You are on page 1of 53

கால் மாற்றும் கலை

கால் மாற்றும் கலை

அன்புடையீர் வணக்கம்!

கால் மாற்றும் கலையினைப் பற்றி நாம் இப்பதிப்பின் மூலம்


தெரிந்துக்கொள்வோம். இந்தக் காலும் கலையும் பற்றி நம்பெருமானார்
வள்ளலார் கூறுவது யாது? ஒரிடத்தில் 'கால் மேல் கால் போடவும் பயந்தேன்'
என்று காலைப்பற்றியும், 'கலையுரைத்த கற்பனையெலாம் நிலை என
கொண்டாடும் உலகீ ர்' என்று கலையைப் பற்றியும் பாடியிருப்பதைக்
காண்கிறோம். ஆனால், நாம் இங்கே பார்க்கப்போவது அந்தக் காலும் கலையும்
அல்ல.

இங்கே கால் என்பது காற்றை குறிக்கும். அதாவது மூச்சுக்காற்று. கலை என்பது


அதனை தமது விருப்பத்திற்கு பழக்கும் வித்தையை குறிக்கும். இவ்வுலகில் நமது
தமிழ் சித்தர்கள் தவிர வேறு எவரும் மூச்சுக்கலையைப் பற்றி விரிவாக
கூறவில்லை எனலாம். அதிலும் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடல் என மொத்தம்
எண்ணாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். (திருமூலர் மொத்தம் 8000 பாடல்கள்
பாடியுள்ளதாக வள்ளலார் கூறுகிறார், அவற்றில் 3000 பாடல்கள் மட்டுமே
நமக்குக் கிடைத்துள்ளன, மேலும் திருமூலர் 3000 ஆண்டுகள் அல்ல, 8000
ஆண்டுகள் பரு உடலுடன் வாழ்ந்துள்ளார்) இதிலிருந்து எட்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்கள் இந்த மூச்சுக்கலையை பற்றி
அறிந்திருந்தனர் என்று ஒருவாறு சொல்லலாம். இவர் பாடிய திருமந்திரத்தில்
இந்த மூச்சுக்கலையை பற்றி பல விஷயங்களை நாம் அறிய முடிகிறது.
இவருடைய சமாதிஇடம்தான், சிதம்பரம் கோயில் என்பது நமக்குத் தெரிந்த
விஷயமே. திருமந்திரத்தை வள்ளலார் கூறும்போது, 'இந்த மார்க்க உண்மை
தெரிய வேண்டுமெனில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்' என்கிறார்.

இந்து மதங்களில், எங்கெல்லாம் பாம்பு படங்கள் சிலைகள் உள்ளனவோ


அவைகள் எல்லாம் மூச்சுக்காற்றைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகும். நமது
மூச்சுக்காற்றையே பாம்பாக உருவகப்படுத்தினார்கள் இந்துக்கள்.
அரசமரத்தடியில் இருக்கும் இருபாம்புகள் பின்னி நிற்குமாறு கல்லில்
செதுக்கியிருப்பார்கள். அவை நமது இடங்கலைமூச்சும், பிங்கலை மூச்சும்
இணைந்த சுழுமுனை மூச்சை குறிக்கும் அடையாளம். அதாவது
அரசமரத்தடியில் அமர்ந்து சுழுமுனை இயக்கத்தில் தியானம் செய்ய
இறையருள் கிடைக்கும் என்பதனை புறத்திலே இவ்வாறு செய்திருக்கிறார்கள்.
சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு, முருகனின் காலடியில் இருக்கும் பாம்பு,
விநாயகரின் வயிற்றில் சுற்றியுள்ள பாம்பு, விஷ்ணு பாம்பின்மேல் படுத்திருப்பது,
கண்ணன் பாம்பின்மீ து நடனம் ஆடுவது போன்ற அனைத்தும் ஒவ்வொரு
தத்துவத்திலுள்ள மூச்சுக்காற்றை குறிக்கிறது என்பதை அறியவேண்டும். ஆனால்
இந்துக்கள் அதன் உண்மைதெரியாமல் பால், பழம், முட்டை வைத்து குருட்டு
பூஜை செய்து செய்துவருகிறார்கள். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையும் இந்த
நமது மூச்சின் நடனத்தையே குறிக்கும்.

நமது வள்ளலாரும் இந்த மூச்சுப்பயிற்சி பற்றி சில இடங்களில் தமது


திருவருட்பாவில் கூறியுள்ளார். எனவே திருஅருட்பா, திருமந்திரம் மற்றும் சித்தர்
கருத்துகள் போன்றவை கூறும் சர பயிற்சியினை பற்றிக் காண்போம்.

அதற்கு முன்னர் பொதுவாக மூச்சுக்காறு பற்றின உண்மையினை காணலாம்.


நமது நாசியின் வழியே உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்கும்
காற்றுதான் மூச்சுக்காற்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் ஒரு
நாளைக்கு எத்தனை முறை மூச்சுவிடுகிறோம்? ஏன் நமக்கு ஒரு நாசித்துளைக்கு
பதிலாக இரு நாசித்துளைகள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு கண்ணுக்கு பதிலாக இரு
கண்கள் உள்ளன? ஏன் நமக்கு ஒரு காதுக்கு பதிலாக இரண்டுக் காதுகள் உள்ளன?
என்று சிந்தித்தோமா?

இரண்டு கண்கள், காதுகள் இருந்தாலும் பார்க்கும் பார்வையும், கேட்கும் சத்தமும்


ஒன்றாகவே உள்ளன! பிறகு ஏன் இரண்டு? ஒன்று பழுதானால் இன்னொன்றை
பயன்படுத்திக்கொள்ள இறைவன் நமது உடலில் அமைத்த கூடுதல் பாதுகாப்பு
(Step-in) அவையங்கள் என்று கூறலாம். ஆனால் மூக்கிற்கு ஏன் இரண்டு
துவாரங்கள்? இரண்டு துவாரங்களுமே ஒரே செய்கையினை செய்கிறதா? என்று
ஆராய்ந்தால், இரண்டு துவாரங்களும் வெவ்வேறு இரண்டுவித செய்கையினை
செய்வதை அறியலாம். மேலும் மூன்றாவதாக ஒரு செயலையும் செய்வதைக்
காணலாம்!  எப்படி?

நமது முன்னோர்கள், நமது இடதுபுறம் உள்ள நாசித்துவாரத்தை 'இடகலை' /


'சந்திரகலை' என்றும் வலது புறம் உள்ள நாசித்துவாரத்தை 'பிங்கலை' / சூரியக்
கலை என்றும் கூறுவர்.

1. மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை


எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு.
2. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது.
இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.

3. இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.

ஆக இம்மூன்றுச் செயல்களையும் நமது நாசி செய்துவருகிறது. இதனை


'சரவோட்டம்' என்பார்கள். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத்
தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில்
மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.  

இந்த சர ஓட்டம் இயற்கையாகவே சுமார் ஒன்றறை மணித்துளிகளுக்கு


ஒருமுறை மாறி மாறி இயங்கும். இம்மாற்றத்தை நமது விருப்பத்திற்கு இனங்க
மாற்றுவதுதான் 'கலை' என்கிறோம்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே

சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்

இவை முன்னோர் வாக்கு. சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன்  பொருள்


சர கலையை இயக்கத்தெரிந்தவனிடம் சரசம் என்று விளையாட்டுத் தனமாக
நடந்துக்கொண்டால் சரம் கற்றவன் சீறி சினந்து வாக்கு விட்டால் அது அப்படியே
பலித்துவிடும். ஏனென்றால் பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் தேர்ச்சி
பெற்றவனின் உடல், மனம், வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.

நீ ண்டநாள் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசம் செய்யவேண்டும். எனவேதான் வடலூர்


ஞானசபையில் இதனை உணர்த்தும் வகையில் நம்பெருமான், ஞானசபையினை
சுற்றி  21600 வளையங்கள் கொண்ட இரும்புச் சங்கிலியினைப்
பொருத்தியுள்ளார்கள்.

1 நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600


மூச்சும்    ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள்  216 என்பது இந்த 21,600
மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600
மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120
ஆண்டுகளாகும்.

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்


தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே. (திருமந்திரம்)
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும்
சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க
முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும்.
இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள் என்று திருமந்திரம் கூறுகிறது.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும்,


ஒடும்போது    25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,;
உடலுறவின்  போதும்,  கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64
மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.  இந்த மூச்சினுடைய  அளவு
எவ்வளவு  மிகுதியாகிறதோ  அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
அதனால்தான் வள்ளற்பெருமான், நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில்
'மெல்லென நடைபயில வேண்டும்' என்று கூறுவார். அதாவது நமது
மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை.
மேலும் நம்பெருமானார், 'ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க
பழக்கப்படுத்திக்கொண்டால், அவன் 1000 வருடங்கள் வாழலாம்' என்றும்
கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 மூச்சுதான் செலவாகும், அதுவே
உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது, நாம் தூங்கும்போது 20 மூச்சு ஒரு
நிமிடத்திற்கு நட்டம் அடைகிறது. எனவே, 'தூங்காதே தம்பி தூங்காதே'!
அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது (64-
12=52). எனவே, 'உனது கோபம் உன் எதிரிக்கு இலாபம்' என்பதை அறியவேண்டும்.
கோபம் என்பது 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பார் வள்ளுவரும். அதுபோல்
உடலுறுவு செய்யும்போதும் நமக்கு 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு நட்டமாகிறது.
எனவே வள்ளலார், இதில் மாதம் இருமுறை மட்டுமே இல்லறத்தான்
ஈடுபடவேண்டும் என்கிறார். 'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்பார்களே
அது இதற்காகத் தான்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த


ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,


66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7


வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து


சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம்
அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம். 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'!
(அ+உ+ம=ஓம்).

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்


காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)

இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக


ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம்
என்கிறார் திருமூலர்.

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்


ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே. (திருமந்திரம்)

இவ்வுலகில் மிக அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் ஆமை. அது ஒரு
நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கும். இதன் ஆயுள் சராசரியாக 200
வருடங்களுக்கும் மேல். 1000 வருடங்கள் வயதுள்ள ஓர் கடலாமை சமீ பத்தில்
இறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் வருதே!

ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன


செய்ய வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார். வாயில்லாக் கிணற்றுள்
உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம்
முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு
ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர்
வாழலாம்.
இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு
உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான்
உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் 8000 வருடங்களுக்கு
முன்னரே அறிந்திருந்தனர். இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர்
பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப்
பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். ஆமைதான் உலகில் நீண்ட நாள்
உயிர்வாழும் பிராணி என்று அறிவியலார்கள் தற்காலங்களில்தான்
கண்டுபிடித்தார்கள்.

"எப்போதும் பயத்தோடு இருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும்


இருக்கக்கூடாது. எப்போதும் மன உற்சாகத்தோடு இருக்க வேண்டும். கொலை,
கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா.
உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல் (ஓடுதல்), வழக்கிடல்,
சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு (மூச்சுக்காற்று) அதிகமாகச்
செலவாகாமல் ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்" (திருஅருட்பா -
உரைநடைப்பகுதி - பக்கம்339)

'அருகுநுனி பனியனைய சிறிய துளி


பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்' (திருப்புகழ்)

ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும்


மானிடனாகி 120 வருடங்கள் வாழவைக்கக்கூடிய உயிர்ச்சக்தியினை
பெற்றிருக்கின்றன. இயற்கையாக  நாம் 120 வருடங்கள் வாழ்வதற்கும், குறை
ஆயுள் அடையவும் நம் தந்தைதான் காரணம். எப்படி?

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்


பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே. (திருமந்திரம்)

விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு


நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆயிரம் பிரைகள் காணமுடியும். ஆனால் மாத்திரை
குறைய குறைய அதற்கேற்றாற்போல குழந்தையின் ஆயுளும் குறையும்
என்கிறார் திருமூலர்.

மலம், ஜலம் தடைபடுமானால் என்ன செய்ய வேண்டும்?


மலங்கழிக்கின்ற போது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப்
பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும்போது, இடது கையால் வலது பக்கம்
அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக்
கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல
சங்கற்பத்தோடு இருக்க வேண்டும்.

மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண


வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி
கழித்தல் வேண்டும்.

ஜலம் தடைபட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது


பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜல வுபாதி கழித்தல்
வேண்டும். (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 333)

அதாவது, மல ஜல கழிப்பதில் சற்று உபாதை உள்ளவர்கள், சூரியக்கலையில்


(வலது நாசி) சுவாசம் செல்லும்போது மலம் கழிக்க வேண்டும். சந்திரக்கலையில்
(இடது நாசி) சுவாசம் செல்லும்போது ஜலம் கழிக்க வேண்டும்.

நமது விருப்பம்போல் சூரியக்கலையினையும், சந்திரக்கலையினையும்


மாற்றுவது எப்படி?

நாம் இடதுபக்கம் சாய்ந்து படுத்தால், சற்று நேரத்தில் நம் சுவாசம் வலதுபக்கம்


(சூரியக்கலையில்) ஓட ஆரம்பித்துவிடும். நாம் வலதுபக்கம் சாய்ந்து படுத்தால்,
சற்று நேரத்தில் நம் சுவாசம் இடதுபக்கம் (சந்திரக்கலையில்) ஓட
ஆரம்பித்துவிடும். இது மிக மிக எளிமையான வழி. முயன்று பாருங்கள்.

தேகசம்பந்தம் பற்றி வள்ளலார் கூறுவது யாது?

1. பகலில் தேகசம்பந்தங்கூடாது.
2. முதலில் மனதைத் தேக சம்பந்தத்தில்  வையாது வேறிடத்தில் வைத்துப் பின்
சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். மூச்சு அதிர்ந்து மேலிடாது
மெல்லென பெண்போகம் செய்தல் வேண்டும்.
3. தொடங்கிய போது அறிவு வேறுபடாமல், மன முதலிய கரண சுதந்திரத்தோடு,
தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத்
தேகசம்பந்தம் செய்தல் வேண்டும்.
4. புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம்
வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும்.
5. அவ்வுபாயமானது பிராணவாயுவை (மூச்சுக்காற்றை) உள்ளேயும் அடக்காமல்
வெளியேயும் விடாமல் நடுவே உலாவச் செய்து கொள்ளுதலாம்.
6. தேகசம்பந்தம் ஒரு முறையன்றி அதன் மேலுஞ் செய்யப்படாது.
7. தேகசம்பந்தம் செய்தப்பின், குளித்துவிட்டு இறைவனை நினைந்து தியானம்
செய்துவிட்டு பிறகு படுக்க வேண்டும்.
8. எந்தக்காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடது கை பக்கமாகவே
படுக்கவேண்டும். (அப்போதுதான் மூச்சுக்காற்று எப்போது சூரியக்கலையில்
இருக்கும்)
9. இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற்கு ஒருமுறை செய்வது அதம பசஷம்
(அதர்மம்). சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும்.
10. 8 தினத்திற்கு ஒரு முறை செய்வது மத்திம பசஷம் (நடுவுநிலை).
11. 15 தினத்திற்கு ஒரு முறை செய்வது உத்தம பசஷம் (உத்தமம்)
12. அதன் மேற்படில் (15 தினத்திற்கும் மேல் செய்யவில்லை எனில்) சுக்கிலம்
ஆபாசப்பட்டுத் தானே கழியும்.
13. இரவில் சொப்பனம் வராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக்
கொள்ளல் வேண்டும்.
14. காலைப்புணர்ச்சி, பகற்புணர்ச்சி, அந்திப்புணர்ச்சி, இரவு முன்பங்குப்புணர்ச்சி
கூடாது.
15. ஜீவன் என்கின்ற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால்
சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு
நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மட்டும் எடுத்துவிடவேண்டியது. அதாவது
15 தினத்திற்கு ஒருமுறை தேக சம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை
வெளிப்படுத்திவிட வேண்டும்.
16. ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபக
முடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம்
ஏகதேசத்தில் செய்யலாம் என்றது மந்தரத்தையுடையவனுக்கே அன்றி, அதிதீவிர
பக்குவிக்கல்ல. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 339,340,341,344,423)

கரு உற்பத்தி பற்றி வள்ளலார் கூறுவது என்ன?

ஆணிடத்திலிலுள்ள சுக்கிலத்திலும், பெண்ணிடத்திலிலுள்ள சுரோணிதத்திலும்


கடவுள் ஆவி உள்ளது. கோசத்தின் முன் விஷம் (சத்தி) ஒரு பாகம், அதை அடுத்து
பூதம் (அறிவு) ஒரு பாகம், அதற்கு மேல் அமுதம் (விந்து) அரை பாகம், என
சுக்கிலம் இரண்டரை வவராகன் எடை அளவுக்கொண்டது. இவ்வாறு
பெண்பாலிடத்தும் உண்டு.

முன்னுள்ள விஷ பாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம்.

பூதம் வெளிப்பட்டால் வியாதி.

அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி.

கடவுள் அருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின்


அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக்
கருத்தரிக்கச் செய்விப்பார்.

இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை. மேலும்


விந்துவளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் இவற்றாலும் கர்ப்பம்
இல்லை. (திருஅருட்பா - உரைநடைப்பகுதி - பக்கம் 360)

குழந்தைகளின் பாலின உருவாக்கம் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?

சுரோணிதப் பையிடத்தில் (கர்ப்ப பை) மூன்றுமணி சேர்ந்த கொத்து ஒன்று வலது


புறத்திலும், நான்கு மணி சேர்ந்த கொத்து ஒன்று இடது புறத்திலும் இருக்கின்றன.
சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பந் தரிக்கின்ற காலத்தில், மூன்று சேர்ந்த
கொத்தில் (வலது புறத்தில் உள்ளது) சம்பந்தப் பட்டால் ஆண் குழந்தையும்,
நான்கு சேர்ந்த கொத்தில் (இடது புறத்தில் உள்ளது) சம்பந்தப்பட்டால் பெண்
குழந்தையும் பிறக்கும்.

புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாக புணர்ந்தால் ஆணும், இடது புறம்


சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும். (திருஅருட்பா -
உரைநடைப்பகுதி - பக்கம் 360)

சூரியக்கலை (பிங்கலை), சந்திரக்கலை (இடகலை) பற்றி வள்ளலார்


கூறுவது என்ன?

1. சாதாரண ஜீவர்கள் சந்திரக்கலையில் இறப்பதும் பிறப்பதும் இயற்கை.


2. பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பதும் இறப்பதும் இயற்கை.
3. சூரியகலை அனுபவம் கிடைப்பது கஷ்டம்.
4. தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்தக் கண்களில் செலுத்தல்
வேண்டும்.
5. சூரியக்கலையில்தான் தியானம் செய்யவேண்டும். (திருஅருட்பா -
உரைநடைப்பகுதி - பக்கம் 398)

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்


தோன்றின் தோன்றாமை நன்று."

என்பார் திருவள்ளுவர். ஒருவன் புகழோடு தோன்றுவது அவன் கையிலா


இருக்கிறது. பிறக்கும்போது ஒன்றும் தெரியா குழந்தையாக பிறந்து அழுகிறோம்.
அக்குழந்தைக்கு, நாம் புகழோடு தோன்றினோமா, என்று எவ்வாறு தெரியும்?

இங்கு வள்ளலார் கூறியுள்ளதை சற்று பார்ப்போம். பக்குவர்கள் சூரியகலையில்


பிறப்பார்கள் என்று கூறியுள்ளார். இது எவ்வாறு முடிகிறது? பக்குவர்கள்
சூரியகலையில் இறப்பார்கள் என்கிறார் வள்ளலார். எனவே சூரிய கலையில்
மூச்சு சரம் ஓடுகையில் ஒருவன் இறந்தால், அவனது மறுபிறவி கட்டாயம்
சூரியகலை மூச்சு ஓட்டத்தில் ஆரம்பமாகும். இவ்வாறு சூரிய கலையில்
பிறப்பவர்களே ஞானிகளாக ஆகமுடியும். எனவே நாம் நமது இந்த வாழ்நாளில்
எப்போதும் சூரியக்கலையில் இருக்க பழகிக்கொள்வோம். முக்கியமாக இறக்கும்
தருவாயை, நாம் உணர்ந்தால் சூரியகலை இருக்குமாறு
பார்த்துக்கொள்ளவேண்டும். 

அப்படியில்லையேல் சுத்த சன்மார்க்க நெறியில் சாகா வரம் பெற்று அடுத்துத்


தோன்றாமை / பிறவாமை நன்று. என்பதே இக்குறளின் உண்மை பொருளாக
உள்ளது.

சூரிய சந்திரக் கலைகள் இயற்கையாக நிகழும் நாட்கள் எவை எவை?


சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை
பார்க்கவேண்டும்.

1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம்


வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்
பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க
வேண்டும்.

திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் - தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி,


ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும்.

புதன் அன்று சூரியக்கலை ஓடினால் - மாமனாரிடம் மதிப்பு போகும்,


தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும்.

வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் - பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு


கெடும்.

2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம்


ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்
பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க
வேண்டும்.

சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும


நோய், ஜூரம் வரும்.

ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும்,


தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும்.

செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு,


வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.

3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம்


நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம்
(சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும்.

வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு


ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு
ஆதல் போன்றவை நிகழும்.
மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க
உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.

காரிய சித்திபெற சர ஓட்டம் பார்ப்பது எப்படி?

நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன், அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை


மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம் பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி
செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம் தோல்வியை தழுவாது, வெற்றியை
கொடுக்கும்.

நமக்கு வலப்புறம் (பிங்கலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட


வேண்டிய காரியங்கள்:-

1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு.
12. உறங்குவதற்கு.

மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சூரியகலையில் இருக்கும்போது


செய்ய, அவை சுபமாக முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.

நமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட


வேண்டிய காரியங்கள்:-

1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல்.


2. பொருள் வாங்குதல்.
3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு.
4. சொத்துகள் வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.
5. வடுகட்ட,
ீ கடகால் தோண்டுவதற்கு.
6. புதுமனை புகுதல்.
7. சிகை அலங்கரிக்க.
8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.
9. விவசாய நாற்று நடுவதற்கு.
10. தாலுக்கு பொன் வாங்குவதற்கு.
11. தாலி கட்டுவதற்கு.
12. கிணறு வெட்டுவதற்கு.
13. புதிய படிப்பு படிக்க.
14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.

மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம் சந்திரகலையில் இருக்கும்போது


செய்ய, அவை சுபமாக முடியும், என்று ஞான சர நூல் கூறுகிறது. சந்திர கலை
பெண் தன்மையுடையது.

நமக்கு இருபுற நாசியிலும் (சுழுமுனை) மூச்சோட்டம் சில நேரங்களில் மட்டுமே


செல்லும். அந்நேரத்தில் நாம் இறைநினைப்புடன் தியானம் செய்ய சமாதி நிலை
கிட்டும். முனிவர்கள், சித்தர்கள், இறையாளர்கள், அருளாளர்கள் எப்பொழுதும்
தமது கலை திறனால் தமது மூச்சினை சுழுமுனையில் நிறுத்தி யிருப்பார்கள்.
அப்போதுதான் இறைநிலை விரைவில் கிடைக்கும்.

யாருக்கேனும் சுழுமுனை ஓட்டம் இருப்பின் அவர்கள் மெளனமாக அமைதியாக


இருக்கவேண்டும். ஏனெனில் அந்நேரத்தில் நாம் என்ன சொன்னாலும் அது
பலிக்கும். நல்லது மற்றும் கெட்டது என்ற விக்தியாசம் இல்லாமல் எது
சொன்னாலும் பலித்துவிடும். எனவேதான் மேற்கண்ட இறையாளர்கள் கடிந்து
ஒரு சாபமிட்டால் அது பலித்துவிடும். சுழுமுனை அழிவின் சக்தியாக உள்ளது.
அதீத சக்தியுடையது. ஆண், பெண் தன்மையற்ற அலி தன்மையுடையது. எனவே
சரம் தெரிந்தவர்களிடம் நாம் விளையாட்டாக நடந்துக்கொள்ளக்கூடாது.

பெரும்பாலும் சுழுமுனை இயக்கம் பகல் 12 மணி அல்லது இரவு 12 மணிக்கு


நடைபெறும். பாதி இரவில் பாவியேனை எழுப்பி தன்னுடன் இறைவன்
கலந்ததாக வள்ளலார் கூறுவார். இறைவன் பாதி இரவில் வரக்காரணம்,
அந்நேரத்தில்தான் நமக்கு சுழுமுனை இயக்கம் நடைபெறும்.

இன்னும் சில உபாயங்களைக் காண்போம்.


1. எந்த ஒரு பயணத்தையும் சந்திரக்கலையில் துவங்கி சூரியக்கலை
நடக்கும்போது செல்லவேண்டிய இடம் சென்றால் சென்ற காரியம் நிச்சம் வெற்றி.

2. சரம் ஓடும் பக்கம் "பூரணம்" என்று பெயர். சரம் ஓடாத பக்கம் "சூன்யம்" என்று
பெயர். நம் வழக்கில் நாம் வெற்றிபெற, நம்மை பார்க்க வருபவரை சூன்ய
பாகத்தில் நிறுத்தி, அதாவது நமக்கு மூச்சு ஓடாத பாகத்தில் அவரை நிறுத்தி
பேசினால் நமக்கு வெற்றி கிடைக்கும். இதனை, அவர் சந்தேகம் ஏற்படாதவாறு
செய்யவேண்டும். அல்லது சர கலை தெரிந்தால் அவர் எந்தப்பக்கம்
இருக்கிறாரோ அந்த பக்கத்தில் நமது மூச்சின் ஓட்டத்தை தடுத்து மறு பக்கத்தில்
ஓடவிடுவதின்மூலம் இதனை சுலபமாக செய்யலாம்.

3. சந்தரக்கலை நடக்கும்போது மேற்கும், தெற்கும் நோக்கிப் போனால்


எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.

4. சூரியக்கலை நடக்கும்போது வடக்கும், கிழக்கும் நோக்கிப் போனால்


எடுத்தக்காரியம் அனைத்திலும் வெற்றி.

5. மூச்சு உள்ளே இழுக்கும்போது வேண்டிய விருப்பம் நினைக்க அவை கைகூடும்.

6. மூச்சு வெளியே போகும்போது நமக்கு வேண்டாததையும் வெளியே தள்ளலாம்.


காமமே போ, சினமே போ, வறுமையே போ, சாவே போ என்பது போல சிந்தனை
செய்ய அவை நடக்கும்.

சரஓட்டத்தின்படி தம்பதிகள், விரும்பிய குழந்தைகளை பெறுவது எப்படி?

'நாத விந்து கலாதி நமோ நம


வேத மந்திர சொரூப நமோ நம்' (திருப்புகழ்)

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள


ஜீவசக்தி) முதல் வணக்கத்தை தெரிவித்த பின்புதான் இறைவனுக்கே வணக்கம்
செலுத்துகிறார் அருணகிரிநாதர். ஏனெனில் இந்த நாத விந்து இயக்கங்கள்தான்
இவ்வுலகத்திற்கு அச்சாரம். 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்பார்
வள்ளலார். அப்படி எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ இந்த நாதமும்
விந்துவும் தேவைப்படுகிறது. இவைகள் இன்றி இந்த உலகம் இயங்காது.
எனவேதான் நாதத்தை சக்தியாகவும், விந்துவை சிவனாகவும் உருவகப்படுத்தி
இந்து மதம் பல கதைகளை சொல்லியிருக்கிறது. நாம் அனைவருமே நாதவிந்து
சொரூபிகளே!
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகுமாகில் தரணி முழுதாளும்
பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம்)

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்


குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாம் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம்)

கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பக்கம் மூச்சு சென்றால் அதே சமயம்


பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும்.

மாறாக பெண்ணுக்கு வலப்பக்கம் மூச்சும் ஆணுக்கு இடப்பக்கம் மூச்சும்


சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும்.

இரண்டு பேருக்கும் ஒரே பக்கம் மூச்சு ஒத்திருந்தால் பிறக்கும் உயிர் அலியாகும்.

விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு


மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

எனவே, நாம் விரும்பும் குழந்தையினை பெற்றெடுக்கும் இரகசியம் நமது


மூச்சில்தான் உள்ளது.

கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன?

கருதரித்துவிட்டது, இனி நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல


எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் தம்பதிகளும், சொந்தங்களுக்கும் அதிர்ச்சிதரும்
ஒரு விஷயம் இந்த கருச்சிதைவு என்பதாகும். இதி ஏன் ஏற்படுகிறது?

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்


கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே (திருமந்திரம்)

தேகசம்பந்தத்தின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும்


இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார்
திருமூலர்.

குறையுள்ள குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?


'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு
நீங்கி பிறத்தல் அரிது' என்பார் ஒளவை ஞானிகள்.

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்


மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே (திருமந்திரம்)

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம்,


தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே
காரணம்.

ஊமை குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம்,


தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் ஜலம் (சிறுநீர்)
மிகுந்திருத்தலே காரணம்.

பார்வைதிறன் அற்று குருடனாக குழந்தைகள் பிறக்க காரணம்,


தேகசம்பந்தம் செய்யும்போது பெண்ணின் வயிற்றில் மலம், ஜலம் (சிறுநீர்)
சேர்ந்து மிகுந்திருத்தலே காரணம்.

பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்


பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே (திருமந்திரம்)

குழந்தைகள் குள்ளமாக இருக்க காரணம் என்ன?


தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால்
கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்.

குழந்தைகள் முடமாக (நொண்டி) இருக்க காரணம் என்ன?


தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால்
கருத்தரிக்கும் குழந்தை முடமாக இருக்கும்.

குழந்தைகள் கூனனாக இருக்க காரணம் என்ன?


தேகசம்பந்தம் செய்யும்போது ஆணின் சுவாசம் நீளமும் திடமும் ஒருசேர
குறைந்து வெளிப்பட்டால் கருத்தரிக்கும் குழந்தை கூனனாக இருக்கும்.
சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய
வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின்
விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து
இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார்.

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். "தண்டம்" என்பது
மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து "T " அல்லது "Y " வடிவத்தில் இருக்கும்.
அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்து விட்டால், சுவாசம் திசை மாறும்.

வலது நாசி சுவாசத்தை நிறுத்த, வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே,
இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த, இடது அக்குளின் கீழே தண்டத்தை
வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும்.

இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே
திரிந்தார்கள். ஆனால், சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வென்றும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?

அதாவது, நாம் செய்த காரியம் சரியாக நடக்கவில்லை என்றால், அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது
என்பதைக் கவனிக்க வேண்டும். உடனே, தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில்
வைக்க வேண்டும். உடனே, சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில், மீண்டும் அந்த காரியத்தை
முயற்சிக்கும் பொது, அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக
மாறிவிடும்.

நம் முன்னோர்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததால் தான் கன்னத்தில் கைவைத்து உட்கார்நத ் ிருந்தாலோ,


சாப்பிடும் பொழுது கைகளை ஊன்றி சாப்பிட்டாலோ அவ்வாறு செய்யாதே என கூறுவார்கள். கை மற்றும்
உடலின் பாகங்கள் அழுத்தம் கொண்டால் உடலில் நாடி சலனம் ஏற்படும் . சலனம் ஏற்படுவதால் நம் இயல்பான
உடல் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்க படலாம்.

நாடி சலனத்தை சோதனை முறையில் செய்யுங்கள், தொடர்ந்து செய்யக்கூடாது. சரியான குருவின்


வழிகாட்டுதலில் நாடியிடம் விளையாடுவது நல்லது.
நமது உடலின் நாடிகள் அனைத்தையும் தூண்டி ஆன்மீக நிலைக்கு இட்டு செல்லும் தன்மை சுழுமுனை
நாடிக்கு உண்டு. அதனால் மலைக்கு மேல் கோவிலை கட்டிவிடால் இருகால்களையும் பயன்படுத்தி சம அளவு
அழுத்தத்துடன் ஏறும் பொழுது உடலில் சுழுமுனை நாடி இயற்கையாகவே வேலை செய்யும்.
மலைக்கோவிகளுக்கு இனி செல்லும் பொழுது உங்கள் சுவாசத்தை கவனிக்க தவறாதீர்கள்.
மலைக்கோவிலை அடைந்ததும் உங்கள் சுவாசத்தை கவனித்தால் அவை இரு நாசிகளிலும் சரியான
அளவாக வந்துகொண்டிருக்கும்.

உங்கள் உடலின் வலப்பகுதியில் அழுத்தம் கொடுக்கபட்டால் இடது நாசியில் சுவாசம் வரும் . அதாவது
இடகலை நாடி வேலை செய்ய துவங்கும். இடப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் வலபகுதியில் சுவாசம்
ஏற்பட்டு பிங்கள நாடி வேலை செய்யும். இருபக்கத்திலும் அழுத்தம் கொடுத்தால் ஸுக்‌ஷமணா நாடி வேலை
செய்து இரு நாசியிலும் சுழுமுனை வேலை செய்யும்.

மேற்கண்ட விஷயத்தை ஒரு சோதனையாக நீங்களே செய்து பாருங்களேன். உங்களுக்கு எந்த நாசி
துவாரத்தில் சுவாசம் வருகிறது என பாருங்கள். பிறகு சுவாசம் வரும் பகுதியில் உள்ள உங்கள் கைகளை
நிலத்திலோ அல்லது மேஜையிலோ நன்றாக ஊன்றிக்கொள்ளுங்கள். சில நிமிடங்களில் கவனித்தால் உங்கள்
சுவாசம் அடுத்த நாசியில் வரத்துவங்கும். இடது நாசியில் சுவாசம் வருவதாக இருந்தால் இடது கையை
ஊன்றுங்கள். வலது பக்கம் சுவாசம் சில நிமிடத்தில் வரத்துவங்கும்.

இம்முறைக்கு நாடி சலனம் என பெயர். எந்த நாசியில் சுவாசம் நடந்தால் எந்த காரியம் செய்ய வேண்டும் என
தெரிந்து செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு சரவித்தை தெரிந்திருக்க வேண்டும்.  

அன்பர்களே! மேற்கண்டவாறு சரம் பார்த்து காரியம் செய்வது என்பது வள்ளலார்


வழிநடக்கும் சுத்த சன்மார்க்கிகளுக்கு தேவையற்ற ஒன்று. எனினும் இதனை
தெரிந்து வைத்திருப்பதால் தவறில்லை. இதற்கு அடிமையாகிவிடாதீர்கள்.
நமக்குத் தேவை இறைவன் அருள் மட்டுமே. அந்த அருளையடைய
முற்படுங்கள். அருளையடைய முற்படும்போது இறைவன் அதற்கேற்ப நமது
சரங்களை நமக்குத்தெரியாமலேயே சரிசெய்வான். எனவே நமது முயற்சியால்
இதனை செய்வதைவிட, இறைவன் சுதந்திரத்தில் இதனை விட்டுவிடுதல் நலம்.

இறைவன் அருள் எப்படிப்பட்டது? என்று வள்ளலார் கீ ழ்கண்டவாறு கூறுகிறார்,

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும் நினைப்பார் நினைக்கும்


வண்ணங்களும், அறிவார் அறியும் வண்ணங்களும், அனுபவிப்பார் அனுபவிக்கும்
வண்ணங்களும் ஆகிய சர்வசத்தி வண்ணங்களும், தனது ஏகதேச
வண்ணங்களாக விளங்க விளக்கி விளக்குகின்ற பூரண விளக்க
வண்ணத்தையுடையது என்று அறிய வேண்டும்.

இவ்வருள் எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றது என்று அறிய


வேண்டும்.
அந்த அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் மட்டுமே பெறக்கூடும், வேறு
எதனாலும் பெற முடியாததாக உள்ளது. இவ்வருளை பெற்றால் துரும்பும் ஓர்
ஐந்தொழில் செய்யும் வல்லமை பெறும்.

வியாதிகள் நீ ங்க வள்ளலார் கூறும் மருந்து என்ன?

சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற


சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே
விரதமாக அனுசரித்தார்களானால் - அந்த ஜீவகருண்ய அனுசரிப்பே நல்ல
மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்திசெய்து, விஷேஷ செளக்கியத்தை
உண்டுபண்ணு மென்பது உண்மை.

குழந்தை பாக்கியம் அற்றவர்களுக்கு வள்ளலார் கூறும் மருந்து என்ன?

பலநாள் சந்ததி இல்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற


சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை
ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய
அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண்ணுமென்பது உண்மை.

நீ ண்ட ஆயுள் பெற வள்ளலார் கூறும் மருந்து என்ன?

அற்பவயது என்று குறிப்பினால் அறிந்துக்கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி


விசாரப்படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப்
பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய
அனுசரிப்புத் தீர்க்காயுளை உண்டுபண்ணும் என்பது உண்மை.

கல்வியும் செல்வமும் பெற வள்ளலார் கூறும் வழி என்ன?

கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற


சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி, பசித்த ஏழைகளுக்குப்
பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய
அனுசரிப்பு கல்வி, அறிவு, செல்வம், போகம் முதலானவைகளை
உண்டுபண்ணுமென்பது உண்மை.

ஜீவகாருண்ய விரதத்தால் அடையும் பலனாக வள்ளலார் கூறுவது யாது?

பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட ஜீவகாருண்யமுள்ள


சமுசாரிகளுக்கு,
1. கோடையில் வெயில் வருத்தாது.
2. மண்ணும் சூடு செய்யாது.
3. பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய
உற்பாதங்களும் துன்பம் செய்விக்க மாட்டா. (தற்போது உத்ராகண்ட் மாநிலத்தில்
பெய்யும் பெருமழையில் இப்படிப்பட்ட சமுசாரிகள் மாட்டிக்கொண்டிருந்தால்
இவர்களையெல்லாம் எவ்வித இயற்கை பேரழிவும் எதுவும் செய்யமுடியாது.)
4. விடூசிகை, விஷக்காற்று, விஷசுரம் முதலிய அஜாக்கிரதைப் பிணிகளும்
உண்டாகாது.
5. ஆற்று வெள்ளத்தாலும், கள்ளர்களாலும், விரோதிகளாலும் கலக்கப் படார்கள்.
6. அரசர்களாலும், தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள்.
7. இவர்களது விளைநிலத்தில் பிரயாசையில்லாமலே விளைவு மேன்மேலும்
உண்டாகும்.
8. வியாபாரத்தில் மேன்மேலும் தடையில்லாமல் இலாபங்களும்
உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும்.
9. சுற்றங்களாலும், அடிமைகளாலும், சூழப்படுபவர்கள் துஷ்ட மிருகங்களாலும்,
துஷ்ட ஜெந்துக்களாலும், துஷ்டப் பிசாசுகளாலும், துஷ்ட தெய்வங்களாலும் பயம்
செய்யப்படமாட்டார்கள்.
10. எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதியினாலும் ஊழ் வகையாலும்
சத்தியமாக வராது.
11. இவர்களே தெய்வமென்று உண்மையாக அறியவேண்டும். மேலும் பல
சிறப்புகளை வள்ளலார் தனது திருஅருட்பாவில் இவர்களைப்பற்றி கூறியுள்ளார்.

எனவே நாம் அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை  நமது வாழ்நாளில்


கடைபிடித்து, இறையருள் பெற்று மரணமிலா பெருவாழ்வு அடைவோம். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேககங்கள்

மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேககங்கள்

அன்பர்களே! வள்ளற்பெருமான் அடைந்த மரணமிலா பெருவாழ்வு உண்மையா!


பொய்யா! என்பதனை சில கேள்வி பதில் வடிவில் இப்பதிப்பில் பார்க்கலாம்
வாருங்கள்.

1. வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் என்பதற்கு என்ன


ஆதாரம்?

தான் பெற்ற முத்தேக சித்தியைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.


உதாரணத்துக்கு ஒரு பாடல்,

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்


நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு (5513)
ஆடுகின்ற சேவடிக்கே அளானேன் மாளாத யாக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழைப் பாடிப்பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன் எண்ணமெலாம் நிரம்பினேனே (56)

இந்தப் பாடலாலும், இவை போன்ற பலப் பல பாடல்களும் அவர் பெற்ற


மரணமிலாப் பெருவாழ்வைப் பறை சாற்றுகின்றன.

இந்த உடம்பை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்காமல் 1874 ம் ஆண்டு


ஜனவரி மாதம் 30 ஆம் நாள் அவர் கதவைத் தாளிட்டுக் கொண்டதின் மூலம் அவர்
பெற்ற மரணமிலாப் பெருவாழ்வு உறுதியாகிறது.

2. வள்ளலார் அடைந்த உண்மையான நிலைதான் என்ன?

வள்ளலார் தான் செய்த தவத்தாலும், ஜீவகாருண்யத்தாலும், தன் தூல தேகத்தை


ஒளியுடம்பாக மாற்றினார். சுத்த தேகமாக முதலில் அவர் தேகம் மாறியது. பிறகு
அதே தேகம் பிரணவ தேகமாகியது. கடைசியாக அவர் ஞான தேகம் பெற்றார்.
அவர் ஞான தேகத்தோடு என்றும் அழியாத நிலையில் நமக்குத் துணையாக
இருக்கின்றார்.

3. அவர் ஒளியுடம்பு பெற்றதற்கு என்ன ஆதாரம்?


வள்ளலாரின் சம காலத்தவர்களாகிய இராமகிருஷ்ண பரமஹம்ஸர்,
விவேகானந்தர் ஆகியோரின் நிழல் படங்கள் உள்ளன. ஆனால் பல முறை
முயன்றும் வள்ளலாரை நிழற் படம் எடுக்க முடியவில்லை. இப்போது உள்ள
வள்ளலார் படங்களெல்லாம் வரைந்த உருவப் படங்களேயொழிய அவரது
உண்மையான நிழற்படங்கள் அல்ல. அவரது தூல தேகம் ஒளியுடம்பாக மாறி
விட்டதால் அவரை நிழற்படம் எடுக்க முடியாது போய்விட்டது. இதுவே அவர்
ஒளியுடம்பு பெற்றதற்கு ஆதாரம். அவரும் பல பாடல்களில் தான் ஒளி உடம்பு
பெற்றதை அறிவிக்கின்றார்,

கற்றேன் சிற்றம் பலக்கல்வியைக் கற்றுக் கருணை நெறி


உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே (4745)

4. வள்ளலார் மற்றவர்கள் போல் மாளவில்லை என்பதை விளக்கமாக


கூறவும்?

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் என்றும்,

காற்றாலே, புவியாலே, ககனமதனாலே,


கனலாலே, புனலாலே, கதிராதியாலே,
கூற்றாலே, பிணியாலே, கொலைக் கருவியாலே,
கோளாலே, பிறவியற்றுங் கொடுஞ்செயல்களாலே,
வேற்றாலே, எஞ்ஞான்றும் அழியாத விளங்கும்
மெய்யளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

என்றும்

வாழி என் தோழி யென் வார்த்தை கேளென்றும்


மரணமில்லாப் பெரு வரம் யான் பெற்றுக் கொண்டேன்

என்றும், இப்படிப் பலப்பல பாடல்களிலே தான் பெற்ற மரணமிலாப்


பெருவழ்வைப் பறை சாற்றுகின்றார்.

1874 ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் தம் அன்பர்களை அழைத்துப்


பின்வருமாறு கூறினார்,
'நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை
யடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு
வடாகத்தானிருக்கும்படி
ீ ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.'

தான் அறைக்குள்ளெ நுழைந்து அறையைத் தாளிட்டுக் கொண்டார்கள். வெளிக்


கதவைப் பூட்டிக் கொள்ளும்படி அன்பர்களிடம் கூறினார்கள். அதன்படியே
அன்பர்களும்  வெளிக்கதவைப் பூட்டி விட்டார்கள்.

இந்த அறிவிப்பைப் கூர்ந்து நோக்கினால் அந்த அறைக்குள்ளே பத்துப் பதினைந்து


தினங்கள் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளதும், யாராவது திறந்து பார்த்தால்
வெறு வடாக
ீ இருக்கும் என்றதும், மறைந்தது அவர் விருப்பம் போல என்பதும்
யாரும் காரணமல்ல என்பதும் விளங்கும். என்னைக்காட்டிக் கொடார் என்ற
வாசகம் அது வெறு வடாகத்
ீ தோன்றினாலும் நான் உள்ளேதான் இருப்பேன்
என்பது பொருளாகிறது.

காட்டிக்கொடார் என்ற சொல், தான் உள்ளே இருப்பேன் என்பதை ஊர்ஜிதம்


செய்கிறது. உண்மையிலேயே அவர் உள்ளே இல்லை என்றால் காட்டிக் கொடார்
என்ற சொல்லுக்கே அவசியமில்லை. காட்டிக் கொடார் என்ற வார்த்தை மிக மிக
முக்கியமான ஒன்றாகும். உள்ளே இருந்தாலும் கண்ணுக்குத் தோன்றாமல்
இருப்பார் என்பதை இவ்வார்த்தை உறுதிபடுத்துகிறது.

மேலும் அவர் 1874 ல் மறைந்தது, முதல் முறை அல்ல. அதற்கு முன்


எத்தனையோ முறைகளில் அவர் மறைந்து மறைந்து மீ ண்டும்
தோன்றியிருக்கின்றார். தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் பிரம்ம ஞான
சமாஜத்தார்க்கு அளித்த குறிப்பில் 'எங்கள் குருநாதர் பல நேரங்களில் யார்
கண்களுக்கும் தோன்றாமல் மறைந்துவிடுவது உண்டு. அந்தச் சமயங்களில்
அவர் என்ன ஆனார் எங்கு போனார் என்பது ஒருவருக்கும் தெரிய மாட்டாது'
என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து 1874 ல் மறைந்தது போல் பல முறை அதற்கு முன்பும் வள்ளலார்


மறைந்திருக்கின்றார் என்பது புலனாகிறது. இதற்கு ஆதாரமாக 26.10.1870 ல்
சன்மார்க்க அன்பர்கட்கு வள்ளலார் இட்ட கட்டளை அறிவிப்பு அடியில் வருமாறு
உள்ளது.

திருச்சிற்றம்பலம்

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது


ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை
உண்மையாய் நம்பியிருங்கள் என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது
சத்தியம். நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால்
வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீ பத்தில்
தானே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள்.
திருச்சிற்றம்பலம்.

இவ்வாறு 26.10.1870 ல் அறிக்கை வெளியிட்டு மறைந்திருக்கின்றார். பின்னர் வெளி


வந்திருக்கின்றார். முன்பெல்லாம் மறைந்தபோது பத்து அல்லது பதினைந்து
தினங்களுக்குள் வெளிவந்திருக்கிறார். 1874 ஜனவரி 30 ஆம் நாள் மறைந்தவர்
இன்னும் வெளிவரவில்லை. மறைவதும் வெளிவருவதும் அவருடைய
விருப்பம்.

வள்ளலார் அவர்கள் எல்லாச் சித்துக்களும் கைவரப் பெற்றவர். நினைத்த


இடத்துக்கு நினைத்தவுடன் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். ஆண்டவனோடு
அவர் நேரடியாக உறவாடியவர். 22.10.1873 அன்று சித்திவளாகத்தில் சன்மார்க்கக்
கொடியை ஏற்றி வைத்து அவர் ஆற்றிய பேருரையில் ஒரு செய்தியைத்
தெரிவிக்கின்றார்.

அதாவது 21.10.1873 அன்று அவருடன் ஆண்டவன் பேசியதாகவும் அவரை


இவ்வுலகில் வேறு இடத்திலோ அல்லது வேறு உலகிலோ சென்று வருமாறு
பணியிட்டதாகத் தெரிகிறது. அவரது வாசகத்தை அப்படியே படித்துப் பாருங்கள்.

'என்னிடத்தில் ஒருவன் வசப்படாது முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும்,


அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன். மிரட்டிச் சொல்லுவேன், தெண்டன்
விழுந்து சொல்லுவேன். அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்,
அல்லது ஆண்டவரை நினைத்துப் பிராத்தனை செய்வேன். நீங்கள் எல்லோரும்
இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள்
சஷண நேரம் இருக்க மாட்டார்களே என்று ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக்
கொண்டேன், அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் அல்ல."

நான் இல்லாமல் இந்த ஜனங்கள் சஷண நேரங்கூட இருக்க மாட்டார்களே என்று


வள்ளலார் ஏன் சொல்ல வேண்டும்? ஆண்டவனின் கட்டளைப்படி அவர் எங்கோ
செல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஜனங்களை விட்டு எப்படி பிரிவது என்று
யோசித்திருக்கிறார். ஆண்டவர் அதற்கும் ஏதாவது சமாதானம்
சொல்லியிருக்கக்கூடும். 21.10.1873 அன்றே இந்த ஜனங்களை விட்டு எங்கோ
செல்ல வேண்டிய கட்டளை ஆண்டவனால் வள்ளலாருக்குத் தரப்பட்டு விட்டது.

தந்தைசொல் தட்டாத வள்ளற் பெருமான் அதற்குரிய நாளாகக் கார்த்திகை


பெளர்ணமியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தான் வெளியே செல்ல வேண்டிய
வேலையிருப்பதால் இது வரை தான் பராமரித்து வந்த திருவிளக்கைப் புறத்தில்
வைத்து இதனை தடைபடாது ஆராதியுங்கள் என்று கட்டளையிட்டார். உள்ளே
சென்று கதவையும் தாளிட்டுக்கொண்டார்.

பின்னர் ஏதோ காரணத்தால் மீ ண்டும் அறையை விட்டு வெளியே வந்து வந்தார்.


வந்த பிறகு தைப்பூசத்தன்று 30.01.1874 ஆம் ஆண்டு கதவை சாத்தி அறைக்குள்ளே
சென்றார். திருக்காப்பிட்டுக் கொண்டது, அவர் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்த
செயலே தவிர மற்றவர்க்கு ஏற்பட்ட எந்த துர்நிலையும் அவருக்கு
ஏற்படவில்லை என்று அறிய வேண்டும்.

மேலும் அறிவுக் கூர்மையோடு அவரது நிலைமையை ஆய்ந்தால் அவர்


திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்ததை உணரலாம்.

ஒரு குடும்பத்தலைவன் இறந்து விட்டால் அவனது வாரிசான அவனுடைய


மகனோ, அல்லது மற்றவர்களோ சட்டப்படி அந்தக் குடும்பத் தலைவனின்
சொத்தை உடனே அனுபவிக்கலாம். அதே நேரத்தில் அவன் எங்காவது காணாமல்
போய் விட்டால், ஏழு ஆண்டுகள் வரை அந்தக் குடும்பத்தினர் காத்திருந்து பிறகு
தான் அனுபவிக்க முடியும். இது தான் சட்டம். அதே போல வடலூர் கிராம
வாசிகள் இனாமாகக் கொடுத்த நிலமும் தருமச்சாலை முதலிய கட்டிடங்களும்
வள்ளலார் பேரில் பட்டா செய்யப்பட்டிருந்தன. வரியும் செலுத்தப்பட்டு வந்தது.
1874 ல் அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபிறகு யாரும் வரி செலுத்தவில்லை.
ஒன்றும் தெரியாத ஒரு சிலர் கூறுவதுபோல் அவருக்கு ஏதேனும் ஆகியிருந்தால்
அவர் பேரிலிருந்த பட்டாவை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றியிருக்கலாம்.
அவர் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்று பிறர் கண்களுக்குக் காணாமல்
மறைந்துவிட்டதால், சட்டப்படி அவர் பேரிலிருந்த பட்டாவை மாற்ற ஏழு
ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1874 ஜனவரி 30 ல் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டார்கள். அடுத்து 11.10.1880


அன்று சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் தேவஸ்தான
தருமஸ்தானங்களின் ஸ்தாபகராகிய சிதம்பரம் இராமலிங்க பிள்ளை என்பவர்
ஏழு வருஷகாலமாய் பகிரங்கத்தில் நமூது இல்லாமல் இருப்பதினாலே மேற்படி
302 நம்பர் பட்டாவை 1. ஆறுமுக முதலியார், 2. வக்கீ ல் வெங்கிடேச ஐயர், 3.
சபாபதி குருக்கள், 4. நயினா ரெட்டியார் ஆகிய நால்வரையும் ஏஜண்டுகளாக
நியமிக்கப் போவதாக சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிடுகிறார்.

பின்னர் 01.03.1881 ல் பசலி 1290-91 ல் மேற்குறித்த நான்கு ஏஜென்டுகள் பேரில்


பட்டா மாற்றம் செய்யப்படுகின்றது. ஏழு ஆண்டுகள் சட்டப்படிப் பட்டா மாற்றம்
செய்ய ஏன் காலதாமதம் ஆகியது? சிதம்பரம் தாசில்தாரின் அறிக்கை
துல்லியமாகச் சிதம்பரம் இராமலிங்க பரதேசி என்பவர் ஏழு ஆண்டுகளாகப்
பகிரங்கத்தில் நமூது இல்லாததினால் என்று கூறுவது ஒன்று போதாதா!
மற்றவர்கள் கூறுவது போல வள்ளலாருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் சிதம்பரம்
தாசில்தார் "பகிரங்கத்தில் காணவில்லை" என்று ஏன் அறிக்கை வெளியிடுகிறார்.
அவர் அறிக்கையும், ஏழு ஆண்டுகள் காத்திருந்ததும் வள்ளலார் கதவைச் சாத்திக்
கொண்டு அறைக்குள்ளே மறைந்ததற்குச் சான்றாக நிற்கின்றனவே.

இதுவரை கூறி வந்த அனைத்தையும் ஆழ்ந்து படித்தால் மறையவும், வெளித்


தோன்றவும் ஆற்றல் பெற்றிருந்த வள்ளலார் அவர்கள், ஆண்டவனிட்ட
கட்டளைப்படி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 1874 ம் ஆண்டு ஜனவரி 30 ம் நாள்
தாமே திட்டமிட்டு அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார் என்பது
சந்தேகத்திற்கிடமின்றி விளங்கும்.

5. 1874-ம் ஆண்டு ஜனவரி 30 ம் நாள் திருக்காப்பிட்டுக் கொண்ட அன்றுதான்


வள்ளாலார் ஆண்டவனோடு இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று
கூறுவது சரியா?

அப்படிக்கூறுவது தவறு. வள்ளலார் ஆண்டவனோடு கலந்தார் என்று சொல்வதை


விட ஆண்டவன் வள்ளலாரை நாடி அவருடன் இரண்டறக் கலந்தான் என்றுதான்
கூற வேண்டும். அதை வள்ளலாரே பல பாடல்களில் கூறியுள்ளார். உதாரணமாக,

அருட்ஜோதியானே னென்றறையப்பா முரசு


அருளாட்சிபெற்றே னென்றறையப்பா முரசு
மருட்சார்புதீர்த்தே னென்றறையப்பா முரசு
மரணந்தவிர்த்தேன னென்றறையப்பா முரசு

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்


மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணை மேற் பனிக் கறையினூடே
திருவடி சேர்த்தருள்க வெனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசியிலே வலிந்து நுழைந்தெனக்கே
நல்ல திருவருளமுதம் நல்கிய தன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்
உள்ளமெனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே

இறைவன் என்றைக்கோ வள்ளலாரைக் கலந்து விட்டான். இறைவன் வேறு


வள்ளலார் வேறு என்று இருந்த துவைத நிலை மாறி, வள்ளலாரும் ஆண்டவனும்
ஒன்றான அத்வைத நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆணிப்
பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி என்ற பாடலில்

அம்மையைக் கண்டேன் அவனருள் கொண்டேன் அமுதமுமுண்டேனடி என்றும்


தாங்கும் அவனருளாலே நடராசர் சந்நிதி கண்டேன் என்றும் சந்நிதியிற் சென்று
நான் பெற்ற பேறது சாமியறிவாரடி என்றும் பாடுகின்றார். இப்படி ஆண்டவனுடன்
கலந்த பிறகு, தான் பாடிய பாடலை மக்கள் அலட்சியம் செய்யக் கூடாதே
என்பதற்காகவே 'நானுரைக்கும் வார்த்தை யெலாம் நாயகன்தன் வார்த்தை
நம்புமினோ' என்று பாடினார். இறைவனுடன் என்றைக்கோ கலந்தவர் வள்ளலார்.
ஒளியுடம்பு என்றோ பெற்றுவிட்டார். சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம்
ஆகிய முத்தேக சித்திகளையும் கூட வள்ளலார் என்றோ பெற்றுவிட்டார்.
அதனையடைந்தப்பிறகுதான் அருட்பாக்கள் முத்தேகத்தின் அனுபவமாக
அவரால் பாடப்பட்டன. போதனையாக பாடப்பட்டன அல்ல. 1870 அக்டோபர்
26 ந்தேதி அவர் மறைந்து பின்னர் வெளி வந்திருக்கின்றார். 30.01.1874 அன்று
திருக்காப்பிட்டுக் கொண்டார் என்று கூறுவதே சரியானது.

6. வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொண்டார் என்று சிலர்


கூறுவது சரியா?

சரியல்ல. முன்பே கூறியதுபோல 1873 கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று தான்


வழிபட்டு வந்த திருவிளக்கை வெளியில் வைத்துக் கீ ழ்கண்டவாறு
அருளுரையாற்றினார்கள்,

'இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவை சாத்திவிடப் போகிறேன். இனி


கொஞ்சகாலம் எல்லோரும், ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில்
விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வணில்
ீ கழிக்காமல் நினைந்து
நினைந்து என்றும் தொடக்கமுடைய 28 பாசுரமடங்கிய பாடறிற் கண்டபடி தெய்வ
பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது இந்த
உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொள்வேன்'
எனக்கூறி அறைக்குள்ளே சென்ற வள்ளலார் யாது காரணம் பற்றியோ மீ ண்டும்
வெளிவந்து மார்கழி மாதம் முழுவதும் பிரசங்கம் செய்தார். பின்னர் தை மாதம்
மறுபடி அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.

கார்த்திகை மாதம் எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொள்வேன் என்று


கூறினாலும் அவர் வெளியே வந்து விட்டதால் அவ்வாறு செய்யவில்லை என்று
உணர வேண்டும். அவர் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டிருந்தால்
அவரால் வெளிவந்திருக்க முடியாது. அவர் தேகம் அணு அணுவாகச் சிதைந்து
எல்லா உடம்பிலும் புகுந்துக்கொண்டால் அவர் மரணமிலாப்பெரு வாழ்வு
பெற்றது பொய்யாகிவிடும். மரணமிலா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் நமக்குத்
துணையாய் ஞான தேகத்துடன் தன்னிச்சை போல் இயங்கி வருகிறார் என்பதே
உண்மை.

7. அப்படியென்றால் எல்லா உடம்புகளிலும் வள்ளலார் புகுந்து கொண்டார்


என்று இன்றும் சிலர் பேசிவருவது பற்றி என்ன சொல்வது?

கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று வள்ளலார் கூறிய வாசகத்தையும் தை


மாதம் திருக்காப்பிட்டுக்கொண்ட போது வெளியிட்ட வாசகத்தையும்
திருஅருட்பா புத்தகத்தில் ஒரே பக்கத்தில் அச்சிட்டுவிட்டதால் எந்த நாளில்
எதைச் சொன்னார் என்று சரியாகக் கவனியாமல் இரண்டு வாசகங்களும்
திருக்காப்பிட்டுக் கொண்ட அன்று வெளியிட்டவை என்ற தவறான எண்ணந்தான்
இப்படிக் கூற வைக்கின்றன. நாளோடு ஒப்பிட்டுச் சரியாக ஆய்வு செய்தால்
உண்மை விளங்கும்.

8. அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்றோர் எப்படித் திரும்ப


வருவார்கள் என்ற பேச்சிற்கே இடமில்லையோ, அது போல் வள்ளலாரும்
திரும்ப வருவார் என்ற பேச்சிற்கே இடமில்லையென்று சொல்வது சரியா?

ஒருபாதி உண்மை, மறு பாதி பொய். அதாவது அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர்


போன்றோர் திரும்ப வரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உண்மையில்
மனிதரல்லர் என்றும் தத்துவங்களே யென்றும் வள்ளலாரே கூறுகிறார். எனவே
அவர்கள் வரமாட்டார்கள்.

05.10.1823 ல் தவச்சீ லன் இராமைய பிள்ளைக்கும் தவத் திருமகள்


சின்னம்மைக்கும் பிறந்த வள்ளலார் சரித்திர நாயகர், வரலாற்று மனிதர் எனவே
அவர் வருவார், தன்னை வெளிப்படுத்துவார்.
ஏற்கனவே விளக்கியுள்ளது போல வள்ளலார் பல முறை மறைந்திருக்கின்றார்.
ஒவ்வொரு முறையும் வெளி வந்திருக்கின்றார். அப்போது அடிக்கடி
வெளிவந்தார். இப்போது கொஞ்ச காலதாமதம் ஆகிறது. அதாவது மறைந்த நாள்
முதல் - தோன்றிய நாள் வரை உள்ள இடைவெளி அப்போதெல்லாம் குறைவாக
இருந்தது. இப்போது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இதுவே உண்மை.

9. வள்ளலார் இப்போது என்ன செய்துக்கொண்டிருப்பார்?

எதற்காக ஆண்டவர் அவரை நம்மை விட்டு வரச் சொன்னாரோ அந்தப் பணியைச்


செய்து வருகிறார். நமக்காக பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றார். மேலும்
இறைவன் தன்னை ஐந்தொழிலையும் செய்யுமாறு பணித்ததாக பல பாடல்களில்
பாடியுள்ளார்.

மன்னுகின்ற பொன்வடிவம் மந்திரமாம் வடிவும்


     வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ் செய்திடவே பணித்துப்
     பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
     ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
     மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே. (4150)

10. தான் திரும்பி வருவதாக எங்காவது வள்ளலார் கூறியிருக்கிறாரா?

22.10.1873 புதன் கிழமை காலை 8 மணிக்கு மேட்டுக் குப்பத்தில் சன்மார்க்க கொடி


கட்டி உபதேசம் செய்து ஆற்றிய பேருரையில் அவர் கூறிய வாசகம் இதுதான்,
'இப்போது நீங்கள் இது வரைக்கும் ஒழுக்கத்திற்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த
மனுஷ்யர்களாயிருந்தாலும் சாலைக்குப் போகக் கொஞ்ச தினமிருக்கிறது.
அதற்குள்ளாக நீங்கள் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட மற்றவர்களையும்
நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக்
கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்திற்கு அப்படிச் செய்து
கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் கேட்டுக் கொண்டும் வருகின்றேன்.
ஆதலால் நீங்கள் அப்படி செய்து கொண்டிருங்கள்.'

தான் வருவதாக வள்ளலார் அளித்த வாக்குறுதியும் அதுவரை நாம் செய்ய


வேண்டிய பணி இன்னதென்பதனையும் மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம்
அறியலாம். அவர் அப்படிக் கூறியது 22.10.1873 புதன் கிழமை காலை 8 மணிக்கு
மேல்.

11. வள்ளலாரின் ஞான தேகத்தை நம்மால் பார்க்க முடியுமா?

'காரணப் பிரகிருதி மகா காரணப் பிரகிருதியங்கங்கள் மனதிற்கே


விஷயமாகுமென்றும் இவை சாதாரண லட்சணம் என்றும் அசாதாரண
லட்சணத்தில் கண்ணறிவு பலமுறை சாதன லட்சியத்தால் நுட்பறிவாகி
மனதிற்கு விஷயமாகின்ற காரண மகாகாரணப் பிரகிருதி யங்களையும் அறியும்
என்றும், இவ்வாறு அறிவது சாத்தியமே என்றும் இதனை யோக சாதன முதலிய
வழிகளாலும் தத்துவ சாத்திரங்களாலும் அனுமான முதலிய பிரமாணங்களாலும்
அறிந்து கொள்ளலாம்' என்றும் வள்ளற் பெருமானார் தம்மிடம் வாதிட்ட பிரம்ம
சமாஜம் சம்பேடு ஸ்ரீதர நாயக்கர் அவர்களிடம் கூறியுள்ளார். சாதனா சகாயத்தால்
கண் நுட்ப அறிவு பெறுமானால் காணலாம். அல்லது ஞானதேகிகளே
வெளிப்பட்டால் அனைவரும் காணலாம்.

நாம் இவ்வுலகில் காண்பவையெல்லாம் முப்பரிமானத்துள் அடங்கிவிடும்.


அதாவது மெல்லிய நூல் என்பது நீளத்தை மட்டும் கொண்ட ஒரு பரிமானமாகும்.
நாம் படுக்கும் பாய் என்பது நீளம், அகலம் ஆகிய இரு
பரிமாணங்களைக்கொண்டதாகும். செங்கல் என்பது நீளம், அகலம், உயரம் ஆகிய
மூன்று பரிமானங்களைக் கொண்டதாகும். இவ்வாறு இவ்வுலகில் மனிதன்
உட்படி எந்தத் தோற்றமும் இந்த முப்பரிமானத்தில் அடங்கிவிடும். நான்காவது
பரிமானம் எப்படி இருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. மனித அறிவைக்
கடந்ததாக உள்ளது. ஆனால் மொத்தம் ஏழு பரிமானங்கள் உள்ளதாக ஞானிகள்
கூறுகின்றனர். இந்த ஏழு பரிமானங்களுக்கும் அப்பால் பட்டது இறைவன் வடிவம்.
ஞான உடம்பும் அவ்வாறே. ஆகையால் நமக்கு இறையருளால்
முப்பரிமானத்தைத் தாண்டிய வடிவைக் காணுகின்ற கண் அமையப்பெற்றால்
காணலாம். நன்றி.

(நன்றி: மு.பா. ஐயா எழுதிய 'வள்ளலாரை புரிந்துக்கொள்ளுங்கள்' என்ற


நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞஜோதி
வள்ளலாரின் சுவர்ணதேகம்
வள்ளலாரின் சுவர்ணதேகம்
(If you read by English, please down)

# வள்ளலார் சுவர்ணதேகம் பெற்றது நடைமுறைசாத்தியமா?

# "சத்தியமான உண்மை" என்பதே இதற்கு விடை.

# இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே வள்ளலார் ஒரு அரிதான மனிதர் ஆவார்.

# இவர் வேதாந்தம், சித்தாந்த தத்துவங்களில் தன்னை ஈடுபடுத்தி அதனை


முழுமையாக ஆய்வு செய்தவர்.

# இவர் சுவர்ணதேகம் பெற்றதற்கு நிறைய சாட்சியங்களை கூறலாம்.


"பொன்னுடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டா..."

# மேற்கண்டபாடல் வரி அவர் சுவர்ணதேகம் பெற்றதைக்காட்டுகிறது.

# வள்ளலார் தம்தேகத்தை மறைத்திருப்பது உண்மையில் அறிவியலாகுமா?

# வள்ளலார் மறைந்திருப்பது அறிவியல் உண்மையே ஆகும்.

# இப்படிப்பட்ட மாற்றத்தை வேதியலில் 'சஃப்லிமேஷன்' என்கின்றனர். வள்ளலார்


இந்த அறிவியலைத்தான் செயல்படுத்தினார்.

# சஃப்லிமேஷன் என்பது திடப் பொருளிலிருந்து நீர்ம நிலைக்குச் செல்லாமல் வாயு


நிலையினை அடைதல்.

# எடுத்துக்காட்டாக கற்பூரத்தை ஒப்பிடலாம். இந்த இயற்கைமுறைப்படி வள்ளலார்


அந்நிலையை பெற்றார். (கற்பூரம் என்ற திடப்பொருளை திறந்த வெளியில்
வைத்தால் அது நீர்மநிலைக்கு மாறாமல் வாயுநிலைக்கு மாறிவிடும்)

# தயவுசெய்து வாயு நிலை என்பதனை காற்றாக மாறியது என்று


நினைத்துவிடவேண்டாம். இந்த இடத்தில் உருதெரியாமல் மறைவது என்பதே
பொருள். வள்ளலார் உருதெரியாமலிருக்கும் உடலையே பெற்றார், காற்றாக
மாறிவிட்டார் என்று நினையாதீர்.
 
# இயற்கை இந்த முறையை அனுமதிக்கின்றபடியால் நாமும் இந்த நிலையினை
இயற்கையிலிருந்து பெறமுடியும். ஆனால் இதற்குண்டான செயல்முறை சற்று
கடினமானது. ஆனால், நாம் வள்ளலாரின் சாகாக் கல்வியினைப் படித்து அதன்படி
நடந்தால் இது மிகவும் சுலபமான ஒன்றே.
# சுவர்ணதேகம் பெறவும் வாயுநிலையாய் மறையவும் சிலவற்றைக்
கடைபிடிக்கவேண்டும்.
  1. உணவுப் பழக்கம்
  2. தனிமனித ஒழுக்கம்
  3. மிகுந்த ஈடுபாட்டுன் உயர்நிலையில் இருப்பது. (பாலுறவு கூடாது)
  4. கருணை மற்றும் இயற்கையான மூலிகைகள் மற்றும் சில
வேறுபட்ட      வாழ்க்கைமுறைகள்.

# நமது தலையில் சிறிய வடிவில் மறைமுகமான ஒரு திசு அமைப்பு உள்ளது. அதன்
பெயர் பிட்யூடரி திசு. சுவர்ணதேகம் பெற இதுவும் ஒரு வகையில்
உதவிசெய்கிறது.

# இந்த பிட்யூடரி திசுதான் அனைத்து திசுக்களுக்கும் தலைமைவகிக்கின்றது. (நாம்


படித்த 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தை நினைவுக்கூறலாம்)

# வள்ளலார் இந்த மறைமுகமான பிட்யூடரி திசுவை இயங்கவைத்தப்பின் அதனை


"அமுதக் கலசம்" என்று அழைக்கிறார். 

# அதன்பிறகு சுவர்ணதேகம் என்பது சாத்தியமாகும். இந்த மாற்றம் நமது


தலைப்பாகத்திலிருந்து துவங்கி முகம் மற்றும் மார்பு என பரவி உடல் முழுதும்
ஆக்ரமிக்கும்.

# நாம் அந்த பிட்யூடரி திசுவை இயக்காமல் இருந்தால், அதன்பிறகு இந்த மாற்றம்


நின்றுவிடும். இத்திசு இயக்கத்திற்கு நமக்கு உதவுவது அதிகப்படியான உடல்
வெப்பம். "அனலில் புலன்கள் வெந்து" மற்றும் "என்னை வேதித்த என்தனி
அன்பே" என்ற அருட்பா வரிகளை ஒப்பிடலாம். இதன் பொருளாக வள்ளலார்
கூறுவது, நான் இறைவனிடம் காட்டிய அன்பே என்னுடம்பை வேதித்து
(வேதியியல் மாற்றம்) சுவர்ணதேகமாக மாற்றியது, என்பதாகும்.

# சுவர்ணதேகம் என்பதும் மறைதல் என்பதும் அறிவியலே என்று புரிந்துக்கொண்டு


நம்பிக்கையுடன் இருப்போம்.

# சுவர்ணதேகம் என்பது முதல் படியே. இன்னும் இரண்டு படிகள் உள்ளன. அவை,


"பிரணவ தேகம், ஞான தேகம்" என்பதாகும். நாம் சுவர்ணதேகம் பெற்றவுடன்
அத்தேகம் தானாகவே மற்ற இரண்டு தேகத்தையும் அடையும். இதற்கும்
அருட்பெருஞ்ஜோதி அருள் வேண்டும்.

# எனவே அன்பர்களே! நாம் முதலில் திரு அருட்பெருஞ்ஜோதியிடமிருந்து அருளை


பெற முயற்சி செய்வோம். அதன்பிறகு நாம் மரணமிலா பெருவாழ்வில்
மகிழலாம். இது அறிவியல் மட்டுமல்ல. இது ஒரு சுத்த சன்மார்க்கம் ஆகும்.
"அருள் பெறின் துரும்பும் ஓர் ஐந்தொழில் செய்யும்" மற்றும் "அருள் பெற
முயலுக" என்ற அருட்பா வரிகளைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

# இந்த அறிவியல் உண்மைகளை படித்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.


மீ ண்டும் சந்திப்போம்.

         அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
          தனிப்பெருங்கருணை          அருட்பெருஞ்ஜோதி
   

VALLALAR’S GOLDEN BODY

Vallalar got a Golden Body, is it Possible?

The answer is, very confidently YES.

# Vallalar is the very rare personality that our human kind ever had.

# He almost tested the complete Vedantha and Siddhantha Philosopy in Practice.

# There are many proof that exist that Vallalar had a Golden Body “Ponudambu enaku
Porindhidum Poruta…”

# The above line says that he had Golden Body.

# Did Vallalar disappearance is really Scientific?

# Vallalr disappearance is the pure scientific truth.


# In Chemistry there exist a concept called ‘sublimation’. Vallalar underwent this process.
  
# Sublimation is the process of moving from a solid state to vapor state without reaching the liquid
state.

# The examples are camphor naphthalene and of course Vallalar nature has this quality.
   (as a stone of naphthalene to be change directly gaseous state without becoming liquid when
open place)

# Please don’t understood ‘vapor’ means ‘air’, in this subject, it means invisible. Vallalar got
invisible body, not to change Air, mind it.

# Since Nature has this quality we can also get that quality from the nature. But the process is
Really Difficult. But if we read and follow the Vallalar’s death less education, it is very simple
one.

# Some of the means to achieve this Golden Body and Another State (Vapor).
1.   Food Culture
2.   Individual Culture
3.   Very Sincere Chastity
4.   Compassion and of course Herbals and Different Lifestyle.

# In our head part there exist a small penal shape gland called pituitary gland, this is one of
responsible factor for Golden Body.

# This Pitutary Gland is called as Master of all Glands. (remembering that we read 12th  Science
Subject)

# Vallalar calls this gland as “Amutha Kalasam” (Pot of elixir) when this gland gets activated.

# Then Golden Body is possible. The process of transforming your body starts from your head it
flows to your face and it reaches to your chest and other parts of body.

# If we are stop stimulating the gland, then the process also stops. This is facilitated by increasing
our body heat more and more. Like an Arutpa lines “analil pulangal venthu” and “enai vethittha
enthani anbe”. It means, Vallalar to say, “My divine Mercy had changed my body like Golden
body through chemistry.  

.# Hope we all understood the science behind the Golden body and his disappearance.
# This Golden Body is the first step of the three steps. Other two steps are “Peranava Degam,
and Gnana Degam” When we got Golden Body it will pickup to another mentioned two bodes
automatically, with the help of  Arutperum jothi Arul.

 # So, My Dear, First we can try to get “ARUL” from Mr.Arutperumjothi and then we should enjoy
the death less life. It is not only science, it is Sutha Sanmarkkam. Please understand an Arutpa
lines “Arul perin thurumbum oor ayinthozil puriyum”, “Arul pera muyaluga”.

# Thank you everybody for reading this Science Fact. See you again.

            ARUTPERUM JOTHI            ARUTPERUM JOTHI


            THANIPPERUM KARUNAI           ARUTPERUM JOTHI

சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள்

சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள்

அன்பர்களே! உலக நடைமுறைகளில் எந்த ஒரு அமைப்பிற்கும் அதனதன்


குறிக்கோள்களை அடைவதற்கு என நடைமுறை விதிகளை வகுத்திருப்பார்கள்.
நமக்கு அந்த குறிப்பிட்டுள்ள இலக்கினை அடைய அந்தந்த அமைப்பின்
நடைமுறை விதிகள் உதவி செய்கின்றன. இப்படிப்பட்ட
நடைமுறைவிதிகளைத்தான் நாம் 'ஒழுக்கம்' என்கிறோம்.

ஒரு இலக்கினை நாம் அடைய, அந்த இலக்கினைக் கொண்ட அமைப்பு என்ன


வழிமுறைகளை கூறுகிறதோ அதனை மட்டுமே பின்பற்றவேண்டும். ஏனெனில்
அந்த இலக்கை ஏற்கனவே அடைந்தவர்கள் சென்ற பாதையாக அது இருப்பதால்,
அவ்வழி எளிமையாகவும், எளிதில் உடனே அடையக்கூடியதாகவும் அது
இருக்கும். அவ்வழிக்கு நல் ஒழுக்கம் எனப்பெயர். மாறாக அதே இலக்கை
அடைய நாம் நம் மனம் போனப்படிச் சென்றால் அவ்வழி நம்மை எங்கு இட்டுச்
செல்லும் என்று யாரும் அறியார். இப்படிப்பட்ட வழிக்கு தீய ஒழுக்கம் எனப்பெயர்.
'மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்' என்று கூறுவதும் இதனால்தான்.
'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்'
என்று வள்ளுவம் கூறுவதும் இதைத்தான். நல்லொழுக்கத்தை கடைபிடிக்கும்
பொழுது, அது நமக்கு பழக்கத்திற்கு வரும்வரை கடினமாகத் தோன்றும். ஆனால்
அதன் முடிவான பயனானது நாம் எதிர்பார்த்ததைவிட நம்மை ஏறாநிலைமிசை
நம்மை ஏற்றிவிடும் என்பதில் ஐயம் வேண்டாம். எனவே அவ்வொழுக்கத்தை
உயிரினைவிட மேலானதாக கருதி ஒழுகவேண்டும். இதனையே வள்ளுவர்
'ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று கூறுகிறார்.

நமக்கெல்லாம் ஒழுக்கம் (Discipline) என்றவுடன் நினைவுக்கு வருவது எது?


ஒவ்வொரு நாட்டினரும் தத்தமது நாட்டினை காக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும்
இராணுவ அமைப்பும், அவற்றில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒழுக்கங்களேயாகும்.
மிகுந்தக் கட்டுப்பாட்டுடன் இருக்க ஒவ்வொருவரும்
பழக்கப்படுத்தப்பட்டிருப்பார்கள். நமது பள்ளி, கல்லூரி NCC மாணவர்களுக்கு
இவ்வொழுக்கத்தைப் பற்றி ஓரளவு தெரியும். அங்குள்ள மூத்த இராணுவ
அலுவலரின் கட்டளைக்கு, ஏன்? எதற்கு? என்ற எந்தவிதமான கேள்வியும்
கேட்காமல் கீ ழ்பணிந்து செயல்படுவதே மற்றவர்களின் முக்கிய கடமையாகும். "I
will obey to your order, utmost my satisfaction sir" "நான் உங்களின் கட்டளைக்கு
கீ ழ்படிந்து என்னால் முடிந்தவரை செயல்படுவேன் ஐயா" என்று ஒவ்வொருவரும்
உறுதிமொழியளிப்பதைப் பார்க்கிறோம்.  இந்த உறுதிமொழி நம்மை
மனதளவில்  ஒழுக்கத்தை கடைபிடிக்க தயார் செய்கிறது. பிறகு அதுவே
நடைமுறையில் வரவேண்டும்.

மேலே உள்ள ஒழுக்கம் ஒரு இராணுவத்திடமிருந்தால்தான் ஒருநாட்டை


காப்பாற்றமுடியும். அகிம்சைமுறையில் ஒருநாட்டை காப்பாற்ற வேண்டும்
என்றால், அதற்கும் இதைப்போல் பல ஒழுக்கங்களை நமது காந்தியடிகள்
உருவாக்கியிருக்கிறார்கள் என்பதனையும் நாம் அறிவோம். ஆக, ஒழுக்கம்
என்பது அடிப்படையாக உள்ளது.

எந்த ஓரு உயிருக்கும், அது எடுத்த உடம்பே அதற்கான நாடாகும். அந்த உடம்பு
என்னும் தனது நாட்டை, அழிவிலிருந்து காப்பாற்ற அவ்வுயிருக்கு
அடிப்படையான உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்க யாருக்கும் அதாவது
மற்ற நாட்டவர்களுக்கு உரிமையில்லை. 'எவ்வுயிரையும் தம் உயிர்போல்
எண்ணி உள்ளே ஒத்த உரிமையாய் இருக்கவேண்டும்' என்று வள்ளலார் கூறுவது
இதனைத்தான். 
அதுவும் மனித நாட்டை (உடலை) அடைந்த உயிருக்கு, அந்நாட்டைக் காப்பாற்ற
உரிமையுடன் கடமையும் உள்ளது. அப்படிப்பட்ட நமது நாட்டைக் காப்பாற்ற
உரிமையுடன் நம்மை நாடுவதுதான் 'சுத்த சன்மார்க்கம்' என்னும் அமைப்பாகும்.
நமது நாட்டில் (உடம்பில்) உள்ள ஐம்பொறி வரர்களையும்
ீ அடக்கி / கட்டுபடுத்தி
அதாவது அதற்கு ஒழுக்கங்களைக் கூறி, அதன் வழியில் செயல்படுத்தவைப்பதே
இவ்வுடலை எடுத்த உயிருக்கு கடமையாகும்.

'புலனைந்தனையும் அடக்கியவன் வரமே


ீ வரம்'
ீ என்பார் திருவள்ளுவர். இவ்வாறு
நாம் கோழையாக இல்லாமல் வரத்துடன்
ீ ஒழுகினால் இந்நாட்டை (இவ்வுடலை)
அழிவிலிருந்து காப்பாற்றிவிடலாம். மரணமிலா பெருவாழ்வு வாழ்வதற்கான
இராணுவ ரகசியங்களை வள்ளலாருக்கு முன் யாரும் அறியவில்லை அல்லது
யாரேனும் அறிந்திருந்தாலும் அதனை முழுமையாக வெளியில் கூறவில்லை.
வள்ளலார் ஒருவரே, இறையருளாள் அந்த இராணுவ இரகசியங்களை
உள்ளங்கை நெல்லிக் கணி என தெளிவுபடுத்தி கூறியதுடன் அவ்வழி நடந்தும்
காட்டுகிறார்.

நமது நாட்டை (உடம்பை) காப்பாற்ற நமது இராணுவ வரர்களுக்கு


ீ (நமது
உடம்பில் உள்ள ஐம்பொறிகள்) தேவையான ஒழுக்கம் என்ன? என்று வள்ளலார்
'சுத்த சன்மார்க்கம்' என்னும் இராணுவ அமைப்பின் மூலம் சொல்லியிருப்பதை
இனிக் காண்போம். 'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது' என்று
நாமக்கல் வே.இராமிலிங்கம் பிள்ளை கூறுவது போல இங்கு நமது வள்ளல்
இராமலிங்கமும் அகிம்சைமுறையிலே தமது ஒழுக்கத்தை கூறி
பின்பற்றசொல்லுகிறார். சத்தியத்தை நம்பும் யாவரும் இந்த யுத்தத்தில் சேர்ந்து
பலனடையலாம்.

நம்பெருமானார் இவ்வொழுக்கங்களை நான்கு வகையாக பிரிக்கின்றார். அவை:-

1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்

என்பதாகும். இவற்றைப்பற்றி நாம் தெளிவாகக் காண்போம்,

1. இந்திரிய ஒழுக்கம் தன்னுள் இரண்டு வகையினைக் கொண்டுள்ளது. அவை:-

(i) கன்ம இந்திரிய ஒழுக்கம்


(ii) ஞான இந்திரிய ஒழுக்கம்

என்பதாகும். இதனைப்பற்றி விளக்கமாக பார்ப்பதற்கு முன்னர், 'இந்திரியம்'


என்றால் என்ன? என்பதனை பார்ப்போம்.

சாதாரணமாக 'இந்திரியம்' என்றால் உயிரணு (விந்து) என்று பொருள். இங்கு


இதன் பொருள், 'நமது உடலில் உள்ள ஐந்து புலன்களை' குறிக்கிறது. ஐம்புலன்கள்
என்றால், கண், வாய், மூக்கு, காது, உடம்பு (உடம்பு என்பது, கழுத்துக் கீ ழே உள்ள
அனைத்து அவையங்களையும் குறிக்கும்) என்ற இந்திரியங்களைக் குறிக்கிறது.
இவற்றிற்கான செயல்பாடு வழிமுறைகளை நெறிபடுத்துவதே 'இந்திரிய
ஒழுக்கம்' என்பதாகும்.

(i) கன்ம இந்திரிய ஒழுக்கம்:-

கன்மம் என்பது வினை அல்லது கருமம். இந்த வினை சிற்றறிவின் காரணமாகத்


தோன்றும் விருப்பு, வெறுப்புகளைக் கொண்டு நிகழ்வது. மனம், வாக்கு, காயம்
மூன்றாலும் இக்கன்மம் செய்யப்படுகிறது. கன்ம இந்திரிய ஒழுக்கத்தில் உள்ள
நடைமுறை கட்டுப்பாடுகளை காண்போம்:-

(a) இனிமையாகப் பேசவேண்டும்.

(b) பொய் சொல்லாதிருக்க வேண்டும்.

(c) உயிர்களுக்கு ஏதேனும் இடையூறு / தீங்கு ஏற்படும் பொழுது, எந்தவித


தந்திரத்திலாவது அதனை தடை செய்ய வேண்டும்.

(d) பெரியவர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

(e) நமது உயிருக்கு உதவும் பொருட்டு / ஜீவோபகார நிமித்தமாய் சாதுக்கள்


இருக்கும் இடங்களிலும் வேறு இடங்களிலும் சென்று உலாவுதல் வேண்டும். /
சஞ்சரித்தல் வேண்டும்.

(f) நன்முயற்சியிற் கொடுத்தல் எடுத்தல் முதலியன செய்தல் வேண்டும்.


(கொடுத்தல் எடுத்தல் என்பதனை நம்பெருமானார் என்ன பொருளுடன்
எழுதியுள்ளார் என்பது எமக்குத் தெரியவில்லை. ஒருவேளை இப்படி
இருக்குமோ? கொடுத்தல் என்பது செலவு செய்தல், எடுத்தல் என்பது வருமானம்
ஈட்டுவதாக இருக்கலாம். இவ்வாறு வரவையும் செலவையும் நல்வழியில்
செய்ய முயலவேண்டும்.)

(g) மலம், சிறுநீர் மற்றும் விந்து போன்ற கழிவுகளை அநியாயமாக அன்றி


நியாயமாக நிற்கச் செய்வித்தல் வேண்டும்.
எப்படி எனில்,

(அ) மிதஆகாரத்தாலும் மித போகத்தாலும்  செய்வித்தல். (அதாவது


அதிகமாகவும், குறைவாகவும் இன்றி நடுநிலையளவு கொண்ட உணவை
புசிக்கவேண்டும். 4 இட்லி சாப்பிட்டால் போதும் என்றால் 2 இட்லி மட்டுமே
சாப்பிடவேண்டும் மேலும் இல்லறவாசிகள் மாதம் இரண்டுமுறை மட்டுமே
புணரவேண்டும் இவ்வாறு உணவிலும் போகத்திலும் மிதமாக இருத்தல் மூலம்
நியாயமான முறையில் முக்கழிவுகளையும் நிற்கச் செய்யவேண்டும். நிற்க
செய்வது என்றால் நிறுத்துவது என்று பொருள் அல்ல. நியாயமாக நிற்க
வேண்டும் என்பார்கள் அல்லவா, அது போல நியாயமாக நடப்பது என்று பொருள்
கொள்ள வேண்டும்.)

(ஆ) கால பேதத்தாலும் உஷ்ண ஆபசத்தாலும் தடை நேர்ந்தால் ஓஷதி


வகைகளாலும் பெளதிக மூலங்களளாலும் சரபேத அஸ்தபரிச தந்திரம்த்தாலும்
மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும் செய்வித்தல்.

ஒஷதி என்றால் மூலிகை மருந்து (Medicinal Herbs),

பெளதிக மூலங்கள் என்றால் பூமியிலிருந்து/மண் மூலக்கூறுகளிலிருந்து


கிடைக்கக் கூடிய மருந்துகள். உதாரணம் தங்க பஸ்பம். A purging medicine; stimulates
evacuation of the bowels. பெளதிகம் என்பதற்கு வள்ளலார் கூறும் விளக்கம்,
"பெளதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி 64
பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது
ஒருவாறு பூதகாரிய தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பெள+தீ+அகம்=பெளதீகம்.
பெள-மூடல், அகம்-உள், தீ-அக்கினி, ஆதலால் தீயை உள்ளடக்கியது பெளதீகம். தீ
என்பது காரண உஷ்ணம், பெளதிகங்களென்பவை வரம்
ீ பூரம் முதலிய 64
சரக்குகள்" (திருஅருட்பா உரைநடைப்பகுதி பக்கம்391)

சரபேத அஸ்தபரிச தந்திரம் என்றால் என்ன? என்பது எனக்கு சரியாக


தெரியவில்லை. இருப்பினும் எமக்குத் தெரிந்த விளக்கத்தை அளித்துள்ளேன்.
சரம்=மூச்சோட்டம், பேதம்=வேறுபாடு, அஸ்த=மறைந்து, பரிச=தொடுஉணர்ச்சி,
தந்திரம்=புணர்தல். இவ்வாறு ஒருவாறு பொருள் கொண்டு நோக்கும்போது,
புணர்ச்சியின்போது ஏற்படு மூச்சுக்காற்றுகள் இருவருக்கும் பேதமின்றி
ஒன்றினையும்போது ஏற்படும் உச்சநிலையில்  இருவருமே இன்பப்பட்டு
இறைநிலையடைதல் என்ற தந்திரத்தை இது கூறுகிறது எனத் தோன்றுகிறது.

அதாவது ஆண் பெண் சேர்க்கையின் போது இரண்டு உடலும் மனமும் மூச்சும்


(மூச்சை ஒன்றாக்குவதுதான் இங்கு கடினமான ஒன்றாகும், அதை
ஒன்றாக்குவதுதான் தந்திரம்)ஒன்றாகி இணைந்து உச்சநிலை இன்பத்தில்
இருக்கும் போதுதான் இறைவனுடன் இறைவனது அன்பில் ஆனந்த சாகரத்தில்
மூழ்கலாம்! என்கிறது, தந்திர தியான அனுபவம். ஆண் பெண் இறைவன் ஆகிய
இம்மூன்றும் இணைந்த நிலையை 'சமாதி' யோகம் என்கிறார்கள். சமாதி என்பது
முதிர்ந்த இன்பநிலையைக் குறிக்கும். இந்த தாந்திரிக தியானத்தினால் நல்ல
எண்ணங்கள் உதயமாகும். கிரியாமனம் இயங்க ஆரம்பிக்கும். அதன்பின்
எண்ணியது எல்லாம் நடக்கும்.

மலை ஏறிப்போகும் போது மேல்மூச்சு கீ ழ் மூச்சு வாங்குகிறது. அப்போது


வெளிமன உணர்வுகள் அடங்கி, கிரியா மனம் திறந்து கொள்கிறது.
அவ்வேளையில் என்ன எண்ணினாலும் அது நடக்கும் என்பதால், மலைக்குச்
சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்த மலைக்கோயில்கள் உருவாக்கப்பட்டன.
மலைக்கோயிலுக்குச் சென்றான்! நான் நினைத்தது நடந்தது! இறைவன் எனக்கு
வரமளித்துவிட்டான்! என்று, மலையேறுவதனால் உண்டாகும் நன்மையை
அறியாமல் பேசுவோர் உண்டு.

வெளிமனம் அடங்கும் போது உள்மனம் திறக்கும். அதை அடையும் வழிதான்


தாந்திரிக தந்திர முறைகள்.

இம்முறையின் நன்மையைக் கருத்தில் கொண்டே திருமணமுறைகள்


ஏற்படுத்தப் பட்டன. மணஉறவுமுறைகள் எல்லாம் தாந்திரிக தந்திர
முறையினால் அடையக்கூடிய இன்பத்தையும் பயனையும் அடையச்
செய்வதற்காகவேயாகும்.

இறைவழி நாட்டத்திற்கு இரண்டுமுறைகள் இருந்தன. ஒன்று தாந்திரிக தந்திர


உறவுமுறை. மற்றொன்று, ஆன்மிக நாட்ட முறை. ஆன்மிக நாட்டமுறையை
விட தாந்திரிக தந்திர முறையை மேற்கொண்டவர்களே சமாதி நிலையை
அடைவார்கள்.

தந்திரம் என்பது தாய் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை. வேதியம்


என்பது ஆண் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை.

தந்திரம் மதம் சார்ந்ததல்ல. சமுதாயம் என்னும் மக்கள் ஒழுக்கம்.  தன் + திரம் =


தந்திரம். தன் = விருத்தி செய்தல். திரம் = இனம். தன்னின விருத்தியே
தந்திரமாகும். இது உலகத் தோற்றத்தைக் குறிப்பது.

சிந்துவெளியில் கண்டெடுக்கப் பெற்ற முத்திரைகளில் தந்திரத்தின் கூறுகள்


காணக்
கிடைக்கின்றன. சிந்து வெளி நாகரிகம் விவசாய நகர நாகரிகம் அங்கு விவசாய
மந்திர சடங்குகளான தாந்திரிகம் இருந்த்தில் வியப்பில்லை. இன்றைக்கு 5000
ஆண்டுகளுக்கு முற்பட்டது தாந்திரிக தந்திரம்.

இந்த தந்திரங்கள் இந்தியப் பண்பாட்டில் ஆழப் பதிந்துள்ளது. இந்து மதம் என்று


சொல்லப்படுகின்ற தொகுப்பின் பல்வேறான சடங்குப் பகுதிகள் தந்திரத்தில்
உள்ளவையே ஆகும்.

தந்திரம் விவசாயத்துடன் இணைந்தது. இது, வேளாளர் நாகரிகத்தின் வேராகும்.


வேளாளர் நாகரிகத்தை விவரிப்பது திருக்குறள். தாந்திரிகம் வேதத்துக்கு
எதிரானது.

இந்த யோகத்தை விரிவாக "திருமந்திரம்" "கந்த புராணம்" விவரிக்கிறது. மேலும்


தற்காலத்தில் தோன்றிய ஞானி 'ஓஷோ' அவர்கள் இந்த யோகத்தினைப்பற்றி
நிறைய தமது நூல்களில் தெரிவித்துள்ளார்.

மூலாங்கப் பிரணவ தியானம் சங்கற்பம் என்பது,

ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு


வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர்.
எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற
எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின்
பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீ ழுமாய் வைத்துக்கூட்டினால்
ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.

ஓம் என்பதே பிரணவம் ஆகும். ஓம் என்ற பிரணவம் "அ" என்பது எட்டும்


"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம். உயிர் எழுத்தும் மெய்
எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான்
மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.
மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு) " உ ' எழுத்து
குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு
இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற
பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும்
பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இங்கு மூலாங்கமாக விளங்குவது ஓம் என்னும் பிரணவ நாதம் ஆகும். அதனை


தியானம் செய்வதின் மூலம் தம் மனதை உறுதிசெய்துக் கொள்வது.
இவ்வாறு கால பேதத்தாலும் (வேறு வழியின்றி கட்டாயத்தால்) உஷ்ண
ஆபாசத்தாலும் (உடலில் சூடு ஏறி அதன்மூலம் விந்து வெளியேறும் போது) தடை
நேர்ந்தால், அதாவது நமது ஒழுக்கத்திற்கு தடை நேர்ந்தால் மேற்கண்ட
வழிகளில் அதனை நியாயமான முறையில் செலவிட வேண்டும். அநியாயமான
முறையில் அக்கிரமமாக செலவிடுவது / கழிப்பது எப்படி என்பதை நாம்
சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அக்கிரம முறையினை தவிர்க்கவேண்டும்.
கிரம முறையில் கழிப்பது 'மந்ததரம்' எனலாம்.

மேற்கண்ட எவ்வகையிலும் (நியாயமான முறையிலும், அநியாயமான


முறையிலும்) சுக்கிலம் / விந்து வெளிப்படாமல் செய்வித்தல் என்பதை
'தீவிரதரம்' எனலாம்.

(h) இடைவிடாது கோசத்தை / உடம்பை கவசத்தால் / உடையினால் மறைத்தல்.


இது போல தலை உச்சி, மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்.

(i) சஞ்சரிக்கும் காலத்தில் / வெளியில் உலாவுகின்ற பொழுது காலில்


கவசந்தரித்தல். (பாதணிகள் அணிவது)

(j) அழுக்காடை உடுத்தாதிருத்தல்

மேற்கண்டவை யாவும் கன்ம இந்திரிய ஒழுக்கம் ஆகும்.

(ii) ஞான இந்திரிய ஒழுக்கம் என்பவை:-

(a) கொடிய சொல் செவியில் புகாவண்ணம் நாதம் முதலிய அருள்பாடல்களை


கேட்டல்.

(b) அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல். அதாவது கெட்ட நோக்குடன்


ஒருவரின் தேகத்தை தொடாமல், தயவுடன் மெல்லெனத் தொடவேண்டும்.

(c) குரூரமாகப் பாராதிருத்தல். தயவுடன் எதனையும் பார்க்கவேண்டும்.

(d) உருசி விரும்பாதிருத்தல். நமது நாக்கிற்கு தேவையான ருசியை விரும்பாது


பசியறிந்து உண்ணவேண்டும்.

(e) சுகந்தம் விரும்பாதிருத்தல். நமது மூக்கிற்கு பிடித்த சுவாச வாசனையை


கொடுக்கும் வத்தி, திரவியங்கள் இப்படிப்பட்ட செயற்கை வாசனைகளை
விரும்பாமல், நமது உடம்பில் இயற்கையான கற்பூர மணம் வசீ முயலவேண்டும்.

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், ஞான இந்திரியங்கள் அஞ்சையும்


முறைபடுத்த வேண்டும்.

காதின் கேட்டல் ஆகாய சத்வ குணம்.


தோலின் தொடுணர்ச்சி வாயுவின் சத்வ குணம்.
கண்களோட பார்த்தல் அக்னியின் சத்வ குணம்.
நாக்கோட ருசித்தல் நீரோட சத்வ குணம்.
மூக்கின் நுகர்தல் மண்ணின் சத்வ குணம்.

இவைகள் ஞான இந்திரிய ஒழுக்கங்கள் ஆகும்.

2. கரண ஒழுக்கம்:- கரணம் என்பது நமது அக உடம்பில் உள்ள ஐந்து அந்தக்


கரணங்களை குறிக்கும். அவை - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம்
என்பவையாகும். இவைகளை கட்டுக்குள் வைப்பதே கரண ஒழுக்கம்.

இந்த மனம் இச்சையால அலைஞ்சு கொண்டே இருக்கு. இதோட நிறைவேறாத


ஆசைகளாலதான் அடுத்த பிறவியே வருது. அதனால இத அதோட இஷ்டப்படி
அலைய விடாமல் தடுக்கணும். மனம் என்கிறது வாயுவின் தத்துவம். அதனால
சலித்து (நிலையா இல்லாம அலைபாய்ந்து) கொண்டே இருக்கும்.

புத்தி அக்னி தத்துவம். அதனால அது விஷயங்களை வெளிச்சம் போட்டு


தெளிவா, பிரகாசமா காட்டிகிட்டே இருக்கும்.

சித்தம் நீர் தத்துவம். அதனால் அது ஒண்ணுலேந்து ஒண்ணை பற்றிகிட்டு


போய்கிட்டே இருக்கும். எண்ண ஓட்டம் என்கிறது இதுதான்.

அகங்காரம். இது நில தத்துவம். அதோட குணம் எதையும் கடினமா எதிர்த்து


நிக்கிறது. அதே போல அகங்காரம் மத்த யார் சொல்கிறதையும் கேக்காம எனக்கு
நிகர் யாரும் இல்லைன்னு சொல்லிகிட்டு பிடிவாதமா நிக்கும். இதை நீக்க
செய்கிற எல்லா முயற்சிகளையும் அது கடுமையா எதிர்க்கும்.

உள்ளம் என்கிறது ஆகாய தத்துவம். அதனால் மற்றா எல்லா அந்தக்கரண


காட்சிகளுக்கும் இடம் கொடுக்கும். அதான் அதோட வேலை.

(a) நமது மனதைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல். இதன் பூர்வத்தில்


புருவமத்தியில் நிற்கச் செய்தல்.

கிருதி என்றால் இசையினை ஒன்றினைத்தல் (Musical composition) என்று


பொருள்.  அறிவாகிருதி என்றால் அறிவினை ஒன்றினைத்தல் எனலாம். நமது
மனதை ஒன்றினைந்த அறிவாகிய சிற்சபை என மாற்றவேண்டும். பிறகு
சிற்சபையின் முன்னே புருவமத்தியில் நமது மனதை நிற்கச் செய்யவேண்டும்.
(புருவமத்தி என்பது இருபுருவ நடுவாகிய நெற்றிக்கண்ணையே குறிக்கும்.
புறத்திலுள்ள இரண்டு ஊணக்கண்களை குறிக்காது)

(b) துர்விஷயங்களை / தீயச் செய்திகளை பற்றாதிருக்கச் செய்தல்.


(c) சீவதோஷம் விசாரியா திருத்தல். உயிர்கள்படும் துன்பத்தை
விசாரிக்கக்கூடாது.

(d) தன்மதிப்பில்லாதிருத்தல். தன்னை மதியாதிருக்க வேண்டும். நான் என்ற


எண்ணம் அறவே வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

(e) இராகாதிநீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல். தீய குணங்களால் ஏற்படும்


கெடுதிகளை நீக்கி இயற்கையான சத்துவ குணமாக மாறுதல் வேண்டும்.

இராகாதி என்பது ரஜோ, தமோ குணத்தை குறிக்கும். இது செயற்கையான


குணமாகும்.

மனிதர்களிடம் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று


குணங்கள் உள்ளன. சத்துவ குணம் சாந்தம், தியாகம், பொறுமை, பக்தி ஆகிய
நல்ல பண்புகளையுடையதாகும். இது இயற்கையான குணமாகும். இதன் நிறம்
வெண்மை.

ரஜோ குணம் கோபம், சுய நலம், காமம், பொறாமை ஆகிய தீய பண்புகளை
உடையதாகும். இதன் நிறம் சிவப்பு

தமோ குணம் சோம்பல், முயற்சியின்மை ஆகிய குணங்களை உடையது.


இக்குணமுடையவர்கள் உண்ணவும், உறங்குவதுமன்றிச் செயல்படாத நடைப்
பிணம் போன்றவர்கள். இதன் நிறம் கருமை.

(f) தனது தத்துவங்கள்ளை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல். அதாவது நமது


எண்ண சக்திகளை நியாயமான வழியில் செலுத்தவேண்டும். தவறான வழியில்
நமது எண்ணங்கள் சென்றால் அதனை கண்டிக்கவேண்டும்.

3. ஜீவ ஒழுக்கம்:- (ஜீவன் என்றால் உயிர்) ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய


யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம்,
சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி,
எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.

4. ஆன்ம ஒழுக்கம்:-  யானை முதல் எறும்பீறாகத் தோன்றிய ஜீவர்களினது


சூக்குமம் தனித் தலைவன் ஆதலால், அவ்வச் சீவர்களின் ஜீவான்மாவே
திருச்சபையாய் அதனுள் பரமான்மாவே பதியாய் நிற்பதால் யாதும் நீக்கமற
எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.

ஆன்மா என்பது உயிரை இயக்கும் உள் ஒளியாகும்


{Hermeneutic}. இவ்வுலகிலுள்ள எல்லா உயிருள்ளும் மறைந்திருந்து அவ்வுயிரை
இயக்கும் தனித்தலைவனாக இந்த ஆன்மா உள்ளது. எனவே எல்லா
ஜீவராசிகளிலும் உள்ள உயிரே திருச்சபையாகும். அந்த திருச்சபையினுள்ளே
இறைவனாய் விளங்குவது இந்த ஆன்மா. எனவே நாம் அனைத்து
ஜீவராசிகளிடத்தும் எது ஒன்று கருதியும் அதனிடம் நாம் காட்டும் தயவினை
நீக்கிவிடாமலும் எவ்விடத்தும் எவ்விதத்தும் வேறுபாடு காணாமல் எல்லா
உயிர்களையும் தன்னுயிராய் கருதவேண்டும். இதுவே ஆன்மநேய
ஒருமைப்பாடு. இதுவே ஆன்ம ஒழுக்கம் ஆகும்.

மேற்கண்ட நான்கு ஒழுக்கத்தையும் நாம் கடைபிடித்தால் நமக்கு கிடைக்கு


இலாபம் என்னவெனில்,

1. ஏமசித்தி

2. சாகாக்கல்வி

3. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்

4. தத்துவ நிக்கிரகம்.

இந்த நான்கு புருஷார்த்தங்களும் / உறுதியான பொருட்களும் நமக்குக்


கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.

1. ஏமசித்தி:- ஏமம் என்றால் பாதுகாப்பு எனப்பொருள். ஏமசித்தி என்றால்


நமதுடலை பாதுகாக்கும் வித்தை. எப்படி எனில், எவையொன்றும்
தன்னுடையதல்ல என்று அறிந்து அனைத்தையும் இறைவனிடம்
ஒப்படைப்பதின் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது.

அனைத்தும் நம் தேவையை அறிந்து திருவருளால் வழங்கப் பெற்றவைகளே.


ஆவைகள் அவனுடையவை. இந்த உடல் இறைவன் கருனையால் கொடுத்தவை.
என்ற நினைவானது நம் உள்ளத்தில் பெருகினால் நம் உடல் முதலியன
திருவருள் மயமாகிவிடும். இறைவனின் கருனையை சதா சிந்தித்திருத்தல்
என்பதே இது. இதனை
'சத்'விகாரம் என்பர் இதன் பயன் ஏம சித்தி. ஏமாமாக்குதல் என்பதன் விளக்கம்
ஆன்மாவை இயற்கையாக உள்ள குற்றத்தினால் ஆணவத்தினால் இந்திரியம்,
கரணம்,ஜீவன் ஆகியவைகளை தன்னுடையன, தற்சுதந்திரமுடையன என
நினைத்தலை மாற்றி திருவருட் சுதந்திரமாக்குதல் என்பதே ஏமசித்தி யாக்குதல்
ஆகும். மற்றபடி சிலர் கூறுவது போல தங்கம் செய்யும் வித்தை அல்ல இது.

2. சாகாக்கல்வி:- ஏமசித்தி கிடைத்த பின்பு 'சாகாக்கல்வி' பயிலும் நிலை


வந்தெய்தும். இந்த சாகாக்கல்வியின் மூலம் நமக்கு சுவர்ணதேகம், பிரணவ
தேகம், ஞான தேகம் என்ற முத்தேகங்களும் கிடைக்கும்.

3. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்:- நமக்கு ஞான தேகம் கிடைத்தப் பின்பு


கடவுளின் நிலை என்ன? என்பதனை நாம் அறிவோம். அதாவது இந்த ஞான
தேகத்தில் கடவுள் நிலையாக இருப்பதை அறிந்து, ஞான தேகத்தின் நிலையும்
கடவுளின் நிலையும் வேறல்ல என்பதனை அறிந்து கடவுள்மயமாகிவிடுவோம்.

கடவுளின் நிலை எப்படிப்பட்டது என்பதனை எவறாலும் கூறமுடியாததாக


உள்ளது. அது நமது எண்ணம், மனம், புலன்கள், கற்பனை, தத்துவம் இப்படி
எவ்வகையிலும் அறியமுடியாததாக உள்ளது. ஞான தேகம் பெற்றவர்கள்
மட்டுமே அந்நிலையினை தெரிந்துக்கொள்ளமுடியும். ஞான தேகம்
பெற்றவர்களாலும் அதனை இவ்வுலகில் உள்ள மொழியால் எடுத்தியம்புவது
கடினம். எடுத்தியம்பினாலும் அது நமக்கு புரியாது. வள்ளலார் அவர்கள் தம்மால்
இயன்ற அளவில் தனது திருஅருட்பாவில் உலகியலருக்கு புரியும்படி
கூறியுள்ளார்.

அதாவது இவ்வுலகில் நமக்கெல்லாம் தெரிந்தது முப்பரிமானங்கள் மட்டுமே.


உதாரணமாக, வணையில்
ீ பயன்படுத்தப்படும் நீள 'கம்பி'யினை முதல் பரிமானம்
எனலாம். இதற்கு நீளம் மட்டுமே உள்ளது. அடுத்ததாக நாம் படுக்க பயன்படுத்தும்
'பாய்' யினை இரண்டாம் பரிமானம் எனலாம். இதற்கு நீளம் மற்றும் அகலம்
உள்ளது. அடுத்ததாக 'செங்கல்' லை மூன்றாம் பரிமானம் எனலாம். இதற்கு நீளம்,
அகலம், உயரம் இவை மூன்றும் உள்ளன. இப்படியாக இந்த முப்பரிமானத்தைத்
தாண்டி நம்மாலும் / எந்த ஒரு விஞ்ஞானியாலும் நான்காவது பரிமானப் பொருள்
இருப்பதாக சிந்தனைக்கூட செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். அந்த நான்காவது
பரிமானம் எப்படி இருக்கும்? என்று எவ்வளவு சிந்தித்தாலும் நம்மால் அதனை
கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. ஆனால் மூன்று பரிமானங்கள் தாண்டி
மொத்தம் ஏழு பரிமானங்கள் இருப்பதாக மெய்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த
ஏழு பரிமானங்களையும் தாண்டியதுதான் இறைநிலை. இப்போது சொல்லுங்கள்
இறைநிலையை வெளியில் எழுத்துமூலமாகவோ, சொல் மூலமாகவோ கூற
முடியுமா?
'நினைந்து நினைந்து' என்று துவங்கும் திருஅருட்பா பாடலை உள்ளார்ந்துப் பாடி
அழுது அழுது உருகினால் மட்டுமே அந்த ஏழு நிலைக்கும் அப்பால் உள்ள
எட்டாமல் உள்ளவனை எட்டமுடியும். எனவே நம்பிக்கையுடன் வள்ளலார் கூறிய
ஒழுக்கங்களை கடைபிடிப்போம்.

4. தத்துவ நிக்கிரகம்:- தத்துவம் என்றால் குணம். நிக்கிரகம் என்றால் அழித்தல்.


தத்துவ நிக்கிரகம் என்றால் குணத்தை அழித்தல். அதாவது நாம்
கடவுள்மயமாகிவிட்டப்பின்பு நமக்கென்று எந்த ஒரு குணமும் இல்லாது,
இறைவனால் அக்குணங்கள் அழிக்கப்படும். நம்மிடம் இறைகுணங்கள் மட்டுமே
தழைத்தோங்கும்.

சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் ஒருவாறு முற்று பெற்றது. ஆனால் இன்னொரு


முக்கியமான ஒழுக்கம் ஒன்றுள்ளது. அது இல்லையேல் மேற்கண்ட நான்கு
ஒழுக்கத்தையும் நிறைவேற்ற முடியாது. நிறைவேறவில்லையெனில் நான்கு
புருஷார்த்தங்களும் கிடைக்காது.

அது என்ன? இந்திரிய ஒழுக்கமும், கரண ஒழுக்கமும் நம்முடைய தீவிர


முயற்சியில் கடைபிடித்து வெற்றி காணலாம். ஆனால் ஜீவ ஒழுக்கமும், ஆன்ம
ஒழுக்கமும் இறைவனின் அருள் இல்லாது அதனருகே நம்மால்
நெருங்கமுடியாது.

சரி, இறைவனின் அருள் கிடைக்க என்ன வழி?

அது தான் "ஜீவகாருண்ய ஒழுக்கம்" இந்த ஒழுக்கத்தின் துணைக்கொண்டு


இறை அருளை பெற்ற பின்புதான் ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களை நம்மால் பூர்த்தி
செய்ய முடியும். எனவே "ஜீவகாருண்ய ஒழுக்கம்" மிக மிக முக்கியம்.
ஜீவகாருண்யமே மோட்ச வட்டின்
ீ திறவுகோல் என்ற வள்ளலார் வாக்கு சத்திய
வாக்காகும்.

"ஜீவகாருண்ய ஒழுக்கம்" பற்றிய விளக்கம் மிகப் பெரிதாக உள்ளதால் அதனை


வேறொரு பதிவில் காண்போம்.

வணக்கம். நன்றி அன்பர்களே!

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி

 
 
மூச்சு

முதலில் பிரதான அடுக்கான உடல் பார்த்தோம். அடுக்கான பிராணன் பற்றி இப்பொழுது


பார்க்கலாம்.
உடலில் உயிர் நிலைக்க பிராண அவசியம். நல்லவன்,கெட்டவன்,
உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என வேறுபாடின்றி யாவரும் உயிர் வாழ்வது பிராணனின்
உதவியால் தானே.
இறைவழிபாடு,தியானம் செய்வதன் மூலம் அதிக சக்தி பெறுகிறோம்.ஆனால் அந்த சக்தி
நம்மிடம் பொருளாக வரவில்லை.சக்தி அலைகளாக வருகிறது.எனவே கண்ணால் காண
முடியவில்லை.அந்த சக்தி உடலில் எங்கேனும்,அல்லது வேறு எங்காவது
வைத்துக்கொள்ளலாம்.அது அப்படி வராமல் சக்தி அலைகளாக பிராண சரீரத்தில்
சேர்கிறது.எனவே பிராண சரீரம் வலுவாக இருந்தால் மட்டுமே வரும் சக்தியைச்
சேமிக்கவும், தேவைக்கு அங்கிருந்து உபயோகப்படுத்தவும் செய்யலாம்.
உதாரணமாக ஒரு டம்ளரில் பெரிய பாத்திரத்தில் உள்ள  நீரை மேலிருந்து ஊற்றினால்
அதில் மிக குறைவான நீர் மட்டுமே தங்கும்.வந்த தண்ண ீர் அதிகம் ,நீர் ஊற்றப்பட்ட
கிளாஸ்  மிக சிறியது .அது போல் உணவு,உணர்வு இவற்றில் முறையின்றி வாழும்
நம்முடைய பிராண சரீரம் போதிய வலுவின்றியே இருக்கும்.
புதிதாக ஒரு வட்டிற்கு
ீ குடிபோகும் முன் எப்படி அந்த வட்டை
ீ ,தூசி தட்டி வெள்ளை
அடித்து வாழ தகுந்ததாக்கி அதன் பின் குடிஎருவோமோ அது போல் முதலில் நாடி ம்சுத்தி
என்ற பயிற்சி செய்ய வேண்டும்.நமது உடலில் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக
யோகசாஸ்திரம் கூறுகிறது.நாடி சுத்தி பயிற்சியின் மூலம் நாடிகள் தூய்மை
அடைவதோடு ரத்தமும் சுத்தமாகும்.ஞாபக சக்தி கூடும்.முகத்தில் ஒளி உண்டாகும்.
நாடிகள் சுத்தமாகாமல் குண்டலினி யோகப் பயிற்சியில் இறங்கக்கூடாது என
யோகநூல்கள் சொல்கின்றன.
நாம் அனேக தடவைகள் சில உறுதிமொழிகளை, குறிப்பாக ஒவ்வொரு புத்தாண்டின்
போதும் அநேக முடிவுகளை எடுக்கிறோம்  ஆனால் மறு நாள் தூங்கி எழுந்ததும்
அவற்றை மறந்து விடுவோம்.அல்லது அவற்றை தொடர்ந்து செய்ய மாட்டோம்.இதற்க்கு
காரணம் வைராக்கிய குறைவு நல்ல பிராணசக்தி உள்ளவர்கள் மிகுந்த வைராக்கியம்
உள்ளவர்களாகவும் எந்த செயலையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும்
இருப்பார்கள்.
இன்று அநேகர் பிராணசக்தியைக்  கொண்டு பல அற்புதங்கள் செய்கிறார்கள்.பிராண
சக்தியினால் வியாதிகளைக் குணமாக்குகிறார்கள்.
நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக மூச்சை வெளியே
விடுகிறோம்.சுவாசம் எப்போதும் மூக்கின் இரண்டில் ஒரு துவாரத்தின் வழியாகவே
நடைபெறும்.அது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.
வலதுபக்கம் சூரிய கலை ,இடது புறம் சந்திரகலை எனப்படும்.
இடம் வலமாக,வலம் இடமாக மாறும்போது சில நொடி,நிமிடம் இரண்டு மூக்கு
துவாரத்தின் வழியாகவும் சுவாசம் நடக்கும் அதற்கு சுழுமுனை எனப் பெயர்.
திங்கள்,புதன்,வெள்ளி,வளர்பிறை வியாழன்  நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை
இடது புறம் சுவாசம் நடக்கும்.
செவ்வாய்,சனிக்கிழமை,ஞாயிறு,தேய்பிறை வியாழன் நாட்களில் அதிகாலை 4 முதல் 6
மணிவரை வலது புறம் சுவாசம் நடக்கும்.
பின் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.
சூரியகலை (வலது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-
கடினமான வேலைகள் செய்யலாம்,உணவு உண்ண ,மலம் கழிக்க ,உடலுறவில்
ஈடுபட,கடல் யாத்திரை போக,சண்டையிட,கஷ்டமான கலைகள் கற்க,குதிரை,மாடு
முதலிய நாளுகள் விலங்குகள் வாங்க,மலை ஏற ,பளு தூக்க,நீந்த,பணம் கொடுக்கல்
வாங்கல் செய்ய, அரசன், பெரியமனிதர்களைக் காண,மருந்து சாப்பிட,செரிக்க கடினமான
ஆகாரம் உண்ண,வைத்தியம் பார்க்க நன்று.
சந்திர கலை (இடது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-
எல்லா சுப காரியமும் செய்ய நன்று.நீர் அருந்த,தீர்மானம் செய்ய,நகை செய்ய நகை
அணிய,புத்தாடை அணிய,திருமணம் பேச,பெண்பார்க்க, வெளிநாடுகளுக்குப் பயணம்
மேற்கொள்ள,வடு
ீ கோயில் கட்ட,தர்மம் செய்ய,குளம்,கிணறு வெட்ட,வைத்திய
சாஸ்திரம் கற்க, மருந்து செய்ய,சாமான்கள் வாங்க,புதுவடு
ீ குடிபுக,விதை
விதைக்க,பாஷைகள் கற்க,நடனம்,பாடல் கற்க,நண்பர்கள் உறவினரை காண நன்று.
மேற்சொன்னவாறு காரியங்களை அந்தந்தக்  கலையில் சுவாசம் நக்கும் போது செய்ய
வெற்றியுண்டாகும்.
சுழுமுனை நடக்கும் செய்யும் காரியம் தோல்வியடையும்.ஆனால்
இறைவழிபாடு,தியானம் செய்ய மிகச்சிறப்பு.
சூரியகலையில் தம்பதியர் இணைந்தால் ஆண் குழந்தையும்,சந்திர கலையில்
இணைந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.சுழிமுனையில் இணைந்தால் அலியாய்ப்
பிறக்கும்.
ஏதேனும் வியாதி (உதாரணமாக :தலைவலி) ஏற்பட்டால் அது ஆரம்பித்த நிமிடம் எந்த
பக்கமாக சுவாசம் ஓடுகிறது என பார்க்கவும் அதற்கு அடுத்த பக்கத்தில் சுவாசத்தை
மாற்றினால் அந்த குறிப்பிட்ட வியாதி நீங்கிவிடும்.
மேலே சூரிய கலை,சந்திர கலையில் செய்ய காரியங்களை பற்றி
கூறினேன்.உதாரணமாக நமக்கு சூரிய கலை நடந்து கொண்டிருக்கிறது ஆ னால் நாம்
செய்ய வேண்டிய காரியம் சந்திர கலையில் செய்ய வேண்டியது .இதுபோன்ற
தருணங்களில் என்ன செய்யலாம். அடுத்த பக்கம் மாறும் வரை எல்லா நேரங்களிலும்
காத்திருக்க முடியாது
சுவாசத்தை மாற்றும் முறைகள்:-
1.மூச்சு ஓடும் பக்க அக்குளில்(வலது பக்கம் எனில் வலது கை அக்குள்) ஒரு துண்டை
சுருட்டி மடித்து வைத்துக்கொண்டு  கையை பின்புறம் மடக்க கொள்ள சில நொடிகளில்
அடுத்த பக்கத்திற்கு மாறும்.
2.காலை மடக்காமல் மூச்சு ஓடும் பக்கம் சாய்ந்து படுத்து அந்த பக்கத்து கையை
தலைக்கு வைத்து படுத்திருந்தால் சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.
3.ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி,ஸ்ரீ புவனேஸ்வரி,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரத்தில் சித்தி
பெற்றிருந்தால் அந்த சக்தியிடம் வேண்டினால் மூச்சு உடனே மாறும்.நான் இந்த
முறையில் மூச்சை மாற்றுகிறேன்.
மேலே சொன்னவாறு ஒவ்வொரு பக்கம் மூச்சு ஓடும் போதும் இழுக்கும் மூச்சை விட
வெளிவிடும் மூச்சின் அளவு நமக்கு அதிகம்.அதுவும் சூரியகலையை விட சந்திர
கலையில் அதிகமாக பிராணன் வணாகிறது.எனவே
ீ யோகியர் சுழுமுனை அல்லது சூரிய
கலையில் சுவாசம் வருமாறு வைத்துக்கொள்கிறார்கள்.இயல்பாக நஷ்டமாகும் பிராணன்
போக பேசும் போது,கடின உழைப்பின் போது ,உடல் உறவு கொள்ளும் போது, தூங்கும்
போதும் அதிக பிராணன் வணானாலும்
ீ உறங்கும் நேரம் அதிகம் ஆகையால் உறக்கத்தின்
போது பெருமளவில் பிராணன் நஷ்டமடைகிறது. எனவே சூரியகலையில் உறங்கினால்
பிராண நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம். அதற்கு இடது கையைத் தலைக்கு வைத்து
இடது புறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும்.மதிய உணவிற்குப்பின் பெரும்பாலோர்
உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அவர்களும் இவ்வாறு உறங்கினால்
சீக்கிரம் உண்ட உணவு ஜீரணமாகும்.
மேலும் சூரிய,சந்திர ,சுழுமுனை இவற்றை பயன்படித்தி ஆரூடம் சொல்லலாம்,பிறக்கப்
போகும் குழந்தை ஆனா பெண்ணா என்று அறியலாம்,காணாமல் போன பொருள்,நபர்
வருமா வராதா மற்றும் அநேக காரியங்கள் செய்யலாம். விவரித்தால் அதிகம் போகும்
எனவே இத்துடன் முடிக்கிறேன்.
நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே
விடுகிறோம்.புது இரண்டு சக்கர வாகனம் எடுத்தவுடன் குறிப்பிட்ட கிலோமீ ட்டர் வரை 40
கிலோமீ ட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் அப்போதுதான் அதற்கு  அதிக மைலேஜ்
கிடைக்கும்.அதுபோல் நாடிசுத்தி மற்றும் பிராணாயாமம் செய்து வர வர அதிக சுவாசம்
உள்ளே சென்று குறைந்த சுவாசம் வெளிச் செல்லும்.நமக்கு நிறைய பிராண சக்தி
கிடைக்கும்.
பிராண சரீரத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்  :-
நாடிசுத்தி :-
உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை
மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும்
அப்படியே செய்க.
1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு
துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது)
மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு
வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக
மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை
செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலை ,நள்ளிரவு என 4 வேளையும்
செய்து வர பிராண சரீரம் மிக வலிமையுடன் திகழும்.
நாடி சுத்தியை குறைந்தது ஒரு மாதமாவது செய்து பின் மற்ற பிராணயாம பயிற்சிகளை
செய்தல் நலம்.
பிராணயாமம்:-
இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளிழுத்து
பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும்.
இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.
இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக
நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி
கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க
நன்கு மனதில் பதியும்.நேர்முகத்தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய
பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள்
செய்ய மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.
கபாலபாதி:-
இரு மூக்கு துவாரத்தின் வழியாகவும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு
வேகமாக மூச்சை இழுத்தும்,வெளியிடவும் செய்யவேண்டும்.இதன் மூலம் கபாலம்
எனும் தலையில் தங்கிய சளி வெளியேறும்.
ஒவ்வொரு வியாதி வரும் போதும் அது நமக்கு முன்கூட்டியே
எச்சரிக்கை செய்துவிட்டுதான் வருகிறது.உதாரணமாக சளி பிடிக்கும் முன் தும்மல்
வரும்,தொண்டையில் ஒரு மாதிரியான அரிப்பு வரும் அதை உணர்ந்து இந்த கபாலபதி
பயிற்சியை 20 தடவை முதல் 30 தடவை வரை செய்ய சளி பிடிக்காது.இதை தொடர்ந்து
செய்து வர சைனஸ் நீங்கும்.
சீத்காரி :-
சீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.
பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை
உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15
தடவைகள் செய்யலாம்.
சீத்தளி:-
நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக
காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
வெயிலில் எங்காவது அலைந்து நன்கு வேர்த்து விட்டால் வடு
ீ அல்லது அலுவலகம்
வந்து சேர்ந்ததும் இதைச் செய்ய உடனே வியர்வை நிற்கும்.
உஷ்ணமான உடல் அமைப்பு கொண்டவர்கள் இந்த ப்ராணாயாமங்களை தினமும் செய்து
வர உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.உஷ்ண தேகமானால்
அதிக காமம் உண்டாகும்,சிறுநீரோடு விந்து,நாதம் வெளியேறும்,பெண்களுக்கு
வெள்ளைப்படுதல் உண்டாகும் அவை யாவும் இந்த ப்ரானாயாமத்தினால் தீரும்.ரொம்ப
சோர்வாக உணரும் வேளைகளில் இதனை செய்ய உடனே சக்தி கிடைக்கும்.இரவில்
விளித்து படிக்கும் மாணவர்கள் இதை சில தடவைகள் செய்ய உறக்கம் உடனே வராமல்
சக்தியும் கிடைக்கும்.
சீத்தளி,சீத்காரி இரண்டு ப்ராணாயாமங்களையும் மழை மற்றும் பனிக்காலங்களில்
செய்ய வேண்டாம்.
பிரபஞ்ச ஆற்றல் ,பிராண சக்தி அதிகம் பெற பயிற்சி:-
நாக்கை ''ழ'' சொல்வது போல் மடித்து மேல் அன்னத்தில் படுமாறு வைத்துக்கொண்டு
உச்சந்தலையில் உள்ள துரியத்தில் மனம் வைத்து தியானிக்க வேண்டும்.இதை
அதிகபட்சமாக 20 நிமிடங்கள் செய்யலாம் அதற்கு மேல் செய்யவேண்டாம்.
இந்த பயிற்சி அநேக யோகிகளால் பயிலப்பட்டது.இதனை செய்ய உடனடியாக பிரபஞ்ச
சக்தி நம் தலை வழியே நமக்குள் இறங்குவதை உணரலாம்.இது கர்ம வினை சார்ந்த நம்
சிந்தனையில் ஏற்படும் குழப்பங்களை நேக்கும்.நம் செயல்பாடுகளில் தெளிவு
பிறக்கும்.சித்தர் தரிசனம் உண்டாகும்.அநேக ஆன்மீ க அனுபவங்கள் உண்டாகும்.

Posted by Unknown at 09:20 
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

You might also like