தொழுது படித்திடடி பாப்பா! செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா! கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும் வயிர முடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பாப்பா! பாரதியார் பாடல்கள்
ஆசிரியர் : மகாகவி பாரதியார்
திக்குகள் எட்டு சிதறித்-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது! பாயுது! பாயுது! -தாம் தரிகிட தக்கத் ததிங்கிடத் தத்தோம்! நாட்டை “ நினைப்பாரோ- எந்த நாளினிப் போயதைக் காணபதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ- அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழங்குரல் கேட்டிருப் பாய் காற்றே!