You are on page 1of 2

வீடு ஒத்தி ஒப்பந்த பத்திரம்

2019 ம் வருடம் ஜூலை மாதம் 18 ஆம் தேதி

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பாவா நகர், கருங்காலகுடி. கிராமத்தை சார்ந்த ஜனாப் S. சாதிக்
பாட்ஷா அவர்கள் 1வது பார்ட்டியாகவும் (வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் கதவு எண் 269, அண்ணாநகர், வேம்பார்பட்டி.
கிராமத்தை சார்ந்த K. சர்புதீன்
அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (ஒத்திக்கு வீடு எடுப்பவர்)

மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி குடியிருப்பதற்காக வேண்டி
1வது பார்ட்டியினை அணுகி ஒத்திக்கு கேட்க,

அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு ஒத்திக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின்
முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட ஒத்தி ஒப்பந்தப்
பத்திரம் என்னவென்றால்

1. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று (18.07.2019) 200000 ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்
ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி
தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக்
கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது.

2. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி
வீட்டினை காலி செய்யும் சமயத்தில் ஒப்படைக்க வேண்டும்.
 3. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார
அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

4. இந்த ஒத்தி ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 36 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது
01.08.2019 தேதி முதல் 31.08.2022- தேதி வரையிலான 36 மாத காலத்திற்கு உட்பட்டது.

5. 36 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 3 மாத
முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 3 மாத
முன்னறிவிப்பு கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

6.மேற்படி ஒத்தி ஒப்பந்தப் பத்திரத்தை 36 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில்
புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

7. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன்
படுத்த்தக் கூடாது.

8. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ
விடக்கூடாது.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு ஒத்தி
ஒப்பந்தப் பத்திரம்.

1வது பார்ட்டி 2வது பார்ட்டி


(வீட்டின் உரிமையாளர்) ( ஒத்திக்கு வீடு எடுப்பவர்)

சாட்சிகள்

1)

2)

You might also like