Professional Documents
Culture Documents
தஞ்சாவூர்
ADVERTISEMENT
POWERED BY PLAYSTREAM
தஞ்சன் என்ற அசுரனை சிவபெருமான் வதம் செய்த இடம் என்பதால், 'தஞ்சாவூர்' என்ற பெயர்
வந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான்
கோயில் கொண்டுள்ளதால், இவ்வூருக்கு, தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும்
குறிப்பிடுகின்றனர். இந்தக் கோயில், தஞ்சாவூருக்கு அருகே பள்ளி அக்ரஹாரம் என்ற இடத்தில்
உள்ளது.
2. எல்லைகள்
3. பரப்பும் சிறப்பும்
தஞ்சாவூர் மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்தத ் ி, சதுர கிலோமீட்டருக்கு 708 பேர். 2011 ஆம்
ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தஞ்சை மாவட்டத்தில் 24 லட்சத்து 5 ஆயிரம் பேர்
வசிக்கின்றனர். இதில், 82.72 சதவிகிதம் பேர் கல்வி கற்றவர்கள்.
5. எங்கே எனது தஞ்சை?
6. நீராரும் கடலுடுத்த
பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மையால் சோழநாடு `நீர் நாடு' என்றும், `நீர் வள நாடு' என்றும்,
நீரால் நெல் அதிகம் விளைந்ததால், `சோழ நாடு சோறுடைத்து' என்றும் புகழப்பட்டது.
7. நெற்களஞ்சியம்
தஞ்சாவூர் மாவட்டம் விவசாயத்துக்கு பெயர் பெற்றது. முக்கிய சாகுபடி நெல். 1991-92 ஆம்
ஆண்டுகளில் இம்மாவட்டத்தின் சராசரி நெல் உற்பத்தி 6 லட்சம் மெட்ரிக் டன். அதனால்தான்,
'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் 1991-ல் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, நிர்வாக நலன் கருதி மீண்டும்
1997 ஆம் ஆண்டில், திருவாரூர், மன்னார்குடி கோட்டங்களை உள்ளடக்கி, திருவாரூரை
தலைமையிடமாகக்கொண்டு திருவாரூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.
10. தொகுதிகள்
12. ஒன்றியங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, தஞ்சாவூர்,
கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி,
திருவையாறு, திருவிடைமருதூர், திருவோணம், அம்மாபேட்டை, பூதலூர், மதுக்கூர்,
சேதுபாவாசத்திரம் ஆகியன.
13. பேரூராட்சிகள்
15. உள்ளாட்சி
17. கொள்ளிடம்
காவிரியின் ஒரு கிளை நதி கொள்ளிடம். காவிரியில் இருந்து பிரியும் கொள்ளிடம் தஞ்சை, நாகை,
கடலூர் மாவட்டங்களுக்கு இடையே ஓடி, பரங்கிப்பேட்டைக்கு 5 கிலோமீட்டர் தெற்கில் வங்காள
விரிகுடாவில் கலக்கிறது.
18. வெண்ணாறு
19. வெட்டாறு
தஞ்சாவூர் மாவட்டம் விவசாய பூமி. நெல் விளையும் பூமி. அதுபோலவே கல்வியிலும் சிறந்து
விளங்கும் பூமி. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், தஞ்சாவூரின் சராசரி
கல்வியறிவு 82.64 சதவிகிதம். தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு பெற்றவர்கள் 80.1 சதவிகிதம்.
தஞ்சாவூர் பகுதியை கி.பி 655 ஆம் ஆண்டு முதல் கி.பி 850 ஆம் ஆண்டு வரை முத்தரையர்கள்
என்ற குறுநில மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். முத்தரையர்களின் 200 ஆண்டுகால
ஆட்சியில், தஞ்சைப் பகுதியை வளமும் நலமும் பெற்றதாக உருவாக்கினார்கள்.
அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கு உதாரணமாக, ராஜேந்திர சோழனை
சொல்லலாம். சோழப் பேரரசை ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் பல மடங்கு
விரிவுபடுத்தினார். கி.பி 1025 ஆம் ஆண்டு தலைநகரை தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்ட
சோழபுரத்திற்கு மாற்றினார்.
31. வா...ஜி...வா...ஜி...வெங்கோஜி..
தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி (கி.பி. 1798-1832), ஆங்கில கவர்னர்
ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுவுடன் 1799-ல் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த ஒப்பந்தப்படி,
தஞ்சை கோட்டையையும் சில பகுதிகளையும் வைத்துகொண்டு பிற பகுதிகளை ஆங்கிலேயருக்கு
கொடுத்துவிட்டார், இரண்டாம் சரபோஜி.
தஞ்சாவூரின் முழு ஆட்சிப் பொறுப்பும் 1855 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் வசம் வந்தது. 1866 ஆம்
ஆண்டு, தஞ்சாவூரை நகராட்சியாக அறிவித்தனர்.
35. கலைகளின் ஆட்சி
சோழர்களின் ஆட்சி கி.பி 985 முதல் கி.பி 1070 வரை (ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன்
காலம்) உச்ச நிலையை அடைந்திருந்தது. இந்த காலகட்டத்தில் ஏராளமாக கோயில்கள் கட்டப்பட்டு,
பரந்துவிரிந்துகிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக
நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வடக்கே உள்ளது, சிவகங்கை பூங்கா. இந்தப் பூங்காவின் நடுவே
அமைந்திருக்கிறது சிவகங்கை குளம். 1000 ஆண்டுகள் பழைமையான குளம் இது. தஞ்சைப்
பெரிய கோயில் கட்டப்பட்டபோது இந்தக் குளம் வெட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகருக்கு அருகே கடல் இல்லை என்ற ஒரு
காரணத்தினால், கடல் போன்ற ஏரி அமைத்ததாகக் கூறப்படுகிறது. வடவாற்றிலிருந்து பிரியும்
வாய்க்கால்கள், பாசன வயல்களுக்கு நீர் பாய்ச்சிய பின், ராணி சமுத்திரம் ஏரியில் கலக்கின்றன.
தற்போது, ராணி சமுத்திரம் ஏரியில் படகுப் போக்குவரத்து விடுவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தஞ்சை நகரிலேயே இருக்கிறது, அழகி குளம். இதன் பெயர், `அழகிய குளத்து வாரி' என்று ஒரு
கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு, தஞ்சை ரயில் நிலையம் அருகில் ஒரு மசூதியில்
உள்ளது. இந்தக் கல்வெட்டைப் பொறித்தவர், மன்னர் செவப்ப நாயக்கர். தஞ்சையில் ஓடும் ராணி
வாய்க்காலிலிருந்து நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
'ஆசியாவிலேயே மிகப் பழைமையான நூலகம்' என்ற புகழைப் பெற்றுள்ள நூலகம் இது. தஞ்சாவூர்
நகரில் விஜயநகர கோட்டைக்குள் உள்ளது இந்த நூலகம். மிகப் பழைமையான ஓலைச்சுவடிகள்
இங்கு பராமரிக்கப்பட்டுவருகின்றன. தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்
ஏராளமான நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
சரஸ்வதி மஹால் நூலகம்
தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வடக்கே இருக்கிறது, விஜய நகர கோட்டை.
16 ஆம் நூற்றாண்டின் மத்தியில், நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டது இக்கோட்டை. மராட்டிய
மன்னர்களும் இக்கோட்டையின் சில பகுதிகளைக் கட்டியிருக்கிறார்கள்.
இந்த இசைக்கூடம், தஞ்சாவூரில் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த மஹால், தஞ்சை
அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் ஒலியியல் நுட்பங்களுடன்
அமைக்கப்பட்டிருக்கும் இசைக்கூடம் இது. மன்னர்கள் காலத்தில், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள்
இங்கு அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
மனோரா கோட்டை
தஞ்சாவூர் அரண்மனை, கி.பி 1650 ஆம் ஆண்டு மராத்தியர் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது.
இந்த அரண்மனையில், பெரிய கோட்டை மற்றும் சிறிய கோட்டை என்று இரண்டு பாகங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. அரண்மனை பெரிய கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை,
110 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை நாயக்கரின் கடைசி அரசரான விஜயராகவ நாயக்கரால்
கட்டப்பட்டது.
ராஜராஜன் மணி மண்டபம், நகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த அழகிய மணி மண்டபம், சோழர்
காலத்து கட்டடக் கலையின்படி கட்டப்பட்டது. இங்கு ஓர் அழகிய தோட்டம் இருக்கிறது. இந்தத்
தோட்டத்தில் நீரூற்று, ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த
மண்டபத்தின் அடித்தளத்தில் 1984 ஆம் ஆண்டில், ராஜராஜ சோழனின் 1000 ஆவது பிறந்த
தினத்தின் நினைவாகக் கட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தன்னாட்சி பெற்ற கல்லூரி ஆகும். திருச்சி பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தின் இணைப்பைப் பெற்றிருக்கும் கல்லூரி. 1955 ஜூன் 23 ஆம் தேதி
தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள கல்லூரி இது. சமஸ்கிருதம், தமிழ் மற்றும் இசைக்
கல்வியும் வழங்கப்படுகின்றன. தஞ்சை மராட்டிய மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்யாணி
அம்மாள் சத்திரம், 1881-ல் வடமொழிப் பள்ளியாக மாற்றப்பட்டது. பிறகு, 1910 ஆம் ஆண்டு,
வடமொழி கல்லூரியாக மாற்றப்பட்டது. 1924 ஆம் ஆண்டு, இந்தக் கல்லூரி திருவையாறு அரசர்
கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கொள்ளிடம் ஆறு
தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1988 ஆம் ஆண்டு,
பெண்களுக்கான பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. இப்போது, நிகர்நிலைப்
பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத்திலேயே பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட
முதல் பொறியியல் கல்லூரி இதுதான்.
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூண்டி என்ற ஊரில் உள்ளது, பூண்டி புஷ்பம் கல்லூரி. வீரையா
வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரி என்று அழைக்கப்படும் இக்கல்லூரி, ஒரு தன்னாட்சி கல்வி
நிறுவனம். 1956 ஆம் ஆண்டு, துளசி அய்யா வாண்டையார் இக்கல்லூரியை நிறுவினார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலை கி.பி 1003 ஆம் ஆண்டு மற்றும் 1004 ஆம் ஆண்டுகளில் கட்டத்
தொடங்கி, 1010 ஆம் ஆண்டு முடித்துள்ளனர். 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள்
நிறைவடைந்திருக்கின்றன. தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
1987 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் தஞ்சாவூர் பெரிய
கோயிலை உலக பாரம்பர்ய சின்னமாக அறிவித்தது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருக்கும் நந்தியும் பெரியது. இக்கோயிலின் நந்தி ஒரே கல்லில்
அமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடையும் 2 மீட்டர் உயரமும் 6 மீட்டர் நீளமும், இரண்டரை மீடட
் ர்
அகலமும் கொண்டதாக உள்ளது. இது, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தி.
பெரிய கோயில் விமானத்தின் உயரம் 216 அடிகள். கற்களே கிடைக்காத சமவெளிப் பகுதியில், 15
தளங்கள்கொண்ட 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் கட்டியிருக்கிறார். கோயிலும்
பெரியது. நந்தியும் பெரியது. அதுபோல, கோயிலின் கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கமும்
பெரியது. இந்த சிவலிங்கம்தான் உலகிலேயே பெரியது. இதன் உயரம் 23 1/2 அடிகள்.
79. திருக்கருகாவூர்
தஞ்சையில் உள்ள தர்பார் ஹால், மதுரையில் உள்ள நாயக்கர் மஹால் போன்று கட்டப்பட்டிருக்கிறது.
அரசர் அமரும் இடத்தின் பின்புறம், சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் தோற்றம்
வரையப்பட்டிருக்கிறது. அரண்மனையின் மையப்பகுதியில் `கூட கோபுரம்' இருக்கிறது. இதன்
மேலிருந்து 10 கிலோமீட்டர் வரை தெளிவாகப் பார்க்கமுடியும்.
தஞ்சாவூர் கோட்டையின் கிழக்கு வாசலின் இடதுபுறம் ஒரு மேடான பகுதி உள்ளது. இந்த மேட்டில்
மிகப்பெரிய பீரங்கி உள்ளது. இது, நிலை பீரங்கி வகையைச் சார்ந்தது. குழாய்களுக்குள்
வெடிமருந்தை முழுவதும் இடித்துவைத்து பிறகு, கீழே உள்ள கிணற்றிலிருந்து வெடியின் திரியைக்
கொளுத்தும் அமைப்பு காணப்படுகிறது.
82. அகழி
தஞ்சாவூர் நகரைச் சுற்றி பெரிய அகழியை இன்றும் நாம் பார்க்க முடியும். அகழியின் கிழக்கு,
வடக்கு, தெற்கு பகுதிகள் மண் மேடிட்டு சாலைகள் போடப்பட்டுவிட்டன. சிவகங்கை குளம்,
சாமந்தன் குளம், சேவப்ப நாயக்கர் ஏரி போன்றவை நாயக்க, மராட்டிய கால நீர்நிலை தேக்க
அமைப்பின் அழகைப் பறைசாற்றுகின்றன.
84. கரும்பாலை
தஞ்சாவூர் மாவட்ட விவசாயத்தின் சாகுபடிப்பரப்பு 2,56,247 ஹெக்டேர். இதில், நெல் சாகுபடி மட்டும்
2,29,079 ஹெக்டேர். நெல் சேமிக்க உதவும் கிடங்குகள் அந்தந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் வருடத்துக்கு மூன்று போகம் (மூன்று தடவை) சாகுபடி செய்வது குறைந்து,
இரண்டு முறை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.
110. `பட்டு'கோட்டை
116. மகாமகம்
தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பெருமைசேர்க்கும் வகையில், மத்திய அரசு 1954 ஆம் ஆண்டு
ஏப்ரல் முதல் தேதி, சிறப்பு 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. தஞ்சைப் பெரிய கோயிலின்
அழகிய தோற்றம் அதில் அச்சிடப்பட்டிருந்தது. அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சர் பெனசுல்
ராமாராவ் அதில் கையெழுத்திட்டார்.
தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழா, தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25
மற்றும் 26 தேதிகளில் நடத்தப்பட்டன. அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெரிய கோயில்
உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால்தலையை முதல்-அமைச்சர் மு.கருணாநிதி முன்னிலையில்
வெளியிட, அப்போதைய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.
காபி என்றாலே கும்பகோணம் டிகிரி காபி நினைவில் வந்து, நாக்கில் நீர் ஊறச்செய்யும். தரமான
காபிக் கொட்டைகளை அரைத்து, தாமிரத்தாலான ஃபில்டட ் ர்களில் வடிகட்டி, டிக்காஷன் தயாரித்து,
சுத்தமான பசும்பால் கலந்து காபி தயாரிக்கப்படுகிறது.
122. ஆறுகள்
127. அம்மாப்பேட்டை
`பாப்பா நாடு' என்பது, தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த ஒரு ஜமீன் பகுதி. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை
சாலையில், பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. `விஜய தேவர்' என்று
பட்டம் சூட்டிய கள்ளர் குலத்தினரால் ஆளப்பட்டு வந்தது. பாப்பா நாட்டுக்கு கிழக்கே இரண்டு
கிலோமீட்டர் தூரத்தில், வெள்ளுவாடி என்ற ஊரில் இவர்களின் அரண்மனையும் இருந்தது.
1879 ஆம் ஆண்டு, 36 கிராமங்களோடு இருந்த ஜமீன், சுதந்திரத்துக்குப் பிறகு மாவட்ட
நிர்வாகத்துடன் இணைந்துவிட்டது.
132. திருப்புள்ளமங்கை
136. தேவனாஞ்சேரி
138. நாஞ்சிக்கோட்டை
140. உடையாளூர்
1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் குலம் தழைக்க அடித்தளமிட்ட ஊர், பழையாறை. இது,
சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றாகும். கும்பகோணத்துகு அருகில் இருக்கிறது.
144. பெரியகோட்டை
146. மதுக்கூர்
148. குருவிக்கரம்பை
149. ஆவணம்
150. பாபநாசம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா பாபநாசம். 1910 ஆம் ஆண்டிலிருந்து தனி
தாலுகாவாக செயல்படுகிறது. உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தது பாபநாசத்துக்கு அருகில் உள்ள
உத்தமதானபுரத்தில். பாபநாசம் கோயிலில் உள்ள 108 லிங்கங்கள் பாபநாசத்தில் குறிப்பிடத்தக்க
ஒன்று. பாபநாசத்தில் இருந்து தஞ்சாவூர் சந்தைக்கு தினமும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
151. ஒரத்தநாடு
154. திருப்பனந்தாள்
155. திருவாடுதுறை
156. பட்டுக்கோட்டை
157. பேராவூரணி
158. தாராசுரம்
159. கும்பகோணம்
160. பட்டீஸ்வரம்
தாராசுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீஸ்வரம், சோழர்களின் கருவூலம். இந்த
`பழையாறை' என்ற ஊர் பட்டீஸ்வரத்தில் தான் இருக்கிறது. இங்குள்ள கோயிலில் சோழர் காலத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்க்கை ரொம்பவே புகழ்பெற்றது. நாயக்கர் கால ஓவியங்களையும்
இங்குள்ள கோயில்களில் பார்க்கலாம்.
161. திருபுவனம்
162. திருவலஞ்சுழி
163. திருவையாறு
இது ஓர் ஊரின் பெயர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் செல்லும் வழியில் இருக்கிறது.
கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊரில், சௌந்தரராஜப் பெருமாள்
கோயில் உள்ளது. முதலில் சௌந்தரராஜப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்பட்டு, மருவி
சுந்தரபெருமாள் கோவில் ஆயிற்று.
165. சுவாமிமலை
166. கதிராமங்கலம்
கணித மேதை ராமானுஜம், 1887 டிசம்பர் 22 ஆம் நாள் பிறந்தார். கும்பகோணம் சாரங்கபாணி
தெருவில்தான் ராமானுஜத்தின் பெற்றோர் வாழ்ந்தனர். ஈரோடு, காஞ்சிபுரம் என்று
இடம்பெயர்ந்துகொண்டே இருந்தனர். பிறகு, 1897-ல் கும்பகோணம் வந்தனர். `கும்பகோணம்
கல்யாணம் தொடக்கப் பள்ளி'யிலும் நகர மேல்நிலைப் பள்ளியிலும் படித்து, கும்பகோணத்தில்
பெருமைக்குரிய மாணவராக விளங்கியவர் ராமானுஜம்.
ராவ் சாகிப் ஆப்ரஹாம் பண்டிதர், புகழ்பெற்ற தமிழ் இசைக் கலைஞர். சித்த மருத்துவர் மற்றும்
தமிழ் இசைக் கலைஞர். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு பெரும் பங்காற்றியவர். பழைய தமிழ்
இலக்கிய நூல்களை ஆய்வுசெய்து `கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற நூலை எழுதினார். இது,
இசை வரலாறு மற்றும் தமிழ் மருத்துவம் பற்றிய கலைக்களஞ்சியம். பிறந்தது திருநெல்வேலி
என்றாலும், ஆசிரியராக பணியாற்றியது தஞ்சாவூரில்தான்.
172. ஆர்.வெங்கட்ராமன்
175. எம்.வி.வெங்கட்ராம்
கும்பகோணத்தில் 1920 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி பிறந்தவர் எம்.வி.வெங்கட்ராம். பட்டுப்
புடவை நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். சௌராஷ்டிர குடும்பத்தை சேர்ந்த இவர்
பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக
கருதப்படுபவர். "காதுகள்" என்ற நாவலுக்காக 1993 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது
பெற்றவர். நூற்றுக்கணக்கான சிறுகதை சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.
கர்நாடக இசை அறிஞர், அமைப்பாளர் மற்றும் பாடகர். 1990 ஆம் ஆண்டு, சென்னை மியூசிக்
அகாடமியில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர். முழுப் பெயர் பாபநாசம் ராமையா சிவன். தஞ்சாவூர்
மாவட்டம் போலகம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பாபநாசம் கோயிலுக்கு அடிக்கடி சென்று இறை
சக்தியைப் பெற்றதால், பாபநாசம் சிவன் என்று அழைக்கப்பட்டார்.
177. நம்மாழ்வார்
178. எம்.எஸ்.சுவாமிநாதன்
கரிச்சான் குஞ்சு என்பவர், பிரபலமான எழுத்தாளர். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின்
தொடக்கத்தில், சமூகம் சார்ந்த சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர். சமூக நாவல்கள்
மட்டுமில்லாமல், வரலாற்று சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எழுதிவந்தவர். இவரின்
உண்மையான பெயர், ஆர்.நாராயணசாமி.
`வாழும் கலை' அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். 1956 மே 13 ஆம் தேதி, பாபநாசத்தில்
பிறந்தவர். காந்தியின் நெருங்கிய நண்பரான சுதாகர் சதுவேதியைத் தனது குருவாகக்கொண்டு,
யோகாவை கற்றுக்கொண்டவர். இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி நகரங்களிலும் `வாழும் கலை'
அமைப்பை நிறுவியிருக்கிறார். மத்திய அரசின் பத்மவிபூஷன் விருதுபெற்றிருக்கிறார்.
185. குருவிக்கரம்பை சண்முகம்
186. ஜி.ஏ.நடேசன்
தஞ்சாவூர் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் 1873 ஆம் ஆண்டு பிறந்தவர், ஜி.ஏ. நடேசன்.
கணபதி அக்ரஹாரம் நடேசன் என்றால்தான், பலருக்கும் தெரியும். பத்திரிக்கை மற்றும் எழுத்து
மூலம் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர். ஆரம்பத்தில், தன்னை இந்திய தேசிய காங்கிரசில்
இணைத்துக்கொண்டு போராடியவர். 1922 ஆம் ஆண்டு, லிபரல் கட்சியில் இணைந்தார்.
முன்னதாக, 1915-ல் காந்தி சென்னை வந்தபோது, நடேசன் வீட்டில்தான் தங்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
192. ஹேமாமாலினி
பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த ஹேமாமாலினி, தஞ்சாவூர் தமிழ் பெண். இவர் பிறந்தது,
ஒரத்தநாடு அருகே உள்ள அம்மன்குடி என்ற கிராமம். `இது சத்தியம்' என்ற தமிழ்ப் படத்தில்
அறிமுகமாகி, இந்திப்பட உலகில் கொடி நாட்டியவர். 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு
வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். 2014 மற்றும் 2019-ல் நடந்த தேர்தல்களில், மதுரா
நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்நதெ ் டுக்கப்பட்டார்.
193. டி.ஆர்.ராஜகுமாரி
194. கோ.சி.மணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி எஸ்டேட்டின் சேர்மன். 1991 முதல் 1996 வரை தஞ்சாவூர்
நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக பணியாற்றினார். பூண்டியில் செயல்படும் ஏ.வி.வி.எம்.
புஷ்பம் கல்லூரியின் தலைவராகவும் இருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்திலிருக்கும் அகோரி அம்மன் கோயில், 1000 முதல் 2000 ஆண்டுகள்
பழைமையானது. இரண்டு முகங்களுடன் தாமரை வடிவ பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள். ஒரு
முகம் கோரமாகத் தீயவர்களுக்கு உள்ள முகம். இன்னொரு முகம், அன்பு தவழ நல்லவர்களுக்காக
உள்ள முகம். இந்தக் கோயிலில் வெற்றிக்காகப் பலரும் மஹா சண்டி ஹோமம் நடத்துகிறார்கள்.
ராஜராஜன் மணிமண்டபம்
பாரம்பர்யமான ஒரு தேவாலயம். தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது. இந்த தேவாலய
வளாகத்திலேயே, `மாதா ஸ்கூல்' என்று ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி 100
ஆண்டுகளாகக் கிராமப் பகுதி மாணவர்களுக்குக் கல்வி பணியாற்றி வருகிறது.
படங்கள்: ம.அரவிந்த்