சைவ தூஷணப் பரிகாரம் எல்லாம் இன்று எழுதப்பட்டால் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். ஆனால் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ்ப் புத்தகம் என்றால் எனக்கு புரட்டிப் பார்க்க வேண்டும் என்றாவது தோன்றும். அப்படித்தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன்.
நாவலர் எல்லாம் எனக்கு வெறும் பேர்தான். தமிழறிஞர், ராமலிங்க அடிகளோடு அருட்பா-மருட்பா என்று அடித்துக் கொண்டவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் எழுதிய புத்தகங்களில் முதன்முதலாகப் படித்தது இதுதான். pdf கோப்பாகத்தான் படித்தேன். 1956-இல் எட்டாம் பதிப்பாக வந்ததாம்.
அன்றைய பாதிரிகள் சைவத்தை இழிவாகப் பேசுவதால் கோபம் கொண்டு அவர்கள் வாதங்களை பைபிளை வைத்தே மறுத்திருக்கிறார்.
என்னைக் கவர்ந்தவற்றில் முதல் அம்சம் நாவலரின் நடை. நல்ல தமிழ். அதுவும் மேடையில் பேசும் பாணியில் எழுதுவதுதான் இவர் ஸ்டைல் போலிருக்கிறது. திரு.வி.க. ரா.பி. சேதுப்பிள்ளை, ஏன் இரண்டு தலைமுறைகளுக்கு முற்பட்ட திராவிடக் கழகப் பேச்சாளர்களுக்குக் கூட இவர்தான் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
இரண்டாவது அம்சம் லாஜிக். இந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரை இருக்கிறது. யாரோ சைவப் பிரகாசசமாசீயர் என்பவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தை “சிவனே சொல்லியாயிற்று சைவம்தான் சிறந்த மதம், பாதிரியே சும்மா கிட” என்று சுருக்கமாக விவரிக்கலாம். நாவலரின் மூளையோ கொஞ்சம் நவீன காலத்தது. நான் விக்ரகத்தை புனிதமானது என்று கருதினால் பைபிள் Ark, ஜெருசலத்தின் கோவில்கள் ஆகியவை புனிதமானவை என்று சொல்கின்றனவே, இது புனிதமான இடம், செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வா என்று மோசசிடம் இறைவன் ஆணையிடவில்லையா, ஏபல்-கெய்ன் காலத்திலிருந்து கடவுளுக்கு படையல் வைப்பதில்லையா, எனக்கு பிரசாதம் என்றால் உனக்கு ஞானஸ்னான அப்பம் இருக்கிறதே என்றெல்லாம் மாற்றுக் கேள்விகள் எழுப்புகிறார். சைவர்களிடம் பாதிரிகள் கண்டுபிடிக்கும் “அநாகரீக, இன்னும் பக்குவப்படாத காலத்து காட்டுமிராண்டிப் பழக்கவழக்கங்கள்” அத்தனையும் பைபிளில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன என்று நிறுவுகிறார்.
என்னைப் பொறுத்த வரையில் நடைக்காகவே புத்தகத்தைப் படிக்கலாம். pdf கோப்பை இணைத்திருக்கிறேன்..
சைவ தூஷணப் பரிகாரம் எல்லாம் இன்று எழுதப்பட்டால் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். ஆனால் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ்ப் புத்தகம் என்றால் எனக்கு புரட்டிப் பார்க்க வேண்டும் என்றாவது தோன்றும். அப்படித்தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன்.
நாவலர் எல்லாம் எனக்கு வெறும் பேர்தான். தமிழறிஞர், ராமலிங்க அடிகளோடு அருட்பா-மருட்பா என்று அடித்துக் கொண்டவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் எழுதிய புத்தகங்களில் முதன்முதலாகப் படித்தது இதுதான். pdf கோப்பாகத்தான் படித்தேன். 1956-இல் எட்டாம் பதிப்பாக வந்ததாம்.
அன்றைய பாதிரிகள் சைவத்தை இழிவாகப் பேசுவதால் கோபம் கொண்டு அவர்கள் வாதங்களை பைபிளை வைத்தே மறுத்திருக்கிறார்.
என்னைக் கவர்ந்தவற்றில் முதல் அம்சம் நாவலரின் நடை. நல்ல தமிழ். அதுவும் மேடையில் பேசும் பாணியில் எழுதுவதுதான் இவர் ஸ்டைல் போலிருக்கிறது. திரு.வி.க. ரா.பி. சேதுப்பிள்ளை, ஏன் இரண்டு தலைமுறைகளுக்கு முற்பட்ட திராவிடக் கழகப் பேச்சாளர்களுக்குக் கூட இவர்தான் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
இரண்டாவது அம்சம் லாஜிக். இந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரை இருக்கிறது. யாரோ சைவப் பிரகாசசமாசீயர் என்பவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தை “சிவனே சொல்லியாயிற்று சைவம்தான் சிறந்த மதம், பாதிரியே சும்மா கிட” என்று சுருக்கமாக விவரிக்கலாம். நாவலரின் மூளையோ கொஞ்சம் நவீன காலத்தது. நான் விக்ரகத்தை புனிதமானது என்று கருதினால் பைபிள் Ark, ஜெருசலத்தின் கோவில்கள் ஆகியவை புனிதமானவை என்று சொல்கின்றனவே, இது புனிதமான இடம், செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வா என்று மோசசிடம் இறைவன் ஆணையிடவில்லையா, ஏபல்-கெய்ன் காலத்திலிருந்து கடவுளுக்கு படையல் வைப்பதில்லையா, எனக்கு பிரசாதம் என்றால் உனக்கு ஞானஸ்னான அப்பம் இருக்கிறதே என்றெல்லாம் மாற்றுக் கேள்விகள் எழுப்புகிறார். சைவர்களிடம் பாதிரிகள் கண்டுபிடிக்கும் “அநாகரீக, இன்னும் பக்குவப்படாத காலத்து காட்டுமிராண்டிப் பழக்கவழக்கங்கள்” அத்தனையும் பைபிளில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன என்று நிறுவுகிறார்.
என்னைப் பொறுத்த வரையில் நடைக்காகவே புத்தகத்தைப் படிக்கலாம். pdf கோப்பை இணைத்திருக்கிறேன்..
சைவ தூஷணப் பரிகாரம் எல்லாம் இன்று எழுதப்பட்டால் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். ஆனால் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ்ப் புத்தகம் என்றால் எனக்கு புரட்டிப் பார்க்க வேண்டும் என்றாவது தோன்றும். அப்படித்தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன்.
நாவலர் எல்லாம் எனக்கு வெறும் பேர்தான். தமிழறிஞர், ராமலிங்க அடிகளோடு அருட்பா-மருட்பா என்று அடித்துக் கொண்டவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் எழுதிய புத்தகங்களில் முதன்முதலாகப் படித்தது இதுதான். pdf கோப்பாகத்தான் படித்தேன். 1956-இல் எட்டாம் பதிப்பாக வந்ததாம்.
அன்றைய பாதிரிகள் சைவத்தை இழிவாகப் பேசுவதால் கோபம் கொண்டு அவர்கள் வாதங்களை பைபிளை வைத்தே மறுத்திருக்கிறார்.
என்னைக் கவர்ந்தவற்றில் முதல் அம்சம் நாவலரின் நடை. நல்ல தமிழ். அதுவும் மேடையில் பேசும் பாணியில் எழுதுவதுதான் இவர் ஸ்டைல் போலிருக்கிறது. திரு.வி.க. ரா.பி. சேதுப்பிள்ளை, ஏன் இரண்டு தலைமுறைகளுக்கு முற்பட்ட திராவிடக் கழகப் பேச்சாளர்களுக்குக் கூட இவர்தான் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
இரண்டாவது அம்சம் லாஜிக். இந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரை இருக்கிறது. யாரோ சைவப் பிரகாசசமாசீயர் என்பவர் எழுதி இருக்கிறார். அவருடைய வாதத்தை “சிவனே சொல்லியாயிற்று சைவம்தான் சிறந்த மதம், பாதிரியே சும்மா கிட” என்று சுருக்கமாக விவரிக்கலாம். நாவலரின் மூளையோ கொஞ்சம் நவீன காலத்தது. நான் விக்ரகத்தை புனிதமானது என்று கருதினால் பைபிள் Ark, ஜெருசலத்தின் கோவில்கள் ஆகியவை புனிதமானவை என்று சொல்கின்றனவே, இது புனிதமான இடம், செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வா என்று மோசசிடம் இறைவன் ஆணையிடவில்லையா, ஏபல்-கெய்ன் காலத்திலிருந்து கடவுளுக்கு படையல் வைப்பதில்லையா, எனக்கு பிரசாதம் என்றால் உனக்கு ஞானஸ்னான அப்பம் இருக்கிறதே என்றெல்லாம் மாற்றுக் கேள்விகள் எழுப்புகிறார். சைவர்களிடம் பாதிரிகள் கண்டுபிடிக்கும் “அநாகரீக, இன்னும் பக்குவப்படாத காலத்து காட்டுமிராண்டிப் பழக்கவழக்கங்கள்” அத்தனையும் பைபிளில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில் இருக்கின்றன என்று நிறுவுகிறார்.
என்னைப் பொறுத்த வரையில் நடைக்காகவே புத்தகத்தைப் படிக்கலாம். pdf கோப்பை இணைத்திருக்கிறேன்..