Professional Documents
Culture Documents
Purananooru Poem 182-200 With Meaning
Purananooru Poem 182-200 With Meaning
பொருளுரை:
ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும்
பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக்
குடைக்கீ ழ்க் கொண்டுவந்து ஆண்டு ஆனுபவித்துக்
கொண்டிருக்கிறான்.மற்றொருவன் பகல் இரவு என்று
பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப்
பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம். யாராய்
இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை
மேலாடை, கீ ழாடை என்று இரண்டே துணி.
பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே
உள்ளது.
அப்படி இருக்கும்போது செலவத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப்
போகிறோம். துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே.
அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.