Professional Documents
Culture Documents
தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள் - விக்கிமூலம்
தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள் - விக்கிமூலம்
இராவணன்
இராவணன் பெயரிலுள்ள மருத்துவ
நூல்களில் சில சிங்கள மொழியின்
வழக்கில் இருந்து வருகின்றன.
பதினைந்தாம் நூற்றாண்டளவில்
சிங்களத்தில் எழுதப்பட்ட வைத்திய
சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம் (
Vaidya Cintamani Bhaisadya Sangrahava )
என்னும் நூல் வைத்திய சிந்தாமணி
என்னும் தமிழ் மருத்துவ நூலைத்
தழுவி எழுதப் பட்டதாகும்.
இராவணனின் நாடிப் பரிட்சை (Nadi
Pariksha), அர்க்கப் பிரகாசம்(Arka
Prakashata ), ஒடிஷா சிகிட்ஷா (Uddisa
Chiktsaya ), ஒடியா சிகிட்ஷா (Oddiya
Chikitsa), குமார தந்த்ரயா (Kumara
Tantraya ), வாடின பிரகாரனயா (Vatina
Prakaranaya ) என்னும் நூல்கள்
சிங்கள மொழியில் இயற்றப்பட்டு
பின்னர் சமஸ்கிருத மொழியில்
மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று
(சிங்) கள எனும் இயக்கத்தைத்
தோற்றுவித்த முனிதாச குமாரதுங்க
கூறியுள்ளார்.
"மீன்தேர் கொட்பின்
பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன
நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ்
மார்பின்" – பதிற்றுப்பத்து 5:
2:1-3
"அஞ்சனக் குன்றுஏய்க்கும்
யானை அமர் உழக்கி
இங்குலிகக் குன்றேபோல்
தோன்றுமே - செங்கண்
வரிவரால் மீன் பிறழும்
காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து"
(களவழி நாற்பது – 7 )
"திப்பிலி தேன்மிளகு
சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால்
தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு
மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து"
– பஞ்சமரபு. செய்.63
"உற்றவன் தீர்ப்பான்
மருந்துஉழைச்
செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே
மருந்து" - திருக்குறள்.950
உற்றவன் - நோயுற்றவன்; தீர்ப்பான் -
மருத்துவன்; மருந்து - மருத்துவனின்
கருவியான நோய்தீர்க்கும் மருந்து;
உழைச் செல்வான் -
மருத்துவனுக்கும் நோயாளிக்கும்
துணையாயிருந்து மருந்தூட்டுபவன்
எனப் பொருள் உரைக்கிறது.
கூட்டு மருந்து
பல மருந்துகளைத் தொகையாகக்
குறிப்பிடும் சொல்
பழந்தமிழரிடையே காணப்படுகிறது.
மருந்துகளைக் குறிக்கும் தொகைச்
சொல் வழக்கில் இருந்திருந்ததைக்
கொண்டு மருந்தியலின் வளர்ந்த
நிலையினை உணரலாம்.
‘நிலவரைப்பு' என்பது மருந்தின்
தொகைச் சொல். இச்சொல்லைப்
பற்றிய கருத்துரை வழங்கிய
அடியார்க்கு நல்லார், சல்லிய கரணி'
சந்தான கரணி, சமனிய கரணி'
மிருத சஞ்சீவினி என்னும் நான்கு
மருந்துகளை உள்ளடக்கியதாகக்
குறிப்பிடுகின்றார்.
தமிழ் மருத்துவத்திற்குப்
பயன்படுகின்ற ஒவ்வொரு மருந்தும்
ஒவ்வொரு குணப் பண்பினைக்
கொண்டது. அதேபோல், அம்
மருந்துகள் ஒன்றோடொன்று கூடி
வினையாற்றும் போது, நேர்வினை,
எதிர்வினை ஆகியவற்றைத்
தோற்றுவிக்கக் கூடியன. இந்த இரு
வகைகளையும் மருத்துவ நூலார்'
நட்பு, பகை என்னும் இரண்டு
பண்புகளாகக் குறிப்பிடுகின்றனர்.
மருந்துப் பொருள்கள் பற்றிய
தேர்ந்த பயிற்சியும் புலமையும்
இருந்தால் மட்டுமே இவற்றை அறிய
முடியும். அவ்வாறு அறிய நேர்ந்தால்
மட்டுமே மருந்துகளைக் கூட்ட
முடியும்.
நாற்பத்தேழு மருந்துப்
பொருள்களும் ஒரே வகையான
பண்புகள் உடையவை என்பதை
அறிந்தே மருத்துவப்
புலமையாளர்களால் இக்கூட்டு
மருந்து உருவாகியிருக்க முடியும்
என்பதால்' அக்காலத்து
மருத்துவர்களின் புலமை
பெறப்படுகிறது.
குழந்தை மருத்துவம்
பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம்
பெற்றிருந்த மருத்துவம்,
எல்லாவிதமான மருத்துவமாகவும்
விரிவடைந்து பரிணாம நிலையில்
வளர்ந்து வந்திருப்பதாகத்
தெரிகிறது. அவ்வாறு வளர்ந்து வந்த
மருத்துவம் குழந்தை மருத்துவத்
துறையையும் தன்னகத்தே
கொண்டதாகக் திகழ்ந்திருக்கிறது.
இளங்குழந்தைகளுக்குச் செய்யப்
படுகின்ற மருத்துவத்தை மிகவும்
தேர்ந்தநிலை பெற்றதாகவே கருத
வேண்டும். குழந்தைகள்,
நோயையோ, நோயின் குறியையோ
கூறும் நிலையில் இருப்பதில்லை.
குறிப்பறிந்தும்' சோதித்தறிந்துமே
மருத்துவம் பார்க்க
வேண்டியிருக்கும். அம்மாதிரியான
மருத்துவத்தை மனையுறையும்
பெண்டிரே செய்தனர் என்பதற்குச்
சீவக சிந்தாமணி சான்றாகிறது.
ஏலாதி
‘ஏலாதி' என்பது ஏலம், இலவங்கம்'
சிறுநாகப்பூ, மிளகு' திப்பிலி, சுக்கு
ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப்
பெயராகும். இதன் பாடல்கள் ஆறு
கருத்துகளைக் கொண்டு ஒரு
நெறியை உணர்த்துவதாக
அமையும்.
போகர்
திருமந்திரச் சிறப்புப்பாயிரத்தில்
போகரைப் பற்றிய குறிப்பு
காணப்படுவதாலும், திருமூலரின்
நூலைக் கண்டே 7000 இயற்றினேன்
என்று போகர் கூறுவதாலும் போகர்
திருமூலருக்குச் சமகாலத்தவர்
எனலாம்.
சீனமொழியில் போகர்
வரலாற்றுச் செய்தி:
在关于伯葛的所有故事中,最不可思议的
一个是,据说公元300年的时候他游历到
中国,借用一个中国年轻人的尸体复活,
之后在中国的大地上传授他的学说,成了
道教的创始人老子。他在中国留下《道德
经》以后,就带着一个名叫“裕”(YU)的
中国弟子回到了印度。泰米尔@纳德邦的
帕拉泥山(PALANI MALAI)成为他活动
的中心。 //
மொழி பெயர்ப்பு
புலிப்பாணி
கலியாண்டு தமிழரின் தொடராண்டு
முறையாக விளங்கியது.
கலியாண்டு கி.மு.3102 இல்
தொடங்குகிறது. இக்கலியாண்டு 205
இல் புலிப்பாணிச் சித்தர் வாழ்ந்தார்
என்னும் குறிப்பு (புலிப்பாணி
வைத்தியம் – 500. பா.145)
காணப்படுவதால் இவர் கி.மு.2897
இல் வாழ்ந்தார் எனலாம்.
கருவூரார், கொங்கணவர்,
சட்டைமுனி, இடைக்காடர்
போகர் சீனாவுக்குச் செல்லுமுன்,
கருவூரார், கொங்கணவர்,
சட்டைமுனி, இடைக்காடர் ஆகிய
இவர்களுக்கு ஆசிரியராக இருந்தார்
என்பதால், இவர்களும் கி.மு.2897
ஆண்டளவில் வாழ்ந்தனர் எனலாம்.
கோரக்கர் சித்தர்
சோழநாட்டில் காவிரி நதிக்கரைக்கு
அருகில் அமைந்துள்ள
பரூர்ப்பட்டியில், பரிவிருத்தி
நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள்,
தசமி திதி, பரணி நாளில் சமாதி
அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறார்.
இவ்வாண்டைக் கலியாண்டாகக்
கொண்டால் கி.மு. 2674 உம்,
கொல்லம் ஆண்டாகக் கொண்டால்
கி.பி. 1233 ஆகிறது. கோரக்கர்
திருமூலரையும் அகத்தியரையும்
குறிப்பிடுவதால் கொல்லம்
ஆண்டாகக் கருத முடியாது. எனவே,
கோரக்கர் கி.மு. 2694 ஆம் ஆண்டு
என்று கொள்வதே சரியாக
இருக்கும்.
“தொல்காப்பியம் நெடுகலும்
‘என்மனார் புலவர்’ ‘நுண்ணிதின்
உணர்ந்தோர்’ ‘மொழிப’
‘என்றிசினோரே’ ‘நுனித்தகு புலவர்
கூறிய நூலே’ என்று
முடித்திருப்பதால், தொல்காப்பியம்
கூறும் இலக்கணச்
செய்திகளெல்லாம் முந்து
நூல்களில் கண்டவையே என்பது
தெளிவு”. 1
"செந்தமிழ் இயற்கை
சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட
எண்ணிப்
புலந்தொகுத் தோனே
போக்கறு பனுவல்" - சிறப்புப்
பாயிரம்.
என்னும் பாயிரச் சூத்திரத்தினால்,
பழந்தமிழகத்தில் நூல்கள் பல
பல்கியிருந்தன எனலாம். அவ்வகை
நூல்களைக் கற்றறிந்து
வரன்முறைகளை ஆராய்ந்து
தொகுக்கப் பெற்ற நூலாகத்
தொல்காப்பியமாக இலங்குகிறது.
தொல்காப்பியம்
இயற்றுவதற்குத் திட்டமிடுதல்
ஒரு செயலைச் செய்வதற்குப்
பொருள்கள் (திருக்.675)
தேவைப்படுவதைப் போலத்
தொல்காப்பியம் இயற்றுவதற்குத்
தேவையாயிருந்த ‘பொருள்கள்’
தமிழ் மருத்துவத்தின் தொன்மைகள்
மூலப்பொருளாக அமைந்துள்ளன.
"மூன்றே பொருளாய்
முடிந்தது அண்டம்
மூன்றே பொருளாய்
முடிந்தது பிண்டம்
மூன்றே பொருளாய்
முடிந்தது மருந்து
மூன்றே பொருளாய்
முடிந்தது வாதமே" -
திருமந்திரம்.
அண்டம், பிண்டம், மருந்து, வாதம்
ஆகியவை நான்கும் மூன்று
பொருளாய் முடிந்தது4 என்கிறது,
தமிழ் மருத்துவம். அந்த மூன்று
மூலப்பொருள்களைக்
கருத்திற்கொண்டு
தொல்காப்பியத்தின் அதிகாரங்கள்
மூன்றாக அமைந்தன.
மனித உடற்பகுதிகளில்
தொடர்புடைய விண்மீன்களின்
எண்ணிக்கை இருபத்தேழு
என்பதால், அவ்வெண்கள்
தொல்காப்பிய இயல்களின்
எண்களாகக் கொள்ளப்பட்டன.
"எழுத்தெனப் படுப
அகரமுத னகர விறுவாய்
முப்பஃ தென்ப" - நூன்மரபு. 1
அகரம் தானும் இயங்கித்
தனிமெய்களை இயக்குதற்
சிறப்பான் முன் வைக்கப்பட்டது.
னகரம் வீடுபேற்றிற்குரிய
ஆண்பாலை உணர்த்துதற்
சிறப்பான் பின் வைக்கப்பட்டது
என்பர் (இளம்பூரணம். பக்.26)
உள்ளங்கை இரண்டு
உடையவர்க்குப் புறங்கையும்
இரண்டாகத்தாம் இருக்கும்.
நான்காக முடியாது என்று
நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.
"எல்லா மொழிக்கும்
உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின்
உருபுகொளல் வரையார்”
(புணரியல். 141)
உயிரும் உயிரும் புணருமிடத்து
உடம்படுமெய் வடிவு தோன்றும்
என்று இலக்கணம் வகுக்கும்
தொல்காப்பியம், அ+இ = ஐ என்றும்,
அ+உ = ஔ என்றும் கூறப்பட்டதன்
காரணம் யாதெனின்,
உயிரெழுத்தின் எண்ணிக்கை
பன்னிரண்டாக அமைய வேண்டும்
என்பதுவே யாகும். 6 உயிர்
என்றாலே பன்னிரண்டு தான்.
அதாவது, உடம்பில் உயிர்
நிலைத்திருக்க வேண்டுமென்றால்,
சூரிய கலையில் சுவாசத்தின் அளவு
பன்னிரண்டாக அமைய வேண்டும்.
தமிழ் மருத்துவம் குறிப்பிடும் சூரிய
கலையின் அளவு உயிரோட்டத்தின்
அளவாகக் கருதிக்கொண்டு
உயிரெழுத்துகள் பன்னிரண்டாக
அமைக்கப்பட்டுள்ளன. உடம்பினுள்
இயங்கும் சந்திரன், சூரியன்,
அக்கினி ஆகிய மூன்று கலைகளும்
பதினாறு, பன்னிரண்டு, பத்து எனும்
அளவுகளைக் கொண்டுள்ளன என்று
மருத்துவம் குறிப்பிடுகிறது.
உயிரும் மெய்யும்
உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு
விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை
21600 ஆகும். இதுவே,
உயிரெழுத்தையும்
மெய்யெழுத்தையும் பெருக்கினால்
கிடைக்கின்ற எண்களாகும்.
12 x 18 x 100 = 21600
பத்துவகையான சுத்திகளைக்
கொண்டு செய்யும் மருந்துகள்
மூன்று. அந்த மருந்தே வீர மருந்து,
விண்ணோர் மருந்து, நாரிமருந்து
என்னும் கற்பங்களாகும். அவை
முறையே கற்பம், யோக கற்பம்,
ஞான கற்பம் என்பனவாகும்.
என்று கூறுகிறது.
ஐந்து திணையும் ஆறு
பொழுதும்
தொல்காப்பியம் கூறும்
பெரும்பொழுதும் சிறுபொழுதும்
ஐந்திணைக் கோட்பாடும், தமிழ்
மருத்துவத்தில் சிறப்பாகக்
கூறப்படுகின்றன. நோய்களைக்
கணிப்பதற்குச் சிறுபொழுதுகளும்,
மருந்துகளைச் செய்வதற்கும்
நோய்பரவுதலை அறிவதற்கும்
பெரும்பொழுதுகளும், நோயாளர்
வாழும் பகுதியைக் கொண்டு
நோயை அறிவதற்கு
இருபொழுதுகளும் தமிழ்
மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.
காலக்கணியர்கள்
மூவகைக் காலத்தையும் ஆய்ந்து
கூறும் காலக் கணிதர்கள்,
தொல்காப்பியக் காலத்திற்கும் முன்
இருந்தார்கள் என்பதை,
என்று, கூறுகிறது.
கொடிநிலை
சிந்துவெளியில் கண்டெடுக்கப்
பெற்ற முத்திரைகளில்,
கொடிநிலையும் ஒன்றாகும்.
அம்முத்திரையைச் ‘சகம்பரி’ என்றும்
அதுவே ‘லதா சாதனம்’ என்றும்
கூறப்படுகிறது.
‘பையுள் சிறுமையும்
நோயின் பொருள’ -
தொல்.சொல்.உயிரி. 824.
பையுள் என்பது வலியைத் தருகின்ற
நோயைக் குறிக்கும் சொல்லாகும்.
இக்காலத்தில் உயிர்க்கொல்லி
மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்ற
வேம்பு சிந்துவெளி நதிக்கரை
நாகரிக மக்களிடத்திலும்
காணப்பட்டுள்ளது. வேப்பிலையைச்
சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி
வந்திருக்கின்றனர் என்று அறிஞர்
தீட்சிதர் கூறுகிறார்.19
குறிப்புகள்:
2. திருக்குறள்.675
மெய்யெழுத்து நின்றியங்கு
மெல்லத்தான் – வையத்
திருபாலு நாற்பதோ டேழ்பாதி
நீக்கிக்
கருவாகும் ஆதாரம் காண். -
பஞ்சமரபு. 42.
6. ‘பத்தும் இரண்டும் பகலோன்
உயிர்கலை’
இட வாய்பாடு
கால வாய்பாடு
16.
வஞ்சி - களைப்பைப்போக்கி
இடுப்பை உறுதிப்படுத்தும்
தும்பை - மயக்கத்தைத்
தெளிவிக்கும்
வாகை - புண்களை ஆற்றி
காமத்தைப் பெருக்கும்
காஞ்சி - காமத்தை அடக்கும்
பனை - சுரத்தையும் நீர்க்கட்டையும்
போக்கும்
ஆத்தி - வேள், வாள், ஈட்டி
புண்ணைக் குணப்படுத்தும்
வேம்பூ - மூர்ச்சையைப் போக்கும்.
"https://ta.wikisource.org/w/index.php?
title=தமிழ்_மருத்துவ_வரலாற்றுத்_தொன்
மைகள்&oldid=1407105" இருந்து
மீள்விக்கப்பட்டது