You are on page 1of 3

10/27/21, 10:41 PM பதிப்பும் திருத்தமும் | மனம் போன போக்கில்

மனம் போன போக்கில்

Entries (RSS)
Comments (RSS)

பதிப்பும் திருத்தமும்

Posted by: என் . சொக்கன் on: January 11, 2017

In: Books | Characters | Learning | Tamil | Uncategorized


2 Comments

ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூலொன் றை


வாசித்துக்கொண் டிருக்கிறேன் . ஒரு பெரிய பேராசிரியரின் தயாரிப்பு, ஒரு
பெரிய பதிப்பகத்தின் வெளியீடு.

இந்த ஓலைச்சுவடிகளைக் கண் டறியவும் பதிப்பிக்கவும் அந்தப்


பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளார், பல ஆண் டுகள் உழைத்துள்ளார்.
இது அந்நூலின் முன் னுரையில் நன் கு விளங் குகிறது. அவருக்கு என்
மரியாதைகள் .

அதேசமயம், நூலினுள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள் . இவை


ஓலைச்சுவடியில் இருந்த பிழைகளாக இருக்கலாம், அவற்றைச் சரிசெய் து
பதிப்பித்திருப்பதாகவே பேராசிரியர் சொல்கிறார்.

இந்தப் பிழைகளில் பலவும், அற்பமான எழுத்துப்பிழைகள் , ’படித்தான் ’


என் பதற்கும் ‘படிந்தான் ’ என் பதற்கும் ஓர் எழுத்துதான் மாறுகிறது, ஆனால்
பாடலைச் சேர்த்துப் படிக்கும்போது எந்தச் சொல் அங் கே வரவேண் டும்
என் று புரியுமல்லவா?

மற்ற சில பிழைகள் , கொஞ் சம் நுணுக்கமானவை. ஆனால், தமிழ்ப் பக்தி


மரபு, செய் யுள்கள் எழுதப்படும் விதம், மரபிலக்கிய முறைகள்
ஆகியவற்றை அறிந்த ஒருவர் இவற்றை மிக எளிதில்
கண் டுபிடித்திருப்பார்.

இத்துணை அருமையான பாடல்களுக்கு அச்சில் உள்ள ஒரே பிரதி


இதுதான் , அது இத்தனைப் பிழைகளுடன் இருப்பது மிகவும் வருத்தமாக
உள்ளது, அதேசமயம், அந்தப் பேராசிரியரின் உழைப்பைக் கால்மேல் கால்
போட்டுக்கொண் டு குறைசொல்லத் தயக்கமாகவும் உள்ளது.

அந்தப் பதிப்பகத்துக்கு இதைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுத


எண் ணியுள் ளேன் . ஆனால், அவர்கள் இதைத் திறந்த மனத்துடன்
எடுத்துக்கொள்வார்களா என் று தெரியவில்லை.

ஏன் இந்தச் சந்தேகம் என் று யோசிப்பவர்களுக்கு, சில நாள் முன் பு ஒரு


நண் பருடன் நடந்த வாட்ஸாப் உரையாடலைப்பற்றிச் சொல்கிறேன் .

ந் ண் ர் ற்
https://nchokkan.wordpress.com/2017/01/11/bkcrctns/ ர் ந் க் ப் ரி 1/3
10/27/21, 10:41 PM பதிப்பும் திருத்தமும் | மனம் போன போக்கில்

அந்த நண் பர் ஒரு சொற்றொடர் தந்து ‘இது இலக்கணப்படி சரியா?’


என் றார், ’தவறு’ என் று சொல்லி அதைத் திருத்தித்தந்தேன் .

அவர் தந்த அந்தச் சொற்றொடர் ஒரு தமிழ்மன் ற விழாவின் அழைப்பிதழில்


வருகிறதுபோல. நான் சொன் ன திருத்தத்தை அவர் அங் கே
சொல்லியிருக்கிறார்.

அவ் வளவுதான் , எல்லாரும் அவர்மீது பாய் ந்துவிட்டார்கள் , ‘இதை


எழுதியவர் எப்பேர்ப்பட்ட பண் டிதர் தெரியுமா? தமிழில் எப்பேர்ப்பட்ட
பட்டங் கள் வாங் கியவர் தெரியுமா? அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார்?
இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா?
அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா?’

நண் பர் என் னிடம் வந்தார், ‘ஐயா, இப்படிச் சொல்கிறார்கள் , நான் என் ன
செய் ய?’ என் றார்.

நான் புன் னகையோடு சொன் னேன் , ‘அன் பரே, தமிழ்மன் றம் என் று நீங் கள்
முன் பே சொல்லியிருந்தால் நான் இந்தச் சொற்றொடரில் கைவைக்கவே
துணிந்திருக்கமாட்டேன் , அவர் எழுதியதே சரி.’

‘அப்படியானால் நீங் கள் சொன் ன திருத்தம்?’

‘அதுவும் சரி.’

‘அந்தத் திருத்தம் ஏன் என் று எனக்கு விளக்குங் களேன் , நான் அவர்களிடம்


சென் று சொல்கிறேன் .’

’அட அப்பாவியே’ என் று சிரித்தேன் , ’உங் களுக்கு நிச்சயம் விளக்கம்


சொல்கிறேன் , ஆனால், அதைப்போய் அங் கே சொல்லாதீர்கள் , தமிழில்
பெரும்பட்டங் களைப் பெற்றோரிடம் வாதாடலாகாது, அதனால் துளியும்
பயனிருக்காது, பணிந்துசென் றுவிடுங் கள் .’

***

என் . சொக்கன் …

11 01 2017

2 Responses to "பதிப்பும் திருத்தமும்"

1 | Kanniappan Kanniappan
January 11, 2017 at 3:03 pm

நீங் கள் சொல்வது மிகவும் சரி; பிழையை அச்சடிக்கும் பொழுதே


திருத்தியிருக்க வேண் டும். நானும் உலகத் தமிழாராய் ச்சி மையத்தில்
பார்த்த ஒரு புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட எழுத்து வரும்
சொற்களிலெல்லாம் பிழையும் இருந்தது.

2 | nparamasivam1951

pm
January 11, 2017 at 10:41

ண் ன் சி மி ழ்
https://nchokkan.wordpress.com/2017/01/11/bkcrctns/ ற் ம் றி ர் ல் ப் ம் 2/3
10/27/21, 10:41 PM பதிப்பும் திருத்தமும் | மனம் போன போக்கில்
உண் மை தான் . சில தமிழ் சொற்களும் அறிஞர்களால் குழப்பம் அடைய
வைக்கின் றன. “பட்டி மன் றம்” “பட்டி மண் டபம்”. இது போல் பல

https://nchokkan.wordpress.com/2017/01/11/bkcrctns/ 3/3

You might also like