You are on page 1of 1

இயற்கை வழிமுறைகள்

 மக்காச்சோளமாவை அடிக்கடி பயன்படுத்திவந்தால்


உடல் பலவனம்
ீ நீங்கி உடலுக்கு நல்ல
பலத்தைத்தருகிறது. மேலும் உடலில் உள்ள
கெட்டக்கொழுப்பை நீக்கி உடலை நல்ல பலத்துடன்
இருக்க உதவுகிறது.
 தூதுவேளை இலையை நெய்விட்டு வதக்கி துவையல்
செய்து கபக்கட்டு நீங்கி உடல் பலம் பெறும். அல்லது
தூதுவேளை பூவை பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை
சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வர உடல் பலத்தை
பெறலாம்.
 ஆவாரம் பூவை இடித்து பொடி செய்து பாலில் கலந்து
சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலத்தையும் சரும
பொலிவையும் தரும்.
 இஞ்சி 250 கிராம் அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக
நறுக்கி தேனில் ஊறவைத்து நான்கு நாட்களுக்கு பிறகு
கழித்து தினமும் ஒரு துண்டு வதம்
ீ காலையில்
வெறும் வயிற்றில் 45 நாட்களுக்கு சாப்பிட்டு வர உடல்
நல்ல ஆரோக்கியத்தை பெறும்.
 உளுந்தை அரைத்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்
ஊற்றி காய்ந்ததும் மாவைக்கொட்டி சர்க்கரை சேர்த்து
களியாக கிளறி தினமும் காலையில் ஒருவேளை
சாப்பிட்டு வர உடல் உறுதி பெறும். எலும்புகளும் பலம்
பெறும்.
 நீர்முள்ளி விதை 25 கிராம், நெருஞ்சில் விதை 10 கிராம்,
வெள்ளரி விதை 10 கிராம் எடுத்து இடித்து 1/2 லிட்டர்
நீரில் போட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி
அத்துடன் பனகற்கண்டு சேர்த்து காலை மாலை
சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி உடல் பலமடையும்.

You might also like