You are on page 1of 23

1.

கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam – Siddha and Varmam


Books

4-5 minutes

கொண்டைக்கொல்லி வர்மம்

இடம் :

தலையின் உச்சியில் உள்ளது.

வேறு பெயர்கள் :

1. கொண்டைக்கொல்லி வர்மம் (வர்ம கண்ணாடி – 500)


2. உச்சி வர்மம் (வர்மநிதானம் – 500)
3. பதப்பு வர்மம் (வர்ம சூடாமணி/வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
4. உச்சிபதப்பு வர்மம் (வழக்கு)
5. துடிக்காலம் (வார்மாணி நாலுமாத்திரை)
6. தேரை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)
7. பிரமானந்தம் (வர்ம விதி)
8. அதிபதி மர்மம் (அஷ்டாங்க ஹிருதயம்)
9. மேட (மேஷ) வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
10. பேய் காலம் (வழக்கு)

பெயர்க்காரணம் :

தலையில் உச்சியில் அமைந்துள்ளதால் உச்சி வர்மம் எனப்படுகிறது.


உச்சியில் கொண்டை முடியும் இடத்தில் அமைந்திருப்பதால் கொண்டைக்
கொல்லி வர்மம் என்று வழங்கியிருக்கலாம். (தலை முடிந்த கொண்டைக்
கொல்லி, வர்மசாரி 205) குழந்தைகளுக்கு இவ்வர்மம் அமைந்திருக்கும்
இடத்தில் என்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து
இணைந்திருக்காததாகையால் அவ்விடம் மேலும் கீ ழும் துடிப்பதைக்
காணலாம். எனவே துடிகாலம் எனப்படுகிறது. இதை உச்சிப்பதப்பு என்னும்
அழைப்பர். இவ்விடத்தில் அடிகொண்ட உடனே ஆளைக் கொன்று
விடுமாகையால் கொண்டை கொல்லி எனவும் வழங்கப்பட்டிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘உச்சி நடுவில் கொண்டக் கொல்லி

ஒட்டை யதற்குக் கீ ழ் சீறுங்கொல்லி’

(வர்ம கண்ணாடி-500)

2. ‘ஆமென்ற சிரசு நடு கொண்டைக்கொல்லி

அதனொன்னு ஒட்டையின் கீ ழ் சிறுங்கொல்லி’

(வர்ம பீரங்கி-100)

3. ‘கேளப்பா சிரசில் நடு கொண்ட கொல்லி

கீ ர்த்தி பெற ஒட்டையின் கீ ழ் சீறுங்கொல்லி’

(வர்மசாரி-205)

4. ‘பராபரத்தின் தியானமது பணிந்து கேளு

பாரப்பா உச்சி நடுமையம் தன்னில் உச்சி வர்மம்’

(வாகட நிதானம்)

5. ‘கேளப்பா உச்சி வர்ம தலத்தைக் கேளு

கிருபையுடன் நடு நெற்றிதனியிலிருந்து

ஆளப்பா அவரவர் கையதனால் விரல் எட்டு

அளந்து மேல் பார்த்திடவே தலம் தான் காணும்’


(வர்ம நிதானம்)

6. ‘கேளே நீ சிரசு வட்டம் நடுவில் தானே

கிருபையுடன் பதப்பு வர்மம்…………’

(வர்மசூடாமணி)

7. ‘………………… பொருந்துவர்மம் காணலாகும்

பட்சமுடன் அதற்கு அஞ்சு விரலின் மேலே

பதப்புவர்மம் அதிலிருந்து……………….’

(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

8. ‘கேளப்பா உச்சியுட பதப்புதனில் தேரை வர்மம்’

(வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

9. ‘சீறும் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலளவுக்கு

மேலாக கொண்டைக்கொல்லி வர்மம்”  (வர்ம விளக்கம்)

10. ‘உச்சியில் துடிக்காலம்…..’ (வர்மாணி நாலு மாத்திரை)


11. ‘உச்சி நடுவில் கொண்டைக்கொல்லி அதற்கு பன்னிரெண்டு

விரலளவுக்கு கீ ழே பின்புறம் சீறுங்கொல்லி…..’  (வர்ம விரலளவு நூல்)

12. ‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறுங்கொல்லி உட்படச்


சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காகமடக்கி (8 விரலளவு) திலர்த
காலத்திலிருந்து மேல நோக்கினால் அளந்தால் உச்சி வர்மம்
அறியாலாம்’ (வர்ம நூலளவு நூல்)
13. ‘கூர்ந்து நிற்கும் கொண்டைக் கொல்லி தலமேதென்றால்

ஆர்ந்து உச்சிப்பட்டம் அருகில் நின்று


சேர்ந்து மூன்று விரல் சூட்சமாக பின்பாகம்

சார்ந்திருக்கும்…………..’           (உற்பத்தி நரம்பறை-1000)

14. ‘கேளு நீ பாழ் நடுவர்மம் மேட வர்மம்

கீ ர்த்தியுற்ற மேடமென்ற கொண்டைக்கொல்லி’                               (வர்ம


பஞ்சீகரண பின்னல்-1500)

15. ‘நெற்றிக்கு மேலதாகி நேரேழுமுச்சி தன்னில்

சுற்றேழு நரம்புக்கெல்லம் சூழ்ந்திடுமிடமுமாகி                               மற்றது


பிரமானைந்த………….’       (வர்ம விதி)

விளக்கம் :

இவ்வர்மம் தலையின் நடுவில் திலர்த வர்மத்திலிருந்து எட்டு


விரலளவுக்கு மேலாகவும், சீறும் கொல்லி வர்மத்திலிருந்து ஓர் ஓட்டைச்
சாணுக்கு (12 விரலளவு) மேலாகவும் அமைந்துள்ளது.
கொண்டைக்கொல்லி வர்மம், உச்சிவர்மம், பதப்பு வர்மம், தேரை வர்மம்
ஆகிய நான்கு வர்மங்களும் ஒரே இருப்பிடத்தைக் கொண்டிருப்பதாலும்,
ஒரே குறி குணங்களைக் கொண்டிருப்பதாலும் இந்நான்கு வர்மங்களும்
ஒன்றே என்பது தெளிவாகிறது.

Anatomy : The Bregma of the skull. The point of intersection of sagital and coronal sutures

குழந்தைகளில் இப்பகுதியில் துடிப்பு காணப்படும். இது உச்சி பதப்பு


(Fonticuli) என்று அழைக்கப்படுகிறது. இவ்வர்மம் இரு Parietal என்புகளும்,
முன்பக்கமுள்ள ஒரு Frontal என்பு ஆக மூன்று என்புகளும்
சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.

மாத்திரை :

ஒரு ஒட்டையும் இரு நெல்லிடையும் வாங்கி இடித்தால் விழும் மயங்கும்.

2. சீறும்கொல்லி வர்மம் – Siddha and Varmam Books


3-4 minutes

2. 2. சீறும்கொல்லி வர்மம்

வேறு பெயர்கள் :

1. சீறும் கொல்லி வர்மம் (வர்ம பீரங்கி-100)


2. சிடை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

பெயர்க்காரணம் :

இந்த வர்மத்தில் அடிபட்டால், நோயாளி தலையை அங்குமிங்கும்


உருட்டுவான். மேலும் வாயில் நுரை தள்ளும், இது காண்பதற்கு
சீறுவதைப் போலத் தோன்றும். இதனால் இவ்வர்மத்திற்கு
‘சீறும்கொல்லி’ எனப் பெயர் வந்திருக்கலாம்.

இடம் :

பின் தலைப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

1. கேளப்பா சிரசில் நடு கொண்டக் கொல்லி

கீ ர்த்தி பெற ஒட்டயின் கீ ழ் சீறும் கொல்லி

நாளப்பா நாலு விரலின் கீ ழ் பிடரிக்காலம்’    (வ.ஒ.மு. சாரி-1500)

2. ‘ஆமென்ற சிரசு நடு கொண்டைக் கொல்லி

அதனொன்று ஒட்டையின் கீ ழ் சீறும் கொல்லி

ஓமென்ற அங்குலம் நால் கீ ழ் பிடரி வர்மம்’      (வர்ம பீரங்கி-100)

3. ‘தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி


சாண் ஒட்டை அதற்குக் கீ ழ் சீறுங்கொல்லி

ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீ ழ்

உற்றதொரு பிடரி வர்மம் ஆகும்பாரு’       (வர்ம கண்ணாடி500)

4. ‘தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி

சாணொட்டை அதன் கீ ழே சீறுங்கொல்லி

ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீ ழே

உற்றதொரு பிடரிவர்மமாகும் பாரு’    (வர்ம திறவுகோல்)

5. ‘சேரவே தலையில் மத்தி செகித்ததோற் கொண்டைக்கொல்லி

பூரவே சாணொட்டைக்குள் புகன்றிடும் சீறும்கொல்லி

தாரவே நால்விரலுக்கு தாழவே பிடரி வர்மம்’ (வ.லா. சூத்திரம்-300)

6. ‘கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலுக்குக்

கீ ழ் சீறுங்கொல்லி இதற்கு நாலு விரலுக்குக் கீ ழ் பிடரிவர்மம்’

(வர்ம விரலளவு நூல்)

7. ‘கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு

விரலளவுக்குக் கீ ழே பின்புறமாக சீறும்கொல்லி வர்மம்….’

(வர்ம விளக்கம்)

8. ‘உச்சியிலுள்ள துடி காலத்திலிருந்து முன் பக்கம்

கொம்பேறிக் காலமும் பின்பக்கம் சீறும் கொல்லி வர்மமும்

சம அளவு தூரத்தில் அமைந்துள்ளது’.       (வர்மாணி நாலுமாத்திரை)


9. ‘கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறும்கொல்லி

உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) இரண்டாக

மடக்கி (16 விரலளவு) திலர்த காலத்திலிருந்து (பக்கவாட்டில்)

அளந்தால் சீறும் கொல்லி அறியலாம்’        (வர்ம நூலளவு நூல்)

10. ‘செய்யவே ஒட்டையின் கீ ழ் உச்சி தன்னில்

திடமான சிடைவர்மம் தன்னைக்கேளு’ (வ.ஞா.ஒ.மு.ச.சூ-2200)

விளக்கம் :

இவ்வர்மம் கொண்டைக் கொல்லி (துடி காலம்) வர்மத்துக்கு ஓர்


ஒட்டைக்கு அல்லது ஒரு சாணுக்கு (12 விரலளவு) பின்புறமாக
அமைந்துள்ளது.

(பொதுவாக ‘ஒட்டை’ என்பது 10 விரலளவு என்ற கணக்கில்


கொண்டால்கூட தலை போன்ற வளைந்த பகுதிகளில் ஒட்டை அளவை
அளக்கும் போது விரிக்கப்பட்ட இரு விரல் நுனிகளுக்கிடைப்பட்ட நேரடி
நீளத்தை (10.வி.அ.) கணக்கிட்டாமல் மண்டையின் வளைவை மனதில்
கொண்டு விரல்களின் ஓரமாகவே அளக்க வேண்டும். இப்படி அளக்கும்
போது 12 வி.அ. இருக்கும்.) மேலும் இவ்வர்மம் பிடரி வர்மத்துக்கு நான்கு
விரலளவுக்கு மேலாக அமைந்துள்ளது. திலர்த வர்மத்திலிருந்து 16
விரலளவுக்கு பக்கவாட்டில் உள்ளது. இது ஒற்றை வர்மமாகும்.

‘வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200’ என்ற நூல் சிடைவர்மம் என்ற


பெயரில் ஒரு வர்மத்தைக் குறிப்பிடுகிறது. இது உச்சியிலிருந்து ஒர்
ஒட்டைக்கு கீ ழே (பின்னால்) உள்ளது என்று குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் அடிப்பட்டால் தலை உருட்டல், வாயில் நுரைதள்ளல்
போன்ற குறிகுணங்கள் ஏற்படும் இவ்வர்மத்தின் இருப்பிடம் மற்றும் குறி
குணங்கள் சீறும் கொல்லி வர்மத்தோடு ஒத்துப் போவதால் இரண்டும் ஒரு
வர்மமே என்பது தெளிவாகிறது.
உடற்கூறு : The Lambda of the skull. The point of intersection of sagittal and Lambdoid
Sutures இவ்வர்மம் இரு Parietal என்புகளும். பின்புறமுள்ள ஒரு Occipital என்பு
சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. தலையில் அல்லது ஒரு மண்டை
ஓட்டின் பின் பகுதியைத் தடவிப் பார்த்தால் இவ்விடம் சற்றே மேடாகத்
தெரியும்.

மாத்திரை :

ஏழு விரல் அகலம் வாங்கி, அடிக்கவோ குத்தவோ செய்தால் உடன்


மயங்கும்.

------------------------------------------------------
siddhabooks.com

3. பிடரி வர்மம் – Siddha and Varmam


Books
3-4 minutes

வேறு பெயர்கள் :

1. பிடரிக் காலம் (வர்ம சாரி-205)


2. பிடரிச்சுழி (அ) பிடரிக்குழி

இடம் :

பிடரிப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :

1. ‘தாமப்பா தலை முடிந்த தலத்தில் தானே


சார்வான குழிவதிலே பிடரிக்காலம்’ (வர்ம சூத்திரம்-101)
2. ‘அறிந்து கொள்ளு பிடரியென்ற காலங்கேளு
அப்பனே பிடரி என்ற பெருநரம்பில் பிடரிக்காலம்’ (வர்ம நிதானம்)

3. ‘அதனொன்று ஓட்டையின் கீ ழ் சிறுங்கொல்லி


ஓமென்ற அங்குலம் நால் கீ ழ் பிடரி வர்மம்’ (வர்ம பீரங்கி-100)

4. ‘கொள்ளவே பிடரியதின் குழியில் தானே


குணமான முடி முகிழ்தலத்திலப்பா
விள்ளவே அதில் பிடரிக்காலம்……..’ (வர்ம கண்டி)

5. ‘சீறும்கொல்லி வர்மத்துக்கு நாலு விரலுக்குக்


கீ ழே பிடரி வர்மம்……..’ (வர்ம விரலளவு நூல்)

6. ‘……………………………………………………………..
கீ ர்த்தி பெற ஓட்டையின் கீ ழ் சீறும் கொல்லி
நானப்பா நாலு விரலின் கீ ழ் பிடரிக்காலம்’ (வர்மசாரி-205)

7. ‘முறையான ஆராய்ச்சிக் காலம் பாரு


அடவாக அதற்கு அரைவிரலின் மேலே
அடுத்துண்டு பிடரியென்ற காலமப்பா’ (வ.ஒ.மு.ச.சூ.-1200)

விளக்கம் :

பிடரி வர்மமானது தலை (கொண்டை) முடிந்த தலத்திலுள்ள குழியில்


உள்ளது. பெண்கள் தலை முடியை பின் பக்கமாக கொண்டை முடிந்து
கொள்ளும் இடம் பிடரியாகும். இறுக்கமாக தலை முடியை கொண்டை
போட்டுக் கொண்டால் மட்டுமே இந்த குழியான தலத்தை மறைத்துக்
கொண்டிருக்கும். சற்றே தளர்த்திக் கொண்டை போட்டுக் கொண்டாலும்
அது இப்பிடரிக் குழிக்கு நான்கு விரலளவுக்கு கீ ழாக உள்ள வளை முடிந்த
வர்மம் என்ற தலத்தை மறைத்துக் கொண்டிருக்கும்.

சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு கீ ழாக இவ்வர்மம்


உள்ளது என்று பொதுவாக எல்லா நூல்களும் குறிப்பிடுகின்றன. வர்ம
ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200 என்ற நூல் மற்ற நூல்களிலிருந்து
வேறுபட்டு ‘ஆராய்ச்சி காலம்’ என்ற ஒரு வர்மத்தை
அறிமுகப்படுத்துகிறது. இவ்வர்மத்துக்கு அரை விரலளவுக்கு மேலே பிடரி
வர்மம் உள்ளதாக இந்நூல் குறிப்பிட்டாலும், வேறு வர்ம நூல்களோடு
ஒப்பாய்வு செய்ததில் பிடரி வர்மத்துக்கு ஒரு விரலளவுக்குக் கீ ழே
ஆராய்ச்சிக் காலம் இருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. (விளக்கம் :
பேன் குழி வர்மம் பார்க்கவும்)

வர்ம நிதானம் என்ற நூல் ‘பிடரி என்ற பெரு நரம்பில் பிடரிக்காலம்’ எனக்
குறிப்பிடுகிறது. வர்ம சூத்திரம்-101 என்ற நூல் ‘பிடரி தன்னில் பெரு
நரம்பின் மையம் வாக்கடா சுழியாடி’ என்று குறிப்பிடுகிறது. எனவே பெரு
நரம்பில் மேல் பக்கத்தில் அதாவது சுழியாடி வர்மத்துக்கு அருகிலேயே
(சுமார் 2 விரலளவுக்கு மேல்) பிடரி வர்மம் அமைந்திருக்க வேண்டும் என
அறிய முடிகிறது.

உடற்கூறுச் சான்று :

பிடரி வர்மத்தின் இருப்பிடமானது மூளைப்பகுதிக்கும், தண்டு


வடப்பகுதிக்கும் (பெரு நரம்பு) நடுப்பகுதியான முகுளம் (Medulla Oblongata)
பகுதியை மையமாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் என அறிய
முடிகிறது. ஏனெனில் இவ்வர்மத்தின் முக்கிய குறிகுணமாக ‘விதமாக
மூச்செடுக்கும்’ (வர்மசாரி-205) என்று கூறப்பட்டுள்ளது. இது முகுளப்
பகுதியில் உள்ள சுவாச மையம் (Respiratory Centre) பாதிப்படைவதால்
ஏற்படுகிறது.

ஏழாவது கழுத்து என்புக்கும் (கிழிமேக வர்மம்) சுமார் ஏழு விரலளவுக்கு


மேலேயுள்ள இடமே பிடரி வர்மத்தின் இருப்பிடமாகும்.

மாத்திரை :

பதினான்கு விரல் அகலம் வாங்கி சரித்து வெட்டினால் விழும். பலமாக


கொண்டதென்றால் உடனே சாகும்.

---------------------------------------------------------------------------------
siddhabooks.com
4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) –
Saruthi Varmam – Siddha and Varmam
Books
3 minutes

4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam

வேறு பெயர்கள் :

1. சுருதி வர்மம் (வர்ம பீரங்கி-100)


2. சருதி வர்மம் (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
3. சரிதி வர்மம் (வர்ம கண்ணாடி-500)

பெயர்க்காரணம் :

‘சுருதி’ என்றால் ‘செவி’ என்றும் ‘இசையொலி’ என்றும் பொருள் உண்டு.


இவ்வர்மத்தில் தாக்குதல் ஏற்படும்போது காதில் பாதிப்பு ஏற்பட்டு, தலை
சுற்றல் (தலை சுருட்டல் அல்லது தலை உருட்டல்) தோன்றும் இதனால்
இவ்வர்மம் இப்பெயர் பெற்றிருக்கலாம். மேலும் தலையின் பின் சரிவில்
உள்ளதால் சரிதி வர்மம் எனவும் பெயர் பெற்றிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘தானான உச்சியிலிருந்து எட்டு விரலின் கீ ழே


சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
வானான இதற்கு இரு விரலின் கீ ழே
மகிமையுள்ள பொற்சை என்ற காலமாமே’
(வர்ம கண்ணாடி-500)

2. ‘ஏறவே கொண்டைக்கொல்லி எண்விரல் கீ ழ் சருதியாமே’


(வர்ம லாட சூத்திரம்-300)
3. ‘உச்சியில் நின்றெண் விரல் கீ ழ் சருதி வர்மம்’
(அடிவர்ம சூட்சம்-500)

4. ‘நாமப்பா நாலுவிரல் கீ ழ் பிடரிக்காலம்


நாலிறைக்கும் பக்கத்தில் சுருதி வர்மம்’
(வர்மானி-16)

5. ‘நாளப்பா விரல் நாலின் கீ ழ் பிடரிக்காலம்


நாலிறை பக்கம் மேல் முன் சருதி வர்மம்’
(வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)

6. ‘கேளப்பா சிரசில் நடு கொண்ட கொல்லி


கீ ர்த்தி பெற ஒட்டயின் கீ ழ் சீறும் கொல்லி
நாளப்பா நாலு விரலின் கீ ழ் பிடரிக்காலம்
நாலிறைக்கும் மேல் பக்கமதில் சுருதிவர்மம்
(வர்ம சாரி-205)
விளக்கம் :

வர்ம சாரி-205 என்ற நூலானது சீறும் கொல்லிக்கு நாலு இறைக்குக் கீ ழ்


பிடரி வர்மம் என்றும், நாலு இறைக்கு மேல் பக்கவாட்டில் சுருதி வர்மம்
என்றும் குறிப்பிடுகிறது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.

வர்ம கண்ணாடி-500 என்ற நூலானது உச்சியிலிருந்து (கொண்டைக்


கொல்லி) எட்டு விரலளவுக்குக் கீ ழே சுருதி வர்மம் அமைந்துள்ளது என்று
குறிப்பிடுகிறது.

இரு நூல்களும் குறிப்பிடும் பொதுவான இடத்தை கண்டுபிடிக்க


வேண்டுமானால் எட்டு விரலளவு நீளத்திற்கு ஒரு நூல் கயிறும், நான்கு
விரலளவு நீளத்திற்கு ஒரு நூல் கயிறும் எடுத்துக்கொள்ள வேண்டும். எட்டு
விரலளவு நூல் கயிற்றை உச்சி வர்மமாகிய கொண்டைக்
கொல்லியிலிருந்து பின் கீ ழ்ப்புறமாக சற்று பக்கவாட்டில் அளக்க
வேண்டும். நான்கு விரலளவு நூல் கயிற்றை சீறும் கொல்லியிலிருந்து
மேல்ப்புறமாக பக்கவாட்டில் அளக்க வேண்டும். இரு நூல் கயிறுகளும்
சந்திக்கும் இடமே சுருதி வர்மத்தின் இருப்பிடமாகும். மேலும் இவ்வர்மம்
பொற்சை என்ற வர்மத்திலிருந்து இரு விரலளவுக்கு மேலே
அமைந்துள்ளது என்பதும் மேற்கண்ட பாடல் வரிகளிலிருந்து தெரிகிறது.

இடம் :
புறந்தலைக்கு பக்கவாட்டில் உள்ளது.

---------------------------------------------------------------------------------------------
siddhabooks.com

5. பொற்சை வர்மம் – Porchai Varmam


– Siddha and Varmam Books
2-3 minutes

5. பொற்சை வர்மம் – Porchai Varmam

வேறு பெயர்கள் :

1. பொற்சை காலம் (வர்ம பீரங்கி-100)


2. பொர்ச்சை காலம் (வர்ம கண்ணாடி-500)
3. புகழ்ச்சை வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
4. புகச்சை வர்மம் (வர்மசாரி-205)
5. பெரிச்சல் வர்மம் (வர்ம நிதானம்-500)

பெயர்க்காரணம் :

‘புகைச்சல் வர்மம்’ என்பதே பொற்சை வர்மமாக திரிந்திருக்க வேண்டும்.


இதன் முக்கிய குறிகுணமாக ‘கண்ணிரண்டும் புகைச்சல் கொள்ளும்’ என
வர்ம பீரங்கி-100, வர்ம கண்ணாடி-500 ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன.
இருப்பிடம் :

1. ‘தானான உச்சியிலேயிருந்து எட்டு விரலின் கீ ழ்


சரிதி வர்ம மெனவுஞ் சொல்வார்
வானான இதற்கு இரு விரலின் கீ ழே
மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே
காலமாம் அதற்குமொரு இறைக்கு கீ ழே
கனமான குத்தி என்ற காலமாகும்’
(வர்ம கண்ணாடி-500)

2. ‘ஓமென்றங்குலம் நாலுக்குக் கீ ழ் பிடரி வர்மம்


உச்சாணின் எண் விரலுக்குக் கீ ழ் சுருதி வர்மம்
காமென்ற இருவிரலுக்குக் கீ ழ் பொற்சைக் காலம்
காணிறை கீ ழ் குற்றிக் காலம்…………’ (வர்ம பீரங்கி-100)

3. ‘…………………………………சீறும்கொல்லி
நாளப்பா நாலு விரலின் கீ ழ் பிடரிக்காலம்
நாலிறைக்கு மேல் பக்கமதில் சுருதி வர்மம்
பாளப்பா இரண்டிறை கீ ழ் பொற்சகாலம்
பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக்காலம்’ (வர்மசாரி-205)

4. ‘தேனென்ற காதில் நால் விரலுக்கு மேல்


திறமான பெரிச்சல் வர்மம் குணத்தைக் கேளு’ (வர்ம நிதானம்-500)

விளக்கம் :

உச்சி வர்மமாகிய கொண்டைக்கொல்லி வர்மத்திலிருந்து எட்டு


விரலளவுக்கு பின்-பக்க (Postero – Lateral) பக்கமாக, உடல்
மையக்கோட்டுக்கும், காதுக்கும் நடுவில் சுருதி வர்மம் உள்ளது. இதற்கு
இரண்டு விரலளவுக்குக் கீ ழே பொற்சை வர்மம் உள்ளது. இதற்கு ஒரு
விரலளவுக்குக் கீ ழே குத்தி வர்மம் உள்ளது.

சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்குக் கீ ழே பிடரி வர்மம்


உள்ளது. சீறும்கொல்லி வர்மத்துக்கு நான்கு இறைக்கு மேலே
பக்கவாட்டில் சுருதி வர்மம் உள்ளது. இதற்கு இரு இறைக்குக் கீ ழே
பொற்சை காலம் உள்ளது. இந்த இடம் காதிலிருந்து நான்கு விரலளவுக்கு
பின்-மேல் (Postero-Superior) பக்கமாக உள்ளது. வர்மநிதானம்-500 என்ற நூல்
இவ்வர்மத்தை பெரிச்சல் வர்மம் என அழைக்கிறது.

இடம் :

காதின் பின் மேல் பகுதியில் உள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்


2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.

--------------------------------------------------------------------------------------------------
siddhabooks.com

6. குற்றிக் காலம் – Kutti Kalam –


Siddha and Varmam Books
2 minutes

6. குற்றிக் காலம் – Kutti Kalam

வேறு பெயர்கள் :

1. குற்றிக் காலம் (வர்ம சாரி-205)


2. குத்திக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. கொம்பு குத்தி வர்மம் (வர்ம வில்லு விசை)

இடம் :

காதின் பின் மேல் பகுதியில் உள்ளது


பெயர்க்காரணம் :

ஆடு, மாடுகளில் காதுகளுக்கு நேரே மேல் பக்கத்தில் கொம்பு


முளைத்திருப்பதைக் காணலாம். மனிதர்கள் நேராக நிற்பதால்,
காதுகளுக்கு பின்புறமாக இப்பகுதி காணப்படுகிறது. மனிதர்களுக்கு
கொம்பு இல்லாவிட்டாலும் கொம்பு அமைந்திருந்தால் எந்த இடத்தில்
முளைத்திருக்குமோ அந்த இடத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளதால்
இப்பெயர்கள் பெற்றிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘…………………………………………………………….
மகிமையுள்ள பொர்ச்சை என்ற காலமாமே’
‘காலமாம் அதற்கு ஒரு இறைக்கும் கீ ழே
கனமான குத்தி என்ற காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)

2. ‘பாரப்பா இரண்டிறை கீ ழ் பொற்சைக் காலம்


பகர்ந்த ஓரிறை பற்றி குற்றிக் காலம்’ (வர்மசாரி-205)

3. ‘வலது காதுக்கும் மூன்று விரலுக்கும் உயரே


மோடெலும்பின் சுளியில் கொம்புகுத்திகாலம்’ (வர்ம வில்லு விசை)

விளக்கம் :

இவ்வர்மம் பொற்சை வர்மத்துக்கு ஓர் இறைக்கு கீ ழாக அமைந்துள்ளது.


இதுவும் இரட்டை வர்மமேயாகும் காதின் பின்பக்கத்திலிருந்து மூன்று
விரலளவுக்கு பின்புறமாக உள்ள இடத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்


2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.

--------------------------------------------------------------------------------------------------------------------------
siddhabooks.com
7. செவிக்குத்தி வர்மம் – Siddha and
Varmam Books
3-4 minutes

7. செவிக்குத்தி வர்மம்

வேறு பெயர்கள் :

1. செவிக்குத்தி வர்மம் (வர்ம கண்ணாடி-500)


2. செவிக்குற்றி வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
3. செவிக்குறி வர்மம் (வர்ம சூடாமணி)
4. சிருங்காடம் (வர்ம விதி)

இடம் :

செவியின் சிறுதண்டுக்கு (Tragus) அருகில்

பெயர்க்காரணம் :

இவ்வர்மத்தை ஏற்படுத்த, செவியின் சிறு தண்டுப் பகுதிக்கருகே


குத்துவதால் ‘செவிக்குத்தி’ எனப் பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘தேளப்பா காது சிறு தண்டருகு பற்றி


திட்டமுடன் செவிக்குத்தி காலமாகும்’ (வர்ம நிதானம்)

2. ‘மூலமாம் காதில் சிறுதண்டருகில் தானே


முறையான செவிக்குத்தி காலமென்பர்
கூலமாம் இதனிரண்டு இறைக்கும் மேலே
குணமான பொய்கை என்ற காலமாகும்’
(வர்ம கண்ணாடி-500)
3. ‘காடப்பா காதில் சிறுதண்டில் தானே
கலங்காதே செவிக்குத்தி காலம் என்பர்’ (வர்ம சூத்திரம்-101)

4. ‘காதின் முன்புறத்தில் செவிக்குத்தி காலம்’ (வர்மவிரலளவு நூல்)

5. ‘சயமாகும் செவிக்குறி வர்மம் தானும்


செயலாக அதன் குணத்தை சொல்லக்கேளு’
‘கேளப்பா காதில் சிறுதண்டின் அருகே
கெடி குழிவுங்காணும் அதுதானே……’ (வர்ம சூடாமணி)

6. ‘சீறுகின்ற கொல்லியதில் ஆறுவிரலில்


ஆறுவிரல் சுற்றி செவிக்குத்திக் காலம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

7. ‘வருதியின் செவியினில் சேர்வன்மையாம் சிறுதண்டிற்கும்


சுருதியின் சேரிடத்தில் செவிக்குற்றி காலம் தானே’ (வர்ம லாட சூத்திரம்-
300)

8. ‘பேதகமே இல்லையடா கீ ழ்தாரைக்குள்


வேதகமே அலவாடி மூட்டில் குச்சம்
சேதகமுனை ஏவி நிற்கும் செவிக்குற்றியில்’ (உற்பத்தி நரம்பறை-1000)

9. ‘கண்டத்தின் மேல் திலர்த வர்மத்திலிருந்து


சீறுங்கொல்லியுட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காக மடக்கி (8
விரலளவு) திலர்த காலத்திலிருந்து
பார்த்தால் செவிக்குத்திக் காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

10 ‘உற்ற கண்ணாடி நாசியுறு கன்னமிவை பிரிந்து


வெற்றியுள் வாயிற் காணுமெதிற் சிருங்காட வன்மம்’ (வர்மவிதி)

விளக்கம் :

செவிகுத்தி வர்மமானது காதின் முன்பக்கமுள்ள சிறு தண்டுக்கு (Tragus)


அருகே (முன் பக்கம்) அமைந்துள்ளது. இது பொய்கை வர்மத்துக்கு இரு
விரலளவுக்கு கீ ழாகவும் நட்சத்திர வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு பின்
கீ ழ் நோக்கியும் (Postero-Inferior) திலர்த வர்மத்திலிருந்து எட்டு
விரலளவுக்குப் பக்கவாட்டிலும் (Lateral) அமைந்துள்ளது. ‘வர்ம ஒடிவு
முறிவு சரசூத்திரம்-1200’ என்ற நூலானது சீறும்கொல்லி வர்மத்திலிருந்து
ஆறு விரலளவுக்குள் இவ்வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இது
சரியானதல்ல. சீறும் கொல்லி வர்மத்திலிருந்து சுமார் எட்டு விரலளவு
தூரத்தில் செவிகுத்தி வர்மம் அமைந்துள்ளது என்பதே சரியானதாகும்.
ஏனெனில் திலர்த வர்மத்துக்கும் சீறும் கொல்லி வர்மத்துக்கும் நடுப்
பகுதியிலேயே செவிகுத்தி வர்மம் அமைந்துள்ளது.

திலர்தவர்மம் – செவிகுத்தி வர்மம் = 8 விரலளவு


செவிகுத்தி வர்மம் – சீறும் கொல்லி வர்மம் = 8 விரலளவு
திலர்தவர்மம் – சீறும் கொல்லி வர்மம் = 16 விரலளவு

காதின் சிறு தண்டுக்கு முன்பு நாம் விரலை வைத்துக் கொண்டு மெதுவாக


வாயைத் திறந்தோமானால் ஒரு சிறு பள்ளம் உருவாவதை விரல்
உணரும் இந்த இடமே செவிகுத்தி வர்மத்தின் இருப்பிடமாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்


2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.

----------------------------------------------------------------------------------------------------------------
siddhabooks.com

9. நட்சத்திர காலம் – Natchathira


Kalam – Siddha and Varmam Books
3 minutes

9. நட்சத்திர காலம் – Natchathira Kalam

வேறு பெயர்கள் :
1. நட்சேத்திர காலம் (வர்ம பீரங்கி-100)
2. மீ ன வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)
3. ஆபங்க வர்மம் (வர்ம விதி / சுஸ்ருத சம்ஹிதா)

இடம் :

கடைக்கண்ணுக்கு அருகில்.

பெயர்க்காரணம் :

இவ்வர்மத்தின் குறிகுணத்திலிருந்து இவ்வர்மத்தினால் கண்கள் அதிகமாக


பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று தெரிகிறது. நட்சத்திரம் இரவில்
ஒளிகொடுப்பது போல மனிதனுக்கு ஒளியாக விளங்கும் கண்ணில்
இவ்வர்ம பகுதி அமைந்துள்ளதால் இவ்வர்மத்துக்கு இப்பெயர்
ஏற்பட்டிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘காலமாம் கடைக்கண் கீ ழ் நட்சத்திரக்காலம்’ (வர்ம பீரங்கி-100)

2. ‘காலமாம் கடைக்கண்ணில் இறைக்குள்ளே தான்


கலங்குகின்ற நட்சத்திர காலம் எண்ணே
எண்ணவே அதற்கு இரண்டு இறைக்குக் கீ ழே
இதமான காம்போதிக் காலமாகும்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘வளமான கண்ணின் கீ ழ் நட்சத்திர காலம்


வர்மமடா இரண்டிறை கீ ழ் காம்பூரிக்காலம்’ (வர்மசாரி-205)

4. ‘பொய்கை காலத்துக்கு நான்கு விரலுக்கு முன்னால் நட்சேத்திரக்காலம்


இதற்கு இரண்டு விரலுக்கு
கீ ழே அலவு காம்பூரி வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

5. ‘இயல்பான கடைக்கண்ணில் இமையில் தானே


நயம்பெறவே நட்சேத்திர காலம்…..’ (வர்ம கண்டி)
6. ‘கடைக்கண் இறைக்குள்ளே தான்
கலங்குகின்ற குழியிதிலே நட்சேத்திரகாலம்’ (வர்மசூத்திரம்-101)

7. ‘…………… பொய்கை வர்மம் ரண்டு


தறுகிலே இருவிரலின் பக்கம் மாறி
சார்வான நட்சத்திரகாலம் ரண்டு
மறவாதே அதிலிருந்து நால்விரல் மேல்
மைந்தேனே சென்னிவர்மமாகும் ரண்டு’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

8. ‘நன்றான கடைக்கண்ணில் ஓரிறைக்கு தாழே


நாயகனே நட்சத்திரக் காலமாகும்’ (வர்ம திறவு கோல்-225)

9. ‘நானென்ற கடைவிழிக்கு கீ ழ் நட்சத்திரம்தான்


நாடுமறை ரண்டின்கீ ழ் காம்பூரியாகும்’ (அடி வர்ம சூட்சம்-500)

10. ‘கண்டத்தின் மேல் திலர்தகாலத்திலிருந்து சீறுங்கொல்லி


உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) எட்டாக
மடக்கி (4 விரலளவு) திலர்தவர்மத்திலிருந்து அளக்க
நட்சத்திரக்காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

11. ‘சுருதியிடங்கண் புறத்திற் கண் புருவத்தில்


மருவிடுங் கீ ழபாங்கமெனு……………’ (வர்ம விதி)

12. ‘அப்பனே மீ னமது நட்சேத்திர வர்மம்’


(வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)

விளக்கம் :

இந்த வர்மம் கடைக்கண்ணுக்கு (Outer Canthus of the Eye) ஓர் இறைக்கு


கீ ழாகவும், காம்போதி (காம்பூரி) வர்மத்துக்கு இரண்டு இறைக்கு
மேலாகவும் அமைந்துள்ளது, திலர்த வர்மத்திலிருந்து நான்கு விரலளவு
பக்கவாட்டில் அமைந்துள்ளது.

இவ்வர்மம் கடைக்கண்ணுக்கு ஓர் இறைக்குக் கீ ழே உள்ளது என்பதை


வர்ம சாரி-205, அடிவர்ம சூட்சம்-500 போன்ற நூல்கள் உணர்த்துகின்றன.
இவ்வர்மம் உள்ள இடத்தில் ஒரு குழி உண்டு என்று ‘வர்ம சூத்திரம்-101’
என்ற நூல் குறிப்பிடுகிறது. இவ்வர்மம் பொய்கை வர்மத்திலிருந்து நான்கு
விரலளவுக்கு முன்புற பக்கவாட்டில் அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்


2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி

----------------------------------------------------------------------------------------------------------
siddhabooks.com

10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam


– Siddha and Varmam Books
2 minutes

10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam

வேறு பெயர்கள் :

1. காம்பூரி காலம் (வர்ம பீரங்கி-100)


2. காம்போதிக் காலம் (வர்ம கண்ணாடி-500)
3. அலவு காம்பூரி வர்மம் (வர்ம விரலளவு நூல்)
4. அலவு காம்போதி அடங்கல் (அடங்கல் விவரம்)

இடம் :

நட்சத்திர வர்மத்துக்கு இரண்டு இறைக்கு கீ ழே அமைந்துள்ளது.

இருப்பிடம் :
1. ‘வளமான கண்ணின் கீ ழ் நட்சத்திரக் காலம்
கற்மமடா ரண்டிறை கீ ழ் காம்பூரிக் காலம்
கருது மூன்றிறைவலத்தே மூர்த்தி வர்மமே’ (வர்மசாரி-205)

2. ‘……….நட்சத்திரகாலம் எண்ணே
எண்ணவே அதற்கு இரண்டிறைக்கும் கீ ழே
இதமான காம்போதிக் காலமாகும்.
திண்ணவே இதற்கு மேல் வலம் இறை மூன்றில்
திருக்கான மூர்த்தி என்ற காலமென்பர்’ (வர்ம கண்ணாடி-500)

3. ‘நட்சத்திரக் காலத்துக்கும் இரண்டு விரலுக்கு கீ ழே


அலவு காம்பூரி வர்மம் இதற்கு இரண்டு விரலுக்கு
வலத்தே சிறு தண்டின் பக்கம் கபால வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)

4. ‘காலமாம் கடைக்கண் கீ ழ் நட்சத்திர காலம்


காலம் கீ ழ் இரண்டிறையில் காம்பூரிகாலம்’
‘காலமதில் இறைமூன்றில் மூர்த்திக்காலம்’ (வர்ம பீரங்கி-100)

விளக்கம் :

காம்பூரி வர்மமானது நட்சத்திர வர்மத்துக்கு இரண்டு இறைக்கு கீ ழே


அமைந்துள்ளது. மூர்த்தி வர்மத்துக்கு மூன்று இறைக்கு பக்கவாட்டில்
அமைந்துள்ளது கபால வர்மத்திலிருந்து இரண்டு இறை மையம் நோக்கி
(Medial) அமைந்துள்ளது. In the depression below the Prominance of the Zygomatic Bone
on a vertical line drawn down wards from the outer canthus of the Eye

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்


2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி

-----------------------------------------------------------------------------------------------------------------------

You might also like