You are on page 1of 31

மந்திரம்

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .


தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழு
உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார். 

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்" என்றும், பிறகு
பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.

உதாரணமாக :
முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..
 "ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து
கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....


ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் . 
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்

ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.


ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்

பதினெண்பேரை காணும் மந்திரம்"  -  ஓம் சிங்ரங் அங்சிங்

தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போத

நிஜானந்த போதம் : 41 

செய்ததமிழ் தனையறிந்து  பதினெண் பேரைச்


   செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
   சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
   வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான்  வசமாய்க் கண்டால்
   உத்தமனே சகலசித்துக் குதவியாமே...

மந்திர சித்தி

"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்


அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி
நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து
நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக 
ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு
உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே
ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம
ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம
ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம
ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம
ஓம்நங்கிலி நமவம்வசி வயநம
ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்
அங்லங்றிங் சிவய நம
ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்
சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா
நசிநசி சிவய நம ஓம் 
மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்
மசிமசிவய மசிவய நமஓம்
றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்
லங்லங் ருங்றிங் சிவய நமஓம்
லாலீலூலம் சிங்சிவய நமஓம்
ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை
உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்
தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்
சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்
ஆம் சிவசிவ யோகமருளே காணும்
அட்டமாசித்து களுமாடலாகும்
ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்
ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"

இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே

கல்வியும், செல்வமும், வரமும்


ீ தரும் மந்திரங்கள்
மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல்.
இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழு
முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகைய
அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூ

முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும்

"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்


நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"

- அகத்தியர் 12000 -

சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வதம்
ீ லட்சம்
சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".


மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது. 

செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின்

"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா


சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"

- அகத்தியர் 12000 -

இலக்குமியின் பீஜ மந்திரமான "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வதம்
ீ லட்சம்
செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".


மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.

வரத்தின்
ீ அதி தேவதையான வரபத்திரரின்
ீ மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வரு

"ஆச்சப்பா வரபத்திர
ீ மந்திர பீஜம் கேளு
அகோராயா வரவ
ீ ரபுரபுர
ீ அரிஅரிஎன்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வரபத்திரர்
ீ வரமய்
ீ வருவார் சார்ந்தே"

- அகத்தியர் 12000 -

வரபத்திரரின்
ீ பீஜ மந்திரமான "அகோராயா வரவ
ீ ரபுரபுர
ீ அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வதம்
ீ லட்சம் உ
வரபத்திரர்
ீ வரமாய்
ீ துணை வருவார் எகிறார் அகத்தியர்.

இதில் மந்திரம் என்பது - "அகோராயா வரவ


ீ ரபுரபுர
ீ அரிஅரி". 
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வரபத்திரர்
ீ வரமாய்
ீ துணை வருவது.

இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவ
அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.

………………………………………………………………………………………………………………………………………………

அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகியபஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி,


தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும்இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ
முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார்.
தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது

தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும்
செய்யுள் 5 லிருந்து 11 வரை அகத்தியர

பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சுபாடுகிறேன் நமசிவய அகோர மாகும்.(செய்யுள்.5)


என்று கூறுகிறார். அவையாவன:

மந்திரம் பலன்

1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும்.


2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும்
3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும்.
4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி
5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.
6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும்.
7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும்.
8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும்.
9. கிலி-உம்-நமசிவய- பிறப்பின்மை நல்கும்.
10. நமசிவய - அமுதம் கிடைக்கும்.
11. நமசிவய-உங்-நமசிவய - நாட்டிலுள்ள வியாதிகள், சுரம் தீரும்.
12. நமசிவய-சிங்-வங்-நமசிவய - அறுபத்துநான்கு பிறவிகள் தீரும்.
13. நமசிவய-வங் - வெற்றி கிடைக்கும்.
14. சவ்-உம்-சிவய - சந்தானம் உண்டாகும்.
15. சிங்-றீம் (சிவய) - வேதாந்த ஞானி ஆவர்
16. உங்-றீம்-சிவயநம- மோட்சம் கிட்டும்.
17. அங்-நங்-நமசிவய - தேக சித்தி உண்டாகும்.
18. அவ்-உம்-சிவயநம - கயிலை வாழ் குருவைக் காணலாம்.
19. ஓம்-சிவயநம - இறப்பை வெல்லலாம்.
20. லங்-றீ-றீ-உங்-நமசிவய - தானியங்கள் கொழிக்கும்.
21. நமசிவய ஓம் - வாணிபம் செழிக்கும்.
22. ஓம்-அங்-உங்-சிவயநம - சாத்விக குணம் உண்டாகும்.
23. ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம - தனவான்கள் வசியமாவர்.
24. உங்-ஓம்-நமசிவய - சிரசின் ரோகம் நிற்கும் (தலைவலி).
25. ஓம்-அங்-சிவயநம - நெருப்பினில் பிரவேசிக்கலாம்.
அகோர முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும்
செய்யுள் 12 லிருந்து 20 வரை அகத்தியர் கூறுகிறார். அவையாவன:
1. துங்-நமசிவய - எதிரியின் நண்பர்களுக்குள்பகை உண்டாகும்.
2. ஓம்-கங்-சிவய - சக்தி அருள் உண்டாகும்.
3. ஓம்-சிங்-சிவயநம- ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
4. ஓம்-பங்-சிவயநம - பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
5. ஓம்-யங்-சிவயநம - சங்கடங்கள் தீரும்.
6. ஓம்-மாங்-சிவயநம- வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
7. ஓம்-மங்-நமசிவய - கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
8. கெங்-ஓம்-நமசிவய- யாவரும் வசியமாவர்.
9. ஓம்-மங்-யங்-சிவய - விஷங்கள் பறந்தோடும்.
10. அங்-ரங்-ஓம் சிவய - கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
11. ஓம்-அங்-சிங்-சிவயநம - சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
12. ஓம்-வங்-சிங்-சிவயநம - முக்குணத்தை வெல்லலாம்.
13. ஹிரீம் நமசிவய - விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
14. ஐ-உம்-சிவயநம - நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.

15. வங்-சிங்-ஓம்-சிவய - தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.


16. சங்-சிவயநம - விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
17. ஓம்-துங்-சிவயநம- ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
18. ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம - பெரிய நிலப்பரப்புக்குஅதிபனாவான்.
19. சிங்-நமசிவய - தென்னை மரத்தை வளைக்கலாம்.
20. வங்-சிவயநம - மழையில் நனையாமல் செல்லலாம்.
21. சிவய-ஓம்-ஸ்ரீயும் - மழையை நிறுத்தலாம்.
22. கிலி-உம்-சிவ - ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
23. ஓம்-கங்-சிவ்-உம்-சிவய - கடலின் மேல் ஓடலாம்.
24. சங்-யவ்-சிமந - ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
25. மங்-நங்-சிங்-சிவய - பிசாசுகளையும் ராட்சஸர்களையும்அடக்கலாம்.

வாம தேவத்தைச் சார்ந்த 25 மந்திரங்களில் ஒன்பது மட்டும் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை
வருமாறு:
1. ஓம்-புரோம்-சிவய- அமுதத்தைச் சுவைக்கலாம்.
2. ஓம்-ஐ-உம்-சிவய - மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
3. ஐ-உம்-ஸ்ரீ-சிவய- ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
4. உங்-தெங்-ஓம்-சிவய - பஞ்சதரு வந்து பலன் தரும்.
5. கங்-உங்-கிங்-நசி-ஓம் - காமதேனு வந்து பலன் தரும்.
6. சங்-சிவய-நம - தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
7. மங்-சிவ-ஓம்-நம - இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
8. ஸ்ரீ-உம்-சிவய - விஷ்ணு அபயமளிப்பார்.
9. சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம - கயிலைவளநாதர் முன் தோன்றுவார்.இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால்,
இந்த மந்திரங்கள் எல்லாம் அரிசி (அக்ஷதை) போன்றவை, பீஜமந்திரங்கள் நெல் போன்றவை. இந்த
மந்திரங்களைச் சீரியதொரு குரு மூலம் கற்றுச் சரியாக உச்சரித்தல் வேண்டும்.
அவற்றைத் தவறாக உபயோகிக்கக் கூடாது. குருவழி கற்றால் தான் இந்தப் பீஜமந்திரங்கள் பலன்தரும்...

………………………………………………………………………………………………………………………………………..
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"

……………………………………………………………………………………………………………………………………………..

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்


பணப்பிரச்சனை, குடும்ப கஷ்டம், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீ ழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ
தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரத்தை சொல்லி பலன் பெறலாம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

தியான ஸ்லோகம் :

ப்ராஹ்மீ ம் ச வைஷ்ணவம்
ீ பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீ ம்
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம்
பீதாம்பர தராம் தேவம்
ீ நானாலங்கார பூஷிதாம்
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம்

மூலமந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி


லக்ஷ்மீ ர் ஆகச்ச ஆகச்ச
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா

ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக்  குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள்
வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள்.

……………………………………………………………………………………………

ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய தினம் ஒரு முறையேனும் ஜெபிக்கும் ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்:

"தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் நான் ஜெபிப்பவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன்"
என்று வசிஷ்டருக்கு ஸ்ரீ மகாலட்சுமி ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்:

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|


மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||

ஸ்ரீ வித்யா,ஸ்ரீ சக்கரம்,ஸ்ரீ கல்பம்-சாதனை:

ஸ்ரீ வித்யா என்பது மந்திரம், ஸ்ரீ சக்கரம் என்பது யந்திரம், ஸ்ரீ கல்பம் என்பது தந்திரம், இந்த வழி போகம் எனப்படும்
உலக இன்பங்களையும் பிரபஞ்சத்தினை தான் எனும் உணரும் முக்தி எனும் நிலையினையும் தரும் வழியாகும்.
ஸ்ரீ வித்யா சாதனை செய்பவர் உலக இன்பங்களையும், ஆன்ம முன்னேற்றத்தினையும் ஒரே பொருளின் இரு
துருவங்களாக அனுபவத்தில் உணர்வர். உலக வாழ்க்கை என்பது ஆன்ம வாழ்க்கையின் தொடர்ச்சியே!
இறைவனும் இறைவியும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத இணைகள்! ஒருவனின் தனிப்பட்ட
வாழ்க்கை என்பது பிரபஞ்ச வாழ்க்கையின் ஒரு பகுதி. அதாவது Hologram ஒன்றில் பதியப்பட்ட தகவல்
முப்பரிமான உருவமாக வெளிப்படுத்தப்படுவது போல் பிரபஞ்சத்தில் ஆழத்தில் உள்ள ஆன்மீ க பாகம் உலகியல்
வாழ்க்கையால் வெளிப்படுத்தப் படுகிறது.
ஸ்ரீ சக்கரம் என்பது இடத்தினதும் காலத்தினதும் குறியீடு. (Sri Chakra is the symbol of the space-time,) இது உயிர் சக்தி
இணைந்த நிலையில் இருப்பதை குறிக்கும் குறியீடு.இந்த குறியீடே சரஸ்வதி பிரம்மா, லக்ஷ்மி - விஷ்ணு, சக்தி
சிவம், ராதா கிருஷ்ணா, பெண் ஆண் எனக்குறிப் பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதனது உடலும் ஒரு ஆலயமாகும். இது பராசக்தி எனப்படும் உயிர் சக்தியால் நிறைந்தது. ஸ்ரீ
சக்கர வழிபாடு என்பது இந்த இருமை சக்திகளாக இருக்கும் சக்திகளை ஒன்றாக்கும் சாதனையாகும்.
நாம் உயிர் சக்தியை அதனை கொண்டிருப்பவரை தவிர அதுவாகவே அனுபவத்தில் பார்ப்பதில்லை. மனிதனில்
இருக்கு உயிர் எனும் உணர்வு சக்தியே நாம் வழிபாடும் வழிபாடுகளை ஏற்கும் நபராகும். ஆகவே மிகச்சிறந்த ஸ்ரீ
யந்திரம் உயிருள்ள மனித உடல்களாகும். பெண்களுக்கு பராசக்தியின் அமிசம் காணப்படுகிறது, ஆண்களிற்கு
சிவத்தின் அமிசமுமாகும். உடலை உற்பத்தி செய்யும் கருவிகளான யோனியும் குறியும் சக்தியும் சிவத்தினதும்
குறியீடுகளாக கருதப்படுகிறது.
மந்திர ஜெபங்கள் இறைவனின் எண்ணற்ற குணங்களை எம்மில் விழிப்பித்து இருளில் இருந்து ஒளியிற்கு
இட்டுச்செல்லும்
குரு என்பது பிரபஞ்ச சக்தியினை அடைவதற்குரிய திறவுகோலாகும் குருவும் சீடனும் இரண்டு என்ற நிலை
கடந்து ஒன்றாகும் போது இறைவன் என்பதனை அனுபவிக்கிறான். குருவும் சீடனும் ஆன்மாவில் ஒன்றாக
இருக்கும் போதும் உலக நாடகத்தில் தமது பாத்திரத்தினை செவ்வன செய்வற்காக நடிக்கின்றனர். இதில்
குருவும் சீடனுள் இருக்கும் இறைவனை வணங்குவதால் இருவரும் உயர்கின்றனர்.
Source: Net

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி- ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|


மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட
குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
எந்த யோகப்பயிற்சிமுறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம்
அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.
எல்லா யோகிகளுக்கும் யோகமுதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று
சித்தர் நூல்கள் கூறுகின்றன
மேலும் சில சூபி ஞானியாரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,
சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு
தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில்
உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது
பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும்
கருணைக்கடல்.இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும் தங்களின்
பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய் அன்னை அதிபராசக்தியின் 10 வயது
பால பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர் களின் தலைவன் முருக பெருமானை வணங்கி வந்தால்
அன்னை வாலை தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும். சக்தியை பெற்று
பரம்பொருளுடன் இணைத்து முக்தியடைய முடியும்.
சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை
பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால்
சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும்
ஆன்மீ கத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.
சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை
பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.
ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில்
விரைவாய் அழைத்துச் செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி
பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று சொல்லுவது சிறந்தது.

ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல
வாக்குவன்மை (பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள்
அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே


சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த
வளவாழ்வினைத்தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி
அன்னை.இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீ கத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த
நிலையை அடையலாம்.

2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின்
அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீ கத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க
வேண்டுகிறேன்.

வாழ்க வையகம்|வாழ்க வளமுடன்||

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல


தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும்
இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.
ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு
மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி
அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம்
செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும்
ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய்
இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.
இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு
ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை
ஐந்து மணி.

முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம்
தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலி ருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும்,
பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.

தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம்
உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள்
அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம்
பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள்
கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச்
(அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கண ீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”:
அம் பகவ” என மும்முறை உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளா மலே உபதேசமா என்ற


பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’: மந்திரோபதேசம் பெற்றோம்.

ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை.
எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள்.

மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’:
என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு
மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’
என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.

ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின்
வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!

‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.

நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான


மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம்
மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும்
பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.
ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை –
அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!
எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற
ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா
பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன்
கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
[Courtesy: ரா. கணபதி]

பண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா


செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும்
ஒருவர். அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால் இந்த மந்திரத்தை வழங்கியுள்ளோம்.
ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா - என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். ஓம் ஹ்ரீம் உத்தரமுகே,
ஆதிவராஹாய, பஞ்சமுகி ஹனுமதே, லம்லம்லம்லம் கைல ஸம்பத்கராயஸ்வாஹா. - என்ற இந்த
மந்திரத்தை வட்டில்
ீ அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால்
செல்வ வளம் பெருகும்.
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே
பல சித்திகளைப் பெற்றார்.

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே


வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா.

காயத்ரி மந்திரம்

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம்
மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள்
அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக்
காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா
மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே
பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில்
காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும்
ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில்


காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள
காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது
வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ
தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம்
பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை
உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே
பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக்
கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக்
கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய
வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும்,
உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:

யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி
மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்

செல்வ வளம் பெருக ஸ்ரீ லக்ஷ்மி_மந்திரம்


மனித வாழ்கையின் முக்கிய தேவை பணம். “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லை” என்ற திருவள்ளுவர் வாக்கு இதனை தெளிவுபடுத்துகிறது.
நமது கடின உழைப்புக்கு ஏற்றவாறு செல்வ வளத்தை பெருக்கி கொள்ள சில மந்திரங்கள் உதவுகிறது.
நல்ல உழைபிருந்தும் செல்வம் சேரவில்லை என்பர்களுக்கு இந்த மந்திரங்கள் சிறந்த பலனை தரும்.
அதிகாலை 5 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை பிரம்மமுகுர்த்தம் என்பார்கள் மந்திர ஜபம் செய்ய இதுவே
உகந்த காலம்.
மந்திரம்
மந்திரம் 1:
சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீ ம் ஹிரண்மயீம்

மந்திரம் 2:
அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதின ீம்
ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவர்ீ ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது,லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால்


அர்ச்சிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு
கிடைக்கும்.இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.

மந்திரம் 3:
‘ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’

மகாலட்சுமி குறித்து தேவர்களால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சுக்கிர
வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று
தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.
1. நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:

2. த்வம் ஸாக்ஷ õ த் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா


பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ

3. பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி


அருணா நந்தின ீ லக்ஷ்மீ : மஹாலக்ஷ்மீ : திரிஸக்திகா

4. ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா


நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி

5. ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி


ரமா ரக்ஷ்க்ஷ õ கரீ ரம்யா ரமண ீ மண்டலோத்தமா

அதிசய பலன்களைத் தரும் ஸ்ரீமகாலக்ஷ்மி மந்திரங்கள்


1. மஹாலக்ஷ்மி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,


மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம்
ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு
விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள
கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.
2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீ ம் வரதாம் மணிவாலிநீம் !


தேவம்
ீ தேவப்ரியாம் கீ ர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :


மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்
சக்தி : கீ லகம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
ஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.

மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீ ர்த்திஸ்ச


மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீ ர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை,
முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி
சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள் :

சிவனின் நண்பனான குபேரனும், கீ ர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை
வந்து அடையட்டும்.

குறிப்பு :
முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும்
பயன்படுத்தலாம்.

3. அஷ்டலக்ஷ்மி மஹா மந்திரம்

முதலில் மஹாலக்ஷ்மியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம்


செய்யவும்.

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !


வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீ ர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீ லகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே விநியோக:

த்யானம்

அருண கமல ஸமீ ஸ்தா - முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.

ஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே


ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
மஹாலக்ஷ்ம்யை நம:

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை


கமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்


ப்ரஸுத்யை ஸ்வாஹா

இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.

4. சௌபாக்ய லக்ஷ்மி மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:


ஜகத் ப்ரஸுத்யை ஸெளபாக்ய
லக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி
ஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா
என்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

5. அஷ்டலக்ஷ்மீ மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹின ீ


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ , சந்தான லக்ஷ்மீ ,
கஜலக்ஷ்மீ , தனலக்ஷ்மீ , தான்யலக்ஷ்மீ ,
விஜயலக்ஷ்மீ , வரலக்ஷ்மீ
ீ , ஐஸ்வர்யலக்ஷ்மீ ,
அஷ்டலக்ஷ்மீ , ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீன ீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ , வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

6. கமலவாசினி மந்த்ரம்

நம : கமல வாசின்யை ஸ்வாஹா

இது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் - 10 லக்ஷம் ஜபம் - த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.

அல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.

7. பொன் - மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்

லக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.

ஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி


தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

என்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.

8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி


மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்
மேதேஹி ஸ்வாஹா

அசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம்,
கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால்
ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.

9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட

சித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்


அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீ ம் ஹிரண்மயீம்.

மந்த்ரம் :

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதின ீம்


ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவர்ீ ஜுஷதாம்

வெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப்
பதவி கிட்டும்.

ஸ்ரீ லட்சுமி த்வாதச நாம ஸ்தோத்திரம்

மகா லட்சுமியின் நாமாக்களை ஜபிப்பவர்கள் வடுகளில்


ீ நிலையான செல்வம் ஏற்படும்.

த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே


யதாத்வம் ஸுஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீ : சலா பூதிர் ஹரிப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சை: ச்ரீ: பத்ம தாரிண ீ
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (செல்வம் நிலைக்க)

நம கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம:


க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

பத்ம பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:


பத்மாஸநாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம:

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யைஸர்வாராத்யை நமோ நம:


ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷ தாத்ர்யை நமோ நம:

க்ருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச க்ருஷ்ணேசாயை நமோ நம:


சந்த்ர சோபா ஸ்வரூபாயை ரத்ன பத்மே ச சோபனே

ஸம்பத் யதிஷ்டாத்ரு தேவ்யை மஹாதேவ்யை நமோ நம:


நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம:

வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ : யா லக்ஷ்மீ : க்ஷீரஸாகரே


ஸ்வர்கலக்ஷ்மீ ரிந்த்ர கேஹே ராஜலக்ஷ்மீ ர் னந்ருபாலயே

க்ருஹலக்ஷ்மீ ச்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா


ஸூரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணா யஜ்ஞ காமின ீ

அதிதிர் தேவமாதா த்வம் கமலாகமலாலயா


ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா

த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸூந்தரா


சுத்த ஸத்வ ஸ்வரூபா த்வம் நாராயண பாராயணா

க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சாரதா சுபா


பரமார்த்த ப்ரதா த்வம ச ஹரிதாஸ்ய ப்ரதா பரா

யயா விநா ஜகத் ஸர்வம் பஸ்மீ பூத மஸாரகம்


ஜீவந் ம்ருதம் ச விச்வம் ச சச்வத் ஸர்வம் யயா விநா

ஸர்வேஷாஞ்ச பரா மாதா ஸர்வ பாந்தவ ரூபிண ீ


தர்மார்த்த காம மோக்ஷ õ ணாம் த்வம் ச காரண ரூபிண ீ

யதா மாதா ஸ்தநாந்தாநாம் சிசூநாம் சைசவே ஸஜா


ததா த்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத:

மாத்ரு ஹீந: ஸ்தநாந்தஸ்து ஸ ச ஜீவதி தைவத


த்வயா ஹீநோ ஜன: கோபி ந ஜீவத்யேவ நிச்சிதம்

ஸூப்ரஸந்த ஸ்வரூபா த்வம் மாம் ப்ரஸந்தா பவாம்பிகே


வைரிக்ரஸ்தம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸநாததி

அஹம் யாவத் த்வயா ஹீநோ பந்துஹீனச்ச பிக்ஷ ü க


ஸர்வ ஸம்பத் விஹீநச்ச தாவதேவ ஹரிப்ரியே

ஜ்ஞாநம் தேஹி ச தர்மம் ச ஸர்வ ஸெளபாக்ய மீ ப்ஸிதம்


ப்ரபாவஞ்ச ப்ரதாபஞ்ச ஸர்வாதிகாரமேவ ச

ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைச்வர்ய மேவ ச


இத்யுக்த்வா ச மஹேந்த்ரச்ச ஸர்வை: ஸூரகமை: ஸஹ

ப்ரணநாம ஸாச்ருநேத்ரோ மூர்த்னா சைவ புந புன


ப்ரஹ்மா ச சங்கரச்சைவ யே÷ஷா தர்மச்ச கேசவ:

ஸர்வே சக்ரு: பரீஹாரம் ஸூரார்த்தே ச புந: புந:


தேவேப்யச்ச வாம் தத்வா புஷ்பமாலாம் மநோஹரம்
கேசவாசய ததௌ லக்ஷ்மீ : ஸந்துஷ்டா ஸூரஸம்ஸதி
யயுர் தேவாச்ச ஸந்துஷ்டா ஸ்வம் ஸ்வம் ஸ்தாநம் ச நாரத

தேவ ீ யயௌ ஹரே: ஸ்தாநம் ஹ்ருஷ்டா க்ஷீரோத சாயிந


யயதுச்சைவ ஸ்வக்ருஹம் ப்ரஹ்மேசாநௌ ச நாரத

தத்வா சுபாசிஷம் தௌ ச தேவேப்ய ப்ரீதிபூர்வகம்


இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் த்ரிஸந்த்யம் ய படேந் நர;

குபேரதுல்ய ஸ பவேத் ராஜராஜேச்வரோ மஹாந்


பஞ்சலக்ஷ ஜபேநைவ ஸ்தோத்ர ஸித்தி பவேத் ந்ருணாம்

ஸித்த ஸ்தோத்ரம் யதி படேத் மாஸமேகந்து ஸந்ததம்


மஹாஸூகீ ச ராஜேந்த்ரோ பவிஷ்யதி ந ஸம்சய:

புற்று நோயை போக்கும் மந்திரம்.


Cancer Curing Mantra.

புற்று நோயை போக்கும் மந்திரம்காஞ்சி மஹா பெரியவா இந்த மந்திரத்தை அருளியுள்ளார்.

கீ ழ் குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் புற்று நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்திருப்பதாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் கூறியுள்ளார்.

"அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே


த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ"

நம்பிக்கையுடன் முயற்ச்சித்துதான் பாருங்களேன்…

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ?

ஸ்ரீ விநாயகரின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே


வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும்
அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள்
இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை
செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து
வந்துள்ளது.

கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று


இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க
வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை
விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00 க்குள் ஜபிப்பது மிக நன்று
என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும்


அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி
செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர
சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.

வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம்.
இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய


ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.

கடன் தீர கணபதி மந்திரம்

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா


ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக
விரைவாக தீர்ந்துவிடும்.

மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி
வசுபவராக
ீ இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது
பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய


மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை
தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா.
வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?
வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை


யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி...
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
-திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில்


உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான்
பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில
பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி
புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து
விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.

தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும்
செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை.
அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும்
அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே. நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க
வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து
பார்க்கலாமே. ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார். சில துளசி
இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார். சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து
விடுகிறார். சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள். இப்படி அன்போடு
செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீ கம் என்றால் அன்புதான்.

காஞ்சி மஹாபெரியவா
~~~~~~~~~~~~~
கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயண ீய மந்திரம்!
ஸ்ரீமன் நாராயண ீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணயம்
ீ பாடி
முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல
நாராயண ீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு
தெய்வகம்
ீ மிகுந்த சத்திய வாக்காக உள்ளது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவமே சாட்சி.
காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக்
கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம்
தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.
கருணையுள்ளம் கொண்ட மஹான் அப்பெண்ணை ஆசீர்வதித்து கவலைப் படாதே.
நாராயண ீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை
சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார்.
தெய்வத்தின் குரலாக அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம்
செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள்,
இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்:ஷ...ரு
*அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
*த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
*அனந்த பூமா மமரோக ராசிம்
*நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ...
மஹா பெரியவாவிடம் சரணடைந்த பின் குரு நம் வாழ்வை நல்லபடியாக நடத்துகிறாரா என்று ஆராய்ச்சி
செய்வது உண்மையான சரணாகதி இல்லை. மஹா குரு நம் வாழ்வில் நடத்துவது எல்லாம் நன்மைக்கே என்று
உணர்வதே உண்மையான சரணாகதி.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர !!!

ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய


ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்:

மகரிஷி வசிஷ்டர் செய்த கடும்தவத்தின் போது அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றி இந்த மந்திரத்தை
உபதேசித்தார்கள்.இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து ஜெபித்து வருகிறாரோ அவரை ஒருபோதும்
வறுமை பீடிப்பதில்லை என்று அருளியதோடு தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கூட
நான் அவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன் என்று ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

மந்திரம்

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|


மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||

வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!

பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்


மூல மந்திரம் :-
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் பரமேஸ்வர்யை நமஹ

இம்மந்திரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் சக்தியும்,அவற்றின் விளக்கமும்:-

ஐம் - இது வாக் பீஜம் என்றும் வாக்பவ பீஜம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீஜ மந்திரத்தின்
அதிதேவதைகள் ப்ரம்மா,சரஸ்வதி.இந்த பீஜ மந்திரம் வாக்குவன்மை, நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி
தரும்.

க்லீம் - இது காமராஜ பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள்
விஷ்ணு ,லக்ஷ்மி,ரதி,மன்மதன்,காளி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,வசீகர சக்தி, செல்வம்,
செல்வாக்கு,கௌரவம் தரும்.

சௌம் - இது பரா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள்
ருத்ரன்,பார்வதி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,தைர்யம்,சௌபாக்கியம் தரும்.சௌபாக்கியம் என்ற சொல்
இந்த பீஜ மந்திரத்தில் இருந்து தோன்றியதாக மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

ஹ்ரீம் - இது மாயா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள்
மகேஸ்வரன்,மஹேஸ்வரி ,புவனேஸ்வரி.இந்த பீஜ மந்திரம் எல்லா நன்மைகளையும் தரவல்லது.இந்த
ஒன்றை ஜெபித்தே நலமும்,வளமும் கொண்ட அடைந்தவர்கள் பலர்.

ஸ்ரீம் - இது லக்ஷ்மி பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள்
சதாசிவன்,மனோண்மணி,லட்சுமி.இந்த பீஜ மந்திரம் ஐஸ்வர்யம்,மரியாதை,தேஜஸ்,கவர்ச்சி தரும்.

இவை ஐந்தும் பஞ்ச மஹா பீஜங்கள் எனப்படும்.


இதை வளர்பிறைத் திங்கள் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.வடக்கு முகமாக
அமர்ந்து ஜெபித்து வாருங்கள்.ஆரம்பம் செய்யும் அன்று அதிகாலையில் சிவாலயம் சென்று அங்குள்ள அம்மன்
சன்னதிக்குச் சென்று அம்மனை மந்திரம் பலிக்க வேண்டி வணங்கி அங்கிருந்து குறைந்தது 108
எண்ணிக்கையாவது ஜெபித்துப் பின்வரும் நாட்களில் வட்டில்
ீ வைத்து ஜெபித்து வருதல் சிறப்பு.

எதுவும் குறைவில்லாதபடி வளமும்,நலமும் கூடிய நல்வாழ்விற்கு இம்மந்திரம் வழிசெய்யும்.எனவே,பற்றிப்


பிடித்துக் கொள்ளுங்கள் பராசக்தி திருப்பாதத்தை.

சாந்த துர்கா மந்திரம்


{மனஅமைதி பெறவும்,அதீத கோபம் நீங்கவும்}

சாந்த துர்கா மந்திரம் :-

"நமோ துர்கா மஹாதுர்கே நவதுர்கா ஸ்வரூபிணி |


கைவல்யவாஸினி தேவி சாந்த துர்கே நமோஸ்துதே" ||

வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு செம்பில் நீர் வைத்து இம்மந்திரத்தை ஜெபித்து நீர் அருந்தி வர மனக்கவலைகள்
தீர்ந்து மனஅமைதி உண்டாகும்.

இரவில் தூக்கம் வராதவர்கள் இதைச் செய்து வர நிம்மதியான தூக்கம் வரும்.

…………………………………………………………………………………….

இந்த 1 மந்திரத்தை 108 முறை சொன்னால் எந்த கிரக தோஷமும் உங்களை ஒன்றும்
செய்யாது. அதனால் ஏற்பட்டு கொண்டிருக்கும் பாதிப்புகளும் உடனே நீங்கும்.

நவக்கிரகங்களால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் குறைவதற்கு இந்த ஒரு மந்திரம்


உச்சரித்தால் போதுமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த
மந்திரத்தை வட இந்திய மக்களால் பெருமளவு உபயோகிக்கப்பட்டு வருகிறது.
அங்கிருக்கும் மக்கள் அதிகாலையில் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து பலன்
பெற்று வருகின்றனர். என்ன மந்திரம் அது? எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதைப்
பற்றிய சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

நம்மில் பலருக்கும் நவக்கிரகங்களால் தோஷம் உண்டாகி இருக்கும். அதனால் சில


பிரச்சினைகளை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்து வருகின்றோம். சிலர் தாம் எந்த
கிரகத்தால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். சிலருக்கு
அதை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்கலாம். - Advertisement - இப்படியாக
எந்த கிரக தோஷம் உங்களுக்கு இருந்தாலும் சரி இந்த மந்திரத்தை உச்சரித்து
வந்தால் முழுமையாக கிரகதோஷம் நீங்கும். அதனால் வரும் பாதிப்புகள் விரைவில்
வெகுவாகக் குறைந்துவிடும்.
இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய உதயமாகும்
வேளையில் 6 மணிக்கு உள்ளாக சூரிய பகவானை பார்த்து இருகரம் கூப்பி
சூரிய நமஸ்காரம் செய்வது போல் 108 முறை உச்சரிக்க வேண்டும். அதன்பின்
நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த மந்திரத்தை
ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை தினத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்ல
பலனைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மந்திரம்: ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு
குரு ஸ்வாஹா!!

இந்த மந்திரத்தை உங்களுக்காக நீங்கள் உச்சரிக்கும் பொழுது மேலே உள்ள படி


உச்சரிக்க வேண்டும். மற்றவர்களின் நலன் கருதி நீங்கள் உச்சரிக்க வேண்டும்
என்றால் ‘மம’ என்ற இடத்தில் அவர்களின் பெயரை போட்டுக் கொள்ள வேண்டும்.
அல்லது உங்களின் குடும்பத்திற்காக நீங்கள் இந்த மந்திரத்தை சொல்வதானால்
குடும்பத்திற்கு என்று இருக்கும் பொது பெயரை, குடும்ப பெயரை ‘மம’ என்பதற்கு
பதிலாக போட்டுக் கொள்ளலாம்.

………………………………………………………………………………………………………….
எந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணய
ீ மந்திரம்! எப்படி
உச்சரிப்பது?

‘நாராயண பட்டத்திரி’ என்பவர் கேரளாவில் பிறந்த நம்பூதிரி பிராமண குலத்தைச்


சார்ந்தவர். வடமொழியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதற்கு இனிய
ஸ்லோகங்களாக சுருக்க வடிவில் இயற்றியவர். இவர் பதினாறு வயது
நிரம்புவதற்குள் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் சிறந்து விளங்கினார்.

கேரளாவில் அமைந்துள்ள குருவாயூரப்பன் கோயிலில் அமர்ந்து இந்த


ஸ்லோகங்களை இயற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ‘பக்கவாத நோய்’
இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 1036 ஸ்லோகங்கள் 100 நாட்களில் எழுதி
முடித்தார். அதில் ஒவ்வொரு (தசகம்)10 ஸ்லோகம் முடியும் பொழுதும் தனக்கு
இருக்கும் நோயும் தீர வேண்டும் என்பதற்கு சில வாக்கியங்களும் எழுதியிருப்பார்.
சரியாக நூறாவது நாள் அவர் இந்த ஸ்லோகங்களை எழுதி முடிப்பதற்குள்
அவருடைய நோயும் முற்றிலுமாக நீங்கிவிட்டது அனைவரையும் ஆச்சிரியத்தில்
ஆழ்த்தியது.

நாராயண ீயம் பல உயர்ந்த வேதாந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இவை தென்


இந்தியாவில் வாழும் பெரும்பாலான இந்துக்களின் வடுகளிலும்
ீ இன்றளவும் பக்தி
சிரத்தையுடன் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. எந்த நோயாக இருந்தாலும்
அதை முழுமையாக தீர்க்கும் சக்தி இந்த ஸ்லோகத்திற்கு உண்டு. இதனை
நிரூபிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் மகா பெரியவா சன்னதியில் ஒரு சம்பவம்
நடைபெற்றுள்ளது.
கொடிய கேன்சர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அம்மையார் ஒருவர்
காஞ்சிபுரத்திற்கு வருகை தந்திருக்கிறார். அவர் தன் குறைகளை கண்ணர்ீ மல்க, ஸ்ரீ
சந்திர சேகரேந்திர சுவாமிகளிடம் கூறியிருக்கிறார். தனக்கு இருக்கும் இந்த
நோயிலிருந்து விடுபட தன்னிடம் போதிய வசதி இல்லை என்பதையும்
கூறியிருக்கிறார். இதைக்கேட்ட சுவாமிகள், அந்த அம்மையாரிடம், ‘நாராயணய

மந்திரத்தை’ தினமும் 48 முறை சொல்லி வாருங்கள் என்று அருளியிருக்கிறார்.

இதை தெய்வ வாக்காக கருதி அந்த அம்மையார், அவர் கூறியபடியே தொடர்ந்து 48


நாட்களுக்கு இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்திருக்கிறார் அதன் பிறகு
பரிசோதனைக்கு சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை
பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கேன்சர் நோய் முற்றிலும் குணமாகி
விட்டதாக கூறி இருக்கிறார்கள். அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை நாமும் கூறி
பலன் அடைவோமே!

நாராயண ீயம் 8 வது தசகம் ஸ்லோகத்தின் வரிகள்: அஸ்மிந் பராத்மந் நநு


பாத்மகல்பே! த்வமித்த முத்தாபித பத்மயோனி! அனந்த பூமா மமரோக ராசிம்!
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! நாம் எவ்வளவோ மருத்துவத்தை
நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வணடித்திருக்கிறோம்.
ீ கடவுள் மேல்
நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து
பார்ப்போம்.

…………………………………………………………………………………………………………………………

உங்கள் வட்டில்
ீ தன, தானியத்திற்கு பஞ்சமே வராது. தொட்டதெல்லாம் வண்

விரயம் ஆகாமல் இருக்க உச்சரிக்க வேண்டிய வரிகள்!

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், நாம் தொட்டதெல்லாம்


வண்விரயம்
ீ ஆகக்கூடாது. தொட்டதெல்லாம் விரயமாகக் கூடாது என்றால்! நாம்
எடுக்கக்கூடிய எல்லா காரியங்களும் வெற்றி பாதையை நோக்கி செல்ல வேண்டும்.
அப்படி சென்றாலே போதும். வட்டில்
ீ தன தானியத்திற்கு, குறைவிருக்காது.
செல்வத்தையும், மகாலட்சுமியின் அருளையும், மனநிறைவான வாழ்க்கையையும்,
பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரே வழி இறைவழிபாடு தான். இரண்டாவது
வழி நேர்வழியில் செல்ல வேண்டும். குறுக்குப்பாதை கூடவே கூடாது. குறுக்குப்
பாதையில் சென்று நாம் பெரும் வெற்றியானது கட்டாயம் நிலைத்திருக்காது.
இறைவழிபாடு என்று சொல்லும்போது சிவனடியார்கள், குறிப்பாக நமக்காக விட்டுச்
சென்றுள்ள பாடல்கள் ஏராளம். அந்தப் பாடல்களில், ஒரு பாடல் வரியை பற்றிதான்
இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பூலோகத்தில் மக்கள் பஞ்சத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில்,


திருஞானசம்பந்தர், திருவழிமிழலை
ீ என்னும் சிவனுடைய திருத்தலத்தில், இந்த
பாடலைப் பாடி, இறைவனிடமிருந்து செல்வத்தினை பெற்று, மக்களின்
பஞ்சத்தைப் போக்கினார். இச்சிவாலயத்தின் மூலவர் வழிநாதேஸ்வரர்.
ீ தாயார்
சுந்தரகுசாம்பிகை. மக்கள் பசி பட்டினி இல்லாமல், நிறைவான சந்தோஷமான
வாழ்க்கையை வாழ்வதற்காக, திருஞானசம்பந்தரால் எழுதப்பட்ட பாடல்தான் இது.

தினம்தோறும் காலையில் எழுந்து இந்தப் பாடலை ஒருமுறையாவது உச்சரித்தால்,


உங்களைத் தேடி செல்வம் வரும். உங்கள் வட்டில்
ீ நிம்மதி நிலைத்திருக்கும்.
குறிப்பாக உங்கள் கையில் இருக்கும் பணம் வண்
ீ விரயம் ஆகாமல் இருக்கும்.
உங்களது மனது தூய்மை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின்
திருவடிகளை சரணடையவும் இந்த மந்திரம் உறுதுணையாக இருக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. உங்களுக்கான திருஞானசம்பந்தர் பாடிய பாடல் வரிகள் இதோ!

வாசி தீரவே, காசு நல்குவர்ீ

மாசின் மிழலையீர், ஏச லில்லையே

இறைவ ராயின ீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவின ீர், உய்ய நல்குமே.

நீறு பூசின ீர், ஏற தேறின ீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

காமன் வேவவோர், தூமக் கண்ணின ீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே.

…………………………………………………………………………………………………………………………………
உங்களுடைய வாழ்க்கையில், வெற்றி நிரந்தரமாக இருக்க, எந்த கடவுளை, எந்த
மந்திரத்தைச் சொல்லி, எந்த கிழமையில் வழிபட வேண்டும்?

பொதுவாகவே எவர் ஒருவர் வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றம்


அடைகின்றாரோ, அவருக்கு, அந்த முன்னேற்றம், நிலைக்காது என்று
சொல்லுவார்கள். குறிப்பிட்டு சொல்லப்போனால் அதி விரைவாக,
முன்னேறினாலும் சரி, பெரிய பணக்காரராக மாறினாலும் சரி, ‘அதேவேகத்தில்,
சீக்கிரமாகவே அவருடைய வாழ்க்கையில் தோல்வியை தழுவி விடுவார்கள்’
என்பது, எல்லோராலும் சொல்லப்படும் ஒரு கூற்று. இந்தக் கூற்றை நாம்
எல்லோரும் அறிந்திருப்போம். ‘எவ்வளவு சீக்கிரம் மேலே போனானோ, அவ்வளவு
சீக்கிரம் பாதாளத்தில் விழுந்து விட்டான்’ குறிப்பாக இந்த நிலைமை பல
பிரபலங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. சாதாரண மனிதர்களும் சில விஷயங்களில்,
கட்டாயம் இதை உணர்ந்திருப்பார்கள். உங்களுக்கு வாழ்க்கையில்
வந்துகொண்டிருக்கும் தொடர் வெற்றியை, நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்
என்றால், என்ன வழிபாடு செய்வது? என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம்
தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வாழ்க்கையானது ஏறு முகத்திலேயே இருக்க வேண்டும் என்றால்,


நீங்கள் வழிபட வேண்டியது ஆறுமுகனை தான். தமிழ் கடவுள் முருகப் பெருமானை
மனதார தினம் தோறும் வட்டில் நினைத்து
ீ வழிபட வேண்டும். வட்டில்
ீ நெய் தீபம்
ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது. அரளிப் பூ, முடிந்தால் முல்லைப் பூவையும்
சூட்டி முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மலைமேல் இருக்கும் ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு, செவ்வாய்க்


கிழமை அன்றும் வெள்ளி கிழமை அன்றும் சென்று, தரிசனம் செய்ய வேண்டும்.
அந்த முருகருக்கு தேன் மற்றும் விபூதி வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அந்த
முருகப்பெருமானின் முன்பாக அமர்ந்து, அந்த சந்நிதானத்திலேயே மனதை
அமைதிப்படுத்தி கொண்டு, பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்
என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கான மந்திரம் இதோ!

‘ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம’

இத்தனை நாட்கள்தான் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும், மலைமேல்


இருக்கும் முருகன் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்
இல்லை. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ,
அப்போதெல்லாம் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். நியாயமான
முறையில் உங்களுடைய முன்னேற்றம் இருந்தால், அந்த முன்னேற்றம்
தடைபடாமல் தொடர்ந்து, உங்கள் பக்கத்தில் இருந்து கொண்டே செல்லும் என்பது
மட்டும் உறுதி.

இந்தப் பதிவில் இன்னொரு சின்ன குறிப்பை பற்றியும் தெரிந்துகொள்வோம். சில பேர்


கீ ழ் உதடை எப்போதுமே கடித்துக் கொண்டே இருப்பார்கள். அதாவது அவர்களுடைய
பல்லால், கீ ழ் உதட்டை கடித்துக் கொண்டே இருப்பது தவறான விஷயம் என்று
சொல்லப்பட்டுள்ளது. உங்களில் யாருக்காவது இந்தப் பழக்கம் இருந்தால் அதை
திருத்திக் கொள்ளுங்கள்.
உங்களது பிள்ளைகள் இந்தப் பழக்கத்தை திருத்திக் கொள்ளாமல் இருக்கும்
பட்சத்தில், அவர்களது கையால் முருகப்பெருமானுக்கு நெய், விபூதி இந்த இரண்டு
பொருட்களையும் வாங்கி தானமாக கொடுக்க வையுங்கள்! இப்படி உதடு கடிக்கும்
பழக்கம் இருப்பவர்களுக்கு ஆயுசு கம்மி என்ற ஒரு கூற்றும் உள்ளது.
முருகப்பெருமானை வழிபட்டால் எந்த தோஷமும் நம்மை தாக்காது. சாஸ்திரப்படி
எவருக்குமே உதடு கடிக்கும் பழக்கம் இருக்கக் கூடாது என்ற ஒரு கருத்தையும்
முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

…………………………………………………………………………………………………………………………….
எப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண்
திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.

நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக,


தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து,
விபத்து வந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள்
கண் திருஷ்டியில் இருந்தும், ஊர்மக்கள் கண்களில் இருந்தும், உறவினர்களின் கண்
திருஷ்டியில் இருந்தும் தப்பிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. இந்த
கண்திருஷ்டியை போக்குவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், அதில் ஒரு
சிறப்பான வழியை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்
போகின்றோம்.

கண்திருஷ்டியை கழிக்க எந்த பொருளை வைத்து, எந்த மந்திரத்தை சொல்லி


பரிகாரம் செய்யலாம்? இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை 6 மேல்
மணிக்கு செய்யலாம். அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல்
செய்யலாம். அல்லது அமாவாசை தினத்தில் இரவு 9 மணிக்கு மேல் செய்யலாம்.

முதலில் உங்கள் குடும்பத்தில் யாருக்கு திருஷ்டி அதிகமாக இருக்கின்றதோ, அந்த


குறிப்பிட்ட நபரை, கிழக்கு பார்த்தது போல், அமர வைத்துக் கொள்ளுங்கள். முதலில்
ஒரு கைப்பிடி அளவு உப்பு எடுத்து, அந்த நபருக்கு வலதுபக்கம் மூன்று முறை, இடது
பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி தண்ணரில்
ீ போட்டு
விடுங்கள்.

இரண்டாவதாக நம் வட்டில்


ீ இருக்கும், தாளிக்க பயன்படுத்தும் கடுகை சிறிதளவு,
அந்த கடுகை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதும். அதை உப்பை
சுற்றுயது போலவே, வலது பக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை ஏற்ற
இறக்கமாக மூன்று முறை சுற்றி ஒரு கொட்டாங்குச்சியை எரித்து அந்த நெருப்பில்
போட்டு விடுங்கள்.

அடுத்ததாக, அதாவது மூன்றாவதாக, இறுதியாக ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து,


அதன் மேல் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி, இடது பக்கம் மூன்று முறை,
வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, கற்பூரத்தை
கீ ழே தள்ளிவிட்டு முழுமையாக எரிய விட்டு விடுங்கள்.

உங்கள் கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை முடிந்தால், கைகளால் நசுக்கி


இரண்டு துண்டாக ஆக்கி விடுங்கள். முடியாதவர்கள் கத்தியால் இரண்டு துண்டாக
ஆக்கி, அதை வதியில் போட்டு விட
ீ வேண்டும். இந்த எலுமிச்சை பழத்தை
சுற்றும்போது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். எலுமிச்சை பழ
திருஷ்டியை சுற்றும்போது, நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ!

மஞ்சள் வர்ண புளித்த மாரி!

ரத்த வரீ ராசா கன்னி,

மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!

அவ்வளவுதான். உங்களை பிடித்த கண்திருஷ்டியுனது, ஒரே நாளிலேயே ஓடிவிடும்


என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு மந்திரத்தை உச்சரித்து,
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடைய வேண்டும்
என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

………………………………………………………………………………………………………………………
பணமெல்லாம் தேவைக்கு அதிகமாகவே இருக்குதுங்க! மனநிம்மதியை பெறுவதற்கு
ஏதாவது வழி உண்டா? என்று கேட்பவர்களுக்காக மட்டும் இந்த பதிவு.

சிலபேருக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கும். சிலபேருக்கு தேவைக்கு


ஏற்ப பணம் இருக்கும்‌. ஆனால், மன நிம்மதி என்பது ஒரு துளி கூட இருக்கவே
இருக்காது. சில பேருக்கெல்லாம் தேவைக்கு குறைவாக பணம் இருந்தாலும், மன
நிம்மதியும், அமைதியான வாழ்க்கையும் நிலவும். உங்களுடைய வாழ்க்கையில்
மன நிம்மதியை பெற என்ன வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டை எந்த
முறையில் செய்தால் உடனே பலன் அடையலாம், என்பதை பற்றிதான் இந்த
பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த வழிபாடு பெருமாலையும் மகாலட்சுமியும் வேண்டி செய்யக்கூடிய வழிபாடு.


விஷ்ணு பகவானின் நெஞ்சத்தில், மகாலட்சுமி நிரந்தரமாக நிம்மதியாக வாசம்
செய்கின்றாள். ஆகவே, பெருமாளும் தாயாரும்
சேர்ந்திருக்கும் திருவுருவப்படம் கட்டாயம் உங்கள் வட்டு
ீ பூஜை அறையில் இருக்க
வேண்டும். –

- அந்த திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விட
வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து, பிரம்ம முகூர்த்த
நேரத்திலேயே குளித்து முடித்து, சுத்தமாகி விட்டு, இந்த பூஜையை தொடங்கி விட
வேண்டும். முடிந்தவரை காலை 7.00 மணிக்கு முன்பாக பூஜையை செய்து முடித்து
விடுங்கள்.

பூஜைக்குத் தேவையான பொருட்கள், வாசனை நிறைந்த மல்லிகை பூ கட்டாயம் 101


இருக்க வேண்டும், சுத்தமான பன்ன ீர், குங்குமம், மஞ்சள், துளசி இலைகள் 2.
ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் பன்ன ீர் ஊற்றி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்,
ஒரு சிட்டிகை குங்குமம், துளசி இலைகள், எடுத்து வைத்திருக்கும் மல்லிகை பூ
இவைகளை மொத்தமாக போட்டுவிட வேண்டும். 2 ஸ்பூன் பன்ன ீர் இருந்தால்
மட்டுமே போதும்.

கிண்ணத்திலிருந்து ஒவ்வொரு பூவாக எடுத்து மகாலட்சுமி தாயாருக்கும்,


பெருமாளுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். குறிப்பாக இந்த மந்திரத்தைச்
சொல்லி 101 முறை உச்சரித்து அர்ச்சனை செய்யவேண்டும். இப்படியாக தொடர்ந்து
மூன்று வெள்ளிக்கிழமைகள் செய்து பாருங்கள். எப்படிப்பட்ட மன உளைச்சலாக
இருந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
உங்களுக்கான மன நிம்மதியை பெற்றுத் தரக்கூடிய மந்திரம் இதோ!

ஓம் வரப்ரதாய நமஹ!

ஓம் பக்தவத்ஸலாய நமஹ!

ஓம் ஆகாச ராஜ வரதாய நமஹ!

காசு பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதித்து விடலாம். ஆனால், மனநிம்மதியை


எங்கு சென்றாலும் காசு கொடுத்து வாங்க முடியாது. அப்படிப்பட்ட மன நிம்மதியான
வாழ்க்கையை வாழ முடியாமல் இன்று பலபேர் தவித்து வருகிறார்கள். கோடி
ரூபாய் காசு இருந்தாலும், அதை ஆண்டு அனுபவிக்க மகிழ்ச்சியான சூழ்நிலையில்,
மன அமைதியும், சந்தோஷமான குடும்பமும் ஒருவருக்கு கட்டாயம் இருக்க
வேண்டும். லட்சுமி கடாட்ச தோடு சேர்ந்த, மன அமைதியை விரும்பும் எல்லோரும்
இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த
பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

………………………………………………………………………………………………………………………….
திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும்,
அருணகிரிநாதர் அருளிய, சக்திவாய்ந்த மந்திரம்! இந்த மந்திரத்தை 6 முறை
உச்சரித்தாலே போதும்.
திருமணம் ஆகாமல் இருப்பது ஒரு பிரச்சனை என்றால், திருமணமான பின்பு,
கணவன் மனைவி ஒற்றுமை இல்லை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.
ஆகவே, திருமணத்தடையை நீக்குவதற்கும், வட்டில் சண்டை
ீ சச்சரவு இல்லாத
நிம்மதியான வாழ்க்கை நிளவுவதற்கும், அருணகிரிநாதர் அருளிய, திருப்புகழை
பற்றித்தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எம்பெருமான்
முருகப் பெருமானை நினைத்து, காலையில் எழுந்து, உங்கள் வட்டு
ீ பூஜை
அறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றிவைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்தால்
போதும்.

திருமணம் ஆகாத தங்களுடைய குழந்தைகளுக்காக, பெற்றோர்களும் இந்த


மந்திரத்தை உச்சரித்து, தங்களுடைய பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளலாம்.
திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை, சண்டை
சச்சரவுகள் என்று குடும்பத்தில் வந்து கொண்டே இருந்தால், அவரவரே இந்த
மந்திரத்தை, அவரவர் வாயினால் உச்சரித்து மனதார, மனமுருகி வேண்டிக்
கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் கை மேல் பலன் உண்டு. பிரிந்த தம்பதியினர்,
மீ ண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, தாராளமாக இந்த
மந்திரத்தை உச்சரிக்க, கைமேல் பலன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. –

- இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள், 6 முறை உச்சரிக்க வேண்டும். ஜாதக


தோஷத்தின் மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு கூட, அந்த தோஷத்தினால்,
ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்க கூடிய சக்தி, இந்த மந்திரத்திற்கு உண்டு என்று
சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்காக அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல் இதோ!

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து …… வெயில்காய மிதவாடை


வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் …… வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப …… மயல்தீர


குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து …… குறுகாயோ மறிமானு
கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த …… மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த …… அதிதீரா அறிவால றிந்து
னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் …… களைவோனே அழகான செம்பொன்
மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த …… பெருமாளே.

சொல் விளக்கம்
விறல்மாரன் … வரனாம்
ீ மன்மதன் ஐந்து மலர்வாளி சிந்த … ஐந்து மலர்ப்
பாணங்களையும் செலுத்த, வானி லிந்து மிக வெயில் காய … ஆகாயத்தில் நிலவு
அதிகமாக வெயில் போலக் காய, மிதவாடை வந்து … நிதானமான தென்றல் காற்று
வந்து தழல்போல வொன்ற … தீப்போல வசிப்
ீ பொருந்த, வினைமாதர் தந்தம்
வசைகூற … வண்வம்பு
ீ பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற,
குறவாணர் குன்றி லுறை … குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் பேதை கொண்ட …
(வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த

கொடிதான துன்ப மயல்தீர … கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்மாலை


யின்கண் … குளிர்ந்த மாலைப் பொழுதினிலே அணிமாலை தந்து … நீ அணிந்த கடப்ப
மாலையைத் தந்து குறைதீர வந்து குறுகாயோ … என் குறையைத் தீர்க்க வந்து
அணுகமாட்டாயா? மறிமா னுகந்த இறையோன் … இள மானை உகந்து ஏந்தும்
இறைவன் சிவபிரான் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா … (உன் உபதேசம் பெற்று)
மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, மலைமாவு சிந்த …
கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வழ்ந்து
ீ படவும், அலைவேலை யஞ்ச …
அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், வடிவே லெறிந்த அதிதீரா … கூரிய வேலை
வசிய
ீ அதி தீரனே, அறிவால் அறிந்து … அறிவு கொண்டு உன்னை அறிந்து,
உன்னிருதாள் இறைஞ்சும் … உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார்
இடைஞ்சல் களைவோனே … அடியார்களின் துயரைக் களைபவனே, அழகான
செம்பொன் மயில்மே லமர்ந்து … அழகிய செம்பொன் மயில்மீ து அமர்ந்து அலைவா
யுகந்த பெருமாளே. … திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே.

திருமணமாகாத ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், இந்த


மந்திரத்தை உச்சரிப்பதோடு சேர்த்து, சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு,
பூ சேர்த்த தாம்பூலத்தை, தானமாக கொடுத்து, 11 சுமங்கலி பெண்களை ஒன்றாக
நிற்க வைத்து, அவளுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது,
எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
முடிந்தால், உங்கள் வட்டிற்கு
ீ சுமங்கலி பெண்களை அழைத்து, உங்களால் முடிந்த
உணவை பரிமாறி, தாம்பூலம் கொடுத்து, ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் நம்பிக்கையோடு உச்சரிப்புடன், சேர்த்து


அதனுடைய அர்த்தத்தையும் புரிந்து கொண்டு உச்சரிப்பதால் கிடைக்கக்கூடிய
மனநிறைவு அதிகமாகவே இருக்கும் என்ற ஒரு
கருத்தை முன்வைத்து, திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஆண் பெண்
இருவருக்கும், விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றும், திருமணம் என்பது
ஒரு வரப்பிரசாதம், அதை வரமாக பெற்றுக் கொண்டவர்கள் இல்லற வாழ்க்கையை
இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்த திருச்செந்தூர் முருகப்
பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

………………………………………………………………………………………………………………………………….
காயத்ரி மந்திரம் உச்சரிக்காமல் எந்த மந்திரம் சொன்னாலும் உங்களுக்கு ஒரு
பலனும் இல்லை தெரியுமா? உங்கள் துயரம் தீர இந்த மந்திரம் ஒன்றே போதும்

எல்லா மந்திரத்திற்கும் தாயாக முதலில் தலைமை வகித்து விளங்கும் காயத்ரி


மந்திரம் ஆன்மீ கத்தில் மிகவும் முக்கியமான மந்திரம். எந்த மந்திரத்தை நீங்கள்
உச்சரிக்கும் முன்னரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நீங்கள் உச்சரித்த
மந்திரத்தின் பலன் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும் என்பார்கள். அத்தகைய
சிறப்பு வாய்ந்த காயத்ரி மந்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், அதை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றிய முறைகளையும் இந்த பதிவின் மூலம்
நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். தினமும் மூன்று வேளை இந்த மந்திரத்தை
உச்சரிப்பவர்கள் வாழ்வில் எந்த வித இன்னல்களையும் சந்திக்க மாட்டார்கள் என்பது
நியதி. காயத்ரி மந்திரம் என்பது சக்தி வாய்ந்த வேத மூல மந்திரம் ஆகும். மற்ற
அனைத்து மந்திரங்களுக்கும் தாயாக இருப்பவள் காயத்ரி. விசுவாமித்திரரால்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த மந்திரம் சூரிய பகவானை நோக்கி உச்சரிக்க படுவதாக
அமைந்துள்ளது என்பது சிறப்பு வாய்ந்தது. - Advertisement - உச்சரிக்கும் பொழுதே
அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய இந்த காயத்ரி மந்திரம், மனிதனின் எண்ண
அலைகளை சீராக்கி மனதை ஒருநிலைப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டது. காயத்ரி
மந்திரம் உச்சரிக்காத எந்த விதமான பூஜை, புனஸ்காரங்களும் முழுமை பெறாது
என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமான்
எப்படி அனைத்து தெய்வங்களுக்கு முன்னர் முதன்மையாக வணங்கப்படுகிறார்?
அதே போன்ற முதன்மைப் பதவியை மந்திர உச்சாடனத்தில் வகிப்பவர் காயத்ரி.
சூரியனின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்கின்ற தன்மைதான் காயத்ரி. சரஸ்வதி,
லஷ்மி, பார்வதி, சாவித்திரி, மனேன்மணி ஆகியோரின் அம்சங்களை கொண்டவள்
காயத்ரி தேவி என்பார்கள். ஒவ்வொரு அம்சத்திலும் படைத்தல், காத்தல், அழித்தல்,
மறைத்தல், அருளல் போன்றவை நிகழ்கின்றன. இதனால் தான் ஐம்புலன்களையும்
அடக்கி ஆளும் திறமை கொண்டவர் காயத்ரி தேவி என்பார்கள். -

வேதத்தின் சாரமாக விளங்கும் காயத்ரி மந்திரத்தை கவனமாக காலை, மதியம்,


மாலை என்று 3 வேளையும் உச்சரிப்பவர்கள் சகல யோகங்களையும் பெறுகின்றனர்.
காலையில் உச்சரிக்கும் பொழுது காயத்திரிக்காகவும்., மதியம் உச்சரிக்கும் பொழுது
சாவித்ரிக்காகவும், மாலையில் சந்தியா வந்தனத்தில் உச்சரிக்கும் பொழுது
சரஸ்வதிக்காகவும் இந்த மந்திரத்தை உச்சரிக்கின்றனர். மூன்று வேளை இந்த
மந்திரத்தை தவறாமல் உச்சரிப்பவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் உடனே நீங்கி
விடும். தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த அத்தனை பாவங்களும் பரிபூரணமாக
நீங்கும். இதனால் உண்டாகும் நற்பலன்கள் என்ன தெரியுமா? காயத்ரி மந்திரத்தை
108 முறை உச்சரிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும். உங்களை
அமைதி இழக்கச் செய்யும் எந்த சூழ்நிலையையும் உடைத்தெறிந்து அமைதியான
நிலைக்கு வைத்திருக்கும். உங்கள் சிந்தனைகளை நல்ல வழியில் செலுத்தி நல்ல
எண்ணங்களை விதைக்கும். உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் இன்னல்கள்
யாவற்றையும் உடனடியாக நீக்கி பஸ்பமாகிவிடும். நீங்கள் யார் என்னும்
உண்மையை உங்களுக்கு உணர்த்தும். காயத்ரி மந்திரம்: ஓம் பூர் : புவ : ஸ்வ : தத்
ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந : ப்ரசோதயாத் பொருள்:
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை வணங்குகின்றோம் என்பதே இதன்
உள்ளார்ந்த பொருள் ஆகும். வேத மந்திரத்திலிருந்து வந்த முதல் மந்திரமாக காயத்ரி
மந்திரம் இருப்பதால் இத்தகைய தனி சிறப்பை பெற்று மந்திரங்களின் தலைவியாக
மகுடம் சூட்டி நிற்கிறது. அசாத்திய சக்தி பெற்ற இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து
நாமும் பலன் பெறுவோம்.

…………………………………………………………………………………………………………
http://suryatamil1.blogspot.com/
……………………………………………………………………………….

You might also like