You are on page 1of 6

முனைவா் த.

டான் ஸ்டோனி

பாரதியார் - பாரததேசம்

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலை வீரர் மற் றும்

சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமைகொண்டவர் மகாகவி பாரதியார்.

இவரின் படைப்புகள் ஒவ் வொன் றும் சிறப்புடையன.


வாசிப் போர் அறிவுத்திறனுக்கேற் ப அக்கவிதைகளைப் பொருளாழம் புலப்படும் .

அவர் பாடல் களுள் , தேசிய கீதங் கள் - பாரத நாடு - பாரத தேசம் என்ற பிரிவில் உள் ள
ஒரு பாடலின் விளக்கத்தைக் காண்போம் .

தொழில் நுட்ப உலகில் வாழும் நமக்கு வானொலி கூட இல் லாத காலத்தில் வாழ் ந்த
பாரதிகண்ட கனவு வியப்பளிப்பதாகத்தான் இருக்கும் !

செக்கிழுத்த செம் மல் என்றழைக்கப்பட்ட வ.உ.சி


அந்நியருக்கு எதிராக கப்பல் விட்ட மகிழ் சசி
் யை பாரதியார் இப்பாடலில்
வெளிப்படுத்தியுள் ளார்.

தொலைநோக்குப் பார்வையோடு பல சிந்தனைகளை இப்பாடலில்


பதிவுசெய் துள் ளார்.

தொன் மையால் , பக்தியால் , கல் வியால் , தொழிலால் , வளங் களால் சிறந்தது நம்
பாரதநாடு என அடிமைப்பட்ட பாரதமக்களிடையே நாட்டின் பெருமையை
உணர்ச்சிபொங் க எடுத்துரைக்கிறார்.

நாட்டுப்பற் றை வெளிப்படுத்துவதாகவும் , மக்களின் ஒற் றுமையை


எடுத்தியம் புவதாகவும் இப்பாடல் திகழ் கிறது.
முனைவா் த. டான் ஸ்டோனி

1. பாரத தேசமென்று பெயர்சொல் லுவார் -- மிடிப்


பயங் கொல் லு வார் துயர்ப் பகைவெல் லுவார்.

வறுமையால் ஏற் படும் பயத்தையும், மனிதன் தனக்குள்


தோன் றும் துயரமாகிய பகையையும் வெல் லவேண்டுமானால்

பாரததேசத்தின் புகழையும் பெருமையையும் நினைத்துக் கொள் ளவேண்டும் .

பாரத தேசமென் று பெயர் சொன் னாலே வறுமையும் போய் த் துயரமும்

மறைந்து விடும் எனபது பாரதியாரின் கருத்து.

1. வெள் ளிப் பனிமலையின் மீதுலவு வோம் -- அடி


மேலைக் கடல் முழுதும் கப் பல் விடுவோம்
பள் ளித் தலமனைத்தும் கோயில் செய் குவோம் எங் கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் . (பாரத) 1

வெள் ளி போலப் பளபளக்கும் பனி மூடிய வட இமயமலை உண்டு.


அங் கே உலாவி அவ் விடத்து எழில் கண்டு இன் புறுவோம் .

மேல் திசை, தென் திசைக்கடலும் நமக்குச் சொந்தம் ,


இங் கே கப்பல் களை விட்டுப் பல நாடுகளுடனும் தொடர்பு கொள் வோம் !

நாட்டில் பல சமயப்பள் ளிகள் உண்டு! கோயில் கள் உண்டு! இவற் றை


எண்ணும் போதே எம் தோள் கள் பூரித்துப் போகின்றன.

2. சிங் களத் தீவினுக்கோர் பாலம் அமைப் போம்


சேதுவை மேடுறுத்தி வீதி சமைப் போம்
வங் கத்தில் ஓடிவரும் நீ ரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய் குவோம் . (பாரத) 2

சிங் களத் தீவாகிய ஈழத்திருநாட்டைத் தாய் நாட்டுடன் சேர்த்து,


இடையில் உள் ள சிறு கடலை மேடாக்கிப் பாலம் அமைப் போம் !
முனைவா் த. டான் ஸ்டோனி

வங் க நாட்டில் பாய் ந்துவரும் கங் கையாற் று நீ ர் வீணே கடலில் பாய் கிறது,
அதனைத்திருப்பி மத்தியிலுள் ள நாடுகளில் பாயவிட்டுப் பயிர் செய் வோம் !

3. வெட்டுக் கனிகள் செய் து தங் கம் முதலாம்


வேறு பலபொருளும் குடைந் தெடுப் போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் . (பாரத)3

பூமியிலே சுரங் கங் களை வெட்டுவோம் . தங் கம் , பொன் , வெள் ளி, இரும் பு, கரி,
நிலநெய் போன்றவற் றையெல் லாம் பூமித் தாயின் மடியிலிருந்து உரிமையோடு
எடுத்துக்கொள் வோம்! அவற் றைஉலகெங் கும் விற் று நமக்கு வேண்டிய
பல் வேறு பொருளைப் பெற் றுவருவோம் .!

4. முத்துக் குளிப் பதொரு தென் கடலிலே


மொய் த்து வணிகர்பல நாட்டினர் வந் தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம் மருள் வேண்டுவது மேற் கரையிலே (பாரத) 4

பல் வேறு நாட்டின் வணிகர், நமது நாட்டு முத்துக்காக நம் தென் கடலே நோக்கி
வருவார்கள் , அவர்கள் நமக்கு வேண்டியவற் றைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு
நம் மிடத்துள் ளவற் றை வாங் கிச் செல் ல மேல் கரைத்துறைகளுக்கு ஆசையோடு
வருவார்கள் !

5. சிந் து நதியின்மிசை நிலவினிலே


சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந் தரத் தெலுங் கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம் . (பாரத) 5

சிந்துநதி நம் முடையது. அதில் வீசும் நிலவெளி நமக்கின் பம் தருவது!


சேரநாடு நம் முடை யது. அந் நாட்டு அழகுக் கன்னியர் நம் மவர்!
அழகிய தெலுங் கு நமது மொழி! அதில் ஒலிக்கும் தீஞ் சுவைப் பாடல் நமது இசை!
இவ் வளவு சிறப்புகளையும் கொண்ட பாரத நாடு முழுவதும் நமது நாடு!
ஆங் காங் கு காணும் சிறப்புக்களெல் லாம் எல் லார்க்கும் உரியன!
முனைவா் த. டான் ஸ்டோனி

6. கங் கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம்


காவிரி வெற் றிலைக்கு மாறு கொள் ளுவோம்
சிங் க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந் தங் கள் பரிசளிப் போம் . (பாரத) 6

கங் கைக் கரையிலே கோதுமையானால் , காவிரிக் கரையிலே வெற் றிலை!

இதற் கு அது பண்டமாற் று! வீரமுள் ள மாராட்டியருடைய மொழியில் யாத்த

கவிதைகளுக்குப் பரிசு சேர நாட்டு ஆனைத் தந்தம் !

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்


காஞ் சியில் கேட்பதற் கோர் கருவி செய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல் லியற் கன்னடத்துத் தங் கம் அளிப் போம் . (பாரத) 7

காசியிலே அறிஞர்கள் பேசும் உரைகளை


தெற் கேயுள் ள காஞ் சியிலிருந்தபடியே கேட்கும் கருவியை நாம் செய் வோம்!

ராஜபுத்திர வீரர்களுக்கு கன் னட தேசத்துத் தங் கத்தைப் பரிசளிப் போம் !

8. பட்டினில் ஆடையும் பஞ் சில் உடையும்


பண்ணி மலைகளென வீதி குவிப் போம்
கட்டித் திரவியங் கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப் போம் . (பாரத) 8

பட்டாடை, பருத்தி உடை எல் லாம் செய் து மலை மலையாகக் குவித்துப் பல

தேசத்திலிருந்தும் பணம் கொண்டு வருபவர்களுக்கு விற் று நம் நாட்டுப்

பொருளாதாரத்தை பெருக்குவோம் !

9. ஆயுதம் செய் வோம் நல் ல காகிதம் செய் வோம்


ஆலைகள் வைப் போம் கல் விச் சாலைகள் வைப் போம்
ஓயுதல் செய் யோம் தலை சாயுதல் செய் யோம்
உண்மைகள் சொல் வோம் பல வண்மைகள் செய் வோம் . (பாரத)9
முனைவா் த. டான் ஸ்டோனி

எழுத்து என் னும் ஆயுதங் கள் செய் வோம் ! காகிதங் களும் நாமே செய் வோம் !

இதற் காக ஆலைகளும் , தொழில் வளர்வதற் கேற் ற கல் விச்சாலைகளும்

நம் நாட்டிலேயே உருவாக்குவோம்! அவற் றிலே ஓயாது உழைப் போம் !

உண்மையையே உயிராகக் கொண்டு நடப்போம்!


இல் லாதவர்க்கு உள் ளவர் கொடுத்து, இல் லை என்ற சொல் இல் லாமல் வாழ் வோம் .

10. குடைகள் செய் வோம் உழு படைகள் செய் வோம்

கோணிகள் செய் வோம் இரும் பாணிகள் செய் வோம்


நடையும் பறப் புமுணர் வண்டிகள் செய் வோம்
ஞாலம் நடுங் கவரும் கப் பல் கள் செய் வோம் . (பாரத) 10

குடைகள் செய் வோம் ! உழும் கருவிகள் செய் வோம்! கோணிச் சாக்குகள்


செய் வோம்! இரும் பு ஆணிகள் செய் வோம்! விரைந்து செல் லும் ஊர்திகள்
செய் வோம்! உலகமெலாம் நடுங் கும் பெரும் கப்பல் கள் செய் வோம் !

11. மந் திரம் கற் போம் வினைத் தந் திரங் கற் போம்
வானை யளப் போம் கடல் மீனையளப் போம்
சந் திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந் தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் . (பாரத) 11

மந்திரங் கள் கற் பதுபோல கைவினை நுட்பங் களையும் கற் போம்!வானின்


நீ ளத்தையும் , கடலின் ஆழத்தையும் அளப் போம் !
விண்வெளி நுட்பங் கள் கண்டுதெளிவோம்! சாலைகளைப் பெருக்குவோம்

12. காவியம் செய் வோம் நல் ல காடுவளர்ப்போம்


கலை வளர்ப்போம் கொல் ல ருலைவளர்ப்போம்
ஓவியம் செய் வோம் நல் ல ஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந் துசெய் வோம் . (பாரத) 12

காவியங் கள் மட்டுமல் ல காடுகளையும் வளர்ப்போம்! கலைகள் மட்டுமல் ல, பல


கருவிகள் செய் யும் கொல் லர் உலைகளையும் வளர்ப்போம் ! உலகில் உள் ள
எல் லாத்தொழிலையும் மகிழ் ந்து செய் வோம் !
முனைவா் த. டான் ஸ்டோனி

13. சாதி இரண்டொழிய வேறில் லை யென்றே


தமிழ் மகள் சொல் லியசொல் அமிழ் த மென்போம்
நீ திநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற் றோர்

சாதி இரண்டே! நீ தி நெறியுடன் வாழ் ந்து பிறர்க்குதவுபவர் உயர்ந்தோர்!


மற் றவர் தாழ் ந்தோர்! என் று உரைத்த தமிழ் மகள் ஔவையின் சொல் லை
அமுதமென மதிப் போம்! அதன் படி நடப் போம் !

You might also like