Professional Documents
Culture Documents
ஓஷோ
பொருளடக்கம்
அன்புள்ள ஓஷோ,
உங்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயங்களைப் பற்றி கேட்பதற்காக மன்னிக்கவும்.
இந்த கேள்விகள் பலபேர் இதயங்களில் நெருப்பாக கொழுந்து விட்டு எரிந்து
கொண்டிருப்பதினால், நான் இந்த கேள்விகளைக் கேட்கிறேன். நீங்கள் யார்? நீங்கள்
எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தீர்கள்? இங்கு உங்களுடைய வேலை என்ன ? அந்த
வேலை எப்படி நிறைவேறும்?
இரண்டாவதாக ` நான் யார்` என்று கேட்கிறீர்கள். `நான்’ இல்லை என்பதே என் பதில்.
நான் எப்போதும், நாடி வருபவர்களிடம்` நான் யார்’ என்று உங்களை நீங்களே
கேட்டுக்கொள்ளுங்கள் என்பேன். இவ்வாறு கேட்டுக்கொண்டால், அவர்களுக்கு தான்
யார் என்று தெரிந்துவிடும் என்பதினால் அல்ல. ஆனால் இக்கேள்வியை ஆழமாகத்
தனக்குத்தானே கேட்டுக்கொண்டால், தனக்குள் கேள்வி கேட்பவன் மறைந்து, கேள்வி
மட்டுமே மிஞ்சும் ஒரு வினாடி வரும் என்பதினால்தான், நான் அவ்வாறு
கேட்டுக்கொள்ளச் சொல்கிறேன். இந்த கேள்வியை தீவிரமாக, முடிந்தவரை ஆழமாக
கேட்கும்போது அந்த ஒரு வினாடி வந்தே தீரும். அதில் இருக்கும் அசட்டுத்தனம்
வெளிப்படும். அந்த வினாடியில் `நான் யார்’ என்று கேட்பதற்கும், `நீ யார்’என்று
கேட்பதற்கும், யாரும் இல்லை என்பதனைப் புரிந்துக் கொள்வர்கள்.
ீ இந்தக் கேள்வி,
பதில் கிடைக்க கேட்கப்படும் கேள்வி அல்ல. இது கேள்விகளுக்கெல்லாம்
அப்பாற்பட்டு செல்ல, கேட்கப்படும் கேள்வி.
மனித மனதின் கேள்விகள், மனித மனதின் பதில்கள் என்று பெரும் குழப்பத்தை நாம்
இந்த கேள்வி பதில்களால் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு
கேள்விக்குக் கூட பதில் அளிக்கப்படவில்லை. கேள்விகள் எப்பொழுதும் எங்கு
இருந்ததோ அது அங்கேயே இருக்கிறது. இந்தக் கேள்வி பதில்களின்
அணிவகுப்பையும், இந்த அர்த்தமற்றதையும், பயனளிக்காத, எங்கும் கொண்டு
செல்லாத முயற்சியையும் உங்களால் பார்க்க முடிந்தால், இது போன்ற
முட்டாள்தனங்களை பற்றி உங்களுக்கு திடீரென்று மின்னல் போல் வந்து, நீங்கள்
தெரிந்துக்கொண்டால், பின்னர் நீங்கள் இந்த மனித மனதின் அசட்டுத்தனத்தை
நினைத்து சிரிப்பீர்கள். நீங்கள் சிரிக்கும் அந்த நிமிடத்திலிருந்து நீங்கள் மனதினை
முழுமையாக கடந்து செல்வர்கள்.
ீ பின்னர் கேள்வியும் இருக்காது, பதிலும் இருக்காது.
பின்பு நீங்கள் அன்புடன் இருப்பீர்கள். எந்தக் காரணமும் இல்லை, எந்த தூண்டுதலும்
இல்லை என்ற பொழுது, வாழ்தல் மட்டுமே போதுமானதாகிறது.
எந்த படபடப்பும் இல்லை. உங்கள் பிறப்பும் ஓர் நிகழ்வு, உங்கள் இறப்பும் ஓர்
நிகழ்வுதான். நீங்கள் இங்கே இருப்பதும் ஓர் நிகழ்வு, நீங்கள் இங்கு இல்லாமல்
போவதும் ஓர் நிகழ்வுதான். நீங்கள் எங்கும் இல்லை.
``சுயம்’’ என்பது இருந்தது, ஆனால், அது கதவு வரைதான் இருந்தது. நீங்கள் அறிந்துக்
கொள்ளுதல் என்ற கோவிலுள் நுழைந்த வினாடியிலிருந்து, அதை உங்களால் காண
முடியாது. அது கதவுவரை, உங்களைத் தொடர்ந்து வரும் நிழல், அது தொடர்வதோடு
மட்டுமில்லாமல், அது உங்களைப் பற்றிக்கொள்ளவும் செய்கிறது - ஆனால் கதவு
வரை மட்டும் தான், அதனால் கோவிலுள் நுழையமுடியாது. நீங்கள் அதைக்
காப்பாற்ற வேண்டுமானால், நீங்களும் வெளியிலேயே தங்க வேண்டும். ``சுயம்’’
என்பதுதான் ஒருவன் கடைசியாக தூக்கி எறியவேண்டியது. ஒருவனால்
எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட முடியும், ஆனால் ``சுயம்’’ என்பதை எறிவது
முடியாத ஒன்றாகிறது, ஏனெனில் சுயத்தை அறிய கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட
முயற்சிகள் அனைத்தும் இந்த ``சுயம்’’ சுயத்திற்காக எடுத்த முயற்சிகளே. இதை
அறிந்த வினாடியிலிருந்து நீங்கள் இருக்கமாட்டீர்கள், நீங்கள் முயற்சிக்க மாட்டீர்கள்.
14
*************************************************************************************************************
எப்பொழுது உங்கள் கனவில்கூட, இந்த காவி நிற அங்கி வருகிறதோ, அப்போது அதை
தூக்கி எறிந்து விடுங்கள். எப்பொழுது கனவில்கூட உங்கள் காவி நிற அங்கி
இருக்கிறதோ, அப்போது அதை தூக்கி எறியுங்கள். பின்னர் அதற்கு அர்த்தமில்லை. இது
உங்களுக்கு சுயநினைவு இல்லாத சமயங்களில் கூட, மறக்காமல் ஞாபகம் இருந்தால்,
எந்த சூல்நிலையிலும் உங்களுக்கு இது நினைவிருந்தால், பின்பு இதற்கு
அவசியமில்லை. அதனால் இது நீங்கள், உங்கள் மெய்யிருப்பை நோக்கிப்
போவதற்கும், செயல்பாட்டை நோக்கிப் போவதற்கும், உதவும் ஒரு ஆயுதம்,
அவ்வளவுதான்.
அன்பு வளர வேண்டும். அது உலகம் முழுவதும் பரவ வேண்டும், ஆனால் அது
அங்கிருந்து தொடங்கக்கூடாது, அது எப்பொழுதும் தொலைவில் இருந்து
தொடங்கக்கூடாது. எவன் ஒருவன் தொலைவிலிருந்துதான் தொடங்கவேண்டும் என்று
நினைக்கிறானோ, அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். எல்லாப் பயணமும்,
அருகில் இருந்துதான் தொடங்கவேண்டும். நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல்
அடி தொலைவிலிருந்து எடுத்து வைக்க முடியாது. ஒருவன் அன்பு நிறைந்த
தனிமனிதனாக இருக்கவேண்டும். எந்த அளவிற்கு ஒருவனுடைய அன்பு ஆழமாக
வளர்கிறதோ, அந்த அளவிற்கு அவனுக்கு உடலுறவில் ஆர்வம் குறையும். பின்பு
அன்பு பரவும்.
ஒரு நீ திக்கதை :
புத்தர் ஒரு நாள் தன் கையில் பூவுடன் வந்தார். அவர் ஒரு ஆன்மீ க சொற்பொழிவு
கொடுக்கவேண்டும், ஆனால் அவர் மௌனமாக இருந்தார். அவர் சொல்வதைக் கேட்க
வந்தவர்களுக்கெல்லாம், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து ஆச்சரியம்
அடைந்தார்கள். நேரம் கடக்கிறது. இதுபோன்று ஆனதே இல்லை – அவர் என்ன
செய்கிறார் அவர்களெல்லாம், இவர் பேசப்போகிறாரா, இல்லையா ? என்று
வியந்தார்கள்.
பாங்கி (Bankei) என்ற ஒரு மாபெரும் சென் (Zen) ஆசிரியர், “புத்தர் ஒன்றும்
சொல்லவுமில்லை, மகாகாஷ்யபா (Mahakshyapa) எதையும் கேட்கவுமில்லை” என்றார்.
யாரோ ஒருவர் “நீங்கள் அங்கு இல்லையே ? “ என்றார். அதற்கு பாங்கி (Bankei) “நான்
அங்கு இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. எதுவும் சொல்லப்படாதபோது,
யாரும் சாட்சியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நான் அங்கு இல்லை,
ஆனாலும் நான் சாட்சியாக இருக்கிறேன்” என்றார்.
இது ஒரு நம்பிக்கை – இது அறிவு சம்பந்தப்பட்டதல்ல – இது ஒரு நம்பிக்கை. இதை
மக்கள் மனதில் மூன்று நூற்றாண்டுகளாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது இது பிரபலமடைந்து வருகிறது. மற்ற நம்பிக்கைகளைப் போல இதுவும்
ஒரு நம்பிக்கை. அறிவியல் இதற்கு தன்னுடைய ஒத்துழைப்பைத் தருகிறதோ
இல்லையோ, அதனால் எந்த மாற்றமும் இருக்காது, ஏனெனில் இது ஒரு நம்பிக்கை.
இதை மனித இனம் நம்பத் தொடங்கினால், பின்பு அவர்களுடைய ஆத்மாவை
திரும்பக்கொண்டு வருவது மிகக் கடினமானது.
எவ்வளவோ பேர், ஏன் காவி நிறம்? என்று என்னைக் கேட்கிறார்கள், ஏன் புதிய நிறம்
இருக்கக்கூடாது?, புதிய நிறத்தை உபயோகப்படுத்தலாம், ஆனால் அது அவ்வளவு
பயன் உள்ளதாக இருக்காது. நான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்திருந்தால், நிறத்தை மாற்றி இருப்பேன். ஆனால் இப்பொழுது நேரம்
குறைவாகவும், ஏமாற்றுவதாகவும், இறுதியாகவும், மாபெரும் ஆபத்தை எதிர்நோக்க
வேண்டியுள்ளதாலும் மாற்ற இயலாது. அதனால்தான் நான் உங்களுடைய முன்
பிறவிகளையும் உபயோகித்துக்கொள்கிறேன்.
நேற்று காலை என்னிடம் யாரோ ஒருத்தி வந்தாள். அவளை நான் சன்யாசம் எடுத்துக்
கொள்ளும்படி சொன்னேன். அவள், இதைப்பற்றி யோசித்து முடிவெடுப்பதற்கு,
இரண்டுநாள் அவகாசம் தரும்படி கேட்டாள். அதற்கு நான், “இரண்டு நாட்களை பற்றி
யாருக்கத் தெரியும் ?அதைத் தெரிந்துகொள்ள அதிகமாக தேவைப்படும்...... இன்றே,
இந்த வினாடியே எடுத்துக்கொள் “ என்றேன். ஆனால் அவளால் முடிவெடுக்க
முடியவில்லை என்பதால், நான் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அடுத்தநாள்
காலையில் அவள் வந்து எடுத்தக்கொண்டாள். அவள் இரண்டு நாள்
எடுத்துக்கொள்ளவில்லை. ஒரே ஒரு நாள்தான். நான் அவளை “ஏன்? உனக்கு இரண்டு
நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது, பின்பு ஏன் இவ்வளவு விரைவாக வந்தாய்?” எனக்
கேட்டேன். அதற்கு அவள் “இரவு மூன்று மணிக்கு திடீரென்று நான்
விழித்துக்கொண்டேன், என்னுள் ஏதோ ஒன்று ஆழமாக சென்று “போய் சன்யாசம்
பெற்றுக்கொள்” என்று சொன்னது” என்றாள்.
*************************************************************************************************************
அன்புள்ள ஓஷோ,
நீங்கள் இந்த படத்தைப் பார்த்து தியானம் செய்தால், அங்கே படம் இருக்காது என்று
நான் சொல்லும்போது, நீங்கள் அதை நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்துக்
கொள்ளாதீர்கள். முயற்சி செய்யுங்கள், அது நடக்கும். அந்தப் படம் மறையும்போது,
55
“ஏன் இந்த மாலை?, ஏன் இந்தப் படம்?” என்று கேட்கிறீர்கள். நான் “இந்த வழியில்
அதை உபயோகப்படுத்தினால், இது நடக்கும்” என்று சொல்கிறேன். என்னுடைய இந்த
58
இந்த மாலை , தியானத்திற்கான ஒரு சாதனம். அது ஒரு சாவி. ஆனால் இது
அனுபவத்தின் மூலம்தான் வரும். அது நிகழ்ந்தாலேயொழிய உங்களுக்குத் தெரியாது,
ஆனால் இது நடக்கலாம், இது மிகவும் சுலபமானது, இது கடினமானதல்ல. நான்
உயிருடன் இருக்கும்போது இது மிக சுலபம், நான் இல்லாதபோது இது மிகக்
கடினமாகிவிடும்.
59
மஹாவரரை
ீ பின்பற்றியவர்கள் மஹாவரருடன்,
ீ அவருடைய சிலையின் மூலம்
இன்றுக் கூட தொடர்பு கொள்ளலாம். அதனால், புத்தருடைய சிஷ்யர்கள் என்ன
செய்வார்கள்? அதனால்தான் போதிமரம் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது. புத்தரின்
சிலைக்குப் பதிலாக இதனை பயன்படுத்தினார்கள். புத்தருக்கு பின்பு ஐநூறு
ஆண்டுகளுக்கு அவர் சிலை இல்லை. புத்தர் கோவில்களில், போதி மரத்தின் படமும்,
கால் அடிச்சுவடுகளும் அடையாளங்களாக வைக்கப்பட்டிருந்தது, இதுவே போது
மானது. இது இன்னும் தொடர்கிறது. இப்பொழுது போதிகயா(Bodhgaya) வில் இருக்கும்
மரம் அந்த அசல் போதிமரத்தில் இருந்து தொடர்ந்து வந்ததேயாகும். அதனால்
இன்று வரை, அந்த வழியைத் தெரிந்திருப்பவர்கள், போதிகயா (Bodhgaya) வில்
இருக்கும் அந்த போதிமரத்தின் வழியாக புத்தருடன் உரையாடலாம். உலகெங்கும்
இருக்கும் சன்யாசிகள் போதிகயாவிற்கு வருவது அர்த்தமற்றதல்ல. ஆனால்
அவர்களுக்கு அந்த சாவி தெரிந்திருக்கவேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அங்கே
போவார்கள், பின்பு முழு விஷயமுமே ஒரு சடங்காகிவிடும் அவ்வளவுதான்.
*************************************************************************************************************
இது ஆன்மீ கத் தேடலின் எதிர்மறையான பாகம். நீங்கள் இதை நோக்கிச் செல்ல
உங்கள் முழு வாழ்க்கையும் உதவும். இந்த எதிர்மறைத்தன்மை, இந்த ஏமாற்றம், இந்த
துன்பங்கள் என்கிற பாகத்தைத்தான் உலகத்தால் செய்யமுடிந்தது. வாழ்க்கை
இப்பொழுது இருப்பதுபோன்றே இருக்கும்பட்சத்தில், அது அர்த்தமற்றதாக இருக்கிறது
என்ற உண்மையை நீங்கள் உண்மையாக அறியும்போது, பின்பு உங்கள் தேடல்
சாதாரணமாகத் தொடங்குகிறது, ஏனெனில் அர்த்தமற்ற வாழ்வில் நீங்கள் சௌகரிய
மாக இருக்கமுடியாது. அர்த்தமற்ற வாழ்வில் உங்களுக்கும், வாழ்க்கை என்பவை
களோடும், ஆழம் காண முடியாத அளவிற்கு, பிளவு ஏற்படுகிறது. ஒரு இணைக்க
முடியாத இடைவெளி வளர்ந்து, அகலமாகிக்கொண்டே வருகிறது. நீங்கள் கரையுடன்
கட்டப்படாமல் இருப்பதுபோல் உணர்வர்கள்.
ீ பின்னர் அர்த்தமுள்ளதையும்,
ஆனந்தத்தையும் நோக்கி தேடல் ஆரம்பிக்கிறது. இதுதான் இரண்டாவது பாகம்,
அனுகூலமான(Positive) பாகம்.
ஒரு ஆசை இல்லாத மனம்தான் ஆன்மீ கத்தேடலில் இருப்பதாக அர்த்தம். ஆன்மீ கத்
தேடலை மேற்கொண்டவர்க்கு இந்த ஆசையினால் ஏற்படும் அர்த்தமற்றவைப்பற்றி
முழுமையாக தெரியும், அதனால் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள
தயாராக இருப்பார். ஒருமுறை என்ன இருக்கிறது என்பதை அறிய ஒருவர் தயாராகி
விட்டால், பின்பு உண்மையானது எப்பொழுதும் ஒரு மூலையிலேயே இருப்பது
தெரியும் - மூலையிலேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் அங்கு இருப்பதே இல்லை,
நீங்கள் ஆசையில்தான் இருக்கிறீர்கள், எதிர்காலத்தில்தான் இருக்கிறீர்கள்.
உண்மையானது எப்போதும் நிகழ்காலத்திலேயே இருக்கும் – இப்போது இங்கேயே –
62
ஆன்மீ கத் தேடல் என்பது கடவுளைத் தேடுவது அல்ல, ஏனெனில் அது திரும்பவும்
பேராசைதான். நீங்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தால், பின்பு உங்கள் மனம்
பேராசையுடையது. நீங்கள் எதற்காகவோ கடவுளைத் தேடுகிறீர்கள். அது உங்களுக்கேத்
தெரியாமல், ஆழமாக, நினைவற்ற நிலையில்(Unconscious) நீங்கள் கடவுளை
எதற்காகவோத்தான் தேடிக்கொண்டு இருக்கவேண்டும், ஆனால் நான் இப்படிக்
கூறுவதின் மூலம்,ஆன்மீ கத்தேடல் நிறைவேறும்போது கடவுள் இல்லை என்று
சொல்லவில்லை. நீங்கள் தியானத்திற்காக வந்து, மனம் இல்லாமல் இருக்கும்
நிலையில், மோட்சம் என்பது கிடையாது என்று நான் சொல்லவில்லை.மோட்சம்
இருக்கிறது, உங்களுக்கு விடுதலை இருக்கிறது, ஆனால் அது உங்கள் ஆசையினால்
வருவதல்ல. அது நீங்கள் உண்மையை இருக்கும்படி அப்படியே தெரிந்துகொள்வதின்
விளைவாக வருவது.
ரின்சாய் (Rinzai) அவன் அருகில் வந்து, அவன் கழுத்தை தன் இரு கைகளாலும்
பிடித்து நெரிக்கத் துவங்கினார். அவனுடைய கண்கள் பிதுங்கி வெளியே வந்தன.
ஆனாலும் அவர் அழுத்திக்கொண்டே “நீ யார்? கண்களை மூடிக்கொள்! ”என்றார். அந்த
நபர் தன் கண்களை மூடிக்கொண்டான். ரின்சாய்(Rinzai) “நீ யார்?” என்று கேட்டுக்
கொண்டே இருந்தார். அந்த நபர் தன் கண்களைத் திறந்து, சிரித்துவிட்டு, அவரை
வணங்கினார். அவன் “நீங்கள் உண்மையாகவே ஆத்மா என்றால் என்ன என்பதற்கு
பதிலளித்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்றான்.
இந்த பூமியில் நமக்கு நிறைய உண்மைகள் தெரியும். நாம் இந்த உலகத்தை சன்சாரா
(Sansara) என்று அழைப்போம். சன்சாரா (Sansara) என்றால் சக்கரம் – நீங்கள் ஓடுவதோடு
மட்டு மல்லாமல், சக்கரமும் சுழல்கிறது. அது திடமாக நிற்கும் சக்கரமல்ல. நீங்கள்
நின்றால்கூட, சக்கரம் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அதனால் ஒருவர் நின்றால்
மட்டும் போதாது, அவர் அந்த சக்கரத்திலிருந்து வெளிவர வேண்டும்.
*************************************************************************************************************
உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
அன்புள்ள ஓஷோ,
அன்பு, கருணை போன்ற குணங்கள் கடவுளுக்குரிய குணங்களாக சொல்லப்படுகிறது,
இந்த மாதிரியான குணங்கள் இருக்கிறதா? கடவுள் இருக்கிறாரா? இதை
விளக்கமுடியுமா?
ஏதோ ஒரு இடத்தில் ஏசோப் (Aesop) என்ற ஒருவர், ஒரு கதையில் இதை சொல்லி
யிருக்கிறார். ஒரு ஆற்றங்கரையில் ஒரு தேள், ஆமையிடம் “தயவுசெய்து,நீ உன்
முதுகின் மேல் என்னை தூக்கிச் சென்று, அடுத்தக் கரையில் விட்டுவிடு” என்று
பணிவாக கேட்டது. அதற்கு ஆமை “முட்டாள்தனமாக இருக்காதே! என்னை முட்டாள்
என்று நினைக்காதே! நீ என்னை நடு ஆற்றில் கொட்டினால், நான் மூழ்கி செத்து
விடுவேன்” என்றது. அதற்கு தேள் “நான் முட்டாள்தனமாக இல்லை, நீதான் முட்டாள்
தனமாக இருக்கிறாய், ஏனெனில் உனக்கு இந்த சாதாரண நியாயம்(Logic) கூட தெரிய
வில்லை, நான் அரிஸ்டாட்லின் (Aristotelian) பள்ளியைச் சார்ந்தவன், நான் ஒரு
நியாயத்தை நிலைநிறுத்துபவன்! அதனால் நான் உனக்கு நியாயம் பற்றி ஒரு
சாதாரண பாடம் நடத்துகிறேன். அப்படி நான் உன்னைக் கொட்டி, நீ மூழ்கி
இறந்துபோனால் நானும் தான் உன்னுடன் சாகவேண்டும், அதனால்
புத்திசாலியாகவும், நியாயமாகவும் இரு. நான் உன்னை கொட்டமாட்டேன் – என்னால்
உன்னை கொட்ட முடியாது” என்றது.
அதற்கு அந்த தேள் “இது நியாயமா என்ற கேள்விக்கே இடமில்லை, இது என்
னுடைய இயல்பு, இது இல்லாமல் என்னால் இருக்கமுடியாது, என்னால் இதைப்பற்றி
பேசமுடியும், ஆனால் இதுவில்லாமல் என்னால் இருக்கமுடியாது, உண்மையாகவே
எனக்கு அந்தத் தகுதியில்லை” என்றது.
ஆனால் தெய்வகத்தன்மையுடன்
ீ இருப்பவைகளுக்கு, அன்பு என்றாலும், கருணை
என்றாலும், ஒன்றுதான். அவன் அன்பாக இருக்கிறான் என்றால், அதுவே அவன்
கருணை. அவன் எப்போதும் கருணையுடன் இருக்கிறான் என்றால், அதுவே அவன்
அன்பு. ஆனால் இவைகளெல்லாம் அவன்மேல் சுமத்தப்படக்கூடிய குணங்கள் அல்ல.
இது அவனுடைய இயல்பு, அவனால் வேறுவிதமாக இருக்க இயலாது. ஆனாலும் நாம்
பாகுபடுத்திப் பார்க்கிறோம், ஏனெனில் கருணை கிடைத்ததாக தெரியும் ஒருவர்
தெய்வத்தின் அன்புக்குரியவராக இருக்கிறார். திரும்பவும் இதுவும் தவறாக வழி
காட்டக்கூடிய ஒரு வாக்கியம். கடவுள் எப்போதும் அன்புதான், கடவுள் எப்பொழுதும்
75
உடலுடன் இது ஒரு புதிய தொடர்பு, இந்த பிறவியில்தான். இதற்கு முன்னால் நீங்கள்
தொடர்புக்கொண்டிருந்த உடல்கள் எல்லாம் இறந்து விட்டன. இம்மாதிரி உடலோடு
கொள்ளும் தொடர்பு ஒவ்வொரு பிறவியிலும் அறுந்துவிடும். இதுபோல
பலதடவைகள் அறுந்திருக்கிறது. ஒருவர் தன்னுடைய உடல்தான் அவர், என்று
நினைத்தால்கூட, அவர் தன் உடலுடன் ஐக்கியப்படுத்திக்கொள்வதில்லை. அதனால்,
அவர் உடலுக்கு நோய் வந்தால் எதற்கோ நோய் வந்ததுபோல் இருக்கிறார்.
அது ஒரு வெளிச்சமான பௌர்ணமி நாள். யாரோ ஒரு கன்னிப்பெண், சுஜாதா என்ற
ஒரு சூத்ரா(Sudra) பெண் அங்கே வந்தாள். அவளுடைய பெயர் அவள் ஒரு சூத்திர
பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்பதை காண்பித்தது, ஏனெனில் சுஜாதா என்ற
பெயரை மேல்ஜாதிக்காரர்கள் வைக்கமாட்டார்கள். சுஜாதா என்றால் “நல்ல பிறப்பு”
என்று அர்த்தம். அவள் போதிமரத்திற்கு தினமும், ஏதோ வழிபடுவதாக வேண்டிக்
கொண்டிருப்பதனால் அவள் சில இனிப்புகளோடு அங்கே வந்திருந்தாள்.....
************************************************************************************************************
மாபெரும் சாகசம்
அன்புள்ள ஓஷோ,
நீங்கள் குண்டலினி (Kundalini) க்காக முயற்சி செய்தால், பின்பு அதில் சீரான முறைகள்
இருக்கின்றன. குண்டலினி தொடர்ச்சியானது. அது (Thermometer) தர்மாமீ ட்டரைப் போல
தொடர்ச்சியானது. அது தர்மாமீ ட்டரைப் (Thermometer) போல மெல்ல மெல்ல எழும்பும்.
இதன் வழி சீராகத் தொடரும். புத்தர் இந்த வழியைப் பயன்படுத்தவில்லை. ஆனால்
அவர் சக்கரங்களின், திடீர் தாண்டுதலில் வேலை செய்வது பற்றி பேசினார். ஒரு
சக்கரத்திலிருந்து இன்னொரு சக்கரத்திற்கு ஒருவர் தாண்டுவார். அதில் தொடர்ச்சி
இல்லை, தாண்டுதல்தான். இந்த தாண்டுதல் முறையினால் புத்தர், புதுவிதமாக இந்த
உலகமே மாறப்போவதை கற்பனை செய்து பார்த்தார். இந்த உலகத்தில் எதிலும்
தொடர்ச்சி இல்லை, தாண்டுதல்தான் இருக்கிறது.
மகாவரர்
ீ சக்கரங்களைப் பற்றியோ அல்லது தாண்டுதலைப் பற்றியோ பேசவில்லை.
அவர் வெடிப்பதை ( Explosion) பற்றிதான் பேசினார். நீங்கள் இதுவாக இருக்கிறீர்கள்,
பின்பு நீங்கள் அதுவாக இருக்கிறீர்கள். இதில் தாண்டுவதற்கு நிறைய நிலையங்கள்
கூட இல்லை. இது இன்னொரு வழி – வெடிப்பது. ஒரு வினாடிக்கு முன்பு நீங்கள்
இதுவாக இருந்தீர்கள். ஒரு வினாடிக்குப் பிறகு நீங்கள் அதுவாக இருக்கிறீர்கள். இதில்
தொடர்ச்சியும் இல்லை, தாண்டுதலும் இல்லை. வெடிப்பதுதான் இருக்கிறது. இதில்
நடுவில் கடப்பதற்கு மையங்கள் எதுவும் இல்லை.
சென் (Zen) னில் இரண்டு பிரிவுகள் உள்ளன: ஒரு பிரிவு சென்(Zen) னின் திடீர் பள்ளி
என்றும், இன்னொரு பிரிவு சென் (Zen) னின் சீரான பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆனால் சென் (Zen) னின் சீரான பள்ளியில்கூட, குண்டலினி (Kundalini) யைப் பற்றி
பேசப்படவில்லை. அது வேறொரு வழியை பயன்படுத்தியிருக்கிறது. குண்டலினி
(Kundalini) யை பற்றிய பேச்சே சென் (Zen) னில் இல்லை. சென் (Zen) னின் சீரான
பள்ளிக்கூட, வேறொரு வழியைப் பயன்படுத்தியிருக்கிறது.
*************************************************************************************************************
மையத்திற்கு வாருங்கள்
அன்புள்ள ஓஷோ,
115
விழித்துக்கொள்வர்கள்.
ீ ஆனால் நீங்கள் எப்படி திரும்பி வந்தீர்கள். நீங்கள் எவ்வளவு
தூரம் பயணம் செய்தீர்கள்? நீங்கள் அந்த தூரத்தை கனவில்தான் பயணித்து
வரவேண்டும். நீங்கள் அந்த தூரத்தை பயணித்தால், நீங்கள் விமானத்தின் மூலம்
வந்தால், பின்பு அந்த விமானமும் கனவின் ஒரு பாகமாகத்தான் இருக்கும். நீங்கள்
விழித்துக்கொண்டால், பின்பு கனவு லண்டனில் கலைந்து, நீங்கள் பம்பாயில்
விழித்துக்கொள்வர்கள்,
ீ இதற்கு இடையே பயணம் எதுவும் இருக்காது. அதனால்
விழித்துக்கொள்வது என்பது புதியது. இது கனவுடன் தொடர்புடையதல்ல.
*************************************************************************************************************
தீக்ஷையின் ரகசியங்கள்
அன்புள்ள ஓஷோ,
ஆன்மீ க வாழ்க்கைக்கு தீக்ஷை கொடுத்து ஆரம்பித்து வைத்தல் என்றால் என்ன?
தீக்ஷை கொடுப்பதில், ஆழ்ந்த மறைபொருலாக இருப்பதும், இரகசியத்தின் விசேஷமாக
இருப்பதும் என்ன? எந்த மாதிரியான தீக்ஷையை நீங்கள் சன்னியாசிகளுக்கும்,
சன்னியாசி அல்லாதவர்களுக்கும் தருகிறீர்கள்? அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு
விரிவாக சொல்லுங்கள்.
நான் உங்களைப் பார்த்ததும் எனக்கு உங்களைப் பற்றிய ஒரு கனவு வந்தால், நீங்கள்
என்னுடைய கனவை திரையிடும் ஒரு பொருளாகிறீர்கள். நான் என்னுடைய கனவை
உங்கள் மீ து காட்டுவேன், அத்துடன் என்னவெல்லாம் நான் உங்களைப் பற்றி
புரிந்துக்கொள்கிறேனோ அதையும் என் கனவுடன், கற்பனையுடன் கலந்து விடுவேன்.
நான் உங்களை நேசிக்கும்போது, நீங்கள் எனக்கு ஒருவிதமாக தெரிவர்கள்.
ீ நான்
உங்களை நேசிக்காதப்போது, நீங்கள் எனக்கு முற்றிலும் வேறுவிதமாக தெரிவர்கள்.
ீ
நான் உங்களை வெறும் திரையாக பயன்படுத்தி, நான் என்னுடைய கனவுகண்டு
கொண்டிருக்கும் மனதை அதில் விழும்படி காட்டுகிறேன். நான் உங்களை நேசிக்கும்
140
ஒரு சூபி (Sufi) ஏழை பரதேசி இருந்தார். அவருக்கு முன் ஹிஜ்ரா (Hijra) என்ற தேவதை
தோன்றியது. அது உங்களால் எவ்வளவு தண்ண ீரை சேமித்து வைத்துக்கொள்ள
முடியுமோ, அவ்வளவு தண்ண ீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில்
நாளை காலை உலகத்தில் இருக்கும் எல்லாத் தண்ண ீரிலும் கெட்ட ஆவிகள்
விஷத்தை கலக்க போகிறார்கள், அந்த தண்ண ீரை யாரெல்லாம் குடிக்கிறார்களோ,
அவர்களெல்லாம் பைத்தியம் ஆகிவிடுவார்கள் என்று சொல்லியது. அதனால் அந்த
ஏழை பரதேசி (Fakir) இரவு முழுவதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ண ீரை
சேமிக்கிறார். உண்மையாகவே அந்த சம்பவம் நடக்கிறது. எல்லோருமே அடுத்த நாள்
காலை பைத்தியமாகிவிடுகிறார்கள். யாருக்குமே முழு ஊரும் பைத்தியமாகிவிட்டது
என்பது தெரியவில்லை. அந்த ஏழை பரதேசி மட்டும்தான் பைத்தியம் இல்லை,
ஆனால் ஊர் முழுவதும் அவர்தான் பைத்தியமாகிவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்.
அவருக்கு அவரைத்தவிர எல்லோருமே பைத்தியம் என்பது தெரியும். ஆனால் அவரை
யாரும் நம்பவில்லை. அவர் அவருடைய தண்ண ீரைக் குடித்துக்கொண்டு தொடர்ந்து
தனியாக இருந்தார். ஆனால் அவரால் தொடரமுடியவில்லை. முழு ஊரும்,
எல்லோரும், முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகத்தில் இருக்கிறார்கள். யாருமே
அவரைக் கேட்கவில்லை. மேலும் இப்போது அவரைப் பிடித்து சிறையில்
போடுவார்கள் என வதந்திகள் இருக்கின்றன.
ஒரு திபெத்தியன் (Tibet) குரு மிலரேப்பா (Milarepa) என்ற ஒருவர் இருந்தார். அவர்
இதை சட்டமாகவே வைத்திருந்தார். அவரிடம் யாராவது கேள்விக்கேட்டால்,
கேள்விக்கேட்டவர் ஏழு நாட்களுக்கு காத்திருந்த பின்புதான் அவர் பதில் சொல்வார்.
இதுதான் எல்லாவற்றிற்கும் அவருக்கு கொடுக்கவேண்டிய காணிக்கை. இந்த
நிமிடமேக் கேட்டால், அவர் உங்களை வெளியில் எறிந்து விடுவார்: “ஏழு நாட்களுக்கு
காத்திருங்கள், கேள்வியுடன் தங்குங்கள்” என்பார். ஆனால் உண்மையில் உங்களால்
அத்துடன் ஏழு நாட்களுக்கு தங்கமுடியாது. ஏழு நாட்கள் என்பது மிக நீளமானது.
இந்த நவன
ீ மனம் ஓடுவதற்கான முழு காரணம் மரணபயம்தான். முதல் தடவையாக
மனிதன் மரணத்தைக் குறித்து பயந்திருக்கிறான். ஏனெனில் முதல் தடவையாக
158
அது அடிப்பது அல்ல, அது குறிப்பிட்ட மையத்தில் சுத்தியால் அடிப்பது. அது அடிப்பதே
அல்ல. ஆனால் இதை மறைக்கவேண்டும். அவர் உங்கள் முதுகெலும்பிலோ அல்லது
வேறு ஒரு உறுப்பிலோ அடித்துவிட்டு, “உன்னுடைய உடல் ஒரு குறிப்பிட்ட
வகையில் வேலை செய்ய உதவுவதற்காக, நான் இந்த மையத்தை தொடுகிறேன்”
என்று சொன்னால், நீங்கள் சுயஉணர்வுடன் ஆகிவிடுவர்கள்.
ீ அதனால் அவர் அதை
சொல்ல மாட்டார். அவர் “நீ தூக்கத்துடன் இருப்பதாக நான் உணர்ந்தேன், அதனால்
தான் உன்னை அடித்தேன்” என்று சொல்லுவார். எப்போதெல்லாம் உங்களுக்கு
உறக்கம் வருகிறதோ, அப்போதெல்லாம் அவர் வந்து உங்களை அடிப்பார். இவ்வாறு
அடிப்பது உண்மையை மறைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு மறைவான யுக்தி. நீங்கள்
“அவர் என்னை அடிக்கிறார்” என்று நினைப்பீர்கள், ஆனால் உங்களுடைய மையம்
சுத்தியால் அடிக்கப்பட்டது என்பதை அறியமாட்டீர்கள். ஆனால் இப்போது அதையும்
பயன்படுத்தமுடியாது.
அன்புள்ள ஓஷோ,
172
ஒரு இரகசிய குழு (Esoteric Group) என்பது ஒரு குறிப்பிட்ட ஆசிரியருக்காக, பிரத்யோக
பயிற்சி எடுக்கப்பட்ட ஒரு குழுவும் கூட, ஏனெனில் இது அபூர்வமான சம்பவம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு புத்தர் நிகழ்கிறார், அப்படி
புத்தரைப்போல் ஒரு நிகழ்வு ஏற்பட்டால், எப்படி அவரால் மற்றவர்களுக்கு
சொல்லமுடியும்? புத்தர் அங்கே இருப்பார், உலகம் அங்கே இருக்கும், ஆனால் இதில்
அர்த்தம் இருக்காது. புத்தரால் நேரிடையாக சொல்லமுடியாது, அதனால் ஒரு இரகசிய
குழு, ஒரு உள்ளார்ந்த குழுவிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. புத்தருக்கும்,
இவ்வுலகத்திற்கும் நடுவில் தரகராக செயல்பட ஒரு குழுவிற்கு பயிற்சி
வழங்கப்படுகிறது. இந்த பிரத்யோக குழு புத்தரை புரிந்துகொண்டு, பின்னர் அவரை
இவ்வுலகத்திற்கு விளக்க பிரத்யோக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏனெனில்
புத்தருக்கும், இவ்வுலகத்திற்கும், நிறைய இடைவெளி இருப்பதினால் புத்தர்
புரிந்துகொள்ளப்படமாட்டார்.
இது குரு கூத்ஹூமி (Koot Humi) அசோகரின் ஒன்பது பேர் கொண்ட குழுவில் இருந்த,
மிகப் பழைய நுண்திறன் வாய்ந்தவர்களில் ஒருவரான இவர், பிரம்மஞானத்தின் முழு
இயக்கத்தை உருவாக்கினார். அவர்கள் புத்தரின் அவதாரத்திற்கு ஏற்ற சூழ்நிலையை
உருவாக்க முயற்சித்து வந்தார்கள். ஏனெனில் புத்தர் இருபத்தைந்து நூற்றாண்டு
களுக்கு பிறகு அவர் மறுபடியும் பிறக்கப் போவதாகவும், அப்போது அவருடைய
176
தேர்ச்சி பெற்ற திருடன் என்று ஒரு புத்த மத கதை இருக்கிறது. அவர் மிக்க
திறமைசாலி, அப்படிப்பட்ட ஒரு தேர்ச்சி, அவரை பிடிக்கவே முடியாது. அவர்
எப்போதெல்லாம் பூட்டை உடைத்துக்கொண்டு வட்டினுள்
ீ சென்று வருகிறாரோ,
அப்போதெல்லாம் தெர்ச்சி பெற்ற திருடன் வந்துவிட்டுப்போனார் என்று
தெரியும்படியான ஒரு தடயத்தை விட்டுச்செல்வார். அவருடைய கலை மிகவும்
பிரபல்யமடைந்தது, அவர் ஒருவர் வட்டிற்கு
ீ வந்தால், பின்பு மற்றவர்கள் பொறாமை
அடைவார்கள். ஏனெனில் அந்த தேர்ச்சி பெற்றத்திருடன் தன்னுடைய திறமையை
பயன்படுத்தும் அளவிற்கு இருக்கும் தகுதியான வடுகளுக்குத்தான்
ீ போவார்.
அதற்கு தந்தை “அது மிகக் கடினம். இது அறிவியல் கிடையாது, இது விஞ்ஞானத்தைப்
போல எப்படி என்று தெரிந்துக்கொள்ள முடியாது, நீ திருடுவதற்கென்றே
பிறந்திருந்தாலேயொழிய என்னால் சொல்லமுடியாது; அப்போது அதற்கு
வாய்ப்பிருக்கிறது. அது அவ்வளவு கலை நுணுக்கம் நிறைந்தது, அது ஒரு
ஆக்கப்பூர்வமான கலை. நான் அதில் வாழ்ந்திருக்கிறேன், இது எனக்கு எந்த
கெடுதலையும் விளைவிக்கவில்லை, ஆனால் என் ஆன்மாவிற்குதான். அதனால் நாம்
பார்க்கலாம்” என்றார்.
அவன் தந்தை “நீ ஏன் நடுங்குகிறாய்? சும்மா சாட்சியாக இரு. நான்தான் திருடன்; நீ
சாட்சியாக இரு. நீ ஏன் நடுங்குகிறாய்?” என்று கேட்டார்.
தந்தை வட்டிற்கு
ீ சென்றார். இரவு குளிர்ந்திருந்தது, அவர் தன்னுடைய படுக்கைக்கு
சென்று சௌகரியப்படுத்திக்கொண்டார்.
183
உதாரணத்திற்கு, மஹாவரர்
ீ ஐம்பதனாயிரம் சன்னியாசிகளை வைத்திருந்தார்.
எல்லோரும் அவர் நாட்களில் ஞான அறிவு பெறமுடியாது. அதனால் பலபேர்
தொடர்ந்து எங்கோ வழிகளில் இருந்தனர். மஹாவரர்
ீ மறுபடியும் இவ்வுலகத்திற்கு
வரவேண்டியதில்லை, அதனால் இதுப்போல் எங்கோ பாதையில் இருப்பவர்களுக்கு
மேற்கொண்டு அந்த அறிவைப் போய் சேர்த்தாக வேண்டும். யார் கொண்டுபோய்
சேர்ப்பார், மஹாவரர்
ீ இங்கு இருக்கமாட்டார்.
மஹாவரர்
ீ அளவிற்கு விஷயமும் இருந்தது – ஆனால் அவர்கள் வெளிப்புறமாக
சுற்றி எந்த குழுவையும் அமைக்க அனுமதிக்கவில்லை. நெருங்கியக் குழு
மட்டும்தான் எப்படியோ, எங்கோ தொடர்ந்தது. அதில் ஒருவர் பிரபுத்த கட்யாயான்
(Prabuddha Katyayan), இன்னொருவர் பூர்ண காஷ்யாப் (Purna Kashap) இன்னொருவர்
அஜித் கேஷ் கம்பல் (Ajit Kesh Kambal) - இவர்கள் புத்தர், மஹாவரருக்கு
ீ அதே
ஸ்தானத்தில் அதே அந்தஸ்த்தில், அதே உள்ளார்ந்த உணரக்கூடிய தன்மையுடன்
இருந்தார்கள். இவர்கள் பெயர்களை புத்தர் குறிப்பிட்டுள்ளதால் தெரியும்
அவ்வளவுதான். வேதநூல்கள் எதுவும் காணப்படவில்லை, பின்பற்றுதல் இல்லை,
கோவில்கள் இல்லை, கிறிஸ்துவ தேவாலயங்கள் இல்லை ஆனால் அவர்கள்
மறைந்து, மெல்லிய வழிகளில் இன்னும் தொடர்கிறார்கள். அவர்கள் பலருக்கு
உதவவில்லை என்று யாரும் சொல்லமுடியாது; அவர்கள் உதவியிருக் கிறார்கள்.
அவர்களை பல பேருக்கு தெரியாது, ஆனால் அவர்கள் பல பேருக்கு, எந்த புத்தர்
அளவிற்கும் உதவியிருக்கிறார்கள்.
ஒருநாள் புத்தர் தன் கையில் பூவுடன் வந்தார். அவர் ஒரு ஆன்மீ க சொற்பொழிவைத்
தரவேண்டும். ஆனால் எந்த சொற்பொழிவும் கொடுக்காமல், அவர் பூவைப் பார்த்துக்
கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவர் என்ன செய்கிறார் என்று எல்லோரும்
வியந்தார்கள். அது பத்து நிமிடங்களுக்கு, இருபது, முப்பது நிமிடங்களுக்கு....
தொடர்ந்தது. பின்னர் ஒவ்வொருவரும் அசௌகரியம் அடைந்தார்கள். யாராலும் அவர்
என்ன செய்கிறார் என்பதை சொல்லமுடியவில்லை. அவர்கள் எல்லோரும்
194
இந்த சாவிகள் அனைத்தும், இந்த உலகம், உள்ளூர் உள்ளூராக (Local) இருக்கும் போது
தயாரித்தது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அது எப்போதும் உள்ளூராக
இருந்தது. முதன்முறையாக நாம் முழுமையாக உள்ளூராக இல்லாமல், இப்பிரபஞ்ச
மாகவே இருக்கும் உலகத்தில் இருக்கிறோம். உண்மையாக, முதல்முறையாக நாம்
உலகத்தில் இருக்கிறோம். முன்பு, நாம் எப்போதும் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தின்
198
*************************************************************************************************************
*************************************************************************************************************
*************************************************************************************************************