You are on page 1of 3

கடை வாடகை ஒப்பந்த பத்திரம்

2017 ம் வருடம் மே மாதம் 01 ஆம் தேதி திருவண்ணாமலை திரு.பொன்முடி அவர்கள் 1 வது


பார்ட்டியாகவும் (கடையின் உரிமையாளர்)

சொந்த ஊரான திருவண்ணாமலை வட்டம், சின்ன கோட்டங்கல் கிராமத்தில்-ல் வசித்து வரும் திரு.ரா.ஏழுமலை
அவர்கள் 2 வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)

மேற்சொன்ன 1 வது பார்ட்டிக்குச் சொந்தமான 70/A,சோமவரகுல தெரு, செங்கம் சாலை, திருவண்ணாமலை


முதல் தளத்தில் அமைந்துள்ள கடையில் நம்மில் 2 வது பார்ட்டி கடை வாடகைக்கு வேண்டி 1 வது பார்ட்டியினை
அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு
ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம்
என்னவென்றால்

1. நம்மில் 2 வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் 2500/-


பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1 வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1 வது பார்ட்டியிடம் 2 வது பார்ட்டி இன்று ரூபாய்.50000/- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார்.
மேற்படிதொகையை நம்மில் 2 வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1 வது பார்ட்டி
திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது.
3. 1 வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2 வது பார்ட்டி மேற்படி
வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
 
மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1 வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை
கழித்துக் கொண்டு 2 வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும். 

4. 2 வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார
அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய்.100/-


பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1 வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 23 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது
01/05/2017 தேதி முதல் 30/03/2019 தேதி வரையிலான 23 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 23 மாத காலக் கெடுவிற்குள் 1 வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2 வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு
கொடுக்க வேண்டும். அதே போல் 2 வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு
கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 23 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில்
புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2 வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன்
படுத்த்தக் கூடாது.

10. 2 வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ
விடக்கூடாது.

11. 2 வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை
காலி செய்ய 1 வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை
ஒப்பந்தப் பத்திரம்.

வாடகை சொத்து விபரம்


NO-70/A, SOMVARA KULA STREET, MPR COMPLEX, CHENGAM ROAD,
THIRUVANNAMALAI - 606601

1 வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)
2 வது பார்ட்டி
(வாடகைதாரர்)

சாட்சிகள்

1)

2)

You might also like