக்னாதிபதி குருபகவான் வலிமை பெற்றிருக்க வேண்டும் ஏனெனில் நமது ஞானிகளால் ஜென்ம விரோதிகளாக
உருவகப் படுத்தப்பட்ட கிரகங்களின் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு எதிரிக் கிரகங்கள் லக்னாதிபதியை விட
வலுப்பெற்றால் யோகத்தை அனுபவிக்க முடியாது.

லக்னாதிபதி குரு வலுப்பெறும் நிலையில் இந்த லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம் பெற்று திக்பலமும் பெறும்
சுக்கிரன் தனது தசையில் அவரது நல்ல காரகத்துவங்களைச் செய்வார். ஆயினும் இந்தக் கட்டுரைகளின் ஆரம்பத்தில்
நான் சொன்னதைப் போல எதிரியின் லக்னங்களுக்கு கிரகங்கள் முழுமையான யோகம் தராது. நிச்சயமாக மனைவி
தாம்பத்திய சுகம் காமம் போன்றவற்றில் ஏதாவது ஒரு குறையை சுக்கிரன் செய்தே தீருவார்.

இங்கு இருக்கும் சுக்கிரன் மிகச்சிறந்த வசதியான ஆடம்பரமான வாழ்வை ஜாதகருக்கு தருவார். நல்ல வடு
ீ அமையும்.
உயர்தர வாகனம், கல்வி, ஆரோக்கியம், தன் சுகத்திற்காக எதுவும் செய்தல், மற்றும் அம்மா வழியில் மிகச்சிறந்த
லாபங்கள், தாயைத் தெய்வமாகக் கருதுதல் போன்ற பலன்களை அளிப்பார்.

சில நிலைகளில் மேற்சொன்ன எல்லா வசதிகளையும் ஜாதகருக்கு அளித்து திருமண வாழ்வில் நாட்டம் இல்லாத
நிலையை சுக்கிரன் உண்டு பண்ணுவார்

 இங்கிருந்து அவர் பத்தாம் இடத்தை பார்வையிடுவார் என்பதாலும் மீ னம் குருவின் வடு


ீ என்பதாலும் ஜாதகரை
ஆன்மீ கம் சம்பந்தப்பட்ட இனங்கள் மற்றும் தனது காரகத்துவங்கள் ஏதேனுமொன்றில் ஈடுபடுத்தி செல்வம் தருவார்.

இந்த லக்னத்திற்கு அவர் ஆறுக்குடையவர் என்பதால் தசையின் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சில சிக்கல்களையும்
ஏற்படுத்துவார். ஆனால் சுக்கிரன் இயற்கைச் சுபர் என்பதாலும் சுபகாரகத்துவங்கள் உள்ளவர் என்பதாலும் பெரிதாக
பாதிக்காது.

மகரம்

மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து மற்றும் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி பத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம்
தருவார்.

சுக்கிரன் இயற்கைச் சுபக்கிரகம் என்பதால் பெருங்கேந்திரமான பத்தாமிடத்திற்குப் பதிலாக திரிகோணமான ஐந்தில்


அவர் ஆட்சி பெறுவதே  நன்மைகளைத் தரும்.

ஆயினும் பத்தாமிடத்தில் அவர் மாளவ்ய யோகம் தருவார் என்பதால் தனது காரகத்துவங்களுக்கு உட்பட்ட சினிமா,
தொலைக்காட்சி, மாடலிங், டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல், டிராவல்ஸ், லாட்ஜிங், பேன்சி அயிட்டங்கள், அவசியம்
இல்லாத ஆடம்பர பொருட்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் ஜாதகரை வழி நடத்தி 
செல்வம் அளிப்பார்.

 துலாம் சரராசி என்பதாலும் சரராசியில் வலுப்பெறும் கிரகங்கள் மிகப் பெரிய யோகத்தைச் செய்யும் என்பதாலும்
மாளவ்யயோகம் மகர லக்னத்திற்கு நன்கு பலன் தரும். ஆயினும் இங்கிருக்கும் சுக்கிரனுடன் சனி இணைய கூடாது.

மகர லக்னத்திற்கு சனி லக்னாதிபதியாகி பத்தாமிடமாகிய துலாத்தில் உச்சம் பெறுவார். என்னுடைய கருத்தின்படி சனி
லக்னாதிபதியே ஆனாலும் நேரடியாக உச்சம் பெற்று வலிமை பெறக்கூடாது. அவ்வாறு வலுப்பெற்றாலும்
வேறுவகையில் கெட்டு சூட்சும வலுதான் பெற வேண்டும்

 இங்கு பூரண வலுவுடன் உச்சமாகும் சனிபகவான் சுக்கிரன் தர இருக்கும் நல்ல பலன்களைக் கெடுப்பார். எனவே இங்கு
சனி சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலும் வக்ரம் போன்ற நிலைகள் பெற்று வலிமை இழந்து இருப்பது நல்லது.

இந்த இடத்தில் திக்பலத்தை சுக்கிரன் இழந்து கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார். அவர் தனித்து இருக்கும்
நிலையில் தோஷம் வலுப்பெறும். இது நன்மைகளைத் தராது. புதனுடன் இணைத்திருப்பது நல்ல யோகம்

பத்தாமிடத்தில் அவர் இருக்கும் நிலையில் நான்காமிடத்தை பார்வையிடுவார் என்பதால் தனது தசையில் அழகிய
பெரிய வடு,
ீ நல்ல வாகனம், சுகமான வாழ்க்கை, உயர்கல்வி, தனக்கு ஈடுகொடுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை, தாயார்
வழியில் முன்னேற்றம் ஆகியவற்றை சிறப்புடன் வழங்குவார்.
கும்பம் :

கும்ப லக்னத்திற்கு நான்காமிடத்தில் ஆட்சி பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். மேலும் கும்ப லக்னத்திற்கு
சுக்கிரன் பாதகாதிபதியும் ஆவார்.

இந்த லக்னத்திற்கு சுக்கிரன் இரண்டில் உச்சம் பெறுவதை விட தனது பாதக ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு எட்டில்
மறைந்து நான்கில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலைதான். மேலும் சுக்கிரன் இந்த இடத்தில் திக்பலமும் பெறுவார்.

இந்த இடத்தில் இருக்கும் சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார் என்பதால் சிம்ம லக்னத்திற்கு நான்
சொன்னது கும்பத்திற்கும் பொருந்தும்

இங்கிருக்கும் சுக்கிரன் பத்தாமிடத்தை தொடர்பு கொள்ளும் நிலையில் தனது தசையில் தனது காரகத்துவங்களான
சினிமா, தொலைக்காட்சித் துறை, வடியோ
ீ சாதனங்கள், பெண்களின் பொருட்கள், உணவுக் கூடம், துணி விற்பனை,
வெண்மையான பொருட்கள், வாகனத்துறை, ஆடம்ப சொகுசுப் பொருட்கள் போன்றவற்றில் ஜாதகரை வழி நடத்தி
பணக்காரர் ஆக்குவார்.

 நான்காமிடத்தில் இருப்பதால் பெரிய வடு,


ீ நல்ல வாகனம், கல்வி, ஆடம்பரமான வாழ்க்கை, தாயாரை தெய்வமாக
மதித்தல் போன்ற நல்ல பலன்களை தனது தசையில் ஜாதகருக்கு அருளுவார்.
இங்கு யோகம் தரும் நிலையில் சுக்கிரன் இருந்தாலும் கும்ப லக்னத்திற்குப் பாவிகளான சூரிய சந்திர செவ்வாய்
ஆகியோரின் நட்சத்திரத்தில் தான் அவர் இருக்க முடியும். எனவே யோகம் செய்யும் நிலையிலும் சில குறைகள்
இருக்கும்.
 மேலும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் சிற்றின்பப் பிரியராக இருப்பார். காம இச்சையில்
அதிக ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் இருப்பார். பெண்கள் இவரை விரும்புவார்கள். பெண்களுக்காக எதையும்
செய்வார்.
கிருத்திகை நட்சத்திரத்திலிருந்தால் ஏழுக்குடையவரின் சாரம் பெறுவதால் காதல், உல்லாசம், கேளிக்கை, இளமை
விளையாட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவராகவும், வருமானத்தை பெண்கள் விஷயத்தில் செலவு
செய்பவராகவும் இருப்பார்.

மீ னத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார்.

ஆயினும் இந்த லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி ஆவார்.

அஷ்டமாதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவது நல்லதல்ல என்றாலும் அவர் இயற்கை சுபர் என்பதால்
எட்டுக்குடையவனின் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஆயினும் தனுசு லக்னத்திற்கு நான் சொன்னதைப்போலவே
சுக்கிரன் இங்கு உச்சம் பெற்றால் அவர் தரும் யோகத்தை முறைப்படி அனுபவிக்க லக்னாதிபதி குருபகவானும்
அதிவலு அடைந்திருக்க வேண்டும்.
 சுபர் உச்சம் பெறுவதால் இந்த அமைப்பு உள்ள பெரும்பாலானவர்கள் அழகான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.

இவர்களுக்கென்று தனித்துவமான சிந்தனை இருக்கும். வேறு கிரகங்களின் பாதிப்பு இருந்தால் இவர்களின் வழி
தனிவழியாக இருக்கும். இளமையில் எந்நேரமும் காதலின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள்.

தான் காதலிப்பவரின் மேல் அதீத ஈடுபாடும் வெறித்தனமான அன்பும் இருக்கும். அதனாலேயே சிக்கலான ஒத்துவராத
முடிவுகளை எடுப்பார்கள்.
இங்கிருக்கும் சுக்கிரன் ஏழாமிடத்தை உச்சமாகிப் பார்ப்பதால் இவர்களுக்கு காம உணர்ச்சி மிகுதியாக இருக்கும்.
எப்போதுமே இளமையில் வரும் சுக்கிரதசை இவர்களை திசை திருப்பி விடுகிறது.   மீ னலக்னத்திற்கு சுக்கிரன் தனது
சுப காரகத்துவங்களைச் செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக தனது தசை,புக்திகளில் ஜாதகரை வெளிநாட்டு
இனங்களில் தொடர்பு படுத்துவார். வெளிநாட்டில் அல்லது தூர இடங்களில் வேலை செய்ய வைப்பார். அயல்தேசக்
குடிமகன் ஆக்குவார். வாழ்க்கைத்துணையை வெளிநாட்டில் காண வைப்பார்.

 விருந்துகள் கேளிக்கைகள் உள்ளிட்ட இளைமையின் அத்தனை பரிமாணங்களிலும் ஜாதகரை ஈடுபடுத்துவார். சொகுசு


வாழ்க்கையும் தருவார்
களத்திரகாரகன் என்பதால் மாளவ்யயோகம் எனும் வாழ்க்கையின் தேவைகளை திருமணத்திற்குப் பிறகு
வாழ்க்கைத்துணையின் மூலமாக சுக்கிரதிசையில் செய்வார்.

சுக்கிரனால் வரும் நோய்கள்

சுக்கிரன் பலம் குறைந்து ஜாதகத்தில் இருந்தால் கட்டி, பிளவை, மர்மஸ்தான நோய்கள், பால்வினை நோய்கள்
போன்றவை ஏற்படும். கண்நோய், கண் பார்வைக் கோளாறு போன்றவை உண்டாகும். சுக்கிலத்திற்கு அதிபதியாக
இருப்பதால் விந்து குறைபாடு, விந்து அணு குறைபாடு ஏற்படும். ஆகையால் குழந்தை பாக்கியம், குழந்தை
பாக்கியத்தடை குறைகள் ஏற்படும்.

சுக்ரன் பரிகாரம்

சுக்கிரன் பலம் பெற்றோ, குறைந்தோ இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள்


விருத்தியடையும். வெள்ளிக்கிழமை விரதம்  இருந்து அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம்.
பௌர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக
தரலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசிக்கலாம். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர தலத்தில் தனது
தேவியருடன் அருள் பாலிக்கிறார், சுக்கிர பகவான். இவரை வழிபட்டால் எல்லாவகைத் திருமணத்
தடைகளும் நீங்கும். கருத்துவேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று
சேர்வார்கள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்து வைத்து, அவர்களிடையே
அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடியது கஞ்சனூர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வதியில்
ீ உள்ள வெள்ள ீச்சரம்
கோயில், சுக்கிரனுக்கு உரிய தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் கோளாறுகள் நிவர்த்தியாகும்.
வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு
கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கிழமை          - வெள்ளி
தேதிகள்         - 6, 15, 24
நட்சத்திரம்        -பரணி, பூரம், பூராடம்
ஆட்சி வடு       
ீ -ரிஷபம், துலாம்
உச்சம்     -மீ னம்
நீச்சம்            - கன்னி
ரத்தினம்     -வைரம்
உலோகம்        - வெள்ளி
தானியம்      -மொச்சை
நிறம்     -வெண்மை
ஆடை    - வெண்பட்டு
தசா காலம்      - 20 ஆண்டுகள்
கிரக அமைப்பு  -  பெண்
வாகனம்        - கருடன்
புஷ்பம்    -வெள்ளை தாமரை
சுவை     -இனிப்பு.

சுக்ரன் வரலாறு
நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி
நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன்
பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள்
இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில்
இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.

இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று


சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய
சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின்
வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும் தூய வெண்மையாக
வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல்
வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண்
குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது.

ஒவ்வொருவர் வாழ்க் கையிலும் இன்ப-துன்பங்கள், ஏற்ற-இறக்கங்கள், லாப- நஷ்டங்கள் மாறி மாறி வருகின்றன. இது
இயற்கையின் நியதிதான் என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று
சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணியமே காரண மாகும். இந்த பூர்வ யோகத்தை நாம்
பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக
தசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.
நீசம் - என்றால் கெட்டு நிற்பது என்று பொருள். அவ்விதம் கெட்டு நின்ற கோள் சந்திர கேந்திரம், ஆட்சிக்கிரகத்துடன் நின்றால் நீசம்
பங்கம் பெற்றதாகவும், அதனால் வெகு இராஜயோகப் பலன்கள் கிடைக்கும் என்றும் இதுவே நீசபங்க ராஜயோகம் என்றும்
சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

கிரக உச்ச நீச அளவு, உச்சம் நீசம் பெறாத ராசிகள் - உபகிரகங்கள் பரிவேடன், இந்திர தனுசு, தூமன், தூமக்கேது உச்சம், நீசம், உச்ச நீச
பலன், நீச ராசிகள், நீசபகை ஸ்தானம், அகராதிகள் தரும் விளக்கம் - சூரியன் நீசம், சந்திரன் நீசம், செவ்வாய் நீசம், புதன் நீசம்,
குருநீசம், சுக்கிரன் நீசம், சனி நீசம், ராகு நீசம், கேது நீசம், நீசக்கிரகம், நீச பங்க யோகம், நீச பங்க ராஜயோகம், பல கிரகம் நீசம் -
இராஜயோகம், நீசன் நின்ற ராசியதிபதி குருவின் பார்வை, நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு ஆகியவை தெரிவிக்கும்
செய்திகளைக் காண்போம்.

கிரக உச்ச நீ ச அளவு

கிரகங்கள் உச்சம், நீசம் பெறும் அளவுகளாக

* சூரியன் மேஷத்தில் 30 உச்சமும், துலாத்தில் 30 நீசமும் பெற்றிருக்கிறது

* சந்திரன் ரிஷபத்தில் 3 உச்சமும், விருச்சகத்தில் 3 நீசமும் பெற்றிருக்கிறது

* செவ்வாய் மகரத்தில் 28 உச்சமும் கடகத்தில் 28 நீசமும் பெற்றிருக்கிறது

* புதன் கன்னியில் 15 உச்சமும், மீ னத்தில் 15 நீசமும் பெற்றிருக்கிறது

* குரு கடகத்தில் 5 உச்சமும், மகரத்தில் 5 நீசமும் பெற்றிருக்கிறது

* சுக்கிரன் மீ னத்தில் 27 உச்சமும், கன்னியில் 27 நீசமும் பெற்றிருக்கிறது

* சனி துலாத்தில் 20 உச்சமும், மேஷத்தில் 20 நீசமும் பெற்றிருக்கிறது

என்கிறது அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.104)

உச்சம் நீ சம் பெறாத ராசிகள்

ராசி வடுகளில்
ீ மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் நவக்கிரகங்களில் எதுவுமே உச்சம், நீசம் பெறவில்லை. அங்கெல்லாம்
உபகிரகங்கள் உச்சம், நீசம் பெறுவதாக பண்டைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம்)

பரிவேடன், இந்திர தனுசு, தூமன், தூமக்கேது

* பரிவேடன், மிதுனத்தில் உச்சமும், தனுசில் நீசமும் பெறுகின்றன.

* இந்திர தனுசு தனுசில் உச்சமும், மிதுனத்தில் நீசமும் பெறுகின்றது.

* தூமன், தூமக்கேது இருவரும் சிம்மத்தில் உச்சமும், கும்பத்தில் நீச்சமும், சிம்மத்தில் நீசமும், கும்பத்தில் உச்சமும் பெறுகின்றன.

என்று அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நூல் குறிப்பிடுகின்றது.

உச்ச நீ ச பலன்

ஒரு ஜாதகத்தில் உச்ச நிலையில் இருக்கும் கிரகம் நன்மையான பலன்களையும், நீச நிலையில் இருக்கும் கிரகம் பாதகமான
பலன்களையும் அதாவது தீய பலன்களையும் வழங்கும் என்பது பொதுவிதியாய்க் குறிப்பிடுகின்றது. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம்
பக்.70.)

நீ ச ராசிகள்

நீச ராசிகள் சூரியனுக்கு துலாமும், சந்திரனுக்கு விருச்சிகமும், செவ்வாய்க்குக் கடகமும், புதனுக்கு மீ னமும், குருவிற்கு மகரமும்,
சுக்கிரனுக்கு கன்னியும், சனிக்கு மேஷமும் நீச ராசிகளாகும் என்று குறிப்பிடுகின்றது. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.96.)

நீ சபகை ஸ்தானம்
கோட்சார முறையாக ஒரு கிரகம் அளிக்க வேண்டிய இடத்தில் நீசமடைய நேர்ந்தாலோ அல்லது அந்த இடமே அதற்குப் பகை வடாக

இருந்தாலோ நல்ல பலன்கள் நிச்சயம் நடக்காது. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ப.203.)

அகராதிகள் தரும் விளக்கம்

* நீசக்கிரகம் - இராகு, கேது, உச்சத்திற்கு ஏழாமிடக் கிரகம். நீசத் தானம் அடைந்த கிரகம்.

* நீசக்கிரகம், நீசக்கோன் - இராகு, உச்சத்திற்கு ஏழாம் இடக்கிரகம், கேது, நீச ஸ்தானம் அடைந்த கிரகம்.

* நீசத்தானம் - உச்சத்திற்கேழாமிடம்.

* நீச ஸ்தானம் - உச்சத்திற்கு ஏழாம் இடம்.

* நீசநடை - தீயொழுக்கம்.

* நீச பங்க ராசயோகம் - ஓர் யோகம், ஒரு யோகம். நீசம் பெற்ற கிரகம், நீசங் கெட்டு இராஜ யோகத்தைத் தருவதாகும். (விவரம்: நீசக்
கிரகம் இருந்த வட்டுக்கு
ீ உடையவன், ஆட்சி அல்லது உச்சம் பெற்றாவது, சந்திரனுக்குக் கேந்திரம் பெற்றாவது நிற்பதாகும்)

* நீசப்படுதல் - ஈன குணம் உடைத்தாதல்.

* நீசப்பெலக் குறைவு - பங்கம்.

* நீசம் - உச்சத்திற்கு ஏழாம் இடம். ஈனம், உச்சத்திற்கேழாமிடம், கொடுமை.

* நீச ராசி - கிரகங்கள் நீசம் பெறும் ராசி. (விவரம்: கிரக நீசத்தில் காண்க என்று விளக்கம் தெரிவிக்கின்றது)

கிரக நீ சங்கள்

கிரகங்கள் நீசம் பெற்றால் கீ ழ்க்காணும் நீசபலன்கள் இருக்கும் என்று அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நூல் குறிப்பிடுகின்றது.

சூரியன் நீ சம்

சூரியன் நீசம் பெற்றிருந்தால் உஷ்ண சம்பந்த வியாதியால் வருந்த நேரும். தந்தையின் ஆரோக்கியம் மற்றும் உறவு முறை சரிப்படாது.
அறிவு ஆராய்ச்சி உள்ளவராக இருப்பர். தீயகுணம் நடத்தையுள்ளவராகவும் இருப்பர்.

சந்திரன் நீ சம்

சந்திரன் நீசம் பெற்றிருந்தால் பெற்றோர் சுகம் இழந்தவராக இருப்பர். பயந்த சுபாவமுள்ளவர். ஆரோக்கியமும் குறைந்திருக்கும் சுய
நலவாதியாக இருப்பர், சீ தள சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். நீரில் கண்டமும் இருக்கும். பெண்களால் பல வகையிலும் தொல்லை
அனுபவிப்பவராக இருப்பர்.

செவ்வாய் நீ சம்

செவ்வாய் நீசம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவது கடினம். குடும்பத்தில் கலகம், பல வித பிரச்சினைகள்
நிறைந்திருக்கும். மூளை பாதிப்பும் அது சம்பந்தமான நோய்க்கும் ஆளாக நேரும். வடு,
ீ நிலம் போன்றவை இருந்தாலும் அதனால்
தொல்லைகளே இருக்கும். நன்மை இருக்காது. வசதி குறைந்திருக்கும்.

புதன் நீ சம்

புதன் நீசம் பெற்றிருந்தால் கல்வியில் தடை இருக்கும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார்
உறவினர்களுக்கு விரோதியாக இருப்பர். காம இச்சை மிகுந்தவராக இருப்பர். புத்திரர்களால் எந்த நன்மையும் பெற முடியாது. பழி
பாவத்திற்கு ஆளாக நேரும்.

குரு நீ சம்

குரு நீசம் பெற்றிருந்தால் தீயவராக பழி பாவத்திற்கு அஞ்சாதவராக இருப்பர். கல்வி கற்றாலும் அதனால் பயன் பெறாதவராவர்.
ஆசாரம் இல்லாதவர். கரு உற்பத்தியில் சிதைவு காட்டும். புத்திரர்கள் இருப்பின் அவர்களால் தொல்லை மிகுந்திருக்கும்.

சுக்கிரன் நீ சம்

சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் களத்திர சுகங்கள் குறைவு, பெண்கள் வகை ஆதாய அனுகூலங்கள் குறைவு, சுகத்தானம் பலம் இழத்தல்,
ஆடை, ஆபரண வசதிகள், வண்டி வாகன வசதிகள் குறைவு, பால் பசு, தாயினால் கிடைக்கக் கூடிய சுகங்கள் இன்மை, செல்வவளம்
குறைதல், கால்நடைகள் நன்மை தராது இருத்தல் ஆகியன ஏற்படும்.

சனி நீ சம்

சனி நீசம் பெற்றிருந்தால் தீயகுணம் முரட்டுத்தனம் மிக்கவராக இருப்பர். பிறர் வெறுக்கும் காரியங்களைச் செய்வர். ஆரோக்கியம்
குன்றி இருக்கும். கீ ழான பெண்களுடன் அல்லது ஊனமுற்ற பெண்களிடம் தொடர்பு கொண்டு இருப்பார். சோம்பல் மிகுந்து இருக்கும்.
வறுமை இருக்கும். மனைவிக்கு தோஷம் உண்டு அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவராக இருப்பர்.

ராகு நீ சம்

ராகு நீசம் பெற்றிருந்தால் எதற்கும் குதர்க்கம் பேசுபவராக இருப்பர். தர்க்கவாதம் புரிவர். எதையும் யோசித்து செய்ய மாட்டார்கள்.
இருந்தாலும் செய்யும் காரியங்களில் தீவிரமும், அக்கறையும் காட்டுவர். பித்தத் தொடர்பான வியாதி காட்டும். ஆயுதங்களால்
தொல்லை ஏற்படும். குடும்பத்தில் வெறுப்புற நேரும்.

கேது நீ சம்

கேது நீசம் பெற்றிருந்தால் பிறரையும் தம்மைப் போல எண்ணும் சுபாவம் உடையவராக இருப்பர். ஆன்மீ கத்துறையில் ஈடுபாடும்
அத்துறைக்கு தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பும் சில காலம் கிட்டும். தாய்வழி உறவினருக்கு தோஷம் காட்டும். மருந்து
மாந்தீரிகத்தினால் தொல்லைகளை அனுபவிக்க நேரும்.

சோதிட சிகாமணியினுள் இவ்விரு ராகு, கேது கோள்களுக்கு மிதுனம், தனுசு உச்ச நீச வடுகளாகக்
ீ குறிப்பிடப் பெற்றுள்ளது.
இச்செய்தியும் இராகு மிதுனத்தில் உச்சம் எனில் தனுசில் கேது நீசம். கேது மிதுனத்தில் உச்சம் எனில் தனுசில் இராகு நீசம் என்றும்
கொள்ளலாம். இரு கோள்களும் ஒரே இராசியில் உச்சமோ நீசமோ பெற வாய்ப்பு இல்லை இதுவும் ஆய்வுச்சிந்தனைக்கு உரியதாக
உள்ளது என்றும் குறிப்பிடுகின்றது.

பெரிய ஜோதிட சில்லரைக்கோவை நூலினுள் இராகு விருச்சிகம் இராசியில் உச்சம் என்றும் இடபம் இராசியில் நீசம் என்றும்
குறிப்பிடுகின்றது.

“பாம்பது கன்னி செட்டி பார்தனுமகர கும்பம்


கோம்பிலா மீ னம் நட்பு சோர்விலா மிதுன மாட்சி” (ஜெயமுனி சோதிட சூத்திரம், பா.எ.8, ப.377.)

“கேதுயாழ் விடையுங்கூட கெட்டியாஞ் செட்டி நட்பாம்


வாதைசெய் தேளு மீ னம் மகர்தனு கன்னி ஆட்சி.” (ஜெயமுனி சோதிட சூத்திரம், பா.எ.9, ப.377.)

எனும் பாடல்கள் சான்று பகர்கின்றன.

நீ ச பங்க இராஜ யோகம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் நூலில் சிறப்பு விதியாக ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்து அதுவே நீசபங்கம் பெற்றிருக்குமானால் உச்சம்
பெற்ற கிரகத்தை விட மேலான பலன்களைக் கொடுக்கும். இதையே நீசபங்க ராஜயோகம் என்பர் என்கிறது.

மேலும்; ஒரு கிரகம் நீசம் பெற்றிருக்க அந்த வட்டிற்குரிய


ீ அதிபதியோ அல்லது அந்த வட்டின்
ீ உச்ச கிரகமோ சந்திரனுக்கு கேந்திர
ஸ்தானத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம் என்கின்றது. இந்த அமைப்பு யோகமுள்ள அமைப்பு. கிரகங்களின் ஆட்சி, உச்சத்தால்
ஏற்படும் நற்பலன்களை விட நீசபங்க ராஜயோகத்தினால் அதிகமான பலன்கள் நடக்கும் என்று பழைய நூல்களில் நம்பப்படுவதைக்
குறிப்பிடுகின்றது. நீச பங்கம் பெற்ற கிரகத்தின் தசை நடைமுறைக்கு வர வேண்டும் அப்போது தான் இது சாத்தியம் என்றும்
தெரிவிக்கின்றது.

பல கிரகம் நீசம் - இராஜயோகம் ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் நீசம் பெற்றிருந்து அதில் ஒரு கிரகம் நீச பங்கம்
பெற்றிருந்தாலும் போதும். மற்ற நீசக் கிரகங்களினால் எந்த கெடுதல் பலன்களும் நடக்காது. அத்தோடு மிக உயர்வான நிலையை
ஏற்படுத்தும். அரசாளும் தகுதியையும் உண்டாக்க வல்லது.

நீ சன் நின்ற ராசியதிபதி

ஒரு ஜாதகத்தில் நீசக் கிரகம் நின்ற ராசிக்குரியவன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் கூட நீசபங்க ராஜயோகம் என்று கூறுவது உண்டு
என்கின்றது அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம்.

குருவின் பார்வை - குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தியாகும். அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சுபக்கிரகமான குருவுக்கு 5, 7, 9 ம்
பார்வை உண்டு. குரு தானிருக்கும் ஸ்தானத்தை விடப் பார்க்கும் ஸ்தானத்தையேப் பலப்படுத்த வல்லவன். ஒரு கிரகம் தோஷம்
பட்டிருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் தோஷம் நீங்கிப் பலப்பட்டு விடும். இதனால் குரு பார்க்கும் ஸ்தானங்களையும் அவன்
பார்வைபடும் கிரகங்களையும் பற்றி ஆராய்ந்து பலனறிய வேண்டும் என்று தெரிவிக்கின்றது.

நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு

கொம்மைப்பாட்டு இதனைக் கோட்சாரப் பலாபலக் கொம்மைப்பாட்டு எனவும் வழங்குவர்.

கோட்சார பலன் - கோள், சாரம், பலன். ஒன்பது கோள்கள் விண்ணில் தாங்கள் எப்பொழுதும் சென்று கொண்டிருக்கும் பயணம்
கோள்களின் சாரம் கோட்சாரம் என வழங்கப்பெறும். இதன் பலன்களைக் குறிப்பிடுவதே கோட்சார பலன் எனப்படும். கோட்சார பலன்
இந்நூலினுள் கொம்மைப் பாட்டு எனும் தலைப்பில் ஒன்பது கோள்கள் ஆகிய ஒவ்வொன்றன் உட்தலைப்பிலும் பாடல்கள் மட்டும்
அமைக்கப் பெற்றுள்ளது. பொருளுரை இடம் பெறவில்லை. தீய பயன்கள் மட்டுமே குறிப்பிடப் பெற்றுள்ளன. நற்பயன்கள் குறிப்பிடப்
பெறவில்லை. பத்துப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியரின் பெயர் தேவராச கவிராயன் என்றும் பாடலில் குறிப்பிடப்
பெற்றுள்ளதால் அறியலாம். அப்பாடல்,

“கொம்மைப் பாட்டாக மொழிந்தவனாரெனில் கோதைதிருவடி


தாடொழுது, நம்மையாழுந் தேவராச கவிராயன் நாடிச்சொன்னான்
மானிடரே” (நவக்கிரக கோட்சார பலன் கொம்மைப்பாட்டு, பா.எ.10, ப.272.)

என்ற பாடல் மூலம் அறியலாம்.

சிறப்புகள்

“மந்திரவாதி வாயடங்கினாற்போல”,

“எவ்வாறோ பிள்ளை பெண்சாதி பெற்றார் நிலை”

என்ற அழகிய தமிழ் உவமைகள் கையாளப் பெற்றுள்ளன. சந்திரன், செவ்வாய் கோட்சாரப் பலன் கூறுமிடத்து இவை கையாளப்
பெற்றுள்ளன.

இப்பத்துப் பாடல்களும் மானிடரே எனும் முடிவு அமைப்பினிலேயே முடிக்கப் பெற்றுள்ளன. முற்றும் துறந்த முனிவர் பாடினார் என்ற
குறிப்பும் இதனுள் காணப்பெறுகின்றது. இப்பத்துப் பாடல்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு
கேதுக்கள் எனும் உள் தலைப்பிலேயே இடம் பெற்றுள்ளன.

நவக்கிரக கோட்சார பலன் கொம்மைப்பாட்டு எனும் பெயரினுள் 10 பாடல்களாக நவகோள்களுக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது கோட்சார பலன்கள் குறிப்பிட்டுள்ளது.

நவக்கிரக கோட்சாரபலன் கொம்மைப்பாட்டு எனும் இந்நூல் இப்பாடல்களின் இறுதியினில் கோட்சாரப் பலாபலக் கொம்மைப்பாட்டு
என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நூலினுள் தீய பலன்கள் விளைவினைக் குறிப்பிடுகின்றது.

* சூரியன் 1, 4, 5, 7, 8, 9, 12 இல் வரியமாக


ீ நின்றால் தீய பலன்கள் விளையும்.

* சந்திரன் 2, 4, 6, 8, 11 இல் தனித்த நிலையில் பலமாய் நிற்பின் மந்திரவாதி வாயடங்கினாற் போல பலன்கள் மாறும்.

* செவ்வாய் 1, 2, 4, 8, 10, 7, 12 இல் நின்றால் பிள்ளை பெண்சாதி பெற்றவரின் நிலையினைப் போல மிகவும் சிரமப்படுவர்.

* புதன் 1, 3, 4, 6, 8, 10, 11 இல் இவ்விடங்களில் தீயவர்களோடு சேர்ந்திருப்பின் எந்நேரமும் துன்பம் இருக்கும்.

* குரு 1, 4, 6, 8, 3 இல் கூடி நின்றாலும், 10,12 இல் இருந்தாலும் தீய பலன்களே விளையும் என்று முன்னோர்கள் கூறி உள்ளனர்.

* சுக்கிரன் 3, 6, 7, 9 இல் நின்றால் அழுகை, அவமானம் ஆகிய கெடுபலன்களே விளையும்.

* சனி 1, 2, 4, 8, 10, 11 இல் நின்றால் பிசாசு பூதம், பேய், கருப்பன், எதிரிகளின் ஏவலாய் மேற்கூறியவற்றினால் இன்னல்கள் ஏற்படும்.

* இராகு கேதுக்கள் 1, 2, 8, 9, 12 இல் நின்றால் பைத்தியத்தினால் கலங்கி நிற்பர். பாகுசேர் மொழியாள் என்பதனால் இது பெண்களுக்கு
என்று கொள்ளலாம்.

* மேற்சொல்லப் பெறாத மற்ற இடங்களான 3, 4, 5, 6, 7, 10, 11 இல் இராகு, கேது இருந்தால் மிகுதியான செல்வமும், யோகமும்
அமையும்.

என்று முற்றும் துறந்த முனிவர் கூறியுள்ளதையும்,

இக்கிரகங்கள் நீசம் என்று தள்ளி இராமல் இந்நீசன் நின்ற வட்டோன்


ீ உச்சமானால் யோகப் பலன்களே விளையும் என்றும்,
இவ்வனைத்துப் பாடல்களினையும் பாடியவர் கோதைத் திருவடித்தாள் தொழும் தேவராச கவிராயன் என்றும் இந்நூலிலுள்ள 11
பாடல்களின் வழி இச்செய்திகளை நாம் அறியலாம்.

“நீசமென்றுநீ தள்ளாதே நிலையுச்சமனங்கொள்ளாதே,


நீசனிருந்த வட்டா
ீ னுச்சமானால் நிலைக்குமே யோகம் மானிடரே.” (பெரிய ஜோதிட சில்லரைக்கோவை, பா. எ.10, ப.272.)

என்றும் பாடல் தெரிவிப்பதால் யோகப்பலனினை நாம் அறியலாம்.

எந்தக் கிரகம் கெட்டு நின்று இராஜயோக அமைப்பில் உள்ளதோ அக்கிரகம் முதலில் அவ்வட்டுப்பலனில்
ீ நன்மையை ஏற்படுத்திப்
பின்னர் கெடுத்து அதை விட மிக அற்புதமான இராஜயோகப் பலன்களை வாரி வழங்கும் தன்மை உடையது. திசாபுத்தி நடைமுறைக்கு
வர வேண்டும். இலக்ன கேந்திரத்தில் குரு சந்திரன் நீச பங்கத்தில் நிற்பின் ஈசனின் கடாட்சம் உண்டு. இவ்விதம் நீசக்கிரகங்கள்
இராஜயோகப் பலன்களைச் செய்கின்றது.

நீ சம் நிலை

பெரிய சோதிட சில்லரைக்கோவை இலக்கினத்திற்கு மூன்றாம் இடத்திற்கு உடையவர்கள் சனி, ராகு, கேது, செவ்வாயுடன்
சேர்ந்தாலும், மூன்றாமிடத்தில் பாபர் இருக்க, இலக்கினம் முதல் ஆறு இராசிக்கு மேல் மூன்று இராசிக்குள்ளே ஒரு இராசிக்கு
உடையவன் நீசமாய்ப் போனால், அந்த ஜாதகனுக்கு வரியம்
ீ பூமியிலே விழுந்து போகும் என்கின்றது கோவை நூல். ப.9.

இலக்கின இடத்தின் அதிபதி நீசன் ஆனாலும், சூரியனுடன் சேர்ந்திருந்தாலும், நாலில் ஒரு பாகம் பலனாய் இருப்பதற்காகும்
என்கின்றது கோவை நூல். ப.13.

சுக்கிரன் நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - ஜம்புமகரிஷி வாக்கியம் எனும் நூல் களத்திரத்தில் இருக்கும் சுக்கிரனுடனே
புதனும் சேர்ந்திருந்தால் தனது மனதிற்கினியவளுடனே சேர்ந்து சுகமாய் இருப்பர். ஆனால், இவ்விடத்தில் சுக்கிரன் நீசமாய் இருந்தால்
இலட்சுமி அருளில்லாமல் இருந்தால் தீய மனது அமைந்தவனாய் தனது வயதிற்கு மூத்தவளுடனே சேர்ந்து சுகம் இல்லாமல்
எப்போதும் கவலையுடன் இருப்பான். ஆனால் மற்றக் கோள்களின் நிலையை ஆராய்ந்து பலனைச் சொல்ல வேண்டும் என்று
குறிப்பிடுகின்றது. (பெ.சோ.சி.கோ. செ.எ.66, பக்.35 -36.)

சந்திரன் நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் சந்திரன் இராகு கேதுக்களுடனே சேர்ந்து துலாத்தில்
இருந்தாலும், அல்லது சந்திரனுக்கு நீச இடமாகிய விருச்சிகத்தில் இருந்தாலும், பலவிதமாகிய துன்பமும், கலவரமும், அச்சமும்,
பயங்கரமும், வறுமையும், துன்பமும், துயரமும், அலைச்சலும் உண்டாகி, பலவிதமான கொடுமைகளும் நேரிட்டு துயரப்படச்
செய்யும். ஆதலால் இலக்கின பலமும், கோள்கள் பார்வை தொடர்பும் சோதித்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும். (பெ.சோ.சி.கோ.
செ.எ.16, ப.120.)

செவ்வாய் நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் கடக ராசியில் செவ்வாய் நீசமாய் இருக்கும் போது
சூரியனும், இராகுவும் அவருடன் சேர்ந்திருந்தால் மிகவும் கொடிய கொடுமையும், துன்பமும், துயரமும், மனக்கவலையும் சூழ்ந்து
துயரப்படச் செய்யும் படியான கஷ்டமும், கவலையும் அடைந்து துயரப்படச் செய்யும். அன்றியும் எவராவது மிரட்டி அதட்டிப் பேசினால்
மனம் பயங்கரம் அடைந்து “பாம்பைக் கண்ட தேரையைப்போல” அச்சம் அடைந்து கண்ணர்ீ சொரிந்து கலக்கம் அடைந்து துயரால்
கலங்கும் படியான கவலை உண்டாகும் என்பதனை,

“கடகத்திலேசெவ்வாய் நீசமாக
கதிர்இராகுசேர்ந்திருந்தால் கொடுமையப்பா
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
விடநாகன் தனைக்கண்ட தேரையைப் போல்
விசனமாய்துயருற்று திகைப்பர் தானே”

என்று பாடல் குறிப்பிடுகின்றது. (பெ.சோ.சி.கோ. செ.எ.18, ப.121.)

புதன் நீ சம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் மீ ன ராசியில் புதன் பலமற்று நீசமாய் இருக்க
அவருடன் இராகு சேர்ந்திருந்தால் பலவிதமான மனசஞ்சலமும், கஷ்டமும், கவலையும், துன்பமும், துயரமும் நேரிடும். ஆனால் சுபக்
கோள்களின் பார்வையும், இலக்கின பலனும். மற்ற கோள்களின் இடபலனும் ஆராய்ந்து உணர்ந்து பலன் சொல்ல வேண்டும். இவர்கள்
சிவனை பூசை செய்து வந்தால் நலமுடன் வாழ்வார்கள் என்றும் பரிகாரப் பலன் சொல்லப் பெற்றுள்ளது என்று பாடல்
குறிப்பிடுகின்றது. (பெ.சோ.சி.கோ. செ.எ.20, ப.122.)

குரு நீ சம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் மகரராசியில் குரு நீசமாய் இருக்கும் போது சனி
விருச்சிகத்தில் பகை பெற்று மூன்றாம் வட்டுப்
ீ பார்வையாக மகரத்தைப் பார்த்தால் அந்த ஜாதகன் மனவருத்தமும், மந்த மதி
வாய்ந்தவனுமாய் மனக்கலக்கம் அடைந்து துன்பத்துடன் வாழ்ந்திருப்பர். ஆகையால் இலக்கினப் பலனையும், மற்றக் கோள்களின்
இடபலனையும் ஆராய்ந்து உணர்ந்து திசையின் குறிப்புணர்ந்து பலன் சொல்ல வேண்டும். (பெ.சோ.சி.கோ. செ.எ.21, ப.122.)

நீ சபங்க ராஜயோகம்
சந்திரன் நீ சம், செவ்வாய்

சந்திரன் நீசம் பெற்று செவ்வாயுடன் இணைந்து நிற்றல், அவ்விடம் லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு
எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், அவ்விடத்தைக் குரு பார்த்தாலும், அல்லது இணைந்து நின்றாலும் நீசபங்க இராஜயோகத்தினைப்
பெறும்.

குரு நீ சம், சந்திரன்

குரு நீசம் பெற்று லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், சனியுடன்
இணைந்து நின்றாலும், செவ்வாய் நீசம் பெற்று நின்று இதனைப் பார்த்தாலும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

செவ்வாய் நீ சம், சந்திரன்

செவ்வாய் நீசம் பெற்று லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், நீச குருவால்
பார்க்கப் பெற்றாலும், நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

புதன் நீ சம், சந்திரன்

புதன் நீசம், சந்திரனுடன் இணைந்து லக்ன சந்திர கேந்திரத்தில் நிற்பினும், நீச புதன், குருவுடன் இணைந்து நிற்பினும் நீசபங்க
இராஜயோகத்தினைப் பெறும்.

சுக்கிரன் நீ சம், சந்திரன்

சுக்கிரன் நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், புதனுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு
எவ்விடத்தில் இணைந்தாலும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

புதன் நீசம் பெறுகின்ற போது நீசம் பெற்றக் கோள் ஆன சுக்கிரனின் பார்வை பெற முடியாது. அதைப்போல சுக்கிரன் நீசம் பெறுகின்ற
போது புதன் நீசம் பெற்றக் கோளின் பார்வை பெற முடியாது. ஏன் எனில் சூரியன், சுக்கிரன், புதன் இம்மூவரும் 90 பாகைக்குள்ளாகப்
பயணம் செய்பவர்கள். எனவே இங்கே இவ்விதி பொருந்தாது. இங்கு மட்டுமே நீசனை நீசன் பார்க்காத நிலை உள்ளது.

சூரியன் நீ சம், சந்திரன்

சூரியன் நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், சுக்கிரனுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு
எவ்விடத்தில் இணைந்தாலும், நீச சனியால் பார்க்கப் பெறினும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க
இராஜயோகத்தினைப் பெறும்.

சனி நீ சம், சந்திரன்

சனி நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், செவ்வாயுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு
எவ்விடத்தில் இணைந்தாலும், நீச சூரியனால் பார்க்கப் பெறினும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க
இராஜயோகத்தினைப் பெறும்.

நீசம் மட்டும் இருந்தால் நன்மை தராது. நீசம் பங்கம் பெற்றும், சுபர் சேர்க்கை, சுபர் பார்வையில் அமைதல் வேண்டும். அப்போது தான்
மிகுந்த ராஜயோகப் பலன்கள் விளையும். குருவுடன் நிற்பதால் சகல தோடம் விலகுவதாக ஐதீகம். குரு கடாட்சம் பரிபூரணம். குரு
பார்க்கக் கோடி பாவம் நிவஎத்தியாகும்.

தீய கோள்கள் நீசம் பெறும் போது அவற்றின் தீய பலன்கள் குறைகின்றன. நற்கோள்கள் நீசம் பெறும் போது நற் பலன்கள்
குறைகின்றன. நீச பங்கத்தில் அவை நிற்கின்ற போது அவை அவ்வட்டுப்
ீ பலனையும், அவமானம் தொடர்ந்த நிலையில்
முன்னேற்றத்தையும் அவை ஏற்படுத்தத் தயங்குவதில்லை. கேந்திரம் 1, 4, 7, 10 ஆகிய வடுகளாய்
ீ இருப்பினும், திரிகோணம் 1, 5, 9
ஆகிய வடுகளாய்
ீ இருப்பினும், 6, 8, 12 ஆகிய தீய வடுகளாய்
ீ இருப்பினும் அவை தான் எவ்விதம் அமைந்துள்ளனுவோ அப்படியே
பலன்களையும் தருகின்றன.

லக்ன சந்திர கேந்திரத்தில் உள்ள சந்திரனுடன் இணைந்த நீசபங்க ராஜயோகம் பெற்ற சாதகருக்கு அளவு கடந்த சோதனைகள் ஏற்படும்.
பின்னர் யாவும் ஈசனின் கருணைக் கடாட்சத்தினால் துன்பங்கள் வந்ததொரு சுவடு தெரியாமல் யாவும் விலகி மிகுந்த நன்மையினைப்
பெறுவர்.

நீச பங்க ராஜயோகம், உச்சம் பெற்ற கோள்கள் தரும் நற்பலன்களை விட மிகுதியான நற் பலன்கள் ஏற்படுத்தி விடும் அமைப்பு
உடையது. ஒரு ஜாதகத்தில் கோள்கள் உச்சம் பெற்ற நிலையைக் காட்டிலும், கோள்கள் நீசம் பெற்று இருப்பது சிறந்தது தான். அதைக்
காட்டிலும் நீச பங்க ராஜயோகத்தில் இருப்பது மிகமிகச் சிறப்பு. இதன் பலன் உச்சம் பெற்றவரை விட இவர் மிகச் சிறப்பாய் வாழ்வார்
என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பொதுவாக 8 வது வட்டில்
ீ சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப
வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8 ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த


இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக
8 இல் உள்ள கிரகம் 2 ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம்
உண்டாகும்.
எனவே, 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக
கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத
தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.

சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த


ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். இது
பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8 இல் என்னென்ன கிரகங்கள்
இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8 இல் அமர்ந்தால்
நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8 க்கு உரியவர்
குரு. அவர் 8 இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல்
ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

அதற்கடுத்தபடியாக 9 ஆம் இடத்தில் சுப கிரகங்கள் (வளர்பிறை சந்திரன்,


சுக்கிரன், குரு) இருப்பது நல்லது. பொதுவாக 5, 9 ஆம் வடுகள்
ீ திரிகோண வடுகள்

எனப்படும். இங்கு சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும்.

https://jothidanunukkangal.blogspot.com/2019/02/

அமைச்சரா? முதலமைச்சரா?
உங்கள் ஜாதகம் சொல்வது என்ன?
உங்கள் ஜாதகத்தில் என்னென்ன ராசி எந்த இடத்தில் இருந்தால்,
அமைச்சராகவோ, முதல்வராகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதை
துல்லியமாக சொல்கிறார், சரவணகுமார்.

சரவணக்குமார்
கட்டளைக்கு காத்திருக்கும் அதிகாரிகள். கைதட்டி அழைத்ததும், கைகட்டி நிற்கும்
ஆட்கள். ‘தங்கத் தலைவா… தலைமை ஏற்க வா… தம்பிகள் இருக்கிறோம்.
தாங்கிப்பிடிக்க…’ என குரல் கொடுத்து தரிசனத்திற்கு ஏங்கிக்கிடக்கும் ரத்தத்தின்
ரத்தங்கள். ஐந்து வருடங்களுக்கு பெயரைச் சொல்லிச்சொல்லி அலுத்துப்போன அச்சு
இயந்திரங்கள். முகத்தை சிறைபிடிக்க காத்துக்கிடக்கும் மீ டியா கேமராக்கள்.
இவைகளெல்லாம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதெப்படி?
உங்கள் ஜாதகத்தில் கீ ழே காணப்போகும் யோகங்கள் இருந்தால் சாத்தியமே.
அகண்ட சாம்ராஜ்ய யோகம்
அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாதவனைக் கூட அரசனாக்கும் சக்தி உள்ளது
இந்த யோகம். இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதலமைச்சர், கவர்னர், பிரதமர்
என்பது போன்ற உச்சகட்ட பதவிகளை இது குறிக்கிறது.
2, 9, 11 ம் பாவாதிபதிகள் சந்திரனுக்கு 1, 4, 7, 10 எனப்படும் கேந்திரத்தில் இருக்க, குரு 5, 11 ம்
பாவாதிபதியாகி 2 ம் இடத்தில் இருக்க வேண்டும்.
அல்லது குரு 2, 5, 11 ம் இடத்தில் இருக்க, குரு நின்ற வட்டின்
ீ அதிபதி, சந்திரனுக்கு 1, 4, 7, 10,
5, 9 ஆகிய ஏதோ ஓரிடத்தில் இருக்க வேண்டும்.
மேற்குறிய இரண்டுவித அமைப்புகளில் எது இருந்தாலும் அது அகண்ட சாம்ராஜ்ய
யோகமே.
அரசாட்சி யோகம்
அரசியலில் பெரிய பதவிகள் வகிக்க காரணமான யோகங்களில் இதுவும் ஒன்று. அது
மட்டுமல்லாமல் இந்த யோகத்தின் மூலம் அரசாங்க உயரதிகாரியாகவும் ஆகலாம்.
குரு நின்ற ராசியாதிபதி, சந்திரனுக்கு கேந்திரத்திலும் (1, 4, 7, 10), சந்திரன் நின்ற
ராசியாதிபதி சுக்கிரனுக்கு கேந்திரத்திலும் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
ராகு நின்ற ராசியாதிபதி லக்கினத்திற்கு, சுக்கிரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் இந்த
யோகம் உண்டு என்று சொல்லப்படுகிறது.
சக்கரவர்த்தி யோகம்
ஆட்சி செய்வதற்குரிய அத்தனை தகுதிகளையும் இந்த யோகம் கொடுக்கும். ஒருவேளை
ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான அந்தஸ்தை தந்துவிடும். பெரிய
தர்மப்பிரபுவாகவும், தெய்வத் திருப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் இவர்கள்
இருப்பார்கள்.
லக்கினாதிபதி உச்சம் பெற்று, அவருடன் 2, 9 ம் பாவாதிபதிகள் இணைந்து 10 ம் அதிபதி
பலம் பெறுவது சக்கரவர்த்தி யோகம்.
அரச கேந்திர யோகம்
லக்கனத்திற்கு 1, 4, 7, 10 ல் அனைத்து கிரகங்களும் இருந்து அவை ஆட்சி உச்சம் என்கிற
உயரிய நிலையில் இருந்தால் உருவாவது இந்த யோகம்.
வாழ்க்கையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவு அனைத்து வசதிகளையும் பெற்றுத்
தரும். மேலும் பெரிய அளவில் மக்கள் சக்தியை தன்பால் ஈர்க்கும் வல்லமையும்
கொண்டது.
கலாநிதி யோகம்
குரு 2 அல்லது 5 ம் வட்டில்
ீ இருந்து புதன், சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது 2, 5 ம்
இடங்கள் புதன், சுக்கிரனின் ஆட்சி வடாக
ீ இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.
அறிவுக்கு பஞ்சம் இருக்காது. நல்ல திறமையையும் புத்திசாலித்தனத்தையும் கொடுக்கும்.
அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்போ அல்லது அரசாங்க உயர் பதவிகள் வகிக்கும்
வாய்ப்போ பெற்றுத்தரும் யோகம் இது.
சக்கர வியூக யோகம்
ராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,
கும்பம், மீ னம் ஆகிய ராசிகளில், ராசிக்கு ஒரு கிரகம் வதம்
ீ இருந்து, இந்த ராசிகளில் ஏதோ
ஒன்று லக்கினமாக அமைவது சக்கர வியூக யோகம்.
தலைமைப் பதவிக்கு தகுதியான யோகம் இது. சிறந்த அறிவாளியாகவும், சாதுர்யம்
மிக்கவராகவும் இவர்கள் இருப்பார்கள். செல்வமும், செல்வாக்கும் குறைவில்லாமல்
இவர்களிடம் இருக்கும்.
இந்த யோகம் அரிதிலும் அரிதான ஒன்று.
சக்கர யோகம்
எம்.எல்.ஏ முதல் ஜனாதிபதி வரை எந்த பதவி வேண்டுமென்றாலும் இந்த யோகம்
உள்ளவர்களுக்கு கிடைக்கலாம். இதற்கு மூன்று வித யோக நிலைகள் கூறப்பட்டுள்ளன.
இதில் எது இருந்தாலும் ஓகே.
ராகு, கேது தவிர மற்றைய ஏழு கிரகங்களும் ஒற்றைப்படை ராசி எனும் ஆண் ராசிகளில்
இருக்க வேண்டும்.
10 ம் இடத்தில் ராகு இருக்க, அந்த வட்டின்
ீ அதிபதி லக்கினத்தில் இருக்க, லக்கினாதிபதி 9
ல் இருக்க, இவர்கள் சுபகிரகங்களால் பார்க்கப்பட வேண்டும்.
10 ல் ராகு இருக்க, அவ்வட்டுக்குடையோன்,
ீ 1, 5 லிருக்க 9 ம் பாவாதிபதி 7 ல் இருக்க
வேண்டும்.
கஜகேசரி யோகம்
சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திரத்தில் குரு இருந்தால் உருவாவது கஜகேசரி யோகம்.
குருவும், சந்திரனும் ஆட்சி, உச்சம், நட்பு என்கிற நிலையில் இருந்தால் மட்டுமே இந்த
யோகம் முழு பலனை அளிக்கும். இல்லையெனில், இதற்கான பலன் குறையக்கூடும்.
இந்த யோகம் அமையப்பெற்ற நபர்கள், எந்த கஷ்டங்களையும் எளிதில்
கடந்துவிடுவார்கள். துன்பங்களெல்லாம் தூசி தான் இவர்களுக்கு. வாழ்க்கையில் மிக
உயரிய இடத்திற்கு செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். செல்வம், செல்வாக்கு, புகழ்,
அந்தஸ்து ஆகியவற்றுடன் கூடிய தலைமைப் பதவி இவர்களைத்தேடி தானே வரும்.
இந்த யோகங்கள் மட்டுமில்லாமல் இன்னும் நூற்றுக்கணக்கான யோகங்கள்
மூலநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இவைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அரசு
கிரகமான சூரியனும், சந்திரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
அட… அதுக்குள்ளேயும் கலர் கலர் கனவு உங்க கண்ணில் தெரியுதே. கூடிய சீக்கிரம்
‘மாண்புமிகு’வாக மாறப்போற உங்களுக்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
போஸ்டிங் கிடைச்ச உடனே, நம்ம கையிலேயும் ஒன்றியம், வாரியம்னு எதையாவது
குடுத்தீங்கன்னா புண்ணியமா போகும். அய்யா பார்த்துச் செய்யுங்க…

நவாம்சத்தில் கிரகச் சேர்க்கை-D-058

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஒன்பது கிரகங்களும் வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் என்பதை சென்ற வாரம்


பார்த்த நிலையில், லக்னம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் என்பதைக் கொண்டு
இப்போது தொடருவோம்.
லக்னம் என்பது ஒருவருடைய உடல், மனம், சிந்தனை, ஆயுள் போன்றவற்றைக் குறிப்பது
என்பதால், லக்னம் வர்கோத்தம நிலை பெறுவது ஜோதிடத்தில் சிறப்பாகவே
குறிப்பிடப்படுகிறது. ஒரு பொதுவான பலனாக லக்னம் வலுத்தவர், திடமான
எண்ணங்களையும், மனதையும், நீ ண்ட ஆயுளையும் கொண்டவராக இருப்பார்.

லக்னம் எந்த நட்சத்திர முனையில் அமர்ந்திருக்கிறதோ, அந்த நட்சத்திர அதிபதி கிரகத்தின்


குணங்களும், லக்னாதிபதியின் குணங்களும், ராசி மற்றும் சந்திரன் அமர்ந்த நட்சத்திர
அதிபதி கிரகத்தின் குணங்களும் கலந்த கலவையாக ஒரு மனிதன் இருப்பான்.

ஒரு மனிதனின் முழுமையான குணத்தையும், செயல்பாடுகளையும் லக்னாதிபதி, லக்னம்


அமர்ந்த நட்சத்திர அதிபதி, ராசிநாதன், சந்திரன் அமர்ந்த நட்சத்திரத்தின் அதிபதி ஆகிய
கிரகங்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன. லக்னத்தில் அமரும் கிரகங்களில் சுபத்துவ, பாபத்துவ
நிலைகளையும் இதில் சேர்த்துக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்து, லக்னமே ராசியாகி, அதாவது தனுசு லக்னம்,
தனுசு ராசியாகி லக்னத்தில் வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியோர் மட்டும்
அமர்ந்திருக்கும் நிலையில், சந்திரன் மூல நட்சத்திரத்திலும் அமர்ந்து, உச்ச சனி தனது
மூன்றாம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பின், அவர் இளம் வயதிலிருந்தே அதிகமான
ஆன்மீ க எண்ணங்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சம்பந்தப்பட்டவராக இருப்பார். இந்த
பலன் நூறு சதவிகிதம் சரியாக இருக்கும். மாறாது.

இந்த அமைப்பில் லக்னம், குருவின் வடாவதால்,


ீ குருவின் முதல்நிலை காரகத்துவமான
ஆன்மீ கம், நல்ல நடத்தை, நற்குணம் ஆகியவை இங்கே லக்னம் சுபத்துவமானதால்
முழுமையாகச் செயல்படும். ஜாதகரின் அதிக ஆன்மீ க ஆர்வத்திற்கு சனியின் பார்வை
துணையாக இருக்கும்.

இதேபோல ஒருவர் மிதுன லக்னத்தில் பிறந்து, லக்னத்திற்கு அதிகமான சுபத்துவம்


இருக்கும்போது, அவர் சிறந்த அறிவாளியாக இருப்பார். ஜாதகருக்கு கணித ஈடுபாடும்,
நகைச்சுவை மற்றும் தெளிவாகப் பேசுவதும், தான் நினைப்பதை எழுத்தில் மூலமாகவோ,
அல்லது வேறு வடிவங்களிலோ, தெளிவாக வெளிப்படுத்தும் திறனும் இருக்கும்.

இதே அமைப்பு சிம்மத்தில் ஏற்படும்போது, அதாவது சிம்மத்தில் குரு, சுக்கிரன், புதன்,


வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்கள் மட்டும் அமரும்போது ஜாதகர் அதிகாரம்
செய்வதற்காக மட்டுமே பிறந்த, நல்ல ஆளுமைத்திறன் உள்ள நிர்வாகியாக இருப்பார்.
தலைமை தாங்கும் தகுதி ஜாதகரிடம் இருக்கும். மிகப்பெரிய பொறுப்பும் அவருக்குக்
கிடைக்கும்.

லக்னத்தில் அமரும் கிரகங்களின் சுப, பாபத்துவ அமைப்புகள், மற்றும் லக்னாதிபதியின்


சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலுவைப் பொருத்தே ஒரு மனிதனின் வாழ்வு நிலை
அமைகிறது. இதில் லக்னத்தின் வர்கோத்தம நிலையும் முக்கிய அமைப்பைப் பெறுகிறது.

லக்னத்தோடு ஒட்டுமொத்த பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு தொடர்பு


கொள்ளும்போது அந்த மனிதன் வாழத் தகுதியற்றவனாக இருப்பான் என்று ஏற்கனவே
சொல்லியிருக்கிறேன். இதற்கு நேர்மாறாக லக்னம் அதிகபட்ச சுபத்துவ அமைப்பில் உள்ள
போது, லக்னாதிபதியின் காரகத்துவங்களில் ஜாதகர் மிக உயர்நிலையில் இருப்பார்.

இதை இன்னும் சற்று நுணுக்கமாக பார்க்கப்போனால், தற்போதைய கோட்சார கிரக


அமைப்பில் மிதுனத்தில் ராகு அமர்ந்து, சனியும் கேதுவும் தனுசில் உள்ள நிலையில், சனி
மிதுனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 7-5-2019 முதல் செவ்வாய் மிதுனத்தில் அமர்கிறார்.
இது ஏறத்தாழ ஒன்றரை மாத காலத்திற்கு நீ டிக்கும்..

மே ஏழாம் தேதி முதல் மிதுனத்தோடு நான்கு பாபக் கிரகங்களும் சம்பந்தப்படும் நிலை


உண்டாகிறது. எதிரே சனியும் கேதுவும் இருப்பதால் தனுசும்தானே பாதிக்கப்படுகிறது என்ற
சந்தேகம் சிலருக்கு எழலாம். ராகுவே அதிக பாபத்துவமுடைய நிழல் கிரகம் என்பதால்
லக்னத்தில் ராகு இருப்பதே அதன் கடுமையான வலிமையிழப்பைக்  குறிக்கும். கேது இருப்பது
அதிகபட்ச கெடுதல் அல்ல.

நான்கு பாபக்கிரகங்களும் மிதுனத்தின் மீ து ஒட்டுமொத்த தாக்குதல் நடத்தும் இன்றைய


கோட்சார நிலையில், மிதுனத்திற்கு குரு, சுக்கிர பார்வை, இருப்பு போன்ற தொடர்புகளும்
இல்லை. மிதுனத்தின் அதிபதி புதனுக்கும், குருவின் பார்வை இன்னும் சில வாரங்களுக்கு
இல்லை.

இதுபோன்ற ஒரு அமைப்பில் இன்னும் சில வாரங்களுக்கு மிதுன லக்னத்தில் பிறக்கும்


குழந்தைகள் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில்
லக்னம் வர்கோத்தமம் பெற்றால் பாபத்துவத்தின் கடுமை குறையும்.

செவ்வாய் மிதுனத்திலிருந்து மாறும் வரை மிதுன லக்னத்தில் பிறக்கும் குழந்தைகள்


உயர்நிலையை அடைவதற்கு தடை இருக்கும். இன்னும் ஒன்றரை மாத காலத்தில் பிறக்கும்
குழந்தைகளுக்கு, மிதுனம் ஜாதகத்தில் எந்த பாவகமாக அமைகிறதோ, அந்த பாவகம்
கடுமையாகப் பாதிக்கப்படும்.

உதாரணமாக ஒரு குழந்தை இப்போது மீ ன லக்னத்தில் பிறக்குமாயின் குழந்தை பிறக்கும்


நாளில் சந்திரனும் பாதிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தையின் தாய்க்கு நல்லது நடக்க
வாய்ப்பில்லை. இது போன்ற சூழலில் பாபக் கிரகங்களுக்கு நல்ல இடமாகச் சொல்லப்படும்
ஆறாம் பாவகமாக, மிதுனம், தனுசு அமையும் நிலையில் பிறக்கும் குழந்தை பாதிக்கப்படாது.

நவாம்சத்தில் லக்னம் சுப வடுகளில்


ீ அமையும்போது, அந்த நபருக்கு அதிக முயற்சி இன்றியே
அனைத்தும் நடக்கும் ஒரு அதிர்ஷ்ட நிலை அமையும். நவாம்சத்தில் பாபரின் வடுகளில்

லக்னம் இடம் பெறும்போது அவர் அதிர்ஷ்டக் குறைவானவராகவும், முயற்சிகளுக்குப் பின்
முன்னேறுபவராகவும் இருப்பார்.

இது தவிர்த்து நவாம்சத்தில் மறைவு ஸ்தானங்கள் இல்லை என்பதை ஏற்கனவே


சொல்லியிருக்கிறேன். நவாம்ச லக்னத்திலிருந்து எண்ணி 6, 8, 12 ல் கிரகங்கள் மறைகிறது
என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. நவாம்சம் உள்ளிட்ட எந்த வர்க்கச் சக்கரங்களிலும்
எண்ணிக்கை கிடையாது. சுப வர்க்கம், பாப வர்க்கம் மட்டுமே.
நவாம்சத்தில் கிரக சேர்க்கை இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி கருத்து வேற்றுமை
இருக்கிறது. என்னைப் பொருத்தவரை பலவிதமான ஆய்வுகளுக்கு பின்னால் அம்சத்தில்
சுபரோடு சேரும் கிரகம் நற்பலன்களைத் தருவதையும், பாபரோடு சேர்ந்து, பாபரின் வடுகளில்

இருக்கும் கிரகங்கள் வலிமையிழப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நவாம்சத்தில் குருவின் வடுகளான


ீ தனுசு, மீ னம், சுக்கிரனின் வடுகளான
ீ ரிஷபம், துலாம்
ஆகிய நான்கு வடுகளில்
ீ அமரும் கிரகங்கள் தனது தசையில் நற்பலன்களை அளிக்கவே
செய்கின்றன. அதனையடுத்து ராசியில் தனித்த புதனாகி அல்லது பாபர்களுடன் சேராமல்
சுபத்துவம் அடைந்திருக்கும் புதனின் நவாம்ச வடுகள்
ீ நற்பலன் தரும்.

ராசியில் வளர்பிறை சந்திரனாகி அல்லது பௌர்ணமிக்கு அருகில் சந்திரன் உள்ள நிலையில்,


அம்சத்தில் கடகத்தில் இருக்கும் கிரகம் நற்பலன்களை தருகிறது. அமாவாசை இருளுக்கு
அருகில் இருக்கும் சந்திரனின் அம்ச கடக வட்டில்
ீ அமரும் கிரகம் நற்பலனைச்
செய்வதில்லை. அதேபோல பாபரின் வடுகளில்
ீ அமரும் கிரகங்களும், தனது தசையில் பெரிய
நன்மைகளைத் தருவதில்லை.

நவாம்சத்தில் ஒரு கிரகத்தின் நிலை என்பது இன்னும் துல்லிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட


வேண்டிய ஒன்று.

பரம்பொருளின் கருணையினால் பலதரப்பட்ட யோக, அவயோக ஜாதகங்களை பார்க்கும்


நிலையில் இருக்கும் நான், கீ ழே ஐந்து வயதில் தந்தையை இழந்த ஒரு சிறுவனின்
ஜாதகத்தை நவாம்சத்தில் கிரகச் சேர்க்கைக்கு உதாரணமாகக் கொடுத்திருக்கிறேன்

ராகு,      
22-9-2006 காலை 8-30

   மதுரை      சனி

   சுக்,

 ல/ சூரி,புத, செவ், சந்,

     குரு கே

இந்த ஜாதகம் ஒரு உதாரணம் மட்டும்தான். இந்தச் சிறுவனின் ஜாதகத்தில் இருக்கும் கிரக
நிலைகளைப் போலவே, நவாம்சத்தில் பாபர்களுடன் இணையும் கிரகங்கள் நற்பலனைத்
தரும் வலிமையை இழப்பதை ஆய்வுப்பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன்.

கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை கொண்ட சிறுவன், 22-9-2006 அன்று காலை எட்டு முப்பது


மணிக்கு மதுரையில் பிறந்திருக்கிறான். 2011 ஆம் ஆண்டு இவனது ஐந்து வயதில் இவனது
தந்தை விபத்தில் மரணமடைந்தார்.
இந்தச் சிறுவனின் ஜாதகத்தில் 9-க்குடைய புதன் உச்சம் அடைந்திருக்கிறார்.
ஒன்பதாமிடத்திற்கு குரு பார்வையும் இருக்கிறது. மிக நுண்ணிய தருணங்களில் ஒரு
ஜோதிடரின் கணிப்பைத் தடுமாற வைக்கும் ஜாதகங்களில் இதுவும் ஒன்று.

மேம்போக்காகப் பார்க்கும் பொழுது தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் அதிபதி புதன் உச்சம்,


ஒன்பதாம் பாவகத்திற்கு குருவின் பார்வை இருப்பது போலத் தோன்றி இவனது தந்தைக்கு
கெடுதல்கள் எதுவும் இல்லை என்பது போன்ற அமைப்பு இருந்தாலும் சூரியன் மற்றும்
புதனின் பாபத்துவம் மேற்சொன்ன தந்தை நிலையை முற்றிலும் பலவனமாக்குகிறது.

இந்த ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதியாகிய புதன் உச்சம் என்றாலும் 12 ல் மறைந்திருக்கிறார்.


மேலும் கேதுவுடன் இணைந்து சூட்சும வலு அடைந்திருப்பது போலத் தோன்றினாலும் சனி,
ராகுவிற்கு நிகரான கடுமையான அமாவாசை சந்திரனின் இணைவில் பூரண பாபராக
இருக்கும் செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். இங்கே  செவ்வாயின் சூட்சும வலு
பலவனமாகி
ீ விட்டது.

புதன் இங்கே செவ்வாயுடன் மிக நெருக்கமாக ஆறு டிகிரிக்குள் இணைந்திருக்கிறார். இது


கடுமையான பாபத்துவ அமைப்பு. மேலும் சனியின் 5 டிகிரிக்குள் அடங்கிய துல்லிய மூன்றாம்
பார்வையிலும் புதன் இருக்கிறார்.

தந்தையைக் குறிக்கும் பிதுர்காரகன் சூரியனும் இங்கே பனிரெண்டில் மறைந்து, பூரண


அமாவாசை நிலையிலிருக்கும் பாபச்சந்திரன் மற்றும் செவ்வாயுடன் இணைந்து சனியின்
பார்வையில் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இருள் கிரகங்களான
ராகு-கேதுக்களின் பிடியில் இருக்கிறார்கள்.

பிதுர்க்காரகனாகிய சூரியனும், ஒன்பதாம் அதிபதி புதனும், பாபத்துவ செவ்வாய், சனியுடனும்,


இவர்களுக்குச் சற்றும் குறையாத அமாவாசை சந்திரனின் இணைவிலும்,
இருள்கிரகங்களான ராகு-கேதுவுடனும் இணைந்து, பனிரெண்டிலும் மறைந்து, ராசியில்
அத்தனையும் பலவனமான
ீ அமைப்பில், நவாம்சத்தில் சூரியன் சனியின் வட்டில்,
ீ சனியுடன்
இணைந்திருக்கிறார். ஒன்பதாம் அதிபதி புதன் பூரண அமாவாசை சந்திரனின் கடக வட்டில்

அமர்ந்து ராகுவுடன் இணைந்திருக்கிறார்

நவாம்சத்தில் பாபரின் வடுகளில்,


ீ பாபரோடு சேர்ந்திருக்கும் கிரகங்கள் ராசி அமைப்பிலும்
பலவனமாக
ீ இருக்குமாயின், முற்றிலும் வலுவிழக்கும் என்பதற்கு உதாரண ஜாதகம் இது.
இதைப்போலவே நூற்றுக்கணக்கான ஜாதக நிலைகளை, நவாம்சத்தில் கிரகச் சேர்க்கை
உண்டு என்பதற்காக நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஒரு கிரகம் ராசியில் வலுவிழந்த நிலையில், அம்சத்திலும் பாபரின் சேர்க்கை, பாபரின்


வடுகளில்
ீ அமரும்போது, தனது ஆதிபத்தியம், காரகத்துவம் இரண்டையும் முழுவதுமாக
இழக்கிறது என்பதற்கு இந்த ஜாதகமும் ஒரு நல்ல உதாரணம்.

முழுமையான பாபத்துவம், முழுச் சுபத்துவத்தை ஒரு கிரகத்தின் ஒளி அளவுகளின் ஏற்ற


இறக்கங்களோடு இந்தக் கட்டுரையை நீ ங்கள் புரிந்து கொள்ள முடிந்தால் சுபத்துவ – சூட்சும
வலுக் கோட்பாட்டின் பரிமாணம் உங்களுக்குப் புரிய வரும்.
https://www.adityaguruji.in/2019/05/10/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF
%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF
%87%E0%AE%B0%E0%AF%8D/

போகம் தரும் ராகு – c – 048 – Pogam Tharum Raahu…

நமது மூல நூல்கள் ராகுவை போகக் காரகன் என்றும் கேதுவை ஞானக் காரகன் என்றும்
வர்ணிக்கின்றன.

ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலவனம்


ீ அடைந்து கெட்டிருந்தாலும் ராகு
ஒருவர் மட்டும் சுப வலு அடைந்து ராகுவின் தசை நடந்தால் ஜாதகர் எவ்வளவு கீ ழ்நிலையில்
இருந்தாலும் வாழ்வில் நல்ல மேலான நிலைக்கு வந்தே தீருவார்.

ராகு,கேதுக்கள் பருப்பொருள் அற்ற கண்ணுக்குக் தெரியாத கிரகங்கள் மற்றும் மறைந்து


வலம் வரும் இருள் கிரகங்கள் என்பதால், நம் வாழ்வின் பின்னால் மறைந்து நிற்கும் நமக்குத்
தெரிய வராத, இப் பிறவிக்கு முந்தைய பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களைப்
பிரதிபலிப்பார்கள்.

பூர்வ புண்ணியம் வலுவடைந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அதாவது சென்ற


பிறவியில் நன்மைகள் செய்து நற்கர்ம வினைகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒருவருக்கு,
அந்தக் கர்மாவை வைத்து இப் பிறவியில் சொகுசாக வாழ ராகு தன் தசையில் துணை
புரிவார்.

இது போன்ற அமைப்பில் பிறந்த ஒருவருக்கு ராகு நமது மூலநூல்களில் சொல்லியுள்ளபடி


மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து,
அவருக்கு வடு
ீ கொடுத்த கிரகமும் வலுப் பெற்று. ராகுதசை முக்கிய பருவத்தில்
நடக்குமானால் அந்த நபர் உயர்நிலைக்குச் செல்வார்.

மேற்கண்ட ஐந்து இடங்களில் இருக்கும் ராகு மட்டுமே சுயமாக நன்மை தரும் அதிகாரம்
பெற்றவர் என்று நமது கிரந்தங்களில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே
ராகுதசை நன்மை செய்யுமா என்று கணிப்பதற்கு முன் இந்த வடுகளில்
ீ ராகு
அமர்ந்திருக்கிறாரா என்று பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

என்னுடைய நீ ண்டகால அனுபவத்தில் மேற்கண்ட ஐந்து இடங்களில் இருக்கும் ராகு, அவை


ஜாதகத்திற்கு கெட்ட இடங்களாக இருந்தாலும் கடுமையான பலன்களைத் தருவதில்லை
என்பதை உணர்ந்திருக்கிறேன். எனவே மேற்கண்ட பாவங்களில் இருக்கும் ராகு
கெடுதல்களைச் செய்வதில்லை.

இந்த ஐந்து இடங்களைத் தவிர்த்து மற்ற ஏழு ராசிகளில் இருக்கும் ராகு இயற்கைச் சுபர்
வட்டில்
ீ இருந்தாலும் அவர் தரும் நன்மைகள் இரண்டாம் பட்சமாகவே இருக்கும். இதுபோன்ற
அமைப்பில் தான் இருக்கும் வட்டின்
ீ அதிபதியின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவத்தை ராகு
அப்படியே பிரதிபலிப்பார்.

மேலே சொன்ன  ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுப வலுப் பெற்றவராகி, வடு
ீ கொடுத்தவர்
உச்சம் பெற்று, அந்த வடுகளும்
ீ மூன்று, ஆறு, பதினொன்று, பனிரெண்டாம் வடுகளாகி,

சுபருடன் இணைந்து, சுபர் பார்வை பெற்று, சனி, செவ்வாயின் பார்வை மற்றும் இணைவைப்
பெறாமல் இருக்கும் நிலைகளில் தனது தசையில் மிகப் பெரிய யோகங்களைச் செய்வார்.

இதுபோன்ற அமைப்பில் இந்த மண்ணில் ஒருவருக்கு கிடைக்கும் மண், பொன், பெண் ஆகிய
அனைத்துப் போகங்களையும் குறைவின்றி திகட்டத் திகட்ட அனுபவிக்கச் செய்வார் ராகு.

அதே நேரத்தில் ராகு, சனி, செவ்வாயின் ஸ்திர ராசிகளான விருச்சிகம், கும்பம் ஆகிய
இடங்களில் அமர்ந்து, அந்த வடுகள்
ீ ஜாதகருக்கு ஆறு, எட்டாம் வடுகளாகி
ீ இங்கே சனி,
செவ்வாய் அல்லது லக்ன அஷ்டமாதிபதி அல்லது ஆறுக்குடையவன் இணைவு மற்றும்
பார்வையைப் பெற்று தசை நடத்துகையில் ஜாதகரின் வயதுக்கேற்ப கடுமையான
பலன்களைத் தருவார்.

ராகுவின் இன்னுமொரு சிறப்பு என்று பார்க்கப் போனால் நமது மூல நூல்கள் ராகுவின்
காரகத்துவமாகக் சொல்லும் “நானாவித வேடத்தொழில்” என்பதைச் குறிப்பாகச்
சொல்லலாம். இந்த வார்த்தைக்கு சகல விதமான நடிப்பு என்று அர்த்தம்.

ராகு போகக் காரகன் என்பதால் பத்தாமிடத்தொடு அல்லது தொழில் ஸ்தானாதிபதியோடு


தொடர்பு கொள்கையில் ஒருவரை பெண் சுகம் எளிதாகக் கிடைக்கும் பெண்கள்
சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது சினிமா, தொலைக்காட்சி போன்ற மீ டியாத் துறையில்
ஈடுபடுத்துவார்.

சினிமா தோன்றாத அந்தக் காலத்தில் நடிகர்கள் மேடையில் நாடகங்களில் நடித்தார்கள்.


அதிலும் ஒரு நாடகம் விடிய விடிய நடத்தப்பட்ட நிலையில் அதில் பங்கு பெறும் ஒருவரே
நான்கு வேடங்களை ஏற்று நடிப்பதும், பொது மக்களிடையே பலத்த கைதட்டல்களைப்
பெறுவதும் நடந்தது.

உதாரணமாக சம்பூர்ண ராமாயணம் நாடகம் விடிய விடிய நடத்தப்படுகிறது என்றால்


பரதனாக வருபவரே ஜடாயுவாகவும், கோசலையாகவும் இந்திரஜித்தாகவும் நான்கு வித
வேடங்களில் வருவதுண்டு. இதுபோன்ற சகலவிதமான வேடங்களை ஏற்று நடிப்பதற்கு
காரணமானவர் ராகு.

இன்றைய காலகட்டங்களில் நாடகங்கள் மறைந்து போய் சினிமாவாக மாறி, மேடைகள்


அரசியலுக்கு மட்டும் என்றாகி விட்ட சூழலில், பொதுமக்கள் மத்தியில் ஒருவரை
அரசியல்வாதியாக மேடைகளிலோ, நடிகராக தொலைக்காட்சிகளிலோ, சினிமாக்களிலோ
பிரபலப்படுத்துபவர் ராகுதான்.

மேடையில் பேசும் போது ஒரு அரசியல்வாதியும் பார்வையாளர்களைக் கவர்வதற்காக அங்க


அசைவுகளுடன் உணர்ச்சிகரமாக இருக்க வேண்டியிருப்பதால் அரசியலில் ஒருவரைப்
பிரபலமாக்குபவரும் ராகுதான்.

ராகு சுபரோடு சேர்ந்து, சுபர் வட்டில்


ீ அமர்ந்து, அவருக்கு வடு
ீ கொடுத்தவரும்  வலிமை
பெற்றிருக்கும் நிலையில், செவ்வாய், சனியின் இணைவையோ தொடர்பையோ,
பார்வைகளையோ பெறாமல் இருக்கும் நிலையில் பெரிய நன்மைகளை செய்வார்.

குறிப்பாக அந்த ஜாதகரை அரசியல், சினிமா போன்ற பாப்புலாரிட்டியை தரும் துறைகளில்


ஈடுபடுத்தி வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வார். சினிமாவில் வெற்றி பெறுவதற்கு
சுக்கிரனை விட சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட ராகு அல்லது சுக்கிரனின் வட்டில்
ீ அமர்ந்த
ராகுவின் தயவு மிக முக்கியம்.

இன்றைய சினிமா அல்லது தொலைக்காட்சி, அரசியல் ஆகியவற்றில் முக்கிய  இடத்தைப்


பெற்று உச்சத்தில் இருக்கும் பிரபலங்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் அவர்களைப்
பொதுமக்கள் மத்தியில் கொண்டு வந்தது ராகு தசையாகத்தான் இருக்கும். பிரபலமடைய
இருக்கும் ஒருவரை அவரது வாழ்வில் உயர்நிலைக்குகொண்டு செல்ல இருக்கும்
வேலைகளை ராகுவே செய்வார்.

இன்னொரு நிலையாக ராகுதசைக்கு அடுத்து சகல பாக்கியங்களையும் தர இருக்கும்


குருவின் தசை நடக்கும் என்பதால் குருவின் தசையில் ஒருவருக்கு கிடைக்க இருக்கும்
அனைத்து நன்மைகளுக்கும் அடிப்படையாக  ராகுதசை அமையும்;

ஒரு மனிதனுக்கு சகல சுகங்களையும் அள்ளித் தந்து அவனைப் பாக்கியவான் ஆக்கும் தகுதி
பெற்ற இரண்டு இயற்கைச் சுபர்களான குரு, சுக்கிரனின் தசைகளுக்கு முன்பாக இந்த இருள்
கிரகங்களான ராகு, கேதுக்களின் தசைகள் அமைவது ஏன் என்பதை யோசித்தால்
ஜோதிடத்தின் இன்னும் சில சூட்சுமங்களும் புரியும்.

அதாவது உலகில் பிறந்த அனைவருக்கும் ஏதேனும் ஒருவகையில் நன்மை செய்தே


ஆகவேண்டிய குருவின் தசைக்கு முன்பாக ராகுதசை நடப்பதும், அதேபோல குருவிற்கு
ஆகாத அணியினருக்கு நன்மைகளைச் செய்யக் கடமைப்பட்ட சுக்கிரனின் தசைக்கு முன்பாக
ராகுவின் எதிர் கிரகமான கேதுவின் தசை நடப்பதும் ஏன் என்பதை யோசித்துப் பாருங்கள்.

காதல் செய்ய வைக்கும் ராகு …!

ஒருவரைத் தகுதிக்கும் வயதுக்கும் மீ றி அனைத்து வகை இன்பங்களையும்  அனுபவிக்கச்


செய்பவர் சுபர் வடுகளில்
ீ அமர்ந்த ராகுதான். அதனால்தான் இன்பங்களைத் துய்க்க
வைப்பவர் என்ற அர்த்தத்தில் வேதஜோதிடத்தில் போகக் காரகன் என்று அவர் அழைக்கப்
படுகிறார்.

எத்தனை சுப நிலையில் இருந்தாலும் சுக்கிர தசையைப் போலவே இளம் வயதில் பள்ளிப்
பருவத்தில் வரும் ராகுதசை ஒருவருக்கு நன்மைகளைச் செய்வது இல்லை.

உடலும் மனதும் இன்பங்களை முழுமையாக அனுபவிக்கத் தகுதியாக, உறுதியாக இருக்கும்


நடுத்தர வயதில் வரும் ராகு தசையே ஒருவருக்கு முழுமையாக நன்மைகளைச் செய்யும்.

பள்ளிப் பருவத்தில் நடக்கும் ராகுவின் தசை ஒருவருக்கு அமைந்திருக்கும் நிலையைப்


பொருத்து படிப்பில் ஆர்வக் குறைவையோ அல்லது கல்வித் தடையையோ நிச்சயமாகத்
தரும்.

மேலும் ஒரு முக்கிய நிலையாக இளம் பருவத்தினரிடையே காதல் என்ற பெயரில் காமத்தை
அறிமுகப்படுத்துபவரும் ராகுதான். குறிப்பாக ஆறு எட்டுக்குடையவருடன் இணைந்து ஆறு
அல்லது எட்டாமிடங்களில் சுபத்துவமில்லாமல் இருக்கும் ராகு தனது தசை, புக்தியில் ஒரு
பெண்ணை காதலில் ஈடுபடுத்தி சந்தோஷமாக கற்பிழக்க வைத்து பின்னர் ஏமாந்து
விட்டோமே என்று கண்ண ீர் விட வைப்பார்.

ஒரு பெண்ணை சம்மதத்துடன் கற்பிழக்கச் செய்பவை ஆறு, எட்டாமிடங்களின் சம்பந்தம்


பெற்ற பாபக் கிரகங்கள்தான். அதிலும் சனி, செவ்வாய் தொடர்பைப்  பெற்று சுக்கிரனின்
வடுகளில்
ீ இருக்கும் ராகு,கேதுக்கள் இளம் வயதில் நிச்சயமாக இந்த அனுபவத்தைக்
கொடுப்பார்கள்.

இது போன்ற அமைப்பில் ராகுவின் நிலையையும் கிரகத் தொடர்புகளையும் வைத்து


ஒன்றுக்கு மேற்பட்ட காதல், பல ஆண்கள் என்று இந்த நிலை அமையும். தான் இருக்கும்
வட்டு
ீ அதிபதி கிரகத்தின் செயல்களை அப்படியே செய்பவர் ராகு என்பதால் இதுபோன்ற
பலன்களை முன் கூட்டியே கணிக்க முடியும்.

இப்படிப்பட்ட அமைப்பு ஒரு பெண்ணுக்கு நடக்கும் போது, ராகு-கேதுக்கள் முதலில் அந்தப்


பெண்ணிற்கு கல்வி அல்லது வேலை என்ற பெயரில் இட மாற்றத்தைக் கொடுத்து, இருக்கும்
இடத்தை விட்டு அல்லது பெற்றோரை விட்டு தூர நகர்த்தி, வெளிமாநிலம், வெளிநாடு
போன்ற இடங்களில் தைரியமாக கேட்க ஆளில்லாமல் சுதந்திரமாக தவறு செய்ய வைப்பார்.

மிக அருமையான யோகங்கள் செய்தி


- January 18, 2019
#ஜாதகயோகங்கள் 

1, சுனபா யோகம்

சந்திரனுக்கு 2 ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது.

பலன்

சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும்

உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர்.

2, அனபா யோகம்

சந்திரனுக்கு 12 ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது.

பலன்

சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர்,

3, துருதுரா யோகம்

சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம்

உண்டாகிறது.
பலன்

கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்.

4, கேம துர்ம யோகம்

சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது.

பலன்

இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அணுபவிக்கின்றனர்.

5, அதி யோகம்

சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது.\

பலன்

நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞ்சர்களால் பாராட்டதக்கவர்.

6, அமல யோகம்
லக்னம் அல்லது சந்திரனுக்கு 10 ல் சுபர்களான குரு, சுக்கிரன், புதன் இருக்க அமல யோகம் உண்டாகிறது.

பலன்

அன்பும் ஆற்றலும் பெற்றவர், வற்றாத புகழும் வடியாத செல்வமும் உடையவர். நல்லவர். வல்லவர் என

எல்லோராலும் புகழப்படுபவர். கலை சினிமா, அரசியல் துறைகளில் புகழ் பெற்று வாழ்வார்கள்.

7, வேசி யோகம்

சூரியனுக்கு 2 ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வேசி யோகம் உண்டாகிறது.

பலன்

இந்த யோகம் உடையவர்கள் நினைத்ததை முடிபவராகவும், மகிழ்ச்சி உடையவராகவும், அதிஷ்டம்

உடையவராகவும் இருப்பார்கள்.

8, வாசி யோகம்

சூரியனுக்கு 12 ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வாசி யோகம் உண்டாகிறது.

பலன்
இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும், செல்வாக்கு மிக்கவராகவும்,

பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர்.

9, உபய சாரி யோகம்

சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற கிரகங்கள் உபய சாரி யோகம் உண்டாகிறது.

பலன்

இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெரும்

உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.

10, அம்ச யோகம்

லக்னத்திற்கு குரு 4,7,10 ல் இருக்க, குரு அமர்ந்த இடம் தனுசு, மீ னம், கடகம் எனில் அம்ச யோகம்

உண்டாகிறது.

பலன்

நல்ல உடல்வாகு உடையவர். அன்பும் நற்குணமும் உடையவர். சகலகலா வல்லவராக திகழ்பவர்,

யாரையும் தன்வசம் கவரும் ஆற்றல் மிக்கவர்.

11, சச யோகம்
சனி பகவான் லக்னத்திற்கு 1,4,7,10 ல் இருந்து உச்சம் பெற்றிருக்க சச யோகம் அமைகின்றது.

பலன்

நீதி நெறி தவறி நடப்பவர். தலைமை பதவியை அடைபவர். மாற்றான் சொத்தை அபகரிப்பவர். அன்னியர்

உழைப்பினால் முன்னுக்கு வருபாவர். பிற பெண்களை வசியம் செய்து இன்பம் காண்பவர்.

12, பத்ர யோகம்

லக்னத்திற்கு 4,7,10 ல் புதன் வற்றிருக்க


ீ அந்த வடு
ீ புதனுக்கு ஆட்சி உச்சமாகில் பத்ர யோகம்

உண்டாகிறது.

பலன்

பலம் மிக்கவர். தாய் வர்கத்தால் நன்மை அடைபவர். பந்தபாசம் மிக்கவர். விளையாட்டு துறையில்

சிறப்புடையவர்.

13, ருச்சிக யோகம்

செவ்வாய் 4,7,10 ல் அமர்ந்து இருக்க அந்த வடானது


ீ செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வடாக
ீ இருக்க

ருச்சிக யோகம் உண்டாகிறது. இது பஞ்சமகா யோகமாக கருதப்படுகிறது.


பலன்

உடல் பலம் மிக்கவர்கள். பெரும் புகழும் மிக்கவர்கள். அரசாலும் பெருமைக்குரியவர், தயாள குணம்

மிக்கவர், மதபற்றுதல் உடையவர்.

14, ஜெய யோகம்

6 ம் அதிபதி நீசம் பெற்று 10 ம் அதிபதி உச்சம் பெறின் ஜெய யோகம் உண்டாகும்.

பலன்

பகைவரை வெல்லக் கூடியவர். போட்டி பந்தயங்களில் புகழ் பெறுவார். நீண்ட ஆயுள் உடையவர்.

நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார்.

15, கஜகேசரி யோகம்

சந்திரனுக்கு 4,7,10 ல் குரு இருக்க கஜகேசரி யோகம் உண்டாகிறது.

பலன்

உறவினரால் உயர்வு அடைவார். பெரும் புகழும் உடையவர். இறந்த பின்பும் புகழ் மிக்கவர். அரசருக்கு

நிகரான தொழில் புரிவர்.


16, பந்தன யோகம்

லக்னாதிபதியும் 6 ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும்.

பலன்

சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார். அல்லது ஒரே இடத்தில

கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.

17, சகட யோகம்

குரு விற்கு  6,8,12 ல் சந்திரன் இருக்க சகட யோகம் உண்டாகிறது.

பலன்

இத்தகைய யோகம் உடையவர்கள் வறுமையில் வாழ்வார். வளமிழந்து தவிப்பார். உயர்வு அடைய

இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம்

நற்பலன் இல்லை.

18, மாதுரு நாச யோகம்

சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு

நாசம் யோகம் உண்டாகிறது.


பலன்

தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.

19, நள யோகம்

ராகு கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீ னம் ஆகிய நான்கு

ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும்.

பலன்

இந்த யோகம் உடையவர் அகோர வடிவமானவராகவும், தீயவராகவும், ஒதுக்க்பட்டவரகவும், நிலையான்

இடத்தில வாழ வகையர்ரவராகவும் இருப்பார்.

20, முசல யோகம்

ராகு கேது நீங்கலாக 7 கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில்

சஞ்சரிக்க முசல யோகம் உண்டாகிறது.

பலன்

இந்த யோகம் உடையவர்கள் சகலகலா வல்லவர்களாக இருகின்றனர். செல்வம் செல்வாக்கால் செழிப்பு

பெறுகின்றனர். தனமான் உணர்வு மிக்கவர். கல்வி ஞானத்தால் புகழ் பெறுபவர்.


21, வல்லகி யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம்.

பலன்

சுக போகத்தை அனுபவிக்கின்றனர், சங்கீ த தொழில் மூலம் பெருமை அடைவர். நாடக தொழில் மூலம்

நன்மை பெறுகின்றனர்.

22, ரஜ்ஜு யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் மட்டுமே

சஞ்சரிப்பது ரஜ்ஜு யோகம் ஆகும்.

பலன்

பேரரசை மிக்கவர். பொருள் ஈட்டுவதில் வல்லவர். வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவர்.

23, பாச யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 5 ராசியில் சஞ்சரித்தால் பாச யோகம் ஆகும்.

பலன்

நீதி நெறியை மதிபவராகவும், நேர்மையான தொழிலில் ஈடுபட்டு ஜீவனம் நத்துபாவராகவும் இருப்பார்.

செல்வம் செல்வாக்கு உடையவர். செல்வம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்.


24, தாமினி யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம்

உண்டாகிறது.

பலன்

அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன் வயப் படுத்துபவர். நற்பண்பு உடையவர். தான தர்மம்

செய்பவர். ஜீவராசியின் பால் கருணை உடையவர்.

25, கேதார யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 4 ராசியில் சஞ்சரித்தால் கேதார யோகம் ஆகும்.

பலன்

நாற்கால் ஜீவனத்தாலும், விவசாயத்தாலும், நன்மை பெறுவார். வாகனம், பூமி சம்மந்தப்பட்ட

வகையிலும் ஜீவனம் நடத்துவார்.

26, சூல யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும்.
பலன்

வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவார்.விபத்து போன்றவ்றால் துன்பப்படுவார்.

26, யுக யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 2 ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும்.

பலன்

இந்த யோகம் உடையவர்கள் சமுதாய நெறிகளை எதிர்ப்பவர். நல்லோரை வெறுப்பர்.சிறுமை பெற்று

சீரழிவார்.

27, கோல யோகம்.

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 1 ராசியில் சஞ்சரித்தால் கோல யோகம் ஆகும்.

பலன்

இந்த யோகம் உடையவர்கள் தீயவன் என்று தூற்றபடுவர், சமுதாயத்தில் ஒதுக்கப்படுபவராகவும்,

ஏழ்மையாலும், இன்னல்களாலும் இழிவடைவார்.


28, கால சர்ப்ப யோகம்

ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருப்பின் கால சர்ப்ப யோகம் உண்டாகிறது. இந்த யோகம்

அநேகமாக பலரிடம் காணப்படுகின்றது .

பலன்

32 வயதுவரை யோக பலன் உண்டாவதில்லை. 32 வயதுகுப் பின் படிப்படியாக உயர்வு உண்டாகிறது.

திருமணம் தாமதப்படுகிறது. நல்ல தொழில் வருவாய் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கணவன்

மனைவி உறவில் மனகசப்பு உண்டாகிறது.

29, விபரீத ராஜயோகம்

6 ஆம் அதிபதி 8 அல்லது 12 ல் இருப்பின்

8 ஆம் அதிபதி 6 அல்லது 12 ல் இருப்பின்

12 ஆம் அதிபதி 6 அல்லது 8 ல் இருப்பின்

விபரீத ராஜயோகம் உண்டாகிறது.

பலன்

சாதாரண நிலையில் வாழ்ந்து வரும் ஒருவர் திடீரென் உயர்ந்த அந்தஸ்து உடையவராக ஆகிறார்.

30, சதுரஸ்ர யோகம்


எல்ல கிரகங்களும் 1,4,7,10 ஆகிய இடங்களில் அமைந்தால் சதுரஸ்ர யோகம் உண்டாகிறது.

பலன்

ஆட்சி செய்ய கூடிய அற்புத அமைப்பு ஆகும். நல்ல பெரும் புகழும் பெறுவார்.

31, சந்திர மங்கள யோகம்

சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.

பலன்

இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர்.

32, குரு சந்திர யோகம்

சந்திரனுக்கு 1,5,9 ல் குரு இருக்க, குரு சந்திர யோகம் உண்டாகிறது.

பலன்

உயர்த கல்வியாளர்களாக திகழ்கிறார்கள்.ஆனால் கல்விக்கு தொடர்பில்லாத தொழில் அமைகிறது.

33, நீச பங்க ராஜ யோகம்


ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம்

உண்டாகிறது.

பலன்

நீச பங்கம் பெற்றவர்கள் பெரிய சாதனை செய்கின்றனர். சிலர் உலக சாதனை செய்கின்றனர்.

34, அகண்ட சாம்ராஜ்ய யோகம்

ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய

யோகம் உண்டாகின்றது.

பலன்

ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம்

ஏற்படுகின்றது.

35, தர்ம கர்மாதிபதி யோகம்

ஜனன காலத்தில் 9,10 க்கு அதிபதி இனைந்து ஓர் ராசியில் இருபினும், ஒருவருகொருவர் 7 ம் பார்வை

பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது.


பலன்

அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும்

கிடைக்கிறது.

36, பரிவர்தனா யோகம்

இரண்டு கிரகங்களோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களோ தங்கள் வட்டில்


ீ இருந்து மற்ற

கிரகத்தின் வட்டிலோ
ீ மற்ற கிரகம் தன் வட்டிலோ
ீ இடம் மாறி அமர்ந்திருக்க பரிவர்தனா யோகம்

உண்டாகின்றது.

பலன்

பரிவர்தனா பெற்ற கிரகத்தின் தசை அல்லது புத்தியில் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுகிறார்.

செல்வாக்கு புகழ் அனைத்தும் உண்டாகின்றது.

37, மாளவியா யோகம்

சுக்ரன் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 1,4,7,10 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெற்றால்

மாளவிய யோகம் உண்டாகிறது. இது பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

பலன்

நீண்ட ஆயுள் நிலையான செல்வம், நிலைத்த புகழ், வசதியான வாழ்கை அசையா சொத்துகள் சேர்கை

ஆகியன உண்டாகின்றது.
38, தேனு யோகம்

ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது.

பலன்

நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும்

திகழ்கின்றனர்.

39, புஷ்கல யோகம்

லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது.

பலன்

மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள், மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.

40, முக்தி யோகம்

லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்கள் முக்தி யோகம் பெறுகிறார்கள்.

பலன்
இறந்த பிறகு மீ ண்டும் பிறவி ஏற்படுவதில்லை. இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம்

ஏற்படுகின்றது. பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர்.

41, ஸ்ரீநாத யோகம்

லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம்

உண்டாகிறது.

பலன்

செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற

வாழ்க்கை நடத்துகின்றனர்.

42, சக்ரவர்த்தி யோகம்

ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது.

பலன்

மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.

43, கனக யோகம்


லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின்

கனக யோகம் உண்டாகிறது.

பலன்

இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள்.

44, ரவி யோகம்

சூரியனுக்கு 2 புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது.

பலன்

இந்த யோகம் உடையவர்கள் புகழ், பெருமை, நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள்

படைக்கிறார்கள்.

45, விரின்சி யோகம்

லக்னாதிபதி, சனி, குரு ஆகியோர் பலமுடன் அமையப் பெறின் விரின்சி யோகம் உண்டாகிறது.

பலன்

வல்லமை, வலிமை, நீண்ட புகழ் யாவும் உடையவராக விளங்குகின்றனர்.


46, வசுமதி யோகம்

3, 6, 11 க்கு உடையவர்கள் பலம் பெற்று காணப்படின் வசுமதி யோகம் உண்டாகின்றது.

பலன்

செல்வம், செல்வாக்கு, நீண்ட புகழ் யாவும் உண்டாகிறது.

47, சரஸ்வதி யோகம்

குரு, சுக்ரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின்

சரஸ்வதி யோகம் உண்டாகிறது.

பலன்

மற்றவர்களால் மதிக்கத்தக்க பலன் உண்டாகும். கூர்மையான அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல்

முதலியன உண்டாகும். அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை அடைவார்.

48, சங்க யோகம்

5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வட்டில்


ீ இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால்

பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது.


பலன்

உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.

49, ராஜ யோகம்

9 ஆம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெறின் ராஜ யோகம் உண்டாகிறது.

பலன்

வடு,
ீ வாகனம், செல்வம், செல்வாக்கு, யாவும் குறைவில்லாமல் அமைகிறது.

50, பூமி பாக்கிய யோகம்

4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய

அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும்.

பலன்

வடு,
ீ நிலம் சேர்கை உண்டாகும், சொத்தும் நிலைத்து நிற்கும்.
51, லட்சுமி யோகம்

9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது.

பலன்

யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. அபரிமிதமான செல்வம்

அடைகின்றனர்.

52, வரிஷ்ட யோகம்

ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது.

பலன்

நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.

53, கலாநிதி யோகம்

குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது.

குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது.


பலன்

அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.

54, தரித்திர யோகம்

9 ம் அதிபதி (பாக்யாதிபதி) 12 ல் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது.

பலன்

வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகின்றனர். எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும்

விரயமாகின்றது.

55, அந்திய வயது யோகம்

1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம்

உண்டாகிறது.

பலன்

இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும்

உண்டாகிறது.
56, திரிலோசனா யோகம்

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம்

உண்டாகிறது.

பலன்

எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.

57, பாபகத்ரி யோகம்

லக்னமோ அல்லது சந்திரனோ இரு பாவ கிரகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்க பாப கத்ரி யோகம்

உண்டாகிறது.

பலன்

செல்வந்தராயினும் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சந்திப்பார்கள்.

58, பர்வத யோகம்

லக்னாதிபதி நின்ற வட்டின்


ீ அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10

பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது.


பலன்

புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது.

59, அரச யோகம்

சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி. உச்சம் பெற்று அந்த சந்திரனை சுக்ரன், குரு பார்வை பெற

அரச யோகம் உண்டாகிறது.

பலன்

நாட்டை ஆளக் கூடிய யோகம் உண்டாகும்.

60, பிரம்மா யோகம்

குரு, சுக்ரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 1 ௦ ல் அமர வேண்டும். இந்த அமைப்பு

ஏற்படின் பிரம்மா யோகம் உண்டாகிறது.

பலன்

நல்ல கல்வி, நீண்ட ஆயுள், பலரும்  மதிக்கப்படும் புகழ், பெருமையாவும் அடையப் பெறுகிறார்கள்.

61, வசீகர யோகம்


புதன், சுக்ரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோம் உண்டாகிறது/

பலன்

ஜாதகர் அழகு மிக்கவர். மற்றவர்களை எளிதில் கவரும் முக வசீகரம் உடையவர்.

62, காம யோகம்

7 ல் சுப கிரகம் இருபதும் 7 ல் சுபர் பார்வை எற்பதுவதும் காம யோகம் ஆகும்.

பலன்

நல்ல மனைவி நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

63, கௌரி யோகம்

லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி

யோகம் உண்டாகிறது.

பலன்

நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம்

பலன் தரும்.
6

4, மாருத யோகம்

3,6,11 ஆகிய ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு இருந்து சுபர் பார்வை பெறின் மாருத யோகம் உண்டாகிறது.

பலன்

அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமைகிறது. சகல பாக்கியங்களையும் அனுபவிப்பர்.

65, சுமந்திர யோகம்

லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம்

உண்டாகிறது.

பலன்

கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது.

66, அசுபர யோகம்

லக்னத்தில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்து, லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க அசுபர யோகம்

உண்டாகிறது.
பலன்

40 வயதுக்கு பின் இந்த யோகம் ஏற்படுகிறது, அரசியலில் ஈடுபாடும், உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும்

உண்டாகிறது.

67, யௌவன யோகம்

லக்னத்திற்கு 2 ல் சுப கிரகம் இருந்து 2 க்கு உரிய கிரகம் பலம் பெற்று இருக்க யௌவன யோகம்

உண்டாகிறது.

பலன்

கல்வி அறிவு மிக்கவர், யோக சுகம் பெற்று மகிழ்வார்.

68, சாமர யோகம்

குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி

3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும்.

பலன்

நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு ஆகியன அமையும்.

69, நாக யோகம்


9 ல் குருவும் 9 க்கு உரியவர் 7 லும் இருக்க சந்திரன் சுபர் சம்பந்தம் பெற நாக யோகம் உண்டாகிறது.

பலன்

நல்ல கல்வி உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், சகல வசதி மிக்கவர்.

70, சுலபமாக சம்பாதிக்கும் யோகம்

லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம்

உண்டாகிறது.

பலன்

அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட முடியும்.

71, குரு சண்டாள யோகம்

குருவும், ராகுவும் இனைந்து காணப்படினும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் குரு

சண்டாள யோகம் உண்டாகிறது.

பலன்

செல்வம் செல்வாக்கு உண்டாகிறது, வாழ்வில் வெற்றிகள் குவியும்.


72, அஷ்டலட்சுமி யோகம்

6 ல் ராகு இருக்க அச்டலட்சுமி யோகம் உண்டாகிறது.

பலன்

ராகு திசையில் ஜாதகர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்குவார்.

73, கபட யோகம்

4 ஆம் அதிபதி பாபருடன் கூடினாலும் 4 ல் 4 ஆம் அதிபதி ஆட்சி பெற்று பாபருடன் கூடினாலும் இந்த

யோகம் உண்டாகிறது.

பலன்

கபடம் செய்பவர் ஆவார்.

74, லட்சுமி யோகம்

சுக்ரன் 2, 11 ல் இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது.


பலன்

செல்வந்தராய் வாழ்வர், சுக்ர தசையில் தான் இப்பலன் உண்டாகும்.

75, அவயோக காலசர்ப்ப யோகம்

1,4,7,1 ௦ ல் ராகு / கேது இருக்க, அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது.

பலன்

வாழ்வில் பல சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும், திடீர் சரிவு, அகால மரணம் ஆகியவற்றை

சந்திக்கிறார்கள்.

76, வெளி நாடு செல்லும் யோகம்

9,12 அதிபதிகள் கடகம், மகரம், மீ னம் ஆகிய ராசிகளில் இடம் பெறினும் 9,12 அதிபதிகள் பலம் பெற்று

இருபினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.

பலன்

9, 12 ஆகிய திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.

77, குபேர யோகம்


2 க்கு உரியவர் 9 ல் இருப்பினும், ௨ல் 9,11 க்கு உரியவர் இருபினும் குபேர யோகம் உண்டாகிறது.

பலன்

கோடி, கோடியாக சம்பதிப்பர்

78, ஞாபக மறதி யோகம்

5 க்கு உரியவர் 3, 6, 8, 12 ல் இருக்க அல்லது  5 க்கு உரியோன் நீசம், அஸ்தங்கம் பெற்றாலும் ஞாபக மறதி

யோகம் உண்டாகிறது.

பலன்

ஞாபக மறதி உடையவராய் இருபர்.

79, ஸ்ரீ கட யோகம்

அணைத்து கிரகங்களும் 1,5,9 ல் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும்.

பலன்

சண்டை பிரியர். அரசாங்கத்தில் பனி அமையும். நல்ல மனைவியும் மகிழ்ச்சியான வாழ்கையும்

அமையும்.
80, விஷ கன்னிகா யோகம்

பெண் சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் பிறந்து ஆயில்யம், சதயம், கிருத்திகை நட்சத்திரத்தில்

பிறந்தவர்களாக இருப்பின் விஷ கன்னிகா யோகம் உடையவள் ஆவாள்.

பலன்

இத்தகைய பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணின் உடல் நலம் பாதிக்கபடும். பெண்ணின்

ஜாதகத்தில் 2, 8 பாதிக்கப்பட்டு இருக்குமானால் கணவன் உயிர் நீங்கும் நிலை பெறுவர்.

81, அமாவாசை யோகம்

சூரியனும், சந்திரனும் இனைந்து இருபது அமாவாசை யோகமாகும்.

பலன்

அன்றாட வாழ்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். இதில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம்

பெறின் சமுதாயத்தில் தலைவராகவோ, நாட்டின் தலைவராகவோ, அரசாலும் யோகமோ அமையப்

பெறுகின்றார்கள்.

82, ரோககிரகஸ்தா யோகம்

லக்னாதிபதி பலம் இழந்து 6, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தாலும் 6, 8, 12 க்குகுரியவர் லக்னத்தில்

அமர்ந்திருந்தாலும் ரோககிரகஸ்தா யோகமாகும்.


பலன்

மெலிந்த தேகம் உடையவர்,

83, அரச கேந்திர யோகம்

லக்னத்திற்கு 1,4,7,1 ௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச

கேந்திர யோகமாகும்.

பலன்

மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும்.

84, வனா
ீ யோகம்

7 கிரகங்கள் 7 ராசிகளில் இருபது வனா


ீ யோகம் ஆகும்.

பலன்

வாழ்கையில் வசதி வாய்ப்பு அடைகிறார்கள். சமுதாயத்தில் தலைவராக இருப்பார்கள. அறிவாற்றல்

மிக்கவராக இருப்பர்.
85, கேதரா யோகம்

7 கிரகங்கள் 4 ராசிகளில் இருப்பது கேதரா யோகம் ஆகும்.

பலன்

சிறந்த விவசாயிகளாகவும் அனைவர்க்கும் உதவி செய்யும் மனமுடயவராகவும் உள்ளனர்.

86, அன்னதான யோகம்

2 ஆம் அதிபதி பலம் பெற்று குரு அல்லது புதன் சம்பந்தம் பெற்றிருப்பது அன்னதான யோகமாகும்.

பலன்

பலருக்கும் உதவி செய்வதில் ஆர்வம் உள்ளவர். அன்னதானம் செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.

87, விமலா யோகம்

12 ம் அதிபதி 12 ல் இருபது விமலா யோகம்.

பலன்
தொண்டு செய்யும் எண்ணம் உடையவர். சுதந்திர பிரியர்.

88, சதுஸ்ர யோகம்

1,4,7,1 ௦ ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது.

பலன்

நல்ல இல்வாழ்வு புத்திர பாக்கியம் அபரிமிதமான செல்வ சேர்க்கை உண்டாகிறது.

89, ராஜயோகம்

1,4,7,1 ௦ ஆகிய வட்டுக்கு


ீ அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். இவர்கள் ஒருவருக்கொருவர்

பரிவர்த்தனை பெற்று இருப்பின் ராஜயோகம் உண்டாகிறது.

பலன்

நல்ல மனைவி, வடு


ீ யோகம், தொழில் யோகம், செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.

90, சாங்கியா யோகம்

லக்னம், 9 ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களில் ரக்து, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருப்பின்

சாங்கியா யோகம் உண்டாகிறது.


பலன்

உயர்ந்த குணம் உள்ளவர். சாந்தமானவர். சகல பாக்கியங்களும் பெற்று  வசதியாக வாழ்வார்.

91, உபஜய யோகம்

உபஜய ஸ்தனங்களான 3,6,10,11 ஆகிய இடங்களில் குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஆகிய சுப கிரகங்கள்

இருக்குமாயின் உபஜனயோகமாகும்.

பலன்

வசதி நிறைந்து வாழ்வார். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் பெறுவார்.

92, பாக்கிய யோகம்

லக்னத்திற்கு 1 ௦ல் சுப கிரக்கம் இருப்பது அல்லது 1 ௦குடைய பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று

சுபகிரக பார்வை பெறுவது பாக்கிய யோகமாகும்.

பலன்

அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர். வாகன சுகம் உடையவர்.

93, அங்கஹீன யோகம்


12 ஆம் அதிபதி கேந்திர திரிகோணம் பெற்று ராகுவுடன் சம்பந்தம் பெறுவது.

பலன்

உடலில் ஏதாவது ஓர் உறுப்பில் குறை இருக்கும்.

94, லக்ன கர்மாதிபதி யோகம்

லக்னதிபதியும் 1 ௦ ஆம் அதிபதியும் சம்பந்தம் பெறுவது (பார்வை அல்லது சேர்கை)

பலன்

தனது முயற்சியால் உயர்நிலை அடைவார்.

95, சரள யோகம்

8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும்.

பலன்
நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி.

உயர்நிலை பெரும் யோகமுடையவர்.

96, அசுர யோகம்

லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம்

உண்டாகிறது.

பலன்

அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4 ௦ வயதுக்கு மேல் உண்டாகும்.

97, சுமத்திர யோகம்

லக்னத்தில் கேது இருந்து 7 ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம்

உண்டாகிறது.

பலன்

முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள்.

98, பாதாள யோகம்


லக்னத்திற்கு 12 ல் சுக்கிரன் இருந்து 12 க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள

யோகம் அமைகிறது.

பலன்

பிற்கால வாழ்கையில்  செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர்.

99, வசுமதி யோகம்

லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 3, 6, 1 ௦, 11 ல் சுப கிரகங்கள் இருந்தால் வசுமதி யோகம்

உண்டாகிறது.

பலன்

சகல செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வார்.

100, தனயோகம்

லக்னத்திற்கு 2,9,1 ௦ அதிபதிகள் இணைவது

லக்னத்திற்கு 2,5,6 அதிபதிகள் இணைவது

லக்னத்திற்கு 6,7 ஆம் அதிபதிகள் பலம் பெற்று 2 ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது ஆகியன

தனயோகம் ஆகும்.
பலன்

தொழில் முறையில் செல்வம் சேர்கின்றனர்.

101, சந்திர யோகம்

குருவும், சனியும், சந்திரனுக்கு 2 ல் அமையப்பெறின் சந்திரயோகம்

உண்டாகிறது.

பலன்

சுயநலமிக்கவர்கள்

102, கவுரி யோகம்

சந்திரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் கவுரியோகம் உண்டாகிறது.

பலன்

தெய்வக
ீ வழிபாடு, நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகிறது.

103, இந்திர யோகம்


5 ல் சந்திரன் அமையப்பெற்று 5,11 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இந்திரயோகம் உண்டாகிறது.

பலன்

தைரியம் மிக்கவர், புகழ் மிகுந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.

104, பிரபை யோகம்

லாபாதிபதி சுக்ரனுடன் சேர்ந்து 1,4,7,1 ௦ ஆகிய இடங்களில் இருக்க பிரபை யோகம் உண்டாகிறது.

பலன்

முன் பகுதி யோகம் உடையவர். அரசியல் ஈடுபாடு இருக்கும். செல்வாக்கு பெற்றவர். தீயாக உள்ளம்

கொண்டவர்.

105, பாரிஜாத யோகம்

11 ஆம் அதிபதி ஆட்சி/உச்சம் பெறின் பாரிஜாத யோகம் உண்டாகிறது.

பலன்
நற்குணம் மிக்கவர், செல்வம் செல்வாக்கு பெற்று விளங்குபவர்.

106, மாலா யோகம்

சந்திரனுக்கு 1 ௦ல் குரு இருக்க மாலா யோகம் உண்டாகிறது.

பலன்

அரசு தொடர்புடைய பணியில் அமர்வர். செல்வ செழிப்புடன் வாழ்வர்.

107, காஹள யோகம்

நான்காம் வட்டு
ீ அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்து

லக்னாதிபதி பாலமடைந்து இருக்க காஹள யோகம் உண்டாகிறது.

பலன்

பிடிவாதகாரராகவும், தைரியமிக்க்வராகவும் இருப்பார்.

108, மகாலட்சுமி யோகம்

ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் 1,5,9,4,7,10 ல் அமர மகாலட்சுமி யோகம் உண்டாகிறது


பலன்

மனைவி வழியில் லாபம் உண்டாகும். அதிகாரம் செய்யும் பதவி அடைவர். வாகன வசதி உண்டு.

109, சதா சஞ்சார யோகம்

லக்னாதிபதி சரராசியில் இருப்பது சதா சஞ்சார யோகமாகும்

பலன்

அதிக அலைச்சல், அதிகப்படியான பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உண்டாகிறது

110, மாதுரு மூலதன யோகம்

இரண்டாம் வட்டு
ீ அதிபதி நான்காம் வட்டு
ீ அதிபதி உடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம்

உண்டாகிறது.

பலன்

தாயாருடைய உதவியால் அதிக லாபம் கிட்டும்.

111, களத்திர மூலதன யோகம்


இரண்டாம் வட்டு
ீ அதிபதியை ஏழாம் வட்டு
ீ அதிபதி பார்த்தால் களத்திர மூலதன யோகம் அமைகிறது.

பலன்

மனைவி வழியில் அதிக லாபங்கள் உண்டாகிறது.

112, அங்கிஸ யோகம்

குருபகவான் உச்சம் பெற்று சந்திரன் லக்னத்திற்கு 5,7,9 ல் இருக்க அங்கிஸ யோகம் உண்டாகிறது.

பலன்

எல்லா வகை செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வர். நீண்ட வயது வாழ்வர்

113, வசீகர யோகம்

புதன், சுக்கிரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோகம் உண்டாகிறது.

பலன்

ஜாதகர் அழகும் மற்றவர்களை கவரும் முக வசீகரமும் உடையாராக இருபார்.


114, சௌரிய யோகம்

லக்னதிலோ அல்லது லக்னத்திற்கு 3 ல் சுப கிரகம் இருப்பது சௌரிய யோகம் ஆகும். தனாதிபதி வலுவாக

இருபினும். இந்த யோகம் உண்டாகிறது.

பலன்

சகல வசதிகளுடன் பலரும் போற்றும் வாழ்க்கை உண்டாகிறது.

https://astroravichandran.blogspot.com/2020/09/blog-post_0.html
*    லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி
ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.

*    லக்னத்திற்கு 4 ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை
பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான்.
இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.

*    செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வட்டில்


ீ கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வடு
ீ கட்டை சுகத்துடன்
வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும்.

*    பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள்
இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான்.

*    4 ம் வட்டிற்கு
ீ அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற
அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீ து பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான்.
கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான்.

*    ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4 லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன்
சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான்.

*    8 க்குடையவன் 12 க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம்
செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த
தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான்.

*     சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில்
பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வரபத்திரன்
ீ போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று
வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான்.
*    குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச
சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான்.

*    சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப
சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன்
விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான்.

*    குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும்
அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய்
புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும்.

*    குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான்.
சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான்.

*    இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வடுகள்
ீ கட்டி சிறந்து விளங்குவான்.
மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள்
தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள்.

*    சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும்
இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர
நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன்
பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள்.

*    சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும்
கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வட்டில்
ீ கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை
எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான்.

*    புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும்
பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும்.

*    குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான்.
குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம்
மிகுந்து வாழ்வான்.

*    செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய்
நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன
சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை
இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள்.

*    குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள்
அறிந்தவனாக விளங்குவான்.

*    சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக
திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான்.

*    குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட
ஜீவனம் செய்வான்.
http://villangaseithi.com/dividends-houses-description-position-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA-
%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE
%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/

அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச்


செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், மரண யோக தினங்களில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ,
அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்......
  

மேல சொன்ன ரெண்டும் முக்கியமான யோகங்கள்.முக்கியமா மனசிலே ஞாபகம் இருக்கட்டும். மற்றது  , இல்லேன்னா
கூட பரவா இல்லை.

சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும்.

மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு
விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.
ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு,  அவனிடம் எதுவும்
வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில்
இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. பலனே தராது  என்று அர்த்தம்
அல்ல.
ஒருவருக்கு சுக்கிரன் ஆட்சி ஸ்தானத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வக்கிரம் ஆகி இருந்தால்...அவருக்கு
கிடைக்க வேண்டிய முழு பலனும் தராது  ... நீசம் ஆகி , வக்கிரமும் இருந்தால் சற்று கடுமையாகவே இருக்கும்.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்

3 ம் பாதம் - வெண் தேக்கு 

4 ம் பாதம் - நிரிவேங்கை 

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்

4 ம் பாதம் - எலுமிச்சை 

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை

3 ம் பாதம் - ராம்சீதா 
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்

4 ம் பாதம் - மஞ்சபலா 

ஜோதிட குறிப்புகள்
பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு
Saturday, December 31, 2011

Happiest 2012!!!!!!!

வாழ்க வளமுடன்! என் இனிய  

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....................

Posted by Anand at 10:21 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Thursday, December 22, 2011

கோ-யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு தனது மூலதிரிகோணத்திலும், 2 ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து,
லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.

      இந்த அமைப்பை பெற்ற‌வர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள்


குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார். 

Posted by Anand at 6:36 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 2 ம் இடம், குரு, லக்கினம்


Sunday, December 18, 2011

மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9 ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9 ல் அமர்ந்து, அதே குரு இருக்கும்
இடத்தில் இருந்து 9 ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து, சனி லக்கினத்திற்க்கு 10 ல் அமர்ந்தால் இந்த யோகத்திற்க்கு மகுட
யோகம் என்று பெயர்
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த‌தலைவனாக இருப்பார்கள்.
கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.

Posted by Anand at 5:08 AM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 9 ம் இடம், குரு, சனி, லக்கினம்

Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5 ம் இடத்திலோ அல்லது 9 ம் இடத்திலோ இருந்து அதனுடன்


சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு
கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன்,
சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில்,
மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக,
நோயற்றவர்களாக இருப்பர்.

Posted by Anand at 6:11 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 2 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், ஆட்சி, உச்சம், குரு, சுக்கிரன், புதன்

Friday, November 18, 2011

பாரிஜாத யோகம்

      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வட்டின்


ீ அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில்
அமர்ந்திருக்கும் வட்டின்
ீ அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ,
கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்
      இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக
இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.

Posted by Anand at 7:44 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், உச்சம், கேந்திரம், கோணம், நவாம்சம், லக்கினம்
Wednesday, November 16, 2011

பேரியோகம் ஜோதிடக்குறிப்பு

1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9 ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு
நிலையில் இருந்தாலும்,
2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9 ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு
நிலையில் இருந்தாலும்,
3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9 ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம்
அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.
      இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல
வழிகளில் வருமான‌ம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும்
இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு
உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.

Posted by Anand at 9:38 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 9 ம் இடம், குரு, சுக்கிரன், லக்கினம்

Sunday, November 13, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-5 ஜோதிடக்குறிப்பு

 ஒரு ஜாதகத்தில் சனியின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6 ல் உள்ள‌கிரகம் தனது புத்தியில் நன்மைகள்
தாரா, அதன் பலன்களாவன.......
1) அதிக நன்மை தராத வேலை, அதிகவேலையால் பளு.
2) பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது
3) எதிரிகளால் தொல்லை
4) சகமனிதர்கள் ஒத்துழையாமை
5) நோய்களால் தொல்லை
6) திருமண முறிவு
7) தொழில் தொடர்புகள் முறிவு
போன்றவை ஏற்படலாம்...

Posted by Anand at 8:04 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 6 ம் இடம், சனி

Friday, November 11, 2011

வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில், 11 ம் இடத்ததிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் கூடி லக்கினாதிபதிக்கு கேந்திரம் பெற வேண்டும்,
அவ்வாறு அமைந்தால் அது வித்யுத் யோகம் எனப்படும்.
      அந்த அமைப்பு உடைய‌ஜாதகர் ஒரு உயந்தமனிதர், அன்பானவர், பண்பானவர், மற்றவர்களுக்கு உதவி
செய்யக்கூடியவர், பெரும் புகழுடையவர், பொருளுடையவர், அரசனுக்கு நிகரானவர்.

Posted by Anand at 8:17 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், 1 ம் இடம், சுக்கிரன், லக்கினம்

Thursday, November 10, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-4 ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குருவின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6 ல் உள்ள‌கிரகம் தனது புத்தியில் நன்மைகள்
தாரா, அதன் பலன்களாவன.......
1) கடவுள் நம்பிக்கை குறையும்
2) ஆன்மீ க எண்ணமே தவறு என்ற முடிவுக்கு வரலாம்
3) தான் என்கிற ஆகங்காரம் தலை தூக்கும்
4) மத நம்பிக்கை குறையும்

Posted by Anand at 7:44 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 6 ம் இடம், குரு

Tuesday, November 8, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3 ல் உள்ள‌கிரகம் தனது புத்தியில் நன்மைகள்
தாரா, அதன் பலன்களாவன.......
      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம்,
மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌பேச்சு, ஓய்வின்மை, கவலை,
நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன்
புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு
வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு
உள்ளாகலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன்
புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌சிந்தனைகள், விபரீதமான
ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை
நடக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன்
புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து
விலகுவர்கள்
ீ அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீ கத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள்
அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீ கத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.

Posted by Anand at 7:17 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 3 ம் இடம், கேது, சனி, புதன், ராகு

Monday, November 7, 2011

எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை


ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்


1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9 ல்(வியாழ நோக்கம் என்று
சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7 ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3 ம்
இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வட்டிற்க்கு
ீ குரு கோச்சார ரீதியாக‌வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம்
நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வட்டை
ீ குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7 ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய
இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்

இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக
இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

Posted by Anand at 7:34 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், 1 ம் இடம், 5 ம் இடம், 7 ம் இடம், 9 ம் இடம், குரு, கேது, சனி, சுக்கிரன், ராகு

Friday, November 4, 2011

சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1 ம் இடம், 2 ம் இடம், 4 ம் இடம், 5 ம்
இடம், 7 ம் இடம், 9 ம் இடம், 10 ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில்
வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும்
நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌திகழ்வார்.

Posted by Anand at 11:28 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 1 ம் இடம், 2 ம் இடம், 4 ம் இடம், 5 ம் இடம், 7 ம் இடம், குரு, சுக்கிரன், புதன்

Thursday, November 3, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சந்திரனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 12 ல் இருக்கும் கிரகம் தனது புத்தியில்
நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) எதிலும் ஒரு குழப்பமான நிலை, சரியாக முடிவெடுக்க முடையாத தன்மை.
2) எதிலும் அதிகமான அலைச்சல்,பெற்றோர்களிடம் இணக்கம் குறைந்து போதல்.
3) எல்லாவற்ரிலும் கவலை, சோர்வு.
4) ஏமாற்றம், நம‌க்குறியவர்கள் கூட நம்மை அரவணைக்கதது போன்ற உணர்வு.
5) எல்லாவற்றிலும் தவறான முடிவு எடுத்து, அதனால் பாதிக்கப்பெறுதல், இதனால் நிம்மதி குழந்து போதல்.

Posted by Anand at 10:27 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், சந்திரன்

Monday, October 31, 2011

ஜெய யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 6 ம் இடத்து அதிபதி நீச்சம் அடைந்து, 10 ம் இடத்து அதிபதி உச்சம் பெற்றால் அந்த யோகத்திற்க்கு
பெயர் ஜெய யோகம் எனப்படும்.
      ஜாதகத்தில் இந்த ஜெயயோகம் உள்ள ஜாதகர், வாழ்க்கையில் நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளுடன், தோல்வி
என்பதே இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வார்.
      அவர் தொடும் காரியமெல்லாம் வெற்றியிலேயே முடியும். கடன் என்பதே இருக்காது, அவருக்கு எதிரிகளே இருக்க
மாட்டார்கள். வாழ்க்கையில் எதிலும் தடை என்பதே இருக்காது. வெற்றி மேல் வெற்றி தான்.

Posted by Anand at 7:01 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 6 ம் இடம்

Friday, October 28, 2011

துர்யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 10 ம் இடத்ததிபன் 6 ம் இடம்,8 ம் இடம் மற்றும் 12 ம் இடத்தில் அமைந்தால் துர்யோகம் எனப்படும்.
1) வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த கடுமையான உழைப்பு தேவைப்படும். ஏனென்றால் ஒருவருக்கு 10 ம்
இடத்ததிபதி பலம் பெற வேண்டும் இல்லாவிட்டால் உழைப்புக்கு தகுந்த ஊதியமும், சரியான திறமைக்கேற்ற
வேலையோ தொழிலோ அமையாது.
2) மற்றவர்களின் பார்வையில் மதிப்பு குறைந்தவராகவே காணப்படுவார். மேலே சொன்னபடி 10 ம் அதிபதியின்
மறைவால், அவர் எந்த சிறந்த விஷயங்களையும் செய்ய மாட்டார்.
3) மிகுந்த சுயநல வாதியாகவும், மற்றவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்பவர்களாகவும் இருப்பர்.
4) இவாறான இவர்களின் குணநலன்க‌ளால் இவர்களின் வாழ்கைக்கே இவர்கள் மிகவும் போராட வேண்டியதிருக்கும்.
5) பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தால் இவர்களுக்கு நன்மை.
6) வேறு எந்த யோகமும் இவர்களின் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், நல்ல கிரகங்கள் வலுக்காதிருந்தால், வேறு
நன்மையான அமைப்புகள் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், இவர்கள் கூலித்தொழிலாளியாக வாழ வேண்டியதிருக்கும்.
7) அவ்வாறு பிரகிரகங்களின் உதவியால் நல்ல நிலையில் ஜாதகர் இருந்தாலும் இவர் நிலைக்கு மற்றவர்களுக்கு(இவர்
நிலையில் உள்ள) கிடைப்பதைக் காட்டிலும் சமுதய மதிப்பு என்பது இவர்களுக்கு மிகக்குறைந்ததாகவே இருக்கும்.
      இதில் 12 ம் இடம் மிகவும் குறைவான பலன்களை வழங்கக்கூடிய இடமாகும். சில இடங்களில் இவர்களுக்கு மதிப்பு
கிடைக்கும்.

Posted by Anand at 9:40 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 12 ம் இடம், 6 ம் இடம், 8 ம் இடம்

திரிலோச்சண யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தால்
அது திரிலோச்சண யோகம் எனப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், ஆயுள் நீளம் உடையவர்களாகவும், நல்ல வசதி
படைத்தவர்களாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவர்.
      இந்த மூன்று கிரகம் மட்டுமல்லாது ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று
அமைந்தாலே அந்த அமைப்பு விசேசமானதே! இவ்வாறு அமைதவர்கள் நல்ல அமைதியான‌வாழ்க்கையை
பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எந்த சக்தியாலும் தடங்கல்கள் விளைவிக்கமுடியாது

Posted by Anand at 12:27 AM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: சந்திரன், சூரியன், செவ்வாய், திரிகோணம்

Wednesday, October 26, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-1 ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சூரியனின் தசை நடக்கும் போது சூரியனுக்கு 6 ல் இருக்கும் கிரகம் தன்னுடைய புக்தியில்
நன்மைகள் தாரா! அதன் புக்தியில் பலன்களாவன‌.......
1) உடல் நலக்குறைவு.
2) தன்னம்பிக்கை குறைந்துபோதல்.
3) பொருளாதாரத்தில் சற்று பின் தங்குதல்.
4) கடவுள் நம்பிக்கை குறைதல்.
5) பொதுவாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள்.
6) நற்பெயருக்கு களங்கங்கள்.
7) தந்தைக்கு உடல்ந‌லக்குறைவு.

Posted by Anand at 11:25 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 6 ம் இடம், சூரியன்

Monday, October 24, 2011

தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு
      12 ம் இடத்ததிபன் லக்கினத்தில் இருந்தாலோ, 12 ம் இடத்ததிபன் கேந்திரத்தில் இருந்து லக்கினாதிபதி பார்வை
பெற்றாலோ, 12 ம் இடத்ததிபன் ஆட்சி/உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்றாலோ, 12 ம் வட்டில்
ீ சுபர் அமர்ந்தாலோ, 12 ம்
வட்டை
ீ சுபர் பார்த்தாலோ, 12 ம் வட்டில்
ீ ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம் அமைந்தாலோ, அந்த ஜாதகர் எந்த மாதிரியான
இடத்தில் படுத்தாலும் உடனே தூங்கிவிடுவர், அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடப்பர்.

Posted by Anand at 9:11 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 1 ம் இடம், லக்கினம்

வியாதியுள்ள கணவன்/மனைவி ஜோதிடக்குறிப்பு

      7 ம் அதிபதி 6 ம் அதிபதி அல்லது 8 ம் அதிபதியுடன் இணைந்து ஜாதகத்தில் ஏதொ ஒரு இடத்தில் அமைந்து சுபர்
பார்வை அல்லது சேர்க்கை இல்லாவிடில் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.
      7 ம் அதிபதி 6 ம் அதிபதியுடனோ அல்லது 8 ம் அதிபதியுடனோ பரிவர்த்தனை பெற்றால் வியாதியுள்ள
கணவன்/மனைவி அமைவர்.

Posted by Anand at 9:01 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 6 ம் இடம், 7 ம் இடம், 8 ம் இடம்

Monday, October 3, 2011

தெய்வபலம் ஜோதிடகுறிப்பு
      ஒரு ஜாதகத்தில் 9 ம் இடத்தில் ச‌ந்திரன், புதன், சுக்கிரன், குரு, கேது போன்ற கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம்
இருந்தால் அந்த ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கையும், அதனால் தெய்வ பலமும் உண்டாகும். குறிப்பாக 9 ல்
சந்திரனிருக்கும் ஜாதகர் தெய்வ பலம் மிகுந்தவராக இருப்பர் அவருக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லா
நேரங்களிலும் தெய்வபலம் துணை புரியும்.

Posted by Anand at 10:08 PM 2 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 9 ம் இடம், குரு, கேது, சந்திரன், சுக்கிரன், புதன்
Monday, September 26, 2011

சுலப அரசியல் செல்வாக்கு ஜோதிடக்குறிப்பு


      10 ம் இடம் மிதுனம் அல்லது கன்னியாகி அங்கு சூரியன், புதன் இனைந்து நின்றால் ஜாதகருக்கு அரசியல்
செல்வாக்கு சுலபமாக கிடைக்கும். அரசியலில் உயரிய பதவிகளை வகிக்க்க முடியும். உதாரணம் பி.வி.ந‌ரசிம்மராவ்
ஜாதகம், இவர் மைனாரிட்டி எம்பிக்களுடன் சிறப்பாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர் என்பது நீங்கள் அறிந்ததே.

Posted by Anand at 7:08 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், கன்னி, சூரியன், புதன், மிதுனம்

Sunday, September 4, 2011

காதல் திருமணம் ஜோதிடக்குறிப்பு


      7 ம் இடத்திற்க்கு ராகு, செவ்வாய் சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்கிறது. அந்த
ராகு, செவ்வாய் சம்பந்தத்துடன், 7 ல் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் திருமணம் பெற்றோர்
சம்மதத்துடன் சிறப்பாக நடக்கிறது

Posted by Anand at 7:39 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 7 ம் இடம், குரு, சந்திரன், செவ்வாய், ராகு

Saturday, September 3, 2011

மேஜிக் எண் 108 ஒரு அலசல் ஜோதிடக்குறிப்பு


      ருத்திராட்ச மாலை அல்லது வேறு எந்த மணி மாலைகளனாலும் 108 மணிகளால் கோர்க்கப்பட்டிருப்பது ஏன் என்று
உங்களுக்கு தெரியுமா?
      நமது இந்திய மண்ணில் தோன்றிய எந்த கலாச்சாரமானாலும் சரி அது இந்து கலாச்சாரமானாலும், புத்த
கலாச்சாரமானாலும் அல்லது ஜெயின் கலாச்சாரமானாலும் அல்லது சீக்கிய கலாச்சாரமானாலும் சரி அவற்றிலும்
இந்த 108 மணிகளே பின்பற்றப் படுகின்றன.
      எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்பார்கள் ஏன்?
      ஏன் ஜப்பானில் கூட ஜென் கோயில்களில் 108 முறை கோயில் மணியை ஒலிக்கச் செய்வார்களாம்.
      நமது முன்னோராகிய சித்தர்கள் கணித வல்லுனர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.
அதாவது 108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும்.
அதாவது கடவுள் தன்மையை குறிக்கும்
      இந்த 108 என்கிற எண் முழுமையை குறிக்கிறது என்பதற்க்கு சில உதாரணங்கள்.......
1) எண் 9 முழுமையை குறிக்கும் எண், எண் 108 ஐ கூட்டினால் 1+8=9 வரும், 108 ம் முழுமையை குறிக்கிறது. அதே
போல் 9 துடன் எந்த எண்னை பெருக்கினாலும் வரும் விடையை கூட்டிப்பார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18. 1+8=9.
285x9=2565 2+5+6+5=18 1+8=9. 8543x9=76887 7+6+8+8+7=36 3+6=9. அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை ஒரு
முழுமையை குறிக்கும் எண்.
2) 9 கிரகங்கள் 12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது 9 x 12 = 108.
3) மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வதம்
ீ மொத்தம் நட்சத்திரங்களுக்கு 108 பாதங்கள் 27 x 4 = 108.
4) வேதகால புத்தகங்களின் படி பிரபஞ்ச‌த்தில் உள்ள கணிமங்களின் எண்ணிக்கை 108. இப்பொழுது இன்னும் சில
கணிமங்கள் உள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
5) கணிததில் 1,2 மற்றும் 3 ஆகிய எண்களின் ஆற்றல் பற்றிய உண்மை எண் 1 க்கு ஆற்றல் 1. எண் 2 க்கு ஆற்றல் 4 (2x2).
எண் மூன்றிர்க்கு ஆற்றல் 27 (3x3x3). இந்த மூன்றையும் (1x4x27) பெருக்கினால் வரும் மொத்த ஆற்றல் 108. இது
தான் பிரபஞ்ச ஆற்றல். எண் 1 ஒரு பரிமான ஆற்றலையும், எண் 2 இரண்டு பரிமான ஆற்றலையும், எண் 3 முப்பரிமான
ஆற்றலையும் குறிக்கிறது.
6) சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு துரம் வருமோ
அவ்வளவு தான்.
7) சூரியனின் விட்டம் சரியாக பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.

Posted by Anand at 8:26 PM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 108, கணிமங்கள், நட்சத்திரம், பிரபஞ்சம், ராசி

Friday, September 2, 2011

வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை ஜோதிடக்குறிப்பு


      லக்கினத்தில் கேது, 7 ல் ராகு, 10 ல் புதன் எனும் அமைப்பு ஆண்களின் ஜாதகத்தில் இருக்குமானால், அவர்களுக்கு
தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மேல் இச்சை ஏற்படுகிறது. அவர்கள் விதவைக்கு வாழ்வளித்தால் வாழ்வு
சுகப்படும்.

Posted by Anand at 8:51 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 1 ம் இடம், 7 ம் இடம், கேது, புதன், ராகு

Sunday, August 28, 2011

மாகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு

      1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.


      2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.
      3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.
      4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.
      5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம்
தேடுபவர்கள்.
      6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.
      7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.
      8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில்
சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.

1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய
காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.
2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய
காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம்
தேடிக்கொள்வர் எப்பொழுதும்.
4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.
5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.
6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
7) புதன் கேது லாபத்தில்(11 ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உத‌வுவதால் புண்ணியம் கூடும்.
8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம்
சேர்க்க உதவும்.
9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு
ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உத‌வும்.
10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வட்டில்
ீ இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க
உதவும் அமைப்பு.
11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது
நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியும்.

Posted by Anand at 7:16 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 1 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், குரு, சந்திரன், சுக்க்ரன், சூரியன், புதன்

Friday, August 26, 2011

சுப-சுக விரயம் ஜோதிட‌க்குறிப்பு

      12 ம் இடத்திற்குரியவர் சுக ஸ்தானமாகிய 4 ம் இடத்தில் நின்றால் ஜாதகருக்கு சுகவிரயம் அதிகமாக இருக்கும்.


      அதே போல் 12 ம் இடத்தில் சுபாவ சுபர்கள் நின்றாலும், 12 ம் இடத்தின் உச்ச அதிபன் 12 ல் நின்றாலும் ஜாதகருக்கு
சுபவிரயம் அதுகமிருக்கும். குடும்பத்தில் நிறைய செலவுகள் ஏற்படும். குடும்பம், உற்றார், உறவினர் என்றால்
உதவத்தான் வேண்டும். ஜாதகர் புலம்பாமல் பரந்த மனப்பான்மையுடன் செலவுகள் செய்தால் சுகப்படலாம்.

Posted by Anand at 9:38 PM 3 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 4 ம் இடம்

Thursday, August 25, 2011

குருசண்டாள‌யோகம் இன்னுமொரு பார்வை


ஜோதிடக்குறிப்பு

      இந்த யோகத்திற்க்கான நிலை


1) ஒரு ஜாதகத்தில் குரு ராகுவுடன் இனைந்து ராகுவினால் குருவின் தன்மை கெடும் நிலை.
2) குரு கேதுவுடன் இனைந்து கெட்ட கிரகத்தால் பார்க்கப்படும் நிலை.
3) 9 ம் இடமும், குருவும் கெட்டுவிடுதல்.
4) 6 ம் இடத்ததிபனுக்கும் 9 ம் இடத்ததிபனுக்கும் சம்பந்தம் ஏற்ப்பட்டு, இதில் யாராவது ஒருவர் பகை நீசம் பெற்றாலும்
அல்ல‌து பாவியாக இருந்தாலும், அல்லது வக்கிரம் பெற்றாலும் அவர்களுடைய சம்பந்தம் இந்த யோகத்தை
ஏற்படுத்தும்.

      இந்த யோகத்தின் பலன்களை குரு, ராகுவின் தசா புத்திகளில் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த யோகம் வாழ்க்கை
முழுதும் ஜாதகரின் வாழ்வில் இருப்பதை காணலாம், இருந்தாலும் குரு, ராகுவின் தசா புத்திகளில் மிகவும் தீவிரமாக
இயங்குவதைப் பார்க்கலாம்.

      குரு சண்டாள‌யோகம் யோகத்தின் பலன்கள்...


1) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் நன்றி உணர்வு என்பதே இருக்காது.
2) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் அவர்களாக முன்னேற மாட்டார்கள், அவர்களுக்கு யாருடைய
உதவியாவது தேவைப்படும், உதவியும் சுலபமாகப் பெறுவார்கள், ஆனால் உதவி செய்தவர்களை முன்னேறிய பிறகு
கைவிட்டு விடுவார்கள். தன் திறமையால் முன்னேறியதாக நினைத்துக் கொள்வார்கள்.
3) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் யாரையுமே உயர்வாக நினைக்க மாட்டார்கள், மாறாக அவர்கள்
செய்வதே சரி என்று இருப்பர், வாழ்க்கையில் குற்றஉணர்ச்சி என்பதே இவர்களுக்கு கிடையாது.
4) அடுத்தவர்களை குறை உள்ளவர்களாகவே பார்ப்பர், குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பர், எதையும்
ஒருகுறுகிய எதிர்மறையான நோக்கோடவே பார்ப்பர்.  மற்றபடி கெட்டவர்கள் என்பதில்லை
5) குரு ராகுவுடன் 5 ம் இடம், 9 ம் இடம், 10 ம் இடம் பாதிக்கப்பட்டிருந்தால் இவர்கள் நாத்திகவாதியாக இருப்பர்.
ஆன்மீ கம் என்றால் வசை
ீ என்ன விலை என்று கேட்ப்பர்.

      இந்த யோகமானதின் பலன்களை ஜாதகரின் காலத்தில் ராகுவின் தசையிலும் அதைத் தொடர்ந்து குருவின்
த‌சையிலும் கண்கூடாக பார்க்கலாம்.மற்ற தசைகளில் குரு ராகுவின் புத்தி, அந்தரங்கங்களில் பார்க்கலாம்.

Posted by Anand at 10:24 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், குரு, கேது, ராகு

Saturday, August 20, 2011

குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு

      ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........


      லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம்
மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும்,
சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை
உண்டாகும்.
      2 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும்,
கீ ழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வண்
ீ பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம்
கொண்டவராகவும் இருப்பர்.
      3 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய
முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
      4 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வட்டு
ீ மனை சேர்க்கை
உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
      5 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம்,
செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது
முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
      6 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான
வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு
பெறுவார்கள்.
      7 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு,
மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
      8 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக
கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வண்
ீ விரயம் செய்பவராகவும் இருப்பர்.
      9 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம்
உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற
பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
      10 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை
இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
      11 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ்,
நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை
கொண்டவராகவும் இருப்பர்.
      12 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வண்
ீ விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும்,
உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை
கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
       இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை
பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

Posted by Anand at 9:12 PM 7 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 11 ம் இடம், 12 ம் இடம், 3 ம் இடம், 5 ம் இடம், 6 ம் இடம், 9 ம் இடம், லக்கினம்

Friday, August 19, 2011

வெளிநாட்டு யோகம் சில அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு

      வெளிநாட்டில் படிப்பத‌ற்காகவும், தொழில் அல்லது வேலை நிமித்தமாகவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் செல்லுவோர்
ஜாதக‌அமைப்பு பற்றி ஒரு சிறு அலசல்.

1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாது, வலுவாக(ஆட்சி, உச்சம், நட்பு, சுபர் பார்வை அல்லது சேர்க்கை)
இருக்க வேண்டும்.

2. குரு, சனி( வாயு கிரகங்கள்), சந்திரன், சுக்கிரன்( நீர் கிரகங்கள்) ஆகியோர் கெடாது நீர் ராசிகளில்(கடகம், விருச்சிகம்,
மீ னம்) அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

3. 9, 12 க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாடு சென்று வரலாம்.

4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆமிடங்கள்(3-9,6-12,5-11,1-7 என அமர்ந்திருப்பது) நின்றாலும்


வெளிநாட்டு யோகம் அமையும்

Posted by Anand at 8:08 PM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 9 ம் இடம், குரு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், ராகு

லாபதிபதி யார்? ஜோதிடக்குறிப்பு


      சரலக்கினகாரர்களுக்கு(மேஷம், கடகம், துலாம், மகரம்) லாபாதிபதியாகிரவர் பாதகாதிபதியாவதால் நன்மைகளை
செய்வதில்லை. பாதகாதிபதி எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் பெரும் நன்மைகளை செய்வதில்லை.
      மற்ற லக்கினகாரர்களுக்கு.......
      ரிஷப லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி குரு அவர் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு பகை, குருவுக்கு மற்றொரு
அதிபத்தியம் 8 ம் இடம் ஆதலால் அவருடைய திசா புத்தி காலங்களில் நன்மைகள் கிடைப்பதில்லை.
      மிதுன லக்கினகாரகளுக்கு லாபாதிபதி செவ்வாய் லக்கினாதிபதி புதனுடன் பகை, செவ்வய்க்கு மற்றொரு
ஆதிபத்தியம் 6 ம் இடம் ஆதலால் நன்மைகள் செவ்வாயும் தனது திசா புத்தி காலங்களில் அளிப்பத்ற்கில்லை.
      சிம்ம லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி புதன் லக்கினாதிபதி சூரியனுடன் நட்பு அதலால் மற்ற லக்கினகாரர்களை
விட இந்த லக்கினத்திற்க்கு மட்டும் பலன் பரவாயில்லாமல் இருக்கும்.
      கன்னியா லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சந்திரன் இவரும் அமர்ந்த இடத்தைப்பொறுத்து சாமன்ய பலன்களை
அளிப்பார். ஆனாலும் லக்கினதிபதியுடன் அவ்வளவாக சுமூகமான உறவு இல்லை என்பதால் பரவாயிலாமல் பலன்கள்
கிடைக்கும்.
      அதே போல் துலாலக்கினகாரர்களுக்கும் ஒரே அத்பத்தியம் உள்ள சூரியன் லாபாதிபதியானாலும், லாபதிபதியே
பாதகாதிபயாவதாலும், லக்கினாதிபதி சுக்கிரனுக்கு சூரியன் நல்லவனல்ல என்பதாலும் பெரும்பாலும் துலாலக்கின
காரர்களுக்கு சூரியனின் காரகங்கள் கிடைப்பதில்லை. மூத்த சகோதரர்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும்
அவர்களால் குடும்பத்திற்க்கு பிரயோஜனம் இருக்காது. த‌ந்தை மகனின் பாசங்கள் காரணத்திற்க்கு உட்பட்டே இருக்கும்,
காரணம் முடிந்தவுடன் பாசமிருக்காது. ஆதலால் இவர்களுக்கு சூரியன் நன்மையை செய்வான் என்று
நம்புவதற்கில்லை.
      விருச்சிக லக்கினகாரர்களுக்கு புதன் அஷ்டமலாபாதிபதியாகிரார். லக்கினாதிபதி செவ்வாயுடன் பகை ஆத்லால்
இவர்களுக்கும் லாபாதிபதியால் நன்மையில்லை.
      த‌னுசு லக்கினகாரர்களுக்கும் லாபதிபதி சுக்கிரன் ஆறாம் ஆதிபத்தியம் வருவதாலும், லக்கினாதிபதியுடன்
சுமூகமான நிலையில்லாததாலும் சுக்கிரன் தனது திசா புத்திகாலங்களில் நன்மைகள் செய்வார் என்பத‌ற்கில்லை.
      கும்ப லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி குரு லக்கினாதிபதி சனியுடன்  பெருத்த பகையில்லை, ஆகையால்
பரவயில்லாத் பலன்களை அளிப்பார்.
      மீ ன லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சனி விரயாதிபதியும் ஆவதால் லாபம் நிஷ்பலம் ஆகும். ஆனால்
பயப்படுவதிற்க்கு ஒன்றும் இல்லை.
      மொத்தத்தில் லாபாதிபதியால் எந்த லாபமும் இல்லை. எதனால் என்றால்...
லக்கினத்திக்கு மூன்றுக்குடையவன் ஒரு பாபி,

லக்கினத்திற்க்கு ஆறாமிடத்திர்குறியவன் மூன்றாம் இடத்ததிபனை விட பாபி,

ஆறுக்கு ஆறாம் இடத்ததிபன் 11 ம் இடத்திற்குறியவன் இவர்கள் இருவரையும் விட பாபி.

ஆதலால் 11 ம் இடத்ததிபனை லாபாதிபன் என்று எப்படி சொல்லுவது?

Posted by Anand at 12:43 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், கன்னி, கும்பம், சிம்மம், தனுசு, மிதுனம், மீ னம், ரிஷபம், விருச்சிகம்

Thursday, August 11, 2011

சுயமுன்னேற்றம் ஜோதிக்குறிப்பு
      சந்திரனுக்கு இரண்டில், சூரியன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்கள் நிற்பது சுனபா யோகமாகும் பதவி, புகழ்
அந்தஸ்த்து அனைத்தும் கிடைக்கும். அதிலும் குரு நிற்பது விசேஷ‌சுனபா யோகமாகும். ஜாதகர் தனது சுய
முயற்சியினால் பதவி தனலாபம் அடைவார்.

Posted by Anand at 9:32 PM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 2 ம் இடம், குரு, கேது, சந்திரன், சூரியன், ராகு

Tuesday, August 9, 2011

தலைக்கன‌ம் ஜோதிடக்குறிப்பு
      ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கையால் ஏற்படும் யோகத்திற்க்கு பெயர் குருமங்கள யோகம். இந்த
யோகம் உடையவர்களுக்கு பதவி, புகழ்,பெரும் செல்வம் கிடைக்கும். ஆனால் இவர்களிடம் மிகுந்த கர்வம் மற்றும்
பிறரை மதியாமை போன்ற‌குணங்கள் இருக்கும்

Posted by Anand at 1:21 AM 3 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: குரு, செவ்வாய்

Sunday, August 7, 2011

குறைகூறும் மனைவி யாருக்கு? ஜோதிடக்குறிப்பு

      ஆண்களின் ஜாதகத்தில் 7 ம் இடத்ததிபன் மிதுனம்/கன்னியில் கெட்டு நிற்க அல்லது 7 அதிபன் புதனாக இருந்து
பகை நீசம் பெற்றோ அல்லது பாவிகளுடன் இனைந்தோ கெட்டு நின்றால்,
      அவர்களுக்கு வாய்த்த மனைவி வாயாடிகளாகவும், வெட்டிப் பேச்சு பேசுபவர்களாகவும், கணவன் ஒன்றுக்கும்
உதவாதவன் என்று சொல்லிக்கொண்டு கண‌வனை வார்த்தைகளால் வறுத்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்து தின்று
கொண்டு இருக்கிறவர்களாகவும்.
       எனக்கு வட்டு
ீ வேலையே சரியாக இருக்கிறது, நான் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்
உடையவர்களாகவும். அந்த வட்டு
ீ வேலையையும் சரிவர செய்யாமல் பேச்சு செயல் அனைத்திலும் பதட்டம் கொண்டு
செயல் படுபவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு சந்தோசம் இல்லை நீயும் சந்தோசமாக இருக்ககூடாது என்று
செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.
      இவர்கள் முழுக்க முழுக்க கணவனை குறைகூறிக்கொண்டு இருந்தாலும், இவர்களை சமூகம் மற்றும் குழந்தைகள்
நலன் கருதி இந்த ஜாதகர்கள் சகித்துக் கொண்டு வாழ்பவர்களாக இருப்பதைப்பார்க்க முடிகிறது. இந்த ஜாதகர்களின்
வாழ்க்கை தாமரை இலை தண்ணிர் போல் அமையும் வாழ்க்கை என்று குறிப்பிடலாம் அல்லவா?

Posted by Anand at 10:48 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 7 ம் இடம், கன்னி, புதன், மிதுனம்

Sunday, July 31, 2011

நிம்மதி யோகம் ஜோதிடக்குறிப்பு

1) ஜாதகத்தில் குருசந்திர யோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம் ஆகியவற்றில் ஒன்றாவது இருக்க
வேண்டும். அவ்வாறு இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
2) 2,12 ம் இடங்களில் சுபர்கள் இருந்தால் நிம்மதி மிகவும் நன்றாக இருக்கும்.
3) 2,12 ம் இடங்களில் பாபர்கள் இருந்தாலும் சுபர் பார்வை இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியால் உருவாக்கி கொள்ள
முடியும்.
4) லக்கினத்தை பாபிகள் பார்க்காது, சுபர் பார்வை இருந்தால் நிம்மதி நிறைவு நன்றாக இருக்கும். குறிப்பாக குருவின்
பார்வை லக்கினத்துக்கு கிடைத்தால் மிக நிம்மதியாக, மரியாதை மிக்க வாழ்க்கை வாழமுடியும்.

Posted by Anand at 7:27 PM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 1 ம் இடம், 2 ம் இடம், குரு, சந்திரன், லக்கினம்

Saturday, July 30, 2011

கணக்கில் புலி ஜோதிடக்குறிப்பு


      ஜாதகத்தில் குருவும், புதனும் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு கணிதத்தில் திறமை அபாரமாக இருக்கும்.
கஷ்டமான கணக்குகளைக் கூட மனக்கணக்காகவே போட்டுவிடுவர். அதிலும் குருவும் புதனும் உச்சம் பெற்றிருந்தால்
அபாரமாக இருக்கும். அவர்களை கணக்கில் புலி என்று சொல்லுவர். கணக்கில் நூற்றுக்குநூறு வாங்கும் குழந்தைகளின்
ஜாத‌கத்தில் இந்த அமைப்பு இருப்பதைக் காண முடிகிற‌து

Posted by Anand at 10:54 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: குரு, புதன்

Friday, July 29, 2011

கம்பீர யோகம் ஜோதிடக்குறிப்பு


      சந்திரனுக்கு 12 ல் சூரியன் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும். அதிலும் சந்திரனுக்கு 12 ல் குரு
இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக கம்பீரமாக காட்சி தருவார். தொழிலில் சாதனைகள் புரிவார். அரசாங்க பரிசுகளும்,
பாராட்டுகளும் இவருக்கு கிடைக்கும்

Posted by Anand at 7:08 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், குரு, சந்திரன், சூரியன்

பானு யோகம் ஜோதிடக்குறிப்பு

      1 ம் இடம், 4 ம் இடம், 5 ம் இடம், 7 ம் இடம், 9 ம் இடம், 10 ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும்
வற்றிருக்க
ீ அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்
      இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள்
நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

Posted by Anand at 4:18 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 1 ம் இடம், 4 ம் இடம், 5 ம் இடம், 7 ம் இடம், 9 ம் இடம்


Thursday, July 28, 2011

வாழ்க்கைச்சிறை ஜோதிடக்குறிப்பு
      ராகுவோ கேதுவோ லக்கினேசனுடன் சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் இருப்பது யோகமான அமைப்பு,
உயர்வு தரும். ஆனால் இந்த அமைப்புக்கு 6 ம் வட்டோனின்
ீ சம்பந்தம் ஏற்படுமாயின் ஜாதகருக்கு வாழ்க்கை
சிறைவாசம் போல் தெரியும். வயது கூடக்கூட குடும்பப்பற்று மறைந்து, துறவு மனப்பான்மை ஏற்ப்படும். ஆனால்
குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையினை சிறையில் இருப்பது போல் கருதி
வாழ்க்கையினை ஓட்ட வேண்டியிருக்கும்.

Posted by Anand at 8:33 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 6 ம் இடம், கேது, ராகு

உள்ளங்கவர் கள்வன் ஜோதிடக்குறிப்பு

      சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் ராகு இருந்து, அவரை பாவிகள் பார்க்கும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், ஜாதகர்
வெளிப்பார்வைக்கு பரம யோக்கியவானாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும்
உரியவர்களாக இருப்பர். ஆனால் உள்ளே முழுவதும் கள்ளத்தனமானவர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருப்பர்.
பேச்சும் செயலும் நல்லது செய்வது போல் இருக்கும், ஆனால் இவர்களை நம்பினவர்களை சீர்குலைக்கும் போக்கு
இவர்களது செயல்களில் மறைந்திருக்கும். பிசினஸ் பார்ட்னர்களை ஏமாற்றிக் கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பர்.
      இதே போல் சுகஸ்தானத்தில் மற்ற பாபகிரகங்கள் இருந்து பாபகிரகங்கள் பார்த்தாலும் இதே நிலை தான், அதாவது
ஜாதகர் ஒழுக்ககுறைவானவராக மிகுந்த கள்ளம் நிறைந்தவராக இருப்பார்.

Posted by Anand at 8:15 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 4 ம் இடம், ராகு

கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு

      பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும்
யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12 ஆம் வட்டில்
ீ சனியும், 2 வது
வட்டில்
ீ செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

      இவ்விச‌யத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6 ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில்


கொள்ள வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6 க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே
இருக்கும். உதாரணமாக மீ ன லக்னத்திற்கு அதிபதி குரு; 6 ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6 ஆம் அதிபதி
சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின்
தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின்
நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்

Posted by Anand at 3:19 AM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 6 ம் இடம், குரு, சனி, சூரியன், செவ்வாய், மகர லக்கினம், மீ ன லக்கினம்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான


ராஜயோக அமைப்பு 3

 தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன் நல்லவர்கள் இவர்களில் இருவர் ஆட்சி உச்ச
பலத்துடன் நின்றாலே போது முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்படுமால் முதல் நிலை
ராஜயோகம் அமையும்.

      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் நல்லவர்கள். செவ்வாய் சுக்கிரனால்


தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்பட்டாலும். அல்லது மூன்று நாயகர்களில் ஜாதகத்தில் ஏதேனும் இருவருக்கு சுபத்துவ
சம்பந்தம் ஏற்ப்பட்டாலும் முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.

      மீ ன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி குரு, பாக்கியாதிபதி செவ்வாய் ஆகிய இருவரால்,


தருமகருமாதிபதி யோகமோ, அல்லது குருமங்கள யோகமோ, 5 ம் அதிபதி சந்திரனால், குரு சந்திரயோகமோ,
சந்திரமங்கள யோகமோ ஏற்ப்பட்டால் முதல் நிலை ராஜயோகத்தினை பூரணமாக அனுபவிக்கலாம்.

Posted by Anand at 1:00 AM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கும்ப லக்கினம், தனுசு லக்கினம், மகர லக்கினம், மீ ன லக்கினம்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான‌


ராஜயோக அமைப்பு 2

      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் சுபர்கள், இவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில்
இனைந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம், திரிகோணம் பெற்றாலோ முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.
லக்கினத்தில் குரு, 4 ல் செவ்வாய் எனும் அமைப்பு சிறப்பான யோகபலனைத் தரும்.

      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். 1,2 ம் இடங்களில் அல்லது 9,10 ம் இடங்களில்
புதன் சுக்கிரன் இனைந்து நிற்ப்பது, 2, 9 ல் சுக்கிரன் மட்டும் தனித்து நின்றாலும் முதல் நிலை ராஜயோகம் சிறக்கும்.

      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,5 க்குடைய சனி நல்லவர். 9, 10 க்குடைய புதனும், சுக்கிரனும் நல்லது
செய்வர், ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று, புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் முதல்
நிலை ராஜயோகத்தினை சிறப்பாக அனுபவிப்பார்.

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் மிக
நல்லதைச் செய்வர். இவர்களுக்கு தர்மகருமாதிபதி யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள
யோகம் இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலே ஜாதகர் சிறப்பான பலன்களை அனுபவிப்பார். சூரியன் சந்திரன் 9,10 ல்
ஆட்சி அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9 ல் சந்திரன் அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9 ல் குரு மிகச்சிறப்பைத் தரும்.

Posted by Anand at 12:58 AM 1 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கன்னி லக்கினம், சிம்மம் லக்கினம், துலாம் லக்கினம், விருச்சிக லக்கினம்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான


ராஜயோக அமைப்பு 1

      முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........


நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான
வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான‌வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான
ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல்


நிலை ராஜயோகத்தினைத்தரும்.
9,10 ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4 ல் குரு லக்கினத்தில் அல்லது 10 ல் செவ்வாய் இருப்பது சிறப்பான
அமைப்பாகும்

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10 ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6 ல் சனி உச்சம்
லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5 ல் அல்லது 10 ல் இருப்பது முதல் நிலை ராஜ
யோகத்தினைத் தரும்.

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள்
ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம்
இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5 ல் செவ்வாய், 9 ல் குரு மிகவும்
சிறப்பைத்தரும்

Posted by Anand at 12:23 AM 2 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கடக லக்கினம், மிதுன லக்கினம், மேஷ லக்கினம், ரிஷப லக்கினம்

Tuesday, July 26, 2011

12 ம் இடம் ஜோதிட‌க்குறிப்பு

      12 ஆம் இடம் நித்திரைக்கான இடம். 1, 2 என்று 12 வடுகள்


ீ இருக்கிறது. 1 லக்னம், உடல், தோற்றம்
இதெல்லாம் அடங்கும். 2 ஆம் இடம் வாஸ்து, குடும்பம் என்று சொல்கிறோம். இதுபோல 12 ஆம் இடம்
சயனத்தானம். இந்த சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். 
      சயனத் தானத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இந்த மாதிரியான கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு
ஆழ்ந்த உறக்கம் இருக்காது. கோழித் தூக்கம் என்று சொல்வார்களே அந்த மாதிரியான அமைப்புகள் இருக்கும்.
இதை ஜாதக அமைப்பை வைத்து கண்டுபிடிக்கலாம். 
      இவர்கள் சரியாக உறங்குவார்களா, நிம்மதியா உறங்க முடியாதா? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம்.
அதனால், இந்த 12 ஆம் இடமான சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால் அவர்கள்
ஆழ்ந்த நித்திரை கொள்வார்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். 
      பொதுவாக சந்திரன் உடலிற்குரிய கிரகம். இந்த சந்திரன் சனி, ராகு மாதிரியான கிரகங்களுடன்
சேர்ந்திருந்தால் நிம்மதியான தூக்கம் வரவே வராது. சந்திரன் சனி, ராகுவுடன் சேர்ந்திருந்தால் சிறு வயதில்
ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இதை நடுநடுவில் நினைத்து நினைத்து தூக்கம் கெட்டுப்போய்
பரிதவிப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புகளும் உண்டு. 
      இதேபோல பார்த்தீர்களென்றால், 12 இல் செவ்வாய், 6 க்குரிய கிரகங்கள் இருந்தாலும் ஏதேனும் கெட்ட
கனவுகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கும். 12 இல் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் தரையில் படுத்து உறங்குதல்,
சரியான படுக்கை இல்லாமல் போவது, காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து உறங்குதல், உட்கார்ந்த
நிலையில் தூங்குதல் இந்த மாதியான பாதிப்புகளும் உண்டாகும். 
      அதனால் இந்த சயனத்தானமான 12 ஆம் இடம் மிகவும் முக்கியமான இடம். இந்த 12 ஆம் இடத்தில் நல்ல
கிரகங்கள் இருந்தால்(குரு,சுக்கிரன்ம, புதன்), “படுத்தால் தூக்கம் வருதுங்க, ஒன்றும் பிரச்சனை இல்லைங்க,
நிறைய பேர் கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தூக்கம் இல்லாம தவிக்கிறார்கள். அந்தப் பிரச்சனை எனக்கு
இல்லைங்க” என்பார்கள்.

Posted by Anand at 7:59 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், குரு, கேது, சந்திரன், சனி, செவ்வாய், ராகு

Monday, July 25, 2011

7 ல் நீ ச்ச கிரகம்? ஜோதிடக்குறிப்பு

      பொதுவாகவே 7 ஆம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீச்சம் பெற்றிருந்தால் அந்த
ஜாதகருக்கு எதிலுமே மனத்திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
      ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் எந்த கிரகம் நீச்சமடைந்தாலும், ஏதாவது ஒரு வகையில்
வாழ்க்கைத் துணை மனதிற்கு பிடிக்காமல் போகும். ஆனால் உண்மையிலேயே அந்த பெண்/ஆண் சிறப்பான
குணநலன்களையும், அழகையும் பெற்றிருப்பர். இவரது மனதிற்கு அப்படித் தோன்றும் நிலை காணப்படும்.
      தனக்குப் பார்த்த பெண் சிறப்பாக படித்திருந்தாலும், குறிப்பிட்ட கல்லூரியில் படித்திருந்தால் சிறப்பாக இருக்குமே
என்று அந்த ஜாதகர் கருதுவார். இதன் காரணமாகவும் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்படும். 7 இல் நீச்ச கிரகம்
இருப்பதும் இதனை உணர்த்துவதற்காகவே.
      எனவே, 7 இல் நீச்ச கிரகம் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு (படிப்பு/பொருளாதாரம்) குறைந்த இடத்தில் குணத்தில்
உயர்ந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
      பொதுவாகவே 7 ஆம் இடத்தில் நீச்ச கிரகம் இருப்பவர்கள் மனதளவில் திருப்தியடைய முயல வேண்டும்.
வாழ்க்கைத் துணை வசதி குறைவாக இருந்தாலும் நல்ல ஒழுக்கமான, படித்த ஆண்/பெண் ஆக இருந்தால் உடனே
திருமணத்தை முடித்துவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.

Posted by Anand at 6:23 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 7 ம் இடம்

குரு சந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு

      குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும். குருவும் சந்திரனும் எந்த
வட்டில்
ீ (மேஷம் முதல் மீ னம் வரை) இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது,
நீண்ட ஆயுள், சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பர்.
மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.
      சந்திரன் ஆட்சி பெறுவதாலும், குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள்
மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும்,
மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      அதே குருசந்திர யோகம் மீ னத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். ரிஷபத்தில் குருசந்திர யோகம்
இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.
      பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள். எந்தத் துறையில்
இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

Posted by Anand at 6:08 PM 3 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கடகம், குரு, சந்திரன், மீ னம், ரிஷபம்

Sunday, July 24, 2011

7 ம் இடத்தில் சனி? ஜோதிடக்குறிப்பு

      பொதுவாகவே ஏழாவது வட்டில்


ீ சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது. அதே
நேரத்தில் எந்த லக்னத்திற்கு 7 ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
      உதாரணமாக ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 7 வது வடு
ீ விருச்சிகமாகும். ரிஷபத்தில் விசாகம்,
அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7 ல் இருப்பது நல்ல
பலன்களைத் தரும்.
      ஏனென்றால் அனுஷம் சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். இதன்
காரணமாக அனுஷ நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி 7 இல் இருந்தால் அதிகம் படித்த,
தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.
      இதேபோல் மிதுனம், கன்னி ஆகிய லக்னத்திற்கும் 7 இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும். கடகம்,
சிம்ம லக்னத்திற்கு 7 இல் சனி இருப்பது (சொந்த வட்டில்
ீ உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.
      ஆனால் மேஷ லக்னத்திற்கு 7 இல் சனி இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும்.
வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது
போன்றவை ஏற்படும்.
      பொதுவாக 7 இல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத்
துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.
      எந்த லக்னமாக இருந்தாலும் 7 இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது.
குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      ஒருவருக்கு 7 இல் சனியுடன், குரு, புதன் போன்ற சில சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பலன்கள்
வேறுபடுமா? 7 ல் சனி இருந்து அதனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு
பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள்
ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர்.

Posted by Anand at 7:09 PM 2 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 7 ம் இடம், கடகம், குரு, சனி, சிம்மம், புதன், மிதுனம், மேஷம், ரிஷபம்
குரு சனி தொழில் சூட்சுமம் ஜோதிடக்குறிப்பு

      லக்னாதிபதி 6, 8, 12 ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்து கொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள்
கூடாது.
      சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய
செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம்
மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10 ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10 ஆம் இடத்தை சனி
பார்த்தாலோ, 10 க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும்
தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே
இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.

Posted by Anand at 1:00 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 6 ம் இடம், 8 ம் இடம், குரு, சனி, லக்கினம்

Saturday, July 23, 2011

8 ம் வட்டில்
ீ கிரகங்கள் அமர்வ‌தால் பலன் ஜோதிடக்குறிப்பு

      பொதுவாக 8 வது வட்டில்


ீ சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன்
சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
      ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8 ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால்
அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8 இல் உள்ள கிரகம் 2 ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி
கடாட்சம் உண்டாகும்.
      எனவே, 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை,
பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள்
கிடைக்கும்.
      சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும்,
நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8 ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது.
ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8 இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
      உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8 இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக்
கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8 க்கு உரியவர் குரு. அவர் 8 இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும்.
இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

Posted by Anand at 9:20 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 8 ம் வடு
ீ , குரு, சனி, சுக்கிரன், சூரியன், புதன், மேஷம், லக்கினம்

Friday, July 22, 2011

கண்களில் கோளாறு? ஜோதிடக்குறிப்பு

      ஒருவருடைய ஜாதகத்தில் 2 ம் வடு,


ீ 12 ம் வடு
ீ ஆகிய வடுகளை
ீ வைத்து கண்களில் கோளாறு, நோய்
போன்றவற்றை கணிக்க வேண்டும். 2 ம் வடு
ீ வாலது கண்ணையும், 12 ம் வடு
ீ இடது கண்ணையும் குறிக்கும்.
கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க
வேண்டும்.
      ஒருவருடைய ஜாதகத்தில் 2 ம் வட்டுக்கதிபதி
ீ 6,8,12 ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று
காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள்,
6,8,12 ம் வட்டுக்கதிபதிகள்
ீ 2 ம் வட்டில்
ீ இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்.
      ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே
போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவனம்
ீ அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை
போன்றவை ஏற்படும், அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12 ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண்
போன்றவை ஏற்ப்படும்

Posted by Anand at 7:09 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 2 ம் இடம், 6 ம் இடம், 8 ம் இடம், சந்திரன், சுக்கிரன், சூரியன்

லக்கினப்படி கோடீஸ்வர யோகம் 2

7) துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் சிறந்து விளங்கினாலே கோடீஸ்வரர் ஆக முடியும்.


8) விருச்சிக‌லக்கினத்தில் உதித்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரிய சந்திரர்கள் பிராகாசிப்பதைப் பொறுத்து
கோடீஸ்வர யோகம் அமையும். குரு பலம் மற்றும் குரு பார்வை அதில் விசேட சிறப்பைத்தரும்
9) தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 2 ம் இடம், 4 ம் இடம், 10 ம் இடம் மற்றும் 11 ம் இடம் ஆகியவற்றில் இரு
இடங்களாவது குரு பார்வை பெறுவது மற்றும் சூரியன் புதன் குரு பார்வை பெற்று சிற‌ப்பான இடங்களில் இருந்தால்
கோடீஸ்வரர் ஆக முடியும்.
10) மகர‌லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் யோகம்
அமையும்.
11) கும்ப‌லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் சிறந்து விளங்குவதை பொறுத்து கோடீஸ்வரர்
யோகம் ஏற்படும்.
12) மீ ன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்ல விதமாக அமைந்து, நல்ல
இடங்களைப் பார்ப்பது மற்றும் செவ்வாய் பலத்தினால் கோடீஸ்வர யோகம் அமையும்.

Posted by Anand at 6:00 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கும்பம், குரு, செவ்வாய், தனுசு, துலாம், மகரம், மீ னம், லக்கினம், விருச்சிகம்

லக்கினப்படி கோடீஸ்வரயோகம் அமையும் வாய்ப்பு1

1) மேஷ லக்கினதில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஜாதகத்தில் பிரகாசித்தால் கோடீஸ்வர யோகம்
ஏற்படும்.
2) ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு  சனி நட்பு நிலையில் நல்லவர்கள் சம்பந்தம் பெற்றிருந்தால் கோடீஸ்வரர்
ஆகலாம்.
3) மிதுன லக்கினத்தில் உதிதவர்களுக்கு புதன், சுக்கிரன் ஜாதகத்தில் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
4) கடக லக்கினத்தில் குரு, செவ்வாய் பலம் கோடீஸ்வர யோகம் பெற உதவும்.
5) சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர்களது சுபத்துவ சம்பந்தம்
கோடீஸ்வரர் ஆக உதவும்.
6) கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் உச்சம், சுக்கிரனின் சுபத்துவ சம்பந்தம் பெற்று வலுவுடன்
விளங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

Posted by Anand at 5:14 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கடக‌ம், கன்னி, சிம்மம், மிதுன‌ம், மேஷம், ரிஷப‌ம், லக்கினம்

உச்ச புத‌னும் நீ ச்ச சுக்கிரனும்

      கன்னி வட்டில்
ீ புதன் உச்சம், சுக்கிரன் நீச்சம் இந்த அமைப்பினால் ஜாதகருக்கு ஏற்படும் பலன்களாவன.....
      பெண்களால் உருவாகும் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக சமாளிக்க முடியும். ஜாதகருக்கு குடும்பப் பற்று
பாசம் சிறப்பாக இருக்கும். நெறிதவர மாட்டார். உச்ச,நீச்ச சுக்கிரனால் வரும் சர்க்கரை வியாதி வராது.
பெண்களுடனான தவறான தொடர்புகள் இருக்காது. அப்படியே வேறு கிரக சூழ்நிலைகளால் ஏற்ப்பட்டால் பெயர்
கெடாமலும், பொருள் இழப்புகளும் இருக்காது.புத்தி சாதுர்யத்தினை நேர் வழியில் பயன்படுத்துவர்.

Posted by Anand at 1:00 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கன்னி, சுக்கிரன், புதன்

Wednesday, July 20, 2011

பர்வத யோகம் ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்தில் பர்வதயோகத்திற்க்கான அமைப்புகள் பின் வருமாறு....
1) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10 ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8 ம்
இடங்களில் எந்த கிரகமும் அமராமல் இருக்க வேண்டும்.
                              அல்லது
2) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10 ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8 ம்
இடங்களில் சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது அமரவேண்டும்.
                              அல்லது
3) லக்கினாதிபதியும், 12 ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று அமைய வேண்டும்.
      இந்த அமைப்பு பெற்றவர்கள் நல்ல வசதியான வாழ்க்கையும், எதிரிகள் இல்லாத்வர்களாகவும், ஒரு குறிப்பிட்ட
அளவிற்காகவாவது பிரபலமானவர்களாகவும் இருப்பர். ஜாதகத்தில் மற்ற யோக நிலைகளைப் பொறுத்து இந்த பர்வத
யோகம் இன்னும் பலப்படும்.

Posted by Anand at 6:46 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 இடம், 12 ம் இடம், 1 ம் இடம், 4 ம் இடம், 6 ம் இடம், 7 ம் இடம், 8 ம் இடம், லக்கினம்

Tuesday, July 19, 2011

சில கோடீஸ்வர யோகங்கள்‍ஜோதிடக்குறிப்பு


1) ஒரு ஜாதகத்தில் 4,7,12 க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2 ல் சுக்கிரன், 7 ல் சந்திரன் எனும் அமைப்பு
ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும்.
2) ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும்
வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும்.
3) லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால்
கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால்
ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும்.

Posted by Anand at 8:07 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 2 ம் இடம், 4 ம் இடம், 7 ம் இடம், 9 ம் இடம், குரு, சந்திரன், சுக்கிரன்

Monday, July 18, 2011

ராகு கேதுவால் யோகம் ஜோதிடக்குறிப்பு

      ராகு, கேதுக்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்று நிற்க அவர்களுக்கு 9 ல் சுபாவ சுபர்கள் ஆட்சி, உச்சம், நட்பு என்னும்
நிலையில் இருப்பது கோடீஸ்வர யோகத்தில் ஒரு வகை.
அ) விருச்சிகத்தில் கேது, கடகத்தில் சந்திரன் அல்லது குரு நிற்பதால் இந்த யோகம் அமையும். கடகத்தில் குரு நிற்பது
பிரபல யோகமாகும்.
ஆ) ரிஷபத்தில் ராகு, மகரத்தில் சுக்கிரன் நட்பு நிலையில் அல்லது குரு நீசம் பெற்று பங்கம் ஏற்பட்டு நின்றாலும் இந்த
அமைப்பு பிரபல யோகமாகும்.
இ) கும்பத்தில் கேது நிற்க, துலாத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் நின்றாலும் இந்த யோகம் உண்டு.
      பராசர ஹோரையில் ரிஷபத்தில் ராகு உச்சம் எனவும், விருச்சிகத்தில் கேது உச்சம் எனவும், கும்பத்தில் ஆட்சி
எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த இடங்களில் ராகு, கேதுக்கள் மிகுந்த பலம் பெறுவர். நன்மைகள் செய்வர்
என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Posted by Anand at 7:31 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 9 ம் இடம், கும்பம், குரு, கேது, சந்திரன், சுக்கிரன், ராகு, ரிஷபம், விருச்சிகம்

Sunday, July 17, 2011

அஷ்டலட்சுமி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6 ல் ராகுவும், குரு கேந்திரம்(1, 4, 7, 10 ல்) பெற்று அமைந்தால் அந்த அமைப்பு
அஷ்டலட்சுமி யோகம் எனப்படுகிறது.
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மிக எளிதாக நல்ல நிலையை அடைந்துவிடுவர். மற்ற கிரகங்கள் நல்ல
முறையில் அமைந்திருந்தால் இவர்கள் கோடீஸ்வரர்களாக, சாதனையாளராக‌பிரகாசிக்க‌முடியும்

Posted by Anand at 7:21 PM 4 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 1 ம் இடம், 4 ம் இடம், 6 ம் இடம், 7 ம் இடம், குரு, ராகு


Saturday, July 16, 2011

உச்ச சூரியனும் நீ ச சனியும் ஜோதிடக்குறிப்பு


      மேஷத்தில் சூரியன் உச்சம், சனி நீசம் என்ற அமைப்பில் இருவரும் இனைந்து நிற்பது சிறப்பானது என்று சொல்ல
முடியாது. ஜாதகர் அதிகாரப் பதவிகளில் தூங்கி வழிந்து கொண்டு இருப்பார் என சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள்
அதிகாரப்பதவிகளை வகிக்கலாம் ஆனால் சோபிக்க முடியாது என்பது பல ஜோதிடர்களின் கருத்து.
      அனுபவத்தில் பார்க்கும் போது இவர்களைத் திட்டிக்கொண்டே இவரது வேலைகளை கீ ழே வேலை செய்பவர்கள்
செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சம்பளம் மட்டும் சரியாக கண‌க்குப் பார்த்து வாங்கிக்கொண்டிருப்பர்.இவர்கள்
தவறான வழிகளில் சம்பாதிப்ப‌திலும் ஆர்வம் காட்டுவர்

Posted by Anand at 7:24 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: சனி, சூரியன், மேஷம்

அமலா யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10 ம் வட்டில்
ீ சுபகிரகம் அமைந்திருந்தால் அந்த
அமைப்பிற்க்கு அமலா யோகம் எனப்படும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தையும், பெரும் புகழையும், எல்லா சுகங்களும்
பெற்றவராவார்.
      லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10 ம் இடத்தில் சுபகிரகம் அமைந்தால் அமலா யோகம் ஏற்படும்.
ஆனால் ஏதோ ஒரு கிரகம் (பாபகிரகமானலும்) 10 ல் அமைந்த கிரகத்தின் தசா புத்தியில் நல்ல செல்வ வளத்தைத்
தரும். பாபகிரகமானால் செல்வம் வரும் வழி வேண்டுமானால் மாறுபடும் நல்வழியில் வராது.

Posted by Anand at 4:18 AM 6 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், சந்திரன், லக்கினம்

அதியோகம் ஜோதிடக்குறிப்பு
      ஒரு ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் போன்ற‌சுபகிரகங்கள் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 6,7 மற்றும்
8 ல் அமைந்தால் அந்த அமைப்பிற்கு அதியோகம் என்று பெயர்.
      அதியோக அமைப்பு பெற்றவர்கள் மிகவும் அமைதியான அன்பானவர்களாகவும், வாழ்க்கையில் எல்லா
சுகங்களையும் அனுபவிப்பவர்களாகவும், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றவர்களாகவும் இருப்பர். மேலும்
எதிரிகள் இல்லாத நிலையும், ஆரோக்கியமான நல்ல நீண்ட‌ஆயுள் பெற்றவர்களாகவும் இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு
ஊருக்கோ, கிரம்மத்துக்கோ நகரத்துக்கோ தலைவராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால்
அமைச்சராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் மூன்று கிரகங்களோ அல்லது அதற்க்கு மேலோ கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றோ,
வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு நாட்டுகே தலைவராக இருப்பர்.
   

   

Posted by Anand at 1:18 AM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 6 ம் இடம், 7 ம் இடம், 8 ம் இடம், குரு, சுக்கிரன், புதன்

Friday, July 15, 2011

டுபாகூர் பேர்வழி, கோழை ஜோதிடக்குறிப்பு


      ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டாலோ ஜாதகர் டுபாகூர் பேர்வழியாக இருப்பார், பொய்யராக இருப்பார், பொய்யை நம்பும் படியாக கூறுபவராக
இருப்பார். அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.
      ஒருவருடைய ஜாதகத்தில் பலமற்ற செவ்வாய் லக்கினத்தைப் பார்த்தால் ஜாதகர் பயந்தாங்கொள்ளியாக,
கோழையாக‌இருப்பார்.

Posted by Anand at 9:47 PM 6 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: செவ்வாய், புதன், லக்கினம்

யாரை குரு தசை குபேரனாக்கும்? ஜோதிடக்குறிப்பு


      மேஷ லக்கினம், மேஷ ராசியில் பிறந்த ஜாதகருக்கு, 10 ல் செவ்வாய், 9 ல் சூரியன் குரு இனைந்து நின்றால்,
லக்கினத்தில் நிற்க்கும் சுகாதிபதி சந்திரனை யோகாதிபதிகள் இருவரும் பார்க்கும் நிலையும், லக்கினாதிபதி உச்சம்
பெற்ற நிலையும், யோகாதிபதி குரு ஆட்சி பெறும் நிலையும் ஒரு சேர ஏற்ப்படும் அல்லவா?
      இந்த ஜாத‌கரை குரு தசை குபேரனாக்கும். இதர தசைகளில் சந்திரன், செவ்வாய், சூரியன், குரு புத்தி அந்தரங்களில்
மிக நல்ல பலன்கள் ஏற்படும்.

Posted by Anand at 8:46 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 9 ம் இடம், குரு, சந்திரன், சூரியன், செவ்வாய், மேஷ லக்கினம், லக்கினம்

இசை மழையும், பண ம‌ழையும் ஜோதிடக்குறிப்பு


      புதன் சுக்கிரன் இருவரும் இனைந்து 2 ம் இடத்தில் இருக்க, தைரியாதிபதியாகிய 3 க்குடையவன் ஜாதகத்தில்
வலுவான நிலையில் இருந்தாலும் அல்லது 3 க்குடையவர் ஆட்சி உச்சம் பெற்று, அவருடன் புதன் சுக்கிரன் இனைந்து
நின்றாலும் ஜாதகர் இசை வல்லுனராக இருப்பார், அவருக்கு அதனால் பண ம்ழையும் பொழியும்.
   

Posted by Anand at 1:21 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 2 ம் இடம், 3 ம் இடம், சுக்கிரன், புதன்

Monday, July 11, 2011

பார்வதியோகம் ஜோதிடக்குறிப்பு
      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருள ீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள்
ஆகும். அதில் இப்போது பார்வதியோகம் பற்றி பார்ப்போம்.
      ஜீவனாதிபதி 10 க்குடையவன், அம்சக்கட்டத்தில் நிற்க்கும் வட்டிற்க்குரியவன்
ீ ராசிக்க்ட்டத்தில் 10 ம் இடத்தில்
வலுவுடன் நிற்பது பார்வதியோகமாகும்
      உதாரணமாக ஒரு ஜாதகத்தில் 10 க்குடையவன் அம்சக்கட்டத்தில் கடகத்தில் நிற்ப்பதாகக்கருதுவோம்.
கடக‌த்திற்க்குரியவர் சந்திரன் அவர் ராசிக்கட்டத்தில் 10 ல் நின்றால் அது பார்வதி யோகமாகும்.
      அவ்வாறு அந்த பத்தமிடம் அந்த கிரகத்திற்க்கு ஆட்சி உச்ச வடாக
ீ அமைந்தால் அது பிரபல பார்வதியோகமாகும்.
      ஜாதகர் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகவோ, அல்லது மிகப்பெரிய தொழிலதிபர்களாகவோ பிரகாசிக்க முடியும்.
      அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர் லட்சங்களைத்தான் குவிக்க முடியும், கோடிகள் என்பது எட்டாக்கனி
என்ற நிலை மாறி வருகிறது. அதிகாரிகள் கோடிகளைக் குவிப்பது சாதாரணமாகி வருகிறது.
      எனவே பார்வதி யோகம் கோடிகளைக் குவிக்கும் சாதனையாளராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Posted by Anand at 8:00 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், இராசி, நவாம்சம்

மஹாசக்தியோகம் ஜோதிடக்குறிப்பு
      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருள ீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள்
ஆகும். அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
      சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
      சந்திரனுக்கு 12 ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம்
பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன், மிதுன‌ராகு
      இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
     இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருள ீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருள ீட்டுதல்
3. முத‌ல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல், நிதி அலோசகர்.
6. கடல் வழி வாண ீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும்
வாழ்நாள் முழுவதும் பெறுவர்

Posted by Anand at 7:40 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கடகம், சந்திரன், தனுசு, மிதுனம், மேஷம், ராகு, ரிஷபம், விருச்சிகம்
Sunday, July 10, 2011

இளைய சகோதர சகோதரிகளால் யோகம் ஜோதிடக்குறிப்பு


      3 ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அல்லது 3 ம் வடு
ீ இவை சுபகிரகங்களின் பார்வையோ சேர்கையோ
பெற்றாலும், இவைகள் பலம் பெற்றாலும் இந்த யோகம் ஏற்ப்படுகிறது. 3 ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய்
அசுபகிரகங்களின் வட்டில்,
ீ மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது.
      இந்த யோகத்தின் பலன் யாதெனில், ஜாதகர் இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை அடைவர். அவர்கள் மிகவும்
நல்ல நிலையில் இருப்பர், அதனால் ஜாதகருக்கு உதவுவர். ஜாதகரும் அவர்களிடம் மிகவும் அனுசரித்து
நடந்துகொள்வார். இளைய சகோதர, சகோத‌ரிகளும் மிகவும் இவர்களை மதித்து நடந்துகொள்வர்

Posted by Anand at 10:13 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 3 ம் இடம், செவ்வாய்

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு
முதல் பாவம்:
      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல்
பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க
வேண்டும்.
இரண்டாம் பாவம்:
      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது
மூன்றாம் பாவம்:
      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீ த ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வரீ தீரச்
செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.
நான்காம் பாவம்:
      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன்
தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது
என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச்
செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ்,
பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின்
உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது
இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள்,
அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம்
என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள்
இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே
தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ
பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி
நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய
பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வடு,
ீ மன
மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம்
நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள்
நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன்
நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை
தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

Posted by Anand at 7:21 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 2 ம் இடம், 3 ம் இடம், 4 ம் இடம், 5 ம் இடம், 6 ம் இடம், 7 ம் இடம், 8 ம் இடம், 9 ம் இடம்

கிரகங்களின் மறைவு ஸ்தானங்கள்


      சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, – லக்னத்துக்கு 8, 12-ல் இருந்தால் மறைவு.
      சந்திரன், புதன், குரு – லக்னத்துக்கு 3, 6, 8, 12 –ல் இருததால் மறைவு.
      சுக்கிரன், லக்னத்துக்கு 3, 8-ல் மட்டும் இருந்தால் மறைவு 6, 12-ல் இருந்தால் மறைவு இல்லை.

Posted by Anand at 7:43 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: குரு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன், ராகு

வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு


      நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும்
,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
      குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும்
உண்டாகும் .
      சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
      நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
      சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9 ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக
நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
      கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர
புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
      நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌யோகம
இருக்கும்.
      நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
      நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் வாகனயோகம் உண்டு .
      நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம்
பெறுவார்.
      குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
      நான்காம் வட்டின்
ீ அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
      சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம் உண்டு.
   

Posted by Anand at 1:41 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 4 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், குரு, சந்திரன், சனி, சுக்கிரன், செவ்வாய், புதன்

Friday, July 8, 2011

சுக்கிரனால் ஏறுமுகம் ஜோதிடக்குறிப்பு


      சுக்கிரன் பூர்வபுண்ணியாதிபதியாக சூரியனின் உத்திர நட்சத்திரம், புதனின் ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றில்
ஒன்றில் அமர்ந்தால் ஜதகரின் வாழ்க்கை ஏறுமுகமாக வெற்றியும், நன்மையும் மிக்கதாக அமையும்.

      மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 4,10 ம் இடங்களில் அமர்ந்தால் முறையாக ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில்
அமர்வார். யோகமுண்டு. புதன் சுக்கிரனுக்கு வேண்டியவர் எனவே புதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம்
சிறப்பாக அமையும்.

      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 3, 9 ம் இடங்களில் ஒன்றில் அமர்ந்தால் முறையே ரேவதி, உத்திரம்


நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு.

      சூரியன் சுக்கிரனுக்கு வேண்டாத‌வர் என்றாலும் சுக்கிரனை விட வலிமையான சூரியன் சுக்கிரனை தன்னுள்
அடக்கிக்கொண்டு யோக பலன்களைத் தருவார் என க்ருதவேண்டியுள்ளது.

      சுக்கிரன் சிம்ம வட்டில்


ீ நின்றாலும் உத்திர நட்சத்திரத்தில் அமர வாய்புள்ளது. மிதுன லக்கினகாரர்களுக்கு 3 ம்
இடத்திலும், மகர லக்கினகாரர்களுக்கு 8 ம் இடத்திலும் நிற்பார்.

      சுக்கிரனுக்கு 3, 8 ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். ஆனால் சுக்கிரன் 3, 8 ம் இடங்களில் நின்றாலும்


உயர்வான பலன்களே நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது.

      இருந்தாலும் சுக்கிரன் மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னி வட்டில்


ீ 4 மிடத்தில் நீசபங்கம் ஏற்ப்பட்டு
நின்றாலும், மீ ன வட்டில்
ீ 10 ல் உச்சம் பெற்று நின்றாலும் யோகம் பிரமாதமாக இருக்கும். சிம்மத்தில் நிற்ப்பது யோகம்
தராது.

      மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் (நீசபங்கம் ஏற்ப்பட்டு) அல்லது சிம்மத்தில் நிற்பது யோகம் தரும்.

Posted by Anand at 9:13 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest


Labels: கன்னி, சிம்மம், சுக்கிரன், சூரியன், புதன், மகர லக்கினம், மிதுன லக்கினம்

Thursday, July 7, 2011

வேதாந்தி ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் குருவுடன் 2 க்குரியவன் சேர்ந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகர்
வேதம், வேதாந்தம், காவியங்கள் அகியவைகளைக் கற்றுத் தேர்வார். அதில் ஞானம் பெற்றவராவார்.

Posted by Anand at 10:10 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 2 ம் இடம், குரு

மிகச்சிறந்த யோகம் ஜோதிடக்குறிப்பு


ஜோதிடத்தில் மிகச்சிறந்த யோகமாக சொல்லப்பட்டிருப்பது சன்னியாசி யோகமாகும். காரணம் ஒரு மனிதன்
தெய்வத்தை, தெய்வநிலையை அடைவதை விட சிறந்த விசயம் ஏதுமில்லை. அதற்கான சில கிரக நிலைகள்
பின்வருமாறு...
1. 9 ம் இடத்தில் நான்கும், அதற்க்கு மேற்ப்பட்ட கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் மிகவும் சிறந்த ஞானியாக
இருப்பார்.
2. 10 ம் இடத்தில் மூன்றும் அதற்கு மேற்ப்பட்ட கிரகங்கள் அமைந்தால் அந்த ஜாதகர் உலகம் புகழும் சன்னியாசியாக
இருப்பார்.
3. ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் இனைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ காண‌ப்பட்டால்
அந்த ஜாதகம் சன்னியாசி யோகமுடைய ஜாதகமாகும். ஒரு வேளை அந்த ஜாதகர் மற்ற கிரகங்களின் வலிமையால்
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும், வாழ்க்கையில் சிறிது காலமாவது சன்னியாசி போல் வாழ்வார்.

Posted by Anand at 7:39 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 மிடம், 9 ம் இடம், சந்திரன், சனி

Wednesday, July 6, 2011

எப்போது திருமணம் ஜோதிடக்குறிப்பு

      குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான்
லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வட்டையோ
ீ அல்லது சந்திர ராசியையோ அல்லது
சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வட்டையோ
ீ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப்
பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.
      சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல தனிப்பட்ட சில ஜாதகங்களில்
ஏழாம் வட்டதிபரின்
ீ தசா புத்தி நடைபெறும்போதும் திருமண யோகம் உண்டு.
      அதுபோல ஒரு சில ஜாதகருக்கு கோசார குரு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வட்டிற்க்கு
ீ கோசாரரீதியாக
வந்தமரும் கால‌த்தில் திருமண யோகம் உண்டு

ஒரு குறுக்கு வழி

      லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வட்டு


ீ அதிபதியின் பாகைகள் வகுத்தல் 30 பாகைகள் = என்ன ராசி
வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)
      லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில் திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.
      அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான காலத்தில் திருமணம். அதாவது 30
அல்லது 32 வயதில் திருமணம்.
      மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை அமையாமலே போகலாம்!

Posted by Anand at 8:49 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 2 ம் இடம், 5 ம் இடம், 7 ம் இடம், 9 ம் இடம், குரு, சுக்கிரன், ராசி

கேதுவால் யோகம்
      கேது லக்கினதிற்கு கோண‌ங்கலான‌1, 5, 9 ம் இடத்திலும், லாபஸ்தானமான 11 ம் இடத்திலும் நிற்க பிறந்த ஜாதகர்
சொந்த இடத்திலும், வெளிதேசங்களிலும் வாசம் செய்வான். பொன், பொருள் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மிகவும்
அதிர்ஷ்டசாலியாக விளங்குவான். இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கும்

Posted by Anand at 5:26 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், 1 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், கேது

கணவன் பேச்சைக் கேட்காத மனைவி

      5 ம் இடத்திற்க்குரியவர் ராகு அல்லது கேதுவுடன் கூடி 3 ல் நிற்க, அந்த ஜாதகருக்கு மனைவியால் எப்போது
தொந்திரவு தான். கண‌வனுடன் எப்போதும் சண்டை போடக்கூடியவளாகவும், மிகவும் கொடூர குணம்
கொண்டவளாகவும் இருப்பாள்.
      லக்கினத்திற்கு 3 க்குடையவன் ராகு அல்லது கேதுவுடன் கூட கணவனை, மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல்
பேச்சு கேட்கமாட்டாள், கணவனை விட மனைவி அதிக வயதுடையவளாக இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊர் அருகில்
கடல் உண்டு.
      லக்கினத்திற்கு 3 க்குடையவன் சனியுடன் கூட அல்லது சுக்கிரன் சனியுடன் கூட ஜாதகரை மனைவி மதிக்க
மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கோபக்காரியாக இருப்பாள்.

Posted by Anand at 4:15 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 3 ம் இடம், 5 ம் இடம், கேது, சனி, சுக்கிரன், ராகு

Tuesday, July 5, 2011

பாராட்டுமழை ஜோதிடக்குறிப்பு
பாக்கியாதிபதி என்கிற 9 க்குடையவன் லக்கினமேறி குரு பார்வை பெற்றாலும், லக்கினாதிபதியுடன் 9 க்குடையவன்
சம்பந்தப்பட்டு குரு பார்வை பெற்றாலும் ஜாதகர் எப்போதும் பாராட்டு மழியில் நனைந்து கொண்டே இருப்பார்.

Posted by Anand at 7:06 AM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 9 ம் இடம், குரு, லக்கினம்

Monday, July 4, 2011

விபரீத ராஜயோகம்

      துர்ஸ்தானாதிபதிகள் என்று சொல்லக்கூடிய 3,6,8,12 ம் அதிபதிகள், அந்த 3,6,8,12 ம்


இடங்களில்(துர்ஸ்தானாதிபதிகள் துர்ஸ்தானங்களில்) இடம் மாறி அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகமாகும்.
      அதாவது உதாரணத்திற்க்கு 3 ம் அதிபதி 8 ல், 6 ம் அதிஅப்தி 12 ல், 12 ம் அதிபதி 3 ல், 8 ம் அதிபதி 3 ல் இவ்வாறு
அமர்வது விபரீதராஜயோகமாகும். இதில் அனைத்து அதிபதிகளும் இடம் மாறி இருக்க வேண்டும் என்பதல்லாமல்
இருவரோ மூவரோ இடம் மாறியிருந்தால் கூட போதும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஜோதிட
மொழிக்கேற்ப்ப ராஜயோக பலன்களைத்தருவர்.
      இதன் பலன் என்னெவெனில் எதிர்பாராமல் வரும் நல்ல பலன்கள், உழைப்பிற்க்கு அதிகமான ஊதியம், திடீர்
வரவுகள், திடீர் சொத்துகள், திடீர் சம்பத்து என கூறிக்கொண்டே போகலாம்.

Posted by Anand at 8:10 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 3 ம் இடம், 6 ம் இடம், 8 ம் இடம்

ராகுவால் ராஜயோகம்
      எந்த லக்கினம், எந்த ராசியானலும் சரி ராகு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம் இந்த ராசிகளில்
த‌னித்து நின்று அதற்க்கு கேந்திரங்களில்( ராகுவிற்க்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10 ம் இடங்களில்) ஒரு கிரகமோ அல்லது
பல கிரகங்களாவது இருந்தால் அது மிகச்சிறந்த ராஜயோகமாகும்.

Posted by Anand at 5:32 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கடகம், கன்னி, மகரம், மிதுனம், மேஷம், ராகு, ரிஷபம்

Sunday, July 3, 2011

வளமான வாழ்வு அமைய‌

1) லக்கினம், லக்கினாதிபதி சிறப்பாக அமைய வேண்டும். ஜாதகருக்கு செல்வம் செல்வாக்கு பெற இந்த அமைப்பு
உதவும்...
   அ) லக்கினாதிபதி ஆட்சி, உச்ச, நட்பு வட்டில்
ீ இருப்பது.
   ஆ) லக்கினத்தை குரு பார்ப்பது, ராசியை குரு பார்ப்பது.
   இ) லக்கினாதிபதி சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருப்பது.
2) 5,9 ம் இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்
   5,9 ம் இடத்ததிபதிகள் ஜாதகத்தில் வலுபெற்றிருக்க வேண்டும், அவிடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் இன்னும்
சிறப்பு. ஜாதகரின் பூர்வபுண்ணிய பலன் அதிகரித்து, நல்ல சுக செளக்கியங்களை அனுபவிப்பார்.
3) தன ஸ்தானமும் லாப ஸ்தானமும் அதன் அதிபதிகளும் பலம் பெற வேண்டும். இருவரும் பரிவர்த்தனை ஆகிருப்பது
பிரபல யோகமாக க‌ருதப்படுகிறது.
4) சுகமான வாழ்வு பெற சுகஸ்தானதிபதியும், சுகஸ்தானமும் சிறப்பாக இருக்க வேண்டும்.கல்வி, சொந்தவடு,

வாகனம், நிம்மதியான வாழ்வு, தாய் குறித்த ஸ்தானம் ஆகையால் இந்த ஸ்தானம் நன்றாக அமைவது சிறப்பு.
5) ஒருவரது வேலை, தொழில் முயற்சி வெற்றி பெறவும், நல்ல விதமாக அமையவும் ஜீவன ஸ்தானம் நல்ல விதமாக
அமைய வேண்டும். பத்தில் ஒரு பாவியாவது அமைய வேண்டும் என்ற் ஜோதிட மொழிப்படி, பத்தில் கிரகம் நிற்க்க சுபர்
பார்வை சேர்க்கை பதமிடத்திற்க்கும், பத்தம்மதிபதிக்கும் ஏற்படுமாயின் வளமான வாழ்வு அமையும்.
6) நல்ல மனைவி அமைந்தால் தானே இல்லறம் இனிக்கும். அதற்க்கு கள‌த்திர ஸ்தானம், அதன் அதிபதி நல்லவிதமாக
அமைய வேண்டும். களத்திர ஸ்தானத்தில் பகை நீசம் பெறும் கிரகங்கள் அமராதிருத்தலும், களத்திர ஸ்தானாதிபதி
பகை நீசம் மறைவு பெறமலும், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமரமலும் இருந்தாலே போதுமானது, இல்லற வாழ்வு
இனிக்கும்.

   வளமான வாழ்வு பெற ஒருவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி, தானாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி,


களத்திராதிபதி, பாகியாதிபதி, ஜீவனாதிபதி, லாபாதிபதி ஆகிய 8 பேரும் அந்த 8 இடங்களும் சிறப்பாக அமைய
வேண்டும். ஆனால் அவ்வாறு அமைவது அபூர்வமே.
   அதனால் இதில் ஏதாவது 3, 4 இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருந்தாலே வளமான வாழ்வு அமையும்.

Posted by Anand at 10:19 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 11 ம் இடம், 1 ம் இடம், 2 ம் இடம், 4 ம் இடம், 5 ம் இடம், 7 ம் இடம், 9 ம் இடம், குரு

சிறந்த தன யோகங்கள்

கீ ழ்க்கண்ட தன யோக அமைப்பு உள்ளவர்கள் அவர் அவர் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப, அதிக வளமோ அல்லது
மிதமான வளத்தையோ அந்த அந்த திசை, புக்தி காலங்களில் ஏற்படுத்தும்.

1. கேந்திர யோகம் : ஐந்து (5) கிரகங்கள் கேந்திரங்களில் (லக்னம் முதல் 1 , 4 , 7 , 10 ம் இடங்கள்) சேர்ந்தோ அல்லது
தனியாகவோ இருந்தால் தன யோகம் மேற்படி கிரகங்கள் நடத்தும் தசா புக்தி காலங்களில் ஏற்படும்.

2. யவன யோகம் : 2 இல் சுப கிரகம் இடம் பெற்று , ரெண்டுக்கு உரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தன
யோகம் ஏற்படும்.

3. நிஷப யோகம் : நான்காம் (4 ) இடத்தில ஜீவன ஸ்தானமான பத்தாம் வட்டு


ீ (10 )அதிபதி இடம் பெற்றால், தன்
வட்டையே
ீ பார்க்கும் அமைப்பு எற்ப்படுகிறது, இது ஒரு நல்ல‌தன யோக அமைப்பு.

4. தர்ம கர்மாதிபதி யோகம் : 9 மற்றும் 10 ம் இடத்து அதிபதிகள் வலுப்பெற்று இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர்
பார்க்கும் அமைப்பு தன யோகத்தினை உண்டாக்கும் .

5. குரு திருஷ்டி யோகம்: குரு பகவான் சனி அல்லது கேது இருவரையுமோ அல்லது ஒருவரையோ இணைந்தாலோ
அல்லது பார்த்தாலோ ஏற்படக்கூடிய தன யோகம்.  (உதாரணம் : குருவும் கேதுவும் இணைந்தால் கோடீஸ்வர யோகம்
ஏற்படும் )

6. லாப ஸ்தானத்தில் (11 ம் வட்டில்)


ீ ஒரு கிரகமோ அல்லது பலவோ வலுப்பெற்று இருக்கும் அமைப்பு தன யோகம்
ஏற்படுத்தும்.

7. சனியும் புதனும் 11 ம் இடத்தில இணைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

8. ராஜ யோகம் : கேந்திரங்களில் 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் ராகுவோ அல்லது குருவோ பகை
நீசம் பெறாமல் இருந்தால் ஏற்படும் தன யோகம்.

9. எட்டாம் இடத்தில குரு அல்லது சுக்கிரன் அமைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

மேற்கண்ட ஜாதக அமைப்புகள் தன யோகம் அடைவது உறுதி . மேலும் பல வித கிரக அமைப்புகள் தன யோகத்தினை
ஏற்படுத்தினாலும், மேலே சொல்லப்பட்ட ஜாதக கிரக அமைப்புகள் மட்டுமே மிக முக்கியமாக கருதப்படுகிறது.

Posted by Anand at 5:50 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 11 ம் இடம், 1 ம் இடம், 2 ம் இடம், 4 ம் இடம், 7 ம் இடம், 8 ம் இடம், 9 ம் இடம், குரு

Saturday, July 2, 2011

குருசண்டாள யோகம்

      ஒருவருடைய ஜாதகத்தில் குருவுடன் ராகு சேர்ந்து நின்றால் அது குருசண்டாள யோகமாகும். இந்த யோகத்தில்
குருவோ ராகுவோ ஆட்சி உச்சம் பெற்றால் யோகம் அபரிதாமாக இருக்கும்.
      இதில் ராகுவோடு சேர்ந்த குரு தன் தசா, புத்தி, அந்தரங்களில் கொடுக்கும் பலன்களை விட, குருவோடு சேர்ந்த ராகு
மிக நல்ல பலன்களை (பூவுடன் சேர்ந்த நாறும் மனப்பது போல‌) கொடுப்பார்.
      இதில் குருவோ, ராகுவோ பகை, நீசம் பெற்று கெட்டுவிட்டால் யோகம் கெட்டுவிடும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியாக இருப்பார் அல்லது கடவுள் நம்பிக்கை
இருந்தாலும் ஏதோ பெயரளவிற்க்கு பக்தி செய்வார்.

Posted by Anand at 7:10 PM 2 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: குரு, ராகு

சனி தெசை யாருக்கு யோகம் செய்யும்

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி பாதகயோகாதிப்தி, தருமகருமாதிபதி ஆகிறார் எனவே இவர்களை சனி
தசை செல்வச்சீமானாக்கும்.
அதிலும் கீ ழ்க்கண்டவாரு ஜாதகதில் கிரகங்கள் அமைந்தால் யோகம் தரும்.

      1) 9,10 க்குடைய சனி 10 ல் ஆட்சி பலத்துடன் இருப்பது. 9 ல் ஆட்சி பலம் பெற்றாலும் பாதக ஸ்தானம் என்பதால்
10 மிடமே சாலச் சிற‌ந்தது.
      2) சுக பூர்வபுண்ணியாதிபதிகளான சூரியன், புதன் கன்னியில் புதஅதித்ய யொகம் என்ற அமைப்பில் இருப்பது.
      3) கடகத்தில் குரு உச்சம் பெற்று நிற்பதுடன் யோகதிபதி சனி மற்றும் கோணாதிபதி புதன் ஆட்சி உச்ச பலம் பெற்று
நின்றால் யோகம் பல மடங்கு இருக்கும்.
      இவர்களுக்கு சனி தசை மட்டுமல்லாது குரு தசை, புதன் தசை, இதர தசைகளில் சனி, குரு, புதன் புத்தி
அந்தரங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
      இவர்கள் ஷேர் மார்கெட், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயரிப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி வாய்ப்புகள்
இவர்களைத் தேடி வரும்.

Posted by Anand at 4:51 AM 2 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest


Labels: 10 ம் இடம், 9 ம் இடம், கடகம், கன்னி, குரு, சனி, சூரியன், புதன், ரிஷப லக்கினம்

நல்ல காலம் எப்போது?

      ஒருவருடைய ஜாதகத்தில் இருந்து அவருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறது? என்று தெரிந்து கொள்ள
வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து சொல்ல முடியும்.
      ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவருக்கு 22 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் சந்திர‌ன் வலுவாக இருந்தால் அவருக்கு 24 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அவருக்கு 28 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் புதன் பலமுடன் இருந்தால் அவருக்கு 32 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      குரு பலமாக‌இருந்தால் அவருக்கு 16 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சுக்கிரன் பலமாக‌இருந்தால் அவருக்கு 25 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சனி பலமாக‌இருந்தால் அவருக்கு 35 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் ராகு பலமுடன் இருந்தால் அவருக்கு 42 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் கேது பலமுடன் இருந்தால் அவருக்கு 48 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      இவ்வாறு பலன் சொல்லும் போது கூடுதலாக கவனிக்க வேண்டியவை எதுவெனில்...........
      ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ பலமாக அமைந்தால், அந்த ஜதகத்தின் லக்கினாதிபதி,
சந்திரலக்கினாதிபதி ஆகியோர்களின் நிலை அதாவது அவர்கள் பகை நீசம் பெற்று கெடாமல் இருந்தாலே போதும்,
ஜதகருக்கு நல்ல காலம் முன்னரே ஆரம்பித்து விடுவதை பார்க்க முடிகிறது.
      உதாரணத்திற்க்கு மேஷ லக்கினத்தில் பிறந்த ஜாதகர் ஒருவருக்கு கேது பலமாக அமைந்து, ஜதகத்தில் செவ்வாய்
கெடாமல் இருந்து, பாதாகாதிபதி குரு 11 ல் அமர்ந்ததால், அவர் குருவிற்குறிய 16 வயதில் +2 முடித்தவுடன், சின்ன
சின்ன வேலையில் அமர்ந்து முன்னேறி, பின்பு செவ்வாய்க்குறிய 28 வயதில்  சொந்தமாக வடு
ீ கட்டி, கார் வாங்கி நல்ல
நிலையில் செட்டிலாகி விட்டார்.
      ராகு கேது பலமுடன் உள்ள ஜாதகர், லக்கினாதிபதி, சந்திர லக்கினாதிபதி, யோகாதிபதி, இந்த மூவரில் எவர்
வலுவாக உள்ளனரோ அல்லது மூவரில் இருவரோ அல்லது மூவரும் வலுவாக உள்ளனர் என்றாலோ, எந்த
கிரகத்திற்க்கு குறைந்த வயது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த வயதில் அவருக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிடும்.

Posted by Anand at 12:34 AM 0 comments   


Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: குரு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன், ராகு, லக்கினம்

Friday, July 1, 2011

பட்டதாரி யோகம்
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் புதன் இணைப்பு புதாஅதித்ய யோகம் எனப்படுகிறது. இந்த அமைப்பு அவர்களுக்கு
நல்ல கல்வியை வழங்குகிறது. அதாவது குறைந்தபட்சம் அவர் பட்டதாரியாக இருப்பார், அத்துடன் இந்த
அமைப்பிற்க்கு குருவின் சேர்க்கை, பார்வை மூலமாக சிறப்பான‌ சம்பந்தம் ஏற்பட்டால் அவர் பட்ட‌மேல்ப்படிப்பு,
முனைவர் பட்டம், போன்றவைகளை பெறுவார்.

Posted by Anand at 7:58 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: குரு, சூரியன், புதன்
குழந்தை பாக்கியம் எப்போது?

      ஒருவருடைய ஜாதகத்தில் 5 ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.


      ஆனால் பெண்கள் ஜாதகத்தில் 5 ம் இடத்தை பார்ப்பதோடு, 5 க்கு 5 ம் இடமான 9 ம் இடத்தை வைத்து புத்திர
பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
      குரு பகவான் புத்திரகாரகன் ஆகிறார், அவருடைய நிலையை வைத்தும் புத்திர பலனைக் கானலாம்.
      ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும், குருவும் நன்றாக அமையவில்லை என்றால், அதாவது பகை
நீசம் பெற்று கெட்டு நின்றால் புத்திர பாக்கியம் நன்றாக அமைவதில்லை.
      புத்திர ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று அஸ்தங்கம் அடைந்தால் புத்திர பலன் உண்டாவதில்லை
அல்லது புத்திர இழப்பு ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்திருந்தாலும்(காரகா பாவ நாஸ்த்தி) புத்திர பலன் உண்டாவதில்லை. அது
குருவினுடைய ஆட்சி உச்ச வடாக
ீ இருந்தால் மாறாக‌நற்பலன்கள் ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி, புத்திரகாரகன், இவர்கள் அம்சத்தில் நின்ற இடத்ததிபதி ஆகியோருடைய திசை புத்தி
காலங்களில் புத்திர பலன் உண்டாகிறது.
      கோசார ரீதியாக குரு ராசியிலிருந்து 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது புத்திர பலன் உண்டாகிறது.
      ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகள் புத்திர ஸ்தானமாக வந்தால் புத்திர வழியில் நற்பலன்கள்
அமைவதில்லை.
      புத்திர ஸ்தானம் கடகமாக இருந்து அதில் சனி தனது நட்சத்திர காலில் வற்றிருந்தால்
ீ நிறைய புத்திர பாக்கியம்
ஏற்படுகிறது.
      புதன் 5 ம் இடத்தில் இருந்தால் பெண் புத்திர பாக்கியம் ஏற்படும், அல்லது புத்திர பக்கியம் குறைவாக இருக்கும்.
      5 க்குடையவர் எத்தனை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றுள்ளாரோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      அதே போல் 5 ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      புத்திர ஸ்தானத்தில் ராகு, கேது வற்றிருந்தால்
ீ புத்திர தோஷம் ஏற்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி அம்சத்தில் அமர்ந்த இடத்தில் இருந்து ஜென்ம லக்கினம் வரை எண்ணினால் எத்தனை
ராசிகள் வருகிறதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      ஒருவருடைய ஜாதகத்தில், சூரியன், புதன், சனி சேர்க்கை பெற்று 11 ம் இடத்தில் வற்றிருந்தால்
ீ பல பிள்ளைகளை
பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும்.
      இதில் எது மிக அதிக பலமோ அதன்படி பலன்கள் நடக்கும்.

Posted by Anand at 7:02 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், கடகம், குரு, கேது, சனி, சூரியன், புதன், ராகு

சிறப்பான குரு யோகம்


மீ ன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு 5 ல் உச்சம் பெற்றாலும், கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு
லக்கினத்தில் உச்சம் பெற்றாலும் அதனை சிறப்பான குரு யோகம் என்று சொல்லலாம். இவர்கள் சிறு வயதிலேயே
செல்வச் சீமானாகி விடுவர். விளம்பரப் படங்கள், சினிமாக்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களும், 15,16 வயதில்
நடிகைகளாகி திரைஉலகில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், பெற்றோர், மூதாதையர் சொத்துக்களை வாழ்நாள்
முழுவதும் சிறுவயதிலிருந்தே அனுபவிக்கும் யோகமும், சிறு வய‌திலேயே பரம்பரைத் தொழிலை கவனிகத்
தொடங்குவதாலும், இந்த சிறப்பான குரு யோகம் செயல்படுகிறது.

Posted by Anand at 6:54 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest


Labels: 1 ம் இடம், 5 ம் இடம், கடகம், கடகலக்கினம், குரு, மீ னம், மீ னலக்கினம், லக்கினம்

லக்கினத்தில் சந்திரன்
லக்கினத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்தால் ஜாதகர் கவர்ச்சிகரமான தோற்றம், கற்பனை வளம் மற்றும்
தெளிவான சிந்தனைகளை அருவியாகப் பொழியக்கூடிய பேச்சாற்றல் மிக்கவராகத் திகழ்வார். பேச்சில் உளறல்
குழறல் இருக்காது

Posted by Anand at 12:57 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், சந்திரன், லக்கினம்

Thursday, June 30, 2011

லக்கினத்தில் கேது
மகரம், கும்ப லக்கினங்களில் உதித்தவர்களுக்கு கேது லக்கினத்தில் நின்றால் சந்தான பாக்கியத்துடன் செல்வவளமும்
சேருகிறது.

Posted by Anand at 10:44 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், கும்பம், கேது, மகரம், லக்கினம்

மனைவியால் ராஜயோகம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7 ம் இடத்தில் வளர்பிறைச் சந்திரன் அல்லது புதன் தனித்து, பகை நீசம் பெறாமல்
இருந்தால் அவளது கணவருக்கு உயர்வான ராஜயோக வாழ்க்கை அமையும். அதனால் அந்த பெண் செலவ சுகங்களை
அனுபவிப்பாள்

Posted by Anand at 8:13 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 7 ம் இடம், சந்திரன், புதன்

6 ல் ராகு/கேது
ஜாதகர் எந்த லக்கினத்தில் உதித்தவராக இருந்தாலும், அவருடைய ஜாதகத்தில் 6 மிடத்தில் ராகுவோ அல்லது
கேதுவோ இருந்தால் ஜாதகருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். இவரை எதிர்ப்பவர்கள் தாமாகவே அழிந்து விடுவர்,
அல்லது மனம் திருந்தி நண்பர்களாகி விடுவர்.

Posted by Anand at 8:07 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 6 ம் இடம், கேது, ராகு
Wednesday, June 22, 2011

போராட்ட வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு


      லக்கினாதிபதி 6,8,12 ல் மறைய சுக தர்ம கர்மாதிபதிகள் பகை நீசம் மறைவு ஸ்தானங்களில் கெட்டு நின்றால்
ஜாதகருடைய வாழ்க்கை பெரும் போராட்டமாகிவிடும்

Posted by Anand at 10:11 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 12 ம் இடம், 1 ம் இடம், 4 ம் இடம், 6 ம் இடம், 8 ம் இடம், 9 ம் இடம், லக்கினம்

கல்வியால் செல்வம் ஜோதிடக்குறிப்பு


      தன ஸ்தானமான 2 ம் இடத்தில் தனாதிபதி ஆட்சி பெற்று இருந்து அவருடன் சுபாவ சுபர் இணைந்து இருந்தாலும்
அல்லது யோகதிபதி இணைந்து இருந்தாலும் அல்லது சுபாவ சுபர் பார்த்தாலும் அல்லது யோகதிபதி பார்த்தாலும்
ஜாதகருக்கு குறையாத செல்வமும் நிறைவான கல்வியும் அமைகிறது. கல்வியால் செல்வம் சேருகிறது.

Posted by Anand at 10:11 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 2 ம் இடம்

பேச்சில் இனிமை ஜோதிடக்குறிப்பு


      வாக்கு ஸ்தானத்தில்(2 ம் இடத்தில்) புதன் ஆட்சி பலத்துடன் நின்றாலும், குரு புதனுடைய வடுகளான
ீ மிதுனம்,
கன்னியில் நின்றாலும், அம்சத்தில் புத்னுடைய வடுகளில்
ீ குரு நின்றாலும், ஜாதகர் அனைவரையும் கவரும் வகையில்
இனிமையாக பேசுவார்.

Posted by Anand at 10:10 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 2 ம் இடம், கன்னி, குரு, புதன், மிதுனம்

சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்

      மிதுன லக்கின, கடக ராசிக்காரர்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் குருவும் சனியும் இணைந்து நின்று, பூர்வபுண்ணிய
ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று நின்றால் ஜாதகரை சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்.
1. சுக்கிரன்-பூர்வபுண்ணியாதிபதி
2. சனி-பாக்கியாதிபதி
3. குரு-ஜீவனாதிபதி

      மேலே சொன்ன அமைப்பில் தரும‍-கர்மாத்பதி இணைப்பால் தரும-கர்மாதிபதி யோகம் ஏற்ப்படுகிறது. மிதுன


லக்கின காரர்களுக்கு தரும-கர்மாதிபதி இணைப்பு யோகம் தராது என்று பழைய நூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும்.
இவிணைப்பு கேந்திரத்தில் ஏற்ப்படுவதால் கேந்திராதிபத்திய தோஷத்திற்க்கு ஆளாகிய குருவினுடைய தோஷம்
சனியுடன் இணைவதால் விலகி விடுவதால். நற்பலன்கள் எதிர்பார்க்கலாம்.
      இந்த அமைப்பு உடையவர்கள் சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும். சனி தசை, குரு தசை யோகமளிக்கும்.
ஆண்களானால் பெண்களால் யோகமும், பெண்களானால் ஆண்களால் யோகமும் கிடைக்கும்.
      மற்ற லக்கின, ராசிக்காரர்களுக்கும் சுக்கிர தசை குறித்து தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் வரும். வாழ்க
வளமுடன்!

Posted by Anand at 6:53 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், கடக ராசி, குரு, சனி, சுக்கிரன், மிதுன லக்கினம்

மோசடிப் பேர்வழி ஜோதிடக்குறிப்பு


      சந்திரன் செவ்வாயை பார்ப்பது சிறப்பான அமைப்பு சந்திரமங்கள யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஆனால் ஒருவரது ஜாதகத்தில் 3 ம் வட்டில்
ீ செவ்வாய் இருந்து அவரை 9 ம் வட்டில்
ீ நின்ற சந்திரன் பார்த்தால் ஜாதகர்
நம்பிக்கை மோசடிப் பேர்வழியாக இருப்பார். சொன்னது ஏதும் செய்ய மாட்டார். ஏமாறுபவர்களிடம் நம்பிக்கை தருவது
போல் பேசி மோசடி செய்வார். காசு பறிப்பார். வாங்கிய கடனைத் திருப்பித் தரமாட்டார்.

Posted by Anand at 11:20 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 3 ம் இடம், 9 ம் இடம், சந்திரன், செவ்வாய்

பெண்களால் உயர்வு ஜோதிடக்குறிப்பு


      தனுசு, மீ னம் ஆகிய குரு பகவானின் வடுகளில்
ீ 7 ம் வட்டுக்கு
ீ உரியவனுடன் ராகு இணைந்து நின்றால் ஜாதகர்
மரியாதையும் மதிப்பிற்க்குரிய பெண்களால் உயர்வினைப் பெறுவார்.

Posted by Anand at 5:11 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 7 ம் இடம், குரு, தனுசு, மீ னம், ராகு

ஆயுளைக் கொடுக்கும்/கெடுக்கும் ராகு

      ராகு சுக ஸ்தானத்தில் சுபர் சம்பந்தம் பெற்று நிற்க 2,7,12 ம் இடங்களில் சுபாவ சுபர்கள் இருந்தால் தீர்க்காயுளைக்
கொடுக்கும் ராகுவாக விளங்குவார்.
      அதே ராகு சுக ஸ்தானத்தில் பாவிகள் சம்பந்தம் பெற‌2,7,12 ம் இடங்களில் சுபாவ பாவிகள் இருந்தால் ஆயுளைக்
கெடுக்கும் ராகுவாக விளங்குவார். மத்திம அல்லது அற்ப ஆயுள் தான்.

Posted by Anand at 1:13 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 2 ம் இடம், 4 ம் இடம், 7 ம் இடம், ராகு

Tuesday, June 21, 2011

இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு


சுகமான, இன்பமான வாழ்க்கை அமைய கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11 க்குரியவர்களுக்கு 6,8,12 க்கு உரியவர்கள்
பார்வை சேர்க்கை கூடாது. மேலும் 6,8,12 ம் பாவங்களில் கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11 க்கு உரியவர்கள் மறைந்து
விடக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் நல்லவர்கள் மறைந்தால் வாழ்க்கையில் சாண் ஏற முழம் சறுக்குகிறது எனும்
நிலை தான் உருவாகும்.

Posted by Anand at 10:08 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், 12 ம் இடம், 2 ம் இடம், 6 ம் இடம், 8 ம் இடம், கேந்திரம், திரிகோணம்

5 ல் சூரியன்
சூரியன் 5 ல் நின்றால் பிள்ளைகளால் நிம்மதி, சந்தோசம் கெடும். சக்திக்கு மீ றிய செலவுகளை பிள்ளைகள்
உருவாக்குவர். அனுதினமும் சூரிய நமஸ்காரமும், சிவனை ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து வழிபடவேண்டும்

Posted by Anand at 8:15 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 5 ம் இடம், சூரியன்

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்2

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன், அவர் 5 ம் இடமான மீ னத்தில் உச்சம் பெறுவார்.
அவரை பாக்கியதிபதி சந்திரன் பார்த்தாலே யோகம் பிரமாதமாக இருக்கும்.
      தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் அவர் 2 ல் உச்சம், அவரை பக்கியதிபதி சூரியன்
நண்பர் பார்த்தாலே யோகம் நன்றாக இருக்கும்.
      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி லக்கினாதிபதி சனியே ஆகிறார், அவர் 9 ல் துலாத்தில் உச்சம்,
அவரை பாக்கியாதிபதி சுக்கிரன் பார்க்கும் போது தன் வட்டையே
ீ பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறது. பாதக யோகதிபதி
சுக்கிரனால் நல்ல பலன்களே நடக்கும் என்பதில் ஐயமில்லை.
      மீ ன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சனி, அவர் 8 ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியதிபதி
செவ்வாய் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் யோக பலன் கிடைக்கும்.
      எனவே விரயாதிபன் உச்சம் பெற்று, பாக்கியதிபதி பார்வையை பெறுவது யோகமே. விரையாதிபன் மறைவு
ஸ்தனங்களில் இருப்பதை விட, உச்சம் பெற்று சுபர் பார்வை பெறும் போது நல்ல பலன்கள் கூடுதலாக நடக்க வாய்ப்பு
அதிகம்

Posted by Anand at 7:06 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கும்பம், சனி, சுக்கிரன், செவ்வாய், தனுசு, புதன், மகரம், மீ னம், விருச்சிகம்

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்1

      விரயாதிபன் எனில் 12 க்குடையவன், விரயாதிபன், விரயஸ்தானம் என்றாலே நம்மில் பலர் முகத்தை


சுளிக்கிறோம். ஆனால் முன்னோர் விரயஸ்தானத்தை சுகசயன ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்று கூறிச்
சென்றுள்ளனர்.
      விரயாதிபன் என்று சொல்லக்கூடிய 12 க்குடையவன் உச்சம் பெற்று நிற்க, அவனை பாக்கியாதிபன் என்று
சொல்ல்க்கூடிய 9 க்குடையவன் பார்த்தால் ஜாதகர் அநேகசுகங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்லாம்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி குரு சுக கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியதிபதியும்
ஆகிறார். அவர் கடகத்தில் உச்சம் பெறுதலே வாழ்வில் எல்லாசுகங்களையும் தரும்.
      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் ஆகி அவர் 9 ம் இடமான பாதகஸ்தானத்தில்
உச்சமடைவார். அவரை 9 ம் அதிபதி சனி பார்ப்பதை விட குரு அல்லது லக்கினாதிபதி பார்ப்பது கூடுதல் நல்லது.
சனியும் பாக்கிய, யோக, பாதகதிபதி என்பதால் யோகம் சுமாராக அமையும்.
      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன் அவர் 10 ம் இடமான கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார்.
அவரை 9 க்குடைய சனி பார்ப்பது யோகம் தரும் என்றே கருத வேண்டியுள்ளது.
      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன் அவர் 3 ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி குரு பார்ப்பது
யோகம் தான்.
      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சந்திரன் அவர் 10 ல் உச்சம் பெற அவரை பக்கிய பாதகதிபதி
செவ்வாய் பார்த்தால் சந்திரமங்கள யோகம் எற்ப்படுகிறது. பிரபல யோகமே.
      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சூரியன் அவர் 8 ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி சுக்கிரன்
பார்ப்பது யோகம் தான்.
      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன், அவர் விரயத்திலேயே உச்சம் பெற 9 க்குடையவரும்
அவரே என்பதால் யோகபலன்க‌ளைத் த‌ருவார். லக்கினாதிபதி குருவின் பார்வை அவருக்கு கிடைகுமானால் யோகம்
சிறப்பாக இருக்கும்.

Posted by Anand at 6:42 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 12 ம் இடம், 1 ம் இடம், 9 ம் இடம், கன்னி, குரு, சிம்மம், துலாம், மிதுனம், மேஷம், ரிஷபம்

தொழிலில் நஷ்டம் ஜோதிடக்குறிப்பு


லாபதிபதி 8 ல் மறைந்தால் சுயதொழில் உதவாது. அடிமைத்தொழில் செய்யும் இடத்திலும் பிரச்சனைகள் வரும்.
பொறுமை காக்க வேண்டும், நல்ல வேலை அமைந்துவிட்டால் அதனை நல்ல முறையில் உழைத்து தக்க வைத்துக்
கொள்ள வேண்டும். பணத்தை தொழிலில் முதலீடு செய்வதை விட நீண்டகால் வங்கி டெபாசிட்டுகள் அல்லது
நிலபுலன்களில் முதலீடு செய்வது நல்லது.

Posted by Anand at 3:23 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், 8 ம் இடம்

11 ம் இடத்ததிபதி
லாப ஸ்தானத்தில் லாபாதிபதி ஆட்சி பலத்துடன் விளங்கினால் அவர் பூர்வபுண்ணிய ஸ்தானத்தினை பார்ப்பார்.
தொழிலில் மிதமான லாபம், சகோதரர்கள் ஆதரவு, அமைதியான வாழ்க்கை ஜாதகருக்கு அமையும். வாழ்வில்
படிப்படியான முன்னேற்றத்தினை அடைவார். தெய்வக
ீ வழிபாடுகளை ஜாதகர் சிறப்பாக செய்வார். குடும்ப கெளரவம்
மேண்மையாக இருக்கும்.

Posted by Anand at 3:08 AM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 11 ம் இடம், ஆட்சி
தெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள்
ஜோதிடக்குறிப்பு

      பேச்சிலும் செயலிலும் தெளிவு இருந்தால்தான் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் மதிப்பார்கள்! வாழ்க்கையை


சந்தோசமாக அமைத்துக் கொள்ளமுடியுமல்லவா.
      தரும ஸ்தானங்கள் எனப்படுகிற 1,5,9 க்கு உடையவர்களும் அந்த இடங்களும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால்
உயர் எண்ணங்களுடன் தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அளவான ஆசைகள், அவற்றிட்க்கு
ஏத்த திட்டமிட்ட உழைப்பு, பலருக்கு உத‌வுவதால் பலருடைய அரவணைப்பு எல்லாமே எளிதில் வசப்படும்.
      கீ ழ்கண்ட அமைப்பில் ஒன்றிரண்டு ஜாத‌கத்தில் இருக்குமானால் நீங்கள் தெளிவும் சந்தோசமும் மிக்க
யோகசாலியாக விளங்க முடியும்.
1. ஜாதகத்தில் 1,5,9 க்குடையவர்கள் நல்ல விதமாக நிற்ப்பது.
2. லக்கினத்தில் குரு, 9 ல் சூரியன், 5 ல் செவ்வாய் நிற்ப்பது.
3. லக்கினத்தில் சூரியன், 9 ல் செவ்வாய், 5 ல் குரு நிற்ப்பது. மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு இவ்வாறு இருந்தால்
தெளிவும் சந்தோச மிக்க வாழ்க்கை அமைய உதவும்.
      1,5,9 க்குடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் பிரபல யோகமாக
அமையும்.
      1,5,9 க்குடையவர்கள் அவரவர் வடுகளில்
ீ ஆட்சி பலத்துடன் நின்றாலே யோகமுண்டு.
      9 ம் இடம் திரிகோண ஸ்தானம் என்பதால் அங்கு நிற்க்கும் கெட்டவர்களும் நல்லது செய்வர் என்ற விதிக்கேற்ப்ப
ஸ்திர லக்கினகாரர்களுக்கு 9 ம் இடம் பாதக ஸ்தானம் ஆனாலும் அங்கு அமர்ந்த 9 ம் அதிபதி யோகாதிபதியே என்றே
கருதவேண்டும். யோகமே செய்வார்.
      1,5,9 க்குடையவர்கள் கேந்திர திரிகோணங்கள், தனலாப ஸ்தானங்களில் கெடாது அமர்ந்திருந்தால் தெளிவும்
சந்தோசமும் மிக்க வாழ்க்கையே அமையும்.
      1,5,9 க்குடையவர்கள் 6,8,12 ல் மறைந்து விட்டால் ஜாதகர் குழப்பவாதியாகத் திகழ்வார். சின்ன சின்ன விசய‌ங்களில்
கூட முடிவெடுக்க திண‌றுவர். சிறு வயதில் பெற்றோரும், வாலிப வயதில் மனைவியும், முதுமையில் பிள்ளைகளும்
வழிகாட்டியாக வேண்டும்.
      1,5,9 க்குடையவர்கள் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தாலும் பகை, நீசம் பெற்று கெட்டிருந்தாலும் அல்லது
1,5,9 க்குடையவர்கள் கெட்டு சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் சில சமயம் ஜாதகர் குழப்பவாதியாகவும், சில
சமயம் தெளிவானவராகவும் காட்சி த‌ருவார்.
      1,5,9 க்குடையவர்கள் ஜாதகத்தில் கெட்டு, 1,5,9 ம் இடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்க்கையில்
எதிர்நீச்சல் போட்டால் தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
      மேலும் ஜாதகத்தில் 1,5,9 க்குடையவர்கள் மூவருமே சுத்தமாக கெட்டிட வாய்ப்பில்லை. ஒருவர் நன்றாக அல்லது
ஒரு இடம் நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சந்தோசமான வாழ்க்கையை
அமைத்துக்கொள்ளலாம்.

Posted by Anand at 2:18 AM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 5 ம் இடம், 9 ம் இடம், குரு, கேந்திரம், சூரியன், செவ்வாய், மேஷ லக்கினம்

Monday, June 20, 2011

தொட்டது துலங்க ஜோதிடக்குறிப்பு

      ஒருவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதி எனப்படும் 10 க்கு உடையவர், கெடாது நல்ல இடங்களில் இருக்க அவரை சுபர்
பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது அல்லது ஜீவனஸ்தானத்திற்க்கு சுபர் பார்வை, சுபர்
சம்பந்தம் இருக்குமானால் ஜாதகர் தொட்டது துலங்கும். அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர்
நல்ல லாபம் பெறுவார். இவருக்கும் நிறைய ஊதியம் கொடுத்து மகிழ்விப்பார். ஜாதகர் சுயதொழில் செய்தாலும்
உயர்வடைவார்.
     ஜீவனாதிபதி எனப்படும் 10 க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை சுபர் பார்க்கும் அமைப்பு
அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். ஜாதகர் திறமைசாலியாக இருந்தாலும்
பெரிதாக ஏதும் சோபிக்க முடியாது. அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் சுமாரான‌லாபம்
பெறுவார். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் சுமாரான ஊதியம் பெறுவார். ஒரு இடத்தில் வேலை
செய்யும் போது இவர் ப‌த்தோடு பதினொன்றாக இருப்பர். இவருக்கு மற்றவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் போது
இவருக்கும் கிடைக்கும். வாழ்வு இவர் அதிர்ஷ்டக்கட்டை என்று நொந்து கொள்ளக்கூடிய விதமாகத் தான் இருக்கும்.
     ஜீவனாதிபதி எனப்படும் 10 க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை கொடியவர் பார்க்கும்
அமைப்பு அல்லது அவர் கொடியவருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். இவர்கள் எந்த
இடத்திலும் வேலைக்கு ஒழுங்காக இருக்கமாட்டார். இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிக்கு நஷ்டம்
தான் வரும். இவர்களை முதலாளி வேலையை விட்டு நீக்கி விடுவர் அல்லது ஊதியம் போதவில்லை என்று
இவர்களாகவே வேலையை விட்டு நின்று விடுவர்.
இந்த மாதிரி அமைப்புடையவர்கள் நீச்சத்தொழில்கள் எனப்படுகிற பொருட்களை அழிக்கும் தொழிலை காண்ட்ராக்ட்
எடுத்து செய்தால் சோபிக்கலாம்
நீச தொழில்கள்:
1. பழைய கட்டிடங்களை இடிப்பது
2. பழைய பாலங்களை இடிப்பது,
3. பாழடைந்து கிடக்கும் தோட்டம், துறவு இவைகளை சுத்தம் செய்யும் தொழில்
4. மருத்துவமனைக் கழிவுகளை அகற்றுவது போன்றவை.
      இவர்கள் இதைக் க‌ருத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் சோபிக்கலாம்.

Posted by Anand at 11:25 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம்

அதிபுத்திசாலி-ஜோதிடக்குறிப்பு
மகரம் கும்பத்தில் புதனும் செவ்வாயும் இனைந்து நிற்ப்பது நல்லதல்ல. அவ்வாறு இனைந்து நின்றால், ஜாதகர் உலகில்
உலாவி எல்லோரையும் விட நான் தான்  மகாபுத்திசாலி எனும் கர்வம் உடையவராக எல்லோரையும் கேலி
செய்துகொண்டும், பிறரது செயல்களில் குற்றம் கண்டுபிடுத்துக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பார். தனது
இந்த குண இயல்பால் விரோதிகளை நிறையவே தேடிக்கொள்வார்.

Posted by Anand at 7:28 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: கும்பம், செவ்வாய், புதன், மகரம்

பிரபல ராஜயோகம்
லக்கினாதிபதி லாபம் ஏற வேண்டும், 9,10 க்குடையவர்களை 8,11 க்குடையவர்கள் பார்க்கவோ, இனையவோ கூடாது.
இந்நிலை ஜாதகத்தில் இருந்தால் பிரபல ராஜயோகம்
Posted by Anand at 7:22 PM 1 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 10 ம் இடம், 11 ம் இடம், 1 ம் இடம், 8 ம் இடம், 9 ம் இடம், லக்கினம்

அதிர்ஷ்டசாலி1‍-ஜோதிடக்குறிப்பு
அனைத்து லக்கினத்தில் உதித்தவர்களுக்கும், லக்கினாதிபதி கேந்திர வடுகளில்
ீ ஒன்றில் கெடாது இருக்க அதை 5 க்கு
உடையவர் லக்கினாதிபதிக்கு சப்தம ஸ்ப்தம ஸ்தானத்தில் இருந்து பார்க்கும்( அதாவது 1, 5 க்கு உடையவர்கள்
ஒருவருக்கு ஒருவர் பார்க்க) அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாக
விளங்குவார்.

Posted by Anand at 7:08 PM 0 comments   

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: 1 ம் இடம், 5 ம் இடம், கேந்திரம், லக்கினம்

Sunday, June 19, 2011

சூரியன் தரும் சுகங்கள்

சூரியன் ஆட்சி, உச்ச பலத்துடன் சுபர் பார்வை சம்பந்தம்  பெற்று நின்றால் ஜாதகருக்கு கிடைக்கும் சுகங்களாவன:‍
1. ஜாதகருக்கு அரசு/அர‌சியல் தொடர்புகளால் லாபமுண்டு.
2. வி.ஐ.பிக்களின் தொடர்பு சுலபமாக கிடைக்கும், ஜாதகரும் வி.ஐ.பியாக திகழ‌முடியும்.
3. ஜாதகர் ஒழுங்கு நன்னடத்தை காரணமாக, பாரட்டுகளையும், நல்ல நல்ல வாய்ப்புகளையும் பெறமுடியும்.
4. ஜாதகர் தனது கெளரவம், ஆளுமைத்திறன் இவற்றை உணர்ந்து சமுதாயத்தில் தன்னை எல்லோரும் நல்ல விதமாக
பேசுமாறு நடந்து கொள்வார்.
5. எதிரிக்கு அஞ்சமாட்டார், தனது வழியில் குறிக்கிடுபவர்களை பந்தாடுவார். வரன்,
ீ சூரன் என பெயர் வாங்குவார்.
6. ஆண்மையும் வரமும்
ீ தரும் சூரியன், தனது வாழ்நாளில் எளியவர்களைக் காப்பாற்றுவார், தான தருமங்கள்
செய்வார். ஆலய பணி, தெய்வகாரியங்களுக்கு உதவுவது என அனைத்து நல்ல காரியங்களும் தன்னால் இயன்றவரை
செய்வார்.
சூரியன் ஜாதகத்தில் பகை, நீசம், கெட்டவர்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால்:
1. ஜாதகர் இம்சை அரசனாக மாறி மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் கான்பார்.
2. தனது சுயநலத்திற்க்காக உலக பாவங்கள், பாதகங்கள் அனைத்தையும் செய்வார்.
3. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யோக்கியனைப் போல் நடமாடும் மாகாநடிகனாக விளங்குவார்.

கல்வி
இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு தன்னுடைய ஜீவனத்தித்ற்கு , சுக போக எதிர்கால வாழ்விற்கு, சமூகத்தில் மதிப்புடன்
வாழ மற்றும் நல்ல குணநலன்களை பெற்று வாழ்கையில் திருப்புமுனையாக அமைத்து கொடுப்பது இந்த கல்வி ஆகும்.
எனவே தற்போது இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய குழந்தைகளை முன்னணியில் உள்ள கல்வி நிறுவனத்தில்
பல லட்சம் செலவழித்து படிக்க வைக்கின்றனர். ஆனால் இதெல்லாம் எதற்கு? தன் குழந்தைகளை
DOCTOR,ENGGINEER,PROFESSIONAL மற்றும் இதர துறைகளில் படித்தவுடன் CAMPUS INTERVIEW ல் வேலை கிடைக்கவேண்டும்
என்றா நோக்கத்தில் தான். ஆனால் இதெல்லாம் நடக்கிறதா? பலருக்கு தோல்வி ஏற்படுகிறது இதற்கு காரணம் பல உண்டு
அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் ஜாதகரின் திறமைகளை அறியாமல் செய்யப்படும் முடிவும் ஒன்று ஆகும்.

எனவே PRE KG சேர்க்கும் முதலே குழந்தைகளின் ஜாதகத்தினை ஆராய்ந்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை
ஊக்குவிப்பது, நல்ல நாள் பார்த்து ஆரம்ப கல்வியை கல்வி நிறுவனத்தில் ஆரம்பிப்பது, இதெல்லாம் கணக்கில் கொண்டு
பெற்றோர்கள் செயல் படும் போது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படுகிறது
அதற்கு ஜாதகத்தில் ஆராயவேண்டியவைகள் :

• 2 மிடம் ஜாதகரின் ஆரம்ப கல்வியை குறிக்கிறது

• 4 மிடம் பட்டப்படிப்பையும்

• 8 மிடம் தொழில் நுணுக்கக் கல்வியையும்

• 9 மிடம் உயர் கல்வி – PG COURSE

• 12 மிடம் ஆராய்ச்சி கல்வி

• 5 மிடம் திறமை,புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறிக்கும்

• மேலும் கல்வி காரகன் புதனின் நிலை, மனோ காரகன் சந்திரனையும், மூளை காரகன் குருவையும் ஆராய்ந்து பலன் உரைக்க
வேண்டும்

• புதன் நீசமாக கூடாது. அந்த நீசா புதனை பாவ கிரகத்தின் பார்வை இருக்க கூடாது. 2 ல் நீசக்கிரகம் இருக்ககூடாது

• புதன் நீசமானாலும் சில கிரக அமைப்பினால் கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் உதாரணம் : மீ னத்தில் புதன் நீசமடைந்து
அங்கு குரு பகவான் ஆட்சி பெறும் போது நீசபங்கம் ஆகி புதன் பலம் பெற்று கல்வியை அளித்து விடுவார்.

• புதன் 2 மிடத்தில் இருப்பது கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்பது விதி. புதனுடன் சூரியன் அல்லது குரு சேர்ந்து
இருந்தால் நல்ல கல்வியை ஏற்படுத்தி விடும். ஆனால் தீய கிரகங்கள் தொடர்பு கல்வியை கெடுத்து விடும் அல்லது
தடங்கல்களை ஏற்படுத்திவிடும்.

• எந்த லக்கனமாக இருந்தாலும் புதன் கன்னியில் இருந்தால் கல்வியில் உயர்வு உண்டு ஆனால் பாவக சக்கரத்தில் மாறாமல்
இருந்து பரலின் எண்ணிக்கை 24 க்கு குறையாமல் இருந்து பாவ கிரகத்தின் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும்

• பாவகர்த்தாரி தோஷத்தில் புதன் இருக்ககூடாது

• காரகன் பலமாக இருந்தாலும் காரகத்தின் வடுகள்


ீ கெட்டுவிடக்கூடாது.

எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஜாதகரின் கல்வி நிலையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கல்வி நல்ல
சிறப்பையும் அதற்கு உண்டான உத்தியோகம் / தொழிலை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்க்கை சுமை இல்லாமல்
சுமூகமாக சிறக்க வழிவகை செய்யும்

Posted by Unknown at 1:11 AM No comments:   

SUNDAY, MAY 3, 2015

கோசார குரு பலன்


கோசார குரு இலக்கணத்திற்கு
1,2,4,5,6,9,10,11,இல் வரும் காலம் உடல் நலம் செல்வம் புகழ் வெற்றி வாய்ப்புகள் எண்ணங்கள்
நிறைவேறும் வாய்ப்பு பகை வெல்லும் நிலை கல்வியில் தேர்ச்சி புகழ் இவை ஏற்படும் 3,8,12 இல் வரும்
காலம் அனைவருடனும் சண்டை சச்சரவு பகைவரால் தொல்லை வியாதிகள் நோக்கமில்லா 
செயல்பாடுகள் இவை ஏற்படும் 

Posted by Unknown at 12:59 AM No comments:   

குருபகவான் வக்கிரம்
குருபகவான் பிறந்த ஜாதகத்தில் வக்கிரம் பெற்று 2,4,5,7,9,11 இல் இருப்பது அதிர்ஷ்டமே .1,3,6,8 இல்
இருப்பது வியாதிகளைத் தரும்
Posted by Unknown at 12:49 AM 1 comment:   

கிரகங்கள் ஒரு நாள் செல்லும் தூரம்

சந்திரன் -பாகையில் இருந்து 15 பாகை வரை


சூரியன் -1 பாகை
சனி -2 நிமிடம்
குரு -5.15 நிமிடம் வரை
செவ்வாய் -30.45 .நிமிடம் வரை
புதன் -66.10  நிமிடம் வரை
சுக்கிரன் -62.82. நிமிடம் வரை
யுரானஸ் -42. செகண்ட்
நெப்டியூன்-24. செகண்ட்

Posted by Unknown at 12:40 AM No comments:   

SUNDAY, APRIL 26, 2015

கணவன் மனைவி மரணம்


8 ஆம் இடத்தில் பாபர் இருந்தால் புருஷன் மரணமடைவான் அதுபோல் புருஷனுக்கு 2 ல் பாபர் இருந்தால்
ஸ்திரீ மரனாமடைவால் 

Posted by Unknown at 12:49 AM No comments:   

நீ சபங்க ராஜயோகங்கள்

எந்தக் கிரகம் நீசமடைந்துள்ளதோ அந்தநீச ராசி நாதனாவது அக்கிரகமாவது சந்திர எக்கிரகத்திற்கு


இருந்தால் தருமவானும் சக்கரவர்த்தியும் ஆவான்

சூரியன் துலாத்தில் நீசம் பெற்றாலும் அந்தநீச ராசிக்கு உச்ச நாதனான சனி சந்திரனுக்குச் கேந்திரத்தில்
இருந்ப்பதால் சூரியன் நீசபங்க ராஜயோகம் கொடுக்கும்

நீசனிருக்கிற ராசி நாதனாவது அல்லது அந்நீச ராசிக்கு உச்ச நாதனாவது இலக்கினத்திற்குக் கேந்திரத்தில்
இருந்தால் அவன் அனைத்து ராஜாக்களாலும்  வணங்கப் பெறும் சக்கரவர்த்தியாவான்

ஓர் கிரகம் ஒரு ராசியிலிருந்து அவ்விராசிநாதானால் பார்க்கப் பெற்றால் கீ ர்த்தியுள்ள அரசனாவான்


அவ்விதமாய் நல்ல ஸ்தானங்களில் இருந்துவிட்டால் அரசனாவதற்குத்  தடையேயில்லை

நீச கிரகத்திற்கு நீச ராசிநாதணும் அந்நீச கிரகத்திற்கு எது உச்ச ராசியோ அவ்விராசினாதணும்
சம்மந்தப்பட்டாலும்  ராஜாவாவான்

சுக்கிரன் கன்னியில் நீசம் நீச ராசிநாதன்  புதன் சுக்கிரனுடைய  உச்சராசியான மீ னத்திற்கு ராசிநாதன் குரு
இப்புதணும் குருவும் ஒரு ராசியில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும்  நீசபங்க
ராஜ யோகமாகும்   
Posted by Unknown at 12:43 AM No comments:   

கேள்வி அரசன் யார்


குருவினாலாவது புதனாலாவது இலக்கினாதிபன் பார்க்கப் பெற்றால் கல்வி கேள்வியில் அரசனாவான் 

Posted by Unknown at 12:11 AM No comments:   

SUNDAY, APRIL 12, 2015

அழகிய நல்ல வடு



இலக்கினத்திற்க்குக் கேந்திர திரிகோண பாகங்களில் எத்தனைக் கிரங்கள் இருக்கின்றதோ அத்தனை
அழகிய நல்ல வடுகள்
ீ ஜாதகனுக்கு உண்டு 

Posted by Unknown at 12:32 AM No comments:   

சிறந்த கொடையாளி
இரண்டாவது பாவத்தில் சந்திரனிருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஜாதகன் சிறந்த கொடையாளி  

Posted by Unknown at 12:28 AM No comments:   

தனம்
இலக்கின பாவமும் 2 வது பாவமும் பரிவர்த்தனமானால் அதிகப் பிரயாசையில்லாமல் ஜாதகனுக்கு தனம்
வந்து சேரும்

Posted by Unknown at 12:23 AM No comments:   

SUNDAY, APRIL 5, 2015

தாம்பத்திய. சுகம்
லக்னத்திற்கு 12 ல் ராகு அல்லது கேது அல்லது செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அல்லது பார்த்தாலும்,
தாம்பத்திய. சுகம் திருப்திகரமாக. இருக்காது, சுக்ரன் நன்றானால் ஓரளவு நன்றாகும். 

Posted by Unknown at 12:31 AM No comments:   

SATURDAY, APRIL 4, 2015

கண் நோய்
12,2 இவ்விடங்களைச் சனி  அல்லது செவ்வாய் பார்த்தாலும் அல்லது அவ்விடங்களில் இருந்தாலும்
சூரிய சந்திரர்களில் அவ்விதம் 12,2 மிடங்களில் இருந்தாலும் அல்லது அவ்விடங்களைப் பார்த்தாலும்
கண்நோய் பாதிக்கப்பருவான்

பொதுவாக இலக்கினத்திற்கும் இருபிறம் பாபக்கிரகங்கள் இருந்தால் கண் நோயால் பாதிக்கப்படுவான் 

Posted by Unknown at 11:54 PM No comments:   

7 ம் 6 ம் இடம் பலன்

7 ஆமிடத்தில் ராகு சூரியன் இவர்கள் சேர்ந்திருப்பின் பெண்கள் சகாசத்தால் பொருள் நாசமேற்படும்


Posted by Unknown at 11:45 PM No comments:   

SATURDAY, MARCH 28, 2015

காம்பயோகம்
காம்பயோகம்
ஒரு ஜாதகத்தில் 2 ம் இடத்தில் குரு இருக்க, 4 ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7 ம் இடத்தில் செவ்வாய்
மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று
பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வடு,
ீ அழகான அன்பான
மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

Posted by Unknown at 11:41 PM No comments:   

அனுசம்
அனுசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
தாமரை பூப்போல் தழைந்த முகமும்
நீண்ட மூக்கும், உயர்ந்த கண்களும்,
பூரித்த கொங்கையும்,
புதுமலர் மணமும்,
தத்தைபோல் சொல்லும் சுத்த முடைமையும்
மனமகிழ் அன்பும் உடைய தெய்வதம்
அனுஷ நாளில் பிறந்தவள் அறிக ,!

Posted by Unknown at 11:39 PM No comments:   

ஆண்மை குறைவு! வருமுன் காப்பது எப்படி?

ஆண் மலடு நீங்க:-


அரச விதைதூள் மலத்தினை நீக்கும்
ஆண்மை குறைவு நீங்க:-
மாதுளம் பாசம் இரவில் தினந்தோறும் சாப்பிடவும்
இழந்த இளமையை பெற:-
அமுக்கிராபொடி கசகசா, பாதாம் பருப்பு, சாரப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்
ஆண்மை பெற:-
சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம்.
மருந்துகலாக பெறலாம்......

Posted by Unknown at 11:31 PM No comments:   

பெண் ருதுவாகும் கிழமைகளின் பலன்கள்

திங்கள்
திங்கள் கிழமையில் ருதுவாகும் பெண்கள் சந்திரனை ஒத்த அழகுடையவர்கள். அறிவிற் சிறந்தவர்கள்
சற்றே பூசினாற் போன்ற உடல்வாகு உடையவர்கள். நீளமான கூந்தலை உடையவர்கள்.தங்களை
தாங்களே அலங்கரிப்பதில் ஆர்வமுடையவர்கள். குளிர்ச்சியான இடத்தில் வசிக்கவே விரும்புவார்கள்.
செவ்வாய்
செவ்வாய் கிழமையில் ருதுவாகும் பெண்கள் ஒல்லியான உடல்வாகு உடையவர்கள். சிவப்பு
நிறமுடையவர்கள்.கூந்தல் அடர்த்தி குறைந்த அளவே உள்ளவர்கள். உஷ்ணமான உடம்பை
கொண்டவர்கள்.
எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்
புதன்
புதன் கிழமை ருதுவான பெண்கள் அறிவிற்சிறந்தவர்கள். கணிதத்தில் வல்லர்கள்.ஓரளவு அடர்த்தியான
முடியை உடையவர்கள். புகுந்த வட்டில்
ீ குடும்பமே மெச்ச கூடிய பெண்ணாக இருப்பார்கள். எந்த
சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்க கூடிய திறமை பெற்றவர்கள்.
வியாழன்
வியாழக் கிழமை ருதுவான பெண்கள் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையுள்ள குடும்பத்தில்
பிறந்தவர்கள். தெளிவான அறிவு பெற்றவர்கள். இவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களுக்குப் பின்னூம்
ஒரு காரணம் இருக்கும்.
வெள்ளி
வெள்ளிக் கிழமை ருதுவான பெண்கள் மிகுந்த கர்வம் உடையவர்கள். அடுத்தவர்களை எளிதில்
தூக்கியெறிந்து பேசும் குணமுடையவர்கள். இவர்களில் சிலரே தங்களை அலங்கரிப்பதில்
ஆர்வமுடையவர்கள்.பிறந்த இடத்தை விட வசதியான இடத்தில் வாழ்க்கை படுபவர்கள்.
சனி
சனிக் கிழமையையில் ருதுவாகும் பெண்கள் பெரும்பாலும் கருப்பு அல்லது மாநிறம் உடையவர்கள்.
எத்தகைய வறுமையிலும் வாழ்க்கை நடத்துவார்கள்.சராசரியை விட சற்றே குள்ளமாக இருப்பார்கள்.
பிறந்த இடத்தை விட வசதி குறைவான இடத்தில் வாழ்க்கை படுவார்கள்.

ஞாயிறு
ஞாயிற்றுக் கிழமையில் ருதுவான பெண்கள் அடுத்தவர்களை அடிமைப் படுத்தும் எண்ணம்
உடையவர்கள். இவர்களும் குறைவான முடி உள்ளவர்களே. அனைவரும் இவர்களை எப்போதும்
புகழவேண்டும் என்று விரும்புவர்கள். இவர்கள் வாழ்க்கைப் படும் இடத்தில் இவர்கள் சொல் மட்டுமே
எடுபடும்.

Posted by Unknown at 11:28 PM No comments:   

திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
சிவந்த மேனியும் செல்வமும் கூடி
பலனில் லாதசொல் பாராட் டாமையும் ஆழ்ந்த அறிவும் அன்பும் நிறைந்து
சினங்கொண்டாலும் சீக்கிரம் தணிந்து
நாயகன் தானே நாடிடும் தெய்வதம்
திருவோ ணத்தில் பிறந்தவள், தெளிக !
Posted by Unknown at 11:26 PM No comments:   

உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்
பட்டியல் தூண்போல் பருத்த தொடையும்
ஒன்றையும் விரும்பி ஒடாத குணமும்
மழலைப் பேச்சும்
மலர் போல் பாதமும்
அழகிய கணைக்கால் அளவுள்ள உடம்பும்
நாயகன் தனயே நயக்கும் அன்பும்
கள்ளம் கபடம் காடுகள வின்றி
மனதைத் திறந்து வார்த்தைகள் வசும்

உத்தமத் தெய்வதம் உத்தரட் டாதி
நாளில் பிறந்த நன்மகள் ,அறிக!
தெய்வ தத்துவ லட்சண பெண்களின் ஆசைகள்

Posted by Unknown at 11:25 PM No comments:   

முதல் நட்சத்திரமான ஹஸ்தம்


ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
புளிப்போடு கூடிய உணவுகளை உன்ன விரும்புவாள்
நல்ல விஷயங்களையே பேசுவாள்
இவள் பிறந்த இடத்திலும் புகுந்த இடத்திலும் செல்வம் கொழிக்கும்
நல்ல குணம் படைத்தவள்
தாமரை மொட்டுப்போல் கொங்கை இருக்கும்
வளமான பரந்த கண்கள் இருக்கும்
மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவாள்

Posted by Unknown at 11:24 PM No comments:   

பெண் நட்சத்திரங்களான ஹஸ்தம்,மிருகசீரிடம்,திருவாதிரை, ரோகிணி

இவர்களின் ஆசைகள்
சிவப்பு சேலை கட்டுவதயே அதிகம் விரும்புவாள்.
இனிப்பு அதிகம் சாப்பிடுவார்கள்.
காலை பொழுதில் உறங்குவார்கள்
நல்ல குணம் உடையவர்கள்
செண்டு பூசிக் கொள்வதில் ஆசை உடையவர்கள்
தனது கணவனோடு தனியாகவே வாழ விரும்புவாள்.

Posted by Unknown at 11:22 PM No comments:   


ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் உடம்பு மாசு மருவில்லாமல் சுத்தமாக இருக்கும்.
ஆனால் கடுமையான கோபக்காரி.
காடுகளிலும்,பூந்தோட்டங்களிலும் சுற்றி வர ஆசைப்படுவாள்.
தன் கணவனைவிட மற்றவர்களைச் சேருவதயே விரும்புவாள்
யாரிடமும் நிலையான அன்பிருக்காது.
கபடம் நிறைந்தவள்.
மிகப்பெரிய பால் சொம்புபோல் தனம் இருக்கும்.

Posted by Unknown at 11:22 PM No comments:   

மிருகசீரிடம்
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்
கருத்து பெருத்த வாய் உடையவள்
கருணை இல்லாதவள்
சிலருக்கு சோறு கூடப் போடமாட்டாள்
வட்டில்
ீ அமைதியாக ஆனந்தமாக இருக்க மாட்டாள்
அடிக்கடி வெளியே நடப்பாள்
அறிமுகமான அனைவரிடமும் பேசுவாள்
புளிப்பு மிகவும் பிடிக்கும்
மிகவும் பெரிய தனங்கள் தோள்வரை உருண்டு இருக்கும்

Posted by Unknown at 11:21 PM No comments:   

திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மறைவிடத்தில் ரோமம் அதிகமாய் இருக்கும்.
ஆனால்
அண்டி வருபவர்களுக்கு உபகாரம் செய்வாள்.
அழகாய் சுத்தமாக இருப்பாள்.
புருசனுக்கு நல்லதயே செய்வாள்.
இவள் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஆனால்
ஆழமான மனம் உடையவள்.

Posted by Unknown at 11:19 PM No comments:   

உறவு முறைகளில் ஒரு சில விதிகள்


1) 5 -ம் இடத்தை குரு பார்த்தால் ஒரு மாமன் சிறப்பு.

2) புதன் மறைந்திருந்து சனி பார்த்தால் மாமன் வர்க்கம் 3-க்கு மேல்.


3) 3-ஆம் அதிபதியை சனி பார்த்தால் உடன்பிறப்பு - 5- பேர்.
Posted by Unknown at 11:18 PM No comments:   

மாந்தி நன்மை & தீமைகள்


மந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று
அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு ! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும்
அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதகாதேசம், ஜாதக பாரிஜாதம் முதலான
ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன.
சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல், பாப கிரகங்களில் அடங்குபவன்; ஆகவே, குளிகன்
இருக்கும் ராசிநாதன், அவன் சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான்
என்கிறது ஜோதிடம். உதாரணமாக, குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், ஆண் ஜாதகத்தில் 7 ல்
இருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் 7 ல் இருந்தால் கணவனை இழப்பாள்
என்றும் சொல்வர் (மாந்திராசீச்வரோவா). திருமணப் பொருத்த விஷயத்தில், கேரள அறிஞர்கள்
இன்றைக்கும் குளிகனையும் சேர்த்துப் பலன் சொல்கின்றனர். அனுதினமும் குளிகன் உதிக்கும்
வேளையை நாம் தவிர்ப்போம். ராகு கால அட்டவணை போல், குளிகை கால அட்டவணையையும்
குறிப்பிடுகிறது பஞ்சாங்கம். நல்ல காரியங்களுக்கு ராகுவைத் தவிர்ப்பது போல், குளிகனையும்
தவிர்ப்பது உண்டு. முகூர்த்த சாஸ்திரம், குளிகை காலத்தைத் தவிர்க்கச் சொல்கிறது. முற்பிறவியின்
கர்மவினைப் பலனை, காலம் அதாவது வேளை நம்முடன் இணைக்கும். காலத்துடன் இணைந்த மாந்தி
எனப்படும் குளிகனுக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவதில் பங்கு இருப்பதால், பலன் சொல்லும்
விஷயத்தில் அவனையும் கவனிப்பது பொருந்தும். சனியின் புதல்வன் குரூரன், துஷ்டன்; எதையும்
அழிக்கும் இயல்பு கொண்டவன்; பாம்பு வடிவில் தோன்றுபவன்; கண்ணுக்கு இடுகிற மை நிறத்தில்,
கருநீல நிறத்திலானவன். வட்ட முகமும், சிவந்த கண்களும், நீண்ட பற்களும் (த்ம்ஷ்ட்ரம்) கொண்டு,
பயமுறுத்தும் தோற்றத்தைக் கொண்டவன் என்கிறது ஹோரா சாஸ்திரம். அவனால் ஏற்படும்
இன்னல்களை அகற்ற குளிக சாந்தியைப் பரிந்துரைக்கின்றன பரிகார நூல்கள். அவனுடைய
காயத்ரியைச் சொல்லி (குளிக காயத்ரி) வழிபட்டால் நன்மை என்கிறது சாந்திமயூகம்.
பிரஸ்னம் எனும் ஜோதிடப் பிரிவு, குளிகஸ்புடத்தைச் சேர்த்துப் பலன் சொல்கிறது. மரணத்தை
வரையறுக்க, மரண குளிகனைக் கவனித்து முடிவு எடுப்பார்கள். த்ரிஸ்புடம் எனும் பிரிவில்
குளிகஸ்புடத்துக்கும் பங்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை, சூரியோதயத்தில் இருந்து 26 நாழிகையில்
தோன்றுவான் குளிகன். நான்கு நாழிகை குறைந்து, அடுத்தடுத்து வரும் கிழமைகளில் (26 ல் இருந்து 22,
அடுத்து 18,14,10,6,2) என சனிக்கிழமை வரை உதயமாகும் வேளையை அறிந்து, ஜாதகத்தில் இருக்கும்
ராசியில் இடம் பிடித்துவிடுவான். அவன், லக்னத்தில் இருந்தால் சிந்தனை வளம் குறையும்; பாப
கிரகத்துடன் இணைந்தால், ஏமாற்றுபவனாக மாறுவான்; அதிக ஆசையால் சிக்கித் தவிப்பான். இரண்டில்
இருந்தால், புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் முனைப்புக் காட்டுவான். அங்கே, பாப கிரகத்துடன்
இணைந்தால், ஏழ்மையில் தவிக்கச் செய்வான். 3 ல் இருந்தால், அந்த ஜாதகதாரர் மிதப்புடன்
தென்படுவார்; உடன்பிறந்தாரை இழப்பார்; பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவார். தேக
ஆரோக்கியமின்றி இருப்பார். 4 வது வட்டில்
ீ தென்பட்டால், கல்வி, மகிழ்ச்சி, வடு,
ீ நிலபுலன்கள்
ஆகியவற்றை இழக்கச் செய்வான். 5 ல் இருந்தால், மனதின் பலத்தை இழக்க நேரிடும்; தவறான
செயல்களில் ஈடுபடுவர்; பிள்ளைச் செல்வத்தைக் குறைத்து விடுவான் குளிகன். 6 ல் இருந்தால்,
எதிரிகளை அழிப்பான்; செப்படி வித்தை, மாயாஜாலம் ஆகியவற்றைக் கையாள்வான். 7 ல் இருந்தால்,
சண்டைச் சச்சரவை ஏற்படுத்துவான். தரம் தாழ்ந்த மனைவியைப் பெற நேரிடும்; செய்நன்றியை மறக்கச்
செய்வான். 8 ல் இருந்தால், கண்கள் மற்றும் முகத்தின் அழகை இழக்க வாய்ப்பு உண்டு. 9 ல் இருந்தால்,
தந்தை மற்றும் பெரியோரை வெறுக்க நேரிடும். 10 ல் இருந்தால், சூடுசொரணை இல்லாதவராக
மாற்றுவான்; தரத்துக்குச் சம்பந்தமில்லாத வேலையில் காலம் கடத்துவான். 11 ல் இருந்தால், செல்வம்,
புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு, பெருந்தன்மை, சமூக அங்கீ காரம் ஆகியவற்றை அளிப்பான். 12 ல்
இருந்தால், ஆண்டியின் நிலையை ஏற்படுத்துவான்; அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவான்.
குளிகன், 11 ல் மட்டும் நல்லவன்; மற்ற வடுகளில்
ீ அவன் கெடுதலையே வழங்குவான் எனச் சுருக்கமாகச்
சொல்வர். 11 ல் அவன் ஆகலாம்; மற்ற பதினொன்றில் அவன் ஆகா என்கிற சொல்வழக்கு உண்டு.
ஆனால் ஒன்று... அவனுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையில், குளிகை பலம் மாறுபடும் என்பதை
மறக்கக்கூடாது.
வலுவான கிரகங்களுடன் இணையும்போது, குளிகனின் பலன் மங்கிவிடும். ஷட்பலம், ÷ஷாடசபலம்
ஆகியவற்றை ஆராயும்போது, குளிக பலனின் மாற்றத்தை அறியலாம். ஆழமான சிந்தனையின்
அடிப்படையில், கிரகங்களின் தராதரத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, கூட்டுப்பலனை வெளியிடும் தருணத்தில்,
குளிக பலன் மாறுபாட்டைச் சந்திக்கும். குளிகன், சூரியனுடன் இணைந்தால், தகப்பனை வெறுப்பான்;
சந்திரனுடன் இணைந்தால், தாயாருக்குத் துயரத்தைத் தருவான். செவ்வாயுடன் இணைந்தால்,
சகோதரனை இழப்பான்; அல்லது, வெறுப்பான். புதனுடன் இணைந்தால், மனநலம் குன்றும்; குருவுடன்
இணைந்தால், நன்னடத்தை மறையும். சுக்கிரனுடன் இணைந்தால், தரம்தாழ்ந்த மனைவியுடன்
வாழ்வான்; தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கையில் தனது உடல்நலனை அழித்துக் கொள்வான்.
சனியுடன் இணைந்தால், உலகவியல் இன்பத்தை அனுபவிப்பான். ராகுவுடன் இணைந்தால், ஈவு இரக்கம்
இல்லாதவனாக மாறி, விஷம் வைத்து பிறரை அழிக்கவும் துணிவான். கேதுவுடன் இணைந்தால்,
நெருப்பு மூட்டிப் பொருட்களை அழிக்கவும் தயங்கமாட்டான். அவனது முடிவும் சில தருணங்களில்
நெருப்பில் சேர்ந்துவிடும்.
குளிகன் இருக்குமிடத்தில் எந்த நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில் விஷக்
கடிகையும் சேர்ந்திருந்தால், அரசனும் ஆண்டியாவான். குளிகோதய வேளையின் சேர்க்கை, பல
கிரகங்களின் பலன்களை மாற்றி அமைக்கக் காரணமாகிறது. கண்ணில் இருக்கும் விழி சற்றே
நகர்ந்திருந்தால், முகத்தின் மொத்த அழகையும் பாதிக்கும். திக்குவாய் சொல்லழகை இழக்கச் செய்யும்.
நீளமான கழுத்து, உடலழகை பாதிக்கும். ஏழ்மை வாட்டி வதைக்கும்போது, புத்திசாலியும் தவறு
செய்வான். அதுபோல் குளிகனின் சேர்க்கை, விபரீத பலனையே தரும் என்பது ஜோதிடத்தின் கணிப்பு.
குளிகனுடன் இணைந்த புதன், குளிக ராசிக்கு உடையவன் புதன் அல்லது குளிக ராசிக்கு உடையவனுடன்
(மற்ற கிரகங்களுடன்) புதனின் சேர்க்கை, பார்வை ஆகியன இருப்பின், மன நலம் அற்றவர்களாக
மாற்றிவிடும். அறிவு, சிந்தனை வளம் பெருக, புதனின் பங்கு உண்டு. அங்கு குளிக சேர்க்கை மன
வளத்தைச் குன்றச் செய்யும். படிப்பில் ஈடுபாடு இன்மை, பாடங்கள் மனதில் பதியாதது, பதிந்தது
நினைவுக்கு வராமல் தடுமாறுவது, அபஸ்மாரம், காக்காவலிப்பு, ஆராயும் திறன் இல்லாத நிலை,
பிறருடன் இயைந்து பழக முடியாத குணம், எதிலும் பயம், பதற்றம், நம்பிக்கையின்மை ஆகிய
அனைத்தும் குளிகன் சேர்க்கையில் விளையும் என்கிறது ஜோதிடம்.
பல விஷயங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பவர் கூட, குறிப்பிட்ட விஷயத்தில்
மட்டும் சுணக்கத்துடன் இருப்பார்கள். உலகவியலில் கொடிகட்டிப் பறப்பவன், தாம்பத்தியத்தில்
சூன்யமாக இருப்பான். மேதைத்தனம் குன்றி, எதையும் கிரகிக்கும் தகுதியை இழந்து, குழந்தை போல்
முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பார்கள். இவை எல்லாமே குளிகனின் செயல்கள்தான் ! மனதில்
தோன்றும் எண்ணங்களையும், நிகழ்வுகளையும் வெளியே இருப்பதாக நினைத்து மனம் கலங்கும்.
நிலையும் அவனது சேர்க்கையில் நிகழும். இல்லாத சப்தம் காதில் விழுவதாகச் சொல்லி, அந்த ஒலி
தம்மைத் துன்புறுத்துவதாக நினைத்து மனப்பிரமையில் வாடும் நிலைமையும் அவனுடைய
அட்டகாசம்தான் ! ஆக, மன வளத்தைப் பல கோணங்களிலும் சிதறடிக்கும் திறன் அவனுக்கு இருப்பதால்,
மனதை ஆராயும் விஷயத்தில் குளிகனைப் பற்றிய தகவலும் சரியான முடிவுக்கு உதவும். ஆகவே,
அவனைச் சேர்த்துப் பலன் சொல்வது பொருந்தும். இதனை பிரச்னை மார்க்கம், பிரச்னானுஷ்டான பத்ததி
போன்ற நூல்கள் பரிந்துரைக்கின்றன. காலத்தின் அறிவை ஜோதிடம் புகட்டும். காலத்தில் அடங்கியுள்ள
அனைத்தும் அதன் வடிவத்தில் அடங்கும். குளிகனும் அதில் அடங்கியிருப்பதால், அவனையும் கவனித்து
முடிவுக்கு வருவதே உத்தமம் என்றனர் முன்னோர்கள். அவனது செயல்பாடுகளையும் விளக்கியுள்ளனர்.
ராகுகேதுவுக்கு மற்ற கிரகங்களின் தகுதி இல்லையாயினும், காலத்துடன் அவை இணைந்திருப்பதால்
சேர்த்துப் பலன் சொன்னார்கள். அதுபோல், குளிகனையும் சேர்த்தால் தெளிவான பலன் கிடைக்கும்;
ஏமாற இடமிருக்காது !
ராகு காலத்தையும் குளிகை காலத்தையும் கவனித்துப் பழக்கப்பட்ட நமக்கு, பிறந்த வேளையில் குளிகன்
இருப்பதால் விளைகிற நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவது எளிது. நவக்கிரகங்களைப் போல்,
குளிகனும் வழிபடுகிற கிரகமாக இருப்பதால், அவனை வழிபடுவது சிறப்பு. கும் குளிகாயநம: எனும்
பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி, அவனுடைய உருவத்தை 16 உபசாரங்களுடன் வழிபடலாம்.
அதேபோல், மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத் எனும்
செய்யுளைச் சொல்லி, 16 உபசாரங்களைச் செய்து வழிபடலாம். நீலாஞ்ஜனஸங்காசோ
ரக்தா÷ஷாவிஷமபீஷணோதீர்க்க: பஞ்சாஸ்யா: பிருது தம்ஷ்ட்ரோ பயங்கர: ஸர்வதாகுளிக: என்று
சொல்லி வணங்கலாம். சனியின் புதல்வன் குளிகன். எனவே, எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து,
குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்றாடப் பணிகளில் சிக்கித் தவிக்கும் நாம், சனிக்கிழமையில்
மட்டுமேனும் சனி பகவானுடன் சேர்த்துக் குளிகனை வழிபடலாம். உற்சாகத்தில் தினமும் வழிபட
நினைத்துச் செயல்பட்டால், பிறகு நடுவில் வழிபாடு நின்றுவிடலாம். ஈடுபாடும் குறையும். ஆகவே,
வாரத்தில் ஒருநாள், ஒரு வேளை.. சனியை வணங்கும் வேளையில் குளிகனையும் சேர்த்து
வணங்கினால், பொறுமையுடன் வழிபடலாம்; இயலாதவர்கள், நீராடிய பிறகு குளிகன் காயத்ரியை 12
முறை ஜபித்தாலே போதுமானது !

Posted by Unknown at 11:13 PM No comments:   

சிறு துளி::- சனி - ராகு தரும் ராஜயோகம்


1) லக்கனத்திற்கு - 7- ல் உள்ள ராகு நிச்சயமாய் செல்வமும், வளமையும், புகழும் தருவார்.
2) லக்கனத்திற்கு - 3 - 9 -ஆம் இடத்து சனி நிச்சயம் ராஜயோகம் தருவார்.
குறிப்பு :::::-
ராகு ::-
=========
லக்கனத்திற்கு 7 -ஆம் இடத்தில் அமர்ந்த ராகு மண வாழ்வைக் கொடுத்து, பணவாழ்வைத் தரும்.
செல்வம், அதிகாரம், புகழ் ஆகியவற்றைத்தரும். ஆனால், உடல் , குடும்பம்,சுகம், நிம்மதி
ஆகியவைகளைத் தருவதில்லை.
சனி:::-
========
3 - ஆம் இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அதிக முன்னெச்சரிக்கை உடையவராக இருப்பர். தொழிலில்
வளைவு, நெளிவு, சுளிவு இருக்கும் ஆயுள் பலம், நிர்வாகம், பொறியியல் அறிவு, சன்மானம், சாஸ்திர
திறமை, அரசு உதவி, ஆட்சித் திறன் ஆகியவைகள் இருக்கும். சுகவாசியாக இருப்பார். ஆனாலும், 3 - ஆம்
இடத்து சனி தந்தைக்குத் தோஷம் தரும். வண்
ீ செலவு, அயன சயன போகம் தோஷம் உண்டாகும்.
9 -ஆம் இடத்து சனியால் தந்தைக்குத் தோஷம் தருவார். சகோதர நாசம், வண்
ீ செலவு, அவப்பெயர்
ஆகியவைகள் உண்டாகும். என்றாலும், உயர்பதவி, தன யோகம் கிட்டும். முழுக்கமுழுக்க ஜாதகர்
தன்னுடைய கடின உழைப்பால் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே முன்னுக்கு வருவார். இல்லற
வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

Posted by Unknown at 11:08 PM No comments:   

சூரிய சந்திர கிரகணத்தில்


சூரிய சந்திர கிரகணத்தில்; குழந்தை பிறக்கினும் முதல் ருதுவானாலும் வியாதி பீடை முதலிய
துன்பத்தைத் தரும்.
பூராடம் -ரேவதி -3 ம் பாதம்
சித்திரை -பூசம் -2 ம் பாதம் உத்திரம் முதல் பாதம் குழந்தை பிறந்தால் தாய் தந்தைத் அரிஷ்டம் .
உத்திரம் -2 மாதமும்
பூசம் -3 மாதம்
பூராடம் -ரேவதி -8 மாதமும்
சித்திரை -6-மாதம் தோஷம் அதுவரை குழந்தையை தந்தை பார்க்கக் கூடாது சாந்தி செய்யவும்
சாந்தி பரிகாரமாக
உத்திரத்திற்கு எள்ளுடன் கூடிய பாத்திரமும்
பூசத்திற்கு கோதானமும்
சித்திரைக்கு ஆடு தானமும்
பூராடம் ரேவதிக்கு சுவர்ண தானமும் செய்க

Posted by Unknown at 10:46 PM No comments:   

SATURDAY, MARCH 14, 2015

மருத்துவமும்ஜோதிடமும்
ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.

மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.

கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.

ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும்
செய்யக்கூடாது.

லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.

ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.

Posted by Unknown at 10:09 PM No comments:   

SATURDAY, FEBRUARY 28, 2015

செவ்வாய் தோஷம்
லக்னம் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரனுக்கு 2,4,7,8,12 செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம்...
லக்கினத்திற்கு 100% தோஷம்
சந்திரனுக்கு 75% தோஷம்
சுக்கிரனுக்கு 50% தோஷம்...

Posted by Unknown at 9:24 PM No comments:   

TUESDAY, FEBRUARY 17, 2015

நண்பனும் எதிரி
ஒருவர் ஜாதகத்தில் 7-ம் இடம் நண்பர்களை பற்றி அறியும் இடமாகும்.

அந்த 7-ம் இடத்து அதிபதியோடு கேது அல்லது இராகு கூடி எங்கிருந்தாலும், நண்பர்களும் எதிரியாக மாறி
விடுவார்கள்.

7-ம் இடத்து அதிபதி, 6,8,12-க்குரியவனோடு சேர்ந்தாலும், நண்பன் எதிரியாவான். 7-க்குரியவன் நீச்சம் பெற்று
இருந்தாலும் இதே நிலைதான்.

ஆதலால், இப்படிபட்ட ஜாதகர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும், தொழிலில் கூட்டு சேரும்போது


எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் !!

Posted by Unknown at 8:51 PM No comments:   

தினசரி வாழ்க்கைக்கு ஆன்மீ க குறிப்புகள்:


1. வடு
ீ மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை
அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
2. நீங்கள் குரு உபதேசம் பெற விரும்புகிறீர்களா? சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும்
கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
3. சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள்
திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

Posted by Unknown at 8:50 PM No comments:   

கனவுகளும் நம்பிக்கைகளும்
இம்மானிட உலகில் உறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே ஆனால் அவ்வுறக்கம் வரும்
பொழுது மனிதன் உறக்கத்தில் சில நிகழ்வுகளைப் பற்றி அவர் தம் மனக்கண் முன்னே காண முடிகின்றது
அவையே கனவு அவை நல்லவை, தீயவை, என்ற வகையில் அமைகின்றன இருப்பினும் அத்தகைய
உளவியல் கூறுகளை ஒரு சிலர் ஏற்கின்றனர் மற்றொரு சாரார் ஏற்க மறுக்கின்றனர் காரணம் அக்கனவு ஒரு
சிலர் வாழ்வில் அவர்கள் கண்டது போல் பலிக்கின்றன, சிலருக்கு பலிக்காமலும் போகின்றன இருப்பினும் சிலர்
கனவுகள் காண்பதே தவறு என்றும் குறிப்பிடுகின்றனர் இத்தகைய வாதங்களுக்கு நடுவில் நம் முன்னோர்கள்
பலர் கனவுகளும் அவற்றிற்கு ஏற்ற சில நம்பிக்கை முறைகளையும் கூறி வருகின்றனர் அவை பின்வருமாறு :
1) அதிகாலை கனவு பலிக்குமென நம்புகின்றனர்.
2) கனவில் சாவைக் காண்பது நல்லது என்பர்.
3) கனவில் திருமணத்தைக் காண்பது நல்லதல்ல என்பர்.
4) கனவில் மலத்தைத் தொட்டதாகக் கண்டால் செல்வம் அதிகரிக்கும் கனவில் ஆகாய விமானத்தைக்
கண்டால் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தைக் குறிக்கும்.
5) கனவில் இரும்பைக் கண்டால் துன்பம் பல நேரும்.
6) வெள்ளி உலோகத்தைக் கனவில் கண்டால் வாழ்க்கையில் வெற்றியும் பரத்தையர் உறவும் ஏற்படும்.
7) கனவில் ஆப்பிள் பழங்களைக் கண்டால் அதிர்ஷ்டம் ஆகும்.
உப்பைக் கண்டாலும் அதிரஷ்டம் ஆகும், மேலும் ஆமையைக் காண்பதும் அதிர்ஷ்டம் ஆகும் .
8) கனவில் பன்றி, பூ, பெண்கள், ஆடு, பச்சைமரம், விறகு, முதிலியவற்றைக் காண்பது நல்லதல்ல.
9) கனவில் எழுதிக் கொண்டிருப்பதாகக் கண்டால் நல்ல செய்திகள் வரும், மேலும் கனவில் சந்திரனைக்
கண்டால் காதலில் வெற்றி ஏற்படும்.
10) கனவில் ஏர் உழுவதாகக் கண்டால் எடுத்த காரியம் தாமதமாக வெற்றியடையும்.
11) வானத்தில் கழுகு வட்டமிடுவதாகக் கனவு கண்டால் தீமை வரும், மேலும் காகத்தைக் கனவில் கண்டால்
மரணச் செய்தி வரும்.
12) கிணற்றில் நீந்துவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.
13) கனவில் தாமே இறப்பதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும், மேலும் சிறைச் சாலையில் இருப்பதாகக்
கனவு கண்டால் பேரும் புகழும் உண்டாகும்.
14) பொற்சங்கிலி அணிவதுபோலக் கனவு கண்டால் நல்ல அறிகுறியாகும், மேலும் மணியோசைக் கேட்பதாகக்
கனவு கண்டால் திருமணம் நடைபெறும்.
15) சீட்டு ஆடுவதாகக் கனவில் கண்டால் மனக்கவலை ஏற்படும், மேலும் மனைவியைத் தவிர மற்ற
பெண்களுடன் உறவு வைப்பதாகக் கனவு கண்டால் ஆபத்து ஏற்படும்.
16) சூரிய கிரகணம் பிடித்திருப்பது போல் கனவு கண்டால் தீமை ஏற்படும், ஆனால் சூரியன் உதயமாவதாகக்
கனவு கண்டால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.
17) தேர்வு எழுதுவதாகக் கனவு கண்டால் வேலைவாய்ப்பில் உயர்வு ஏற்படும்.
இவ்வாறு மனிதர்களின் கனவுகளுக்கு ஏற்ற நம்பிக்கை முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வருகின்றனர்
இவை வாழ்வியலுடன் ஒப்பிடும் பொழுது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே
இருக்கன்றது....

Posted by Unknown at 8:49 PM No comments:   

ராஜயோக அமைப்புகள்
7 ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11 ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில்
ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும்
இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.

கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11 ல் (கடகத்தில்) குரு
இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.

மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன்
இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வடுகளிலும்
ீ பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.

கும்ப லக்கினத்தில் பிறந்து, 4 ஆம் வட்டில்


ீ உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை
பெற்றால், அந்தப் பெண்ணை மணப்பவன் நாடாளும் பாக்கியத்தை பெறுவான்

Posted by Unknown at 8:47 PM No comments:   

திருமணத்தடை, திருமணமுறிவு ஏற்படுத்த கூடிய சில ஜாதக அமைப்புக்கள்:


1. லக்கினாதிபதியும், இரண்டாம் வட்டுக்குரியவனும்
ீ பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை
அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வட்டிற்கு
ீ இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது
கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வட்டில்
ீ இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வட்டில்

இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவனமாகி
ீ ஆறாம் வட்டில்
ீ குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன்
சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வட்டு
ீ அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8 ஏழாம் வட்டு
ீ அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வட்டுக்காரன்
ீ ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வட்டில்
ீ செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வட்டில்
ீ செவ்வாயும் இருப்பது
நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது.
செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல

Posted by Unknown at 8:45 PM No comments:   

நவகிரகங்களும் நோய்களும்
 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” என்பது பழமொழி. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதையே நாம்
அனைவரும் விரும்புவோம். நாம் இந்த பூமயில் வாழ எத்தனை கோடான கோடி செல்வங்கள் இருந்தாலும்
உடல் ஆரோக்கியம் கெட்டு விட்டால் அத்தனையும் வண்தான்.
ீ உடல் ஆரோக்கியமாக இருந்தால் மற்ற எல்லா
செல்வங்களையும் சுயமாக சம்மாதித்து அனுபவிக்க முடியும். அப்படி பட்ட நல்ல ஆரோக்கியம் எல்லாருக்குமா
அமைகிறதா என்றால் அது தான் இல்லை. நோய்கள் ஏழை பணக்காரர் என பாகுபாடு பார்த்து வருவதில்லை.

நோய் வராமல் தடுக்க மருத்துவ ரீதியாக எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை


மேற்கொண்டாலும் அவரரின் ஜெனன ஜாதக அமைப்பு என்று ஒன்றிருக்கின்றதல்லவா? அதில் அமையும்
கிரகங்களின் நிலைப்படி நோய்கள் அந்ததந்த கிரகங்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் வந்தே தீரும்.

விஞ்ஞான வளர்ச்சிகள் நோயினை குணப்படுத்தி விடும் என்றாலும் ஜோதிட ரீதியாக நம்மை ஆளும்
நவகிரகங்களும் நம்முடைய ஜனன ஜாதக ரீதியாக பலமாக அமைய வேண்டும். எவ்வளவு மருத்துவ
செலவுகள் செய்தாலும் குணமாகாத நோய்கள் கூட மாரியம்மன் கோயில் வேப்பிலையால் குனமடைகிறதே
அதற்கு காரணம் ஜோதிட ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தின்
மூலம் நலம் கிட்டும். உதாரணமாக ராகுவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அம்மன் வழிபாடு மேற்கொண்டு அதன்
மூலம் கிட்டும் நற்பலனை வேப்பிலையால் குணமானதாக எடுத்துக் கொள்கிறார்.

ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6&ஆம் வடானது


ீ ருண ரோக ஸ்தானமாகும். இது நோய், தேக
ஆரோக்கியம் போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானமாகும். இதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பினை
கொண்டு நோய்கள் ஏற்படுகின்றன.

ஜாதகத்தில் சாதகமாகவோ, பாதகமாகவோ அமைந்திருப்பதை வைத்து ஒவ்வொரு கிரகமும் தனக்கென சில


தனித் தன்மையுடன் செயல்படுகின்றன. பாதகமாக அமைந்த கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதனதன்
காரகத்துவத்திற் கேற்ப நோய்கள் உண்டாகிறது.

ஒவ்வொரு கிரகங்களின் தன்மையை காண்போம்.


சூரியன்

சூரியனால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிறு கோளாறு மூலம், இருதய நோய் தோல்வியாதி,
நெருப்பால் கண்டம், எதிரிகளால் கண்டம், மரம், விஷம் மற்றும் பாம்பால் கண்டம், திருடர்களால் கண்டம், கண்
நோய், தெய்வக் குற்றம் மூலம் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

சந்திரன்

சந்திரனால் மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை


பாதிப்பு, உணவு செரிக்காத நிலை, தைரிய குறைவு, சீதபேதி, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மை
இழக்கும் நிலை உண்டாகும். ஜலத்தால் கண்டம், தண்ணரில்
ீ உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு,
ரத்தத்தில் தூய்மை இல்லாத நிலை போன்ற பாதிப்புகளும். சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படும்.

செவ்வாய்

செவ்வாய் பகவானால் கண்களில் பாதிப்பு, குடல்புண், காக்காய் வலிப்பு, உஷ்ண நோய், தோல் நோய்கள்
உண்டாகும். விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம் உண்டாகும். எதிரிகளிடமும் உடன்பிறப்புகளிடமும் சண்டை
போடும் போது உடலில் காயம் உண்டாக கூடிய நிலை தொழுநோய், தோலின் மேல் பாகத்தில் நோய்
போன்றவை உண்டாகும்.

புதன்

புதனால் வாய்ப்புண், கண்களில் பாதிப்பு, தொண்டை மற்றும் மூக்கில் பாதிப்பு, மனநிலை பாதிப்பு,திக்குவாய்,
இயற்கை சீற்றத்தால் உடல்நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், மூளையில் பாதிப்பு, தோல் வியாதி,
மஞ்சள்காமாலை, கனவால் மன நிலை பாதிப்பு ஏற்பட்டு நோய்கள் உண்டாகும்.

குரு

குருபகவானால் ஞாபக மறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், மற்றும் பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள்
மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு, கோவில்
விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலையில் பாதிப்புகள் போன்றவை உண்டாகும்.

சுக்கிரன்

சுக்கிர பகவானால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக்கோளாறு, கண்களில் கோளாறு ரத்தசோகை, ரகசிய உறுப்பில்
பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும். பெண்களுடன் உடல் உறவு கொள்ள முடியாத நிலை,
உடல் உறவு கொள்ள பயப்படும் நிலை, பெண்களால் பயம், போன்ற நோய்களும் ஏற்படும்.

சனி

சனிபகவானால் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஊனம் உண்டாகக்கூடிய நிலை, வயிற்றுக் கோளாறு,
உடலில் உஷ்ணம் அதிகரித்து அவைகளால் நோய் உண்டாகக்கூடிய அமைப்பு, உடலில் மந்தமான நிலை,
சோர்வு எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும்நிலை மனநிலை பாதிப்பு, காக்காய் வலிப்பு, டி.பி. சர்க்கரை நோய்
போன்றவை உண்டாகும். விபத்துகளால் உடல் ஊனம், இயற்கை சீற்றத்தால் உடல் நிலையில் பாதிப்பு
போன்றவைகள் உண்டாகும்.

ராகு

ராகுபகவானால் தொழுநோய், மூளையில் நோய், இருதய கோளாறு, நெருப்பால் பயம் ,விஷத்தால் கண்டம்,
எதிரிகளால் பாதிப்பு விபத்தால் கண்டம், மனச்சோர்வு, விபத்தால் கண்டம், தோல் வியாதிகள், மிருகங்களால்
கண்டம், அஜீரண கோளாறு, புற்று நோய், தேவையற்ற சேர்க்கையால் தவறான பழக்கங்களுக்கு அடிமையாக
கூடிய உண்டாகும்.
கேது

கேது பகவானால் உடலில் வெட்டு காயம், விஷத்தால் கண்டம், அஜீரண கோளாறு, குடல் புண் போன்ற
நோய்கள் உண்டாகின்றன. வயிறு கோளாறு, இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பூசாரி மற்றும்
பிராமணர்களால் தொல்லை போன்றவைகளும் உண்டாகும்.

Posted by Unknown at 8:44 PM No comments:   

ராசிகற்கள்
வைரம் - Diamond
வைடூரியம் - Cat's eye,
முத்து - Pearl
மரகதம் - Emerald
மாணிக்கம் - Ruby
பவளம் - Coral
புட்பராகம் - Topaz
கோமேதகம் - Hessonite
நீலம் - Sapphire

நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்களாகும். நவரத்தினங்கள் என்பது திடீர் பணவரவயோ,
வேலைவாய்ப்பையோ, உடனடிதிருமணத்தையோ உருவாக்கித்தராது. நவரத்தினகற்கள் முதலில் கண்திருஷ்டியை போக்கும்,
அடுத்தது உடல் நலத்தை பாதுகாப்பாக வைக்கும். ரத்தினங்களை வாங்கும் போது கற்களில் வெடிப்புகள் இல்லாமல் பார்த்து
வங்க வேண்டும். நவரத்தினங்களின் விலை அதிகமாக இருந்தால் உபரத்தினங்களை வாங்கி அணியலாம். ராசிக்கற்களை
அணியும் பொழுது நேரம், ராசி, லக்னம், நட்சத்திரம், பிறந்ததேதி ஆகியவற்றிக்கு ஏற்றவாரு வாங்கி அணியவேண்டும்.

மேஷம் - பவளம் (Coral):


மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும்,
அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் - வைரம் (Diamond):


ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும்
கொடுக்கும்.

மிதுனம் – மரகதம் (Emerald):


மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

கடகம் – முத்து (Pearl):


கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

சிம்மம் - மாணிக்கம் (Ruby):


சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி – மரகதம் (Emerald):


கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது

துலாம் - வைரம் (Diamond):


துலாம் - வைரம் (Diamond) :
துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும்
கொடுக்கும்.

விருச்சிகம் – பவளம் (Coral):


விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும்,
அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Sapphire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன
அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மகரம் - நீலக்கல் (Blue Sapphire):


மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வகத்தன்மையையும்

கொடுக்க வல்லது

கும்பம் - நீலக்கல் (Blue Sapphire):


கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வகத்தன்மையையும்

கொடுக்க வல்லது

மீ னம் - கனக புஷ்பராகம். (Yellow Sapphire) :


மீ ன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன
அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

Posted by Unknown at 8:42 PM No comments:   

SATURDAY, JANUARY 31, 2015

ஞானம் கிடைக்க எளிய வழி


1. இலக்கினத்திற்கு 12 ல் குரு, கேது இருந்தாலும்,
2. இலக்கினத்திற்கு 12 ல் இருக்கும் கேதுவை, குரு கண்டாலும்,
3. 12 ல் இருக்கும் குருவை, 5,9 க்குடையவர்கள் கண்டாலும்,
4. உச்சம்பெற்ற கிரகம் 12 ல் இருந்து, அதை சுபக்கிரகம் கண்டாலும்,
5. 10 ம் அதிபதி மூன்றுக்கு மேற்பட்டகிரகங்களுடன் கூடி கேந்திர, திரிகோணங்களில் இருக்கவும்,
6. 10 ம் வடு
ீ குருவிடையதாகவோ, அல்லது 10 மிடத்தைக் குரு கண்டாலும்,
7. ஒன்பதாமிடத்தில் ஒருபலமான கிரகம் கேதுவுடன் இணைந்திருந்தாலும், அல்லது குருவடு

12 மிடமாகி, அதில் கேது இருக்க, குருவால் பார்க்கப்பட்டாலும்,
8. 5,9 ம் அதிபதிகள் நல்லநிலையில் இருக்க, 5,9,12 ஆகிய இடங்களில் ஏதிலாவது குரு_கேது
இணைந்திருந்திருந்தாலோ அல்லது 12 ம் இடம் மீ னம், விருச்சிகமாகி, அதில் குரு_கேது இருந்தாலோ
ஞானம் பெற்று, மோட்சயோகம் ஏற்படும். இந்த செய்தியை, ஒரு கதையோடு காண்போம்.
போதிமரத்தடியில் ஞானம் பெற்றபின், போதனைக்காக புத்தர், ஒரு ஊரில் இருந்து மறு ஊருக்கு
செல்லும் போது, ஒரு கிராமத்தை கடந்து செல்லவேண்டும். அப்படி கடந்து செல்லும் ஒவ்வொரு
முறையும், அக்கிராம மக்கள் ஒன்றுதிரண்டு புத்தரை தினமும் அடிக்கிறார்கள். இது தொடர்கதையாகவே
நடந்து வந்தது. ஒருநாள் எல்லோரும் அடித்து முடித்தபின் அப்போதும் புத்தர் அந்த இடத்தைவிட்டு
நகராமல் நிற்க, ’உன்னைத்தான் அடித்து முடித்துவிட்டோமே, இன்னும் ஏன் குனிந்துகொண்டு
நிற்கிறீர்கள்” என்றனர். அப்போது புத்தர், “இன்னும் ஒரு அடி என்மேல் விழவேண்டியுள்ளது.
அதனால்தான் நிற்கிறேன். உங்கலில் ஒருவர் இன்னும் என்னை அடிக்கவில்லை. அவரும்
அடித்துவிட்டால் நானிங்கிருந்து போதனைக்காக மனநிம்மதியோடு, என்போதனையை செய்வேன்.
இன்னையென்றால், இன்று ஒருவருக்கு அவர் விரும்பியபடி என்னால் இருக்கமுடியவில்லையே,
என்கிற வேதனை வந்துவிடும். அதனால், அந்த ஒருவரையும் வந்து அடித்துவிட்டுச் செல்ல
சொல்லுங்கள்” என்று, அக்கிராம மக்களை வணங்கிக் கேட்டார். பின் “நான் இங்கேயே இருக்கிறேன்.
அவரை வந்து அடிக்கச் சொல்லூங்கள். எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்”என்றார். அதே போல்
காத்திருக்கிறார். பகல் மறைந்தது. இரவும் வந்தது. அப்போதும் அவர் வரவில்லை. இரவும் கழிந்தது.
விடிந்ததும் விட்டது.
மீ ண்டும் எல்லா மக்களும் கூடினர். புத்தர் அங்கேயே இருப்பதைக் கண்டு வியந்து கேட்டனர். “அந்த
ஒருவர் இன்னும் வரவில்லை. அவர்க்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றார். ஊர்மக்கள் அவரை
ஒருவித பயம் கலந்த மரியாதையுடன் பார்த்துவிட்டு, அவரை அன்றைய பொழுது அடிக்காமல்
ஊருக்குள் திரும்பிவிட்டனர், புத்தரும் அவர்களுடனே ஊருக்குள் வந்தார். ஊர்தலைவனைப் பார்த்து,
“என்னை தினமும் அடிக்கவேண்டியவர்கள் அடிக்காமல்,ஊருக்குள் வந்துவிட்டார்கள். நீங்கள் உத்தரவு
தந்து அவர்களை அடிக்கச் சொல்லுங்கள் “ என்றார். யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. புத்தரோ
அவர்களை தன்னை அடிக்க, வலிய கெஞ்சிக்கொண்டு இருந்தார். இவ்வளவு தூரம் தாழ்மையுடன்
இருக்கும் புத்தரையா? நாம் துன்புறுத்துவத்தினோம். ஊர்மக்கள் தங்களின் செயலுக்காக மிகவும் வருந்தி,
புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, சீடர்களாக மாறி, ஞானம் பெற்றனர்.

Posted by Unknown at 9:21 PM No comments:   

கோள்களிலிருந்து வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய


எந்தப்பகுதியோடு அதிகம் தொடர்புகொள்கின்றன.?
சூரியனிலிருந்து வருகின்ற அலை = எலும்புகளோடும்;
.
புதன் = தோல் மீ தும்;
.
சுக்கிரன் = ஜீவ சக்தியோடும்;
.
சந்திரன் = இரத்த ஓட்டத்தோடும்;
.
செவ்வாய் = எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்;
.
குரு = மூளை செல்களோடும்;
.
சனி = நரம்புகளோடும்;
.
ராகு-கேது = ஓஜஸ்ஸோடும் தொடர்பு கொள்கின்றன.

Posted by Unknown at 9:10 PM No comments:   

சூரியன்
சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
ஆதவன், அருணன், அரியமா, அருக்கன், அலரி, அழரவன், அனலி,அண்டயோனி, அரி, ஆதவன்,
ஆயிரஞ்சோதி, இருள்வலி,உதயம், ரவி, எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன் , ஒளி,
ஒளியோன் , கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன்,
செங்கதிரோன் , சோதி, ஞாயிறு ,தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, பகலோன், பர்க்கன்,
பனிப்பகை, பானு, பகல், பங்கயன், பதங்கன், பரிகி, மார்த்தாண்டன், மித்திரன், விரிச்சிகன் , விரோசனன்,
விண்மனி, வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ரவிஆகியனவாகும்.

பால் : ஆண் கிரகம்.


நிறம் : வெண்மை
வடிவம் : சம உயரம்.
அவயம் : தலை.
உலோகம் : தாமிரம்.
ரத்தினம் : மாணிக்கம்.
மலர் : செந்தாமரை.
வாகனம் : மயில், தேர்.
சமித்து : எருக்கு.
சுவை : துவர்ப்பு.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : கிழக்கு.
அதி தேவதை : சிவன்.
தன்மை : நிலையான கோள்.
குணம் : தாமஸ்ம்
ஆசன வடிவம் : வட்டம்.
நட்பு கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.
பகை கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.
சம கோள் : புதன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம்: 6 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : விருச்சிகம், தனுசு, கடகம், மீ னம்.
பகை வடு
ீ : ரிஷபம், மகரம், கும்பம்.
ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.
நீசம் பெற்ற இடம் : துலாம்.
உச்சம் பெற்ற இடம் : மேடம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : காலன்.
காரகத்துவம் : பித்ருகாரகன்.பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு
போன்ற சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், இரசவாதம், யானை, மலை, காடு, தபசு, பிரதாபம்,
தைரியம், இராஜசேவை, அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், சைவானுஷ்டானம்
இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டு மானால் சூரியபலம்
ஜாதகத்தில் அமைய வேண்டும்.

Posted by Unknown at 9:08 PM No comments:   

சந்திரன்
சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.
அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன்,
உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன்,
சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு,
பசுங்கதிர்,
மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, வெண் கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.

பால் : பெண் கிரகம்.


நிறம் : வெண்மை நிறம்.
வடிவம் : குள்ள மான உயரம்.
அவயம் : முகம், வயிறு.
உலோகம் : ஈயம்.
ரத்தினம் : முத்து.
மலர் : வெள்ளை அலரி.
வாகனம் : முத்து விமானம்.
சமித்து : முருக்கு.
சுவை : உப்பு.
பஞ்ச பூதம் : நீர்
நாடி : சிலேத்தும நாடி.
திக்கு : வடமேற்கு.
அதி தேவதை : பார்வதி.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் குரூரம் .
ஆசன வடிவம் : சதுரம்.
நட்புகோள்கள் : சூரியன், புதன்.
பகை கோள்கள் : இராகு, கேது.
சம கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.
1 ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/4 (நாள் ) நட்சத்திர அளவு.
உரிய திசா காலம் : 10 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : மிதுனம், சிம்மம், கன்னி.
பகை வடு
ீ : எல்லா வடுகளும்
ீ நட்பு ( பகைவடு
ீ கிடையாது).
ஆட்சி பெற்ற இடம் : கடகம்.
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்.
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.
மூலதிரி கோணம் : ரிஷபம்.
உரிய உப கிரகம் : பரிவேடன்.
உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன் (தாய் ).
வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை,
உத்தியோகம், கீ ர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம்,
எண்ணம், சிந்தனை இவைகளு க்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.

Posted by Unknown at 9:07 PM No comments:   


செவ்வாய்.
சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள்,
பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.

பால் : ஆண் கிரகம்.


நிறம் : சிவப்பு நிறம்.
வடிவம் : குள்ள மான உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : செம்பு.
ரத்தினம் : பவளம்.
மலர் : செண்பகம்.
வாகனம் : செம்போத்து, சேவல்.
சமித்து : கருங்காலி.
சுவை : உறைப்பு.
பஞ்ச பூதம் : பிருதிவி.
நாடி : பித்த நாடி.
திக்கு : தெற்கு.
அதி தேவதை : சுப்ரமண்யர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : ராசஜம்.
ஆசன வடிவம் : முக்கோணம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், வியாழன்.
பகை கோள்கள் : புதன், இராகு, கேது.
சம கோள்கள் : சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 மாதங்கள்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : சிம்மம், தனுசு, மீ னம்.
பகை வடு
ீ : மிதுனம், கன்னி.
ஆட்சி பெற்ற இடம் : மேஷம், விருச்சிகம்.
நீசம் பெற்ற இடம் : கடகம்.
உச்சம் பெற்ற இடம் : மகரம்.
மூலதிரி கோணம் : மேஷம்.
உரிய உப கிரகம் : தூமன்.
காரகத்துவம் : சகோதர காரகன்
பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம்,
அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.

Posted by Unknown at 9:06 PM No comments:   


புதன்
சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப்
படுகிறது.
அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன்,
தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன்,
மால்மேதை ஆகியனவாகும்.
பால் : அலி கிரகம்.
நிறம் : பச்சை நிறம்.
வடிவம் : உயரம்.
அவயம் : கழுத்து.
உலோகம் : பித்தளை.
ரத்தினம் : மரகதம்.
மலர் : வெண்காந்தள்.
வாகனம் : குதிரை
சமித்து : நாயுருவி.
சுவை : உவர்ப்பு.
பஞ்ச பூதம் : வாயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : வடக்கு.
அதி தேவதை : விஷ்ணு.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : அம்பு.

நட்பு கோள்கள் : சூரியன், சுக்கிரன்.


பகை கோள் : சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம் : 17 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வடு
ீ : கடகம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.
நீசம் பெற்ற இடம் : மீ னம்.
உச்சம் பெற்ற இடம் : கன்னி.
மூலதிரி கோணம் : கன்னி.
உப கிரகம் : அர்த்தப்பிரகரணன்.
காரகத்துவம் : மாதுல காரகன்.
கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீ தம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில்,
வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுக்கு புதன் காரகன்.
கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாகரன் எனும் புதன் பலம்பெறுவது சிறப்பு.
Posted by Unknown at 9:03 PM No comments:   

குரு
சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தணன்,அமைச்சன்,அரசன்,ஆசான்,ஆண்டனப்பான் ,குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா,
தாரபதி,தெய்வமந்திரி,நற்கோள் , பிரகற்பதி, வதகன்,
ீ பொன், மறையோன், வேதன், வேந்தன்
ஆகியனவாகும்.

பால் : ஆண் கிரகம்.


நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
இனம் : பிராமண இனம்.
வடிவம் : உயரம்.
அவயம் : இருதயம்.
உலோகம் : பொன்.
ரத்தினம் : புஷ்பராகம்.
மலர் : முல்லை.
வாகனம் : யானை.
சமித்து : அரசு.
சுவை : தித்திப்பு.
தான்யம் : கொத்துக்கடலை.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : வாத நாடி.
திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ). அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக்கோள்.
குணம் : சாந்தம்.
ஆசன வடிவம் : செவ்வகம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகை கோள்கள் : புதன், சுக்கிரன்.
சம கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 வருடம்.
திசா புத்திக் காலம் : 16 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
பகை வடு
ீ : ரிஷபம்,மிதுனம், துலாம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீ னம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரிகோணம் : தனுசு.
உப கிரகம் : எமகண்டன்.
காரகத்துவம் : புத்திர காரகன்.
புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச
சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு வியாழன் காரகன்.
சுப கோளான குரு ஒருவரின் ஜாதகத்தில்
வலுவாக் இருப்பது சுப பலனை தரும்.

Posted by Unknown at 9:02 PM No comments:   

சுக்கிரன்.
சோதிடவியலில் ஆறாவது கோளான சுக்கிரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப்படுகிறது.
அசுரர்மந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன்,
சுங்கன், தயித்திய மந்திரி,நற்கோள், பளிங்கு, பார்கவன்,பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள்,
வெள்ளி ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : வெண்மை.
இனம் : பிராமண இனம்.
வடிவம் : சம உயரம்.
அவயம் : மர்மஸ்தானம்.
உலோகம் : வெள்ளி.
ரத்தினம் : வைரம்.
மலர் : வெண்தாமரை.
வாகனம் : குதிரை, மாடு.
சமித்து : அத்தி.
சுவை : புளிப்பு.
தான்யம் : மொச்சை.
பஞ்ச பூதம் : அப்பு. (நீர் )
நாடி : சிலேத்தும நாடி.
திக்கு : தென்கிழக்கு.
அதி தேவதை : இலக்குமி, வருணன்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : ஸ்திரக் கோள்.
குணம் : ரஜசம்.
ஆசன வடிவம் : ஐங்கோணம்.

நட்பு கோள்கள் : புதன், சனி, இராகு, கேது.


பகை கோள்கள் : சூரியன், சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா புத்திக் காலம் : 20 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : மேடம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம்.
பகை வடு
ீ : கடகம், சிம்மம், தனுசு.
ஆட்சி பெற்ற இடம் : ரிஷபம், துலாம்.
நீசம் பெற்ற இடம் : கன்னி.
உச்சம் பெற்ற இடம் : மீ னம்.
மூலதிரி கோணம் : துலாம்.
உப கிரகம் : இந்திரதனுசு.
காரகத்துவம் : களத்திர காரகன்.
சங்கீ தம், பரத நாட்டியம் போன்றவற்றில் பிரியம் ஏற்படுதல், ஆசை, ஸ்ரீ தேவதை உபசனை, அழகு,
இளமை, இலக்குமி கடாட்சம், வாகனம், சுகம், போகம், ஆகாய சமுத்திர யாத்திரைகள், இவைகளுக்கு
எல்லாம் சுக்கிரன் தான் காரகன்.

Posted by Unknown at 9:01 PM No comments:   

சனி.
சோதிடவியலில் ஏழாவது கோளான சனிக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீ ழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன்,
பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.

பால் : அலிக் கிரகம்.


நிறம் : கருமை.
வடிவம் : குள்ள உயரம்.
அவயம் : பாதம், கணுக்கால்.
உலோகம் : இரும்பு.
உரிய ரத்தினம் : நீலம்.
ஆடை : கறுப்பு.
மலர் : கருங்குவளை.
வாகனம் : காகம்,
சமித்து : வன்னி.
சுவை : கைப்பு.
தான்யம் : எள்.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : வாத நாடி.
திக்கு : மேற்கு.
அதி தேவதை : யமன், சாஸ்தா.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : வில்.
நட்பு கோள்கள் : புதன், சசுக்கிரன், இராகு, கேது.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்: குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/2 வருடம்.
திசா புத்திக் காலம் : 19 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : ரிஷபம், மிதுனம்.
பகை வடு
ீ : கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம் : மேடம்.
உச்சம் பெற்ற இடம் : துலாம்.
மூலதிரி கோணம் : கும்பம்.
உப கிரகம் : குளிகன்.
காரகத்துவம் : ஆயுள் காரகன்.
ஜீவன, இரும்பு, சேவகர் விருத்தி, களவு, ஆத்ம இம்சை, சிறைப்படல், ராஜதண்டனை, வண்வார்த்தை,

சித்தப்பிரம்மை, தீர்க்க ஆயுள், மயக்க போஜனம், அவயக் குறைவு, மரவேலை, ஆளடிமை இவைகளுக்கு
எல்லாம் சனி தான் காரகன்.

Posted by Unknown at 8:59 PM No comments:   

இராகு
சோதிடவியலில் எட்டாவது கோளான இராகுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
கரும்பாம்பு , தமம், மதாப்பகை, மதாயுணி ஆகியனவாகும்.

பால் : பெண் கிரகம்.


நிறம் : கருமை.
வடிவம் : உயரம்.
அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.
உலோகம் : கருங்கல்.
ரத்தினம் : கோமேதகம்.
ஆடை : கறுப்புடன் சித்திரங்கள் சேர்ந்தது.
மலர் : மந்தாரை.
வாகனம் : ஆடு.
சமித்து : அறுகு.
சுவை : கைப்பு.
தான்யம் : உளுந்து.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : தென் மேற்கு.
அதி தேவதை : காளி,துர்க்கை,
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : கொடி.
நட்பு கோள்கள் : சனி, சுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 18 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீ னம்.
பகை வடு
ீ : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : கன்னி.
நீசம் பெற்ற இடம் : ரிசபம்.
உச்சம் பெற்ற இடம் : விருச்சிகம்.
மூலதிரிகோணம் : கும்பம்.
உப கிரகம் : வியதீபாதன்.
காரகத்துவம் : பிதாமஹன். (பிதுர் பாட்டன் )
சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமான தொழில், விகட வினோத வித்தைகள், குஷ்டம்,
நாள்பட்ட ரோகம், களவு, விஷ்பயம், அங்கவனம்,
ீ வெகு பேச்சு, ஜல கண்டம், வெட்டுக்காயம், சிரைப்படல்
இவைகளுக்கு எல்லாம் இராகு தான் காரகன்.

Posted by Unknown at 8:58 PM No comments:   

கேது.
சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.

பால் : அலிக் கிரகம்.


நிறம் : சிவப்பு.
வடிவம் : உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : துருக்கல்.
ரத்தினம் : வைடூரியம்.
மலர் : செவ்வல்லி.
வாகனம் : சிம்மம்.
சமித்து : தர்ப்பை.
சுவை : உறைப்பு.
தான்யம் : கோதுமை.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : பித்த நாடி.
திக்கு : வட மேற்கு.
அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : மூச்சில்.
நட்பு கோள்கள் : சனி, சசுக்கிரன்.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்கள் : புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 வருடம்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வடு
ீ : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீ னம்.
பகை வடு
ீ : கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : மீ னம்.
நீசம் பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : கும்பம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : தூமகேது.
காரகத்துவம் : மதாமஹன்.
மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீ ழ்குலத்தொழில், பாபத்தொழில், பரதேச ஜீவனம்,
அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.

Posted by Unknown at 8:55 PM No comments:   

கிரக வக்கிரம்
நன்மையா ? தீமையா ?
சிலர் வக்கிர கிரகம் உக்கிர பலம் பெறுகிறது என்று பதிவுகளை இடுகின்றனர் , உண்மையில் வக்கிரம்
பெற்ற கிரகம் தனது காரக, பாவக ரீதியான பலன்களை தடை, தாமதம் ஏற்படுத்தி திருப்தியற்ற
நிலையிலே தருகிறது.

எந்த கிரகம் வக்கிரம் பெறுகிறதோ அதன் காரக, பாவக அதிபத்திய பலன்கள் ஜாதருக்கு கிடைப்பதில்
உறுதியற்ற தன்மையை தருகிறது.

Posted by Unknown at 8:54 PM No comments:   

$யார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார் ?


$யார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார் ?
2 ம் பாவகத்தில் புதன், 2 ம் அதிபதி புதன் சாரம், வலுபெற்றால்.
$யார் சிடு சிடு என பேசுவார் ?
2 ம் பாவகத்தில் சூரியன், செவ்வாய் , ராகு இருந்து, 2 ம் அதிபதி வலு குறைதல்

$யார் அர்த்தபுஷ்டியுடன் பேசுவார் ?


2 ம் பாவகத்தில் குரு, புதன் , இலக்கின அதிபதி, இருந்து 2 ம் அதிபதி வலு வலுபெற்றால்.
$யார் திக்கி திக்கி பேசுவார் ?
2 ம் அதிபதி, புதன் இருவரும் 6,8, 12 ல் மறைந்து, வலு குறைந்தால் (நீசம் , அஸ்தமனம் ) மாந்தி 2 ம்
பாவகத்தில்
$யார் அடுத்தவரை மயக்கும்படி பேசுவார் ?
2 ம் பாவகத்தில் சுக்கிரன் , இலக்கின அதிபதி, இருந்து 2 ம் அதிபதி வலு வலுபெற்றால்.
$யார் தர்புகழ்சிக்காக பேசுவார் ?
2 ம் பாவகத்தில் புதன் , இலக்கின அதிபதி, இருந்து 2 ம் அதிபதி வலு வலுபெற்றால்.
இலக்கின அதிபதி வலு குறைதல்,
$யார் அதிகம் பேசிக்கொண்டே இருப்பார் ?
2 ம் பாவகத்தில் புதன் , சந்திரன் இருந்து 2 ம் அதிபதி புதன் சாரம், வலுபெற்றால்.
$யார் குறைவாக பேசுவார் ?
2 ம் பாவகத்தில் குரு , இலக்கின அதிபதி, இருந்து 2 ம் அதிபதி வலு வலுபெற்றால்.
Posted by Unknown at 8:52 PM No comments:   

WEDNESDAY, JANUARY 21, 2015

எட்டாம் பாவ பலன்கள்


எட்டாம் இடம் ஆயுள், துயரம், மரணம் முதலியவற்றைக் குறிப்பது என அறிவோம்.

மேஷம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நிறைய செல்வம் உடையவனாக இருப்பினும், மிகுதியான
துன்பத்தை வாழ்க்கை முழுவதும் சந்திக்க நேரிடுகின்றது. வேறு தேசத்திலேயே இவனுக்கு மரணம்
ஏற்படுகிறது.

ரிஷபம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன்தரையில் ஊர்கின்ற அல்லது படுகின்ற ஜந்துக்கள், நாற்கால்
பிராணிகள், துஷ்ட ஜனங்கள் மூலம் பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் எய்துகின்றான்.

மிதுனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தனக்கு இளையவனாலோ, மூலம் முதலிய ரோகத்தாலோ,
கவனக் குறைவாலோ மரணம் எய்துகின்றான்.

கடகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் புழுவினாலோ, பயங்கரமான விஷ ஜந்துக்கலாலோ,
பகைவர்களினாலோ, நீர் நிலைகளில் இறங்கும் போதோ மரணம் ஏற்ப்படுகின்றது. இந்த மரணம் பெரும்பாலும்
வேறு தேசத்திலேயே அமைகின்றது.

சிம்மம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பெரும்பாலும் வனத்தில் சாவை சந்திக்கின்றான். அது
திருடரின் மூலமாகவோ நாற்கால் பிராணிகளின் மூலமாகவோ, பாம்பினாலோ ஏற்படக் கூடும்.
குழந்டையினால் கூட இவனுக்கு சாவு நேரிடலாம்.

கன்னி எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் விளையாட்டினாலும், பித்த சம்பந்த மான நோய்களினாலும்
மரணம் அடையலாம். தனது சொந்த குடும்பத்து பெண்ணாலேயே கூடக் கொல்லப்படலாம்.

துலாம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின் மூலம்,
பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம் இருப்பதினால் கூட
உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம்.

விருசிகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் முகத்தில் உண்டான ரோகதினாலோ, புழுக்களால்
உண்டான ரோகதினாலோ, தனது குலத்தில் உதித்ததனாலோ மரணம் உண்டாகின்றது.

தனுசு எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தன்னுடைய இருப்பிடத்தில் தன்னுடன் இருப்பவனால்
மரணம் அடையலாம். புளுக்களாலும், நாற்கால் உயிரினங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நல்ல கல்விமான். மானம் மிக்கவன். வரன்.
ீ எல்லாக்
கலைகளிலும் வல்லவன். ஆனாலும் பெண் பித்தன். ஆதலால் எதனாலும் இவனுக்கு சாவு வரக்கூடும் என்பதை
இயல்பாகவே ஊகித்துக் கொள்ளலாம்.

கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நெருப்பினாலோ, தீய பெண்களின் சேர்க்கையினாலோ,
பகைவனாலோ புண்பட்டு சாக நேரிடலாம்.

மீ னம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பித்த ஜுரத்தினாலோ, வாயு ஜுரத்தினாலோ அல்லது
ஆயுதத்தாலோ சாக நேரிடலாம்.

Posted by Unknown at 1:42 AM No comments:   


திருமண விதிகள்
1. இரண்டாம் வடு
ீ மற்றும் ஏழாம் வட்டிற்கு
ீ உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு
ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
2. சுக்கிரன் இருக்கும் வட்டிற்கு
ீ அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை
மகிழ்ச்சியைத் தராது.
3. ஏழாம் வட்டிற்கு
ீ அதிபதி பாபிகள் வட்டில்
ீ நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத்
திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
4. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வட்டு
ீ அதிபன் சுபர்களுடைய வட்டில்
ீ இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே
மனைவியாக வருவாள்.
5. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின்
பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்.
6. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன்
சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
7. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை
மணக்க நேரிடும்.
8. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக
இருக்காது.
9. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும்,
சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
10. 7 ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11 ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும்
ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

Posted by Unknown at 1:41 AM 1 comment:   

தந்திரசாலிகள்
•சந்திரன்,சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2,5,9,11 ல் இருந்தால் ஜாதகர்கள் தந்திரசாலிகள்.
•சந்திரன், சூரியன் நேர் எதிர் பார்வையாக பார்த்துக் கொண்டாலும் , ஜாதகர்கள் தந்திரசாலிகள்.
•புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை பெற்றாலும்
அந்த ஜாதகர்கள் தந்திரசாலிகள்.

Posted by Unknown at 1:40 AM No comments:   

நண்பனும் எதிரி
ஒருவர் ஜாதகத்தில் 7-ம் இடம் நண்பர்களை பற்றி அறியும் இடமாகும்.

அந்த 7-ம் இடத்து அதிபதியோடு கேது அல்லது இராகு கூடி எங்கிருந்தாலும், நண்பர்களும் எதிரியாக மாறி
விடுவார்கள்.

7-ம் இடத்து அதிபதி, 6,8,12-க்குரியவனோடு சேர்ந்தாலும், நண்பன் எதிரியாவான். 7-க்குரியவன் நீச்சம் பெற்று
இருந்தாலும் இதே நிலைதான்.

ஆதலால், இப்படிபட்ட ஜாதகர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும், தொழிலில் கூட்டு சேரும்போது


எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் !!

Posted by Unknown at 1:39 AM No comments:   


திருமண தடைகள் விலக :
திருமண தடைகள் நீங்கி சீக்கிரம் திருமணம் ஆக:ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி என்ற நூலிலிருந்து உங்களுக்காக
இங்கு கொடுத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்...

ஜநகஸ்ய வச:விச்ருத்வா பாண ீன் பாணிபி4: அஸ்ப்ருசன். |

சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வஸிஷ்ட 2 ஸ்ய மதேஸ்தி2 தா ||

ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஷ்டர் உத்திரவு படி ராமன் முதலிய நான்கு பேரும் ஸீதை முதலிய
நாலு பேருடைய கைகளைப்பிடித்தார்கள்.

இந்த ஸ்லோகத்தை திருமண தடையுள்ள பெண்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் தினமும் காலை
ராம பூஜை செய்து 108 முறை ஜபித்தால் சீக்கிரமாக திருமணம் கைகூடும். அத்துடன் குரு மூலம் உபதேசம்
பெற்று ராமாயணம் பால காண்டம் 73 ஆம் சர்க்கம் பூராவாக பாராயணம் செய்தால் உடனே பலன் உண்டாகும்.

Posted by Unknown at 1:38 AM No comments:   

ஜெபம் செய்யும் முறை


பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது வாசிகம்.
தனது காதில் விழும்படி செய்வது உபாசம்.
மனதில் மட்டும் சொல்வது மானசம்.

வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும்.


உபாசம் நூறு மடங்கு பயனளிக்கும்.
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.

Posted by Unknown at 1:36 AM No comments:   

வாழ்க்கை முறைகள்
1.மஞ்சள், நெய், உப்பு, புழுங்கலரிசி, மருந்து, பாக்கு, பால், மோர், வெல்லம் இவைகளுக்கு தோசம் இல்லை.

2.ஹோமப் புகை ஆயுளை வளர்க்கும் ஆனால் கர்ப்பிணி பெண்கள் மீ து ஹோமப் புகை படக்கூடாது.

3.பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், உட்கார்ந்த பலகை, படுக்கை ஆகியவற்றை உபயோகித்தால்
நோயுடன் பாவம் சேரும்.

4.நகத்தை பல்லினால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கிறாள்.

5.வட்டிற்கு
ீ வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும் முதல் நீங்கள் நெற்றியில் இட்டு கொண்டு பிறகு
வந்தவர்களுக்கு கொடுக்கவும்.

Posted by Unknown at 1:32 AM No comments:   

SUNDAY, JANUARY 18, 2015

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.?


ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர
ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும்
கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக
பலர் உணரலாம்.

ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில்


செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்
கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள்
அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

நீர்:
கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை
காணலாம்.

நிலம்:
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று :
கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:
ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான்
கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.திருவையாறு ஐயாரப்பன்
கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.

இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து
வழிபாடு செய்கிறோம்.

அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன.


அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள்
உண்டாகின்றன.

Posted by Unknown at 11:07 PM No comments:   

மதுவிற்கு அடிமை யார்?


சார ஜோதிட முறையில் 6 ம் பாவத்தின் தொடர்பினைக் கொண்டு மதுவிற்கு ஜாதகர் அடிமையாக
வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

6 ம் பாவம் தனக்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான பாவங்களாகிய
6,8,12 ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் மதுவை உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு
அடிமையாக வாய்ப்புகள் அதிகம்.

அதே நேரத்தில் தசா பத்திகளும் 6 ம் பாவத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகளை
ஜாதகர் சந்திப்பார். ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களும் 6,8,12 பாவத் தொடர்புகளை கொண்டு தசா புத்திகள்
நடக்கும் பொழுதும் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் உண்டு.

Posted by Unknown at 10:44 PM No comments:   

ஜோதிட குறிப்பு
பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும், 
குரு பார்க்க கோடி நன்மை, 
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும், 
துலா கேது தொல்லை தீர்க்கும், 
மறைந்த புதன் நிறைந்த கல்வி, 
அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்,
குரு கொடுப்பின் சனி தடுப்பார்;
சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?,
எட்டில் சனி நீண்ட ஆயுள் .
உச்சனை உச்சனை பார்த்தால் பிச்சைக்காரன்,
குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும்.
ராகுவைப் போல் கொடுப்பாருமில்லை,
கேதுவைப் போல் கெடுப்பாருமில்லை......
கேட்டையில் பிறந்தவன் மனதில் கோட்டை கட்டி வாழ்வான்......
மகமகள் ஜகம் ஆள்வாள் (மகத்தில் பெண் பிறப்பது சிறப்பு)

சுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.


ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு
குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு.

கர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம்
உண்டு.

லக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.

குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால்
பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய
தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை
சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.
சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10 ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன்
பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.

குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5 ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான்.
யோகங்கள் உண்டு. குரு 5 ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5 ல் தனித்திருக்க பெண்
குழந்தைகள் உண்டு.
பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள்
புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை
முடக்கிவிடும்.
சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள்
திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

Posted by Unknown at 10:34 PM No comments:   


திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை
அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீ னம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த
வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7 ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம்
வட்டில்
ீ இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.


மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2 வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம்
நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி


கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவர்கள்
ீ தானே.
அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வட்டில்
ீ உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

http://astrogokki.blogspot.com/2014/

https://kanyasasi.com/index.php/articles/34-sila-kelvikalum-pathilkalum-part2

https://www.seithipunal.com/spiritual/2-nd-marriage-for-those-zodiac

https://smurugeshan.wordpress.com/2013/05/17/planets-and-sex-venus/

Birth Chart, Kundali, Jathakam :


Birth Horoscope:

Tamil jathagam, tamil birth jathakam, south and north indian style horoscope software
using Thiru Kanitha Panchangam

Your birth rashi predictions: Meenam


Meena rasi General Characters
Round face, sharp nose, simple but strong physique identify you belong to Meenam
Rasi. People may think you are a simple person but would learn that your extra ordinary
intelligence and clean habits only after some time. Your mind thinks about something
deeply at any time and keeps on postponing the decisions.

Consultations with friends and relatives never end and decisions are not easily taken.
You weigh things, forecast pros and cons and only come to conclusions at the end of
the hour. You never allow people to cheat and as well never give choice to others to
cheat you.

When you target certain person, you attract him with nice talks and good appearances.
People always fall for you. You have talents to learn and create deep knowledge on any
subject and often your friends call you for information and guidance.

Females

Love and affection are to be learnt from Meena rasi ladies. They just shower with true
fondness and kindness. They are very attractive and intelligent. They often tend to be
like a corporal or administrator and wish to be obeyed by all.

Even though they talk rough at times their heart is like gold with purity and true love.
They have more tendencies to become nervous and suddenly turn face against you. But
this is only for a short moment. They are very fond of their mother and keep close to
their family even after marriage.

Your birth star predictions: Uthiratathi


தசா புக்தி அட்டவணை

நடப்பு தசை: காரி (சனி)

நடப்பு தசை இருப்பு: 14 ஆண்டுகள் 11 திங்கள்கள் 0 நாட்கள்

காரி (சனி) தசை 12-08-1980 வரை

அறிவன் (புத) தசை 12-08-1997 வரை

   அறிவன் (புத) புக்தி: 08-01-1983 வரை : வருவாய், செல்வம், நன்மை, அறிவு,


நினைப்பதெல்லாம் கைகூடலும் நடைபெறும்.

   கேது புக்தி: 04-01-1984 வரை : இடம் விட்டு இடம் பெயர்தல் நடைபெறும்.

   வெள்ளி (சுக்) புக்தி: 04-11-1986 வரை : நகை செல்வம் பொருள் சேரும்.


திருமணம் நடந்தேறும்.

   ஞாயிறு புக்தி: 10-09-1987 வரை : நெருப்பை தொடாதீர்கள்.

   திங்கள் (நிலவு) புக்தி: 10-02-1989 வரை : துன்பம் வந்து போகும். பகை பெருகி
நிற்கும்.

   செவ்வாய் புக்தி: 09-02-1990 வரை : பகை மேலும் பகையாக மாறும்.

   இராகு புக்தி: 27-08-1992 வரை : இருக்கும் இடம் விட்டு இடம் மாறுவர்கள்.


   வியாழன் புக்தி: 02-12-1994 வரை : எல்லாம் நல்லவையாக நடைபெறும்.

   காரி (சனி) புக்தி: 12-08-1997 வரை : நல்லவை நடக்காவிட்டாலும், தீயது


அண்டாது.
கேது தசை 12-08-2004 வரை

   கேது புக்தி: 08-01-1998 வரை : பெற்ற தாயே பகையாக நிற்பாள்!

   வெள்ளி (சுக்) புக்தி: 08-03-1999 வரை : செல்வம் சேரும். அறிவு ஆற்றல்


பெருகும்.

   ஞாயிறு புக்தி: 15-07-1999 வரை : வெளி நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு

   திங்கள் (நிலவு) புக்தி: 15-02-2000 வரை : தீமைகள் வந்தாலும் தாமாக விலகி


விடும்.

   செவ்வாய் புக்தி: 13-07-2000 வரை : போறாத நேரமிது

   இராகு புக்தி: 31-07-2001 வரை : நல்ல செயல்கள் எதுவும் நடக்காது.

   வியாழன் புக்தி: 08-07-2002 வரை : திருமணம் நடைபெறும். செல்வம் சேரும்.

   காரி (சனி) புக்தி: 17-08-2003 வரை : இடம் மாறுவர்கள்.


ீ உடல் நோய் வந்து
விலகும்.

   அறிவன் (புத) புக்தி: 12-08-2004 வரை : பகை , கல்வி பாதியில் நிற்கும்.


எண்ணிய செயல் நடந்தேராது.

வெள்ளி (சுக்) தசை 12-08-2024 வரை

   வெள்ளி (சுக்) புக்தி: 12-12-2007 வரை : இன்பம் பெருகும். பொருள் சேர்க்கை,


வடு,
ீ நிலம், புலம் என தாமாக வரும்.
   ஞாயிறு புக்தி: 12-12-2008 வரை : துன்பம், செல்வம் அழிவு.

   திங்கள் (நிலவு) புக்தி: 12-08-2010 வரை : நினைப்பதெல்லாம் நடந்தேறும்.

   செவ்வாய் புக்தி: 12-10-2011 வரை : நிலம் வாங்குவர்கள்.


ீ வடு
ீ கட்டுவர்கள்.

   இராகு புக்தி: 12-10-2014 வரை : போதிய வருவாய் கிடைக்கும்.

   வியாழன் புக்தி: 12-06-2017 வரை : அறிவும் ஆற்றலும் திறம்பட செயல்படும்.

   காரி (சனி) புக்தி: 12-08-2020 வரை : இடம் பெயர்தல் நலம்.

   அறிவன் (புத) புக்தி: 12-06-2023 வரை : புகழும், செல்வமும், சிறப்பும்


கிடைக்கும்.

   கேது புக்தி: 12-08-2024 வரை : பிற பாலினத்தவர் மீ து ஈர்ப்பு எச்சரிக்கை.

ஞாயிறு தசை 12-08-2030 வரை

   ஞாயிறு புக்தி: 30-11-2024 வரை : பீடையும், மன அழுத்தமும்

   திங்கள் (நிலவு) புக்தி: 30-05-2025 வரை : வருவாய் பெருகும். வண்டி


வாங்குதல், திருமண நிகழ்ச்சி

   செவ்வாய் புக்தி: 06-10-2025 வரை : நோய், சண்டை சச்சரவு உண்டாகும்.

   இராகு புக்தி: 30-08-2026 வரை : கணவன் மணைவியிடையே தேவையற்ற


மனத்தாங்கல்கள்

   வியாழன் புக்தி: 17-06-2027 வரை : கல்வியில் சிறந்த நிலை, வருவாய்


பெருகும். நல்லூழ் கிட்டும்.
   காரி (சனி) புக்தி: 29-05-2028 வரை : பகை, மனதில் துன்பம், கவலை
உண்டாகும். மன அழுத்தம் ஏற்படும்.

   அறிவன் (புத) புக்தி: 04-04-2029 வரை : மனதில் அமைதி இல்லாத நிலை

   கேது புக்தி: 10-08-2029 வரை : நெடும் பயணம் மற்றும் குடியிருப்பை


மாற்றுவர்கள்.

   வெள்ளி (சுக்) புக்தி: 12-08-2030 வரை : செல்வம் சேரும், திருமணம்


நடைபெறும்.

நிலவு தசை 12-08-2040 வரை

   திங்கள் (நிலவு) புக்தி: 12-06-2031 வரை : பெண்களின் சேர்க்கை கிட்டும்.


வரமும்,
ீ அது தொடர்பான என்னங்களும் வரும். நினைத்த செயல்களை செய்து
முடிப்பீர்கள். உடல் வலிமை கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்சி கிடைக்கும்.

   செவ்வாய் புக்தி: 12-01-2032 வரை : தேவையே இல்லாமல் நீதிமன்றம் செல்ல


நேரிடும். சண்டை, சச்சரவுகளுக்கு குறை இருக்காது.

   இராகு புக்தி: 12-07-2033 வரை : செழிப்பான நாடுகளுக்கு பயணிப்பீர்கள்.

   வியாழன் புக்தி: 12-11-2034 வரை : வெற்றி வந்து சேறும். செல்வம் செழிக்கும்.

   காரி (சனி) புக்தி: 12-06-2036 வரை : செல்வத்திற்கு அழிவு உண்டாகும். மனதில்


நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

   அறிவன் (புத) புக்தி: 12-11-2037 வரை : நினைப்பவை எல்லாம் நடந்தேரும்.


கல்வி உயரும்.
   கேது புக்தி: 12-06-2038 வரை : நெருப்பால் பாதிப்பு. பகை உண்டாகும்.

   வெள்ளி (சுக்) புக்தி: 12-02-2040 வரை : நல்லவற்றை விட தீயவையின் செயல்


ஓங்கி நிற்கும்.

   ஞாயிறு புக்தி: 12-08-2040 வரை : சிறப்பாக எதுவும் இருக்காது.

செவ்வாய் தசை 12-08-2047 வரை

   செவ்வாய் புக்தி: 08-01-2041 வரை : கொஞ்சம் எச்சரிக்கையுடன் வாழ


வேண்டிய நாட்கள் இவை.

   இராகு புக்தி: 26-01-2042 வரை : புதிய வட்டிற்கு


ீ குடி பெயர்வர்கள்.

   வியாழன் புக்தி: 01-01-2043 வரை : துன்பம் வந்து சேருவதை யாராலும் தடுக்க


இயலாது.

   காரி (சனி) புக்தி: 10-02-2044 வரை : சிக்கல்கள் வந்து போகும்.

   அறிவன் (புத) புக்தி: 08-02-2045 வரை : கைவிட்டு போன செல்வங்கள் எல்லாம்


வந்து சேரும். வருவாய் பெருகும். நோய் நொடிகள் முற்றிலும் நீங்கும்.

   கேது புக்தி: 07-07-2045 வரை : உறவினர்கள் பகை வரும்.

   வெள்ளி (சுக்) புக்தி: 07-09-2046 வரை : வண்டி வாங்குவதற்கான வாய்ப்பு


கிடைக்கும்.

   ஞாயிறு புக்தி: 13-01-2047 வரை : நெருப்பால் பாதிப்பு, வாழ்க்கை துணைக்கு


உடல் பாதிப்பு.

   திங்கள் (நிலவு) புக்தி: 12-08-2047 வரை : நிலம் வாங்குவர்கள்.


ீ மகிழ்ச்சி
பெருகும். இட மாறுதல் வருவாயை பெருக்கும்.

இராகு தசை 12-08-2065 வரை

   இராகு புக்தி: 24-04-2050 வரை : மனம் கலக்கமடைந்து இருக்கும். வாழ்கை


துணையால் பாதிப்பு வரும்.

   வியாழன் புக்தி: 18-09-2052 வரை : நினைப்பதெல்லாம் கை கூடல் என வாழ்வு


சிறக்கும்.

   காரி (சனி) புக்தி: 24-07-2055 வரை : துன்பம் வந்த உடன் விலகிவிடும்.

   அறிவன் (புத) புக்தி: 11-02-2058 வரை : வாழ்வு மேன்மை அடையும்.

   கேது புக்தி: 01-03-2059 வரை : துன்பம் வரும். நோய் வரும்.

   வெள்ளி (சுக்) புக்தி: 01-03-2062 வரை : பொன்னும் பொருளும், நிலமும்,


செல்வமும், மகிழ்வும், அரசிடம் நன்மையும் என நல்ல நேரம் பிறக்கும்.

   ஞாயிறு புக்தி: 25-01-2063 வரை : ஊர் அல்லது வடு


ீ மாறுதல் ஏற்படும்.

   திங்கள் (நிலவு) புக்தி: 25-07-2064 வரை : எச்சரிக்கையுடன் வாழ வேண்டும்

   செவ்வாய் புக்தி: 12-08-2065 வரை : நெருப்பிடம் தள்ளி இருங்கள். பகை


உண்டாகாமல் பிறரிடம் பழகுங்கள்.

வியாழன் (குரு) தசை 12-08-2081 வரை


   வியாழன் புக்தி: 30-09-2067 வரை : பொருள் சேர்க்கை, நிலம் வாங்குதல், வடு

கட்டுதல், வருவாய், செல்வம் என மகிழ்வான நேரமிது

   காரி (சனி) புக்தி: 12-04-2070 வரை : வண்டி , வட்டிற்கான


ீ பொருட்களை
வாங்குவர்கள்.
ீ துன்பம் தாமாக ஓடி விடும்.

   அறிவன் (புத) புக்தி: 18-07-2072 வரை : அறிவு திறன் பெருகும். செல்வம்,


பெருமை, புகழ் கிட்டும்.

   கேது புக்தி: 24-06-2073 வரை : உலகம் சுற்றும் நேரமிது. இடம் பெயறுதல்


தவிர்க்க இயலாதது.

   வெள்ளி (சுக்) புக்தி: 24-02-2076 வரை : நிலம் வாங்குவர்கள்.


ீ மகிழ்விற்கான
நேரமிது.

   ஞாயிறு புக்தி: 13-12-2076 வரை : நினைப்பது எல்லாம் நடந்தேறும்.

   திங்கள் (நிலவு) புக்தி: 13-04-2078 வரை : திருமணம், பொருள் சேர்க்கை,


அறிவு, பிள்ளை பேறு, என எல்லா நல்ல செயல்களும் நடக்கும்.

   செவ்வாய் புக்தி: 19-03-2079 வரை : நினைப்பதெல்லாம் முடித்துவிடலாம்.

   இராகு புக்தி: 12-08-2081 வரை : நீதிமன்றம் நாடிச்செல்லும் நிலை வரும்.

காரி (சனி) தசை 12-08-2100 வரை

   காரி (சனி) புக்தி: 15-08-2084 வரை : நோய் உண்டாகும். செல்வம் இழக்க


நேரிடும்.

   அறிவன் (புத) புக்தி: 24-04-2087 வரை : கல்வி நிலை உயரும். பொருளும்


செல்வமும் வந்து சேரும்.
   கேது புக்தி: 03-06-2088 வரை : நோய் நோக்காடுகள் வந்து விலகும்.

   வெள்ளி (சுக்) புக்தி: 03-08-2091 வரை : நல்ல நட்பு கிடைக்கும்.

   ஞாயிறு புக்தி: 15-07-2092 வரை : உணவில் எச்சரிக்கை, குடும்பத்துடன் நேரம்


செலவிடுவர்ீ

   திங்கள் (நிலவு) புக்தி: 15-02-2094 வரை : வழக்குகளில் சிக்குவதற்கான


வாய்ப்பு

   செவ்வாய் புக்தி: 24-03-2095 வரை : பழியும் பழிச்சொல்லும் கிடைக்கும். வடு



மாறுதல் ஏற்படும்.

   இராகு புக்தி: 30-01-2098 வரை : எல்லாம் நன்மையில் முடியும்.

   வியாழன் புக்தி: 12-08-2100 வரை : எதிர்பாரா நன்மைகள் கிடைக்கும்.

பிறப்பு லக்ன பலன்: Kadakam


கடக லக்னம் நிலவு ஆட்சி பெற்ற வடாகும்.
ீ நிலவு மனதுக்கும் உடலுக்கும்
உரியவன். இவர்கள் மனதும், உடலும் என்றும் தூய்மையானது.
அப்பழுக்கற்றவர்கள் இவர்கள் அழகானது மற்றூம் எடுப்பான முக
அமைப்பு பெற்றவர்கள் அன்பு நிறைந்தவர்கள்.

தந்தை சொல்லுக்கு பெருமளவு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள்.


ஆகையால் இவர்களால் முறையான அறிவுரை பெற இயலாது. கெட்ட
பெயர் எழிதில் வாங்குவர்.

புத்திக்கூர்மையும், மனவலிமையும் பெருமழவு காணப்படும். தொழில்,


வேலைவாய்ப்பு, வியாபாரம் எதுவாக இருந்தாலும், நல்ல
முன்னேற்றமும் வருமானமும் தடையின்றி ஏற்படும்.

சொந்தவடு,
ீ வண்டு வசதி, சமூகத்தில் நல்ல மரியாதைக்கு
உரியவர்காகவும் மேன்மையுடனும் இருப்பர்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எடுத்த செயலை முடிப்பதில்


வல்லவர்கள். இசை, பாடல், போன்ற கலைகளில் ஆர்வம்
கொண்டிருப்பார்கள்.

செவ்வாய் இவர்களுக்கு நல்லது செய்யும். செவ்வாயும் வியாழனும்


சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்க்கையை
உயர்த்துவார்கள்.

ஞாயிறு, அறிவன் (புத) மற்றும் வெள்ளி மூவரும் பாவிகள்.

லக்ன பாவாதிபதி பலா பலன்கள் (லக்ன வட்டு


ீ உரிமையாளர்களால் ஏற்படும்
நன்மை தீமைகள்)

பிறப்பு இராசி பாவாதிபதி (வட்டின்


ீ உரிமையாளர்) : வியாழன் (குரு)
பிறப்பு லக்ன பாவாதிபதி (வட்டின்
ீ உரிமையாளர்) : திங்கள் (நிலவு)

முதலாம் வடு:
ீ இது வாழ்கை, ஆயுள், உடல் வாகு, வாழும் இடத்தில்
மரியாதை ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

லக்னாதிபதி 9 ஆம் இடத்தில் இருந்தால் எல்லோரிடமும் சரளமாக பழகி நல்ல


நட்பை தேடிகொள்வார். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பார். பெரும்
புகழ் பெறுவார். அரசர்களும் பணியக் கூடிய வாழ்வு நிலையை பெறக் கூடியவர்.
பேச்சாற்றல் மிக்கவர். இல்லறத்தை நல்லறமாக்குபவர்.

இரண்டாம் வடு:
ீ இது செல்வம், வருவாய், செழுமை ஆகியவை குறித்த ஒரு
முன்னோட்டம் தரும்

சிம்மம் 2 ஆம் இடமானால் நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும்


கொடையாளராக இருப்பார்.

லக்னத்திற்கு அடுத்த வடானது


ீ இரண்டாவது லக்ன ராசியாகிறது. சாதகரின்
லக்ன இரண்டாம் வடு
ீ Simmam அந்த வட்டிற்கான
ீ உரிமை ஞாயிறு. அந்த
ராசிக்குரிய அதிபதி 2 ஆம் வட்டில்
ீ இருந்தால் அமைச்சராகும் தன்மை
கொண்டவர். பெரிய குடும்பம், 9 வகை மணிகளையும் அணியக் கூடியவர்.

மூன்றாம் வடு:
ீ இது மன வலிமை, உடன் பிறந்தோர், வேலைகாரர்
ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

கன்னி 3 ஆம் இராசி இடமாக அமைந்த ஜாதகர் வரலாறு ஆன்மீ கம்


ஆகியவற்றில் பற்று உள்ளவராகவும், தன் வாழ்வு ஒழுக்கம் உடையதாகவும்
விருந்தோம்பல் பண்பாடு கொண்டவராகவும் வாழ்வார். இவரது நண்பர்கள்
வட்டம் சற்று தரம் குறைவானதாக இருக்கும்.

லக்னத்திற்கு மூன்றாவது வடானது


ீ மூன்றாவது லக்ன ராசியாகிறது. சாதகரின்
லக்ன மூன்றாம் வடு
ீ Kanni அந்த வட்டிற்கான
ீ உரிமை அறிவன் (புத). 3 க்கு
உடையவன் இரண்டாம் இடத்தில இருந்தால் பிச்சை எடுக்க நேரிடும்.

நான்காம் வடு:
ீ இது வடு,
ீ வண்டி, மகிழ்வு, தாய் வழி உறவுகள், செல்வம்
ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

4 ஆம் வடு
ீ துலாம் இராசியானால் நல்லவற்றை முன்னின்று நடத்துபவர். கல்வி
சிறந்து விளங்கும். கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார். தெளிந்த அறிவும்
சிந்தனை திறனும் உடையவர். செல்வம் வாய்ந்தவர்.

லக்னத்திற்கு நான்காவது வடானது


ீ நான்காவது லக்ன ராசியாகிறது. சாதகரின்
லக்ன நான்காம் வடு
ீ Thulam அந்த வட்டிற்கான
ீ உரிமை வெள்ளி (சுக்). 4 ஆம்
இடத்தில் இருந்தால் செல்வத்தில் அரசனுக்கு ஒப்பாவான். பிள்ளைகள்
சிறப்பானவர்களாக விளங்கும். தம் மக்களால் பாராட்டப் பெற்றவன்.

ஐந்தாம் வடு:
ீ இது குழந்தை செல்வம், அறிவாற்றல், கல்வி, நட்பு,
திறமைகள் ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

ஐந்தாம் இடம் விருட்சிகமானால் எந்த கோள்களாலும் பழிப்பு இல்லாமல், நல்ல


தோற்றம், சிறந்த கொடையாளராக மக்கள் மீ து பற்று, நல்ல நட்புடைய
பிள்ளைகள் வாய்க்கும்.

லக்னத்திற்கு ஐந்தாம் வடானது


ீ ஐந்தாம் லக்ன ராசியாகிறது. சாதகரின் லக்ன
ஐந்தாம் வடு
ீ Virichikam அந்த வட்டிற்கான
ீ உரிமை செவ்வாய். 5 ற்கு உடையவன்
நான்காம் இடத்தில இருந்தால் தந்தைக்கு அன்பன்; பெரியோர்களிடம் ஈடுபாடு.
துணி, ஆடை விற்பனை, இடைத்தரகர் மண்டி நடத்தல் ஆகிய தொழிலில் இந்தப்
பிள்ளை ஈடுபடுவான்.

ஆறாம் வடு:
ீ இது எதிரி, நோய், நோக்காடுகள், இடரல்கள், சட்ட சிக்கல்கள்,
குற்ற செயல்கள் ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

தனுசு ஆறாம் இடமானால் வேடர்கள் வில்லேந்தியவர்கள், குதிரைகள்,


யானைகள் மற்றும் அசையும் பொருள்கள் அசையாப் பொருள்கள்
ஆகியவற்றால் தொல்லைகள் இருந்து கொண்டிருக்கும். சாதகரை ஏமாற்றிப்
பொருளை பறித்து செல்பவரும் உண்டு.

லக்னத்திற்கு ஆறாம் வடானது


ீ ஆறாம் லக்ன ராசியாகிறது. சாதகரின் லக்ன
ஆறாம் வடு
ீ Thanush அந்த வட்டிற்கான
ீ உரிமை வியாழன் (குரு).
ஆறுக்குடையவன் பனிரெண்டாம் வட்டில்
ீ இருந்தால் கன்று மாடு முதலிய
கால்நடை செல்வங்களை இழப்பான். மகிழ்வு என்பது இவருக்கு இல்லை
எனலாம். எப்பொழுதும் ஊர் சுற்றியாகவே இருக்க ஆசைப்படுவார். இரவு பகல்
பாராமல் செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

ஏழாம் வடு:
ீ இது வாழ்கை துணையின் குணங்கள், செல்வம் சேர்கை,
திருமணம், மண வாழ்கை ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்
மகரம் ஏழாமிடம் கொண்டவரின் வாழ்கை துணை பிறருக்கு உதவுவது போலக்
காட்டிக் கொள்வார். ஆனால் மனதில் கஞ்சத்தனம் மிக்கவர். பிறருக்கு ஈவது
என்பது இவரது எண்ணத்தில் கடுகளவும் இருக்காது. இவருக்குப் பிறக்கும் பெண்
குழந்தை நல்ல பெயரெடுக்கும். தன்னைப் பொறுத்த மட்டில் தனக்கும் தன்
துணைக்கும், தன் குழந்தைகளுக்கும் இனியவராய் நடந்து கொள்பவர். ஒழுக்கம்
மிக்கவர்.

லக்னத்திற்கு ஏழாவது வடானது


ீ ஏழாவது லக்ன ராசியாகிறது. சாதகரின் லக்ன
ஏழாம் வடு
ீ Makaram அந்த வட்டிற்கான
ீ உரிமை காரி (சனி). ஏழுக்குடையவன் 8
ஆம் இடத்தில் இருப்பின் தன் வாழ்கை துணையுடன் ஓயாமல் சண்டை
வளர்பவர்; ஆதலால் இவரது துணை மன வருத்தமுற்ற வாழ்வை இவருடன்
வாழும் நிலை. இவர் தனது வாழ்கை துணையை தப்பித்தவறி மகிழ்ச்சியோடு
இருக்க முற்பட்டால், அவருக்கு விரைவில் மரணம் வந்து சேர்கிறது.

எட்டாவது வடு:
ீ இது ஆயுள், அச்சம், பகை, மன அமைதி ஆகியவை குறித்த
ஒரு முன்னோட்டம் தரும்

கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த சாதகர் நெருப்பினாலோ, தீய எதிர்


பாலினத்தவர் சேர்க்கையினாலோ, பகைவராலோ புண்பட்டு மரணிக்க
நேரிடலாம்.

லக்னத்திற்கு எட்டாம் வடானது


ீ எட்டாம் லக்ன ராசியாகிறது. சாதகரின் லக்ன
எட்டாவது வடு
ீ Kumbam அந்த வட்டிற்கான
ீ உரிமை காரி (சனி).
எட்டுக்குடையவன் எட்டாம் இடத்திலேயே இருந்தால் பயிர் தொழில் செய்யக்
கூடியவராக இருப்பார். நோயாளி. பிறரை வஞ்சித்து கொடுமை செய்வார்.

ஒன்பதாம் வடு:
ீ இது மூதாதையர், தாய் தந்தை, வடு,
ீ வண்டி வாய்ப்புகள்
ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

மீ னம் ஒன்பதாம் இடமாக அமைந்த சாதகர் கோயில் நற்பனிகள், காடுகள்


அமைதல், யாகங்கள் செய்தல், புனித நீர் நிலைகளை தேடிச் சென்று தன் ஆன்மீ க
உணர்வை வளர்த்த ஆகிய இவற்றை மேற்கொள்வார்.
லக்னத்திற்கு ஒன்பதாம் வடானது
ீ ஒன்பதாம் லக்ன ராசியாகிறது. சாதகரின்
லக்ன ஒன்பதாவது வடு
ீ Meenam அந்த வட்டிற்கான
ீ உரிமை வியாழன் (குரு).
ஒன்பதுக்கு உடையவன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் சாதகர் மானம்
உள்ளவர். வெளி நாடுகள் சென்று வருபவர். அறிவாளி. கட்டுடல் கொண்டவர்.
சில சாதகர்கள் வஞ்சகர் ஆகவும் ஆகின்றார்கள்.

பத்தாவது வடு:
ீ இது வாழ்கை எத்தகையதாக அமையும், அரசாங்க பதவி,
வெளிநாடு சென்று பொருள் ஈட்டல், ஆடை நகைகள் எப்படி அமையும்
ஆகியவை குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

மேசம் ராசி பத்தாம் வடாக


ீ அமையுமானால் சாதகர் தொழில் செய்து வருவாய்
ஈட்டுவதில் சிறந்தவர். துப்பு கண்டு பிடிப்பதில் வல்லவர், அரசாங்க பணியில்
ஈடுபடுபவர், மகிழ்ச்சி மிக்கவர். துறவு பூண்டோரின் கோபத்திற்கு ஆளாக
நேரிடலாம்.

லக்னத்திற்கு பத்தாவது வடானது


ீ பத்தாவது லக்ன ராசியாகிறது. சாதகரின் லக்ன
பத்தாம் வடு
ீ Mesham அந்த வட்டிற்கான
ீ உரிமை செவ்வாய். பத்துக்குடையன்
நான்காம் இடத்தில் இருந்தால் அளவிற்கும் கூடுதலாக தன் மகிழ்விற்காக,
பொழுது போக்கிற்காக என செலவு செய்து அவற்றில் ஈடுபடக்கூடியவர். தாய்
தந்தையரை நலமாக வைத்துக் காப்பவர். மக்களும் அவர்கள் வாழ்வும் நலம்
பெற வேண்டும் என்ற பரந்த நோக்கம் உள்ளவர். அரசாங்க வருவாய் பெறக்
கூடியவர்.

பதினொன்றாவது வடு:
ீ இது பேச்சு திறன், உடன் பிறப்பு நலன் ஆகியவை
குறித்த ஒரு முன்னோட்டம் தரும்

ரிஷபம் பதினொன்றாமிடமாக அமைந்தால் அரசு அலுவலர்களாலும், பிற உயர்


பொருப்பில் உள்ளவர்களாலும் வருவாய் கிட்டும். கொடுக்கல் வாங்கல் கோன்ற
தொழில் செவதினால் பொருள் வரவும், நிலம் புலம் ஆகிய சொத்துக்களினால்
வருவாய் ஈட்டுவார்.

லக்னத்திற்கு பதினொன்றாவது வடானது


ீ பதினொன்றாவது லக்ன ராசியாகிறது.
சாதகரின் லக்ன பதினொன்றாம் வடு
ீ Rishabam அந்த வட்டிற்கான
ீ உரிமை
வெள்ளி (சுக்). பதினொன்றுக்குடையவன் நாலாம் இடத்தில இருந்தால் சாதகர்
அதிக ஆயுள் உள்ளவனாகின்றார். தகபனாரிடம் பணிவுள்ளவராகவும்
பிள்ளைகளிடம் அன்பு பாசம் உள்ளவராகவும் இருப்பார். நற்செயல்கள் செய்து,
அதன் மூலம் நல்ல பொருள் வருவாயும் செல்வ சேமிப்பும் கொண்டிருப்பார்.

பன்னிரெண்டாம் வடு:
ீ இது இடர்பாடுகள், ஆன்மீ கம் ஆகியவை குறித்த ஒரு
முன்னோட்டம் தரும்

மிதுனம் பன்னிரெண்டாம் இடமாக இருந்தால் எதிர் பாலினத்தவரால் பெரும்


செல்வம் இழப்பார். கெட்ட பழக்கம், கெட்ட நடத்தை உடையவர். தகாத
செயல்களுக்காக ஊதாரி முறையில் பொருளை செலவழிப்பர்.

லக்னத்திற்கு பன்னிரெண்டாம் வடானது


ீ பன்னிரெண்டாம் லக்ன ராசியாகிறது.
சாதகரின் லக்ன பன்னிரண்டாவது வடு
ீ Mithunam அந்த வட்டிற்கான
ீ உரிமை
அறிவன் (புத). லக்னதிற்கான 12 ஆவது வடிற்குடையவர்
ீ லக்னத்துக்கு 2 ஆவது
வட்டில்
ீ இருந்தால், செல்வம் வணாக
ீ அழியும். அவரது போச்சையோ
சொல்லையோ யாரும் மரியாதை கொடுக்க மாட்டார்கள். கல்வியில் ஊக்கமோ
ஆர்வமோ இருக்காது. தேவையில்லதவற்றை பேசி தன் மரியாதையை
கெடுத்துக்கொள்வார். ஊர் சூற்றுவதில் இருக்கும் நாட்டம் தன் வாழ்வை
சிறப்பானதாக்க வேண்டும் என்பதில் இருக்காது.

The 16 Varga Charts according to Indian vedic astrology | 16 Varga Kundalis + Bhava Chart

நிலவு இராகு வியாழன்(குரு)


Moon Rahu Jupiter

காரி(சனி) ராசி ல‌க்


Saturn RASI Asc
ஞாயிறு(சூ)
Sun
அறிவன்(புத)
Mercury

வெள்ளி(சுக்)
கேது Venus
Kethu செவ்வாய்
Mars

இராசி கட்டம் என்று இந்த கட்டத்தை சொல்வதைவிட, இதை லக்ன கட்டம்


என்று சொல்வது முறையாக இருக்கும். இந்த கட்டத்தின் மூலம் சாதகரின் முழு
வாழ்கை, உடல்நலம், செல்வம், செல்வாக்கு, திருமணம், தொழில், வேலை
அமைவது மற்றும் குழந்தைகள் ஆகியவற்றைக் குறித்து ஆருடம் கணிக்கலாம்

நிலவு இராகு வியாழன்(குரு)


Moon Rahu Jupiter

காரி(சனி) ல‌க்
Saturn Asc
பாவம் ஞாயிறு(சூ)
BHAVA Sun
அறிவன்(புத)
Mercury

வெள்ளி(சுக்)
கேது Venus
Kethu செவ்வாய்
Mars

எந்தெந்த இராசி கட்டங்களில் எந்த கோள் உள்ளது என்பதை தெளிவாக


எடுத்துக்காட்டும் கட்டம் பாவம் கட்டம்.
ஞாயிறு(சூ)
Sun
நிலவு
Moon
செவ்வாய்
Mars
காரி(சனி)
Saturn

ல‌க்
ஹோரை
Asc
HORA அறிவன்(புத)
Mercury
வெள்ளி(சுக்)
Venus
வியாழன்(குரு)
Jupiter
இராகு
Rahu
கேது
Kethu

ஓரை கட்டம் - இது பொருளாதார சூழ்நிலை குறித்து தெளிவாக ஆருடம் கணிக்க


உதவும். ஆண்-பெண் சமன்பாடுகள், தனிநபர் - பொதுநலன் சமன்பாடுகள்
ஆகியவற்றைக் குறித்து கணிக்க உதவும்
நிலவு செவ்வாய்
Moon ஞாயிறு(சூ) Mars
கேது Sun வியாழன்(குரு)
Kethu Jupiter

திரேக்கானம்
DREKKANA

வெள்ளி(சுக்)
அறிவன்(புத) ல‌க் Venus இராகு
Mercury Asc காரி(சனி) Rahu
Saturn

திரேக்காணம் கட்டம் - இது உடல்நலம் குறித்த தெளிவுகளை பெற உதவும்.


உடன்பிறப்புகள், உழைப்பு மற்றும் திறமை ஆகியவற்றை குறித்து ஆருடம்
கணிக்க இந்தக் கட்டம் பயன்படுகிறது

ஞாயிறு(சூ)
நிலவு செவ்வாய் Sun வியாழன்(குரு)
Moon Mars கேது Jupiter
Kethu

சதுர்த்தாம்சம்
ல‌க் CHATURTHAMSHA காரி(சனி)
Asc Saturn

அறிவன்(புத)
Mercury வெள்ளி(சுக்)
இராகு Venus
Rahu
சதுர்த்தாம்சம் கட்டம் பொதுவான நலம், மனநிலை, வடும்
ீ வட்டுச்
ீ சூழலும்,
மகிழ்வு ஆகியவற்றைக் குறித்து கணிக்க உதவுகிறது. மன அமைதி குறித்து
தெளிவாக ஆருடம் கணிக்க இது உதவுகிறது

ல‌க் காரி(சனி)
Asc Saturn

செவ்வாய்
Mars வியாழன்(குரு)
இராகு சப்தமாம்சம் Jupiter
Rahu SAPTAMAMSHA
ஞாயிறு(சூ) கேது
Sun Kethu

நிலவு
வெள்ளி(சுக்) Moon
Venus அறிவன்(புத)
Mercury

சப்தமாம்சம் கட்டமானது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் சாதகர்


எதையும் முன்னெடுக்கும் அறிவாற்றல் குறித்து ஆருடம் கணிக்க உதவுகிறது

செவ்வாய்
Mars இராகு
காரி(சனி) Rahu
Saturn

நவாம்சம்
Mercury

NAVAMSHA நிலவு
Moon

ல‌க்
Asc
ஞாயிறு(சூ)
Sun
வெள்ளி(சுக்)
Venus
வியாழன்(குரு)
Jupiter
கேது
Kethu

நவாம்சம் கட்டம் - இந்த கட்டத்தை கொண்டு சாதகரின் திருமண வாழ்க்கை


மற்றும் செல்வ செழிப்பான வாழ்க்கை குறித்து ஆருடம் கணிக்கலாம். மேலும்
வாழ்க்கைத் துணை, தொழிலில் துணை ஆகியவற்றையும் கணிக்கலாம். ராசிக்கு
அடுத்தபடியாக ஆருடத்தில் பெருமளவு பயன்படும் கட்டம் இதுவாகும்

ஞாயிறு(சூ) செவ்வாய் இராகு


Sun Mars Rahu

வியாழன்(குரு)
Jupiter
தசாம்சம் ல‌க்
நிலவு DASHAMSHA Asc
Moon காரி(சனி)
Saturn

அறிவன்(புத) வெள்ளி(சுக்)
Mercury
கேது
Venus
Kethu

தசாம்சம் கட்டம் - வேலை, வேலைச் சூழலில் ஒருவருக்கான திறன், அவர்


அடையக்கூடிய வெற்றி வாய்ப்புகள் ஆகியவை குறித்து கணிக்க உதவுகிறது

நிலவு ஞாயிறு(சூ)
Moon Sun
கேது செவ்வாய்
Kethu Mars

துவாதசாம்சம்
ல‌க் DWADASHAMSHA வியாழன்(குரு)
Asc Jupiter

வெள்ளி(சுக்)
அறிவன்(புத) Venus காரி(சனி)
Mercury இராகு Saturn
Rahu

துவாதசாம்சம் கட்டம் ஒருவரின் வாழ்கை விதியையும், பெற்றோர் மற்றும்


மூதாதையரிடமிருந்து அவர் பெறும் ஆற்றல், மேலும் முன் பிறப்பில் செய்த
செயல்கள் ஆகியவை குறித்து ஆருடம் கணிக்க உதவுகிறது

நிலவு இராகு வெள்ளி(சுக்)


Moon Rahu Venus
செவ்வாய் கேது காரி(சனி)
Mars Kethu Saturn
வியாழன்(குரு)
Jupiter

அறிவன்(புத)
Mercury ஷோடசாம்சம்
SHODASHAMSHA

ல‌க் ஞாயிறு(சூ)
Asc Sun

சோடசாம்சம் கட்டம் வாழ்க்கையின் மகிழ்வு, வடு


ீ மற்றும் வண்டி வாங்கும்
வாய்ப்புகள், சொத்து வாங்கும் வாய்ப்புகள், செல்வம், மனநிலை ஆகியவை
குறித்து ஆருடம் கணிக்க பயன்படுகிறது

வெள்ளி(சுக்)
ஞாயிறு(சூ) Venus
Sun செவ்வாய்
Mars

ல‌க்
Asc விம்சாம்சம்

காரி(சனி) VIMSHAMSHA அறிவன்(புத)


Saturn Mercury

இராகு
நிலவு வியாழன்(குரு) Rahu
Moon Jupiter கேது
Kethu

விம்சாம்சம் கட்டம் ஒருவரின் ஆன்மீ க ஈடுபாட்டையும், ஆன்மீ க


சிந்தனையையும், அவர் தமிழரின் முருகக் கடவுளுக்கு அடியாராக வாழ்வது
குறித்தும், தமிழ் வழி ஆன்மீ க பணிகள் குறித்தும் ஆருடம் கணிக்க
பயன்படுகிறது

ஞாயிறு(சூ) அறிவன்(புத)
Sun Mercury

ல‌க்
Asc
இராகு
சதுர்விம்சாம்சம் Rahu
CHATURVIMSHAMSHA கேது
Kethu

செவ்வாய்
Mars நிலவு
வியாழன்(குரு) Moon
Jupiter வெள்ளி(சுக்)
காரி(சனி) Venus
Saturn

சதுர்விம்சாம்சம் கட்டம் ஆன்மீ கம் தொடர்பான கல்வி, தியானத்தில் ஆழ்வது,


ஆன்மீ கத்தில் தன்னை தானே எந்த அளவிற்கு ஈடுபடுத்திக் கொள்வார் என்பது
குறித்த ஒரு தெளிவைத் தரும் கட்டமாகும்

ஞாயிறு(சூ)
Sun காரி(சனி) செவ்வாய் நிலவு
வியாழன்(குரு) Saturn Mars Moon
Jupiter
ல‌க்
Asc
அறிவன்(புத)
Mercury பாகாம்சம்
கேது
BHAMSHA
Kethu

வெள்ளி(சுக்) இராகு
Venus Rahu

சப்தவிம்சாம்சம் அல்லது பாகாம்சம் கட்டம் என்று அழைக்கிறார்கள். இது உடல்


வலிமை மற்றும் உடல் உழைப்பை தாங்கிக்கொள்ளும் தன்மையைக் குறித்து
ஆருடம் கணிக்க உதவுகிறது

ல‌க்
Asc செவ்வாய்
இராகு வெள்ளி(சுக்) Mars
Rahu Venus காரி(சனி)
கேது Saturn
Kethu

வியாழன்(குரு)
Jupiter திரிம்சாம்சம்
TRIMSHAMSHA

அறிவன்(புத) ஞாயிறு(சூ) நிலவு


Mercury Sun Moon

திரிம்சாம்சம் கட்டம் - தொழிலில் நொடிப்பு, தேவையற்ற செலவுகள், பகைவர்,


நோய், விபத்துக்கள், வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றை
எதிர்கொள்வதை குறித்து ஆருடம் கணிக்க உதவுகிறது.

ல‌க்
Asc
நிலவு
Moon
காரி(சனி)
Saturn
இராகு
Rahu
கேது
Kethu

ஞாயிறு(சூ)
Sun
காவேதாம்சம் அறிவன்(புத)
KHAVEDAMSHA Mercury
செவ்வாய்
Mars

வியாழன்(குரு) வெள்ளி(சுக்)
Jupiter Venus

காவேதாம்சம் கட்டம் - நல்லோர்கள், பகைவர்கள், நல்ல பழக்கவழக்கம், தீய


பழக்க வழக்கம், பொதுவான மனநிலை ஆகியவை குறித்து கணிக்க உதவுகிறது

ல‌க் இராகு
Asc Rahu
கேது
Kethu

அறிவன்(புத)
Mercury
காரி(சனி) அக்ஷ்வேதாம்சம்
Saturn AKSHVEDAMSHA
வியாழன்(குரு)
Jupiter

ஞாயிறு(சூ)
செவ்வாய் Sun நிலவு
Mars வெள்ளி(சுக்) Moon
Venus

அக்சவேதாம்சம் கட்டம் - சாதகரின் ஒழுக்க நிலை, பண்பாடு, பொதுவான


மனநிலை, நம்பகத்தன்மை ஆகியவை குறித்து கணிக்க உதவுகிறது

வியாழன்(குரு) வெள்ளி(சுக்)
நிலவு செவ்வாய் Jupiter Venus
Moon Mars கேது காரி(சனி)
Kethu Saturn

ல‌க்
Asc சஷ்டியாம்சம்
SHASHTYAMSHA அறிவன்(புத)
Mercury

ஞாயிறு(சூ)
Sun
இராகு
Rahu
சச்டியாம்சம் கட்டம் - துல்லியமாக ஒரு சாதகரின் சாதகத்தை கணிக்க
உதவுகிறது. பொதுவாக இரட்டையராக குழந்தைகள் பிறக்கும் பொழுது நேர
இடைவெளி என்பது அரிதக் குறைவாக இருக்கும். அத்தகைய சூழலில்,
துல்லியமாக ஒருவரின் சாதகம் குறித்து கணிப்புகள் பெற இந்த கட்டம்
பயன்படுகிறது.

https://www.clickastro.com/free-tamil-jathagam

You might also like