Professional Documents
Culture Documents
இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை,
மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற
தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும். இதைத்தானே திருவள்ளுவரும் இரண்டே
அடிகளில்
என்கிறார். நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை.
விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
உழைக்காமல் யாரும் வென்றதாகச் சரித்திரமே கிடையாது. இதற்குச் சான்றாக போரில் தோற்றுப்போய்
ஒளிந்து கிடந்த ஒரு மன்னனுக்கு வெற்றிக்கான வழியை, பல முறை கீழே விழுந்தாலும் எழும்பி தன்
கூட்டைக் கட்டி முடித்த ஒரு சிறிய சிலந்தியின் விடாமுயற்சி மன்னனின் மனதில் ஓர் உத்வேகத்தைக்
கொடுத்தது. இதுவே, இழந்த தன் நாட்டை மீண்டும் மீட்க விடாமுயற்சி வேண்டும் என்ற பாடத்தையும்
புகட்டியது.
நன்றி.