Professional Documents
Culture Documents
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அந்நள்ளிரவு வேளையிலும் அழகுவின் முகத்தில் ஆயிரம் மின்னல்களின்
வெளிச்சம்.. சொர்கத்தின் வாசலில் இருப்பது போல் குந்தவையின் மாளிகை
வாசலில் பரவசமாக நின்றுக் கொண்டிருந்தார்.. பின்னே..
முழுதாக இருபத்தி மூன்று வருடங்கள்.. தன் மகள் இனி தனக்கு இல்லை
என தனக்குள்ளையே புழுங்கிக் கொண்டிருந்தவரின்.. வேதனை
இத்திருமணத்தின் மூலம் சற்று குறைந்த்திருந்தது… அதுமட்டுமில்லாமல்
தன் செல்ல மகளிடம் தன்னைப் புரியவைக்கவும் கிடைத்த மிகப்பெரிய
வாய்ப்பல்லவா.. இருபத்தி மூன்று வருடங்களாக குந்தவையிடம் நெருங்க
முயன்று.. தோற்றுக் கொண்டிருந்தவருக்கு இன்று அவள் மாளிகையின்
உள்ளே செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை…
அழகுவின் முகத்திலிருந்தே.. அவர் அதிகம் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறார்..
என்றுணர்ந்த செங்குட்டுவன் தன் மகனின் தோளை அழுத்தினார்..
இத்தனைக்கும் அவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்…
செங்குட்டுவன் வடுகம்மாள் அழகு வள்ளியம்மை என அனைவரும் அருள்
வானதியோடு சென்னை வந்திருந்தனர்..
அருள்.. வானதியை பார்த்தான்.. விழிகளில் தூக்க கலக்கத்துடன்
நின்றிருந்தாள்.. கோவிலிலிருந்து வந்ததிலிருந்தே அவள் முகம்
சரியில்லாததை கண்டு.. அவன் முகம் யோசனையாகியது..
என்னாச்சு இவளுக்கு.. ஏன் ஒரு மாதிரி இருக்கா.. என்னன்னு கேட்டாலும்
பதில் சொல்ல மாட்டேங்குறா.. வட்டுலையும்
ீ சரி வரும்போதும் சரி… நம்மள
திரும்பிக்கூட பார்க்கல.. என்ன பிரச்சனைன்னு தெரிலையே.. என
தனக்குள்ளையே உழன்றுக்கொண்டிருந்தான்..
வானதிக்கு அருளின் பார்வை புரிந்தாலும்.. பெரிதாக கண்டுகொள்ளவில்லை..
அவனை பார்த்தாலே காலை தில்லை கூறியதுதான் அவள் நினைவிற்கு
வருகிறது…
அப்பொழுது தான் அருளிற்கு.. வானதி கோவிலில் தில்லையுடன் தனியாக
உரையாடிய நிகழ்வு அவன் மூளைக்குள் பளிச்சிட்டது..
கண்டிப்பா தில்லை ஏதாவது ஏடா கூடமா சொல்லிருப்பா.. அதை நம்பி இந்த
மக்கு மண்ணாந்தையும் நம்மகிட்ட மூஞ்சிய தூக்குறாளோ.. என்ற
நினைப்பே அருளுக்கு வானதியின் மேல் கோபத்தை வருவித்தது…
யாரு என்ன சொன்னாலும் அதை நம்பிருவாளா.. என்கிட்ட என்னன்னு
ஒருவார்த்தை கேட்காம இப்படி சின்ன பிள்ளை மாதிரி முகத்த
தூக்கிவச்சுருக்கா..
எங்கக்கா மவளே.. இருடி இன்னைக்கு நான் உன்ன ஒருவழிப்பண்ணல நான்
அருள்மொழி பாண்டியன் இல்லடி.. என மனதிற்குள் தன் அம்மாளை
கருவிக்கொண்டிருந்தான்..
சந்திரன் அனைவரையும் வட்டிற்குள்
ீ அழைக்க.. குந்தவையோ அலட்சியமாக
முகத்தை திருப்பி நின்றுக் கொண்டிருந்தாள்..
சிவகாமி.. டேய் உனக்கு அறிவு இருக்கா.. கல்யாணமாகி முத தடவை உன்
பொண்ணு மறுவட்டுக்கு
ீ வந்துருக்கா.. நீ ஆரத்தி எடுக்காம உள்ள வர
சொல்ற.. என தன் மகனை கடிந்துக் கொண்டவர்.. அங்கு அலட்சியமாக
நின்றிருந்த மருமகளைக் கண்டு எரிச்சல் கொண்டார்…
சந்திரனோ பாவமாக தன் அன்னையை பார்த்து.. இல்லம்மா ராத்திரி
நேரம்தான.. என இழுத்தான்..
ராத்திரி நேரமா இருந்தா என்னடா.. என்றவர்.. மருமகளே என்னம்மா இப்படி
எனக்கென்னன்னு நிக்கிற வந்துருக்கறது உன் பொன்னும்.. உன்
தம்பியும்தான்.. வா வந்து ஆரத்தி எடு.. என கோபக்குரலில் கூறினார்…
குந்தவை தன் மாமியரை மனதிற்குள் அர்ச்சித்தவாறு ஆரத்தி எடுக்க
செல்ல.. அருள் தன் அக்காவும் மாமாவும் படும் பாட்டை எண்ணி கேலியாக
சிரித்தான்…
அதை முதலில் கண்டுகொண்ட குந்தவை.. அவனை தீயாய் முறைக்க..
அவனோ.. வட்டை
ீ பார்ப்பது போல் முகத்தை திருப்பினான்…
என்ன அப்படியே நிக்குற.. குங்குமத்தை வச்சுவிடு..
வானதி நெற்றியில்.. மென்மையாக பொட்டிட்ட.. குந்தவை அருளின்
நெற்றியின் தன் நகம் பதியுமாறு அழுத்தி.. நக்கல் சிரிப்புடன் வாங்க
மாப்பிள்ளை என்றாள்..
ஹ்ம்ம்ம்.. என யோசனையுடன்.. அருள் வாசலிலே நின்றான்..
என்னாச்சு மருமவனே ஏன் அங்கேயே நிர்க்குறீங்க.. வலது கால எடுத்து
வச்சு வாங்க..
இல்லை.. அத்தை அக்கா என்ன மாப்பிளைன்னு கூப்பிடுறாக.. அதுனால
நானும் கொஞ்சம் மாப்பிளை கெத்து காமிக்கலாம்னு இருக்கேன்.. என்று
அவன் கூறியவுடன்.. குந்தவை முறைக்க அவனோ கவனமாக தன்
அக்காவை தவிர்த்து மற்ற அனைவரையும் பார்த்தான்..
அதைக்கேட்டு சிரித்த சிவகாமி… தாராளமா உங்க மாப்பிள்ள கெத்த
காண்பிங்க மருமவனே.. அப்பத்தான் உங்க அருமை இங்குள்ளவங்களுக்கு
புரியும் என்றவர் ஜாடையாக குந்தவையை பார்த்தார்…
சந்திரனும் தன் மனைவியைத்தான் பார்த்தார்.. அவள் எப்பொழுது
வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருந்ததால்.. அருளிடம் போதும்
என ஜாடை காண்பித்தவர்..
ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க காலைல
பார்க்கலாம் என மற்றவர்கள் தங்க அறையை காண்பித்தார்..
வானதியிடம்.. மாப்பிளைய உன் ரூம்க்கு கூட்டி போம்மா… என்றவர்
குந்தவையை இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் பதுங்கினார்..
உள்ளே சென்றதும் தான் தாமதம்.. அவனுக்கு கொழுப்பை பார்த்திங்களா..
நான் சும்மா இருந்தாலும் வேணுக்கும்னே வந்து வம்பிழுக்குறான்.. என்னை
பார்த்து கேலியா வேற சிரிக்கிறான்.. என குந்தவை பொறிய சந்திரன்
அவளை அமைதிப்படுத்த முயன்றார்.. அவளோ
என் பொண்ண கட்டுனா.. இவன் சொல்றது செய்றதையெல்லாம் நான்
பொருத்துக்கணுமா.. இந்த குந்தவை நாச்சியார் யாருக்கும் எதுக்கும்
அடங்குறவ இல்லைன்னு கூடியசீக்கிரம் அவனுக்கு காமிக்கிறேன் பாருங்க..
என மேற்கொண்டு பேச பொறுமை இழந்த சந்திரன் அவள் அதரன்களை தன்
அதரங்களோடு லாக் செய்தார்..
யாருக்கும் அடங்க மாட்டேன்.. என சிலிர்த்துக் கொண்டு நின்றவளை தன்
ஆளுகைக்குள் அடக்கி.. மற்றவையை மறக்கடித்தார்… மேலும் மேலும்
சந்திரன் முன்னேற.. குந்தவையின் கரங்கள் அதற்க்கு மறுப்பு தெரிவிக்க..
அவள் கண்களோ மையலோடு தன்னவனை பார்த்து தன் விருப்பத்தை
கூறியது…
இதழை விடுத்து அவளை தன் கரங்களில் அள்ளிக்கொண்டு.. மஞ்சத்தை
அடைந்து.. அந்த அடங்கா குதிரையை அடக்கி.. தன்னை அவளுக்குள்
அடைக்கலம் புகுத்தினார்.. இங்கு யார் யாரை அடக்கியது.. யார் யாருக்குள்
அடைக்கலம் புகுந்ததென்பது அவர்களுக்குள் உள்ள.. மன்மத ரகசியம்..
இங்கு அருளோ.. அறைக்குள் நுழைந்ததும் பாத் ரூமிற்குள் நுழைந்து தன்னை
சுத்தப்படுத்திக் கொண்டே… தன் அம்மாளை எவ்வாறு தண்டிக்க வேண்டும்..
எப்படி கதறடிக்க வேண்டும் என விதவிதமாக யோசித்து நிறைய
ஐடியாக்களுடன் வெளியே வர.. அவன் மனைவியோ அவனுக்கு பெரிய
பல்ப்பை தந்தாள்..
ஆம் வானதி அவன் பாத்ரூம்மில் நுழைந்த மறுநொடி மெத்தையில் வழ்ந்து
ீ
சொர்கத்திற்கு சென்றுவிட்டாள்…..
மெத்தையில் தத்தை போல்.. துயில்க் கொண்டிருந்த மனைவியை கண்டு
அவன் முகம் காற்று போன பலூன் போல் ஆகியது..
அருள் ஏமாற்றமாய் தன்னவளை பார்த்தான்.. இன்னைக்கும் போச்சா என
அவன் மனசாட்சி கேலிச்சிரிப்பு செய்து அவனை மேலும் காண்டாக்கியது…
அடியே குண்டம்மா.. தூங்குமூஞ்சி.. கார்ல வரும்போதெல்லாம்
தூங்கிட்டுதானடி வந்த.. இப்போ மறுபடியும் என்னடி உனக்கு தூக்கம்
வேண்டிக்கிடக்கு..
ஒரு நாள் இல்லை ஒருநாள் என் பொறுமை எல்லாம் குறையப்போகுது…
அன்னைக்கு உன்னை பிரிச்சு மேயுறனா இல்லையா பாரு என சவால்
விட்டவன்…..
ஹம்ம்ம்ம்ம்ம்ம் என்ற பெருமூச்சுடன் அவள் அருகில் படுத்தான்.. தூக்கமும்
வரவில்லை.. தூங்க மனமும் வரவில்லை..
புரண்டு புரண்டு படுத்தவன்.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து
தன்னவளையே பாவமாய் வெறித்து பார்த்தான்..
அவளோ.. சிறுகுழந்தை போல் தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்…
அதைப்பார்த்து அருளின் மோகம்.. வெள்ளப்பெருக்கு போல் பொங்கியது..
அதைத்தாங்க மாட்டாது.. அவள் அதரங்களை கவ்வினான்.. கனவில்
தன்னவனுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்த வானதிக்கு அம்முத்தம் தன்னவன்
கொடுப்பது போல் தோன்றி.. அவளும் அவனுக்கு ஈடுகொடுக்க.. அருள்
தேனுண்ட நரியானான்…
அடுத்த கட்டத்திற்கு அவன் முயலும் போது.. அருள் மனசாட்சி டேய்..
என்னடா பண்ற.. என் அம்மாளு சம்மதத்தோட தான் எல்லாமும் சொன்ன..
இப்போ நீ என்ன காரியம் பண்ற.. என்ற மனசாட்சியை போ அங்கிட்டு என
துரத்தியவன்.. முத்தத்தில் கான்செண்ட்ரேட் செய்தான்…
தன்னவள் சம்மதத்தோடுதான் தங்களின் சங்கமம்.. என்பதில் அவன் மனம்
உறுதியாக இருந்ததால்.. மனதேயின்றி அவள் இதழை விடுவித்தான்..
அப்பொழுதும் வானதி தூக்கத்தில் தான் இருந்தாள்..
கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை அடக்கியவன்.. கடைசியாக அவள்
கன்னத்தில் மீ சை உரச அழுத்த முத்தமிட்டு..
அம்மாளு இன்னும் ஒருவாரம் தான் என்னால பொறுமையா இருக்க
முடியும்.. அதுக்குள்ள உன் உடம்பையும் மனசையும் தேத்திக்கோ.. ஏன்னா
என்னையும் என் காதலையும் தாங்க உன் உடம்புலையும் மனசுலையும்
தெம்பு வேணும்ல என அவள் செவிமடலில் மிகவும் மென்மையாக
கூறியவன்..
ம்ப்ச்.. என்று மெலிதாக சத்தமில்லாத ஓர் முத்தம் வைத்து.. அவள்
பாதத்தில் சரணடைந்து அங்கும் முத்தங்களை வாரியிறைத்து.. தன் சிரம்
சாய்த்து கால்களை கட்டிக்கொண்டு படுத்தான்..
படுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனான்… ஆனால் பெண்ணவள் தான்
உறக்கமின்றி தவித்தாள்..
அருளின் ஒவ்வொரு செயலும் பெண்ணின் உணர்வுகளை
தூண்டிவிட்டிருந்தது.. அவன் இதழ் முத்தத்திலே உறக்கம் கலைந்தவள்..
அவன் செவி மடலில் இட்ட முத்தத்தில் மங்கையவள் உடல் சிலிர்த்து..
இதுவரை அவள் அறியாத உணர்வுகளெல்லாம் அவளுக்குள் தோன்றி..
மயக்கம் கொள்ள வைத்தன…
இத்தனைக்கும் மேல் அவளுள் நடக்கும் போராட்டங்களை.. அந்த கயவனிடம்
மறைக்க முயன்று அதில் சிறிது வெற்றியும் பெற்றாள்.. ஆனால் பாதத்தில்
முத்தமிடும் போது வானதி தன் உணர்ச்சிகளை அடக்கவும் மறைக்கவும்
முடியாமல்.. தோல்வியை தழுவினாள்..
இதழ் கடித்து விழிகளை இறுக்கிமுடி.. சுவாசம் தடைப்பட்டு.. நெஞ்சுக்குழி
ஏறி இறங்க.. மெத்தை விரிப்புகளை தன் விரல் கொண்டு கசக்கி.. தன்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள்…
அவன் காதல் மயக்கத்திலும்.. வானுவின் பாதத்திலும் தன் கவனத்தை
வைத்திருந்ததால்.. அவள் உணர்வுப் போராட்டங்களை பார்க்கவில்லை…
ஒருவேளை பார்த்திருந்தால்.. அப்பொழுதே அவளை வறுத்து தின்றிருப்பான்…
அவன் உறங்கியதும் தான் விழிகளை மலர்த்தி.. தன் பாதத்தில் சேயென
உறங்கியிருந்த அந்த ஆறடி வளர்ந்த ஆண்மகனை பார்த்தாள்..
அதில் என்ன இருந்ததென்பது அவளுக்குத்தான் வெளிச்சம்.. ஆனால்
கண்ணர்ீ மட்டும் விடாமல் பொழிந்தது..
அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.. தன் மனதின் எண்ணங்கள்
சரியா தவறா என்றுகூட அந்த இருபது வயது பாவைக்கு தெரியவில்லை…
குழம்பித் தவித்துக் கொண்டிருந்தவரின் மனதில் தன்னவனின் முகம் மின்னி
மறைய.. அவள் மனம் அமைதிக்கொண்டது… தனக்கு என்ன வேண்டும்
என்பதிலும் தெளிவு பிறந்தது..
அதன் பிறகே அவளை நித்ரா தேவி ஆட்கொள்ள.. வானதியின் கயல்
விழிகள் மூடியது..
நினைப்பது எல்லாம் நடக்க விதி விட்டால் தானே.. நாளையே தெளிவு
கொண்ட அவள் மனதை குழப்பும் பொருட்டு தர்ஷன் மூலம் விதி தன்
விளையாட்டை ஆரம்பித்தது…
அத்தியாயம் 9
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
ஏ பெண்ணே
என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே
தள்ளாடும் ஜீவனே
ஹா
என் உயிரினை வதைத்திடும்
அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும்
அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும்
உதிரம் நீயடி
உனக்குள் எந்தன்
காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல
வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தை சொல்லுமா
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
தர்ஷன்.. டேய் தர்பூஸ் போதும்டா.. உன் கண்ண ீர் டேங்க க்ளோஸ் பண்ணு..
இன்னும் எவ்வளவு நேரம் தான் அழுதுக்கிட்டே இருப்ப.. என ஷ்ரவனிடம்
கூறினான்..
ஆனால் ஷ்ரவனின் கண்களிலோ நிற்க்கமால் கண்ண ீர் வழிந்தது.. அதோடு
வானுவின் கரத்தை இறுக்க பற்றிக் கொண்டு.. அக்கா போகாதக்கா.. நான்
இனி உன்னை குண்டம்மா சொல்ல மாட்டேன்.. என் சாக்லேட் எல்லாம்
உனக்கே தரேன்.. நீ போய்ட்டா யாரு என் கூட சண்டை போடுவா.. ஸ்கூல்ல
நடந்ததெல்லாம் நான் யார்க்கிட்ட சொல்லுவேன்.. என கண்ண ீருடன் கூற..
வானுவும் தன் தம்பியை அணைத்து பொலபொலவென்று கண்ண ீர் விட்டாள்..
அக்காக்கு கல்யாணம் என்பதில் மகிழ்ச்சியாக சுற்றிக் கொண்டிருந்த
ஷ்ரவனிற்கு.. இன்று அக்கா ஊருக்கு செல்கிறாள் என்றும் இனி இங்கு
இருக்க மாட்டாள்.. எப்பொழுதாவது தான் வருவாள் என்றும் சொன்னவுடன்..
அவன் கண்ண ீர் ஆரம்பமாகியது…
சந்திரனுக்கும் குந்தவைக்கும் கூட தன் மகளை பிரியப்போவதை எண்ணி..
உள்ளுக்குள் ஒவ்வொரு நொடியும் வருந்திக்கொண்டிருந்தனர்.. இப்பொழுது
மகன் மகளின் சோகம்.. அவர்களை நொறுங்கச் செய்து கண்ண ீரை
வெளியாகியது…
சுதா.. என்ன இது சின்ன புள்ள மாதிரி.. அவங்கள சமாதானம் படுத்தாம
நீங்களும் அழுறிங்க..
ஷ்ரவ் குட்டி அக்கா.. இங்கயே இருக்க முடியாது.. அவளுக்கு கல்யாணம்
ஆகிடுச்சுல.. அதுனால அவ அவளோட புருஷன் வட்டுக்கு
ீ போய்த்தான்
ஆகனும்..
நீ தினமும் வடியோ
ீ கால் பண்ணி அக்காகிட்ட பேசு.. இப்போ இருக்குற
டெக்னாலஜில இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.. என அவனை
சமாதானம் படுத்தினார் கூடவே வானுவையும் அவள் தாய் தந்தையையும்
சேர்த்து..
நீ ரெடியாகுடா.. நாங்க போறோம் இங்க இருந்தா அழுதுகிட்டே இருப்பே..
என வானுவை விடுத்து அனைவரையும் அழைத்துச் சென்றார்…
வானு அறையை சுற்றிப் பார்த்தாள்.. எங்கும் அவளது நியாபக
புகைப்படங்கள்.. சிறு வயது முதல் இப்பொழுது வரை அவளது நியாகங்கள்
அழகிய தருணங்கள் அனைத்தும் நிழல்படமாக அவள் அறையின் சுவற்றில்
வற்றிருந்தது…
ீ
தர்ஷுவிடம் அடம் பிடித்து வாங்கிய.. டெடி பியர்ஸ்.. ஷ்ரவனிடம் சண்டை
போட்டு வாங்கிய அவன் வடியோ
ீ கேம்ஸ் என ஒவ்வொன்றும்
ஒவ்வொருவரை நியாபகப்படுத்த.. அதன் வேதனை தாங்காது கண் மூடி
நின்றாள்..
அப்பொழுது குளுமை நிறைந்த கரம்.. அவள் கண்ண ீரை துடைத்து
கன்னத்தை பற்ற.. விழிகள் திறந்தவள்.. அங்கு நின்ற தன்னவனின் மார்பில்
சரண்புகுந்தாள்… தன் வேதனையை கண்ண ீராய் கேவலாய் அவனிடத்தில்
கொட்ட.. அருள் அவள் முதுகை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தான்..
அம்மாளு இங்க பாரு.. ஏன் இவ்வளவு அழுகை.. ஹ்ம்ம்ம் என சிறு
பிள்ளையை கொஞ்சுவது போல் கண்களில் முத்தமிட்டு கேட்க.. அவளோ
பதில் கூறாமல் அவன் மார்பினில் புதைந்தாள்..
ஹ்ம்ம்ம் அம்மா அப்பா தம்பியெல்லாம் விட்டு போறது கஷ்டமாயிருக்கா..
என அவள் தலைமுடியை கோதியவாறு கேட்க.. அவளும்.. ஹ்ம்ம்ம் என
தலையசைத்து.. இன்னும் வாகாக அவனிடம் ஒன்டினாள்..
நீ எங்க வரப்போற.. நம்ம வட்டுக்கு
ீ தான.. அதுவும் உங்கம்மா பொறந்து
வளர்ந்த வட்டுக்கு..
ீ அக்கா வட்ட
ீ விட்டு போனதுக்கு அப்புறம்.. வடே
ீ
கலையிழந்த மாதிரி ஆகிடுச்சு.. நிம்மதியும் போச்சு.. ஐயா அப்புச்சியெல்லாம்
ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்காங்க.. ஆனா வெளில காண்பிச்சதில்ல..
இப்போ நீ வந்துதான் நம்ம வட்டு
ீ சந்தோஷம் நிம்மதியெல்லாம் திரும்ப
கொடுக்கனும்.. உன் மூலமா அக்கா திரும்ப நம்ம வட்டுல
ீ காலெடுத்து
வைக்கனும்.. என கூறியவன் முகம் வேதனையும் வருத்தமுமாக இருந்தது…
வானு கேள்வியாக அருளைப் பார்த்தாள்.. அதில் தன் அன்னை ஏன் தன்
பிறந்த வட்டை
ீ விட்டு சென்றார்.. ஏன் இத்தனை வருடங்கள் அவர்களைப்
பற்றி தங்களிடம் கூறியதுமில்லை.. பேசியதுமில்லை… என்ற நிறைய
கேள்விகள்..
அதைப் புரிந்துக் கொண்ட.. அருள் எல்லாத்தையும் சொல்றேன்.. ஆனா
இப்பயில்லை.. ஊருக்கு போனதுக்கு அப்புறம் அதற்கான நேரம் வந்ததும்
சொல்றேன்.. இப்போ இந்த அழுகைய விட்டுட்டு ஊருக்கு கிளம்புற
வேலைய பாரு.. என அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றான்…
வானதி இப்பொழுது சற்று தெளிவாக இருந்தாள்.. அழுகையும் சற்று
மட்டுப்பட்டது.. கபோர்ட்டை திறந்து.. சுடிதார் எடுக்க போனவளின் கரம்
அங்கிருந்த புடவையைக் கண்டு நின்றது..
அம்மாளு புடவை எடுத்துக்கோயேன்.. உனக்கு நல்லாயிருக்கும் என்ற
அருளின் ஆவலான முகம் மனக்கண்ணில் மின்ன.. அவளறியாமலே
வானுவின் கரம் புடவையை எடுத்தது..
சுதாவின் உதவியோடு புடவையை கட்டியவள் கண்ணாடி முன் தன்
பிம்பத்தை பார்த்தாள்… சிகப்பும் பச்சையும் கலந்த அந்த ஒர்க் சேரி.. அவளின்
நிறத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது… கைநிறைய வளையல்கள்
அணிந்து.. கழுத்திற்கு மஞ்சள் சரடுடன்.. வெள்ளையும் மரகதம் மணிகள்
நிறைந்த நெக்லஸ் மட்டும் அணிந்தவள்.. கண்ணாடியில் தன்னை பார்க்க..
என்னவோ குறைவது போல் இருந்தது..
என்ன என்று யோசித்துக் கொண்டே கண்களை சுழற்றியவளின் விழிகள்..
அங்குள்ள குங்குமச்சிமிழில் நிலைத்தது.. அதையெடுத்து தன் நெற்றி
உச்சியில் இட்டு இப்பொழுது கண்ணாடியை பார்த்தாள்.. முகத்தின் பொலிவு
கூடியது போல் தோன்ற.. அவள் இதழ்கள் புன்னகை சிந்தின…
தோட்டத்தில் அமர்ந்திருந்த தில்லையின் முகம் யோசனையில்
சுருங்கியிருந்தது.. வந்ததிலிருந்து.. அருளையும் வானதியையும் தான் பிறர்
அறியாது பார்த்துக் கொண்டிருந்தாள்.. அருள் வானதியை பார்ப்பது.. அவள்
இவனை கண்டுகொள்ளாமல் இருப்பது.. அருளின் கோபம்.. நிலத்திற்க்காக
அவளை திருமணம் செய்துக் கொண்டான் என அவள் தாய் கூறியதும்..
அருளை வானதி முறைத்தது.. என ஒவ்வொரு நிகழ்வையும் தன்
மூளைக்குள் சேமித்தாள்.. ஏனெனில் இப்பொழுது நடக்கும் சின்ன விஷயம்
கூட பிற்காலத்தில் பெரிய சம்பவங்களுக்கு வித்தாகலாம்.. இல்லையா..
கண்டிப்பாக இருவருக்குள்ளும் பிரச்சனை இருக்கு என அவள் மனம்
உறுதியாக கூறியது.. அதுவும் தர்ஷன் வானதியுடன் நெருங்கி பழகுவதை
பார்த்து.. அருளிடம் கோபம் பொறாமை என ஏதேனும் தென்படுகிறதா என
பார்க்க தோல்விதான்..
அவன் இருவர் செய்கைகளையும் சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தானே..
தவிர அதில் வேறு கேட்ட எண்ணங்கள் தெரியவில்லை.. இருந்தும் தன்
முயற்சியை கைவிடாதவாறு.. அருள் வானதியை கண்காணித்தாள்..
அவர்களின் முகபாவனையை கூட விடாமல் கவனித்தாள்… முக்கியமாக
வானதி அவளை காணும்போதெல்லாம் முகத்தை பாவமாகவும்
சோகமாகவும் வைத்துக் கொண்டாள்.. விழிகளில் வேதனை பொங்கி
வழிந்தது.. அந்தளவிற்கு திறமையாகவும் தத்ரூபமாகவும் நடித்தாள்…
சிவகாமி அனைவரையும் சாப்பிட அழைத்தார்.. அப்பொழுது வானதியும்
மாடியிலிருந்து இறங்கி வர.. அருளின் நிலை மோசமானது.. தன்
அம்மாளுவின் அழகில் சொக்கி.. அவளையே விழுங்கி விடுமாறு பார்க்க..
அதில் பெண்ணவள் நாணம் கொண்டு.. அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..
அருளின் பார்வையில் புடவைக் கட்டியதற்கான பலன்.. கிடைத்துவிட்டது…
சந்திரனிற்கும் குந்தவைக்கும் தங்கள் மகளின் தோற்றம் அவள் இன்னும்
சிறுபிள்ளை அல்ல.. இப்பொழுது அவள் மனைவி ஸ்தானத்தை
அடைந்துவிட்டாள்.. என தெரியப்படுத்த.. அவர்களால் அதை
நம்பமுடியவில்லை.. பெண் குழந்தைகள் தந்தையிடம்தான் ஓட்டும் என்ற
பழமொழிக்கு ஏற்ப வானதியும் சந்திரனோடுதான் சுற்றுவாள்… அதனால் தன்
தோளிலும் மாரிலும் தூக்கி வளர்த்த சிறு பிள்ளையை அவளிடம் தேடினார்…
பைத்தியக்கார தந்தையின் எண்ணம்.. மீ ண்டும் அவள் சிறுபிள்ளையாகி
அவளை மீ ண்டும் தோளில் தாங்கும் வரம் தா இறைவா என தன் மனதோடு
வேண்டினார்..
இப்பொழுது இருவருக்கும் அவளின் வளர்ந்த தோற்றம் மறைந்து.. அவளை
முதன் முதலில் தங்களின் கரத்தில் வாங்கியது.. பல்லில்லா பொக்கை
வாயினால் எச்சில் ஒழுக சிந்திய சிரிப்பு, தன் நான்கு கால்களால் தவழ்ந்தது,
பிஞ்சு பாதம் எடுத்துவைத்து தத்தக்கா பித்தக்கா என நடந்து.. முதன் முதலில்
அவள் மழலை மொழியில் அம்மா அப்பா என கூறிய அமுதினினும் இனிய
வார்த்தைகள், முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் போது.. அவர்களின்
காலை பிடித்து போகமாட்டேன் என அடம்பிடித்தது என ஒவ்வொரு
தருணங்களும் நினைவு வந்து.. அவர்களின் விழிகள் பனித்தது..
குந்தவை அதன் வேதனை தங்கமாட்டாது.. கேவலுடன் சந்திரன் மார்பில்
சாய்ந்தார்.. சந்திரனுக்கும் அதே நிலைதான்.. குந்தவை வெளியே
கொட்டிவிட்டாள்.. அவரால் முடியவில்லை…
குந்தவையின் அழுகையில் அனைவர் கவனமும் அவர்கள் புரம் திரும்பியது..
எல்லோருக்கும் அவர்களின் நிலை புரிந்தது… சிவகாமிக்கும் கண் கலங்கியது..
தன்னுடன் வம்பிழுக்க இனி பேத்தி இங்கிருக்க போவதில்லை என்ற நினைவு
அவருக்கு இன்பத்திற்கு பதில் துன்பத்தை தான் கொடுத்தது… ஷ்ரவனும்
இரண்டாம் கட்டம் அழுகைக்கு தயாராகினான்..
சிவா சுதாவும் அவர்களை சமாதானம் படுத்தும் நிலையில் இல்லை..
அவர்களுக்கு இரண்டாவதாக பெண் மகவு பிறந்து ஒரு மாதத்திலே காய்ச்சல்
வந்து இறந்து விட்டது.. அவர்கள் மூவரும் மிகவும் நொந்துவிட்டனர்..
அப்பொழுது தான் வானதி பிறந்து அவர்களை அத்துன்பத்திலிருந்து மீ ட்டாள்…
இதுவரைக்கும் வானதியை அவர்களின் சொந்த மகள் போலத்தான் பார்த்துக்
கொண்டிருந்தனர்.. அவளும் பெரும்பாலும் அவர்கள் வட்டில்
ீ தான் இருப்பாள்..
ஆனால் இப்பொழுது அவள் இங்கிருந்து செல்லும் வேளை அவர்கள் படும்
வேதனை.. சந்திரன் குந்தவையின் வேதனைக்கு இணையானது..
தர்ஷன் ஒரு புரம் கண்கலங்கி நிற்க.. வானதிக்கும் அவர்களை
பிரியப்போவதை எண்ணி விழிகளில் நீர்ப்பெருக்கடுக்க.. அவர்களை நோக்கி
ஓடிவந்தாள்.. அவர்களும் அவளை எதிர்கொண்டு அணைத்தனர்..
சிவகாமி, சந்திரன், குந்தவை, சிவா, சுதா, தர்ஷன், ஷ்ரவன் என அனைவரது
அன்பென்னும் அணைப்பில் குளிர்காய்ந்தாள்..
செங்குட்டுவன், அழகு வள்ளியம்மை ஏன் வடுகம்மாள் கூட இவர்களின்
அன்பை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால்.. கணபதி
செட்டியாரின் குடும்பம் அசூசையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்…
அருளிற்கு இவர்களின் பாசப்பிணைப்பைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தாலும்..
தன் நெஞ்சத்தில் ஆறுதல் தேடுவதை விடுத்து.. அவன் மனைவி அனைவரின்
அணைப்பிலிருந்ததைக் கண்டு ஒருபக்கம் பொறாமை பொங்க செய்தது..
அதனால்.. போதும் போதும் எல்லாரும் இப்படி இறுக்கினா என் பொண்டாட்டி
என்ன ஆகுறது.. என்றவன் மெல்ல அவர்களிடத்திலிருந்து அவளை பிரித்து
தன் தோளில் சாய்த்துக் கொண்டான் இறுக்கமாக..
அவனின் செய்கையைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க.. குந்தவை முறைக்க
ஆரம்பித்தாள்..
சிவகாமி.. சரி வாங்க சாப்பிட போகலாம்.. நல்ல நேரம் போரதுக்குள்ள
கிளம்பனுமில்ல.. என அனைவரையும் உணவுண்ண அழைத்தார்…
வள்ளியம்மை சுதா குந்தவை பரிமாற மற்றவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர்..
தர்ஷன் மட்டும் கன்னத்தில் கைவைத்து சாப்பாட்டு பாத்திரங்களை
பார்வையிட்டுக் கொண்டிருந்தான்..
சிவகாமி.. என்னடா சாப்பிடாம பாத்திரத்தையே பார்த்துட்டு இருக்க..
ஹ்ம்ம்ம் இதையெல்லாம் பார்த்தவுடனே என் வயிறு நிறைஞ்சுருச்சு.. ஒரு
மினி முனியாண்டி விலாஸே இங்க தான் இருக்கு.. என முனுமுனுத்தவன்
வெளியில் ஈஈஈ என சிரித்து.. ஏன் க்ரானி இவ்வளவு ஐட்டம்.. ரெண்டு மூனு
மட்டும் செஞ்சுருக்கலாம்ல..
ப்ச் போடா நானே கம்மியா பண்ணிட்டேன்னு வருத்தப்படுறேன்.. நீ என்ன
கிண்டல் பண்றியா.. பெருசா என்ன செஞ்சுருக்கேன்.. நாட்டுக்கோழி குழம்பு,
தந்தூரி சிக்கன், சிக்கன் வறுவல், தேங்காய் பால் இறால் குழம்பு, மட்டன்
குழம்பு, ஆட்டு ஈரல் பிரட்டல், மட்டன் மிளகு கறி, கெழுத்தி மீ ன் குழம்பு,
வஞ்சர மீ ன் வறுவல், குடல் மிளகு கறி, நண்டு வறுவல், ரோஜாப்பூ ரசம்,
இளநீர் சூப், தம்புருட் அல்வா, குறுவை அரிசிப் பாயாசம்ன்னு கொஞ்சமா
தான் செஞ்சுருக்கேன்.. என கூறியதும்..
தர்ஷன்.. இது கொஞ்சமா என வாய் பிளந்தவன்... அக்கம் பக்கத்தில் பார்க்க
அனைவரும் புள் கட்டு கட்டிக்கொண்டிருந்தனர்.. அதைக் கண்டு அவனுக்கு
மேலும் அதிர்ச்சி..
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 24
கணபதியின் வட்டில்
ீ அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க..
அப்பொழுது புயலென உள்ளே வந்தனர் குந்தவையும் அருளும்..
பேச்சி.. வா.. அருளு என்ன திடுதிப்புன்னு வந்து நிற்கிற.. என அவனை
வரவேற்றவர்.. குந்தவையின் பக்கம் முகம் திருப்பவில்லை.. அவரைத்
தொடர்ந்து அனைவரும் அருளை மட்டுமே வரவேற்றனர்..
ஏற்கனவே கோபத்தில் கொந்தளித்த மனதுடன் வந்திருந்த அருள்.. தன்
அக்காவை அவமானப்படுத்துவது போல் அவர்கள் நடந்துகொள்ளவும்..
அவனுக்கு மேலும் கோபம் வந்தது…
இவர்களின் மனநிலை அறியாத தில்லை.. மாமா என்ற சந்தோஷக்குரலுடன்
அவன் கரத்தை பிடிக்க வந்ததுதான் தாமதம்.. குந்தவை விட்ட அறையில்
தூரப்போய் விழுந்தாள்..
கன்னம் தீயாய் எரிய.. அதிர்ச்சியுடன் குந்தவையை பார்க்க அவளோ
காளியாய் நின்றுக்கொண்டிருந்தாள்.. அதுவும் அவள் முகத்தில் இருந்த
ஆக்ரோஷத்தைக் கண்டு.. தில்லைக்கு பயம் பிடித்தது.. மேலும்
அவளறியாமலே விழிகளும் கலங்க ஆரம்பித்தன..
ஏய் என் வட்டுக்கு
ீ வந்து என் மக மேலையே கை வைக்கிறியா என புஷ்பா
துள்ளிக்கிட்டு முன்னால் வர.. குந்தவை பாரபட்சம்மின்றி அவளுக்கும்
அறைவைத்தாள்…
ஏய் உன்னை மாதிரி கெட்டுப்போனவெல்லாம் என் வட்டுக்குள்ள
ீ வரதே
தப்பு.. இதுல என் பொண்னையும் பொண்டாட்டியையும் அடிக்கிறியா.. என்ற
செல்வம் குந்தவையின் மேல் உள்ள ஒட்டு மொத்த வன்மத்தையும் ஒரு
அறையில் காண்பிக்கும் வெறியோடு கையை ஓங்கிக் கொண்டு வந்தார்..
செல்வத்தால் கரத்தை குந்தவை நோக்கி உயர்த்தத்தான் முடிந்தது.. வேறு
எதுவும் செய்ய முடியவில்லை.. அருள் செல்வத்தின் சுண்டு விரல் நகம் கூட
குந்தவையின் மேல் படாதவாறு அவர் கரங்களை இறுக்கமாக
பிடித்திருந்தான்..
என் முன்னாடியே எங்கக்காவ அடிக்க கை ஓங்குறீங்களா என அவன்
கரத்திற்க்கு அழுத்தம் கொடுக்க.. செல்வத்திற்கு உயிர் போகும் வலி..
மற்றவர்களுக்கு அது சாதாரண பிடியாக தெரியலாம்.. ஆனால் செல்வத்திற்கு
மட்டும்தான் அந்த பிடியின் அழுத்தமும் வலியும் தெரியும்..
அவன் மேலும் மேலும் அழுத்தம் கொடுக்க.. செல்வத்திடமிருந்து முனங்கல்
வர ஆரம்பித்தது.. அருளு என்ன பண்ற.. அவன் உன் தாய்மாமன்..
அவன்கிட்ட இப்படித்தான் நடந்துக்குவியா.. நீ யார் சொல்லி இப்படியெல்லாம்
பண்ற.. என குந்தவையை ஜாடையாக பார்த்தவாறு கூறியவர்.. அருளின்
கரத்தை பிரிக்க முயற்சி செய்தார்…
பேச்சியின் பேச்சில் கோபம் கொண்ட அருள்.. செல்வத்தை விடுத்து.. போதும்
இதுக்கும் மேல யாராவது பேசுன ீங்க.. இந்த அருளோட இன்னொரு முகத்தை
பார்ப்பிங்க என கர்ஜிக்க.. பேச்சியின் பெருத்த உடல் அதிர்ந்தது..
குந்தவை.. உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம் இருந்தா என் மகள
கொல்லுறதுக்கு விஷம் கொடுக்க பார்த்திருப்பீங்க என அழுத்தமும்
கோபமுமான குரலில் கேட்க.. அனைவரும் மின்சாரம் தாக்கியது போல்
அதிர்ந்து நின்றார்கள்…
ஒரு நிமிடம் தான் அந்த அதிர்வும்.. மறுநொடி.. என்ன அருளு.. உங்கக்கா
என்னென்னமோ சொல்லுது.. நாங்க ஏன் உன் பொண்டாட்டிய கொல்லப்
போறோம்.. அதுனால எங்களுக்கு என்ன கிடைக்கும்.. நீ இப்படி பேசுறது
மட்டும் வள்ளிக்கு தெரிஞ்சது உயிரையே விட்ருவா என முதலைக் கண்ணர்ீ
வடித்து பாசாங்கு செய்ய.. அப்பொழுது அவரைப் பார்த்த அருளின்
பார்வையில் துளியும் மரியாதை இல்லை..
ஒஹ்ஹ.. என கேலியாக இழுத்தவன் அக்கா வெளியே இருக்கிறவர வர
சொல்லுங்க… அவரைப் பார்த்தாவது இவங்க உண்மைய
சொல்லுறாங்களான்னு பார்க்கலாம்.. என்றதும் குந்தவை அழைத்து வந்த
நபரைப் பார்த்து செல்வத்தின் முகம் வெளிறியது..
ஹ்ம்ம்ம் என்ன மாமா இவரு யாருன்னு உங்களுக்கு தெரியுதா..
செல்வம்.. தொண்டைக்குழியில் சிக்கியிருந்த பயப்பந்தை.. எச்சிலோடு
முழுங்கிக் கொண்டு இல்லையென தலையாட்டினார்..
ஒஹ்ஹ வயசாயிடுச்சுல.. நியாபக மறதியா இருக்கும்.. என நக்கல்
செய்தவன்.. அந்த பெரியவரிடம் செல்வத்தை தெரியுமா எனக்கேட்டான்…
‘’ தெரியும் தம்பி.. ரெண்டு முறை என்கிட்ட வந்து மருந்து வாங்கிட்டு
போனாரு.. ‘’
குந்தவை ‘’ என்ன மருந்து.. ‘’
அது.. கர்ப்பம் தரிக்காம இருக்கிற மருந்தும்மா.. அத தொடர்ந்து ஒரு
வாரத்துக்கு சாப்பிட்டா அந்த பொண்ணுக்கு வாழ்க்கை முழுக்கும் பிள்ளையே
பிறக்காது.. அப்புறம் ஒரு வாரம் முன்னாடி வந்து ஆளையே கொல்ற
அளவுக்கு வரியமுள்ள
ீ மருந்து எதுன்னு கேட்டு வாங்கிட்டு
போனாருங்கம்மா..
இல்லை.. மாப்பிளை இவன் பொய் சொல்றான்.. நீங்க அந்த வேலைக்காரி
ராமாயி பேச்சையும் இவன் பேச்சையும் கேட்டுகிட்டு என்னைய சந்தேகம்
படாதீங்க.. என தன்னை நிரூபிக்கும் நோக்கத்தோடு.. வாயில் வந்ததை
சொல்ல..
குந்தவையும் அருளும் ஒருவரொருவர் பார்த்துக் கொண்டனர்.. யார
சொல்றிங்க மாமா.. ராமாயியா அவங்கள பத்தி நாங்க பேசவேயில்லையே
என அருள் அமர்த்தலாக கூறவும்.. செல்வம் மாட்டிக்கொண்ட பாவனையில்
விழித்தார்..
அவருக்கு சட்டென்று.. என்ன சொல்வது என புரியாமல்.. அது.. அது.. நீங்க
அந்த பேர சொன்ன மாதிரி இருந்துச்சு.. என வாய்க்கு வந்ததை
உளறிக்கொட்டினார்..
அவர் மீ ண்டும் மீ ண்டும் பொய் சொன்னதில்.. கோபம் கொண்ட அருள்
பக்கத்தில் இருந்த மரநாற்காலியை.. சரியாய் செல்வம் பக்கத்திலிருந்த
தூணில் விட்டெறிய.. அதன் வேகத்தில் நாற்காலி உடைந்து அதன் சிதல்கள்
செல்வத்தின் கை முகம் கழுத்து போன்ற இடங்களில் கீ றி ரத்தம் வர
ஆரம்பித்தது…
கணபதி குடும்பத்தார் அருளின் இம்முகத்தைக் கண்டு சர்வமும் அதிர்ந்து
நின்றனர்.. தன் தாய்மாமன் மேல் கை வைக்காமல் அவன் உடலின் பல
இடங்களில் குருதியை வரவைத்து விட்டான்… அருள்மொழி பாண்டியன்..
இப்போ சொல்ல போறிங்களா.. இல்லையா.. ஏன் என் பொண்டாட்டிய
கொல்ல முயற்சி பண்ண ீங்க.. இந்த அருள்மொழி பாண்டியன் பொண்டாட்டிய
கொல்ற அளவுக்கு உங்களுக்கு எங்கேயிருந்து இவ்வளவு தைரியம் வந்துச்சு..
அவ என்னோட உயிர்.. என்னைத் தாண்டிதான் எதுவும் அவள தொட முடியும்
என ஆக்ரோஷமாக கர்ஜிக்க..
ஆமா.. நாங்கதான் அவளுக்கு புள்ள பிறக்க கூடாதுன்னு மருந்து கொடுக்க
சொன்னோம்.. அவளுக்கு குழந்தையில்லன்னா எப்படியும் நீங்க
என்னைத்தானே கல்யாணம் பண்ணிப்பிங்க அதுனாலதான்.. ஆனா அதையும்
மீ றி அவளுக்கு குழந்தை வரப்போகுது.. அதான் அவளை மொத்தமா அழிக்க
முடிவு பண்ணேன்.. இனியும் முயற்சி பண்ணுவேன்.. யாருக்காகவும்
எதுக்காவும் நான் உங்கள விட்டுக்கொடுக்க மாட்டேன்.. நீ எனக்குத்தான்..
எனக்கு மட்டும்தான்.. என்று தொண்டை கிழிய கத்தினாள்.. ஆரம்பத்தில்
அருள் குந்தவையின் செய்கையில் அவள் மிரண்டாலும்.. அருள் வானதி
குறித்து பேசியவுடன் அவளின் பழைய ஆங்காரமும் வெறியும் மேலெழும்ப..
அவளின் மனஅழுக்குகள் அனைத்தும் வார்த்தையாக வெளியேறியது..
அவள் கூறிய மறுநொடி.. தில்லையின் செவிப்பறை கிழியும் அளவிற்கு
குந்தவை மறு அறை வைத்தாள்.. அதோடு அவள் கழுத்தை தூணில் சாய்த்து
அழுத்திப் பிடிக்க.. தில்லை மூச்சு விட முடியாமல் திணறினாள்..
பேச்சியும் புஷ்பாவும் அவள் கரத்தை விலக்க பார்க்க.. இடது கரத்தால்
அவர்களை தள்ளி விட்டவள்.. என்ன சொன்ன.. என் பொண்ண.. இந்த
குந்தவை நாச்சியார் பொண்ண நீ கொல்லப்போறியா.. சொல்லுடி.. என
கழுத்தை அழுத்த அவள் விழிகள் சொருக தொடங்கியது.. தடுக்க முயன்ற
செல்வத்தின் காலை அருள் தட்டிவிட.. அவனால் எழுந்திரிக்க
முடியவில்லை.. கணபதி செட்டியாரோ அதிர்ச்சியில் அசைவென்பதே மறந்து
சிலை போல் நின்றிருந்தார்..
சாவின் விளிம்பிர்க்கு அவள் சென்ற பொழுது.. கரத்தை எடுக்க..
குந்தவையின் காலில் மயக்கமும் விழிப்புமாக விழுந்தாள்..
தொண்டையிலிருந்து விடாமல் இருமல் வந்துக் கொண்டிருந்தது..
இப்பவே இந்த இடத்துலயே.. உன்னை சமாதி ஆக்கிருவேன்.. என்ற குந்தவை
தன் பாதத்தைக் கொண்டு தில்லையின் கழுத்தில் அழுத்த.. பேச்சி புஷ்பா
இருவரும் கிட்டத்தட்ட குந்தவையின் காலை பிடித்து கெஞ்சும் அளவிற்கு
வர.. அதன் பின்பே காலை நகர்த்தினாள்..
என்னோட வள்ளிம்மா முகத்துக்காக மட்டும்தான் உங்க எல்லாரையும்
உயிரோட விடுறேன்.. இல்லைன்னா இந்த இடத்திலே வெட்டி
புதைச்சுடுவோம்.. இனிமே எங்க குடும்பத்துபக்கம் உங்க நிழல் கூட
படக்கூடாது என எச்சரித்து விட்டு திரும்பினாள்..
அருளோ.. ம்ம்ம் எங்கக்கா வேணா ஆத்தா முகத்துக்காக உங்கள இதோட
விட்ருக்கலாம்.. ஆனா நான் விடமாட்டேன்.. என அருள் கூறியதும்..
கணபதியின் கண்களில் உயிர் பயம் தெரிய அதைக் கண்டு சிரித்தவன்..
பயப்படாதீங்க அவ்வளவு சீக்கிரம்.. உங்க உயிர் போகாது.. உங்களோட
உண்மையான உயிர் எது.. உங்க சொத்தும் கௌவுரவமும் தானே.. அதத்தான்
நான் அழிக்க போறேன் என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே.. இரண்டு
மூன்று பேர் ஓடிவந்து ‘’ அய்யா நம்ம மில்லுல தீப்பிடிச்சுடுச்சு அய்யா..
ஒன்னுமே மிஞ்சல.. நம்ம குடோனும் தீப்பிடிச்சுடுங்கய்யா.. என அவர்கள்
கூறவும் கணபதி ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார்…
அருள் அவர்களின் நிலையைக் கண்டு இதழ்களில் தோன்றிய
வெற்றிச்சிரிப்புடன்.. குந்தவையை கூட்டிக்கொண்டு சென்றான்..
எப்படிடா.. அந்த பெரியவர உனக்கு தெரியும்..
இந்த வட்டு
ீ டிரைவர் எனக்கு தெரிஞ்சவன்.. சுருக்கமா சொல்லனும்னா
என்னோட கையாள்.. அவன் கிட்ட கேட்டேன்.. அவன்தான் இவரு
நாட்டுமருந்து கடைக்கு போனதா சொன்னான்..
ம்ம்ம் என்ற குந்தவையின் முகத்தில் யோசனை முடிச்சுக்கள்.. எதுக்கும்
அவங்கள கண்காணிப்புல வச்சுக்க.. அந்த தில்லையோட பேச்சும் பார்வையும்
சரியில்ல..
ம்ம்ம்ம்..
குந்தவையும் அருளும்.. வட்டில்
ீ உள்ளவர்களிடம் அங்கு நடந்ததை ஒன்று
விடாமல் கூறினர்.. அதில் வள்ளியம்மைக்கு கொஞ்சம் நஞ்சம்மிருந்த பிறந்த
வட்டு
ீ பாசமும் மொத்தமாய் அற்றுவிட்டது..
அத்தை குலதெய்வ கோயிலுக்கு போகனும்னு சொன்னிங்கள்ல.. வாங்க
அதுக்கான ஏற்ப்பாட்டை பார்ப்போம்.. இப்போ வானதிக்கு எந்த
விஷயத்தையும் சொல்ல வேண்டாம்.. பிள்ளைத்தாச்சி மனசு
கஷ்டப்படக்கூடாது என்றவர் அடுத்த வேலைகளை பார்க்க சென்றார்.. இனி
அவர்கள் எனக்கு ஒன்றுமில்லையென சொல்லாமல் சொல்லிச்சென்ற
வள்ளியம்மையையே மற்றவர்கள் அன்பும் பெருமையுமாய் பார்த்தனர்..
வள்ளியம்மை கூறியது போல் யாரும் தில்லை பற்றியும் அவள்
குடும்பத்தாரைப் பற்றியும் வானதியிடம் கூறவில்லை… ஆனால் வெகு
விரைவிலே இதனை குறித்து வருத்தப்பட போகிறோம் என அவர்களுக்கு
தெரியவில்லை..
ஆம் செல்வமும் தில்லையும் காலைச்சுற்றிய பாம்புகள்.. கடிக்காமல்
விடாது.. அதுவும் இப்பொழுது அடிப்பட்ட பாம்பு கூட.. தில்லை செல்வம்
மாதிரியான ஜென்மங்கள் எவ்வளவு பட்டாலும் திருந்தாது.. அதற்க்கேற்றார்
போல் இருவரும் அருளையும் வானதியையும் பழிவாங்குவது பற்றித்தான்
யோசித்துக் கொண்டிருந்தனர்..
இனி நீங்க என்னைய ஏத்துக்க மாட்டிங்கன்னு நல்லா புரிஞ்சுடுச்சு.. மாமா.
அதுனால நாம ரெண்டுபேருமே இங்க இருக்க வேணாம்.. நாம மேல போயி
எல்லாரையும் மறந்துட்டு சந்தோஷமா இருப்போம்.. என பைத்தியக்காரி
போல் மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தாள்.. தில்லையம்மை.
செல்வமோ ‘’ உன்னைய சும்மா விடமாட்டேண்டி.. நீயும் உன் மவளும்
தானே அவனுக்கு ரொம்ப முக்கியமானவங்க.. உங்கள இல்லாம செஞ்சு..
தாய்மாமன்னு கூட பார்க்காம என்னைய அவமானப்படுத்துன அவன தினம்
தினம் கதறவிடுறேன்னா இல்லையா பாரு.. ‘’ என வன்மமாய்
எண்ணிக்கொண்டிருந்தான்..
வடுகம்மாளின் வேண்டுதலின்படி சொந்த பந்தங்களோடு செங்குட்டுவன்
குடும்பத்தார் குலதெய்வம் கோயிலுக்கு சென்றனர்.. காலையிலிருந்தே
குந்தவையின் மனம் சஞ்சலமாக இருந்தது.. மேலும் ஏனென்று புரியாமல்
வேலுநாச்சியாரின் நினைவும் அதிகம் தாக்க.. ஒருவித கலக்க நிலையிலே
இருந்தாள்…
பொங்கல் வைத்து.. கிடா வெட்டு ஆரம்பித்தது.. செங்குட்டுவனும் அழகுவும்
ஊர் பெரிய மனிதர்களிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க.. வள்ளியம்மை
வடுகம்மாள் குந்தவை மூவரும் சமையலில் ஈடுபட்டிருந்தனர்.. வானதி
ஷ்ரவனோடும் சிவகாமியோடும் வாயடித்துக் கொண்டிருந்தாள்.. அப்பப்போ
சந்திரனோடு பேசிக்கொண்டிருந்த தன்னவனை சைட் அடிக்கவும்
தவறவில்லை…
சந்திரன் ‘’ இவ்வளவு பிரச்சனை நடந்துருக்கு.. நீயும் குந்தவையும் அமைதியா
இருக்கிங்க.. எனக்கென்னமோ அந்த செல்வம் இதோட விடுவான்னு
தோனலை.. ‘’
‘’ ம்ம்ம்ம் ‘’ என்ற அருளின் முகத்திலும் பலத்த யோசனை..
வானதி ‘’ ஹலோ தர்ஷு.. ‘’
‘’ பேபி எப்படியிருக்க.. என் குட்டி பேபி எப்படி இருக்காங்க.. ‘’
‘’ அடேய் டோமரு.. ரெண்டு நாள் முன்னாடி தானடா பேசுனேன்.. அதுக்குள்ள
என்னாயிருவேனா.. ‘’
‘’ ச்சு போடி.. ‘’
‘’ சரி சரி எப்போ இங்க வர.. ‘
‘’ ம்ம்ம்ம்ம் பார்க்கிறேண்டி.. இங்க கம்பெனில ஒரே வேலை என அவன்
சொல்லிக் கொண்டிருக்கும் போது சிக்னல் தடைபட இவள் ஹலோ.. ஹலோ
என கத்தியவாறு சிக்னல் தேடி கூட்டத்தை விட்டு தனியே பிரிந்தாள்..
குந்தவை மற்றும் வானதியை கொன்று பழி தீர்க்கும் வெறியோடு
கருவக்காட்டின் மத்தியில் நின்றிருந்த செல்வத்தின் கண்கள்.. வானதி மட்டும்
தனியே செல்வதைக் கண்டு மின்னியது..
வெகுதூரம் வந்த வானதி.. சிக்னல் கிடைக்காதலால் சலிப்புடன்
திரும்பியவள்.. அருகில் நின்றிருந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்டாள்…
ஓர் நிமிடம் தான் அந்த திடுக்கிடல்.. அவளுக்கு இவர்களின் உண்மையான
முகம் தெரியாதலால்.. என்ன பெரியப்பா.. இப்போ தான் வந்திங்களா.. மச்சான்
ஐயா எல்லாம் கோவில்ல நிக்குறாங்க.. வாங்க போலாம் என வெள்ளைச்
சிரிப்புடன் கூப்பிட..
குள்ளநரியான செல்வமோ வானதியின் பின்னால் பார்க்க… அவளும்
செல்வத்தின் செய்கை புரியாது திரும்ப.. இருவர் அவள் முகத்தில் மயக்க
மருந்து தடவிய கர்ச்சீப்பை முகத்தில் வைத்து அழுத்தினர்.. பின் செல்வம்
அவள் போனிலிருந்து குந்தவைக்கு அழைத்து ‘’ உன் பொண்ண உயிரோட
பார்க்கனும்னா.. கருவக்காட்டுக்குள்ள வா.. யார்க்கிட்டயும் எதுவும்
சொல்லாம.. மீ றி ஏதாவது சொல்லனும்னு நினைச்ச உன் மவ சங்க
அறுத்துருவேன்.. உன்னை என் ஆளு கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கான்..
என்று போனை வைத்தான்.. குந்தவை சுற்றியும் முற்றியும் பார்க்க இருவர்
தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் யாரும் அறியாது.. காட்டிற்குள்
சென்றாள்.. அவளை கண்காணித்த இருவரும் அவள் பின்னே செல்ல
ஆரம்பித்தனர்…
இங்கோ சந்திரனோடு பேசிக்கொண்டிருந்த அருளிற்கு ஏதோ தப்பாக பட..
சட்டென்று திரும்பி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.. அப்பத்தா ஆத்தா ஐயா
அப்புச்சி ஷ்ரவன் சிவகாமி என அனைவரும் இருக்க.. குந்தவையும்
வானதியையும் காணவில்லை.. அதைக் கண்டு திடுக்கிட்ட அருள் உடனே
பரபரப்பாய் சுற்றியும் முற்றியும் தேடினான்..
சந்திரன் அருளின் பதட்டத்தைக் கண்டு.. என்னாச்சு மாப்பிளை..
அக்காவையும் வானதியையும் காணும் மாமா.. என்றான் தேடிக்கொண்டே..
எங்க போயிருக்க போறாங்க.. இங்க தான் இருப்பாங்க.. இரு நான் போன்
பண்ணி பார்க்கிறேன் என்று வானதிக்கு அழைக்க போன் போகவில்லை..
குந்தவைக்கு அழைக்க.. அவள் போன் ஷ்ரவனிடம் இருந்தது..
குந்தவை.. நீ தப்புக்கு மேல தப்பு பண்ற செல்வம்.. எங்கள விடு.. என்
தம்பிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுச்சு.. உன்னைய உயிரோடவே விட
மாட்டான்.. என்ற குந்தவை தன்னை பிடித்திருந்தவர்களிடமிருந்து விடுபட
போராடியவாறு கூறினாள்..
கருவக்காடு அதிரும்மளவிற்கு சிரித்த செல்வம்.. என்ன சொன்ன உன்
தொம்பி என்னைய போட்ருவானா.. பதினேழு வயசுல உங்காத்தால
கொன்னு.. இருபத்தஞ்சு வயசுல உங்க வட்டுக்குள்ளையே
ீ வந்து உன்
தாவணிய உருவுன என்னைய இன்னும் உன் வட்டு
ீ ஆம்பளைங்க
கண்டுபிடிக்கல.. இப்போ மட்டும் என்ன புடுங்க போறாய்ங்க.. என்று அவன்
நக்கலாக கூறியதும்.. குந்தவையின் காலடியில் பூமி நழுவும் உணர்வு.. தான்
கேட்டது சரிதானா என உள்ளுக்குள் அதிர்ந்து நடுங்கியவள்..
என்ன.. என்ன சொல்ற.. என நடுங்கும் குரலில் கேட்டாள்..
குந்தவையின் நடுக்கம்.. செல்வத்திற்கு போதையேற்றிய மயக்கம் தர..
வேலுநாச்சியாரை எப்படி கொன்றான் என்பதையும்.. அவள் வலியில்
கதறியதையும் காப்பாற்றுமாறு துடித்ததையும் உதட்டில் தோண்றிய
வஞ்சச்சிரிப்புடன்.. கூற குந்தவையின் மனம் தன் தாயை எண்ணி
வேதனையில் துடித்தது என்றால் விழிகள் கண்ண ீர் துளிகளை பொழிய
ஆரம்பித்தது..
ஏன்டா.. ஏன் இப்படி பண்ண.. நாங்க உனக்கு என்ன பாவம் செஞ்சோம்..
எதுக்காக எங்கம்மாவ கொன்ன என்று கதறியவளின் மனதில்.. பசுமரத்தாணி
போல் பதிந்திருந்த தாயின் கடைசி நிமிட நிகழ்வுகள் கண் முன் வந்து போக..
அவள் அழுகை அதிகமாகியது..
அதை கண்டு மகிழ்ந்த செல்வம்.. சரி சரி அழாத.. அதான் இன்னும் கொஞ்ச
நேரத்துல நீயும் உன் மவளும் உங்கம்மாவுக்கு துணைக்கு போக
போறிங்களே.. அப்புறம் என்ன.. என்று கேலியாக கூறியவன் தன்
இடுப்பிலிருந்த கத்தியை எடுத்தவாறு.. ம்ம்ம் முதல்ல யாரக் கொல்லலாம்..
உன்னையக் கொல்லவா இல்லை.. இல்லை உன் மகளக் கொல்லவா.. என
மயங்கியிருந்த வானதியின் அருகில் வர.. குந்தவை பதறினாள்..
மாமா என்று ஓடிவந்த தில்லையைக் கண்டு அருளின் கோபம்.. அதிகமாக..
ஏய் எங்கக்காவும் வானதியும் எங்க.. நீயும் உன் குடும்பமும்தான் ஏதோ
பண்ணியிருக்கிங்க.. சொல்லு.. என அவள் கழுத்தை பிடித்து அழுத்தினாள்..
மாமா.. நான் சொல்றத கேளுங்க.. அவங்க உயிர் ஆபத்துல இருக்கு என
திக்கித்திணறி கூற.. அருளின் கரத்தை விலக்கிய சந்திரன்.. அவங்க
ரெண்டுபேரும் எங்கம்மா சொல்லு..
அதெல்லாம் இப்போ சொல்றதுக்கு நேரமில்லை.. கருவக்காட்டுக்குள்ள தான்
குந்தவை சித்தியும் அக்காவும் இருக்காங்க… அப்புச்சி தான் அவங்க ரெண்டு
பேரையும் அங்க வரவழைச்சுருக்கணும்.. அவரோடு இன்னும் சிலர்
இருக்காங்க.. சீக்கிரம் வாங்க உங்களுக்கு நம்பிக்கையில்லைனா.. நிறைய
பேர கூட்டிட்டு வாங்க.. என அவள் கூறியதும்..
அருள் நொடியும் தாமதிக்காது கருவக்காட்டிற்குள் நுழைய.. சந்திரன்
செங்குட்டுவன் அழகு இன்னும் சிலர் அவனை பின்தொடர்ந்தனர்..
அருள் அவர்கள் இருக்குமிடத்தை நெருங்கும் பொழுது செல்வம்
மயக்கத்திலிருந்து வானதியின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்த அதைக்
கண்டு உடல் நடுங்கிய அருள் நொடியும் தாமதிக்காது கீ ழே இருந்த கல்லை
எடுத்து செல்வத்தின் மீ து வசியவன்..
ீ அவர்களை நோக்கி ஓடி வந்தான்….
கல்வந்த வேகத்தில் தடுமாறிய செல்வத்தின் கரத்தில் உள்ள கத்தி கீ ழே
விழுந்த சமயம்… அருள் தன் முறுக்கேறிய கரங்களால் செல்வத்தின்
கழுத்தை நெறிக்க.. செல்வத்தின் ஆட்கள் குந்தவையை விடுத்து அருளை
பிடித்துக் கொண்டனர்..
காளை தன் மேல் விழுபவர்களை ஒரு சிலுப்பலில் எவ்வாறு கீ ழே
தள்ளுமோ அது போல் தன்னை பிடித்திருந்தவர்களை ஒரு சிலுப்பலில் கீ ழே
தள்ளியவன்.. செல்வத்தை புரட்டி எடுக்க ஆரம்பித்தான்..
வெறிக்கொண்ட சிங்கத்தின் ஒரு அடிக்கு அந்த கிழட்டு குள்ளநரியால் ஈடு
கொடுக்க முடியவில்லை.. அதற்குள் சந்திரனும் மற்றவர்களும் வந்து
செல்வத்தின் கையாள்களை ஒரு கை பார்த்து விட்டனர்..
ரத்தம் தேய்ந்த முகத்துடன் செல்வம் கீ ழே விழவும் தான் அருள் அடிப்பதை
நிறுத்தினான்.. குந்தவை வானதியை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்க..
அருள் பரிதவிப்பும் நடுக்கமுமாக.. அவளிடத்தில் நெருங்கி தன் ஒட்டுமொத்த
நேசத்தையும் இத்தனை நேரம் தான் பட்ட பரிதவிப்பையும் ‘’ அம்மாளு ‘’
என்ற ஒற்றைச் சொல்லில் காண்பித்து வானதியின் கன்னத்தை தட்ட..
பெண்ணவளின் நயனங்கள் தாமரை மலர்போல் மெல்ல
விரியத்தொடங்கியது…
மச்சான்.. என்ற மெல்லிய குரலில் அவனை அழைத்தவள்.. பயத்திலும்
அழுகையிலும் அவன் மார்பினில் சாய… அவளின் விழி மலர்த்தலிலும்
மச்சான் என்ற விளிப்பிலிலும் உயிர் வந்தவன்.. காற்று புகா அளவிற்கு
அவளை இறுக்கியனைத்து.. அவள் மதி முகத்தில் முத்தங்களை
வாரியிறைத்தான்..
இவர்களின் நிலையைக் கண்டு சந்தோஷமடைந்த குந்தவை.. அவர்களை
தொந்தரவு செய்யாமல் தன் தந்தையிடம் செல்வத்தின் செய்கைகள்
அனைத்தையும் கூறி கண்ண ீர் விட்டுக்கொண்டிருந்தாள்..
இதுவரை அங்கு நடந்ததையெல்லாம் ஓரமாக நின்று பார்த்துக்
கொண்டிருந்த.. தில்லையம்மை.. அருள் வானதியை அனைத்துக்
கொண்டிருந்த காட்சியைக் கண்டு.. வஞ்சத்திலும் குரோதத்திலும் உள்ளம்
கொதிக்க.. தன்னுள் மறைத்திருந்த விஷம் தேய்ந்த கூர்வாள் அமைப்பிலான
கத்தியைக் கொண்டு அருளின் முதுகில் குத்த வந்தாள்... அதே சமயம்
மயக்கத்திலிருந்த செல்வம் தன்னால் இனி தப்பிக்க முடியாது என அறிந்து..
இவர்களில் ஒருவரையாவது கொன்று அருள் குடும்பத்தினரை கதற வைக்க
வேண்டும் என வன்மம் கொண்டவன் அருகில் ஆணி பதிந்திருந்த
கட்டையைக் கொண்டு உலகம் மறந்து தங்களுக்குள் மூழ்கிருந்த அருள்
வானதியை நோக்கி வந்தான்..
தில்லையும் செல்வமும் அவர்களை நெருங்கும் சமயம்.. இதனை
கண்டுகொண்ட குந்தவை.. அருள் என கத்தியவாறு வந்தவள் அவர்களை
ஒருபக்கம் தள்ளிவிட தில்லையின் கத்தி செல்வத்தையும்.. செல்வத்தின்
கட்டை தில்லையையும் தாக்கியது..
இருவரும் இருபுறமும் விழுந்தனர்.. தில்லையின் தலையிலிருந்து குருதி
வழிய அவள் மயக்கமாக.. செல்வமோ விஷத்தின் வரியத்தால்
ீ உடல் வெட்டி
உயிரிழந்தார்.. ஒரு நொடியில் இவையனைத்தும் நடைபெற சுற்றியுள்ளோர்
அதிர்ச்சியில் உறைந்தார்களென்றால்.. வானதி மீ ண்டும் மயக்கமடைந்தாள்..
அத்தியாயம் 25
எபிலாக்…
நான்கு வருடங்கள் பிறகு…
அடியே.. விரசா வேலைய முடிக்காம.. அங்கன என்னடி வெட்டிப்பேச்சு
பேசிக்கிட்டு இருக்கீ ங்க.. வள்ளியம்மை.. பொங்கல் வைக்க ஆரம்பிச்சுட்டியா
இல்லியா.. அழகு கிடா வெட்ட ஆளுங்க வந்துட்டாங்களா… சீக்கிரம்
வெட்டிட்டோம்னா அடுத்து ஆக வேண்டிய வேலைய பார்க்கலாம்ல.. என
அனைவரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தார்.. வடுகம்மாள்..
அப்பொழுது அவரது புடவையை மலரினும் மெல்லிய பிஞ்சு விரல்கள்
இழுக்க.. கீ ழே பார்த்தவர் அங்கு அழுதுக் கொண்டு நின்றிருந்த தன் பேத்தி
கணிவிழி நாச்சியாரைக் கண்டதும்.. ‘’ ஆத்தி என்னாச்சு.. ஆத்தா ஏன் என்
தங்கம் அழுகுறாங்க.. என தூக்கி இடுப்பில் வைத்து.. அவளின் ஈரமான
விழிகளை துடைத்தவாறு கேட்க..
‘’ ம்மாயி.. கணி குத்திய கனி தள்ளி வித்துத்தான்.. ‘’ என்றாள் மழலையாய்..
‘’ அச்சோ அப்படியாத்தா.. இரு அம்மாயி அவன அடிக்கிறேன்.. ‘’ என அவளை
சமாதானம் படுத்தியவாறு அங்கிருந்த சிறுவர் பட்டாளத்திற்கு சென்றார்..
‘’ டேய்.. பாண்டியா என்னதுக்குடா என் செல்லத்த தள்ளிவிட்ட.. ‘’ என அருள்
வானதியின் இரண்டாம் வாரிசான மூன்று வயது கனிவிழியன்
பாண்டியனைக் கேட்டதும்.. அவரையும் அவர் இடுப்பில் பாவமாய்
அமர்ந்திருந்த தன் தமக்கையையும் முறைத்தவன்.. நா பாண்தியன் இல்ல..
கனிவிதிய பாண்தியன் என முறைப்பாய் கூறியவன்.. நான் அப்பித்தான்
தள்ளிவிதுவேன் என திமிராக கூறினான்.
அடியாத்தி.. இந்த வயசுலயே என்னா வாயி.. என முகவாயில் கைவைத்தவர்..
அப்பொழுது தன் ஐந்துமாதமேயான இரட்டை குழந்தையில் ஒன்றான
அதியன் பாண்டியனை தோளில் சுமந்தவாறு வந்துக் கொண்டிருந்த அருளைக்
கண்டவர்.. யய்யா அருளு.. இங்கன வந்து உன் மவன என்னன்னு கேளு..
என்ன அப்பத்தா என்னாச்சு..
அவர் நடந்ததைக் கூறவும்.. தன் மகனை முறைத்து.. மற்றொரு தோளில்
மகளைத் தாங்கியவன்.. வர வர உனக்கு சேட்டை அதிகமாயிடுச்சு.. எல்லாம்
உங்க ஆத்தா கொடுக்கிற செல்லம் எனவும்.. தந்தையை முறைத்த குட்டி
பாண்டியன்.. உடனே ம்மா ம்மா என கண்ணை கசக்கிக் கொண்டு
பெருங்குரலெடுத்து அழ.. வானதி அங்கே பிரசங்கமானாள்..
வந்தவள் யாரையும் கவனியாது.. என்னடா செல்லக்குட்டி ஏன் அழுகுறிங்க
என கொஞ்சலுடன் தன் மகனை கேட்க.. வடுகம்மாளும் அருளும் அவளை
முறைத்தனர்..
ஹ்க்கும் உன் மவன நீதான் மெச்சுக்கணும்.. பேத்திய தள்ளிவிட்ருக்கான்..
ஏன்டா விட்டேன்னு கேட்டா அப்படித்தான் தள்ளிவிடுவேன்னு திமுறா
சொல்லுறான்.. என வடுகம்மாள் குற்றம் சாட்ட..
வானதி.. மகனிடம் ‘’ என்ன நடந்துச்சு செல்லம்.. ‘’ என கன்னத்தை பிடித்து
கேட்டாள்..
நா மாமு கிஷ் எல்லாம் விளாந்தோம்.. அப்போ நா ந்து பிதிக்க ஓதுதேனேனா
அப்போ இவ தன் குக்க வந்தா.. நா டெதியாம தள்ளி வித்துதேன்.. மஹும்
ஹும் செஞ்சுத்தே போயித்தா.. எனவும் ஷ்ரவன் ஆமாக்கா.. தெரியாம தான்
குட்டி தள்ளிவிட்டான்.. விழி என்னன்னு கேட்காம அழுதுகிட்டே போயிட்டா..
வானதி வடுகம்மாளையும் அருளையும் தீயாய் முறைக்க அவர்கள்
விழித்தனர்.. கனி அவர்களை மேலும் மாட்டிக்கொடுக்கும் பொருட்டு.. ம்மா
ம்மாயி ப்ப்பா தெண்டு பேதுமே கனிகுத்திக்கிட்ட கேட்கமா தித்துனாங்க.. ப்பா
அதிக்க வந்தாங்க என கண்களை கசக்கிக் கொண்டு அழுவது போல்
ஆக்க்ஷன் போட.. வானதியின் முறைப்பு அதிகமாகியது.. அருளோ பாவமாய்
முழித்துக் கொண்டிருந்தான்..
டேய் நான் எங்கடா உன்னை அடிக்க வந்தேன்.. கையக்கூட தூக்கலடா.. என
பரிதாபமாய் கூற.. அதெற்கெல்லாம் அசராத குட்டி பாண்டியன்.. தாயின்
தோளில் முகம் புதைத்து அழுவது போல் தேம்பினான்.. வானதி திட்ட
வாயை திறக்க போக.. அம்மாளு அவன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு
கண்ணராவது
ீ இருக்கான்னு பார்த்துட்டு என்னைய திட்டு.. என்றதும் வானதி
குட்டி பாண்டியனை பார்க்க அவன் கண்ணே திறக்காமல் தாயின் கழுத்திலே
முகத்தை புதைத்திருந்தான்..
பாவம் என் பிள்ள அவனை ஏன்தான் இப்படி பண்றிங்களோ.. என கோபமாய்
கூறியவள் விழிகுட்டி தம்பி தெரியாம தானே தள்ளிவிட்டான்.. அதுக்கு
இப்படி அழலாமா என அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவள்.. இருவரையும்
சமாதானம் செய்து.. விளையாட அனுப்பினாள்.. அப்பொழுது அருளின்
கரத்தில் உள்ள அதியன் தாயிடம் தாவ.. அவனை வாங்கியவள்.. உங்கள
அப்புறம் கவனிச்சுக்குறேன்.. என மெல்லிய குரலில் முனுமுனுத்தவாறு
சென்றாள்..
டேய் உங்கம்மா கிட்ட சொன்னத என்கிட்ட சொல்லிருக்கலாமேடா..
ம்ம்ம்ம் ம்மா என்ன நந்துச்சுனு கேத்தாங்க நீங்க கேத்தின்களா.. என்ன
அதிப்பேன்னு சொன்ன.. என முறைப்பாய் கூறியவன் தன் சகோதரியுடன்
விளையாட சென்றுவிட்டான்..
என்ன மாப்பிள.. என் மருமவன் உங்கள நல்லா வச்சு செய்றான் போல என
கேலிசெய்தவாறு வந்தான் தர்ஷன்… அவன் தோளில் அருளின் மற்றொரு
இரட்டை ஆண்வாரிசு மகிழன் பாண்டியன் ஒய்யாரமாய் சாய்ந்திருந்தான்..
ம்ம்ம்ம்… என்ன பண்றது மச்சான்.. உன் தங்கச்சிய பிள்ளைய பெக்க சொன்னா
தொல்லைய பெத்து வச்சுருக்கா.. பயபுள்ள என்னா வில்லத்தனமான
நடந்துக்குது.. உனக்கு தெரியுமா மச்சான்.. இவ பொறக்கும் போதே சரியான
கேடி இவுங்க அம்மாவ பார்த்துதான் சிரிப்பான்.. என்னைய பார்த்தா மட்டும்
உர்ருனு முறைப்பான்.. தப்பித்தவறி இவன் முன்னாடி அவங்கம்மா கிட்ட
போனா போதும் கத்தியே ஊரைக்கூட்டிடுவான்.. என குறை கூறுவது போல்
சொன்னாலும் அதில் தந்தைக்கான பெருமிதமே அதிகமாய் இருந்தது..
ஹ்ம்ம்ம்.. எப்படி இருந்தாலும் உங்க காரியத்துல கரெக்ட்டா
இருந்துருக்கீ ங்களே மச்சான்.. நாலு வருஷத்துல நாலு பிள்ளைக்கு
அப்பாவாகிட்டு.. என்னமோ பக்கத்துலயே போகாத மாதிரி பில்டப்
கொடுக்கிறது என கலாய்க்க.. அருள் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
அடேய்.. நீ என்ன சொல்றியா.. கிருஷ்க்கு ஒருவயசு தான் ஆகியிருக்கு..
ஆனா சுபா தங்கச்சி இப்போ அஞ்சு மாசம்.. சார் என்ன செஞ்சீங்களாம் என
அவனும் கலாய்க்க தர்ஷன் அசடு வழிந்தான்..
எந்தநேரத்தில் வடுகம்மாள் வட்டில்
ீ பிள்ளைகள் சத்தம் கேட்கனும் என
வேண்டினார்களோ.. கணிவிழி பிறந்த ஒன்றை வருடத்தில் கனிவிழியன்
பிறக்க அடுத்த இருவருடத்தில் அதியன் மகிழன் என இரட்டை பிள்ளைகள்
என வட்டில்
ீ எந்நேரமும் அவர்கள் சத்தம் தான்..
இன்று விழிக்கும் கனியன்க்கும் மொட்டை அடித்து காதுகுத்துகிறார்கள்..
குந்தவை அனைவரையும் அழைக்க விழி ஷ்ரவன் மடியிலும் கனியன்
தர்ஷன் மடியிலும் அமர்ந்திருக்க இருவருக்கும் ஒரே நேரத்தில் மொட்டை
அடித்து காதுகுத்தினர்..
*****************************************
சிலுசிலுவென காற்றும் சலசலவென செல்லும் நீரோடையும்… முன்னாளில்
தான் கண்ட கனவை வானதிக்கு நியாபகம் படுத்த அவள் முகம் செம்மை
பூசிக்கொண்டது.. அன்று அவள் கனவில் இருந்த நாயகன்.. இன்று நினவாய்
அருகேயிருந்தான்…
தன்னவளின் முகத்திலிருந்தே அவளின் எண்ணப்போக்கை கண்டுகொண்ட
அருள்.. தன் கரத்தை கொண்டு அவள் இடையை இழுக்க.. கிட்டத்தட்ட அவன்
மடியில் வந்து அமர்ந்தாள்…
‘’ எப்படி அம்மாளு என்னைய பார்த்தவுடனே நீ காதல்ல விழுந்த.. என்றான்
எப்பொழுதும் போல்..
‘’ இதையே எத்தனை தடவ கேட்பிங்க மச்சான்..
ப்ச் சொல்லுடி என தாடையை பிடித்து கொஞ்சினான்..
வானதியும் தன்னவனை முதன் முதலாக சந்தித்த அந்த பொன்னான
நினைவுகளை கூறலானாள்.. கல்லூரியின் முதல் வருட படிப்பு முடியும்
தருவாயில்.. நிர்வாக முதல் வருட மாணவர்களை மதுரைக்கு டூர் அழைத்துச்
சென்றிருந்தது.. மதுரை மீ னாட்ச்சியம்மன் கடைவதிகளில்
ீ வானதியும் அவள்
தோழிகளும் சுற்றிக் கொண்டிருந்தனர்..
அப்பொழுது.. டேய் யாருகிட்ட என்ன பேசுற.. நாட்டரசன் கோட்டை
அருள்மொழி பாண்டியன்டா உன் கைகால இனுங்கி புடுவேன் பார்த்துக்க
என்ற ஆண்மை ததும்பும் சிம்மக்குரலில்.. திரும்பியவள் அக்குரலுக்கு
சொந்தக்காரனை பார்க்க ஆவல் கொண்டு.. சத்தம் வந்த திசையை நோக்கி
செல்ல.. மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறத்தில் வெள்ளை வேட்டி
சட்டையணிந்து.. ஆறடி உயரத்தில் கட்டுமஸ்த்தான உடலுடன் மீ சையை
முறுக்கிக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தவனை.. வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.. அவனிடத்திலிருந்த ஏதோ ஒன்று
அவளை ஈர்த்தது.. கரங்கள் அவளறியாமல் அவனை தன் போனில்
படம்பிடித்துக் கொண்டது..
அப்பொழுது அவள் தோழிகள் அவளை அழைக்கும் சத்தம் கேட்டு சென்றவள்
திரும்பி வந்து பார்க்கும் பொழுது அவன் இல்லை… அந்நிகழ்வை சாதாரணம்
என எண்ண சொல்லி மூளை கட்டளையிட.. மனமோ அவனின்றி நீயில்லை
என குரலிட்டது… இரண்டிற்கும் இடையில் தவித்தவள்.. தனக்கானவன்
தன்னிடம் வந்து சேருவான் என்ற நம்பிக்கையில் கனவுகளில் அவளவனோடு
தன் நேசத்தை பகிர்ந்தாள்….
அப்பொழுது இரண்டு வருடம் கழித்து ஒருநாள் தன் வட்டில்
ீ அருளைக்
கண்டதும் அதிர்ந்தவள் பேச்சின்றி இருக்க.. அந்த கூமுட்டையோ பயம் என
நினைத்து மயக்க மருந்தைக் கொடுத்து.. தூக்கி வந்தான்.. பிறகு
உண்மையெல்லாம் தெரிந்த பிறகு சொத்திற்காக தான் தன்னை மனம்
புரிகிறான் என நினைத்து வருந்தியவள்.. திருமணம் அன்று இரவு அவன்
நண்பனிடத்தில் பேசியத்தைக் கேட்டு.. அவளின் மொத்த வருத்தமும்
மாயமாய் மறைந்துவிட்டது….
வானதி கூறிமுடித்ததும் எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளிடத்தில்
காதல் பெருக.. அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்..
இயற்க்கையோடு கூடிய கூடல் தான் அருளிற்கு மிகவும் பிடித்தம்..
அவர்களின் தோட்டவட்டின்
ீ மாடி... மல்லிகைத் தோட்டத்திற்குள் நடுவில்
அமைந்துள்ள பரண்.. வைக்கோல்போர்.. இதோ இப்பொழுது ஆற்று
கரையோரம்.. இவர்களின் தோட்டத்திற்கு பக்கத்தில் உள்ள ஆறு என்பதாலும்
மாலை மயங்கிய நேரமென்பதாலும்.. இவர்களைத் தவிர அங்கு
யாருமில்லை.. சூரியன் சிறிது நேர முன்புதான் மறைந்திருப்பதால் அதிக
இருட்டும் கொஞ்சம் வெளிச்சமும் கொண்ட அவ்வேளை.. அருள் வானதியின்
பெண்மை பொக்கிஷங்களுக்குள் தன் கரத்தை அலையவிட வானதி சுகத்தில்
தவித்தாள்..
தனக்கு தொந்தரவாக உள்ள ஒவ்வொரு தடையையும் அருளின் கரங்கள்
விலக்க நங்கையவள் வெட்கத்தில் விழி மூடினாள்.. வெண்ணையில்
குழைத்த சந்தன மேனியவளின் மேல் அருள் படர்ந்து.. தன் முழு
ஆளுகைக்குள் அவளைக் கொண்டுவந்திருப்பதாய் அவன் நினைத்திருக்க
ஆனால் மங்கையவள் தான் தனக்குள் அவனை சுருட்டி வைத்துக்
கொண்டாள் என பாவம்.. அந்த ஆறடி ஆண்மகனுக்கு தெரியவில்லை..
இருவரின் மோகமும் வேகமும் வெள்ளப்பெருக்கு போல் ஓட.. அதில்
இருவரின் உடலும் படகு போல் ஆடிஅலைக்கழிந்தது.. ஆடவனின்
வலுமையான தாக்குதல்களும் பிடிகளும் நங்கைக்கு சுகவேதனையை
கொடுக்க.. எதிர்தாக்குதல் நடத்தி.. அவனிற்கு வலி கொடுக்க பெண் முனைய
அது எதிர்பாராவிதமாக ஆடவனுக்கு போதையைத்தான் கொடுத்தது..
அருளின் நாவும் விரலும் அவளுக்கு போதையேற்றியது.. தன் ஆண்மையால்
அவளின் பெண்மையை துவம்சம் செய்தவன்.. உடலின் உள்ள சக்தி
மொத்தமும் வடிந்த பிறகுதான் அவளிடத்திலிருந்து பிரிந்தான்.. பின்
மற்றொரு முறை ஆற்று நீருக்குள் கூடிக்களித்தவர்கள்.. இரவு உணவிற்கு
வட்டிற்கு
ீ வந்து சேர்ந்தனர்…
விழி சாப்பிட்டு தன் அம்மாயியுடன் உறங்கியிருக்க அவனின் இரட்டை
செல்வங்களும் குட்டி பாண்டியனும் அவர்களுக்காய் காத்திருந்தனர்…
ம்மா என அவளிடம் ஓடிவந்த கனியன் அருளை முறைக்க.. தந்தையும்
முறைத்தான்.. ம்மா ப்பா முத்தைக்குதாங்க.. கனிகுத்திக்கு பயமா இக்கு என
வானதியின் தோளில் முகம் புதைக்க.. வானு ‘’ ஏன்தான் எப்போப் பாத்தாலும்
என் பையன முறைச்சுக்கிட்டே இருக்கிங்களோ என சலித்துக் கொண்டு உள்
நுழைய குட்டி பாண்டியன் அளவம் காட்ட அருள் பரிதாபமாய் முழித்தான்..
அதியன் மகிழன் இருவரும் தாயிடத்தில் அமுதுண்டு சமர்த்தாய் தொட்டிலில்
உறங்கியிருக்க.. கனிவிழியன் வானதிக்கும் அருளிற்கும் இடையில்
படுத்தான்… தாயின் மார்புக்கூட்டில் குட்டி பாண்டியன் சுகமாய் முகம்
புதைத்துக் துயில்கொள்ள.. அதனை ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்த்துக்
கொண்டிருந்தான் அருள்.. தாயும் மகனும் உறங்கிய பிறகு குட்டி
பாண்டியனை தன் மார்பின் மீ து போட்டவன் தன் அம்மாளை தோள்
வளைவிற்குள் இழுத்துக் கொண்டான்… உறக்கத்திலேயே மன்னவனின்
செய்கையை புரிந்துக் கொண்ட மங்கை விழி திறக்காது மென்சிரிப்புடன்
அவன் கன்னத்தில் இதழ் பதித்து தூக்கத்தை தொடர.. தன்னவளின்
செய்கையில் அருளிற்கும் மென்னகை வர தன் அம்மாளையே காதலுடன்
பார்த்துக்கொண்டிருந்தவன் விழிகளும் உறக்கத்திற்கு சென்றது…….
நிறைவுற்றது…...