Professional Documents
Culture Documents
SAN Compiling DUA Hand Written
SAN Compiling DUA Hand Written
அலிஃப் லாம் மீம் அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரிய இறைவன். வேறு யாரும்
வணங்குவதற்கு தகுதியானவர் இல்லை. என்றென்றும் ஜீவித்திருக்கும் அந்த இணையற்ற
அல்லாஹ் வின் முன் அனைத்து முகங்களும் கவிழ்ந்து விடும்.
எங்கள் இரட்சகனே - எங்களை மன்னித்து விடு, எங்கள் பாவ மன்னிப்பை ஏற்று கொள்வாயாக
- நிச்சயமாக நீ பாவ மன்னிப்பை ஏற்பவனாகவும், அருள் பாலிப்பவனாகவும் இருக்கின்றாய்.
யா ஹய்யு யா கையும் யாதல் ஜலாலி வல் இக்ராம் (ஜல்) - யா அல்லாஹ் , நீயே எனது நாயன்.
உன்னையன்றி வேறு நாயன் இல்லவே இல்லை. நீயே என்னைப்படைத்தாய். நான் உனது அடிமை.
உனக்கு நான் கொடுத்த உனது அறுதிமானத்திலும், நீ எனக்களித்த உனது வாக்குறுதியிலும்
நான் இயன்ற அளவு ஸ்திரமாக இருக்கிறேன். இறைவா, நான் செய்த அனைத்து பாவங்களை
விட்டும் உன்பால் மன்னிப்பு தேடுகிறேன். இறைவா நான் செய்த அனைத்து தீமைகளை விட்டும்
உன்பால் இரட்சிப்பு தேடுகிறேன்.
யா ரஹ்மானே, நீ என் மீது செய்த உன் அருட்கொடையை பற்றி உனக்கு, உண்மை என்று
ஊர்ஜிதம் செய்கிறேன். எனது பாவங்களுக்காக வருந்துகிறேன். இறைவா, எனக்கு பாவ
மன்னிப்பு அருள்வாயாக. உன்னையன்றி பாவங்களை மன்னிப்பவன் யாரும் இல்லை.
யா அல்லாஹ் - கண் இமைக்கும் நேரம் கூட எங்களை எங்கள் இச்சை (நப்ஸ்) களிடம்
ஒப்படைத்துவிடாதே.
யா அல்லாஹ் - நீ எங்களுக்கு இலேசாக்கி வைத்தவைகளை தவிர வேறு எதுவும்
எங்களுக்கு இலேசு கிடையாது. நீ நாடினால் எப்படிப்பட்ட கஷ்டத்தையும் இலேசாக்கி
விடுகின்றாய். எனவே எங்கள் கஷ்டங்களை நீக்கி சிரமங்கள் அனைத்தையும்
நீக்கிவிடுவாயாக.
ஆமீன் - ஆமீன் - சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஸ்ஸதி அம்மா எசிபூன், வஸ்ஸலாமுன் அலல்
முர்சலீன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
================================================================
===============================
இறைவா - பனிக் கட்டி மற்றும் பனித்துளி நீரால் என் உள்ளத்தை கழுவி விடுவாயாக .
வெண்மையான துணியை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்துவதைப் போல் என்
உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக . கிழக்கிற்கும் மேற்கிற்கும் நீ
ஏற்படுத்தி யுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் மத்தியில் தூரத்தை
ஏற்படுத்துவாயாக.
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அடிமை. உனது அடிமை மற்றும் உனது அடிமைப்
பெண்ணின் மகன். எனது நெற்றிப்பிடி உன் கையில் உள்ளது. அதனை உனது
சட்டத்தின்படி நீ செயல்படுத்துகிறாய். எனக்கு நீதமான தீர்பபு
் வழங்குகிறாய். உனக்கு
நீயே சூட்டிக்கொண்ட, உனது வேதத்தில் நீ இறக்கியருளிய, உனது படைப்பினங்களில்
ஒருவருக்கு (நபிக்கு) நீ கற்றுக் கொடுத்த, உனது மறைவான ஞானத்தில் நீயே
தேர்நதெ
் டுத்துக் கொண்ட உன்னுடைய அனைத்துப் பெயர்களின் பொருட்டால்
கேட்கிறேன். (இறைவா!) குர்ஆனை என் உள்ளத்தை பொலிவூட்டக் கூடியதாக,
நெஞ்சின் ஒளியாக, கவலையை நீக்கக்கூடியதாக, துன்பத்தை போக்கக் கூடியதாக
ஆக்குவாயாக!
இறைவா! (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான்
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அண்டை வீட்டார்
திசைமாறச் செய்து விடுவார்கள்.
யாஅல்லாஹ்! பகலில் ஏற்படும் தீங்கை விட்டும் இரவில் ஏற்படும் தீங்கை விட்டும் தீங்கு
ஏற்படும் நேரத்தை விட்டும் தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) வசிக்கும் இடத்தில்
தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யா அல்லாஹ் - எந்த நலவை என் அறிவால் எட்டிவிட முடியாதோ, எதை அடைய என்
அமலில் பலம் குன்றிவிட்டதோ, எந்த நலவை என் எண்ணமும் அடைய முடியாதோ, எந்த
நலவை உனது படைப்பினங்களில் யாரேனும் ஒருவருக்கு வாக்களித்துள்ளாயோ, எதை
நான் உன்னிடம் இதுவரை கேட்கவில்லையோ, அல்லது உன் அடியார்களில் யாரேனும்
ஒருவருக்கு வழங்க உள்ளேயோ, நான் அதை உன்னிடமிருந்து அடைய
ஆசைப்படுகிறேன்.