You are on page 1of 2

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 

அன்றே மறப்பது நன்று.


கலைஞர் உரை: 

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை


செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
மு.வ உரை:

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த


தீமையைச் செய்த அப்‌
பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த


தீமையை அப்போதே மறப்பது அறம்.
பரிமேலழகர் உரை:

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது


ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த
தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற்
செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை:

பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை


அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று
கூறிற்று.
Translation: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

குறள் விளக்கம்
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீ மை யைச்
செய்த அப்‌
பொழுதே மறந்து விடுவது அறம்.

திரு மு .வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)


நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது
ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த
தீ மை யைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற்
செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

You might also like