You are on page 1of 28

10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

மனம் போன போக்கில்

Entries (RSS)
Comments (RSS)

Archive for June 2009

இருவர்

Posted by: என் . சொக்கன் on: June 29, 2009

In: Bangalore | Characters | Courtesy | Customers | Health | Kids | Learning | Life | People |
Pulambal | Uncategorized
7 Comments

சில இடங் களுக்குச் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போகவேகூடாது.


அவற்றில் ஒன் று, குழந்தைகள் மருத்துவமனை.

வாரம்முழுக்கக் குழந்தைகளுக்கு வருகிற சளி, இருமல், காய் ச்சல்,


இன் னபிற உபாதைகளெல்லாம், பெரும்பாலும் சனி, ஞாயிறு
விடுமுறைவரையில் காத்திருக்கவேண் டியிருக்கிறது. பத்துக்கு எட்டு
தாய் மார்களும் தந்தைமார்களும் அப்போதுதான் குழந்தைகளைத்
தூக்கிக்கொண் டு மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கிறார்கள் .

சென் ற சனிக்கிழமை, நங் கையோடு நானும் அப்படி ஒரு பெரிய


கூட்டத்தில் மாட்டிக்கொண் டேன் . சினிமாத் தியேட்டர் முதல் நாள்
க்யூபோல நெரிசல் என் றால் அப்பேர்ப்பட்ட நெரிசல். க்ளினிக் தாண் டி,
அதன் வாசல் தாண் டித் தார்ச் சாலையிலும் பெற்றோர், குழந்தைகள்
அசதியோடு நின் றிருந்தார்கள் .

நங் கையிடம் ஒரு கெட்ட பழக்கம், வரிசையில் நாங் கள் கடைசியாக


நிற்கிறோம் என் றால் அவளால் அதை எப்போதும்
ஏற்றுக்கொள்ளவேமுடியாது, ‘எல்லோரையும் தாண் டி முன் னாடி
போயிடலாம் வா’ என் பாள் அடாவடியாக.

’இல்லைம்மா, இத்தனை பேர் நமக்கு முன் னாடி வந்திருக்காங் கல்ல?


அவங் கல்லாம் போனப்புறம்தான் நாம, சரியா?’

‘நாம ஏன் முன் னாடி வரலை?’

நியாயமான கேள்விதான் . ஆனால் என் ன பதில் சொல்வது? மேலே நிழல்


பரப்புகிற மரங் களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் .

த்
https://nchokkan.wordpress.com/2009/06/ லி ல் தி
த் க் ம் ம் க் க் ப் ற் 1/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் அம்மாக்களுக்குப் பேசுவதற்கு


ஏதாவது பொது விஷயம் கிடைத்துவிடுகிறது. குழந்தை ஆணா, பெண் ணா
என் பதில் தொடங் குவார்கள் , அப்புறம் நார்மல் டெலிவரியா, சிசேரியனா
என் பதைக் கேட்டுத் தெரிந்துகொண் டபிறகுதான் குழந்தையின் பெயரை
விசாரிப்பார்கள் , தொடர்ந்து என் ன சாப்பாடு, ஒரு வேளை சாப்பிட்டு
முடிக்க எவ் வளவு நேரமாகிறது, முதல் பல் வந்துவிட்டதா, ஆம் எனில், மேல்
பல்லா, கீழ்ப் பல்லா? முதல் தவணையில் எத்தனை பற்கள் வந்தன? கீழே
படுக்கவிட்டால் குழந்தை தவழ்கிறதா, புரள் கிறதா, எழுந்து நடக்கிறதா,
ஓடுகிறதா, ராத்திரி எத்தனை மணிக்குத் தூங் குகிறது, எவ் வளவு நேரம்
தூங் குகிறது, பகல் நேரத்தில் அது விழித்து எழுந்தவுடன் செய் கிற
அடாவடியில் மற்ற வீட்டு வேலைகளைப் பார்ப்பது எத்தனை சிரமமாக
இருக்கிறது, ஸ் கூல் அட்மிஷன் வாங் கியாகிவிட்டதா, ஆம் எனில் எங் கே,
எவ் வளவு செலவு ஆச்சு, இண் டர்வ் யூ உண் டா, அது கஷ் டமா எளிதா, அதில்
என் னென் ன கேள்விகள் கேட்கப்படும் … இப்படியெல்லாம் இவர்கள்
தங் களுக்குள் மணிக்கணக்காகப் பேசுவதற்காகவே, க்யூ அதிகமுள்ள
மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என் று எனக்கு ஒரு
சந்தேகம் உண் டு.

இதில் வேடிக்கையான விஷயம் என் னவென் றால், இப்படி


அரட்டையடிப்பவர்களில் இரண் டு பேர் தமிழ் பேசுவார்கள் , மூன் று பேர்
கன் னடம், மீதமுள்ளவர்கள் தெலுங் கு, ஹிந்தி, ஆங் கிலம், ஒவ் வொருவரும்
தங் களுடைய சொந்த மொழியில் கேள்வி கேட்க, அடுத்தவர்கள்
அவர்களுடைய மொழியில் பதில் சொல்ல, ஆனால் விஷயம்மட்டும்
எப்படியோ பரிமாறப்பட்டுவிடும்.

உள் ளே மருத்துவர் ஒரு குழந்தைக்கு வைத்தியம் பார்த்துக்கொண் டிருக்க,


இங் கே காத்திருப்பு அறையில் இன் னொரு மினி மருத்துவமனையே
நடந்துகொண் டிருக்கும் – ஒவ் வொரு பிரச்னைக்கும் தாய் மார்கள்
தங் களுக்குத் தெரிந்த வீட்டு மருந்து, ஆயுர்வேதம், ஹோமியோபதிக்
குறிப்புகளையெல்லாம் இஷ் டம்போல் அள்ளி வீசுவார்கள் , ‘இது ஒண் ணும்
பெரிய பிரச்னையில்லை, தேங் காய் எண் ணெயை நல்லாக் காய் ச்சி அதில
நாலு கத்தரிக்காய் க் காம்பை வாட்டி அரைச்சு எடுத்துப் பத்துப் போட்டா
ரெண் டு நாள்ல சரியாப் போயிடும்’ என் று போகிறபோக்கில் சொல்வார்கள் .
இதற்கெல்லாம் என் ன ஆதாரம் என் று கேட்டால், ‘எங் க மாமியாரோட சித்தி
சொன் னாங் க’ என் று அசட்டையாகப் பதில் வரும்.

நாட்டு மருத்துவம்மட்டுமில்லை, பெரும்பாலான தாய் மார்களுக்கு


அலோபதியும் நன் றாகவே தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யம். ’போனவாட்டி
டாக்டரைப் பார்த்தப்போ ABCD மருந்து கொடுத்தார், நல்லாக் கேட்டுச்சு,
ஆனா இந்தவாட்டி அதைக் கொடுத்தும் ஜுரம் மட்டுப்படலை, சரி, இப்போ
PQRS மருந்தைக் கொடுத்துப் பார்க்கலாமான் னு டாக்டரை
விசாரிச்சுகிட்டுப் போக வந்தேன் ’ என் பார்கள் சர்வ சாதாரணமாக.

இப்படி எல்லா வியாதிக்கும் தெளிவாக மருத்துவம் தெரிந்துவைத்திருக்கிற


பெண் கள் , ஏன் டாக்டர்களைப் பார்க்க வரவேண் டும்? எனக்கு இன் றுவரை
புரியாத விஷயம் இது.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் க்யூவில் காத்திருந்தபிறகுதான்


எங் களால் மருத்துவமனைக் கூரைக்குள் ளேயே நுழையமுடிந்தது. இன் னும்
டாக்டர் அறையை நெருங் க ஏழெட்டு பேரைத் தாண் டவேண் டும்.

இதற்குள் நங் கை முற்றிலுமாகப் பொறுமையிழந்திருந்தாள் , ‘நாம


எப்பப்பா டாக்டரைப் பார்க்கறது’
ஞ் ம் ம்
https://nchokkan.wordpress.com/2009/06/ ங் ல் ம் ள் ய் ட் ந் ட் ம் 2/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
’கொஞ் சம் பொறும்மா, இவங் கல்லாம் உள் ளே போய் ட்டு வந்துடட்டும்,
அப்புறம் நாமதான் ’

’போப்பா, எப்பப் பார்த்தாலும் நமக்கு முன் னாடி யாராச்சும் இருக்காங் க,


சுத்த போர்’ என் றாள் அவள் , ‘எனக்கு உடனே டாக்டரைப் பார்க்கணும்’

’ஃபைவ் மினிட்ஸ் பொறுத்துக்கோம்மா, பார்த்துடலாம்’, அன் றைய


தினத்தில் இருபதாவது தடவையாகச் சொன் னேன் .

அது ஒரு சின் னஞ் சிறிய அறை. சுவரில் சில குழந்தைப் படங் கள் , டாக்டரின்
மனைவியோ, மகளோ வரைந்த மயில் ஓவியம், இதே க்ளினிக்(Hospital =
மருத்துவமனை, Clinic = ??)கிற்கு வேறு நேரங் களில் வருகை தரும் மற்ற
டாக்டர்களைப்பற்றிய விவரங் கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. சின் ன
பெஞ் ச் ஒன் று, நாற்காலிகள் மூன் று, மூலையில் ஒரு வாஷ் பேஸின் , அதை
ஒட்டினாற்போல் தண் ணீர் சுத்திகரிக்கும் உருளை.

தடுப்புக்குப் பின் னாலிருந்து டாக்டரின் குரல் கேட்டது. சரளமாக


மலையாளம் பேசிக்கொண் டிருந்தார்.

அந்த டாக்டர் மலையாளி இல்லை, உள்ளூர்க் கன் னடக்காரர்தான் . ஆனால்


தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங் கிலம், தெலுங் கு என எல்லாமே நன் றாகப்
புரிந்துகொள்வார், தடங் கலில்லாமல் பேசுவார்,

மற்ற இடங் களில் எப்படியோ, மருத்துவமனையில், டாக்டரிடம்


தங் களுடைய பிரச்னையைச் சொந்த மொழியில் சொல்லி, அதே
மொழியில் சந்தேகங் களைக் கேட்டு ஆலோசனை பெறுவதுதான்
பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தானோ என் னவோ,
பெரிய மருத்துவமனைகளில்கூட இல்லாத கூட்டம் இந்தச் சின் னஞ் சிறு
Multi-Lingual க்ளினிக்கைத் தேடி வருகிறது.

நாங் கள் மருத்துவரின் அறையை நெருங் கியபோது, எங் களுக்குப்


பின் னால் இன் னும் நீண் ட கூட்டம் நின் றுகொண் டிருந்தது. மணியைப்
பார்த்தேன் , 1:15.

மருத்துவமனை போர்டில் ‘பார்வை நேரம்: 9:30 முதல் 1 வரை’ என் று


எழுதியிருந்தது. ஆனால் இங் கே இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால், இந்த
டாக்டர் மூன் றரை, நான் கு மணிக்குக்கூட வீட்டுக்குப் போகமுடியாது என் று
தோன் றியது.

இதற்குள் , எங் களுக்கு முன் னால் இருந்த ஒரு தம்பதியர் இரட்டைக்


குழந்தைகளோடு டாக்டர் அறைக்குள் சென் றார்கள் . அடுத்து
நாங் கள்தான் .

இப்போது க்யூவில் நாங் கள்தான் முதலாவதாக நிற்கிறோம் என் பதால்,


நங் கையின் முகத்தில் முதன் முறையாகச் சிரிப்பு வந்தது, அதை உறுதி
செய் துகொள்வதற்காக, ‘இவங் க வெளியே வந்ததும் நாம டாக்டரைப்
பார்க்கலாமாப்பா?’ என் றாள் .

‘ஆமாம்மா’

இந்த நேரத்தில், வரிசையை நெட்டித் தள்ளிக்கொண் டு இரண் டு பேர்


உள் ளே நுழைந்தார்கள் , ‘டாக்டரைப் பார்க்கணும்’

நான் அவர்களை விரோதமாகப் பார்த்தேன் , ‘நாங் க எல்லோரும்


அதுக்குதான் காத்திருக்கோம், பின் னாடி க்யூவிலே வாங் க’
ல் ள் ண்
https://nchokkan.wordpress.com/2009/06/ ளி ன் த் ட் க் ண் பி த் ர் 3/28
து 10:42
10/27/21, குதா
PMத்திரு June | 2009டி யூபோன போக்கில்
| மனம்

முதல் ஆள் இரண் டாவது ஆளின் தோளைத் தொட்டுக் காண் பித்தார்,


‘இவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, மயக்கம் போட்டு
விழுந்திடுவார்போல, நாங் க உடனடியா டாக்டரைப் பார்த்தாகணும், ப்ளீஸ் ’

எனக்குச் சட்டென் று சிரிப்பு வந்துவிட்டது, ‘இவர் சைல்ட் ஸ் பெஷலிஸ் ட்,


தெரியாதா?’ என் றேன் .

‘அப்படீன் னா?’

‘குழந்தைங் களுக்குதான் வைத்தியம் பார்ப்பார்’

’பரவாயில்லை சார், இவருக்கு ரொம்ப முடியலை’ என் றார் அவர்,


‘கொழந்தைங் க டாக்டரோ, பெரியவங் க டாக்டரோ, ஏதாச்சும் ஒரு மருந்து
கொடுத்தாப் போதும்’

’சரி ஓகே’, நான் பின் னே நகர்ந்துகொண் டேன் , அவர்கள் டாக்டர் அறைக்


கதவுக்கு அருகே போய் நின் றார்கள் .

இப்போதுதான் என் னால் அவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.


இருவரும் மிக அழுக்கான ஆடைகளை உடுத்தியிருந்தார்கள் .
நோயாளியின் பனியன் , லுங் கி, துண் டு, அவரோடு வந்தவருடைய பேன் ட்,
சட்டை அனைத்திலும் திட்டுத் திட்டாகக் கறுப்பு அப்பியிருந்தது.

அதுகூடப் பரவாயில்லை, அவர்களிடமிருந்து வந்த நாற்றம், அதுதான்


தாங் கமுடியாததாக இருந்தது. அது குளிக்காத நாற்றமா, அல்லது ஏதாவது
‘அருந்தி’விட்டு வந்திருக்கிறார்களா என் று தெரியவில்லை.

பொதுவாகக் குழந்தை மருத்துவமனைகளுக்கென் றே ஒரு விசேஷமான


நறுமணம் உண் டு. அதை இந்த இருவரும் தலைகீழாக
மாற்றிக்கொண் டிருந்தார்கள் .

இவர்கள் இருவரையும் வரிசையில் அனுமதித்த குற்றத்துக்காக, பின் னால்


காத்திருந்த மற்ற பெற்றோர் என் னை முறைக்க ஆரம்பித்திருந்தார்கள் .
நான் வேண் டுமென் றே பார்வையை வேறு திசைக்குத்
திருப்பவேண் டியிருந்தது.

அதுவரை, ஒற்றைக் காலில் மாறி மாறி நின் றபடி, ‘எப்போப்பா நாம


டாக்டரைப் பார்க்கலாம்’ என் று கெஞ் சிக்கொண் டிருந்த நங் கை, இப்போது
அந்த இருவரையும் ஆர்வத்தோடு கவனித்துக்கொண் டிருந்தாள் . என்
சட்டையைப் பிடித்து இழுத்து, ‘அந்த மாமாவுக்கு என் ன ஆச்சு?’ என் றாள் .

‘உடம்பு சரியில்லைம்மா, டாக்டரைப் பார்க்கப் போறாங் க’

’டாக்டர் அவங் களுக்கு ஊசி போடுவாரா?’

‘தெரியலையே’

அவள் கொஞ் சம் யோசித்துவிட்டு, ‘அவங் க போனப்புறம்தான் நாம


போகணுமா?’ என் றாள் .

நான் பதில் சொல்வதற்குள் , டாக்டரின் அறைக் கதவு திறந்தது. அந்த


இருவரும் அவசரமாக உள் ளே நுழைந்தார்கள் .

த் நிமி ம் ழி த்
https://nchokkan.wordpress.com/2009/06/ ர் ள் ளி ம் ங் ம் 4/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

பத்து நிமிடம் கழித்து அவர்கள் வெளியேறும்வரை, நங் கை எதுவும்


பேசவில்லை. அதன் பிறகும், அவர்களைதான் சுவாரஸ் யமாக வேடிக்கை
பார்த்துக்கொண் டிருந்தாள் .

முழுசாக ஒன் றரை மணி நேரக் காத்திருப்புக்குப்பிறகு, நாங் கள்


டாக்டரிடம் சரியாக இரண் டு நிமிடங் கள் மட்டும் பேசினோம். வழக்கமான
மருந்துகளை எழுதி வாங் கிக்கொண் டு வெளியே வந்தபோது,
பின் னணியில் யாரோ ‘ஜரகண் டி ஜரகண் டி’ என் று ஆறு மொழிகளில்
சொல்வதுபோலத் தோன் றியது.

எங் களை முந்திச் சென் ற அந்த இருவர், மருத்துவமனை வாசலில் தளர்ந்து


உட்கார்ந்திருந்தார்கள் . லுங் கி அணிந்திருந்தவர் சாக்கடையில் குனிந்து
வாந்தி எடுத்துக்கொண் டிருந்தார்.

அவருக்கு என் ன பிரச்னை? இந்தக் குழந்தை மருத்துவருடைய வைத்தியம்


அவருக்குப் போதுமா? அல்லது, இன் னொரு பெரிய மருத்துவரைத் தேடிச்
செல்லவேண் டியிருக்குமா? நானும் நங் கையும் செய் வதறியாது அவரைப்
பார்த்துக்கொண் டு நின் றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, மருந்து வாங் குவதற்காக நாங் கள் சாலையைக்


கடந்தபோது, அவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள் . அப்போது
இருவருடைய நடையிலும் கொஞ் சம் வேகம் கூடியிருந்ததாகத்
தோன் றியது என் னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாம்.

நான் கைந்து ’டானிக்’ அல்லது ’சிரப்’களுக்குள் எல்லா வியாதிகளும்


குணமாகிவிடுகிற, நம்முடைய மருந்துகளை அம்மா நினைவில்
வைத்துக்கொள் கிற குழந்தைப் பருவம் கடந்துவிட்டால், வாழ்க்கைதான்
எத்தனை சிக்கலாகிவிடுகிறது!

***

என் . சொக்கன் …

29 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங் கே க்ளிக் செய் து ’ஓ’(ட்டு) போடுங் க

ஒரே ஒரு கெட்டவன்

Posted by: என் . சொக்கன் on: June 26, 2009

In: (Auto)Biography | Bangalore | Characters | Classroom | Differing Angles | Fans | Health |


Humor | Lazy | Learning | Life | Pulambal | Uncategorized | Visit
14 Comments

அலுவலகத்தில் என் மேனேஜரும், வீட்டில் என் மனைவியும் யோகாசனப்


பிரியர்களாக மாறிச் சில மாதங் கள் ஆகின் றன.

’ஆஃபீஸ் பாஸ் ’பற்றிப் பிரச்னையில்லை. எப்போதாவது, ‘You should try Yoga, Its
amazing’ என் று புதுச் சினிமாவுக்கு சிபாரிசு செய் வதுபோல் ஒரு வரி
சொல்வார். அதற்குமேல் வற்புறுத்தமாட்டார்.

ல் ன் வி
https://nchokkan.wordpress.com/2009/06/ க் ம் ன் ல் 5/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

ஆனால் என் மனைவிக்கு, யோகாசனம் என் பது ஒரு செல்ல


நாய் க்குட்டியை வளர்ப்பதுமாதிரி. அவர்மட்டும் அதைக் கவனித்துப்
போஷாக்கு பண் ணிக்கொண் டிருக்கையில், நான் சும்மா வெட்டியாக
உட்கார்ந்திருப்பதை அவருக்குப் பார்க்கப் பொறுக்கவில்லை.

ஆகவே, ‘யோகாசனம் எப்பேர்ப்பட்ட விஷயம் தெரியுமா? அதைமட்டும்


ஒழுங் காச் செஞ் சா உடம்பில ஒரு பிரச்னை வராது, ஆஸ் பத்திரிக்கே
போகவேண் டியிருக்காது’ என் று தன் னுடைய பிரசாரங் களை
ஆரம்பித்தார்.

அடுத்தபடியாக, அவருடைய யோகாசன மாஸ் டரைப்பற்றிய


பிரம்மிப்புகள் தொடர்ந்தன, ‘அவரை நீ நேர்ல பார்த்தா, எண் பது வயசுன் னு
நம்பக்கூட முடியாது, அவ் ளோ சுறுசுறுப்பு, கை காலெல்லாம் ரப்பர்மாதிரி
வளையுது, கடந்த இருபது வருஷத்தில நான் எதுக்காகவும் மருந்து
சாப்பிட்டது கிடையாது-ங் கறார், ஒவ் வொரு வருஷமும் யோகாசனத்தால
அவருக்கு ரெண் டு வயசு குறையுதாம்’

எனக்கு இதையெல்லாம் நம்பமுடியவில்லை. யோகாசனம் ஒரு பெரிய


விஷயம்தான் . ஆனால் அதற்காக அதையே சர்வ ரோக நிவாரணியாகச்
சொல்வது, எண் பது வயதுக்காரர் உடம்பில் ‘தேஜஸ் ’ வருகிறது, எயிட்ஸ் ,
கேன் சர் போன் ற வியாதிகளுக்கு மருந்து கிடைக்கிறது என் றெல்லாம்
இஷ் டத்துக்கு அளந்துவிட்டால் அவநம்பிக்கைதானே மிஞ் சும்?

ஆகவே, என் மனைவியின் பிரசார வாசகங் கள் ஒவ் வொன் றையும் நான்
விடாப்பிடியாகக் கிண் டலடிக்க ஆரம்பித்தேன் , ‘உங் க யோகாசன மாஸ் டர்
பெயர் என் ன பிரபு தேவா-வா? ஆஸ் பத்திரிக்குப் போறதில்லை, மருந்து
சாப்பிடறதில்லைன் னா அவர் தனக்குன் னு சொந்தமா மெடிக்கல்
இன் ஷூரன் ஸ் எடுத்திருக்காரா? இல்லையா? வருஷத்துக்கு ரெண் டு வயசு
குறைஞ் சா இன் னும் பத்து வருஷத்தில அவர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த
இருபது வருஷத்தில காலேஜ் போவாரா?’

இத்தனை கிண் டலுக்கும் அடிப்படைக் காரணம் என் ன என் று


யோசித்தால், என் னுடைய சோம்பேறித்தனம்தான் . அதிகாலை ஐந்தே
காலுக்கு எழுந்து குளித்துத் தயாராகி ஆறு மணி யோகாசன வகுப்புக்குச்
செல்வது எனக்குச் சரிப்படாது.

இந்த விஷயம், என் னைவிட என் மனைவிக்குதான் நன் றாகத் தெரியும்.


ஆனாலும் என் னை எப்படியாவது யோகாசனப் பிரியனாக்கிவிடுவது
என் று அவர் தலைகீழாக நிற்கிறார் (Literally).

’இப்ப உன் உடம்பு நல்லா தெம்பா இருக்கு, அதனால உனக்கு


யோகாசனத்தோட மகிமை தெரியலை, நாற்பது தாண் டினப்புறம் பாடி
பார்ட் எல்லாம் தேய் ஞ் சுபோய் வம்பு பண் ண ஆரம்பிக்கும், வாரம்
ஒருவாட்டி ஆஸ் பத்திரிக்கு ஓடவேண் டியிருக்கும், அப்போ நீ
யோகாசனத்தோட மகிமையைப் புரிஞ் சுப்பே’

‘சரி தாயி, அதுவரைக்கும் என் னைச் சும்மா வுடறியா?’

ம்ஹூம், விடுவாரா? வீட்டிலேயே எந்நேரமும் யோகாசன வீடியோக்களை


ஒலிக்கவிட்டார், வழக்கமாக எந்தப் புத்தகத்திலும் மூன் றாவது பக்கத்தில்
(நான் எழுதிய புத்தகம் என் றால் இரண் டாவது பக்கத்திலேயே)
தூங் கிவிடுகிறவர் , விதவிதமான யோகாசனப் புத்தகங் களைப் புரட்டிப்
பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். செக்கச்செவேலென் று தரையைக்

வ் வி ப்பி க் ம்
https://nchokkan.wordpress.com/2009/06/ பி ஸ் க் வி ரி ப் ங் கி தி ல் 6/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
கவ் விப்பிடிக்கும்படியான ஒரு பிளாஸ் டிக் விரிப்பு வாங் கி அதில்
கன் னாபின் னாவென் று உடம்பை வளைத்து, ‘இது சிங் க யோகா, இது மயில்
யோகா, இது முதலை யோகா’ என் று விதவிதமாக ஜூ காட்ட ஆரம்பித்தார்.

அவர் அப்படிக் காண் பித்த மிருகாசனங் களில் இரண் டுமட்டும் எனக்கு


ரொம்பப் பிடித்திருந்தது. ஒன் று, நாய் போல நாக்கைத் தொங் கப்
போட்டுக்கொண் டு, ‘ஹா ஹா ஹா ஹா’ என் று மூச்சு விடுவது.
இன் னொன் று, சிங் கம்போல கண் களை இடுக்கிக்கொண் டு பெரிதாகக்
கர்ஜிப்பது.

ஆனால், இதையெல்லாம் வீட்டில் ஒருவர்மட்டும் செய் தால் பரவாயில்லை.


யோகாசன வகுப்பில் முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ஒரே நேரத்தில்
கர்ஜித்தால் வெளியே தெருவில் நடந்துபோகிறவர்களெல்லாம்
பயந்துவிடமாட்டார்களா?

என் னுடைய கிண் டல்கள் ஒவ் வொன் றும் என் மனைவியின் யோகாசனப்
பிரியத்தை அதிகரிக்கவே செய் தன. எப்படியாவது என் னையும் இதில்
வளைத்துப்போட்டுவிடவேண் டும் என் கிற அவருடைய விருப்பம்மட்டும்
நிறைவேற மறுத்தது.

இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என் கிற


வீம்பெல்லாம் எனக்குக் கிடையாது. யோகாசனம் என் றில்லை, எந்த ஒரு
விஷயத்தையும் logical-ஆக யோசித்து, ‘இது ரொம்ப உசத்தி, எனக்கு இது
தேவை’ என் கிற தீர்மானத்துக்கு நானே வரவேண் டும், வெறும்
நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உணர்ச்சிமயமான
சிபாரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை.

அதற்காக, யோகாசனம் புருடா என் று நான் சொல்லவரவில்லை. என்


மனைவி அதை ஒரு ‘பகவான் யோகானந்தா’ ரேஞ் சுக்குக் கண் கள் பனிக்க,
இதயம் இனிக்கப் பிரசாரம் செய் தாரேதவிர, அது ஏன் உசத்தி, எப்படி அது
நிச்சயப் பலன் தருகிறது என் பதைல்லாம் தர்க்கரீதியில் விளக்கவில்லை,
இன் றுவரை.

இன் னொரு விஷயம், என் னுடைய ’ராத்திரிப் பறவை’ லைஃப் ஸ் டைலுக்கு


யோகாசனம் நிச்சயமாகப் பொருந்தாது. அதிகாலையில் எழுந்து யோகா
செய் யவேண் டுமென் றால் அதற்காக நான் சீக்கிரம் தூங் கவேண் டும்,
அதனால் மற்ற எழுத்து, படிப்பு வேலைகள் எல்லாமே கெட்டுப்போகும்.

சரி, ஆஃபீஸ் போய் வந்தபிறகு சாயந்திர நேரத்தில் யோகாசனம்


பழகலாமா என் று கேட்டால், எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள் .
அதைக் காலையில்மட்டும்தான் செய் யவேண் டுமாமே

இப்படிப் பல காரணங் களை உத்தேசித்து, யோகாசனம் இப்போதைக்கு


வேண் டாம் என் று முடிவு செய் திருந்தேன் . எல்லாம் பிழைத்துக் கிடந்து
ரிடையர் ஆனபிறகு நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இதற்கும் என் மனைவி ஒரு விமர்சனம் வைத்திருந்தார், ‘அப்போ


யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சா, உடம்பு வளையாது’

‘வளையறவரைக்கும் போதும்மா, விடேன் ’

இப்படி எங் கள் வீட்டில் யோகாசனம் ஒரு சுவாரஸ் யமான விவாதப்


பொருளாகவே தொடர்ந்துகொண் டிருந்த சூழ்நிலையில், நேற்று ஒரு
விநோதமான அனுபவம்.
ன்
https://nchokkan.wordpress.com/2009/06/ ண் ர் ர் ன் நி ழ் ச்சி க் 7/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
என் னுடைய அலுவலக நண் பர் ஒருவர் என் னை ஒரு நிகழ்ச்சிக்கு
அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு: Yogic Management.

அதாவது, யோகாசனத்தின் வழிமுறைகள் , தத்துவங் களை அடிப்படையாக


வைத்து, இன் றைய மேலாண் மை விஷயங் களைக் கற்றுத்தருகிறார்களாம்.
பல பெரிய நிறுவனங் களின் தலைவர்கள் , முக்கியப் பொறுப்புகளில் உள்ள
மேலாளர்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் கிறார்களாம்.

நிகழ்ச்சியை நடத்துகிறவரும், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கால்


நூற்றாண் டு காலத்துக்குமேல் பணிபுரிந்தவர்தான் . பிறகு அங் கிருந்து
விருப்ப ஓய் வு பெற்றுக்கொண் டு, யோகாசனம், ஆன் மிகம், Ancient Wisdom
போன் ற வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதைக் கேட்டதும் எனக்குக் கொஞ் சம் சுவாரஸ் யம் தட்டியது, இவர்


நிச்சயமாக ‘யோகாசனம்தான் உசத்தி, எல்லோரும் தொட்டுக் கும்பிட்டுக்
கன் னத்திலே போட்டுக்கோங் க’ என் று பிரசாரம் செய் யப்போவதில்லை,
கொஞ் சமாவது Logical-லாகப் பேசுவார், ஆகவே, இவருடைய பேச்சைக்
கேட்டு நான் யோகாசனத்தின் மேன் மைகளைப் புரிந்துகொண் டு
அதன் பக்கம் திரும்புவேனோ, என் னவோ, யார் கண் டது?

ஒருவேளை, நான் நினைத்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ் யமாக


இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ சில மேனேஜ்மென் ட்
சமாசாரங் களைக் கற்றுக்கொண் டோம் என் று திருப்தியாகத் திரும்பி
வந்துவிடலாம்.

இப்படி யோசித்த நான் , நண் பரின் அழைப்பை ஏற்றுக்கொண் டேன் .


மின் னஞ் சல் அழைப்பிதழை இரண் டு பிரதிகள் அச்செடுத்துக்கொண் டு
மாலை ஆறரை மணிக்கு அங் கே போய் ச் சேர்ந்தோம்.

நாங் கள் உள் ளே நுழைந்தபோது, அங் கே விழா ஏற்பாட்டாளர்களைத்தவிர


வேறு யாரும் இல்லை. பெரிய நிறுவனத் தலைவர்கள் ,
மேனேஜர்களெல்லாம் இனிமேல்தான் வருவார்கள் போல.

முக்கியப் பேச்சாளர், ஜம்மென் று சந்தனக் கலர் பைஜாமா


போட்டுக்கொண் டு, நரைத்த தலையைப் பின் பக்கமாக இழுத்து
வாரியிருந்தார். குடுமி இருக்கிறதா என் று பார்த்தேன் , இல்லை.

அட்டகாசமான ஆங் கிலம், காலில் ரீபாக் ஷூ, கழுத்தில் தடிமனான தங் கச்
சங் கிலி, எனக்கு அவரை ஒரு யோகா குருநாதராகக் கற்பனை செய் ய
மிகவும் சிரமமாக இருந்தது.

ஆறரை மணி தாண் டி இருபத்தைந்து நிமிடங் களாகியும், முதல் இரண் டு


வரிசைகள் மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தன. இதற்குமேல் யாரும்
வரப்போவதில்லை என் பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால்,
அரைமனதாகக் கூட்டம் தொடங் கியது.

பேச்சாளர் மிகவும் நிதானமாகப் பேசினார், எளிமையான ஆங் கிலம்,


பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொள் கிற பார்வை, சிநேக
முகபாவம், பேச்சோடு ஆங் காங் கே தூவிய நகைச்சுவை முந்திரிகள் ,
குட்டிக் கதை உலர்திராட்சைகள் , மைக் இல்லாமலேயே அவருடைய குரல்
கடைசி வரிசைவரை தெளிவாக ஒலித்திருக்கும், கேட்பதற்கு அங் கே
ஆள்கள்தான் இல்லை.

ம் ம்
https://nchokkan.wordpress.com/2009/06/ ம் ச் த் த் க் ள் தி ம் 8/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
‘நாம் நம்முடைய உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும்
குளிக்கிறோம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகம் கழுவுகிறோம்,
வீட்டில் உள்ள பொருள்களைத் துடைத்து, தூசு தட்டி வைக்கிறோம், ஆனால்
உள்ளத்தை எப்போதாவது சுத்தப்படுத்துகிறோமா? அதற்குதான்
யோகாமாதிரியான விஷயங் கள் தேவைப்படுகின் றன’ என் று பொதுவாகத்
தொடங் கியவர், வந்திருப்பவர்கள் எல்லோரும் தொழில்துறையினர் என் று
உணர்ந்து, சட்டென் று வேறொரு கோணத்துக்குச் சென் றார்.

’உங் கள் மனம் அமைதியாக இல்லாதபோது, நீங் கள் எடுக்கும் முடிவுகள்


சரியாக இருக்காது, ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின் னர் பல மணி
நேரம், பல நாள் , பல வருடங் கள் , சில சமயங் களில் வாழ்நாள்முழுக்க
வருந்திக்கொண் டிருப்பதைவிட, எந்த ஒரு முடிவையும்
எடுப்பதற்குமுன் னால் ஐந்தே ஐந்து நிமிடங் கள் செலவழியுங் கள் , அதற்கு
ஒரு சின் ன ப்ரேக் விடுங் கள் ’

’ப்ரேக் என் றால், விளம்பர ப்ரேக் இல்லை, உங் கள் மனத்தை


அமைதிப்படுத்திக்கொள்ள, சுத்தமாக்கிக்கொள்ள சில சின் னப்
பயிற்சிகள் , நான் சிபாரிசு செய் வது, மூச்சுப் பயிற்சி, அல்லது பாட்டுப்
பாடுவது’

இப்படிச் சொல்லிவிட்டுச் சட்டென் று பின் னோக்கி நகர்ந்தவர், ஒரு ஸ் ருதிப்


பெட்டியை முடுக்கிவிட்டார். அது ‘கொய் ங் ங் ங் ங் ங் ’கென் று ராகம் இழுக்க
ஆரம்பித்தது, ‘இப்போது நாம் எல்லோரும் பாடப்போகிறோம்’ என் றார்.

எனக்குப் பகீரென் றது. மற்றவர்கள் சரி, நான் பாடினால் யார் கேட்பது?


அப்படியே பின் னே நகர்ந்து ஓடிவிடலாமா என் று யோசித்தேன் .

என் குழப்பம் புரிந்ததுபோல் அவர் சிரித்தார், ‘கவலைப்படாதீங் க,


எல்லோரும் சேர்ந்து பாடும்போது யார் குரலும் தனியாக் கேட்காது, அந்த
Harmony இந்தச் சூழலையே மாத்திடும், உங் க மனசை அமைதியாக்கிடும்’

பரபரவென் று கை விரல்களில் சொடக்குப் போட்டபடி ஒரு நாற்காலியில்


அமர்ந்தார் அவர், ‘நீங் க எல்லோரும் கைகளை அகல விரிச்சுத் தொடையில
வெச்சுக்கோங் க, உள்ளங் கை மேல்நோக்கிப் பார்க்கணும்’

’அடுத்து, கால்களை முன் னாடி வெச்சு, நிமிர்ந்து நேரா உட்காருங் க, பாதம்


நல்லாத் தரையில பதியணும்’ என் றவர் சட்டென் று தன் னுடைய ஷூவைக்
கழற்றினார், ‘நீங் களும் கழற்றிடுங் க’

அதுவரை அவர் சொன் னதையெல்லாம் செய் த பார்வையாளர்கள்


இப்போது ரொம்பத் தயங் கினார்கள் . ஒருவரை ஒருவர் பார்த்தபடி
நெளிந்தார்கள் , ஒருவேளை, சாக்ஸ் நாற்றம் காரணமாக இருக்குமோ?

’இப்போ எல்லோரும் கண் ணை மூடிக்கோங் க, மூச்சை நல்லா இழுத்து,


மெதுவா விடுங் க’

மற்றவர்கள் எப்படியோ, எனக்கு முழுசாகக் கண் மூடத் தயக்கமாக


இருந்தது. காரணம், மடியில் பயம், ச்சே, மடியில் செல்ஃபோன் .

எல்லோரும் கண் களை மூடியிருக்கிற நேரத்தில் யாரோ ஒருவர் உள் ளே


வந்து எங் களுடைய செல்ஃபோன் களையெல்லாம் மொத்தமாகத் தூக்கிப்
போய் விட்டால்? எதற்கும் இருக்கட்டும் என் று அரைக் கண் ணைத் திறந்தே
வைத்திருந்தேன் .

ற் ள் ச்
https://nchokkan.wordpress.com/2009/06/ ர் ல் ப் ம் பி தி
த் ந் ர் ம் ன் கி 9/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
அதற்குள் , பேச்சாளர் மெல்லப் பாட ஆரம்பித்திருந்தார், ‘ஓம்’ என் கிற
பிரணவ மந்திரத்தில் தொடங் கி வரிசையாக நிறைய இரண் டு வரிப்
பாடல்கள் , அல்லது ஸ் லோகங் கள் : ’புத்தம் சரணம் கச்சாமி’, ‘ராம் ராம்,
ஜெய் ராம், சீதாராம்’, ‘அல்லேலூயா அல்லேலூயா’, ‘அல்லாஹூ அக்பர்
அல்லாஹு அக்பர்’க்குப்பிறகு, மறுபடியும் ‘ஓம்’ என் று வந்து முடித்தார்.
மீண் டும் சிலமுறை மூச்சுப் பயிற்சிகள் , ‘இப்போ மெதுவா உங் க
கண் ணைத் திறங் க, பார்க்கலாம்’

அவருடைய பாடல் தேர்வைப் பார்க்கும்போது யோகாவையும் மதத்தையும்


சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என் பது புரிந்தது. ஆனால் மற்றபடி,
அந்த ஐந்து நிமிடம்கூட என் னால் அமைதியாகக் கண் மூடி
இருக்கமுடியவில்லை, சொல்லப்போனால், எதைப்பற்றியும் யோசிக்காமல்
மனத்தை வெறுமையாக வைத்துக்கொள்ளவேண் டும் என் று வலிய
நினைக்கிறபோதுதான் , வேண் டுமென் றே பல பழைய நினைவுகள் ,
வருங் காலக் கற்பனைகள் , சந்தேகங் கள் எல்லாம் நவீன கொலாஜ்போல
ஒன் றன் மீது மற்றொன் று பதிந்தவாக்கில் வந்து போயின.

பேச்சாளர் கேட்டார், ‘உங் கள்ல யாரெல்லாம் முன் பைவிட இப்போ அதிக


ஃப்ரெஷ் ஷா, மேலும் அமைதியா உணர்றீங் க?’

எல்லோரும் கை தூக்கினார்கள் , என் னைத்தவிர.

ஆக, தியானம், யோகாசனத்தால்கூட அமைதிப்படுத்தமுடியாத


அளவுக்குக் கெட்டவனாகிப்போயிருக்கிறேன் . இனிமேல் சிங் கம், புலி,
யானை, ஏன் , டைனோசர், டிராகன் யோகாசனங் கள் செய் தால்கூட நான்
தெளிவாகமுடியாது என் று நினைக்கிறேன் !

***

என் . சொக்கன் …

26 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங் கே க்ளிக் செய் து ’ஓ’(ட்டு) போடுங் க

எனக்கு இந்த ஸ் கூல் பிடிக்கலை

Posted by: என் . சொக்கன் on: June 23, 2009

In: Bangalore | Bold | Classroom | Confidence | Kids | Learning | Life | Open Question | Peer
Pressure | People | Question And Answer | Students | Teaching | Uncategorized | Value | Youth
25 Comments

போன வாரம், ஒரு நண் பரைச் சந்திக்கச் சென் றிருந்தேன் .

அவருக்கு ஒரே மகள் , வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால்


பிறவியிலேயே கொஞ் சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான் மை
ஏற்பட்டுவிடாமல் தன் னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள் .

ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென் றபோது, அந்தப்


பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண் டிருந்தாள் . என் நண் பரும்
அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து
தி ட் க் ண்
https://nchokkan.wordpress.com/2009/06/ந் ர் ள் 10/28
10/27/21,ரு
10:42 PM யு த் | 2009
June தொ | மனம்ந்து
போன போக்கில்
திட்டிக்கொண் டிருந்தார்கள் .

நான் தர்ம சங் கடமாக விழிக்க, நண் பர் என் னையும் அந்தச் சண் டைக்குள்
இழுத்துப்போட்டார், ‘நல்ல நேரத்தில வந்திருக்கே, நீயே இவளுக்கு ஒரு
நல்ல புத்தி சொல்லுப்பா’

‘என் னாச்சு?’

சென் ற வருடம் அக்டோபர் மாதம் தொடங் கி, நண் பரும் அவருடைய


மனைவியும் தங் கள் மகளுக்காக ஒரு நல்ல பள்ளியைத் தேடத்
தொடங் கியிருக்கிறார்கள் . பெங் களூரில் இருப்பதிலேயே ‘தி பெஸ் ட்’
பள்ளிகளைமட்டும் வடிகட்டி அப்ளிகேஷன் வாங் கியிருக்கிறார்கள் .

அப்புறமென் ன? வரிசையாக இண் டர்வ் யூக்கள் , அலுவலகத்துக்குக்கூட


டை கட்டாத நண் பர், கோட், சூட் சகிதம் கல்யாண மாப்பிள்ளைபோல்
பள்ளிப் படிகளில் ஏறி இறங் கியிருக்கிறார்.

அவரை விடுங் கள் , அந்தப் பெண் ? ஐந்து வயதுக் குழந்தையை, இரண் டு


மணி நேரம், மூன் று மணி நேரம் என் று சரமாரியாகக் கேள்வி கேட்டு,
அதையும் இதையும் எழுதச் சொல்லிப் பரீட்சை வைத்து
பாடுபடுத்தியிருக்கிறார்கள் . அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்களே என் று
பயந்து ஒவ் வோர் இண் டர்வ் யூவாகப் போய் வந்திருக்கிறது.

கடைசியாக, ஒரு மிகப் பெரிய பள்ளியில் அவளுக்கு அட்மிஷன்


கிடைத்துவிட்டது. நண் பருக்கும் அவர் மனைவிக்கும் பெருமை
தாங் கவில்லை. தன் மகளைச் சான் றோள் எனக்கேட்ட சந்தோஷத்துடன் ,
டொனேஷன் , ஸ் கூல் ஃபீஸ் , இன் னபிற செலவுகளுக்காக எங் கே பர்ஸனல்
லோன் போடலாம் என் று யோசிக்க ஆரம்பித்தார்கள் .

அப்போதுதான் , அவர்களுடைய மகள் ஒரு பெரிய குண் டைத் தூக்கிப்


போட்டிருக்கிறாள் , ‘எனக்கு இந்த ஸ் கூல் பிடிக்கலை, நான் இங் கே
சேரமாட்டேன் ’

இதைக் கேட்டதும், அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்


வராத குறை. பொறுமையாக மகளுக்கு அறிவுரை சொல்வதில்
ஆரம்பித்தார்கள் , அந்தப் பள்ளியின் மேன் மை, அதில் படித்தவர்கள்
எப்படியெல்லாம் பெரிய ஆள்களாக வளர்ந்திருக்கிறார்கள் என் கிற
சரித்திரத்தை விளக்கிச் சொன் னார்கள் , அங் கே சீட் கிடைக்காதா என் று
எத்தனையோ பேர் ஏங் கிக் காத்திருப்பதைச் சொன் னார்கள் , அவர்கள்
தங் களுடைய தகுதிக்கு மீறி இந்தப் பள்ளிக்காகச் செலவு செய் யத்
தயாராக இருப்பதையும், அங் கே படித்தால்தான் அவளுடைய எதிர்காலம்
வளமாக இருக்கும் என் பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்கள் .

ஆனால், இதெல்லாம் குழந்தைக்குப் புரியுமா? ‘நீங் க எவ் வளவுதான்


கத்தினாலும் நான் அந்த ஸ் கூலுக்குப் போகமாட்டேன் ’ என் று
சொல்லிவிட்டு டிவியில் பப்பாய் கார்ட்டூன் பார்க்கப் போய் விட்டது.

அப்புறம், கத்தல், மிரட்டல், அடிதடி, கெஞ் சல், கொஞ் சல் எல்லாமே


வரிசைக்கிரமமாக அரங் கேறியது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, மாமி,
பக்கத்துவீட்டு நாய் க்குட்டிவரை அவளுக்கு ’நல்ல புத்தி’
சொல்லியாகிவிட்டது.

ப் ம் ள்
https://nchokkan.wordpress.com/2009/06/ ன் ற் றி க் ள் வி ல் ந் 11/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

அப்போதும், அவள் தன் னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ‘இந்த


ஸ் கூலுக்குப் போகமுடியாது, அவ் ளோதான் ’ என் று பிடிவாதமாகச்
சொல்லிவிட்டாள் .

அதன் பிறகு, வேறு வழியில்லாமல் மகளை இன் னொரு ‘சாதாரண’(?)ப்


பள்ளியில் சேர்த்திருக்கிறார் நண் பர். அவளும் கடந்த ஜூன் மூன் றாம்
தேதியிலிருந்து உற்சாகமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாள் .

ஆனால், என் நண் பருக்குதான் இன் னும் மனசே ஆறவில்லை, ’பொண் ணை


எங் கே சேர்த்திருக்கீங் க?’ என் று யாராவது கேட்டால், அவர் முகம் உடைந்து
விழுந்துவிடுகிறது, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கூச்சத்துடன்
பேச்சை மாற்றுகிறார்.

இத்தனைக்கும், அவருடைய மகள் இப்போது படிக்கும் பள்ளியும்,


பிரபலமான தனியார் பள்ளிதான் . மிக நல்ல ஆசிரியர்கள் , வகுப்பறைகள் ,
மற்ற வசதிகளைக் கொண் டதுதான் .

ஆனால், பெங் களூரின் மிகச் சிறந்த ‘நம்பர் 1’ பள்ளியில் படிக்க வாய் ப்புக்
கிடைத்தும், அதைத் தன் மகள் முட்டாள்தனமாகத் தவறவிட்டுவிட்டாளே
என் பதை நினைக்கும்போது அவர் கூனிக் குறுகிப்போகிறார். எந்நேரமும்
கலகலப்பாகப் பேசுகிற அவருடைய ஆளுமையே இப்போது தலைகீழாக
மாறிவிட்டது.

இதனால், தினந்தோறும் வீட்டில் அந்தப் பெண் ணுக்கு ஏகப்பட்ட திட்டு, அடி,


உதை. அம்மாவும் அப்பாவுமாகச் சேர்ந்து ‘அறிவில்லாத ஜென் மம், நீயே
உன் தலையில மண் ணை வாரிப் போட்டுகிட்டே’ என் பதில் ஆரம்பித்து, ’நீ
பன் னி மேய் க்கதான் லாயக்கு’வரை எல்லாவிதமான வசவுகளையும்
அவள் மேல் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள் .

இந்த விஷயத்தையெல்லாம், நண் பர் எனக்கு நேரடியாகச்


சொல்லவில்லை. பின் னால் அவருடைய குழந்தையிடம் தனியாகப்
பேசியதைவைத்து ஒருமாதிரியாக ஊகித்துக்கொண் டேன் .

அப்போதும், எனக்கு ஒரு சந்தேகம் தீரவில்லை, ‘உனக்கு ஏன் ம்மா அந்த


ஸ் கூல் பிடிக்கலை?’

நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன் னகை.


உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் .

’அந்த ஸ் கூல்ல என் னை இண் டர்வ் யூ செஞ் ச ஆன் ட்டி, என் கையைப்
பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங் க, எனக்கு ரொம்ப வலிச்சது
தெரியுமா?’

‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என் னை


இன் னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங் க, அது எனக்குப்
பிடிக்கலை’

’அவங் க என் னை உச்சா போகக்கூட அலவ் பண் ணலை, வரிசையா


இங் க்லீஷ் , மேத்ஸ் , சைன் ஸ் ல கேள்வியாக் கேட்டாங் க, நிறைய எழுதச்
சொன் னாங் க’

நான் குறுக்கிட்டுக் கேட்டேன் , ’அந்த டெஸ் ட்ல்லாம் உனக்கு ரொம்பக்


கஷ் டமா இருந்ததா?’

ம் ம் ல்
https://nchokkan.wordpress.com/2009/06/ ல் ங் ட் ல் ஸி ன் 12/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங் க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என் று


சிரித்தாள் அவள் , ’நான் தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம்
படிச்சுட்டேனே’

’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன் . ஆனா


அவங் கதான் இன் னும் இன் னும் டெஸ் ட் கொடுத்துகிட்டே இருந்தாங் க, கை
வலிக்குது மிஸ் -ன் னு சொன் னேன் , கீப் ரைட்டிங் -ன் னு அதட்டினாங் க’

’அப்புறம் என் ன ஆச்சு?’

’இண் டர்வ் யூ முடிஞ் சதும் அவங் க எனக்கு ‘வெரி குட்’ சொன் னாங் க,
அவங் களுக்கு என் னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி
ப்ரைட்’ன் னாங் க’

‘அப்புறம்?’

’ஆனா, எனக்குதான் அவங் களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ் கூலுக்குப்


போகமாட்டேன் னு சொல்லிட்டேன் ’

யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை


என் று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’
சொல்லவேண் டியது இந்தப் பெண் ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா,
அம்மாவுக்கா என் று இன் னும் விளங் கவில்லை!

***

என் . சொக்கன் …

23 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங் கே க்ளிக் செய் து ’ஓ’(ட்டு) போடுங் க

முருகா முருகா

Posted by: என் . சொக்கன் on: June 12, 2009

In: Anger | மொக்கை | Bangalore | Differing Angles | Friction | Fun | Games | Humor |
Kids | Lazy | Life | Pulambal | Rules | Uncategorized
40 Comments

காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை


நிமிடங் கள் இருக்கின் றன?

’அறுபது’ என் கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.

ஏனெனில், எங் கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு


மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங் களைக்கூட இருபதாகத்
தோன் றச் செய் துவிடுகிறது. சில சமயங் களில் அதைவிடக் குறைவாக,
நேரம் நெகட்டிவ் வில் ஓடுகிறதோ என் றுகூட பயந்துபோகிறேன் !

இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங் கை துயிலெழும் நேரம், எட்டே


கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண் டுக்கும்
நடுவே இங் கே ஒரு கால், அங் கே ஒரு கால் வைத்துக்கொண் டு
ளி க் ண்
https://nchokkan.wordpress.com/2009/06/ ப் ங் 13/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

சமாளிக்கவேண் டிய பொறுப்பு எங் களுடையது.

உண் மையில், நங் கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால்,


பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங் காக முடித்துச்
சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண் பித்துவிடலாம்.

ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங் கள் எழுப்பும்போதுதான் ,


நங் கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என் று செல்லம்
கொஞ் சுவாள் .

உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென் ஷன் தொடங் கும், ‘தூங் கினது
போதும் எழுந்திருடி’ என் று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.

தூக்கக் கலக்கக் கொஞ் சல் சரிப்படவில்லை என் றதும், நங் கை ஒரு புதிய
உத்தியைக் கண் டுபிடித்தாள் , ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு
ஸ் லோகம் சொல்லணும்ன் னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான்
அதைச் சொல்லிட்டுதான் பல் தேய் க்க வருவேன் ’

என் மனைவியின் பலவீனங் களில் ஒன் று, சாமி, பூஜை, ஸ் லோகம் என் றால்
அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை
செய் யக்கூடாது என் று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.

ஆனால், அந்த நேரத்தில் நங் கை நிஜமாகவே ஸ் லோகம்தான்


சொல்கிறாளா என் று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா
பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண் டு உட்கார்ந்தவாக்கில் தூங் குகிறாள்
என் றுதான் நினைக்கிறேன் .

ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என் னடி?


எழுந்துட்டியா?’

‘இரும்மா, ஸ் லோகம் இன் னும் நாலு லைன் பாக்கி இருக்கு’

நங் கையின் அந்த மாய எதார்த்த ஸ் லோகம் முடியவே முடியாது,


எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென் று
பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.

சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய


ஆரம்பிக்கும். பல் தேய் த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின் னுதல்,
குளித்தல் என் று ஒவ் வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த,
கன் னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என் று
வன் முறையை ஆரம்பித்துவிடுவார்.

எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச்


சொன் னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண் ணும் தெரியாது’ என் று பதில்
வரும், தேவையா?

இதில் வேடிக்கையான விஷயம் என் னவென் றால், நங் கையை நான்


குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய் வது இல்லை.
அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண் ணி
அடி வாங் கிக்கொள் கிறாள் .

இதே நங் கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங் களில்


இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண் டும். ஊரில் இருக்கிற, இல்லாத
எல்லாக் கொஞ் சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின் றி

ழி ப் ம்
https://nchokkan.wordpress.com/2009/06/ ப் ர் ள் க் ம் ண் 14/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண் டை


மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என் று தோன் றும்.

ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால்


தொடங் கி எட்டே காலுக்குள் நங் கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு
அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல்
அழுவது இரண் டும் சர்வ நிச்சயம்.

இப்படி மாலையில் கொஞ் சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப்


பதில், என் னைமாதிரி அதிகம் கொஞ் சாமல், அதிகம் அடிக்காமலும்
இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன் னால் மறுபடி
ஒரு ‘உனக்கு ஒண் ணும் தெரியாது’ பட்டம் வாங் கவேண் டியிருக்கும். எதற்கு
வம்பு?

இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன் னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி


ஒன் றில் ஒரு யோகா குருஜி தோன் றினார். குழந்தை
மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத்
தத்துவங் களை விளக்கினார்.

அப்போது அவர் சொன் ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு


அடிக்காதீர்கள் . பொறுமையாக அன் பால் திருத்துங் கள் , அவர்கள்
நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள் ’

இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங் கை


உதவமாட்டார்கள் ’ என் பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும்.
சொன் னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில்
தோன் றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என் பதால், என் மனைவி
அக்கறையுடன் கேட்டுக்கொண் டார்.

குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு,


சட்டென் று அதை நிறுத்துவது கொஞ் சம் கஷ் டம்தான் . ஆனால் அதற்கும்
ஒரு சுலபமான வழி இருக்கிறது’

என் மனைவி சட்டென் று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன் ற பத்து நிமிடத்


தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான் கூட, அவர் என் ன
சொல்லப்போகிறார் என் று ஆவலுடன் எதிர்பார்த்தேன் .

கடைசியில், அவர் சொன் ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு


யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில்
கைகள் இரண் டையும் உயர்த்தி முருகா, முருகா என் று ஏழெட்டு முறை
சத்தமாகச் சொல்லுங் கள் , கோபம் போய் விடும்’

இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என்


மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய் யும் என் று
தோன் றிவிட்டது.

இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன் னால நிச்சயமா


கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான் னு சொல்லிகிட்டே
குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என் று கிண் டலடித்துவிட்டேன் .

போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன் னும்


30 நாள் நங் கையை அடிக்காம இருந்து காட்டறேன் ’ என் று சபதம் போட்டார்.

க் ச் த்
https://nchokkan.wordpress.com/2009/06/ ம் பி க் ல் ந் ம் ர் க் ம் ன் 15/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என் று


மையமாகச் சொல்லிவைத்தேன் .

மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங் கியது.


‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங் கை வழக்கம்போல்
எல்லாவற்றுக்கும் முரண் டு பிடித்தாள் . ஆனால் பதிலுக்கு அம்மா தன் னை
அடிப்பதில்லையே, அது ஏன் என் பதுதான் அவளுக்குப் புரியவில்லை.

அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண் டிய ’முருகா


முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம்
சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது
ஏன் ? கைகளைப் பிசைந்துகொண் டு கண் ணில் தண் ணீர் வர அப்படி ஓர்
ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என் ன ஆகப்போகிறது?

ஆரம்பத்தில், என் ன நடக்கிறது என் பதே நங் கைக்கு விளங் கவில்லை.


ஆனால் மறுநாள் , விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள் .

அம்மா தன் னை அடிக்கப்போவதில்லை என் று தெரிந்ததும், அவளுடைய


முரண் டுகள் , குறும்புகள் இருமடங் காகிவிட்டன. ஒவ் வொரு
விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய் ய ஆரம்பித்தாள் ,
‘முருகா முருகா’க்களின் எண் ணிக்கை சீராக
அதிகரித்துக்கொண் டிருந்தது.

அதன் பிறகு ஒவ் வொரு நாளும், தன் னுடைய ‘முப்பது நாள் , முப்பது
பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு
இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்!
(பயப்படாதீர்கள் , சும்மா ஒரு பேச்சுக்குச் சொன் னேன் :))

குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின் பற்றத் தொடங் கி ஒரு


வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங் கைக்கு அடி
விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா
என் பது சந்தேகம்தான் .

ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய


குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங் கை. வேண் டுமென் றே ஏதாவது
செய் துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா
சொல்லும்மா’ என் று வெறுப்பேற்றுகிறாள் .

இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங் கையின் பேச்சைக்


கேட்டு ’முருகா, முருகா’ சொன் னால், அவளுக்கு இன் னும் தைரியம்
வந்துவிடும், வேண் டுமென் றே வம்பு செய் வாள் , குறும்புகளின் வேகம்,
சேதம் மேலும் அதிகரிக்கும்.

அப்படிச் செய் யாமல் ‘என் னையா கிண் டலடிக்கிறே?’ என் று குழந்தையை


அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள் ’ சபதம் அவருடைய
கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே


தவிர்க்கிறேன் , பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால்
சட்டென் று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன் .

பின் னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங் கைக்குப் பதிலாக என் னை


அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என் று என் மனைவி
தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’
ன் றி ல்
https://nchokkan.wordpress.com/2009/06/ ன் ண் 16/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

என் று அலறினால்தான் உண் டு!

***

என் . சொக்கன் …

12 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங் கே க்ளிக் செய் து ’ஓ’(ட்டு) போடுங் க

கேள்வி – பதில் ஆட்டம்

Posted by: என் . சொக்கன் on: June 8, 2009

In: Games | Question And Answer | Uncategorized


18 Comments

நண் பர் திரு. ரவிபிரகாஷ் அவர்கள் கேட்டுக்கொண் டபடி, இந்தக் கேள்வி –


பதில் வலைப்பதிவு ஆட்டத்தில் நானும் தொபுக்கடீர்ன் னு
குதிக்கிறேனுங் கோவ்

1) உங் களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங் களுக்கு உங் க பெயர்
பிடிக்குமா?

அது ஒரு பெரிய கதை – முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லப்பார்க்கிறேன்

ஆரம்பத்தில் நான் எழுதிய கதைகளையெல்லாம், என் னுடைய சொந்தப்


பெயரில்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண் டிருந்தேன் . ஆனால்,
அந்தப் பெயரில் நான் எழுதி அனுப்பியவற்றில் நூற்றுக்கு நூற்று ஐந்து
கதைகள் உடனடியாக நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வந்துவிட்டன.

பொதுவாக, ஒரு பிரச்னை என் றால் உடனே பழியைத் தூக்கி வேறு ஒருவர்
தலையில் போடுவதுதானே நம் பழக்கம்? என் னுடைய எழுத்தில் குறைபாடு
இருப்பதாக ஏற்றுக்கொள்ள எனக்கு முதிர்ச்சி போதவில்லை. பெயரில்தான்
ஏதோ இடிக்கிறது என் று நானே முடிவு கட்டிக்கொண் டுவிட்டேன் .

பின் னே? ‘நாக சுப்ரமணியன் ’ என் று நீளமான பெயரில் கதை எழுதினால்


யார் பிரசுரிப்பார்கள் ? அதை ‘ஷார்ட் & ஸ் வீட்’டாகச் சுருக்கலாமே என் று
யோசித்து, நண் பர்கள் உதவியுடன் ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்தேன் .

அப்போதெல்லாம் நான் வாரத்துக்கு ஒன் று அல்லது இரண் டு என் கிற


கணக்கில் கதைகளைக் கிறுக்கித் தள்ளிக்கொண் டிருந்தேன் . அடுத்த ஒரு
மாதத்தில் நான் எழுதிய ஐந்து கதைகளை, இந்த ஐந்து பெயர்களில், ஐந்து
வெவ் வேறு பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அனுப்பிவைத்தேன் .

ஆச்சர்யமான விஷயம், அதுவரை என் கதைகளை விடாப்பிடியாக


நிராகரித்துக்கொண் டிருந்த பத்திரிகைகள் , இந்த ஐந்தில் இரண் டைத்
தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிட்டன – ஒரு கதை ‘எ நாவல் டைம்’ என் கிற
மாத இதழில் வந்தது, அடுத்த வாரமே இன் னொரு கதை ஆனந்த விகடன்
1997 சுதந்தரப் பொன் விழா மலரில் (வேறொரு பெயரில்) வந்தது.

ன் பி ன்
https://nchokkan.wordpress.com/2009/06/ ன் நி ப் ப் ன் த் ல் 17/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

அதன் பிறகு, நான் என் னுடைய நிஜப் பெயரைப் பயன் படுத்தவே இல்லை.
புனைபெயரில்தான் விளையாடிக்கொண் டிருந்தேன் . அந்த அதிர்ஷ் டமோ
என் னவோ, வரிசையாகப் பல கதைகள் பிரசுரம் கண் டன. ஒன் றிரண் டு
சிறுகதைப் போட்டிகளில் பரிசுகூடக் கிடைத்தது.

பின் னர், இதற்கும் ஒரு பிரச்னை வந்தது. நான்


பயன் படுத்திக்கொண் டிருந்த அதே புனைபெயரில் இன் னொருவரும்
எழுதிவருவது தெரிந்தது. அவர் என் னைவிடப் பல வருடங் கள் சீனியர்
என் பதால், அந்தப் பெயரையும் விட்டுக்கொடுத்துவிட்டேன் .

இதனால், தொடர்ந்து எழுதுவதற்கு வேறொரு புதிய புனைபெயரைத்


தேர்ந்தெடுக்கவேண் டிய கட்டாயம். விதவிதமாக யோசித்துக்
குழம்பிக்கொண் டிருந்தபோது, நண் பர் பா. ராகவன் ஒரு நல்ல யோசனை
சொன் னார்.

அப்போது எங் களுடைய நிறுவனத்தில் எல்லோருக்கும் மின் னஞ் சல்


முகவரி கொடுத்திருந்தார்கள் . அதில் எங் களுடைய பெயரின் முதல்
எழுத்து + தந்தை பெயரில் வரும் முதல் 7 எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

இதன் படி, ‘நாகசுப்ரமணியன் சொக்கநாதன் ’ ஆகிய எனக்கு,


‘nchokkan@baan.com’ என் கிற மின் னஞ் சல் முகவரி கொடுத்திருந்தார்கள் .
’இந்தப் பெயரே ரொம்ப நல்லா இருக்கு, இனிமே இதிலயே தொடர்ந்து
எழுது’ என் று சொல்லிவிட்டார் பா. ரா.

ஆரம்பத்தில் நான் கொஞ் சம் தயங் கினேன் , ‘சொக்கன் -னா ரொம்பப்


பழைய பெயரா, சுத்தக் கர்நாடகமா இருக்கே சார்’ என் றேன் .

பாராவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘தடியா, இந்தப் பேருக்கு என் ன


குறைச்சல்? பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ் சுங் கற பேர்லயெல்லாம்
எழுதினவங் க ஜெயிக்கலியா?’ என் று அதட்டினார், ‘இனிமே இதுதான் உன்
பெயர், இதில எந்த மாற்றமும் இல்லை’

அரை மனதாகதான் அந்தப் பெயரை ஏற்றுக்கொண் டேன் . அதன் பிறகு


கொஞ் சம் கொஞ் சமாகப் பழகிவிட்டது.

இன் றைக்கு, அலுவலகத்திலும் சரி, வெளியில் நண் பர்கள் வட்டாரத்திலும்


சரி, என் னுடைய நிஜப்பெயரைவிட இந்தப் பெயர்தான் அதிகப் பேருக்குத்
தெரிந்திருக்கிறது எனும்போது, பிடிக்காமல் போகுமா?

2) கடைசியா அழுதது எப்போது?

1998 ஆகஸ் ட் 25ம் தேதி, என் னையும் என் சகோதரனையும் வளர்த்த அத்தை
திருமதி ராஜேஸ் வரி மரணமடைந்தபோது.

3) உங் களுக்கு உங் க கையெழுத்து பிடிக்குமா?

ம்ஹும், சான் ஸே இல்லை. என் கையெழுத்து கோழிக் கிறுக்கலைவிட


மோசமா இருக்கும்!

4) பிடித்த மதிய உணவு?

பிடிச்சதுன் னு எதுவும் கிடையாது. பெரும்பாலான நாள்களில் மதியம்


சாப்பிடுவது சப்பாத்தி, ப்ளஸ் பருப்பு.

5) நீங் க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங் களா?


ன் பி ன் றி மி
https://nchokkan.wordpress.com/2009/06/ ல் ர் ளி ம் லி ச் ன் கி ட் 18/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம் வலியச் சென் று பேசுகிற, நட்பை


வளர்த்துக்கொள் கிற நல்ல குணம் எனக்கு இல்லை. இந்தத் தயக்கம்
காரணமாகவே பல நல்ல நட்புகளை, வாய் ப்புகளை இழந்திருக்கிறேன் .

6) கடல் ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நமக்கெல்லாம் பாத்ரூம் குளியல்தாங் க சுகம்

7) ஒருவரைப் பார்க்கும் போது முதலில் எதைக் கவனிப்பீர்கள் ?

ம்ஹூம், எதையும் கவனிக்கமாட்டேன்

8) உங் க கிட்ட உங் களுக்குப் பிடிச்ச விஷயம் என் ன? பிடிக்காத விஷயம்


என் ன?

பிடித்தது: கன் னாபின் னான் னு கனவு காணறது (தூங் காமலே).


வேலையிலயும் சரி, எழுத்திலயும் சரி, இந்த குணம்தான் எனக்கு ரொம்ப
உதவியா இருக்கு

பிடிக்காதது: சோம்பேறித்தனம். ஒரு வேலையை முடிச்சதும் உடனடியா


அடுத்ததைத் தொடங் காம ஓய் வு எடுத்துக்கதானே இந்த மனசு
நினைக்குது?

9)உங் கள் துணைவர்/துணைவி கிட்டே உங் களுக்குப் பிடிச்ச/பிடிக்காத


விஷயம் ?

பிடித்தது: பொறுப்பு அதிகம், முன் பின் தெரியாத மனுஷங் களிடம்கூட


ரொம்ப அக்கறையாப் பழகுவாங் க

பிடிக்காதது: ஒண் ணு இந்த முனை, இல்லாட்டி அந்த முனை, ரெண் டுக்கும்


நடுவில ஒரு compromise இருக்கலாம்ங் கறதை அவங் க மனசு ஏத்துக்கவே
ஏத்துக்காது

10) இப்போ யார் பக்கத்துல இல் லாம போனதுக்கு வருந்துகிறீர்கள் ?

#2ல் சொன் ன அதே அத்தைதான் !

கண் தெரியாத அந்த அத்தைக்குப் பொன் னியின் செல்வன் ’ வாசிச்சுக்


காட்டினதுல தொடங் கினதுதான் என் வாசிப்புப் பழக்கம். இன் னிக்கு என்
வீட்ல ஆயிரக்கணக்கான புத்தகங் கள் இருக்கு, நானே சில புத்தகங் களும்
எழுதியிருக்கேன் , அதையெல்லாம் படிச்சுக் காட்ட அவங் கதான் இல்லை.

11) இதை எழுதும் போது என் ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள் ?

சட்டை சந்தனக் கலர்போலத் தெரியுது, அதில லேசா சாக்லெட்


ஒட்டியிருக்கு.

பேன் ட், நீலக் கலரு ஜிங் குச்சா!

12) என் ன பார்த்து/கேட்டுக்கொண் டு இருக்கிறீர்கள் ?

எழுதும்போது எதையும் கேட்கமாட்டேன் . கவனம் சிதறும்.

13) வர்ணப் பேனாவாக உங் களை மாற்றினால் , என் ன நிறப் பேனாவாக


மாற ஆசை?

நீ ம்
https://nchokkan.wordpress.com/2009/06/ 19/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

நீலம்

14) பிடித்த மணம் ?

அப்படிக் குறிப்பிட்டுச் சொல்றமாதிரி எதுவும் இல்லை.

15) நீங் கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங் களுக்குப் பிடித்த


விஷயம் ? அவரை நீங் கள் அழைக்கக் காரணம் என் ன?

மூன் று பேரை அழைக்க விரும்புகிறேன் :

ச. ந. கண் ணன் (’கிழக்கு’ கேங் கில் எல்லோரும் என் நெருங் கிய


நண் பர்கள்தான் . யாரேனும் ஒருவரைமட்டும் இங் கே அழைக்கலாமே
என் று Random-ஆக ச. ந. கண் ணனைத் தேர்ந்தெடுத்தேன் )
’என் றும் அன் புடன் ’ பாலா (GCTயில் என் சீனியர், ட்விட்டரில்
அறிமுகமானார், தன் னுடைய இணைய எழுத்தை மிக சீரியஸாக
எடுத்துக்கொள்ளக்கூடிய தீவிர வலைப்பதிவர்)
ஸ் ரீதர் நாராயண் (இவரும் ட்விட்டரில் அறிமுகமான நண் பர்தான் .
ஆர்வமாகப் பல விஷயங் களை முயன் று பார்க்கும் ஆல் ரவுண் டர்,
இவருக்கும் எனக்கும் எத்தனை விஷயங் களில் ஒத்துப்போகிறது என் று
கணக்குப் போட்டால் இந்த வலைப்பதிவு போதாது)
இவர்கள் மூவரைத்தவிர, பா. ராகவனையும் அழைக்கவேண் டும் என் று
விருப்பம்தான் . ஆனால் அவர் ஏற்றுக்கொண் டு எழுதுவாரா, அல்லது
‘சுத்த சின் னப்பிள்ளைத்தனமா இருக்கே’ என் று திட்டுவாரா எனத்
தெரியவில்லை, ஆகவே, இதனை ‘ஓப்பன் டிக்கெட்’டாகவே
வைத்துக்கொள் கிறேன்

16)உங் களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங் களுக்குப்


பிடித்த பதிவு?

ஏகப்பட்ட சஸ் பென் ஸ் வைத்து அவர் எழுதும் சமீபத்திய (சுயசரிதைப்)


பதிவுகள் எல்லாமே நன் றாக இருக்கின் றன. வலைப்பதிவுக்கு வெளியே
அவர் எழுதியதில் எனக்கு ரொம்பப் பிடித்தது, ‘ஏடாகூடக் கதைகள் ’ என் கிற
தொகுப்பு – இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் கதைகளுமே
ஏதோ ஒருவிதத்தில் நம் புருவத்தை உயர்த்தக்கூடியவை, மிகப்
புதுமையான முயற்சிகள் !

17) பிடித்த விளையாட்டு?

பார்க்கப் பிடித்தது, கிரிக்கெட். ஆடப் பிடித்தது, கம்ப்யூட்டரில் சாலிடெர்

18) கண் ணாடி அணிபவரா?

இல்லை

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும் ?

திரைப்படங் கள் அதிகம் பார்ப்பதில்லை

20) கடைசியாகப் பார்த்த படம் ?

அபியும் நானும்

21) பிடித்த பருவ காலம் எது?

வி ர் ங்
https://nchokkan.wordpress.com/2009/06/ ம் க் ம் வி கி
க் 20/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

வியர்வை பொங் கும் கொடுமையான கோடைக் காலம்தவிர பாக்கி


எல்லாம் பிடிக்கும்

22) என் ன புத்தகம் படித்துக்கொண் டு இருக்கிறீர்கள் ?

’சாவி’ எழுதிய ‘பழைய கணக்கு’, ஜெஃப்ரே ஆர்ச்சரின் ‘Not A Penny More, Not A
Penny Less’ மற்றும் விகாஸ் ஸ் வரூப்பின் ‘Six Suspects’

23) உங் கள் டெஸ் க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு


ஒருமுறை மாற்றுவீர்கள் ?

மாற்றுவதில்லை

24) பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம் ?

அப்படி எதுவும் சொல்லத் தோன் றவில்லை

25) வீட்டை விட்டு நீங் கள் சென் ற அதிக தொலைவு?

இந்தியாவுக்குள் , டெல்லி. இந்தியாவுக்கு வெளியே, டோக்கியோ

26) உங் களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியலியேப்பா … (’நாயகன் ’ கமலஹாசன் குரலில் படிக்கவும்)

27) உங் களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் ?

நம் சுயநலத்துக்காக விதிமுறைகளை மீறுவது

28) உங் களுக்கு உள் ளே இருக்கும் சாத்தான் ?

கோபம், பொறுமையின் மை

29) உங் களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம் ?

பாரிஸ் (காரணம் கேட்காதீங் க, தெரியாது!) 

30) எப்படி இருக்கணும் னு ஆசை?

இன் னும் கொஞ் சம் சுறுசுறுப்பா

31) கணவர்/மனைவி இல் லாமல் செய் ய விரும் பும் காரியம் ?

டயட்டை ஏமாற்றி நொறுக்குத் தீனி மொசுக்குவது

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல் லுங் க

24 * 7

***

என் . சொக்கன் …

08 06 2009

https://nchokkan.wordpress.com/2009/06/ 21/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்

இன் னொரு மீன்

Posted by: என் . சொக்கன் on: June 5, 2009

In: (Auto)Biography | Bangalore | Change | Characters | Differing Angles | Follow Up |


Magazines | Memories | Short Story | Uncategorized | Walk
7 Comments

’ஒற்றை மீன் ’ பதிவைப்பற்றி ஒரு நண் பரிடம் ஜிடாக்-கில்


பேசிக்கொண் டிருந்தபோது, என் னுடைய பழைய சிறுகதை ஒன் றை
நினைவுபடுத்தினார்.

உண் மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில்


எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில்
கிறுக்கிவைத்தேன் . பின் னர் ஆனந்த விகடனில் சின் னஞ் சிறு கதைகள்
பிரசுரிக்கப்போகிறோம் என் று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி
எழுதி அனுப்பினேன் . உடனடியாகப் பிரசுரமானது.

அதன் பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன் . இந்த நண் பர்


அதைக் குறிப்பிட்டபின் னர்தான் ஞாபகப்படுத்திக்கொண் டு திரும்ப
எடுத்துப் படித்துப் பார்த்தேன் . அந்த எதிர்பாராத வலியை எப்படி
மறக்கமுடிந்தது என் று இன் னும் விளங் கவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து வருடங் களுக்கு முன் னால் (07 07 2004) எழுதிய அந்தக்
கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங் கே பதிவு
செய் து வைக்கிறேன் :

*****

விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை


தூரம்தான் . ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம்
செய் யவேண் டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என் று
அவனுக்குத் தோன் றியது.

இந்த ‘தினந்தோறும்’ என் கிற வார்த்தைதான் இங் கே முக்கியம் – எத்தனை


வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய் துவிடுகிற
சூட்சுமம் அதற்கு உண் டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப
பார்த்துக்கொண் டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும்
ஒரு மாற்றம் தட்டுப்படாதா என் று ஏங் கச்செய் துவிடுகிறது.

அப்படி அவன் ஏங் கிக்கொண் டிருந்தபோதுதான் , அவனுடைய பயணப்


பாதையில் ஒரு சின் ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண
மண் டபத்தின் அருகே திடுதிப்பென் று தோன் றிய புதிய கடை. அதன்
வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண் ணமயமான
விளக்குகளால் அலங் கரித்திருந்தார்கள் .

அந்தப் பிரம்மாண் டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல


வண் ண மீன் கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை
வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை
வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங் களைப்
பட்டியலிடும் அளவுக்கு விற்பன் னனாகிவிட்டான் அவன் ! சோர்ந்திருந்த
அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன் கள் .
சீ கி க் தி
த் வி
https://nchokkan.wordpress.com/2009/06/ னி ன் ன் க் ளி ல் ற் ம் 22/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன் றாட நடவடிக்கைகளில் மாற்றம்
தெரிந்தது – மீன் களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண் டும் என் பதற்காக,
வழக்கமான நேரத்துக்குமுன் பாகவே கிளம்பத்துவங் கினான் அவன் .
செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன் று சுழன் று
திரும்பும் அந்த மீன் களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் –
அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன் னை ஒரு சின் னக் குழந்தையாக
உணர்ந்தான் விஜயராகவன் .

ஒன் றிரண் டு வாரங் களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென் று


அவனுக்கு ஓர் ஆசை தோன் றியது – யாரோ வளர்க்கும் மீனைப்
பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என் றால், நாமே ஒரு சில மீன் களை
வாங் கி வளர்த்தால் என் ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய
நோய் வருகிற வாய் ப்புகள் குறையும் என் று எங் கோ படித்ததை
நினைத்துக்கொண் டான் அவன் .

ஆனால், மீனை எங் கே வாங் குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத்


தெரியவில்லை.

‘அதனால் என் ன? வாசல்முழுக்க மீன் களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக்


கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என் று சொல்லிக்கொண் டான் அவன் .

அன் று மாலையே, தனது செல்ல மீன் களை ஆசையாகப் பார்வையிட்டபடி


அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன் .

உள் ளே புகுந்ததும், குப்பென் று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத்


தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண் டபடி உள் ளே நடந்தான் .

அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின் னால் ஒரு


மீசைக்காரன் அமர்ந்திருந்தான் . புதியவர்களிடம் சகஜமாகப் பேசும்
பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங் கி, ‘மீன் வேணும்’, என் றான்
திணறலாக.

‘எந்த மீன் வேணும் சார்? எவ் ளோ கிலோ?’, என் றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு
மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன் .

***

என் . சொக்கன் …

05 06 2009

ஒற்றை மீன்

Posted by: என் . சொக்கன் on: June 3, 2009

In: (Auto)Biography | Bangalore | Characters | Confidence | Crisis Management | Learning | Life


| Pulambal | Uncategorized
15 Comments

போன வாரத்தில் ஒருநாள் , ராத்திரி ஒன் பதரை மணி. வீட்டில் எல்லோரும்


ஒன் றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண் டிருந்தோம். எங் களுடைய பேச்சுச்
சத்தத்தைக் கண் டிப்பதுபோல் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

ன் வி ட்
https://nchokkan.wordpress.com/2009/06/ ர் ந் கி
க் ல் நிமி ர் ந் ர் த் ர் ப் 23/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
என் மனைவி உட்கார்ந்தவாக்கில் நிமிர்ந்து பார்த்தார், அழைப்பு
மணியோடு இணைந்த கறுப்பு வெள்ளைக் குட்டித் திரையில் மசங் கலாக
ஏதோ ஓர் உருவம் தெரிந்தது.

அரை விநாடியில், வந்திருப்பது யார் என் று அவருக்குப் புரிந்துவிட்டது,


‘ஹையா, மீன் வருது’ என் றபடி துள்ளி எழுந்தார்.

எனக்கு ஆச்சர்யம். மீன் தண் ணீரில் வாழும் பிராணியாச்சே, அது எப்படி


எங் கள் வீட்டு வாசலில் நிற்கமுடியும்? அப்படியே வந்து நின் றாலும்,
அழைப்பு மணியை அழுத்துவதற்கு மீனுக்குக் கை உண் டா? விரல் உண் டா?

என் னுடைய கிறுக்குத்தனமான கற்பனைகள் தறிகெட்டு ஓடுவதற்குள் என்


மனைவி கதவைத் திறந்துவிட்டார். உள் ளே நுழைந்தது மீன் அல்ல, மேல்
மாடியில் குடியிருக்கிற மிஸ் . மனோகரி.

மன் னிக்கவும், அவர் ‘மிஸ் ’ அல்ல, ஒரு மாதம் முன் புதான் அவருக்குத்
திருமணமாகிவிட்டது, ‘மிஸஸ் . மனோகரி’ என் று திருத்தி வாசிக்கவும்.

மிஸஸ் மனோகரி கையில் ஒரு கண் ணாடிப் பாத்திரம். அதற்குள் ஒரு


குட்டித் தங் க மீன் பரபரப்பாகச் சுற்றிக்கொண் டிருந்தது.

’வாங் க, வாங் க’ என் று மனோகரியை வரவேற்றபடி அவர் கையிலிருந்த


தொட்டிக்குள் எட்டிப் பார்த்தார் என் மனைவி, ’ஒரு மீன் தானா?’

’ஆமா, இன் னொண் ணு இன் னிக்குதான் செத்துப்போச்சு’ என் றவர்


முகத்தில் துளியும் வருத்தம் இல்லை, ‘இதை நான் எங் கே வைக்கட்டும்?’

தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே இருந்த வெற்றிடத்தைக்


காண் பித்தார் என் மனைவி, ‘இங் கே வெச்சுடுங் க, நாங் க பார்த்துக்கறோம்’

எனக்கு இங் கே என் ன நடக்கிறது என் றே புரியவில்லை. எதற்காக


மனோகரியின் மீன் எங் கள் வீட்டுக்கு இடம்பெயர்கிறது?

நல்லவேளையாக, மனோகரியே என் னுடைய குழப்பத்தைத்


தெளிவித்துவிட்டார், ‘நாங் க ஒரு வாரம் ஊருக்குப் போறோம்,
அதுவரைக்கும் எங் க மீனைக் கொஞ் சம் பார்த்துக்கமுடியுமா?’

மீனைத் தொட்டியோடு கொண் டுவந்து நடு ஹாலில் வைத்துவிட்டு இப்படி


அனுமதி கேட்டால் என் ன பதில் சொல்வது? எச்சில் கையோடு
ராஜேந்திரகுமார் பாணியில் ‘ஙே’ என் று விழித்தேன் .

’ஏற்கெனவே உங் க வொய் ஃப்கிட்டே பேசிட்டேன் , அவங் க ஓகேன் னு


சொல்லிட்டாங் க, இருந்தாலும் உங் ககிட்ட ஒரு வார்த்தை
கேட்டுடலாமேன் னுதான் …’ என் று இழுத்தார் அவர்.

அப்புறமென் ன அம்மணி? மேலிடத்திடம் அனுமதி வாங் கியாகிவிட்டது,


இப்போது நான் தலையசைப்பதா முக்கியம்? தவிர, ஒற்றை மீன்
பிரச்னைக்காக ஒரு ஜோடியின் ஹனி மூனைக் கெடுத்தவன் என் கிற
பாவம் எனக்கு வேண் டாம். நீங் கள் சந்தோஷமாகப் போய் வாருங் கள் .

அன் று இரவே, மனோகரி தம்பதியர் புறப்பட்டுச் சென் றார்கள் . அடுத்த ஒரு


வாரம், அந்த மீன் எங் களுடைய பொறுப்பாகிவிட்டது.

ங் ள் வீ
https://nchokkan.wordpress.com/2009/06/ ட் ல் ய் ழி மீ ன் ம் 24/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
இதுவரை, நாங் கள் வீட்டில் நாய் , பூனை, கோழி, ஆடு, மாடு, மீன் எதுவும்
வளர்த்தது கிடையாது. ஆகவே, திடுதிப்பென் று எங் கள் வீட்டுக்கு நடுவே
ஒரு மீன் சுற்றிவருவது கொஞ் சம் விநோதமாக இருந்தது.

முதலாவதாக, அந்த மீனை எங் கள் இளைய மகள் பிடியிலிருந்து


காப்பாற்றவேண் டும். அவள் மட்டும் அந்தத் தொட்டியை எட்டிப்
பிடித்துவிட்டாள் என் றால், அவ் வளவுதான் . கொஞ் சமும் தயங் காமல்
உள் ளே கை விட்டு மீனைக் கையில் எடுத்துப் பிதுக்கிவிடுவாள் , பாவம்!

நல்லவேளையாக, எங் களுடைய தொலைக்காட்சி மேஜை கொஞ் சம்


பெரியது. அதன் இன் னொரு முனையில் சுவர் ஓரமாக மீனை நகர்த்தி
வைத்துவிட்டால் போதும், எல்லோரும் மீனைப் பார்க்கலாம், அத்தனை
சுலபத்தில் தொட்டுவிடமுடியாது, ஓரளவு பத்திரம்.

அடுத்தபடியாக, மீனுக்குச் சாப்பாடு போடும் பொறுப்பு.

மீன் என் ன தலை வாழை விரித்து விருந்துச் சாப்பாடா கேட்கப்போகிறது?


கலர் கலராகக் கொஞ் சம் பெரிய சைஸ் கடுகு, அல்லது சின் ன சைஸ்
மிளகுபோல் சில உருண் டைகள் , அதில் தினத்துக்கு ஒன் றாகத் தண் ணீரில்
போட்டால் மீனே தேடி வந்து சாப்பிட்டு ஏப்பம் விடுமாம்.

மனிதர்களுக்கும் இப்படி ஒரு மாத்திரை இருந்தால் நன் றாக இருக்கும்


என் று என் மனைவி கருத்துத் தெரிவித்தார். தினமும் சமைக்கிற, பாத்திரம்
கழுவுகிற தொல்லையே இருக்காதாம்.

நியாயம்தான் . ஆனால், என் னதான் ஒற்றை மாத்திரையில் வயிறு


நிரம்பினாலும், மனித நாக்குக்கு அது திருப்தியாக இருக்குமா?
எனக்கென் னவோ சந்தேகமாகவே இருக்கிறது.

நல்லவேளை, மீனுக்கு அறுசுவை உணவெல்லாம் பழக்கமில்லைபோல,


அந்தக் கடுகு சைஸ் உருண் டையைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச்
சுற்றிவந்துகொண் டிருந்தது.

வழக்கமாக எங் கள் வீட்டுக்கு வரும் குட்டிக் குட்டி


பொம்மைகளுக்குக்கூடப் பெயர் சூட்டிவிடுகிற நங் கை, இந்த
மீனைமட்டும் ஏனோ பெயரிடாமலே கொஞ் சத் தொடங் கிவிட்டாள் . காலை
எழுந்தவுடன் மீனுக்குச் சாப்பாடு போடும் வேலையை அவளே
ஏற்றுக்கொண் டுவிட்டதால் எங் களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது.

சாப்பாடு போடும்போதுமட்டுமில்லை, கால் மணி நேரத்துக்கு ஒருமுறை


மீன் குடுவை அருகே ஓடி வந்து அது என் ன செய் கிறது என் பதை வேடிக்கை
பார்ப்பது அவளுடைய பிரியமான பொழுதுபோக்காக மாறிவிட்டது,
‘இத்தனை பெரிய மீனுக்கு இந்தக் கொஞ் சூண் டு சாப்பாடு போதுமா?’, ‘மீன்
ஏன் அடிக்கடி வாயைத் திறந்து மூடுது?’, ‘ஏன் நேரா நீந்தாம சுத்திச் சுத்தி
வருது?’, ‘இந்த மீன் ஏன் தங் கக் கலர்ல இருக்கு? யார் அதுக்குப் பெயின் ட்
அடிச்சாங் க?’ என் றெல்லாம் மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்க
ஆரம்பித்தாள் .

எங் களுக்கும் அந்த மீன் ஒரு விநோதமான, உயிருள்ள விளையாட்டு


பொம்மையாகத் தோன் றியது. முக்கியமாக, வெவ் வேறு கோணங் களில்
பார்க்கிறபோது அந்த மீன் பெரியதாகவும் சின் னதாகவும் மாறி மாறித்
தெரிவதை ஆச்சர்யத்துடன் ரசித்தேன் .

ல் ண் ள்
https://nchokkan.wordpress.com/2009/06/ ந் ப் பி ச் ம் ல் ன் ள் மீ னி 25/28
ன்
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
முதல் இரண் டு நாள் எந்தப் பிரச்னையும் இல்லை, மூன் றாவது நாள் , மீனின்
வேகம் லேசாகக் குறைவதுபோல் தோன் றியது. சும்மா மனப் பிரம்மை
என் று நினைத்துச் சமாதானப்படுத்திக்கொண் டேன் .

நான் காவது நாள் , கண் ணாடிக் குடுவையில் இருக்கும் நீர் ரொம்பக்


கலங் கலாக மாறியிருந்தது. தண் ணீரை மாற்றவேண் டும்.

அதற்காகவே, ஒரு குட்டி வலை கொடுத்திருந்தார்கள் . ஒரு பக்கெட்டில்


தண் ணீர் நிரப்பி, மீனை வலையில் பிடித்து அதற்குள் போட்டோம். பிறகு
கண் ணாடிப் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தமான தண் ணீர் நிரப்பினோம்.

நாங் கள் இந்த வேலையில் ‘பிஸி’யாக இருந்தபோது, எங் களுடைய இளைய


மகள் அந்த பக்கெட்டைக் கவனித்துவிட்டாள் , நேராக ஓடி வந்து
தண் ணீருக்குள் கை விட்டு மீனைப் பிடிக்க முயன் றாள் .

நல்ல வேளை, கடைசி நிமிடத்தில் நான் சுதாரித்துக்கொண் டு அவளைத்


தூக்கிவிட்டேன் . இல்லாவிட்டால் அந்தத் தங் க மீனின் கதி அவ் வளவுதான் .

ஒருவழியாக, பாத்திரம், தண் ணீர் சுத்தமாகிவிட்டது, மீன் மீண் டும் பழைய


குடுவைக்குள் சென் று சுற்றிவர ஆரம்பித்தது.

திடீரென் று என் மனைவிக்கு ஒரு சந்தேகம், ‘இந்தத் தண் ணியில உப்புப்


போடணுமா?’

‘உப்பா? அது எதுக்கு?’

‘கடல்ல மீனெல்லாம் உப்புத் தண் ணியிலதானே உயிர் வாழும்?’

’யம்மாடி, இதெல்லாம் வீட்ல வளர்க்கறதுக்காகவே உருவாக்கப்பட்ட Factory


மீன் , இதெல்லாம் எப்பவும் கடலைப் பார்த்திருக்காது, இதுக்கு உப்புத்
தண் ணியெல்லாம் தேவையில்லை’

இப்படிப் பெரிய மேதைமாதிரி பதில் சொல்லிவிட்டேனேதவிர, எனக்குக்


கொஞ் சம் சந்தேகமாகவே இருந்தது. அப்புறமாக இணையத்தில் தேடிப்
பார்க்கவேண் டும் என் று நினைத்துக்கொண் டேன் .

பளபளா பாத்திரத்தில் மீன் உற்சாகமாகச் சுற்றிவந்தது. டிவியில் ஏதாவது


குத்துப் பாட்டு போட்டால் ஸ் பீக்கர் அதிர்வை உணர்ந்து முன் பைவிட
அதிவேகமாகச் சுற்றியது, நங் கை பழையபடி நாள்முழுக்க அதையே
வேடிக்கை பார்த்துக்கொண் டும் செல்லம் கொஞ் சிக்கொண் டும்
நேரத்தைச் செலவிட்டாள் .

ஆனால், தண் ணீர் மாற்றியபிறகு, மீனின் நீச்சல் வேகம் இன் னும்


குறைந்துவிட்டதுபோல் தோன் றியது. பல சந்தர்ப்பங் களில் நீந்தாமல்
சும்மா அப்படியே still ஆக நின் றுகொண் டு பயமுறுத்தியது.

அப்போதெல்லாம், மீன் உண் மையாகவே உயிரோடு இருக்கிறதா என் று


தெரிந்துகொள்வதற்காக பாத்திரத்தின் ஓரத்தில் தட்ட ஆரம்பித்தோம்.
எங் கள் சத்தம் கேட்டதும் அது விழித்துக்கொண் டு லேசாக துடுப்பை
அசைக்கும், எங் களுக்கு நிம்மதி.

‘ஏன் இப்படி சோர்ந்துபோய் க் கிடக்கு?’

‘தெரியலையே, நம்ம வீட்டுக்கு வந்த நேரம், நம்மோட சோம்பேறிக்குணம்


அதுக்கும் தொத்திகிச்சோ?’
ளி கி ண்
https://nchokkan.wordpress.com/2009/06/ த் ம் ள் க் ள் ஞ் ம் ன் 26/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
வெளியே கிண் டலடித்தாலும், உள்ளுக்குள் கொஞ் சம் பயமாகதான்
இருந்தது. அவர்கள் நம்பிக் கொடுத்த மீனை நாம் சரியாகப்
பராமரிக்கவில்லையோ என் கிற பதற்றம்.

ஆனால், நாங் கள் என் ன செய் திருக்கமுடியும்? தினமும் ஓர் உருண் டை


சாப்பாடு போடச் சொன் னார்கள் , போட்டோம். தண் ணீர் கலங் கினால்
மாற்றச் சொன் னார்கள் , மாற்றினோம், அதற்குமேல் அதற்கு என் ன
பிரச்னை என் று diagnose / debug செய் ய எங் களுக்குத் தெரியவில்லையே.

மீனுக்கெல்லாம் வியாதி வருமா? அதைப் பரிசோதித்து மருந்து கொடுக்கக்


கால்நடை(?) மருத்துவர்கள் இருப்பார்களா? சாப்பாடே கடுகு சைஸ்
என் றால், அந்த மருந்து என் ன சைஸ் இருக்கும்?

சென் ற ஞாயிற்றுக்கிழமை தொடங் கி, கொஞ் சம் கொஞ் சமாக அந்த


அழகிய தங் க மீன் துவண் டுபோய் க்கொண் டிருந்தது. நாங் கள்
செய் வதறியாது விழித்துக்கொண் டிருந்தோம்.

திங் கள் கிழமை நங் கை போட்ட சாப்பாட்டைக்கூட அது


ஏற்றுக்கொள்ளவில்லை, கடுகு உருண் டை அப்படியே தண் ணீரின் மேல்
மிதந்துகொண் டிருந்தது, உள் ளே மீனும் அதற்கு இணையாக
உயிரற்றதுபோல் கிடந்தது, எப்போதாவது துடுப்புகள் லேசாக அசைந்தன,
மற்றபடி நீச்சலெல்லாம் அதிகம் இல்லை.

’பாவம்ப்பா, மீனுக்கு என் னவோ ஆயிடுச்சு’ என் று புலம்பத் தொடங் கினாள்


நங் கை. ‘நீ ஒண் ணும் கவலைப்படாதேம்மா, எல்லாம் சரியாயிடும்’ என் று
அவளுக்குப் பொய் ஆறுதல் சொன் னபடி நாங் கள் மனோகரி குடும்பத்தார்
திரும்பி வரும் நாளை எதிர்நோக்க ஆரம்பித்தோம்.

அவர்கள் கிளம்பியபோது, ‘எப்போது திரும்பி வருவீர்கள் ’ என் று


கேட்டுக்கொள்ளத் தோன் றவில்லை. தவிர, ஹனி மூன்
கிளம்புகிறவர்களிடம் அப்படிக் கேட்பதும் நாகரிகமாக இருக்காது.

ஆனால் இப்போது, அவர்கள் இன் றைக்கே திரும்பி வந்துவிட்டால்


பரவாயில்லை என் று நாங் கள் தவிக்க ஆரம்பித்தோம். எப்படியாவது
மீனை அவர்களிடம் உயிரோடு ஒப்படைத்துவிடவேண் டும். அதன் பிறகு,
அது அவர்களுடைய பிரச்னையாகிவிடும், எப்படியோ வைத்தியம்
பார்த்துக் காப்பாற்றிக்கொள்ளட்டும்.

அதுமட்டுமில்லை. ஒருவேளை இந்த மீன் உயிரை விட்டுவிட்டால்,


இத்தனை நாள் நாங் கள் அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண் டோம்
என் பதற்கு என் ன அத்தாட்சி? நாங் கள் அலட்சியமாக இருந்து அதைக்
கொன் றுவிட்டோம் என் றுதானே மனோகரி நினைப்பார்? எங் கள் மேல்
எந்தத் தவறும் இல்லை, we tried our best என் பதை அவருக்கு எப்படி
நிரூபிப்பது?

நேற்று மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கழுத்துப் பட்டையைக்


கழற்றும்போதே, டிவி அருகில் என் னவோ உறுத்துவதுபோல் உணர்ந்தேன் .
நெருங் கிப் பார்த்தபோது, அந்த ஒற்றை மீன் செத்துப்போய்
மிதந்துகொண் டிருந்தது.

இந்த ஒரு வாரம், பத்து நாளில் அந்த மீனுடன் எங் களுக்கு


உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாகவெல்லாம்
ஜல்லியடிக்கமாட்டேன் . ஆனால், நம் கண் ணெதிரே ஓடி

வி க்
https://nchokkan.wordpress.com/2009/06/ ண் ந் ர் யி ர் ப் க் ட் ல் த் 27/28
10/27/21, 10:42 PM June | 2009 | மனம் போன போக்கில்
விளையாடிக்கொண் டிருந்த ஓர் உயிர் இப்படி மரக்கட்டைபோல் செத்து
மிதக்கும்போது, மிகவும் மன வருத்தமாக இருந்தது.

இன் று காலை, மனோகரி திரும்பி வந்திருக்கிறார். மாலை மீனை வாங் க


வருகிறவர் கையில் வெறும் தொட்டியை எப்படிக் கொடுப்பது? வேறொரு
தங் க மீனை விலைக்கு வாங் கிப் போட்டுக் கொடுத்துவிடலாமா? அவர்
அடையாளம் கண் டுபிடித்துவிடுவாரா? உண் மை தெரிந்து எங் களைக்
கோபிப்பாரா? கோர்ட்டுக்குப் போவாரா? பெங் களூரில் எது நடந்தாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை!

வழக்கம்போல், இந்தப் பிரச்னையை என் மனைவி தலையில் சுமத்திவிட்டு,


நான் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண் டுவிட்டேன் . மாலை நான்
வீடு திரும்புவதற்குள் மீன் தொட்டி காணாமல் போயிருந்தால் நிம்மதி!

ஆனால் ஒன் று, எங் கள் அடுக்ககத்தில் இன் னொரு ஹனி மூன் தம்பதியின்
மீனுக்கோ, மானுக்கோ தாற்காலிகப் புகலிடம் ஒன் று தேவைப்பட்டால்,
நிச்சயமாக எங் கள் வீட்டுக் கதவைத் தட்டமாட்டார்கள் . அதற்காக
சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என் றுதான் தெரியவில்லை.

***

என் . சொக்கன் …

03 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங் கே க்ளிக் செய் து ’ஓ’(ட்டு) போடுங் க

https://nchokkan.wordpress.com/2009/06/ 28/28

You might also like