Professional Documents
Culture Documents
ஆக்கம்:
துறைமுத்து சுப்ரமண்யம்,
தெங்கு அம்புவான் அப்சான் ஆசிரியியல் கழகம், பகாங்
சிறுகதை ஒன்றை மதிப்பீடு செய்வதை அக்கதையைப் படிப்பவர் எவரும் செய்யலாம். கதை பிடிக்கிறது
அல்லது பிடிக்கவில்லை என்ற ஒற்றைச் சொல் கருத்துக்கும் மேற்பட்டு, அது ஏன் எனக்குப் பிடிக்கிறது
அல்லது பிடிக்கவில்லை என்று விவரித்தால் அது விமர்சனம் ஆகிவிடும். படிப்பதைக் குறித்து ஒரு
கருத்தை உருவாக்கிக் கொண்டவர் எவருமே விமர்சிப்பவர்தான், அதைச் செய்யும் தகுதி
உடையவர்தான். அதற்குத் தனிப்பட்ட தகுதி என்ற ஒன்று கிடையாது. ஒவ்வொருவர் கருத்துக்கும்
மதிப்புண்டு. இருப்பினும், பரந்துபட்ட வாசிப்பும், ஒருதுறையின் வல்லுநரான ஒருவர் தனது துறைசார்ந்து
பின்புலத்துடன் ஒப்பீட்டு அளவில் தனது மதிப்பீட்டை முன்வைக்கும் பொழுது அக்கருத்துக்கு மதிப்பு
அதிகம். திரைப்படம் ஒன்றைப் பார்த்து அது குறித்து கருத்து பகிரத் தெரிந்த எவரும் சிறுகதையையும்
அவ்வாறே விமர்சிக்கலாம். திரைப்படத்தில் பங்குபெறும் நடிகர், இசையமைப்பாளர், தொழில்நுட்ப
வல்லுநர், இயக்குநர் என்று பலரையும் தனித்தனியே பாராட்டி விமர்சிக்க இயலும். ஆனால்
எழுத்திலக்கியத்தில் கதாசிரியர் ஒருவரின் செயல்பாட்டை மட்டுமே மதிப்பீடு செய்யமுடியும் என்பதே
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.