Professional Documents
Culture Documents
Sol Arumbum Solai
Sol Arumbum Solai
முன்னுரை
நன்றிகள்,
இரா.வசந்த குமார்,
26-மார்ச்-2019, பூனா, மராட்டியம்.
அட்டவணை
● உடைந்த மூக்கு.
● எச்சில்.
● நரகுசூழ் பாதை.
● நீரலை நுரை.
● காலணி திருத்துனர்.
● வெம்பாலை வாழ்வு.
● அப்பாவாதல்.
● எழுவிழுதல்.
● மழைப் பொழுது – 1.
● மழைப் பொழுது – 2.
● ஆகாயம்.
● செய்க.
● அழைப்பு.
● சிறு கோடு.
● ஞாயிறு போற்றுதும்.
● திங்கள் போற்றுதும்.
● மாமழை போற்றுதும்.
● சொல் செல்லும்.
● உன் இடை.
● A Stray Dog.
● அறத்தாறிது.
● தனி மலரே.
● களிமனம்.
● மனப்பாறை.
● பெருமூச்சுகள்.
● எங்கெங்கிலும்.
● சில துளிகள்.
● வரமாட்டேன்.
● வாய்க்கா வரப்போரம்.
● பாடுகிறேன்...!
● போறவளே பொன்னுத்தாயி...!
● மொட்டுகள்.
● இறுதிப்புள்ளி.
உடைந்த மூக்கு.
இணையதளத்தில்
துளித்துளியாய்
ஆடை விலக்கி
பரிநிர்வாணம் அடைபவள்,
அன்று
உடைந்த மூக்குடன்
தோன்றினாள்.
‘கேமிராவைக்
உதட்டுக்கு மேல்
கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன்.
பார்வையாளர்கள் எண்ணிக்கை
சட்டென 5320 ஆனது.
‘ஜென்னி,
இப்போது தான்
நீ இன்னும் அழகாய் இருக்கிறாய்.
மேகங்களில் மிதந்து கொண்டிருந்த
பொன்புறா,
மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல்.
கைக்கெட்டும் அளவான அழகில்.’
என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன்.
அவனுக்கு மட்டும்
இரு முத்த எமோஜிகளும்
ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும்
அனுப்பினாள்.
யாரும்
‘டேக் கேர்’
சொல்லவில்லை.
ஃஃஃ
எச்சில்.
பொது உணவகத்தில்
எச்சில் இலைகள்
நிரம்பிய
தொட்டிக்குள்
விழுந்த
செல்போன்
எந்த வேறுபாட்டையும்
உணரவில்லை.
ஃஃஃ
நரகுசூழ் பாதை.
சிரிப்புகளாலும் மகிழ்ச்சிகளாலும்
நிரப்பப்பட்டிருக்கும்,
தன்னால் வெல்லப்பட
முடியாதவர்களின்,
தன்னை வென்றவர்களின்.
நுரைத்து நுரைத்தெழும்
ஆனந்தப் பேரலை
அடித்துக் கொண்டிருக்கும்,
தன்னை இகழ்ந்தவர்களின்,
வாயிலில் நிறுத்தித்
துரத்தியவர்களின்.
திருவிழாக்களும்
திசையெங்கும் வண்ணங்களும்
திரண்டிருக்கும்,
தினம் எண்ணிப் புகைப்போர்க்கும்,
கணம் கூட மறவாதோர்க்கும்.
கெடுநாற்றமும்,
வேகும் நெருப்புக் கொந்தளிப்பும்
மழைச்சாணிக் குழைசலும்
கூர் நுனிமுட்களும்
நிரம்பிய
புராணப் பாதைபோல்
இருக்கலாமெனில்,
அது மேலல்லவா,
வருந்திச் சிந்தக் கண்ணீரும்
தோள் வருடி ஆறுதலிக்க
இரு கரங்களும்
கூட கேள்!
சிலுவையிலிருந்து
பிய்த்தெடுத்து
வழிகுருதி துடைத்து,
நீட்டித் துயர் துடைப்பான்,
அவன்.
ஃஃஃ
நீரலை நுரை.
ஃஃஃ
‘வா...
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.
எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு
தேநீர்க் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?
ஃஃஃ
காலணி திருத்துனர்.
நடைபாதையில்
காலணி திருத்துனர்
கால் மடித்து
எப்போதும்
தலை குனிந்து
அமர்ந்திருக்கிறார்.
கடந்து செல்பவர்களின்
கால்களை மட்டுமே
கவலையுடன்
பார்க்கிறார்.
பிழைகளை ஏந்தி
அப்பிழை ஏந்தி வரும்
கால்களை மட்டுமே
அவர் தேடுகிறார்.
வெறும் கால்களை
மட்டும்
கொண்டவர்களை
அவரும் கூட
விரும்புவதில்லை.
அவரிடம் வீசுமுன்
காலால் எத்தும் முன்
விரைவுபடுத்து முன்
கொஞ்சம் புன்னகையையும்
அவரிடம் வீசலாம்,
குறைவில்லை.
ஃஃஃ
ஃஃஃ
வெம்பாலை வாழ்வு.
பாலையில்
தனித்திருக்க
நேர்கையில்
வாளெடுத்து
நீ
சிரமறுத்துக்
கொள்ள மாட்டாயா?
***
வான் தீ
தின்னும்
முகிலின்
நிழல்கள்
நெளிந்தாடுகின்றன
கானலாய்!
***
பசி பிளக்கும்
ஓநாய்
பிணந்தேடும்
கழுகு
ஈரம் காய்க்கும்
வெக்கை
அடுக்கடுக்காய்
மணல்
நிழல் பதுக்கும்
என்னுடன்!
***
வெம்மை நிறைந்த
நீல ஆகாயம்
யாதுமற்ற
பாழ்வெளி
நச்சரவம் ஊறும்
செம்மணல்
விஷம் ததும்பும்
உயிர்க் குகை
தூரப்பச்சை
எங்கோ எனும் கனவு
வெம்பாலையில் தனித்த
வாழ்வு.
ஃஃஃ
அப்பாவாதல்.
அதே முடி
அதே மூக்கு
அதே முகம்
அதே சொல்
அதே சர்க்கரை
யாரோ ஒருவனாகப்
பிறந்து
மெல்ல மெல்ல
அப்பாவாதல் தான்
வாழ்வாகின்றது.
ஃஃஃ
ஃஃஃ
எழுவிழுதல்.
நீலப்
பனித்துகள்கள்
காலத்தின் போக்கில்
உறைந்து
சிவக்கின்றன
ரத்தமாய்.
சுழன்றுச் சுழன்று
கழன்று
விழுந்த
புரவியின் வால்
கரைந்த இடத்தில்
முளைக்கின்றது
ஒரு
மரங்கொத்தி.
தீயைப் புகட்டி
வாயில்
அடக்கிக் கொண்ட
அசுரன் முகம்
பூப்பூவாய்
வெடிக்கும்
போது
ஈரமாய் வானம்
மலர்கின்றது.
சிம்னியிலிருந்து
கசியும் புகை,
மஸ்லின்
மாராப்பை
நழுவ விடும்
நாட்டியக்காரி
மார்புகளைப் போல்
பொய்யாய்க்
கரைந்து
காணாமல் போகிறது.
வெண்குழல் திரவம்
ராட்சஸ வேகத்தில்
நகர்ந்து
உள்ளிழுக்கும்
வெட்டவெளியில்
துளித்துளியாய்ச்
சேகரமாகிறது.
புதிய நிழலைத்
திணிக்கும்
ஒரு ரகஸ்ய
வெய்யில்,
மந்தாரமாய்ப்
பெருகுகையில்,
இலைகளில் தேங்கும்
இரவின் இளமைத்துளி
பஸ்பமாகிறது.
அனலாய்
அடித்துக் கொள்ளும்
வண்டின் சிறகுகள்
கூசும் வகையில்
தொடையில்
துளைத்து
தலைநுழைக்கும் போது,
விழிப்பிலிருந்து
எழுந்து
கனவுக்குள்
விழுந்தேன்.
ஃஃஃ
நீலக்கடலில் இருந்து
உறிந்து கொண்டதா
தனது அலங்காரத்தை
வானம்?
இல்லை,
வானின் நிறத்தில்
இருந்து
தனக்கான ஆடையை
அணிந்து கொண்டதா
கடல்?
அசைந்தாடும் காற்றில்
இருந்து
அறிந்து கொண்டதா
மஞ்சள் நிறத்தை
வெயில்?
இல்லை,
கொதிக்கும்
கதிரிலிருந்து
கற்றுக் கொண்டதா
பகலின் நிறத்தைக்
காற்று?
பனியின்
மினுமினுப்பில் இருந்து
பறித்துக் கொண்டதா
வெண்மையின் அழகை
நிலா?
இல்லை,
வெண்ணிலவின்
அமுதிலிருந்து
பகிர்ந்து கொண்டதா
குளிர்மையை
பனித்துளி?
பச்சைக்
குளிர் நீரைப்
பார்த்து
பசியல் ஆனதோ
தாவரம்?
இல்லை,
பச்சையம் கரைந்து
பாசிகளால்
ஆனதோ
பாயும் நீர்?
பெண்மையின்
மென்மையில்
பதுங்கிக் கொண்டதோ
ஆண்?
இல்லை
ஆணின்
வன்மையில்
வழுவிக் கொண்டதோ
காதலின் பெண்?
இரண்டென்று
ஏது?
எல்லாம்
ஒன்று
என்று
ஆன
பின்!
சேர்தலே
நன்று
என்று
ஆன பின்!
ஃஃஃ
மழைப் பொழுது – 1.
மழையோடும்,
என் மனதோடும்
நான்
மகிழ்ந்திருந்த
பொழுதுகள் சொல்லவா?
முதல் நாள்
பள்ளியில் சேர்கையில்
பெய்த மழை
சீருடையில்
வழுக்கிச் சென்றதில்
ஈரமானது
உள்ளங்கை!
சபித்த
மழை நாளில்
நிறுத்தப்பட்ட
இறுதிப் போட்டியின் வலி
கண்கள் வழி
கசிந்ததை
உணர்வாயா..?
கைக்கெட்டா
கொய்யாக் கனிகளை,
வெயில் பெய்த
ஒரு
மதியத்தின் மழை
பறித்துக் கொடுத்ததை
அறிவாயா..?
வெள்ளமெனத் திரளும்
இருட்டில்,
மழைத்துளிகள் படிந்த
இரு இதழ்களின்
அருகாமையில்
இனித்தது
அந்த இரவு
என்பதை
புரிந்தாயா?
ஈரத்தில்
ஒட்டிப் போன இறகுகளோடு
கூண்டுக்குள்
இறந்து கிடந்த
குருவி கண்டு
திட்டிய
மழை நாள்,
நீ கண்டதுண்டா..?
வெயில் எழுதிய
வலி நிரம்பிய
எழுத்துக்களை
நெஞ்சில்
சுமந்து நடக்கும்
நீ அறிவாயா..?
எங்கள் மனம்
போல்,
விரிசல் கண்ட
நிலம் மேல்
நீ நடந்து
தேடுவது
பானை நீரா?
எங்கள் கண்ணீரா?
வருந்தாதே!
கிடைக்கலாம்
இரண்டும் எப்போதாவது!
எங்கள்
நீராதாரங்களும்
வற்றிப் போய்,
நாங்களும்
உன் போல் ஆகும் வரை
மை ஈரம் தீர்க்க
எழுதிக் கொண்டிருப்போம் உனக்காக,
உடைந்த பானையும்,
உடையாத நம்பிக்கைகளுமாய்
தேடிக் கொண்டேயிரு
ஈரத்தை,
நிலத்திலோ,
எங்கள் நெஞ்சத்திலோ..!
ஃஃஃ
மழைப் பொழுது – 2.
பெய்கின்ற
பெரு மழைக்குப்
பயந்து,
இறுக்கச் சாத்திய
ஜன்னலின்
இடுக்கு வழி
நுழைந்து,
ஒற்றை அறைக்குள்
சுற்றிச் சுற்றி
அலைந்து,
'சொத்'தென
அடிக்கப்பட்டு
இறந்தது
தடி புத்தகத்தால்
ஒரு பூச்சி!
***
மழை நின்ற
நிமிடங்களுக்குப் பின்
அடியில் நின்ற
அனைவரையும்
நனைத்து,
மரம் பெய்தது.
***
எண்ணெய் வழியும்
சாலை,
குரல் கொடுக்கும்
தகரக்கூரை,
நிறைத்துப் பாயும்
சாக்கடை,
தூசு நீங்கும்
கறுப்புக் குடை,
ஆவி பறக்கும்
மயானம்...
இல்லாத ஒன்றை
எடுத்துக் காட்டுகிறது,
திடுமென பொழியும்
மாமழை!
***
ஒரு கையில்
மழை பிடித்தேன்.
மறு கையில்
காகிதக் கப்பல்.
பார்த்தால்,
மழைக்கு
உள்ளும் கப்பல்.
வெளியும் கப்பல்.
***
வானம் அழுகிறது
என்கிறார்கள்.
தேவாசுரப் போர்
என்கிறார்கள்.
வருண பகவான்
வருகிறார்
என்கிறார்கள்.
பகல் மழையில்
நரிக்கு கல்யாணம்
என்கிறார்கள்.
மேகம் மோதும்
மின்சாரம்
என்கிறார்கள்.
அம்மோனியா தூவினால்
அமோகப் பலன்
என்கிறார்கள்.
பாயும் குதிரை,
கோமாளி,
அரக்க முகம்,
பூந்திப் பொட்டலம்,
யானை,
ரோஜாப் பூ,
தேர்,
அப்பா முகம்...
என்னென்னவோ
வடிவங்கள் காட்டினாலும்,
பூக்குடையைப் பிடித்து
வீதியில் நடக்கும்
அந்தச் சிறுமியை
நனைக்காது
எல்லா மேகமும்
ஒரே
மழையாய்ப்
பெய்கின்றன.
ஃஃஃ
ஆகாயம்.
ஃஃஃ
செய்க.
சிலுவைகள் தயாராகட்டும்.
ஆணிகள் அடிக்கப்படட்டும்;
கற்கள் எறியப்படட்டும்;
வெந்நீர் ஊற்றப்படட்டும்;
எரிகம்பம் ஏற்றப்படட்டும்;
பன்னூற்றாண்டுகளுக்குப் பின்னால்
உம் ரத்தம்,
எம்
பெயர்களை
சொற்களை
மனனம் செய்யும்.
அதுவரை
எமை இழிவு செய்யும்
பொன்னான வாய்ப்பு
உமக்கே.
செய்க.
ஃஃஃ
அழைப்பு.
தள்ளுவண்டியில் குவித்து
ஆப்பிள் விற்பவரை
ஆப்பிள்..ஆப்பிள்..
என்றே அழைக்கிறார்கள்.
கூடைக்குள் வைத்துக்
கீரை விற்பவளை
கீரை...கீரை...
என்றே கூப்பிடுகிறார்கள்.
விற்பதைக் கொண்டே
விற்பவனைக்
குறிப்பிடுவதென்றால்,
நடுத்தெருவில் நின்று கொண்டு
உங்களை
என்ன சொல்லிக் கூவுவது?
ஃஃஃ
இறுக்க மூடிய
கண்ணாடிக் குடுவைக்குள்
இட்ட
பொன் சொட்டு போல்
உன்
ஒரு சொல் குறுஞ்செய்தி.
என்னவென்று
தெரிந்த பின்
எடுக்கத் தயக்கம்.
தொட்டவுடன்
பட்டாம்பூச்சியாய்ச்
சிறகடித்து
விரல் விட்டு விலகிவிடக்கூடும்.
அல்லது
பொருளிலா என்னுலகின்
ஏதோ ஒரு பொருளுக்கு
ஒப்பாகி
மதிப்பு குறையக்கூடும்.
விற்கும் வரை
நிலத்தின் விலை போல்
உயர உயர
அப்பொன் சொல்
மிதந்து கொண்டிருக்கட்டும்.
ஃஃஃ
சிறு கோடு.
எதுவோ எப்போதோ
கைமூட்டில்
கீறிய சிறு குருதிக்கோடு,
வைக்கும் இடத்திலெல்லாம்
தன் செந்தடத்தைப்
பதிக்கிறது.
என் இருப்பை
என் வரவை
என் கையை
என் பதிவை
அச் சிவப்பு
காயும் முன்
கழுவும் முன்
காய்ந்த பின்
சுரண்டும் முன்
அறிவித்துக் கொண்டிருக்கும்.
நீக்காதீர்,
ஓர் ஈ
ஊர்ந்து உண்டு
அதன் சிற்றுடலே
நானாகட்டும்.
ஃஃஃ
ஞாயிறு போற்றுதும்.
ஃஃஃ
திங்கள் போற்றுதும்.
தனிநிலவு.
எரிக்கும் வெளி.
ஒளிச்சுழல்.
முகில்மறை மகிழ் நினைவு.
இருள் திரை வெண் சுடர்.
மெளனக்குழிம் மர்மச்சிமிழ் முத்துத்திரள்.
இரவுத்துணை.
தேய் வளர் ஒற்றைத்துளி.
ஃஃஃ
மாமழை போற்றுதும்.
ஒரு மீமாடு
புதுக் கட்டிடமொன்றுக்குள்
புகுந்து கொண்டது.
ஃஃஃ
சொல் செல்லும்.
ஃஃஃ
உன் இடை.
இந்த உடை,
உன் திரண்ட இடையை
மறைக்கும்
என
நீ நினைத்திருக்கலாம்,
நினைக்காமலும் இருந்திருக்கலாம்.
அது,
அவ்வாறு எதையும்
நினைக்கவில்லை
என்பதே
எனக்குப் பிடித்திருக்கிறது.
ஃஃஃ
A Stray Dog.
ஃஃஃ
அறத்தாறிது.
ஃஃஃ
தனி மலரே.
காற்றில்
குளிர் கனத்திருக்கும்
உன் மாநகரில்
செம்பொளி
பொழிந்து
மௌனித்திருக்கும்
உன் வீதியில்
பனிசூடிய மலர்கள்சூழ்
உன் வீட்டில்
உன் மூச்சுக்காற்று
வட்டமிடும்
உன் அறையில்
வெண்ணுரை மெத்தை
இட்ட
உன் படுக்கை மேல்
கடல் நீலத்தில்
பூக்கள் வரைந்த
உன் போர்வைக்குள்
கதகதப்பாய்
உறங்குகிறாய்.
மேகங்கள்
விரைந்து நகரும்
இருள் விடிகாலை
வான் கீழ்
தனித்திருக்கிறேன்.
உன் வீடு
உன் இருப்பால்
உன் இன்மையால்
உன் சொற்களால்
உன் மௌனங்களால்
உன் சிரிப்புகளால்
உன் கண்ணீரால்
நிரம்பியுள்ளது.
நான்
உன்னால்
நிரப்பப்பட்டுள்ளேன்.
இம்மொழியிலா
நீ
வெளிப்பட்டாய்?
இச்சொற்களிலா
உனைப்
பேசினாய்?
உன்
இதழ்வழி
கசியும்
பேறுற்ற
மதுர பாவனைகள்
இவ்வார்த்தைகள் தாமா?
கனி மேலமர்ந்த
பழஈ போல்
நானும்
சுவைத்தினிக்கிறேன்.
ஃஃஃ
களிமனம்.
ஃஃஃ
மனப்பாறை.
(வேறு)
(தொடர்)
ஃஃஃ
பெருமூச்சுகள்.
சில கவிதைகளையும்
தனித்த இரவில்
பெருமூச்சுகளையும்
கொடுத்தபின்
ஒரு
முத்தமாவது
தரலாம் நீ.
உன் மெளனம்
ஒரு பிடிவாதம்.
உன் தவிர்த்தல்
ஒரு நிழல்வெளி.
உன் பார்வை
ஒரு மறைபொருள்.
உன் மறைபொருட்கள்
கற்பனையின்
கல்லணைகள்.
நழுவி விழுந்து
தெறித்த
கண்ணாடிக் குடுவை
உன் சொற்கள்.
தொடாமல் கால்
படாமல்
நடக்கத் தெரியா
பிள்ளை நான்.
குருதி பூக்கும்
முட்செடிகளை
மெளனத்தால்
மூடி வைக்கிறாய்.
தொட்டுத்தொட்டு
சுவைக்கும்
செந்நா எனது.
நதிக்கரையில்
ஒற்றை மரமென
நின்றிருக்கும் வேளையில்,
அலையடிக்கும்
வெண்புறா போல்
சிலநேரம்
அமர்ந்தபின்
பறந்து விட்டாய்.
வானைக் கிளைகளாலும்
மண்ணை வேர்களாலும்
துழாவுகிறேன்.
நில்
பசிக்கிறேன்
சொல்
ரசிக்கிறேன்
கொல்
ருசிக்கிறேன்.
வழியில்
விழியால் சிரித்தாய்.
மரங்களெலாம் பூத்து
மண்ணெலாம் இனித்து
நீரெலாம் குளிர்ந்து
நீயின்றிப் பிறரிலை.
மலைச் சிகரங்கள்
கூழாங்கற்கள்.
எரிமலைத் தீ
எறும்புக் கடி.
இமயப் பனி
இலைநுனித்
துளி.
உன் பார்வை
பிரபஞ்ச விரிவு.
அலைகள்
கொந்தளிக்கும் ஆற்றில்
விழுந்த சிற்றிலை
போல்
நீந்திச் செல்கின்றன
உன் சொற்கள்.
வானவில் நிறங்களில்
இல்லா ஒரு
நிறம்
உன்
நீ.
இளங்காலைக் குளிர்த்தென்றல்
முதிர்காலைத் தெளிவொளி
முன்மதியப் பனிமழை
பின்மாலைக் கிளிக்கூட்டம்
அந்தியிரவு மலையிணைவு
நள்ளிரவு மெளனத் தூறல்
நாளும் இரவும்
நினைவின் பாரம்.
பொற்றேரில்
பயணிக்கும் இளவரசி
வெண்ணிலவில் வழியும்
அமுதை விரும்பினாள்.
மண்புழு நிமிண்டும்
மனமெனது.
ஃஃஃ
எங்கெங்கிலும்.
என்
தோட்டத்தின்
மரங்களிலிருந்து
இலைகளாய்
நீயே
உதிர்கின்றாய்.!
என்
காலைப்
புல்வெளியில்
பனித்துளிகளாய்
நீயே
பூத்திருக்கிறாய்.!
நான்
பார்க்கும்
இடங்களிலெல்லாம்
நீயே இருக்கின்றாய்,
பாதி புகைந்த
பீடித் துண்டுகளாகவும்,
முற்றும் கிழிந்த
பயணச்
சீட்டுகளாகவும்..!
ஃஃஃ
சில துளிகள்.
பெருமழையின்
பொழிதலில் உடைகின்ற,
அணைக்கட்டுகள்
போல் அல்ல,
சிறு தூறலில்
நனைகின்ற
மஞ்சள் சுவர் போல்
நான் இருக்கின்றேன்.
நீ
எப்படி வருகின்றாய்.?
தவிர்த்து விட்டு
நீ போகையில்,
தவிக்கத் தவிக்கப்
பற்றும்
என் மனத்தை
மரணத்தின் வலி.!
விடியலில்
உடைகின்ற
கனவுகளின் நுரைகளின்
மேல்
மாறுகின்ற
வண்ணப் படலமாய்
நீ...!
தாயற்ற
கைக் குழந்தையுடன்
தகப்பன் போல்
தவிக்கிறேன்
நீயற்ற
நம் காதலுடன்..!
என்னைத்
தவிர்க்கப் பார்ப்பதிலும்
தள்ளி
வைப்பதிலும்
நீ
சொல்லும்
பொய்களின்
சாயம்
வெளுக்கும் போதெல்லாம்
கூசிப் போவது
நீயில்லை..!
ஃஃஃ
வரமாட்டேன்.
ஃஃஃ
வாய்க்கா வரப்போரம்.
ஃஃஃ
பாடுகிறேன்...!
அலையொதுக்கும் நுரையொதுங்கும்
ஆற்றங்கரையோரம்
அழகான நிலவுதிக்கும் அந்தி மாலை நேரம்
ஆசைமனம் வாடுதடி ஆரும் சொல்லலியா? என்
ஆவல் எல்லாம் தூது விட்டேன், அன்பைச்
சொல்லலியா?
ஃஃஃ
போறவளே பொன்னுத்தாயி...!
மொட்டுகள்.
கொத்திக் கொத்திச்
செதுக்கிய
என் இதயத்துக்குள்
குடியேறும்,
சின்னக்குருவியா நீ..?
விழித்திருக்கையில்
தூக்கிக் கொண்டு
அலைகிறேன்,
உறங்கையிலோ
சுருண்டு
படுத்துக் கொள்கிறேன்,
உன் காதலுக்குள்.
உன்
இதழைச் சுவைக்கும்
ஆப்பிளை அனுப்பியது,
மறுபடியும்
அதே சாத்தானா..?
உன் விரல்
தீண்டும்
மயக்க நொடிகளில்,
மண்ணில் பதியாத
இந்தக் கால்கள்
எங்கே
நடந்தன..?
உன் சிரிப்பில்
நனைகின்ற
பார்வைகள்,
கண்களில்
எங்கே
கரைகின்றன?
இதுவரை சொன்ன
வார்த்தைகளில் மட்டுமல்ல,
இன்னும்
சொல்லப் போகும்
வார்த்தைகள் மேலும்
காத்திருக்கிறது
காதல்...!
சின்னப் பூக்கள்
தீண்டும்
உன் கூந்தலில்
சறுக்கி
விளையாடுகிறது
என் மனம்...!
ஃஃஃ
இறுதிப்புள்ளி.
ருசியின்மைக்கு
வந்து சேர்ந்தவனைப் போல
இரக்கத்திற்குரியவன்
யார்?
ஃஃஃ