Professional Documents
Culture Documents
தீபாவளி
தீபாவளி
தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப
ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள்
கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி,
சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த
சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில்
கொண்டாடப்படுகிறது.
தீபாவளி கொண்டாடுவதற்கு பல
காரணங்களை, புராணக் கதைகளின்
வழியாகக் கூறுகின்றனர். நரகாசுரனை
அதிகாலையில் வதம் செய்து முடித்த
கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை
முழுகினார். அவன் தான் இறக்கும் தினத்தை
மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட
வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக்
கொண்டாடப்படுகின்றது.[4]