You are on page 1of 219

அத்தியாயம் 1

பல தலைமுறை கடந்தும்.... தன் பலம் குறையாமல் ஆஜாகுபான


தோற்றத்துடன்.. ராட்ஷசன் போல் நெடு நெடுவென்று வளர்ந்து விரிந்து..
அவ்வூரின் மையத்தில் அமைந்துள்ள அந்த ஆலமரத்தின் அடியில் ஊர்
மக்கள் அனைவரும் கூடியிருந்தனர்..
பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் அமர்ந்து தங்களுக்குள்
சலசலத்துக் கொண்டிருந்தனர்..
இவங்க குடும்ப சண்டையில நாமதான் அவதி படனும் போலிருக்கு..? என
பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தனர்..
ஆண்களோ.. எல்லாம் நம்ம சின்னய்யா பார்த்துக்குவாறு.. அவரு முன்னாடி
ஆம்பளையே நிக்க பயப்படுவாங்க.. இந்த பொம்பளை எம்மாத்திரம்...
அட... ஆமாங்குறேன்..
நாம எதுவும் பேசக்கூடாது.. ஐயாவை விட்டே பேசச்சொல்வோம் ..
நம்மளுக்கு எதுக்கு பொல்லாப்பு..
ஆமா.. ஆமா.. பெரியவரு இதுக்கு சரிபடமாட்டாரு.. சின்னவருதான் நியாயமா
முடிவெடுப்பார்... எனப்பலரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க..
அப்பொழுது ஹாரன் ஒலி சப்தமிட்டு அசுர வேகத்தில் கப்பல் போல் நான்கு
கார்கள் அணிவகுத்து நின்றன.. அதை கண்டு மக்கள் அனைவரும் பயந்து
ஒதுங்கினர்...
முதலாம் காரிலிருந்து கருப்பு உடை அணிந்த ஒருவன் வேகமாக இரண்டாம்
காரின் பின்பக்கத்தை திறக்க… அதிலிருந்து மஹாராணி தோரணையில்
கம்பீரமாக இறங்கினாள் குந்தவை நாச்சியார்...
கண்களில் கூலர்ஸ் அணிந்து.. இடதுகையில் பிளாட்டினம் வாட்ச்..
வலதுகையில் டைமண்ட் பிரேஸ்லெட் உயர்ரக ஆப்பிள் ஐபோன் காலில்
ஹீல்ஸ் சப்தமிக்க முதுகுவரை சுருண்டிருந்த கூந்தலை கோதி விட்டு
வேட்டைக்கு செல்லும் பெண்சிங்கம் போல் வந்து கொண்டிருந்தாள்...
இவ்வளவு நேரம் வம்பு பேசிக் கொண்டிருந்தவர்கள் பெண்ணவள் நடந்து
வரும் தோரணையிலும்.. அவள் கம்பீரத்திலும் மூக்கின் மேல் விரல்
வைத்தனர்...
அவளோ அங்குள்ள யாரையும் கவனியாமல்.. தன் பாடிகார்டை பார்க்க..
அவன் வேகமாக நாற்காலியை எடுத்து வந்து போட்டான்… ஓர் அரசியை
போல் அலட்சியமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து.. கையில் உள்ள
போனை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்…
அப்பொழுது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 வண்டியின் சத்தம் கேட்டு…
மறுபடியும் கூட்டத்திற்குள் சலசலப்பு… சின்னய்யா.. வராரு சின்னய்யா
வராரு… என்று..
குந்தவையின் கரங்கள் ஒரு நொடி நின்று.. மறுபடியும் இயங்க ஆரம்பித்தது…
வண்டி கூட்டத்தை நெருங்க.. அனைவரும் எழுந்து வணக்கம் வைக்க
ஆரம்பித்தனர்..
வெள்ளை நிற வேட்டி சட்டையில்… தென்தமிழகத்தின் ஆதி திராவிட
நிறமான கருமையில்.. முறுக்கேறிய தேகத்துடன்.. ராஜ தோரணையில்
வண்டியிலிருந்து இறங்க.. சுற்றியுள்ள குமரிப்பெண்கள் பிளாட்…
அருள்மொழி பாண்டியன்.. 26 வயது கட்டிளங்காளை.. பாசம் காட்டுபவர்களை
அரவணைப்பவன்.. பகைமை காட்டுபவர்களை வேரோடு அழித்துவிட்டுதான்
அடுத்து யோசிப்பான்.. தாயின் சொல் தட்டாத தனஞ்செயன்.. குடும்பத்தின்
மீ தும்.. உறவுகளின் மீ தும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன்…
வணக்கம் வைத்தவர்களுக்கு.. பதிலுக்கு வணக்கம் வைத்தவாறு.. கூட்டத்தின்
உள்ளே சென்றவன்.. அங்கு அலட்சியமாக அமர்ந்திருந்த குந்தவையை ஒரு
நொடி தன் கூறிய பார்வையால் அளந்தவன்… பிறகு அங்குள்ள பெரியவர்கள்
மத்தியில் நின்று... கூட்டத்தை பார்த்து தலையசைத்ததும்.. அனைவரும்
அமர்ந்தனர்…
சின்னய்யா ஆரம்பிக்கலாமா.. என ஒருவர் கேட்டதும்…
குந்தவை.. இன்னும் எவ்வளவு நேரம் ஆக்குவிங்க.. உங்களுக்கெல்லாம் என்
டைம்மோட வேல்யூ தெரியுமா.. இல்லை சொன்னாதான் புரியுமா.. ஆல்ரெடி
உங்க சின்னய்யா வந்ததே லேட்டு.. இதுல ஆரம்பிக்கலாமான்னு கேள்வி
வேற.. சீக்கிரம் நீங்க சொல்ல வேண்டியதை சொன்னா.. நான் கிளப்புவேன்..
என அலட்சியமாக கூறினாள்…
அதைக்கேட்டதும்… அருள்மொழியின் கைமுஷ்டி இறுகியது.. இருந்தும்
முகத்தில் எதுவும் காண்பிக்காமல் பெரியவரை பார்த்து கண்ணசைத்தான்…
‘’ அய்யா உங்களுக்கே தெரியும்.. நம்ப ஊர் ஆத்து தண்ண ீர் பக்கம் நூறு
ஏக்கரு நிலம் இருக்கு.. தோட்டம் வயல் எல்லாம் நிறைஞ்ச பூமி.. நம்ப ஊர்
ஏழை விவசாயிங்க அதை நம்பித்தான் இருக்காங்க.. இதுவரைக்கும் நாங்க
அது உங்க நிலம்தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.. இப்போ இவங்க
வந்து.. அது தன்னுடைய நிலம்னும்.. அங்க ஏதோ காற்றாலை கட்ட
போரதாவும் சொல்றாங்க.. நீங்கதான்யா எங்களுக்கு ஒரு நியாயம்
செய்யணும்… ‘’ என பவ்வியமாக கூறினார்…
‘’ ஹலோ பெரியவரே.. நிலம் என்னோடது.. இத்தனை வருஷமா உங்க
சின்னய்யாவும் அவர் குடும்பமும் என் அனுமதி இல்லாம.. என் நிலத்தை
ஓசியா அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க.. அதுக்கே நான் இவங்க மேல கேஸ்
போடலாம்னு இருக்கேன்.. நீங்க என்னன்னா.. இப்படி பேசுறீங்க என நக்கலாக
கூறினாள்… ‘’
குந்தவையின் மரியாதை இல்லா பேச்சைக் கண்டு ஊர்மக்கள் திகைப்பும்
கோபமுமாக அவளை பார்த்தனர்.. ஆனால் அவளோ யாரையும் சட்டை
செய்யாமல்.. அருள்மொழியின் கருத்த முகம்.. மேலும் கோபத்தில்
கருத்துருப்பதை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ச்சியுற்றாள்.. அது அவள்
முகத்திலும் பிரதிபலித்தது….
‘’ நீங்க பேசுறது ரொம்ப தப்புன்னு உங்களுக்கே தெரியும்.. அதனால நான்
அதைப் பத்தி பேச விரும்பல.. இங்க உள்ள ஏழை விவசாயிங்கள்ல முக்கால்
வாசி பேர் அந்த நிலத்தை நம்பி தான் இருக்காங்க.. அதுமட்டும் இல்லாம
சோறு போடுற பூமிய தரிசாக்க நான் விட மாட்டேன்.. ‘’ என்று தன் கண ீர்க்
குரலில் இரும்பினும் அழுத்தமாக கூறினான்.. அருள்மொழி..
‘’ நீங்க எல்லாரும் பேசுறத கேட்க.. நான் இங்க வரலை.. என்னோட ஆளுங்க
இங்க வருவாங்க.. உங்களாலையோ இல்லை இந்த ஊர்க்காரங்களாலையோ
எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு எச்சரிக்கை செய்ய தான் வந்தேன்.. ‘’
அருள்மொழியின் பொறுமை கொஞ்ச கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது..
இப்ப முடிவா என்ன சொல்றிங்க..? சிங்கத்தின் கர்ஜனை போல் அவன் குரல்
ஒலித்தது..
குந்தவையோ.. ஓஹ் காட்.. என்னை இன்னும் எத்தனை தடவ சொல்ல
வைக்க போறீங்க.. Mr.அருள்மொழிபாண்டியன்.. அது என்னோட லேண்ட்..
அதுல நான் என்னவேனாலும் செய்வேன்... அதை கேட்க உங்களுக்கு எந்த
ரைட்சும் கிடையாது.. என்றாள் நக்கல் கலந்த திமிருடன்..
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அருள்மொழியின் மாமன் முறைகளில்
உள்ள ஒருவர்.. அவனுக்கு சாதகமாக பேசி.. அவன் மனதில் மரியாதை பெற
விரும்பி… மாப்பிள... கேவலம் ஒரு பொட்டச்சி உங்க முன்னாடி கால் மேல்
கால் போட்டு இப்படி தோரணையா பேசிட்டுருக்கா.. நீங்களும்
கேட்டுட்ருக்கீ ங்க.. என்றவன்.. குந்தவையிடம் இங்க பாரு நாங்க சொல்றத
செய்யாம இந்த இடத்தை விட்டு உங்களால எங்கயும் போக முடியாது
என்றார்.. கேலியாக
அருள்.. மாமா நீங்க செத்த சும்மாருங்க.. என அவரை அடக்கியவன்..
குந்தவையின் புரம் திரும்பினான்..
அருளையே பார்த்திருந்தவள்.. முகத்தில் கொஞ்ச கொஞ்சமாக கோபச்சிவப்பு
ஏறியது... போதும் ரொம்ப நேரம் இங்க இருந்துட்டேன்.. உங்களுக்கு என்
எச்சரிக்கையும் புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்.. என கூறியவாறு
சேரிலிருந்து எழுந்தாள்…
அப்பொழுது கூட்டத்தின் மத்தியிலிருந்து... பஞ்சாயத்து முடியாம யாரும்
இங்கிருந்து போக முடியாது…. முதல்ல அவுக வந்த கார பார்த்துட்டு அடுத்து
பேச சொல்லுங்க.. என்று ஓர் குரல் நக்கலாக ஒலித்தது…
வேகமாக காரை சுற்றி வந்த பாடிகார்ட்ஸ்.. குந்தவையிடம்.. மேம் காரை
யாரோ பஞ்சர் பண்ணிருக்காங்க.. என பயத்தில் வேர்த்து வழிந்து
சொன்னான்..
அவனை தன் அனல் கக்கும் விழிகளால் எரித்தவள்.. மறுநொடி
கூட்டத்தினரை பார்த்து உதடுகள் வளைய ஏளனமாக ஓர் பார்வை
பார்த்தவள்.. என்ன சொன்ன இந்த இடத்தை விட்டு என்னால போக
முடியாதா.. இன்னும் பத்து நிமிஷத்துல கார் இல்லாம என்னால இங்க
இருந்து போக முடியும்.. என்றாள் கர்வத்துடன்…
எப்படி பறந்து போவிங்களோ..? என மறுபடியும் குரல் மட்டும் நக்கலாக
ஒலித்தது…
அப்பொழுது பெரும்சப்தத்துடன் ஹெலிகாப்ட்டர் ஒன்று தரையிறங்க.. ஊர்
மக்கள் அனைவரும் அதை பார்த்து வாய் பிளந்தனர்..
உதடுகளில் பூத்த மென் முறுவலுடன் ஹெலிகாப்டரை நோக்கி சென்றவள்..
திரும்பி இடது கைவிரல்களால் சொடுக்கிட்டு ஏய்.. இந்த குந்தவை
நாச்சியார்க்கு எதிரியா இருக்க கூட ஒரு தகுதி வேனும்.. என
கூட்டத்தினரையும் ஜாடையாக அருள்மொழியையும் பார்த்து கூறியவள்
ஹெலிகாப்டரில் ஏறி சென்றுவிட்டாள்…
மேலே பறந்து செல்லும் ஹெலிகாப்டரையே அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தான் அருள்மொழி…
ஐயா.. இப்ப என்ன பண்றதுங்க..
கூட்டத்தினரை பார்த்த அருள்மொழி.. கவலைப்படாதீங்க.. என்னை மீ றி அந்த
நிலத்தை எதுவும் செய்ய முடியாது.. இப்போ எல்லாரும் கிளம்புங்க..
அருள்மொழியின் பேச்சில்.. நிம்மதியடைந்து அனைவரும் அங்கிருந்து
கிளம்பினர்.. எல்லோரும் சென்றதும்.. தன் மாமனை தனியாக அழைத்தவன்..
இனிமே அவங்ககிட்ட இந்தமாதிரி மரியாதை இல்லாம பேசினா.. நான் என்ன
செய்வேன்னு உங்களால யோசிக்க கூட முடியாது மாமா.. அவங்க எனக்கு
யாருன்னு தெரியும்ல.. புரிஞ்சு நடந்துக்கோங்க.. என ஒரு வித
அழுத்தத்துடன் கூறினான்..
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் சாதாரணமாக பேசுவது போல்
தோன்றும்.. ஆனால் அந்த மாமனுக்கு தான் தெரியும்.. அவன் கண்களில்
உள்ள கோபமும்.. குரலில் இருந்த மிரட்டலுடன் கூடிய அழுத்தமும்..
இப்பொழுது அவருக்கு புரிந்தது.. ஏன் இவர்கள் பிரச்சனையில் மற்றவர்கள்
யாரும் நேரடியாக பேசவில்லை என்று.. குந்தவையை கிண்டல் செய்தவர்கள்
கூட கூட்டத்தின் உள்ளே மறைந்திருந்தனர்.. அருள்மொழிக்கு தன் மீ து
மதிப்பு வருவதற்காக அவர் செய்த செயல்.. தலைகீ ழாய் மாறி விட்டது..
ராயல் என்ஃபீல்டில் சென்றுக் கொண்டிருந்தவனின் மனமோ உலைக்களம்
போல் கொதித்துக் கொண்டிருந்தது… குந்தவை கடைசியாக கூறியது.. அவன்
காதிற்குள் மறுபடியும் மறுபடியும் ஒலித்து கோபத்தை அதிகரிக்க செய்தது..
ஹெலிகாப்டரில் சென்றுக் கொண்டிருந்தவளும் அருள்மொழியைதான்
நினைத்துக் கொண்டிருந்தாள்… கோபம் வருத்தம்.. ஏளனம்.. என பல
உணர்வுகளை குந்தவையின் முகம் பிரதிபலித்தது…
நீ இந்த அக்காவ சாதாரணமா எடை போட்டுட்ட தம்பி.. அதுக்கு உனக்கு
தண்டனை கொடுத்தே ஆகணும்… இப்ப செஞ்சதெல்லாம் உனக்கு பத்தாது..
சோ அடுத்து என்ன பண்ணலாம் என யோசித்தவளின் மனதில் சட்டென்று
ஓர் முகம் மின்னி மறைய.. அவள் விழிகள் பளிச்சிட்டது…
அருள்மொழி பாண்டியன்… உனக்கு அடுத்த ஸ்கெட்ச் ரெடியாகிடுச்சு.. நீ அதை
எப்படி சமாளிக்குறேன்னு பார்க்குறேன்.. என மிதப்பாக எண்ணினாள்…
குந்தவைக்கு தெரியவில்லை.. அவனுக்கு பாதகம் செய்ய நினைத்த
செயலை.. அருள்மொழி தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள போகிறான்
என்று…

அத்தியாயம் 2

பிரம்மாண்டமாய் அரண்மனை போல் விளங்கும் அந்த மாளிகையின் முன்


தன் வண்டியை நிறுத்தினான் அருள்மொழி…
ஐந்து தளங்கள் கொண்ட அந்த மாளிகை பழமையிலும் புதுமையிலும்
மிளிர்ந்தது…
அருள்மொழியின் பாட்டன் முப்பாட்டனார் வணிகத்திற்கு பல நாடுகளை
சுற்றி வந்தனர்.. அதனால் பர்மா தேக்கு, ஐரோப்பாவின் டைல்ஸ்,
இத்தாலியின் மார்பிள் ஆகியவற்றை வடு
ீ கட்டப் பயன்படுத்தினார்கள்…
வட்டின்
ீ நுழைவாசலின் இருபுறமும் விசாலமான திண்ணையும்,
ஆஜானுபாகுவான மரத்தூண்களும், நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள்
கொண்ட முகப்பு கதவும்.. நிலையும் என மிகவும் பிரம்மாண்டமாய்
இருந்தது… முப்பது அறைகளுக்கு மேலாக கொண்ட அவ்வடு
ீ வசீகரிக்கும்
நிறமான மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற நிறங்கள் அதிகம் கொண்டு வர்ணம்
தீட்டப்பட்டிருந்தது…
கேரளத் தொட்டிகட்டி வடுகளைப்
ீ போன்று நடுவே பெரிய வானவெளி
அமைப்புக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.. இது வட்டுக்கான
ீ காற்றையும்
வெளிச்சத்தையும் தருகிறது.. வடு
ீ முழுதும் கூட பல தூண்கள் உள்ளன. சில
தூண்களில் வித்தியாசமான பொம்மைகளின் உருவங்கள்
பொறிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் பிற நாட்டினர்களின் பொம்மை
உருவங்கள். இவையும் அவர்கள் மூதாதையரின் கடல் கடந்த வாணிபச்
சிறப்பின் சாட்சியங்கள்…
இந்த வட்டின்
ீ மற்றொரு சிறப்பு.. ஆலங்குடி டைல்ஸ்… இன்றைக்கு
செட்டிநாடு வடுகள்
ீ மட்டுமல்லாது எல்லாப் பகுதிகளிலும் இந்த
டைல்ஸ்களின் பயன்பாடு பரவலாகியுள்ளது. ஆனால் தொடக்கத்தில்
செட்டிநாடு வடுகளுக்காக
ீ இந்த டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டன.
கண்ணாடிகளையும் இயற்கை வண்ணங்களையும் கொண்டு இந்த டைல்ஸ்
தயாரிக்கப்படுகிறது. இது மற்ற டைல்ஸ்களைப் போலத் தொழிற்சாலைகளில்
தயாரிக்கப்படுபவை அல்ல… வட்டுக்கே
ீ வந்து தளத்தில் உருவாக்கப்படுபவை.
இந்த டைல்ஸ்கள் அதிகமான பராமரிப்புக் கோருபவை… ஆனால் பார்ப்பதற்கு
வசீகரமானவை… அருள்மொழி தலையெடுத்த பிறகு.. பழமை மாறாது.. சில
புதுமைகளையும் கொண்டுவந்து.. மாளிகையை மேலும் அழகுபடுத்தினான்…
வட்டிற்குள்
ீ நுழைந்தவனை… அவன் தாய் வள்ளியம்மை தண்ணர்ீ சொம்புடன்
வரவேற்றார்….
தண்ண ீரை வாங்கி குடித்தவன்… தன் கோபத்தையும் தணிக்க முயன்று…
அதில் வெற்றியும் கண்டான்…
அப்பொழுது தான் சுற்றுபுறத்தை கவனிக்க… அங்கு அவன் தாய் வட்டு

சொந்தங்கள் நிறைந்திருந்தது…
அருள் தன் தாத்தாவின் முகம் பார்க்க.. அவர் ருத்ர மூர்த்தியாய்
அமர்ந்திருந்தார்… உடனே தந்தையை பார்க்க.. அவரோ வருத்தமும்
கோபமுமாக அமர்ந்திருந்தார்…
முதலில் வள்ளியம்மையின் தம்பிதான் பேச்சை ஆரம்பித்தார்… ‘’ என்ன
மாப்பிளை பஞ்சாயத்துல என்னென்னமோ நடந்துருக்குன்னு.. ‘’ பசங்க
சொன்னாங்க.. நீங்க எதுவுமே பண்ணலையாம்.. என அவர் கோபத்துடன்
கேட்டார்…
அருளின் அப்பத்தா வடுகம்மாள் வெற்றிலையை இடித்தவாறு.. ‘’ எல்லாம்
நாம வாங்கி வந்த வரம்… பாவி மக இப்படி என் குடும்பத்தை
பஞ்சாயத்துக்கு இழுத்துட்டாளே… நான் அப்பவே சொன்னேன்.. அவள
இங்கிருந்து அனுப்பாதீங்கன்னு... என் பேச்சை யாராவது கேட்டிங்களா.. ‘’ என
புலம்பினார்…
அப்பொழுது வள்ளியம்மையின் தந்தை… ‘’ தங்கச்சி நான் அப்பவே
சொன்னேன்.. அந்த நிலத்தை என் மவ பேருக்கு மாத்துங்கன்னு.. ஆனா என்
பேச்சை யாருமே கேட்கல.. அதனாலதான் இன்னைக்கு பஞ்சாயத்துல அவ
சொத்தை நாம ஓசில அனுபவிக்கிறோம்னு திண்ணக்கமா சொல்லிருக்கா..
இப்பயாவது நான் சொல்றத கேளுங்க.. பேசாம அவளை நம்ம மாப்பிளைக்கே
பொறக்கலைனு ஊருக்குள்ள சொல்லிருவோம்.. ‘’ என அவர் முடிக்கும்
முன்பே…
மாமா.. தாத்தா.. என்ற கர்ஜனைக் குரல்கள் அங்கு ஒலித்தது…
அதைக்கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் திடுக்கிட்டு விட்டனர்…
மாமா என் மவள பத்தி இப்படி பேச உங்களுக்கு எங்கேயிருந்து இவ்வளவு
தைரியம் வந்தது.. என கூறியவர் தன் பெற்றோரையும் மனைவியையும்
பார்த்து முறைத்தார்…
கணவரின் உக்கிரப்பார்வையைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கி போனார்
வள்ளியம்மை….
வள்ளியம்மையின் தம்பி.. கோபமாக ஏதோ கூறவர.. எல்லாரும் செத்த
அமைதியாயிருக்கிங்களா என ஓர் அதட்டல் போட்டார்.. அருளின் தந்தை
வழி தாத்தா செங்குட்டுவன்…
அருளு.. அழகு ரெண்டு பேரும் என் கூட வாங்க.. உங்ககிட்ட பேசணும்.. என
அவர்களை தன் அறைக்கு அழைத்துச் சென்றார்…
உள்ளே வந்தவர்… அருளிடம் கதவை சாத்திட்டு டிவிய போடு.. என்றவர்..
அவன் வந்ததும்…
இப்போ சொல்லுங்க.. என்ன பண்ணலாம்ன்னு இருக்கிங்க.. என இருவரையும்
பார்த்துக் கேட்டார்…
எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் அப்பச்சி… என் மவ இங்கனயே
இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது.. என அழகு
ஆதங்கத்துடன் கூறவும்..
செங்குட்டுவன்.. முடிஞ்சத பேசாம.. நடக்க வேண்டியத பாரு.. என அதட்டல்
போடவும்.. முணுமுணுப்புடன் அமைதியானார்..
அப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியைக் கண்டு
அனைவரும் அதிர்ந்தனர்..
ஆனால் அனைவரையும் விட அதிகம் அதிர்ந்தது… அருள்மொழியே…
பேரனின் முகம் பார்த்த செங்குட்டுவன்… முதலில் அவனை சமாதானம்
படுத்தும் பொருட்டு.. ‘’ ஹே பேராண்டி.. இது பொய்யா இருக்கும்யா.. ‘’
‘’ இல்லை ஐயா இது அக்கா வேலைதான்… என்னை சாதாரணமா
நினைச்சுட்டாங்க.. இதுக்கு மேல என்னால அமைதியா இருக்க முடியாது…
ஐயா நான் சொல்றத செய்யுங்க.. ‘’ என தன் திட்டத்தை கூறினான்….
அதைக் கேட்டு.. செங்குட்டுவன் மகிழ்ந்தார் என்றால் அழகப்பன்
பயந்துவிட்டார்..
வேணாம் அருளு.. குந்தவை ரொம்ப கோபப்படுவா என அவர் மெல்லிய
குரலில் கூறியதும்…
அருள் முறைத்த முறைப்பில் அவர் வாய் தானாக மூடிக்கொண்டது…
உலகத்துலையே பெத்த பிள்ளைக்கு பயப்புடற அப்பன் நானாத்தான்
இருப்பேன்.. என உள்ளுக்குள் நொந்துக் கொண்டார்….
சரி பேராண்டி.. நான் இங்கன எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.. நீ பத்திரமா
போயிட்டு வா.. என்றவர்.. முதல்ல வெளில இருக்குற அந்த கும்பலை
அனுப்பிட்டு வரேன்.. என வெளியேறினார்…
சென்னையில் உள்ள அந்த பெரிய வெண்ணிற மாளிகையில் குந்தவை..
நுழைவதற்கும் அவள் போன் அடிப்பதற்கும் சரியாய் இருந்தது…
அவள் ஆன் செய்து காதில் வைக்க… மறுமுனையில் மேம்.. நியூஸ்
வந்துடுச்சு மேம்.. எனவும் அவள் இதழ்கள் லேசாக வளைந்தது..
ஹ்ம்ம்ம் என்று போனை வைத்து உள்ளே நுழைந்தாள்…
ஹாலில் அவள் மைந்தன் ஷ்ரவன்.. முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு
அமர்ந்திருந்தான்…..
குந்தவை அங்கு அமர்ந்திருந்த.. தன் மாமியாரை கேள்வியாக பார்க்க..
அவரோ உன் பொண்ணுதான் காரணம் என்பதுபோல் சைகை செய்தார்..
குந்தவை அலுப்புடன்.. அவன் அருகில் அமர.. இருந்தும் சார் முகத்தை
திருப்பவில்லை…
குந்தவை.. என் செல்லத்துக்கு என்னாச்சு… என்றதுதான் தாமதம்.. மகன்
கண்களில் இருந்து… நீர் அருவியாய் கொட்டியது…
‘’ அம்மா.. அக்கா என் கேர்ள் ப்ரெண்ட்கிட்ட.. என்னை பத்தி என்னமோ
சொல்லி வச்சுட்டா.. அத நம்பி அவளும் என்கிட்ட பேசமாட்டேன்ட்டா ம்மா.. ‘’
என்று அவன் கூறியதும்..
‘’ இந்த வயசுல உனக்கென்னடா கேர்ள் ப்ரெண்ட்.’’ என கேட்டவாறு அங்கு
வந்தார்.. குந்தவையின் காதல் கணவன்.. சந்திர பிரசாத்…
‘’ ஹ்ம்ம்ம்.. என் பையன் ஜீன் அப்படி.. ‘’ என ஜாடையாக கணவரை
பார்த்தவாறு குந்தவை நக்கலாக கூறியதும்..
சந்திரன் புருவம் உயர்த்தி… அவளை பார்க்க.. அவளோ முகத்தை
திருப்பினாள்.. அதைப்பார்த்த சந்திரனின் இதழில் ரகசிய புன்னகை.. ஒஹ்
மேடம் கோபமா இருக்காங்களா.. உடனே கூல் பண்ணியாகணுமே என்ன
பண்ணலாம் என யோசிக்க ஆரம்பித்தவரை … மகனின் குரல் தடுத்தது..
உங்களுக்கு எப்பவும்.. அக்காதான் பெருசு.. நான் என்ன சொன்னாலும் நீங்க
கண்டுக்க மாட்டிங்க.. என மேலும் அழுத வாறு கூற… குந்தவை கணவரை
முறைக்க ஆரம்பித்தாள்..
அப்பொழுது வட்டின்
ீ டெலிபோன் அடித்தது… சிவகாமி போனை எடுத்து
யாரென கேட்க.. மறுமுனையில் பதில் கூறியதும்.. உடனே தன் பேரனை
பார்த்து.. டேய் உன் ப்ரெண்ட் தான்… யாரோ சோனாக்க்ஷியாம்..
அவ்வளவு தான் உடனே போனை நோக்கி ஓடினான்… ஹலோ.. சோனா
அக்கா உன்கிட்ட என்ன சொன்னா.. ஏன் இன்னைக்கு என்கிட்ட பேசல என
பாவமாய் ஷ்ரவன் கேட்டதும்… அதற்க்கு அந்த பெண் என்ன சொன்னாளோ..
இவன் முகம் கொஞ்ச கொஞ்சமாக சிவப்பு நிறம் கொண்டது…
ஓகே bye.. என போனை வைத்தவன்.. ம்மா நேத்து நான் அக்காவ ஏமாத்தி
அவ சாக்லேட்ட சாப்பிட்டதால.. சோனாக்கு போன் பண்ணி நாளைக்கு
ஷ்ரவண ஏமாத்தலாமான்னு சொல்லிருக்கா… இன்னைக்கு நான் அவளை
சும்மா விடமாட்டேன்.. நீங்க யாரும் நடுவுல வரக்கூடாது.. என கோபமாய்
மாடியேறினான்…
உன் மகளுக்கு இவ்வளவு ஏத்தம் ஆகக்கூடாது குந்தவை.. பாவம் ஒரு
சாக்லேட்க்காக என் பேரனை இப்படி அழவச்சுட்டா.. அன்னைக்கும்
அப்படித்தான் அவ அசைவம் செஞ்சுக்கேட்டா.. நான் வெள்ளிக்கிழமை
சமைக்க கூடாதுன்னு சொன்னதுக்கு.. எனக்கு புடிச்ச புடவைல ஜூஸ
கொட்டிட்டா.. என புகார் வைக்க குந்தவையின் கோபம் அதிகரித்தது…
அம்மா.. அவ சின்ன பொண்ணும்மா.. ஏதோ விளையாட்டுத்தனமா
பண்ணிருப்பா.. என குந்தவையின் முகம் பார்க்காது.. சமாளிக்க..
ஹ்ம்க்கும் என நொடித்தவாறு சென்றார்…
குந்தவையும் வேகமாக மேலே செல்ல.. சந்திரன் போனை எடுத்து.. பேபி நீ
இங்க என்ன நடக்குதுன்னு இதுக்குத்தான் பார்க்க சொன்னியா..
………
ஓகே.. ஸ்வட்டி
ீ நீ இப்போதைக்கு வட்டுக்கு
ீ வந்துறாத.. உங்கம்மா செம்ம
கோபத்துல இருக்கா.. நான் அவள கூல் பண்ணிட்டு கால் பண்றேன்..
..........
ஓகே டியர்.. bye. என்றவர் தன் மனைவியை பார்க்க சென்றார்.. குந்தவை
கண்ணாடி முன் அமர்ந்திருக்க.. அவளின் தோளை அமுக்கி விட்டு ரிலாக்ஸ்
பண்ணியவர்… என்னடா ஆச்சு என மென்மையாக கேட்டதும்தான் தாமதம்…
நான்தான் அந்த ஊருக்கு போக மாட்டேன்னு சொன்னேன்ல.. என்னை எதுக்கு
வற்புறுத்தி அனுப்பிவச்சிங்க… இப்போ நான் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா பீல்
பண்றேன்… என பொறிந்து தள்ளினார்…
சந்திரன் பதில் பேசவில்லை.. அவள் நெற்றியை இதமாக பிடித்துவிட்டான்…
நல்லா வளர்ந்துட்டான்.. நான் அவன அண்ணாந்து பார்த்துதான் பேசணும்
போலிருக்கு.. கம்பீரமா இருக்கான்.. என்ன இன்னும் கொஞ்சம்
கறுப்பாயிட்டான் என மெல்லிய சிரிப்புடன் கூறியள்.. அப்பொழுது தான்
அவள் உலறியதை உணர்ந்து அமைதியானாள்..
அப்பொழுதும் பேசாத.. சந்திரன் நியூஸ்ல என்னென்னமோ சொல்ராங்களே ..
உனக்கு தெரியுமா.. என கூர்மையாக குந்தவையை பார்த்தவாறு கேட்க..
ஓர் நிமிடம் திருதிருவென முழித்தவள்… மறுநொடி தைரியமாக கணவனின்
விழிகளைப் பார்த்து.. இது வெறும் ரூமர்தான் என கூறி சென்றாள்..
செல்லும் குந்தவையையே பார்த்தவரின் இதழ்கள் புன்னகைத்தது…
சந்திர பிரசாந்த் .. பிரசாந்த் குரூப் ஆஃப் கம்பெனிஸின் ஒற்றை வாரிசு..
பரம்பரை பணக்காரர்கள்.. குந்தவையை பார்த்ததும் காதல் கொண்டு.. தன்
வட்டினர்
ீ சம்மதத்தோடு தன்னவளை கரம் பிடித்தான்…
இவர்களின் வாரிசுகள் தான் வானதி நாச்சியார்.. ஷ்ரவன் பிரசாந்த்.. அன்பான
அழகான குடும்பம்…
**********************************************
அந்திவானம் இருட்டிக் கொண்டு வரும் வேளையில்.. சலசலவென ஓடும்
ஆற்றின் கரையோரம்.. ஓர் காதல் ஜோடிகள்.. தங்களின் காதல் லீலையை
ஆற்றிக்கொண்டிருந்தனர்… பெண்ணவளின் விழிகள் கிறங்கி… மயங்கி
மூடியிருக்க.. ஆடவனின் கரங்களோ.. பெண்மையின் மென்மையை அளந்துக்
கொண்டும்.. அவற்றிற்கு இதழ்களால் ஒத்தடம் இட்டுக்கொண்டும் இருந்தது..
பெண்ணவள் தன் மன்னவனின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி.. அவன்
முகம் காண முயன்ற போது.. அவள் முகத்தில் தெளித்த நீரித்துளிகளில்..
சட்டென்று விழிக்க.. அவள் முன் காளியாக நின்றிருந்த விரிவுரையாளரைக்
கண்டு வானதியின் சர்வமும் நடுங்கியது…
வானதி பாவமாய் தன் தோழிகளை பார்த்தாள்.. அப்பொழுது தான் ஒன்றை
கவனித்தாள்.. அவளது தோழிகளும் நின்றுக் கொண்டிருந்தனர்.. முக்கியமாக
ஆசிரியரை விட அதிகமாக முறைத்துக் கொண்டிருந்தனர்… வானதி..
அச்சுச்சோ இன்னைக்கு என்ன பண்ணேன்னு தெரிலையே… என மனதிற்குள்
புலம்பினாள்..
விரிவுரையாளர்.. வானதி உனக்கு இதே வேலையா போச்சு.. இனிமேல் என்
கிளாசில நீ தூங்கினா உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசவேண்டியதா இருக்கும்..
என கூறி அறையிலிருந்து வெளியேறினார்…
ஹ்ம்ம்ம்.. என பெருமூச்சுடன் திரும்பியவளை தோழிகள் கூட்டம் சூழ்ந்தது..
அச்சுச்சோ.. ஒன்னு கூடிட்டாளுகளே என்ன பண்றது… ஹ்ம்ம்ம்
சமாளிப்போம்.. என்னடி நீங்க அந்த சோடாபுட்டி வரும்போது என்னை
எழுப்பிவிட்ருக்கலாம்ல என கூறியதும்தான்.. தாமதம்..
பக்கி பக்கி… உன்னை எத்தனை தடவைடி எழுப்புரது… உன்னால இன்னைக்கு
நாங்களும் திட்டு வாங்கினோம்.. என அவள் முதுகிலே நோட்டினால்
அடித்தனர்..
வானதி ‘’ ஹே… போதும்டி.. விடுங்கடி.. சாரி சாரிடி என்றவள் அவர்கள்
அனைவரையும் தள்ளி விட்டு ஓட அவர்களும் துரத்த ஆரம்பித்தனர்…
வானதி இருபது வயது.. தங்கப்பதுமை.. அவளிடம் இருக்கும் மெல்லிய
மச்சமும் தெள்ளத்தெளிவாக தெரியும் அளவிலான பால் வெள்ளை நிறம்…
ஸ்லிம்மாக இருப்பதுதான் அழகு என எண்ணம் கொண்ட நவன
ீ யுவதிகளின்
மத்தியில்.. கொழுக் மொழுக்கென்று குழந்தை முகத்துடன் இருக்கும் அழகி..
அதற்காக குண்டு என்றில்லாமல் ச்சப்பியாக இருப்பாள்..
அதுமட்டுமில்லாமல் புதிதாக காதல் கொண்ட பைங்கிளி..
ஒருவழியாக சண்டை அனைத்தும் முடிந்ததும்… ஹே உன் ஆள நினைச்சு
கனவு காண்கிறத எப்படி விட போற.. என ஒருத்தி கிண்டலாக கேட்டாள்..
காலையில் தான் கண்ட கனவின் நினைவில் வானதியின் முகம்
செவ்வானம் கொண்டது..
அதைப்பார்த்த அவள் நெருங்கிய தோழி சுபஸ்ரீ.. ஹேய் வானு.. உன் ஆப்பிள்
கன்னம் என்ன இவ்வளோ ரெட்டிஷா இருக்கு.. என்ன எ ப்ளஸ் பிளஸ்
கனவா என்றவுடன்.. வானதியின் முகம் மேலும் சிவப்பு வர்ணம் கொண்டது…
சரி எப்போ உன் ஆள எங்களுக்கு அறிமுகப்படுத்த போற ..
ஹ்ம்ம்ம் கண்டிப்பா ஒரு நாள்.. அவர கூட்டிட்டு வரேன்..
அப்பொழுது அவள் மொபைல் போன் ஒலிக்க… அதைப் பார்த்தவள் முகம்
மலர்ந்தது.. ஓகே ப்ரெண்ட்ஸ்.. நான் உங்கள அப்புறம் மீ ட் பண்றேன்.. என
தன் கைப்பையை எடுத்துக் கொண்டு சென்றாள்…
கண்டிப்பா அவ ஆள பார்க்க தான் போறா.. வாங்க நாமளும் பின்னாடியே
போவோம்..
ச்ச ச்ச வேணாம்ப்பா.. அவளே அது யாருன்னு சொல்வா என்ற சுபஸ்ரீயை
கண்டுகொள்ளாமல் அவளையும் இழுத்துக் கொண்டு சென்றனர்..
அங்க பாருங்க.. நான் சொன்னேல்ல.. வானு அப்பாவோட பார்ட்னர் பையன்
தர்ஷன் தான் அவ லவ்வர்..
ஹேய்.. அதெல்லாம் இருக்காது ப்ரெண்டா கூட இருக்கலாம்ல என சுபஸ்ரீ
தயக்கமாய் உரைக்க..
அதெல்லாம் இல்லை.. அங்க பாரு அவங்கள பார்த்தா ப்ரெண்ட்ஸ் மாதிரியா
தெரியுது.. என்றவுடன்.. சுபஸ்ரீயின் விழிகள் தானாக அவர்களை நோக்கியது…
வானதி அவன் தலைமுடியை கலைக்க.. தர்ஷனோ அவள் கழுத்தில் தன்
கரங்களை சுற்றி வளைத்து இறுக்கினான்.. வானு பதிலுக்கு பதில் சண்டை
போட்டவாறு அவனுடன் காரில் ஏறி சென்று விட்டாள்..
இதைப் பார்த்த சுபஸ்ரீக்கு சற்று சந்தேகம் தான் காதல் தானோ என்று..
மற்றொருத்தி சரி வாங்கடி போகலாம் என அனைவரையும் அழைத்துச்
சென்றாள்..
‘’ ஹே பப்ளிமாஸ்.. உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. ‘’ என்
தலையை களைக்காதன்னு என கோபத்துடன் கூறினான்…
‘’ நான் கலைக்காம வேறு யாரு கலைப்பாங்களாம்.. ‘’ என செல்லம் கொஞ்சி
அவன் தோளில் சாய.. தர்ஷனும் சிரித்தவாறு அவள் தலையில் தன்
தலையை மோதினான்…
********************************************
தன் வயல்வெளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த அருளின் முன்னால்
தூக்குவாலியுடன் ஓர் வளைக்கரம் நீண்டது… அது யாரென அறிந்தவன்… ‘’
என்ன தில்லை இந்த பக்கம்.. ‘’
‘’ ஏன் மச்சான் எனக்கு இங்க வர உரிமையில்லையா என சிணுங்கலுடன்
கேட்டாள் வள்ளியம்மையின் தம்பி மகள் தில்லையம்மை.. ‘’
‘’ உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. என்னை மச்சான்னு
கூப்பிடாத.. எனக்கு வரப்போற மனைவிய தவிர வேறு யாரும் இப்படி
கூப்பிடறது எனக்கு பிடிக்காது.. ‘’
‘’ ம்ம்ம்ம் அதுக்குத்தான் நான் கூப்பிடுறேன்.. ‘’
இந்தமாதிரியெல்லாம் பேசாதேன்னு.. எத்தனை தடவை சொல்றது.. தில்லை.
நடக்குறது மட்டும் பேசு.. என எரிந்து விழுந்தான்..
நடக்கும் மச்சான்.. நடக்கும் எங்க அப்பச்சி நடத்திக் காண்பிப்பாரு.. என
மனதில் நினைத்தவள்.. அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் இந்தாங்க சீம்பால்
அம்மா கொடுத்து விட்டாங்க..
வாங்க வில்லை என்றால்.. போகமாட்டாள் என அறிந்த அருள்மொழி எதுவும்
பேசாமல் வாங்கி வைத்தவன்.. அவளை வற்புறுத்தி அங்கிருந்து
அனுப்பினான்.. சீம்பாலை அங்கு வேலைசெய்பவர்களின் பிள்ளைகளிடம்
கொடுத்து விட்டு சென்றான்…
கோப முகமாய்.. வந்த மகளிடம் என்ன ஆத்தா உன் மாமனுக்கு சீம்பாலு
கொடுக்க போறேன்னு துள்ளிக்கிட்டு போன.. என்ன கொடுத்துட்டியா..
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்.. அதெல்லாம் கொடுத்தேன்.. என சிடுசிடுப்பாய் கூறியவள்…
சட்டென்று தன் தந்தையின் காலருகில் அமர்ந்து அப்பச்சி எனக்கும்
மாமாக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்ல என கலக்கமான குரலில்
கேட்டாள்...
“ என்னத்தா.. ஏன் இப்படி மருகுற உன்னை விட வேறு யாரு உன் மாமனுக்கு
தகுந்த ஜோடி ‘’ என அவளை தேற்றிய அவள் தாத்தா கணபதி.. வட்டு

பெண்களிடம் ஜாடை காட்டினார்.. அவர்களும் தில்லையை சமாதானம்
படுத்தி உள்ளே அழைத்து சென்றனர்..
‘’ செல்வம்.. என் மனசுக்குள்ள என்னமோ உறுத்தலா இருக்குய்யா..
ஒருவேளை சரித்திரம் திரும்பிருமோ என்றார் யோசனையுடன்.. ‘’
‘’ அப்பச்சி.. தேவையில்லாம விசனப்படாதிங்க.. ‘’
‘’ இல்லைய்யா.. நாம சீக்கிரம் தில்லைக்கும் அருளுக்கும் கல்யாணத்த
பண்ணி வச்சிட்டா நல்லதுன்னு தோணுது.. ‘’
‘’ சரி அப்பச்சி.. நான் உடனே அக்காகிட்ட பேசுறேன்.. அக்கா பேச்சை அருளு
மீ ற மாட்டான்… அம்மாக்கிட்டயும் புஷ்பாக்கிட்டயும்.. அக்கா எப்படி அருளுக்
கிட்ட பேசுறதுனு சொல்லிக் கொடுக்க சொல்லிடுறேன்.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் ‘’ என்று மட்டும் கூறினார்..
அவ்விருவருக்கும் தெரியவில்லை.. நிலைமை கைமீ றி போய்விட்டது
என்றும்.. அவர்கள் எதற்கு பயந்தார்களோ அது நடக்க போகிறது என்றும்..
முக்கியமாக அருள்மொழி பாண்டியன் அவர்களின் எண்ணங்களுக்கு
அப்பாற்பட்டவன் என்று ….
அசுர வேகத்தில்.. காரை விரட்டிக் கொண்டிருந்தான் அருள்மொழி.. அவன்
முகம் மிகவும் நிர்மலமாக இருந்தது.. அப்பொழுது அவன் தோளில் யாரோ
சாய.. அருள் மொழி ஒரு கரத்தால் அந்நபரை நன்றாக தன் நெஞ்சம் அருகே
சாய்த்துக் கொண்டான்… நிலா வெளிச்சம் மட்டுமே காரில் நிறைந்திருக்க..
அவ்வெளிச்சத்தில் தன் நெஞ்சத்தை பார்க்க.. அங்கு அவனின்
மார்ப்புச்சூட்டில் சுகமாக துயில்க் கொண்டிருந்தாள்… வானதி..

அத்தியாயம் 3

பூனை போல் அடி எடுத்துவைத்து சத்தமில்லாமல் வந்துக் கொண்டிருந்தாள்..


வானதி… அப்பொழுது குண்டம்மா நில்லுடி.. உன்னை நான் இன்னைக்கு
சும்மா விடமாட்டேன்.. என அவள் பின்னிருந்து கத்தியவாறு வந்தான்..
பதினான்கு வயது ஷ்ரவன்..
அச்சுச்சோ… இவன கவனிக்காம விட்டுட்டோமே.. என மனதிற்குள்
நினைத்தவாறு ஓட ஆரம்பித்தாள் வானதி…
‘’ ஏய்.. வேணாம்டா நான் உன் செல்ல அக்கா.. அழகு அக்கா இல்லை.. ‘’
‘’ இல்லைடி குண்டம்மா.. நீ என் எனிமி.. ‘’ என அங்கிருந்த பில்லோவை
அவள் மீ து எறிந்தான்..
டாட்.. டாட்.. என்னை காப்பாத்துங்க என அலறியவள்.. அங்கு வந்த தன்
தந்தையை சுற்றி ஓடினாள்..
அப்பா.. தள்ளிப் போங்க.. இன்னைக்கு இவ என்ன ரொம்ப அழவச்சுட்டா.. நான்
கோபமாயிட்டேன்.. என வானதியை துரத்தியவாறு கூறினான்…
ரெண்டு பேரும் இப்படி ஓடுறத நிறுத்துங்க.. என அதட்டியவாறு அங்கு
வந்தாள் குந்தவை…
வானதியை பார்த்து முறைத்தவள்.. நீ பண்ணது தப்பு வானு.. அதுனால உன்
தம்பிக்கிட்ட சாரி கேளு… என்றவள். ஷ்ரவனிடம்.. அவ உன்னோட வயசுல
பெரியவ.. இப்படியா மரியாதை இல்லாம பேசுவ… நீயும் சாரி சொல்லு.. என
இருவரிடமும் கூறினாள்…
வானதியும் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.. சாரிடா ஷ்ரவன்.. என
கூற..
ஷ்ரவன்.. இவ இப்படியெல்லாம் கேட்குற ஆள் இல்லையே என அவளை
சந்தேகமாய் பார்த்தவன்.. தாயின் முறைப்பைக் கண்டு.. சாரி க்கா.. என்றான்..
குந்தவை சிரிப்புடன்.. இருவர் கன்னத்தையும் தட்டிவிட்டு செல்ல..
சகோதரனின் சந்தேகம் மெய்யென்பது போல் அவனை பார்த்து வெவ்வவ்வே
என அழகு காண்பித்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள்…
சந்திரன் தன் மகளின் குறும்பை பார்த்து சிரித்தார்.. அவருக்கு எப்பொழுதும்
வானதி என்றால் தனி பிரியமே…
இரவு உணவு முடிந்து தன் படுக்கையில்.. தொப்பென்று விழுந்தவள்
கரங்களில்.. அவள் கண்ணாளனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது…
அதில் முத்தமிட்டவள்.. டேய் பொருக்கி என்ன கனவுல வந்து
என்னென்னமோ பண்ற.. குந்தவை நாச்சியார் மக..வானதி நாச்சியார் மேல
கைவைக்க… உனக்கு என்ன தைரியம்.. ஹ்ம்ம்ம் என அவள் நிழற்படத்தில்
கோடிழுத்தாள்.. மெதுவாக துயில் கொள்ள ஆரம்பித்தாள்…
நடுநிசி வேளையில்… ஓர் கருப்பு உருவம் பால்கனி வழியாக அவள்
அறைக்குள்நுழைந்து.. ஆழ்ந்து துயில்க் கொண்டிருந்தவளை நேரம் காலம்
தெரியாமல் ரசிக்க…
பெண்ணவளின் உள்ளுணர்வு ஏதோ உந்த அவள் நயன விழிகள் மெல்ல
திறந்தது…
எதிரில் யாரோ இருப்பதை உணர்ந்தவளுக்கு.. ஓர் நிமிடம் ஒன்றும்
புரியவில்லை.. சட்டென்று கத்த வாய் திறந்தவளை.. அவன் விரல்கள்
மூடியது பிறகு ஏதோ ஓர் துணியை அவள் மூக்கில் வைத்து அழுத்த..
மயங்கி அவன் மார்பில் வழ்ந்தாள்…

அவளை குழந்தை போல் தூக்கி தன் தோளில் போட்ட அருள்மொழி.. யாரும்
அறியாமல் அங்கிருந்து வெளியேறினான்…
அதையெல்லாம் நினைத்தவாறு.. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த
அருள்மொழி இன்னும் இருட்டு விலகாத வேளையில் தன் தோட்ட வட்டுக்கு

சென்றான்… அங்கு அவ்வேளையிலும் அவன் மொத்த குடும்பத்தினரும்
இருந்தனர்.. செங்குட்டுவனும் அழகுவும் மகிழ்ச்சியில் இருக்க.. வடுகம்மாள்
கோபத்துடன் இருக்க.. வள்ளியம்மை என்ன நினைக்கிறார் என்று அவர்
உணர்வு துடைத்த முகத்திலுருந்து ஒன்றும் புரியவில்லை..
காரில் இருந்து.. இறங்கிய அருள்மொழி… அடுத்த பக்க கதவை திறந்து..
மயக்கமடைந்திருந்த வானதியை தூக்கியவாறு உள்ளே நுழைந்தான்…
செங்குட்டுவனும் அழகும்.. கண்களில் துளிர்த்த நீருடன் வானதியின்
தலையை வருடினர்.. வடுகம்மாள் கூட கோபம் மறந்து தன் பேத்தியை
விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தார்…
வள்ளியம்மை.. அருளு… அந்த புள்ளைய உள்ள போய் படுக்க வைய்யா..
சட்டென்று அவர் புரம் திரும்பிய அழகு.. என்னடி அந்த புள்ள.. பேத்தின்னு
சொல்ல வாய் வரலையோ என எரிந்து விழ..
செங்குட்டுவன்.. தன் மகனை அமைதி படுத்திவிட்டு வானதியை உள்ளே
படுக்க வைக்க சொன்னார்…
மெத்தையில்.. தேவதையென துயில் கொண்டவளை படுக்க வைத்த அருள்…
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.. நல்லவேளை அக்கா அந்த
செய்தியக் கொடுத்தா இல்லன்னா இவ இங்க வரதுக்கு
இன்னும் எவ்வளவு நாள் ஆகிருக்குமோ என வாய் வட்டுக்கூறியவன்..

அன்று நடந்ததை நினைத்து பார்த்தான்…
அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது.. பிரபல தொழில்
நிறுவனமான பிரசாந்த் குரூப் ஆஃப் கம்பெனிஸின் உரிமையாளர் மகள்
வானதி நாச்சியார்க்கும்.. அவர்களின் தொழிமுறை நண்பரான தர்ஷன் குரூப்
ஆஃப் கம்பெனிஸின் உரிமையாளரின் மகன் தர்ஷனுக்கும் கூடிய விரைவில்
திருமணம் நடக்க விருப்பதாக உள்ளது.. என ஓர் அழகு மங்கை கூறியதும்..
அருளின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை…
குந்தவையின் பொய்யான செய்திதான்.. அருளின் அதிரடியான கடத்தலுக்கு
காரணம்…
முற்றத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடியிருந்தனர்… எல்லா
ஏற்பாடும் பண்ணியாச்சு அருளு.. இப்போ குந்தவைக்கு போன்
பண்ணுவோமா.. என செங்குட்டுவன் கேட்க… நேரத்தை பார்த்தான் அருள்..
அது மூன்று மணி என காட்டவும்... சரி ஐயா.. நான் பண்றேன்…
ஆழ்ந்து உறங்கிகொண்டிருந்த குந்தவையை அவள் போன் ஒலி கலைக்க..
கைகளால் துளாவியவள்.. போனை எடுத்து யாரென பார்க்காமல்.. ஆன்
செய்து.. ஹலோ என்றாள் தூக்ககலக்கத்துடன்…
யக்கா.. என்ன இன்னும் தூக்கிட்டு இருக்க.. எந்திரிச்சு டீவிய போட்டு பாரு..
என அருள் கூற..
குந்தவையின் தூக்க கலக்கம் மொத்தமும் வடிந்தது.. அவள் சட்டென்று
படுக்கையில் இருந்து எழ.. சந்திரனும் எழுந்தார்..
“ என்ன குந்தவை என்னாச்சு.. ‘’
அதற்கு பதில் கூறாமல்..
'' எதுக்கு இப்ப போன் பண்ணியிருக்க... நான் ஏன் டீவிய பார்க்கணும் ‘’
ஹ்ம்ம் சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்.. என அவன் நக்கலாக கூறியதும்..
குந்தவையின் உள்ளுணர்வு ஏதோ தப்பாக உணர வேகமாக டீவியை ஆன்
செய்தாள்.. அங்கு சற்றுமுன் கிடைத்த செய்தி.. பிரபல தொழில் நிறுவனமான
பிரசாந்த் குரூப் ஆஃப் கம்பெனிஸின் உரிமையாளர் மகள் வானதி
நாச்சியார்க்கும்.. அவரின் தாய் குந்தவை நாச்சியாரின் தம்பி அருள்மொழி
பாண்டியனுக்கும் இன்று காலை பத்து மணியளவில் திருமணம்.. நடைபெற
உள்ளது..
குந்தவை நாச்சியாரின் தந்தைவழி தாத்தாவிற்கு உடல்நிலை
சரியில்லாததால்.. எளிய முறையில் திருமணத்தை நடத்தஉள்ளனர்..
விரைவாக பெரிய அளவிலான வரவேற்ப்பும் நடைபெற உள்ளது..முன்னர்
வானதி நாச்சியார்க்கும்.. தர்ஷன் குரூப் ஆஃப் கம்பெனிஸின் உரிமையாளரின்
மகன் தர்ஷனுக்கும்.. திருமணம் குறித்த செய்தி.. முழுதும் வதந்தியாகும்..
சந்திரன்.. என்ன குந்தவை இதெல்லாம் என கோபத்துடன் கேட்க..
அவளோ தன் மகளின் அறை நோக்கி ஓடினாள்.. பிரசாந்தும்
பின்தொடர்ந்தார்..
அறையில் வானதியை காணமல்.. குந்தவை பரிதவிக்க.. அருளோ.. என்னக்கா
உன் மவள தேடுதியா.. அவ என் கூடத்தான் இருக்கா நாட்டரசன்
கோட்டையில.. என அருள் திமிராக கூறியதும்…
குந்தவையின் கோபம் எல்லையைக் கடந்தது.. நீ ரொம்ப பெரிய தப்பு
பண்ணிட்ட அருள்.. என குந்தவை கத்த..
அதை தூசு போல் தட்டியவன்.. காலைல உன் மவளுக்கும் எனக்கும்
கல்யாணம்.. சீக்கிரம் மாமனையும் மத்தவங்களையும் கூட்டிட்டு வா.. என்று
போனை வைத்தான்…
குந்தவை என்ன செய்வது என புரியாமல் முழிக்க.. இங்க என்ன நடக்குது
குந்தவை.. என் பொண்ணு எங்க அவள் தோளை பிடித்து உலுக்கினார்…
அருள் கூறிய அனைத்தையும் குந்தவை கூற… சந்திர பிரசாந்த்
உக்கிரமூர்த்தியாய் மாறினார்.. அவனுக்கு என்ன திமிர் இருந்தா என்
பொண்ண கடத்திருப்பான்.. என் பொண்ணு கால் தூசி பெருவானா உன் தம்பி..
என்ன தகுதியிருக்கு அவனுக்கு என கோபத்தில் குதிக்க..
என்ன தகுதி வேணும்… நாட்டரசன் கோட்டைக்கே அவன் ராஜா மாதிரி…
உங்ககிட்ட இருக்குற மாதிரி அவன் கிட்டயும் பணம் கொட்டிக்கிடக்கு… நீங்க
பார்த்துக்கிறத விட பத்து மடங்கு அதிகமா உங்கப்பொண்ண தங்க தட்டுல
வச்சு தாங்குவான்.. என கோபத்தில் என்ன கூறுகிறோம் என அறியாமலே
அருளிற்கு சாதகமாய் கூறிக்கொண்டிருந்தாள் குந்தவை…
சந்திர பிரசாந்த் எதுவும் பேசாமல் குந்தவையை கூர்மையாக பார்க்க..
அவளோ சட்டென்று.. என்ன பார்வை வேண்டிக்கிடக்கு வாங்க சீக்கிரம்
போகணும்… நான் ஷ்ரவனையும் அத்தையையும் எழுப்புறேன்.. என
வெளியேறினாள்.. இல்லை தப்பித்தாள் என்று கூட சொல்லலாம்…
அவர்கள் நாட்டரசன் கோட்டையை அடையும் போது அதிகாலை ஐந்து
மணி... அதுவும் குந்தவைக்கு சிவகாமியையும் ஷ்ரவனையும்
சமாளிப்பதுதான் பெரிய வேலையாகி போனது…..
அருள் கண்டிப்பாக தோட்ட வட்டில்
ீ தான் இருப்பான் என அறிந்த குந்தவை..
விரைவாக அங்கு சென்றாள்..
அவள் மனம் மிகவும் படபடப்பாய் இருந்தது.. எந்த ஊருக்கு இனி தன்
வாழ்நாள் முழுதும் வரக்கூடாது என உறுதிகொண்டாளோ… அந்த ஊருக்கே
அவள் மகளுக்காக வரவேண்டியதாகி விட்டது..
முக்கியமாக எந்த குடும்பத்தை வெறுத்தாளோ.. அந்த குடும்பத்தில் தன் மகள்
வாழப்போவதை குந்தவையால் ஜீரணிக்க முடியவில்லை… முடிந்த அளவு
அதை தடுக்க வேண்டும் என எண்ணினாள்.. அது நடக்காது என அறிந்தும்…
தோட்ட வட்டில்
ீ ஊர் ஜனமே கூடியிருந்தது.. வள்ளியம்மையின் சொந்தங்கள்
கோபமாய் தர்க்கம் செய்துக் கொண்டிருந்தனர்… இதையெல்லாம் காரின்
கண்ணாடி வழியே பார்த்த குந்தவை.. தன் தயக்கம் படபடப்பு அனைத்தையும்
மறந்து.. ஓர் அரசியின் தோரணையில் காரிலிருந்து இறங்கினாள்…
குந்தவையை கண்டதும் அங்கு மேலும் சலசலப்பு கூடியது…
வள்ளியம்மையின் தந்தை.. இதோ வந்துட்டா பாருங்க நல்லா ஒன்னும்
மன்னுமா இருந்த எங்க குடும்பத்தை பிரிச்சுட்டா…
இவ சொல்லித்தான் என் மாப்பிளை இப்படி செய்திருப்பார் இல்லன்னா
எங்ககிட்ட சொல்லாம கல்யாண ஏற்பாடு செஞ்சுருப்பாங்களா.. அன்னைக்கு
இவ அம்மா என் மவ வாழ்க்கையை பறிச்சா.. இன்னைக்கு இவ மவ என்
பேத்தி வாழ்க்கையை தட்டிப் பறிக்குறா.. இதுதான் இவ தாய்வட்டு

பழக்கமோ.. என அவர் மேற்கொண்டு கூறிக் கொண்டே போக…
குந்தவை வைத்த அறையின் சப்தத்தில் மொத்த சலசலப்பும் அடங்கி..
அனைவரும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர்… வள்ளியம்மையின் தந்தை
கணபதியோ ஆடி போய்விட்டார்…
இந்த குந்தவை.. கணபதிக்கு முற்றிலும் புதியவள்.. அவர் என்ன கொடிய
வார்த்தைகளை உபயோகித்தாலும்.. தலை குனிந்து அமைதியாக கேட்டுக்
கொண்டிருக்கும் சிறுவயது குந்தவை அவள் இல்லை..
இப்பொழுது அருளின் கன்னத்தில் விழுந்த அறை தனக்கானது என அவள்
பார்வை வழியே புரிந்துக் கொண்டவரின் வாய் தானாக
அடைத்துக்கொண்டது..
ஆம் அரைவிழுந்தது… அருளிற்கு தான்.. காளியாக அனைவரையும் ஓர்
பார்வை பார்த்தவள்… அருளிடம் எங்கடா என் பொண்ணு.. என கேட்க..
அவனோ அவள் அறைந்ததை பொருட்படுத்தாமல்.. உள்ள தூங்கிட்டு
இருக்கா.. என்றவன் வேலையாளை கூப்பிட்டு ஷ்ரவனை வானதியிடம்
அழைத்துச் செல்லுமாறு கூறினான்..
இப்போ பேச வேண்டியவங்க.. எல்லாரும் பேசுங்க.. ஒற்றையாய் இருந்த
முந்தானையை அலட்சியமாக மேல போட்டவாறு கூறியவளின்
தோரணையில். அவளை தப்பாக பேச வந்தவர்களின் நாக்கு மேலண்ணத்தில்
ஒட்டிக் கொண்டு.. பேசமுடியாமல் சதி செய்தது…
எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க… இவன் என் பொண்ணை கடத்திட்டு
வந்துருக்கான்.. நான் ஒன்னும் ஆசைப்பட்டு இவன் கூட அனுப்பிவைக்கல..
இதுக்கும் மேல யாராவது என் பொண்ணை பத்தி பேசுன ீங்க.. சங்க
அறுத்துருவன்.. என்று அழுத்தத்துடன் கூறியதும்.. அனைவரும் கப்சிப்.. சந்திர
பிரசாந்த் முதற்கொண்டு…
அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அருள்.. இங்க பாருங்க.. நான் என்
அக்கா மகளைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்.. அதில் எந்த மாற்றமும்..
இல்லை அதனால ஊர்மக்கள் அனைவரும் எங்க கல்யாணத்துக்கு வந்து
வாழ்த்தணும்.. என இருகரம் கூப்பி எல்லோருக்கும் அழைப்பு விடுக்க…
வள்ளியம்மையின் தம்பி கோபத்தில் பொங்கினார்.. அப்போ என் மவ
தில்லைகதி.. சின்ன வயசுல இருந்தே உங்களைத்தான அவ மனசுல
நினைச்சுட்டு இருந்தா.. அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க.. என
கேட்க ஊர் மக்களிடையே முணுமுணுப்பு…
மாமா நான் என்னைக்கும் தில்லைய அந்த மாதிரி நினைச்சதில்ல… தப்பா
பேசாதீங்க தில்லை வாழ வேண்டிய புள்ள.. என அருள் கூறவும் இப்போ
வேறு மாதிரியான முணுமுணுப்புகள்….
போதும்… நிறுத்துங்க எல்லாரும்.. யாரைக் கேட்டு கல்யாண ஏற்ப்பாடு
பண்ணுறீங்க.. அவ என் பொண்ணு.. இந்த சந்திர பிரசாந்தோட பொண்ணு..
என் மகள கட்டிக்க இவனுக்கு என்ன தகுதியிருக்கு என பிரசாந்த் கோபத்தில்
வெடிக்க.. ஊர்மக்கள் பொங்கிவிட்டனர்…
ஊர் மக்கள் அனைவரையும்.. கணபதி குடும்பத்தினர் இங்கு கூட்டிவந்ததன்
காரணமே.. அருள் வானதியின் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த
வேண்டும்.. என்பதுதான்..
அவர்களிடத்தில் குந்தவை மட்டும் அவள் மகளை அருள்மொழிக்கு
கல்யாணம் செய்து வைத்துவிட்டாள்… நிலம் கண்டிப்பாக குந்தவைக்குதான்..
அவள் நிலத்தில் தொழிற்சாலை கட்டபோகிறாள்.. அது ஊருக்கு கேடு.. என
என்னென்னமோ சொல்லி மெருகேற்றி கூட்டிவந்தனர்…
ஆனால் சந்திர பிரசாந்த் அருள்மொழியை பற்றி தவறாக பேசவும்.. ஊர்மக்கள்
வந்த வேலையை மறந்தனர்..
‘’ எங்க ஊருக்கே வந்து.. எங்க சின்னய்யா பத்தி தப்பா பேசுவங்களா..
ீ ‘’
‘’ அவர் யாரு தெரியுமா.. இந்த நாட்டரசன் கோட்டைக்கே ராசா மாதிரி ‘’
‘’ அவர கல்யாணம் பண்ணிக்க நான் நீன்னு போட்டி போடுறாக தெரியுமா.. ‘’
‘’ என்ன நடந்தாலும் உங்க மவ.. தான் எங்க சின்னய்யா மனைவி.. வாங்க
எல்லாரும் கல்யாண வேலைய பாப்போம்.. ‘’ என ஊர்மக்கள் உற்சாகமாய்
கிளம்பினர்..
செல்வத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அவர் ஒன்றை
நினைக்க இங்கு வேறொன்று நடந்தது.. அவர் கோபத்துடன் கணபதியை
பார்க்க… அவர் விழிகளில் ஏதோ ஓர் செய்தி இருந்தது.. அதை புரிந்துக்
கொண்ட செல்வமும் அமைதியானான்…
அய்யா.. நீங்க என்ன சொல்றிங்க என ஒருவர் கணபதியிடம் கேட்டதும்..
ஊரோட முடிவு தான் எங்க முடிவும்.. நீர் அடிச்சு நீர் விலகாது..
அதுபோலத்தான் எங்க உறவும்.. மச்சான் என்னதான் எங்களை
விலக்கினாலும் எங்க மகளுக்காக நாங்க தாங்கிப்போம் என அவர்
தோளிலுள்ள துண்டால் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டே கூற... அப்பா
என்று கதறலுடன் அவர் காலடியில் அமர்ந்தார் வள்ளியம்மை..
அதைப்பார்த்த.. குந்தவை வெறுப்புடன் முகத்தை திருப்பினாள்…
வடுகம்மாளும்.. என்னன்னே இப்படி பேசுறீங்க என அவரும் ஆதங்கத்துடன்
கேட்க..
செங்குட்டுவன்.. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர எண்ணி.. என்ன
மச்சான் நாம எல்லாம் அப்படியா பழகிருக்கோம்… இது திடிர் முடிவுய்யா..
ஆனா பாரேன் நீ.. இந்த விசயம் தெரிஞ்சதும் என்கிட்ட வந்து கேட்பேன்னு
நினைச்சேன்.. ஆனா இப்படி ஊரையே கூட்டிவருவேன்னு தெரியலை.. என
அவரும் ஓர் உள்குத்து வைக்க…
சரி சரி விடுங்க மச்சான்.. நடந்து முடிஞ்சதை மறந்துட்டு.. நடக்க
வேண்டியதை பாப்போம்… வாங்க என அவர் பேச்சை மாற்றினார்…
இதுவரை தன் மகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த
அழகு.. அவள் அருகில் செல்ல குந்தவை முகத்தை திருப்பினாள்…
அதை அவர் வருத்தமும் வேதனையும்மாக பார்க்க.. செங்குட்டுவன்
அழகுவின் தோளில் கரம் வைத்து.. அழுத்தியவர் பிரசாந்த்திடம் பேச
ஆரம்பித்தார்..
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அருள்.. அப்பொழுது தான் அங்கு
கண்ணருடன்
ீ நின்றிருந்த வானதியைக் கண்டான்…

அத்தியாயம் 4

நாட்டரசன் கோட்டை.. கண்ணுடையநாயகி கோவில் அல்லது கண்ணாத்தாள்


கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்… இந்த தலத்தின் சிறப்பு.. இங்கு
அம்மன் சுயம்பு மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்…
கோயில் துவக்கத்தில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம்,
ஆகியவை மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்டிருந்தன…
அதையடுத்து அம்மனுக்கு அலங்கார மண்டபம்.. அபூர்வ
சிற்பவேலைப்பாட்டுடன் கூடிய வெகுஉயரமான ராஜகோபுரமும்
சொக்காட்டஞ்சாரி என்ற கர்ணக்கால் மண்டபமும் வேலைப்பாடுகளுடன்
கூடிய பொறியியல் நுணுக்கத்துடன் நகரத்தார்களால் எழுப்பப்பட்டது….
கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது.. அம்மனுக்கு
மரவாகனங்களும், வெள்ளிக்கேடயம், வெள்ளிக்குதிரை, வெள்ளிரதம்
ஆகியவை இங்கு இருக்கின்றன… இக்கோவிலில் வைகாசி திருவிழாவும்..
களியாட்டத் திருவிழாவும் இங்கு வெகுவிமரிசையாக நடத்தப்படும்…
கண் தெரியாதவர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து.. இக்கோயிலிலே
தங்கியிருந்து.. தினமும் அம்மனை வழிபட்டு, அம்பாளுக்கு செய்யப்படும்
அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது
நம்பிக்கை… மக்கட்பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில்
எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர்… குழந்தை பாக்கியம் கிடைத்ததும்
வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்… கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும்
குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும்
பெயர் சூட்டுகிறார்கள்...
இன்று அக்கோவில் மிகவும் விமர்சையாக அலங்கரிக்க பட்டிருந்தது..
இங்குதான் அருள்மொழிக்கும் வானதிக்கும் திருமணம்… ஊர் மக்கள்
அனைவரும் சேர்ந்து வேலை செய்து.. திருவிழா போல் திருமணத்தை
ஏற்பாடு பண்ணியிருந்தனர்…
மணமேடையில் அருள்மொழி சாதாரணமாய் அமர்ந்திருக்க.. அவன் அருகில்
மிதமான அலங்காரத்திலும் தேவநங்கையாய் அமர்ந்திருந்த வானதியின்
முகம்தான் மிகவும் இருகியிருந்தது… அதை அருள் கவனித்தாலும் பெரிதாக
கண்டுகொள்ளவில்லை.. அவனுக்கு தேவை இந்த திருமணம்…
குந்தவையும் சந்திரனும் மணமேடையின் அருகே நின்றுக்கொண்டிருந்தனர்…
அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை… குந்தவை ஸ்திரமாக
மறுத்திருந்தால் நிச்சயம் இத்திருமணம் நடந்திருக்காது… ஆனால் அவள் ஆழ்
மனதின் நினைவுகள் அவளை மறுக்கவிடவில்லை…
கணபதியின் குடும்பத்தினரும் அங்குதான் இருந்தனர்.. அவர்கள் விழிகளில்
பழிவெறி கொழுந்து விட்டு எறிந்தது.. இது தான் பதுங்க வேண்டிய நேரம்
என அறிந்தவர்கள்.. நரி போல் தந்திரமாக நடந்துக் கொண்டனர்…
ஒவ்வொரு சடங்கும் முடிந்து… செங்குட்டுவன் அருளிற்கு மங்கள நாணை
எடுத்துக் கொடுத்தார்.. தாலியை தன் கரங்களில் வாங்கியவன் குந்தவையின்
முகத்தை கூர்ந்து பார்த்தான்.. அதில் அவனுக்கு வேண்டியது கிடைத்தவுடன்..
வானதியின் பூமுகத்தை பார்த்தவாறு.. எவ்வித உறுத்தலும் இன்றி அவள்
வெண்ணிற சங்கு கழுத்தில் மங்கள நாணை பூட்டினான்…
விழிகள் மூடி அருமொழியின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளின்.. மனதிற்குள் பல
உணர்வுகள்.. ஆனால் அவள் முகமோ மிகவும் நிர்மலமாக இருந்தது..
காலையிலிருந்து நடந்தவைகளை நினைத்துப் பார்த்தாள்.. அவள் கண்
விழிக்கும் போது.. முதலில் ஒன்றும் புரியவில்லை.. பிறகு இரவு
நடந்தவைகள் ஒவ்வொன்றாக நினைவு வர.. விருட்டென்று எழுந்தாள்..
அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த ஷ்ரவனைக் கண்டதும் அவளுக்கு முதலில்
வந்தது நிம்மதியே.. அடுத்து அந்த இடத்தை குழப்பம் ஆட்கொண்டது..
ஷ்ரவன்.. என அழைத்ததும்.. அக்கா என அவளை ஓடி வந்து கட்டிபிடித்தவன்
நீ எப்படி இங்க வந்த.. என கேள்வி கேட்டான்…
ப்ச்.. அதை அப்புறம் சொல்றேன்.. என அவன் கேள்வியை ஒதுக்கியவள்.. நீ
இங்க என்ன பண்ற.. இது யார் வடு..

எனக்கும் தெரியலை க்கா.. அப்பா அம்மா பாட்டி எல்லாரும் வந்துருக்கோம்..
வெளில என்னமோ சண்டை நடக்குது..
வானதி உடனே வெளியே வந்தாள்… அப்பொழுது தான் அருள்மொழி அவளை
திருமணம் செய்துக்கொள்வதாக கூறியது… அதைக்கேட்டதும் பெண்ணவள்
அதிர்ந்து போனாள்…
அங்குள்ள அனைவரும் ஒன்றை மறந்துவிட்டனர்.. வானதிக்கு
இத்திருமணத்தில் சம்மதமா என்று யாரும் கேட்கவில்லை.. அவள் மனதில்
உள்ளத்தையும் யாரும் புரிந்துக் கொள்ள வில்லை…
திருமணம் இனிதே முடிந்து.. அனைவரும் நிறைவாக உண்டு மணமக்களை
வாழ்த்திவிட்டு சென்றனர்…
ஒவ்வொருவராக வந்து அவர்கள் நெற்றியில் திருநீர் பூசி.. ஆசிர்வாதம்
செய்தனர்.. வானதிக்கு தான் அவர்கள் காலில் விழுந்து விழுந்து இடுப்பு
ஒடிந்து விட்டது… அவள் படும் கஷ்டத்தை பார்த்தவன்.. அவள் செவியருகே
குனிந்து இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தான்.. அப்புறம் இப்படி காலுல விழ
வேணாம்.. என்று அவன் கூறியதும்.. வானதி ஆச்சரியமாக அவனை
பார்த்தாள்.. முதன் முதலாக அவளிடத்தில் பேசியிருக்கிறான்…
அம்மனை தரிசித்து விட்டு மணமக்களை காரில் ஏற்றினர்.. வானதி ஓரத்தில்
அமர்ந்தாள்… அதை ஓர் மாதிரி பார்த்தவன்.. அவளை இடித்துக் கொண்டு
அமர்ந்து தோளை சுற்றி கைவேறு போட்டன்…
வானதியின் முகம் கடுகடுத்தது.. அவள் திரும்பி அருளை முறைக்க அவனோ
அதைக் கவனியாது போல் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஷ்ரவனிடம்
பேசிக் கொண்டிருந்தான்…
கருவாயா.. நான் யாருன்னு தெரியாம என்னை கல்யாணம் பண்ணி ரொம்ப
பெரிய தப்பு பண்ணிட்ட.. இதுக்கு ஒவ்வொரு நாளும் நீ அனுபவிப்படா..
கருவாயா.. கருவாயா என அவனை மனதிற்குள் அர்ச்சித்துக்
கொண்டிருந்தாள்..
அருள் வட்டிற்கு
ீ அழைத்துச் சென்றதும்.. ஆரத்தி எடுத்து மணமக்களை
உள்ளே அழைத்துச் செல்ல.. குந்தவை மட்டும் வெளியவே நின்று அந்த
மாளிகையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. இந்த வட்டில்
ீ இருந்து அவள்
வெளியேறிய பொழுதுகள் நினைவு வந்து.. அவள் முகம் இறுகியது…
குந்தவை வா உள்ள போகலாம்.. என சந்திரன் கூறியதும்.. அவள் முகம்
மறுப்பைக் காட்டியது… நீங்க உள்ள போங்க.. நீங்க கூட இருந்தா வானு
கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவா.. நான் தோட்ட வட்டுக்கு
ீ போறேன்.. என
அவர் கூறுவதைக் கூட கேட்காமல் வேகமாக அங்கிருந்து விலகினாள்…
குந்தவையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தவர்களின்
முகத்தில் ஏமாற்றமும் வேதனையும் அப்பட்டமாக தெரிந்தது…
சந்திர பிரசாந்த்க்கு சங்கடமாகி விட்டது.. அவர் சங்கடம் புரிந்த அருள் தன்
ஐயாவை பார்க்க.. அவர் சந்திரனை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்…
முற்றத்தில் வானதியை அமர வைத்து.. சுற்றி உறவுப்பெண்கள்
உட்கார்ந்திருந்தனர்.. அனைவருக்கும் அவள் நிறம் தான் இப்போதைக்கான
டாப்பிக்…
வயதான பெண்மணி ஒருவர் வானதியிடம் ஏன் ஆத்தா நீ பாலுல தான
குளிப்ப.. அதுனாலத்தான இம்புட்டு வெள்ளையா இருக்க.. என கேட்க அங்கு
கொள்ளென்று சிரிப்பலை பரவியது…
வானதிக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல்.. திருதிரு வென
முழித்தாள்…
அதிக வெள்ளையும் சீக்குத்தான் பெரியாத்தா என தன் வெண்கல குரலில்
கூறினாள் கணபதியின் மனைவி பேச்சி..
வானதி அவரை பார்த்து முறைத்தாள்.. அதைக் கண்டு கொண்ட பேச்சி..
என்னடி முறைக்கிற.. இதுதான் நீ பெரியவங்களுக்கு கொடுக்கிற
மரியாதையா… உன் ஆத்தா அவள மாதிரிதான் உன்னையும்
வளர்த்திருக்கிறா..
இந்த கிழவிக்கு கொழுப்ப பாரேன்.. இதுக்கு முறைப்பெல்லாம் சரிவராது..
நோஸ் கட் கொடுத்தாத்தான் அடங்கும்.. என நினைத்தவள்… சூடாய் பதில்
கொடுக்க வாய் திறக்க போக..
அவள் முகத்திலிருந்தே அவள் ஏதோ வில்லங்கமாக பேசப்போகிறாள் என
அறிந்த அருள்.. ஆச்சி அம்மா உங்கள உள்ள கூப்பிட்டாங்க.. நீங்க போங்க..
என அவரை அனுப்பி வைத்தவன்.. வானதியை முறைக்க அவளோ முகத்தை
திருப்பினாள்..
என்னடி முகத்த வெடுக்கு வெடுக்குனு திருப்புற.. அடுத்த தடவை திருப்ப
மூஞ்சி இருக்காது பார்த்துக்க… பெரியவங்க ஏதாவது சொன்னா பதிலுக்கு
பதில் பேசாத.. என அவளை முணுமுணுப்பாய் எச்சரித்து விட்டு சென்றான்…
இதோட.. கருவாயன் மிரட்டுறான்.. அடியே என்கிட்ட தனியா மாட்டுடி
அப்போ இருக்கு உனக்கு என உள்ளுக்குள் அருளை திட்டிக்
கொண்டிருந்தாள்…
‘’ அம்மா எங்கடா.. ஷ்ரவ்.. ‘’
அவங்க அந்த வட்டுல
ீ இருக்காங்க.. தலைவலியாம்.. என்றவன் தன் கையில்
உள்ள கேமில் கவனமானான்…
வானதிக்கு போர் அடிக்க.. சுற்றியுள்ளவர்களை நோட்டம் விட ஆரம்பித்தாள்…
அருள்மொழி வட்டின்
ீ பின் பக்கம் செல்ல.. அங்கு மரங்களுக்கு மத்தியில்
சந்திரன் போன் பேசிக் கொண்டிருந்தார்.. யாரோ வரும் அரவம் கேட்டு
திரும்பியவர்.. அங்கு நின்ற அருளை பார்த்தவுடன்.. நான் அப்புறம் பேசுறேன்..
என போனை வைத்துவிட்டு… அருளை நெருங்கினார்..
இருவரும் ஒருவரொருவர் பார்த்துக் கொண்டவர்கள்.. சட்டென்று
கட்டியணைத்துக் கொண்டனர்.. எப்படியோ நினைச்சதை சாதிச்சுட்ட மாப்பிள..
என்னத்த சாதிச்சேன் மாமா.. அக்கா வட்டுக்குள்ள
ீ வரமாட்டேன்னுட்டா..
வராம எங்க போயிருவா.. சீக்கிரம் அவ மனசு மாறும்.. நீ கவலைப்படாத..
உங்கக்காக்கு உன் மேல பாசம் அதிகம்.. அவ பேசுனத நீயே போன்ல
கேட்டில்ல.. நீ இந்த நாட்டரசன் கோட்டைக்கே ராஜாவாம்..
அருளின் முகத்திலும் புன்னகை.. குந்தவை அவனை குறித்து
பேசியதெல்லாம் சந்திரன் போன் வழியே அருள் கேட்டான்.. அப்பொழுது
அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை…
குந்தவைக்கு எப்பொழுது சந்திர பிரசாந்த்தோடு திருமண பேச்சு
ஆரம்பித்ததோ.. அப்போதிலிருந்தே மாமன் மச்சான் இருவருக்கும் நல்ல
பிணைப்பு உருவானது.. நண்பர்கள் போல் இருவரும் பழகினர்… வயது
வித்தியாசமெல்லாம் அவர்களின் பிணைப்பைக் குறைக்க வில்லை…
ஆனால் இந்த நிமிடம் வரை குந்தவைக்கு இவர்களின் பிணைப்பு தெரியாது..
அந்தளவிற்கு ரகசியமாய் பாசப் பயிரை வளர்த்தனர்….
ஆனா மாம்ஸு… நீ என்னமோ பேசுனியே கால் தூசு.. அது இதுன்னு.. என
அருகிலுள்ள கட்டையை பார்த்தவாறு கேட்க…
அருள் பேச்சிலும்.. அவன் பார்த்த கட்டையிலும் ஜெர்க்கான சந்திரன்.. மாப்பு
நோ வைலென்ஸ்.. நான் குந்தவை மனசுல இருக்கிறது வெளில வரதுக்கு
தான் அப்படி பேசுனேன்…
நான் உங்கக்கா சீக்கிரம் இங்க வர ஒரு வழி சொல்லவா.. என பேச்சை
மாற்ற..
ஏதோ வில்லங்கமா சொல்ல போறிங்கனு.. தெரியுது பரவால்ல சொல்லுங்க..
இன்னும் ரெண்டே மாசத்துல.. உங்கக்காவை பாட்டி ஆக்கிரு.. அப்புறம் பாரு
துள்ளிக் குதிச்சு ஓடிவருவா..
யோவ் மாமா.. உன் பொண்ணுக்கு அப்பன் மாதிரி பேசுய்யா..
அடேய்… என் பொண்ண கடத்த என்கிட்டயே உதவி கேட்டியே அப்போ
தெரிலையா.. நான் அவ அப்பன்னு..
சரி சரி விடு மாம்ஸு.. நீ சொன்ன ஐடியா நல்லாத்தான் இருக்கு.. ஆனா
நான் உன் மவ பக்கத்துல போனேன்னு வையி முத டெட் பாடி நான்தான்..
அவ சும்மாவே என்னை முறைச்சுக்கிட்டு இருக்கா.. என சலிப்பாக
கூறினான்…
அடப்பாவிங்களா.. என்ற குரல் கேட்டு.. திரும்பிய இருவரும் அங்கு
நின்றவனைக் கண்டு அதிர்ந்தனர்…

அத்தியாயம் 5

அடப்பாவிங்களா.. என்ற குரல் கேட்டு.. திரும்பிய இருவரும் அங்கு


நின்றவனைக் கண்டு அதிர்ந்தனர்…
அதில் முதலில் தெளிந்த அருள்மொழி.. அடச்சீ நீயாடா.. நான் கூட வேற
யாரோன்னு பயந்துட்டேன்… என்றவன் சந்திரனிடம் மாம்ஸு ஷாக்க
குறைங்க.. இவனுக்கு அவ்ளோ சீனெல்லாம் வேணாம்.. என நக்கலாக
கூறினான்…
அதில் சற்று ஆசுவாசமடைந்த பிரசாந்த்.. தம்பி யாரு மாப்பிள..
என் பங்காளி மாமா.. அதோட என் உயிர்நண்பனும் கூட.. பேரு கண்ணப்பன்
செட்டியார்.. ஆனா அய்யாறு கண்ணன்ன்னு சொல்லிக்கிட்டு திரிவாறு.. என
கண்ணனின் தோளில் கைபோட.. அவன் கோபத்துடன் தோளை சிலுப்பினான்…
அடேய்.. நீயெல்லாம் ஒரு நண்பனாடா.. மூனு நாள் தானடா நான் ஊர்ல
இல்லை.. அதுக்குள்ள என்னென்னமோ பண்ணியிருக்க… என்கிட்ட ஒரு
வார்த்தை சொல்லணும்னு கூட உனக்கு தோணலையா.. என கோபத்துடனும்
ஆதங்கத்துடனும் கேட்டான்…
விட்றா.. என் நிலைமை அப்படி.. அக்கா வந்துட்டு போனதுல இருந்து கணபதி
ஐயா முகமே சரியில்லை.. கண்டிப்பா தில்லையை கல்யாணம் பண்ண
ஆத்தா மூலமா என்கிட்ட தூது அனுப்புவாங்கன்னு தோணுச்சு.. அதான் அக்கா
என்னை டென்ஷன் ஆக்க போட்ட பிளானை நான் எனக்கு சாதகமா
பயன்படுத்திக்கிட்டேன்.. கல்யாண ஏற்பாடு பண்ணா.. அவங்களுக்கு
தெரிஞ்சுடும்னு.. சிம்பிளா கண்ணாத்தாள் கோவில்ல கல்யாணத்த
முடிச்சுடலாம்னு இருந்தோம்..
சரி அத விடு.. இவரு கூட பேசுறத ஏன் என்கிட்ட சொல்லலை.. என
சந்திரனை கை காண்பித்து கேட்க…
அருளும் சந்திரனும் ஒருவரொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.. அடேய்
நாங்க இதுவரை யார்க்கிட்டயும் சொல்லணும்னு நினைச்சதில்லடா..
சரி அப்போ.. காலைல இவரு ஏன் உனக்கு பொண்ணு தரமாட்டேன்னு
சொன்னாரு..
அதும் எங்களோட பிளான் தான்… எப்படியோ நான் வானதிய கல்யாணம்
பண்ணிக்க போறது செல்வம் மாமாக்கு தெரிஞ்சுடுச்சு.. எப்படியாவது
கல்யாணத்த நிறுத்திடணும்னு ஊரையே கூட்டி வந்திருந்தாங்க..
அந்த நேரத்துல.. எனக்கு பொண்ணு தரமாட்டேன்னு மாம்ஸு சொன்னா அது
ஊரோட மானபிரச்னையா மாறி.. ஊரே எங்க கல்யாணத்த நடத்திடும்னு
பிளான் போட்டோம்.. அதே மாதிரி நடந்துடுச்சு.. என அருள் கூறி சிரிக்கவும்…
கண்ணன் இருவரையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்…
இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் என அவன்
வருத்தத்துடன் கூற…
மாம்ஸு.. நான் உங்ககிட்ட பாரின் சரக்கு கேட்ருந்தேனே.. எடுத்துட்டு
வந்திங்களா.. நம்ம பங்களிக்காக தான் முக்கியமா கேட்டேன்.. ஆனா நாம
ரெண்டு பேரும்தான் காலிபண்ணனும் போலருக்கு.. பங்காளி வருத்தத்துல
இருக்கும் போது அதெல்லாம் சாப்பிட மாட்டான்..
பாரின் சரக்கு என்றதும்.. கண்ணனின் வாயெல்லாம் பல்லாகியது… முகத்தில்
பிரகாசம் கூடி.. ஒளிவட்டம் தோன்ற ஆரம்பித்தது… அடுத்து அவன்
கூறியதைக் கேட்டதும் பதறியவன்…
என்னா பங்காளி உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. நீ எது செஞ்சாலும்..
அதுல ஒரு நியாயம் இருக்கும்யா.. என்றவன் நான் இளநீ எடுத்துட்டு
மாடிக்கு வரேன்.. என வேக வேகமாக சென்றான்..
அதைப் பார்த்து மற்ற இருவர் புன்னகைத்துக் கொண்டனர்…
******************************************
கையில் உள்ள போனையே டென்க்ஷனுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்…
வானதி.
ப்ள ீஸ் பிக்கப் த போன்.. தர்ஷு.. என அவள் வாய் விடாமல் புலம்பிக்
கொண்டிருந்தது…
நேரம் கிடைத்ததிலிருந்து தர்ஷனுக்கு போன் செய்துக் கொண்டிருக்கிறாள்..
அவன் தான் எடுத்தபாடில்லை…
ஒருவேளை தர்ஷு என்ன நம்பலையா… என உள்ளுக்குள் தவித்துக்
கொண்டிருந்தவள்..
தர்ஷு ப்ள ீஸ் போன எடு.. நான் உனக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்..
இங்க நடந்ததுல என் தப்பு எதுவுமே இல்லை… என அவனுக்கு மெசேஜ்
அனுப்பிவிட்டு அமைதியானாள்…
அப்பொழுது பின்னாடி யாரோ வந்து நிற்ப்பது போல் தோன்ற சட்டென்று
திரும்பினாள்.. அங்கு பேச்சியும் அவள் மருமகள் புஷ்பாவும்.. அவளை
பார்வையால் எரித்துக் கொண்டிருந்தனர்…
இந்த ஓல்ட் பீசுங்க வேற… பார்க்கும் போதெல்லாம் முறைச்சுக்கிட்டு
சுத்துதுங்க… என உள்ளுக்குள் சலித்துக் கொண்டாள்…
என்ன எங்க வட்டு
ீ மாப்பிள்ளைய மயக்கி உங்க கைக்குள்ள போட்ட
திண்ணக்கத்துல… இருக்கியா.. என அவர் எள்ளலாக கேட்க..
வானதி எரிச்சலுடன் அவர்களிருவரையும் பார்த்தாள்… எனக்கு இருக்கிற
டென்ஷன் போதாதுன்னு.. இவங்க வேற..
என் பேரன் ஒன்னும்.. உன்னை விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல..
அவனுக்கு தேவை உங்கம்மா பேர்ல உள்ள நிலம்.. அதுக்காகத்தான் இந்த
கல்யாணமும்..
உண்மைலையே என் பேரனுக்கு என் பேத்தி தில்லையம்மை மேலதான்
விருப்பம்… இந்த ஊரோட நல்லதுக்காகத்தான்.. அவன் விருப்பம் இல்லாமா
உன்னைய கட்டிருக்கான்…
ஒழுங்கு மரியாதையா.. நாளைக்கே உன் ஆத்தா வட்டுக்கே
ீ ஓடிரு… இல்லை
இன்னும் கொஞ்ச நாள்ல என் பேரனே உன் கழுத்த புடிச்சு வெளிய
தள்ளிடுவான்.. என பேச்சியம்மா கூறினார்…
இருவரும் அவள் முகத்தில்.. தங்களின் பேச்சினால் ஏதாவது மாற்றம்
தெரிகிறதா என பார்த்தனர்.. ஆனால் அவள் முகத்தில் இருந்து எதையும்
அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை…
அதனால் மேற்கொண்டு கோபம் அடைந்து.. அவளை முறைத்தவாறு
அங்கிருந்து நகர்ந்தனர்..
வானதியின் முகம் அமைதியாக இருப்பது போல் தெரிந்தாலும்.. அவள்
மனதில் கொழுந்து விட்டு எரியும் எரிமலையையும்.. அவள் உடல்மொழியின்
இறுக்கமும் அவளையன்றி யாரும்… அறியார்…
யோசனையுடன் அமர்ந்திருந்த.. வானதியை நெருங்கிய வள்ளியம்மை ‘’
இந்தாத்தா.. இந்த புடவைய கட்டிக்க.. ‘’ காலைல இருந்து.. இதே புடவைல
இருக்க… என்றவர்.. உன் அம்மாவ இங்க வர சொன்னா உனக்கும் கொஞ்சம்
தெம்பா இருக்கும்ல என மெல்லிய குரலில் கூற…
இல்லை அம்மாக்கு தலைவலியாம்.. அத்.. அது.. ஆச்சி… என்று எந்த முறை
சொல்வது என தெரியாமல் வானதி திணற…
ஆச்சின்னே கூப்பிடுத்தா.. என்றார் கரகரப்பான குரலில்..
ஹ்ம்ம்ம் என்று தலையாட்டியவள்.. உடை மாற்ற சென்றாள்..
அருளின் அறை மிதமான முறையில் அலங்கரிக்கப் பட்டிருக்க..
உறவுக்காரப்பெண்மணிகள் அவளை அங்கு விட்டு சென்றனர்.. நல்லவேளை
ரூமில் அருள் இல்லை.. அவன் மட்டும் இருந்திருந்தால்.. அவளுக்கு
இருக்கும் கோபத்திற்கு நிச்சயம் அருள் மண்டையை உடைத்திருப்பாள்…
குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையையே அளந்துக் கொண்டிருந்தாள்
வானதி.. அருள் சொத்திர்க்காக தன்னை கட்டிக்கொண்டதை அவளால்
ஜீரணிக்கவே முடியவில்லை….
எத்தனை எத்தனை கனவு கண்டிருப்பாள்.. தன்னவனோடு காதலாக ஈருடல்
ஓறுயிராய் வாழ.. அத்தனையும் மணர்க்கோட்டை போல் சரிந்து விழுந்தது..
அருளின் செயலால்…
தன்னவன் மதிமுகத்தை கண்ட பிறகுதான்... அவள் நாளின் தொடக்கமும்
முடிவும்… அப்படியிருந்தவளின் வாழ்க்கையை அருளின் இந்த திடிர் செயல்
புரட்டிப்போட்டது…
அந்த அறையில் இருப்பதே அவளுக்கு மூச்சுமுட்டுவதாய் இருந்தது… இங்கு
இப்படி இருக்க மாடியில் அருளோ அட்டகாசம் செய்துக் கொண்டிருந்தான்….
************************************************
பங்காளி… நீ ரொம்ப நல்லவன் பங்காளி.. நட்புன்னா இனி நீதான் என
போதையில் உளறிக்கொண்டிருந்தான்… கண்ணன்..
இளநீரில் பாதி இளநியை ஊற்றிவிட்டு.. அதில் சரக்கை கலந்து குடித்துக்
கொண்டிருந்தனர்…
நான் உன் கண்ணாலம்.. ஆன சந்தோசத்துல குடிக்குறேன்… நீ ஏன்டா
குடிக்கிற… இப்ப நீ தங்கச்சிகூட குஜால் பண்ண வேண்டிய நேரம்டா…… என
போதையில் இழுத்தான்…
போடாங்.. என திட்டியவன்.. இப்போ மட்டும் நான் அவ பக்கத்துல
போனேன்னு வையி.. என் மண்டைய உடைச்சுட்டு தான் மறுவேலை
பார்ப்பா… என அவளை சரியாக கணித்தான்…
ஏன் மச்சி நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன்.. நீ உண்மையான பதில்
சொல்லணும்..
டேய் நம்ம தலைவரு உள்ள போனா உண்மை மட்டும்தாண்டா வரும்… என்
டொமெட்டோ…
நீ உன் அக்காக்காகத்தான் அவுக மகள கட்டிக்கிட்டியா… ஊருக்குள்ள
அப்படிதான் பேசிக்குரானுவ…
விழிகளில்.. மதுவின் போதை தெரிந்தாலும் அதற்கும் மேலாக அருளின்
முகத்தில் ஏதோ வெளிச்சம் கூடியது… அந்நள்ளிரவின் பனி நிறைந்த
மாடியின் வெறும் தரையில் படுத்து.. வானில் தெரிந்த வெண்ணிலவை
பார்த்துக் கொண்டிருந்த அருளின் குரலிலும் போதை நிரம்பி வழிந்தது…
என் அக்காவ இங்க கூட்டி வரதுக்கு.. இது மட்டும்தான் வழியா… போடா..
நான் நினைச்சிருந்தா என்னைக்கோ எங்க அக்காவ இங்க வரவச்சுருப்பேன்…
என் அம்மாளு.. என ஏதோ கூற வந்தவனை தடுத்த.. கண்ணன் அது யாருடா..
எனக்கு தெரியாத அம்மாளு…
ஹ்ம்ம்ம் என வசீகரசிரிப்பு புரிந்தவன்.. என் அம்மாளுடா அவ..
என் அக்கா மவ… என் அம்மாளு என மென்னகை புரிந்தவன்… உனக்கு
தெரியுமா பங்காளி அவ பொறக்கும் போது.. நான்தான் முதன் முதல்ல
வாங்கினேன்.. இளரோஜா நிறத்துல.. ரொம்ப மிருதுவா குட்டி குட்டி கை கால்
முளைச்ச ரோஜா பூவாட்டம் இருப்பா..
பொறந்த பிள்ளை அழும்தான.. ஆனா என் அம்மாளு.. அவளோட குட்டிக்
கண்ண வச்சு என்ன முறைச்சு பார்த்து கன்னத்துல குழி விழ சிரிச்சாடா..
என அவன் ரசனையாக கூற.. அதை கேட்க தான் கண்ணன் சுயநினைவில்
இல்லை…
அவ பொறந்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் அவள நினைக்காத
நாள் இல்லை.. மாசம் மாசம் அவள பார்க்க சென்னைக்கு போயிடுவேன்…
சின்ன குழந்தைல மாமா அவள பார்க்குக்கு கூட்டி வருவாரு.. என் கிட்டயே
இருப்பா போற நேரம் ரொம்ப அழுவா.. அதுவும் அவளோட நாலு வயசு
வரைக்கும் தான்..
பேச்சு வந்ததுக்கு அப்புறம் அம்மாளு வட்டுல
ீ என்ன பத்தி சொல்ல
ஆரம்பிக்கவும்.. அக்காக்கு தெரிஞ்சுடும்னு தூரத்துல இருந்தே பார்த்துக்கறது…
தூரத்துல இருந்தே அவள ரசிச்சுட்டு வருவேன்… அப்பதான் ஒருநாள் அவ
மேல எனக்கு இருக்கிறது வெறும்.. பாசம் மட்டும் இல்லலன்னு புரிஞ்சுச்சு…
அக்கா கொடுத்தது பொய்யான செய்தியா இருந்தாலும்.. எனக்கு என்
அம்மாளுக்கூட இன்னொருத்தன சேர்த்து வச்சு பேசுறது.. பிடிக்கல..
அதனாலதான் அதை பயன்படுத்தி என் அம்மாள என்கிட்ட வரவச்சுட்டேன்…
என மகிழ்ச்சி குரலில் கூறியவன்.. தன் நண்பனை பார்க்க.. அவன்
மட்டையாகி இருந்தான்…
மெதுவாக தள்ளாடியவாறு எழுந்தவன்.. அவனை காலால் எத்திவிட்டு..
மெதுவாக கீ ழே சென்றான்…
வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் தூக்கத்திற்கு சென்றிருந்தனர்… அருள்
எந்த சத்தமும் செய்யாமல்.. அவன் அறைக்கு சென்றான்… மெதுவாக கதவை
திறந்து உள்ளே வந்து.. மூடியவன்… அப்பொழுது தான் அவன் மெத்தையில்..
அவன் மனைவி தேவதையென துயில் கொள்ளுவதை பார்த்தான்…
தள்ளாடியவாறு.. அவள் அருகில் வந்தவன்.. வானதியின் முகத்தில்
படிந்திருந்த முடிக்கற்றையை விலக்கி அவள் காதில் சொருகினான்…
அம்மாளு ஏண்டி நான் தாலிக் கட்டும்போது மூஞ்சிய தூக்கிவச்சுட்டு இருந்த..
அப்போ என் மனசு எவ்வளோ வலிச்சுச்சு தெரியுமா என சிறு குழந்தை
போல் கூறியவன்..
உனக்கு இந்த மச்சான பிடிக்கலையாடி.. உன் நிறத்துக்கு நான் ஏத்தவன்
இல்லன்னு உனக்கு வெறுப்பா… இருக்கா சொல்லு அம்மாளு…
சீக்கிரமா.. என்ன ஏத்துக்கோடி.. இல்லை உன்னை நினைச்சு ஏங்கி ஏங்கியே
செத்து போயிருவேன் போல.. நீ எனக்கு பல வருஷ தவம்டி..
சீக்கிரம் மச்சான்க்கிட்ட வந்துரு அம்மாளு என கூறியவாறே அவள்
மறுபக்கத்தில் விழுந்தவன்.. ஏதேதோ புலம்பியவாறு நித்திரையின் பிடிக்கு
சென்றான்..
இதுவரை அமைதியாக கண்களை மூடியிருந்த வானதி.. அவன் தூங்கி
விட்டான் என புரிந்து விழிகளை திறந்தாள்.. அவள் விழிகள் சிறிது
கலங்கியிருந்தது…

அத்தியாயம் 6

காலையில் முதலில் கண் விழித்த வானதி கட்டிலிருந்து காலை கீ ழே


வைக்க முயன்றாள்.. ஆனால் அவளால் கால்களை நகர்த்த கூட
முடியவில்லை…
அச்சுச்சோ.. நம்ம காலுக்கு ஏதோ ஆகிடுச்சு போலயே… ஒருவேளை உணர்ச்சி
மரத்து போயிருக்குமோ என வாய் விட்டு புலம்பியவாறு.. போர்வையை
விலக்கி கால்களை பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது..
அங்கு அருள்.. பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவதுபோல்.. அவள்
கால்களை கட்டிப்பிடித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான்..
அதைப்பார்த்தவளின்… மனது என்னவோ செய்தது.. அது அவளுக்கு சற்று
அசவுகரியத்தையும் கொடுக்க.. கால்களை மெதுவாக அசைத்தாள்.. அதில்
அருளின் தூக்கம் கலைவது போல் இருக்க.. சட்டென்று படுத்துக் கண் மூடிக்
கொண்டாள்…
அருள் தூக்க கலக்கத்தில் தன் தாடிபடர்ந்த முகத்தைக்கொண்டு அவள்
கால்களில் தேய்க்க.. பெண்ணவளின் உடல் சிலிர்த்தது.. அவள் கன்னம்
சிவந்து.. உதடு துடித்தது.. இருந்தும் இவற்றை அருள் கண்ணில் படாதவாறு
சமாளித்தாள்…
அப்பொழுது தான்.. தலையணையின் வித்தியாசம் உணர்ந்து விழிகளை
நன்றாக திறந்த அருள்.. தான் இருக்கும் நிலை பார்த்து வேகமாக எழுந்தான்…
மறுபடியும் மூட முயன்ற இமைகளை பிரித்து… விழிகளை நன்றாக கசக்கி
விட்டவன்… வானதியை பார்க்க அவள் கண் மூடியிருந்ததை கண்டு.. அவள்
நன்றாக தூங்குகிறாள் என நினைத்த பிறகே ஆசுவாசமானான்…
நல்லவேளை அம்மாளு தூங்குது.. இல்லன்னா இந்நேரத்துக்கு
என்னாகிறுக்குமோ.. என நினைத்தவன் அவள் ஆப்பிள் கன்னங்களில்
சத்தமின்றி ஓர் முத்தமிட்டுவிட்டு.. ஒரே ஓட்டமாய் ஓடி விட்டான்….
இங்கு வானதியின் வெண்ணெய் மேனியோ வெள்ளை நிறத்திலிருந்து சிவப்பு
வர்ணத்திற்கு மாறியது.. மெதுவாக கண்ணை திறந்து.. அறையை சுற்றி
நோட்டம் விட்டாள்.. அருள் இல்லை என்றதும் தான் அவளுக்கு சுவாசம்
சீரானது.. அவன் அருகில் வந்ததும்…. தானாகவே அவள் மூச்சு நின்றிருந்தது…
அருளின் முந்தைய செயல்களால்.. அவன் மேல் கோபத்தில்
கொந்தளித்தவளின் மனநிலை… நேற்று இரவு அவன் கூறியதை
கேட்டதிலிருந்து என்ன என்பது அவளுக்கே புரியாத நிலை..
ஆத்தா… ஆத்தா.. என்ற வள்ளியம்மையின் குரல் வெளியே கேட்க.. தன்
எண்ணங்களை ஒதுக்கி வேகமாக கதவை திறந்தாள்…
இந்தாத்தா.. நீ எப்பவும் படுக்கைலதான் காபித்தண்ணி குடிப்பியாம்.. உன்
தம்பி சொன்னான்… குடிச்சுட்டு சீக்கிரம் வாத்தா குலதெய்வ கோயிலுக்கு
போகணும்..
ஹ்ம்ம்ம் என தலையாட்டியவாறு... அவர் கொடுத்த தம்ளரை வாங்கினாள்..
மனதிலோ இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. இதை குடிச்சா பிரேக்
பர்ஸ்டே சாப்பிட வேண்டாம்.. என அந்த பித்தளை தம்ளரையே சுற்றி சுற்றி
பார்த்தாள்…
வள்ளியம்மை பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.. உறவு
ஜனங்களுக்கு காப்பித்தண்ணி கொடுப்பது.. வேலையாள்களை மேற்பார்வை
பார்ப்பது.. குலதெய்வம் கோயிலுக்கு தேவையான பொருள்களை எடுத்து
வைப்பது என ஓரிடத்தில் நிறக்காமல் சுழன்றிக் கொண்டே இருந்தார்…
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பேச்சி.. ஏன் அண்ணி இப்பையும்
என் மவதான் வேலைப்பார்க்கணுமா.. புதுப்பொண்ணு கொஞ்சம் கூடமாட
ஒத்தாசை பண்ணக்கூடாதா.. காலை பலகாரமே முடியப்போகுது.. இன்னும்
கீ ழ இறங்க காணும்… என நொடித்துக் கொள்ள….
வம்பர்களும் அதையே ஊதி ஊதி பெரிதாக்க வடுகம்மாளின் முகம் கடுகடுக்க
ஆரம்பித்தது… வள்ளியம்மை இல்லை இருக்கட்டும் சின்ன புள்ளதான என்ற
சமாதானம் எல்லாம்… அந்த 60’s 70’s பெண்மணிகள் ஏத்துக்கொள்ளவில்லை..
அவர்களை எல்லாம் மேலும் டென்ஷனாக்கும் பொருட்டு…. தலைமுடியை
விரித்து விட்டவாறு.. நெற்றியில் பொட்டில்லாமல் ஓர் மஞ்சள் நிற
முட்டிவரையே உள்ள கவுனில்.. கழுத்தில் புத்தம் புதிதாக மின்னிய மஞ்சள்
சரடு மட்டும் அணிந்து… மேலிருந்து கீ ழே வர.. உறவுஜனம் மொத்தமும்..
ஆஆஆஆ வென பார்த்தது…
வள்ளியம்மைக்கும் இவள் கோலம் அதிர்ச்சியே.. ஆனால் அந்நேரத்திலும்..
வடுகம்மாள் கோபப்பட்டு ஏதாவது கூறிவிடுவாரோ... என பயத்துடன் அவரை
பார்த்தார்…
அவர் பயம் மெய்யே என்பது போல்.. அவரின் முகத்தில்.. கோபம் அக்னி
வெயிலாய் அனலடித்தது…
கீ ழே வந்த வானதியோ அங்குள்ளவர்களின் பார்வையையும் கோபத்தையும்
அறியாமல்… வள்ளியம்மையிடம்.. ஆச்சி சாப்பாடு எடுத்து வையுங்க… ரொம்ப
பசிக்குது.. என கேட்க..
அவ்வளவு தான் கோபத்தில் பொங்கிவிட்டார்.. வடுகம்மாள்.. ஏய் என்னடி
உடுப்பு இது.. தலைய வேற விரிச்சு போட்ருக்க.. உன்னை பார்த்தா நேத்து
கல்யாணம் ஆணவ மாதிரியா இருக்க போ.. போய் ஒழுங்கா பொண்ணா
லட்சணமா சேலைய கட்டிக்கிட்டு வா.. என கத்தினார்…
அவர் சட்டென்று கத்த ஆரம்பித்ததுமே… உடல்பதறியவள்… அடுத்து அவர்
பேச பேச.. அவள் முகம் கோபத்தில் இறுகியது…
இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்.. என் பேத்தி தில்லைய அருளுக்கு
கட்டுங்கன்னு.. என் பேச்சை யாருக் கேட்டா.. இந்நேரம் என் பேத்தி மட்டும்
இந்த வட்டு
ீ மருமகளா இருந்திருந்தா.. என் பொண்ணை உக்கார வச்சுட்டு
பம்பரமா சுழன்ட்றுப்பா.. புடவைக்கட்டி நகைப்போட்டு பூவச்சு நெத்தி நிறைய
குங்குமம் வச்சு மங்களகரமா இருந்திருப்பா.. என வானதியை மேலிருந்து கீ ழ்
பார்த்தவாறு எள்ளலாக கூறினார்..
அவரது ஜிங்ஜக்குகளும் அதற்க்கு ஒத்து ஊதி… வடுகம்மாளின் கோபத்திற்கு
தூபம் போட்டனர்.. அதிலும் இத்தனைக்கும் வானதி அங்கேயே தலை
நிமிர்ந்து நிற்பது.. அவரது கோபத்தை மேலும் கூட்டியது…
இன்னும் என்னடி இங்க நிக்கிற மேலப்போ.. என தொண்டை கிழிய கத்த..
அந்த சப்தத்திற்கு வெளியில் இருந்த ஆண்கள் அனைவரும் என்னவோ
ஏதோ என்று உள்ளே வந்தனர்… அருள்மொழி உட்பட…
வந்திருந்தவர்களின் கண்களில் முதலில் பட்டது நடுவில் நின்ற வானதியும்
அவள் உடையும் தான்… அதைப்பார்த்து அவர்களும் சற்று அதிர்ச்சியாயினர்…
அருள்.. என்ன இவ இப்படி நிக்குறா.. ஒரு புடவைய கட்டியிருக்கலாம்ல என
நினைத்து அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன்
மனசாட்சியோ டேய் நீ கோபமாவா பார்க்கிற என்று கேலியாக கேட்டு அவன்
முகத்தில் காறித்துப்பியது… அதை தூசு போல் தட்டியவன்.. அவள் பார்க்கும்
வேலையை தொடர்ந்தான்…
செங்குட்டுவன் ‘’ என்ன வடுகம்மா ஏன் இப்படி கத்துற.. ‘’
நான் கத்துறது மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சதா.. இந்த ராங்கி
பிடிச்ச கழுதை நிக்கிற கோலம் உங்க கண்ணுக்கு தெரிலையா..
அதுக்கு ஏன் இப்படி கத்துற.. பட்டணத்துல வளர்ந்த பிள்ளைக்கு.. இந்த வட்டு

சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் எப்படி தெரியும்.. பொறுமையா சொல்லாம
இப்படித்தான் கத்திக்கிட்டு திரிவியா.. என தன் மனைவியிடம் கோபத்துடன்
கேட்டவர்.. அங்கு முகம் இறுக நின்றிருந்த வானதியிடம் கோயிலுக்கு
போகும் போது சேலைக் கட்டிக்கிட்டு தான் போகணும்த்தா.. வட்டுல

இருக்கும் போது வேற உடுப்பு போட்டுக்க.. இப்போ போய் சேலை கட்டி
வாத்தா.. என அன்பாக தன்மையாக கூறினார்…..
இதுவரை யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தவள்..
செங்குட்டுவனின் தன்மையான பேச்சில்.. அவரிடம் பேசலானாள்… எனக்கு
புடவை கட்ட தெரியாது.. அதுனால ஆச்சிம்மாக்கிட்ட கட்டிக்கலாம்னு
அவங்கள கூப்பிட வந்தேன்.. அப்போ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்குறத
பார்த்தேன்… நானும் இவங்க கூடயே சாப்பிட்டுட்டு அப்புறம் புடவை
கட்டிக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா இவங்க என வடுகம்மாளை
பார்வையால் சுட்டிக்காட்டி.. என்ன நடந்ததுன்னு கூட கேட்காம எல்லார்
முன்னாடியும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க..
அப்புறம் இவங்க.. என பேச்சியை சுட்டிக் காட்டியவள்.. நான் இங்க வந்து
ஒருநாள்க் கூட முடிஞ்சிருக்காது.. ஆனா என்ன பார்க்கும் போதெல்லாம் என்
பேத்தி தில்லையத்தான் என் பேரன் விரும்புனான்.. ஆனா ஊரு நல்லதுக்காக
இவள கட்டிக்கிட வேண்டியதா போச்சுன்னு.. சொல்லிக்கிட்டே இருக்காங்க….
எனக்கு இருட்டேட்டிங்கா இருக்கு… அண்ட் நான் ரொம்ப கோபமாயிட்டேன்…
சோ நான் ட்ரெஸ்ஸ மாத்த போறது இல்லை.. இதோடதான் டெம்பிள்க்கு
வரப்போறேன்.. சப்போஸ் இப்படி வரக்கூடாதுன்னு சொன்னா நான்
கோயிலுக்கே வரப்போறது இல்லை.. என்றவள்.. அங்கு அதிர்ச்சியுடன்
நின்றிருந்த யாரையும் கண்டுக்கொள்ளாது..
வள்ளியம்மையிடம்.. இப்போ எனக்கு பசிக்குது சாப்பாடு போடுறிங்களா..
இல்லை என அவள் அடுத்து ஏதோ கூறும்முன் வாத்தா சாப்பிடலாம் என
அவள் கையை பிடித்து இழுத்து சென்றார்..
வள்ளியம்மை சாப்பாடு எடுத்து வைக்க.. அவளோ பொறுமையாக சாப்பிட்டுக்
கொண்டிருந்தாள்…
பேச்சிக்கு முகத்தில் ஈயாடவில்லை.. அவள் இப்படி எல்லார் முன்னாடியும்
தான் பேசியதை போட்டு உடைப்பாள் என்று அவர் நினைக்க வில்லை… அவர்
பயத்துடன் தன் அண்ணனை பார்த்தார்…
செங்குட்டுவன்.. தன் மனைவியையும் தங்கையையும் உக்கிரமாக பார்த்தார்…
வயசானாலே மூளை மழுங்கிடுமா.. உனக்கு எதுக்கு இம்புட்டு கோபம்.. அந்த
புள்ளைகிட்ட பொறுமையா என்ன ஏதுன்னு கேட்டிருக்கலாம்ல.. அவ என்ன
அந்நியமா.. நம்ம கொள்ளுபேத்திதான நீ கொஞ்சம் பொறுமையா
இருந்தாத்தான் என்ன.. என அவர் திட்ட.. வடுகம்மாளுக்கு என்ன
சொல்வதென்றே தெரியவில்லை…
ராங்கி கழுதை ஒரு வார்த்தை சொன்னாத்தான் என்னவாம்.. இப்படி என்ன
வசவு வாங்க விட்டுட்டாலே.. என அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த
வானதியை பார்த்தவாறு மனதினுள் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்… ஆனால்
தாம்தான் அவள் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.. என்பதை அவர்
வசதியாக மறந்துவிட்டார்..
அப்புறம் பேச்சி.. இது என்ன பேச்சுன்னு பேசிக்கிட்டு இருக்க.. சின்னதுல
இருந்தே அருளுக்கு வானதிதான்னு அவ பொறந்தப்பவே நான்
முடிவெடுத்துட்டேன்… என்னைக்காவது நாங்க தில்லைய அருளோட சேர்த்து
வச்சு பேசியிருக்கோமா.. நீங்க பேசுனாக்கூட இது நடக்காதுன்னு உன்கிட்ட
நான் சொன்னதில்லையா.. என அவர் கோபத்தில் பொறிய.. பேச்சியின்
முகமோ அவமானத்தில் கறுத்தது…
அருள்மொழிதான்.. ஐயா போதும் விடுங்க என அவரை அமைதி
படுத்திவிட்டு.. எல்லாரும் போங்க போய் வேலைய பாருங்க..
அழகு கோபத்துடன் தன் மனைவியை ஏதோ திட்ட வர.. அதை
ஓரக்கண்ணால் பார்த்தவள்.. என் ஆச்சிய யாரும் எதுவும் சொல்லக் கூடாது..
என சாப்பிட்டவாறு கூற… அழகு சட்டென்று தன் வாயை மூடிக்கொண்டு
சென்றுவிட்டார்… அருள்மொழி உதட்டில் சிரிப்புடனும்.. விழிகளில்
காதலுடனும் அவளை பார்க்க.. வள்ளியம்மையோ விழிகளில் கோர்த்த
மெல்லிய நீரூற்றுடனும்.. முகத்தில் பொங்கிய சந்தோஷ ஊற்றுடனும்..
வானதியின் தலைமுடியை வருடினார்…
இவர்கள் இருவரின் பார்வையையும் செய்கையையும் கவனித்தாலும்..
கவனியாது போல்… கை கழுவ சென்றாள்..
அவள் பின்னோடவே சென்றவன் அப்பத்தா ஏதோ தெரியாம பேசிட்டாங்க..
அவங்க நம்மள விட பெரியவுங்க.. வயசானவங்க.. அதுனால அவுங்க
பேசுனத மனசுல வச்சுக்காம.. புடவைய மாத்திட்டுவா வானதி.. என அவன்
தன்மையாகவும் சிறு கண்டிப்பாகவும் கூறினான்…
அவளோ எதுவும் பேசாமல் செல்ல.. அம்மாளு விட்ரி.. நேரம் ஆச்சு போ
போய் புடவைய கட்டிக்கிட்டு வா.. என கெஞ்ச ஆரம்பித்தான்..
அப்போதும் எதுவும் கூறாமல்.. கைகளை அவனிலிருந்து பிரித்து சென்றவள்..
ஆச்சி எனக்கு புடவை கட்டி விடுங்க என அவரிடம் கூற.. மகிழ்ச்சியுடன்..
வாத்தா என அவள் கையை பிடித்து விறுவிறுவென கூட்டிச்சென்றுவிட்டார்.…
ஒருவேளை மனம் மாறிவிட்டால்..
மேலே சென்றவள்.. திரும்பி அருளை ஓர் பார்வை பார்த்துவிட்டே
சென்றாள்..அதைக் கண்ட அருள்.. திமிர் பிடிச்ச கழுதை ஒரு வார்த்தை
சொன்னாத்தான் என்னவாம் என மனதிற்குள் செல்லாக திட்டிக்கொண்டான்..
பேச்சியும் புஷ்பாவும் அங்கு ஓரமாய் அமர்ந்திருந்தனர்… என்னத்தை.. இவள
நாம தப்பா எடை போட்டுட்டோம் போலயே என புலம்பினாள்..
ஹ்ம்ம்ம் பார்க்க சாதுவா குழந்தையாட்டம் மூஞ்ச வச்சுருக்கறத பார்த்து..
நாம என்ன சொன்னாலும் நம்பி இங்கிருந்து போயிடுவானு நினைச்சேன்..
ஆனா இவ நாம நினைச்ச மாதிரி இல்லை… இனிமே அவகிட்ட நாம எது
பேசினாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் பேசணும்.. என அவரும் அவர்
பங்கிற்கு புலம்பினார்…
*******************************************
மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த.. வானதியையே விழி அகலாமல்
பார்த்துக் கொண்டுருந்தான் அருள்.. அவன் அன்னையின் உதவியால் அவள்
தோற்றம் கிராமத்து பெண்ணாகவே மாறிவிட்டது..
சிவப்பு வண்ண பட்டுப்புடவையில்… முதுகு வரை நீண்டிருந்த கூந்தலை
தளரப்பின்னி தலைநிறைய மல்லிப்பூ வைத்து… உச்சியில் குங்குமம் வைத்து…
புத்தம் புதிய மஞ்சள் சரடுடன்.. காசு மாலை, ஆரம், நெத்தி சூட்டி என
பழைய கால நகைகள் அணிந்து… கைகொள்ளாத அளவு வளையல் பூட்டி..
நிறைய முத்துக்கள் கொண்ட வெள்ளி சலங்கை கொலுசுடன்.. நகரத்தின்
சாயலே படியாத கிராமத்து பெண்ணாய்.. தேவதையென வந்துக்
கொண்டிருந்தாள்…
அவளை பார்த்து மயங்கியவன்.. வேரோடிய மரம் போல் அங்கேயே இருக்க..
அவன் தோளை பிடித்து உலுக்கிய அழகு.. வாடா.. போகலாம் நேரம் ஆச்சு..
மாப்பிளையும் குந்தவையும் கோயிலுக்கு கிளம்பிட்டாங்களாம்.. போன்
பண்ணாங்க என கூறிச்சென்றார்..
அவனும் வானதியை பார்த்து ஏக்கபெருமூச்சு விட்டவாறு அங்கிருந்து
விலகினான்…
வேனில் சொந்த பந்தங்களை ஏற்றி அவர்களுடனே வள்ளியம்மையையும்
அழகுவையையும் அனுப்பி வைத்தனர்..
அருள் காரை எடுக்க போக.. அவனை தடுத்த.. செங்குட்டுவன்.. நீ பேத்தி கூட
உட்காருய்யா.. இந்த வெட்டிபய கார எடுக்கட்டும் என அங்கு நின்ற
கண்ணனை கை காண்பிக்க.. இந்த கிழவனுக்கு நம்மளை டேமேஜ் செய்றதே
பொழப்பா போச்சு… என உள்ளுக்குள் புலம்பியவன்.. அருளை பார்த்து
முறைத்தவாறு காரை எடுத்தான்.. பின்னே வேனில் போக வேண்டியவனை..
அவன் தானே மல்லுக்கட்டி கூப்பிட்டான்…
அருளோ இவை எதையும் கண்டுகொள்ளாமல் வானதியை இடித்தவாறு
அமர்ந்தான்… இருவர் மட்டும் இருக்கும் போதே நெருக்கி அமர்பவன்..
இப்பொழுது வடுகம்மாள் சேர்த்து மூவர் அமர்ந்திருக்க… சும்மாவா விடுவான்..
அருள் வானதியின் இடுப்பில் சில்மிஷம் செய்ய… அவள் அவன் கரங்களை
தடுத்தவாறு முறைக்க ஆரம்பித்தாள்.. ஆனால் அவனா அடங்குவான்..
மேலும் மேலும் அவன் கரங்கள் முன்னேற.. வானதி தன் நகம் கொண்டு
அவன் கையை கிள்ளிவிட்டாள்..
ஸ்ஸ்ஸ் ஆஆ.. என அவனறியாமல் கத்திவிட்டான்.. என்னாச்சுய்யா என
வடுகம்மாள் கேட்க.. ஒண்ணுமில்ல அப்பத்தா.. எறும்பு கடிச்சுடுச்சு.. என ஏதோ
சொல்லி சமாளிக்க.. வானதி அவனை பார்த்து கேலியாக சிரித்தாள்..
அதைப்பார்த்த... அருளிற்கு கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.. அவன்
அவளைப் பார்த்து கவர்ச்சியாய் சிரிக்க.. வானதிக்கு அந்த சிரிப்பு என்னமோ
பண்ண சட்டென்று பார்வையை திருப்பினாள்…
அவள் செய்கையை கண்டு அவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது…
கோவிலுக்குள் நுழைந்தவர்களின்.. முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் நிறைவும்..
கோவிலிருந்து திரும்பும் போதும்.. நிலைத்திருக்குமா…

அத்தியாயம் 7

வானதி தான் வந்திருக்கும் இடத்தை சுற்றி பார்த்தாள்… அங்கு அவளுக்கு


சத்தியமாக கோவிலும் தெரியவில்லை… சாமியும் தெரியவில்லை.. சுற்றிலும்
கருவக்காடே பிரதானமாய் இருந்தது…
அவள் விழியை வைத்தே… மனதை படித்தவன்.. காட்டுக்குள்ள இன்னும்
கொஞ்ச தூரம் நடக்கணும்.. என அவளிடம் கூறினான்…
அவள் பதில் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள்… சிறு சிறு சாமி சிலைகளுடன்
தனி தனியாக கட்டிடம் இருந்தது.. கருவக்காட்டின் மத்தியில் இவ்வாறு ஓர்
இடமா என உள்ளுக்குள் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..
அப்பொழுது தான் அங்கு நின்ற தன் பெற்றோரை கண்டதும்… அனைத்தும்
மறந்து.. அவர்களிடம் ஓடினாள்..
அங்கு நின்ற குந்தவையை அணைத்து.. ஐ மிஸ் யூ ம்மா.. என்றவள்
சந்திரனையும் கட்டிக்கொள்ள.. அவர்களின் விழிகளும் கலங்கியது…
எத்தனைதான் மனபலம் படைத்தவர்களாக இருந்தாலும்.. எவ்வளவு
உயரத்தில் இருந்தாலும்.. மகள் புகுந்தவட்டிற்கு
ீ சென்ற பிறகு.. முதல் தடவை
பார்க்கும் போது ஏற்படும் உணர்வை வார்த்தைகளால் வடிக்கமுடியாது…
அந்நிலையில் தான் குந்தவையும் சந்திரனும் இருந்தார்கள்..
க்ரானி என சிவகாமியையும் கட்டிப் பிடிக்க அவரோ.. என்னடி இது
கொஞ்சமாவது கல்யாண ஆன பொண்ணு மாதிரியா நடந்துக்குற.. உன்
புருஷனோட வராம.. ஏன் இப்படி ஓடி வர.. என அவளை திட்ட.. மூஞ்சியை
சுருக்கிய வானதி… ‘’ ஓய் கிழவி என்ன இனி நான் அங்க அடிக்கடி
வரமாட்டேன்னு தைரியத்துல பேசுறியா.. என தன் விழிகளை உருட்டியவாறு
கேட்க..
அம்மாளு.. பெரியவங்க கிட்ட இப்படி பேசக்கூடாது என சிறு கண்டிப்புடன்
கூறியவாறு அங்கு வந்தான்.. அருள்…
சிவகாமி… அவனைக் கண்டதும்.. அமைதியடைந்த வானதியை உலக
அதிசியம் போல் பார்த்தவர்… என்னடி ஒரே நாள்லயே உன் வாயை என்
பேராண்டி அடைச்சுட்டான்.. போலயே..
அதற்க்கு முகத்தை திரும்பிய வானதி.. அங்கு நின்ற வள்ளியம்மையின்
அருகில் போய் நின்றாள்… அதை வள்ளியம்மை சந்தோஷத்துடன் பார்த்தார்
என்றாள்.. குந்தவையோ முகம் கடுக்க பார்த்தாள்…
வாங்க.. வாங்க.. என அனைவரையும் வரவேற்றவர்.. குந்தவையிடம் வாத்தா
என மெல்ல குரலில் பாசம் இழையோட அழைக்க.. குந்தவையின் முகம்
சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தது..
அதை உணர்ந்த அருள்மொழி.. ஆத்தா வாங்க.. நல்ல நேரம் போகுது.. என
அனைவரையும் அழைத்து சென்றான்…
புதுமருமகள் தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று சொல்ல.. வானதியோ
பேய் முழி முழிக்க ஆரம்பித்தாள்.. அவளுக்கு சாப்பிட மட்டும் தானே
தெரியும்.. அதுவும் அவள் வட்டில்
ீ கிட்சன் ஒன்று இருப்பதையே போம்
போதும்.. வரும் போதும் மட்டுமே பார்த்திருக்கிறாள்… உள்ளே கூட
ஒருநாளும் சென்றதில்லை..
வானதி முழிப்பதை பார்த்து சிரித்த குந்தவை.. இதுக்குத்தான் கொஞ்சமாவது
கிட்சன் பக்கம் வரனும்னு சொல்றது.. டாட் லிட்டில் பிரின்செஸ்சாவே
இருந்தா.. இப்படி முழிக்க வேண்டியதுதான்.. என சிரிப்புடன் கேலி செய்ய..
வானதி சினுங்க ஆரம்பித்தாள்…
இதுல என்னத்தா இருக்கு.. நான் என் பேத்திக்கு சொல்லித்தாரேன்.. என்ற
வள்ளியம்மை.. வாத்தா நான் என்ன பண்ணனும் சொல்றேன்.. அத மட்டும் நீ
செய் போதும் என வானதியின் கன்னத்தை பிடித்தவாறு கூற.. அவளோ
தேங்க்யூ சோ மச் ஆச்சி என அவரின் கழுதைக் கட்டிக்கொண்டு கன்னத்தில்
முத்தமிட்டாள்.. அதை கண்ட அருள் தன் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது
போல் பொறாமை கொண்டான்..
குந்தவையோ அவர்களை உணர்ச்சி துடைத்த முகத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தாள்..
அடுப்பு வைக்க கல்லை தூக்குவதற்கு அவள் கஷ்டப்படுவதை கண்டு.. நகரு
நான் பார்த்துக்கிறேன்.. என கல்லை தூக்கிவந்தான்..
அடுப்பை மூட்டுத்தா.. என வள்ளி கூற.. அது வானதி காதில் வேறுமாதிரியாக
விழ..
என்னது அடுப்பை பூட்டனுமா என வானதி சத்தமாக கூற.. சுற்றியுள்ளவர்கள்
சிரிக்க ஆரம்பித்தனர்.. இறுக்கமாக இருந்த குந்தவையின் முகத்திலும்
மெல்லிய சிரிப்பு…
வள்ளி ஒன்று சொல்ல.. அதற்க்கு மாறாக அவள் ஒன்று செய்து.. வள்ளியை
டென்ஷானாக்கினாள் என்றால்.. புகைமூட்டத்தை உருவாக்கி
சுற்றியுள்ளவர்கர்களின் கண்களின் கண்ண ீரை வரவழைத்து.. அனைவரையும்
படுத்தி எடுத்து விட்டாள்..
அவள் ஒருத்தி பொங்கல் வைப்பதற்குள்.. அனைவரையும் தலையால்
தண்ணர்ீ குடிக்க வைத்துவிட்டாள்.. வேலை செய்த அவளை விட..
வள்ளியம்மை தான் மிகவும் ஓய்ந்து போனார்.. அதோடு அவர் மனம் ஓர்
உறுதியையும் எடுத்தது.. அது என்னவென்றால் சமையலயறை பக்கம்
அவளை விடக்கூடாது என்பதே…
ஒருவழியா பொங்கல் வைத்து முடித்து.. அவர்கள் குலதெய்வமான
முனியாண்டிக்கு பிராந்தி, சுருட்டு, வெற்றிலை பாக்கு, பூ, பொங்கல் எல்லாம்
படைத்து சாமி கும்பிட்டனர்..
அழகு.. வாங்க அடுத்த சன்னிதிக்கு போவோம்
அம்மாச்சி நாமதான் சாமி கும்பிட்டு முடிச்சுட்டோம்ல.. தாத்தா மறுபடியும்
எங்க கூப்பிடுறாங்க...
ஒரு பெரிய தாம்பாளத்தில் பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய், சூடம், பத்தி,
சிறு இலையில் பொங்கல் எல்லாம் வைத்துக் கொண்டிருந்த வள்ளியம்மை..
வானதியை பார்த்து.. தாத்தா சொல்ல கூடாது ஆத்தா.. ஐயா சொல்லு..
என்றவர் அவள் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்....
இங்க ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு குலசாமி இருக்கு.. முதல்ல
குலசாமிக்கு பூச போட்டுட்டு அடுத்த சாமிகளுக்கும் பூச பண்ணுவாகத்தா..
இப்ப நாம கும்பிட்டது நம்ம குலசாமி முனியாண்டி..
அடுத்து செண்பகவள்ளி, கருப்பண்ணசாமி, பைரவர், இருளாயி, நாகம்மா,
அங்காள ஈஸ்வரி, ஆஞ்சநேயர், ரெட்டை பிள்ளையார்ன்னு இருக்காக.. என்று
கூறியவாறு அடுத்த சன்னிதிக்கு கூட்டிச்சென்றார்...
வானதி சிறுபிள்ளை.. விழி விரித்து கதை கேட்பது போல் அவர்
கூறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்..
அனைத்தும் முடிந்து.. ஆங்காங்கு கிடைத்த நிழலில் அனைவரும் சற்று
ஓய்வாக அமர்ந்தனர்..
என்னன்னே கிடா வெட்டிவங்கன்னு
ீ பார்த்தா வெறும் பொங்கலு மட்டும்
வைக்கீ க.. என உறவுபெண்மணி ஒருவர் செங்குட்டுவனிடம் இடக்காக
கேட்டார்..
அருள்.. இன்னைக்கு அம்மாவாசை எங்க வட்டுல
ீ யாரும் அசைவம்
சேர்த்துக்க மாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியாத அம்மாச்சி.. இல்லை
வேணும்னு கேட்டியலா என அவனும் இடக்காக கேட்க.. அவர் கப்பென்று
வாயை மூடிக்கொண்டார்..
அப்போது குந்தவை சந்திரனிடம் கண்ணை காண்பிக்க.. அவர்
தலையசைத்தார்.. இதை கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தான்
அருள்மொழி..
பொன்னையும் மாப்பிள்ளையும் இன்னைக்கே சென்னைக்கு கூட்டிட்டு
போலாம்னு இருக்கோம்.. மறுவடு
ீ ரிஷப்ஷன் எல்லாம் முடிஞ்சு ஒரு
வாரத்துல அனுப்பிவைக்கிறோம்.. நீங்க எல்லாரும் என்ன சொல்றிங்க.. என
செங்குட்டுவனை பார்த்து கேட்டான்…
அவர் அருள்மொழியை பார்த்தார்.. அவன் மாமா… எங்க பக்கட்டு மறுவட்டு

சம்பிரதாயத்துக்கு மாப்பிளை வட்டுல
ீ உள்ள எல்லாரையும் கூப்பிடுவோம்..
நீங்க என்னன்னா என்னையும் உங்க பொன்னையும் மட்டும் கூப்பிடுறிங்க
என முகம் இறுக கேட்டான்..
சந்திரன் என்ன சொல்வது என தெரியாமல்.. மனைவியை பார்த்தான்.. அங்கு
அவள் முகமும் இறுகிதான் இருந்தது…
குந்தவை கோபத்துடன் அருள்மொழியையும்.. அவன் குடும்பத்தாரையும்
பார்த்தாள்.. சூடாக பதில் கொடுக்க அவள் வாய் துறுதுறுவென்றது.. ஆனால்
அங்குள்ள தன் மகளைக் கண்டு.. கஷ்டப்பட்டு.. பல்லைக் கடித்துக் கொண்டு..
வெளியில் வர துடித்த வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே முழுங்கினாள்…
அவங்க சொல்றது சரிதான்… நீ என்ன சின்ன புள்ளத்தனமா நடந்துக்குற
சந்திரா.. இதுதான் நீ சம்பந்தி வட்டுக்கு
ீ கொடுக்கிற மரியாதையா.. என
கோபத்தில் பொரிந்தார் சிவகாமி..
நீயும் குந்தவையும்.. அவங்க வட்டுக்கு
ீ போயி கூப்பிடனும்.. அதான் முறை..
மரியாதை.. இப்படியா வெளிய வந்த இடத்துல கூப்பிடுவாங்க.. என
இருவரையும் லெப்ட் அன் ரைட் வாங்கினார்..
சந்திரன் பாவமாய் குந்தவையை பார்க்க.. அவளோ மாமியாரை முறைத்துக்
கொண்டிருந்தாள்..
அங்கெல்லாம் வந்து சொல்ற அளவுக்கு நேரம் இல்லை.. கோயில்ல வச்சு
கூப்பிடலாம் அது ஒன்னும் தப்பில்லை என்றவள்.. செங்குட்டுவனை நோக்கி..
மாப்பிளை பொண்ண கூட்டிட்டு எல்லாரும் மறுவட்டுக்கு
ீ வாங்க என
கரம்குவித்து கேட்க.. அழகுவின் முகத்தில் பிரகாசம் கூடியது..
அதுவும் அவள் மாப்பிளையில் கொடுத்த அழுத்தம்.. அருளிற்கு கூற
வேண்டிய செய்தியையும் கூறியது.. அது என்னவென்றால்.. நீ என்
பெண்ணின் கணவன்.. மட்டுமே. வேறு எந்த உறவும் இல்லை.. என்ற
செய்தி…
செங்குட்டுவனும் மகிழ்ச்சியடைந்தார்.. அருளும் உள்ளே மகிழ்ந்தாலும்
வெளியே காண்பிக்க வில்லை.. அவன் சிரித்ததை மட்டும் குந்தவை
பார்த்துவிட்டாள்.. அவ்வளவு தான் அவன் தமக்கையார் மறுபடியும் முறுக்கிக்
கொள்வார்…
அனைவரும் சந்தோஷமாக இருக்க.. ஒரு குடும்பத்தினரும் மட்டும்..
மூஞ்சியில் முள்ளைக் கட்டியது போல் இவர்களின் மகிழ்ச்சியை
சிடுசிடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்…
அவர்கள் வேறு யாருமில்லை.. சாட்ஷாத் கணபதி செட்டியாரின் குடும்பமே..
அதுவும் வானதியின் முகத்தில் குடிக்கொண்டிருந்த மகிழ்ச்சியைக் கண்டு
தில்லையின் முகத்தில் அனல் கொழுந்துவிட்டு எரிந்தது… உன் முகத்துல
உள்ள இந்த சிரிப்ப சிதறிடிக்கல நான் வெல்வம் செட்டியார் மக இல்லடி என
உள்ளுக்குள் கருவிக் கொண்டாள்…..
***************
தில்லையும் கோவிலுக்கு தன் தந்தையுடன் வந்திருந்தாள்… அவள் பார்வை
முழுவதும் அங்கு சிரிப்புடன் நின்றிருந்த வானதியின் மேலும்.. ஐந்து
நிமிடத்திற்கு ஒரு முறையாவது தன் மனையாட்டியை பார்த்த
அருள்மொழியின் மேலும் தான் இருந்தது…
அவர்களைப் பார்க்க பார்க்க யாரோ அவள் மேல் மிளகாயை அரைத்து
பூசியது.. போல் தில்லையின் உடலெங்கும் காந்தியது..
அருள்மொழியின் திருமண விஷயம் கேட்டதிலிருந்து அவள் அவளாகவே
இல்லை… ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. அதுவும் சாகப்போகிறேன் என கூறி
மொத்த குடும்பத்தையும் கலங்கடித்து விட்டாள்… பெரும் முயற்சி செய்து
அவளை சமாதானப்படுத்தினர்…
சிறு வயதிலிருந்தே அருள் தான் அவளின் கணவன்.. அவனுக்காகவேத்தான்
அவள் பிறந்திருக்கிறாள் என தில்லையின் மனதில் அவள் குடும்பத்தினர்
ஆழமாக பதித்து விட்டனர்.. அவளும் தோழிகள் உறவினர்கள் என
அனைவரிடமும் அதைக்கூறி பெருமையடிப்பாள்…
வளர வளர அருளின் ஆளுமையான கம்பீர தோற்றத்தில் அவளுக்கு
மயக்கம்.. அதைத்தாண்டி ஒருவித வெறி என்றே சொல்லலாம்.. அவள்
தோழி ஒருத்தி அருள்மொழியின் கம்பீரத்தை சாதாரணமாக
வர்ணித்ததில் கோபம் கொண்டு.. அவளை தள்ளிவிட்டாள்.. அதில் அவள்
தோழிக்கு கை நன்றாக சிரைத்து ரத்தம் வந்துவிட்டது.. அதிலிருந்து யாரும்
அவளிடத்தில் அருள்மொழியை பற்றி பேசியதில்லை….
அருளின் திருமண செய்தி.. அவளை நிலைகொள்ளாமல் செய்து..
ஆங்காரமாக மாற்றியது.. அருள்மொழி வட்டில்
ீ பிரச்சனை செய்ய
போனவளை கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது…
கடைசியில் அவள் அப்பத்தாவின் வார்த்தைகள் தான் அவளை
அமைதியாக்கியது..
அப்பத்தா.. நான் உங்க வார்த்தைய நம்புறேன்.. ஆனா நீங்க சொன்னது
மட்டும் நடக்கலைன்னா.. அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..
என அவரின் தோளை உலுக்கிவிட்டு சென்றாள்…
****************
செங்குட்டுவன்.. சரி வாங்க.. எல்லாரும் கிளம்புவோம்.. என அனைவரையும்
கிளப்பினார்..
காரின் அருகில் செல்லும்போதுதான் தன் போனை கோவிலிலே
வைத்துவிட்டதை அறிந்த வானதி.. மறுபடியும் அங்கு சென்றாள்..
வேனை அனுப்பிவிட்டு வந்த அருள்மொழி.. காரில் வானதி இல்லாததை
பார்த்தவன்.. கேள்வியாக வடுகம்மாளை பார்க்க..
என்னத்தையோ வச்சுட்டு வந்துட்டாளாம்.. எடுக்க போனா.. இன்னும் வரல..
சரி நான் பார்த்துட்டு வரேன்.. என அங்கு சென்றவன்.. கண்டது வானதியின்
உணர்வற்ற வெறுமையான முகத்தையும்..அவள் முன்பு அவனுக்கு
முதுகுகாட்டி நின்றிருந்த தில்லையும் தான்..
வானதி முகம் சரியில்லாததை கண்டு வேகமாக அவர்களிடம் வர.. அதன்
சத்தத்தில் திரும்பிய தில்லை.. அருளை ஓர் பார்வை பார்த்து அங்கிருந்து
சென்றாள்…
வானதி அவனை பார்க்காது காரின் அருகே செல்ல.. அருள் ஒன்றும்
புரியாது.. யோசனையுடன் அவளை பின்தொடர்ந்தான்..
தில்லையோ தூரத்திலிருந்து இவர்களையே வெஞ்சினத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தாள்.. மச்சான்.. இந்த தில்லை யாருன்னு உங்களுக்கு இன்னும்
தெரியலை.. கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்குவங்க..
ீ என்றாள் உதடுகளில்
தோன்றிய வஞ்சசிரிப்புடன்…

அத்தியாயம் 8
அந்நள்ளிரவு வேளையிலும் அழகுவின் முகத்தில் ஆயிரம் மின்னல்களின்
வெளிச்சம்.. சொர்கத்தின் வாசலில் இருப்பது போல் குந்தவையின் மாளிகை
வாசலில் பரவசமாக நின்றுக் கொண்டிருந்தார்.. பின்னே..
முழுதாக இருபத்தி மூன்று வருடங்கள்.. தன் மகள் இனி தனக்கு இல்லை
என தனக்குள்ளையே புழுங்கிக் கொண்டிருந்தவரின்.. வேதனை
இத்திருமணத்தின் மூலம் சற்று குறைந்த்திருந்தது… அதுமட்டுமில்லாமல்
தன் செல்ல மகளிடம் தன்னைப் புரியவைக்கவும் கிடைத்த மிகப்பெரிய
வாய்ப்பல்லவா.. இருபத்தி மூன்று வருடங்களாக குந்தவையிடம் நெருங்க
முயன்று.. தோற்றுக் கொண்டிருந்தவருக்கு இன்று அவள் மாளிகையின்
உள்ளே செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை…
அழகுவின் முகத்திலிருந்தே.. அவர் அதிகம் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறார்..
என்றுணர்ந்த செங்குட்டுவன் தன் மகனின் தோளை அழுத்தினார்..
இத்தனைக்கும் அவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்…
செங்குட்டுவன் வடுகம்மாள் அழகு வள்ளியம்மை என அனைவரும் அருள்
வானதியோடு சென்னை வந்திருந்தனர்..
அருள்.. வானதியை பார்த்தான்.. விழிகளில் தூக்க கலக்கத்துடன்
நின்றிருந்தாள்.. கோவிலிலிருந்து வந்ததிலிருந்தே அவள் முகம்
சரியில்லாததை கண்டு.. அவன் முகம் யோசனையாகியது..
என்னாச்சு இவளுக்கு.. ஏன் ஒரு மாதிரி இருக்கா.. என்னன்னு கேட்டாலும்
பதில் சொல்ல மாட்டேங்குறா.. வட்டுலையும்
ீ சரி வரும்போதும் சரி… நம்மள
திரும்பிக்கூட பார்க்கல.. என்ன பிரச்சனைன்னு தெரிலையே.. என
தனக்குள்ளையே உழன்றுக்கொண்டிருந்தான்..
வானதிக்கு அருளின் பார்வை புரிந்தாலும்.. பெரிதாக கண்டுகொள்ளவில்லை..
அவனை பார்த்தாலே காலை தில்லை கூறியதுதான் அவள் நினைவிற்கு
வருகிறது…
அப்பொழுது தான் அருளிற்கு.. வானதி கோவிலில் தில்லையுடன் தனியாக
உரையாடிய நிகழ்வு அவன் மூளைக்குள் பளிச்சிட்டது..
கண்டிப்பா தில்லை ஏதாவது ஏடா கூடமா சொல்லிருப்பா.. அதை நம்பி இந்த
மக்கு மண்ணாந்தையும் நம்மகிட்ட மூஞ்சிய தூக்குறாளோ.. என்ற
நினைப்பே அருளுக்கு வானதியின் மேல் கோபத்தை வருவித்தது…
யாரு என்ன சொன்னாலும் அதை நம்பிருவாளா.. என்கிட்ட என்னன்னு
ஒருவார்த்தை கேட்காம இப்படி சின்ன பிள்ளை மாதிரி முகத்த
தூக்கிவச்சுருக்கா..
எங்கக்கா மவளே.. இருடி இன்னைக்கு நான் உன்ன ஒருவழிப்பண்ணல நான்
அருள்மொழி பாண்டியன் இல்லடி.. என மனதிற்குள் தன் அம்மாளை
கருவிக்கொண்டிருந்தான்..
சந்திரன் அனைவரையும் வட்டிற்குள்
ீ அழைக்க.. குந்தவையோ அலட்சியமாக
முகத்தை திருப்பி நின்றுக் கொண்டிருந்தாள்..
சிவகாமி.. டேய் உனக்கு அறிவு இருக்கா.. கல்யாணமாகி முத தடவை உன்
பொண்ணு மறுவட்டுக்கு
ீ வந்துருக்கா.. நீ ஆரத்தி எடுக்காம உள்ள வர
சொல்ற.. என தன் மகனை கடிந்துக் கொண்டவர்.. அங்கு அலட்சியமாக
நின்றிருந்த மருமகளைக் கண்டு எரிச்சல் கொண்டார்…
சந்திரனோ பாவமாக தன் அன்னையை பார்த்து.. இல்லம்மா ராத்திரி
நேரம்தான.. என இழுத்தான்..
ராத்திரி நேரமா இருந்தா என்னடா.. என்றவர்.. மருமகளே என்னம்மா இப்படி
எனக்கென்னன்னு நிக்கிற வந்துருக்கறது உன் பொன்னும்.. உன்
தம்பியும்தான்.. வா வந்து ஆரத்தி எடு.. என கோபக்குரலில் கூறினார்…
குந்தவை தன் மாமியரை மனதிற்குள் அர்ச்சித்தவாறு ஆரத்தி எடுக்க
செல்ல.. அருள் தன் அக்காவும் மாமாவும் படும் பாட்டை எண்ணி கேலியாக
சிரித்தான்…
அதை முதலில் கண்டுகொண்ட குந்தவை.. அவனை தீயாய் முறைக்க..
அவனோ.. வட்டை
ீ பார்ப்பது போல் முகத்தை திருப்பினான்…
என்ன அப்படியே நிக்குற.. குங்குமத்தை வச்சுவிடு..
வானதி நெற்றியில்.. மென்மையாக பொட்டிட்ட.. குந்தவை அருளின்
நெற்றியின் தன் நகம் பதியுமாறு அழுத்தி.. நக்கல் சிரிப்புடன் வாங்க
மாப்பிள்ளை என்றாள்..
ஹ்ம்ம்ம்.. என யோசனையுடன்.. அருள் வாசலிலே நின்றான்..
என்னாச்சு மருமவனே ஏன் அங்கேயே நிர்க்குறீங்க.. வலது கால எடுத்து
வச்சு வாங்க..
இல்லை.. அத்தை அக்கா என்ன மாப்பிளைன்னு கூப்பிடுறாக.. அதுனால
நானும் கொஞ்சம் மாப்பிளை கெத்து காமிக்கலாம்னு இருக்கேன்.. என்று
அவன் கூறியவுடன்.. குந்தவை முறைக்க அவனோ கவனமாக தன்
அக்காவை தவிர்த்து மற்ற அனைவரையும் பார்த்தான்..
அதைக்கேட்டு சிரித்த சிவகாமி… தாராளமா உங்க மாப்பிள்ள கெத்த
காண்பிங்க மருமவனே.. அப்பத்தான் உங்க அருமை இங்குள்ளவங்களுக்கு
புரியும் என்றவர் ஜாடையாக குந்தவையை பார்த்தார்…
சந்திரனும் தன் மனைவியைத்தான் பார்த்தார்.. அவள் எப்பொழுது
வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருந்ததால்.. அருளிடம் போதும்
என ஜாடை காண்பித்தவர்..
ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க காலைல
பார்க்கலாம் என மற்றவர்கள் தங்க அறையை காண்பித்தார்..
வானதியிடம்.. மாப்பிளைய உன் ரூம்க்கு கூட்டி போம்மா… என்றவர்
குந்தவையை இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் பதுங்கினார்..
உள்ளே சென்றதும் தான் தாமதம்.. அவனுக்கு கொழுப்பை பார்த்திங்களா..
நான் சும்மா இருந்தாலும் வேணுக்கும்னே வந்து வம்பிழுக்குறான்.. என்னை
பார்த்து கேலியா வேற சிரிக்கிறான்.. என குந்தவை பொறிய சந்திரன்
அவளை அமைதிப்படுத்த முயன்றார்.. அவளோ
என் பொண்ண கட்டுனா.. இவன் சொல்றது செய்றதையெல்லாம் நான்
பொருத்துக்கணுமா.. இந்த குந்தவை நாச்சியார் யாருக்கும் எதுக்கும்
அடங்குறவ இல்லைன்னு கூடியசீக்கிரம் அவனுக்கு காமிக்கிறேன் பாருங்க..
என மேற்கொண்டு பேச பொறுமை இழந்த சந்திரன் அவள் அதரன்களை தன்
அதரங்களோடு லாக் செய்தார்..
யாருக்கும் அடங்க மாட்டேன்.. என சிலிர்த்துக் கொண்டு நின்றவளை தன்
ஆளுகைக்குள் அடக்கி.. மற்றவையை மறக்கடித்தார்… மேலும் மேலும்
சந்திரன் முன்னேற.. குந்தவையின் கரங்கள் அதற்க்கு மறுப்பு தெரிவிக்க..
அவள் கண்களோ மையலோடு தன்னவனை பார்த்து தன் விருப்பத்தை
கூறியது…
இதழை விடுத்து அவளை தன் கரங்களில் அள்ளிக்கொண்டு.. மஞ்சத்தை
அடைந்து.. அந்த அடங்கா குதிரையை அடக்கி.. தன்னை அவளுக்குள்
அடைக்கலம் புகுத்தினார்.. இங்கு யார் யாரை அடக்கியது.. யார் யாருக்குள்
அடைக்கலம் புகுந்ததென்பது அவர்களுக்குள் உள்ள.. மன்மத ரகசியம்..
இங்கு அருளோ.. அறைக்குள் நுழைந்ததும் பாத் ரூமிற்குள் நுழைந்து தன்னை
சுத்தப்படுத்திக் கொண்டே… தன் அம்மாளை எவ்வாறு தண்டிக்க வேண்டும்..
எப்படி கதறடிக்க வேண்டும் என விதவிதமாக யோசித்து நிறைய
ஐடியாக்களுடன் வெளியே வர.. அவன் மனைவியோ அவனுக்கு பெரிய
பல்ப்பை தந்தாள்..
ஆம் வானதி அவன் பாத்ரூம்மில் நுழைந்த மறுநொடி மெத்தையில் வழ்ந்து

சொர்கத்திற்கு சென்றுவிட்டாள்…..
மெத்தையில் தத்தை போல்.. துயில்க் கொண்டிருந்த மனைவியை கண்டு
அவன் முகம் காற்று போன பலூன் போல் ஆகியது..
அருள் ஏமாற்றமாய் தன்னவளை பார்த்தான்.. இன்னைக்கும் போச்சா என
அவன் மனசாட்சி கேலிச்சிரிப்பு செய்து அவனை மேலும் காண்டாக்கியது…
அடியே குண்டம்மா.. தூங்குமூஞ்சி.. கார்ல வரும்போதெல்லாம்
தூங்கிட்டுதானடி வந்த.. இப்போ மறுபடியும் என்னடி உனக்கு தூக்கம்
வேண்டிக்கிடக்கு..
ஒரு நாள் இல்லை ஒருநாள் என் பொறுமை எல்லாம் குறையப்போகுது…
அன்னைக்கு உன்னை பிரிச்சு மேயுறனா இல்லையா பாரு என சவால்
விட்டவன்…..
ஹம்ம்ம்ம்ம்ம்ம் என்ற பெருமூச்சுடன் அவள் அருகில் படுத்தான்.. தூக்கமும்
வரவில்லை.. தூங்க மனமும் வரவில்லை..
புரண்டு புரண்டு படுத்தவன்.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து
தன்னவளையே பாவமாய் வெறித்து பார்த்தான்..
அவளோ.. சிறுகுழந்தை போல் தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்…
அதைப்பார்த்து அருளின் மோகம்.. வெள்ளப்பெருக்கு போல் பொங்கியது..
அதைத்தாங்க மாட்டாது.. அவள் அதரங்களை கவ்வினான்.. கனவில்
தன்னவனுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்த வானதிக்கு அம்முத்தம் தன்னவன்
கொடுப்பது போல் தோன்றி.. அவளும் அவனுக்கு ஈடுகொடுக்க.. அருள்
தேனுண்ட நரியானான்…
அடுத்த கட்டத்திற்கு அவன் முயலும் போது.. அருள் மனசாட்சி டேய்..
என்னடா பண்ற.. என் அம்மாளு சம்மதத்தோட தான் எல்லாமும் சொன்ன..
இப்போ நீ என்ன காரியம் பண்ற.. என்ற மனசாட்சியை போ அங்கிட்டு என
துரத்தியவன்.. முத்தத்தில் கான்செண்ட்ரேட் செய்தான்…
தன்னவள் சம்மதத்தோடுதான் தங்களின் சங்கமம்.. என்பதில் அவன் மனம்
உறுதியாக இருந்ததால்.. மனதேயின்றி அவள் இதழை விடுவித்தான்..
அப்பொழுதும் வானதி தூக்கத்தில் தான் இருந்தாள்..
கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை அடக்கியவன்.. கடைசியாக அவள்
கன்னத்தில் மீ சை உரச அழுத்த முத்தமிட்டு..
அம்மாளு இன்னும் ஒருவாரம் தான் என்னால பொறுமையா இருக்க
முடியும்.. அதுக்குள்ள உன் உடம்பையும் மனசையும் தேத்திக்கோ.. ஏன்னா
என்னையும் என் காதலையும் தாங்க உன் உடம்புலையும் மனசுலையும்
தெம்பு வேணும்ல என அவள் செவிமடலில் மிகவும் மென்மையாக
கூறியவன்..
ம்ப்ச்.. என்று மெலிதாக சத்தமில்லாத ஓர் முத்தம் வைத்து.. அவள்
பாதத்தில் சரணடைந்து அங்கும் முத்தங்களை வாரியிறைத்து.. தன் சிரம்
சாய்த்து கால்களை கட்டிக்கொண்டு படுத்தான்..
படுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனான்… ஆனால் பெண்ணவள் தான்
உறக்கமின்றி தவித்தாள்..
அருளின் ஒவ்வொரு செயலும் பெண்ணின் உணர்வுகளை
தூண்டிவிட்டிருந்தது.. அவன் இதழ் முத்தத்திலே உறக்கம் கலைந்தவள்..
அவன் செவி மடலில் இட்ட முத்தத்தில் மங்கையவள் உடல் சிலிர்த்து..
இதுவரை அவள் அறியாத உணர்வுகளெல்லாம் அவளுக்குள் தோன்றி..
மயக்கம் கொள்ள வைத்தன…
இத்தனைக்கும் மேல் அவளுள் நடக்கும் போராட்டங்களை.. அந்த கயவனிடம்
மறைக்க முயன்று அதில் சிறிது வெற்றியும் பெற்றாள்.. ஆனால் பாதத்தில்
முத்தமிடும் போது வானதி தன் உணர்ச்சிகளை அடக்கவும் மறைக்கவும்
முடியாமல்.. தோல்வியை தழுவினாள்..
இதழ் கடித்து விழிகளை இறுக்கிமுடி.. சுவாசம் தடைப்பட்டு.. நெஞ்சுக்குழி
ஏறி இறங்க.. மெத்தை விரிப்புகளை தன் விரல் கொண்டு கசக்கி.. தன்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள்…
அவன் காதல் மயக்கத்திலும்.. வானுவின் பாதத்திலும் தன் கவனத்தை
வைத்திருந்ததால்.. அவள் உணர்வுப் போராட்டங்களை பார்க்கவில்லை…
ஒருவேளை பார்த்திருந்தால்.. அப்பொழுதே அவளை வறுத்து தின்றிருப்பான்…
அவன் உறங்கியதும் தான் விழிகளை மலர்த்தி.. தன் பாதத்தில் சேயென
உறங்கியிருந்த அந்த ஆறடி வளர்ந்த ஆண்மகனை பார்த்தாள்..
அதில் என்ன இருந்ததென்பது அவளுக்குத்தான் வெளிச்சம்.. ஆனால்
கண்ணர்ீ மட்டும் விடாமல் பொழிந்தது..
அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.. தன் மனதின் எண்ணங்கள்
சரியா தவறா என்றுகூட அந்த இருபது வயது பாவைக்கு தெரியவில்லை…
குழம்பித் தவித்துக் கொண்டிருந்தவரின் மனதில் தன்னவனின் முகம் மின்னி
மறைய.. அவள் மனம் அமைதிக்கொண்டது… தனக்கு என்ன வேண்டும்
என்பதிலும் தெளிவு பிறந்தது..
அதன் பிறகே அவளை நித்ரா தேவி ஆட்கொள்ள.. வானதியின் கயல்
விழிகள் மூடியது..
நினைப்பது எல்லாம் நடக்க விதி விட்டால் தானே.. நாளையே தெளிவு
கொண்ட அவள் மனதை குழப்பும் பொருட்டு தர்ஷன் மூலம் விதி தன்
விளையாட்டை ஆரம்பித்தது…

அத்தியாயம் 9

சூரியன் தன் கதிர்களால் இருட்டை விலக்கி.. விடியல் தரும்.. அந்த


அதிகாலை வேளை.. சீராய் வெட்டப்பட்டிருக்கும் புல்வெளிகளிலும்..
மலர்களிலும் முத்து முத்தாய் பனித்துளி படிந்து பார்க்கவே ரம்மியமாய்
இருந்தது…
பலவகை மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்த மலர்வனச் சோலையையே
விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார் அழகு..
அப்பொழுது ட்ராக் சூட்டுடன் அவரிடம் வந்த சந்திரன்.. என்ன பார்க்குறீங்க
மாமா.. இதெல்லாம் உங்க பொண்ணோட கைங்கரியம் தான்.. இதை
பராமரிக்கவே நாலு பேர வேலைக்கு வச்சுருக்கா..
பூக்கள் மேல அப்படி ஒரு பிரியம் உங்க மகளுக்கு என சந்திரன் கூறியதும்..
விழிகளில் கோர்த்த கண்ண ீருடன்.. சந்திரனின் கூற்றை ஆமோதித்தவர்..
ஆமா.. மாப்பிளை சின்ன வயசுல இருந்தே குந்தவைக்கு பூவும்.. பூ
வளர்க்குறதும் ரொம்ப பிடிக்கும்.. இது அவ அம்மாகிட்டேயிருந்து அவளுக்கு
வந்த பழக்கம் என்று கூறியவரின்.. மனதில் குந்தவையின் சிறு வயதில்
ஏற்ப்பட்ட… சில வேண்டத்தகாத சம்பவங்கள் உலா வந்து.. அவரை
அலைக்கழித்தது..
அதையறியாத சந்திரன்… இங்க எல்லாவகை பூவும்மே இருக்கு மாமா..
செண்பகப்பூ, செவ்வந்தி பூ, மல்லி, முல்லை, டிசம்பர், பாரிஜாதம், துலிப்பூ,
சூரியகாந்தி, பால்சம், கிளாடியஸ், கார்டீனியா, ஹாலிஹாக்ன்னு நிறைய
வச்சுருக்கா.. ஏன் குறிஞ்சிப்பூ கூட இங்க இருக்கு.. ரோஜால எல்லா நிறமும்
இருக்கு..
அத்தைக்கு பாரிஜாதம் பூவுன்னா ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவா.. தினமும்
அந்த மரத்துல அரைமணிநேரம் அமைதியா நிப்பா.. இல்லைன்னா அந்த
நாளே அவளுக்கு விடியாது.. என பேசிக்கொண்டே சென்றான்…
சந்திரன் கூறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அழகுவின் இதயம்
துன்பத்திலும் இன்பத்திலும் தவித்தது.. அவரின் முதல் மனைவி..
வேலுநாச்சியாரை எண்ணி அவர் விழிகள் கண்ண ீரை சிந்தியது..
அப்பொழுதுதான் அழகுவின் அமைதியைக் கண்டு.. மாமா என்னாச்சு ஏன்
ஒருமாதிரி இருக்கீ ங்க..
கண்களை துடைத்துக் கொண்டே.. ஒன்னுமில்லை மாப்பிளை தூசி
விழுந்துடுச்சு என சமாளித்தார்…
சந்திரன் நம்பவில்லையென்றாலும் மேற்கொண்டு கேட்டு அவரை தொந்தரவு
படுத்தவில்லை… சரி வாங்க உள்ள போவோம்.. இந்த பனிதான் உங்களுக்கு
ஒத்துக்கலைன்னு நினைக்குறேன்.. என அவரை அழைக்க… அழகுவும்
மறுப்பில்லாமல் அவருடன் சென்றார்…
இருவரும் ஹாலில் நுழைய.. குந்தவை எதிரே வந்தாள்.. குளித்து புத்தம் புது
மலரென வந்திருந்த தன் மனையாளை பார்த்து.. கள்ளுண்ட வண்டாக
நின்றான்.. சந்திரன்.. இரவின் மிச்சங்கள்.. அவன் விழிகளில் பிரதிபலித்தது..
கணவனின் பார்வை புரிந்த மனையாட்டிக்கும் இரவின் நினைவில்.. முகம்
செம்மை பூசிக்கொண்டது.. இருவரும் ஒருவரையொருவர் பார்வையால்
விழுங்கிக் கொண்டிருக்க.. இதைப் பார்த்த மற்றொரு முகம்
விளக்கெண்ணெய்யை குடித்தது போல் ஆனது… அது வேறு யாருமில்லை
சாட்ஷாத் அருளே தான்..
இரவு அவன் மனதில் கட்டிவைத்த மன்மதக்கோட்டையை.. அவன் மனைவி
உறக்கமென்னும் பீரங்கி வைத்து தகர்த்ததில் நொந்து நூலாகி வந்தவன்
கண்களில் இவர்களின் காதல் பரிபாஷைகள் பட அவன் முகம்
அஷ்டகோணலாகியது…
இங்க நான் இவரு பொண்ண வச்சுக்கிட்டு ஒரு மீ ள்ஸ்க்கு வழியில்லாம
திரியுறேன்… ஆனா இவரு மட்டும் எங்கக்கா கூட பிரியாணியே திங்குறாரு…
என பொருமிக் கொண்டே கீ ழ வந்தவன்.. இருவரையும் கலைக்கும்
பொருட்டு… ஹ்க்கும்.. ஹக்கும் என இரும அதில் தன்னிலையடைந்த
குந்தவை.. வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்…
ரொமான்ஸ் தடைப்பட்ட காண்டில்.. சந்திரன் அருளை முறைக்க.. அவனோ
அவரை கொலைகாண்டில் முறைத்துக் கொண்டிருந்தான்..
அதைக்கண்டு ஜெர்க்கான சந்திரன்.. மாப்பு நீ பண்ண கரடி வேலைக்கு
நான்தான் உன்னை முறைக்கணும்.. என பொருமலுடன் கூற…
அவனோ.. யோவ் நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாய்யா.. இங்க ஒருத்தன்
கல்யாணமாகியும் கட்ட பிரம்மச்சாரியா சுத்திட்ருக்கேன்.. ஆனா நீ பேரன்
பேத்தி எடுக்குற வயசுல.. எங்கக்கா கூட ரொமான்ஸ் பண்ணிட்ருக்க..
மாப்பு யாரை பார்த்து வயசானவன்னு சொல்ற.. ஐம் ஜஸ்ட் பாஃர்ட்டி ப்ளஸ்..
என அவன் கூறிய மற்றதை விடுத்து.. இது மட்டுமே முக்கியம் என்பது
போல் கூற..
அருள் தன் கண்களை உருட்டி உறுத்து விழிக்க.. இதற்கு மேல் இங்கு
நின்றால் தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என அறிந்த சந்திரன்..
குந்தவை குந்தவை… மாமாவும் மாப்பிள்ளையும் வந்துட்டாங்க பாரு காபிக்
கொண்டு வா.. என்றவர் பாதுகாப்பாக அழகுவின் அருகில் அமர்ந்தார்…
அருளும் சந்திரனை முறைத்தவாறு ஒற்றை சோபாவில் அமர.. சந்திரன்
நிமிரவே இல்லை.. அழகுவின் முகத்தையே உன்னிப்பாக
பார்த்துக்கொண்டிருந்தார்..
அழகுவும்.. மருமகனாவது தன் பேச்சை கேட்கிறார்.. என்பதில்
மகிழ்ச்சியடைந்து.. பேசிக்கொண்டே இருந்தார்.. கடைசியில் அவரிடம் என்ன
பேசினார் என்று கேட்டால் அவருக்கே தெரியாது..
சந்திரனும் தன் விதியை நொந்துக்கொண்டு தன் மாமனாரின் அருவையை
கேட்டுக்கொண்டிருந்தார்..
அப்பொழுது அவரை காப்பாற்றும் பொருட்டு குந்தவை காபியுடன் வர…
சந்திரனின் முகத்தில் தெய்வத்தை கண்ட பரவசம்.. அதே பரவசத்தோடு
பார்வையை திருப்ப.. அருளின் கோபமுகம்.. கண்டு
ஆத்தி.. இவன் இருக்கறத மறந்துட்டேனே என நினைத்தவர்.. இப்பொழுது
சேஃப்பாக செய்தித்தாளில் தன் முகத்தை மறைத்தார்.. யார் மறுபடியும்
அழகுவின் அருவையை தாங்குவது…
குந்தவை வேண்டா வெறுப்பாக அழகுவின் முன் காபியை நீட்ட..
கொடுத்ததே பெரிதென்பது போல்.. சந்தோஷத்துடன் மகளை பார்த்தவாறு
காபியை எடுத்துக் கொண்டார்..
செங்குட்டுவன்.. வடுகம்மாள்.. வள்ளியம்மை.. சிவகாமி என ஒவ்வொருவராக
வர ஆரம்பித்தனர்..
சிவகாமி.. குந்தவை உன் பொண்ணு இன்னும் எந்திரிக்கலையா..
வடுகம்மாள்.. ஹ்ம்ம்கூம்.. என தோள்ப்பட்டையில் முகத்தை இடித்தவாறு
ஏதோ கூற வந்தவர்.. கணவனின் முறைப்பில் அமைதியானார்..
ராப்பொழுது புள்ள நேரஞ்செட்டு தான உறங்க போச்சு.. இன்னும் செத்த நேரம்
தூங்கட்டும் அயித்தை.. என வள்ளியம்மை கூறினார்..
குந்தவையோ.. வள்ளியம்மையை எள்ளலாக பார்த்து விழிகளால் வெறுப்பைக்
கக்கினாள்..
அதை வள்ளியம்மையும் அருளும் பார்த்தனர்.. அருள் தன் தமக்கையை
பார்த்து கோபமும் வருத்தமும் கொண்டான் என்றால்.. வள்ளியம்மையோ
முகத்தில் எதையும் காண்பிக்கவில்லையென்றாலும்.. அவர் கன்னத்தசைகள்
துடித்து.. அவரும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் என கூறியது.. அது
வருத்தமா.. கோபமா.. என்று அவருக்கு மட்டுமே தெரியும்…
சந்திரனின் போன் இசைக்க.. அதை ஆன் செய்தவர்.. சொல்லு சிவா..
……
ஹ்ம்ம்ம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.
…….
நேத்து நைட் தான் வந்தோம்..
……
குட்.. நீங்க எல்லாரும் பிரேக் பர்ஸ்ட்க்கு வந்துருங்க… என போனை
வைத்தவர்.. மற்றவர்களிடம்.. என் பிரண்ட்.. அண்ட் என் ஒரு சில
பிஸ்நெஸ்ல பார்ட்னரும்கூட.. உங்களையெல்லாம் பார்க்க வரேன்னு
சொன்னான்.. என்றவர் குந்தவையிடம் அவன பேமிலியோட பிரேக்
பர்ஸ்டுக்கு வர சொல்லிருக்கேன்.. சர்வன்ட்ஸ் கிட்ட அவங்களுக்கும்
சேர்த்து பண்ண சொல்லிடு என்றவர்.. தன் அறைக்கு சென்றார்..
அப்பொழுது.. மாம்.. என்ற சோம்பலான குரலுடன் வானதி வர..
அனைவரும் ஸ்லோமோஷனில் திரும்பினர்.. இரவு உடை அணிந்து
கண்ணை கசக்கிக் கொண்டு நின்றவளைக் கண்டு வடுகம்மாளின் முகம்
கடுகடுக்க ஆரம்பித்தது..
குந்தவை.. இரவு உடையில் வந்தவளைக் கண்டு குந்தவைக்கும் கோபம்
தான்.. ஆனால் வடுகம்மாள் முக கடுப்பு அவளுக்கு இனிப்பு தின்ற தித்திப்பு
தந்ததால்.. கண்டுகொள்ளாமல் உட்காரு குட்டிமா.. நான் ஹார்லிக்ஸ்
எடுத்துட்டு வரேன்… என உள்ளே சென்றாள்…
சிவகாமி பேத்தியின் செயலிலும் மருமகள் செயலிலும் விருப்பமில்லாது
முகத்தை சுருக்கி வானுவை திட்டப் போக.. வள்ளியம்மை அவரை தடுத்தார்..
ஹ்ம்ம்ம் என முனங்கிய வானதி.. அறைக்கண் விழித்து.. சோபாவில்
அமர்ந்திருந்த செங்குட்டுவனின் மடியில் படுத்தாள்.. உடனே எழுந்த அழகு
வானதியின் பாதம் அருகே அமர்ந்து.. அவள் பாதத்தை தன் மடியில் எடுத்து
வைத்தார்..
அதைக்கண்டு அங்குள்ளோர் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில்
இருந்தனர்… செங்குட்டுவனுக்கு குந்தவையின் சிறுவயது நியாபகம் வந்தது..
அவளும் சிறுவயதில் இப்படித்தான் அடிக்கடி செங்குட்டுவன் மடியில்
படுத்துவிடுவாள்…
அதை நினைத்து செங்குட்டுவனின் விழிகள் பனித்தது.. அழகுவிற்கும் அதே
நினைவு தான்..
சிறுவயதில் தன் பேத்தியின் பாதங்களை ஏந்தமுடியாத பாக்கியம்… அவளின்
இருபது வயதில் அவர்களுக்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுவதா
துக்கப்படுவதா என தெரியவில்லை….
அந்த வேதனை தங்கமாட்டாது.. அழகு தன் அன்னையையும்
மனைவியையும் முறைத்தான்.. வடுகம்மாள் வானதியையே பார்த்துக்
கொண்டிருக்க வள்ளியம்மையோ தலை குனிந்து அமர்ந்திருந்தார்…
ஆனால் அங்குள்ள ஒருவன் மட்டும்.. வானதியை பலமார்க்கமாக பார்த்துக்
கொண்டிருந்தான்.. அவன் யாரென்று சொல்லாமலே உங்களுக்கு
தெரிந்திருக்கும்.. அவனுக்கு அவளை தவிர வேறு எதுவும் தெரியவில்லை..
அவன் யோசனை முழுதும் இந்த ஒயிட் லகான் கோழியை எவ்வாறு.. எப்படி
சுவைக்க வேண்டும்மென்பதே…
அவள் செங்குட்டுவன் மடியில் படுத்ததும் இவனுக்கு முதலில் வந்த
உணர்வே பொறாமைதான்.. ஏன் என் மடியிலெல்லாம் இவ படுக்க
மாட்டாளாம்மா.. என அவன் மனம் சிணுங்கியது..
அவன் மனசாட்சியோ டேய் நீயே ஒத்த சோபால உட்கார்ந்திருக்க.. இதுல
அந்த புள்ள எங்கடா உன் மடியில படுக்க முடியும் என்ற மனசாட்சியின்
நியாயமான கேள்விக்கு.. ஹ்ம்ம்ம் அதெல்லாம் முடியும் என சிறுபிள்ளை
போல் சிணுங்கினான்….
அப்பொழுது அங்கு வந்த குந்தவை முதலில் கண்டது.. செங்குட்டுவன்
மடியில் தலை சாய்த்து அழகுவின் மடியில் பாதம் வைத்து துயில்க்
கொண்டிருந்த தன் மகளைத்தான்….
அவளுக்கும் பழைய நியாபகங்கள்.. அதோடு ஒரு முறை அவ்வாறு அவள்
படுத்திருக்கும் போது அவள் வாங்கிய அடிகளும் நியாபகம் வந்து.. அவள்
இளகிய மனதை இறுக்கியது..
வேகமாக ஹாலிற்கு வந்து.. ‘’ வானு எழுந்திரி.. என அவளை எழுப்பினாள்..
வேண்டாம் என மறுத்த.. செங்குட்டுவனையும் அழகுவையும்
கண்டுகொள்ளாமல்.. அவளை எழுப்பி இந்த ஹார்லிக்ஸ் குடிச்சுட்டு போய்..
ரெடியாகு.. சிவா அங்கிள் பேமிலி பிரேக் பர்ஸ்டுக்கு வராங்க.. என்றதும் தான்
தாமதம்.. விருட்டென எழுந்தவள்.. தர்ஷுவும் வரானா.. மம்மி.. என்று
மட்டும் கேட்டாள்..
ஆமா தர்ஷன் சுதா எல்லாம் வராங்க.. என்றதும் வேகமாக தன் அறைக்கு
சென்றாள்..
தர்ஷன் என்ற பெயரைக் கேட்டதுமே.. அருளின் முகம் இறுகியது… ஆனால்
அதை கவனிக்கும் நிலையில் அங்கு யாருமில்லை…
சிவகாமிக்கு குந்தவையின் போக்கு பிடிக்கவில்லை.. அதே நேரம் அவளை
மற்றவர் முன்னாடி கண்டிக்கவும் முடியவில்லை… அதனால் மற்றவர்களிடம்
மன்னிப்பு கோரும் பார்வை பார்த்து.. பேச்சுக் கொடுத்து அவர்களை
சகஜமாக்கினார்..
சிறிது நேரம் கழித்து.. மேலே வந்த அருள் கண்டது.. பரபரப்பாய் கிளம்பிக்
கொண்டிருந்த வானதியைத்தான்…
அருள் அவளின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.. அதில்
பரபரப்பு, படபடப்பு, தவிப்பு, பயம் போன்ற உணர்வுகளால் நிறைந்திருந்தது…
கண்ணாடி முன் நின்றவளின் அருகில் வந்து.. அவள் பின்பக்கமாக
அணைத்து.. கழுத்தில் முகம் புதைத்தான்.. அதில் பெண்ணவளின் தவிப்பு
சற்று குறைந்து இயல்பாகினாள்.. ஆனால் அவன் செயலுக்கு ஈடுகொடுக்கவும்
இல்லை எதிர்வினை புரியவும் இல்லை..
கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தையே வைத்த கண் வாங்காது
பார்த்துக் கொண்டிருந்தாள்.. என்னாச்சு அம்மாளு ரொம்ப டென்க்ஷனா
இருக்க.. யாராவது உனக்கு முக்கியமானவங்க வராங்களா என அவளை
கண்ணாடியில் பார்த்தவாறு கேட்க.. அவனவளிடம் தடுமாற்றம்…
ஹ்ம்ம்ம் ஆமா.. எங்க பேமிலி பிரண்ட்ஸ் வராங்க.. என அவனை பார்த்து
கூற..
அப்பொழுது இன்டெர்க்கார்ம் ஒலித்து அவர்களை கலைத்தது..
அதையெடுத்தவள்.. ஹ்ம்ம்ம் என்று மட்டும் கூறி வைத்துவிட்டு.. அருளிடம்
நம்மள கீ ழ வரசொன்னாங்க... வாங்க போகலாம்.. என முன்னே செல்ல…
அருள் பின்தொடர்ந்தான்..
ஹாலில்… தர்ஷன் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர்.. இதோ வானதியும்
மாப்பிளையும் வந்துட்டாங்க.. என சந்திரன் கூறியதும்.. அனைவரின்
பார்வையும் அங்கு வந்துக் கொண்டிருந்த அருள் வானதியின் மேல் வழ்ந்து..

சிவா இவர் தான் எங்க மாப்பிள்ளை அருள்மொழி பாண்டியன்.. என சந்திரன்
கூறியதும்.. மரியாதை நிமித்தம் அருள் அனைவருக்கும் சிறு சிரிப்புடன்
வணக்கம் வைக்க..
சிவராமன்.. அவன் கரம் பிடித்து.. வாழ்த்துக்கள் யங் மேன்.. எங்க
வானுக்குட்டிய கல்யாணம் பண்ண நீங்க கொடுத்து வச்சிருக்கணும்.. என
அவர் கூறியவுடன்… அருள் காதலுடன் தன் அம்மாளை பார்த்து
ஆமோதிப்பாக தலையசைத்தான்..
வானதி சிறு சிரிப்புடன்.. சுதாவின் அருகே அமர்ந்தாள்..
எப்படியிருக்க செல்லம் என அவள் கன்னம் பிடித்து சுதா கேட்க..
நல்லாயிருக்கேன்.. சுதாம்மா என அவர் தோளில் சாய்ந்தவள்.. சிவாப்பா
எத்தனை நாள் வாக்கிங் போகலை.. ஒரு சுத்து வெயிட் போட்ட மாதிரி
இருக்கீ ங்க.. என கண்டிப்புடன் கேட்டாள்..
அசடு வலிய சிரித்த.. சிவராமன்.. வானுக்குட்டி ஜஸ்ட் ஒன் வக்
ீ தான்டா
போகலை என இளித்தபடி கூறினார்..
சுதாம்மா.. இன்னும் ரெண்டு வாரத்துக்கு சிவாப்பாக்கு கஞ்சியும் அருகம்புல்
ஜூஸ் மட்டும் கொடுங்க என கூறினாள்..
சிவா பாவமாய் வானுவையும் தன் மனைவியையும் பார்த்தார்.. சுதா
சிரிப்புடன்.. நீ சொல்லிட்டீல செஞ்சுறேன்.. என அவர் கூறியவுடன்
சுற்றியுள்ளவர்களுக்கு சிரிப்பு பொங்கியது…
இவர்களிடத்தில் இருவர் மட்டும் அமைதியாய் இருந்து ஒருவரையொருவர்
எடைப் போட்டுக் கொண்டிருந்தனர்..
ஆம்.. தர்ஷன் வந்ததிலிருந்து எதுவும் பேசவில்லை… அவன்
பார்வையெல்லாம் வானுவிடமும் அருளிடமும் மட்டுமே..
பார்வையாலே அருளை ஸ்கேன் செய்துக் கொண்டிருந்தான்.. அருளுமே
ஹிந்தி நடிகர் போல் நல்ல சிவந்த நிறத்துடன்.. அவன் வயதுக்குரிய
கம்பீரத்துடன் இருந்த தர்ஷனையே பார்வையிட்டுக் கொண்டிருந்தான்…
அருளை விட தர்ஷன் இருவயதே இளையவன்…
தர்ஷன் பார்வை அடிக்கடி வானுவை வட்டமிடுவதை கண்டு அருளின் முகம்
மாறியது.. வானதிக்கோ தர்ஷன் பார்வை புரிந்தாலும்.. அவன் பக்கம்
திரும்பவில்லை…..
சந்திரன்.. சரி சிவா.. ரிஷப்ஷன் ஏற்பாடெல்லாம் எந்த அளவுல இருக்கு.. என
வினவினார்… சென்னை வந்து ரிஷப்ஷன் ஏற்ப்பாடு செய்ய நேரமில்லை
என்பதால்.. சிவாவின் பொறுப்பில் அதனை விட்டிருந்தார்…
எல்லாம் பக்கா.. கேட்டரிங், டெக்கரேஷன், ஹால் எல்லாம் புக் பண்ணியாச்சு..
அண்ட் பிஸ்னஸ் சர்க்கிள்ல உள்ள எல்லாருக்கும் இன்விடேஷன்
கொடுத்தாச்சு.. எனக்கு தெரிஞ்ச டிசைனர்க் கிட்ட சொல்லிட்டேன்.. இன்னும்
கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க.. வானுக்கும் மாப்பிளைக்கும் ட்ரெஸ்
பார்த்திடலாம்.. என கூறியதும் சந்திரன் திருப்தியாக புன்னகைத்தார்..
சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.. என குந்தவை அழைக்க.. அனைவரும்
காலை உணவிற்கு சென்றனர்..
காலை உணவு முடிந்து அனைவரும்.. ஹாலில் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தனர்.. ஆனால் அங்கு இருவர் மட்டும் மிஸ்ஸிங்..
எதிரில் இருந்த தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த வானதியை
வெறித்துக் கொண்டிருந்தான்… தர்ஷன்.
வானு ஏன் இப்படி அமைதியா இருக்க.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…
என கோபமாய் கேட்க..
வானதி தர்ஷனை முறைத்தாளே.. தவிர பதில் சொல்லவில்லை..
தர்ஷன் தன் கோபம் வேலைக்காகாது என புரிந்து.. ஐம் சாரிடா வானுக்குட்டி..
நான் உன்ன நம்பிருக்கனும்.. உனக்கே தெரியும் நீ எனக்கு எவ்வளவு
முக்கியமானவன்னு.. ஆனா திடிர்ன்னு உனக்கு மேரேஜ்ன்னு சொன்னதும்
நான் நானாவே இல்லை..
உன்கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்கணும்னு கூட தோனாதா அளவுக்கு என்
மூளை பிளாங்க் ஆயிடுச்சு.. என அவனின் அப்போதைய மனநிலையை
குறித்து வருத்தமாக கூறியவன்..
ஆனா நீ நினச்சுருந்தா.. இந்த கல்யாணத்தை நிப்பாட்டிருக்கலாம்.. உன் கை
காலக் கட்டிவச்சு கட்டாயத்தாலிக் கட்டலைன்னு நினைக்குறேன்… அதுவும்
அந்த ஆள் எவ்வளவு கருப்பா பாக்க காட்டான் மாதிரி இருக்கான்.. நீயும்
அவனும் நின்னா சரியான பிளாக் அண்ட் ஒயிட் படம் மாதிரி இருக்கும்..
உனக்கு அவர் பொருத்தமே கிடையாது.. வயசும் கண்டிப்பா அதிகம்
இருக்கும்.. என தர்ஷன் பேசிக்கொண்டே சென்றான்…
வானதியை அழைக்க வந்த அருளின் செவியில் தர்ஷனின் வாதங்கள்
அனைத்தும் அட்சர சுத்தமாய் விழுக.. அவன் முகம் கருத்து இறுகியது..
கைநரம்புகள் புடைக்க.. கோபம் கொதிகனலென கொதிக்க அதற்க்கு மேல்
அங்கு நிற்க முடியாமல் புயலென வட்டிற்குள்
ீ நுழைந்தான்..
அவனின் கோபம் அக்னி போல் கொழுந்து விட்டு எரிந்தது.. இதையறியாத
வானதி தர்ஷனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தாள்.. அருள்மொழி
பாண்டியனின் கோபம் வானதி நாச்சியாரை எரிக்குமா.. பொறுத்திருந்து
பார்ப்போம்…
அத்தியாயம் 10

சென்னையில் உள்ள அந்த மிகப்பெரிய பார்ட்டி ஹாலில்.. பெரும் புள்ளிகள்


அனைவரும் கூடியிருந்தனர்.. இன்னும் சற்று நேரத்தில் அருள் வானதியின்
ரிஷப்ஷன்.. ஆரம்பிக்க உள்ளது..
விருந்தினர்கள் அனைவரும் வந்துவிட்டனர்.. ஆனால் புதுமணதம்பதிகள்
தான் இன்னும் வரவில்லை..
குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட்டனர்.. சந்திரன்.. குந்தவை வானதியும்
மாப்பிளையும் கிளம்பிட்டாங்களா இல்லையா.. என டென்க்ஷனோடு
கேட்டார்..
வானுக்கு போன் பண்ணி கேட்டேன்.. அவ கிளம்பிட்டதா சொன்னா.. என
அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே.. அலங்கரிக்கப்பட்ட மெர்சிடேஸ்
பென்ஸ் வந்து நிற்க.. முதலில் இறங்கிய அருள் வேகமாக.. வானதியின்
பக்கம் வந்து அவனே கார் கதவை திறக்க.. அதிலிருந்து வானில் உதித்த
தேவதை போல் வானதி இறங்கினாள்…
அருள் வானதியின் முகத்தையே ஆவலாக பார்க்க.. அவனவள் அவனை
கண்டுக்கொள்ளவே இல்லை.. அதைக்கண்டு அருளின் முகம் ஏமாற்றம்
கொண்டது… ஹ்ம்ம்ம் நாம பண்ணதுக்கு இது தேவைதான்.. என மனதிற்குள்
புலம்பினான்…
வானதி அவன் இடக்கரத்தை தன் வலக்கரத்தால் சுற்றிக்கொண்டு முகத்தில்
புன்னகையுடன் நடக்க.. அதுவரை சிணுங்கியிருந்த அருளின் முகமும்
மனமும் மலர்ந்தது…
கருப்புநிற கோட் சூட்டில் கம்பீரமாக ஆண்மையின் இலக்கணமாக அருளும்..
தங்கநிற ட்ராமாட்டிக் பிரைடல் கவுனில் தங்கநிற தாரகையாய் வானதியும்
வர.. அனைவரின் கண்களும் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை எண்ணி
வியந்தது…
இருவரும் மேடையேறியவுடன்.. விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர்..
தொழில்முறை நண்பர்களை சந்திரன் அறிமுகப்படுத்த.. தன் லேடிஸ் கிளப்
தோழிகளை குந்தவை அறிமுகப்படுத்தினாள்..
அனைவரிடமும் அவர்களுக்கு தகுந்தாற் போல்.. சுத்தமான ஆங்கிலத்தில்
பதில் அளித்தவனை கண்டு அவர்கள் வியந்தனர்..
ஏனெனில் இங்கு பெரும்பாலானோர் வானதியை தங்கள் வட்டு
ீ மருமகளாக்க
விரும்பியவர்கள்.. ஆனால் திடிரென்று அவள் திருமண செய்தி கேட்டவுடன்
அதிர்ந்தவர்கள்..
குந்தவையின் தம்பி தான் மாப்பிள்ளையென்றும்.. அவன் கிராமத்தில்
விவசாயம் செய்பவன் என அறிந்தவுடன் எள்ளலாகவும் கேலியாகவும்
எண்ணினார்கள்.. கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் வம்பு பேசவும்.. அருளை
அவமானப்படுத்தவும் வந்தவர்கள்.. அவனின் சாதுரியமான பேச்சிலும்..
அமரிக்கையான ஆங்கிலத்திலும் வாயடைத்து போயினர்..
விருந்தினர்களிடம் பேச்சுகவனம் இருந்தாலும் வானதியின் விழிகள்
மண்டபத்தை அலசியது.. அருளிற்கு அவள் யாரை தேடுகிறாள் என
புரிந்தாலும் அமைதியாய் இருந்தான்…
அப்பொழுது.. அவள் கல்லூரி தோழிகள் வர.. வானதி மகிழ்வுடன் அவர்களை
அனைத்துக் கொண்டாள்…
வானதி ‘’ இவங்க அஞ்சு பேரும் என் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்.. இவ சுபஸ்ரீ,
பிரியா, சுபர்ணா, சங்கீ தா, பிரியங்கா.. என ஒவ்வொருவரையும் அருளிடம்
அறிமுகப்படுத்தினாள்.. ‘’
சுபஸ்ரீ ‘’ ஹேப்பி.. மேரேஜ் லைஃப் அண்ணா.. ‘’
அருள் ‘’ தங்கச்சி நீ ஒன்ன மறந்துட்ட.. நான் உன் ப்ரெண்ட கல்யாணம்
பண்ணிருக்கேன்ம்மா.. அப்படியிருக்கும் போது நீ.. இப்படி ஹேப்பி மேரேஜ்
லைஃப்ன்னு சொல்லலாமா ‘’ என அவன் பாவமாக கூற.. தோழிகள் கூட்டம்
கலீரென நகைத்தனர்..
பிரியா ‘’ ஆமா ண்ணா.. நாங்க தப்பா சொல்லிட்டோம் என கூறி நகைத்தாள்..
‘’
வானதி.. கோப மூச்சு விட்டு.. ‘’ ஏய் நீங்க என் பிரெண்ட்ஸா.. இல்லை இவர்
பிரெண்ட்ஸா என பொரிந்தவள் அருளை கோவமாய் பார்க்க.. அவன் ‘’
பாருங்க பாருங்க.. இங்கயே என்ன எப்படி முறைக்குறா.. அப்ப தனியா
இருக்கும் போது என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. ‘’ என
சோகமாக கூற.. வானதியின் பொறுமை எருமை மேய்க்க போக.. தன்
கரங்களால் அவன் முதுகை பதம் பார்க்க ஆரம்பித்தாள்…
அருள் சிரிப்புடன் விருது வாங்குவது போல்.. தன் அம்மாளின் அடிகளை
வாங்கிக் கொண்டிருந்தான்.. தோழிகள் தான் அவளை அமைதிப் படுத்தினர்..
கீ ழே உள்ளவர்களுக்கு மேடையில் நடப்பது புதுமணத்தம்பதிகளின்
விளையாட்டு போல தோன்றியது.. போட்டோ கிராஃபர் அந்த அழகிய
சண்டையை தன் கேமராவிற்க்குள் பதிவு செய்துக் கொண்டார்..
ஆனால் கீ ழே முன்வரிசையில் அமர்ந்திருந்த வடுகம்மாளின் கடுத்த முகம்
மேலும் கடுத்தது.. ஏற்கனவே வானதியின் மேல் கோபத்தில் இருந்தவர்..
அவளின் இச்செயலை கண்டு மேலும் பொங்கினார்..
அவர் மட்டுமில்லாமல்.. இன்னொரு கும்பலும் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்
அமர்ந்தது.. அது யாரென்று சொல்ல தேவையில்லை…
கணபதி செட்டியாரின் குடும்பமும் ரிஷப்ஷனிற்கு வந்திருந்தனர்.. அங்கு
தெரிந்த மேல்தட்டு தனத்தையும்.. வரவேற்ப்பின் பிரம்மாண்டத்தையும்
வெறுப்பும் பொறாமையுமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..
அதுமட்டுமில்லாமல்.. அனைவரும் வானதி அருளின் ஜோடிப்பொருத்தத்தை
புகழ்ந்து கூறியதைக் கண்டு அவர்களின் மனம் எரிந்தது.. இவர்களே
இப்படியென்றால் தில்லையை பற்றி கேட்கவா வேண்டும்..
நடப்பவற்றையெல்லாம் பார்த்து அவள் முகம் கோபத்தில் சிவந்து
செங்குரங்காகியது… அதுவும் வானதியின் அழகைக் கண்டு.. பொறாமையில்
தவித்தாள்..
அதுமட்டுமில்லாமல் அருள் வானதியின் அந்நோனியமான செய்கை அவளை
பைத்தியமாக்கியது.. நான் அன்னைக்கு அவ்வளவு சொல்லியும்.. என் மாமன்
கூட நீ இப்படி நெருக்கமா இருக்கறன்னா உனக்கு எவ்வளவு திண்ணக்கம்
இருக்கனும்.. இருடி கூடிய சீக்கிரம் உனக்கு இந்த தில்லை யாருன்னு
காமிக்குறேன்.. என மனதிற்குள் உருப்போட்டவள்.. அடக்கப்பட்ட
பழியுணர்வுடன் அங்கு நடப்பவைகளை பார்வையிட ஆரம்பித்தாள்…
விருந்தினர்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.. அப்பொழுது
மணமக்களை சற்று ஓய்வெடுக்க கூறினார்.. அருளும் வானதியும்
அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்…
அப்பொழுது அணைத்து வெளிச்சமும் மறைந்து.. மெல்லிய இசை ஒலிக்க
ஆரம்பித்தது.. நடுவில் மற்றும் வெளிச்சக்கீ ற்று தெரிய… ஒருவன் முதுகை
காண்பித்து நின்றுக்கொண்டிருந்தான்..

மல்லிகையில் ஒரு மாலை


தங்கச்சரிகையில் ஒரு சேலை
ஆ….. மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி
வைக்கத்தான்… ஓ……
கல்யாணம் கண்டுபிடித்தான்
தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா
தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

என தர்ஷன் நடுவில் நின்று ஆட.. சுற்றிலும் அவள் தோழிகளும்


நண்பர்களும் ஆடினர்..
தர்ஷனை கண்டதும் வானதியின் முகம் மலர்ந்தது.. விழிகள் மின்ன
தர்ஷனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அருளும் வானதியின்
மகிழ்ச்சியைக் கண்டு நிம்மதிக் கொண்டான்..
சுபஸ்ரீ… நடுவில் வர.. அடுத்த பாடல் இசைத்தது..

நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

என சுபஸ்ரீ… வானதியை பார்த்தவாறு… ஆடினாள்… தர்ஷன்.. மேடையேறி


வானதியையும் அருளையும் கீ ழே அழைத்து வந்தவன்..
வானதியின் தோள் பற்றி…

என் தோள்களே தோட்டம் என்று


என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்

என பாட.. வானதியின் விழிகள் கலங்கியது….


இப்பொழுது.. மறுபடியும் அணைத்து வெளிச்சமும்.. மறைந்து அடுத்த
பாடலின் இசை ஒலிக்க.. சுற்றிலும் நிசப்தம்..
வானதியின் மேல் வெளிச்சம் படிய.. அருள் அவளை சுற்றியவாறு பாடி
ஆடினான்..

ஏ பெண்ணே
என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே
தள்ளாடும் ஜீவனே

என அருள்.. ஆடியவுடன்.. வானதி அதிர்ச்சியும் வியப்புமாக அவனை


பார்த்தாள்…
அருள் வானதியை தன்னை நோக்கி.. இழுத்து அவள் இடுப்பை பற்றிக்
கொண்டு.. ஆடினான்..

ஹா
என் உயிரினை வதைத்திடும்
அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும்
அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும்
உதிரம் நீயடி

பாடலுக்கேற்றவாறு அருள் தன் மனதின் உணர்வுகளையும் முகத்தில்


காண்பிக்க.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.. அவள் விழிகள்
அருளை தவிர மற்றவையை பார்க்க தவிர்த்தது…

உனக்குள் எந்தன்
காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல
வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தை சொல்லுமா

என்று வானதியின் கண்களை பார்த்தவாறு கேட்க.. அவளிடத்தில் பதில்


இல்லை..

குருவி போலவே என் உள்ளம்


தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள்
சுத்தி திரியுதே பின்னாலே
தீயைப் போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே

என அவன் தன் உணர்வுகளை அவளுள் கடத்தினான்.. அவளை ஒரு கரம்


கொண்டு சுழற்றி.. தன் நெஞ்சில் பின் பக்கம் சாய்த்தவாறு அவள் வயிற்றில்
கரம் கொண்டு.. அவள் தலையோடு தன் தலை சாய்த்து நின்றான்… இருவரின்
விழிகளும் தானாக மூடியது..
இளைஞர்களின் விசில் சத்தம் காதை பிளக்க.. அதில் இருவரும் தன்னிலை
அறிந்து பிரிந்தனர்.. அருள் வானதியை விழுங்கிவிடுமாறு பார்க்க.. அவன்
பார்வையை தவிர்த்தவள்.. தர்ஷன் காதில் ஏதோ கூற.. அவன் கேலி
சிரிப்புடன் நகர்ந்தான்..
அருள் கேள்வியாக தர்ஷனை பார்க்க.. அருளை பார்த்து கண் சிமிட்டிய
தர்ஷன்… ஹலோ பிரெண்ட்ஸ்.. இவ்வளவு நேரம் நம்ப ஹீரோ.. பாட்டுலையே
ப்ரொபோஸ் பண்ணாரு.. இப்போ நம்ம ஹீரோயின் டைம்..என சிரித்தவன்..
லைட்ஸ் ஆஃப்.. அண்ட் ஸ்டார்ட் மியூசிக் எனக்கூற..
இப்பொழுது வெளிச்சம் அருளிடம்..

ஒரே ஓர் ஊரில் ஒரே ஒரு ராஜா


ஒரே ஓர் ஊரில் ஒரே ஒரு ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா?
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னை தாங்குவானா?
வா என்று கட்டளையிட்டானா?
முத்தத்தில் கைவிலங்கிட்டானா?
கைதாகினாள் தேவசேனா

என அவள் அவன் தோளை பற்றி ஆடினாள்.. அவள் உடை மிகவும்


இறுக்கமான… நாடகபாணியான இளவரசி உடை.. அதில் அவளால் சுழன்று
ஆட முடியாது. ஆனால் அந்த உடையில் பாட்டுக்கேற்றவாறு முக
பாவத்தோடு அருளின் தோள் பற்றி மெதுவாக ஆடினாலும்.. ஓர் ராஜகுமாரி
தோரணையில் பார்ப்போர் வியக்கும் அளவு இருந்தது.. அவளின் நடனமும்
பாவமும்..

தன் போர் களமாய்


என் மார்பில் ஏறி போரிடும் மெய் வரனா?

எந்தன் கொடியை
மேல் ஏறி நாட்டவா மோகனா?
வாலின் முனையில்
எங்குங்கும் முத்தம் வைத்திடும் அரக்கனா?
வாயின் முனையில் மாயாங்கள் காட்டவா காமீ னா?
ஏகாந்தம் காலம் மாற்றினானா
தீ போல் என் மீ து பற்றினானா?
தீக்கோலமாய் தேவசேனா…
என் நெஞ்சில் அம்பு எய்கிறானா?
கண் இன்றி நானும் செல்கிறேனா?
பேச்சின்றியே தேவசேனா
நானா நானா நானா நானா நனநன
நனநன நனநனநனஆஆ

என்றவளின் உடல் மட்டுமில்லாது.. அருளின் உடலும் மோகத்தில் தீயாய்


பற்றியெரிந்தது.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க.. அவளும் நான்
சளைத்தவளல்ல என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
மாப்பிள.. பாத்தது போதும்.. என்ற தர்ஷனின் குரலில் இயல்பு திரும்பியவள்..
என்னது மாப்பிளையா.. எனக்கு தெரியாம இது எப்போ.. நடந்தது..
அதெல்லாம் மச்சானுக்கும் மாப்பிளைக்கும் உள்ள விஷயம்.. அதுல லேடிஸ்
வரக்கூடாது என கெத்தாக கூறி செல்ல..
வானதி அருளை ஆச்சரியமும் கேள்வியும்மாக பார்த்தாள்..
அவனோ அதைக் கண்டுக்காது.. நீ பாடி ஆடுனதுக்கு என்ன அர்த்தம்.. என
கேட்டவன் அவள் முகத்தை ஆவலாக ஏறிட்டான்…
ஹ்ம்ம்ம் தெரிஞ்சுக்கிட்டே கேட்குறவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல
முடியாது.. என மிதப்பாக கூறினாள்..
அருள் இந்த ஆப்பிள் கன்னங்களை இப்படியே கடித்து சாப்பிடலாமா..
இல்லை தேன் தடவி தித்திப்பாக சாப்பிடலாமா இல்லை.. உப்பு மிளகு
சேர்த்து காரமாய் சாப்பிடலாமா என யோசிக்க ஆரம்பித்தான்..
வானதி தன் சிறு செயலால் மனிதனாக இருந்தவனை ராட்சஸனாக
மாற்றிவிட்டாள்..
தன் சிந்தனையின் போக்கை எண்ணி பயந்தவன்.. தலையை உலுக்கினான்..
வானதி அருளின் செய்கையை வித்தியாசமாக பார்த்து.. பின் அசட்டையாக
தோளை குலுக்கினாள்.. அதில் மயங்கிய மனதை அதட்டியவன்.. வேறு
பேச்சிற்கு தாவினான்..
அருள் ‘’ கோபம் போச்சா.. ‘’
‘’ ம்ம்ம்ம்ம் பார்த்தா எப்படி தெரியுது.. ‘’ என்று கேட்டவளுக்கு இருநாட்கள்
முன்பு நடந்த சம்பவங்கள்.. நினைவில் வந்தது.. அருளிற்கும் அதே
நினைவுதான்…
தர்ஷன் கூறியவற்றை கேட்க கேட்க.. அருளின் உடல் கோபத்தில் இறுகி..
கை நரம்புகள் புடைக்க ஆரம்பித்தன..
விருட்டென்று அங்கிருந்து சென்றவன்.. யாரையும் பார்க்காது தங்கள்
அறைக்கு சென்றான்.. ஆத்திரமிகுதியில் கைமுஷ்ட்டியை இறுக்கி காற்றில்
குத்துவிட்டான்.. இருந்தும் அவன் கோபம் மட்டுப்பட மறுத்தது..
தர்ஷன் சொல்லியது கூட அவன் மனதை வருந்தவில்லை.. ஆனால் வானதி
அவன் பேசியதற்கு பதில் பேசாமல் நின்றதுதான்.. அவன் கோபத்தை
அதிகரிக்க செய்தது.. ஆனால் அவனிடத்தில் கோபத்தை விட வானதி மீ தான
வருத்தம் தான் அதிகம் இருக்கிறது..
தம்பதியர்களுக்கிடையில் வரக்கூடாதது சந்தேகமும்
தாழ்வுமனப்பான்மையும்.. தன் துணை தன்னை விட அழகாக அறிவாக
இருக்கிறாள் என சந்தோஷப்படும் துணைகளும் உண்டு..
ஆனால் அப்படியில்லாமல்.. சந்தேகமும் தாழ்வுமனப்பான்மையும் கணவன்
மனைவி யாருக்கு வந்தாலும் கஷ்டமும் நஷ்டமும் அவர்களுக்கு தான்..
ஆனால் ஆண்களுக்கு மட்டும் வந்தால் ஒன்று மனைவியின் நிலை
பரிதாபத்திற்குரியது.. இரண்டு அவர்களின் மனநிலை பாதிக்கபடும்..
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் நிலை..
அருள் தர்ஷன் கூறியதையே நினைத்து புழுங்கிக்கொண்டிருக்க.. அங்கோ..
தர்ஷன் வானதியின் அமைதியைக் கண்டுக்காது அருளை பற்றி குறை கூறிக்
கொண்டிருந்தான்.. அருளைப் பற்றிய குறைகள் குறையாமல்
நீண்டுக்கொண்டிருக்க பொறுமையிழந்த வானதி..
டேய் போதும் நிறுத்துடா.. என் மச்சானை பத்தி இதுக்கு மேல ஒருவார்த்தை
தப்பா பேசுன கொன்னுடுவேன்.. உன்னைய..
முதல்ல அவர அவன் இவன் சொல்லாத.. என் புருஷன என் முன்னாடியே
மரியாதை இல்லாம பேசுற.. இதுவே எங்க ஊர்ல நீ இப்படி பேசிருந்தா உன்
தோலை உரிச்சுருப்பாங்க..
நீ சீக்கு வந்த சிக்கனாட்டம் இருக்குறதுனால என் மச்சானோட கம்பீரமும்..
கட்டுமஸ்த்தான உடம்பும்.. உனக்கு முரட்டுத்தனமான காட்டான் மாதிரி
தெரியுது.. அப்புறம் அவர் ஒன்னும் கருப்பு கிடையாது.. நம்ம தமிநாட்டோட
பாரம்பரிய மாநிறம் தான்.. என்ன வெயில்ல அழைஞ்சு லேசா நிறம்
மங்கிருச்சு..
நம்மளோட வெள்ளைக்கலர் என் மச்சான் பாதத்துல இருக்கு.. அவரோட
கருப்பு நிறம் உன் கண்ணுக்குள்ளையும் தலைமேலயும் இருக்கு.. அது மட்டும்
இல்லைன்னா நீயும் நானும் பார்க்கவே கன்றாவியா இருப்போம்..
ஹான் அப்புறம்.. என் மச்சான் என்னை விட வெறும் எட்டு வயசுதான்
பெரியவர்.. உனக்கும் அவர்க்கும் வெறும் ரெண்டு வயசுதான் வித்தியாசம்..
அதுனால அவர என்னமோ கிழவன் ரேஞ்சுக்கு சொல்லாத என
மூச்சுவிடாமல் பொரிந்தாள்..
தர்ஷன் வானதியையே இமைக்காமல் பார்த்தான்… அவன் இமைக்கா பார்வை
புரிந்தாலும் வானதியால் முறைக்க மட்டுமே முடிந்தது.. பேசக் கூட
முடியாமல் மூச்சு வாங்கியது…
உன் விருப்பபடிதான் இந்த கல்யாணம் நடந்துச்சா.. வானு. அப்போ.. என
அடுத்து கேட்க வந்தவன்.. அக்கேள்வியை முடிக்காமல் இழுக்க..
அவனை தீயாய் முறைத்த வானதி.. பதில் தெரிஞ்சுக்கிட்டே கேள்வி
கேட்குறவங்களுக்கு நான் பதில் சொல்றதில்ல.. என்றவள் வேகமாய்
அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்..
செல்லும் வானதியையே மிகுந்த யோசனையுடன் பார்த்துக்
கொண்டிருந்தவனின் முகம் தெளிவாகியது..
வேகமாக அறைக்குள் நுழைந்த வானதி.. அங்கு கோபமாய் அமர்ந்திருந்த
அருளை கவனியாமல் அங்கிருந்த சோபாவில் பொத்தென அமர்ந்தாள்… அதில்
அவள் கை அருள் மீ து பட.. சட்டென்று அருள் எழுந்தான்..
அப்பொழுது தான் அருளைக் கண்ட வானதி.. அவனின் செய்கை புரியாது
பார்த்தாள்…
அருளோ.. தனக்கு தானே ஆப்பை சீவிக்கொள்வது போல்.. என் மேல
எல்லாம் கை வைக்காதிங்க அப்புறம் என் கருப்பு உங்களையும் ஒட்டிக்கும்..
என குத்தலாக கூறினான்.
வானதி இன்னும் அருளின் செயல் காரணம் புரியாமல்.. என்னாச்சு ஏன்
ஒருமாதிரி பேசுறீங்க.. முகம் வேற டல்லா இருக்கு..
ஹ்ம்ம்ம் எங்க முகம் அப்படித்தாங்க இருக்கும்.. காட்டான் மாதிரி. நிறமும்
நீங்க கை வச்சா ஒட்டிக்குற அட்ட கருப்பு.. தெரிஞ்சு கண்டிப்பா என் மேல
உங்க கை படாது.. அதான் தெரியாம பட்டத தட்டிவிட்டேன்.. கைய நல்லா
பார்த்துக்கோங்க எங்கயாவது கருப்பு ஒட்டிருக்க போகுது.. வேணும்னா சோப்பு
போட்டுக் கழுவிக்கோங்க.. என மேலும் பேச..
அப்பொழுது தான் வானதிக்கு… அவனின் செயலுக்கான காரணம் மெல்ல
புரிய.. அவள் முகம் கடுமையாக மாறியது.. ‘’ ஒட்டுக் கேட்டிங்களா.. என
ஒருமாதிரியாக வினவியவள்.. ஒட்டுக்கேட்குறவங்க நல்லத
கேட்கமாட்டங்கனு ஒரு பழமொழி இருக்கு.. அது உங்க விஷயத்துல
சரியாத்தான் இருக்கு என நக்கலும் கேலியுமாக கூறினாள்.. ‘’
ஏய் யாரைப் பார்த்து என்ன சொல்ற.. உன்னை கூப்பிடறதுக்காக வந்தேன்..
அப்போ அந்த வெள்ளக்காக்க பேசுனது எதேச்சையா விழுந்துச்சு.. என
கோபத்தில் கத்தினான்
என் தர்ஷுவ வெள்ளக்காக்கன்னு சொல்ற வேலையெல்லாம் வேணாம் என
மூக்கு வெடைக்க கூற..
அவ்வளவு தான் அருள் பொங்கிவிட்டான்.. என்னடி நினச்சுற்றுக்க உன்
மனசுல.. அந்த வெள்ளைப் பன்னி என்னை காட்டான் முரடன் கருப்பன்னு
கண்டபடி பேசுறான்.. அப்பல்லாம் வாயில கொழுக்கட்டைய வச்ச மாதிரி
அமைதியா இருந்துட்டு.. இப்ப அவன ஒரு வார்த்தை சொன்னதுக்கு இப்படி
எண்ணெயில் போட்ட கருவேப்பிலை (கடுகு மட்டும்தான் சொல்லனுமா
என்ன) மாதிரி பொறியுர.. என்னை விட உனக்கு அவன்தான் முக்கியமா என
அவனுள் எழுந்த பொறாமையின் விளைவாக வார்த்தைகள் தாறுமாறாய்
விழுந்தது..
நீங்க ரொம்ப பேசுறீங்க.. என அடக்கப்பட்ட அழுகையா கோபமா என
தெரியாத குரலில் கூற..
அவனோ.. ஆமா நான் பேசுனா உனக்கு ரொம்ப பேசுற மாதிரிதான் இருக்கும்..
இதுவே அவன் எவ்வளவு பேசுனாலும் உனக்கு தேனாட்டம் இருக்கும் என
மேலும் வார்த்தையை விட்டான்..
தர்ஷன் அருளை பற்றி குறை கூறியதில் அவள் டென்க்ஷனோடு மூச்சு
விடாமல் அவனுக்காக பேசி தலைவலியுடன் வந்திருக்க.. அவனோ
அரைகுறையாய் கேட்டு அவனும் வருந்தி… அவளையும்
வருத்திக்கொண்டிருந்தான்…
வானதி தன் பக்கத்தில் உள்ள.. பூஞ்சாடியை எடுத்து.. யோசிக்காது அவன் மீ து
எறிந்தாள்..
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அருள் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க… அவளோ
காளியாக நின்று தன் கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் அவன் மீ து
தூக்கியெறிந்தாள்.. வாயோ.. போடா கருவாயா.. ஒட்டக சிவிங்கி, சிம்பென்ஸி..
நான் அங்க உனக்காக என் தர்ஷுக் கிட்ட சண்டை போட்டு வந்துருக்கேன்
ஆனா நீ என்னவெல்லாம் என்னை பேசுற.. சாவுடா என கூறிக்கொண்டே
அங்கு அழகாக அடுக்கியிருந்த தன் சென்ட் பாட்டில்களை தூக்கியெறிந்தாள்
ஏய் ராட்சசி.. பாத்துடி படாத இடத்துல பட்டுர போது.. அப்புறம் நான்
வாழ்க்கைல பிரியாணிய கனவுல தாண்டி சாப்பிடணும்.. என
அலறிக்கொண்டே தன்னை நோக்கி வரும் பொருட்களிலிருந்து தப்பித்துக்
கொண்டிருந்தான்…
கருவாப்பயலே என்ன பேச்சு பேசுற… உன் முகரக்கட்டைக்கு.. பிரியாணி ஒரு
கேடா..
அடியே சண்டிராணி என் மூஞ்சிக்கென்னடி.. ஊர்ல எத்தனை பொண்ணுங்க..
என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க.. என்னை கல்யாணம்
பண்ணிக்கோங்கன்னு.. என் பின்னாடி சுத்துறாளுக தெரியுமா என அவன்
மிதப்பாக கூற…
கடுப்பான வானதி.. கருவாயா இன்னைக்கு நீ செத்தடா.. என உள்ளுக்குள்
கருவியவள் அங்கு அலங்காரத்திற்கு வைத்திருந்த சிலையை எடுத்து
எறிந்தாள்..
ஆத்தாடி என உள்ளுக்குள் அலறியவன்.. வேகமாக அறையை விட்டு
ஓடினான்.. அவன் கதவை மூடுவதற்கும்.. சிலை கதவில் பட்டு
சிதறுவதற்கும் சரியாயிருந்தது…
அவன் சென்றும் கூட கோபம் குறையாது அமர்ந்தவள்.. அவனை வித
விதமாக அர்ச்சித்துக் கொண்டே மெத்தையில் வழ்ந்தாள்…

கீ ழே ஓடிய அருளோ எதிரில் வந்த தர்ஷன் மீ து மோதி நின்றான்.. அவனை
பார்த்ததும் அருளுக்கு கோபம் பொங்கியது.. எல்லாத்துக்கும் காரணம் இவன்
தான் என அருள் தர்ஷனை முறைக்க.. அவனோ அருளை பார்த்து சிரித்து ‘’
வாங்க மாப்பிளை என கூற.. அருளோ அதிர்ச்சியும் கடுப்புமாக தர்ஷனை
ஏறிட்டான்..
தர்ஷனின் வார்த்தைகளில் காயம் கொண்டு.. வானதியின் மேல் கோபம்
கொண்டு வார்த்தைகளால் கடுப்படித்தவன்.. இப்பொழுது தர்ஷன்
மனமாற்றத்திற்க்கு தன்னவள் தான் காரணம் என அறிந்து என்ன செய்ய
போறானோ…

அத்தியாயம் 11

அக்கா.. மாமா என அருள் வானதியின் தோள்களை உலுக்கி அவர்களை


நிகழ்காலத்திற்கு அழைத்து வந்த ஷ்ரவன்.. அக்கா மோஸ்ட்லி கெஸ்ட்
எல்லாரும் வந்துட்டு போய்ட்டாங்களாம்.. அதுனால அப்பா உங்க ரெண்டு
பேரையும் சாப்பிட போக சொன்னாங்க.. என கூறி தன் நண்பர்கள்
பட்டாளத்திடம் ஓடினான்…
வானதிக்கும் பசி வயிற்றை கிள்ளியதால்.. அருளின் முகத்தை பார்க்க..
அருள் வானதியின் கரத்தை பற்றிக் கொண்டு அவள் நடந்துவர உதவினான்..
ஹாலின் மறுமுனையில்.. பஃபே முறையில் உணவு பரிமாறப்பட்டது..
சைவம் அசைவம் என இருவகை உணவுகளுமே அங்கிருந்தது.. அது மட்டும்
இல்லாமல் வித விதமான டெஸட்ர்ட், ஐஸ்கிரீம்ஸ், ஸ்வட்ஸ்,
ீ சாலட், சூப்
ஐட்டம்ஸ் என நிறைய வெரைட்டி குவிந்துக் கிடந்தது.. உணவு பிரியர்களுக்கு
எதை விடுக்க எதை எடுக்க என குழப்பமே மிஞ்சும் அந்த அளவுக்கு அங்கு
நிறைந்திருந்தது…
அருள்.. அம்மாளு உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் எடுத்துட்டு
வரேன் எனக்கூற.. வானதி அங்குள்ள உணவுகளை பார்வையிட
ஆரம்பித்தாள்…
அருகில் நின்றிருந்த தர்ஷன் அருளை பார்த்து சிரித்தான்.. தர்ஷனின்
சிரிப்பிற்க்கான காரணம் புரியாத அருள் ஏன்டா.. சிரிக்கிற என கேட்க..
ஹ்ம்ம்ம் அதுக்கான காரணம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும் என
கூறினான்..
உணவுகளை பார்வையிட்டு முடித்த வானதி அருளிடம்.. எனக்கு மஷ்ரூம்
சூப்பும் நான்வெஜ்ல உள்ள எல்லா வெரைட்டிலையும் கொஞ்சம் கொஞ்சம்
எடுத்துட்டு வாங்க.. ஸ்வட்ஸ்ச
ீ அப்புறம் பார்த்துக்கலாம் என கூற..
அப்பொழுது தான் அவனுக்கு.. தர்ஷனின் சிரிப்பிற்கான காரணம் புரிந்தது…
அருளிற்கும் சிரிப்பு வர.. முயன்று அதை அடக்கியவன் அவள் கேட்டவாறு
எடுத்துக் கொடுத்தான்..
தட்டை வாங்கியவள்.. நீங்களும் எடுத்துட்டு வாங்க சாப்பிடலாம்.. என ஒரு
பேச்சுக்கு கூப்பிட்டவள்.. அங்கிருந்த அலங்கார டைனிங் டேபிளில் அமர்ந்து
சாப்பிட ஆரம்பித்தாள்.. அருள் என்ற ஜீவன் அங்கு நின்று தன்னை
வெறித்துக் கொண்டிருந்ததையெல்லாம் அம்மணி கண்டுகொள்ளவில்லை..
கருமமே கண்ணாக சிக்கன் லாலிபாப்பை ஒரு பிடி பிடித்துக்
கொண்டிருந்தாள்…
தர்ஷன்.. மாப்பிள.. இப்போ இடியே விழுந்தாலும் அவ கவனம் சாப்பாட்டை
விட்டு நகராது.. வாங்க நாமளும் சாப்பிடலாம்.. அடுத்து உங்க பொண்டாட்டி
இன்னும் ரெண்டு மூனு ரவுண்டு எடுக்க அனுப்புவா.. சாப்பிட்டு தெம்பா
சுத்துங்க.. என கிண்டலாக கூறினான்…
அவர்களும் தங்களுக்கு உணவை எடுத்துக் கொண்டு.. வானதியிடம் வர..
அவள் தோழிகளும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர்.. கலகலப்பிற்கு
பஞ்சமில்லாமல் சென்றது…
சுபஸ்ரீ ‘’ ஹேய் வானு உன் ட்ரெஸ் ரொம்ப நல்லாயிருக்குடி.. அதுவும்
ட்ராமாட்டிக் வெஸ்டர்ன் கவுன்க்கு.. கைநிறைய பேங்கல்ஸும்.. சிங்கிள்
லார்ஜ் டைமண்ட் நெக்லஸ்சோட மங்கள் சூத்ராவும் போட்ருக்குறது.. ரொம்ப
வித்தியாசமா பார்க்க அழகா இருக்கு.. ‘’ என அவள் உடையையும்
அலங்காரத்தையும் சிலாகித்தாள்…
சுபஸ்ரீ கூறியதைக் கேட்ட.. வானதி அருளை மிதப்பாகவும் கெத்தாகவும்
பார்த்தாள்.. இந்த உடையை தான் தேர்ந்தெடுத்தற்கான நிகழ்வுகள் அவள்
கண் முன் நிழலாடின… அருளிற்கும் அதே நினைவுதான்…
தர்ஷனின்.. மாப்பிளை உச்சரிப்பில் கடுப்பானவன் அங்கிருந்து நகரப்போக…
அடுத்து அவன் கூறியது அருளின் கால்களை நகரவிடாமல் செய்தது..
வானதிக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லாம உங்க வற்புறுத்தலுக்காக
கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நினைச்சு உங்கள தப்பா நினச்சுட்டேன்..
மாப்பிள என்றவன்.. வானதி அருளை குறித்து கூறிய அனைத்தையும்
கூறினான்… அப்பொழுது அவனுக்கு போன் வர.. சரி மாப்பிள உங்கள அப்புறம்
பார்க்குறேன்.. இப்போ அவசரமா வெளிய போகணும்.. என்றவன் அதிர்ச்சியில்
உறைந்து நின்ற அருளை கவனியாது வேகமாக அங்கிருந்து சென்றான்…
தர்ஷன் கூற கூற அருளிர்க்கு ஆகாயத்தில் பறக்கும் பீல்.. பட் அடுத்த நொடி
வானதியிடம் தான் கொட்டிய வார்த்தைகள் நினைவு வர.. இப்பொழுது
தொபுக்கட்டிரென்று கீ ழே விழும் பீல்.. வானதியின் கோபத்தை நினைத்து
அவன் முகம் பயத்தையும் பதற்றத்தையும் தத்தெடுத்தது…
பூனை போல் மெதுவாக தங்கள் அறைக்குள் நுழைந்தான்… அங்கு அவன்
மனைவி மனதின் சோர்வு காரணமாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்..
அவளின் இந்த சோர்வான முகத்தைக் கண்டு அவன் முகம் வருத்தத்தில்
கசங்கியது..
மெதுவாக அவள் ரோஸ் நிற பாதத்தில் முத்தமிட்டவன்.. சாரிடி அம்மாளு
மச்சான் உன்னைய புரிஞ்சுக்காம ரொம்ப பேசிட்டேன் என மனதோடு தன்
மனைவியிடம் உரையாடினான்..
அப்பொழுது தான் ரூம் இருக்கும் நிலை அறிந்து சத்தமில்லாது அவற்றை
சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.. உடைந்த பொருள்களை குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு.. மற்ற பொருள்களை அதன்னதன் இடத்தில் அடுக்க
ஆரம்பித்தான்…
இண்டர்கார்ம் ஒலிக்க.. வானதி உறக்கம் கலைந்து விடுமோ என பயந்து
வேகமாக போனை எடுத்தான்..
அருள் ‘’ ஹலோ.. ‘’
சந்திரன் ‘’ மாப்பிள உங்களுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வந்துருக்காங்க.. சீக்கிரம்
வாய்யா.. ‘’ என கூறியவர் அவன் பதில் பேசும் முன் போனை வைத்தார்..
இப்பொழுது மிகப்பெரிய டாஸ்க்.. அவன் அம்மாளுவை எழுப்புவது.. அருள்
ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் அருகில் சென்று..
அந்த வெளுப்பான கரங்களை உலுக்கினான்..
போன் ஒலியில் சிறிது கலைந்தவள்.. அவன் உலுக்கலில் முற்றிலும்
உறக்கம் கலைந்து.. முகத்தைச் சுருக்கி.. விழிகளை மலர்த்தினாள்…
அருள் பவ்வியமாக நின்றுக்கொண்டு.. அவள் விழித்ததும்.. அம்மாளு
முழிச்சுட்டியா என குழைவாக கேட்க… அவனை முறைத்தாள்.. அதைக்
கண்டுகொள்ளாமல் முகத்தை இளித்தபடி.. கீ ழ ட்ரெஸ்
கொண்டுவந்துருக்காங்களாம்.. மாமா உன்னை கூட்டியார சொன்னாரு
போவோமா.. என கேட்க..
அவனுக்கு பதில் சொன்னாமல் பாத்ரூம் நோக்கி சென்றவள் தன்னை
சுத்தப்படுத்திக் கொண்டு.. அவனை கண்டுகொள்ளாமல் அறையை விட்டு
வெளியேறினாள்… அருள் வருத்தத்துடன் அவளை பின்தொடர்ந்தான்…
குடும்பத்தினர் அனைவருமே ஹாலில் குழுமியிருந்தனர்… அவர்களுடன் அதி
நவநாகரிக மங்கையும் இன்னும் சிலரும் வந்திருந்தனர்..
குந்தவை ‘’ குட்டிமா இவங்க ஆஷா.. உனக்கு என்ன மாதிரி அவுட்பிட்
வேணும்ன்னு இவங்ககிட்ட சொல்லு.. ‘’
‘’ ஹ்ம்ம்ம்.. ‘’
‘’ ஹாய் மேம்.. உங்களுக்கு என்னமாதிரி ட்ரெஸ் வேணும்.. லெஹன்கா, ஒர்க்
சேரி, நெட் சேரி, வெஸ்டர்ன் கவுன் இன்னும் சில மாடல்ஸ் கொண்டு
வந்துருக்கேன்.. மேம்.. நீங்க பாருங்க.. ‘’
வடுகம்மாள் ‘’ என்னத்தா என்னென்னமோ சொல்ற.. அதெல்லாம் வேணாம்..
நல்ல பட்டுப்புடவையா காமி.. ‘’
‘’ அம்மாளு புடவை எடுத்துக்கோயேன்.. அது உனக்கு நல்லாயிருக்கும்.. ‘’ என
அருளும் முகம் மின்ன சொல்ல..
அவளோ ‘’ மாம்.. நான் அந்த கோல்டன் கலர் ட்ராமாட்டிக் வெஸ்டர்ன் கவுன்
எடுத்துக்குறேன்.. ‘’ அதைக் கேட்டு அருளின் முகம் தொங்கி போனது
என்றால்… வடுகம்மாளின் முகம் கோபத்தை பூசிக் கொண்டது…
அதெல்லாம் வேணாம்.. இது என்ன உடுப்பு அங்கங்க கிழிஞ்சுருக்கு..
ஒருபக்கட்டு ஒன்னுமே காணா.. பார்க்கவே சகிக்கல.. இந்தாம்மா எங்க
குடும்பத்துல இதெல்லாம் யாரும் போட்டது கிடையாது.. ஒழுங்கா நல்ல
அகலஜரிகை பட்டு வச்சு நல்ல அடிக்குற கலர்ல புடவை எடுத்து போடு..
புடவை முழுக்க கொடி ஜரிகை இருக்கனும். என அவர் கூறிக்கொண்டே
போக ஆஷா விழித்தாள்..
வானதி பாவமாய் முகத்தை வைத்து குந்தவையை பார்க்க.. அன்னைக்கு
பொறுக்கவில்லை.. அவள் தீயாய் வடுகம்மாளை முறைத்தாள்..
அருள்.. வடுகம்மாளை சமாதானம் பண்ண வாயை திறக்க.. அழகு
முந்திக்கொண்டார்…
ஆத்தா பேத்திக்கு எந்த உடுப்பு பிடிக்குதோ அதேயே எடுத்துக்கட்டும்… நீங்க
செத்த சும்மாயிருங்க.. என அவரை அடக்கியவர்.. வானதியிடம் உனக்கு
என்ன பிடிச்சுருக்கோ அதையே எடுத்துக்கத்தா.. என கூறினார்..
கடைசியில் வானதி ஆசைப்படி கோல்டன் கலர் வெஸ்டர்ன் கவுனும்..
அருளிற்கு கருப்பு நிற கோட்சூட்டும் எடுக்கப்பட்டது…
அருள் வானதியிடம் பேச முனைய அவள் முகங்கொடுக்கவில்லை.. எல்லார்
முன்னாடியும் பேச முயற்சி செய்ய.. சாதுரியமாக அதையும் தவிர்த்தாள்..
அருளின் முகம் மிகவும் சோர்ந்தது… இவர்களின் மௌன போராட்டங்களை
இருஜோடி கண்கள் கவனித்துக் கொண்டு இருந்தன அதில் ஒரு ஜோடி
கண்களுக்கு உரியவர் சந்திரன்…
சந்திரன் அருளிடம் ‘’ என்னாச்சு மாப்பிள.. வானு ஏன் உன் கூட
பேசமாட்டேங்குறா.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா… ‘’
அத ஏன் மாமா.. கேட்குறீங்க என்றவன்.. மேலே பார்த்தான்..
டேய் என்னன்னு சொல்லாம மேல பார்க்குற.. ஹ்ம்ம்ம் பிளாஷ் பேக்
சொன்னாலே மேல பார்க்கணும் அதான் முறை.. என்றவன் தன் சோக
கதையை கூற ஆரம்பித்தான்..
தர்ஷன் அவனை பற்றி குறை கூறியது.. அதை தற்செயலாக அவன் கேட்க
நேர்ந்தது.. அவனின் கோபம்.. அதை வானதியிடம் காண்பித்து வார்த்தைகளை
கொட்டியது.. பிறகு தர்ஷனின் மனமாற்றம்.. அருளை குறித்து வானதி
நல்லவிதமாக கூறியது.. இப்பொழுது வானதியின் பாராமுகம் என
அனைத்தையும் கூறியவன்.. அறையில் அவள் தன்னை அடித்து
துரத்தியதையும் உயிருக்கு பயந்து ஓடிவந்ததையும் மறைத்து விட்டான்..
அருள் கூறிய அனைத்தையும் முழுவதுமாக சீரியஸ் முகபாவத்துடன்
கேட்டுக் கொண்டிருந்த சந்திரன்… இறுதியில் ஹா ஹா ஹா.. என சிரிக்க
ஆரம்பித்தார்…
அதைக் கண்டு காண்டான அருள் யோவ் மாமா நிறுத்துய்யா.. நான் என்
கஷ்டத்தை சொன்னா நீ கெக்க பெக்கன்னு சிரிக்கிற என பொறிந்தான்…
சிரித்து முடித்த சந்திரன்.. மாப்பிள என் பொண்ணு எந்த விஷயத்துல என்ன
மாதிரி இருக்காளோ இல்லையோ.. ஆனா கோபமான உங்கக்கா மாதிரிதான்
இருப்பா.. கைல கிடைச்சதெல்லாம் தூக்கி எரிஞ்சுருப்பாளே.. நீயும் உயிரை
காப்பாத்திக்க ஓடி வந்திருப்பியே என அவர் கூறியவுடன் ஆடு திருடுன
கள்ளனாய் முழித்த அருள்.. எப்புடி மாமா என பாவமாய் கேட்டான்…
சும்மாவா இருபத்தஞ்சு வருஷ அனுபவம்டா.. நீயாவது பரவாயில்ல.. தப்பிச்சு
வந்துட்ட ஆனா உன் கேடி அக்கா முதல்ல என்ன ரூம்ல அரெஸ்ட்
பண்ணிட்டுத்தான் அடிய கிளப்புவா.. ஓடவும் முடியாது.. ஒழியவும் முடியாது..
அப்போ என் நிலைமைய கொஞ்சம் யோசி... ஆனா எல்லாத்தையும் கடந்து
இன்னும் ஜம்முனு பெரியமனுஷன் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன்.. என
உள்ளுக்குள் நொந்தாலும் வெளியில் விருது வாங்கியது போல் பில்டப்
கொடுத்தார்…
அருளின் ஒளிமயமான எதிர்காலம் கண் முன் வர.. அவன் தலையை
உலுக்கிக் கொண்டான்.. சரி உங்க பொண்ண சமாதானம் பண்ண ஏதாவது
ஐடியா.. கொடுங்க..
நீ என்னடா என் பொண்ண கரெக்ட் பண்ணவும் என்கிட்ட ஐடியா கேட்குற..
சமாதானம் பண்ணவும் என்கிட்ட ஐடியா கேட்கிற.. நான் அவ அப்பன்டா..
பின்ன நான் என்ன மாமான்னா சொன்னேன்..
போற போக்க பார்த்தா அப்படித்தான் தெரியுது.. உனக்கு அக்கா புருஷனா
இருக்குறது எவ்வளவு பெரிய குஷ்டமப்பா.. ச்சே கஷ்டமப்பா.. என அலுத்துக்
கொண்ட சந்திரன் வானுவ சமாதானம் பண்ண நீ தர்ஷன்கிட்ட தான் ஐடியா
கேட்கனும்.. ஏன்னா என் பொண்ண சமாதானம் படுத்துறதுல அவனுக்கு
பதினஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்.. இருக்கு.
என்ன மாப்பிள நம்மள விட சின்ன பையன் கிட்ட எப்படி யோசனை
கேட்குறதுன்னு தயங்குறியா.. அத பத்தி கவலைப்படாத இந்நேரம் அவனும்
உங்கள கவனிச்சுருப்பான்.. எனக்கு தெரிஞ்சு இன்னும் கொஞ்ச நேரத்துல
அவனே உன்ன வந்து பார்ப்பான்.. அப்போ அவன் கிட்ட கேளு என்று
அங்கிருந்து சென்றார்..
அவர் கூறியது மெய்யே என்பது போல் சில நிமிடங்களில் அவன் முன்
கோபமாக வந்து நின்றான் தர்ஷன்.. இன்னொரு ஜோடி கண்களுக்கு
உரியவன்…
என்னாச்சு மாப்பிள வானு ஏன் கோபமா இருக்கா.. நீங்க ஏதாவது அவள
சொன்னிங்களா.. நான் தான் உங்கள பத்தி தப்பா பேசுனதுக்கு மன்னிப்பு
கேட்டுட்டேன்ல.. இருந்தும் உங்களுக்கு இன்னும் கோபம் போகலையா.. என
கோபமாக ஆரம்பித்தவன் வருத்தத்துடன் முடித்தான்..
ச்ச்சே ச்சே.. அதெல்லாம் ஒன்னுமில்லடா.. எல்லாம் என் தப்புதான்….
என்றவன்.. தன் கதையை மறுபடியும் கூற ஆரம்பித்தான்.. அவன் பேசியதை
தற்செயலாக கேட்க நேர்ந்தது.. கோபம் கொண்டு வானதியை திட்டியது..
அடிவாங்கியது.. தப்பி ஓடிவந்தது.. பிறகு அவன் மூலமாக உண்மையயை
அறிந்த பின் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்வது அதை அவள்
கண்டுகொள்ளாமல் இருப்பது என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும்
கூறினான்.. முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு…
இதான்டா நடந்தது.. இப்ப அவள சமாதானம் பண்ண எதாவது ஐடியா
கொடுடா.. என பாவமாய் கேட்டான்…
ஹ்ம்ம்ம் இது கொஞ்சம் பெரிய பிரச்சனை தான்.. சின்ன சின்ன தப்பா
இருந்தா சர்ப்பிரைஸ் கிப்ட் கொடுக்கலாம்.. டின்னர் அழைச்சுட்டு போகலாம்,
ஷாப்பிங் கூட்டிட்டு போகலாம்.. அதுலயும் பாருங்க மாப்பிள ஒருவாரத்துக்கு
கிரிடிட் கார்ட் பத்தி நாம மறந்தும் கேட்கவும் கூடாது.. எவ்வளவு செலவு
பண்ணிருக்கான்னு பார்க்கவும் கூடாது.. அவ்வளவு விஷயம் இருக்கு..
பெரிய விஷயம்ன்னா சர்ப்பரைஸும் பெருசா இருக்கனும்.. வானு
பார்த்தவுடனே பிளாட் ஆகிடனும்.. என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்
என யோசித்துக் கொண்டிருந்தவனின் மூளையில் சட்டென்று மின்னலடிக்க..
அருளை விஷமமாய் பார்த்து.. மாப்பிள இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு
ரிஷப்ஷன் தானா.. அதுக்கு எல்லாரும் வருவாங்கல்ல..
‘’ அருள் எதற்கு கேட்கிறான் என புரியாது.. ஹ்ம்ம்ம் ஆமாடா.. ‘’
‘’ உங்களுக்கு டான்ஸசாடா தெரியுமா என சிரித்துக் கொண்டே கேட்டான்…
‘’
‘’ டான்ஸ் ஓரளவுக்கு வரும்.. ஏன் கேட்குற… ‘’
தர்ஷன் தன் திட்டத்தை கூறினான்… அருளிற்கும் அந்த திட்டம்
பிடித்திருந்ததால் அதற்க்கு ஒத்துக்கொண்டான்.. அடுத்தடுத்து திட்டமிட்டு..
தீயாய் வேலை செய்தனர்..
இதோ ரிஷப்ஷனில் வானதி எதிர்பாரா நேரத்தில் நடனமாடி.. இத்தனை
வருடம் தன் மனதில் புதைத்து வைத்திருந்த காதல்.. ஏக்கம், மோகம் என
அணைத்தையும் தன் பாடலின் மூலமாக உள்ளார்ந்த உணர்வுகளுடன்..
அவளிடத்தில் காட்டினான்…
ஆனால் அவனே எதிர்பாராதது வானதியின் நடனமும்.. அவள் கூறிய
செய்தியும்.. சூழ்நிலை மறந்து தங்கள் இணைகளை பார்வையிட்டுக்
கொண்டிருந்த இளம்ஜோடிகளை நண்பர்கள் பட்டாளம் கேலி செய்து
ஒருவழியாக்கியது…
ஒருபக்கம் சந்தோஷமான நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்க.. மற்றொரு
மூலையிலோ இவர்களின் சந்தோஷத்தை பறிக்க ஒருத்தி கரத்தில்
கத்தியுடன்.. ஆங்காரமாக கத்திக் கொண்டிருந்தாள்..
இப்பவே கொல்லனும்.. இப்பவே கொல்லனும்.. அதுவும் அவ கையை என்
ஆத்திரம் தீரும் வரைக்கும் துண்டு துண்டா வெட்டணும் என வெறிபிடித்த
மிருகமாய் கத்திக் கொண்டிருந்தாள்.. இவற்றையே அவள் வாய் ஓயாமல்
ஜபித்துக்கொண்டிருந்தது…

அத்தியாயம் 12

வரவேற்பில் நிகழும் அனைத்தையும் வேண்டா வெறுப்பாய் தில்லையின்


விழிகள்.. பார்த்துக் கொண்டிருந்தன… அதுவும் அருளின் விழிகளில் தெரிந்த
நேசம் தனக்கானது.. என அவள் மனம் அடித்துக் கொண்டது… தன் மாமனை
தன்னிடமிருந்து பறித்த வில்லியாய் வானதி அவள் கண்களுக்கு தெரிந்தாள்…
அந்நேரம்.. அருள் வானதியின் கரத்தை பற்றிக் கொண்டு நடனம் ஆட.. இங்கு
தில்லையின் உடலெங்கும் தீயாய் எரிந்து.. விழிகள் வெறுப்பிலும்
வஞ்சத்திலும் மின்னியது…
அதுவும் அருள் வானதியின் இடுப்பை பற்றி ஆடியது அவளை கோபத்தின்
உச்சத்திற்கு கொண்டு சென்றது... தான் இருக்கும் இடம் சூழ்நிலை என
அனைத்தையும் மறக்க ஆரம்பித்தாள்.. உடலோ ஆத்திரத்தில் நடுங்கியது..
அடுத்து வானதி அருளின் தோளை பற்றி ஆடியதையும்.. அவன் மார்பில்
சாய்ந்ததையும் கண்டு.. அவள் மனம் பொறுமியது..
அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும்.. என் மாமனோட நெருக்கமா
இருக்குரின்னா உனக்கு எவ்வளவு திண்ணக்கம் இருக்கனும்.. இருடி கூடிய
சீக்கிரம் உனக்கு இந்த தில்லை யாருன்னு காமிக்குறேன்.. என உள்ளுக்குள்
கருவிக் கொண்டிருந்தாள்..
*******************************************
அன்று கோவிலில் வானதி தனியாக வருவதைப் பார்த்த தில்லை
வானதியிடம் நெருங்கி அக்கா என அழைத்தாள்..
வானதி… புதியவள் யாரென தெரியாது புருவம் சுருக்கி பார்க்க..
நான் தில்லையம்மை.. வள்ளி அத்தையோட தம்பி பொண்ணு என தன்னை
அறிமுகப்படுத்தினாள்..
தில்லை என்ற பெயரே.. வானதிக்கு அவளை பற்றி அறிந்துகொள்ள
போதுமானதாக இருந்தது.. இங்கு வந்த இருநாட்களுமே இவளை பற்றி
தானே சுற்றியுள்ளோர்.. வானு காதுபட பேசுகிறார்கள்.. அதனால் வானதி
பதில் பேசாது அவளை கூர்மையாக பார்த்தாள்.. இவளும் அப்படி
எதாவதுதான் சொல்ல வந்திருப்பா என வானதி நினைக்க.. ஆனால்
வந்தவளோ வேறு சொன்னாள்…
அம்மாவும் அப்பத்தாவும் பேசுனத பத்தி அத்தை சொன்னாங்க… கேட்டதும்
எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.. அதான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க
வந்தேன்.. எங்கள மன்னிச்சுருங்க.. அக்கா என வருத்தமான குரலில்
கூறினாள்…
அது உண்மையென நம்பிய வானதி.. இல்லை பரவால்ல.. நான் அத
அப்பையே மறந்துட்டேன்..
தில்லை… ஒஹ்ஹ இனி எப்பையும் மறக்காத மாதிரி பண்றேன்.. என
உள்ளுக்குள் கருவியவள்..
சின்ன வயசுல இருந்தே.. எங்கவட்டுல
ீ நான்தான் மாமனா கட்டிக்க
போறேன்னு சொல்லி சொல்லியே வளர்த்தாங்க.. நானும் அதையே என்
மனசுல பதியவச்சுட்டேன்.. இதுவரை நான் என் மனசுல வேற எந்த
சலனங்களுக்கும் இடம் கொடுத்தது இல்லை..
ஆனா திடிர்னு உங்களுக்கும் மாமாவுக்கும் தான் கல்யாணம்ன்னு சொன்னது…
எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சி அதோட நிறைய மனகஷ்டம்.. சொந்தம் பந்தம்
எல்லாம் கேலி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.. எங்க குடும்பத்துல
உள்ளவங்களுக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு…
மாமாகிட்டயும் தாத்தாகிட்டயும்.. ஒவ்வொரு தடவையும் கல்யாணம் பேச்சு
எடுக்கறப்பெல்லாம் இப்ப வேணாம்.. அப்ப வேணாம்.. படிப்பு முடியட்டும்
பார்ப்போம்னு மட்டும்தான் சொல்லுவாங்களே தவிர.. இந்த பேச்சு
வேண்டாம்ன்னு சொன்னதில்ல..
நாங்களும் படிப்புக்காகவும் வயசுக்காகவும் யோசிக்குறாங்கனு நினைச்சு
அப்புறம் பேசிக்கலாம்ன்னு விட்டுட்டோம்.. ஆனா இப்பதான் தெரிஞ்சது..
கடைசி வரைக்கும் அத்தை வட்லஉள்ளவங்களுக்கு
ீ அந்த மாதிரி எண்ணம்
இல்லைன்னும்.. உங்களைத்தான் மாமாக்கு கல்யாணம்
பண்ணிவைக்குறதுன்னு முடிவு பண்ணிருக்காங்கன்னு..
இத முன்னாடியே சொல்லிருந்தா எங்க வட்ல
ீ உள்ளவங்க ஆசைய
வளர்த்திருக்க மாட்டாங்க.. எங்க சொந்தங்களே எனக்கு என்னமோ குறை
இருக்கு அதான் சத்தமில்லாம உங்கள கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்கனு
என்னை கேலி பண்ணிருக்க மாட்டாங்க.. என விழிகளில் கோர்த்த
நீலிக்கண்ணருடன்
ீ கூறியவள்..
வானதியின் முகத்தை பார்த்தாள்.. அவள் முகம் மிகவும் அமைதியாய்
இருந்து.. இது புயலுக்கு பின் வரும் அமைதியா இல்லை.. தன் வார்த்தைகள்
அவளை பாதிக்காததால் வந்த அமைதியா என தில்லைக்கு புரியவில்லை..
இருந்தும்.. முயற்சியை கைவிடாமல்.. தன் வார்த்தைகள் சிறிதளவாவது
அவள் மனதை பாதித்து.. குற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.. என உறுதியாக
நம்பி.. தன் சகுனி வேலையை மீ ண்டும் தொடர்ந்தாள்…
எழுத்தால எழுதினது வேணா மாறலாம்.. ஆனா மனசால எழுதினது
என்னைக்கும் மாறாது மறையாது.. எனக்கு விவரம் தெரியுறதுக்கு
முன்னாடியே என் மனசுல பதிஞ்ச விஷயத்தை திடிர்னு என்னால மாத்திக்க
முடியாது.. என்னை பொறுத்தவரைக்கும் என் வாழ்க்கைல கல்யாணம்ன்ற
பேச்சுக்கே இடமில்லை.. என் முடிவ என் வட்டுல
ீ உள்ளவங்க கிட்டயும்
சொல்லிட்டேன்..
ஏற்கனவே சொந்த பந்தங்களோட கேலியாலையும் ஊர்க்காரங்க
பேச்சாளையும் நொந்து இருந்தவர்களுக்கு.. என் முடிவும் சேர்ந்து ரொம்ப
வருத்தத்தில் இருக்காங்க..
அந்த வருத்தத்துல உங்க கிட்ட ஏதாவது கோபமா நடந்துக்கிட்டா..
தயவுசெஞ்சு எனக்காக அவங்கள மன்னிச்சுருங்க அக்கா.. என் வாழ்க்கை
பத்தின கோபமும் வருத்தமும் தான் அவங்கள இப்படி பேச வைக்குது..
மத்தபடி அவங்க ரொம்ப நல்லவங்க.. என உருக்கமான குரலில் சிறு
பிள்ளை போல் கூறினாள்…
வானதி முகம் வெறுமையாக.. அதிலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என
மற்றவளுக்கு தெரியவில்லை.. அப்பொழுதுதான் அருள் வர.. தில்லை
சுதாரிப்பாய் விழிகளை துடைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள்…
******************************************
வானதி அருளின் தோளைப் பற்றி ஆடியதைக் கண்டு.. முகத்தில் ஆக்ரோஷம்
மின்ன.. அவளை காயப்படுத்தும் நோக்கத்தோடு அவர்களிடம் செல்ல
முயன்றாள்..
தில்லையையே கவனித்துக் கொண்டிருந்த அவள் அம்மா.. சட்டென்று அவள்
கரத்தை பிடித்து இழுத்தார்.. ஆனால் தில்லையின் மனதிற்கு இப்போதைக்கு
தெரிந்த ஒரே விஷயம் வானதியின் சங்கு கழுதை தன் ஆசை தீர நெறிக்க
வேண்டும்.. என்பதே அதனால் அவரையும் மீ றி செல்ல முயற்சிக்க புஷ்பா
மற்றவர்களையும் அழைத்தார். ஹாலில் இருள் சூழ்ந்திருப்பதாலும்.. எல்லோர்
கவனமும் மணமக்களிடம் இருப்பதாலும்.. இவர்களை யாரும்
கண்டுகொள்ளவில்லை… கலவரமும் யார் கண்ணிற்கும் தட்டுப்படவில்லை..
பேச்சி கணபதி செல்வம் என யாராலயும் தில்லையை கட்டுப்படுத்த
முடியவில்லை.. அவள் கத்த ஆரம்பிக்கவும் உடனே அவள் வாயை பொத்தி
அவளை அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.. செல்வமும் கணபதியும்
அவளை மறைத்தவாறு கூட்டிச்சென்றனர்..
குந்தவை வட்டில்
ீ தங்க விருப்பம் இல்லாததால்.. கணபதி செட்டியாரின்
குடும்பம்.. வரவேற்பு நடக்கும் ஹோட்டலிலே ரூம் எடுத்து தங்கிக்
கொண்டனர்.. அது அவர்களுக்கு வசதியாக போக விரைவில் அறைக்கு
அழைத்துச் சென்றனர்…
அறைக்குள் நுழைந்ததும்.. என்னைய விடுங்க.. விடுங்க நான் இப்பவே அவள
கொல்லனும்.. என்ன தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே என்
மாமன் மேல இழைவா… என ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தவள்..
அங்கு பழம் வெட்ட வைக்கப்பட்டிருந்த கத்தியை மற்றவர்கள் இமைக்கும்
நொடியில் எடுத்து.. என் மாமன் மேல வச்ச கைய துண்டு துண்டா
வெட்டுனாதான் என் ஆத்திரம் தீரும் என அறையின் கதவை நோக்கி நடக்க
ஆரம்பித்தாள்…
உடை கசங்கி.. பூச்சரம் அறுந்து.. கண்மை இழுவி.. கோபமுகம் கொண்டு
பார்க்கவே மிகவும் பயங்கரமாய் தெரிந்த தில்லையை அடக்கும் வழி
தெரியாது.. பெண்கள் கையை பிசைய.. ஆண்கள் அவளை பிடித்து
இழுத்தனர்…
தில்லையும் அடங்காது திமிர… செல்வம் அவள் கன்னத்தில்
ஓங்கியறைந்தார்… அதில் சற்று அடங்கினாலும் கோபமாக அனைவரையும்
முறைக்க…
உனக்கு என்னாச்சு தில்லை ஏன் இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்குற..
இப்ப போய் நீ எல்லார் முன்னாடியும் அவள கொன்னா.. உனக்கு உன் மாமன்
கிடைக்க மாட்டான்.. ஜெயில் களி தான் கிடைக்கும்.. என கோபத்துடன் கூற..
தில்லை அமைதியானாள்..
இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்கக்காவ வாழ வச்ச எனக்கு..
இப்போ என் பொண்ண வாழவைக்க தெரியாதா.. உன் மாமன் உனக்கு
கிடைக்கணும்னா.. கோபத்த அடக்கு.. அவ கிட்ட நல்லவிதமா பழகி
நல்லபேரு வாங்கு…
பகையாளி குடியை உறவாடிக் கெடுன்னு கேள்வி பட்டதில்ல.. இந்த
விஷயத்துல நாம அந்த வழில தான் போயாகணும்… தினமும் அவங்க
வட்டுக்கு
ீ போ.. சின்ன விஷயம் கிடைச்சாக் கூட அதுல எதாவது ஒரு
பிரச்சனை வருதான்னு பாரு.. ஆனா யாருக்கும் உன் மேல சந்தேகம்
வரக்கூடாது.. என அந்த மாண்புமிகு தந்தை தன் மகளுக்கு துர்போதனை
புரிந்தார்…
ஒரு குடும்பத்தை அழிக்க வேண்டுமென்றால் மற்றவர்களின் மிகப்பெரிய
ஆயுதம் பெண்களின் மனதில் விஷமேற்றுவது.. இல்லை அவர்களை தீய
வழியில் கூட்டிச்செல்வது.. வெளியில் சென்று வட்டிற்கு
ீ வரும் ஆண்கள்
எதிர்ப்பார்ப்பது அமைதியும் அவ்வட்டின்
ீ மாதரசிகளின் தெளிவான
மனதையும் புன்னகை முகத்தையும் தான்.. அப்படி இருந்தால்தான் வடு

சொர்க்கமாக தெரியும் இல்லையேல் நரகம்தான்.. ஒரு குடும்பத்தின்
இன்பமும் துன்பமும் அக்குடும்பத்தின் பெண்மணிகள் கரத்தில்தான்…
செல்வமும் அம்முறையைத்தான் கையாள்கிறார்.. வட்டு
ீ பெண்களின்
மத்தியில் பிரச்சனை என்றால் அது ஆண்களிடமும் பிரதிபலிக்கும்…
செல்வம் தன் மகளின் முகத்தை பார்த்தார்.. அதில் யோசனை தெரியவும்…
தில்லை தான் கூறியதை புரிந்துக் கொண்டாள் என அறிந்தவர்… எங்கக்காவை
நான் அந்த வட்டு
ீ மருமகளாக்க.. அதிக நாள் எடுத்துக்கிட்டேன்.. அதான்
இப்போ நமக்கு பிரச்சனையா இருக்கு.. ஆனா உன் விஷயத்துல எல்லாம்
சீக்கிரமாவே நடக்கும்.. அதுக்கு உனக்கு ரொம்ப பொறுமை முக்கியம்..
இப்போதைக்கு எல்லார் கண்ணுக்கும் நீ பாவமா தெரியுவ அத நாம நமக்கு
சாதகமா பயன்படுத்திக்கணும்… என்றார்..
ஒரு குடும்பத்தை அழிக்க… மற்றொரு குடும்பம் முழுமூச்சாய் திட்டம்
தீட்டியது.. இவர்களின் திட்டம் பலிக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்..
ரிஷப்ஷன் நல்லபடியாக முடிந்து.. அனைவரும் வட்டிற்கு
ீ திரும்பினர்.. அந்த
இரவு வேளையிலும் வள்ளியம்மை இருவருக்கும் திருஷ்டி
சுற்றிவிட்டுத்தான் வட்டிற்குள்
ீ விட்டார்..
நேராக தன் அறைக்கு நுழைந்த அருள்.. தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு..
மெத்தையில் வழ்ந்து
ீ பல பல கலர் கனவுகளுடன் காத்திருந்தான்..
அவள் பாடல் வழி சொன்ன அர்த்தங்கள் அனைத்தும் அவனை பித்தாக்க..
தன்னவளுடனான தனிமை பொழுதை நோக்கி எதிர்பார்த்திருந்தான்.. தன்
இத்தனை வருட காதலை கூறவேண்டும்.. மனம் விட்டு பேச வேண்டும்..
தன்னுடைய ஏக்கம் மோகம் என அனைத்தையும் அவளிடத்தில் கொட்ட
வேண்டும்.. இத்தனை நாள் தள்ளிவைத்தற்காக வித விதமாக தண்டனைகள்
வழங்க வேண்டும்.. அவள் நெஞ்சுக்குழியில் புதைய வேண்டும் என பல
வேண்டும்களுடன் தன்னவளுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தான்….
அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்க.. உடனே கதவின் பின்புறம்
மறைந்தவன்.. கதவு திறந்து ஆள் வந்தவுடன்.. யாரென பார்க்காமல் மேலே
பாய்ந்து விட்டான்…
அய்யோ.. டேய் என்ன விடுடா என்ற அலறலில் சட்டென்று விலகியவன்
அதிர்ச்சியில் உறைந்தான்..
முதல் கட்ட அதிர்ச்சி விலகி.. கோபம் கொண்டவன் ‘’ யோவ் மாமா எங்க
ரூம்க்கு நீ ஏன்ய்யா வந்த.. போய் உன் பொண்ண வர சொல்லுய்யா.. ‘’
‘’ அடேய் பாவி.. என் இடுப்ப உடைச்சதுமில்லாம.. திட்ட வேற செய்ரியா...
கிராதகா முதல்ல என்னை தூக்கிவிடுடா ‘’ என கடுப்பாக கூறினார் சந்திரன்..
அருளும் தன் மாமனை தூக்கி விட்டான்.. ஹப்ப்பா என இடுப்பை
தடவிக்கொண்டே அருளை பார்த்து முறைத்தார்..
அவனோ.. ஈஈஈஈ என இளித்தான்…
‘’ சரி இப்பயாவது சொல்லுங்க உங்க பொண்ணு எங்க.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் வானு குந்தவை கூட தூங்குறா.. ‘’ என பெரிய குண்டை தூக்கி
போட்டார்…
‘’ என்னாது…. ஆஆ… என அதிர்ச்சியடைந்த அருள் யோவ் நீயெல்லாம் ஒரு
பெரிய மனுஷனாய்யா… புதுசா கல்யாணமான பொண்ணையும்
மாப்பிளையையும் பிரிக்குறியே.. உறுப்புடுவியா நீயி.. ‘’
‘’ டேய் என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு பேசுடா.. வானு தான்..
குந்தவைகிட்ட.. ஊருக்கு போனதுக்கு அப்புறம் உங்கள ரொம்ப மிஸ்
பண்ணுவேன் அம்மா.. சோ இப்போ நான் உங்க கூட படுத்துக்குறேன்னு
சொன்னா.. உங்கொக்கவும் பொண்ணு பாசத்துல பொங்கி.. புருஷன வெளிய
துரதிட்டா..’’ என அவர் பங்குக்கு அவரும் பொரும அருள் காண்டானான்..
இதற்கே இப்படியென்றால்.. ஊர் சென்றபிறகும் தங்களின் சங்கமம் நடைபெற
போவதில்லை என்றும்.. மனம்விட்டு பேசவும் தன் மனைவி அதற்க்கான
சந்தர்ப்பத்தை தரப்போவதில்லை என்று அவன் அறிந்தால் என்னவாகுமோ….

அத்தியாயம் 13

தன் மாமன் கூறியதைக் கேட்டு காண்டான அருள்.. உடனே தன்


அம்மாளுக்கு போனை போட்டான்..
மாப்பிள.. நீ போன் பண்றதெல்லாம் வேஸ்ட்ய்யா.. அம்மாவும் பொண்ணும்
இந்நேரம் வரைக்கும் முழிச்சுக்கிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிற..
தூக்கத்துல சொர்கத்துக்கு போயிருப்பாங்க.. இப்போ நான் உனக்கு துணை.. நீ
எனக்கு துணை.. என அவர் நக்கலாக கூற..
அருள் சிறு பிள்ளை போல் காலை உதைத்து மெத்தையில் கவிழ்ந்தான்..
ஏமாற்றம் ஏமாற்றம்.. அய்யோ பாவம்..
ஹ்ம்ம்ம் இன்னைக்கு நான் என்னென்னமோ பிளான் பண்ணிருந்தேன்டா..
கடைசில எல்லாம் புஸ்சுன்னு போயிருச்சு என சந்திரன் தன் ஆற்றாமையை
கூற..
யோவ்.. மாமா நானே செம்ம கடுப்புல இருக்கேன்.. நீ மேற்கொண்டு ஏத்தாத..
ஹுக்கும்.. அக்காக்கும் தம்பிக்கும் சிவகாமி மவன்தான் இளிச்சவாயன்.. என
நொடித்துக் கொண்டவர்..
மாப்பு… நீயும் நானும் முத தடவை சந்திச்சது உனக்கு நியாபகம் இருக்காடா..
அப்போ உனக்கு வயசு ஏழோ எட்டோ தான இருக்கும்.. என் கார் கண்ணாடிய
உடைச்சதும்மில்லாம திமிரா பார்த்துட்டு நின்னில.. கொய்யால அந்த
வயசுலயே உனக்கு என்னா கோபம் வந்தது… என விட்டதை பார்த்தவாறு
கூறினார்.. முகமோ சிரிப்பில் மலர்ந்தது…
அருளிற்கும் அந்நினைவில்.. முகம் மலர்ந்தது.. ஹ்ம்ம்ம் நான் உடைச்சதும்..
நீங்க என்னைய பார்த்த பார்வைல எனக்கு கொஞ்சம் பயம் வந்தாலும்…
வெளில காமிச்சுக்கல.. என அவனும் கூறினான்..
இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை பற்றி பேசிக்
கொண்டிருந்தன.. தன் மனைவியிடம் நேரக்கணக்காக பேசி காதல் பயிரை
வளர்க்க நினைத்த அருள்.. இப்பொழுது மாமனுடன் பாசப் பயிரை
வளர்க்கிறான்… அதையெண்ணி.. அருளின் மனம் கேலியாக சிரித்தாலும்..
ஓரத்தில் ஏமாற்றம் இருந்துக் கொண்டுதான் இருந்தது..
மறுநாள்.. ஹாலில் வடுகம்மாளும் வள்ளியம்மையும் அமர்ந்து பேசிக்
கொண்டிருந்தனர்.. அப்பொழுது மாடியிலிருந்து வந்த குந்தவையை
பார்த்ததும் வடுகம்மாளின் முகம் மாறியது.. மாமியாரின் முகம் போன
போக்கை பார்த்து குழம்பிய வள்ளியம்மை அவர் பார்வை சென்ற திக்கை
பார்த்து உள்ளுக்குள் கலவரமானார்..
வள்ளியம்மை.. ம்க்கும் ஆத்தா வயசுக்கு ஏத்த மாதிரி உடுப்பு உடுத்துனாதான
மக ஒழுங்கா உடுத்துவா என்று குந்தவையை பார்த்தவாறு கூறினார்..
குந்தவை சுடிதாரில் தலை முடியை விரித்து விட்டு.. நெற்றியில் பொட்டுடன்
வேறெந்த அலங்காரமும்மின்றி.. அந்த எளிய தோரணையிலும் மகாராணி
போல் வந்தவள் அவர்கள் எதிரே இருந்த சோபாவில் கால் மேல் கால்
போட்டு அமர்ந்து.. அங்கிருந்த செய்தித்தாளை படிக்க ஆரம்பித்தாள்.. எதிரில்
உள்ளவர்களை கண்டுகொள்ளவுமில்லை.. மதித்து ஒரு வார்த்தையும்
பேசவில்லை.. அதைக் கண்டு வடுகம்மாளின் பிபி எகிறியது..
அவர் ஏதோ பேச வாயெடுக்க.. அவரின் கரத்தை அழுத்திப் பிடித்த
வள்ளியம்மை.. வந்துக்கொண்டிருந்த அழகுவையும் செங்குட்டுவனையும்
கண்களால் சுட்டி காண்பித்தாள்..
உடனே வடுகம்மாளின் வாய் கோந்து போட்டார் போல் ஒட்டிக் கொண்டது..
அழகு தன் மகள் அமர்ந்திருக்கும் தோரணையை பெருமையுடன் பார்த்தார்..
என் மக மஹாராணிடா என அவர் மனம் கர்வப்பட்டது..
வடுகம்மாளிர்க்கு குந்தவையின் தோரணை திமிர் பிடித்தவள் போலவும்
பெரியவர்களுக்கு மரியாதையற்ற செயல் போலவும் தெரிய.. தந்தைக்கோ
அதில் உள்ள கம்பீரம் தெரிய பெருமையாகவும் கர்வமாகவும் எண்ண
வைத்தது..
அடுத்து சிவகாமி சந்திரன் அருள் என ஒவ்வொருவராக வந்தனர்…
வடுகம்மாள்.. வள்ளி அண்ணன் வரதா சொல்லிருந்தாரே.. இன்னும் காணும்..
கிளம்பிட்டாங்களா இல்லையான்னு போனு பண்ணி கேளு.. என்று கூறியவர்..
வாங்கண்ணே இப்போதான் உங்கள பத்தி கேட்டுட்டு இருந்தேன்.. என அங்கு
வந்த கணபதி செட்டியாரின் குடும்பத்தை வரவேற்றார்..
வடுகம்மாளின் கூற்றுக்கு தலையசைத்தவாறு வந்தவர்களின் விழிகள்
மாளிகையை சுற்றிவந்தது.. மாளிகையின் ஆடம்பரமும். அதன் ஒவ்வொரு
இடத்திலும் தெரிந்த பணத்தின் செழிமையும் குந்தவையின் செல்வாக்கை
கூற. அவர்களின் மனம் பொறாமையில் வெந்தது..
பேச்சியின் மனமோ குந்தவைக்கு கிடைத்த வாழ்வை எண்ணி பொறுமியது..
குந்தவைக்கு இவர்களின் வருகை பிடிக்கவில்லை.. இருந்தாலும் சிவகாமியை
மனதில் கொண்டு அமைதியாக இருந்தாள்.. அவர்களை சட்டை
செய்யவுமில்லை… உள்ளேயும் அழைக்கவில்லை.. அலட்சியமாக நின்றுக்
கொண்டிருந்தாள்…
குந்தவையின் அலட்சியத்தைக் கண்டு செல்வத்தின் முகம் கறுத்தது… தன்
இடதுபக்க மார்பில் உள்ள தழும்பை வருடியவாறு… குந்தவையை வெறித்துப்
பார்த்தார்.. அப்பார்வையில் இருந்தது குரோதமா.. வெறியா.. இல்லை
மானை வேட்டையாட துடிக்கும் புலியின் பார்வையா என அவர் மட்டுமே
அறிவார்.. ஆனால் நிச்சயம் அதில் கண்ணியம் இல்லை…
நான் செஞ்ச ஒரு தப்பால என் எல்லாத்திட்டமும் பாழாகிடுச்சு.. அது மட்டும்
சரியா நடந்திருந்தா.. இந்நேரம் நீ என் காலுக்கடியில கிடந்துருப்ப..
உன்னோட இந்த திமிரும் தெனாவட்டும் இருந்த இடம் தெரியாம
போயிருக்கும் என உள்ளுக்குள் கருவினார்…
தில்லையின் விழிகளோ யாரும் அறியாமல் அருளைத் தான் பார்த்துக்
கொண்டிருந்தது.. அருள் சந்திரனோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவன்
விழிகள் அடிக்கடி மாடியை பார்த்தது..
சிறிது நேரத்தில் மறுபடியும் மாடியை பார்த்த அவன் விழிகள் மோகத்திலும்
கோபத்திலும் மின்னியது.. அவன் பார்வையை தொடர்ந்த தில்லையின்
விழிகள் கோபத்தை உமிழ்ந்தது…
ஷ்ரவனின் தோளில் கைபோட்டவாறு பேசிக்கொண்டே கீ ழே இறங்கிக்
கொண்டிருந்தாள்.. வானதி. கீ ழே வந்தவள் நேராக செங்குட்டுவன் அருகில்
அமர்ந்து.. அவருடன் பேச ஆரம்பித்தாள்… பெருமையாக தன் நரைத்த
மீ சையை தடவிய செங்குட்டுவன்.. என் பேத்தி என மிதப்பாக அனைவரையும்
பார்த்தார்..
வானுவின் பேச்சு செங்குட்டுவனிடம் இருந்தாலும் கவனமெல்லாம்
அருளிடமே.. தன் உள்ளத்தின் சிலிர்ப்பும் உடலின் குறுகுறுப்பும்.. அருளின்
பார்வையை சொல்ல.. பெண்ணவள் அவனைத் தவிர அனைவரையும்
பார்த்தாள்…
அதைக்கண்டுகொண்ட அருளின் விழிகள் கோபத்தை தத்தெடுத்தது.. இவ
அவ மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கா.. பாட்டு மட்டும் வாய் கிழிய
பாடினா.. எந்தன் கொடியை மேல் ஏறி நாட்டவா மோகனான்னு.. இப்போ
தள்ளி தள்ளி போறா மவளே இருடி ஊருக்கு போனதுக்கு அப்புறம் உன்னை
கதறவிடல நான் உங்கொம்மாக்கு தம்பியில்லடி.. என மனதிற்குள் தன்
அம்மாளுவிடம் சவால் விட்டான்..
அவனை மேலும் உசுப்பியது அவள் அணிந்திருந்த ஆடை.. சைட் ஓபன்
பாட்டம்.. கையில்லாத பனியன்.. அதற்க்கும் மேல் கையில்லாத கோட்.. என
இன்னும் சிறுபிள்ளை போல் உடையணிந்து வந்தவளைக் கண்டு அருளின்
டெம்ப்ட் அதிகமாகியது…
வடுகம்மாளிற்கும் வானதியின் உடை கோபவெறியை கிளப்பியது.. அவர்
மனமோ ஆத்தாளுக்கும் மகளுக்கும் எங்கேயிருந்து தான் இப்படி பட்ட உடுப்பு
எல்லாம் கிடைக்குமோ.. அங்கன வாடி முத இந்த கிழிஞ்சதையெல்லாம்
அடுப்புல போட்டு எரிக்கிறேன்.. என மனதிற்குள் சபதம் போட்டவர்..
என் பேரன் பவுசு என்ன மரியாதை என்ன.. அவன் பொண்டாட்டி இப்படி
கிழிஞ்சதையெல்லாம் போட்டா.. ஊர்க்காரங்க பகடி பேசமாட்டாங்க.. என
உள்ளுக்குள் பொருமினார்.. வெளியேவும் சொல்லிருப்பார்.. ஆனால்
செங்குட்டுவன் அழகு இருவரும் வானதியை தாங்குவதுப் பார்த்து வாயை
மூடிக் கொண்டார்..
செங்குட்டவனிற்கும் அழகுவிற்கும் வானதியின் உடை பெரிய பிரச்சனையாக
தெரியவில்லை.. அவர்கள் இருபது வருடங்களாக அவளிடம் காண்பிக்க
முடியாத அன்பையும் பாசத்தையும் இப்பொழுது காண்பிக்கின்றனர்..
அவர்களை பொறுத்தவரை வானு அவர்களின் பேத்தி.. இதில் அருளின்
மனைவி வட்டின்
ீ மருமகள் என்கின்ற பரிணாமம் இரண்டாம் பட்சம்..
இதையே வட்டுப்
ீ பெண்கள் நினைப்பார்களா என்ன?? வானதி மருமகளாக
புக்ககம் செல்கிறாளா இல்லை.. தன் அன்னையின் பிறந்தவட்டிற்கு

பேத்தியாகவும் ப்ளஸ் மருமகளாக செல்கிறாளா என்பது.. அங்கு அவள்
சென்ற பிறகுதான் தெரியும்…
காலை உணவு முடிந்து அனைவரும் ஹாலில் குழுமியிருந்தனர்..
அப்பொழுது தர்ஷன் மற்றும் அவன் பெற்றோரும் வந்தனர்.. வானதியை
நாட்டரசன் கோட்டைக்கு விட அவர்களும் செல்கின்றனர்.. பிறந்த வட்டின்

சார்பாக…
சந்திரன் ‘’ ஹேய் வாடா.. ‘’
குந்தவை ‘’ வாங்கண்ணா.. வா சுதா.. தர்ஷன் எங்க.. ‘’
சுதா ‘’ லக்கேஜ எடுத்துட்டு வரான்.. ‘’
வேலைக்காரங்களா அனுப்புனா அவங்க எடுத்துட்டு வரப் போறாங்க..
அதைவிட்டுட்டு ஏன் தர்ஷுவ அலையவிடுற என கடிந்துக் கொண்டவள்..
வேலையாளை ஏவினாள்..
தர்ஷன் நோ ப்ராப்ளம் ஆன்ட்டி.. நானே வந்துட்டேன்.. ஹாய் சின்ன
தர்பூஸ்.. ஹாய் பெரிய தர்பூஸ்.. என ஷ்ரவன் வானதியின் தலைமுடியை
கலைத்தான்.. வானதி பதிலுக்கு அவன் தலைமுடியை கலைக்க ஷ்ராவனோ
முகத்தை சுருக்கி.. பாருங்க மாமா தர்ஷுண்ணா என்னை தர்பூஸ்ன்னு
சொல்றாங்க என அருளிடம் முறையிட்டான்..
டேய்.. பெரிய மச்சான் ஏன்டா என் குட்டி மச்சான் முடிய கலைக்குற என
அருளும் சிரிப்புடன் கேட்க..
மாப்பு.. ஒரு மச்சான் பேச்சைக் கேட்டு இன்னொரு மச்சானை
பகைச்சுக்காதீங்க அப்புறம் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.. என
வானதியை பார்த்தவாறு கூற.. அருள் எழுந்து நின்று கை கூப்பினான்..
அதைக் கண்டு மற்றவர்கள் சிரித்தனர்.. வானதியும் மெல்ல புன்னகைத்தாள்…
சந்திரன்.. மாமா வானதிய ஊர்ல விடுறதுக்கு இவங்களும் உங்க கூட
வருவாங்க..
அழகு.. தாராளமா வரட்டும் மாப்பிளை..
பொண்ணுக்கூட புகுந்த வட்டுக்கு
ீ சொந்தக்காரங்க தான் வருவாங்க.. ஆனா
இங்க வேத்து மனுசரல்ல அனுப்புறாங்க.. என புஷ்பா பேச்சியிடம் மேடை
ரகசியம் பேசினாள்…
அதைக் கேட்ட.. தர்ஷன் குடும்பத்தினர் முகம் மாறியது.. இருந்தும்
வானதிக்காக பெரிது படுத்தாமல் அமைதியாக இருந்தனர்....
செங்குட்டுவன் கோபமாக ஏதோ கூற வர.. அவர் கரம் பிடித்து தடுத்த வானதி
புஷ்பாவிடம்… அவங்க ஒன்னும் மூணாவது மனுஷங்க இல்லை.. என்னோட
சிவாப்பா சுதாம்மா.. என் பெத்தவங்களுக்கு அடுத்த ஸ்தானத்துல
உள்ளவங்க.. சின்ன வயசுல இருந்தே என்னைய வளத்தவுங்க..
நீங்க எல்லாரும் இப்போ வந்தவுங்க.. உண்மைய சொல்லனும்னா நீங்கதான்
வேத்து மனுஷங்க.. என மேற்கொண்டு கூற போனவளை தில்லையின்
பரிதாபமான முகம் தடுக்க.. சிறிது அமைதியானவள் புஷ்பாவிடம் இனிமே
இப்படி பேசாதீங்க.. எல்லா நேரமும் நான் இப்படி அமைதியா இருக்க
மாட்டேன்.. என கூறி.. சிவா சுதாவைப் பார்த்து மென்னகை புரிந்தாள்..
அவர்களின் இதழ்கள் சிரித்தாலும்.. விழிகள் சிறிது கலங்கியிருந்தது.. தங்கள்
வளர்ப்பு மகளின் பாசத்தை எண்ணி..
தன் மருமகளை அவமானப்படுத்திய வானதியை பழிவாங்க எண்ணிய பேச்சி..
அண்ணி பொண்ணுக்கு சீர்வரிசை எல்லாம் தருவிங்களா.. இல்லை மருமக
பொறந்த வடுங்குறதால
ீ வெறும் கையோட அனுப்புறிங்களா.. ஏன்
கேட்குறேன்னா இதை பத்தி உங்க வட்டுல
ீ இருந்து.. யாரும் இன்னும்
பேசலை.. அதான் நானே கேட்க வேண்டியதா போச்சு.. என நக்கலாக
சிவகாமியிடம் கூறினார்... அதுவரை குந்தவையின் முகத்தில் இருந்த
அமைதி மறைந்து கோபம் குடிக்கொண்டது..
தன் அத்தையின் எண்ணப்போக்கை புரிந்துக் கொண்ட புஷ்பா.. என்ன அத்தை
இப்படி கேட்குறீங்க.. ஊர்ல உள்ள நூறு ஏக்கர் நிலமும் இனி வானதி மூலமா
நம்ம மாப்பிளைக்குத் தானே.. அதுக்காக தான இந்த கல்யாணம்.. அதுனால
அத மட்டும் கொடுத்து விட்டுரலாம்னு நினைச்சுருப்பாங்க.. எனக் கூறினாள்..
இதுவரை அருளின் முகத்தை பார்க்காது இருந்த வானதி.. அவரின்
இக்கூற்றில் நிமிர்ந்து அருளை முறைக்க ஆரம்பித்தாள்…
அருளுக்கு வானதி தன்னை பார்த்ததில் சந்தோஷம் கொண்டாலும்..
அனுபவிக்க முடியாத நிலை.. அருள் கோபத்துடன் தன் அம்மாச்சியைப்
பார்த்து கண்டிக்க வாயெடுக்க.. செங்குட்டுவன் பேசினார்..
செங்குட்டுவன் ‘’ என்ன பேச்சு இது.. பேச்சி சீர்வரிசை பத்தி பேசுறதுக்கு..
வானதி ஒன்னும் அந்நியம் இல்லை.. என் கொள்ளுபேத்தி.. அதோட அந்த
நிலம் குந்தவைக்கு தான்.. அவ காலத்துக்கு பிறவு தான் வானதிக்கு.. அந்த
நூறு ஏக்கர் நிலத்துக்காக எல்லாம் இந்த கல்யாணம் இல்லை.. என் கொள்ளு
பேத்தி பொறக்கும் போதே அருளுக்கு தான்னு.. முடிவெடுத்தது.. நேரம்
கைகூடிவரவும் கல்யாணத்த முடிச்சாச்சு.... ‘’
அழகு ‘’ அத்தை எங்ககிட்ட இருக்கிறது எல்லாம் என் பேத்திக்குதான்..
அதனால இனி இத பத்தி பேசாதீங்க.. ‘’ என பேச்சியிடம் கண்டிப்பாய்
கூறியவர்.. வழக்கம் போல் வள்ளியம்மையை முறைத்தார்.. வள்ளியம்மை
பயத்துடன் தன் அம்மாவைப் பார்த்துவைத்தார்..
இதுவரை அவர்கள் பேச்சில் குறுக்கிடாமலிருந்த சிவகாமி.. அவ எப்படி
உங்களுக்கு பேத்தியோ.. அதே மாதிரிதான் எனக்கும்.. வானுக்கு கொடுக்கிறத
நான் கொடுத்துதான் ஆகனும் அதான் முறை அதோட எங்களுக்கும்
சந்தோஷம்..
நாங்க எங்க பொண்ணுக்கு ஐநூறு பவுன் நகை போடுறோம்.. அதுல
வைரமூக்குத்தி, வைர கண்டசரம், வைர வளையல் தோடு மோதிரம்
அப்புறம் இன்னும் நிறையா இருக்கு.. மாப்பிளைக்கு தனியா
வைரபிரேஸ்லெட், மோதிரம், செயினு எல்லாம் எடுத்து வச்சிருக்கோம்..
சென்னைல உள்ள மூனு மல்டி காம்ப்ளக்ஸ் அவ பெயர்ல தான் இருக்கு..
மாதம் மாதம் அதோட வருமானம் அவ அக்கவுண்ட்க்கு வந்துடும்.. அப்புறம்
பதினாறு மாடி அப்பார்ட்மெண்ட் கட்டி வாடகைக்கு விட்டுருக்கோம்.. அதோட
வாடகையும் வானதி அக்கவுண்ட்க்கு வந்துடும்.. ரெண்டு பங்களா.. அப்புறம்
ஒரு பீச் ஹௌஸ் எல்லாம் அவ பெயர்ல தான் இருக்கு..
மத்தபடி சில்லறை பொருளா.. வெள்ளிச் சாமான், எவர் சில்வர் சாமான்,
வெண்கலச் சாமான், சிலோன், பர்மா, மைடான் மங்குச் சாமான், ஜெருமன்
சாமான், செம்புச் சாமான், அலமாரி, பீரோ, கட்டில் போன்ற மரச்சாமான்,
இரும்புச் சாமான், பீங்கான் ஜாடி, குழுதாடி, கண்ணாடிச் சாமான், ப்ளாஸ்டிக்
ரப்பர் சாமான், பின்னிய துண்டு, பைகள், தலையணை, மெத்தை, பர்மா பாய்,
அன்னக் கூடை, மாக்கல், மர விளையாட்டுச் சாமான், மரவை, திருகை,
அம்மி, ஆட்டுக்கல்ன்னு சம்பிரதாயத்துக்கு வைக்கிற எல்லா பொருளும்
வாங்கிட்டேன்..
அதோட இந்த காலத்துக்கு ஏத்தமாதிரி டீவி, வாஷிங் மிஷின், டைனிங்
டேபிள், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், ட்ரெஸ்ஸிங் டேபிள், நான்ஸ்டிக் பொருள்,
அப்புறம் ஏதோ கேக் எல்லாம் செய்வாங்களாம்ல அதோட பேரு வாய்க்குள்ள
நுழைய மாட்டேன்குது எனவும் தர்ஷன்.. மைக்ரோவேவ் ஓவன் பாட்டி..
ஹான் அந்த ஓவன் தான் எல்லாம் வாங்கி வச்சுட்டேன்.. நீங்க போகும்
போது சொன்னாத்தான் வாங்குவங்கன்னு
ீ நினைச்சு சொல்லாம விட்டுட்டேன்
என மூச்சுவிடாமல் கூறிய சிவகாமி அமர்த்தலாக பேச்சியை பார்த்தார்..
பேச்சிக்கோ முகத்தில் ஈயாடா வில்லை.. பேச்சிக்கு மட்டுமில்லை அவள்
குடும்பத்தாருக்கும் தான்.. கூடவே வடுகம்மாளிற்கும்..
வானதியும் மற்ற அனைவரும் சிவகாமியை பிரமிப்பாக பார்த்தனர்..
சீர்வரிசை போதும்களா.. இல்லை வேற ஏதாவது விட்டுப்போச்சுன்னா
சொல்லுங்க வாங்கிக்கலாம்.. என பேச்சியை பார்த்தவாறு கூற.. இதற்கு மேல்
அவர் வாய் திறப்பார்..
செங்குட்டுவன்.. போதும்மா.. சம்பிரதாயப்படி எல்லாம் நிறைக்கவே
செஞ்சுட்டிங்க.. உண்மைய சொல்லனும்னா நாங்க தான் உங்களுக்கு
சீர்வரிசை தரனும்.. ஆனால் நீங்க எங்களுக்கு தரிங்க.. என குந்தவையை
பார்த்தவாறு வருத்தத்துடன் கூறினார்..
அவர் எதைப் பற்றி கூறுகிறார் என அங்குள்ள அனைவருக்குமே தெரிந்தது..
இருந்தாலும் மௌனம் காத்தனர்..
சரி அத விடுங்க அண்ணா.. மதியம் போல ஊருக்கு கிளம்பணும்ல..
எல்லாரும் போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க..
செங்குட்டுவனுக்கும் மனம் பாரமாய் இருக்க தன் அறையை நோக்கி
சென்றார்.. வடுகம்மாள் அவரை பின்தொடர்ந்தார்.. அழகும்
மனவேதனையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.. செல்வம் குடும்பத்திற்கும் ஓர்
அறையை காண்பிக்க அவர்களும் விட்டால் போதும் என சென்றுவிட்டனர்..
சிவகாமி.. வானு போ உன்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு.. என்றவர்
இருகியிருந்த குந்தவையை பார்த்து.. குந்தவை வானுக்கு உதவி பண்ணு..
என அவளையும் அங்கிருந்து நகர்த்தினார்…
அனைவரும் சென்றுவிட்டனர்.. தர்ஷன் அருள் வெளியில் செல்ல.. சிவா
சந்திரன் தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்..
வள்ளியம்மை.. நான் உங்களுக்கு சமையலுக்கு உதவி பண்றேன் அம்மா..
அதெல்லாம் வேணாம்.. நீயும் போய் ஓய்வெடு.. எனக்கும் ஒன்னும் பெரிய
வேலை இல்லை.. மேற்ப்பார்வை தான் என வள்ளியம்மையை அனுப்பி
விட்டு கிட்சனுக்குள் நுழைந்தார்..
குந்தவை மடியில் வானதி படுத்திருக்க.. சுதா அருகில் அமர்ந்து அவள்
துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.. அவர்களின் முகத்தில்
பிரிவுத்துயர் அப்பட்டமாக தெரிந்தது….
‘’ உன் வாழ்க்கை இனி அங்கதான் வானு.. நீ இங்க இருந்த பழக்கம் வேற..
அங்க இருக்கப் போற பழக்கம் வேற.. சம்பிரதாயம் பார்ப்பாங்க மரியாதை
பார்ப்பாங்க.. எந்நேரமும் சொந்தக்காரங்க யாரவது வந்து போய்க்கிட்டே
இருப்பாங்க.. முழு நேரமும் வேலை இருக்கும்.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் ‘’
‘’ ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா போக போக பழகிரும்.. அந்த
வட்டு
ீ மருமகளா உன் கடமையை செய்… ஆனா எப்பவும் உன்
சுயமரியாதைய விட்டுக் கொடுக்காத.. ‘’ என்ற குந்தவையின் முகம்
இரும்பாக இருந்தது..
நீ இந்த குந்தவை நாச்சியார் பொண்ணு.. வானதி நாச்சியார் அத மட்டும் உன்
மனசுல வச்சுக்கோ… எந்த நேரத்துலயும் உன் சுயமரியாதையையும்
உரிமையையும் விட்டுக்கொடுக்காத.. இது ரெண்டும் தான் அங்க உனக்கு
கௌரவத்தை கொடுக்கும்…
‘’ உனக்கு அங்க என்ன பிரச்சனை வந்தாலும்.. உடனே எங்களுக்கு போன்
பண்ணு.. மறைக்க நினைக்காத ‘’
‘’ ஹ்ம்ம்ம் ‘’
‘’ உன் புருஷன் வட்ல
ீ இருக்கும் வரை பிரச்சனை வர வாய்ப்பில்லை.. ஆனா
இல்லாத நேரம் கண்டிப்பா பிரச்சனை வரும்.. அப்ப எது வந்தாலும் சமாளி..
ஆனா உன் புருஷன் கிட்ட சொல்லாம இருக்காத… ‘’
‘’ ஹ்ம்ம்ம் ‘’
வானுமா.. இதையும் மறக்காத புருஷன் பொண்டாட்டிக்குள்ள எந்த ரகசியமும்
இருக்கக்கூடாது ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது.. ஒரு விஷயம் இப்போ
தெரியவேணாம்னு ஆறப்போடலாமே தவிர மறைக்க கூடாது.. அதுவும்
கொஞ்ச காலத்துக்கு மட்டும்தான்.. என சுதாவும் தன் பங்குக்கு அறிவுரை
கூறினார்..
வானதிக்கு இவர்களின் பேச்சில் எது புரிந்ததோ இல்லையோ.. சுயமரியாதை
உரிமை விட்டுக் கொடுக்க கூடாது.. என்பதும் கணவனிடத்தில் எந்த
விஷயத்தையும் மறைக்கக்கூடாது என்பதும் அவள் மனதில்
ஆழவேரூன்றியது…
இவர்களின் இந்த அறிவுரை வானதியின் வாழ்க்கைக்கு உதவுமா.. இல்லை
பிரச்சனையை உண்டாக்குமா…. பொறுத்திருந்து பார்ப்போம்….

அத்தியாயம் 14

தர்ஷன்.. டேய் தர்பூஸ் போதும்டா.. உன் கண்ண ீர் டேங்க க்ளோஸ் பண்ணு..
இன்னும் எவ்வளவு நேரம் தான் அழுதுக்கிட்டே இருப்ப.. என ஷ்ரவனிடம்
கூறினான்..
ஆனால் ஷ்ரவனின் கண்களிலோ நிற்க்கமால் கண்ண ீர் வழிந்தது.. அதோடு
வானுவின் கரத்தை இறுக்க பற்றிக் கொண்டு.. அக்கா போகாதக்கா.. நான்
இனி உன்னை குண்டம்மா சொல்ல மாட்டேன்.. என் சாக்லேட் எல்லாம்
உனக்கே தரேன்.. நீ போய்ட்டா யாரு என் கூட சண்டை போடுவா.. ஸ்கூல்ல
நடந்ததெல்லாம் நான் யார்க்கிட்ட சொல்லுவேன்.. என கண்ண ீருடன் கூற..
வானுவும் தன் தம்பியை அணைத்து பொலபொலவென்று கண்ண ீர் விட்டாள்..
அக்காக்கு கல்யாணம் என்பதில் மகிழ்ச்சியாக சுற்றிக் கொண்டிருந்த
ஷ்ரவனிற்கு.. இன்று அக்கா ஊருக்கு செல்கிறாள் என்றும் இனி இங்கு
இருக்க மாட்டாள்.. எப்பொழுதாவது தான் வருவாள் என்றும் சொன்னவுடன்..
அவன் கண்ண ீர் ஆரம்பமாகியது…
சந்திரனுக்கும் குந்தவைக்கும் கூட தன் மகளை பிரியப்போவதை எண்ணி..
உள்ளுக்குள் ஒவ்வொரு நொடியும் வருந்திக்கொண்டிருந்தனர்.. இப்பொழுது
மகன் மகளின் சோகம்.. அவர்களை நொறுங்கச் செய்து கண்ண ீரை
வெளியாகியது…
சுதா.. என்ன இது சின்ன புள்ள மாதிரி.. அவங்கள சமாதானம் படுத்தாம
நீங்களும் அழுறிங்க..
ஷ்ரவ் குட்டி அக்கா.. இங்கயே இருக்க முடியாது.. அவளுக்கு கல்யாணம்
ஆகிடுச்சுல.. அதுனால அவ அவளோட புருஷன் வட்டுக்கு
ீ போய்த்தான்
ஆகனும்..
நீ தினமும் வடியோ
ீ கால் பண்ணி அக்காகிட்ட பேசு.. இப்போ இருக்குற
டெக்னாலஜில இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.. என அவனை
சமாதானம் படுத்தினார் கூடவே வானுவையும் அவள் தாய் தந்தையையும்
சேர்த்து..
நீ ரெடியாகுடா.. நாங்க போறோம் இங்க இருந்தா அழுதுகிட்டே இருப்பே..
என வானுவை விடுத்து அனைவரையும் அழைத்துச் சென்றார்…
வானு அறையை சுற்றிப் பார்த்தாள்.. எங்கும் அவளது நியாபக
புகைப்படங்கள்.. சிறு வயது முதல் இப்பொழுது வரை அவளது நியாகங்கள்
அழகிய தருணங்கள் அனைத்தும் நிழல்படமாக அவள் அறையின் சுவற்றில்
வற்றிருந்தது…

தர்ஷுவிடம் அடம் பிடித்து வாங்கிய.. டெடி பியர்ஸ்.. ஷ்ரவனிடம் சண்டை
போட்டு வாங்கிய அவன் வடியோ
ீ கேம்ஸ் என ஒவ்வொன்றும்
ஒவ்வொருவரை நியாபகப்படுத்த.. அதன் வேதனை தாங்காது கண் மூடி
நின்றாள்..
அப்பொழுது குளுமை நிறைந்த கரம்.. அவள் கண்ண ீரை துடைத்து
கன்னத்தை பற்ற.. விழிகள் திறந்தவள்.. அங்கு நின்ற தன்னவனின் மார்பில்
சரண்புகுந்தாள்… தன் வேதனையை கண்ண ீராய் கேவலாய் அவனிடத்தில்
கொட்ட.. அருள் அவள் முதுகை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தான்..
அம்மாளு இங்க பாரு.. ஏன் இவ்வளவு அழுகை.. ஹ்ம்ம்ம் என சிறு
பிள்ளையை கொஞ்சுவது போல் கண்களில் முத்தமிட்டு கேட்க.. அவளோ
பதில் கூறாமல் அவன் மார்பினில் புதைந்தாள்..
ஹ்ம்ம்ம் அம்மா அப்பா தம்பியெல்லாம் விட்டு போறது கஷ்டமாயிருக்கா..
என அவள் தலைமுடியை கோதியவாறு கேட்க.. அவளும்.. ஹ்ம்ம்ம் என
தலையசைத்து.. இன்னும் வாகாக அவனிடம் ஒன்டினாள்..
நீ எங்க வரப்போற.. நம்ம வட்டுக்கு
ீ தான.. அதுவும் உங்கம்மா பொறந்து
வளர்ந்த வட்டுக்கு..
ீ அக்கா வட்ட
ீ விட்டு போனதுக்கு அப்புறம்.. வடே

கலையிழந்த மாதிரி ஆகிடுச்சு.. நிம்மதியும் போச்சு.. ஐயா அப்புச்சியெல்லாம்
ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்காங்க.. ஆனா வெளில காண்பிச்சதில்ல..
இப்போ நீ வந்துதான் நம்ம வட்டு
ீ சந்தோஷம் நிம்மதியெல்லாம் திரும்ப
கொடுக்கனும்.. உன் மூலமா அக்கா திரும்ப நம்ம வட்டுல
ீ காலெடுத்து
வைக்கனும்.. என கூறியவன் முகம் வேதனையும் வருத்தமுமாக இருந்தது…
வானு கேள்வியாக அருளைப் பார்த்தாள்.. அதில் தன் அன்னை ஏன் தன்
பிறந்த வட்டை
ீ விட்டு சென்றார்.. ஏன் இத்தனை வருடங்கள் அவர்களைப்
பற்றி தங்களிடம் கூறியதுமில்லை.. பேசியதுமில்லை… என்ற நிறைய
கேள்விகள்..
அதைப் புரிந்துக் கொண்ட.. அருள் எல்லாத்தையும் சொல்றேன்.. ஆனா
இப்பயில்லை.. ஊருக்கு போனதுக்கு அப்புறம் அதற்கான நேரம் வந்ததும்
சொல்றேன்.. இப்போ இந்த அழுகைய விட்டுட்டு ஊருக்கு கிளம்புற
வேலைய பாரு.. என அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றான்…
வானதி இப்பொழுது சற்று தெளிவாக இருந்தாள்.. அழுகையும் சற்று
மட்டுப்பட்டது.. கபோர்ட்டை திறந்து.. சுடிதார் எடுக்க போனவளின் கரம்
அங்கிருந்த புடவையைக் கண்டு நின்றது..
அம்மாளு புடவை எடுத்துக்கோயேன்.. உனக்கு நல்லாயிருக்கும் என்ற
அருளின் ஆவலான முகம் மனக்கண்ணில் மின்ன.. அவளறியாமலே
வானுவின் கரம் புடவையை எடுத்தது..
சுதாவின் உதவியோடு புடவையை கட்டியவள் கண்ணாடி முன் தன்
பிம்பத்தை பார்த்தாள்… சிகப்பும் பச்சையும் கலந்த அந்த ஒர்க் சேரி.. அவளின்
நிறத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது… கைநிறைய வளையல்கள்
அணிந்து.. கழுத்திற்கு மஞ்சள் சரடுடன்.. வெள்ளையும் மரகதம் மணிகள்
நிறைந்த நெக்லஸ் மட்டும் அணிந்தவள்.. கண்ணாடியில் தன்னை பார்க்க..
என்னவோ குறைவது போல் இருந்தது..
என்ன என்று யோசித்துக் கொண்டே கண்களை சுழற்றியவளின் விழிகள்..
அங்குள்ள குங்குமச்சிமிழில் நிலைத்தது.. அதையெடுத்து தன் நெற்றி
உச்சியில் இட்டு இப்பொழுது கண்ணாடியை பார்த்தாள்.. முகத்தின் பொலிவு
கூடியது போல் தோன்ற.. அவள் இதழ்கள் புன்னகை சிந்தின…
தோட்டத்தில் அமர்ந்திருந்த தில்லையின் முகம் யோசனையில்
சுருங்கியிருந்தது.. வந்ததிலிருந்து.. அருளையும் வானதியையும் தான் பிறர்
அறியாது பார்த்துக் கொண்டிருந்தாள்.. அருள் வானதியை பார்ப்பது.. அவள்
இவனை கண்டுகொள்ளாமல் இருப்பது.. அருளின் கோபம்.. நிலத்திற்க்காக
அவளை திருமணம் செய்துக் கொண்டான் என அவள் தாய் கூறியதும்..
அருளை வானதி முறைத்தது.. என ஒவ்வொரு நிகழ்வையும் தன்
மூளைக்குள் சேமித்தாள்.. ஏனெனில் இப்பொழுது நடக்கும் சின்ன விஷயம்
கூட பிற்காலத்தில் பெரிய சம்பவங்களுக்கு வித்தாகலாம்.. இல்லையா..
கண்டிப்பாக இருவருக்குள்ளும் பிரச்சனை இருக்கு என அவள் மனம்
உறுதியாக கூறியது.. அதுவும் தர்ஷன் வானதியுடன் நெருங்கி பழகுவதை
பார்த்து.. அருளிடம் கோபம் பொறாமை என ஏதேனும் தென்படுகிறதா என
பார்க்க தோல்விதான்..
அவன் இருவர் செய்கைகளையும் சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தானே..
தவிர அதில் வேறு கேட்ட எண்ணங்கள் தெரியவில்லை.. இருந்தும் தன்
முயற்சியை கைவிடாதவாறு.. அருள் வானதியை கண்காணித்தாள்..
அவர்களின் முகபாவனையை கூட விடாமல் கவனித்தாள்… முக்கியமாக
வானதி அவளை காணும்போதெல்லாம் முகத்தை பாவமாகவும்
சோகமாகவும் வைத்துக் கொண்டாள்.. விழிகளில் வேதனை பொங்கி
வழிந்தது.. அந்தளவிற்கு திறமையாகவும் தத்ரூபமாகவும் நடித்தாள்…
சிவகாமி அனைவரையும் சாப்பிட அழைத்தார்.. அப்பொழுது வானதியும்
மாடியிலிருந்து இறங்கி வர.. அருளின் நிலை மோசமானது.. தன்
அம்மாளுவின் அழகில் சொக்கி.. அவளையே விழுங்கி விடுமாறு பார்க்க..
அதில் பெண்ணவள் நாணம் கொண்டு.. அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..
அருளின் பார்வையில் புடவைக் கட்டியதற்கான பலன்.. கிடைத்துவிட்டது…
சந்திரனிற்கும் குந்தவைக்கும் தங்கள் மகளின் தோற்றம் அவள் இன்னும்
சிறுபிள்ளை அல்ல.. இப்பொழுது அவள் மனைவி ஸ்தானத்தை
அடைந்துவிட்டாள்.. என தெரியப்படுத்த.. அவர்களால் அதை
நம்பமுடியவில்லை.. பெண் குழந்தைகள் தந்தையிடம்தான் ஓட்டும் என்ற
பழமொழிக்கு ஏற்ப வானதியும் சந்திரனோடுதான் சுற்றுவாள்… அதனால் தன்
தோளிலும் மாரிலும் தூக்கி வளர்த்த சிறு பிள்ளையை அவளிடம் தேடினார்…
பைத்தியக்கார தந்தையின் எண்ணம்.. மீ ண்டும் அவள் சிறுபிள்ளையாகி
அவளை மீ ண்டும் தோளில் தாங்கும் வரம் தா இறைவா என தன் மனதோடு
வேண்டினார்..
இப்பொழுது இருவருக்கும் அவளின் வளர்ந்த தோற்றம் மறைந்து.. அவளை
முதன் முதலில் தங்களின் கரத்தில் வாங்கியது.. பல்லில்லா பொக்கை
வாயினால் எச்சில் ஒழுக சிந்திய சிரிப்பு, தன் நான்கு கால்களால் தவழ்ந்தது,
பிஞ்சு பாதம் எடுத்துவைத்து தத்தக்கா பித்தக்கா என நடந்து.. முதன் முதலில்
அவள் மழலை மொழியில் அம்மா அப்பா என கூறிய அமுதினினும் இனிய
வார்த்தைகள், முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் போது.. அவர்களின்
காலை பிடித்து போகமாட்டேன் என அடம்பிடித்தது என ஒவ்வொரு
தருணங்களும் நினைவு வந்து.. அவர்களின் விழிகள் பனித்தது..
குந்தவை அதன் வேதனை தங்கமாட்டாது.. கேவலுடன் சந்திரன் மார்பில்
சாய்ந்தார்.. சந்திரனுக்கும் அதே நிலைதான்.. குந்தவை வெளியே
கொட்டிவிட்டாள்.. அவரால் முடியவில்லை…
குந்தவையின் அழுகையில் அனைவர் கவனமும் அவர்கள் புரம் திரும்பியது..
எல்லோருக்கும் அவர்களின் நிலை புரிந்தது… சிவகாமிக்கும் கண் கலங்கியது..
தன்னுடன் வம்பிழுக்க இனி பேத்தி இங்கிருக்க போவதில்லை என்ற நினைவு
அவருக்கு இன்பத்திற்கு பதில் துன்பத்தை தான் கொடுத்தது… ஷ்ரவனும்
இரண்டாம் கட்டம் அழுகைக்கு தயாராகினான்..
சிவா சுதாவும் அவர்களை சமாதானம் படுத்தும் நிலையில் இல்லை..
அவர்களுக்கு இரண்டாவதாக பெண் மகவு பிறந்து ஒரு மாதத்திலே காய்ச்சல்
வந்து இறந்து விட்டது.. அவர்கள் மூவரும் மிகவும் நொந்துவிட்டனர்..
அப்பொழுது தான் வானதி பிறந்து அவர்களை அத்துன்பத்திலிருந்து மீ ட்டாள்…
இதுவரைக்கும் வானதியை அவர்களின் சொந்த மகள் போலத்தான் பார்த்துக்
கொண்டிருந்தனர்.. அவளும் பெரும்பாலும் அவர்கள் வட்டில்
ீ தான் இருப்பாள்..
ஆனால் இப்பொழுது அவள் இங்கிருந்து செல்லும் வேளை அவர்கள் படும்
வேதனை.. சந்திரன் குந்தவையின் வேதனைக்கு இணையானது..
தர்ஷன் ஒரு புரம் கண்கலங்கி நிற்க.. வானதிக்கும் அவர்களை
பிரியப்போவதை எண்ணி விழிகளில் நீர்ப்பெருக்கடுக்க.. அவர்களை நோக்கி
ஓடிவந்தாள்.. அவர்களும் அவளை எதிர்கொண்டு அணைத்தனர்..
சிவகாமி, சந்திரன், குந்தவை, சிவா, சுதா, தர்ஷன், ஷ்ரவன் என அனைவரது
அன்பென்னும் அணைப்பில் குளிர்காய்ந்தாள்..
செங்குட்டுவன், அழகு வள்ளியம்மை ஏன் வடுகம்மாள் கூட இவர்களின்
அன்பை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால்.. கணபதி
செட்டியாரின் குடும்பம் அசூசையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்…
அருளிற்கு இவர்களின் பாசப்பிணைப்பைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தாலும்..
தன் நெஞ்சத்தில் ஆறுதல் தேடுவதை விடுத்து.. அவன் மனைவி அனைவரின்
அணைப்பிலிருந்ததைக் கண்டு ஒருபக்கம் பொறாமை பொங்க செய்தது..
அதனால்.. போதும் போதும் எல்லாரும் இப்படி இறுக்கினா என் பொண்டாட்டி
என்ன ஆகுறது.. என்றவன் மெல்ல அவர்களிடத்திலிருந்து அவளை பிரித்து
தன் தோளில் சாய்த்துக் கொண்டான் இறுக்கமாக..
அவனின் செய்கையைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க.. குந்தவை முறைக்க
ஆரம்பித்தாள்..
சிவகாமி.. சரி வாங்க சாப்பிட போகலாம்.. நல்ல நேரம் போரதுக்குள்ள
கிளம்பனுமில்ல.. என அனைவரையும் உணவுண்ண அழைத்தார்…
வள்ளியம்மை சுதா குந்தவை பரிமாற மற்றவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர்..
தர்ஷன் மட்டும் கன்னத்தில் கைவைத்து சாப்பாட்டு பாத்திரங்களை
பார்வையிட்டுக் கொண்டிருந்தான்..
சிவகாமி.. என்னடா சாப்பிடாம பாத்திரத்தையே பார்த்துட்டு இருக்க..
ஹ்ம்ம்ம் இதையெல்லாம் பார்த்தவுடனே என் வயிறு நிறைஞ்சுருச்சு.. ஒரு
மினி முனியாண்டி விலாஸே இங்க தான் இருக்கு.. என முனுமுனுத்தவன்
வெளியில் ஈஈஈ என சிரித்து.. ஏன் க்ரானி இவ்வளவு ஐட்டம்.. ரெண்டு மூனு
மட்டும் செஞ்சுருக்கலாம்ல..
ப்ச் போடா நானே கம்மியா பண்ணிட்டேன்னு வருத்தப்படுறேன்.. நீ என்ன
கிண்டல் பண்றியா.. பெருசா என்ன செஞ்சுருக்கேன்.. நாட்டுக்கோழி குழம்பு,
தந்தூரி சிக்கன், சிக்கன் வறுவல், தேங்காய் பால் இறால் குழம்பு, மட்டன்
குழம்பு, ஆட்டு ஈரல் பிரட்டல், மட்டன் மிளகு கறி, கெழுத்தி மீ ன் குழம்பு,
வஞ்சர மீ ன் வறுவல், குடல் மிளகு கறி, நண்டு வறுவல், ரோஜாப்பூ ரசம்,
இளநீர் சூப், தம்புருட் அல்வா, குறுவை அரிசிப் பாயாசம்ன்னு கொஞ்சமா
தான் செஞ்சுருக்கேன்.. என கூறியதும்..
தர்ஷன்.. இது கொஞ்சமா என வாய் பிளந்தவன்... அக்கம் பக்கத்தில் பார்க்க
அனைவரும் புள் கட்டு கட்டிக்கொண்டிருந்தனர்.. அதைக் கண்டு அவனுக்கு
மேலும் அதிர்ச்சி..

தர்ஷன் உணவு வகைகளையும் தன் சிக்ஸ்பேக்கையும் பார்த்து பெருமூச்சு


விட்டான்.. பிறகு கொஞ்சம் மட்டுமே வைத்து சாப்பிட்டவன்… அருகில்
அமர்ந்து வெளுத்துக் கொண்டிருந்த அருளைப் பார்த்து ஆற்றாமையுடன்.. ஏன்
மாப்பு.. இப்படி கட்டியும் எப்படி உங்க ஜிம் பாடிய மெயின்டெயின் பண்றிங்க..
என கேட்டான்..
டேய் சாப்பிடுற புள்ளைய பார்த்து கண்ணு வைக்குற.. என சிவகாமி கடிந்துக்
கொண்டார்..
அடேயப்பா.. இவரு மேல கண்ண வச்சுட்டு.. நாங்க எந்த கண்ணால
பார்க்குறது.. க்ரானி வர வர ரொம்ப ஓவரா போற பார்த்துக்க.. நான் என்
மாப்புகிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.. நீ தலையிடாத.. என்றவன் அருளிடம்..
நீ சொல்லு மாப்பு.. என்றான்..
அடேய்.. எங்க வயலை சுத்தி பார்த்தாலே.. நான் சாப்பிட்டதெல்லாம் காணாம
போயிரும்.. இதுல நான் எங்க தனியா மெயின்டெயின் பண்றது.. என
சிரிப்புடன் கூறினான்..
பதார்த்தங்களையும் தன் சிக்ஸ்பேக்கையும் ஏக்கமாகவும் பாவமாகவும்
பார்த்தவன்.. சிறுபிள்ளை போல் உணவை கொறித்தான்...
இதோ அதோ என்று… வானதி புக்ககம் செல்லும் நேரம் வந்துவிட்டது..
ஏற்கனவே மனதின் உணர்வுகளை கொட்டிவிட்டதால் யாரும்.. போற நேரம்
அழவில்லை..
வானதி அனைவரையும் அணைத்து விடைபெற்றுக் கொண்டிருந்தாள்..
குந்தவையிடம் வரும்பொழுது விழிகள் கலங்க ஆரம்பித்தது..
ப்ச்.. போற நேரம் அழவேண்டாம்.. நான் சொன்னத நியாபகம் வச்சுக்கோ..
எதா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு என அவள் நெற்றியில்
முத்தமிட்டவாறு கூறியவளின் விழிகளும் கலங்கி தான் இருந்தது…
சிவகாமியிடம்.. என் தொல்லை இல்லாம இல்லாம ரொம்ப சந்தோஷமா
இருப்பல்ல என சினுங்கியவாறு கூற..
ஆமாண்டி கழுதை என விழி கலங்க அனைத்துக் கொண்டார்.. ஷ்ரவன்
மிகவும் அழுக.. அவனை ஒருவாறு சமாதானம் படுத்தினாள்…
கடைசியாக சந்திரனிடம் வந்தாள்.. பதில் பேசாமல் அணைத்து மட்டும்
கொண்டவரின் விழிகளில் இருந்து இரண்டு சொட்டு கண்ண ீர் வானுவின்
சிரத்தில் விழுந்தது..
அவள் கரம் பிடித்து அருளின் கரத்தில் ஒப்படைத்தார்.. உன் மேல எனக்கு
முழு நம்பிக்கை இருக்கு.. அதான் எந்த கேள்வியும் கேட்காம என் பொண்ண
உன் கைல கொடுத்திருக்கேன்.. என்று மட்டும் கூறினார்….
ஒருவழியாக.. அனைவரும் நாட்டரசன் கோட்டை நோக்கி பயணமாகினர்…
வானதி கலங்கிய விழிகளை துடைத்தவாறு அமர்ந்திருக்க.. அவளை தன்னை
நோக்கி இழுத்தவன்.. அவள் கண்ண ீர் துடைத்து.. அழுகையில் சிவந்து போன
அந்த மதிமுகத்தில் சிறு சிறு முத்தம் வைக்க..
வானுவின் மனம் அமைதியாக.. சிறிது நேரத்திலே அவன் நெஞ்சத்தில் துயில்
கொண்டாள்…
இரவு வேளையில் அனைவரும் நாட்டரசன் கோட்டைக்கு வந்துவிட்டனர்..
அந்நேரத்திலும் இவர்களை வரவேற்க சொந்தபந்தமும் ஊர்மக்களும்..
மாளிகையில் நிறைந்திருந்தனர்…
அம்மாளு அம்மாளு.. முழிச்சுக்கோடா.. வடு
ீ வந்துருச்சு பாரு என அவள்
கன்னத்தை தட்டி மெல்லிய குரலில் கூற.. வானதி விழித்தாள்.. இருந்தும்
தூக்கக்கலக்கம் போகவில்லை…
அருள் தன் கைக்குட்டையை தண்ண ீரில் நனைத்து அவள் முகத்தை
துடைத்துவிட்டான்..
உறக்க கலக்கம் மறைய அதனால் வானதி அருளை முறைக்க.. அவனோ
சிரிப்புடன் இப்படியே நீ தூங்கி வழிஞ்ச மாதிரி நின்னா யாராவது ஏதாவது
சொல்லுவாங்க… இப்போ போகலாம் வா..
அருள் வானதி காரை விட்டு இறங்க.. பெண்கள் ஆலம் சுற்றி வட்டிற்குள்

அழைத்து வந்தனர்…
வள்ளியம்மை வட்டிற்குள்
ீ நுழைந்த மறுநொடி அவரை வேலை இழுத்துக்
கொண்டது…
செங்குட்டுவன் அனைவரிடமும் சற்று நேரம் பேசியவர்.. பிறகு
அனைவரையும் ஓய்வெடுக்க சொன்னார்.. ஊர்மக்களும் சென்றுவிட்டனர்..
முதல் ஆளாக வானதி அறைக்குள் பறந்துவிட்டாள்… சிவா குடுமத்தினரை
ஓய்வெடுக்க அனுப்பிய அருள்.. சிறிது நேரம் கழித்தே தன் அறைக்கு
வந்தான்..
அங்கு வழக்கம் போல் வானதி துயில் கொள்ள.. அருள் சிரிப்புடன் அவள்
அருகில் படுத்து அவளை தன் நெஞ்சத்தில் இழுத்துக் கொண்டான்…
நாளைய இரவுக்காக அவன் எதிர்பார்ப்புடன் இருக்க.. அவன் அம்மாளோ
அவனை கோபத்தில் ஆழ்த்தி வருத்தத்தில் வதைக்க போகிறாள் என அவன்
அறியவில்லை….

அத்தியாயம் 15

இருள் பிரியாத அந்த விடிகாலையிலே அருளின் வடு


ீ முழித்துக் கொண்டது..
ஆட்களும் நடமாட ஆரம்பித்துவிட்டனர்.. ஆனால் அருளோ தன் அம்மாளை
எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்..
‘’ அம்மாளு அம்மாளு.. ‘’
‘’ ஹ்ம்ம்ம்.. ‘’
‘’ விடிஞ்சுடுச்சுடுச்சுடா.. எழுந்துக்கோ… ‘’
‘’ ஹ்ம்ம்ம்.. ‘’
‘’ மணி நாலரை ஆச்சுடா.. என கொஞ்சலுடன் எழுப்ப.. ‘’
‘’ என்னது.. நால்றையா.. யோவ் எதுக்குய்யா இப்படி மிட்நைட்ல எழுப்புற..’’
என தூக்கக்கலக்கத்தில் அழுதாள்..
ப்ச் அம்மாளு என்ன இது.. காலைல எழும்போதே அழக்கூடாது.. என
கண்டிப்புடன் கூறியவன்.. இங்க எல்லாருமே நாலுமணிக்கெல்லாம்
எழுந்திரிச்சுடுவாங்க..
இனி நீயும் அப்போ எழுந்துக்கோட. என சிறுபிள்ளைக்கு கூறுவது போல்
கூறினான்..
நோ நோ.. நான் எட்டுமணிகிட்ட தான் எழுந்திருப்பேன்.. என்னால இப்படி
அர்த்தராத்திரியெல்லாம் எழுந்துக்க முடியாது. ப்ளஸுங்க.. என்னை டிஸ்டர்ப்
பண்ணாதீங்க எனக்கு தூக்க தூக்கமா வருது.. என மீ ண்டும் தூங்க போக..
அவளை விடாது.. சோம்பேறி அம்மாளு ஒழுங்கா எழுந்திரி.. காலைல
சீக்கிரம் எழுந்திரிச்சா அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கலாம்.. போய்
சுடிதார் மாத்திட்டு வா.. என்கூட வந்து நம்ம வயல சுத்திப்பாரு.. என
வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்..
அய்யோ கருப்பன் கொல்லுறானே என கோவை சரளா மாடுலேஷனில்
நினைத்து அழுதவாறு கிளம்பினாள்..
வடுகம்மாள்.. எய்யா.. அருளு என்ன அதிசயமா இறுக்கு உன் பொண்டாட்டி
வெயில் வருமுன்னே எழுந்திச்சுட்டா.. என முகவாயில் கை வைத்தவாறு
அதிசயித்தார்…
ஏற்கனவே.. அருள் சீக்கிரம் எழுப்பியதால் கடுப்பில் இருந்தவள்.. வடுகம்மாள்
பேச்சில் மேலும் கடுப்பாகி.. அருளையும் வடுகம்மாளையும் முறைக்க
ஆரம்பித்தாள்..
அருள்.. நான் எழுந்தரிச்ச உடனே.. அவளும் எழுந்திரிச்சுட்டா அப்பத்தா..
அதான் நம்ம வயலலெல்லாம் சுத்தி காமிக்கலாம்ன்னு கூட்டிட்டு போறேன்..
என அருள் கூறியதும்.. வானதி.. பொய்யா அள்ளுவிடுறான் பாரு.. என
மனதிற்குள் அருளை அர்ச்சித்துக் கொண்டாள்.
ஏன்யா.. உன் கூட கூட்டிட்டு சுத்துற.. இவளுக்கு வட்டு
ீ வேலை பழக
வேணாம்மா.. எத்தனை நாளு வள்ளியே எல்லா வேலையும் பார்ப்பா..
வட்டுக்கு
ீ மருமக வந்தும் அவதான் வேலை பார்க்கனுமான்னு பேச்சி
அண்ணி கேட்குறாக. எனக்கு சங்கடமா போச்சு.. என்றவர்.. இவள இங்கன
விட்டுட்டுபோ ஒரே வாரத்துல எல்லா வேலையும் பழக்கிவிடுதேன்.. என
கூறினார்
ஆத்தா.. பேத்திய போட்டு ஏன் படுத்துறீக.. வானதிக்கு இதெல்லாம்
பழக்கமில்லைன்னு உங்களுக்கு தெரியாத.. கொஞ்ச நாள் போனப்பிறகு…
எல்லாம் அவளே கத்துப்பா என கூறிய அழகு.. அப்போது தான் உள்ளே வந்த
வள்ளியம்மையிடம் என்னடி எங்க ஆத்தாவ ஏத்திவிட்டுட்டு வேடிக்கை
பார்க்குறியா.. என் பேத்தி உனக்கு மருமகளா வந்தா உன் வேலையெல்லாம்
இனி அவதான் செய்யனும்மோ.. என திட்ட ஆரம்பித்தார்…
பாவம் வள்ளியம்மையோ கணவன் எதற்க்கு திட்டுகிறான் என தெரியாமல்
முழித்துக் கொண்டிருந்தார்.. கடைசியில் செங்குட்டுவன் தான் அழகுவை
அமைதிப் படுத்தினார்…
செங்குட்டுவன்.. அழகு.. உங்க ஆத்தா பேசுனதுக்கு மருமவ என்ன பண்ணும்..
என அவனை அதட்டியவர்.. கொஞ்சநாள் பேத்திய சும்மா விடு வடுகம்மா..
என மனைவியையும் அதட்டினார்…
வடுகம்மாள் முகத்தை நொடித்துக் கொண்டு.. உள்ளே சென்றார்.. வாயோ
முனுமுனுவென்று அனைவரையும் வசைபாடியது…
அருள்.. சரி நாங்க கிளம்புறோம்.. என்றவன் தாயிடமும் வயலுக்கு போவதாய்
கூறினான்….
வள்ளியும் சந்தோஷத்துடன்.. பார்த்து போயிட்டு வாங்க.. என கூறியவர்..
உடனே அருளு இருய்யா நீராகாரம் குடிச்சுட்டு போங்க என ஆளுக்கு ஒரு
சொம்பு நீராகாரத்தை கொடுத்தார்..
வானதியோ முகத்தை சுருக்கி.. நான் ஹார்லிக்ஸ் தான் குடிப்பேன்
இல்லைன்னா பிஸ்தா பால் கொடுங்க வேறேதும் வேணாம்.. என வாயை
மூடினாள்..
அவளின் செய்கையில்.. மற்றவர்கள் சிரிக்க அருள்.. இது கேப்பைக்கூழையும்
நீராகாரத்தையும் கலந்து செஞ்ச ஹெல்த் டிரிங்க்.. உடம்புக்கு ரொம்ப
நல்லது.. குடிச்சு பாரு பிடிக்கலைன்னா.. வேண்டாம்.. என அவன் தன்மையாக
கூற..
அந்த குரலுக்கு கட்டுப்பட்டவளாக எதுவும் கூறாது குடித்தாள்.. அதன்
சுவையும் பிடிபட விரும்பியே.. குடித்தாள்..
பிறகு இருவரும் வயலுக்கு கிளம்பினர்.. அருள் வானதியின் கரத்தை பிடிக்க..
காலை தூக்கத்தை கெடுத்த கடுப்பில் கரத்தை உதறினாள்...
அருள் சிரிப்புடன் மீ ண்டும் அவள் கரத்தை இழுத்து தன் உள்ளங்கைக்குள்
அவள் உள்ளங்கையை அடக்கிக் கொண்டு நடந்தான்.. வானதி அதனை பிரிக்க
முயன்று தோற்று.. அமைதியாக வந்தாள்.. மேலும் அவன் கரத்தின்
குளுமையும் இவள் கரத்தின் வெம்மையும் சேர்ந்து அவளை ஓர் உணர்வு
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது..
வேண்டா வெறுப்பாய் வந்துக் கொண்டிருந்த வானுவின் விழிகள்..
எதிர்கொண்டு மோதிய குளிர்காற்றில் சற்று மட்டுப்பட்டது என்றால்..
கண்ணிற்கு குளிர்ச்சியாய் பனிபடர்ந்த பச்சை பசேல் வயல்வெளிகளும்..
மேகக்கூட்டங்கள் தவழ்ந்து போகும் அளவிற்கு வானுயர்ந்து வளர்ந்திருந்த
தென்னை மரங்களும் வானதியின் மொத்த மனநிலையையும் மாற்றின..
தானாகவே அருளின் கைகோர்த்து அவற்றை ரசிக்க.. அருளோ தன்னவளை
ரசிக்க ஆரம்பித்தான்…
அம்மாளு இனி இதுலேருந்து எல்லாம் நம்ப நிலம் தான் என அருள் சுட்டிக்
காட்டிய நிலங்களைக் கண்டு வானதியின் தலை சுற்றியது..
ஏனெனில் அவளுக்கு தொடக்கம் மட்டுமே தெரிந்தது.. முடிவு அவள்
விழிகளுக்கு எட்டவே இல்லை.. அந்நிலம் அவள் கண்ணிற்கு எட்டாத அளவு
பரந்து விரிந்திருந்தது…
அப்பொழுது கதிரவன் வட்ட வடிவமாய் ஆரஞ்சு வண்ண மெல்லிய
ஒளிக்கற்றைகளை அனுப்பியவாறு.. கொஞ்ச கொஞ்சமாக மேலே
எழும்பியது… வானதி தன் வாழ்க்கையில் முதன் முதலாக சூரிய உதயத்தை
காண்கிறாள்.. அதனால் விழிகள் சிமிட்டாது அதனை ரசனையுடன்
நோக்கியவள்.. அருகில் நின்றிருந்த அருளின் தோளில் தலை சாய்த்து.. அந்த
நிமிடங்களை தனக்குள் பதிந்துக் கொண்டாள்.. அருளும் சுற்றம் மறந்து..
அவள் தோளில் கரம்கொடுத்து தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான்….
நேரம் காலம் மறந்து தங்களுள் மூழ்கியிருந்தவர்களை சுற்றியுள்ளவர்களின்
சிரிப்பொலி தான் நினைவுக்கு திருப்பியது..
அருள் வெட்கச்சிரிப்புடன்.. வானதியின் தோளிலிருந்து கையை எடுக்க..
வானதி அவன் முகம் காணாது திரும்பி நின்றாள்..
அருள்.. வானதியை இயல்பாக்கும் பொருட்டு.. இன்னும் அடுத்தடுத்து
நிறையா இருக்கு.. அந்த பக்கட்டு புள்ளா நம்ம தோப்புதான்.. அத நாளைக்கு
பார்க்கலாம்.. என்றவுடன்..
அவள்.. இன்னுமா என விழி விரித்து கேட்க..
அதன் அழகில் சொக்கியவன்.. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க..
அதில் லஜ்ஜை கொண்டு பார்வையை திருப்பியவள்.. அப்பொழுது தான்
சுற்றியுள்ள கன்னியர்களின் பார்வை.. தன் அருகில் நின்ற
கட்டிளங்காளையிடம் செல்வதை கவனித்தாள்…
அதில் அவள் முகம் சுருங்கியது.. அதுவும் அங்குள்ளவர்களில் ஒருத்தி.. ‘’
என்ன மாமா.. உங்களுக்காக நாங்க இத்தனை பேர் தவிச்சுக்கிட்டு
இருக்கோம்.. நீங்க என்னன்னா கண்டுக்காம இருக்கீ க.. ‘’ என ஒருத்தி கேட்க..
மற்றொருத்தி.. என் கண்ணு உங்கள பார்த்த பிறவுதான் குளிர்ச்சியா இருக்கு..
மாமோவ்.. இத்தனை நாள் இந்த குளிர்ச்சி இல்லாம எவ்வளவு
அவதிப்பட்டோம் தெரியுமா.. என அடுத்தடுத்து ஒவ்வொருத்தியாய் கேலியும்
கிண்டலுமாய் பேச.. வானதியின் மனம் சினுங்கியது..
அவர்களின் கேலியும் கிண்டலும் வழக்கமான ஒன்றாதலால்.. அருள்
சிரிப்புடன் அவர்களை பார்த்தான்..
அதைக்கண்டு மேலும் முகத்தை சுருக்கிய வானதி.. தன்னவன் தனக்கு
மட்டுமே உரிமையானவன் என்பதை காட்டும் விதமாக.. அவனின் நீண்ட
வலுமையான கரத்தை பற்றி.. தன்னுள் புதைத்துக் கொண்டவள்.. அவர்களை
மிதப்பாக பார்த்தாள்..
அது கன்னியர்களுக்கு புரிந்ததோ இல்லையோ.. ஆனால் பெண்ணவளின்
பொறாமையும் உரிமையை காட்ட முற்படுவதும்.. அந்த ஆறடி காளைக்கு
புரிய.. அவன் விழிகள் சிரிப்பில் மலர்ந்தது.. அதுவும் தன்னவளின்
பொறாமையில் பொங்கிய வதனத்தை கண்டு.. கள்ளுண்ட வண்டாக
அவளையே தன் பார்வையால் மொய்த்தான்…
ஏண்டி காட்டுச் சிறுக்கிங்களா.. எங்க ராசாவ பார்த்து உங்க நொள்ள
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்காதுடி.. ராசாக்கேத்த ஜோடியா ராணி மாதிரி
இருக்குற அவுக பொஞ்சாதிய பார்த்து வயிறு எரிஞ்சு புகை கண்ணு வழியா
வந்துருக்கும்.. அந்த எரிச்சல போயி குளிர்ச்சின்னு நினைச்சுக்காதீங்க என
பாட்டி லொள்ளு பேசவும் பெண்கள் முகம் கருத்து அக்கிழவியை
முறைத்தன…
அவரோ அதை தூசு போல் தட்டிவிட்டு.. வானதியை பார்த்து சிரித்தார்.. பெண்
அணியை நோஸ் கட் செய்ததால்.. வானதியும் தாராளமாய் புன்னகைக்க..
ஆத்தி எம்புட்டு அழகா இருக்கத்தா.. அதான் எங்க ராசா உங்கள தூக்கிட்டு
வந்துட்டாக போல.. என முகவாயில் கைவைத்து அதிசியம் போல் கூறியவர்..
எங்க ராசாவ சூதானம பார்த்துக்கத்தா.. ஏன்னா அம்புட்டு கொள்ளி கண்ணும்
என்ற ராசா மேலதான் இருக்கு என அவர்களுக்கு திருஷ்டி சுற்றினார்..
‘’ கிழவிக்கு கொழுப்பை பாத்தியா.. ‘’
‘’ ம்ம்ம்ம் ஐயா இருக்குற தெகிரியம்.. ‘’ தங்கள் ஜொள்ளலில் மண்
அள்ளிப்போட்டதால்… பெண்கள் அணி அம்மூதாட்டியை வாயில் போட்டு
அரைத்துக் கொண்டிருந்தனர்..
வானதி ‘’ போலாமா.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் போலாம் என அவள் கைகோர்த்து நடக்க.. ‘’ கன்னியர் கூட்டம்
பொறாமையுடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தது..
இருவரும் வட்டிற்குள்
ீ நுழையும் போது.. சிவா சுதா, தர்ஷன் அனைவரும்
ஹாலில் அமர்ந்திருந்தனர்..
தர்ஷன் வானதியைக் கண்டவுடன்.. ஹேய் வானு.. ஆன்ட்டி சொன்னாங்க நீ
நாலரைக்கெல்லாம் எழுந்துரிச்சுட்டியாம்.. உண்மையா என வியப்பும்
அதிர்வுமாக கேட்க..
ஹ்ம்ம்ம் என பெருமையாக தலையசைத்தவள்.. நான் சூரியன் உதிக்குறத
பார்த்தேன் தெரியுமா.. ரொம்ப சூப்பரா இருந்துச்சு.. இனிமே நானும் இவர்
கூட காலைல வயலுக்கு போக போறேன்.. என சிறுபிள்ளை போல் துள்ளிக்
குதித்து கூறினாள்..
அதை வாஞ்சனையுடன் பார்த்த செங்குட்டுவன் ‘’ அருளு நம்ப ஜோசியர்
போன் செஞ்சுருந்தாருய்யா.. நாளைக்கு உங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கும்
ரொம்ப நல்ல நாளாம்.. அதுனால நாளைக்கே பேத்திக்கு தாலி பிரிச்சு போட
சொல்லிட்டாரு.. நீ மாப்பிளைட்ட இந்த விஷயத்தை சொல்லி என்ன
பண்ணலாம்ன்னு கேளு… ‘’
‘’ இதோ பண்றேன் ஐயா.. என சந்திரனிடம் விஷயத்தை கூறி..
செங்குட்டுவனிடம் கொடுத்தான்.. ‘’
சந்திரன் ‘’ தாத்தா நாங்க இப்போ உடனே கிளம்ப முடியாத சூழ்நிலைல
இருக்கோம்.. எங்களால வர முடியாது.. ஆனா நல்ல விஷயத்தை தள்ளிப்
போட வேணாம்.. நீங்க பங்க்ஷண வையுங்க.. பெத்தவங்க ஸ்தானத்துல என்ன
செய்யணுமோ அதை சிவாவும் சுதாவும் செய்வாங்க.. ‘’
செங்குட்டுவனிற்கு மிகுந்த ஏமாற்றமாய் போய்விட்டது.. கண்டிப்பாக
இந்நிகழ்ச்சிக்கு குந்தவை வருவாள் என எதிர்பார்த்திருக்க.. இப்பொழுது
மாப்பிளை இவ்வாறு கூறியவுடன் அவரால் பதில் பேச இயலவில்லை..
அதனால் சுரத்தே இல்லாமல் சரி மாப்பிளை.. என போனை வைத்தார்..
என்ன என்று கேட்ட அழகுவிடமும் மற்றவரிடமும் விபரம் கூற..
அவர்களுக்கும் ஏமாற்றம் தான்..
ஐயா அதான் மாமா முக்கியமான வேலை சொல்றாங்கள்ல விடுங்க என
அருள் தான் ஆறுதல் கூறினான்..
அருளும் தர்ஷனும் ஊரை சுற்றி வந்தனர்.. செங்குட்டுவன் அழகு சிவா என
மூவரும் ஒரு கூட்டனியாய் அமர்ந்திருக்க.. சுதா பெண்களோடு
ஜாயிண்டானார்.. அவர்களுக்குள் உப்புக்கு சப்பானியாய் வானதியும்..
தாலி கோர்க்கும் வைபவம் பற்றிய பேச்சுவார்த்தைகள்
நடந்துக்கொண்டிருக்க.. பேச்சியும் தில்லையும் வட்டிற்குள்
ீ வந்தனர்…
அவர்களுக்கும் விஷயம் சொல்லப்பட… உள்ளே எரிந்தாலும் வெளியில்
மகிழ்ச்சியாய் முகத்தை வைத்துக் கொண்டனர்…
அப்பொழுது வட்டின்
ீ பின்கட்டு வழியாக.. ஒரு பெண் வர.. வள்ளியம்மை ‘’
ஏண்டி ராமாயி என்ன இந்த பக்கம்.. ‘’
‘’ அது ஒன்னுமில்லங்கம்மா வட்டு
ீ வேலை ஏதாவது இருக்கான்னு கேட்க
வந்தேன்.. ‘’
வடுகம்மாள் ‘’ மேல் வேலைக்கு இங்கதான் ரெண்டு பேர் இருக்காங்கல்ல..
பத்தாததுக்கு நீ வேற எதுக்கு என வெற்றிலை இடித்தவாறு கேட்டார்…
‘’ வட்டுல
ீ ரொம்ப கஷ்டம்மா… எங்க வட்டு
ீ மனுசன் கள்ளச்சாராயம் குடிச்சு
எங்கேயோ விழுந்து வாரி கை கால் உடைஞ்சு கெடக்காறு.. நானும் என்
மாமியாரும் காட்டு வேலைக்கு போறோம்.. என் வட்டுக்காரருக்கு
ீ வைத்தியம்
பண்ணவே காசு சரியாப்போகுது.. பிள்ளைய பார்த்துக்க முடில.. அதான்
வட்டு
ீ வேலை இருக்கான்னு கேட்க வந்தேனுங்கம்மா.. என பரிதாபமாய்
கூறினாள்…
வானதிக்கு அவளைப் பார்க்க பாவமாய் இருக்க.. ஆச்சி.. இவங்கள பார்த்தா
பாவமா இருக்கு.. வேலைதான பாக்கட்டும் ஆச்சி.. உங்களுக்கும் கொஞ்சம்
ரெஸ்ட் கிடைக்கும்ல.. என வள்ளியின் தாடையை பிடித்து கெஞ்சலும்
கொஞ்சலுமாக கேட்க.. வள்ளி உருகிவிட்டார்..
அவர் அனுமதியாக வடுகம்மாளை பார்க்க.. அவர் தலையசைத்ததும்..
ராமாயிடம் நாளையிலிருந்து வேலைக்கு வருமாறு கூறி அனுப்பினார்..
என் செல்ல ஆச்சி.. என வள்ளியின் கன்னத்தில் முத்தமிட்ட வானதி..
வடுகம்மாளின் கன்னத்தை செல்லமாக கடித்துவிட்டு ஓடிவிட்டாள்..
முதலில் அதிர்ந்த வடுகம்மா.. ‘’ அடியே வெள்ள சிறுக்கி .. என்ன தெகிரியம்
இருந்தா என் கன்னத்தை கடிப்ப.. மறுபடியும் இங்க வா உன் கெண்ட கால
வெட்டுறேன் என அவர் கத்தினாலும் முகமோ புன்னகை சிந்தியது…
பின்னாடி பார்த்தவாறு ஓடிவந்தவள்.. எதிரில் வந்த அருளின் திண்ணிய
மார்பில் மோதி விழுக போக.. ஆடவனின் கரம் வானதியின் இடைப்பிடித்து
விழுக முடியாதவாறு தடுத்தது..
இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு நிற்க.. அருள்.. உனக்கு கன்னம்
கடிக்கனும்னா.. இந்த மச்சானோட கன்னத்தை கடி… அதை விட்டுட்டு ஏண்டி
அப்பத்தா கன்னத்தை கடிச்ச.. அதுக்கு உனக்கு கண்டிப்பா தண்டனை உண்டு..
என்றவன் அவள் ஆப்பிள் நிற கன்னக்கதுப்புகளை பார்க்க..
கணவன் என்ன செய்ய போகிறான் என்பது புரிந்து.. வேண்டாம்.. என
தலையசைக்க.. அதை சட்டை செய்யாதவன்.. அவளின் வெண்ணெய்யில்
குழைத்த வழுவழுப்பான கன்னங்களை தன் பல்லும் உதடும் பதியுமாறு
கடிக்க.. வானதியின் விழிகள் மூடிக்கொண்டது.. இதழோ அவன் வாயின்
குளிர்ச்சி தாங்காமல் பல் கொண்டு கடித்து தன் உணர்வை கட்டுக்குள்
கொண்டு வர போராட…
அவனோ இப்போது கடித்த இடத்திற்கு தன் நாவால் ஒத்தடம் கொடுக்க..
அதன் வெம்மை தாங்காது.. வானதியின் தளிர் மேனி நடுங்கியது..
மிகவும் மெதுவாக.. அவள் கன்னத்தை விட்டு விலகியவன்.. பார்வை
இப்பொழுது துடிக்கும் இதழில் படிய.. அதன் வச்சு
ீ தாங்காது பெண்ணவளின்
விழிகள் மீ ண்டும் மூடிக்கொண்டது..
அந்த தேன் சுரக்கும் இதழை நெருங்கும் சமயம்.. அங்குள்ள ஜாடி கீ ழே விழ..
அதன் சத்தத்தில் இவர்களின் மோகநிலை அறுபட.. இருவரும் வேகமாக
விலகினர்..
அருள் வானதியின் நெற்றியில் முத்தமிட்டு.. வெளியே செல்ல.. கனவுகள்
மிதந்த கண்களுடன் வந்தவள்.. தில்லை பேச்சியின் உரையாடலைக்
கேட்டாள்.. அப்போது அவள் விழிகளில் அதுவரை குடிகொண்டிருந்த காதல்
கனவுகள் அறுபட்டு குற்றவுணர்வு ஆட்கொண்டது..
இரவு நேரம்.. பல ரம்மியம்ங்களை தனக்குள் அடக்கிக் கொள்ளும் நேரம்..
அதுவும் புதுமணத்தம்பதிகளுக்கு கேட்கவே வேண்டாம்..
அருள் தன் அறையில் குட்டிப் போட்ட பூனையாய் அங்கும் மிங்கும்
உலாத்திக் கொண்டு தன் அம்மாளுக்காக காத்துக் கொண்டிருந்தான்..
அப்பொழுது யோசனை சுமந்த முகத்துடன் வானு வர.. அவளின் நிலை
புரியாத அருள்.. அவளை அள்ளி அனைத்துக் கொண்டான்..
வானுவோ அருளின் திடிர் செய்கையில் தடுமாறி.. அவனிடமிருந்து
வெளிவர போராட.. அவனோ அவற்றையெல்லாம் லாவகமாக தடுத்து.. தன்
கரத்தால் அவளை மேலும் தனக்குள் இறுக்க..
தன்னவனின் ஆண்மை பொருந்திய கட்டுடலும்.. பிரத்தியேக வாசமும்
பெண்ணவளை போதைக் கொள்ள செய்து.. அவனிடம் அடைக்கலம் புக
செய்ய..
தன் மனதின் போக்கும் உடலின் போக்கும் கண்டு அதிர்ச்சியடைந்தவள்..
வேகம் கொண்டு அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளியவள்..
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. ஒன்னும் அறியாத சின்ன
பொண்ணு மனசுல ஆசைய வளத்துட்டு இப்போ.. என்கிட்ட இப்படி
நடந்துக்கறிங்க… உங்களுக்கு தில்லைய கல்யாணம் பண்ணிக்க விருப்பம்
இல்லைனு முன்னாடியே அவகிட்ட சொல்லிருந்தா அவ மனசுல ஆசைய
வளர்திருக்க மாட்டா..
இப்போ உங்கள மறக்க முடியாம.. அவ எவ்வளவு கஷ்டப்படுறா தெரியுமா
பாவம்.. ஆனா நீங்க அத பத்தி எந்த கவலையும் இல்லாம உங்க
சந்தோஷம்தான் முக்கியம்ன்னு நினைக்கிறீங்க.. என்ன ஒரு சுயநலமான
மனுஷன் நீங்க.. என முகத்தில் வெறுப்பை கக்கினாள்..
முதலில் வானதி தள்ளி விட்டதில்.. சிறிது தடுமாறி நின்றவன்.. அவள்
செய்கையும் பேச்சும் புரியாது அவளைப் பார்த்தான்.. அவள் பேச்சின்
சாராம்சம் அறியாமல் நின்றவனுக்கு.. அடுத்து அவள் கூறிய தில்லை என்ற
பெயர்.. அணைத்து காரண காரியத்தையும் விளக்க.. அருளின் முகம்
கோபத்தில் இறுகியது.. அது புரியாத வானதி….
கண்டிப்பா நீங்க அவ மனசுல சலனம் ஏற்படுற மாதிரி நடந்துருக்கீ ங்க..
அதுனால தான் அவ கல்யாணமே பண்ணிக்காம வாழ்க்கை முழுக்கும்
கன்னியாவே உங்கள நினைச்சுட்டு வாழப்போர முடிவ எடுத்துருக்கா....
அருள் அப்படிப்பட்டவன் அல்ல.. தன் பார்வையாலே பெண்களை
தன்னிடமிருந்து தள்ளி நிறுத்துபவன் என தெரிந்தும் வேண்டுமென்றே
வானதி பேசிக்கொண்டே செல்ல..
கோபத்தின் உட்சத்தில் இருந்த அருளின் கரங்கள் வானதியின் கன்னத்தைப்
பதம் பார்க்க.. பெண்ணவள் கட்டிலில் சுருண்டாள்.. என்ன நடந்தது என
கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தது… விபரம் தெரிந்ததிலிருந்து
இதுவரை யாரிடமும் எதற்காகவும் அடிவாங்கியிருதா.. வானதி தன்னவனை
அதிர்ச்சியும் பயமும்மாக பார்க்க..
அருள் தன்னுள் மறித்துப் போனான்.. அதுவும் அவள் கன்னத்தில் பதிந்திருந்த
இவனின் விரல்த்தடங்கள் அவனைக் கொல்லாமல் கொல்ல.. அங்கிருந்த
சுவற்றில் பலம் கொண்டு தன் கரத்தை அடித்தான்..
அதில் அதிர்ச்சி தெளிந்தவள்.. ஐயோ.. என பதறியபடி அவனின் கரத்தை பற்ற
கையை உதறிவன்..
தள்ளிப்போடி.. உன்னை பூ மாதிரி நெஞ்சுல தாங்க நினைச்ச என்ன.. இப்படி
விரல்த்தடம் பதியுற மாதிரி அடிக்க வச்சுட்டியே.. என கோபமாகவும்
வருத்தமாகவும் கூறியவன்.. நான் அவள சலனப் படுத்துறத மாதிரி
நடந்துகிட்டத நீ பார்த்தியா இல்லை.. அவ வந்து உன்கிட்ட சொன்னாளா..
எதை வச்சு நீ அப்படி கேட்ட.. பதில் சொல்லுடி.. என அவள் தோளை பிடித்து
உலுக்க.. அவளிடத்தில் பதிலில்லை..
இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்.. உன்கூட கைய
பிடிச்சுட்டு ஊர சுத்துறது எனக்கு எத்தனை வருஷ கனவு தெரியுமா.. அது
இன்னைக்கு நடந்துடுச்சு.. என் அம்மாளு என் கைக்குள்ளன்னு வானத்துல
பறந்தேன்.. ஆனா நீ ஒரே கேள்வில.. ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் குழி
தோண்டி புதைச்சுட்ட என ஆதங்கமாக கூறியவன்.. அறையை விட்டு
வெளியேற போனான்..
விழிகளில் பொங்கிய கண்ணருடன்
ீ அவனையே பார்த்திருந்தவள்.. அருள்
வெளியே போகவும் உடனே அவன் கரம் பிடித்து தடுக்க.. கையை
உதறினான்...
விடுடி இங்கயே இருந்தா எனக்கிருக்க கோபத்துக்கு உன்னைய மேலும்
மேலும் காயப்படுத்துவேன்.. இல்லை என்னைய நானே தண்டிச்சுக்குவேன்..
அதுனால தயவு செஞ்சு என்னை கொஞ்சநேரம் தனியா இருக்க விடு
வானதி.. என வெளியேற..
அவனவள் தன்னவனை தடுக்க இயலாத தவிப்புடன் நின்றிருந்தாள்.. அதுவும்
அவன் வானதி என பெயர் சொல்லி அழைத்தது.. அவன் கோபத்தின் அளவை
சொல்ல.. பெண்ணவள் மனதில் பாரமேறியது.. அருள் பேச பேச தன் தவறு
புரிந்தவள்.. அவனை சமாதானம் செய்யும் வழியறியாது நின்றாள்…

அத்தியாயம் 16

தங்கநிறப்பட்டில்.. கழுத்து நிறைய நகைகள் அணிந்து.. மல்லிகைப் பூச்சரம்


சூடி.. நெற்றியில் பெரிய பொட்டிட்டு.. தன்னவனுக்காக வேறொரு
பரிணாமத்தில்.. மனையில் அமர்ந்திருந்த வானதியின் விழிகள் தன்னவனின்
கடைக்கண் பார்வைக்காக ஏங்கியது..
சுற்றிலும் உறவுகள் சூழ்ந்திருந்தாலும்.. தன் உயிரான உறவையே மங்கை
தேடினாள்.. ஆனால் அவள் எழுந்ததிலிருந்தே அருளைக்
காணமுடியவில்லை..
வானதியின் தவிப்பை உணர்ந்த தர்ஷன் வள்ளியம்மையிடம்.. அத்தை
மாப்பிளை எங்க.. காலைல இருந்தே பார்க்க முடியல..
அவன் தோட்டத்துல இருக்கான்ய்யா.. பொண்ணுக்கு தாலி பிரிச்சு போடும்
போது மாப்பிளை இருக்க கூடாது.. அதுனால சடங்கு முடிஞ்ச பிறவு
வருவான்..
அதைக் கேட்டதும் வானுவின் முகம் சோர்ந்தது.. தங்க தாலி கழுத்தில் ஏறும்
போது தன்னவன் தன்னருகே இருக்க வேண்டும் என பெண்ணவள் மனம்
ஆசையும் ஏக்கமும் கொள்ள… ஏதாவது செய் என்பது போல் தர்ஷனை
பார்த்தாள்..
அவன் அவளுக்கு கண்ணால் ஆறுதல் கூறி போனுடன் வெளியேறினான்..
மூத்த சுமங்கலிப் பெண்களை தாலி கோர்க்க வடுகம்மாள் அழைக்க..
சடங்குகள் ஆரம்பித்தது.. வானதி வாசலில் ஒரு கண்ணும் சடங்கில் ஒரு
கண்ணும்மாய் இருந்தாள்..
வடுகம்மாள்.. வள்ளியம்மை நீயே உன் பேத்திக்கு கழுத்திருவ( தாலி ) போடு..
கழுத்திரு என்பது இரட்டைவடச் சங்கிலியும் அதனுடன் கோர்த்து
இணைத்துள்ள 34 வகையான கைவேலைப்பாட்டுடன் கூடிய அழகிய துணை
நகைகளாகும். இவற்றுள் இரண்டு தொங்கட்டான்கள் (பெண்டன்ட்கள்) மிகவும்
புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இந்த தொங்கட்டான்களில் ஒரு பக்கம்
தேவி இலக்குமியின் உருவமும் மறு பக்கம் காளை வாகனத்தில் அமர்ந்து
காட்சி தரும் மீ னாட்சி சுந்தரேசுவரர் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
சரியாய் வள்ளியம்மையும் மற்றும் சில முதிர்ந்த சுமங்கலிகளும்
வானதியின் கழுத்தில் கழுத்திருவை போடும் சமயம் வெள்ளை
பட்டுவேட்டியில் கம்பீரமே உருவாய் அவனவன் வர… வானதியின் முகம்
மலர்ந்தது..
உள்ளே வந்த அருள் அவளை மேலிருந்து கீ ழாய் ஓர் பார்வை பார்த்து விட்டு
திரும்பினான்.. மறுபடியும் அவளை பார்க்க முற்படவில்லை… அன்றே
ஊர்மக்களுக்கும் உறவுகளுக்கும் கறிவிருந்திற்கான ஏற்ப்பாடு நடக்க.. வடு

முழுக்க உறவு ஜனங்கள் நிறைந்திருந்தன…
அதனால் அருள் வெளியிலே நிற்க.. மீ ண்டும் அவளால் அவனை பார்க்க
முடியாமல் போய்விட்டது.. ஆனால் கடவுள் வள்ளியம்மை மூலமாக
அதற்க்கு வழி காண்பித்தார்…
அத்தை அருளையும் பேத்தி பக்கத்துல உட்கார வச்சு கௌரிசங்கத்தை அவன்
கழுத்துல போட்டுவிட்டுடலாம்ல.. என வள்ளி வடுகம்மாளிடம் கேட்க…

ம்ம்ம்ம் சரி.. அருள கூப்பிடு.. என வடுகம்மாள் கூறியதும் வானதியின்


மனதிற்குள் மத்தாப்பு.. ஆவலுடன் தன்னவன் வருகைக்காக காத்திருந்தாள்..
உள்ளே வந்த அருள் அமைதியாக வானதி பக்கத்தில் உட்கார்ந்தான்.. மறந்தும்
அவளை திரும்பி பார்க்கவில்லை.. அதைக்கண்டு அவனவளுக்கு வருத்தமும்
கோபமும் உண்டானது.. வருத்தம் தன்னுடைய தவறுக்கு.. கோபம்
அவனுடைய பாராமுகத்திற்கு..
சிவராமன் தான் வாங்கிய கௌரிசங்கத்தை அருளின் கழுத்தில்
அணிவித்தார்.. கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த
கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும்
இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில்
அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப
வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம்
பொறிக்கப்பட்டிருக்கும்…
ரெண்டு பெரும் எழுந்திருச்சு எல்லாருக்கும் வணக்கம் வச்சுட்டு
பெரியவங்ககிட்ட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க என வயதான
பெண்மணி கூறவும்..
அவர்களும் கூட்டத்தினரை வணங்க.. எல்லாரும் அர்ச்சத்தை தூவினர்..
அடுத்து செங்குட்டுவன் வடுகம்மாள், அழகு வள்ளியம்மை, சிவா சுதாவிடம்
ஆசிர்வாதம் வாங்கினர்..
வானதி அருளின் தோள் உரசும் அளவிற்கு நெருங்க.. யாரும் அறியாதவாறு
அருள் அவளிடமிருந்து விலகினான்… வானதியின் கண்கள் கரித்தது..
இதை யார் கண்டார்களோ இல்லையோ தில்லை கண்குளிர கண்டாள்..
அருளின் பாராமுகம் வானதியின் கண்ண ீர் அந்த நவன
ீ சூர்ப்பனகைக்கு
மகிழ்ச்சியை தந்தது…
நேத்து நாம போட்ட பிட்டு நல்லா வேலை செஞ்சுருக்கு போலையே என
வஞ்ச்சிரிப்பு புரிந்தாள்..
அருள் மற்றும் வானதியின் நெருக்கத்தை கண்டு.. கோபமுற்று அங்கிருந்த
ஜாடியை தள்ளிவிட்டு அவர்களை பிரித்தவள்.. வேகமாக அங்கிருந்து
நகர்ந்தாள்..
சமையலறையில் வேலைக்காரர்களும் பேச்சியும் மட்டும் இருக்க.. சட்டென்று
அவள் மனதில் ஓர் யோசனை தோன்ற.. திரும்பி வானதியை பார்த்தாள்..
அவள் சமையலறை நோக்கி வரவும்.. அணைத்து வேலைக்காரர்களையும்
அனுப்பியவள்.. காய் நறுக்கும் கத்தியை எடுத்து தன் விரலை வெட்டினாள்…
பேச்சி.. அடியே என்ன காரியம் பண்ற.. உனக்கு கூறு இருக்கா இல்லையா..
ஏன் விரல வெட்டிகிட்ட.. என பதறி அவள் விரலை தண்ண ீரில் காண்பித்தார்..
தில்லையோ.. அவரை எச்சரிக்கையாய் பார்த்து.. என்னால முடில அப்பத்தா..
ரோட்டுல வரும்போது எல்லாரும் என்னையே கேலியா பார்க்கிற மாதிரி
இருக்கு.. அதுமட்டுமில்லாம கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேலைக்காரங்க
என்ன பேசுனாங்க தெரியுமா.. நான் வெட்கமானம் இல்லாதவளாம்.. அதான்
ரோசங்கெட்டு போயி மறுபடியும் இந்த வட்டு
ீ வாசப்படிய மிதிக்கிறேனாம்..
இந்நேரம் என் இடத்துல வேற பொண்ணு இருந்தா தூக்குல தொங்கிருக்குமா..
என அவர் கழுத்தை கட்டிப்பிடித்து அழுதவள்.. பின்னாடி வானதி நிக்கிறா..
என பேச்சியின் செவியில் மெல்லிய குரலில் முனுமுனுத்தாள்..
பேச்சியும் புரிந்துக் கொண்டு… ‘’ நம்ம போறாத காலம் இப்படி கஷ்டப்பட
வேண்டியதா இருக்கு.. சிட்டுக்குருவியாட்டம் சுத்திக்கிட்டு திரிஞ்சவ இப்படி
வட்டுக்குள்ளயே
ீ அடஞ்சுருக்காளே.. அதுவும் அத்தை வட்டுக்கு
ீ போறேன்னு
தினமும் ஒருதடவையாவது இங்க வந்துருவ.. இப்போ ஒரேதடியா இங்க
வராம இருந்தா.. ஆளாளுக்கு பகடி பேச ஆரம்பிச்சுருவாளுகன்னு தான்
உன்னைய கூட்டிவந்தேன்.. இப்போ அதுவே உனக்கு கஷ்டத்தை
ஏற்படுத்திருச்சு.. நான் ஒரு கூறு கெட்டவ… வராமாட்டேன்னு சொன்னவள
மல்லுக்கட்டுவேனா என அழுகுரலில் கூறினார்..
இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பார்களோ.. ஆனால் அதற்குள்
வள்ளியம்மையும் வேலையாள்களும் வர.. இவர்கள் அமைதியாயினர்..
தில்லையின் திட்டத்தின் படி வானதியின் மனம் குற்றவுணர்வு கொண்டு..
அருளிடம் கோபமாக வெளியேறியது..
தில்லை இங்கு வந்து பார்த்த மாத்திரத்திலே இவர்களின் சண்டையை
புரிந்துக் கொண்டு.. துள்ளிக்குதித்தாள்.. தன்னுடைய இலக்கும் கனிப்பும்
சரியாக சென்றடைந்ததை எண்ணி அவள் மனம் கர்வம் கொண்டது… இது
ஆரம்பம் மட்டும்தான் இன்னும் போக போக பார்க்கத்தானே போறீங்க.. என
மனதிற்குள் அருள் வானதியை பார்த்தவாறு பேசிக்கொண்டாள்..
ஆசீர்வாதம் வாங்கிய மறுநொடி அருள் வெளியேற.. வானதி சோகமானாள்..
அப்பொழுது தர்ஷன்.. இப்போ பீல் பண்ணி என்னாக போகுது.. இத நீ
பேசுறதுக்கு முன்னாடியே யோசிச்சுருக்கனும்.. என நக்கலாக கூறினான்..
சின்ன பொண்ணு.. தெரியாம பேசிட்டான்னு மன்னிக்க கூடாத.. என பாவமாய்
கேட்டாள்…
யாரு நீ சின்ன பொண்ணா.. நேத்து என்னா பேச்சு பேசியிருக்க என்ற
தர்ஷனுக்கு நேற்றைய நிகழ்வுகள் நினைவு வந்தது..
தர்ஷன்.. தூக்கம் வராமல் மாடியில் சுற்றிக் கொண்டிருந்தான்.. அப்பொழுது
அருள் வேகமாக வெளியேறுவதைக் கண்டு புருவம் முடிச்சிட கீ ழே
வந்தவன் கண்டது மாடிப்படியில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த
வானதியைத்தான்..
உடனே அவளிடத்தில் விரைந்தவன்.. பேபி என்னாச்சுடா.. ஏன் இப்படி
அழுகுற.. என அவள் தோள் பிடித்து கேட்க..
தர்ஷு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்டா.. என் மச்சான் மனசு புரிஞ்சும்..
அவர ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேன்டா என அவன் தோள் சாய்ந்து
அழுதாள்..
ஓகே ஓகே.. ரிலாக்ஸ்.. என அவள் முதுகை தட்டிக் கொடுத்தவன்.. வானு
அழுகை சிறிது மட்டுப்பட்டதும்.. என்னவென்று விசாரித்தான்..
அவளுக்கும் தன் மனதில் உள்ளதை யாரிடமாவது பகிரவேண்டும்
போலிருக்க… தில்லையின் முதல் சந்திப்பிலிருந்து.. இன்றுவரை நடந்ததைக்
கூறினாள்.. தங்களுக்குள் நடந்த அந்தரங்கத்தை தவிர..
வானதி கூற கூற தர்ஷன் முகம் யோசனையில் சுருங்கியது.. அவள்
கூறியதிலே தில்லை மீ து அவனுக்கு நல்ல அபிப்பிராயம்
தோன்றவில்லை.. கண்டிப்பா அந்த தில்லைக்கிட்ட என்னமோ தப்பிருக்கு..
கிராமத்துல அத்தை பையன் மாமா பொண்ணு உறவு முடிச்சிப் போட்டு
பேசுறது சாதாரண விஷயம் தான்..
சப்போஸ் அந்த தில்லை அதை சீரியஸா எடுத்துக்கிட்டாலும்.. அப்படி
நடக்கலைன்னா திரும்பவும் அத பத்தி பேசக்கூடாது.. ஆனா அந்த பொண்ணு
வானதிக்கிட்டேயே வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. கடைசி வரை
என் மாமனா தான் நினைச்சுட்டு இருப்பேன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம்
ஓவரா இருக்கே..
சாதாரணமா இந்த நிலைமைல உள்ள பொண்ணு ரொம்ப மனசுடைஞ்சு தன்
வருத்தத்தையும் ஆதங்கத்தையும் கொட்டிருக்கணும்.. இல்லை கோபப்பட்டு
வானதிய காயப்படுத்துற மாதிரி பேசிருக்கணும் … ஆனா இது ரெண்டுமே
பண்ணாம ரொம்ப அமைதியா பேசியிருக்கா அதே சமயம் வானு மனசுல
குற்றவுணர்ச்சியையும் கொண்டு வந்துருக்கா.. சோ இவகிட்ட ஏதோ
தப்பிருக்கு.. என தில்லையின் கெட்டெண்ணத்தை புரிந்துக் கொண்ட தர்ஷன்..
வானதியிடம்..
அந்த பொண்ணு உன்கிட்ட அப்படி சொன்னதும்.. நீயும் அவ வாழ்க்கையில
செட்டில் ஆகுறவரைக்கும் உங்க வாழ்க்கையை தொடங்க கூடாதுன்னு
முடிவெடுத்துருக்க.. அதுனால தான் மாப்பிளைக்கு கோபம் வர மாதிரி
பேசுனியா.. என வானதியை சரியாக கனித்து கூற.. அவளும் பாவமாய்
தலையசைத்தாள்..
தர்ஷனுக்கு சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.. வானதியை பற்றி
அவன் அறிந்ததே.. அவள் வெளியில் பார்க்க தைரியமானவளாக
தெரிந்தாலும் உள்ளுக்குள் மெல்லிய மனம் படைத்தவள்.. தன்னால் மற்றவர்
யாரும் வருந்தக்கூடாது என நினைப்பவள்.. அப்பண்பே தில்லையின் நடிப்பை
உண்மையென நம்பி.. தன் திருமண வாழ்வை சற்று தள்ளிப்போட வைத்தது..
தர்ஷன்.. இவகிட்ட என்ன சொன்னாலும் வேலைக்காகாது.. இத வேறமாதிரி
தான் டீல் பண்ணனும் என மனதிற்குள் நினைத்தவன்.. பேபி.. நீயும்
மாப்பிள்ளையும் சந்தோஷமா இருந்தாலே அந்த பொண்ணு மனசு மாறிடும்..
என்றவுடன்..
வானதி ‘’ எப்படி தர்ஷு.. ‘’
அதாவது நீயும் மாப்பிளையும் சந்தோஷமா வாழ்றதை பார்த்து அந்த
பொண்ணுக்கு கோபம் வரும்.. நம்மள வேண்டாம் சொன்ன இவங்களே
கல்யாணம் குழந்தைன்னு நல்லா இருக்கும் போது.. எந்த குறையும் இல்லாத
நாம ஏன் அவங்களையே நினைச்சுகிட்டு இருக்கனும்ன்னு.. கோபம் வந்து
அந்த பொண்ணு மனசு மாறலாமில்லையா என அவன் கூறியதும்.. வானதி
அந்த ஆங்கிளில் யோசிக்க.. தர்ஷன் அவளை வெற்றிக் களிப்புடன்
பார்த்தான்..
‘’ ஆமாண்டா.. நீ சொன்னது சரிதான்.. நான் அந்த மாதிரி யோசிக்கல.. ‘’
‘’ அதுக்கெல்லாம் மூளை வேனும் டியர்.. ஆனா இங்க அதுக்கு பதிலா
களிமண்ணுதான் இருக்கு..’’ என அவள் தலையை சுட்டிக் காண்பிக்க.. வானதி
சினுங்கினாள்..
சரி போ.. போய் தூங்கு நாளைக்கு பங்க்ஷன்ல ப்ரெஷ்ஷா இருக்க
வேண்டாம்மா.. அப்போதான் உங்காளு உன்னை கண்டு மயங்கி விழுவாறு..
அப்போ கோபம் எல்லாம் மறந்து போயிடும் என தர்ஷன் கிண்டலாக கூற...
உடனே வானு தன்னவன் நினைவுகளில் மூழ்கினாள்.. தர்ஷன் அவள்
நிலையறிந்து சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.. சிறிது நேரம் கழித்தே
தன்நிலை அடைந்தவள்… மென்னகையுடன் தன்னறைக்கு சென்றாள்..
நினைவலைகளிலிருந்து மீ ண்ட தர்ஷன்.. அருளை காண சென்றான்.. அவன்
சமையல் நடக்குமிடத்தில் மேற்பார்வையிட அவனிடத்தில் நெருங்கிய
தர்ஷன் ‘’ என்ன மாம்ஸு ஓவரா பர்பாமென்ஸ் பண்றிங்க.. இதுக்கெல்லாம்
பின்னாடி அனுபவிக்கவேண்டியிருக்கும் பாத்து பண்ணுங்க.. ‘’
‘’ ஈஈஈ என அசடு வழிந்தவன்.. ரொம்ப பண்றேனா மச்சான்.. ‘’
‘’ பின்ன உங்காளு செம்ம காண்டுல சுத்திக்கிட்டு இருக்கா.. ‘’
‘’ விட்றா விட்றா.. மெல்ல கூல் பண்ணிக்கலாம்.. ‘’
எனக்கொரு உண்மைய சொல்லுங்க மாப்பு.. எப்படி அவ்வளவு சீக்கிரம்
உங்களுக்கு வானு மேல உள்ள கோபம் போச்சு.. ஏன்னா எனக்கே இன்னும்
வானுவோட முட்டாள்தனத்தை நினைச்சு கோபம் வருது..
ப்ச் அது முட்டாள் தனம் இல்லை.. மனிதாபிமானம் என தன் அம்மாளை
விட்டுக்கொடுக்காமல் பேசியவன்.. அவ சின்ன குழந்தை மாதிரி மச்சான்…
அவ கண் முன்னாடி யாராவது கஷ்டப்பட்டாலோ அழுதாலோ அவளால
தாங்கிக்க முடியாது.. அதான் தில்லை அப்படி பேசினதும்.. இவ இப்படியொரு
முடிவெடுத்துட்டா.. என்கிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டேன்னு.. என்னைய
கோபப்படுத்தி தள்ளிவைக்க நினைச்சா.. ஆனா நான் வருத்தப்பட்டு பேசினதும்
அவளால தாங்கிக்க முடில.. நானும் அவள அவசரப்பட்டு அடிச்சுட்டு
எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்..
அடேங்கப்பா… சரி பிறவு சார் ஏன் அம்மணி மூஞ்ச பார்க்காம டபாய்க்குறிங்க.
அதைக் கேட்டு வசீகரமாக சிரித்தவன்.. என் அம்மாளு என்னை எப்படி
சமாதானம் பண்றான்னு பார்க்கணும்.. அதுனால தான் அவ முகத்தை
பார்க்காம இருக்கேன்.. முதல்ல பார்தோனையே நான் அவ காலடில
விழுந்துட்டேன்.. இப்போ மறுபடியும் அவளை பார்த்தா மொத்தமா
சரணாகதிதான்.. என காதல் ரசம் மிதந்த விழிகளுடன் கூறினான்..
தர்ஷனிற்கு அருளின் காதலை பார்த்து பிரமிப்பாக இருந்தது.. வானதி இவன்
தன்னொழுக்கத்தை பத்தி பேசியும்.. அது அவள் அறியாமை என புரிந்து..
அதை மறந்து.. மேலும் மேலும் தன்னவளை நேசிக்கும் இவனை கைபிடித்தது
வானதியின் அதிர்ஷ்டம் என நினைத்த தர்ஷன்.. அவனை அணைத்து தன்
சந்தோஷத்தை பகிர்ந்தான்…
அப்பொழுது அங்கு வந்த வானதி.. அவர்களை பொறாமையாக பார்க்க.. அதை
சுட்டிக்காட்டிய தர்ஷன் சத்தமில்லாது அங்கிருந்து நகர்ந்தான்…
இன்னும் எவ்வளவு நேரம் என் மேல கோபமா இருப்பீங்க என்னைய பார்த்தா
உங்களுக்கு பாவமா தெரியலையா.. என அப்பாவி லுக்குடன் கேட்க..
அருள் உள்ளே ரசித்தாலும்.. வெளியே தன் முகத்தை இறுக்கமாக வைத்துக்
கொண்டான்..
அதை கோபமென்று எண்ணிய வானு.. அவனை பாவமாக பார்க்க.. அவனோ
அதற்கு மேல் தாக்குபிடிக்காது என அறிந்து வேகமாக அங்கிருந்து
நகர்ந்தான்.. சரியாக அந்நேரம் வந்த தில்லை அருளின் கோபம் இன்னும்
போகவில்லை என நினைத்து வானதியை எள்ளலாக பார்த்தாள்…. அய்யோ
பாவம்.
வானதி அருளையே சுத்தி வர.. அவன் அதனை உள்ளுக்குள் ரசித்தாலும்
வெளியில் சிடுசிடுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான்..
வானதியின் பொறுமை குறைந்துக் கொண்டே சென்றது.. அப்பொழுது
அருளின் முறைப்பெண்கள் அவனிடம் கடலை போட முனைய.. அவனும்
வானதியை வெறுப்பேற்ற.. அவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்..
அவன் எதிர்பார்த்த படியே வானதி காண்டாக.. அருளிற்குள் கும்மாளம்..
அப்பொழுது அவனே எதிர்பாராவிதமாக.. வானதி.. மச்சான் என சப்தமிட்டு
அழைக்க.. அருளுக்குள் இன்பதிர்ச்சி.. ஏனெனில் ஒருமுறை கூட அவனெதிரே
அவள் மச்சான் என்று அழைத்ததில்லை..
தனக்கு இன்னும் பல அதிர்ச்சிகளை.. அவள் தரவிருக்கிறாள் என பாவம்
அருளிற்கு தெரியவில்லை…
மச்சான் வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.. என அவன் கரத்தை
பிடித்தவள்.. யாரையும் பொருட்படுத்தாமல் அவனை அங்கிருந்து இழுத்துச்
சென்றாள்..
வட்டின்
ீ பின்பக்கம் யாருமில்லா.. வைக்கப்போர் பந்தல் அருகே கூட்டி
சென்றவள்.. சட்டென்று அவனை வைக்கப்போர் மீ து தள்ள.. இந்த எதிர்பாரா
செய்கையில் அருள் தடுமாறி அதன் மீ து மல்லாந்தான்..
யோவ்.. என்னய்யா பிரச்சனை உனக்கு நானும் போனா போகுது நம்ம
மேலதான் தப்புன்னு உன்னைக் கெஞ்சுனா ரொம்ப மிஞ்சுரா.. உனக்காக
பார்த்து பார்த்து அலங்காரம் பண்ணி காத்திருந்தா மூஞ்சிய திருப்பிக்கிற..
உனக்கு அவ்வளவு ஏத்தமா.. கருவாயா.. என பொறிந்து தள்ளினாள்..
இவ்வளவு நேரம் தன் அம்மாளின் புது பரிணாமத்தில் ஆடிப்போயிருந்த
அருள்.. அவள் கருவாயா என்று கூறியதில்.. கடுப்பானவன்..
ஏய் குந்தாணி என்னடி ஓவரா துள்ளுற.. யாரைப்பார்த்து கருவாயன்னு
சொல்ற என மீ சையை முறுக்க..
கோபம் கொண்ட பெண் சிங்கம்.. என்னடா சொன்ன குந்தானியா என
வார்த்தையை கடித்து துப்பியவள்.. மீ ண்டும் அவனை வைக்கப்போர் மீ து
தள்ளி.. இம்முறை அவளும் அவன் மீ து கிடந்தாள்..
இந்த வாய் தானே என்ன குந்தானின்னு சொல்லுச்சு என்றவள்..
கோபமிகுதியில் அவன் அதரத்தை தன் பற்களால் கடிக்க.. அருள் வலியில்
துடிதுடித்து போனான்… ஆனால் அது காயம்பட்ட வலியல்ல.. சுக வலி…
தன் அதரங்களால் அவன் பேசமுடியாதவாறு அவன் கீ ழ் அதரத்தையும் மேல்
அதரத்தையும் சிறை பிடித்தாள்.. அவளின் ஒரே நோக்கம் அவன் இதழை
காயப்படுத்துவது.. அதை மட்டுமே தன் பற்கள் கொண்டும் இதழ் கொண்டும்
செய்துக் கொண்டிருந்தாள்.. முத்தத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்ல
வில்லை…
ஆனால் அந்த கள்வனோ கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்… அவள்
இதழ்களை மென்று கொண்டிருந்தான்.. பெண் சிங்கம் விலக முனைய
ஆண்சிங்கம் விடவில்லை.. அடுத்து அடுத்து என முன்னேறிக்
கொண்டிருந்தான்…
தன் நாவால் அவள் நாவோடு உறவுக்கொண்டாடி.. அவள் தேனினும்
இனியமுதத்தை உண்டவன். தன் அமுதத்தை அவளுக்கு ஊட்டினான்..
பெண்ணவள் முதலில் முரண்டு பண்ண.. தன் விடா முயற்சியால் அவளை
வெற்றிக் கொண்டான்.. மேலும் மேலும் என அவன் கரங்கள் முன்னேற
வானதி விடாப்பிடியாய் தடுத்தாள்..
கோபம் கொண்ட அருள் அவளை புல்லுக்கட்டு தூக்குவது போல் ஒரு
தோளில் தூக்கி போட்டவன்.. வைக்கப்போர் மேலே ஏறி.. அவளை அப்படியே
தூக்கிப் போட.. பென்னவளுக்கு சர்வமும் ஒடுங்கியது..
கணவன் எண்ணத்தை புரிந்து… மச்சான் இப்போ வேணாம்.. நைட்
பார்த்துக்கலாம் என மெல்லியகுரலில் கூற.. ஆடவனுக்கு பித்தம்
தலைக்கேறி.. அவள் மீ து படர்ந்து விட்டான்.. அவள் சாதாரணமாக
கூப்பிட்டிருந்தால் கூட விட்டுருப்பானோ என்னவோ.. ஆனால் வானதி
மச்சான் என்று கூறி அவனை வெறிப்பிடிக்க வைத்துவிட்டாள்..
அப்பொழுது.. வானதி அருளின் கரம் பிடித்து அழைத்துச் சென்றதை அறிந்த
தில்லை.. என்னவாக இருக்கும் என அறிய அவர்களை ஒவ்வொரு இடமாக
தேடிக்கொண்டு பின்கட்டிற்கு வந்தாள்.. சுற்றிலும் பார்வையை ஓட்ட அவள்
கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.. ஏமாற்றத்துடனும் வேறெங்கு
சென்றிருப்பார்கள் என்ற யோசனையுடனும் அங்கிருந்து நகர்ந்தாள்..
பத்திற்கும் மேற்பட்ட அந்த வைக்கல்போர் பந்தலின் ஒன்றின் நடுவில்
அமிழ்கியவாறு மன்மதலீலையில் ஈடுபட்டிருந்த அருளும் வானதியும் பாவம்
அவள் கண்ணிற்கு மட்டுப்படவில்லை……

அத்தியாயம் 17

வானதியின் விலையுயர்ந்த தங்கநிற பட்டுப்புடவை போர்வையாக மாறி..


அருளையும் அவளையும் கதிரவனின் ஒளிக்கற்றைகளிலிருந்தும்.. வானில்
உலாவிய பறவைகளிடமிருந்தும் மறைத்து பாதுகாத்தது...
பட்டுப்புடவையினுள் வானதியின் அனத்தல்கள் அதிகமாக வர.. அருள்
வானதியின் இதழை தன் இதழ் கொண்டு அடைத்தான்.. ஏற்கனவே அவன்
அதரம் செய்த லீலைகளில் அவளின் இதழ் செந்நிறம் கொண்டு வங்கிருக்க..

இப்பொழுது மீ ண்டும் அவற்றை அடைத்து கோவைப்பழமாக்கினான்..
போதும் என்ற மனமே அருளிற்கு வரவில்லை.. வருடக்கணக்காக அவனுள்
பூட்டி வைத்திருந்த காதல் அனைத்தும்.. அவளின் சிறு செயலில் வெள்ளம்
போல் பெருக்ககெடுத்தது…
வானதியும் அவன் காதலெனும் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக்
கொண்டிருந்தாள்… அவளின் வெண்ணெய்யில் குழைத்த சிலை மேனி..
அவனவனின் கரங்களும் பற்களும் பட்டு.. சிவந்து.. செம்மைக் கொண்டது..
இருவரும் வியர்வையில் முக்குளித்து.. ஒருவருக்குள் ஒருவர் மூழ்கி
முத்தெடுத்து கொண்டிருந்தனர்…
இப்பொழுது அவள் உடலில் அவன் சுவைக்காத அங்கங்கள் ஏதேனும்
உள்ளதா எனக்கேட்டால்.. இல்லையென்று தான் சொல்லுவாள்… அவளால்
அவனுக்கு இணை கொடுக்க முடியவில்லை.. அசுரனாய் இயங்கிக்
கொண்டிருந்தான்..
உணர்வு போராட்டத்தில் சிக்குண்டிருந்த வானதியின் செவியில்.. அருள்..
மச்சான்னு சொல்லுடி.. மச்சான்னு சொல்லு என அனத்தி எடுக்க..
பெண்ணவளும் குரலை வருவிக்க முயற்சித்தாள்.. ஆனால் அவன் கரங்கள்
செய்த லீலையில்.. அவளுக்கு வார்த்தைகள் வருவேனா என்று அடம்பிடித்து..
சண்டித்தனம் செய்தது…
ஒருவழியாக பெரிய மனதுடன் அவளை விடுவித்தவன். அப்பொழுதும்
அடங்காது அவள் நெற்றியில் முத்தமிட்டு... தன் மார்பில் அள்ளிப்
போட்டவன்.. தன்னவளின் வெற்று முதுகை வருடி ஆறுதல் படுத்திக்
கொண்டிருந்தான்..
வானதி சோர்ந்து கிடந்தாள்.. அவளால் எழவும் முடியவில்லை.. பேசவும்
முடியவில்லை… நாவெல்லாம் வறண்டு கிடந்தது.. அந்த தேனுரும்
இதழ்களில் உள்ள.. எல்லாவற்றையும் இவனே பருகிக் கொண்டானே.... உடல்
முழுக்க வலி வலி.. வலிமட்டுமே.. பரவசம் நிறைந்த சுகவலிகள்…
இருவரும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்க.. அருள்.. அம்மாளு ரொம்ப
கஷ்டப்படுத்திட்டேனா.. சாரிடா என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்கவே
முடியலை.. என்னோட இத்தனை நாள்.. காதல், காத்திருப்பு, ஏக்கம், மயக்கம்
எல்லாம் இப்பவே உன்கிட்ட காமிக்கனும்ன்னு ஒரு வித வெறி..
உடம்பெல்லாம் முறிக்கிபோட்ருச்சு.. அதான் உன்கிட்ட இவ்வளவு
முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்… சாரிடி என கட்டியணைத்தவாறு கூற…
அவனை சமாதானம் படுத்தும் நோக்கத்தோடு.. அவன் நெஞ்சில் முத்தமிட..
அவனும் பெண்ணவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.. அப்பொழுது
கலவையான பேச்சுக்குரல்கள் கேட்க.. வானதிக்கு பதற்றம்.. தொற்றிக்
கொண்டது.. அவள் பயத்துடன் அருளை பார்க்க.. கண்களால் ஆறுதல்
அளித்தவன்.. என்னவென்று மெல்ல எட்டிப்பார்த்தான்.. தூரத்தில் சில
வேலையாள்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர்..
அப்பொழுது அங்கு வந்த தர்ஷன்.. அவர்களிடம் என்னமோ கூற.. அவர்கள்
அங்கிருந்து விரைந்தனர்… தர்ஷனும் சென்றுவிட்டான்..
இதுவரை பயத்தில் மூச்சடக்கி இருந்தவளுக்கு.. இப்பொழுது தான் சுவாசம்
சீரானது… உடனே அருளை அடிக்க ஆரம்பித்தாள்.. ஐயோ எந்த நிலமைல
இருக்கோம் பாருங்க.. இப்ப வேணாம்னு எவ்வளவு கெஞ்சுனேன்..
கேட்டிங்களா இப்போ நாம எப்படி இங்கிருந்து போறது…. இவ்வளவு நேரம்
யார்யாரெல்லாம் நம்மள தேடியிருப்பங்களோ.. இந்நேரம் ஊர்க்காரங்களும்
வந்துருப்பாங்க.. எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்.. மானமே போச்சு என
பொறிந்து தள்ளினாள்..
அருளிற்கும் அவளின் நிலை புரிந்தது.. இப்பொழுது என்ன செய்வது என
அவன் யோசிக்க.. போன் ஒலித்தது..
அதில் தர்ஷன் பெயர் மின்னவும் உடனே போனை எடுத்தான்..
மறுமுனையில்.. மாப்பிள்ளை இவ்வளவு நேரம் வானதிக்கு உடம்பு
முடியலை நீங்க அவ கூட இருக்கீ ங்கன்னு சமாளிச்சேன்.. ஆனா இப்போ
எல்லாரும் உங்க ரெண்டுபேரையும் கீ ழே வர சொல்றாங்க… எப்படியாவது வர
பாருங்க.. பின்பக்கம் யாரும் வராம நான் பார்த்துக்கிறேன்.. என கூறியவன்
மற்றவன் பேசுவதற்கு இடம் கொடுக்காது போனை வைத்துவிட்டான்..
மலையேற போனாலும் மச்சான் உதவி வேனும்ங்கிறது கரெக்ட்டாத்தான்
இருக்கு என மனதினுள் தர்ஷனை சிலாகித்தவன்.. வேகமாக அவளை
தயாராக சொன்னான்..
பென்னவளோ ஆடவனை தீயாய் முறைக்க.. அருளிற்கு அவள்
முரைப்பிற்க்கான காரணம் புரிந்தது.. தலை கலைந்து பூக்கள் அறுந்து..
புடவை கசங்கியிருந்த.. இந்நிலையில் வெளியே சென்றால் இவர்களின்
அந்தரங்கம் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக்கிவிடும்… பின்பக்கம் உள்ள
மாடிக்கு கூட்டிசென்றவன்.. அங்கிருந்து அவர்கள் அறைக்கு அழைத்துச்
சென்றான்.. இடையில் ரெண்டு மூன்று பேர் வர.. அங்கிருந்த இடைப்பக்க
சுவற்றில் மறைந்து எப்படியோ அறைக்குள் நுழைந்துவிட்டனர்..
வானதி வேகமாக குளியறைக்குள் நுழைய.. அருளும் பூனை போல்
நுழைந்தான்.. கேட்டால் நேரம் மிச்சம் என்ற இளிப்புவேறு.. ஒருவாறு
இருவரும் வெளியே வந்தனர்..
அருள் சாதாரணமாக வர.. வானதிக்கு தான் எல்லாரும் தங்களையே
குறுகுறுவென்று பார்ப்பது போல் தோன்ற.. தலை குனிந்து நடந்தாள்…
வள்ளியம்மை.. இப்போ எப்படித்தா இருக்கு.. என அவள் நெற்றியிலும்
கழுத்திலும் கைவைத்து பார்த்தவர்.. என்னத்தா இன்னும் சூடு குறையல..
முகம் வேற சோர்ந்து போயி இருக்கு.. என கவலையாக.. கூற..
வானுவிற்கோ சோர்விற்கான உண்மையான காரணம் நினைவு வர.. அவள்
முகம் செம்மை பூசிக்கொண்டது.. அருளிற்கு தாயின் பேச்சு சிரிப்பையும்
சங்கோஜத்தையும் கொடுக்க அவன் மெதுவாக வெளிநடப்பு செய்தான்…
வள்ளியம்மையோ.. இப்போ முகம் வேற சிவந்து போச்சு.. சூடு
அதிகமாயிடுச்சுன்னு நினைக்குறேன்.. இருத்தா ஒருவாரம் தொடர்ந்து
கஷாயம் குடிச்சா சரியாப்போகும் என அவர் கூறவும்.. வானதியின் முகம்
கஷாயத்தை நினைத்து வெளிறியது..
மூன்று தலைமுறையைக் கண்ட வடுகம்மாளிற்கு வானதியின்
முகச்சிவப்பிற்க்கான காரணம் புரிபட அவர் முகம் மலர்ந்தது.. வள்ளி.. அவ
இன்னும் சாமியறைல போயி விளக்கேத்தல.. அதுனால உள்ள கூட்டி போயி
விளக்கேத்த வையி என கூறியவர்.. வானதியின் சிரத்தில் ஆசிர்வதிப்பது
போல் கை வைத்து சென்றார்….
அவர் கண்டுகொண்டாரோ என சந்தேகம் கொண்ட வானதி முகம்
லஜ்ஜையிலும் நாணத்திலும் சிவந்தது…
வள்ளி.. அவளை சாமியறைக்கு அழைத்துச் செல்ல.. விளக்கேற்றி சாமி
கும்பிட்டவள் அப்பொழுது தான் அங்கு சுவரோரத்தில் மாட்டப்பட்டிருந்த
வேலுநாச்சியாரின் புகைப்படத்தை கண்டாள்..
வாத்தா போகலாம்..
ஹ்ம்ம்ம்..
கொஞ்ச நேரம் உட்காருத்தா.. நான் உனக்கு குடிக்க எதாவது கொண்டு
வாரேன்.. ரொம்ப சோர்ந்து போயி தெரியுற..
பெண்கள் கூட்டத்தின் மத்தியில்.. அமர்ந்த வானதியை பேச்சியும் தில்லையும்
ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.. அது அவளுக்கு சங்கடத்தை தர
நெளிந்துக் கொண்டிருந்தாள்..
பேச்சிக்கும் அவளது சோர்விற்க்கான காரணம் புரிந்தது.. உள்ளுக்குள்
எரிந்தாலும்.. தில்லை இதை அறிந்தால் என்ன செய்வாளோ.. இல்லை
எதாவது செய்துக் கொள்வாளோ என பயமெடுக்க.. அவளை அங்கிருந்து
கிளப்ப முயற்சி செய்தார்..
தில்லைக்கு.. வானதியின் முகத்தில் இருந்த சோபையும்.. கண்கள் சோர்வாக
இருந்தாலும்.. ஆனால் அதற்கு மாறாக புத்தம் புது மலர் போல் பொலிவாக
இருக்கும் முகத்திற்க்கான காரணம் புரிபடாமல் விழிக்க.. அவளை மேலும்
யோசிக்க விடாதவாறு அவளை அழைத்துச்சென்றார்.. பேச்சி.. ஏன் இவ்வளவு
சீக்கிரம் என கேட்டவர்களுக்கும் ஏதோ ஓர் காரணத்தை சொல்லி
சமாளித்தார்…
அவர்கள் சென்ற பின்புதான் வானுவிற்கு இயல்பாய் மூச்சுவிட முடிந்தது…
அருள் வெளியே வந்தவுடன் அவனை வேலைகள் சூழ்ந்துகொள்ள அதனுள்
மூழ்கிப்போனான்.. அப்பொழுது தர்ஷன் அவனை பார்த்து.. கண்ணடிக்க….
அருள் வெட்கமாக முகத்தை மூடுவது போல் செய்ய.. அப்பொழுது சரியாக
அங்கு வந்த கண்ணனின் முகம் அஷ்டகோணலாகியது..
டேய்.. கருமம் புடிச்சவனே என்னடா பண்ற..
பாஸு.. மாப்பிள வெட்கப்படுறாப்புள்ள… என தர்ஷன் கேலியாக கூற..
அருள் நகத்தை கடித்தான்.. இப்போ என்ன நடந்துச்சுன்னு வெக்கப்பட்டுட்டு
இருக்க..
அதுவா..ஹ்ம்ம்ம் நான் கன்னி கழிஞ்சுட்டேன்டா என வெட்கப்பட்டவாறு
கூற.. தர்ஷன் அடக்கமாட்டாமல் சிரித்தான் என்றால்… கண்ணனின் முகம்
மீ ண்டும் கோணலாகியது…
அடச்சேய் கருமம் கருமம்.. முனியா நான் இன்னும் என்னென்ன
எழவையெல்லாம் பார்க்கனுமோ என மேலேபார்த்தவாறு கூற.. அருள் அவன்
காலில் உதை வைத்தான்..
ஒருவழியாக விருந்து அனைத்தும் முடிய.. எல்லோரும் அவரவர் அறையில்
முடங்கினர்.. மறுநாள் தர்ஷன் சிவா சுதா மூவரும் சென்னை செல்வதால்..
அவர்கள் பேக்கிங் வேலையை ஆரம்பித்தனர்..
வானதி அறைக்கு வந்த வள்ளியம்மை.. இந்தாத்தா இத குடி.. உடம்புக்கு
ரொம்ப நல்லது என.. ஒரு பெரிய தம்ளர் முழுதும் உள்ள பச்சையும் கருப்பும்
கலந்த திரவத்தை தர.. அவளோ பேய் முழி முழித்தாள்..
என்ன செய்வது என அறியாமல் முழித்தவள்.. பக்கத்தில்.. நமுட்டு சிரிப்புடன்
நின்றிருந்தவனை கொலைவெறியுடன் பார்த்தாள்..
அத்தை நீங்க போங்க.. நான் கொஞ்ச கொஞ்சமா குடிச்சுடுறேன்.. என அவரை
வற்புறுத்தி அனுப்பிவைத்தாள்..
அருளும் அவர் பின்னாடியே சென்று கதவை அடைத்துவிட்டு வர.. வானுவும்
அவரின் அன்புக்காகவாது குடிக்க வேண்டும் என நினைத்து அதை
பருகச்சென்றாள்..
அருள் உள்ளே வரும்போது.. வெறும் கிளாஸ் மட்டுமே இருக்க அவள்
முகமோ… கோணல் மாணலாக இருந்தது.. அதைப் பார்த்து சிரித்தவன் அவள்
உதட்டின் மேல் ஓட்டியிருந்த கஷாயத்தை துடைத்தான்…
ப்ச் கையை எடுங்க.. உங்களால தான் எனக்கு இந்த நிலைமை.. அத
மறந்துட்டு என்னையே நக்கல் பண்ணி சிரிக்கிறீங்களா.. என அவனை அடிக்க
ஆரம்பிக்க..
அருளோ.. அம்மாளு இது அடிக்க வேண்டிய நேரம் இல்லை.. அணைக்க
வேண்டிய நேரம் என அவள் தாமரை இதழ் செவியில் உருகும் குரலில்
கூறியவன்… அவளோடு கட்டிலில் சரிந்தான்.. காலையில் ஆகாய வெளியில்
அவசர அவசரமாக நடந்தேறிய கூடலுக்கு.. மாறாக.. தன் சந்தன
பொன்மேனியவளின் அழகுலவயங்களை மிகவும் மென்மையாக
பொறுமையாக வணை
ீ மீ ட்பது போல் அவன் விரல்கள் மீ ட்ட..
மங்கையவளோ மாயவனின் விளையாட்டில் சுகவலியில் துடித்தாள்….
அதுவும் இடையில் அவனுடைய வர்ணிப்பு.. அவளை வெட்கம் கொள்ள
செய்தது… நல்லா கொழு கொழுன்னு இருக்கடி.. எப்படிடி இப்படியெல்லாம்
வளர்த்து வச்சுருக்க என சிலாகித்து கூற… பெண்ணவள் ஆடவனின்
கொச்சை வார்த்தைகளில் லஜ்ஜை கொண்டு.. அவன் அதரத்தை மூடும்
பணியை செய்தாள்…
இவர்கள் இங்கு தங்கள் குடும்பத்திற்கு மூன்றாம் தலைமுறையை
உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க.. மற்றொரு இடத்திலோ அவர்களின்
வருங்கால வாரிசை சுமக்க போகும் கருவறையை நாசமாக்கும் முயற்ச்சி
பலித்ததில் வெற்றிக் களிப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான் செல்வம்..
செல்வத்தின் தோட்டத்தில் அந்த இருள் வேளையில்.. செல்வமும்
கணபதியும் நின்றிருக்க… அப்பொழுது பதற்றமும் பயமுமாக ஓர் பெண்
வந்தாள்..
செல்வம்.. என்ன நான் சொன்ன வேலை முடிச்சுட்டியா..
ஹ்ம்ம்ம் நீங்க கொடுத்த நாட்டுமருந்த வானதியம்மாக்கு கொடுக்க இருந்த
கஷாயத்துல கலந்துட்டேங்கய்யா.. இனியும் அங்க வேலைக்கு போகனுமா
என பயந்தவாறு கேட்டாள்.. ராமாயி..
ம்ம்ம் கண்டிப்பா போகனும் … இன்னும் ஒருவாரத்துக்கு அவ என்ன
குடிக்குறாளோ அதுல கலந்துடு.. ஆனா ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும்
தான் கொடுக்கனும்.. சரியா.. என கூறியவர் தன் சட்டைப்பையிலிருந்து சில
இரண்டாயிரம் தாள்களை எடுத்துக் கொடுத்தார்..
வேண்டாங்கய்யா.. என பணத்தை வாங்க தயங்கியவள்.. செல்வத்தின்
பார்வையில் பயத்துடன் வாங்கிக் கொண்டு சென்றாள்…
இவ வெளில சொல்லிடுவாளா.. செல்வம்..
இல்லை அப்புச்சி.. சொல்லமாட்டா.. சொன்னா அவ குடும்பமே
இருக்காதுன்னு அவளுக்கு தெரியும்..
நீ கொடுத்த மருந்து வேலை செய்யுமா என சந்தேகத்துடன் கணபதி
கேட்டார்..
நூறு சதவதம்
ீ வேலை செய்யும்… நான் ஒன்னும் இங்கிலிஸ் மருந்து
கொடுக்கல அப்புச்சி.. வரியமான
ீ நாட்டு மருந்து கொடுத்திருக்கேன்.. கர்ப்பமா
உள்ளவங்க இதை சாப்பிட்டா குழந்தை கலைஞ்சுடும்.. அதுவே ஒரு
வாரத்துக்கு தொடர்ந்து சாப்பிட்டா.. அவ வயித்துல புள்ள என்ன புழு
பூச்சிக்கூட இந்த ஜென்மத்துல வளராது.. இங்கிலீஸ் மருந்தால கூட இது ஏன்
இப்படின்னு கண்டுபிடிக்கவும் முடியாது.. அதுக்கான மாத்து மருந்தும்
கிடையாது என இறுமாப்புடன் கூறியவர்… அந்த குந்தவை மக.. வாழ்க்கை
முழுசும் மலடின்ற பேரோட தான் வாழனும் என குரூரமாக சிரிக்க..
கணபதியும் அவனுடன் சேர்ந்துக் கொண்டார்…
விடாமல் அடித்த போன் ஒலியில் தூக்கம் கலைந்த அருள்.. விழி
திறக்காமல் போனை துளாவினான்.. அப்பொழுது கிடைக்காமல்.. எழுந்திரிக்க
முயன்றான்.. ஆனால் அவனால் அசைய கூட முடியவில்லை.. அதில் அவன்
உறக்கம் கலைந்து விழிகளை திறந்து பார்தவனுக்கு மென்னகை மலர்ந்தது…
வானதி மெத்தையில் படுக்காமல் அருள் மேல் படுத்திருந்தாள்.. இரவின்
மிச்சங்கள் இன்னும் தெளியாத நிலையில் ஆடையின்றி வான்தேவதையாய்..
தன் மேல் படுத்திருந்தவளைக் கண்டு அவனின் ஆண்மை பேயாட்டம்
போட்டு.. இரவில் ஆரம்பித்து விடியலில் முடித்த களியாட்டங்களை தொடர
உத்தரவிட.. அருளும் அந்த உத்தரவை சிரமேற்கொண்டு செயலில்
இறங்கினான்.. அங்கு விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த போனை சட்டை
செய்யவில்லை…
பெண்ணவளின் உறக்கம் கலைந்து.. ‘’ யோவ் கருத்த மச்சான் விடுய்யா..
இப்போதானய்யா தூங்கவிட்ட என அவள் உறக்கத்திலும் சோர்விலும்
புலம்ப..
அவளின் கருத்த.. இவனுக்கு பெருத்த வேகம் கொடுக்க… தீயாய் அவளுள்
இறங்கினான்.. பெண்ணவளின் மொத்த உறக்கமும் கலைந்தும்.. அவள்
விழிகள் மூடிக்கொண்டுதான் இருந்தது.. ஆனால் இம்முறை உறக்கத்தில்
அல்ல… பரவசத்தில்… அவன் நினைத்ததை சாதித்த பிறகே.. அவளை விட்டு
விலகினான்..
அப்பொழுது தான் யார் போன் பண்ணியது என அறிய போனை பார்க்க..
அதிர்ந்து போனான்.. மணி ஒன்பது.. நிறைய மிஸ்ட் காலும் இருந்தது..
உடனே படுக்கையை விட்டு எழுந்தவன்.. அம்மாளு எந்திரி.. மணி ஆகிடுச்சு..
இன்னைக்கு தர்ஷனும் அவங்க அப்பா அம்மாவும் ஊருக்கு போறாங்கள்ல..
சீக்கிரம் கிளம்பு.. என கூறி.. பாத்ரூமிற்குள் புகுந்தான்.. வானதிக்கும்
அப்பொழுது தான் அநினைவு வர.. அவளும் எழுந்தாள்.. இருவரும் விரைவாக
கிளம்பி கீ ழே வந்தனர்…
வடுகம்மாள் மூலம் செங்குட்டுவனிற்கும்.. அவர் மூலம் அழகுவிற்கும்..
அவர்கள் நிலை தெரியவர.. யாரும் எதுவும் பெரிதாய் கேள்விக்
கேட்கவுமில்லை.. கண்டுகொள்ளவுமில்லை. எப்பொழுதும் போல்
இருந்தார்கள்…
காலை உணவு முடிந்து.. மூவரும் சென்னைக்கு கிளம்ப.. வானதியின்
விழிகள் கண்ண ீரில் பளபளத்தது.. இப்பொழுது தான் முழுதாக பிறந்த
வட்டின்
ீ பிரிவை உணர்கிறாள்.. தர்ஷன் நிலை அதைவிட மோசம்..
அவனுக்கு ஆறு வயது இருக்கும் போதுதான்… அவன் தங்கையின் பிறப்பும்
இறப்பும் நிகழ்ந்தது.. அந்த சிறுவயதில் அவனால் அந்த இழப்பை
தாங்கிக்கொள்ள இயலவில்லை..
ஒரு மாதமேயானாலும் அச்சிறு குழந்தை பற்றி அவனிடத்தில் நிறைய கனவு
இருந்தது.. அவள் சீக்கிரம் வளர வேண்டும்.. தன் கைபிடித்து நடக்க
வேண்டும்.. தன்னுடன் விளையாட சண்டை போட என நிறைய ஆசைகள்..
அதுமட்டுமில்லாமல் சிவாவும் சுதாவும்.. இருவருக்கும் நல்ல பிணைப்பு
வேண்டுமென்பதால் வயிற்றில் இருக்கும் போதே இவள் உன் தங்கை.. நீதான்
இவளை பத்திரமா பாதுகாக்கணும்.. காவலனா இருக்கனும்.. அன்பா
இருக்கனும் என சொல்லி கொடுக்க.. அச்சிறு பிஞ்சின் மனதில்
அவையெல்லாம் ஆழமாக பதிந்தது..
அதனால்..அவன் தன் குட்டித் தங்கையின் இழப்பை தாங்கிக்கொள்ள
முடியாமல் ஜுரத்தில் வழ்ந்தான்..
ீ அப்பொழுது தான் வானதி பிறந்திருக்க..
இவளும் உன் தங்கச்சிதான் இவள நீ பார்த்துக்கோ என வானதியை
அவளிடத்தில் காட்டிய பிறகுதான்.. அவன் உடல்நிலை சரியானது..
இவனுக்காகவே சிறிது காலம் சிவா சுதா இருவரும் சந்திரன் வட்டில்

தங்கினர்.. வானதி வளர வளர.. அவர்களின் பாசப்பிணைப்பும் வளர்ந்து
இறுகியது..
தோழனாக சகோதரனாக தந்தையாக என வானுவின் ஒவ்வொரு
நிலையிலும்.. அவளுக்கு ஒவ்வொரு விதமான உறவாக தெரிந்தான்…
அதனால் இப்பிரிவு இருவரையும் வேதனைக் கொள்ள செய்தது…
தர்ஷன் வானதியிடத்தில் விடைபெற வர.. அதற்கு மேல் தாங்காது அவனை
அணைத்து அழ ஆரம்பிக்க.. தர்ஷனின் விழிகளிலுமிருந்தும் நீர் பெருகியது..
பத்திரமா இரு.. ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது எனக்கு போன்
பண்ணு.. உன் மச்சான் நினைப்புல எங்கள மறந்துராத என சிரித்தவன்… ஐ
மிஸ் யூ பேபி என அழ..
அவளும்.. ஐ மிஸ் யூ டூ தர்ஷு.. என அழுதவாறு கூறியவள்.. சீக்கிரம் சுபாவ
எனக்கு அண்ணியாக்குற வேலையை பாரு.. எத்தனை நாளு நீ இப்படியே
இருக்க போற என்றவுடன்.. தர்ஷன் அவளை ஆச்சரியமாக பார்த்து..
உனக்கெப்படி தெரியும்.. என கேட்க..
ம்ம்ம்ம் உன்னைய பத்தி எல்லாம் தெரிஞ்ச எனக்கு.. உன் காதல் விஷயம்
தெரியாத.. அதுவும் நீ பார்க்காத போது அவ பார்க்குறதும்.. அவ பார்க்காத
போது நீ பார்க்குறதும்னு ஒரு படமே ஓட்டுவங்க..
ீ என கிண்டலாக கூற..
அவள் தலையில் பொய்யாக கொட்டினான்.. தில்லையை பற்றி வானதியிடம்
கூறலாமா என யோசித்தவன்.. பின் வேண்டாம்.. மாப்பிள பார்த்துப்பாரு..
இவகிட்ட சொன்னா.. அதை மண்டைல ஏத்திக்கிட்டு தேவையில்லாம
குழம்பிப்பா என நினைத்து அதை விடுத்தான்.. ஆனால் அவன் இன்றே
தில்லையின் உண்மையான குணத்தை பற்றி அவளிடம் கூறியிருந்தால்..
பின்னாளில் நடக்க விருக்கும் சம்பவங்களை தடுத்திருக்கலாம்… விதி
வலியது..
ஒருவழியாக மூவரும் கிளம்ப.. வானதி உதட்டில் புன்னகையுடன்
விடைகொடுத்தாள்.. விழிகளோ அதற்கு மாறாக கலங்கியிருந்தது..
செங்குட்டுவன்.. அருளு நீயும் பேத்தியும் கண்ணாத்தா கோயிலுக்கு போயிட்டு
வாங்கய்யா என கூறினார்.. வானதி வட்டிலையே
ீ இருந்தாள்.. பிறந்த வட்டு

நினைவுடன் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள் என்பதால் வெளியே போக
சொன்னார்.. அருளிற்கும் அவர் கூறியதன் காரணம் புரிய.. அவளை
கோவிலுக்கு கிளம்ப சொன்னான்..
இருவரும் ஜோடியாக ராயல் என்பீல்டில்.. கோயிலுக்கு செல்ல ஊர் கண்
மொத்தமும் அவர்களிடத்தில்தான்.. அய்யனார் கணக்காய் அருளும்.. அவன்
தோள் வரை மட்டுமே வளர்ந்திருந்த செப்புச்சிலையாய் வானதியும் தோள்
உரச நடந்துவர.. பார்க்கவே பாந்தமாய் இருந்தது..

அத்தியாயம் 18

கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்த அருளிடம் கெஞ்சிக்


கொண்டிருந்தாள்.. வானதி.
மச்சான்… நானும் உங்ககூட வயலுக்கு வரட்டா..
எதுக்கு அங்க வந்து என் வேலையை கெடுக்குறதுக்கா….
பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.. ச்ச ச்ச.. நான் ஒன்னும்
பண்ணமாட்டேன்.. நீங்க ஒருபக்கம் வேலைப் பார்த்தா.. நான் ஒருபக்கம்
வேடிக்கை பார்ப்பேன்.. உங்கள டிஸ்டர்ப்பே பண்ணமாட்டேன் ப்ள ீஸ்..
கூட்டிபோங்க மச்சான்..
ஹ்ம்ம்ம் வேடிக்கை பார்த்து.. யாராவது என்னை சைட் அடிச்சா அவங்கள
கூப்பிட்டு இங்கிலிஷ்ல பேசி கழுத்தறுப்ப.. அப்படித்தானே.. என திரும்பி..
அவள் கழுத்தில் கை போட்டு இழுத்துக் கேட்க..
தன் திருட்டுத்தனம் வெளிவந்ததில் வானதி திரு திருவென முழித்தாள்..
அதன் அழகில் சொக்கியவனோ.. அவளை தன் உயரத்திற்கு உயர்த்தி பிடித்து..
கீ ழ் அதரத்தை கடித்து இழுக்க.. அந்தரத்தில் தொங்கிய கால்களை
உதறியவள்.. அவன் தலைமுடியை தன் கரத்தாலும்.. மீ சை முடியை தன்
பற்களாலும் இழுத்து அவனுக்கு வலிக்க செய்ய.. ஆனால் அந்த
கிராமத்தானுக்கோ அவை மேலும் தூண்டுகோல் போல் இருக்க.. மேலும்
அவளை தன்னுடன் இறுக்கினான்..
அந்த தேனூறும் இதழ்களில் உள்ள மொத்த தேனையும் எடுத்த பிறகுதான்
அவளை இறக்கிவிட்டான்…
காட்டன் காட்டான்... எப்படி மூச்சு வாங்குது பாருங்க என அடிக்க.. அவனோ
அதை பரிசு போல் ஏற்றான்..
வானதி அருள் வட்டிற்கு
ீ வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது.. அருள்
அவளிற்கு வட்டு
ீ நியாபகமே வராதவாறு.. அவளை தன் காதலால்
மூழ்கடித்தான்.. தினமும் சென்னைக்கு போன் செய்து அனைவரிடமும் சிறிது
நேரமாவது பேசிவிடுவாள்.. அருள் இருக்கும் போது வடியோகால்
ீ செய்வாள்..
செங்குட்டுவன் அழகு வள்ளியம்மை என அனைவரும் அவளை
தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்கள்.. அருளும் வடுகம்மாளும் மட்டுமே
அவளிடத்தில் கண்டிப்பு காட்டுவார்கள்..
வானதியும் அவ்வட்டில்
ீ அனைவருடனும் நன்கு பொருந்திக் கொண்டாள்…
விடிகாலையில் அவளாகவே அருளுடன் எழுந்திரித்து.. அவனுடன்
வயல்வெளிகளை சுற்றிப்பார்க்க செல்வாள்.. சமையல் செய்யவில்லை
என்றாலும் வள்ளியம்மையுடன் அமர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே
அவர் செய்வதை கவனிப்பாள்.. அடுத்து அந்த வட்டின்
ீ மிக
முக்கியவேலையை கையிலெடுத்துக் கொண்டாள்.. அது என்னன்னா வட்டின்

வாயிலில் கோலமிடுவது.. தினமும் வள்ளியம்மை கோலம் போடுவதை
பார்த்தவள்.. இப்பொழுது புதிது புதிதாக நெட்டில் பார்த்து… அவளே கோலம்
போட ஆரம்பித்தாள்.. அது அவளுக்கு மிகவும் பிடித்தமான வேலை..
கீ ழே ஆண்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க..
வள்ளியம்மையும் வானதியும் பரிமாறிக் கொண்டிருந்தனர்..
வள்ளியம்மை.. உனக்கு பிடிச்ச மசாலாச் சீயம் பண்ணி வச்சுருக்கேன்த்தா..
நீயும் சாப்பிடு.. என வானதியிடம் கூறினார்..
எனக்கு வேணாம் ஆச்சிம்மா பசிக்கல.. என்றவுடன்..
அழகு வானதியை நிமிர்ந்து பார்க்க அவளோ.. உதட்டை பிதுக்கி அருளை
சுட்டிக் காண்பித்தாள்..
இது வழக்கமான ஒன்றுதான்.. வானதி கேட்டு அருள் செய்யவில்லை
என்றால்.. அவள் உடனே செங்குட்டுவனிடமோ அழகுவிடமோ கூறுவாள்...
அவர்கள் அருளிடம் அவளுக்காக பேசுவார்கள்..
இன்றும் அப்படியே.. அழகு.. அருளு புள்ள முகம் சோர்ந்துக்கிடக்கு.. நீ
ஏதாவது சொன்னியா..
ஹ்ம்ம்ம் எனக்கு வேற வேலை இல்லையா அப்புச்சி.. உங்க பேத்திக்கூட
உறண்ட இழுக்குறதுதான் வேலையா..
ஐயா.. நான் எவ்வளவு நேரம் வட்டுலையே
ீ இருக்குறது.. என்னைய வயலுக்கு
கூட்டிட்டு போனா எனக்கும் டைம்பாஸ் ஆகும்ல
அதானே.. கூட்டிப்போட பேத்தி எவ்வளவு நேரம் வட்டையே
ீ சுத்துவா..
அப்புச்சி.. இவளைப் பத்தி சரியா தெரியாம.. சப்போர்ட் பண்ணாதீங்க.. அங்க
வந்து இவ என்னையும் வேலைப் பார்க்க விடமாட்டா..
சுத்தியுள்ளவங்களையும் வேலைப் பார்க்க விடமாட்டா.. என வானுவை
முறைத்துப் பார்த்தவாறு கூற..
வானதி.. அருளைப் பார்த்து பழிப்புக் காட்டி.. உடனே அழகுவை பாவமாய்
பார்த்தாள்.. இவளின் நடிப்பைக் கண்டுகொண்ட.. அருள் பல்லைக் கடித்தான்..
மறுபடியும் அழகு ஏதோ கூறவர.. ஆத்தா இவளுக்கு சமையல் சொல்லிக்
கொடுங்க.. அப்புறம் தானா நேரம் போகும்.. இன்னும் எவ்வளவு நாள் நீங்களே
எல்லாத்தையும் செய்வங்க..
ீ உங்களுக்கு அடுத்து இவதான எல்லாத்தையும்
பார்க்கனும்.. எல்லாரும் முதல்ல அவளை சின்னப்பிள்ளையா பார்க்கிறத
நிறுத்துங்க..
வடுகம்மாள்.. அப்படி சொல்லுடா பேராண்டி.. என்னமோ இவ வானத்துல
இருந்து குதிச்சவ மாதிரில்ல இவங்கயெல்லாம் நடந்துக்குறாங்க.. என
தோள்ப்பட்டையில் முகத்தை இடித்தவாறு கூறினார்..
இந்த கிழவிய பேசாம போட்டு தள்ளிடலாமா.. என யோசித்தவள்... ச்ச ச்ச
வேண்டாம்.. நாளைக்கு நம்ம கையால சமைச்சு கொடுப்போம்.. அப்புறம்
அதுவே நம்மள மச்சான் கூட போன்னு துரத்தி விட்ரும்.. என திட்டமிட்டாள்…
வானதி.. சோகமாய் சுற்றிக் கொண்டிருக்க.. வள்ளியம்மை அவளை
கோவிலுக்கு கூட்டி சென்றார்.. சரியாய் அவர் சென்ற சிறிது நேரத்தில்
பேச்சியும் புஷ்பாவும் வடுகம்மாளை காண வந்தார்கள்…
வடுகம்மாள்.. வாங்கண்ணி .. வா புஷ்பா என்ன கொஞ்ச நாளா உங்கள
வட்டுப்
ீ பக்கமே பாக்க முடில..
வயல்ல கொஞ்சம் வேலை இருந்தது அண்ணி.. அதான் வரமுடில … என்று
கூறியவர்களின் மனதில் அருளின் உக்கிரமான முகம் வந்து போனது..
தர்ஷன்.. தில்லை கூறியதாக.. வானதி கூறிய அனைத்தையும் அருளிடம்
சொல்லிவிட.. மறுநாளே அருள் அவர்கள் வட்டிற்கு
ீ சென்றான்..
கணபதி.. வா அருளு இப்போதான் இந்த ஐயாவும் தாய்மாமனும் உன்
கண்ணுக்கு தெரிஞ்சாங்களா..
அப்படியெல்லாம் இல்லைன்னு உங்களுக்கே தெரியும் ஐயா.. என்னால வயல்
மில்லெல்லாம் விட்டு எங்கயும் நகர முடியல.. அப்புறம் நான் உங்க
எல்லார்க்கிட்டயும் கொஞ்சம் பேசனும்… அத்தை ஆச்சி தில்லை
எல்லாரையும் வர சொல்லுங்க என்ற அருளின் குரல் இருக்கமாயிருந்தது..
அந்த குரலில் கணபதிக்கும் செல்வத்திற்கும் பயம் வந்தது.. ஒருவேளை
தங்கள் செயல் அறிந்து வந்திருக்கிறானோ என்று.. அதற்குள் பெண்கள்
அனைவரும் வந்தனர்…
பேச்சி.. வா அருளு காப்பித்தண்ணி குடிக்கிறிய.. மறுப்பாக
தலையசைத்தவன்.. அங்கு தூண் ஓரம் நின்றுகொண்டிருந்த தில்லையிடம்..
உன்னை என்னைக்காவது நான் தப்பான எண்ணத்துல பார்த்திருக்கிறேனா
தில்லை.. இல்லை உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நம்பிக்கை
கொடுத்திருக்கிறேனா.. என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க..
தில்லையின் தலை பயத்தில் தானாக மறுப்பாய் தலையசைத்தது…
அப்புறம் எதுக்கு வானதிக்கிட்ட நாங்க உங்களுக்கு வாக்கு தந்த மாதிரியும்..
இப்போ அதை மீ றி அவள கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரியும் சொல்லி
வச்சுருக்க..
அவளிடத்தில் பதில் இல்லை… ‘’ சொல்லு ‘’ என அதட்ட..
செல்வம் ஒன்னும் தெரியாத மாதிரி.. என்ன அருள் என்னென்னமோ சொல்ற..
அவரை ஒரு நிமிடம் கூர்மையாக பார்த்தவன்.. தில்லை வானதியிடம்
சொன்னதைச் சொல்ல.. அனைவரும் அதிர்வது போல் நடித்தனர்..
செல்வம் மகளை அடிப்பது போல் செல்ல.. அருள் தடுத்தான்.. விடுங்க
மாப்பிளை.. விடுங்க.. கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் வாழ்க்கை முழுக்க
உங்க பொண்ணா இங்கயே இருக்க போறேன்னு சொன்னா.. நான் நீங்க
குடும்பமா இருக்கிறதை பார்த்து மனசு மாறுவான்னு அங்க அனுப்பிவச்சா..
அங்கையும் போய் அப்படி சொல்லிவச்சுருக்கா என செல்வம் நல்லவன்
போல் கூறினார்..
இங்க பாரு தில்லை.. நீ வாழ வேண்டிய பொண்ணு.. தேவையில்லாத
ஆசைய மனசுல வச்சுட்டு வாழ்க்கைய தொலைச்சுட்டு நிக்காத… மாமா
கொஞ்ச நாளைக்கு இவள எங்க வட்டுப்பக்கம்
ீ அனுப்பாதீங்க.. இல்லன்னா
நான் ஐயாக்கிட்டயும் அப்புச்சிக்கிட்டயும் சொல்ல வேண்டியிருக்கும் என
செல்வத்திடம் கூறியவன்.. யாரிடமும் விடைப்பெறாது சென்று விட்டான்..
அவன் சென்றதும் தில்லை.. நான் சொன்னத அப்படியே மாமன்கிட்ட
போட்டுக் கொடுத்துருக்கியா.. இருடி உன் கொண்டை மயித்தோட உன்
தலைய வெட்டுறேன்.. என கோபமாக கத்தியவள்.. அடுப்பங்கரையில் உள்ள
அருவாமனையை எடுத்துக் கொண்டு வெளியேற.. செல்வமும் கணபதியும்
அவளைத்தடுத்து.. கையில் இருந்த அருவாமனையை தூக்கி வசினார்…

இந்த கோபத்தால தான் நீ.. நினைக்கிறது எதுவும் நடக்க மாட்டேங்குது..
அப்போ அவள என் மாமன் கூட சந்தோஷமா இருக்கிறத பார்த்து அமைதியா
இருக்க சொல்றிங்களா…
இந்த சந்தோஷம் அவங்களுக்கு வாழ்க்கை முழுக்க இருக்கப்போறதில்ல..
இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துல ஊரே அந்த வானதிய மலடின்னு
சொல்ல போகுது.. என செல்வம் கூறியவுடன்.. விழி பளபளக்க என்னப்பா
சொல்றிங்க.. என ஆவலாக கேட்டாள்….
செல்வம் தன் திட்டத்தினை கூற.. தில்லையின் முகம் பழிவாங்கிய
மகிழ்ச்சியிலும் வெறியிலும் மின்னியது… குழந்தையில்லாமல் வானதி கதறி
கண்ணர்ீ விடும் காட்சி மனதில் ஓட.. அதை நேரில் காணும் நாளை.. தில்லை
ஆவலுடன் எதிர்ப்பார்த்தாள்…
அவளுக்கு குழந்தை பொறக்காதுன்னு தெரிஞ்சதும்.. கண்டிப்பா அத்தை
அருளுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைப்பாங்க.. அவ கண்ணு
முன்னாடியே நீயும் அருளும் குழந்தையும் குட்டியுமா வாழ்றத பார்த்து அவ
துடிப்பா என செல்வம் கூறியதும்.. எதிர்காலம் பற்றிய கனவுகள் தில்லையை
சூழ்ந்துக் கொண்டது…
இவர்கள் அனைத்தையும் யோசித்தனர்.. ஆனால் அருள்மொழி
பாண்டியனுக்கு மட்டும் இவர்கள் திட்டம் அறிந்தால் என்னவாகும் என்பதை
யோசிக்க மறந்தனர்.. எதையும் எந்த நொடியும் மாற்றிப் படைக்கும்
வல்லமை கொண்ட விதியையும் மறந்து மனக்கோட்டை கட்டிக்
கொண்டிருந்தனர்….
இப்பொழுது பேச்சியும் புஷ்பாவும் .. வடுகம்மாளின் மனதில் குழந்தைப்
பற்றிய சலனத்தை விதைக்க வந்திருந்தனர்..
என்னண்ணி இன்னுமா அந்த வானதிப்புள்ள நல்ல செய்தி சொல்லல.. ஏன்
நான் கேட்குறேன்னா நம்ப குடும்பத்துல கல்யாணமான அடுத்த மாசமே
நல்ல செய்தி வந்துடும்… பத்தாம் மாசம் தொட்டில் கட்டிடுவோம்.. அதான்
கேட்டேன்..
வடுகம்மாளிற்கு குழந்தை பற்றிய ஆசை இருந்தாலும்.. பட்டணத்துல
வளர்ந்த புள்ளைல அதான் கொஞ்சம் தள்ளிப் போடுதோ என்னமோ என
வானதியை விட்டுக் கொடுக்காமல் பேசினார்..
புஷ்பா.. ம்ம்ம் எங்க சொந்தத்துல உள்ள ஒரு பையனுக்கு பட்டணத்து
புள்ளைய கல்யாணம் பண்ணி வச்சாங்க.. ஆனா மூனு நாலு வருஷமாகியும்
குழந்தையே இல்லை.. கடைசியா டாக்டர் கிட்ட போனதுக்கு அப்புறம் தான்
தெரிஞ்சது அந்த பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் இல்லையாம்..
முன்னாடியே வந்திருந்தா சரிபண்ணியிருக்கலாம்னு சொன்னாங்களாம்..
எதுக்கும் நீங்க அந்த புள்ளைய டாக்டர்கிட்ட காமிங்களேன் அத்தை..
பேச்சி.. ஆமா அண்ணி.. புஷ்பா சொல்றது சரிதான்.. இந்த காலத்து
புள்ளைகளுக்குத்தான் குளிக்கவும் மாத்திரை மருந்துன்னு
கொடுக்கிறாங்களே.. எதுக்கும் நீங்க அந்த புள்ளைய டாக்டர்கிட்ட
கூட்டிபோங்க.. என்றவர்.. வடுகம்மாளின் முகத்தை பார்க்க.. அங்கு தாங்கள்
வந்ததிற்கான வேலை முடிந்த பாவனை தெரிய.. அடுத்து ஒன்றெண்டு
விஷயங்கள் பேசிவிட்டு.. சந்தேகம் வராதவாறு அமைதியாக
சென்றுவிட்டனர்…
இங்கு தன்னைப் பற்றி பின்னிய சூழ்ச்சி அறியாத வானதி
வள்ளியம்மையுடன் சந்தோஷமாக கோவிலை சுத்தி வந்துக்
கொண்டிருந்தாள்.. வடுகம்மாளிர்க்கோ பேச்சி மற்றும் புஷ்பாவின்
வார்த்தைகளே காதில் சுத்திக் கொண்டிருந்தது…
இரவுணவு முடிந்து அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல.. வானதியை
மட்டும் தனியாக அழைத்த வடுகம்மாள்.. ஏட்டி நீ எப்போ தலைக்குளிச்ச..
நான் வாரத்துக்கு மூனு நாள் தலைக்கு குளிப்பேன் அம்மாயி.. என அவள்
கூறியவுடன் கொமட்டில் இடித்தவர்.. என்னடி லொள்ளா.. எப்போ வட்டுக்கு

தூரமானன்னு கேட்டேன்..
என்ன அம்மாயி சொல்றிங்க.. எனக்கு புரியல..
அடியே வெள்ளச்சிருக்கி.. நிசமாவே நான் கேட்டது உனக்கு புரியலையா
இல்லை.. என்ன நக்கல் பண்றியா.. மூனு நாள் தள்ளிபோகும்லடி.. அது
எப்போ குளிச்ச.. என அவள் முடியை கையில் பிடித்து ஆட்டியவாறு கேட்க..
ஆஆ.. அம்மாயி வலிக்குது விடுங்க என்று கூறியவளுக்கு அப்பொழுது தான்
அவர் கேட்பது புரிய.. கடைசியா எப்போ ஆனேன்னு தெரியலை.. எனக்கு
எப்பவும் லேட் லேட்டா ரொம்ப நாள் தள்ளித்தான் வரும்.. அதுனால அத
கண்டுக்கறதுயில்லை.. போதுமா இப்போ விடுங்க.. எனக்கு தூக்கம் வருது
என மாடிக்கு செல்ல.. வடுகம்மாள் கவலையுடன் அமர்ந்தார்…
பேச்சி கூறிய வார்த்தைகளெல்லாம் இப்பொழுது அவருக்கு பூதாகாரமாய்
தெரிய.. நாளை வானதியை கண்டிப்பாக மருத்துவமனை அழைத்துச் செல்ல
வேண்டும் என முடிவெடுத்தவர்.. முனியா என் பேத்திக்கு எந்த குறையும்
இல்லாம.. எங்க வம்சம் தலைக்கனும்ய்யா.. வடு
ீ நிறைய பிள்ளைங்க சத்தம்
கேட்கனும்.. இது மட்டும் நடந்தா உனக்கு வருஷா வருஷம் மூனு கிடா
வெட்டுறேன்.. சாமி என காசு முடிந்து வேண்டிக்கொண்டார்..
மறுநாள் ஆண்கள் அனைவரும் அவரவர்.. வேலைக்கு செல்ல.. வடுகம்மாள்
வானதியிடம்.. அடியே சின்னக்கழுதை .. வா நாம ரெண்டு பேரும் வெளிய
போயிட்டு வருவோம்.. என்றழைக்க.. வானதியும் வள்ளியம்மையும்
ஆச்சரியத்தில் விழி விரித்தனர்..
ஏனெனில் வடுகம்மாள் தேவையில்லாமல் வெளியே செல்ல மாட்டார்..
சொந்த பந்தம் விஷேசம்.. கோவில் மட்டுமே செல்வார்.. வேறெங்கும் செல்ல
ஆர்வம் காட்டமாட்டார்.. அப்படிப்பட்டவர் இப்பொழுது வானதியுடன் வெளியே
செல்ல விரும்புவது … வள்ளியம்மைக்கு ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி..
எங்க போறோம் அம்மாயி..
ஹ்ம்ம்ம் எங்க போறோம்னு சொன்னாத்தான் மஹாராணி கிளம்புவங்களோ..

போயி விரச தயாராகிட்டு வா.. என அவளை விரட்டியவர்.. இந்தா வள்ளி..
நாங்க போயி வரதுக்குள்ள மதிய சமையலை முடிச்சுடு.. என
வள்ளியம்மையையும் விரட்டினார்..
வள்ளிக்கு.. எங்கு செல்கிறார்கள் என்று கேட்க ஆசைதான்.. ஆனால் மாமியார்
வாய்க்கு பயந்து வாயை மூடிக் கொண்டார்…
வானதியும் ரெடியாகி வர.. இருவரும் காரில் கிளம்பினர்.. வானதி எவ்வளவு
கேட்டும் வடுகம்மாள் எங்கு செல்கிறோம் என்று சொல்லவில்லை.. பார்த்து
தெரிஞ்சுக்கோ என்பதோடு முடித்துக் கொண்டார்..
ஆனால் கார் மகளிர் மருத்துவமனையில் நிற்கவும் ஒன்னும் புரியாமல் தன்
அம்மாயியை பார்க்க.. அவரோ அவளை மகப்பேறு மருத்துவர் முன்பு
நிறுத்தினார்.. அந்த பெண் மருத்துவர் இவர்களுக்கு தூரத்து உறவினர்
என்பதால்.. நேரே அவரிடம் வந்துவிட்டனர்..
வாங்க ஆச்சி.. எப்படி இருக்கீ க..
நல்லாருக்கேன் வசந்தி.. நீ எப்படியிருக்க..
எனக்கென்ன உங்க புண்ணியத்துல.. சூப்பரா இருக்கேன்.. என்ன திடிர்னு
என்னைய பார்க்க வந்துருக்கீ ங்க.. ஏதாவது நல்ல சேதியா என சிரிப்புடன்
வானதியைப் பார்த்து வினவினாள்..
வானதி.. என்ன சொல்வது என தெரியாமல்.. அவரை பார்த்து சங்கடமாக
சிரித்தவள்.. வடுகம்மாளை முறைத்தாள்.. இந்த கிழவி இப்போ என்னத்துக்கு
என்னை ஹாஸ்பிடல் கூட்டிவந்துருக்கு.. இத இன்னைக்கு ஐயாக்கிட்ட
மாட்டிவிட்டு திட்டு வாங்க வைக்கனும்… என பொறுமியவள்.. மருத்துவர்
கூறும் செய்தியைக் கேட்டு என்ன செய்வாளோ…
நல்ல சேதி எப்போ வரும்னு கேட்கத்தான்.. என் பேத்திய உன்கிட்ட
கூட்டியாந்தேன்..
இப்போத்தானே கல்யானம் ஆச்சு ஆச்சி.. அதுக்குள்ள பிள்ளைக்கு என்ன
அவசரம் என மெல்லிய குரலில் கண்டிப்புடன் கூறியவர்.. வானதியை உள்ளே
வர சொன்னார்..
அவளும் தயக்கம் சங்கடம் எல்லாம் கலந்த உணர்வை முகத்தில்
காண்பித்தவாறு வர..அவளின் தயக்கம் புரிந்தவர்.. அவளை சகஜமாக்கும்
பொருட்டு.. உங்க அம்மா எப்படியிருக்கா நல்லாயிருக்காளா.. என கேட்க..
விழிகளை விரித்த வானதி.. எங்க அம்மாவ உங்களுக்கு தெரியுமா..
ஹ்ம்ம்ம் நானும் உங்கம்மாவும்.. சின்ன வயசுல இருந்தே பிரெண்ட்ஸ்..
இங்க நடந்த ஒரு பிரச்சனையால உங்கவட்டாளுங்க
ீ அவள ஊரை விட்டு
அனுப்பிவைச்சுட்டாங்க.. அப்போ கோவமா போனவதான்… அடுத்து ஊருக்கு
வரவும் இல்லை.. இங்க அவளோட சம்பந்தப்பட்டவங்க யாரோடவும்
பேசவுமில்லை.. என்னையும் சேர்ந்து தான் என வருத்தத்தோடு கூறியவர்..
வானதியையும் பரிசோதித்து முடித்தார்..
இங்க என்னதான் நடந்திருக்கும்.. எதுக்காக அம்மாவ ஐயா ஊரை விட்டு
அனுப்புனாங்க.. அம்மா அதுனாலதான் பெரிய வட்டுக்கு

வரமாட்டேங்குறாங்களா.. அப்படி என்ன பிரச்சனையா இருக்கும்.. முத
வேலையா மச்சான்கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்கனும் என அதைப்
பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளை வடுகம்மாளின் குரல் கலைத்தது..
என் பேத்திக்கு எப்போ பிள்ளை பொறக்கும் வசந்தி.. என ஆவலாக கேட்டார்..
வானதியும் குழத்தைப் பற்றிய சிறு ஆசை குறுகுறுப்புடன் வசந்தியைப்
பார்த்தாள்..
இப்போ என்னால ஒன்னும் சொல்ல முடியாது.. அத்தை நான் சில டெஸ்ட்
எழுதிக் கொடுக்கிறேன்.. அதோட ரிசல்ட் வாங்கிட்டு வாங்க.. என்ற
வசந்தியின் முகம் யோசனையில் சுருங்கியிருந்தது..
அதைக்கண்டு மற்ற இருவருக்கும் பதட்டமும் பயமும் தொற்றிக் கொண்டது..
வடுகம்மாள் ஊரில் உள்ள எல்லாக் கடவுளுக்கும் வேண்டுதல் வைத்துக்
கொண்டிருந்தார்…
அருள் வட்டிலோ..
ீ பற்றி வைத்த தீ எவ்வாறு செயல் படுகிறது என பார்க்க
வந்த பேச்சிக்கு.. வடுகம்மாளும் வானதியும் வெளியே சென்ற செய்தி வர..
தங்கள் திட்டம் இவ்வளவு சீக்கிரம் பலித்ததில் மகிழ்ச்சியடைந்தவர்.. உடனே
இதனை தில்லையிடம் கூறுவதற்கு விரைந்தார்..
பரிசோதனைகளின் முடிவு வந்துவிட.. வடுகம்மாளும் வானதியும் வசந்தி
கூறும் வார்த்தைகளுக்காக பதட்டத்தோடு காத்திருந்தனர்..
என்னாச்சு வசந்தி எதுவும் பிரச்சனையா..
ம்ம்ம் என்று ஆமோதிப்பாய் தலையசைக்க.. காலடியில் பூமி நழுவும்
உணர்வுடன் அமர்ந்திருந்தவள்.. அடுத்து அவர் கூறியதைக் கேட்டு
அதிர்ச்சியில் உறைந்தாள்.. அவளின் நிலைதான் வடுகம்மாளிற்கும்…
அங்கு தில்லை வட்டிலோ..
ீ பேச்சி தான் கேட்டதை சொல்ல.. தில்லையின்
முகம் மகிழ்ச்சியில் பூரித்தது..
இத்தனை நாளும்.. நான் இதுக்காகத்தான் காத்திக்கிட்டுருந்தேன் அப்பத்தா..
அன்னைக்கு மாமா இனி எங்க வட்டுக்கு
ீ வராதன்னு சொல்றப்போ எவ்வளவு
அவமானமா இருந்தது தெரியுமா.. அப்போ முடிவெடுத்தேன்… எவளுக்காக
மாமா என்னை இப்படி அவமானப்படுத்துனாரோ… எவளுக்காக அந்த
குடும்பமே நம்பள தள்ளிவச்சதோ.. அவ இப்போ காய்க்காத மரமா.. எந்த
பயனுமில்லாதவன்னு தெரிஞ்சு அவுங்க எல்லாரும் துடிக்கிறதையும்..
தன்னால ஒரு குழந்தைய பெக்க முடியாதுன்னு … அவ தரையில விழுந்து
கதருறதை தான் முதல்ல பார்க்கனும் நினைச்சேன்.. அதான் அந்த வட்டுப்

பக்கமே போகல.. இப்போதான் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு
அப்பத்தா.. சீக்கிரமா எதாவது இனிப்பு செய்யிங்க.. அவங்க துக்கத்தை
பகிர்ந்துக்க இனிப்போட போவோம் என குரூரமாக சிரிக்க..
சுற்றியுள்ளவர்களும் அதில் பங்குக்கொண்டனர்..

அத்தியாயம் 19

ஒரு குடும்பத்தின் துன்பத்தைக் கண்டு இன்பம் காண.. கணபதி செட்டியாரின்


மொத்த குடும்பமே அருள் வட்டிற்க்கு
ீ வந்தது..
அங்கு அருள் செங்குட்டுவன் அழகு வள்ளியம்மை என அனைவரும் சுற்றி
நின்றிருக்க.. நடுவில் வடுகம்மாள் நின்று வானதியை திட்டிக்கொண்டிருந்தார்…
அவளோ தலை கவிழ்ந்து அவரின் திட்டல்களை.. விழிகளில் பளபளத்த
கண்ணருடன்
ீ வாங்கிக் கொண்டிருக்க.. அருளோ அவரை தடுக்க முடியாத
தவிப்புடன் நின்றுக் கொண்டிருந்தான்..
அப்பொழுது தான் உள்ளே வந்த தில்லையும் அவர்கள் குடும்பத்தினரும்
இக்காட்சியை.. உள்ளுக்குள் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..
அதுவும் முகம் முழுக்க கலங்கிச் சிவந்து.. விழி இமைகள் எல்லாம்
கண்ணரில்
ீ நனைந்திருந்த வானதியின் கோலத்தைக் கண்டு தில்லையின்
முகம் அபரிமிதமான மகிழ்ச்சியில் மின்னியது... இதைத்தாண்டி
எதிர்பார்த்தேன்.. இப்படி நீ அவனமானப்பட்டு தலைகுனிஞ்சு கூனி குறுகி
நிர்க்கனும்னு தான் எதிர்ப்பார்த்தேன்.. அது நடந்துடுச்சு.. என மனதிற்குள்
வெற்றிக் களிப்பில் கொக்களித்துக் கொண்டிருந்தாள்…
அப்பொழுது தான் அவர்களை கண்ட வடுகம்மாள்.. வாங்கண்ணி..
வாங்கண்ணா.. என அனைவரையும் வரவேற்றவர்.. தன் குடும்பத்தாரிடம்..
நல்லவேளை நேத்து பேச்சியண்ணி இந்த சிறுக்கிய ஆஸ்பத்திரிக்கு கூட்டி
போயி பார்க்க சொன்னதுனால தான் இவள பத்தின விசயம் தெரிஞ்சுச்சு..
இல்லைன்னா இந்த கூறுகெட்டவள வச்சுக்கிட்டு என்ன ஆகிருக்குமோ.. என
அவர் மீ ண்டும் பொறிந்தார்..
என்னாச்சு அண்ணி.. டாக்டரு என்ன சொன்னாங்க.. குழந்தை பொறக்குறதுல
ஏதும் பிரச்சனையா.. என ஒன்னும் தெரியாதது போல் கேட்க.. தில்லையும்
அவரின் வாயிலிருந்து உதிக்கும் வார்த்தைகளுக்காக காத்திருக்க..
அங்கிருந்த லட்டுகள் நிறைந்த தட்டிலிருந்து.. ஒரு லட்டை எடுத்து
பேச்சியின் வாயில் திணித்தவர்.. அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணி..
எல்லாம் நல்ல விஷயம் தான்.. வானதி மாசமா இருக்கா.. என அவர்
வாயெல்லாம் பல்லாக கூற..
கணபதி குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி.. தில்லைக்கோ தலையில் இடி விழுந்த
உணர்வு.. எத்தனை எத்தனை ஆசைகள்.. கனவுகள் அனைத்தும் ஒரு
நொடியில்.. மணர்க்கோர்ட்டை போல் சரிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது..
அவள் உடனே வானதியின் புரம் திரும்ப அவளோ வெட்கம் கொண்டு
அருளின் மார்பில் புதைந்தாள்.. இப்பொழுது அவளின் முகச்சிவப்பிற்க்கான
காரணம் வெட்கம் என்றும்.. விழி நீருக்கான காரணம்.. இன்பத்தில்
வந்ததென்றும் தில்லைக்கு தெள்ளத் தெளிவாக விளங்க மொத்தமாய் இடிந்து
விட்டாள்..
செல்வத்திற்கு ராமாயி மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.. அவருக்கு
தான் கொடுத்த நாட்டு மருந்தில் அதீத நம்பிக்கை உண்டு.. நிச்சயம் அது
பொய்க்க வாய்ப்பில்லை.. அந்த வேலைக்காரிதான் ஏதோ செய்துவிட்டாள்
என கோபம் கொண்டார்.. இப்பொழுது மட்டும் ராமாயி அவர் எதிரே
இருந்தால் கண்டதுண்டமாக வெட்டிருப்பார்.. அவ்வளவு ஆத்திரம்..
இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நினைவில் திகழ்ந்திருக்க..
வடுகம்மாள் மருத்துவமனையில் நடந்ததை கூறலானார்..
வசந்தி.. உனக்கு லாஸ்ட்டா எப்போ பீரியட்ஸ் வந்துச்சு வானதி..
எனக்கு எப்போவுமே.. இர்ரெகுலரா தான் வரும் ஆன்ட்டி.. நான் டேட்ஸ்
நியாபகம் வச்சுக்கறதில்ல.. என பயத்துடன் கூறினாள்.. ஒருவேளை இதனால்
பெரிய பிரச்சனையோ என்று..
ம்ம்ம்ம்.. அதான் உனக்கு தெரியலைன்னு நினைக்கிறேன்.. என சிரிப்புடன்
வானதியை பார்த்து கூறியவர்.. ஆச்சி ஒன்னும் பயப்படாதீங்க எல்லாம் நல்ல
விஷயம் தான்.. உங்க பேத்தி மாசமா இருக்க என வடுகம்மாளிடம் சொல்ல..
இருவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்கள்..
அய்யா… முனியா என் கோரிக்கைய நிறைவேத்திட்டப்பா.. நான் வேண்டுன
மாதிரி வருஷா வருஷம் உனக்கு மூனு கிடா வெட்டுறேன்யா என மேலே
பார்த்து கைகூப்பி வணங்கினார்..
வானதிக்கோ இன்னும் அதிர்ச்சி தீர்ந்தபாடில்லை.. வடுகம்மாள் கேட்கும்
வரை அவளுக்கு குழந்தையை பற்றிய எண்ணம் இல்லை என்பதுதான்
உண்மை.. ஏனெனில் வானதியின் மொத்த எண்ணங்களையும்.. அவளின்
மனங்கவர்கள்வனே கொள்ளையடித்துக் கொண்டானே.. அவனை அடுத்து
அவளால் சிந்திக்க முடியாத அளவிற்கு அவளை தன் காதலால்
சிறைப்பிடித்திருந்தான் அருள்..
இப்பொழுது அவள் கருத்த மச்சானை போலவே கருப்பாய் ஒர் குழந்தையை
அவள் மடியேந்துவது போல் கற்பனையில் நினைக்க.. அந்நினைவே
அவளுக்கு தேனினும் அதீத தித்திப்பை தந்தது.. வசந்தியிடம் அடுத்து.. என்ன
ஏது என்று விபரம் அறிந்து வட்டிற்கு
ீ திரும்ப.. வடுகம்மாளின் அர்ச்சனை
ஆரம்பித்தது…
மதிய உணவு வேளைக்கு ஆண்கள் ஒவ்வொருவராய் வர.. அவர்களிடத்தில்
வடுகம்மாளும் வானதியும் மட்டுமே வெளியே சென்றிருக்கும் விபரம்
தெரிவிக்க பட.. மூவரும் யோசனையாகினர்..
அப்பொழுது சரியாய் இருவரும் வட்டிற்குள்
ீ நுழைய.. செங்குட்டுவன் கேள்வி
கேட்க ஆரம்பிக்கும் முன் வடுகம்மாள் கத்த தொடங்கினார்..
ஊரு உலகத்துல.. இப்படி ஒரு பொம்பளைய நான் பார்த்ததில்லடி ஆத்தா..
ஒருத்தி இத கூடவா உணராம இருப்பா… என சம்பந்தமில்லாமல் பேச..
செங்குட்டுவன்.. என்ன சொல்ற வடுகம்மா.. செத்த விளங்குற மாதிரி பேசு..
பேத்திய கூப்பிட்டு எங்கன போன..
ஹ்க்கும் நான் இவ்வளவு நேரமா உங்க கொள்ளு பேத்தியோட பவுச
பத்தித்தான் பேசிகிட்டு இருக்கேன்.. நீரு செத்த வாய மூடும்.. என கணவரை
அதட்ட அவர் அமைதியானார்.. ரொம்ப கோபமோ சந்தோஷமோ கொண்டாள்
தான் வடுகம்மாள் இவ்வாறு பேசுவார் என அறிந்த செங்குட்டுவன் வாயை
மூடிக்கொண்டார்..
இத்தனை கலவரத்திலும் குனிந்த தலை நிமிராது தூண் ஓரத்தில் நின்றிருந்த
வானதியைக் கண்டு.. ஒன்றும் புரியாமல்.. அருள் தன் அம்மாளுவிடம்
நெருங்க.. அவளோ வெட்கம் கொண்டு வள்ளியின் பின் சென்று மறைந்தாள்..
அழகு.. ஆத்தா இப்போ என்னதான் நடந்துச்சு.
ம்ம்ம்ம் நம்ம வட்டுக்கு
ீ வாரிசு வரப்போகுதுடா.. கூறுக்கெட்ட பயலே.. உம்ம
பேத்தி முழுகாம இருக்கா.. என அவர் கூறியதும்..
அங்குள்ளோர் ஆச்சரியமும் மகிழ்வும்மாக வானதியை பார்த்தனர்..
அவளுக்கோ மற்றவரை பார்க்க நாணம் தடுக்க.. தன் முகத்தை
வள்ளியம்மையின் தோளில் மறைத்தாள்..
வள்ளியம்மை அவளை முன்னிழுத்து.. அப்படியாத்தா என உள்ளார்ந்த
மகிழ்ச்சியுடன் கேட்டவர்.. அவளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தார்..
கூடவே அவளின் நெற்றியில் இதழ் பதித்தார்.. செங்குட்டுவனும் அழகும்
அவள் தலையை தடவினர்.. செங்குட்டுவன் கரங்களோ அதீத சந்தோஷத்தில்
நடுங்கியது..
அனைவரையும் பார்த்த வானதியால்.. அருகே நின்றிருந்த அருளை மட்டும்
பார்க்க கண் உயரவில்லை.. ஆனால் மனமோ அவனை பார்.. பார் என
அடித்துக் கொண்டது..
அதன் தொல்லை தாங்காமல்.. தன்னவனை நோக்கி அவள் விழிகள் மெல்ல
உயர.. அங்கு அவளையே வைத்த கண் வாங்காமல் அருள் பார்த்துக்
கொண்டிருந்தான்… அந்த விழிகளில் வியப்பு மகிழ்ச்சி கர்வம் வேட்கை என
பல உணர்வுகள் பிரதிபலித்தன..
ஒருவரொருவர் மற்றவரை பார்வையால் தழுவிக் கொண்டிருந்தனர்..
அருளுக்கு அவளை காற்று புகாத அளவிற்கு அணைக்க பேராவல் எழ.. ஆனா
இருக்கும் இடத்தை அறிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்..
அருள் தானே இடம் பொருள் ஏவல் அனைத்தும் பார்ப்பான்.. ஆனால்
அவனின் சரிபாதி என்றைக்கு இவற்றை பார்த்திருக்கிறாள்.. அதேபோல்
இன்றும் தன்னவனின் விழிகளில் தெரிந்த செய்தியை படித்த அடுத்த நொடி
அவன் கைவளைவிற்குள் சென்றாள்… அருளும் அனைத்தும் மறந்து அவளை
அனைத்துக் கொண்டான்.. பேச்சுக்கள் அங்கு நடைபெறவில்லை இருந்தும்
ஒருவர் அன்பு மற்றவருக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது…
நிமிடங்களோ யுகங்களோ இருவரும் சுற்றியுள்ளோரை மறந்து தங்களுக்குள்
மூழ்க.. வடுகம்மாளின் குரல் அவர்களின் மோக நிலையை கலைத்தது..
ஒரு பொண்ணு தான் கர்ப்பமா இருக்கிறது கூடவா தெரியாம இருப்பா.. இவ
இவ்வளவு நாள் ஒரு இடத்துல கொஞ்ச நேரம் சும்மா இருந்து
பார்த்திருப்போமா.. எப்பப்பாத்தாலும் ஆடிக்கிட்டும் ஓடிக்கிட்டும் இருப்பா..
நேத்து கூட பப்பாளிய சாப்பிட போனா.. எந்த சாமி புண்ணியமோ அத ஆடு
தள்ளிவிட்ருச்சு.. இல்லைன்னா இந்நேரம் என்ன ஆகியிருக்கும் என
வடுகம்மாள் தன் ஆதங்கத்தை சொல்ல.. யாராலும் எதுவும் பேச
இயலவில்லை.. அவர் சொல்வது நியாயம் தானே.. அப்பொழுது தான்
தில்லையின் குடும்பத்தினர் வருகை தர.. வடுகம்மாளின் கோபம் எதனால்
என புரியாது.. சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்….
வடுகம்மாள் நடந்தவைகளை கூறி முடிக்க.. தில்லையின் குடும்பத்தினர்
வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பை ஒட்டவைத்தனர்…
வள்ளியம்மை.. அண்ணி தூக்குல என்ன கொண்டு வந்துருக்கீ ங்க என புஷ்பா
கரத்தில் இருந்த பித்தளை வாளியை பார்த்துக் கேட்க..
கவுனி அரிசி பொங்கல் செஞ்சேன் வள்ளி.. உங்களுக்கு கொடுக்கலாம்னு
கொண்டு வந்தேன்.. என மெல்லிய குரலில் கூறினார்..
பார்த்திங்களா இங்க நடக்கப்போற நல்லவிஷயம் உங்களுக்கும்
தெரிஞ்சுருக்கு.. அதான் சரியா பொங்கல் செஞ்சு கொண்டு வந்துருக்கீ ங்க..
என வாளியை வாங்க..
தில்லையின் குடும்பத்தினர் அவஸ்தையில் நெளிந்தனர்.. வானதியின்
கதறலையும் அக்குடும்பத்தின் துன்பத்தையும் காண இனிப்புடன்
வந்தவர்களுக்கு.. இங்கு நிலவிய சூழ்நிலைக் கண்டு என்ன சொல்வதென்பதே
அவர்களுக்கு தெரியவில்லை.. அங்கு நிற்கவும் முடியவில்லை.. சட்டென்று
போகவும் இயலாத சூழ்நிலை.. முள் மேல் நிற்பது போல் அவஸ்தையுடன்
நின்றுக் கொண்டிருந்தனர்…
அப்பொழுது வானதி.. மயக்கம் வர மாதிரி இருக்கு என சொல்ல.. மொத்த
குடும்பமும் அவளை தாங்கு தாங்கென தாங்கியது.. வடுகம்மாள் அவளை
ஓய்வெடுக்க கூட்டி போகச்சொல்ல.. அருள் யாரையும் சட்டை செய்யாது
அவளை தன் கரத்தில் ஏந்திக் கொண்டு மாடியறைக்கு சென்றான்…
இவை அனைத்தையும் வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தாள் தில்லை..
அவள் மனமோ கொதிகலன் போல் கொதித்துக் கொண்டிருந்தது.. ஏமாற்றம்..
ஏமாற்றம்.. ஏமாற்றம் மட்டுமே அவளை சுற்றிக் கொண்டிருந்தது.. என்னென்ன
ஆசைகள் அவை அனைத்தும் இப்பொழுது அவளை கேலி செய்வது போல்
தோன்ற.. விருட்டென்று அருள் வட்டை
ீ விட்டு வெளியேறினாள்…
வானதியின் மேல் அனைவர் கவனமும் இருந்ததால் இவளை யாரும்
கண்டுகொள்ளவில்லை… தில்லையின் மனநிலை புரிந்து செல்வமும் அவள்
பின்னே சென்றார்…
வேகமாக தன் வட்டிற்குள்
ீ வந்தவள்.. அங்கு தன் கைக்கு அகப்பட்ட
அனைத்தையும் உடைத்தாள்.. செல்வமும் அவளின் கோபம் போகும் வரை
பொறுமை காத்தார்.. ஒருவழியாக அனைத்தையும் உடைத்தவள் ஓய்ந்து
போய் தரையில் அமர்ந்தாள்…
தோத்துட்டேன் அப்புச்சி.. அந்த வானதிக்கிட்ட அசிங்கமா தோத்துட்டேன் என
தரையை வெறித்தவாறு பேசினாள்…
இந்த திட்டம் பலிக்கலைன்னா.. அடுத்த திட்டத்தை யோசிப்போம் தில்லை..
என செல்வம் சாதாரணமாய் கூற..
அவரை நோக்கி அண்ணாந்தவள்.. எப்புடி அப்புச்சி இந்த விஷயத்தை
உங்களால சாதாரனமா எடுத்துக்க முடியுது..
நான் சாதாரணமா எடுத்துக்கிட்டேன்னு யார் சொன்னா… உள்ளுக்குள்ள
வெறிகொண்டு இருக்கேன்.. இருபத்தி மூனு வருஷத்துக்கு முன்னாடி இவ
அம்மா மூலமா எனக்கு முதல் தோல்வி கிடைச்சது… ஒவ்வொரு நாளும்
நான் தோத்துட்டேன்ங்கிறத மறக்க முடியாத அளவுக்கு நினைவுச் சின்னமும்
கிடைச்சது என தன் மார்பில் உள்ள தழும்பை வருடியவாறு கூறியவர்..
இப்போ அவ மக மூலமா ரெண்டாவது தோல்வி கிடைச்சிருக்கு.. அதுக்கான
தக்க பதிலடிய கொடுக்கனும்ங்கிறதுக்காக என் கோபம் எல்லாத்தையும்
மறந்துட்டு.. அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்..
இது கோபப்படவேண்டிய நேரமில்லை தில்லை.. யோசிக்க வேண்டிய நேரம்..
அடுத்த திட்டத்தை தீட்ட வேண்டிய நேரம்.. என தன் மகளுக்கு போதித்தார்..
தில்லையும் கோபத்தை விடுத்து அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க
ஆரம்பித்தாள்…
தன் மேல் படுத்திருந்த வானதியின் தலையை ஒரு கரம் வருட.. மற்றொரு
கரமோ தன் உயிரணுவில் உதித்த முத்தைக் கொண்டுள்ள தன்னவளின்
மணிவயிற்றை வருடியது…
அம்மாளு உனக்கு எந்த அறிகுறியுமே தோணலையாடி.. இந்த மாதிரி
நேரத்துல வாந்தி மயக்கம் எல்லாம் வரும்ன்னு சொல்வாங்களே..
இல்லை மச்சான்.. நான் எப்பவும் போல தான் இருந்தேன்.. எனக்கு எதுவுமே
தோணலை.. வாந்தி மயக்கம் எல்லாம் இல்லை…
ஹ்ம்ம்ம் இன்னும் கொஞ்ச மாசத்துல உன்ன மாதிரியே ஒரு குட்டித்தேவதை
என் கையில இருப்பா…
ஹான் ஆசைதான்.. எனக்கு கருகருன்னு.. என் கருத்த மச்சான் மாதிரி
ஆம்பள புள்ளதான் பொறக்கும்… என அருளின் மீ சையை இழுத்தவாறு
கூறினாள்..
பொம்பள புள்ளதான் பொறக்கும்.. என் தேவதை வந்து உன்னை
ஒருவழியாக்க போறா பாரு..
ஓஹ்.. இதோட.. பையன்தான் பொறப்பான்.. அவன்.. என்னப்பா எப்போ
பார்த்தாலும் அம்மாவையே ஒரசிக்கிட்டு இருக்கீ ங்கன்னு உங்கள
என்கிட்டயே நெருங்க விட மாட்டான்…
பார்ப்போமா..
பார்ப்போம்..
இன்னும் பிறக்காத குழந்தைக்கு இருவரும் சண்டை கோழிகள் போல்
சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்…
மச்சான்.. அப்பா அம்மாக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லலாமா… என
ஆசையாய் கேட்க…
ம்ம்ம்ம் என தலையசைத்த அருள்.. சந்திரனிற்கு போன் செய்தான் ‘’ என்ன
மாப்பிள இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க.. ‘’
‘’ யோவ் மாமா.. சீக்கிரம் எங்கக்காவ கூட்டிட்டு ஊருக்கு வர வழிய பாரு..
இங்க ஒரு பஞ்சாயத்து இருக்கு.. ‘’
‘’ என்னாச்சு மாப்பிள.. எதாவது பிரச்சனையா.. என சந்திரன் சீரியஸாக
கேட்க.. ‘’
‘’ ஆமா மாமா.. இன்னும் கொஞ்ச மாசத்துல எங்க வட்டுக்கு
ீ புதுசா
ஒருத்தங்க வராங்க.. அவங்க அக்காக்கு என்ன முறை வேனும்னு
யோசிக்கனும்.. அதான் பஞ்சாயத்து.''
‘’ டேய் எரும.. டென்ஷன் படுத்தாம என்ன விஷயம்ன்னு சொல்லுடா.. ‘’
ம்ம்ம்ம் என் மக உன் பொண்டாட்டிய அத்தைன்னு சொல்லுமா.. ஆச்சின்னு
சொல்லுமான்னு தான் பஞ்சாயத்து.. என அருள் சிரிப்புடன் கூறினான்..
அங்கு மறுமுனையில் சந்திரனுக்கு பேச்சு வரவில்லை.. டேய் மாப்பிள
என்னடா சொல்ற..
அவரின் நிலையை குரல் வழியாக புரிந்துக் கொண்ட அருள்..
விளையாட்டுத்தனத்தை விட்டு.. ஆமா மாமா.. வானதி மாசமா இருக்கா..
இன்னைக்கு தான் போயி கன்பார்ம் பண்ணிட்டு வந்தோம்..
சந்திரனால் பதில் பேச இயலவில்லை.. வானதி அவருக்கு இன்னும்
குழந்தைதான்.. இப்பொழுது அவரது குழந்தைக்கு குழந்தை பிறக்கபோகிறதை
நினைத்து அவருக்கு புன்னைகை தோன்றியது..
வாழ்த்துக்கள்டா மாப்பிள.. பேபி பக்கத்துல இருக்காளா..
இங்கனதான் இருக்கா.. இருங்க கொடுக்கிறேன்.. என போனை வானதியிடம்
கொடுத்தான்…
டாடி.. எப்படி இருக்கீ ங்க.. மாம் க்ரானி ஷ்ரவன் எல்லாம் எப்படி இருக்காங்க…
எல்லாரும் நல்லாயிருக்கோம்.. பேபிக்கு பேபி வரப்போகுதா ஹ்ம்ம்.. என
அவர் சிரிப்புடன் கேட்க..
அவளோ வெட்கமுறுவலுடன்.. ஹ்ம்ம்ம் என்று மட்டும் கூறினாள்..
அப்பா இப்போ தான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டா.. சொல்லு
உனக்கு என்ன வேனும்..
சிறிது நேரம் யோசித்தவள்.. டாட் மாம்.. அமெரிக்கா போயிருக்காங்கள்ல..
அவங்க வந்ததும் இங்க கூட்டி வரிங்களா… எனக்கு மாம் கூட இருக்கனும்
போலயிருக்கு.. ஆனா தோப்பு வட்டுல
ீ தங்க கூடாது… ப்ள ீஸ் என கெஞ்சலாக
கூற…
அதில் உருகிய தந்தையோ.. கண்டிப்பா பேபி உங்க அம்மா.. அங்க உன் கூட
தங்குவா.. அதுக்கு நான் பொறுப்பு.. என்றவுடன்
தேங்க்யூ சோ மச் டாடி.. ஐ லவ் யூ.. என்று சந்தோஷக் குரலில் ஆர்ப்பரிக்க..
மீ டூ டா பேபி.. என்று இருவரிடமும்.. சிறிது நேரம் பேசிவிட்டு போனை
வைத்தார்..
தன் முன் கோபமுகத்துடன் நின்றிருந்த செல்வத்தைக் கண்டு ராமாயி
நடுங்கிக்கொண்டிருந்தவள்… அய்யா என்னை நம்புங்கய்யா.. என அழுகைக்
குரலில் கூறினாள்…
அப்பொழுது அங்கு கோப ஆவேசத்துடன் வந்த தில்லை ராமாயியின்
கன்னத்தில் பள ீரென அறைந்து.. அவளின் தலைமுடியினை கொத்தாக
பிடித்து ஆட்டி… பொய்யா சொல்ற.. சொல்லுடி பொய் சொல்றியா.. நீ மருந்து
கலந்தது உண்மைன்னா.. அவ எப்படி கர்ப்பமா இருக்கா.. என மீ ண்டும்
அறைய..
அதான்மா எனக்கு புரியலை… வாணாதியம்மாக்கு பத்து நாள் தொடர்ந்து
கொடுத்த கஷாயத்துல.. மருந்த கலந்துடுவேன்.. பெரியம்மாவும் அத அவங்க
அறைக்கு கொண்டு போறத பார்த்தப் பிறவு தான்மா நான் வட்டுக்கே

போவேன்… என அழுதவாறு கூற..
ஓஓஓஓ.. நீ சரியாத்தான் கலந்து கொடுத்துத்திருக்க.. அந்த மருந்துதான்
வேலை செய்யலை.. இல்லையா.. என தில்லை கேட்டதும்.. ராமாயி தன்னை
எப்படியாவது நம்பவேண்டுமே என்ற பரிதவிப்புடன்.. வேக வேகமாய்
தலையாட்ட…
அப்புச்சி…. அந்த மருந்துதான் சரியில்லை.. அத நாம கண்டிப்பா
சரிபார்க்கனும்.. என்றவள்.. உனக்கு பொம்பள புள்ள ஒன்னு இருக்குல்ல..
அவள கூட்டிட்டு வா.. அந்த மருந்த அவளுக்கு கொடுத்து சோதனை
பண்ணிப்பார்ப்போம்… என்றவுடன்..
ஐயோ.. அம்மா என தில்லையின் காலில் விழுந்தவள்.. அம்மா என் பிள்ளை
சத்தியமா நான் மருந்து கலந்து கொடுத்தேன்ம்மா.. என் பொண்ண ஒன்னும்
செஞ்சுறாதிங்கம்மா..
அய்யா நீங்க அம்மாட்ட சொல்லுங்கய்யா என செல்வத்திடமும்
கெஞ்சினாள்..
அவளை யோசனையுடன் பார்த்த செல்வம்.. சரி நான் நம்புறேன்.. இப்போ
நான் உனக்கு இன்னொரு மருந்து தரேன்… அத அவ சாப்பாடுளையோ
இல்லை குடிக்கிறதுலையோ கலந்து கொடுத்துடு.. என ஒரு மருந்து
பொட்டலத்தை கொடுக்க.. ராமாயி பயத்துடன் அதனை வாங்கிக்கொண்டாள்…
தில்லை.. இங்க பாரு.. இதுல மட்டும் ஏதாவது தப்பு நடந்துச்சு.. உன்
பொண்ணு பட்டமரமா போயிடுவா.. என மிரட்டி அனுப்பினாள்..
அப்புச்சி இவ மருந்த கொடுத்த மாதிரி தான் எனக்கு தோனுது.. அப்புறம்
எப்படி வானதி கர்ப்பமாயிருப்பா.. ஒருவேளை அவ அந்த கஷாயத்தை
குடிக்கலையோ.. என கேள்வியாக செல்வத்திடம் வினவ..
செல்வம்.. எனக்கும் அப்படித்தான் தோனுது..
தில்லை கணித்தது சரியே.. வானதி அந்த கஷாயத்தை பருகவில்லை..
வள்ளியம்மைக்காக குடிப்போம் என நினைத்து அதை குடிக்க செல்ல..
அதிலிருந்து வந்த வாசனை அவளுக்கு ஒவ்வாமையை கொடுத்தது..
அதனால் அருள் வருவதற்குள் அதை பாத்ரூம் சிங்கிள் கொட்டிவிட்டாள்..
தொடர்ந்த நாட்களிலும் இதைத்தான் செய்தாள்.. அதனால் அவள் கருவறை
தப்பித்தது..
அம்மாளு.. அக்கா இங்க வரலைன்னா கூட.. நீ சென்னைக்கு போயி கொஞ்ச
நாள் இருந்துட்டு வா.. உனக்கு இப்போ அக்கா துணை அதிகம் தேவைன்னு
தோனுது.. என வருத்தத்துடன் கூறினான்..
அவன் நெஞ்சத்தில் சாய்ந்திருந்தவள்.. அண்ணாந்து அவன் முகம் பார்த்து...
நறுக்கென அவன் கன்னத்தை கடித்து வைத்தாள்…
ஆஆஆ… என அலறியவன்… எதுக்குடி கடிச்ச குந்தாணி.. என்று திட்ட.
அவளோ.. என்னை அங்க அனுப்பிட்டு.. நீ ஹீரோ கணக்கா சுத்திக்கிட்டு..
சைட் அடிக்கிறதுக்கா..
அடியே.. நீதானே அம்மா கூட இருக்கனும் போலயிருக்குன்னு சொன்ன..
ஆமா.. யாரு இல்லைன்னு சொன்னா.. மாம் இந்த வட்டுக்கு
ீ வருஷக்கணக்கா
வரலைன்னு பீல் பண்ணிங்கள்ல அதுனால தான் டாட்கிட்ட அப்படி
சொன்னேன்..
அருள்.. எலும்பு நொறுங்கும் அளவிற்கு அவளை இறுக்கியனைத்தான்…
மெல்ல அவனிடத்திலிருந்து விலகியவள்.. இப்பயாவது சொல்லுங்க அம்மா
ஏன் இங்க வரமாட்டேங்குறாங்க.. என்ன கோபம் அவங்களுக்கு.. என்றவள்
வசந்தியை பற்றியும்.. அவர் தன்னிடத்தில் கூறியதை பற்றியும் சொன்னாள்..
அப்படி என்னதான் பிரச்சனை நடந்துச்சு சொல்லுங்க மச்சான்.. என அவன்
முகத்தை பார்த்து கேட்க… அருளும் கடந்த காலத்தைப் பற்றி கூறலானான்…

அத்தியாயம் 20

நாட்டரசன் கோட்டை… பசுமையும் இயற்க்கை வளமும் நிறைந்த ஊர்.. ஊரின்


பெயரைப் போலவே.. அங்குள்ளவர்களின் வடுகளும்
ீ கோட்டை போலவே
இருக்கும்.. ஆனால் அனைத்தையும் விட அரண்மனை போல் விளங்கும்
செங்குட்டுவன் மாளிகை திருமண அலங்காரத்தில் ஜொலித்தது..
மனையில் அமர்ந்திருந்த அழகுவின் முகத்திலோ.. காதல் கைகூடிய
மகிழ்விலும்.. தன்னவளை நினைத்து பெருமிதத்திலும் இருக்க.. பக்கத்தில்
தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலுநாச்சியாரின் முகமோ வெட்கத்திலும்
நாணத்திலும் சிவந்திருந்தது…
ஆனால் அழகுவின் குடும்பத்தார் முகங்களோ களையிழந்து காணப்பட்டது..
நாட்டரசன் கோட்டையின் பெரிய தலைக்கட்டு செங்குட்டுவன் செட்டியார்..
அவர்தான் அவ்வூரின் நாட்டாமையும் கூட.. அவருக்கு அடுத்த தலைக்கட்டு
கணபதி செட்டியார்..

செங்குட்டுவனின் உடன் பிறந்த தங்கை பேச்சியம்மாளை.. கணபதி


செட்டியார்க்கு திருமணம் செய்து வைத்தனர்.. அவர்களிருவருக்கும் இரண்டு
மக்கள்.. மூத்தவள் வள்ளியம்மை.. இளையவன் செல்வம் செட்டியார்..
செங்குட்டுவனிற்கும் வடுகம்மாளிற்கும் ஒரே ஆண்வாரிசு.. அழகப்பன்
செட்டியார்.. சிறுவயதிலுருந்தே.. அழகுவிற்கும் வள்ளியம்மைக்கும் தான்
திருமணம் என இருவட்டினரும்
ீ பேசி வைத்திருக்க.. அழகுவோ படிக்க போன
இடத்தில் உடன் படித்த வேலுநாச்சியாரை காதலித்து அவரைத்தான்
திருமணம் புரிவேன்.. என உறுதியாய் நிற்க.. பெற்றோரால் ஒன்றும் செய்ய
இயலவில்லை..
கடைசியில் அழகுவின் விருப்பப்படி அவன் காதலித்த பெண்ணையே
திருமணம் செய்து வைத்தனர்.. அழகுவும் வேலுநாச்சியாரும் மனமொத்து
வாழ்ந்தனர்.. முதலில் அவளிடத்தில் ஒதுங்கிய செங்குட்டுவனும்.. வேலு
நாச்சியாரின் பன்பைக் கண்டு அவளிடம் பேசஆரம்பித்தார்..
வடுகம்மாள் தான்.. வேலு நாச்சியாரை பார்க்கும் போதெல்லாம்
திட்டிக்கொண்டே இருப்பார்.. அவருக்கு வள்ளியம்மை மேல் அதிகப்பிரியம்..
அவள் தான் தன் மருமகள் என நினைத்து வாக்கு கொடுத்திருந்தார்.. ஆனால்
மகன் காதல் என்று வந்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை.. மகன்
மீ து காட்ட முடியாத தன் கோபத்தை நாச்சியார் மீ து காண்பித்தார்..
மேலும் பேச்சியும் தன் மகள் வாழ்க்கையை.. அவள் வாழ்ந்துக்
கொண்டிருக்கிறாள் என அவள் மேல் துவேஷம் கொண்டு.. வடுகம்மாளை
ஏத்திவிடுவார்…
அவர்கள் எவ்வளவு தான் பேசினாலும்.. வேலுநாச்சியார் எதிர்த்து பேசவும்
மாட்டார்.. கணவனிடமும் கூற மாட்டார்.. வேதனையையும் அழுகையையும்
தனக்குள்ளையே புதைத்து விடுவார்… அதுதான் அவர் சுபாவமும் கூட.. பெயர்
மட்டும் தான் வரம்..
ீ மத்தபடி அவர் அப்பாவி..

தினமும் வடுகம்மாளின் அர்ச்சனைகள் தொடர.. செங்குட்டுவன் தான்


நாச்சியாரின் குணத்தை பற்றி கூறி.. அவரை சற்று அமைதியாக்கினார்..
அப்பொழுதும் திட்டுக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.. ஆனால்
முன்னளவிற்கு இல்லை…
இந்நிலையில் தான் நாச்சியார் கர்ப்பம் தரித்திருந்தார்.. குடும்பமே தங்களின்
முதல் வாரிசை எண்ணி.. மகிழ்ச்சியில் இருந்தது…
வடுகம்மாள் முற்றிலும் நாச்சியாரை சாடுவதை நிறுத்தி விட்டார்.. பேச்சிக்கு
தான் இவர்களை பார்த்து வயிறெரிந்தது.. தினமும் தன் மகளிடம் வந்து
புலம்புவார்.. ‘’ எல்லாம் உன்னால தாண்டி.. ஒன் மாமன மயக்கி கைக்குள்ள
வச்சுருந்தா இந்நேரம் அவ இருந்த இடத்துல நீ இருந்துருப்ப.. இப்பையும்
ஒன்னும் கெட்டுப்போகல நீ சரின்னு மட்டும் சொல்லு… எப்படியாவது
அவனுக்கு உன்ன ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி வச்சுடுறோம்…
அப்புறம் அங்க இருக்கிற கழுதைய வெளியேத்துறது உன் சாமர்த்தியம் என
கூறினார்…
வள்ளியம்மை.. அப்படிப்பட்ட ஈன வாழ்க்கை எனக்கு தேவையில்லை.. நான்
மாமாவ மனசார நேசிச்சது உண்மைதான் அதுக்காக அடுத்தவ புருஷன
நினைக்கிற அளவுக்கு கேவலமான இல்லை.. இனி இந்த பேச்சை
எடுக்காதிங்க.. நான் வாழ்க்கை முழுக்கும் உங்க பொண்ணாவே இருந்துட்டு
போறேன்.. ஒருவேளை நான் இங்க இருக்கிறது உங்க எல்லாருக்கும்
பிடிக்கலைன்னா சொல்லுங்க.. வேற எங்கயாவது போயிடுறேன்.. என்றாள்..
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல் தான்.. வள்ளியம்மை அக்குடும்பத்தில்
தப்பிப்பிறந்தது.. அமைதியான பெண்.. தாய் தந்தையிடத்தில் இருந்த
காழ்ப்புணர்ச்சியும் சூழ்ச்சியும் அவளிடத்தில் இருந்ததில்லை… சிறுவயதில்
அழகுவை காட்டி.. இவன் தான் உன் கணவன் என சொன்ன பொழுது.. அதை
தன் மனதில் ஏற்றுக்கொண்டு.. அவன் மீ து நேசம் கொள்ள ஆரம்பித்தாள்..
ஆனால் திடிரென்று ஒருநாள் அழகு வேறொரு பெண்ணை விரும்புவதாக
சொன்னவுடன்.. அவள் நேசம் சுக்கு நூறாய் உடைந்து போனது…
அப்பொழுதிருந்தே அழகுவின் நினைவு அவளிடத்திலிருந்து மறைந்து
போனது.. ஆனால் வேறொரு வாழ்க்கையை ஏற்க அவள் மனம்
ஒப்பவில்லை…
ஏழாம் மாத தொடக்கத்தில் ஊரையே அழைத்து நாச்சியாருக்கு வளைகாப்பு
நடத்தினர்.. நாச்சியாரின் குடும்பமும் சென்னையில் செங்குட்டுவனிற்கு
இணையான செல்வாக்கும் சொத்தும் கொண்டிருந்தவர்கள்.. அதனால்
நிறக்கவே சீர் செய்து நாச்சியாரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்…
அழகு தான் தன் காதல் மனைவியின் பிரிவால் துவண்டுவிட்டார்…
ஓர் நன்னாளில் நாச்சியார் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுக்க..
அழகுவிற்கு சந்தோஷத்தில் நிலைகொள்ளவில்லை.. அதுவும் மகள்
அவரையே உரித்து வைத்திருக்க.. பார்ப்போர் அனைவரிடமும் கூறி
பெருமைபட்டுக் கொண்டிருந்தார்.. செங்குட்டுவனிற்கும் மூத்தது பேத்தி
பிறந்ததில் அலாதி மகிழ்ச்சி.. மகாலட்சுமியே வட்டிற்கு
ீ வந்ததாக
எண்ணினார்..
வடுகம்மாள் தான் முகம் சுணங்கி போனார்.. அவருக்கு மூத்தது பேரன்
பிறக்கவில்லையே என வருத்தம்… மீ ண்டும் அதனை கோபமாக
நாச்சியாரிடம் காண்பிக்க ஆரம்பித்தார்.. பேச்சியும் தன் கோள் மூட்டும்
வேலையை செவ்வனே செய்தார்…
அழகுவிற்கு பொன்னியின் செல்வன் நாவலில் தனக்குப் பிடித்தமான
குந்தவைபிராட்டியின் பெயரோடு தன் மனைவியின் பெயரையும் சேர்த்து
குந்தவை நாச்சியார் என பெயர் சூட்டினார்..
குந்தவை வளர வளர அவள் குறும்புகளும் அவளோடு வளர்ந்தது.. அத்தனை
சேட்டை செய்வாள்.. அவளது ஒரே குறி வடுகம்மாள் தான்.. நாச்சியாரை
ஏதாவது திட்டிவிட்டாள் அவ்வளவு தான் சின்ன நாச்சியார் கோபம் கொண்டு..
செங்குட்டுவனிடம் போட்டுக் கொடுத்து விடுவாள்…
ய்யா.. அப்தா ம்மா திட்டி.. நீ அப்தா அடி என செங்குட்டுவன் கரத்தை தன்
குட்டிகையால் பிடித்து வடுகம்மாள் முன்பு நிறுத்தி.. அவரை பார்த்து பழிப்புக்
காண்பிக்க.. செங்குட்டுவனும் பேத்தியின் குறும்பை எண்ணி சிரிக்க..
வடுகம்மாள் முகவாயில் கைவைப்பார்..
அதோடு விடாது.. தினமும் வடுகம்மாளை தன் பின்னாடி ஓட விடுவாள்..
அவரின் வெற்றிலை பெட்டியில் உள்ள எல்லாத்தையும் வெளியே எடுத்து
கீ ழே போட்டு.. வெற்றிலையை பிய்த்து அவரை டென்ஷன் ஏத்துவாள்..
அடியே அங்கன போகாத.. வெத்தல பொட்டிய எடுத்த கைய உடப்பேண்டி..
தண்ணிய சிந்தாத என்ற வடுகம்மாளின் குரலே எங்கும் ஒலிக்கும்..
ஒருவேளை அவர் அமைதியாக இருந்தாள் அப்பொழுது குந்தவை
உறங்குகிறாள் என்று அர்த்தம்.. என்னதான் வெளியே திட்டினாலும்
உண்மையில் தன் பேத்தி மேல் வடுகம்மாளிற்கு கொள்ளை பிரியம்.. காலில்
சலங்கை கொலுசு ஒலிக்க அவள் தத்தக்க பித்தக்கா என ஓடும் அழகை
உள்ளுக்குள் ரசிப்பார்.. ஆனால் வெளியே காண்பிக்க மாட்டார்..
வேலுநாச்சியார் மாமியார் மெச்சும் மருமகள்.. பேச்சி வரும்போதெல்லாம்
சண்டையை கிளப்பிவிட்டாலும்.. நாச்சியார் தன் பொறுமையென்னும் ஆயுதம்
கொண்டு அவற்றை முறியடிப்பாள்..
ஐந்து வயது குந்தவை அங்கும் மிங்கும் ஓடிக்கொண்டிருக்க.. அவள் தாயும்
உணவு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் ஓடினாள்..
நாச்சியார்.. செல்லக்குட்டி இல்லை கொஞ்சம் சாப்பிடும்மா..
பப்பு சாதம் உவ்வேக்.. என முகத்தை சுழித்து ஓடிக்கொண்டிருந்தவளை
எதிர்கொண்டு தூக்கினார் அழகு..
செல்லக்குட்டி.. அம்மா வயித்துல தம்பி பாப்பா இருக்குல்ல.. இப்படி ஓடுன
அவனுக்கு வலிக்கும்ல.. ஒழுங்கா ஒரு இடத்துல உட்கார்ந்து சாப்பிடுங்க..
அச்சோ ஆமாம் அப்புச்சி.. தம்பி பாப்பாக்கு காலு வலிக்கும்ல.. என விழிகளை
விரித்தவள் உடனே நாச்சியாரின் ஏழு மாத வயிற்றில் முத்தம் வைத்து.. சாரி
தம்பிக்குட்டி.. அக்கா உன்ன ஓடவச்சுட்டேன்னா என தடவிக் கொடுக்க..
நாச்சியார்.. அடிபாவி.. கஷ்டப்பட்டு ஓடுனது நானு நீ.. உன் தம்பிக்கு சாரி
சொல்றியா என அவள் கன்னத்தை பிடித்து திருக.. வயிற்றில் உள்ள சிசுவோ
தன் தமக்கைக்கு உதவும் விதமாக உதைத்தது..
ஆஆ.. என அடிவயிற்றை பிடித்த நாச்சியார்.. பார்த்திங்களா உங்க பையன
இப்போவே அக்காக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. என
பொய்க்கோபத்துடன் கூறினாலும் அதில் பெருமையே பிரதானமாய்
இருந்தது.. குந்தவை தன் ஐயாவிடம் செல்ல.. அழகு வேலுநாச்சியார்க்கு கண்
காண்பித்து தன் அறைக்கு சென்றார்..
வெட்க புன்முறுவலுடன்.. நாச்சியாரும் யாரும் கவனியாது அவர் பின்னே
சென்றாள்..
உள்ளே வந்த மனைவியை அழகுவின் கரங்கள் இறுக்க.. ஸ்ஸ்… என்னாச்சு
ஐயா காத்து என் பக்கம் வசியிருக்கு..
ீ எப்போவும் உங்க பொண்ணோட தானே
சுத்துவிங்க.. என பொய்யாய் குறைப்பட்டுக் கொண்டாள்..
ஹாஹா.. என சிரித்தவர்.. என் பொண்ண பார்த்து பொறாமை படாதடி.. நான்
உன்னை கண்டுக்காம தான் என் சிங்கக்குட்டி உன் வயித்துல இருக்கானா…
என அவள் மணிவயிற்றை தடவியவாறு கூற..
ஆமா ஆமா.. அஞ்சு வருஷத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தான் இந்த
சிங்கக்குட்டி வந்துருக்கு.. என் பொண்ணோட தான் அதிகம் நேரம்
இருக்கனும்ன்னு.. யாரு ரெண்டாவது பிள்ளைய தள்ளிப்போட்டா..
விடுடி விடுடி.. அடுத்த பிள்ளைய சீக்கிரம் ரெடிபண்ணிடுவோம்.. என அவள்
கழுத்தில் புதைந்தவாறு கூற.. அவளோ வெட்கம் கொண்டு கணவனை
அடிக்க ஆரம்பித்தாள்…
ஏன் நாச்சி நான் உன்ன சந்தோஷமா தான் வச்சுருக்கேனா.. என் கூட இருந்த
ஆறு வருஷ வாழ்க்கைல உனக்கு ஏதாவது குறை இருக்கா..
என்னாச்சு.. ஏன் இப்படி கேட்குறீங்க.. அன்பான மாமனார் மாமியார்.. தேவதை
போல குழந்தை.. எல்லாத்துக்கும் மேல.. என்னை உயிரா பார்த்துக்கிற
புருஷன்னு சந்தோஷமான கூட்டுல இருக்கிற எனக்கு என்ன குறை
வரப்போகுது.. என அழகுவின் கன்னத்தை தன் இருக்கரங்களால் பிடித்து
கேட்டார்..
எனக்கு தெரியும்டி.. கல்யாணமான புதுசுல அம்மா உன்கிட்ட கொஞ்சம்
கோபமா நடந்துக்கிட்டாங்க.. ஆனா நான் அவங்கள எதுவும் கேட்கல.. ஏன்னா
நான் உனக்கு ஆதரவா பேச போயி அம்மா கோபம் அதிகமாகிடுச்சுன்னா..
என்ன பண்றதுன்னு அமைதியாகிட்டேன்.. அதை நினைச்சு உனக்கு வருத்தம்
ஏதும் இல்லையா..
ச்ச.. ச்ச.. அத்தை எனக்கு அம்மா மாதிரி.. அம்மா கண்டிச்சா நான்
வருத்தப்படுவேனா. என அவள் சிரித்தவாறு கேட்க.. தனக்கு துன்பம்
இழைத்தவர்களையும் அன்பாக அரவணைக்கும் தன் மனைவியின் குணத்தை
கண்டு.. அழகு மெய்மறந்து அவளை பார்க்க.. கணவனின் பார்வையில் கூச்சம்
கொண்ட பெண்ணவளோ.. அவன் மார்பில் புதைந்தாள்…
ஏங்க நம்ம சின்னக்குட்டி எவ்வளவு தைரியமா அத்தைக் கிட்ட வாயாடுது..
அவங்க எது சொன்னாலும் பதிலுக்கு பதில் பேசுது.. என தன் மகளை பற்றி
குறை கூறுவது போல் பெருமை பட்டுக்கொண்டார்..
பின்ன அவ உன்ன மாதிரி பயந்தாங்கோலியா.. என் ரத்தம்டி.. என மீ சையை
முறுக்கியவர்.. நீயும்தான் இருக்கியே நான் காதல் சொல்லும்போது எப்படி
பயந்து அழுத என கேலி செய்ய நாச்சியார் சினுங்க ஆரம்பித்தாள்..
இருவரும் நிறைய பேசினார்கள்.. தங்களின் காதல்.. மணவாழ்க்கை.. பிரசவ
நேரத்தில் அழகுவின் தவிப்பு என இதுவரை அவர்கள் வாழ்க்கையில் நடந்த
அனைத்தையும் பேசினார்கள்.. பெண்ணவளின் நிலைமை புரிந்து.. கணவன்
மென்மையாக இணைய.. மனைவியும் தன் கணவனுக்கு ஈடுகொடுத்தாள்..
இதுவரை இல்லாத மென்மையான காதலுடன் கூடிய கூடல்.. அதில்
மோகத்தை விட காதலே பிரதானமாய் தெரிந்தது.. காதல் காதல் காதல்
மட்டுமே.. ஒருவேளை நாளை அவர்கள் வாழ்வில் இவ்வாறான ஒருநாள்
வரப்போவதில்லை என காலதேவன் அவர்களின் மனதில் புகுத்தினானோ
என்னவோ..
மறுநாள்.. பேச்சி.. அண்ணி இன்னைக்கு நம்ம கோவில்ல கிடா வெட்டி பூச
போடுறோம்.. எல்லாரும் வந்துருங்க…
என்ன அண்ணி திடிர்னு கிடா வெட்டுன்னு சொல்றிங்க… என்ன விஷயம்..
ம்ம்ம்ம் எல்லாம் வள்ளியம்மைக்காக தான் அண்ணி.. கல்யாணத்துக்கே
ஒத்துக்க மாட்டேங்குறா.. நல்ல நல்ல சம்பந்தமெல்லாம் வருது.. ஆனா
எங்களுக்கு கொடுத்து வைக்கலையே.. அவளுக்குன்னு இருந்த வாழ்க்கையை
ஏன்தான் ஆண்டவன் பறிச்சுக்கிட்டானோ.. என கண்ண ீருடன் கூறியவர்..
அருகே இருந்த நாச்சியாரை உறுத்து விழித்தார்.. அதில் நீதான் என் மகள்
வாழ்க்கையை பறித்தாய் என்ற செய்தி இருந்தது.. இது வழமையான
ஒன்றாதலால நாச்சியார் தன் முகத்தில் எதையும் காண்பிக்க வில்லை..
ஆனால் வள்ளியம்மையை நினைத்து மனம் காயம்பட்டு போனது..
சரி அண்ணி நான் கிளம்புறேன்.. நிறைய வேலையிருக்கு.. நீங்க
குடும்பத்தோட வரனும்.. என்று விடைபெற்றார்….
வேலுநாச்சியார்க்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை.. இருந்தும்
வள்ளியமைக்காக சென்றாள்.. ஏற்கனவே மனதின் ஓரத்தில் அவள்
வாழ்க்கையை தான் பறித்து விட்டோமோ.. நான் அவர் வாழ்க்கையில்
வராவிட்டால் நிச்சயம் அவர் வள்ளியம்மையை தான் திருமணம்
செய்திருப்பார் என உறுதியாக தெரிந்ததால் கடவுளிடம் அவளுக்கு நல்வழி
காட்ட வேண்டுமாறு.. வேண்டிக்க சென்றாள்….
நாச்சியாரின் எண்ணப்படியே வள்ளியம்மைக்கு நல்வழி காட்டியவர்..
வேலுநாச்சியாரின் வாழ்வை எடுத்துக் கொண்டார்…
கோவிலில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் கிடாவெட்டு நடந்தது..
பொங்கல் வைக்க தண்ண ீர் எடுப்பதற்கு வள்ளியம்மையோடு நாச்சியாரும்
சென்றாள்..
வள்ளியம்மை ‘’ நீங்க எதுக்கு அலையுறீங்க.. அங்க போயி கொஞ்சம்
ஓய்வெடுக்கலாம்ல… ‘’
‘’ பரவாயில்ல.. வள்ளி பானை எல்லாம் நிறைய இருக்கே… நானும் கொஞ்சம்
உனக்கு உதவி பண்றேன்.. ‘’
‘’ அதெல்லாம் வேணாம்.. அத்தானுக்கு தெரிஞ்சா என் பொண்டாட்டிய
வேலை வாங்குறியான்னு அடிக்க போறாரு.. ‘’ என சிரிப்புடன் கூற..
பதிலுக்கு சிரித்த நாச்சியார்.. ‘’ சரி நான் தண்ணி இறைக்குறேன்.. நீ போய்
வச்சுட்டுவா.. ரெண்டு பேரும் மாத்தி அடிப்போம் என்றவள்..
வள்ளியம்மையின் பேச்சை கேட்காது.. ‘’ கிணற்றில் நீர் இறைக்க
ஆரம்பித்தாள்.. வள்ளியம்மை குடத்தை தூக்கிச் சென்றாள்..
அப்பொழுது ஏழரையடி நீளமுள்ள கருநாகம் ஒன்று தன் இலக்கை நோக்கி
வந்துக்கொண்டிருந்தது.. இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் விபரீதம்
அறியாத நாச்சியார்.. வள்ளியம்மையை காணாது கடைசி குடத்தை அவர்
தூக்கி இடுப்பில் வைக்கும் வேளை.. அவர் வெண்ணிற பாதத்தை நாகம்
தீண்டிட..
ஸ்ஸ்ஸ்.. ஆஆ.. என்ற அலறலோடு காலைப் பார்த்தவள்… அங்கு படமெடுத்து
நின்றுக்கொண்டிருந்த கருநாகத்தை கண்டு.. பயந்து பின்வாங்கியவர்.. தண்ணர்ீ
வழுக்கி குடத்துடன் கீ ழே விழுந்தார்... விழுந்த வேகத்தில் அவரின் தலையும்
வயிறும் அங்கிருந்த கருங்கல்லில் அடிபட ரத்த வெள்ளத்தில் மிதந்தார்..
அவரின் மரண ஓலம்.. உறுமி ஒலியில் யாருக்கும் கேட்காது போனது தான்
பரிதாபம்.. நாச்சியாரின் கண்கள் ஓரிடத்தில் நிலைக்குத்திருக்க.. விஷத்தின்
வரியத்தால்
ீ வாயில் இருந்து நுரை வர ஆரம்பித்தது..
அப்பொழுது தான் அங்கு வந்த வள்ளியம்மை வாயில் நுரை தள்ளி.. ரத்த
வெள்ளத்தில் மிதந்து விழி மூடிருந்த நாச்சியாரைக் கண்டு சர்வமும் ஒடுங்க
நின்றவள்.. ஐய்யோ அக்கா.. என கத்தியவாறு அவளை தன் மடியேந்த..
வள்ளியம்மையின் கத்தலில் என்னமோ ஏதோ என பதறி வந்த அனைவரும்..
அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றார்கள்..
அழகு.. நாச்சி.. என கத்தியவாறு அவள் அருகே வர.. முதலில்
அதிர்ச்சியிலிருந்து தெளிந்த செங்குட்டுவன்.. அழகு மருமகள தூக்கு
ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு போவோம்.. என்க..
அனைவரும் விரைந்து செயல்பட்டனர்.. ஒருபக்கம் வடுகம்மாள்.. அழுது
புலம்பிக் கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் தாயின் நிலையை கண்ட
குந்தவை அழுதுக்கொண்டிருக்க... வள்ளியம்மை அவளை சமாதானம்
செய்துக் கொண்டிருந்தாள்.. அழகு நடுங்கும் உள்ளத்துடன் கண்களில் நீர்
வழிய.. அறையின் வாசலிலே நின்றுக் கொண்டிருந்தார்…
டாக்டர் வெளியே வர.. உடனே அனைவரும் அவரிடம் நெருங்கினர்.. ‘’
டாக்டர் என் மனைவிக்கு இப்போ எப்படியிருக்கு… ‘’
அழகு தோளை தட்டிக் கொடுத்தவர்.. ‘’ பாம்பு கடிச்சு அதன் விஷம் அவங்க
உடம்பு முழுக்க ஏறிடுச்சு.. அதோட தலையிலையும் வயித்துலையும் ஆழமா
அடிப்பட்டு இருக்கு.. நிறைய ரத்தம் போயிடுச்சு.. அதுனால விஷம் ஏறி
வயித்துல உள்ள குழந்தை செத்துப்போச்சு.. உங்க மனைவியும் கடைசி
நிமிடங்கள்ல இருக்காங்க.. உங்களையும் பொண்ணையும் பார்க்கனும்னு
சொன்னாங்க.. உள்ள போயி பாருங்க..’’ என அவர் கூறியதும்.. இடிந்து போயி
அமர்ந்து விட்டான்.. அழகு.
செங்குட்டுவன் அவனையும் பேத்தியையும் உள்ளே அழைத்துச் செல்ல..
துவண்டு போன கொடியாய் கிடந்தவளை பார்க்க சகிக்காது.. அழகு அவளை
கட்டிப்பிடித்து கதறினான்..
‘’ நம்.. நம்ம பொண்ண பத்தி.. பத்திர..மா பார். பார்த்துக்.. கோங்க.. என மூச்சு
வாங்க திக்கி திணறி பேசியவள் தன் மகளிடத்தில் அப் அப்பாவ வி.. விட்..
விட்டு எங்கையும் போ போ.. போகாதமா.. ‘’ என்று கூறியவள் அழகுவிடம்
அடுத்து ஏதோ கூற முயற்சிக்க அதற்குள் அவளின் சுவாசம் நின்றது…
நாச்சி நாச்சி.. இங்க பாரு.. கண்ண திறந்து பாருடி என அவன் தோளை
பிடித்து உலுக்கியவர்... ஏன்டி.. ஏன்டி எங்கள அனாதையா விட்டுப்போன..
இப்படி என்னைய விட்டுப்போறதுக்குத்தான்.. நேத்து இதுவரை பேசாத
எல்லாம் பேசுனியா… என அழகு கதற..
அப்புச்சி.. அம்மாக்கு என்னாச்சு அப்புச்சி.. ஏன் என் கூட
பேசமாட்டேங்குறாங்க.. பேச சொல்லுங்க அப்புச்சி.. ம்மா ம்மா எழுந்திரிங்க
ம்மா.. இனிமே சாப்பிட அடம்பிடிக்க மாட்டேன் ம்மா.. சமத்தா இருப்பேன்
ம்மா.. வாங்கம்மா.. அம்மா.. உங்க கூட டூவும் போட மாட்டேன் ம்மா
வாங்கம்மா.. என தேம்பலுடன் கூற.. சுற்றியுள்ள மருத்துவர் செவிலியர்
முதற்கொண்டு அனைவர் கண்ணிலும் நீர் சுரந்தது..
தன் மகளை அனைத்துக் கொண்ட அழகு.. அய்யோ நம்ம பொண்ணு
கூப்பிடுறா பாருடி.. நான் அவகிட்ட எப்படி சொல்லுவேன்.. அம்மா யாரும்
வரமுடியாத தூரத்துக்கு போய்ட்டேன்னு.. இப்படி எங்கள அனாதையாக்கிட்டு
போய்ட்டியேடி.. என தலையிலடித்துக் கொண்டு கதறினார்..
வள்ளியம்மைக்கு இவர்களின் கதறலை கேட்டு இதயம் குற்ற உணர்வில்
துடிதுடித்தது.. தான் மட்டும் அவரை வரவேண்டாம் என தடுத்திருந்தாலோ
இல்லை.. அவரை தனியாக விட்டுச்செல்லாமல் இருந்திருந்தாலோ ஒரு
குடும்பமே இப்படி சிதறியிருக்காது.. இந்த இளம்பிஞ்சும் தாயை
பிரிந்திருக்காது என அவள் உள்ளம் தவித்தது.. அவள் விழிகள் இரண்டும்
அழகுவின் தோளில் அழுகையுடன் சாய்ந்திருந்த குந்தவையின் முகத்திலே
இருந்தது..
இன்றோடு நாச்சியார் சென்று ஆறு மாதம் ஆகிவிட்டது.. அழகுவின் வடே

களையிழந்து விட்டது… குந்தவையும் அழகுவும் உயிர்ப்பின்றி இருந்தனர்..
நாச்சியாரோடே இவர்களின் உயிர்ப்பும் சிரிப்பும் சென்றுவிட்டது… மருமகள்
சென்ற துக்கத்தை விட இவ்விருவரை பற்றிய கவலை தான்.. மூத்த
ஜோடிகளின் மனதை அரித்தது…
‘’ என்ன வடுகம்மா எப்படி இருக்க.. ‘’ என உறவு பெண்மணி கேட்க..
‘’ ஹ்ம்ம்ம் ஏதோ இருக்கேன்.. யாரு கண்ணு பட்டுச்சோ என் குடும்பமே
ஒன்னுமில்லாம போச்சு.. ‘’ என கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு
கூறினார்..
‘’ இன்னும் எத்தனை நாளு போனவளை பத்தியே யோசிச்சுக்கிட்டு
இருக்கப்போறிங்க.. பேசாம அழகுக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணிட
வேண்டியதுதான.. அதுவும் பொம்பள பிள்ளை வேற இருக்கு.. அதுக்கு
நாளைக்கு ஒரு நல்லது கேட்டதுக்கு அம்மான்னு ஒருத்தி வேண்டாமா.. ‘’ என
அவர் கூறவும் வடுகம்மாள் முகம் யோசனையை காட்டியது…
‘’ பொண்ணுக்கு எங்க போறது சரளா.. வரவ என் பேத்தியை நல்லா
பார்த்துக்கனுமே.. ‘’ என தன் பேத்தியின் நலனை முன்னிறுத்தினார்..
‘’ கைல வெண்ணெய்ய வச்சுக்கிட்டு நெய்க்கு அலையுறது போல இருக்கு
உன் பேச்சு.. அதான் பேச்சி மவ வள்ளியம்மை இருக்காள்ல அவள
கேட்போம்…’’
‘’ ரெண்டாந்தாரத்துக்கு ஒத்துப்பாங்களா.. ‘’
‘’ அதெல்லாம் ஒத்துக்குவாங்க.. அவதான் உன்மவன நினைச்சுக்கிட்டு
வேறொருத்தன கல்யாணம் பண்ண மாட்டேன்னு சுத்துறாள்ல.. நீ கவலைய
விடு.. இந்த கல்யாண ஏற்ப்பாட்டை நான் பார்த்துக்கிறேன்.. ‘’ எனவும்
வடுகம்மாள் சரி என்பதாய் தலையசைத்தார்..
அடுத்த இரண்டு மாதத்தில் வள்ளியம்மை அழகுக்கு மனைவியாகவும்..
குந்தவைக்கு தாயாகவும் அவ்வட்டில்
ீ காலடி எடுத்து வைத்தாள்… குந்தவை
முகம் உணர்ச்சியின்றி இருக்க.. அழகுவின் முகமோ கோபத்திலும்
வெறுப்பிலும் இறுகியிருந்தது…
வடுகம்மாள் தற்கொலை முயற்சி செய்து.. இக்கல்யாணத்திற்காக சம்மதம்
வாங்கியிருந்தார்.. அப்படியிருந்தும் திருமணத்திற்கு முன்பே தன் முதல்
மனைவியை தவிர யாரையும் தன்னால் ஏற்க இயலாது என உறுதியாக
கூற.. அவளும் குந்தவைக்கு தாயாக மட்டும்தான் வருகிறேன் என
தன்பக்கத்தையும் தெளிவாக கூறினாள்..
பேச்சி முகமெல்லாம் சிரிப்பாக வலம் வந்தார்.. குந்தவையை பார்க்கும்
போதெல்லாம்.. ஏய் அத எடுத்துட்டு வா.. இத செய் என வேலை ஏவ..
இருமுறை பொறுத்தவள்.. மூன்றாம் முறையும் அவர் அவ்வாறு
நடந்துக்கொள்ள பொறுமையிழந்தவள்.. அழகுவிடம் சென்று அவன் காதில்
ஏதோ கூற.. அழகு முகம் கோபத்தை பூசிக் கொண்டது…
அதைப்பார்த்து உள்ளுக்குள் கலவரமானாலும் வெளியே கெத்தாக
அமர்ந்திருந்த பேச்சியிடம் வந்தவன்.. ‘’ அத்தை இன்னொரு தடவை என்
பொண்ண ஏய் போட்டுக்குகூப்பிடுறது வேலை ஏவுறதெல்லாம் வேண்டாம்.. ‘’
என கடுமையான குரலில் கூற..

‘’ அய்யோ மாப்பிள நான் பேத்திக்கிட்ட சாதாரணமா தான் சொன்னேன்..


சின்ன பொண்ணு அத தப்பா எடுத்துக்கிட்டா போல.’’ என ஒன்னுமரியாதவர்
போல் பேச.. அழகு பதில் பேசாது அவரை ஓர் பார்த்துவிட்டு சென்றான்..
குட்டிப்பிசாசு.. போட்டுக் கொடுத்துடுச்சு போல.. இருடி என் மவக்கிட்ட
சொல்லி உன் கொட்டத்தை அடக்குறேன்.. என பொறுமியவர்.. தன் மகளிடம்
ஏட்டி சீக்கிரம் மாப்பிளைய உன் கைக்குள்ள போட்டுக்கிட்டு இந்த சனியனை
பத்தி விடுற வேலைய பாரு.. என யோசனை சொல்ல..
உனக்கு ஏம்மா இந்த கெட்டெண்னம்.. நான் அத்தானுக்கு மனைவியாக இந்த
தாலிய வாங்கிக்கல.. குந்தவைக்கு அம்மாவ இருக்கத்தான் வாங்கிக்கிட்டேன்..
நீ பேசுறது என் பொண்ணை பத்தி.. கொஞ்சம் பார்த்து பேசு இல்லை.. உனக்கு
பொண்ணு இருக்க மாட்டா.. என முகத்தில் அடித்தார் போல் பேச.. பேச்சி
அதிர்ச்சியானார்.. பேச்சி மட்டுமல்லாமல் குந்தவையும் வள்ளியின் பேச்சைக்
கேட்டாள்.. அதில் பேச்சி தன்னை திட்டியதும் அதற்க்கு வள்ளி தனக்காக
பரிந்து பேசியது அச்சிறுபிஞ்சின் மனதில் பதிந்தது…
வள்ளியம்மை குந்தவையிடம் நெருங்க முயற்சிக்க.. முதலில் சற்று
ஒதுங்கியவள் பிறகு அவருடன் ஒட்டிக்கொண்டாள்.. வள்ளிம்மா என
கூப்பிடவும் ஆரம்பித்தாள்.. ஆனால் அழகு வள்ளியம்மையின்
மணவாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.. வள்ளி அழகுவை
மாற்ற முயற்சிக்கவில்லை என்றும் சொல்லலாம்..
சில மாதங்களிலே பேச்சி குழந்தைப் பற்றி நச்சரிக்க தொடங்கினார்..
வடுகம்மாளிற்கும் மனதிற்குள் புதைந்திருந்த பேரன் ஆசை துளிர்விட..
அவரும் நச்சரிக்க ஆரம்பித்தார்.. அழகு எவரையும் கண்டுகொள்ளவில்லை..
வருடங்கள் ஓட.. வள்ளியம்மை குந்தவையின் பிணைப்பு இறுகியது..
வள்ளிம்மா வள்ளிம்மா என அவர் பின்னாடியே சுத்த தொடங்கினாள்..
அழகுவிற்கு தான் இதை கண்டு பொறாமை ஏற்படும்.. ஏனெனில் அவர்
இப்பொழுதெல்லாம் தனிமையாக உணர்கிறார்.. வள்ளியம்மையும் குந்தவியும்
மட்டும் இருக்கும் கூட்டில் அவரும் இருக்க ஆசை கொண்டார்..
வள்ளியின்பால் அவர் மனம் சாய்ந்தாலும் ஒருவித தயக்கம் இருந்தது..
அதுவும் உறவுபெண்மணிகள் அவளை மலடி என்று கூறுவதைக் கண்டு
எல்லாத்தயக்கத்தையும் உதறி.. ஓர் நன்னாளில் அவர்கள் இல்லறம்
தொடங்கியது…
அடுத்த மூன்றாம் மாதம் வள்ளியம்மை கருத்தரித்திருந்தார்… வடுகம்மாளிற்கு
சந்தோஷத்தில் கால் தரையில் பதியவில்லை.. குந்தவைக்கும் தனக்கு தம்பி
வரப்போவதில் சந்தோஷம்..
பேச்சியை கையில் பிடிக்க முடியவில்லை.. எப்படியாவது ஆண் வாரிசை
பெற்றெடுத்து சொத்தை காபந்து பண்ண வேண்டும் என்ற ஆசை.. அடிக்கடி
வட்டுக்கு
ீ வர ஆரம்பித்தார்.. வள்ளியின் முன்னிலையிலும் மற்றவர்கள்
இருக்கும் போதும் அமைதியாக இருப்பவர்.. யாரும்மில்லா நேரத்தில்
ஜாடையாக அவளை பேசுவார்..
சிறுவயதிலே மிகவும் புத்திசாலியான குந்தவைக்கு இவரின் குள்ள நரித்தனம்
புரிபட.. அவரிடத்திலிருந்து ஒதுங்கிவிடுவாள்.. கணபதியிடமும் அப்படியே..
அவர் சொல்லும் சுடுசொற்களையெல்லாம் தன் பிரியமான வள்ளிம்மாக்காக
பொறுத்துக் கொள்வாள்..
வள்ளியம்மையின் ஆறாம் மாதத்தில் குந்தவை வயதிற்க்கு வந்துவிட..
குடும்பத்தார்க்கு மற்றொரு சந்தோஷமான வைபவம்.. அவளின் மங்கள
நீராட்டு விழாவினை செங்குட்டுவனும் அழகுவும் பெரிய அளவில்
நடத்தினர்..
பேச்சியம்மாள் வளைகாப்பையும் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்க..
வள்ளியோ வட்டினர்
ீ சொந்தம் பந்தம் மட்டும் போதும் என உறுதியாக
கூறினார்..
அருள் பிறந்ததும் அவனை முதலில் குந்தவையின் கரங்களில் தான்
கொடுத்தார்.. அச்சிறு பிஞ்சை பார்த்ததும்.. அவளுக்கு தன்னை ஈன்றெடுத்த
அன்னையின் நினைவும்.. உலகத்தையே பார்க்காது தாயின் கருவறையில்
மாண்டு போன சிசுவின் நினைவு வர.. அவள் விழிகள் கலங்கியது..
அழகுவிற்கும் நாச்சியின் நினைவு அதிகம் தாக்க.. அவர் மகனையும்
மகளையும் அணைத்துக்கொண்டார்…

அத்தியாயம் 21

வடுகம்மாள் ‘’ வள்ளி எல்லாரும் எவ்வளவு நேரம் காப்பாக சீக்கிரம் பேரன


கொண்டு வந்து தொட்டில போடுத்தா.. ‘’
‘’ அத்தை.. குந்தவை தான் அவன தயாராக்குறேன்னு போயிருக்கா இதோ
வந்துடுவா.. ‘’
பேச்சி ‘’ அதுசரி யாராவது சக்களத்தி மக கிட்ட கைப்பிள்ளைய
கொடுப்பாகளா உனக்கு கூறு இருக்கா.. அவ பேரன எதாவது செஞ்சுட்டா
என்னாகுறது.. ‘’ என பொரிய..
கூட்டத்தில் எள் விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி..
அப்பொழுதுதான் குழந்தையை தூக்கி வந்த குந்தவையின் காதிலும்
இவ்வார்த்தைகள் அட்சர சுத்தமாய் விழ.. கண்ண ீர் பெருக குழந்தையை
பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு அழுதுக்கொண்டே உள்ளே சென்று
விட்டாள்..
மாமியார் மீ து காட்ட முடியாத கோபத்தை.. அத்தனை பேர மத்தியில்
வள்ளியின் கன்னத்தில் காட்டிய.. அழகும் குந்தவையின் பின்னே சென்றார்..
பிரம்மை பிடித்தது போல் நின்ற.. வள்ளியம்மை நொடியும் தாமதிக்காது தன்
கணவன் பெண் பின்னே சென்றார்..
கணபதியும் இருபதில் அடியெடுத்து வைத்திருக்கும் செல்வமும் கத்த
ஆரம்பித்தனர்… பேச்சி என்ன இல்லாததா சொன்னா.. ஊரு உலகத்துல
நடக்கறதான சொன்னா.. எப்படி மாப்பிளை இத்தனை பேர் மத்தியில என்
பொண்ணை அடிக்கலாம்.. நாங்க இருக்கும் போதே இப்படி பண்றிங்கண்ணா
நாங்க இல்லாத நேரம் என்னென்ன நடக்குதோ.. சக்களத்தி மகளுக்கு ஊழியம்
பண்ணத்தான் நான் பொண்ண கட்டிக்கொடுத்தேனா.. என அவரும் பேச
சண்டை பெரிதானது..
வள்ளியம்மையோ அங்கு நடப்பவைகளை அறியாமல்.. கணவனையும்
மகளையும் சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்… அழகுவின் மடியில்
படுத்து அழுதுக் கொண்டிருந்தவளை.. தன் மடிக்கு மாத்தியவள்.. என்
செல்லக்குட்டி எவ்வளவு தைரியமானவ இப்படி சின்ன விஷயத்துக்கு
அழலாமா..
உங்களுக்கும் நான் தம்பிய ஏதாவது பண்ணுவேன்னு தோனுதா வள்ளிம்மா..
என அழுகையுடன் கேட்க.. அழகுவின் கைமுஷ்டி இறுகி.. கண் கோபத்தில்
சிவக்க ஆரம்பித்தது..
அவருக்கே இப்படியென்றால் வள்ளியின் நிலையை கேட்கவா வேண்டும்…
உள்ளுக்குள் மறித்து போனார்..
என்ன வார்த்தை குந்தவை இது.. உன் வள்ளிம்மா இப்படி நினைப்பாளா..
அவனை என்ன விட நீதான் நல்லா பார்த்துப்பன்னு எனக்கு தெரியும்.. வா
வந்து உன் தம்பிக்கு பேரு வையி.. ஆனா இப்படி அழுது வடிஞ்சு இல்லை..
ராணி கணக்கா வா.. என அவளை கிளப்ப குந்தவையின் முகம் தெளிவானது..
அதைக் கண்டு அழகுவின் முகம் தெளிவானது.. குந்தவை முன்னே செல்ல..
வள்ளியம்மை பின்தொடரும் வேளை அழகுவின் கரங்கள்.. அவளின்
கன்னத்தின் அறைந்த தடத்தை வருட.. அதுவே ஆயிரம் சமாதானத்திற்கு
சமம் போல் அவளுக்கு தோன்றியது..
வெளியே ஒரு சண்டை அப்பொழுது தான் நடந்து ஓய்ந்தது.. நடுவில்
குந்தவை அழுத சுவடு தெரியாமல் கம்பீரமாய் வர அவளுக்கு இருபக்கட்டும்
வள்ளியம்மையும் அழகுவும் வந்தார்கள்…
நல்ல நேரம் போயிறப்போகுது.. பேரன தொட்டில்ல போட்டு பேரு வைங்க..
என குழந்தையை வள்ளியின் கரத்தில் கொடுக்க.. அவளோ
குந்தவையிடத்தில் கொடுத்தாள்..
மாநிறத்தில் கூர் விழிகளால்.. எதிரில் நின்றவளையே பார்த்துக் கொண்டிருந்த
தன் தம்பியை கரத்தில் ஏந்தியவள்.. அனைவரையும் ஓர் பார்வை பார்த்து..
இந்த குந்தவை நாச்சியாரோட தம்பி பேரு.. அருள்மொழி பாண்டியன்.. என
அவன் காதில் மூன்று முறை கூறி அவனை தொட்டிலில் இட..
வள்ளியம்மையின் விழிகளும்.. அழகுவின் விழிகளும் ஆச்சரியத்தில்
விரிந்தன..
அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க கணபதி செட்டியார் குடும்பம் மட்டும்
கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.. அதுவும் செல்வத்தின் விழிகள்
குந்தவையையே வெறித்துக் கொண்டிருந்தது..
குந்தவை.. அக்கா சொல்லுங்க.. என் தங்கம்ல அக்கா சொல்லுங்க.. என
ஆறுமாத அருளுக்கு அக்கா சொல்ல பழக்கிக் கொண்டிருந்தாள்..
‘’ ஏண்டி உன் தம்பிய கொஞ்சம் கொடேன்.. நான் கொஞ்ச நேரம் தூக்கி
வச்சுக்குறேன்.. ‘’ என அவள் தோழி வசந்தி கேட்க..
‘’ ம்ஹும் நான் என் தம்பிய யாருக்கும் தரமாட்டேன்… என்ன தங்கம் நீங்க
இந்த அக்காவ விட்டு எங்கயும் போக மாட்டிங்கள்ல.. ‘’ என கன்னத்தில்
முத்தமிட்டவாறு கேட்க.. அவனோ எச்சில் ஒழுக சிரித்தான்..
‘’ போடி உன் கருவா தம்பிய நீயே வச்சுக்கோ.. ‘’
‘’ அடியே யார பார்த்து கருவான்னு சொன்ன.. என் தம்பி சிங்கம்டி.. ‘’
‘’ அய்யோடா… எங்க சிங்கத்து பிடரி முடிய கானும்.. வழுக்கையா இருக்கு..
ஒருவேளை சொட்டை விழுந்த சிங்கமோ.. ‘’ என சந்தேகமாக கேட்டவள்..
அட சிங்கத்துக்கு பல்லு கூட பொக்கை வாயா இருக்கு என கிண்டலடிக்க..
‘’ அடியே கோணமூக்கி.. இருடி உனக்கு இருக்கிற நாலு முடியையும்
ஆஞ்சுவிடல நான் வடுகம்மா பேத்தி இல்லை.. இந்த குந்தவை நாச்சியார்
தம்பி அருள்மொழி பாண்டியன கிண்டலா பண்ற.. ‘’ என இடுப்பில்
அருள்மொழியை தூக்கி கொண்டு அவளை துரத்தினாள்.. அருளோ வாயில்
விரல் வைத்து கடித்தவாறு சிரித்துக் கொண்டிருந்தான்..
‘’ அய்யோ அத்தை உங்க மவ கிட்டயிருந்து என்னை காப்பாத்துங்க.. ‘’ என
அலறிக் கொண்டு ஓடினாள்..
அருள் பிறந்ததிலிருந்து வள்ளியை விட குந்தவையிடம் தான் அவன் அதிகம்
இருப்பான்.. அவனுக்கு மற்றொரு அன்னையாக தான் குந்தவை திகழ்ந்தாள்..
அவளே அவனை குளிப்பாட்டி.. பவுடர் பூசி பொட்டு வைப்பாள்.. அவனின்
வேலைகள் அனைத்தும் அவள் தான் செய்வாள்.. இவனும் அவள் இடுப்பை
விட்டு நகரமாட்டான்.. அவள் பள்ளி சென்றதும் சோகமாய் அமர்ந்திருப்பவன்
தன் தமக்கை வந்ததும் தான் சிரிப்பான்.. அவன் முதன் முதலில் கூறிய
வார்த்தையே அக்காதான்.. அன்று குந்தவையின் கால் தரையில்
பதியவில்லை..
‘’ அம்மா எனக்கு முறுக்கு வேனும் செஞ்சுதாங்க.. ‘’
‘’ அடேய் என்ன ஒரு நாளைக்கு ஒரு பலகாரம் கேட்குற நேத்து செஞ்ச
அதிரசம் இருக்கு அத திண்ணு.. ‘’
உடனே குகுடுவென ஓடிய ஆறுவயது அருள்.. கொள்ளையில் நின்ற தன்
அக்காவிடம் சென்று அவள் தாவணியை பிடித்து முறுக்கினான்..
‘’ என்னடா என்ன வேனும்..’’
அருள்.. ‘’ அக்கா அம்மாக்கிட்ட முறுக்கு கேட்டேன்.. செஞ்சுதர
மாட்டேன்னுட்டாங்க.. என பாவமாய் முகத்தை வைத்து கேட்க அதில்
மயங்கிய பெண்ணவள்.. அவன் கன்னத்தை பிடித்து முத்தம் வைத்து..
‘’ சரி வா நான் செஞ்சுத்தரேன்.. ‘’ என கிட்சனிற்குள் நுழைந்தவள்.. முறுக்கு
செய்ய ஆரம்பிக்க அருளோ கன்னத்தில் கைவைத்து அவள் பக்கத்தில்
உட்கார்ந்திருந்தான்…
அதானே பார்த்தேன்.. என்னடா மாட்டேன்னு சொன்னதும் எதுவும் பேசாம
போறான்னு.. உன்கிட்ட சொல்றதுக்குத்தானா.. குந்தவை அவனுக்கு நீ ரொம்ப
செல்லம் கொடுக்கிற. என அவர் கத்த.. பாவம் அவரை இருவரும்
கண்டுகொள்ளவில்லை..
தம்பியோ முறுக்கு எப்படா கிடைக்கும் என அக்காவையே பார்த்துக்
கொண்டிருக்க.. அக்காவோ முறுக்கு மாவிற்க்கான பதத்தை பார்த்துக்
கொண்டிருந்தாள்.. வள்ளியம்மை இவர்களை திருத்த முடியாது என
தலையிலடித்துக் கொண்டு சென்றார்..
அருள்.. அப்புச்சி நாளைக்கு தோப்புக்கு போலாம்மா..
வள்ளியம்மை.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. பேசாம வட்டுலையே

கிடங்க…
அருள் தன் அக்காவை உரசி நிற்க.. வள்ளிம்மா தம்பி ஆசையா கேட்குறான்ல
போலாம்.. என குந்தவை தன் தம்பிக்காக பரிந்து வந்தாள்.. ஆனால் நாளை
தன் ஆசை தம்பிக்கு வரவிருக்கும் ஆபத்தை பத்தி தெரிந்திருந்தால்
அவனுக்கு பரிந்து பேசியிருக்க மாட்டாள்…
அக்கா என்ன புடி.. பார்க்கலாம் என அருள் அங்குள்ள மரங்களை சுற்றி ஓடிக்
கொண்டிருக்க..
குந்தவையோ கண்ணில் துணி கட்டி.. அவனை கைகளால் தேடிக்
கொண்டிருந்தாள்.. இதை தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டே சமையலில்
ஈடுபட்டிருந்த வள்ளியம்மையின் மனம் தாய்மையில் பூரித்தது… அக்காவும்
தம்பியும் ஒன்னா இருந்தா மத்தவங்க யாருமே இதுங்க கண்ணுக்கு
தெரியாது என செல்ல அலுப்புடன் சலித்துக் கொண்டார்..
அருள் அவன் அன்னை இல்லாமல் கூட இருந்து விடுவான் ஆனா அக்கா
இல்லாமல் அவனுக்கு ஒரு பொழுது கடக்காது.. அவளையே உரசிக்கொண்டே
சுற்றுவான்.. அவனுக்கு எதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் அவன்
முதலில் நிற்பது குந்தவையிடம் தான்…
அப்பொழுது கிணத்திலிருந்து மீ னை பிடித்து வந்த.. அழகு வள்ளியம்மையின்
பார்வை உணர்ந்து.. ஏய் என்னடி.. என் பசங்கள கண்ணு வைக்குறியா.. என
வம்பிழுக்க..
ஆமா கண்ணு வச்சுட்டாலும் என அவர் வாய் நொடித்தாலும் கரங்களோ
அவர்கள் இருக்கும் திசை பார்த்து நெட்டி முறித்தது.. அழகு அதை கனிவாக
பார்த்தார்..
அய்யோ.. அருளு என்ற வள்ளியம்மையின் கத்தலில்.. பதறி திரும்பியவர்
உடனே அருளிடத்தில் விரைந்தார்.. அங்கு பாம்பு ஒன்று அருளைப் பார்த்து
படமெடுத்து நின்றது..
அழகு அவனிடத்தில் வருவதற்குள் பாம்பு அருளைப் பார்த்து சீ றியது.. அதைக்
கண்டு பயத்தில் அலறிய வள்ளியம்மை மயங்கி சரிந்தார்.. பாம்பு அருளை
தீண்டும் சமயம் குந்தவை பாம்பின் வாலைப்பிடித்து தூக்கியெறிய.. பாம்பு
தூரத்தில் விழுந்தது… அருள் பாம்பைக் கண்ட அதிர்ச்சியில் மயங்கி சரிய..
அழகுவும் மற்றவர்களும் இருவரையும் தூக்கிக் கொண்டு வட்டிற்கு
ீ வந்தனர்..
வள்ளியம்மை மயக்கம் தெளிந்ததும்.. என் மவன் எங்க.. அவனுக்கு
ஒன்னுமில்லையே என பதற்றத்துடன் கேட்க..
அவனுக்கு எதுவும் ஆகலை வள்ளி… நல்லாயிருக்கான் என முதலில்
அவளை ஆறுதல் படுத்தியவர்.. குந்தவையின் செயலைக் கூற.. அச்சோ
என்ன அத்தான் சொல்றிங்க.. குந்தவைக்கு ஒன்னும் இல்லையே.. என
கேட்டவாறு வெளியே செல்ல.. அப்பொழுதுதான் கணபதி செட்டியாரின்
மொத்த குடும்பமும் பதட்டத்துடன் வந்தார்கள்..
பேச்சி.. என்னாச்சு வள்ளி.. பேரனுக்கு எதுவும் ஆகலைல.. அருளு எங்க
இருக்கான்.. என தவிப்புடன் தேட…
இல்லைம்மா.. கடவுள் புண்ணியத்துல தப்பா ஒன்னும் நடக்கலை.. வாங்க
என்றவள் அவரை குந்தவையின் அறைக்கு கூட்டிச் சென்றார்..
அங்கு அருள் தூங்கிக்கொண்டிருக்க.. குந்தவை அவன் தலைமாட்டில்
அமர்ந்து தலையை வருடிக்கொண்டிருந்தாள்.. பேச்சிக்கு அவளைக் கண்டதும்
எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ.. அடியே குடிகெடுத்தவளே
உன் ராசியால தாண்டி என் பேரன் இந்த நிலைமைல இருக்கான்..
மேற்கொண்டு அவன் பக்கம் இருந்து.. அவன் உசுர வாங்கிராத.. வள்ளி நீ
பேரன தூக்கிட்டு கொஞ்ச நாள் என் கூட வந்து இரு.. இவ மூச்சுக் காத்து
பட்டாலே அவனுக்கு ஏதாவது ஆகிடும் என பொறிந்தவர்.. அருளை
தூக்கிக்கொண்டு வெளியேற.. குந்தவை பிரம்மை பிடித்தவள் போல்
நின்றிருந்தாள்…
வள்ளிக்கும் அவர் அப்படி பேசியது அதிர்ச்சியே.. உடனே கோபமாய் அவர்
வெளியே வர.. மொத்த குடும்பமும் கூடத்தில் இருந்தது.. அதுவும் அழகுவின்
முகம் பாறை போல் இறுகி பார்ப்பதற்கே பயங்கரமாய் இருந்தது…
செங்குட்டுவன் வடுகம்மாள் முகத்திலும் அடக்கப்பட்ட கோபம்…
என்ன பேசுறேன்னு.. தெரிஞ்சு தான் பேசுறியா.. பேச்சியம்மா..
எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேண்ணே.. இவளோட ராசியால தான் இவ
அம்மா வயித்து பிள்ளையோட போய்ச்சேந்தா.. இப்போ என் பேரனையும்
பாம்பு கடிக்க வந்துருச்சு… முதல்ல இவ ஜாதகத்தை போயி பாருங்க..
அதுக்கப்புறம் நான் என் மவளையும் பேரனையும் அனுப்புறேன்.. என
வள்ளியின் கை பிடித்து இழுக்க..
அவள் கையை உதறினாள்.. என்ன பேச்சு பேசுறீங்க… கொஞ்சமாவது மனுஷத்
தன்மையோட பேசுங்கம்மா.. குந்தவை மட்டும் இல்லன்னா இப்போ இவன
உயிரோடவே பார்த்திருக்க முடியாது.. என கோபத்தில் கத்த.. பேச்சியம்மாள்
பதிலுக்கு ஒன்று பேச ஆரம்பித்தார்..
அப்பொழுது பேச்சியம்மாள் தோளிலிருந்த அருளுக்கு உடம்பு வெட்டி இழுக்க
அனைவரும் பதறிவிட்டனர்.. வேகமாய் அருளை வாங்கிய அழகு வெளியே
செல்ல அனைவரும் அவனை பின்தொடர்ந்தனர்…
இத்தனை கலவரத்தில்.. பேச்சியம்மாளின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள்
நொறுங்கி.. வெறுங்கூடாக நின்றுக் கொண்டிருந்த ஜீவனை யாரும்
அறியவில்லை…
அந்த பெரிய மாளிகையில்.. ஓய்ந்து போன தோற்றத்தில் கேட்பாரின்றி
அமர்ந்திருந்தாள் குந்தவை…. அவள் விழிகளோ எதிரில் இருந்த
வேலுநாச்சியாரின் படத்தையே வெறித்தது.. ஏன்மா என்ன விட்டுப் போன.. நீ
இருந்திருந்தா எனக்கிந்த நிலைமை வந்துருக்காதுல்ல.. தம்பிய மட்டும்
கூட்டிட்டு போன நீ என்னையும் கூட்டி போயிருக்கலாம்ல என மனதோடு
குமுறிக் கொண்டிருந்தாள்..
ஆனால் இன்றைய நாளிற்கான சோதனை இன்னும் முடியவில்லை.. என
அறியாத குந்தவை தன்னுள் மூழ்கியிருக்க.. அந்த மாளிகையின் பின்
வாயிலின் கதவை திறந்து சத்தமில்லாமல் ஓர் உருவம் நுழைந்துக்
கொண்டிருந்தது…
இருள் போர்வையில் மறைந்து பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்த
உருவம்.. குந்தவையின் அறையில் வந்து நின்று சுற்றி முற்றி பார்த்து..
பூனை போல் அவ்வறைக்குள் நுழைந்தது..
குந்தவை கீ ழே அமர்ந்து.. கால்முட்டியில் தலைசாய்ந்தவாறு அமர்ந்திருக்க..
அவளிடத்தில் நெருங்கியவன்.. சத்தமில்லாது அவள் வாயை பொத்த..
குந்தவை பயத்தில் திமிறினாள்.. அவள் மனமோ பயத்தில்
சமநிலையில்லாமல் அடித்துக்கொண்டது.. அய்யோ திருடன் போலயே..
இந்நேரம் பார்த்து வட்டுல
ீ யாரும் இல்லை என்ன பண்றது என மனதிற்குள்
யோசித்தவாறு அவனிடத்திலிருந்து விலக போராடிக் கொண்டிருந்தாள்..
அப்போது அவன் அவள் தாவனியில் கை வைத்து இழுக்க.. அப்பொழுது தான்
குந்தவைக்கு அவன் திருட வந்தது தன் பெண்மையென அறிந்து.. முன்னிலும்
அதிகமாய் போராடினாள்.. ஏற்கனவே மனசோர்வினால் துவண்டிருந்தவளுக்கு
அவனிடம் போராட தெம்பில்லாமல் போக.. அதை சாதகமாக்கிய
அம்மிருகத்தின் கரத்தில் அவள் தாவணி வந்துவிட.. இதுவரை தன்
மனசோர்வால் துவண்டிருந்தவளுக்கு.. இப்பொழுது தன் மானத்தைக் காக்க
அவளுள் வேகம் பிறந்திட.. தன் பலம் முட்டும் அங்கிருந்த கண்ணாடியை
உடைத்தவள் அதிலிருந்த கண்ணாடிச்சில்லை எடுத்து.. தன்னை நோக்கி
பாய்ந்தவனின் மார்பில் ஆழக்குத்தினாள்..
அவன் இச்செயலை எதிர்பாராது வலியில் கத்திக்கொண்டு சிறிது தளர..
குந்தவை அவனை தள்ளிவிட்டு கீ ழே ஓடிவிட்டாள்.. சரியாய் அந்நேரம்
வடுகம்மாள் செங்குட்டுவன் இன்னும் சிலர் வர அனைவரும் குந்தவையின்
நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்….
செங்குட்டுவன் தன் சட்டையைக் கழட்டி பேத்தியிடத்தில் போர்த்தியவர்..
என்னவென்று விசாரிக்க..
யாருன்னு தெரியலை ஐயா.. பின்னாடியிருந்து என் வாயை பொத்தி தப்பா
நடந்துக்க பார்த்தான்.. முகம் வேற மூடிந்துருச்சு… நான் கண்ணாடியால
அவன் நெஞ்சுல குத்திட்டு ஓடி வந்தேன்.. என அழுகையும் விசிப்பும்மாக
கூறினாள்..
உடனே செங்குட்டுவன் வேலையாட்களை கூட்டிக் கொண்டு குந்தவையின்
அறைக்கு சென்றார்.. அங்கு கண்ணாடி உடைந்து அதன் சில்கள்
சிதறியிருந்தது.. அங்கு ரத்த கரையுடன் கூடிய கால்தடமும் தெரிய அதை
பின்தொடர்ந்தார்…
வட்டின்
ீ பின்பக்கம் கால்தடம் முடிய.. செங்குட்டுவன்.. டேய் அடிப்பட்டவன்
ரொம்ப தூரம் போயிருக்க முடியாது.. ஊரையே சல்லடை போட்டுத் தேடுங்க..
இந்த செங்குட்டுவன் பேத்தி மேலயே கைவைக்க பார்த்திருக்கான்.. அவன்
தோலை உரிச்சு முச்சந்தில தொங்கவிட்டாத்தான் என் மனசு ஆறும்.. என
கர்ஜிக்க வேலையாட்கள் தேட ஆரம்பித்தனர்…
இன்றோடு அச்சம்பவம் நடந்து ஒருவராமாகிவிட்டது.. அழகுவும்
செங்குட்டுவனும் இன்னும் தங்கள் வட்டிற்குள்
ீ நுழைந்தவனை
வெறிகொண்டு தேடிக்கொண்டிருந்தனர்… ஊர் மக்களுக்கும் இந்த விஷயம்
பரவ.. ஆறுதல் சொல்லுகிறேன்.. என்று அவர்களின் மனதை வார்த்தைகளால்
குத்தி கிழித்தனர்.. இப்பொழுது அவர்கள் எல்லோருக்கும் குந்தவை
கெட்டுப்போய்விட்டாள் என்ற எண்ணமே.. வட்டிற்கு
ீ யாரும் வந்தாலே
குந்தவை தன் அறைக்குள்ளையே முடங்கிவிடுவாள்..
வள்ளி அவளுக்கு உறுதுணையாக இருந்தார்.. குந்தவையும் வள்ளியின்
மடியில் தான் முடங்கியிருந்தாள்.. அவளுக்கு இன்னும் அதிர்ச்சி
தெளியவில்லை.. அன்று மட்டும் யாரும் வராவிட்டால் இந்நேரம் அவளை
புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்… ஒன்று அவள் இறந்திருப்பாள்
இல்லை தன்னை மானபங்கபடுத்த வந்தவனை கொன்றிருப்பாள்…
வள்ளியம்மையின் ஒரே ஆறுதல் கோவில் மட்டுமே… அங்கு சென்று தன்
மனபாரம் அனைத்தையும் கடவுள் சன்னிதியில் கொட்டிவிடுவாள்..
ஆனால் அன்று அவர் போகும் போது தெளிவாக இருந்த முகம் வரும்போது
குழம்பியிருந்தது.. அவரின் பார்வை மொத்தமும் குந்தவையிடத்தில் தான்..
உங்க எல்லார்க்கிட்டையும் கொஞ்சம் பேசனும்.. என்ற வள்ளியம்மையின்
குரல் இறுக்கமாய் ஒலித்தது..
அருளை தவிர அனைவரும் அங்கு கூடியிருக்க.. செங்குட்டுவன்.. என்னம்மா..
என்ன பேசனும்..
இவளை இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே வச்சுருக்க போறிங்க..
குந்தவை இங்க இருக்கிற வரைக்கும் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க..
கல்யாணம் பண்ணிவச்சுட்டா.. அடுத்து யாரும் பேச மாட்டங்கள்ல.. எனவும்
அனைவர் முகமும் யோசனையை காட்டியது என்றால்.. குந்தவையின் முகம்
அதிர்ச்சியை காட்டியது.. வள்ளிம்மா என்ன பேசுறீங்க.. வம்பு பேசுறவங்க
பேசிக்கிட்டே தான் இருப்பாங்க.. அவங்களுக்காக நான் கல்யாணம்
பண்ணிக்கனுமா.. என கோபமும் ஆதங்கமுமாய் கேட்டாள்..
வேற எண்ண பண்ண சொல்ற குந்தவை.. இப்போ எல்லார் கண்ணுக்கும் நீ
கெட்டுபோனவளாத்தான் தெரியுற.. இங்க இருக்கிற வரைக்கும் அந்த பேச்சு
தொடர்ந்துக்கிட்டுத் தான் இருக்கும்… அதுனால தான் என் தம்பி
செல்வத்துக்கு குந்தவைய கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு
பண்ணியிருக்கேன்.. என அழகுவை பார்த்து கூறினார்..
வடுகம்மாளிற்கு அந்த யோசனை சரியென பட்டது.. வெளியிடத்தில்
கொடுப்பதை விட சொந்தத்தில் கொடுத்தால் தன் பேத்திக்கும் பாதுகாப்பு..
யாரும் அவளை அவதூறாய் பேச மாட்டார்கள்… என நினைத்தவர் கணவர்
மகனின் யோசனை மிகுந்த முகத்தை பார்த்து.. என்ன யோசிச்சுக்கிட்டு
இருக்கீ ங்க.. வள்ளி சொல்றது சரித்தேன்.. சட்டுப்புட்டுன்னு கல்யாணத்தை
முடிக்கிற வழிய பாருங்க..
இல்லை.. இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. என குந்தவை கத்தினாள்..
ஏன் ஏன்… கல்யாணம் பண்ணிக்க மாட்ட.. இன்னும் இந்த குடும்ப மானத்தை
சந்தி சிரிக்க வைக்காம விடமாட்ட போல.. எங்காத்தா சொன்னப்பக் கூட
நான் நம்பலை.. ஆனா இப்போ எனக்கு தோனுது உன்னோட ராசிதான் இந்த
குடும்பத்தை ஆட்டிப் படைக்குது.. இன்னும் இங்குள்ளவங்கள்ல தூக்கி
கொடுக்காம ஓயமாட்ட அப்படித்தானே.. என கோபமாய் கூற..
குந்தவை அதிர்ச்சியுடன் தன் வள்ளிம்மாவை பார்த்தாள்.. அவரிடத்திலிருந்து
இப்படி ஒரு வார்த்தை வருமென்று அவள் கனவிலும் நினைத்துப்
பார்த்ததில்லை…
அழகு வள்ளியம்மையின் கன்னத்தில் அறைந்து.. என்னடி ரொம்ப பேசுற..
துளிர் விட்டுப் போச்சோ.. என அவள் தலைமுடியை பிடித்து இழுத்தவர்
கோபத்தில் இரைந்தார்…
அழகுவின் பிடியிலிருந்து விலகிய வள்ளியம்மை.. விடுங்க இத்தனை நாள்
நான் இவளுக்கு அம்மா மாதிரிதானே நடந்துக்கிட்டேன்… என் அன்புல
உங்களுக்கு நடிப்பு தெரிஞ்சுச்சா.. இப்போ நான் இப்படி பேசுறேன்னா
அவளோட நல்லதுக்குத்தான்னு உங்களுக்கு புரியலையா என கோபமாய்
கேட்க.. அழகு அதிலிருந்த உண்மையில் வாயடைத்து போனார்..
வள்ளியம்மை குந்தவையை நோக்கி.. இங்க பாரு குந்தவை இன்னும் ஒரு
மாசத்துல உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணம் அவ்வளவு தான்… இல்ல
நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இங்க தான் இருப்பேன்னு சொன்னா..
நானும் என் மவனும் இந்த வட்டை
ீ விட்டு போயிருவோம் என அவர்
கூறியதும்.. குந்தவை யாரேனும் தனக்கு ஆதரவாக பேசுவார்களா என
மற்றவர்களை பார்க்க அனைவரும் அமைதியாக இருந்தனர்..
அதைக்கண்டு அவள் முகம் கசங்கியது. ஆகமொத்தம் இவ்வட்டில்
ீ நான்
வேண்டாதவள்.. நான் இருந்தா இவங்க குடும்பத்துக்கு நல்லதில்லைன்னு
என்ன கல்யாணம் பண்ணி அனுப்ப பார்க்கிறாங்க என வேதனையுடன்
எண்ணியவள்.. யாரிடமும் பேச விரும்பாது தன்னறைக்குள் புகுந்தாள்..
மறுநாள் பேச்சி கணபதி இருவரும் வட்டிற்கு
ீ வர… திருமண ஏற்ப்பாட்டை
பற்றி பேச ஆரம்பித்தனர்.. இன்னும் பதினைந்து நாளில் வரும் முதல்
முஹுர்த்ததில் திருமணம் என உறுதி செய்யப்பட்டது..
பேச்சி யாரும் அறியாது குந்தவையின் அறைக்கு சென்றவர்… ஹ்ம்ம்ம் என்
மவளுக்காகத்தேன் இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்..
இல்லைன்னா உன்ன மாதிரி கெட்டுப்போனவளுக்கெல்லாம் என் வட்டு

வாசப்படிய மிதிக்க கூட தகுதியில்லை.. இங்க பார் என்வட்டுக்கு
ீ மருமகள
வர.. ஒழுங்கா இருந்துக்க… இல்லை தோலை உரிச்சுடுவேன்.. இவ்வளவு
பேசுறேன் மரியாதைக்காவது எழுந்து நின்னு பதில் பேசுறியா.. உன்னை
மாதிரி சோரம் போனவளை மருமகளாக்க பெரிய மனசு வேனும்..
அதுக்காவே நீ என் கால்ல விழுந்துக் கிடைக்கனும் என ஏற்கனவே
ரணமாகியிருந்த அவள் மனதை மேலும் காயப்படுத்தி விட்டு சென்றார்..
குந்தவை அவர் பேசிய எதற்கும் பதில் பேசவில்லை.. பிறந்த வட்டிலே
ீ அவள்
வேண்டாதவளாகி போக.. புகுந்த வட்டில்
ீ எங்கன மரியாதை கிடைக்கும்..
அனைவரும் கூடத்தில் அமர்ந்திருக்க.. பேச்சி அண்ணே ஒரு ஹோமம்
பண்ணிட்டு கல்யாணம் பண்ணலாம் ஏன்னா குந்தவை ராசி சரியில்லை..
அதுனால என் மவனுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா அதுனாலதான்
சொல்றேன்..
அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு என் பேத்திய உங்க மகனுக்கு கல்யாணம்
பண்ணி வைக்க வேணாம் என கூறியவாறு அங்கு வந்தார் சுந்தரம்..
வேலுநாச்சியாரின் தந்தை..
முதலில் அவரைக் கண்டு மற்றவர்கள் அதிர்ந்தாலும் சடுதியில் தெளிந்து..
வாங்க வாங்க சம்பந்தி உட்காருங்க.. என்ன திடீர்னு.. பேத்திய பார்க்க
வந்தீங்களா என்றார் செங்குட்டுவன்…
இல்லை நான் என் பேத்திய அழைச்சுட்டு போக வந்தேன்.. எனவும்
குடும்பத்தார்க்கு அதிர்ச்சி.. செங்குட்டுவன்.. என்ன சம்பந்தி சொல்றிங்க..
வேற என்ன சொல்லனும்.. இங்க நடக்குறதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு
நினைச்சுக்கிட்டு இருக்கீ ங்களா.. யாரைக் கேட்டு என் பேத்திக்கு கல்யாணம்
முடிவு பண்ண ீங்க.. அதுவும் இவங்க மகனுக்கு.. இப்பவே என் பேத்திய பத்தி
இப்படி பேசுறாங்க.. கல்யாணம் மட்டும் முடிஞ்சா என்னவெல்லாம்
பேசுவாங்களோ.. என கோபத்தில் கத்தினார்..
போதும் நிறுத்துங்க.. எங்க அம்மா என்ன தப்பாவ சொன்னாங்க.. உங்க
பேத்திய என் தம்பிய விட்டா வேற யாரு கல்யாணம் பண்ணிக்குவா.. அதான்
ஊரெல்லாம் அவ பேரு நாறிடுச்சே.. வேன்னா நீங்க உங்க பேத்திய கூட்டி
போயி சீரும் சிறப்புமா வச்சுக்கோங்க.. தேவையில்லாம எங்க அம்மாவ
பேசுற வேலையெல்லாம் வேண்டாம் என வள்ளியம்மையும் கோபத்தில்
இறையவும்.. சுற்றியுள்ளவர்கள் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்
என்றால்.. தன் அறையின் வாசலில் நின்ற குந்தவை அவரை வெறித்துப்
பார்த்தாள்..
மெதுவாக சுந்தரத்திடம் வந்தவள்.. என்னைய இங்க இருந்து கூட்டிட்டு
போயிடுறீங்களா தாத்தா என மெல்லிய குரலில் கேட்க..
அவரோ விழிகளில் நிரம்பிய நீரை துடைத்தவாறு.. பின்ன இனிமேல்
இவங்ககிட்ட உன்னை விடுவேனா.. உன்னை கையோட கூட்டி
போறதுக்குத்தான் நான் வந்துருக்கேன்.. என அவர் கூறியதும்..
குந்தவை வள்ளியம்மையிடம் வந்து.. இனி என் ராசியால உங்களுக்கும்
உங்க குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் என்னால எந்த பிரச்சனையும் வராது..
இனிமேல் நான் வேற நீங்க வேற.. இப்போ இந்த வட்டை
ீ விட்டு போற நான்
எப்பவும் எந்த நிலைமையிலும் இந்த வட்டு
ீ வாசப்படிய மிதிக்க மாட்டேன்..
என நெஞ்சம் கொதிக்க கூறியவள்.. தன் தாய் வழி தாத்தாவுடன் வட்டை

விட்டு வெளியேறினாள்… அழகு செங்குட்டுவன் வடுகம்மாள் என யாரின்
பேச்சையும் அவள் செவி சாய்க்க வில்லை..
செங்குட்டுவன் அழகு என இருவரும் பலமுறை சென்னைக்கு வந்து அவளை
சமாதானம் செய்ய முயற்சித்தனர்.. அவளோ அவர்களின் முகத்தில் கூட
விழிக்க வில்லை.. அதோ இதோ என்று மூன்று வருடங்கள் ஓடி விட்டது..
ஆனால் இன்றும் குந்தவையின் மனம் மாறவில்லை…
எதிரில் இருந்த பலவண்ண மலர்களையே வெறித்துக் கொண்டிருந்த
குந்தவையின் கண்களை இரு கரம் பொத்த அதில் தன்நிலை அடைந்தவள்
அக்கரத்தின் சொந்தக்காரனின் நெஞ்சத்தில் சாய்ந்தாள்…
சந்திரன்.. என்னாச்சு.. இன்னைக்கு என்ன நினைப்பு..
குந்தவை.. ஒன்னுமில்ல..
எப்பதான் உன் மனசுல உள்ளத என் கிட்ட பகிர்ந்துக்க போறியோ.. என
அவன் சலித்துக் கொள்ள.. குந்தவையின் இதழ்களில் புன்னகை விரிந்தது…
சந்திரன்.. குந்தவையின் பாலைவனமான மனதை சோலைவனமாக
மாற்றியவன்.. சுந்தரத்தின் ஒன்றுவிட்ட தங்கை மகன்.. அவரின் வயோதிகம்
காரணமாக சுந்தரத்தின் அணைத்து தொழில்களையும் அவனே கவனித்துக்
கொள்கிறான்..
சந்திரன் முதல் பார்வையிலே குந்தவையின்பால் விழுந்தான்.. அவளிடத்தில்
இருக்கும் கம்பீரம் கலந்த பெண்மை அந்த ஆறடி ஆண்மகனை அவளிடம்
இழுத்து சென்றது…
தன் பேச்சாலும் அன்பாலும் முதலில் அவளிடத்தில் நட்புக்கரம் நீட்டியவன்..
அடுத்து காதல் கணைகளை தொடுத்தான்.. முதலில் மறுத்து ஒதுங்கியவள்..
அவனின் விடாமுயற்சியாலும்.. காதலாலும் அவனிடத்தில் சரணடைந்தாள்…
இதோ இப்பொழுது இருவட்டிலும்
ீ இவர்களின் திருமணப்பேச்சை
துவங்கியிருந்தனர்… அம்மா சொன்னாங்க.. உங்க வட்டுல
ீ கண்டிப்பா
பேசனும்மா.. ப்ள ீஸ் கொஞ்சம் விட்டுக்கொடுடி.. அவங்க உன் அப்பா அம்மா
தான.. என அவனிடத்தில் தன்மையாக கேட்டான்..
இதுவரை குந்தவையிடத்தில் இருந்த இளக்கம் மறைந்து.. உடல் இறுக்கம்
கொண்டது.. எனக்கு என் தாத்தாவை தவிர யாருமில்லை.. என்
கல்யாணத்துல என் வட்டு
ீ சார்பா அவருதான் இருப்பார்.. என அவள்
உறுதியாக கூற சந்திரன் தன்னவளை நினைத்து ஆயாசம் கொண்டான்..
ஓகே ஓகே டென்ஷன் ஆகாத.. விடு.. என அவள் தோளை பிடிக்க வர..
அவனிடத்திலிருந்து விலகியவள் ‘’ இல்லை பிரசாந்த்.. நீங்க என்னை
கன்வெண்ஸ் பண்ண முயற்சிக்குரிங்க… வேண்டாம்.. இந்த விஷயத்தை
இதோட விட்ருங்க.. இல்லை இந்த கல்யாணம் நடக்காது என அவள் கூறி
முடிக்கும்முன்.. அவள் கரத்தை இறுக்க பற்றியவன்.. என்னடி ரொம்ப பேசுற..
இப்போ என்ன.. உனக்கு உன் வட்டுல
ீ இருந்து யாரையும் கூப்பிட கூடாது
அவ்வளவு தானே விடு.. தேவையில்லாம பேசாத என கரத்திற்கு அழுத்தம்
கொடுக்க.. வலியில் முனங்கியவள்.. கண்களால் அவன் கையை
காண்பித்தாள்..
அவன் பிடித்த இடம் கண்ணிசிவந்திருந்தது… அதைக் கண்டு வருத்தம்
கொண்டவன்.. மிருதுவாக அவற்றை தடவ.. கூச்சம் கொண்ட பெண்ணவள்..
ப்ச் விடுங்க போதும்.. நான் கிளம்புறேன்.. காலேஜ்க்கு நேரமாச்சு..
உங்களுக்காக தான் இங்க வந்தேன் என்றவள்.. அவளுக்காக காத்திருந்த
காரில் ஏறி சென்றாள்..
சந்திரன் தன் காரை நெருங்கும் சமயம்.. காரின் கண்ணாடியை யாரோ கல்
கொண்டு எறிய.. கண்ணாடி உடைந்தது.. சந்திரன் கோபமாய் கல் வந்த
திசையை பார்க்க அங்கு ஒன்பது வயது சிறுவன் அவன் வயதிற்கு மீ றிய
உயரத்துடனும் உடல்வாகுடனும் நின்றிருந்தான்.. அதுவும் அவன் விழிகளில்
தெரிந்த தீட்சண்யம் சந்திரனுக்கு ஆச்சரியத்தை தந்தாலும் முகத்தில்
கோபத்தை கொண்டு வந்தவர்… ஏன்டா கார் கண்ணாடிய உடைச்ச..
ஹ்ம்ம்ம் எங்கக்கா கைய வலிக்கிற மாதிரி பிடிச்சிங்கள்ல.. அதுனாலதான்..
உங்க மண்டைய தான் உடைக்கலாம்னு நினைச்சேன்… ஆனா எங்கக்காவ
கல்யாணம் பண்ணிக்க போறதாலதான் கண்ணாடிய உடைச்சேன்.. என
முறைத்துக் கொண்டு கூறவும்.. சந்திரனின் விழிகள் அருளைக் கண்டு
ஆச்சரியத்தில் விரிந்தது… அதோடு அந்த இடத்தில் இருவருக்கும் ஏற்ப்பட்ட
பிணைப்பும் நெருக்கமும் இன்றும் தொடர்கிறது…

அத்தியாயம் 22

அக்கா இங்க இருந்து போகும் போதும் நான் தூங்கிட்டு இருந்தேன்..


எழுந்ததும் அக்காவ கேட்டு ரொம்ப அழுதேன்.. மறுபடியும் காய்ச்சல்
வந்துருச்சு.. அதையே சாக்கா வச்சு திரும்பவும் அக்காவ இங்க வரவைக்க
ஐயா முயற்சி பண்ணுனாங்க.. ம்ம்ம்ம் எதுவுமே நடக்கலை..
அப்புச்சி ஆத்தா கிட்ட சாதாரணமா கூட பேசுறதேயில்லை.. எப்பவும் சண்டை
தான்.. இன்னைக்கு வரைக்கும் தினமும் ஒருமுறையாவது அந்த சம்பவத்தை
வச்சு ஆத்தாவ திட்டாம இருந்ததுக் கிடையாது.. நானும் முதல்ல ஆத்தா
மேல கோபமாதான் இருந்தேன்… ஆனா நைட் ஆத்தா அக்கா அறையில
உட்கார்ந்து அழுறத பார்த்து.. இதுல வேற ஏதோ விஷயம் இருக்குன்னு
புரிஞ்சது.. ஆத்தாட்ட கேட்டா அவங்க என்ன ஒரு பார்வை பார்த்துட்டு
போயிடுவாங்க.. ஆனா இப்போ வரைக்கும் அதுக்கான பதில் எனக்கு
தெரியலை.. என பெருமூச்சுடன் கூறியவன்.. அப்பொழுது தான் வானதியின்
நிலையை பார்த்தான்..
வானதியின் விழிகளில் இருந்து நீர் வடிந்து அவன் மார்பை நனைத்திருந்தது..
துடைக்க துடைக்க வந்துக் கொண்டே இருந்தது.. வேலுநாச்சியாரின் இறப்பை
நினைத்து.. பின் தன் தாயின் மனத்துன்பத்தை நினைத்து என அவளுக்கு
அழுகை பெருகியது..
அருள் ‘’ ம்ப்ச் அழாத அம்மாளு.. நடந்தத மாத்த முடியாது.. ஆனா இனி
நடக்கிறத நல்லதா மாத்த பாப்போம் என்ன.. என அவள் முகம் உயர்த்திக்
கேட்டான்.. ‘’
‘’ ஹ்ம்ம்ம்.. மச்சான் அம்மாக்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தவன் யாரு.. ‘’
அதுவரை வருத்தம் சுமந்திருந்த அருளின்.. முகம் கோபத்திலும்
இயலாமையிலும் இறுகியது.. உடம்போ இரும்பு போல் விறைத்தது..
‘’ என்னாச்சு மச்சான்.. ‘’
‘’ இல்லை அம்மாளு.. நாங்க எவ்வளவு முயற்சி செஞ்சும்.. அவன் யாருன்னு
கண்டுபிடிக்க முடியலை.. ஆனா ஒன்னுமட்டும் உறுதி.. அவன் நம்ம
குடும்பத்தை பத்தி நல்லா தெரிஞ்சவனாயிருக்கனும்.. இல்லை ரொம்ப நாளா
நம்ம வட்டை
ீ நோட்டம் பார்த்திருக்கனும்.. அதுனால தான் சரியா வட்ல

உள்ளவங்க வெளிய போன நேரத்துல உள்ள வந்துருக்கான்.. ‘’
‘’ ஆச்சிம்மா ஏன் அம்மாவை பத்தி அப்படி பேசியிருப்பாங்க மச்சான்… ஏன்னா
நான் இங்க வந்த கொஞ்ச நாளிலையே அவங்க தூய்மையான அன்பை
புரிஞ்சுக்கிட்டேன்.. கண்டிப்பா அதுல நடிப்போ.. பொய்யோ தெரியலை… ‘’
ஹ்ம்ம்ம்.. இத்தனை வருஷமா நான் எப்படிக் கேட்டும்.. ஆத்தா சொல்லல.. நீ
வேணா முயற்சிப்பண்ணி பாரு என ஆயாசமாக கூறினான்..
தன் மனதில் இருந்தவற்றை தன் அம்மாளுவிடம் பகிர்ந்துக் கொண்டதாலும்
இனி எப்படியும் அக்கா வட்டிற்கு
ீ வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையிலும்
அவன் மனம் லேசாக.. தன் உயிரணுவில் உருவான கருவை சுமந்துள்ள தன்
அம்மாளுவின் மணி வயிற்றை தடவிக் கொண்டிருந்தான்..
மச்சான் மைண்ட் அப்செட்டா இருக்கு.. டைவட் பண்ணுங்க என அவன் மார்பு
முடிகளை நீவியவாறு கூறினாள்..
ஹ்ம்ம்ம் என்ன பண்ணலாம்..
பிரியாணி திண்ணலாமா என்றாள் முகச்சிவப்புடன்..
ஒஒஒஒஒ.. திங்கலாமே.. ஒன்னும் ஆகாதுல என அவள் வயிற்றை
தடவியவாறு கேட்க..
ஹ்ம்ம்ம் உன் முரட்டுத் தனத்தை காமிக்காம இருந்தா ஒன்னும் ஆகாது.. என
அவள் மீ சை இழுத்தவாறு கூறினாள்.. பிறகு அங்கு வாய் பேச்சுக்களுக்கு
இடமில்லாமல் போக.. இருவரின் கரமும் உடலும் பேச ஆரம்பித்தன…
காலையிலிருந்து வள்ளியையே வானதி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவர்
முகத்தில் இருந்த பூரிப்பைக் கண்டு அவளுள் யோசனை பிறந்தது..
வள்ளியம்மை ‘’ என்னத்தா என்னமோ யோசனைல இருக்கிற மாதிரியிருக்கு
உனக்கு ஏதாவது வேனுமா.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் எனக்கு அம்மாக்கூட இருக்கனும் போலயிருக்கு.. ஆச்சிம்மா..
ஆனா பாருங்களேன் இங்க வந்து என் கூட இருந்தா அவங்க ராசியால உங்க
எல்லாருக்கும் ஏதாவது ஆகிடுமோன்னு பயமாயிருக்கு.. ‘’ என மெல்லிய
குரலில் கூற..
வள்ளியம்மையின் கையிலிருந்த செம்பு நழுவியது.. அவர் அதிர்ச்சியாய்
வானதியை பார்க்க.. அவளோ அவரையும் கண்டுகொள்ளவில்லை..
கோபமுகத்தோடு நின்றிருந்த அருளையும் கண்டுகொள்ளவில்லை…
‘’ ஹ்ம்ம்ம் என்ன பண்றது.. எல்லாம் எங்கம்மா ராசி.. இல்ல ஆச்சிம்மா ‘’

வள்ளியம்மை எதுவும் பேசவில்லை.. மடங்கி அமர்ந்துவிட்டார் ஆனால்


விழிகளோ நிற்காமல் நீரை பொழிந்தது.. அதைக் கண்டு சற்று இளகியவள்..
அவரின் மடியில் தலைசாய்த்தாள்..
இப்போயாவது நீங்க ஏன் அப்படி பேசுன ீங்கன்னு சொல்லுங்க ஆத்தா என
அருள் ஆதங்கமும் கோபமுமாக கேட்டான்…
‘’ ப்ள ீஸ் சொல்லுங்க ஆச்சிம்மா.. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு..
நீங்க அப்படி பேசுனதுக்கு கண்டிப்பா ஒரு காரணம் இருக்கனும் சொல்லுங்க..
உங்களுக்கு உங்க மக வேண்டாம்மா.. ‘’ என்றதும்.. வள்ளியம்மை வாய்
விட்டு அழுக ஆரம்பித்தார்..
ஒருபுறம் அருளும் மறுபுறம் வானதியும் அவரின் தோளை அணைத்திருக்க..
வள்ளியம்மை இத்தனை நாள் தன் மனதில் புழுங்கிக்கொண்டிருந்த
விஷயத்தை கூறலானார்..
வள்ளியம்மை கோவிலில் தன் மகளுக்கு நல்வழி வேண்டி அமர்ந்திருக்க..
தூணின் மறுபுறம் அமர்ந்திருந்த இருபெண்கள் வள்ளியம்மையை
கவனிக்காது அவர்களுள் பேசிக்கொண்டிருந்தனர்..
‘’ கேட்டியா செய்திய நம்ம பெரியவட்டு
ீ பேத்திய எவனோ ஒருத்தன் வடு

புகுந்து கெடுத்துட்டானா.. பாவம் இனி அந்த புள்ள வாழ்க்கை என்னாக
போகுதோ.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் ஆமாக்கா… பாவம்தேன் என்ன பண்றது.. எல்லாம் அந்த புள்ள
வாங்கி வந்த வரம்.. அறியா வயசுல தாய தொலைச்சுடுச்சு.. இப்போ அறிஞ்ச
வயசுல கற்ப்ப தொலைச்சுட்டு நிக்குது.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் வள்ளியம்மைக் காட்டுல மழைதான்.. ஏற்கனவே ஆண் வாரிசை
பெத்துக்கொடுத்திருக்கா.. இப்போ சக்களத்தி மகளுக்கு இனி கல்யாணம்
காட்சி இல்லை.. சீர் சினத்தி இல்லை.. சொத்தும் கையவிட்டு போகாது..
காலம்முழுக்க அந்த பிள்ளைய வேலைக்காரி மாதிரி நடத்தப்போறா.. சொத்து
முழுக்க அவ மகனுக்கு தான்.. ‘’
‘’ அதைச்சொல்லு.. என்ன இருந்தாலும் பெத்த தாய் போல வருமா.. இந்நேரம்
அவ ஆத்தா மட்டும் உயிரோட இருந்தா.. எப்படியாவது தன் மகளுக்கு
கல்யாணம் பண்றத யோசிச்சுருப்பா.. இவளுக்கும் ஒரு தம்பி இருக்கான்ல
அவனுக்கு அந்த பிள்ளைய கல்யாணம் பண்ணி வைச்சா சொத்தும் பிரியாது..
நாளப்பின்ன அந்த பிள்ளைய தப்பாவும் பேச மாட்டாங்க.. ஆனா இந்த
வள்ளியம்மை அதெல்லாம் செய்யாது.. கெட்டுபோனவள அதுவும் சக்களத்தி
மகள தன் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்குமா.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் அதைச்சொல்லு.. சரி வா அடுத்த வட்டு
ீ கதை நமக்கெதுக்கு.. நம்ம
வட்டு
ீ கதையே சிரிப்பா சிரிக்கிது… ’’ என புலம்பியவாறு இருவரும்
அங்கிருந்து சென்றனர்.. ஆனால் இவர்களின் பேச்சைக் கேட்டுக்
கொண்டிருந்த வள்ளியம்மை சர்வமும் மரத்து போன நிலையில்
அமர்ந்திருந்தார்.. கண்களில் மட்டும் கண்ண ீர் வழியாமல் இருந்தால் அவர்
உயிருள்ள சிலைதான்..
வம்பர்களின் சொற்களே அவரின் காதில் ரீங்காரமிட்டிருந்தது.. குந்தவையை
பெற்ற மகளை போல் பேணி வளர்த்தவருக்கு இப்படிப்பட்ட அவப்பெயர்..
அவங்க சொல்றமாதிரி நான் குந்தவைக்கு அம்மாவ நடந்துக்கலையா.. என
உள்ளுக்குள் மருகிக்கொண்டிருந்தவரை கோவில் மணியோசை
நினைவுலகத்திற்கு திருப்பியது..
குந்தவையை பற்றிய யோசனையுடனே வட்டிற்கு
ீ கிளம்பினார்.. தம்பியை
குந்தவைக்கு கல்யாணம் செய்துவைத்தாள் அவளுக்கும் பாதுகாப்பு… தானும்
அடிக்கடி அங்கு சென்று அவளை பாத்துக்கொள்ளலாம் என அவள் மனம்
கணக்கு போட்டது.. இவ்வாறான யோசனைகளுடன் வட்டிற்குள்
ீ நுழைந்தவள்..
அங்கு சோகச்சித்திரமாக வடுகம்மாளின் மடியில் சுருண்டிருந்த குந்தவையை
கண்டதும் அவர் முடிவு மேலும் வலுப்பெற்றது.. எப்பாடு பட்டாவது
இத்திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்..
ஆனால் திருமண பேச்சை எடுத்தவுடன் குந்தவை மறுத்ததில் அவருக்கு
கோபமும் இயலாமையுமாய் இருக்க.. மனதை கல்லாக்கிக் கொண்டு.. தன்
மகளின் மனம் நோக பேசினார்.. அப்பொழுது தன்னைக் கண்ட குந்தவையின்
உயிப்பற்ற பார்வையில்.. உள்ளுக்குள் தன்னை இவ்வாறு பேசவைத்த
இறைவனை நிந்தித்துக் கொண்டார்..
மறுநாள் தன் தாய் தந்தையை வரவைத்து.. திருமணத்தை பேசி
முடித்தவுடன் தான் அவருக்கு மனம் சற்று அமைதியானது.. ஆனால் அந்த
அமைதி நிரந்தரமற்றது என்றும் இனி தன் வாழ்வில் நிம்மதியும் அமைதியும்
இருக்க போவதில்லை என்று பாவம் அப்பாவி வள்ளியம்மைக்கு
தெரியவில்லை…
குந்தவை காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் அவளுக்கு சிற்றுண்டி
கொண்டு வந்தவருக்கு.. தன் தாயின் பேச்சை கேட்டு தலையில் இடி விழுந்த
உணர்வு.. தன்னிடம் இனிக்க இனிக்க பேசியவர் இப்பொழுது
குந்தவையிடத்தில் அரக்கி போல் பேசுவதைக் கேட்டு அவர் உள்ளம்
கொதித்துக் கொண்டிருந்தது…
பேச்சி வெளியே வரும் அரவம் உணர்ந்து சத்தமில்லாது அங்கிருந்து
நகர்ந்தார்.. மனமோ குந்தவையின் வாழ்வை எண்ணி துடித்துக்
கொண்டிருந்தது.. அய்யோ கடவுளே நானே என் மகள பாழுங்கிணத்துல
புடிச்சு தள்ள பார்த்திருக்கிறேனே என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தவர்
வேலுநாச்சியாரின் நிழற்படம் முன் நின்று கண்ண ீர் வடித்தார்..
அக்கா நானே நம்ம மவ வாழ்க்கையை நாசம்பண்ண பார்த்தேன்..என்னைய
மன்னிச்சுடுங்க அக்கா.. நான் குந்தவைக்கு நல்ல அம்மாவா நடந்துக்கல என
குமுறிக்கொண்டிருந்தவரின் செவியில்.. கூடத்தில் நடைபெறும் திருமண
பேச்சு விழ.. முகத்தை துடைத்துக் கொண்டவர்.. திருமண ஏற்பாட்டை
நிறுத்தும் நோக்கத்தோடு வெளியே வந்தார்..
அப்பொழுது தான் வேலுநாச்சியாரின் தந்தை வந்தார்.. அவரைக் கண்டதும்
வள்ளியம்மைக்குள் ஓர் யோசனை தோன்றியது… குந்தவை இக்கிராமத்திலே
இருந்தால் சுற்றியுள்ளோர் அவளை பேசி பேசியே மனதால்
கொன்றுவிடுவார்கள்.. வெளியே சென்றாலும் அனைவரின் பார்வையும்
ஒன்றுபோல் இருக்காது என அனைத்தையும் யோசித்தவர் குந்தவையை
அவருடன் அனுப்பிவைக்க தீர்மானித்தார்.. ஆனால் அதற்க்கு கணவரும்
மற்றவர்களும் சம்மதிக்க மாட்டார்களென அறிந்தவள் வார்த்தைகளை
விட்டாள்.. அதன் விளைவு குந்தவை சென்னை சென்றது..
போகும் போது கடைசியாய் குந்தவை பேசிச்சென்ற வார்த்தைகள் அவரை
உயிருடன் கொன்றாலும்.. அமைதியாக இருந்தார்… என்றாவது ஒருநாள் தன்
மகள் தன்னை புரிந்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில்.. காத்திருந்தார்..
இன்றும் காத்திருக்கிறார்.. கணவனின் சுடுசொற்கள்… மகனின் பாராமுகம்..
மாமியாரின் கண்டனம் என அனைத்தையும் தன் பெறாத மக்களிற்காக
தாங்கிக் கொண்டிருக்கிறார்..
வள்ளியம்மை அனைத்தையும் முகத்தை மூடி அழுதவாறு கூற.. வானதி
அவரை அனைத்துக் கொண்டாள்…
அழகுவோ குந்தவையின் நலனுக்காய் செய்ததை புரிந்துக்கொள்ளாமல்..
இத்தனை வருடம் அவளை வார்த்தையால் குத்தி கிழித்ததை நினைத்து
குற்ற உணர்ச்சியில் தவித்தவர்.. அவர் பக்கத்தில் அமர்ந்து.. ஏன் வள்ளி இத
என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. ஏன் என்கிட்ட மறைச்ச..
ரொம்ப வருடத்திற்கு பிறகு அழகுவிடத்திலிருந்து வரும் ஆறுதலான
பேச்சைக் கண்டு வள்ளியிடத்தில் கசந்த புன்னகை தோன்றியது.. என்ன
பண்ண சொல்றிங்க மாமா… நான் எல்லா விஷயத்தையும் சொல்லனும்னா..
எங்கம்மா பேசுனதையும் சொல்லனும்ல.. நான் கல்யாணம் பண்ணாம இருந்த
ஆறு வருஷத்துல.. ஊர் சனங்க நக்கலையும் எகத்தாளத்தையும் எல்லாம்
எனக்காக பொறுத்துக்கிட்டு ஒரு வார்த்தை கூட என்னைக் கேட்காம
இருந்தாங்க..
அதுனால மத்தவங்க முன்னாடி அவங்கள காட்டிக் கொடுக்க எனக்கு மனசு
வரல.. அதேநேரம் என் மவளையும் அவங்க வட்டுக்கு
ீ அனுப்ப
விருப்பமில்லை.. அதான் பேசக்கூடாததெல்லாம் பேசி என் மகள நோகடிச்சு
அனுப்புனேன்.. இங்க இருந்தா அவளுக்கு எதுவும் கிடைக்காது.. அதுவே
பட்டணத்துக்கு போனா அவளுக்கு படிப்பு நல்ல வாழ்க்கைன்னு ராணி மாதிரி
இருப்பான்னு நினைச்சேன்.. அதேமாதிரி இப்போ என் மவ மஹாராணி
கணக்கா பெரிய மாளிகைல இருக்கா.. எனக்கு அது போதும் என்றவரின்
விழிகள் கண்ண ீரில் நிறைந்திருந்தாலும் முகமோ பூரிப்புடன் இருந்தது..
அப்பொழுது யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ‘’ வள்ளிம்மா ‘’ என்ற குரலோடு
குந்தவை வட்டினுள்
ீ ஓடி வர.. அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்..
வள்ளியம்மையோ அவளின் வள்ளிம்மா என்ற விளிப்பிலியே உலகம்
மறந்தார்.. குந்தவையோ யாரையும் கவனியாது வள்ளியம்மையின் மடியில்
சரணடைய.. அதில் தெளிந்தவர்.. அம்மாடி குந்தவை இந்த அம்மாவ
மன்னிச்சுட்டியாமா.. என்கிட்ட திரும்ப வந்துட்டியா இந்த வள்ளிம்மாக்கிட்ட
வந்துட்டியா என்றவாறு நடுங்கும் குரலில் அவள் முதுகை தடவியவாறு
கேட்டார்..
இல்லைம்மா.. நீங்க தான் என்னை மன்னிக்கணும்.. நான் உங்கள
புரிஞ்சுக்கலம்மா நீங்க என்ன செஞ்சாலும் என் நல்லதுக்குதான்னு நான் ஏன்
நம்பல.. தப்பு என் பேருலதான்.. இத்தனை வருஷமா என்னோட தப்பான
புரிதல்னால உங்க எல்லாரையும் தள்ளி நிறுத்தி கஷ்டப்பட வைச்சதுக்கு
நீங்கதான்ம்மா என்னை மன்னிக்கணும் என அவரின் கழுத்தைக் கட்டிக்
கொண்டு அழுதாள்..
அருளும் மற்றவர்களும் நம்பமுடியா திகைப்புடன் நின்றிருந்தனர்.. சந்திரன்
அவர்களின் நிலை புரிந்து.. என்ன எல்லாரும் உங்க பொண்ணையே
பார்த்துக்கிட்டு இருக்கீ ங்க.. கொஞ்சம் இந்த மாப்பிளையையும் கவனிக்கலாம்
என அவர் கூறியவுடன் தான் திகைப்பிலிருந்து வெளிவந்தனர்…
செங்குட்டுவன்.. மனிச்சுக்குங்க மாப்பிளை திடிர்னு குந்தவை வந்து நின்னதும்
எங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல.. என தழுதழுத்த குரலில்
கூறினார்..
ஐயோ.. என்ன தாத்தா இது நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன்.. நீங்க
சங்கடப்படாதிங்க எனறவன் அருளின் அருகே சென்றான்..
எப்புடி மாமா.. என அருள் குந்தவையை பார்த்தவாறு கேட்டான்..
பிஸ்னஸ் விஷயமாக அமெரிக்கா சென்ற குந்தவையின் வேலை சீக்கிரம்
முடிந்துவிட்டதால்.. தன் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் பொருட்டு..
சந்திரனிடம் சொல்லாமலே சென்னைக்கு வந்துவிட்டார்… மாலை வட்டிற்கு

வந்த சந்திரன் அங்கு நின்ற குந்தவையைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவர்..
அவளிடம்.. நீ எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துட்ட.. அதேமாதிரி நானும்
உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல போறேன் என்றவர்..
மனைவியின் முகத்தில் இருந்த ஆர்வத்தை பார்த்து.. ஹ்ம்ம்ம் நீ அத்தையாக
போற அட் த சேம் டைம் பாட்டியாவும் ப்ரொமோட் கிடைச்சிருக்கு என
சிரிப்புடன் சொல்லவும்.. முதலில் புரியாமல் விழித்தவள்.. புரிந்தவுடனும்
சந்தோஷத்தில் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தாள்..
‘’ எப்போ சொன்னாங்க.. ‘’
‘’ இன்னைக்கு காலைல தான் மாப்பிளை போன் பண்ணி சொன்னாரு.. பேபி
உன்ன ரொம்ப மிஸ் பண்றா.. உன் கூட இருக்கனும் போலயிருக்காம்.. ‘’
‘’ எனக்கும் வானுவ பார்க்கனும்ன்னு தோனுது.. கொஞ்ச நாள் அவளை இங்க
வச்சு பார்த்துக்குவோம்.. போங்க நீங்களும் அத்தையும் அவள கூட்டிட்டு
வாங்க.. ‘’ என பேசிக் கொண்டே சென்றவள்..
குந்தவை.. என அழுத்தமாக கேட்ட கணவனின் குரலில் என்ன என்பது போல்
பார்க்க.. பேபி உன்னை பெரிய வட்டுல
ீ வந்து தங்க சொல்லி கேட்ருக்கா
எனவும் இதுவரை இருந்த மகிழ்ச்சி மறைந்து அவளிடத்தில் இறுக்கம்
கொண்டது..
நமக்கு இப்போ நம்ம பொண்ணு மட்டும் தான் முக்கியம்… அவளுக்கு
என்னமோ காம்ப்ளிகேஷன்ஸ் இருக்காம்.. ட்ராவல் பண்ணக்கூடாதாம்.. என
வாயில் வந்ததை அடித்து தள்ளினார்…
இப்பொழுது குந்தவைக்கு தன் மகளை நினைத்து பயம் பிடித்துக் கொண்டது..
அப்போது வேலுநாச்சியின் இறப்பும் நினைவில் வந்து தொலைக்க..
குந்தவையின் வைராக்கியம் அழுத்தம் அனைத்தையும் மகள் பாசம் வென்று
விட.. நாட்டரசன் கோட்டைக்கு செல்ல சம்மதித்தாள்..
ஷ்ரவனிற்கு எக்ஸாம் நடப்பதால் சிவகாமியை இருக்க சொல்லிவிட்டு..
கணவன் மனைவி இருவரும் நாட்டரசன் கோட்டைக்கு பயணமாகினர்..
வடு
ீ வரைக்கும் வந்தாலும்.. குந்தவைக்கு மறுபடியும் அவ்வட்டு
ீ வாசல்
படியை மிதிக்க மனம் வரவில்லை.. ராசியற்றவள் சோரம் போனவள் என்ற
வார்த்தைகள் அனைத்தும் அவள் செவியை சுத்தின.. அதுவும் கடைசியாய்
வள்ளியம்மை கூறிய வார்த்தைகளை அவளாள் இன்றும் ஜீரணிக்க
முடியவில்லை.. குந்தவையின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை
கண்டுகொண்ட சந்திரன்.. இனி யோசித்தால் கதை கந்தலாகிவிடும் என
புரிந்து அவள் கரத்தை இழுத்துக் கொண்டு சென்றான்.. அப்பொழுது தான்
வானதி வள்ளியிடத்தில் கேள்வி எழுப்பியது.. அடுத்து அங்கு நடந்த
அனைத்தையும் கேட்ட குந்தவை மீ ண்டும் தன் வள்ளிம்மாவின் மடியை
சரணடைந்தாள்…
‘’ போங்க போங்க.. இது எங்க ஆச்சிம்மா மடி எனக்கு மட்டுமே சொந்தம்.. ‘’
‘’ ஹேய் போடி எப்போ பார்த்தாலும் என்கிட்டயே போட்டிக்கு வா.. இது என்
வள்ளிம்மா மடி உனக்கு முன்னாடியே எனக்கு சொந்தமானது.. ‘’ என
இருவரும் வள்ளியம்மையின் இருபக்கமும் அமர்ந்து வாயடித்துக்
கொண்டிருந்தனர்… வள்ளியம்மையோ ஆனந்தக் கண்ண ீருடன் இருவரின்
கன்னத்தை வருடிக்கொண்டிருந்தார்..
நடுவில் வள்ளியம்மை அமர்ந்திருக்க அழகு குந்தவை வானதி மூவரும்
அவரை சுற்றி அமர்ந்திருந்தனர்.. அவர்கள் பக்கத்தில் உள்ள தூணில்
வடுகம்மாள் சாய்ந்து அமர்ந்திருக்க.. பக்கத்தில் செங்குட்டுவன் சாய்வு
நாற்காலியில் அமர்ந்திருந்தார்.. நின்றிருந்த அருளும் சந்திரனும்
இக்காட்சியை மகிழ்வுடன் பார்த்திருந்தனர்.. வானதி கணவனை தன் பக்கம்
அமருமாறு இழுத்தாள்.. சந்திரன் அழகுவிடமும் அருள் வானதியிடமும்
அமர்ந்தனர்..
செங்குட்டுவனிற்கும் வடுகம்மாளிற்கும் இப்பொழுது தான் குடும்பம்
நிறைவடைந்தது போல் தோன்றியது.. இத்தனை வருடங்களாக பேசாத
அனைத்தையும் குந்தவை பேச.. சந்திரன் மென்னகையுடன் தன் மனைவியை
பார்த்துக் கொண்டிருந்தார்..
குந்தவையின் பார்வை அடிக்கடி அருளைத் தொட்டு மீ ண்டது.. அருளும்
பார்த்தானே தவிர பேச முயற்சி செய்யவில்லை… ஒரு கட்டத்திற்கு மேல்
பொறுமையிழந்த குந்தவை ‘’ டேய் என்னடா ரொம்ப பண்ற.. என்கிட்ட
பேசமாட்டியா.. ‘’
அருள் அப்போதும் அமைதியாக இருந்தான்.. ‘’ இப்போ நீ என்கிட்ட பேச
போறியா இல்லை நான் திரும்ப சென்னைக்கு போகட்டா.. ‘’
எங்க வட்டு
ீ வாசல தாண்டு காலை உடைக்கிறேன்.. உனக்கு எப்பவும்
உன்னோட வைராக்கியம் தான் முக்கியம்… என்னை பத்தி நினைச்சு
பார்த்தியா நீ.. நீதானே எனக்கு எல்லாமுமா இருந்த.. காலையில உன்னை
பார்த்த பிறகுதான் எழுந்திருப்பேன் நைட்டு நீ கதை சொன்னாதான
தூங்குவேன்.. என்னோட ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும்
நீயாதானக்கா இருந்த.. அப்போ எப்படி திடிர்னு ஒருநாள் என்னைய விட்டுப்
போக உனக்கு மனசு வந்துச்சு.. என்னையும் உன்னோட கூட்டி
போயிருக்கலாம்ல.. ஒருநாளாவது என்கிட்ட பேச முயற்சி செஞ்சுருக்கியா..
நான்தான் ரோசங்கெட்டு போயி உன்னையே சுத்தி வந்தேன்.. என தன்
உள்ளக்குமுறல்களை கூறியவன்.. இப்போ நீ வந்து பேசுனதும் நான் உடனே
பேசிடனுமா எனக்கு எப்போ தோனுதோ அப்போதான் பேசுவேன் என
முறுக்கிக் கொண்டான்..
விழிகள் கண்ண ீரில் பளபளக்க அருளையே பார்த்த குந்தவை.. டேய் கருவா
என்ன ரொம்ப பேசுற.. அதான் மாமனும் மச்சானும் கூட்டு சேர்ந்துக்கிட்டு
இருக்கீ ங்களே.. மாசம் மாசம் சென்னைக்கு வந்து எங்க எல்லாரையும்
பார்க்குரில்ல.. அப்போ நானும்தான் உன்னை பார்ப்பேன்.. ஏன் நீ இங்க என்ன
பண்ற ஏது பண்றன்னு கூட எனக்கு தெரியும்.. என குந்தவை கூறியதும்..
மாமனும் மாப்பிள்ளையும் பிடிப்பட்ட உணர்வில் விழித்தனர்..
என்ன முழிக்குறிங்க.. என இருவரையும் அதட்ட.. சந்திரன்.. உனக்கு
தெரியுமா குந்தவை என அசடுவழிய கேட்டார்..
ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம் எல்லாம் தெரியும்.. நம்ம கல்யாணத்துல கூட்டத்தோடு
கூட்டமா வந்து கலந்துக்கிட்டது.. வானு பிறந்தப்ப முதல் முதல்ல அவன்
வாங்கினது அப்புறம் வாரம் வாரம் பார்க்ல வானதிய கூட்டி போயி
காமிச்சது... மீ சை முளைச்சதுக்கு அப்புறம் என் பொண்ணு படிக்கிற ஸ்கூலு
காலேஜ்ன்னு போயி சைட் அடிச்சது.. வானதியக் கடத்த ஹெல்ப்
பண்ணதுன்னு எல்லாம் தெரியும் என சந்திரனையும் அருளையும்
முறைத்தவாறு கூற.. இருவரும் வாயடைத்து போயினர்.. வானுவோ அருளை
அதிர்ச்சியும் முறைப்புமாய் பார்க்க.. அவனோ பேய் முழி முழித்தான்…
என்ன இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்னு முழிக்குறிங்களா.. என்றதும்
இருவரும் ஒன்று போல் தலையசைத்தனர்…
ம்ம்ம்ம் இந்த குந்தவை நாச்சியார் கண்ணுல இருந்து எதுவும் தப்பாது…
உனக்கு மட்டும்தான் ஸ்பை வைக்க தெரியுமா என சந்திரனை ஜாடையாக
காண்பித்தவள்.. எனக்கும் இங்க நடக்கிறத போன் பண்ணி சொல்றதுக்கு
ஸ்பை இருக்காங்க என்றவள் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் தூணில்
சாய்ந்திருந்த வடுகம்மாளின் தோளணைக்க.. குடும்பத்தார்க்கு மற்றொரு
அதிர்ச்சி.. செங்குட்டுவன் தான் இதில் அதிகம் அதிர்ச்சியடைந்தவர்..
என்னோட செல்ல அப்பத்தாதான் என்னோட ஸ்பை.. என்ன அப்பத்தா.. என
அவர் தாடை பிடித்து கொஞ்சினாள்..
அழகு ‘’ ஆத்தா குந்தவை கூட பேசுறத ஏன் எங்ககிட்டயிருந்து மறைச்சிங்க..
நாங்க என்ன உங்கள பேசக்கூடாதுன்னு தடுக்கவா போறோம்.. ‘’ என
ஆதங்கத்துடன் கேட்டார்..
‘’ டேய் நான் உங்கப்பாரு கிட்டயே சொல்லல.. நீ என்னடா பிசுக்கோத்து.. ‘’
என்றவர்.. செங்குட்டுவனிடம் இப்போ என்ன நடந்துச்சுன்னு ஆளாளுக்கு
என்ன இப்படி பார்க்குறீங்க.. குந்தவை தான் யார்க்கிட்டயும்
சொல்லக்கூடாதுன்னு வாக்கு வாங்கிக்கிட்டா.. அதான் இப்போ எல்லாம்
சரியாயிடுச்சுல்ல.. என்க..
‘’ அப்புறம் ஏன் அப்பத்தா அக்காவ மத்தவங்க முன்னாடி திட்டிக்கிட்டே
இருந்த.. ‘’
‘’ ஹ்ம்ம்ம் சந்தேகம் வரக்கூடாதுல அதுக்குத்தேன்.. ‘’
அப்பத்தா வாரம் ஒருமுறை போன் பண்ணி இங்க நடக்குற எல்லாத்தையும்
சொல்லுவாங்க.. அவங்க தான் நீ அடிக்கடி வெளியூர் போயிட்டு வரதா
சொன்னாங்க இவன் எங்கடா போறான்னு உன்னை கவனிச்சப்பத்தான் மாமன்
மச்சான் களவானித்தனம் தெரிஞ்சது..
உன்னை அம்மா மாதிரி பார்த்துக்கிட்டவடா நானு.. என்னதான் கோபம்
இருந்தாலும் உன்னை அம்போன்னு விட்ருவேன்னா.. என பாசத்துடன்
தம்பியின் சிகையை கோதியவாறு கூறினாள்..
அருள் உணர்ச்சி மிகுதியில் குந்தவையின் கழுத்தைக் கட்டிக்கொள்ள.. அவள்
அவன் முதுகை தடவி ஆறுதல் படுத்தினாள்..

குந்தவை நாட்டரசன் கோட்டைக்கு வந்து ஒருவாரம் ஓடி விட்டது.. வட்டினர்



அனைவரும் விழுந்து விழுந்து கவனித்தனர்.. ஊர்சனங்களும் அவளிடம்
நலம் விசாரித்து சென்றனர்..
உங்க அக்கா வந்ததுல இருந்து என்னை கவனிக்கவே மாட்டேங்குறீங்க என
வானதி சண்டை போடுமளவிற்கு இருந்தது அவர்களின் பாசப்பொழிவுகள்…
குலதெய்வம் கோவிலுக்கு செல்வதைப் பற்றி அனைவரும்
பேசிக்கொண்டிருக்கும் வேளை.. அய்யா எங்கள காப்பாத்துங்கய்யா என்ற
அலறலோடு ஒரு வயதானப் பெண்மணி அருளின் காலில் விழ அருள்
அதிர்ச்சியாக அவரைப் பார்த்தான்..
அத்தியாயம் 23

அப்புச்சி.. அந்த குந்தவை வந்துட்டாளாம்.. என வாயில் மதுவை சரித்துக்


கொண்டவாறு கூறினார் செல்வம்..
‘’ ம்ம்ம்ம் ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க.. நீ மட்டும் அவள சீரழிச்சுருந்தா
இன்னைக்கு எத்தனை சொத்து நம்ம கைக்கு வந்துருக்கும்.. அதோட அந்த
குந்தவையும் நாய் மாதிரி நம்ம வட்டுல
ீ கிடந்துருப்பா.. ‘’ என்ற கணபதியின்
கரத்திலும் மதுக்கோப்பைகள்..
ஏற்கனவே மதுபானத்தால் சிவப்பேறியிருந்த செல்வத்தின் கண்கள் மேலும்
சிவந்தது.. ‘’ ம்ம்ம்ம் எல்லாம் உங்களாலதான்.. யாரையும் வட்டுக்கு

விடாதீங்க.. நான் வேலைய முடிச்சுட்டு சொல்றேன்னு சொல்லி தானே
கிளம்புனேன்.. பின்னே ஏன் அந்த கிழவனையும் கிழவியையும் அனுப்புன ீங்க..
அதுக வந்துதான் காரியத்தை கெடுத்துடுச்சு.. ‘’
‘’ அடத்தூஊஊஊ.. ஒரு பொட்டச்சி காலம் முழுக்க மறையாத மாதிரி கீ றி
விட்ருக்கா.. அவள அடக்கி உனக்கு கீ ழ கொண்டு வர தெரில… நீ எங்கள
சொல்றியா.. உனக்கெதுக்குடா வேட்டி சட்டை.. போயி உன் பொண்டாட்டி
புடவைய கட்டிக்க என காரி உமிழ்ந்தார்..
இன்னும் அந்த வட்டுல
ீ இருந்து உன்னைய தேடிக்கிட்டு தான் இருக்காங்க..
செங்குட்டுவனும் மாப்பிளையும் மறந்தாலும் கூட உன் மருமவன்
மறக்கமாட்டான் போல.. அருளு தலையெடுக்க ஆரம்பிச்சதும் சின்ன
விஷயமாவது கிடைக்காதான்னு இன்னும் தேடிக்கிட்டு இருக்கான்…
அவனுக்கு உன்மேல சந்தேகமும் இருக்கு.. நான்தான் அத இத சொல்லி
சமாளிச்சேன்..
எவ்வளவு சொத்து அத்தனையும் உன்னால போச்சு என பொருமிக்
கொண்டிருந்தார்.. குந்தவை ப்ளஸ்டூவில் அதிக மதிப்பெண் பெற்று
தேர்ச்சியடைந்திருந்தாள்.. அப்பொழுது அவர்கள் நிலத்திற்கு பக்கத்தில் உள்ள
சில நிலங்கள் விற்பனைக்கு வந்தது.. அதோடு அப்பக்கம் உள்ள எல்லா
இடத்தையும் குந்தவையின் பேரில்.. அழகு எழுத விரும்பினார்.. தன்
குடும்பத்தாரிடமும் அதை கூற.. அனைவரும் இதற்கு சம்மதித்தனர்..
ஆனால் கணபதி செட்டியாரின் குடும்பம் இதனை அறிந்து வயிறெரிந்தார்கள்..
‘’ என்ன மாப்பிளை நாளைக்கு வேற வட்டுக்கு
ீ போற புள்ள மேல சொத்தை
எழுதி வச்சிருக்கீ ங்க.. அதுக்கு என் மவ பேருல எழுதலாம்ல.. ‘’
‘’ என்ன மாமா.. இதெல்லாம் ஒரு பேச்சா.. குந்தவை இந்த வட்டு
ீ இளவரசி..
அவளுக்கு நான் என் சொத்து முழுசும் கூட குடுப்பேன்.. ‘’ என அழகு
கூறியதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
அப்பொழுது தான் கணபதிக்கு குந்தவையை தங்கள் வட்டு
ீ மருமகளாக்கும்
எண்ணம் தோன்றியது.. ‘’ அவள மட்டும் நம்ம செல்வத்துக்கு கல்யாணம்
பண்ணி வச்சோம்னா எக்கச்சக்க பணம் நகை நூறு ஏக்கரா நிலம் தோட்டம்
துறவுனு நிறைய கிடைக்கும்.. அதோட அவ அம்மா வழி சொத்தும்
கிடைக்கும்.. ‘’ என கண்களில் ஆசை மின்ன சொல்ல.. பேச்சிக்கும் அந்த
யோசனை சரியெனப்பட்டது..
அவருக்கு எப்பொழுதும் வேலுநாச்சியாரின் வைரநகைகளில் ஒரு கண்..
வள்ளியம்மைக்கு கல்யாணமான புதுதில் அவள் மூலமாக கொஞ்சமாவது
ஆட்டைய போட நினைக்க வடுகம்மாளும் வள்ளியம்மையும் விடவில்லை..
அவையனைத்தும் குந்தவைக்குத் தான் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்..
இப்பொழுது இத்திருமணத்தின் மூலம் நகைகள் அவர் கைக்கு
வரவிருப்பதில்.. வாயெல்லாம் பல்லாக சம்மதித்தார்.. ஆனால் செல்வம்
முகமோ யோசனையில் சுருங்கியிருந்தது..
‘’ என்னடா உனக்கு விருப்பம் இல்லையா.. ‘’
‘’ அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஆனா நீங்க பொண்ணு கேட்டா முதல்ல
கொடுப்பாங்களான்னு யோசிக்கிறேன்…. ‘’
‘’ என்னடா இப்படி சொல்ற.. ராசாவாட்டம் இருக்கிற உனக்கு பொண்ணு
கொடுக்க அவங்களுக்கு கசக்குதா என்ன..? ‘’ என முகவாயில் இடித்தார்..
‘’ அவங்க ஒத்துக்கிட்டாலும் நீங்க பேசுன பேச்சுக்கு அந்த குந்தவை ஒத்துக்க
மாட்டா.. நீங்க பேசுறப்பெல்லாம் அவ அமைதியா இருக்கிறதால பயந்தவனு
நினைக்காதீங்க.. அக்காக்காக உங்கள பொறுத்துக்கிட்டா அவ்வளவு தான்..
நீங்க பொண்ணு கேட்டாலும் எல்லாரும் அவ விருப்பத்தை தான் முதல்ல
கேட்பாங்க.. கண்டிப்பா அவ மாட்டேன்னு தான் சொல்லுவா.. ‘’
‘’ ஓஹ்.. இப்போ என்னடா பண்றது.. ‘’
‘’ நான் ஒரு யோசனை சொல்றேன்.. நீங்களும் அதுக்கு ஒத்துழைச்சா.. இந்த
கல்யாணம் நடக்கும்… ‘’
‘’ ம்ம்ம்ம் உன் யோசனைய சொல்லு.''
‘’ அவள நான் கெடுத்துடுறேன்.. அப்புறம் என்னைய விட்டா அவள வேற
யாரு கல்யாணம் பண்ணிப்பா.. அப்புறம் நாம என்ன பொண்ணு
கேட்டுப்போறது அவங்களே கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்பாங்க..
ஆனா இதுல முக்கியமான விஷயம்.. தன்னை கெடுத்தவன் யாருன்னு
அவளுக்கே தெரியக்கூடாது.. ஊரையும் மத்தவங்களை பொறுத்தவரை
குந்தவை கெட்டுப்போனவ.. நான் அவளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கேன்னு
நினைப்பாங்க.. நாமளும் கடைசி வரைக்கும் அத சொல்லியே அவள நம்ம
காலுக்கு கீ ழ வச்சுக்கலாம்.. ‘’
இருவருக்கும் செல்வத்தின் யோசனை பிடித்தது.. அதுவும் பேச்சிக்கு தான்
அதிக பிடித்தம்.. ஹ்ம்ம்ம் ஆமாடா நீ சொல்றது சரிதான்.. இத சொல்லியே
அந்த சிறுக்கி கொண்டைய ஆட்டுறேன் என குரோதம் கொப்பளிக்கும்
விழிகளுடன் கூறினார்..
இவர்கள் நினைத்தது போல்.. குந்தவையின் தனிமையினான நிகழ்வு
அவ்வளவு எளிதில் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. வட்டில்
ீ எப்பொழுதும்
இருக்கும் வேலையாட்கள் அவளுடனே சுத்தும் அருள்.. என குந்தவையை
தனிமையில் பிடிக்கவே முடியவில்லை..
ஆனால் அவர்களுக்கு கூடிய விரைவில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அருளை
பாம்பு கடிக்க பார்த்த அன்று இரவு அவனுக்கு உடம்பு வெட்டி இழுத்ததால்
அனைவரும் குந்தவையை மறந்து.. அவனை கூட்டிக்கொண்டு
மருத்துவமனை சென்றுவிட்டனர்.. அந்நேரத்தை தனக்கு சாதகமாக
பயன்படுத்திய செல்வம் வட்டினுள்
ீ நுழைந்து தன் கைவரிசையை காண்பிக்க
ஆரம்பித்தான்..
மருத்துவமனையிலோ அந்நிலையிலும் செங்குட்டுவனையும்
வடுகம்மாளையும் குந்தவைக்கு துணைக்கு இருக்க சொல்லி வள்ளியம்மை
அனுப்பிவைத்தாள்.. வேலையாட்கள் இருப்பார்கள் என என்னென்னவோ கூறி
தடுக்க பார்த்த பேச்சியை சட்டை செய்யாது அவர்களை அனுப்பி வைத்தாள்..
அவர்கள் வரும் நேரம் சரியாய் குந்தவையும் செல்வத்தை குத்தி விட்டு தப்பி
வந்தாள்.. செல்வம் வட்டின்
ீ பின்வாசல் வழியால் தப்பிக்க வர அந்நேரம்
கணபதியும் அவனுக்காய் காத்திருந்தார்.. முதலில் ரத்த கரையுடன் வந்த
செல்வதை பார்த்து அதிர்ந்தவர்.. வேற ஊருக்கு காரை விட்டார்.. காயம்
ஆறியவுடன் தான் அவன் ஊருக்கு வந்ததே.. அதுவரை கேட்டவர்களுக்கு
ஏதோ சொல்லி சமாளித்தார்..
அவர்கள் திட்டம் முழுவதும் நடக்கவில்லை என்றாலும் பாதியாவது
நடந்தது.. வள்ளியம்மையும் குந்தவைக்கு செல்வத்தை கேட்க.. அவர்களும்
சம்மதித்தனர்.. ஆனால் அவர்களே எதிர்பாரா ஒன்றுதான் சுந்தரத்தின்
வருகையும் வள்ளியம்மையின் செய்கையும்..
இன்று வரை செல்வத்திற்கு குந்தவையை அடையமுடியாத கோபமும்..
அவளிடம் தோற்றுவிட்ட அவமானமும் நெஞ்சில் புதைந்திருக்க.. கணபதியின்
சொல்லால் அவை மேலும் கூடி.. குந்தவையை அழிக்க வெறியேற்றியது ..
என்ன ரொம்ப பேசுறீங்க.. இன்னைக்கு உங்க மக அந்த பெரிய வட்டு

மருமகளாக நான்தானே காரணம்.. ஆறுவருஷம் ஒன்னும் செய்யாமதானே
இருந்திங்க.. ஆனா நான் பதினேழு வயசுலயே பாம்ப ஏவி அந்த
வேலுநாச்சியாரை சத்தமே இல்லாம கொன்னு.. உங்க மவள அவ இடத்துல
வாழ வச்சுருக்கேன்.. அப்படிப்பார்த்த எனக்கு முன்னாடி.. நீதான் புடவைய
கட்டிக்கிட்டு நிக்கனும் என கத்தினான்..
ஆம் வேலுநாச்சியாரை பாம்பு கடித்தது தற்செயல் அல்ல.. செல்வத்தின்
திட்டம் தான்.. கோவில் பூஜை என்று அவர்களை அழைத்து வள்ளியம்மை
நாச்சியாரை மட்டும் யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு தனிமையாக
அனுப்பி.. கடைசி குடம் எடுக்க சென்ற வள்ளியம்மையிடம் பேச்சி ஏதோ
வேலை கொடுத்து தாமதப்படுத்த கருவக்காட்டின் மத்தியில் முகத்தை
மூடிக்கொண்டு நின்றிருந்த செல்வம் பாம்பாட்டியிடம் பாம்பை எடுத்து விட
சொல்ல.. அவனும் தன் பெட்டியில் இருந்த கருநாகத்தை விட.. அது நேராக
சென்று நாச்சியாரின் பாதத்தை தீண்டியது.. மறுநொடி மறைந்திருந்த
இருவரும் வெளியே வந்தனர்.. கோவிலிலோ கணபதி உறுமியை வேகமாக
அடிக்க சொல்லி நாச்சியாரின் சத்தம் கேட்காதவாறு பார்த்துக் கொண்டார்..
ரத்த வெள்ளத்தில் மிதந்த நாச்சியார் செல்வதை நோக்கி கரம் நீட்டி.. காப்ப..
பாத்துங்க என திக்கி திணறி கேட்க.. செல்வமோ பாரவாயில்ல தலையில
வயித்துல கூட அடிப்பற்றுச்சா.. அப்போ சீக்கிரம் போயிடுவ என சிரிப்புடன்
கூற..
நாச்சியார் அவனை பயமும் அதிர்ச்சியுமாய் பார்க்க.. அவனோ மேலும்
அவளிடம் குனிந்து.. உனக்கு துணையா உன் பொண்ணையும் அனுப்பிவைக்க
முயற்சி பண்றேன்.. என கேலி சிரிப்புடன் கூற.. நாச்சியாரின் விழிகள்
சொருகியது.. அப்பொழுது வள்ளியம்மை வரும் சத்தம் கேட்டு இவ்விருவரும்
அங்கிருந்து நகர்ந்து கருவக்காட்டில் மறைந்தனர்..
மருத்துவமணையில் நாச்சியார் பேச தொடங்கியதும்.. செல்வத்திற்கு பயம்
பிடித்துக் கொண்டது.. அவன் முகம் காட்டவில்லைதான்.. இருந்தும் கொலை
என்று தெரிந்தால் கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதால் பயந்து முகம் வெளிறி
நின்றான்.. ஆனால் அவனின் நல்லநேரம் அவனை பற்றிக்கூற வரும்போது..
நாச்சியாரின் உயிர் போனது.. அதையெல்லாம் நினைத்துப்பார்த்த செல்வம் ‘’
யோவ் நல்லா கேட்டுக்க இன்னும் மூனு நாளுல அந்த வட்ல
ீ இழவு விழல…
நான் செல்வம் செட்டியார் இல்லை.. ‘’ என போதை தலைக்கேறி
வெறிக்கொண்டு கத்தியவர்.. தள்ளாடலுடன் அங்கிருந்து சென்றார்..
அம்மா.. விடுங்கம்மா… அம்மா.. என கதறியவாறு தில்லையம்மையின் காலில்
விழுந்தாள்.. ராமாயி. அவள் கன்னம் கையெல்லாம் தடித்திருந்தது..
ஒருவாரம் ஆச்சு. ஆனா நீ இன்னும் அந்த மருந்த அவளுக்கு கலந்துக்
கொடுக்கலை.. என்ன என்னை ஏமாத்தப்பார்க்கிறியா.. சொல்லுடி இந்த
தில்லையம்மையையே ஏமாத்தப்பார்க்கிறியா.. பதில் சொல்லுடி என மீ ண்டும்
அவளை அறைந்தாள்..
இல்லைம்மா நானும் முயற்சிப் பண்ணித்தான் பார்க்கிறேன்.. ஆனா யாராவது
தடங்கல் பண்ணிக்கிட்டே இருக்காங்க.. குந்தவையம்மா வந்திருகிறதால
வள்ளியம்மா யாரையும் சமையல் பண்ண விடல.. வெளிவேலைய மட்டும்
பார்த்துக்கிட்டா போதும்னு சொல்லிட்டாங்கம்மா.. எனக்கு இன்னும் ஒரு
வாய்ப்பு கொடுங்கம்மா என்றாள் அழுகையுடன்..
சரி நாளைக்கு அவ செத்துட்டாங்குற செய்தி மட்டும் என் காதுக்கு வரல..
உன் குடும்பத்தையே எரிச்சு சாம்பலாக்கிருவேன்.. என அவள் கழுத்தை
நெறித்தவாறு கூற.. ராமாயி பயத்துடன் தலையாட்டிவாறு சென்றாள்..
தில்லையின் மனதினுள் அருள் தனக்கு கிடைக்க மாட்டானோ என்று பயம்
வர ஆரம்பித்தது.. அவள் மீ ண்டும் தன்நிலை மறந்து.. எப்பொழுதும்
வானதியை பற்றியும் அருளைப் பற்றியுமே யோசித்துக் கொண்டிருந்தாள்..
இப்பொழுது அவர்கள் கொடுத்திருக்கும் நாட்டு மருந்து ஆளை கொள்ளும்
விஷம் வாய்ந்தது.. அதனை ராமாயி மூலம் வானதிக்கு கொடுத்தவுடன்
ராமாயியையும் கொள்வது தான் அவர்களின் இப்போதைய திட்டம்..
ஆனால் இப்பொழுதோ தில்லையின் மண்டைக்குள் பல குடைச்சல்கள்.. என்
மாமா எனக்கு மட்டும் தான்.. இங்க சேரமுடியலைன்னா.. மேல போயி
சேர்ந்துக்கிறோம் என மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டாள்…
யோவ் கருவாயா என்ன உன்கொக்கா வந்ததுலயிருந்து என்னைய
கவனிக்கவே மாட்டேங்குற.. இங்க நான் மசக்கையா இருக்கேனா.. இல்லை
நீயும் உன்கொக்காவும் மசக்கைல இருக்கீ ங்களா.. தம்பி உனக்கு பிடிச்ச
குழிப்பணியாரம் பண்ணிருக்கேன்.. அக்கா நம்ம தோட்டத்து மாங்காய்
கொண்டாந்துருக்கேன் இளநீர் கொண்டாந்துருக்கேன்னு ரெண்டு பேரும்
ஒவரா பாசத்தை பொழியுரிங்க.. என அருளின் சட்டை காலரை பிடித்து
கோபமாக கேட்டாள்..

அடியே.. எங்கக்கா உனக்கு யாரு.. என பொய் கோபத்துடன் கேட்டான்..


ம்ம்ம்ம் ஏன் உங்களுக்கு தெரியாதாக்கும்.. என அவன் முகவாயில்
இடித்தாள்..
அம்மாளு.. காலைல கொஞ்ச நேரம்தான் அக்காக்கூட இருக்கேன்.. அப்புறம்
வயலு மில்லுன்னு போயிடுறேன்.. ராத்திரி நேரம்தான் வரேன்.. அப்போ உன்
கூட தானடி இருக்கேன் என கொஞ்சலுடன் கேட்டான்…
ஹான்… அய்யாறு இப்போ எல்லாம் ராத்திரி என்ன பண்றிங்க.. என் கூட
பேசுறிங்களா.. வந்ததும் என் வயித்துல கைய வச்சுக்கிட்டு உங்க பிள்ளை
கூட தான் பேசுறீங்க.. என முகத்தை திருப்பினாள்..
ஈஈஈ என அசடு வழிந்தவன்.. என் செல்லக்குட்டி தங்கக்கட்டி.. லட்டுக்குட்டி
இப்போ என்ன நான் உன்னை கவனிக்கல அதானே.. விடு இனி வித விதமா
கவனிக்கிறேன் என கண்ணடிக்க..
போயா எனக்கு ஒன்னும் வேணாம்.. நீ உங்கக்காவையும் பிள்ளையையும்
மட்டும் வச்சுக்கோ.. என முறுக்கிக் கொள்ள.. அவளை கொஞ்சி கெஞ்சி சில
பல சேட்டைகளுடன் தன் அம்மாளை சமாதானம் படுத்தினான்…
வடுகம்மாள்… அழகு குலதெய்வ கோயிலுக்கு போயி பொங்க வச்சுட்டு
வந்துடுவோம்யா.. குந்தவை நம்ம வட்டுக்கு
ீ வந்ததும் கிடா வெட்டி பொங்க
வைக்கிறதா வேண்டியிருக்கேன்.. நீ இந்த வாரத்துல நல்ல நாள் இருக்கா
பாரு என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் வேளை.. அய்யா எங்கள
காப்பாத்துங்கய்யா என்ற கூக்குரலோடு அருளின் காலில் விழுந்த வயதான
பெண்மணியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்…
ஏய் உலகம்மா என்னாச்சு.. எதுக்கு என் பேரன் காலுல விழுகுற.. எந்திரி என
வடுகம்மாள் அதட்ட.. அவர் அழுகையுடன் எழுந்தார்..
வானதி அப்பெண்மணியை பார்த்து அதிர்ந்தாள்.. வானதி முதல் முறை
அருளோடு வயலுக்கு சென்றபொழுது.. இவர்தான் அவர்களின்
ஜோடிப்பொருத்தத்தை புகழ்ந்தது..
என்னாச்சு.. ஆச்சி சொல்லுங்க..
எங்கள மன்னிச்சுடு ராசா.. என் மருமவ உண்குலத்தையே நாசமாக்க பார்த்தா
என மீ ண்டும் காலில் விழ போனார்.. அருள் அதனை தடுத்தான்..
வட்டில்
ீ உள்ளவர்களுக்கு தலையும் புரியவில்லை.. வாலும் புரியவில்லை..
உலகம்மா.. அய்யோ நான் அத எப்படி சொல்லுவேன்.. என அழுதவர் ‘’
அம்மா இங்க வட்டு
ீ வேலை செஞ்சாள ராமாயி அவ என் மருமவ.. என்றவர்
வெளிவாசலை பார்த்து.. அடியே நாசமா போனவளே அய்யா காலுல வந்து
விழு எனக்கத்த அவள் வானதியின் காலில் விழுந்தாள்.. உடனே வானதி
பதறி பின்னடைந்து.. அய்யோ என்ன பண்றிங்க எழுந்துரிங்க.. இல்லம்மா
நான் செஞ்ச பாவத்துக்கு எனக்கு இத விட்டா வேற என்ன பண்றதுன்னு
தெரியலைம்மா என்று கதறினாள்… அனைவரும் ரமாயியை புரியாது
பார்த்தனர்.. ஆனால் அருள் குந்தவைக்கு இதில் பெரிய விசயம் இருப்பதாக
தோன்ற.. குந்தவை இருவரையும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள்..
கூடவே ஆண்களும்.. மற்றவர்களை அங்கேயே இருக்குமாறு கூறினாள்..
‘’ இப்போ சொல்லுங்க என்ன விஷயம்.. ‘’
ராமாயி யார் முகத்தையும் பார்க்காது.. தலைகுனிந்தவாறு அனைத்தையும்
கூறினாள்.. செல்வம் இங்கு வேலைக்கு சேரச்சொன்னது.. கர்ப்பப்பை சேதார
மருந்து கொடுத்து கலக்க சொன்னது.. கஷாயத்தில் கலந்தது.. அதையும் மீ றி
வானதி கர்ப்பம் தரித்தது.. தில்லையின் மிரட்டல்.. இப்பொழுது உயிரைக்
கொல்லும் விஷம் தந்து.. வானதிக்கு கொடுக்க சொன்னது..
இல்லையென்றால் குடும்பத்தையே எரித்து விடுவதாக மிரட்டியது என
அனைத்தையும் கூறியவள் முகம் மூடி அழுதாள்..
குந்தவையின் முகத்தில் கோபம் அனலாய் பறந்தது என்றால்.. அருளின்
முகமோ கோபத்தில் இறுகி பார்க்கவே பயங்கரமாய் இருந்தது…
செங்குட்டுவன் அழகுவின் முகத்தில் கூட கோபம் தாண்டவமாடியது..
என்னால சின்னமாக்கு விசம் கொடுக்க முடியல.. அப்படி கொடுக்கலைன்னா
என் குடும்பமே அழிஞ்சுடும்.. அதான் நான் சாகலாம்னு முடிவெடுத்தேன்..
நான் செத்துட்டா இந்த விஷயம் என்னோட முடிஞ்சுடும்.. என் குடும்பத்துக்கு
ஒன்னுமாகாதுல்ல..
நேத்துதான்யா எனக்கு எல்லாம் விசயமும் தெரியும்.. அதான் உங்கள தேடி
ஓடி வந்துட்டேன்.. நீங்க தான்யா எங்க குடும்பத்தை காப்பாத்தனும் என
இருவரும் அழுதார்கள்..
குந்தவையும் அருளும் அவர்கள் முகத்தை கூர்மையாக பார்த்தனர்.. அதில்
பொய்மை துளியும் இல்லை.. பயமும் ஆசுவாசமும் மட்டுமே தெரிய..
குந்தவை ‘’ நீங்க வட்டுக்கு
ீ போங்க உங்களுக்கு ஒன்னுமாகாது… என அவளை
அனுப்பியவள்.. வானதியிடம் வந்தாள்..
‘’ என்னாச்சு மம்மி.. அவங்க என்ன சொன்னாங்க.’’
அருள் ‘’ அதெல்லாம் சொல்றோம்.. ஆத்தா கஷாயம் கொடுத்தாங்கள்ல அத
நீ உண்மையிலேயே குடிச்சியா.. ‘’
‘’ அது.. அது.. ‘’
‘’ சொல்லு வானு.. ‘’
வானதி திருட்டு முழி முழித்து மறுப்பாய் தலையசைத்தாள்.. எனக்கு அதோட
ஸ்மெல் பிடிக்கல..அதுனால நான் அத கீ ழ ஊத்திட்டேன்.. ஒரு தடவை கூட
குடிக்கல என வானதி தலைகுனிந்தவாறு கூறியதும்.. அருள் வானதியை
எலும்பு நொறுங்கும் அளவிற்கு இறுக்கியனைத்தான்… குந்தவைக்கும்
மற்றவர்களுக்கும் அப்பொழுது தான் மனம் சற்று அமைதியானது..
என்னாச்சு அருளு.. அவிங்க என்ன சொன்னாங்க..
குந்தவை.. வானு நீ மேல போயி ரெஸ்ட் எடு.. என்று அவளை வற்புறுத்தி
மேலே அனுப்பியவள்.. அவள் தலைமறைந்ததும் வடுகம்மாளிடமும்
வள்ளியம்மையிடமும் அனைத்தையும் கூறினாள்..
வள்ளியம்மை இடிந்து போய் விட்டார்.. அவரால் தன் பிறந்த வட்டினர்
ீ செய்த
செயலை ஜீரணிக்க முடியவில்லை.. விழிகளில் இருந்து நீர் விழ
தள்ளாடியவரை குந்தவை தாங்கினாள்..
வடுகம்மாள் முகமோ கோபத்தில் கொதித்தது.. அவளுங்க அன்னைக்கு பேசும்
போதே எனக்கு சந்தேகம்.. பேத்திக்கு புள்ள பிறக்காதுங்கிற மாதிரியே
பேசுனாளுங்க.. இவங்கள சும்மா விடக்கூடாது அருளு.. நம்ம வம்சத்தையே
அழிக்க பார்த்திருக்காங்க..
குந்தவை தன் வள்ளிம்மாவின் முகத்தையே பார்த்தாள்.. வள்ளியும் அவள்
பார்வை உணர்ந்து.. என் பேத்திய பட்டமரமாக்க பார்த்தவுங்க.. எனக்கு
தேவையில்லை… இன்னையிலருந்து அவங்க கூட எனக்கு ஓட்டும் இல்லை
உறவும் இல்லை என அவர் தீர்மானமாக கூற.. அருளும் குந்தவையும்
அவர்களை அடித்து நொறுக்கும் வெறியோடு கிளம்பினர்…

அத்தியாயம் 24

கணபதியின் வட்டில்
ீ அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க..
அப்பொழுது புயலென உள்ளே வந்தனர் குந்தவையும் அருளும்..
பேச்சி.. வா.. அருளு என்ன திடுதிப்புன்னு வந்து நிற்கிற.. என அவனை
வரவேற்றவர்.. குந்தவையின் பக்கம் முகம் திருப்பவில்லை.. அவரைத்
தொடர்ந்து அனைவரும் அருளை மட்டுமே வரவேற்றனர்..
ஏற்கனவே கோபத்தில் கொந்தளித்த மனதுடன் வந்திருந்த அருள்.. தன்
அக்காவை அவமானப்படுத்துவது போல் அவர்கள் நடந்துகொள்ளவும்..
அவனுக்கு மேலும் கோபம் வந்தது…
இவர்களின் மனநிலை அறியாத தில்லை.. மாமா என்ற சந்தோஷக்குரலுடன்
அவன் கரத்தை பிடிக்க வந்ததுதான் தாமதம்.. குந்தவை விட்ட அறையில்
தூரப்போய் விழுந்தாள்..
கன்னம் தீயாய் எரிய.. அதிர்ச்சியுடன் குந்தவையை பார்க்க அவளோ
காளியாய் நின்றுக்கொண்டிருந்தாள்.. அதுவும் அவள் முகத்தில் இருந்த
ஆக்ரோஷத்தைக் கண்டு.. தில்லைக்கு பயம் பிடித்தது.. மேலும்
அவளறியாமலே விழிகளும் கலங்க ஆரம்பித்தன..
ஏய் என் வட்டுக்கு
ீ வந்து என் மக மேலையே கை வைக்கிறியா என புஷ்பா
துள்ளிக்கிட்டு முன்னால் வர.. குந்தவை பாரபட்சம்மின்றி அவளுக்கும்
அறைவைத்தாள்…
ஏய் உன்னை மாதிரி கெட்டுப்போனவெல்லாம் என் வட்டுக்குள்ள
ீ வரதே
தப்பு.. இதுல என் பொண்னையும் பொண்டாட்டியையும் அடிக்கிறியா.. என்ற
செல்வம் குந்தவையின் மேல் உள்ள ஒட்டு மொத்த வன்மத்தையும் ஒரு
அறையில் காண்பிக்கும் வெறியோடு கையை ஓங்கிக் கொண்டு வந்தார்..
செல்வத்தால் கரத்தை குந்தவை நோக்கி உயர்த்தத்தான் முடிந்தது.. வேறு
எதுவும் செய்ய முடியவில்லை.. அருள் செல்வத்தின் சுண்டு விரல் நகம் கூட
குந்தவையின் மேல் படாதவாறு அவர் கரங்களை இறுக்கமாக
பிடித்திருந்தான்..
என் முன்னாடியே எங்கக்காவ அடிக்க கை ஓங்குறீங்களா என அவன்
கரத்திற்க்கு அழுத்தம் கொடுக்க.. செல்வத்திற்கு உயிர் போகும் வலி..
மற்றவர்களுக்கு அது சாதாரண பிடியாக தெரியலாம்.. ஆனால் செல்வத்திற்கு
மட்டும்தான் அந்த பிடியின் அழுத்தமும் வலியும் தெரியும்..
அவன் மேலும் மேலும் அழுத்தம் கொடுக்க.. செல்வத்திடமிருந்து முனங்கல்
வர ஆரம்பித்தது.. அருளு என்ன பண்ற.. அவன் உன் தாய்மாமன்..
அவன்கிட்ட இப்படித்தான் நடந்துக்குவியா.. நீ யார் சொல்லி இப்படியெல்லாம்
பண்ற.. என குந்தவையை ஜாடையாக பார்த்தவாறு கூறியவர்.. அருளின்
கரத்தை பிரிக்க முயற்சி செய்தார்…
பேச்சியின் பேச்சில் கோபம் கொண்ட அருள்.. செல்வத்தை விடுத்து.. போதும்
இதுக்கும் மேல யாராவது பேசுன ீங்க.. இந்த அருளோட இன்னொரு முகத்தை
பார்ப்பிங்க என கர்ஜிக்க.. பேச்சியின் பெருத்த உடல் அதிர்ந்தது..
குந்தவை.. உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம் இருந்தா என் மகள
கொல்லுறதுக்கு விஷம் கொடுக்க பார்த்திருப்பீங்க என அழுத்தமும்
கோபமுமான குரலில் கேட்க.. அனைவரும் மின்சாரம் தாக்கியது போல்
அதிர்ந்து நின்றார்கள்…
ஒரு நிமிடம் தான் அந்த அதிர்வும்.. மறுநொடி.. என்ன அருளு.. உங்கக்கா
என்னென்னமோ சொல்லுது.. நாங்க ஏன் உன் பொண்டாட்டிய கொல்லப்
போறோம்.. அதுனால எங்களுக்கு என்ன கிடைக்கும்.. நீ இப்படி பேசுறது
மட்டும் வள்ளிக்கு தெரிஞ்சது உயிரையே விட்ருவா என முதலைக் கண்ணர்ீ
வடித்து பாசாங்கு செய்ய.. அப்பொழுது அவரைப் பார்த்த அருளின்
பார்வையில் துளியும் மரியாதை இல்லை..
ஒஹ்ஹ.. என கேலியாக இழுத்தவன் அக்கா வெளியே இருக்கிறவர வர
சொல்லுங்க… அவரைப் பார்த்தாவது இவங்க உண்மைய
சொல்லுறாங்களான்னு பார்க்கலாம்.. என்றதும் குந்தவை அழைத்து வந்த
நபரைப் பார்த்து செல்வத்தின் முகம் வெளிறியது..
ஹ்ம்ம்ம் என்ன மாமா இவரு யாருன்னு உங்களுக்கு தெரியுதா..
செல்வம்.. தொண்டைக்குழியில் சிக்கியிருந்த பயப்பந்தை.. எச்சிலோடு
முழுங்கிக் கொண்டு இல்லையென தலையாட்டினார்..
ஒஹ்ஹ வயசாயிடுச்சுல.. நியாபக மறதியா இருக்கும்.. என நக்கல்
செய்தவன்.. அந்த பெரியவரிடம் செல்வத்தை தெரியுமா எனக்கேட்டான்…
‘’ தெரியும் தம்பி.. ரெண்டு முறை என்கிட்ட வந்து மருந்து வாங்கிட்டு
போனாரு.. ‘’
குந்தவை ‘’ என்ன மருந்து.. ‘’
அது.. கர்ப்பம் தரிக்காம இருக்கிற மருந்தும்மா.. அத தொடர்ந்து ஒரு
வாரத்துக்கு சாப்பிட்டா அந்த பொண்ணுக்கு வாழ்க்கை முழுக்கும் பிள்ளையே
பிறக்காது.. அப்புறம் ஒரு வாரம் முன்னாடி வந்து ஆளையே கொல்ற
அளவுக்கு வரியமுள்ள
ீ மருந்து எதுன்னு கேட்டு வாங்கிட்டு
போனாருங்கம்மா..
இல்லை.. மாப்பிளை இவன் பொய் சொல்றான்.. நீங்க அந்த வேலைக்காரி
ராமாயி பேச்சையும் இவன் பேச்சையும் கேட்டுகிட்டு என்னைய சந்தேகம்
படாதீங்க.. என தன்னை நிரூபிக்கும் நோக்கத்தோடு.. வாயில் வந்ததை
சொல்ல..
குந்தவையும் அருளும் ஒருவரொருவர் பார்த்துக் கொண்டனர்.. யார
சொல்றிங்க மாமா.. ராமாயியா அவங்கள பத்தி நாங்க பேசவேயில்லையே
என அருள் அமர்த்தலாக கூறவும்.. செல்வம் மாட்டிக்கொண்ட பாவனையில்
விழித்தார்..
அவருக்கு சட்டென்று.. என்ன சொல்வது என புரியாமல்.. அது.. அது.. நீங்க
அந்த பேர சொன்ன மாதிரி இருந்துச்சு.. என வாய்க்கு வந்ததை
உளறிக்கொட்டினார்..
அவர் மீ ண்டும் மீ ண்டும் பொய் சொன்னதில்.. கோபம் கொண்ட அருள்
பக்கத்தில் இருந்த மரநாற்காலியை.. சரியாய் செல்வம் பக்கத்திலிருந்த
தூணில் விட்டெறிய.. அதன் வேகத்தில் நாற்காலி உடைந்து அதன் சிதல்கள்
செல்வத்தின் கை முகம் கழுத்து போன்ற இடங்களில் கீ றி ரத்தம் வர
ஆரம்பித்தது…
கணபதி குடும்பத்தார் அருளின் இம்முகத்தைக் கண்டு சர்வமும் அதிர்ந்து
நின்றனர்.. தன் தாய்மாமன் மேல் கை வைக்காமல் அவன் உடலின் பல
இடங்களில் குருதியை வரவைத்து விட்டான்… அருள்மொழி பாண்டியன்..
இப்போ சொல்ல போறிங்களா.. இல்லையா.. ஏன் என் பொண்டாட்டிய
கொல்ல முயற்சி பண்ண ீங்க.. இந்த அருள்மொழி பாண்டியன் பொண்டாட்டிய
கொல்ற அளவுக்கு உங்களுக்கு எங்கேயிருந்து இவ்வளவு தைரியம் வந்துச்சு..
அவ என்னோட உயிர்.. என்னைத் தாண்டிதான் எதுவும் அவள தொட முடியும்
என ஆக்ரோஷமாக கர்ஜிக்க..
ஆமா.. நாங்கதான் அவளுக்கு புள்ள பிறக்க கூடாதுன்னு மருந்து கொடுக்க
சொன்னோம்.. அவளுக்கு குழந்தையில்லன்னா எப்படியும் நீங்க
என்னைத்தானே கல்யாணம் பண்ணிப்பிங்க அதுனாலதான்.. ஆனா அதையும்
மீ றி அவளுக்கு குழந்தை வரப்போகுது.. அதான் அவளை மொத்தமா அழிக்க
முடிவு பண்ணேன்.. இனியும் முயற்சி பண்ணுவேன்.. யாருக்காகவும்
எதுக்காவும் நான் உங்கள விட்டுக்கொடுக்க மாட்டேன்.. நீ எனக்குத்தான்..
எனக்கு மட்டும்தான்.. என்று தொண்டை கிழிய கத்தினாள்.. ஆரம்பத்தில்
அருள் குந்தவையின் செய்கையில் அவள் மிரண்டாலும்.. அருள் வானதி
குறித்து பேசியவுடன் அவளின் பழைய ஆங்காரமும் வெறியும் மேலெழும்ப..
அவளின் மனஅழுக்குகள் அனைத்தும் வார்த்தையாக வெளியேறியது..
அவள் கூறிய மறுநொடி.. தில்லையின் செவிப்பறை கிழியும் அளவிற்கு
குந்தவை மறு அறை வைத்தாள்.. அதோடு அவள் கழுத்தை தூணில் சாய்த்து
அழுத்திப் பிடிக்க.. தில்லை மூச்சு விட முடியாமல் திணறினாள்..
பேச்சியும் புஷ்பாவும் அவள் கரத்தை விலக்க பார்க்க.. இடது கரத்தால்
அவர்களை தள்ளி விட்டவள்.. என்ன சொன்ன.. என் பொண்ண.. இந்த
குந்தவை நாச்சியார் பொண்ண நீ கொல்லப்போறியா.. சொல்லுடி.. என
கழுத்தை அழுத்த அவள் விழிகள் சொருக தொடங்கியது.. தடுக்க முயன்ற
செல்வத்தின் காலை அருள் தட்டிவிட.. அவனால் எழுந்திரிக்க
முடியவில்லை.. கணபதி செட்டியாரோ அதிர்ச்சியில் அசைவென்பதே மறந்து
சிலை போல் நின்றிருந்தார்..
சாவின் விளிம்பிர்க்கு அவள் சென்ற பொழுது.. கரத்தை எடுக்க..
குந்தவையின் காலில் மயக்கமும் விழிப்புமாக விழுந்தாள்..
தொண்டையிலிருந்து விடாமல் இருமல் வந்துக் கொண்டிருந்தது..
இப்பவே இந்த இடத்துலயே.. உன்னை சமாதி ஆக்கிருவேன்.. என்ற குந்தவை
தன் பாதத்தைக் கொண்டு தில்லையின் கழுத்தில் அழுத்த.. பேச்சி புஷ்பா
இருவரும் கிட்டத்தட்ட குந்தவையின் காலை பிடித்து கெஞ்சும் அளவிற்கு
வர.. அதன் பின்பே காலை நகர்த்தினாள்..
என்னோட வள்ளிம்மா முகத்துக்காக மட்டும்தான் உங்க எல்லாரையும்
உயிரோட விடுறேன்.. இல்லைன்னா இந்த இடத்திலே வெட்டி
புதைச்சுடுவோம்.. இனிமே எங்க குடும்பத்துபக்கம் உங்க நிழல் கூட
படக்கூடாது என எச்சரித்து விட்டு திரும்பினாள்..
அருளோ.. ம்ம்ம் எங்கக்கா வேணா ஆத்தா முகத்துக்காக உங்கள இதோட
விட்ருக்கலாம்.. ஆனா நான் விடமாட்டேன்.. என அருள் கூறியதும்..
கணபதியின் கண்களில் உயிர் பயம் தெரிய அதைக் கண்டு சிரித்தவன்..
பயப்படாதீங்க அவ்வளவு சீக்கிரம்.. உங்க உயிர் போகாது.. உங்களோட
உண்மையான உயிர் எது.. உங்க சொத்தும் கௌவுரவமும் தானே.. அதத்தான்
நான் அழிக்க போறேன் என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே.. இரண்டு
மூன்று பேர் ஓடிவந்து ‘’ அய்யா நம்ம மில்லுல தீப்பிடிச்சுடுச்சு அய்யா..
ஒன்னுமே மிஞ்சல.. நம்ம குடோனும் தீப்பிடிச்சுடுங்கய்யா.. என அவர்கள்
கூறவும் கணபதி ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார்…
அருள் அவர்களின் நிலையைக் கண்டு இதழ்களில் தோன்றிய
வெற்றிச்சிரிப்புடன்.. குந்தவையை கூட்டிக்கொண்டு சென்றான்..
எப்படிடா.. அந்த பெரியவர உனக்கு தெரியும்..
இந்த வட்டு
ீ டிரைவர் எனக்கு தெரிஞ்சவன்.. சுருக்கமா சொல்லனும்னா
என்னோட கையாள்.. அவன் கிட்ட கேட்டேன்.. அவன்தான் இவரு
நாட்டுமருந்து கடைக்கு போனதா சொன்னான்..
ம்ம்ம் என்ற குந்தவையின் முகத்தில் யோசனை முடிச்சுக்கள்.. எதுக்கும்
அவங்கள கண்காணிப்புல வச்சுக்க.. அந்த தில்லையோட பேச்சும் பார்வையும்
சரியில்ல..
ம்ம்ம்ம்..
குந்தவையும் அருளும்.. வட்டில்
ீ உள்ளவர்களிடம் அங்கு நடந்ததை ஒன்று
விடாமல் கூறினர்.. அதில் வள்ளியம்மைக்கு கொஞ்சம் நஞ்சம்மிருந்த பிறந்த
வட்டு
ீ பாசமும் மொத்தமாய் அற்றுவிட்டது..
அத்தை குலதெய்வ கோயிலுக்கு போகனும்னு சொன்னிங்கள்ல.. வாங்க
அதுக்கான ஏற்ப்பாட்டை பார்ப்போம்.. இப்போ வானதிக்கு எந்த
விஷயத்தையும் சொல்ல வேண்டாம்.. பிள்ளைத்தாச்சி மனசு
கஷ்டப்படக்கூடாது என்றவர் அடுத்த வேலைகளை பார்க்க சென்றார்.. இனி
அவர்கள் எனக்கு ஒன்றுமில்லையென சொல்லாமல் சொல்லிச்சென்ற
வள்ளியம்மையையே மற்றவர்கள் அன்பும் பெருமையுமாய் பார்த்தனர்..
வள்ளியம்மை கூறியது போல் யாரும் தில்லை பற்றியும் அவள்
குடும்பத்தாரைப் பற்றியும் வானதியிடம் கூறவில்லை… ஆனால் வெகு
விரைவிலே இதனை குறித்து வருத்தப்பட போகிறோம் என அவர்களுக்கு
தெரியவில்லை..
ஆம் செல்வமும் தில்லையும் காலைச்சுற்றிய பாம்புகள்.. கடிக்காமல்
விடாது.. அதுவும் இப்பொழுது அடிப்பட்ட பாம்பு கூட.. தில்லை செல்வம்
மாதிரியான ஜென்மங்கள் எவ்வளவு பட்டாலும் திருந்தாது.. அதற்க்கேற்றார்
போல் இருவரும் அருளையும் வானதியையும் பழிவாங்குவது பற்றித்தான்
யோசித்துக் கொண்டிருந்தனர்..
இனி நீங்க என்னைய ஏத்துக்க மாட்டிங்கன்னு நல்லா புரிஞ்சுடுச்சு.. மாமா.
அதுனால நாம ரெண்டுபேருமே இங்க இருக்க வேணாம்.. நாம மேல போயி
எல்லாரையும் மறந்துட்டு சந்தோஷமா இருப்போம்.. என பைத்தியக்காரி
போல் மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தாள்.. தில்லையம்மை.
செல்வமோ ‘’ உன்னைய சும்மா விடமாட்டேண்டி.. நீயும் உன் மவளும்
தானே அவனுக்கு ரொம்ப முக்கியமானவங்க.. உங்கள இல்லாம செஞ்சு..
தாய்மாமன்னு கூட பார்க்காம என்னைய அவமானப்படுத்துன அவன தினம்
தினம் கதறவிடுறேன்னா இல்லையா பாரு.. ‘’ என வன்மமாய்
எண்ணிக்கொண்டிருந்தான்..
வடுகம்மாளின் வேண்டுதலின்படி சொந்த பந்தங்களோடு செங்குட்டுவன்
குடும்பத்தார் குலதெய்வம் கோயிலுக்கு சென்றனர்.. காலையிலிருந்தே
குந்தவையின் மனம் சஞ்சலமாக இருந்தது.. மேலும் ஏனென்று புரியாமல்
வேலுநாச்சியாரின் நினைவும் அதிகம் தாக்க.. ஒருவித கலக்க நிலையிலே
இருந்தாள்…
பொங்கல் வைத்து.. கிடா வெட்டு ஆரம்பித்தது.. செங்குட்டுவனும் அழகுவும்
ஊர் பெரிய மனிதர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க.. வள்ளியம்மை
வடுகம்மாள் குந்தவை மூவரும் சமையலில் ஈடுபட்டிருந்தனர்.. வானதி
ஷ்ரவனோடும் சிவகாமியோடும் வாயடித்துக் கொண்டிருந்தாள்.. அப்பப்போ
சந்திரனோடு பேசிக்கொண்டிருந்த தன்னவனை சைட் அடிக்கவும்
தவறவில்லை…
சந்திரன் ‘’ இவ்வளவு பிரச்சனை நடந்துருக்கு.. நீயும் குந்தவையும் அமைதியா
இருக்கிங்க.. எனக்கென்னமோ அந்த செல்வம் இதோட விடுவான்னு
தோனலை.. ‘’
‘’ ம்ம்ம்ம் ‘’ என்ற அருளின் முகத்திலும் பலத்த யோசனை..
வானதி ‘’ ஹலோ தர்ஷு.. ‘’
‘’ பேபி எப்படியிருக்க.. என் குட்டி பேபி எப்படி இருக்காங்க.. ‘’
‘’ அடேய் டோமரு.. ரெண்டு நாள் முன்னாடி தானடா பேசுனேன்.. அதுக்குள்ள
என்னாயிருவேனா.. ‘’
‘’ ச்சு போடி.. ‘’
‘’ சரி சரி எப்போ இங்க வர.. ‘
‘’ ம்ம்ம்ம்ம் பார்க்கிறேண்டி.. இங்க கம்பெனில ஒரே வேலை என அவன்
சொல்லிக் கொண்டிருக்கும் போது சிக்னல் தடைபட இவள் ஹலோ.. ஹலோ
என கத்தியவாறு சிக்னல் தேடி கூட்டத்தை விட்டு தனியே பிரிந்தாள்..
குந்தவை மற்றும் வானதியை கொன்று பழி தீர்க்கும் வெறியோடு
கருவக்காட்டின் மத்தியில் நின்றிருந்த செல்வத்தின் கண்கள்.. வானதி மட்டும்
தனியே செல்வதைக் கண்டு மின்னியது..
வெகுதூரம் வந்த வானதி.. சிக்னல் கிடைக்காதலால் சலிப்புடன்
திரும்பியவள்.. அருகில் நின்றிருந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்டாள்…
ஓர் நிமிடம் தான் அந்த திடுக்கிடல்.. அவளுக்கு இவர்களின் உண்மையான
முகம் தெரியாதலால்.. என்ன பெரியப்பா.. இப்போ தான் வந்திங்களா.. மச்சான்
ஐயா எல்லாம் கோவில்ல நிக்குறாங்க.. வாங்க போலாம் என வெள்ளைச்
சிரிப்புடன் கூப்பிட..
குள்ளநரியான செல்வமோ வானதியின் பின்னால் பார்க்க… அவளும்
செல்வத்தின் செய்கை புரியாது திரும்ப.. இருவர் அவள் முகத்தில் மயக்க
மருந்து தடவிய கர்ச்சீப்பை முகத்தில் வைத்து அழுத்தினர்.. பின் செல்வம்
அவள் போனிலிருந்து குந்தவைக்கு அழைத்து ‘’ உன் பொண்ண உயிரோட
பார்க்கனும்னா.. கருவக்காட்டுக்குள்ள வா.. யார்க்கிட்டயும் எதுவும்
சொல்லாம.. மீ றி ஏதாவது சொல்லனும்னு நினைச்ச உன் மவ சங்க
அறுத்துருவேன்.. உன்னை என் ஆளு கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கான்..
என்று போனை வைத்தான்.. குந்தவை சுற்றியும் முற்றியும் பார்க்க இருவர்
தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் யாரும் அறியாது.. காட்டிற்குள்
சென்றாள்.. அவளை கண்காணித்த இருவரும் அவள் பின்னே செல்ல
ஆரம்பித்தனர்…
இங்கோ சந்திரனோடு பேசிக்கொண்டிருந்த அருளிற்கு ஏதோ தப்பாக பட..
சட்டென்று திரும்பி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.. அப்பத்தா ஆத்தா ஐயா
அப்புச்சி ஷ்ரவன் சிவகாமி என அனைவரும் இருக்க.. குந்தவையும்
வானதியையும் காணவில்லை.. அதைக் கண்டு திடுக்கிட்ட அருள் உடனே
பரபரப்பாய் சுற்றியும் முற்றியும் தேடினான்..
சந்திரன் அருளின் பதட்டத்தைக் கண்டு.. என்னாச்சு மாப்பிளை..
அக்காவையும் வானதியையும் காணும் மாமா.. என்றான் தேடிக்கொண்டே..
எங்க போயிருக்க போறாங்க.. இங்க தான் இருப்பாங்க.. இரு நான் போன்
பண்ணி பார்க்கிறேன் என்று வானதிக்கு அழைக்க போன் போகவில்லை..
குந்தவைக்கு அழைக்க.. அவள் போன் ஷ்ரவனிடம் இருந்தது..
குந்தவை.. நீ தப்புக்கு மேல தப்பு பண்ற செல்வம்.. எங்கள விடு.. என்
தம்பிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுச்சு.. உன்னைய உயிரோடவே விட
மாட்டான்.. என்ற குந்தவை தன்னை பிடித்திருந்தவர்களிடமிருந்து விடுபட
போராடியவாறு கூறினாள்..
கருவக்காடு அதிரும்மளவிற்கு சிரித்த செல்வம்.. என்ன சொன்ன உன்
தொம்பி என்னைய போட்ருவானா.. பதினேழு வயசுல உங்காத்தால
கொன்னு.. இருபத்தஞ்சு வயசுல உங்க வட்டுக்குள்ளையே
ீ வந்து உன்
தாவணிய உருவுன என்னைய இன்னும் உன் வட்டு
ீ ஆம்பளைங்க
கண்டுபிடிக்கல.. இப்போ மட்டும் என்ன புடுங்க போறாய்ங்க.. என்று அவன்
நக்கலாக கூறியதும்.. குந்தவையின் காலடியில் பூமி நழுவும் உணர்வு.. தான்
கேட்டது சரிதானா என உள்ளுக்குள் அதிர்ந்து நடுங்கியவள்..
என்ன.. என்ன சொல்ற.. என நடுங்கும் குரலில் கேட்டாள்..
குந்தவையின் நடுக்கம்.. செல்வத்திற்கு போதையேற்றிய மயக்கம் தர..
வேலுநாச்சியாரை எப்படி கொன்றான் என்பதையும்.. அவள் வலியில்
கதறியதையும் காப்பாற்றுமாறு துடித்ததையும் உதட்டில் தோண்றிய
வஞ்சச்சிரிப்புடன்.. கூற குந்தவையின் மனம் தன் தாயை எண்ணி
வேதனையில் துடித்தது என்றால் விழிகள் கண்ண ீர் துளிகளை பொழிய
ஆரம்பித்தது..
ஏன்டா.. ஏன் இப்படி பண்ண.. நாங்க உனக்கு என்ன பாவம் செஞ்சோம்..
எதுக்காக எங்கம்மாவ கொன்ன என்று கதறியவளின் மனதில்.. பசுமரத்தாணி
போல் பதிந்திருந்த தாயின் கடைசி நிமிட நிகழ்வுகள் கண் முன் வந்து போக..
அவள் அழுகை அதிகமாகியது..
அதை கண்டு மகிழ்ந்த செல்வம்.. சரி சரி அழாத.. அதான் இன்னும் கொஞ்ச
நேரத்துல நீயும் உன் மவளும் உங்கம்மாவுக்கு துணைக்கு போக
போறிங்களே.. அப்புறம் என்ன.. என்று கேலியாக கூறியவன் தன்
இடுப்பிலிருந்த கத்தியை எடுத்தவாறு.. ம்ம்ம் முதல்ல யாரக் கொல்லலாம்..
உன்னையக் கொல்லவா இல்லை.. இல்லை உன் மகளக் கொல்லவா.. என
மயங்கியிருந்த வானதியின் அருகில் வர.. குந்தவை பதறினாள்..
மாமா என்று ஓடிவந்த தில்லையைக் கண்டு அருளின் கோபம்.. அதிகமாக..
ஏய் எங்கக்காவும் வானதியும் எங்க.. நீயும் உன் குடும்பமும்தான் ஏதோ
பண்ணியிருக்கிங்க.. சொல்லு.. என அவள் கழுத்தை பிடித்து அழுத்தினாள்..
மாமா.. நான் சொல்றத கேளுங்க.. அவங்க உயிர் ஆபத்துல இருக்கு என
திக்கித்திணறி கூற.. அருளின் கரத்தை விலக்கிய சந்திரன்.. அவங்க
ரெண்டுபேரும் எங்கம்மா சொல்லு..
அதெல்லாம் இப்போ சொல்றதுக்கு நேரமில்லை.. கருவக்காட்டுக்குள்ள தான்
குந்தவை சித்தியும் அக்காவும் இருக்காங்க… அப்புச்சி தான் அவங்க ரெண்டு
பேரையும் அங்க வரவழைச்சுருக்கணும்.. அவரோடு இன்னும் சிலர்
இருக்காங்க.. சீக்கிரம் வாங்க உங்களுக்கு நம்பிக்கையில்லைனா.. நிறைய
பேர கூட்டிட்டு வாங்க.. என அவள் கூறியதும்..
அருள் நொடியும் தாமதிக்காது கருவக்காட்டிற்குள் நுழைய.. சந்திரன்
செங்குட்டுவன் அழகு இன்னும் சிலர் அவனை பின்தொடர்ந்தனர்..
அருள் அவர்கள் இருக்குமிடத்தை நெருங்கும் பொழுது செல்வம்
மயக்கத்திலிருந்து வானதியின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்த அதைக்
கண்டு உடல் நடுங்கிய அருள் நொடியும் தாமதிக்காது கீ ழே இருந்த கல்லை
எடுத்து செல்வத்தின் மீ து வசியவன்..
ீ அவர்களை நோக்கி ஓடி வந்தான்….
கல்வந்த வேகத்தில் தடுமாறிய செல்வத்தின் கரத்தில் உள்ள கத்தி கீ ழே
விழுந்த சமயம்… அருள் தன் முறுக்கேறிய கரங்களால் செல்வத்தின்
கழுத்தை நெறிக்க.. செல்வத்தின் ஆட்கள் குந்தவையை விடுத்து அருளை
பிடித்துக் கொண்டனர்..
காளை தன் மேல் விழுபவர்களை ஒரு சிலுப்பலில் எவ்வாறு கீ ழே
தள்ளுமோ அது போல் தன்னை பிடித்திருந்தவர்களை ஒரு சிலுப்பலில் கீ ழே
தள்ளியவன்.. செல்வத்தை புரட்டி எடுக்க ஆரம்பித்தான்..
வெறிக்கொண்ட சிங்கத்தின் ஒரு அடிக்கு அந்த கிழட்டு குள்ளநரியால் ஈடு
கொடுக்க முடியவில்லை.. அதற்குள் சந்திரனும் மற்றவர்களும் வந்து
செல்வத்தின் கையாள்களை ஒரு கை பார்த்து விட்டனர்..
ரத்தம் தேய்ந்த முகத்துடன் செல்வம் கீ ழே விழவும் தான் அருள் அடிப்பதை
நிறுத்தினான்.. குந்தவை வானதியை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்க..
அருள் பரிதவிப்பும் நடுக்கமுமாக.. அவளிடத்தில் நெருங்கி தன் ஒட்டுமொத்த
நேசத்தையும் இத்தனை நேரம் தான் பட்ட பரிதவிப்பையும் ‘’ அம்மாளு ‘’
என்ற ஒற்றைச் சொல்லில் காண்பித்து வானதியின் கன்னத்தை தட்ட..
பெண்ணவளின் நயனங்கள் தாமரை மலர்போல் மெல்ல
விரியத்தொடங்கியது…
மச்சான்.. என்ற மெல்லிய குரலில் அவனை அழைத்தவள்.. பயத்திலும்
அழுகையிலும் அவன் மார்பினில் சாய… அவளின் விழி மலர்த்தலிலும்
மச்சான் என்ற விளிப்பிலிலும் உயிர் வந்தவன்.. காற்று புகா அளவிற்கு
அவளை இறுக்கியனைத்து.. அவள் மதி முகத்தில் முத்தங்களை
வாரியிறைத்தான்..
இவர்களின் நிலையைக் கண்டு சந்தோஷமடைந்த குந்தவை.. அவர்களை
தொந்தரவு செய்யாமல் தன் தந்தையிடம் செல்வத்தின் செய்கைகள்
அனைத்தையும் கூறி கண்ண ீர் விட்டுக்கொண்டிருந்தாள்..
இதுவரை அங்கு நடந்ததையெல்லாம் ஓரமாக நின்று பார்த்துக்
கொண்டிருந்த.. தில்லையம்மை.. அருள் வானதியை அனைத்துக்
கொண்டிருந்த காட்சியைக் கண்டு.. வஞ்சத்திலும் குரோதத்திலும் உள்ளம்
கொதிக்க.. தன்னுள் மறைத்திருந்த விஷம் தேய்ந்த கூர்வாள் அமைப்பிலான
கத்தியைக் கொண்டு அருளின் முதுகில் குத்த வந்தாள்... அதே சமயம்
மயக்கத்திலிருந்த செல்வம் தன்னால் இனி தப்பிக்க முடியாது என அறிந்து..
இவர்களில் ஒருவரையாவது கொன்று அருள் குடும்பத்தினரை கதற வைக்க
வேண்டும் என வன்மம் கொண்டவன் அருகில் ஆணி பதிந்திருந்த
கட்டையைக் கொண்டு உலகம் மறந்து தங்களுக்குள் மூழ்கிருந்த அருள்
வானதியை நோக்கி வந்தான்..
தில்லையும் செல்வமும் அவர்களை நெருங்கும் சமயம்.. இதனை
கண்டுகொண்ட குந்தவை.. அருள் என கத்தியவாறு வந்தவள் அவர்களை
ஒருபக்கம் தள்ளிவிட தில்லையின் கத்தி செல்வத்தையும்.. செல்வத்தின்
கட்டை தில்லையையும் தாக்கியது..
இருவரும் இருபுறமும் விழுந்தனர்.. தில்லையின் தலையிலிருந்து குருதி
வழிய அவள் மயக்கமாக.. செல்வமோ விஷத்தின் வரியத்தால்
ீ உடல் வெட்டி
உயிரிழந்தார்.. ஒரு நொடியில் இவையனைத்தும் நடைபெற சுற்றியுள்ளோர்
அதிர்ச்சியில் உறைந்தார்களென்றால்.. வானதி மீ ண்டும் மயக்கமடைந்தாள்..

அத்தியாயம் 25

செல்லக்குட்டி.. புஜ்ஜுக்குட்டி.. யாரை பார்க்குறீங்க.. அப்பாவ பார்க்குறீங்களா


என தன் கைகளில் தவழ்ந்துக் கொண்டிருந்த மூன்று மாத குழந்தையைக்
கொஞ்சிக் கொண்டிருந்தான்.. அருள்மொழி பாண்டியன்..
அவன் பெண்ணரசியோ.. தந்தையின் சொல்லுக்கு தகுந்தவாறு தன் பாக்கு
விழிகளால் அவனையே பார்த்து.. தன் பல்லில்லா பொக்கை வாயால் எச்சில்
ஒழுக சிரித்து.. கைகால்களை ஆட்டிக் கொண்டிருந்தாள்.. அதனைக் கண்டு
மெய்மறந்தவன்.. தன் மீ சை ரோமங்கள் குத்தாத அளவிற்கு குழந்தையின்
நெற்றியில் மென்முத்தம் வைத்தான்…
இதனையெல்லாம் பக்கத்திலிருந்து பொறாமை வழியும் கண்களால் பார்த்துக்
கொண்டிருந்தாள்.. வானதி. அருள் சொன்னது போலவே வானதிக்கு
போட்டியாய் பிறந்தவள்.. அதற்கு தகுந்தாற்போல்தான் இவளின் செய்கையும்
இருக்கும்..
அமுதுண்ண மட்டுமே அவளுக்கு தாய் வேண்டும்.. மத்த எல்லா நேரத்திலும்
அவள் இருப்பது அருள்மொழியின் கரத்திலே.. அவன் செல்லும் இடமெல்லாம்
இவள் தலை திரும்பும்…
மனைவியின் பொறாமை மன்னவனுக்கு குதூகலத்தை தர.. பாருடா குட்டி..
உங்கம்மா நம்மளையே முறைச்சு முறைச்சு பார்க்கிறா.. என்றதும்
பெண்ணரசி சிரிக்க.. பொறுமையிழந்த வானதி அருள் முதுகில் படபடவென்று
பட்டாசை கொளுத்தினாள்..
யோவ் கருத்த மச்சான்.. வர வர ரொம்ப பேசுற.. என்ன உன் பொண்ணு
வந்ததும் என்னைய கண்டுக்கவே மாட்டேங்குற.. என சிலிர்த்துக் கொண்டு
சண்டைக்கு வர.. சுவர் ஓரமாக மகளை படுக்க வைத்தவன்.. ஒரு இழுப்பில்
அவளை தன் மடியில் கொண்டு வந்து.. அவள் கால்களை தன் கால்களோடு
பின்னி.. அவள் கரத்தை தன் ஒருகரத்தால் பின் பக்கமாக பிடித்துக்
கொண்டவன்… மற்றொரு கரத்தை அவள் வயிற்றில் அலையவிட்டு..
தன்னோடு மேலும் இறுக்கினான்..
நிமிடத்திற்குள் அருள் வானதியை தன் முழுகட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்துவிட்டான்.. இதை எதிர்பாராத அவனவள்.. யோவ் என்ன பண்ற
விடுய்யா.. என உடலை அசைக்க முற்பட.. அருளின் ஆண்மை சிலிர்த்துக்
கொண்டது…
அவளின் வழுவழுப்பான.. கழுத்தடியில் முகத்தை புதைத்தவன்.. அதிலிருந்து
வந்த தன்னவளின் சுகந்தத்தை.. ஆழமூச்செடுத்து உள்வாங்கிக் கொண்டான்..
அது பென்னவளுக்கு கூச்சம் கொடுக்க.. ம்ம்ம்ம் யோவ்.. என மெல்லிய
குரலில் சினுங்க..
கழுத்திலிருந்து சிறு சிறு மென்முத்தம் வைத்து வந்தவன் செவிமடலை
கடித்து..
என்னடி.. நானும் இப்போதான் பாப்பா பொறந்துருக்கான்னு கண்ட்ரோல்ல
இருந்தா.. ரொம்ப துள்ளுற இனிமே பாரு ஐயாவோட பர்பாமென்ஸ.. உன்னை
என்ன செய்ய போறேன் தெரியுமா.. இத்தனை நாள் செய்யாததுக்கு எல்லாம்
வட்டியும் முதலுமா சேர்த்து வாங்க போறேன்.. என்றவன் தன் கலர்கலரான
எண்ணங்களை அவளின் செவியில் கிசுகிசுக்க.. பெண்ணவளின் உடலில்
மின்சாரம் பாய்ந்து.. வயிற்றுக்குள் குறுகுறுவென உணர்வுகளின் போராட்டம்..
அதோடு அவள் முகத்திற்கு ஈடாக செவியும் சிவக்க ஆரம்பித்தது.. வேக
வேக மூச்சுக்கள் விட்டு தன்னை சமன்படுத்த முயன்று.. தோற்றுக்
கொண்டிருந்தாள்..
ஆடவனின் வலுவான கரம்.. பெண்ணவளின் கோபுரமேட்டில் தன் வலுவை
காண்பிக்க.. அவளிடத்தில் வலியின் சிணுங்கல்.. அவள் முகத்தை தன்னை
நோக்கி திரும்பியவன்… தன் அதரம் கொண்டு சிணுங்கும் இதழை
தண்டித்திருந்தான்.. இருவரும் ஒருவர் மூச்சுக்காற்றை மற்றவர் பகிர்ந்து
கொண்டிருந்தார்கள்..
மேலே செய்த லீலையை போலவே.. கிழேயும் பெண்மையின்
பொக்கிஷங்களை அருளின் கரங்கள் அளவிடும் வேளை.. மொத்தமாய்
தன்நிலை இழந்தவளின் உடல் மேலும் அசைய.. அருளின் ஆண்மை
சீறிப்பாய்ந்தது.. இதற்கு மேல் தாங்காது என நினைத்தவன் பக்கத்தில் உள்ள
மகளைப் பார்க்க..
அவளோ தன்னை இறக்கிவிட்டு தாயை மடியேற்றிக் கொண்ட கடுப்பில்
தலையை திருப்பிக் கொண்டு.. கோபத்தில் துயில்கொள்ள ஆரம்பித்தாள்..
மகளுக்கு அனைவாய் தலையணை வைத்தவன்.. தன்னவளை தரையில்
கிடத்தி அவள் அணிந்திருந்த ஒன்றை நைட்டிக்கு விடுதலை அளித்தவன்..
அவளுக்கு ஆடையாகி போனான்..
*******************************************
இன்று அருள்மொழி பாண்டியன் வானதி நாச்சியாரின் இளவரசிக்கு பெயர்
சூட்டும் நன்னாள்.. ஊரையே அழைத்திருந்தனர் செங்குட்டுவனும் அழகும்..
சிவப்பு வர்ண பட்டுப்பாடையில் பொன்மகள் ஜொலிக்க.. அதற்கு தகுந்தாற்
போல் வானதியும் சிவப்பு நிற பட்டுப்புடவையிலும் அருள் சிவப்பு சட்டை
வெள்ளை வேட்டி என பாந்தமாய் ஜொலித்தனர்…
அருள்.. குழந்தையை குந்தவையின் கரத்தில் கொடுத்து.. தொட்டிலில்
போடச்சொன்னான்.. குந்தவையும் தன் தாயின் மறுவுருவமாய் திகழும் அந்த
பிஞ்சை வாஞ்சனையுடன் பார்த்தவாறு தொட்டிலில் போட்டாள்..
ம்ம்ம் நல்ல நேரம் போறதுக்குள்ள பேர வையுங்க.. என வள்ளியம்மை
கூறியதும்.. வானதி அருளைப் பார்த்தாள்.. இருவரும் தம்பதி சகிதமாய்
குழந்தையை கரத்தில் ஏந்தி.. கணிவிழி நாச்சியார்.. கணிவிழி நாச்சியார்..
கணிவிழி நாச்சியார் என மூன்று முறை கூறினர்..
‘’ நல்ல தமிழ் பேரா வச்சுருக்க அருளு.. இந்த காலத்துல யாரு இந்த மாதிரி
பேரு வைக்கிறாங்க.. எல்லாரும் பேஷனு சொல்லிக்கிட்டு
என்னென்னத்தையோ பேருன்னு வைக்கிறாங்க.. போன வாரம் என்
கொழுந்தன் சம்பந்தி வட்டுக்கு..
ீ பெயர் சூட்டு விழாவுக்கு போயிருந்தேன்..
அப்போ அந்த பிள்ளைக்கு வச்ச பேரக் கேட்டு இப்படியெல்லாம்கூட
வைப்பாங்களான்னு இருந்துச்சு.. ஏன்மா இப்படி வச்சுருக்க இன்னும்
கொஞ்சம் நல்ல பேரா வைக்கலாம்லனு கேட்டதுக்கு.. தேடுனதுலயே
இதுதான் சின்னதா இருந்துச்சாம்... என்னத்த சொல்ல ‘’ என புலம்ப
மற்றவர்கள் சிரித்தனர்..
‘’ அப்படி என்ன பேரு சின்னாத்தா.. ‘’
‘’ ஹ்க்கும் என்னமோ நிகா.. நொகான்னு வச்சுருந்தாய்ங்க.. ‘’ என நொடித்துக்
கொண்டவாறு சொன்னார்..
அடுத்தடுத்து அனைவரும் குழந்தையின் காதில் பேரை சொல்லி.. தங்க
நகைகளை அடுக்க ஆரம்பித்தனர்.. கொலுசு.. அரைஞாண்கயிறு மோதிரம்
வளையல் சங்கிலி என ஒவ்வொருவரும் வந்து போட்டனர்.. இப்பொழுது
இவற்றை மட்டுமேக் கொண்டு சிறுவர்களுக்கான நகைக்கடை
ஆரம்பிக்கலாம்.. அப்படி நிறைந்து வழிந்தது.. இனிமேல் மாட்ட முடியாத
பட்சத்தில் அனைவரும் வானதியின் கரத்தில் திணித்து விட்டு சென்றனர்..
வள்ளியம்மை முகத்தில் பூரிப்புடன் ஓடியாடி வேலை பார்த்துக்
கொண்டிருந்தார்.. அப்பொழுது ஓர் வம்புபெண்மணி ‘’ என்ன வள்ளி
விழாவுக்கு உங்கம்மாவ வரச்சொல்லலையா என ஆச்சரியமாய் கேட்டவர்
மறுநொடி அட.. நீதான் அவங்க கூட பேசமாட்டில்ல மறந்துட்டேன்.. என்றவர்
அதோடு விடாமல்.. ஹ்ம்ம்ம் கூப்பிட்டாலும் வரநிலைமையிலா அவங்க
இருக்காங்க என மேலும் பேசவந்தவர்.. அவரையே தீர்க்கமாய் பார்த்தவாறு
வந்துக்கொண்டிருந்த குந்தவையைக் கண்டு வியர்த்து வழிந்தார்..
வட்டுல
ீ போட்டது போட்டபடி வந்துட்டேன்.. வள்ளி.. நான் கிளம்புறேன்..
அயித்தை கிட்ட சொல்லிடு என்று ஓடாத குறையாய் அங்கிருந்து நகர்ந்தார்..
குந்தவை வள்ளியம்மையின் தோளில் கரம் பதிக்க.. தன்நிலை மீ ண்டவர்
வந்தவர்களை கவனிக்க சென்றார்.. குந்தவை ஒருவருடத்தில் நிகழ்ந்த
சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள்…
செல்வம் விஷம் தாக்கிய சில நிமிடங்களிலே இறந்து விட.. தில்லையின்
உயிர்மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது.. அவள் தலையில் பட்ட அடியின்
தாக்கமும்.. ஏற்கனவே சில மாதங்களால் அவளுள் ஏற்பட்ட மனஅழுத்தமும்..
அவளை உயிருள்ள ஜடமாய்.. கோமா ஸ்டேஜிற்கு அழைத்துச் சென்றது..
கணவன் இல்லாமல்லாகிவிட மகள் இருந்தும் உயிரற்ற நிலையில் இருக்க..
அந்த வேதனையில் புஷ்பாவும் சிறிது காலத்திலேயே நெஞ்சுவலி வந்து
இறந்துவிட்டாள்..
கணபதியும் பேச்சியும் செய்த பாவம் அவர்களின் இரண்டு தலைமுறை
வாரிசுகளை அழித்துவிட்டது.. இப்பொழுது தள்ளாமையில் அவர்களைத்
தாங்க நாதியின்றி அப்பெரிய வட்டில்
ீ நடமாடும் ஜடமாய் வாழ்ந்து
வருகின்றனர்.. அதுவும் அடுத்தடுத்த இழப்புகள் கணபதிக்கு பக்கவாதத்தை
ஏற்படுத்த மொத்தமாய் ஓய்ந்து விட்டார்கள்.. முன்னாளில் செய்த
பாவத்திற்கு இன்னாளில் தண்டனை அனுபவிக்கின்றனர்…
ஒரு குழந்தை நல்ல முறையில் வளர.. அதற்க்கான முதல் படியை
பெற்றோர் தான் அமைக்க வேண்டும்.. அவர்களுக்கு அடுத்ததுதான் சமூகம்
உறவுகள் நண்பர்கள் எல்லாம்.. பெற்றோர் சிறுவயதிலிருந்தே நல்லது எது
தீயது எது என்று மனதில் பதியவைத்தால்தான் அவர்களால் சமூகத்தில்
உள்ள நல்லதை அறியமுடியும்.. கெட்டதை தவிர்க்க முடியும்..
ஆனால் பேச்சியும் கணபதியும் செல்வத்திற்கு போதித்ததெல்லாம்..
மற்றவர்களை ஏமாற்றுவது தூற்றுவது.. காழ்ப்புணர்ச்சி வஞ்சம்
என்பவைகளைத்தான்.. அதைத்தான் செல்வம் தில்லைக்கு
போதித்திருக்கிறார்… மூத்த தலைமுறையினரின் தவறான வழிக்காட்டலால்..
அடுத்தடுத்த இரு தலைமுறையினர் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டனர்..
இப்பொழுது அந்த பெரியவட்டில்
ீ ஒரு அறையில் கணபதியும் மற்றொரு
அறையில் தில்லையும் மருத்துவ உபகரணத்தோடு படுத்திருக்க.. பேச்சி
அவர்களுக்காக நடமாடிக்கொண்டிருந்தார்.. வள்ளியம்மையும் இங்கு
வருவதுமில்லை பேசுவதுமில்லை ‘’ செத்தா சொல்லியனுப்பு இந்த வட்டுல

பொறந்த பாவத்துக்காக உங்கள தூக்கி போட்டுறேன்.. ‘’ என்ற வாக்கியமே
அவர் கடைசியாக பேச்சியிடம் பேசியது..
அம்மா.. அம்மா என்ற வானதியின் உலுக்கலில் நினைவு திரும்பியவள்.. ‘’
என்னடா.. ‘’ என்க..
‘’ நீங்க இவள கொஞ்சம் வச்சுக்கோங்களேன்.. உங்க தம்பி கைக்குள்ள வச்சே
பழக்கப்படுத்திட்டாரு.. இந்த சின்னக்குட்டியும் நை நைங்கிறா நீங்க கொஞ்ச
நேரம் வச்சுக்கோங்க ‘’ என கூறியதும்.. தன் பேத்தியைக் வாங்கிக்கொண்டார்..
குந்தவை கணிவிழியோடு நகர்ந்ததும்.. அருள் மற்றும் தர்ஷன் அருகில்
வந்தவள் ‘’ மச்சான் எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா.. எத்தனை மணிக்கு
கோயிலுக்கு போகனும்..’’
‘’ ம்ம்ம்ம் எல்லாம் ரெடி அம்மாளு.. நம்ப ஒன்பதரை மணிக்கு கோயிலுக்கு
போகனும்.. 10 மணிக்கு நல்ல நேரம்.. ‘’
‘’ ம்ம்ம்ம் சரி.. நான் போயி அம்மாவ ரெடி பண்றேன்.. ‘’ என்றவள்
வள்ளியம்மையோடு குந்தவை இருக்கும் அறைக்கு சென்றாள்.. தர்ஷனும்
அருளும் சந்திரனை நோக்கி சென்றனர்..
குந்தவை மடியில் கனிவிழியை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க..
வள்ளியம்மை “ குந்தவை என்னத்தா இவ்வளவு மெலிசா நகை போட்ருக்க..
அதையெல்லாம் கழட்டிட்டு இத போட்டுக்கத்தா.. என கையில் உள்ள
நகைப்பெட்டியை கொடுத்தார்.. ‘’
‘’ வள்ளிம்மா.. அதான் பங்க்ஷன் முடிஞ்சுடுச்சு இல்ல.. அப்புறம் எதுக்கு
இதெல்லாம்.. ‘’
‘’ அது.. நாம எல்லாரும் இப்போ கோயிலுக்கு போறோம் அதான்.. இதென்ன
இத்துணுக்குண்டு பூ வச்சுருக்க.. ‘’ என்றவர் மேலும் பல பூச்சரங்களை அவள்
கொண்டையில் அடுக்கினார்..
‘’ வள்ளிம்மா என்ன பண்றிங்க.. எதுக்கு இவ்வளவு பூ நகையெல்லாம் ‘’
என்ற குந்தவையின் மறுப்பை கண்டுகொள்ளாது தன் வேலையை சிறப்பாய்
செய்தார்..
‘’ டேய் என்னடா பண்றிங்க.. இப்போ எனக்கு எதுக்குடா பட்டு வேஷ்டி
சட்டை.. ஒருவேளை நான் உங்கக்காகிட்ட படுறபாட்ட பார்த்து.. மாமா
பாவம்னு இன்னொரு கல்யாணம் பண்ண போறியா.. ‘’ என கேலியாக
கேட்டவர் அருள் முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டார்..
ஆத்தி இவன்கிட்ட வாயக்கொடுக்க பார்த்தேனே.. ஒன்பது வயசுல
கண்ணாடிய உடைச்சவன் இப்போ என் கை கால கூட உடைக்க தயங்க
மாட்டான்.. என உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்தார்..
குடும்பமாய் அனைவரும் கண்ணாத்தாள் கோயிலுக்கு வந்திருந்தனர்.. உள்ளே
நுழையும் போதே.. பொண்ணு மாப்பிள வந்தாச்சு என்ற பல குரல்கள் கேட்க..
யாருக்கோ கல்யாணம் போல என நினைத்துக் கொண்டனர் குந்தவையும்
சந்திரனும்.. ஆனால் இவர்களை மணமேடையில் அமருமாறு சொல்லவும்
இருவரும் அதிர்ந்து விழித்தனர்..
‘’ என்ன பார்க்குறீங்க.. உட்காருங்க.''
‘’ டேய் கருவா என்னடா.. ‘’ என்றாள் பாவமாய்.. அவள் முகத்தில் சங்கடம்
வெட்கம் என பல உணர்வுகள்..
குந்தவை உன் கல்யாணத்துல நாங்க யாரோ மூனா மனுஷங்க மாதிரி
பார்த்தோம்.. வள்ளியம்மை உன் கல்யாணத்துக்கு வரவேயில்லை… அதான்
இப்போ சாஸ்திர சம்பிரதாயப்படி.. உனக்கு எல்லாம் நடக்கனும்னு
விரும்புறோம்.. மறுக்காதத்தா.. என தழுதழுத்த குரலில் கூறவும்.. அதற்கு
மேல் வாதாடாமல் இருவரும் மனையில் அமர்ந்தனர்..
அழகுவும் வள்ளியம்மையும் விழிகளில் நிறைந்த நீருடன்.. குந்தவையின்
திருமணத்தை கண்டுகளித்தனர்… எல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களும்
நடந்தது.. அனைத்தும் முடிந்து வட்டிற்கு
ீ வர.. இருவருக்கும் ஆலம் சுற்றி
உள்ளே அழைத்து பால் பழம் கொடுத்தார்கள்..
‘’ மாப்பிள.. எல்லா சம்பிரதாயமும் தானே செயிரிங்க.. எதுவும்
விட்டுப்போகலையே.. ‘’
‘’ ஏன் மாம்ஸு.. எல்லாம் தான் செஞ்சு முடிச்சாச்சே.. என்றான் புரியாமல்.. ‘’
‘’ அதான்டா.. பர்ஸ்ட் நைட் அந்த சம்பிரதாயமும் இருக்கு தானே என
சந்திரன் வழிந்து கொண்டு கேட்க…
யோவ் பெரிய மனுசன் மாதிரி பேசுய்யா.. பேத்தி எடுத்து கிழவனாயிட்ட..
இப்போ உனக்கு முதராத்திரிதான் ஒரு கேடு..
அடேய் யாரைப் பார்த்து கிழவன்னு சொன்ன.. அடுத்த மாசமே உனக்கு
மருமகன ரெடி பண்ணிடுவேன் என்ன உங்கொக்கா தான் ஒத்துழைக்க
மாட்டேங்குறா.. என பொய்யாய் சலித்துக் கொள்ள.. ம்ம்ம்ம் சரி பின்னால
நிக்கிறவங்ககிட்ட உங்க விருப்பத்தை சொல்லிடுங்களேன் அப்புறம் எல்லாம்
தானா நடக்கும் என கேலியாக சொல்லிச்செல்ல.. ஸ்லோ மோஷனில்
திரும்பியவர் அங்கு கோப முகத்துடன் நின்றிருந்த குந்தவையைக் கண்டு
ஜெர்க்கானார்..
ஈஈஈ குந்தவை… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா.. என
இளித்துக்கொண்டே சொல்ல.. குந்தவையின் முறைப்பு அதிகமாகியது.. எப்படி
சமாளிப்பது என அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குந்தவையை
வள்ளியம்மை அழைக்க.. விவஸ்த்தைக்கெட்ட மனுஷா.. இரு உங்கள வந்து
கவனிச்சுக்குறேன்.. என கோபமாய் முனுமுனுத்துவிட்டு செல்ல.. சந்திரன்
ஆசுவாசமானார்..
அதன் பிறகு குந்தவையின் கண்ணில் சிக்காமல்.. போக்கு காண்பித்தவர்…
முதல் ஆளாக சாப்பிட்டு.. குந்தவை வருவதற்குள் தூங்கி விடலாம் என
நினைத்து அறைக்குள் நுழைய.. அங்கிருந்த மலர் அலங்காரங்களை கண்டு
வாயடைத்து போனார்… அவர் காலையில் கேலிக்காக சொல்ல அருள்
அதனை செயல் படுத்திருந்தான்.. சந்திரனுக்கு இதையெல்லாம் பார்க்க
வெட்கமாக இருந்தது..
அப்பொழுது உள்ளே நுழைந்த குந்தவையும் இவற்றைக் கண்டு அதிர்ந்து
சந்திரனை பார்க்க.. அடியே சத்தியமா நான் சும்மா ஒரு கேலிக்கு தாண்டி
அப்படி சொன்னேன்... என அழுகாத குறையாய் சொல்ல குந்தவைக்கு சிரிப்பு
வந்துவிட்டது..
மனைவி சிரித்தவுடன் குஷியான கணவன்.. மெல்ல அவளிடத்தில் நெருங்கி..
குந்தவை மாப்பிள எவ்வளவு கஷ்டப்பட்டு இதை ரெடி பண்ணியிருக்கான்...
வேஸ்ட்டானா அவன் வருத்தப்படுவான்ல.. அதுனால.. என இழுக்க
அவளும் அதுனால… என ராகமாய் இழுக்க..
ஈஈஈ கொஞ்சம் யூஸ் பண்ணிக்குவோம்.. செல்லம்.. ப்ள ீஸ் கோப்பேரேஷன்
பண்ணுடி தங்கம் என ஜொள்ளியவர்.. அவளை மலர்மஞ்சத்தில் வழ்த்தி
ீ தன்
வேலையைப் பார்க்க.. ஆரம்பித்தார்..
எப்புடிடி இந்த வயசுலயும் இன்னும் நான் முதல் தடவை பார்த்த மாதிரியே
ஜொலிக்கிற எனக் குந்தவையின் செவியில் முத்தமிட்டு கொஞ்ச…
ஹ்ம்ம்ம் அதுக்கு நீங்கதான் காரணம்.. நம்ம மணவாழ்க்கைக்கான
பிரதிபலிப்பு தான் என்கிட்ட எதிரொலிக்குது.. என சந்திரனின் மார்பில்
முத்தமிட்டாள்...
எனக்காக ஒரு பாட்டு பாடு.. ரொம்ப நாள் ஆச்சு.. நான் கேட்டு…
ம்ம்ம்ம்
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாமல் இருப்பேனே பகல் இரவா..
உனக்கு வாக்கப்பட்டு வருசங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
ஏன் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆச்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி
என மெல்லிய குரலில் பாட.. சந்திரன் குந்தவையை மென்மையாக
அனைத்துக் கொண்டார்..

எபிலாக்…
நான்கு வருடங்கள் பிறகு…
அடியே.. விரசா வேலைய முடிக்காம.. அங்கன என்னடி வெட்டிப்பேச்சு
பேசிக்கிட்டு இருக்கீ ங்க.. வள்ளியம்மை.. பொங்கல் வைக்க ஆரம்பிச்சுட்டியா
இல்லியா.. அழகு கிடா வெட்ட ஆளுங்க வந்துட்டாங்களா… சீக்கிரம்
வெட்டிட்டோம்னா அடுத்து ஆக வேண்டிய வேலைய பார்க்கலாம்ல.. என
அனைவரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தார்.. வடுகம்மாள்..
அப்பொழுது அவரது புடவையை மலரினும் மெல்லிய பிஞ்சு விரல்கள்
இழுக்க.. கீ ழே பார்த்தவர் அங்கு அழுதுக் கொண்டு நின்றிருந்த தன் பேத்தி
கணிவிழி நாச்சியாரைக் கண்டதும்.. ‘’ ஆத்தி என்னாச்சு.. ஆத்தா ஏன் என்
தங்கம் அழுகுறாங்க.. என தூக்கி இடுப்பில் வைத்து.. அவளின் ஈரமான
விழிகளை துடைத்தவாறு கேட்க..
‘’ ம்மாயி.. கணி குத்திய கனி தள்ளி வித்துத்தான்.. ‘’ என்றாள் மழலையாய்..
‘’ அச்சோ அப்படியாத்தா.. இரு அம்மாயி அவன அடிக்கிறேன்.. ‘’ என அவளை
சமாதானம் படுத்தியவாறு அங்கிருந்த சிறுவர் பட்டாளத்திற்கு சென்றார்..
‘’ டேய்.. பாண்டியா என்னதுக்குடா என் செல்லத்த தள்ளிவிட்ட.. ‘’ என அருள்
வானதியின் இரண்டாம் வாரிசான மூன்று வயது கனிவிழியன்
பாண்டியனைக் கேட்டதும்.. அவரையும் அவர் இடுப்பில் பாவமாய்
அமர்ந்திருந்த தன் தமக்கையையும் முறைத்தவன்.. நா பாண்தியன் இல்ல..
கனிவிதிய பாண்தியன் என முறைப்பாய் கூறியவன்.. நான் அப்பித்தான்
தள்ளிவிதுவேன் என திமிராக கூறினான்.
அடியாத்தி.. இந்த வயசுலயே என்னா வாயி.. என முகவாயில் கைவைத்தவர்..
அப்பொழுது தன் ஐந்துமாதமேயான இரட்டை குழந்தையில் ஒன்றான
அதியன் பாண்டியனை தோளில் சுமந்தவாறு வந்துக் கொண்டிருந்த அருளைக்
கண்டவர்.. யய்யா அருளு.. இங்கன வந்து உன் மவன என்னன்னு கேளு..
என்ன அப்பத்தா என்னாச்சு..
அவர் நடந்ததைக் கூறவும்.. தன் மகனை முறைத்து.. மற்றொரு தோளில்
மகளைத் தாங்கியவன்.. வர வர உனக்கு சேட்டை அதிகமாயிடுச்சு.. எல்லாம்
உங்க ஆத்தா கொடுக்கிற செல்லம் எனவும்.. தந்தையை முறைத்த குட்டி
பாண்டியன்.. உடனே ம்மா ம்மா என கண்ணை கசக்கிக் கொண்டு
பெருங்குரலெடுத்து அழ.. வானதி அங்கே பிரசங்கமானாள்..
வந்தவள் யாரையும் கவனியாது.. என்னடா செல்லக்குட்டி ஏன் அழுகுறிங்க
என கொஞ்சலுடன் தன் மகனை கேட்க.. வடுகம்மாளும் அருளும் அவளை
முறைத்தனர்..
ஹ்க்கும் உன் மவன நீதான் மெச்சுக்கணும்.. பேத்திய தள்ளிவிட்ருக்கான்..
ஏன்டா விட்டேன்னு கேட்டா அப்படித்தான் தள்ளிவிடுவேன்னு திமுறா
சொல்லுறான்.. என வடுகம்மாள் குற்றம் சாட்ட..
வானதி.. மகனிடம் ‘’ என்ன நடந்துச்சு செல்லம்.. ‘’ என கன்னத்தை பிடித்து
கேட்டாள்..
நா மாமு கிஷ் எல்லாம் விளாந்தோம்.. அப்போ நா ந்து பிதிக்க ஓதுதேனேனா
அப்போ இவ தன் குக்க வந்தா.. நா டெதியாம தள்ளி வித்துதேன்.. மஹும்
ஹும் செஞ்சுத்தே போயித்தா.. எனவும் ஷ்ரவன் ஆமாக்கா.. தெரியாம தான்
குட்டி தள்ளிவிட்டான்.. விழி என்னன்னு கேட்காம அழுதுகிட்டே போயிட்டா..
வானதி வடுகம்மாளையும் அருளையும் தீயாய் முறைக்க அவர்கள்
விழித்தனர்.. கனி அவர்களை மேலும் மாட்டிக்கொடுக்கும் பொருட்டு.. ம்மா
ம்மாயி ப்ப்பா தெண்டு பேதுமே கனிகுத்திக்கிட்ட கேட்கமா தித்துனாங்க.. ப்பா
அதிக்க வந்தாங்க என கண்களை கசக்கிக் கொண்டு அழுவது போல்
ஆக்க்ஷன் போட.. வானதியின் முறைப்பு அதிகமாகியது.. அருளோ பாவமாய்
முழித்துக் கொண்டிருந்தான்..
டேய் நான் எங்கடா உன்னை அடிக்க வந்தேன்.. கையக்கூட தூக்கலடா.. என
பரிதாபமாய் கூற.. அதெற்கெல்லாம் அசராத குட்டி பாண்டியன்.. தாயின்
தோளில் முகம் புதைத்து அழுவது போல் தேம்பினான்.. வானதி திட்ட
வாயை திறக்க போக.. அம்மாளு அவன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு
கண்ணராவது
ீ இருக்கான்னு பார்த்துட்டு என்னைய திட்டு.. என்றதும் வானதி
குட்டி பாண்டியனை பார்க்க அவன் கண்ணே திறக்காமல் தாயின் கழுத்திலே
முகத்தை புதைத்திருந்தான்..
பாவம் என் பிள்ள அவனை ஏன்தான் இப்படி பண்றிங்களோ.. என கோபமாய்
கூறியவள் விழிகுட்டி தம்பி தெரியாம தானே தள்ளிவிட்டான்.. அதுக்கு
இப்படி அழலாமா என அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவள்.. இருவரையும்
சமாதானம் செய்து.. விளையாட அனுப்பினாள்.. அப்பொழுது அருளின்
கரத்தில் உள்ள அதியன் தாயிடம் தாவ.. அவனை வாங்கியவள்.. உங்கள
அப்புறம் கவனிச்சுக்குறேன்.. என மெல்லிய குரலில் முனுமுனுத்தவாறு
சென்றாள்..
டேய் உங்கம்மா கிட்ட சொன்னத என்கிட்ட சொல்லிருக்கலாமேடா..
ம்ம்ம்ம் ம்மா என்ன நந்துச்சுனு கேத்தாங்க நீங்க கேத்தின்களா.. என்ன
அதிப்பேன்னு சொன்ன.. என முறைப்பாய் கூறியவன் தன் சகோதரியுடன்
விளையாட சென்றுவிட்டான்..
என்ன மாப்பிள.. என் மருமவன் உங்கள நல்லா வச்சு செய்றான் போல என
கேலிசெய்தவாறு வந்தான் தர்ஷன்… அவன் தோளில் அருளின் மற்றொரு
இரட்டை ஆண்வாரிசு மகிழன் பாண்டியன் ஒய்யாரமாய் சாய்ந்திருந்தான்..
ம்ம்ம்ம்… என்ன பண்றது மச்சான்.. உன் தங்கச்சிய பிள்ளைய பெக்க சொன்னா
தொல்லைய பெத்து வச்சுருக்கா.. பயபுள்ள என்னா வில்லத்தனமான
நடந்துக்குது.. உனக்கு தெரியுமா மச்சான்.. இவ பொறக்கும் போதே சரியான
கேடி இவுங்க அம்மாவ பார்த்துதான் சிரிப்பான்.. என்னைய பார்த்தா மட்டும்
உர்ருனு முறைப்பான்.. தப்பித்தவறி இவன் முன்னாடி அவங்கம்மா கிட்ட
போனா போதும் கத்தியே ஊரைக்கூட்டிடுவான்.. என குறை கூறுவது போல்
சொன்னாலும் அதில் தந்தைக்கான பெருமிதமே அதிகமாய் இருந்தது..
ஹ்ம்ம்ம்.. எப்படி இருந்தாலும் உங்க காரியத்துல கரெக்ட்டா
இருந்துருக்கீ ங்களே மச்சான்.. நாலு வருஷத்துல நாலு பிள்ளைக்கு
அப்பாவாகிட்டு.. என்னமோ பக்கத்துலயே போகாத மாதிரி பில்டப்
கொடுக்கிறது என கலாய்க்க.. அருள் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
அடேய்.. நீ என்ன சொல்றியா.. கிருஷ்க்கு ஒருவயசு தான் ஆகியிருக்கு..
ஆனா சுபா தங்கச்சி இப்போ அஞ்சு மாசம்.. சார் என்ன செஞ்சீங்களாம் என
அவனும் கலாய்க்க தர்ஷன் அசடு வழிந்தான்..
எந்தநேரத்தில் வடுகம்மாள் வட்டில்
ீ பிள்ளைகள் சத்தம் கேட்கனும் என
வேண்டினார்களோ.. கணிவிழி பிறந்த ஒன்றை வருடத்தில் கனிவிழியன்
பிறக்க அடுத்த இருவருடத்தில் அதியன் மகிழன் என இரட்டை பிள்ளைகள்
என வட்டில்
ீ எந்நேரமும் அவர்கள் சத்தம் தான்..
இன்று விழிக்கும் கனியன்க்கும் மொட்டை அடித்து காதுகுத்துகிறார்கள்..
குந்தவை அனைவரையும் அழைக்க விழி ஷ்ரவன் மடியிலும் கனியன்
தர்ஷன் மடியிலும் அமர்ந்திருக்க இருவருக்கும் ஒரே நேரத்தில் மொட்டை
அடித்து காதுகுத்தினர்..
*****************************************
சிலுசிலுவென காற்றும் சலசலவென செல்லும் நீரோடையும்… முன்னாளில்
தான் கண்ட கனவை வானதிக்கு நியாபகம் படுத்த அவள் முகம் செம்மை
பூசிக்கொண்டது.. அன்று அவள் கனவில் இருந்த நாயகன்.. இன்று நினவாய்
அருகேயிருந்தான்…
தன்னவளின் முகத்திலிருந்தே அவளின் எண்ணப்போக்கை கண்டுகொண்ட
அருள்.. தன் கரத்தை கொண்டு அவள் இடையை இழுக்க.. கிட்டத்தட்ட அவன்
மடியில் வந்து அமர்ந்தாள்…
‘’ எப்படி அம்மாளு என்னைய பார்த்தவுடனே நீ காதல்ல விழுந்த.. என்றான்
எப்பொழுதும் போல்..
‘’ இதையே எத்தனை தடவ கேட்பிங்க மச்சான்..
ப்ச் சொல்லுடி என தாடையை பிடித்து கொஞ்சினான்..
வானதியும் தன்னவனை முதன் முதலாக சந்தித்த அந்த பொன்னான
நினைவுகளை கூறலானாள்.. கல்லூரியின் முதல் வருட படிப்பு முடியும்
தருவாயில்.. நிர்வாக முதல் வருட மாணவர்களை மதுரைக்கு டூர் அழைத்துச்
சென்றிருந்தது.. மதுரை மீ னாட்ச்சியம்மன் கடைவதிகளில்
ீ வானதியும் அவள்
தோழிகளும் சுற்றிக் கொண்டிருந்தனர்..
அப்பொழுது.. டேய் யாருகிட்ட என்ன பேசுற.. நாட்டரசன் கோட்டை
அருள்மொழி பாண்டியன்டா உன் கைகால இனுங்கி புடுவேன் பார்த்துக்க
என்ற ஆண்மை ததும்பும் சிம்மக்குரலில்.. திரும்பியவள் அக்குரலுக்கு
சொந்தக்காரனை பார்க்க ஆவல் கொண்டு.. சத்தம் வந்த திசையை நோக்கி
செல்ல.. மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறத்தில் வெள்ளை வேட்டி
சட்டையணிந்து.. ஆறடி உயரத்தில் கட்டுமஸ்த்தான உடலுடன் மீ சையை
முறுக்கிக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தவனை.. வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.. அவனிடத்திலிருந்த ஏதோ ஒன்று
அவளை ஈர்த்தது.. கரங்கள் அவளறியாமல் அவனை தன் போனில்
படம்பிடித்துக் கொண்டது..
அப்பொழுது அவள் தோழிகள் அவளை அழைக்கும் சத்தம் கேட்டு சென்றவள்
திரும்பி வந்து பார்க்கும் பொழுது அவன் இல்லை… அந்நிகழ்வை சாதாரணம்
என எண்ண சொல்லி மூளை கட்டளையிட.. மனமோ அவனின்றி நீயில்லை
என குரலிட்டது… இரண்டிற்கும் இடையில் தவித்தவள்.. தனக்கானவன்
தன்னிடம் வந்து சேருவான் என்ற நம்பிக்கையில் கனவுகளில் அவளவனோடு
தன் நேசத்தை பகிர்ந்தாள்….
அப்பொழுது இரண்டு வருடம் கழித்து ஒருநாள் தன் வட்டில்
ீ அருளைக்
கண்டதும் அதிர்ந்தவள் பேச்சின்றி இருக்க.. அந்த கூமுட்டையோ பயம் என
நினைத்து மயக்க மருந்தைக் கொடுத்து.. தூக்கி வந்தான்.. பிறகு
உண்மையெல்லாம் தெரிந்த பிறகு சொத்திற்காக தான் தன்னை மனம்
புரிகிறான் என நினைத்து வருந்தியவள்.. திருமணம் அன்று இரவு அவன்
நண்பனிடத்தில் பேசியத்தைக் கேட்டு.. அவளின் மொத்த வருத்தமும்
மாயமாய் மறைந்துவிட்டது….
வானதி கூறிமுடித்ததும் எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளிடத்தில்
காதல் பெருக.. அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்..
இயற்க்கையோடு கூடிய கூடல் தான் அருளிற்கு மிகவும் பிடித்தம்..
அவர்களின் தோட்டவட்டின்
ீ மாடி... மல்லிகைத் தோட்டத்திற்குள் நடுவில்
அமைந்துள்ள பரண்.. வைக்கோல்போர்.. இதோ இப்பொழுது ஆற்று
கரையோரம்.. இவர்களின் தோட்டத்திற்கு பக்கத்தில் உள்ள ஆறு என்பதாலும்
மாலை மயங்கிய நேரமென்பதாலும்.. இவர்களைத் தவிர அங்கு
யாருமில்லை.. சூரியன் சிறிது நேர முன்புதான் மறைந்திருப்பதால் அதிக
இருட்டும் கொஞ்சம் வெளிச்சமும் கொண்ட அவ்வேளை.. அருள் வானதியின்
பெண்மை பொக்கிஷங்களுக்குள் தன் கரத்தை அலையவிட வானதி சுகத்தில்
தவித்தாள்..
தனக்கு தொந்தரவாக உள்ள ஒவ்வொரு தடையையும் அருளின் கரங்கள்
விலக்க நங்கையவள் வெட்கத்தில் விழி மூடினாள்.. வெண்ணையில்
குழைத்த சந்தன மேனியவளின் மேல் அருள் படர்ந்து.. தன் முழு
ஆளுகைக்குள் அவளைக் கொண்டுவந்திருப்பதாய் அவன் நினைத்திருக்க
ஆனால் மங்கையவள் தான் தனக்குள் அவனை சுருட்டி வைத்துக்
கொண்டாள் என பாவம்.. அந்த ஆறடி ஆண்மகனுக்கு தெரியவில்லை..
இருவரின் மோகமும் வேகமும் வெள்ளப்பெருக்கு போல் ஓட.. அதில்
இருவரின் உடலும் படகு போல் ஆடிஅலைக்கழிந்தது.. ஆடவனின்
வலுமையான தாக்குதல்களும் பிடிகளும் நங்கைக்கு சுகவேதனையை
கொடுக்க.. எதிர்தாக்குதல் நடத்தி.. அவனிற்கு வலி கொடுக்க பெண் முனைய
அது எதிர்பாராவிதமாக ஆடவனுக்கு போதையைத்தான் கொடுத்தது..
அருளின் நாவும் விரலும் அவளுக்கு போதையேற்றியது.. தன் ஆண்மையால்
அவளின் பெண்மையை துவம்சம் செய்தவன்.. உடலின் உள்ள சக்தி
மொத்தமும் வடிந்த பிறகுதான் அவளிடத்திலிருந்து பிரிந்தான்.. பின்
மற்றொரு முறை ஆற்று நீருக்குள் கூடிக்களித்தவர்கள்.. இரவு உணவிற்கு
வட்டிற்கு
ீ வந்து சேர்ந்தனர்…
விழி சாப்பிட்டு தன் அம்மாயியுடன் உறங்கியிருக்க அவனின் இரட்டை
செல்வங்களும் குட்டி பாண்டியனும் அவர்களுக்காய் காத்திருந்தனர்…
ம்மா என அவளிடம் ஓடிவந்த கனியன் அருளை முறைக்க.. தந்தையும்
முறைத்தான்.. ம்மா ப்பா முத்தைக்குதாங்க.. கனிகுத்திக்கு பயமா இக்கு என
வானதியின் தோளில் முகம் புதைக்க.. வானு ‘’ ஏன்தான் எப்போப் பாத்தாலும்
என் பையன முறைச்சுக்கிட்டே இருக்கிங்களோ என சலித்துக் கொண்டு உள்
நுழைய குட்டி பாண்டியன் அளவம் காட்ட அருள் பரிதாபமாய் முழித்தான்..
அதியன் மகிழன் இருவரும் தாயிடத்தில் அமுதுண்டு சமர்த்தாய் தொட்டிலில்
உறங்கியிருக்க.. கனிவிழியன் வானதிக்கும் அருளிற்கும் இடையில்
படுத்தான்… தாயின் மார்புக்கூட்டில் குட்டி பாண்டியன் சுகமாய் முகம்
புதைத்துக் துயில்கொள்ள.. அதனை ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்த்துக்
கொண்டிருந்தான் அருள்.. தாயும் மகனும் உறங்கிய பிறகு குட்டி
பாண்டியனை தன் மார்பின் மீ து போட்டவன் தன் அம்மாளை தோள்
வளைவிற்குள் இழுத்துக் கொண்டான்… உறக்கத்திலேயே மன்னவனின்
செய்கையை புரிந்துக் கொண்ட மங்கை விழி திறக்காது மென்சிரிப்புடன்
அவன் கன்னத்தில் இதழ் பதித்து தூக்கத்தை தொடர.. தன்னவளின்
செய்கையில் அருளிற்கும் மென்னகை வர தன் அம்மாளையே காதலுடன்
பார்த்துக்கொண்டிருந்தவன் விழிகளும் உறக்கத்திற்கு சென்றது…….

ஜென்மம் விதை காதல் பழம்


லோகம் துவைத்தம் காதல் அத்வைத்தம்
ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்
யாக்கை திரி காதல் சுடர்…..

நிறைவுற்றது…...

You might also like