Professional Documents
Culture Documents
மற்றொரு கனாக்காலம்
மற்றொரு கனாக்காலம்
---
ஹமீ து தம்பி .
புன்யமீ ண்
“ மிகவும் சுலபம் . ஒரு குழந்தை மனதைப்போல ,திறந்த மனதை வைத்திருக்க
வேண்டும். அந்த கருத்தை ஒரு நடுநிலையில்தான் பார்க்க வேண்டும் . நம்
முடைய சொந்த கருத்து , நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தாலும்
,சொல்லப்பட்டிருப்பது தர்க்கரீதியாக ,அறிவியல் பூர்வமாக
சரியானதாகப்பட்டால் ,ஏற்றுக்கொள்ளலாம் . முக்கியமாக அந்தந்ததுறையில்
வல்லுனர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் .உதாரணமாக
நமக்கு ஏதாவது உடல் நல பிரச்சினை என்றால், நமக்கு தெரிந்த கைவைத்தியம்
பார்ப்பதில் தவறில்லை .ஆனால் எல்லாவற்றிற்கும் நாமே பரிகாரம்
கண்டுகொண்டிருக்ககூடாது .உலகத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ
,அத்தனைபேரும் மருத்துவர்கள்தான் . ஒருவரிடம் தலை வலிக்கிறது என்று
சொல்லிப்பாருங்கள் . நிச்சயம் ஒரு மருத்துவம் சொல்வார் . ஒவ்வொருத்தர்
ஒவ்வொரு மருத்துவம் சொல்வார்கள் . அதற்காக உடனே ஒரு ஸ்பெசலிஸ்டை
பார்க்கவேண்டியதில்லை .குடும்ப டாக்டர் என்று ஒரு சாதாரண GP அருகில்
இருக்கும் டாக்டரை தொடர்பில் வைத்திருங்கள் .நீங்கள் சுலபமாக
அணுகக்கூடியவராக ,எந்தநேரத்திலும் தொலைபேசியில் அணுகக்கூடிய
மருத்துவராக இருத்தல் நலம் . அவரிடம் ஆலோசனை பெறுங்கள் .அவர் ரெபர்
செய்தால் தவிர ஸ்பெசலிஸ்ட் இடம் போகாதீர்கள் .
இதேபோன்று எந்த பிரட்சினையிலும் உங்களுக்கு அடுத்து
இருப்பவர்களிடம் யோசனை கேட்பதில் தவறில்லை .ஆனால் முடிவு செய்வது
நீங்களாகத்தான் இருக்க வேண்டும் . எல்லோரிடமும் பகுத்தறிவு இருக்கிறது
.தற்போது பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்று தவறாக புரிந்து
கொள்ளப்படுகிறது .எதையும் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு
அதிகமாக நமக்கு கிடைக்கும் யோசனைகள் பொதுப்புத்தியிலிருந்துதான்
.அநேகமாக அந்த பொதுவான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகளின்
அடிப்படையிலோ ,முன்னோர்கள் அவர்கள் காலத்திற்கு ஏற்ப ஏற்பட்ட
பழக்கங்ளாகவோ இருக்கலாம் .ஆனால் அது எதார்தத்திலோ,தர்கரீதியாகவோ
பொருந்தாமல் போகலாம் . அதை கலாச்சாரம்,நம் பாரம்பாரிய பழக்கம் என்று
பிடித்துக்கொண்டு செய்வது அறிவுடைமை ஆகாது .பதிலுக்கு
பிரட்சினைகளைத்தான் கொடுக்கும் .சரி உங்கள் பிரட்சினைதான் என்ன? நான்
உங்கள் நிலையில் இருந்தால் என்ன செய்வேன் என்று வேண்டுமானால்
சொல்கிறேன் .ஆனால் அவற்றில் எதை எடுத்துக்கொள்வதென்று முடிவு
செய்யவேண்டியது நீங்கள்தான் . என்றார் புன்யமீ ண்.
காரணம் என்ன ?
அழகே பூமியில்
விடைபெறுவோம் ,
எனக்கும் புரிந்தது .
.