Professional Documents
Culture Documents
20-ம் பாகம் ஸ்ரீ ராம அனுயாத்திரை
20-ம் பாகம் ஸ்ரீ ராம அனுயாத்திரை
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமான் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
தலைமையில் நடந்த ஸ்ரீராம அநுயாத்திரை யில்
அடியேன் பெற்ற பங்கும் அனுபவங்களும்
பகிர்பவர் எஸ்.விஜயராகவன்
My E-mail address: artistsvr@gmail.com
௦ 6-௦ 9-2 ௦௦ 6 பாகம் இருபது
-------------------------------------------------------------------------------------
காலை சுமார் 1 ௦-3 ௦ மணிக்கு வாஞ்சி மணியாச்சி
ஜங்ஷன்-ஐ மைசூர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்
வந்தடைந்தது.அங்கே ஐந்து நிமிஷம் தான்
சாதாரணமாக நிற்கும் .நாங்கள் 38 ௦ பேர்
இறங்கவேண்டி யிருந்ததால் சற்று நின்று கிளம்பி
சென்றது.ஸ்டேஷன் வாயிலில் ஏழு ஸ்பெஷல்
பஸ்கள் காத்திருந்தன. நாங்கள் காலை ஆறு
மணிக்கே டிரைனிலேயே பல்விளக்கி காலை கடன்களை முடித்துக்கொண்டு ப்ரூ காபியை
பால் மட்டும் வாங்கி காபி தயாரித்து பருகினோம். அன்று காலை குளிக்காதபடியால்
பாலபோஜனம் இல்லை. இருப்பினும் எங்கள் சமையற் குழுவினர் காபி மட்டும் மணியாட்சி
ஜங்ஷன் வாசலில் தரவே எங்கள் டம்ளர்களில் வாங்கி பருகிவிட்டு ஸ்டேஷன்
குழாய்களிலேயே டம்ளர்களை அலம்பி கைப்பையில் வைத்துக்கொண்டு எங்கள்
பெட்டிகளை தூக்கிக்கொண்டு பஸ்களில் ஏறி அமர்ந்தோம்..பஸ்கள் புறப்பட்டு வேகமாக
சென்று திருக்குறுங்குடி மலை நின்ற நம்பி திருக்கோவில் மலை அடிவாரத்தை சென்று
அடைந்தபோது சரியாக மணி 1-௦௦
மணியாச்சி
ஜங்ஷன்-ல்
இருந்து
திருக்குறுங்குடி
மலை நின்ற
நம்பி கோயில்
சுமார் 8௦ கி.மீ .
இரண்டு மணி
நேர
பயணம்.பஸ்களை விட்டு இறங்கிய இடத்தில் ஒரு அருவி ஓடும் சப்தம் கேட்டது.
அப்போது ஒரு ஆட்டோ வந்து அந்த மலைப்பாதை முன் நின்றது. அதில் உட்கார்ந்திருந்தவர்
வேளுக்குடி சுவாமிக்கும்,மற்ற உபன்யாச சுவாமிகளுக்கும் பிரசாதமும்,வியஞ்சனமும்
தனியாக தயார் பண்ணிக்கொண்டு வந்திருந்தார். இந்த விஷயம் பற்றி நான் ஏற்கனவே முன்
பாகங்களில் எழுதி யுள்ளேன். அருகில் சென்று “என்ன விஷயம்?” என்று
விசாரித்தேன்.”ஒன்றுமில்லை இனிமேல் இந்த ஆட்டோவில் மலை ஏறினால் இந்த
சொம்புகள் , பாத்திரங்களில் உள்ள குழம்பு, சாற்றமுது(ரசம்) போன்ற திரவ பதார்த்தங்கள்
இந்த ஆட்டோ குதிக்கப்போற குதிப்பில் எல்லாம் தளும்பித் தளும்பி ஆட்டோவிற்குள்ளேயே
கொட்டிப் போகும்.பாத்திரங்கள் சிலபொழுது சாய்ந்து மொத்தமும் கூடவணாகி
ீ விடலாம்
.என் ஒருவனால் இத்தனை பாத்திரங்களையும் இலைபோட்டு மூடி அதன் மேலே
வஸ்திரத்தால் மூடி அழுத்தமாக கைகளினால் அமுக்கிக்கொண்டு போக முடியாது
வேறு ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்று.டிரைவர் சொல்கிறார்
.நீர் கொஞ்சம் என்னுடன் ஆட்டோவில் உதவியாக வரமுடியுமா என்று வினவினார்.
வேஷ்டியை அப்படியே நம்பி ஆற்று தண்ண ீரில் முழங்கால் ஆழத்தில் நின்றபடி ஓடும்
தண்ணரில்
ீ கசக்கிவிட்டு பிழிந்து கரை ஏறியவுடன் அதுவே இன்னும் ஒரு கால் மணி
காலத்தில் காய்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவ்வளவு காற்று மலை
மேல் வசிக்கொண்டிருந்தது.ஆட்டோவை
ீ அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து வரச்
சொன்னேன்.கீ ழிருந்து மேல் வர கால்மணி நேரம் தான் ஆகியது. ஆனால் ஆட்டம்
கொஞ்சம் ஜாஸ்தி.தான். நான் மேலே வந்து சுற்றிப் பார்க்கையில், இன்னும் பலர்
குளிக்காமலே டவலுடன் நின்று கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் குளித்து முடித்து
நெற்றிக்கு இட்டுக் கொண்டிருந்தனர். வெகு சிலர் கையில் சற்று பெரிய வாழை
சிப்பியில் கதம்ப குழம்பு சாதம், தயிர் சாதத்துடன் ஒரு பாறையில் அமர்ந்து தயிர்
சதத்தை குழம்பு சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சுவைத்து உண்டு கொண்டிருந்தனர்.
அடுத்து என்ன செய்யலாம் என்று நான் யோசித்தபடி இருக்கையில், மலைமேல் நின்ற
நம்பி திருக்கோவில் கம்பீரமாக காட்சி தர உள்ளே போய் பெருமாளை பலர் சேவித்து
கொண்டிருந்தனர்.சரி நாமும் பெருமாளை சேவித்து விட்டு உண்போம் என்று .பெட்டியை
ஒரு ஓரமாக வைத்துவிட்டு கைப்பையில் ஒரு திராக்ஷை முந்திரி கல்கண்டு
பொட்டணத்தையும்,அர்ச்சகருக்கு ஒரு பத்து ரூபாய் நோட்டையும் போட்டுக்கொண்டு
சந்நிதிக்குள் நுழைந்து பெருமாளை சேவித்து அர்ச்சகர் தட்டில் பொட்டணத்தையும் பத்து
ரூபாய் நோட்டையும் சேர்க்க,அர்ச்சகர் நெய் தீபம் காட்டி அடியேன் தந்த எளிய
உபகாரத்தை பெருமாளுக்கு காட்டிவிட்டு,. “இந்த திவ்ய தேசத்தில் ஐந்து நம்பிகள்
உள்ளார்கள்.இவர் மலைமேல் நின்ற நம்பி. இன்னொரு நின்ற நம்பி கீ ழே மெயின்
கோவிலில் எழுந்தருளி உள்ளார். மேல் நின்ற நம்பி. கீ ழே இருந்த நம்பி, கிடந்த நம்பி,
திருப்பாற்கடல் நம்பி,ஆகியோர் கோயில் கொண்டுள்ளார்கள். பெரிய திவ்ய தேசம்.நான்கு
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்.இரண்டு நாளாவது இருந்து
சேவிக்கணும்.நீங்கள் இன்று ராத்திரியே கிளம்புகிறீர்கள் போலிருக்கிறது ஸ்வாமி
சொன்னார்.” என்று சொல்லிக்கொண்டே தந்த பிரசாதத்தை வாங்கி என்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். அந்த பட்டருக்கு நாங்கள் முந்நூறு பேருக்குமேல்
அங்கு வந்து குளித்து பெருமாள் சேவிக்க இருப்பதை ஸ்வாமி முன்பாகவே
தெரிவித்திருப்பார் போல்இருக்கிறது. கோவில் 1 ௨-௦௦ மணியில் இருந்தே திறந்து
வைத்திருந்தார். என்று அறிந்தேன்..குளித்தவர்கள் பத்து பத்து பேராக பெருமாளை
சேவித்து வந்தனர். வெளிப் பிரகாரத்தில் வாழை இலை சிப்பியில் பலவித
காய்கள்,கறிகள் சேர்த்த கதம்ப குழம்பு சாதம், கூடவே தயிர் சாதம் . கோவில் உள்
பிரகாரத்தில் எங்கள் புருஷோத்தமன் குருப் தந்து கொண்டிருந்ததை வாங்கிக் கொண்டு
கோவிலுக்கு வெளியே வந்து மரங்களின் நிழலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சி அதி
மனோகரமாய் இருந்தது.ஜிலு ஜிலு வென்று காற்றடித்துகொண்டு நிழல்களையும் தந்து
கொண்டிருந்த மரங்களும் ‘.ஜோ’ வென்ற இரைச்சலுடன் அருவி நீர் நம்பி ஆற்றில்
ஓடிக்கொண்டிருந்த காட்சியும்,,அதில் எழுந்து வரவே மனமின்றி நீராடிக்கொண்டிருந்த நம்
யாத்திரை வாசிகளின் அரட்டையும் இதையெல்லாம் ரசித்து பார்த்துக்கொண்டே
சாப்பிட்டு முடித்து ஆற்று நீரில் கைகளை அலம்பியபோது “ஒய் இங்கே வாரும்” என்று
ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்தேன். , அங்கே நான் நின்றிருந்த பக்கத்தில் தனியே
நீராடிக்கொண்டிருந்த பெங்களூர் THREAD ரோலிங் INDUSTRY) சுவாமி இந்த யாத்திரை
டிரிப்பில் என்னோடு நண்பரானவர்களில் இரண்டாமவர் என்னைப் பார்த்து “ஒரே
வசிங்
ீ ஆக இருக்கிறது கீ ழேயே இருக்கிறேன் என்று சொன்ன ீரே எப்படி ஏறி
வந்தீர்?”என்று என்னைக் கேட்க நான் “பெருமாள் அழைத்து வந்தார் காணும்” என்று
சொன்னதைக் கேட்டு அதற்கு அவர் “அப்படியா, அது என்ன கதை?” என்று கேட்க
அடியேன் அவர் காதோடு நடந்ததை கூற, “அப்படியா சமாசாரம், அதிசயமான
அருள்தான். எங்களுக்கு பின்னால் வந்துவிட்டு,, குளித்து, பெருமாளையும் சேவித்து
சாப்பாடும் நேரத்திற்கு முடித்துக் கொண்டீரே .பார்த்தீரா! என்னோமோ நான் கீ ழிருந்தே
திசை கை கூப்பி தொழுகிறேன் என்றீரே உம்மை பெருமாள் விடமாட்டார் காணும்”
என்று என்று என் கையை பிடித்துகொண்டு ஆற்றிலிருந்து மேலேறி தன் காரியங்களை
பார்க்க சென்றார்.அதே சமயம் நான் கீ ழே விட்டு வந்த நான்கு பேர்கள் ஆறு பேராக
(இன்னும் இருவர் வந்து சேர்ந்து கொண்டார்களாம்) ஆட்டோவில் இருந்து இறங்கிக்
கொண்டிருந்தனர்.,.என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே அந்த அம்மாள் “உங்களுக்கு
எங்கள் நன்றி.” என்று சொல்ல “அதை பெருமாளுக்கு சொல்லுங்கள்”. சீக்கிரம்
பெருமாளை சேவித்துவிட்டு பிரசாதம் உள் பிரகாரத்திலேயே தருகிறார்கள். உங்கள்
அகத்துக்காரரை கவனியுங்கள். அவர் ஷுகர் பேஷன்ட் பசி தாங்கமாட்டார் என்றீரே
“என்று சொல்லி உள்ளே அனுப்பினேன்.. .
..
நாங்கள் எங்கள் பஸ்களில் ஏறி
திருக்குறுங்குடி கோயிலை
அடைந்தபோது ஸ்வாமி
சொன்னமாதிரி பவித்ர உத்சவம்
3-ம் திருநாள் புறப்பாடு தெற்கு
மாடவதியில்
ீ நடந்து
கொண்டிருந்தது. பெட்டிகளை
எல்லாம் பஸ்களிலேயே விட்டு
எல்லோரும் வேகமாகி இறங்கி
கோஷ்டி பக்கம் முன்னால் போய்
சேவித்தோம்.திருக்குறுங்குடி
ஜீயர் சுவாமி முன் நின்று
கோஷ்டியை நடத்திக் கொண்டு
போகையில் மூன்றாம்
திருவந்தாதி சேவிப்பது காதில்.
விழுந்தது. இந்த பிரபந்தம்
திருவல்லிக்கேணி வாசிகளுக்கு
(மனப்) கண்டபாடாமாயிருக்கும்.
ஏனெனில் அது பேயாழ்வார்
அருளிச் செய்தது. பேயாழ்வார்
அவதாரஸ்தலம் மாடமாமயிலை
திருவல்லிக்கேணி யானதால்
அனேகமாக பஞ்சபர்வ புறப்பாடுகளில்ஒவ்வொரு மாதமும் இதைத்தான் சேவிப்பது
வழக்கம். கோவில் உள்ளே போய் மூலவரை சேவிப்பதா இல்லை கோஷ்டியில்
அன்வயித்து மூன்றாம் திருவந்தாதி சேவையில் கலந்து கொள்வதா என்று
யோசிக்கையில் கோஷ்டியார் முன்னே செல்ல பின்னே தீர்த்தம், சடாரி இவைகளை
எங்களுக்கு சாதித்துக்கொண்டே இரு அர்ச்சகர்கள் வரவே அதை பெற்றுக்கொள்ள
நாங்கள் விரைய வேண்டியதாயிற்று. திருவதியில்
ீ ஒரு பெரிய வெள்ளி கங்காளத்தை
இடுப்பில் கட்டிக்கொண்டு தீர்த்தம் சாதிப்பதை முதன்முதலில் அந்தக் கோவிலில் தான்
பார்த்தேன். அதற்குள் ஒருவேளை புறப்பாடு முடிய தாமதமானால் சுவாமி உள்ளே
சேவித்துக்கொண்டு வேகமாக கிளம்பிவிட்டால் என்ன பண்ணுவது என்ற பயத்தில்
கோவிலுக்குள் சென்றவர்களுடன் நாங்களும் சென்று பெருமாள் தாயார் சந்நிதிகளை
சேவித்துக்கொண்டே ஒரு பிரதட்சணம் வரவும் பெருமாள் திரும்புகால் ஆகி உள்ளே
எழுந்தருளவும் சரியாக இருந்தது இயல் சேவை முடிவில் ஸ்ரீ சடகோபம் சாதிக்கையில்
சாற்றுப் (இறுதி) பாசுரங்கள் சேவிக்கவே எங்களுக்கு அதில் சேர்ந்து சேவிக்க ஒரு
சந்தர்பம் கிடைத்தது இது ஒரு மஹா பாக்யமே என்று நாங்கள் எல்லோருமே அதில்
கலந்துகொண்டு புஷ்டியான கோஷ்ட்டியுடன் உரக்க சேவித்தது ஸ்தலத்து ஜீயருக்கு
மிக்க மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும். பெருமாள் உள்ளே எழுந்தருளினவுடன் ஜீயர்
சுவாமியை வேளுக்குடி சுவாமி தண்டன் சமர்பித்து குசலபிரச்னம் விசாரிக்க நாங்களும்
எல்லோரும் ஜீயர் சுவாமியையும் பெருமாளையும் சேவித்து விடை பெற்றோம்.
அப்போது மணி.7-௦௦ சுவாமி எல்லோருடனும் கோபுர வாசல் தாண்டி வெளியே
வந்ததும், நாம் இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஆழ்வார் திருநகரி சேவிக்காமல் போகக்
கூடாது. ஸ்ரீ நம்மாழ்வார் அவதார ஸ்தலம் .நமக்காக அந்த கோவிலை நடை சாத்தாமல்
ஒன்பது மணிவரை காத்திருப்பதாக போன் வந்தது.நாம் உடனே நம்மாழ்வாரை சேவிக்க
கிளம்புவோம்.இங்கே சொல்ல வேண்டிய பாராயணம், உபன்யாசங்கள் ஆழ்வார்
திருநகரியில் சொல்லப்படும் என்று கூறினார். எல்லாரும் அவரவர் பஸ்களில் ஏறி
உட்கார்ந்தாயிற்று. இதுவும் ஒரு பாக்யமே என்று பலரும் சொல்லிக் கொண்டார்கள்
ஏனெனில் எங்கள் யாத்திரையில் புரோக்ராமில் ஆழ்வார் திருநகரி இல்லை.
.திருக்குறுங்குடி-
லிருந்து ஆழ்வார்
திருநகரி எழுபது
கி.மீ . பயணம்
.வேகமாக போனால்
எட்டரை ம ணிக்குள்
போய் விடலாம்
என்று பஸ்கள்
விரைந்தன.
திட்டப்படி எட்டரை மணிக்கு ஆழ்வார் திருநகரி ஏழு பஸ்களும் சேர்ந்தாயிற்று. பட்டர்கள்
கைங்கர்யபரர்கள் எல்லோரும் எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில்
ஆழ்வாரை சேவித்துக்கொண்டே போய், பின்
பெருமாள் மூலவரையும்சேவித்துக்கொண்டு வந்து முன்
மண்டபத்தில் அமர வேண்டியது. மொத்தபேரும் அரை மணி
அவகாசத்தில் சேவிக்க வேண்டும். பெருமாளுக்கு முன்
வைத்திருக்கும் ஒரு மூங்கில் தட்டில் சம்பாவனைகளை
சேர்த்துக் கொண்டே வரிசை நகர வேண்டும். ஒரு அர்ச்சகர்
நம்மாழ்வாரை சேவை பண்ணி வைத்து ஆழ்வார் திருவடி
நிலைகளை எங்கள் சிரசில் வைப்பார்.. மற்றொரு அர்ச்சகர்
பெருமாளுக்கு தீபம் காட்டி சேவை பண்ணி வைப்பார்.
வேறொருவர் அர்ச்சகர் ஸ்ரீ நம்மாழ்வாரின் உபதேச ஹஸ்த்தத்தை (கெட்டியான
சந்தனத்தில் பதித்தது) ஒரு பிரம்பு கூடையில் இருந்து அவ்வளவு பேருக்கும் தந்தருள்வார்.
இந்த சந்தன நம்மாழ்வார் ஹஸ்தம் கிடைத்தது மஹா பாக்கியமே. இந்த ஏற்பாட்டிற்கு
அத்தனை குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்தது ஸ்ரீமான் வேளுக்குடி ஸ்வாமியின்
புருஷகாரமே.
ஹஸ்தத்தின் போட்டோவை பக்க வாட்டில் ஆழ்வாருடன் காட்டியுள்ளேன்.
சுமார் நானூறு ஹஸ்தங்கள் தயாராக வைத்திருந்து அந்த நேரத்தில் யாருக்கும் விட்டுப்
போகாதபடி அர்ச்சகர் திருக்கரத்தால் தந்தருளியது ஒருமஹா பாக்கியம்.திருப்பதியை
போல் வாலண்டியர்கள் ஜெரகண்டி பணியை நிறைவேற்றினர்.
அந்த ஹஸ்தம் இன்றுவரை பத்திரமாக எந்தவித சேதமும் ஆகாதபடி போற்றி வருகிறேன்.
அடியேன் இந்த யாத்திரை முடிந்து திரும்பியபிறகு இதை பூஜை பெட்டியில் வைத்து
நித்ய திருவாராதணம் ஆரம்பமாகும் சமயம் ( தினமும் பூஜை ஆரம்பிக்கையில்)
சிரசில்மேல் வைத்துகொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டு பூஜையை ஆரம்பிப்பதை
வழக்கமாக கொண்டுள்ளேன்.
யுத்த காண்டம் 1- 5
சீதையை சீக்கிரம் விடுவிக்க வேணும் என்ற
எண்ணத்தில் இயற்கையின் எழிலைப்
பார்த்துக்கொண்டே அவற்றில் ஆழ்ந்து விடாமல்
வேகமாகச் சென்றது வானரசேனை ஸஹ்யம், மலயம் என்ற பர்வதங்களின் காடுகளைப்
பார்த்துக்கொண்டே. வானரசேனை நகர்ந்தது. சம்பக, திலகம், ,அசோகம் கதம்பம் முதலிய
மரங்களின் கிளைகளை முறித்துக் கொண்டும் அவற்றினால் இருந்து வசும்
ீ சுகமான
காற்றை அனுபவித்துக்கொண்டும் சென்றது.ஸஹ்யம், மலயம் என்ற பர்வதங்களைக்
கடந்து மஹேந்த்ரம் என்ற பர்வதத்தை ராமபிரான் சேனையுடன் அடைந்தார். அதன்
சிகரத்தில் ஏறி கடலைப் பார்த்தார். பிறகு கீ ழே இரங்கி வேலாவனம் என்ற உயர்ந்த
வனத்தை சென்றடைந்து தங்கி, கடலை கடப்பது பற்றி ஆலோசிப்போம்.என்று
சுக்ரீவனிடம் கூறினார்.