You are on page 1of 2

விடமடைசு வேலை அமரர்படை சூலம்

விசையன்விடு பாண மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்

வினையின்விளை வேதும் அறியாதே

கடியுலவு பாயல் பகலிரவெ னாது

கலவிதனில் மூழ்கி வறிதாய

கயவனறி வனன்
ீ இவனுமுயர் நீடு

கழலிணைகள் சேர அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக

இறைவன்மகள் வாய்மை அறியாதே

இதயமிக வாடி யுடையபிளை நாத

கணபதியெ னாம முறைகூற

அடையலவர் ஆவி வெருவஅடி கூர

அசலுமறி யாமல் அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட

அறிவருளும் ஆனை முகவோனே

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை மீ திலே அரசமர நிழலிலே

வற்றிருக்கும்
ீ பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

யானைமுகம் கொண்டவர் ஐந்துகரங்கள் உடையவர்

பானைவயிறு படைத்தவர் பக்தர் குறையைத் தீர்ப்பவர்


மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்

ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நம: சிவாய எனும் மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

கலியுகத்தின் விந்தையைக் காணவேண்டி அனுதினம்

எலியின்மீ து ஏறியே இஷ்டம்போல சுற்றுவார்

ஜயகணேச ஜயகணேச ஜயகணேச பாஹிமாம்

ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

You might also like