You are on page 1of 7

Pinned Message

First page of this channel Health & Fitness - Doctor OLBN உடல், மன
ஆரோக்கிய...

 How is blood pumped to the brain with CPR?

@DoctorOLBN

மூட்டு வலி, கால் வலி பிரச்சனைக்கு! - Doctor OLBN

◆ மூட்டு வலி, கால் வலி பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் உடன் வெட்டிவேரை
கலந்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

◆ கொட்டை நீக்கிய கடுக்காய், வெட்டிவேர் இரண்டையும் கொதிநீரில் ஊறவைத்து, மறுநாள்


அதை அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும்.

◆ காய்ச்சலுக்கு பிறகு ஏற்படும் உடல் சோர்வு நீங்க வெட்டிவேரை நீரில் போட்டு கொதிக்க
வைத்து குடிக்கலாம்.

 @DoctorOLBN

முகப்பரு, முகச்சுருக்கம் நீங்க! - Doctor OLBN

◆ வடித்த கஞ்சியில் சிறிது நீர் சேர்த்து நீர்த்த நிலையில், அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்
கலந்து முகத்தில் தடவினால் முகப்பருக்கள் மறைந்துவிடும்.

◆ பப்பாளி பழத்தை கூழ் போன்று பிசைந்து, அதில் தேன் கலந்து முகத்தில் பூசினால் முகச்
சுருக்கம் நீங்கி முகம் பொலிவடையும். கரடு முரடாக தெரியும் முகத்தை மென்மையாக்கும்.

◆ புதினா சாற்றை முகத்தில் தடவிவிட்டு, மறுநாள் காலை முகத்தை கழுவ பருத்தொல்லை


நீங்கும்.

 @DoctorOLBN
தொடர் தும்மல், அலர்ஜியில் இருந்து விடுபட! - Doctor OLBN

● காற்று மாசுபாடு, போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் அதிக நேரம்


செலவிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

● வைப்பர் பொருத்திய ஹெல்மெட்டுகளை பயன்படுத்தலாம்.

● வீடு திரும்பியதும் வியர்வை அடங்கும்வரை ஓய்வெடுக்க வேண்டும். குறைந்தது அரைமணி


நேரத்திற்கு பிறகே குளிக்க வேண்டும்.

● முடிந்தவரை அழுக்குத் துணிகளை சேமித்து வைக்காதீர்கள்.

 @DoctorOLBN

நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்க! - Doctor OLBN

● பிரண்டையை தோல் உரித்து நறுக்கி, நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி
துவையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சுறுசுறுப்பும், மூளைக்கு பலமும் கிடைக்கும்.

● பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்கும்.

● ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை, ஒரு தேக்கரண்டி இஞ்சித்தூளை நீரில் கலந்து நன்றாக
கொதிக்க வைத்து, இதமாக பருகினால் வறட்டு இருமல் நீங்கும்.

 @DoctorOLBN

வயிற்று வலிக்கு வெந்தய மோர்! - Doctor OLBN

நம் வீட்டு சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம். ஆனாலும்கூட, பலருக்கும் அதன்
முக்கியத்துவம் தெரிவதில்லை. சாப்பாட்டின்போது அதை ஒதுக்கி விடுகிறார்கள்.

கிராமங்களில் உள்ள பெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால் உடனே


வெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோரை குடிக்கச் சொல்வார்கள். வலி நீங்கி, உடல்
புத்துணர்வோடு சுறுசுறுப்பாக இருக்கும்.

ஆக வெந்தயம், மோர் இரண்டும் வீட்டில் இருக்கட்டும்.

 @DoctorOLBN

உடற்சூட்டை தணிக்கும் எண்ணெய் குளியல்! - Doctor OLBN


● வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் - உடற்சூடு தணியும். நரம்புகள்
தூண்டப்பட்டு புத்துணர்வு ஏற்படும்.

● சருமம் பொலிவடைவதுடன் மிருதுவாக, போஷாக்காக மாறும்.

● கண்வலி, கண்களில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் பிரச்சனைகள் சரியாகும்.

● கணினி முன் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படும் கண்பாதிப்பு குறையும்.

● தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

● பொடுகுத் தொல்லை நீங்கும். முடி வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்கும்.

 @DoctorOLBN

கறிவேப்பிலையின் மகத்துவம்! - Doctor OLBN

● சுண்டை வற்றல், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சமபங்கு எடுத்து,


பொடி செய்ய வேண்டும். இந்த பொடியை கால் டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால்
கழிச்சல் நோய் படிப்படியாக கட்டுக்குள் வரும்.

● சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, கறிவேப்பிலை பொடியுடன் சிறிது கல்உப்பு, சீரகம், சுக்கு


ஆகியவற்றை சமஅளவில் சேர்த்து, சுடுசோற்றில் கலந்து சாப்பிட வைத்தால் பசியின்மை
நீங்கும்.

 @DoctorOLBN

கழிவுகளை நீக்கும் லெமன் டீ! - Doctor OLBN

● எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

● இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட நுண்சத்துகள்


மூளையை சுறுசுறுப்பாக்கி மனம் புத்துணர்வு பெறவும் மனஅழுத்தம் நீங்கவும் உதவுகிறது

● வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது,


இதனால் எடை குறையும்

● உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.

 @DoctorOLBN
தலைபாரம் நீக்கும் தும்பைப்பூ! - Doctor OLBN

◆ தலைபாரம், சீதளம் நீங்க தும்பைப்பூவுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி,


இளஞ்சூட்டில் தலையில் தேய்த்து, சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

◆ ஒரு தேக்கரண்டி கசகசாவுடன் 2 முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் காய்ச்சி, சிறிது
கற்கண்டு சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.

◆ வெள்ளரி பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன் ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை


குளுமைப்படுத்தும்.

 @DoctorOLBN

மருத்துவ குறிப்புகள்! - Doctor OLBN

◆ கடுகு, கழற்சிக்காய், ஆமணக்கு இலை ஆகியவற்றை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி,


மாவாக அரைத்து கட்டிகளின் மீது வைக்க, அவை விரைவில் பழுக்கும்.

◆ இடைவிடாமல் தொடர்ந்து விக்கல் வரும்போது, கடுகை அரைத்து துணியில் தடவி மார்புக்


குழியில் பற்றுப் போடலாம்.

◆ கடுகுத்தூளை வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டிய ஊறல் பானத்தை குடித்தால் விக்கல்


உடனடியாக நிற்கும்.

 @DoctorOLBN

ஏதோ ஒரு நோய் தாக்கும் வரை..

ஆரோக்கியத்தின் மகிமை நமக்குத் தெரிவதில்லை!

உண்மை தானே?

 @DoctorOLBN

வெந்நீர் Vs குளிர்ந்த நீர் – எது சிறந்தது? - Doctor OLBN

◆ வெந்நீர் அருந்துவதால் - நாசி அடைப்பு நீங்கும், சீரணம் எளிதாகும், மலச்சிக்கல் தீரும், மன


அழுத்தம் தணியும், ரத்தவோட்டம் சீராகும், கொழுப்பு கரையும், உடல் நச்சுகள் நீங்கும்.
◆ குளிர்ந்த நீர் (ஐஸ் தண்ணீரை தவிர்க்கவும்) அருந்துவதால் - உடல்சூடு குறையும், உடல் எடை
குறையும், சரும ஆரோக்கியம் மேம்படும், ஆற்றல் அதிகரிக்கும், நோயெதிர்ப்பு மண்டலம்
தூண்டப்பட்டு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

◆ உடல்நலனுக்கு இயல்பான வெப்பநிலையில் இருக்கும் நீரே சிறந்தது.

 @DoctorOLBN

நோய்களை தடுக்கும் முருங்கை தேநீர்! - Doctor OLBN

முருங்கை இலையை காயவைத்து அரைத்து, நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி அருந்தினால்


உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், ரத்தத்தில்
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை நீங்கும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது. பாக்டீரியா,


பூஞ்சை போன்றவற்றை திறம்பட எதிர்த்தும் போராடும்.

 @DoctorOLBN

ஈஸி உணவுகள்.. சூப்பர் எனர்ஜி! - Doctor OLBN

நமது வீடுகளில் எளிமையாக இருக்கும் சில உணவுகள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை


கொடுக்கக்கூடியவை.

மருத்துவம் குணம் கொண்ட இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெற்று.


ஆற்றலுடன் இருப்பீர்கள்.

● வெல்லம் (சர்க்கரைக்கு பதில்)

● நட்ஸ் (நொறுக்கு தீனியாக)

● ராகி (காலை உணவு)

● தேங்காய் (அனைத்தும் நன்மை)

● பேரீச்சை (நார்ச்சத்து, இரும்புச்சத்து)

 @DoctorOLBN
கோடையில் சரும பராமரிப்பு! - Doctor OLBN

● கோடை காலத்தை சமாளிக்க பல ஃபிளேவர்களில் வரும் சோப்புகளை தவிர்த்து, பச்சை


பயறு மாவு, கடலை மாவு இரண்டையும் சம அளவு எடுத்து, அதனை தேய்த்து குளிக்கலாம்.

● வெயில் காலத்தில் இதமாக உள்ளதென வெறும் தரையில் படுப்பது உடல் வெப்பத்தை


அதிகரிக்கச் செய்யும்.

● உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், தினமும் இருவேளை குளிப்பது அவசியம்.

● வியர்க்குரு உள்ளோர் கற்றாழை, கற்றாழை ஜெல்களை தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

 @DoctorOLBN

மாதவிடாய் வயிற்று வலி தீர! - Doctor OLBN

● ஆமணக்கு இலையை விளக்கெண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்து கட்டி


வர பால் சுரப்பு மிகுதியாகும்.

● ஆமணக்கு துளிர் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி, அடிவயிற்றில் வைத்துக் கட்ட


மாதவிடாய் வயிற்று வலி தீரும்.

● ஆடாதோடை மணப்பாகு 1 தேக்கரண்டி கலந்து சாப்பிட மார்புச்சளி, இருமல், காசம்


ஆகியவை குணமாகும்; குரல் இனிமை உண்டாகும்.

 @DoctorOLBN

முதியவர்களின் கவனத்திற்கு! - Doctor OLBN

● கோடைக்காலத்தில் முதியவர்கள் வெளியில் செல்லும் போது தவறாமல் தண்ணீர் எடுத்துச்


செல்லவேண்டும்.

● வெளிர் நிறம் கொண்ட தளர்வான பருத்தி ஆடையை அணியுங்கள்.

● கால்களுக்கு திடமான காலணியை பயன்படுத்துங்கள்.

● நண்பர்கள், குடும்பத்தினர் (அ) உறவினர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

● அதிகாலையில் நடைபயிற்சி செய்வது சிறந்தது.

● சோர்வாக இருக்கும் சமயங்களில் உடற்பயிற்சியை தவிர்ப்பது நலம்.


 @DoctorOLBN

நல்ல மனநிலைக்கு உதவும் வைட்டமின் சி! - Doctor OLBN

● சருமம், கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு மட்டுமல்ல, நல்ல மனநிலைக்கான


"நார்எபிநெப்ரைன்” எனப்படும் ஹார்மோன் சுரக்கவும் வைட்டமின் சி உதவுகிறது.

● ஆரஞ்சுப் பழங்களில் மட்டுமல்ல, சிவப்பு குடைமிளகாய், புரொக்கோலி, காலிஃப்ளவர்,


தக்காளி, அன்னாசிப்பழம் போன்றவற்றிலும் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கும்.

● சருமப் பொலிவை அதிகரித்து, வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும் தன்மை


கொண்டது.

 @DoctorOLBN

சாப்பிட்ட பிறகு புகைபிடிக்க வேண்டாம்.. ஏன்? - Doctor OLBN

உணவுக்குப் பிறகு புகைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் மோசமான


செயல்களில் ஒன்றாகும்.
 
சாப்பிட்ட உடனேயே புகை பிடிப்பதால், சிகரெட்டிலுள்ள நிகோடின் செரிமானத்திற்குத்
தேவையான ஆக்ஸிஜனை கிடைக்க விடாமல் தடுக்கிறது. இதனால் உடல் சீராக செயல்படாமல்
அதிக புற்றுநோய் செல்களை உறிஞ்சிவிடும்.

உணவுக்குப் பிறகு ஒரு சிகரெட் கூட மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இது பெருங்குடல்
மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களின் அபாயத்தை பெரிதும்
அதிகரிக்கிறது.

உணவுக்குப் பிறகு ஒரு சிகரெட்டை புகைப்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பது,


சாதாரணமாக 10 சிகரெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக புகைப்பிடிக்கும்போது ஏற்படும்
பாதிப்புகள் போன்று மிக அதிகம்.

 @DoctorOLBN

You might also like