காலையில் 10 கொத்தவரங்காய், 5 கோவைக்காய் மற்றும் 1 எலுமிச்சையை மிக்ஸியில் போட்டு
அரைத்து சாறை அருந்துங்கள்.
மதியம் 100 புடலங்காய் (விதை தோலுடன்) மற்றும் 10 முருங்கை இலையை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறை அருந்துங்கள்.
இரவு வாழைக்காயை தோலுடன் சிறிது சிறிதாக வெட்டி நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
தொடர்ச்சியாக இதை எடுத்துக்கொண்டால் இரண்டு வாரங்களில் தோல் மிருதுவாக மாறிவிடும். ஒரு
சிலருக்கு சரியாக கூடுதல் காலமும் தேவைப்படலாம்.
வெளிப்பூச்சிற்கு
இரவு 10 முருங்கை இலை, 10 மருதாணி இலை, எண்ணை (நல்லெண்ணெய், விளக்கெண்ணை,
தேங்காயெண்ணை இவற்றில் ஏதாவதொன்று) நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் கலந்து கால் ஆணி மேல் வைத்து கட்டிவிடுங்கள். காலையில் கழுவிவிடுங்கள். ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து இந்த பேஸ்ட்டை உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வலி அதிகமாக இருந்தாலும் இந்த முறையை பின்பற்றி பயன்பெறலாம்.
குறிப்பு:
1. டீ காப்பி போன்றவற்றை தவிர்கக
் வேண்டும்.
2. பசித்த பின்னர்தான் உணவை உட்கொள்ள வேண்டும்.
3. இரவு 9 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. இயற்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் தூங்க வேண்டும்.