Professional Documents
Culture Documents
Acharyas
Acharyas
« ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம்
-ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —
ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம்
-ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் –
ஸ்ரீ எம்பெருமான்கள் ஆச்சார்யர்கள் சிஷ்யர்கள் பிரகாசிப்பித்த பிரபாவங்கள்– »
ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம்
-ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம்
–/ஸ்ரீ முதலிகள் திரு நாமங்கள் –
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –
——————————————————————————-
ஸ்ரீ திருநாராயண புரத்தில் நின்றும் ஸ்ரீ கோயில் ஏற பயண கதியில் எழுந்து அருளிப்
புகுந்து திரு முகத்துறையிலே நீராடி
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரராய் எழுந்து அருள அங்கு உள்ளார் எல்லாம் எதிர் கொண்டு
சேவிக்க அவர்களையும் கிருபை பண்ணி
எழுந்து அருளிப் புகுந்து சேவா க்ரமம் தப்பாமல் சேவித்து ஸ்ரீ அழகிய மணவாளன் திரு
மண்டபத்தில் சென்று தண்டன் சமர்ப்பித்து
உரை கோயிலின் உள்ளே புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளையும் ஸ்ரீ நம்பெருமாளையும் திருவடி
தொழுது மனம் உருகி மலர்க்கண்கள்
துளிக்கக் கண்ணாலே பருகி வாயார வாழ்த்தி நிற்க
ஸ்ரீ பெருமாளும் திருப்பவளச் செவ்வாய் திறந்து ஸ்ரீ உடையவரை நோக்கி நெடு நாள்
தேசாந்தரம் சென்று போர மெலிந்தீரே என்று வினவி அருள –
ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ பெரிய பெருமாளைக் குறித்து -அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி தேவரீர் பள்ளி கொண்டு
அருளுகையாலே வன்பெரு வானகத்தில் சொல்லும்படியே உபய விபூதியில் உள்ளார்க்கும் என்ன கிலேசம் உண்டு
-என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் உகந்து தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் தளிகை பிரசாதங்களும்
பிரசாதிக்க ஸ்வீ கரித்து க்ருதார்த்தராய் நிற்க
ஸ்ரீ பெருமாளும் திரு மடமே போம் என்று விடை கொடுத்து அருள இவரும் புறப்பட்டு திவ்ய
உத்சவம் கொண்டாடும்
திரு மண்டபங்கள் திருக் கோபுரங்கள் திரு மதிள்கள் தொடக்கமான திவ்ய நகர ஸ்ரீ யை எல்லாம்
சுற்றி சேவித்து
முதலிகளும் தாமுமாக ஸ்ரீ ஆழ்வான் திருமாளிகை ஏற எழுந்து அருள ஸ்ரீ ஆழ்வானும் எதிரே
எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விழுந்து சேவித்து உகப்பின் மிகுதியால் திருவடிகளை பூண்டு கொண்டு கிடக்க
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு கிலேச அதிசயேநே சோக
அஸ்ருவானது தாரா வர்ஷகமாக வர்ஷிக்க
நெடும் போது ஒரு வார்த்தையும் அருளிச் செய்ய மாட்டாதே விம்மல் பொருமலாய் துக்க ஆர்ணவ
மக்நராய் தழுதழுத்த திரு மிடற்று ஒலியுடன்
ஸ்ரீ ஆழ்வான் இத்தர்சனத்துக்காக த்ருஷ்ட்டி பூதரான உமக்கு இப்படி கண் போவதே என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாமம் கோணிற்று என்றாகிலும் நினைத்திரேனோ என்று
விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் அது உமக்கு உண்டோ -அடியேன் துஷ்கர்மம் அன்றோ உமக்கு இப்படி வருகைக்கு
அடி என்று திரு உள்ளம் புண்பட்டு
துக்க உபநோதனம் பண்ணி அருள ஸ்ரீ ஆழ்வானும் தேறி நிற்க
மற்றும் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துடன் கூட திரு மடமே எழுந்து அருளி இருந்தார் –
பின்பு அந்நாட்டில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்து ஏறச்
சென்று தண்டன் சமர்ப்பித்து –
ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளினாரே-ஸ்ரீ ஆழ்வானுக்கும் திருக் கண்
மலர் போயிற்றே என்று துக்க உபநோதநம் பண்ணி –
தேவரீரை யாகிலும் சேவிக்கப் பெற்றோமே என்று சொல்லி எல்லாரும் ப்ரீதரராய் இருக்கும்
காலத்திலே
ஸ்ரீ திருச் சித்ர கூடம் அழிந்தது என்று சிலர் வந்து ஸ்ரீ உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அது கேட்டு துக்க ஆகுலராய் சோகித்து திரு முத்து உதிர்த்து அருளி -அங்குத்தையில் உத்சவ
பேரம் திருப்பதிக்கு
எழுந்து அருளினார் என்று கேட்டு அருளி அந்த இழவு எல்லாம் ஆறும்படி திருப்பதிக்கு
எழுந்து அருளி
ஸ்ரீ கோவிந்த ராஜனை மூல பேர ஸஹிதமாக திரு பிரதிஷ்டையும் பண்ணி வைத்து –
தென் தில்லைத் திருச் சித்ர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து என் வித்தகனை
-என்றதுவே
பொய்ம் மொழி ஓன்று இல்லாத மெய்ம் மொழியாக இப்படிப் பலிப்பதே -என்று அருளிச் செய்து
இழவு தீர்ந்து அருளி
திருமலை ஏறி திருவேங்கட மா முகிலையும் திருவடி தொழுது அப்போதே மீண்டு திருமலை இறங்கித்
திருத் தாழ்வரையிலே
ஆழ்வார்களையும் சேவித்துப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளிப் பேர்
அருளாளரையும் திருவடி தொழுது மீண்டு
பயண கதியில் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளிப் புகுந்து ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து தம்
திருமடம் எழுந்து அருளி
ஸ்வ அபிமான அந்தர்பூதர்க்குத் தென்றலும் சிறு துளியும் போலே தர்சன தாத்பர்யம் அருளிச் செய்யா நின்று
கொண்டு
ஸூகமே எழுந்து அருளி இருந்தார் –
அதின் மற்றை நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வானை அழைத்து -ஸ்ரீ பேர் அருளாளர்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதராய் இருப்பர் –
நீர் அவரை கண் தந்து அருள வேணும் -என்று ஒரு ஸ்தோத்ரம் விண்ணப்பம் செய்யும் என்று
அருளிச் செய்ய —
ஸ்ரீ ஆழ்வானும் அடியேனுக்கு இக்கண் வேண்டா -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானாரும் அப்படி அன்று -சொல்ல வேணும் -என்று பல நாளும் நிர்பந்தித்து
அருளிச் செய்து அருள –
ஸ்ரீ ஆழ்வானும் கண் அழியாமல் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை அருளிச் செய்ய உபக்ரமித்து –
ஸ்வஸ்தி ஹஸ்திகிரி மஸ்த சேகரஸ் சந்தநோது மயி சந்ததம் ஹரி -நிஸ் சாமாப்யதிகம்
அப்யதத்தயன் தேவம்
ஒவ்பநிஷதீ ஸரஸ்வதீ -என்று சொல்லி
நீல மேக நிபஞ்சந புஞ்சஸ்யாம குந்தலம் அனந்த சயந்த்வாம்–அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம்
நேத்ர ஸாத் குரு கரீச ஸதாமே-என்ற
இஸ் ஸ்லோகத்தாலே சதா தர்சனம் பண்ண யோக்கியமான அப்ராக்ருத திவ்ய நேத்ரம் அடியேனுக்கு
தந்து அருள வேணும் -என்று
விஞ்ஞாபிக்க -அன்று இரவே ஸ்ரீ பேர் அருளாளரும் தந்தோம் என்று ஸ்வப்ன முகேன அருளிச்
செய்ய
ஸ்ரீ ஆழ்வானும் பிரத்யூஷ காலத்திலே பெரிய ப்ரீதியோடே எழுந்து அருளி இருந்து அனுஷ்டானத்தைச் செய்து
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை நிறைவேற அருளிச் செய்து -ஸ்ரீ உடையவர் சந்நிதிக்குச் சென்று
தண்டன் இட்டு –
தேவரீர் நியமனப்படி ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்தேன் என்று ஸ்ரீ வரதராஜ
ஸ்தவத்தை முற்றவும்
விண்ணப்பம் செய்து காட்ட -ஸ்ரீ உடையவரும் கேட்டு உகந்து அருளின அளவிலே ஸ்ரீ ஆழ்வானும்
–
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் ஸ்ரீ பேர் அருளாளன் ஆகையால் அடியேன்
கேட்டபடியே
ஸ்ரீ வைகுண்டேது பரே லோகே நித்யத்வேந வ்யவஸ்திதம் பஸ்யந்தி ச சதா தேவம் நேத்ரைர் ஞானேந
சாமர என்று
சொல்லப்படுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனை சதா தர்சனம் பண்ணுகிற அப்ராக்ருத திவ்ய சஷூஸ்ஸை ப்ரசாதித்து
அருளினார் என்ன –
ஸ்ரீ உடையவரும் அங்கன் அன்று அங்கு ஏறப் போவோம் வாரும் என்று ஸ்ரீ ஆழ்வானைக் கையைப்
பிடித்துக் கொண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரதராஜ
ஸ்தவத்தைப் பேர் அருளாளர் சந்நிதியில்
விண்ணப்பம் செய்து தலைக் காட்டுகிற போது ஸ்ரீ உடையவர் காலாந்தரத்திலே தாழ்க்க-ஸ்ரீ
ஸ்தவம் திருச் செவி சாத்தி
ஸ்ரீ பேர் அருளாளரும் ப்ரசன்னராய் ஸ்ரீ உடையவர் வருவதற்கு முன்னே -ஸ்ரீ ஆழ்வான் உமக்கு
அபேக்ஷிதம் என் என்று கேட்டருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவர் திரு உள்ளம் பற்றினத்தை வேண்டிக் கொள்ளாதே –
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -அப்படியே பெறக் கடவன்
என்று
ஸ்ரீ பெருமாளும் திருவாய் மலர்ந்த அளவிலே
ஸ்ரீ உடையவர் கேட்டுப் பதறி ஓடி வந்து திரு உள்ளம் உளைந்து ஸ்ரீ பெருமாளைக் குறித்து
சர்வஞ்ஞரான தேவரீர்
இப்போது என் நினைவினைத் தலைக் கட்டிற்று இலீரே –
ஸ்ரீ ஆழ்வான் நீ ஸ்வ தந்திரனாய் என் நினைவைத் தலைக் கட்டாதே அதி லங்கித்து நான்
வருவதற்கு முன்னே இப்படிச் செய்தாயே
என்று இருவரையும் வெறுத்து -இனி என் -என்று திகைத்து நிற்க-
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளும் நம்மையும் உம்மையும் காணும் இடத்து கட் கண்ணாலே காணக்
கடவர்-என்று வர பிரதானம் பண்ணி அருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பெருமாளைத் தம் கட் கண்ணாலே சேவித்துச் சாத்தின திவ்யாபரண திவ்ய
விக்ரஹ அவயாதிகளை
இவை இவை என்று குறித்துக் காட்டி அருளி ஸ்ரீ உடையவர் விக்ரஹத்தையும் சேவித்துக் காட்டி
அருள
இவரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ ஆழ்வானுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி பூர்வம் போலே வ்யாக்யானித்துக்
கொண்டு இருக்கச் செய்தே –
————————-
ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஸ்ரீ மாட பூசி ஆழ்வான்
ஸ்ரீ சேட்டலூர் சிறியாழ்வான்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ அரணபுரத்து ஆழ்வான்
ஸ்ரீ அளங்க நாட்டாழ்வான்
ஸ்ரீ நெய்யுண்டான் ஆழ்வான்
ஸ்ரீ உக்கலாழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ வேதாந்தி யாழ்வான்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ மிளகு ஆழ்வான்
ஸ்ரீ காராஞ்சி ஆழ்வான்
ஸ்ரீ ஈயுண்ணி ஆழ்வான்
ஸ்ரீ கோயில் ஆழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்
ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
ஸ்ரீ முதலியாண்டான்
ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி யாண்டான்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ சோமாசி யாண்டான்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
ஸ்ரீ ஈஸ்வர ஆண்டான்
ஸ்ரீ ஈயுண்ணி யாண்டான்
ஸ்ரீ பிள்ளை யாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ சீயராண்டான்
ஸ்ரீ எம்பார்
——————————–
———————————-
——————————–
————————————
—————————————–
——————————-
ஸ்ரீ ஸ்தானத்தாரில்
——————————-
ஸ்ரீ அம்மைமார்கள்
————————————-
ஸ்ரீ ஆளவந்தார் திருக் குமாரர் ஸ்ரீ சொட்டை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ என்னாச்சான்
திருக் குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் ஸ்ரீ புண்டரீகர்
ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி திருக் குமாரர் ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் ஸ்ரீ சுந்தரத் தோளுடையார்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளையும் ஸ்ரீ திருமலை
நம்பியும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக் குமாரர் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும்
ஸ்ரீ முதலியாண்டானும் அவர் திருக் குமாரரும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானும்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்
ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி
———————————————
சம்சேவிதஸ் சம்யமி சப்த சத்யா பீடைஸ் சதுஸ் சப்ததி பிஸ்ஸமேதை -அந்யைரநந்தைரபி விஷ்ணு
பக்தை ராஸ்தே அதி ரங்கம்
யதி ஸார்வ பவ்ம–என்கிறபடியே எழுநூறு உத்தம ஆஸ்ரமிகளாலும்-எழுபத்து நாலு ஸிம்ஹாஸனஸ்த்ரான
ஆச்சார்ய புருஷர்களாலும் –
அசங்க்யாதரான சாற்றின -சாத்தாத -முதலிகளாலும் -பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும்-முன்னூறு
கொற்றி அம்மைமார்களாலும் –
எண்ணிறந்த ராஜாக்களாலும் -இப்படி அகிலராலும் ஸேவ்யமானராய் இவ்வைஸ்வர்யத்துடனே –
ஸ்ரீ ரெங்க நாதோ ஜெயது ஸ்ரீஸ் ச வர்த்ததாம் -என்று ஸ்ரீ நம்பெருமாளை மங்களா சாசனம்
பண்ணிக் கொண்டு சேவித்து இருந்தார் –
—————————————————————————-