You are on page 1of 17

PURANANURU-(182-200 POEMS)

புறநானூறு 182, பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, திணை:


பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி
உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது, எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின்  5
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்,
அன்ன மாட்சி அனையர் ஆகித்,
தமக்கென முயலா நோன் தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.
பொருளுரை: 
உலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம். தனக்கென
முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை
உடையவர் உலகில் வாழ்வதால்தான். அவர்கள் இந்திர உலகத்து
அமிழ்தமே கிடைத்தாலும் ‘ஆ ஆ இனிது’ என்று எண்ணி, தான்மட்டும்
உண்ணமாட்டார்கள்.
உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளமாட்டார்கள். பிறர்
அஞ்சி ஒதுங்கும் நற்பணிகளைச் செய்யும்போது
தயங்கமாட்டார்கள்.புகழ் வரும் என்றால் அதனைப் பெறத் தன்
உயிரையும் கொடுப்பர். பழி வரும் என்றால் உலகையே சேர்த்துக்
கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அயராமல்
உழைத்துக்கொண்டே இருப்பர். இத்தகையர் வாழ்வதால்தான் உலகம்
இயங்கிக்கொண்டிருக்கிறது.

புறநானூறு 183, பாடியவர்: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், திணை:


பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே,
பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்,
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்,  5
‘மூத்தோன் வருக என்னாது’ அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீ ழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.  10
பொருளுரை:
ஆசிரியருக்குத் துன்பம் நேரும்போது உதவ வேண்டும்.
அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்கவேண்டும்.
அவரைப் பின்பற்றி நடப்பதற்குத் தயங்கக் கூடாது.
இப்படிக் கல்வி கற்பது முறையாகும். இது பெரிதும் நன்மை பயக்கும்.
ஏனென்றால், தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக் கொண்ட பலரில்
சிறப்புப் பெற்றிருப்பவனிடம் தாயின் மனமும் திரிந்து செல்லும்.
ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என அழைக்காமல்
அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும்.
பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் கீ ழ்க்குலத்தில் பிறந்த
ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம்
அடக்கமாவான்.

புறநானூறு 184, பாடியவர்: பிசிராந்தையார், பாடப்பட்டோன்: பாண்டியன்


அறிவுடைநம்பி, திணை: பாடாண், துறை: செவியறிவுறூஉ
காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,  5
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்,  10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
பொருளுரை: 
ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை
அறுத்து அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல
நாட்களுக்கு வரும்.அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன்
வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வணாக்கும்

நெல் அதிகமாக அழியும்.
இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி
வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும்.
இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல்
மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம்
இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே
புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும்
கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக.

புறநானூறு 185, பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன், திணை:


பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறு இன்றாகி ஆறு இனிதுபடுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்
பகைக் கூழ் அள்ளல் பட்டு,  5
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
பொருளுரை:   
அரசன் தொண்டைமான் இளந்திரையன் பாடுகிறான்.
காவல்-சாகாடு என்பது உலகினைக் காப்பாற்றி ஓட்டிச்செல்லும் ஒரு
வண்டி. கைப்போன் என்பவன் அதனைக் கைக்கொண்டு ஓட்டிச் செல்லும்
அரசன். கால் என்பது சக்கரம். பார் என்பது வண்டியின் பார். சக்கரத்தை
வண்டியில் கோத்து ஞாலம் என்னும் தேரை இயக்குவது ‘காவல்-
சாக்காடு’.
காலத்தைத் தன் மேற்பார்வையில் கோத்து வைத்துக்கொண்டு ஆட்சி-
வண்டியை ஓட்டுபவன்.என்பதும் இதற்கு மற்றொரு விளக்கம். மாண்
என்பது சிறந்து விளங்கும் மாட்சிமை. மாணின் = சிறந்து விளங்கினால்,
ஆள்வோன் சிறந்து விளங்கினால் ஆட்சிவண்டி எந்தத் துன்பமும்
இல்லாமல் இனிதாக இயங்கும்
.  அவனுக்கு நன்றாக ஓட்டத் தெரியவில்லை என்றால் ஒவ்வொரு
நாளும் பகை என்னும் சேற்றுக் கூழில் பட்டு மிகப் பல தீய
துன்பங்களை அனுபவிக்கவேண்டி வரும். ஆள்வோன் திறம்
பெற்றவனாக இருக்க வேண்டும் என்கிறான் இந்த அரசன்.

புறநானூறு 186, பாடியவர்: மோசி கீ ரனார், திணை: பொதுவியல், துறை:


பொருண்மொழிக் காஞ்சி
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் ‘யான் உயிர்’ என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
பொருளுரை:   
புலவர் சொல்கிறார்.
மக்கள் நெல்மணிகளையும் நீரையும் உண்டு வாழ்பவர்கள்தான். 
என்றாலும் அந்த நெல்லும் அவர்களுக்கு உயிர் அன்று.  நீரும் உயிர்
அன்று. (அவை உடல்). 
மன்னன்தான் அவர்களுக்கு உயிர். ஒவ்வொரு மன்னனும் தான்தான்
மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். (தன் உயிரைக்
காப்பதுபோல் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டும்).

புறநானூறு 187, பாடியவர்: ஔவையார், திணை: பொதுவியல், துறை:


பொருண்மொழிக் காஞ்சி
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
பொருளுரை: 
ஔவையார் சொல்கிறார். 
நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? பள்ளமாய்
இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? 
எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம்
வாழ்வதற்கு உரிய நல்ல இடம்.

புறநானூறு 188, பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி, திணை:


பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,  5
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்,
பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே.
பொருளுரை:
வாழ்நாளின் பயன் 
தன் குறையாக (தன் கூறாக)ப் பிறக்கும் குழந்தைச் செல்வம். எல்லாச்
செல்வப் பேறுகளையும் படைத்து அவற்றைப் பலரோடு கூடி உண்ணும்
பெருஞ்செல்வர் ஆயினும் அந்தக் குழந்தைச் செல்வம் இல்லை
என்றால் பயன் இல்லை.
பலரோடு கூடி உண்ணும்போது  இடையிலே குழந்தை சின்னச்சின்ன
அடி வைத்து நடந்துவந்து கையை நீட்டித், தான் உண்ணும் உணவில்
கையை வைத்து, அதே கையால் தன்னையும், தன் தாய்தந்தையரையும்
தொட்டு, வாயால் சோற்றைக் கவ்வி, கையை விட்டுத் துளாவி, நெய்
மணக்கும் சோற்றைத் தன் மேனியிலும், தன் பெற்றோர் மேனியிலும்
உதிர்த்துக்கொண்டு எல்லாரையும் மயக்கும் பாங்கினது 
அந்தக் குழந்தைச் செல்வம்.

 புறநானூறு 189, பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீ ரனார்,


திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக் காஞ்சி
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி,
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே,  5
பிறவும் எல்லாம் ஓரொக்குமே,
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

பொருளுரை: 
ஒருவன் தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும்
பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கே உரியதாய் தன் வெண்கொற்றக்
குடைக்கீ ழ்க் கொண்டுவந்து ஆண்டு ஆனுபவித்துக்
கொண்டிருக்கிறான்.மற்றொருவன் பகல் இரவு என்று
பாராமல் நள்ளிரவிலும் உணவுக்கு வேட்டையாட விலங்கினைப்
பார்த்துக்கொண்டிருக்கிறான். என்று வைத்துக்கொள்வோம். யாராய்
இருந்தால் என்ன? அவன் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை
மேலாடை, கீ ழாடை என்று இரண்டே துணி.
பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே
உள்ளது.
அப்படி இருக்கும்போது செலவத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப்
போகிறோம். துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுமே.
அதனால் செல்வத்துப் பயன் ஈதல் ஒன்றே.
 

புறநானூறு 190, பாடியவர்: சோழன் நல்லுருத்திரன், திணை: பொதுவியல்,


துறை: பொருண்மொழிக் காஞ்சி
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம்
வளன் வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ!  5
கடுங்கண் கேழல் இடம்பட வழ்ந்தென,

அன்று அவண் உண்ணாதாகி வழிநாள்,
பெரு மலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம்படுக்கும்
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து, 10
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ.
பொருளுரை:   
கேண்மை என்பது கேளிர் போல் உறவுகொள்ளும் நட்பு. இத்தகைய
நட்பு யாரோடு இருக்கக் கூடாது, யாரோடு இருக்க வேண்டும் என்று
இந்த அரசன் பாடுகிறான். எலி போன்றோர் நட்பு கூடாது. புலி
போன்றோர் நட்பு வேண்டும்n என்கிறான்.
எலி: நன்கு விளைந்திருக்கும் காலத்தில் நெல்-மணிக் கதிர்களைக்
கொண்டுபோய்த் தன் வளையில் பதுக்கிக்கொள்ளும் எலி போன்றோர்
நட்பு வேண்டாம்.
புலி: தான் கவ்விய காட்டுப் பன்றி தன் இடப்பக்கமாக விழுந்தது
என்பதற்காக அதனை உண்ணாமல் பட்டினிக் கிடந்து மறுநாள் யானை
வேட்டைக்கு முயலும் புலி போல் துணிவும், நெஞ்சுரமும் கொண்ட
மானமுள்ளவர் நட்பு வேண்டும்

புறநானூறு 191, பாடியவர்: பிசிராந்தையார், திணை: பொதுவியல், துறை:


பொருண்மொழிக் காஞ்சி
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்ட அனையர் இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும், அதன்தலை 5
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.
பொருளுரை:   
வடக்கிருந்து உயிர் துறந்துகொண்டிருந்த தன் நண்பன்
கோப்பெருஞ்சோழனுடன் தானும் வடக்கிருந்து உயிர் துறக்க
வந்திருந்த பிசிராந்தையாரிடம் வாழ்நாள் பலவாகியும் மயிர்
நரைக்காமல் இருப்பதற்கான காரணத்தை அங்கிருந்தோர் வினவினர். 
அதற்கான காரணத்தைப் புலவர் பிசிராந்தையார் விளக்குகிறார்.
என் மனைவியும் மக்களும் மாண்புடையவர்கள்.  நிறைகுடம் போல
நிரம்பிய உள்ளம் கொண்டவர்கள். என் தம்பிமாரும் என்னைப் போலவே
இருக்கின்றனர். என் அரசனும் அறம் அல்லாத செயல்களைச்
செய்யாமல் அனைவரையும் காப்பாற்றுகிறான். எல்லாவற்றிற்கும்
மேலாக, என் ஊரில் இருப்பவர்கள் அனைவரும் அறிவு நிறைந்து
அதனைப் பகட்டாக்கிக் காட்டாமல் அடக்கமாக வைத்துக்கொண்டு
கோட்பாட்டில் சான்றோராய் வாழ்கின்றனர்.
எனவே எனக்குக் கவலை என்பதே இல்லை. எனவே எனக்கு நரை
இல்லை.

புறநானூறு 192, பாடியவர்: கணியன் பூங்குன்றனார், திணை: பொதுவியல்,


துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன,
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்  5
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்  10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
பொருளுரை:   
உலகில் எதுவாயினும் அது வாழத்தக்க ஊர்.
எல்லா மக்களும் உறவினர்.
ஒருவனுக்கு நேரும் தீங்கோ, நன்மையோ பிறர் தந்து வந்தது அன்று.
ஒருவன் வருந்துவதும், வருத்தம் நீங்கித் தணிவதும்
அப்படிப்பட்டதுதான்.
ஒருவன் சாவதும் புதிது அன்று.
எனவே கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழமாட்டேன்.
வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறமாட்டேன்.
வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு
இரைச்சலுடன் பாயும் வெள்ளத்தில் மிதந்தோடும் தெப்பம் போல நம்
உயிர் மிதந்து ஓடும். 
இந்த உண்மையைத் திறம்பெற்றவர் வாழ்க்கையில் கண்டு
தெரிந்துகொண்டேன்.அதனால் சிறப்புற்று விளங்கும் பெரியோரைக்
கண்டு வியக்கமாட்டேன். (ஒருவேளை பெரியோரைக் கண்டு
வியந்தாலும்) 
சிறியோரை இகழவே மாட்டேன்
புறநானூறு 193, பாடியவர்: ஓர் ஏர் உழவனார், திணை: பொதுவியல், துறை:
பொருண்மொழிக் காஞ்சி
அதள் எறிந்தன்ன நெடுவெண்களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும் மன்,
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.
பொருளுரை:   
உறவினருடன் வாழும் இல்லற வாழ்க்கையானது வேட்டைக்காரன்
களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு
உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது.
அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை
வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப்
பிழைக்கவும் முடியும்.
இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான்.அவனுக்கு மான் களரில்
ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி,
மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப்
பிழைக்க முடியவில்லை.
ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக்
காப்பாற்றியே ஆகவேண்டும்.
இதுதான் வாழ்க்கை.
மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல்
கூடாது என்கிறது.

புறநானூறு 194, பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார், திணை: பொதுவியல்,


துறை: பொருண்மொழிக் காஞ்சி
ஓரில் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூ அணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்,  5
இன்னாது அம்ம இவ்வுலகம்,
இனிய காண்கிதன் இயல்பு  உணர்ந்தோரே.
பொருளுரை: 
ஓர் இல்லத்தில் நெய்தல் பறையின் ஒலி கேட்கிறது. (நெய்தல்பறை
என்பது இரங்கல்-பண்ணின் ஒலி). மற்றோர் இல்லதில் திருமண
முழவின் ஒலி கேட்கிறது. ஒரே நாளில் ஒரே ஊரில் இந்த
நிகழ்வுகள். திருமண இல்லத்தில் பூமாலை சூடி
மகிழ்கின்றனர். நெய்தல்பண் ஒலிக்கும் இல்லத்தில் ஒருவன்
இறந்துவிட்டதால் அவனை இழந்தவர் கண்ண ீர் மல்கக்
கலங்குகின்றனர்.
இப்படி உலகியலை ஒருவன் படைத்திருக்கிறான். அவன் பண்பு
இல்லாதவன். இந்த உலகம் துன்ப மயமானது.இந்த இயல்பினை
உணர்ந்துகொள்ள வேண்டும். அதனை எண்ணிக் கலங்கக் கூடாது.
இனியவற்றைக் காணவேண்டும். இன்னாதவற்றில் இன்பத்தைக்
காணவேண்டும். துன்பத்தில் இன்பம் காணவேண்டும்.

புறநானூறு 195, பாடியவர்: நரிவெரூ உத்தலையார், திணை: பொதுவியல்,


துறை: பொருண்மொழிக் காஞ்சி
பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,  5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அது தான்
எல்லாரும் உவப்பது அன்றியும்,
நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே.
பொருளுரை:   
நல்லவர்களே! நல்லவர்களே! பலராகி வாழும் நல்லவர்களே!
(நல்லவர்களே என்று நல்லவர் அல்லாதவர்களை அழைப்பது ஏளனக்
குறிப்பு) 
கயல்மீ ன் முள்ளைப்போல் வெண்மைநிறம் கொண்டிருக்கும்
நரைமுடியைக் கன்னமெல்லாம் கொண்டிருக்கும் நல்லவர்களே!
பிறருக்கும் பயன்படாமல் வாழும் நல்லவர்களே!
உங்களது உயிரைக் சூலம் ஏந்திய பெருந் திறனாளி ஒருவன்
வாங்கும்போது “அய்யோ வாங்குகிறானே!” இன்று
வருந்துவர்கள். இப்போது
ீ எதற்கும் கவலைப்பட மாட்டீர்கள். இப்போதே
நீங்கள் ஒன்று செய்யுங்கள்.  அதனால் நீங்கள் சாகும்போது கவலை
இல்லாமல் இருக்கலாம்.
உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் நல்லது-அல்லாததை
செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். அதுதான் எல்லாரும் மகிழ்வது. நல்ல
வழியில் நடக்கும் வழியும் அதுதான்.

புறநானூறு 196, பாடியவர்: ஆவூர் மூலங்கிழார், பாடப்பட்டோன்: பாண்டியன்


இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், திணை: பாடாண், துறை: பரிசில்
கடாநிலை
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள் வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே;  5
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை,
அனைத்து ஆகியர் இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம், அதனால்,
நோயிலர் ஆக நின் புதல்வர், யானும்  10
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க நின் நாளே!  15
பொருளுரை:
பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான்.
இது முறையன்று என்று புலவர் எடுத்துக்கூறும் பாடல் இது.
வழங்காதவனையும் வாழ்த்துகிறார் புலவர்.
ஒன்றைச் செய்ய முயலும்போது தன்னால் செய்யமுடிவதைச்
செய்யமுடியும் என்று கூறுவதும், செய்ய முடியாததைச்
செய்யமுடியாது என்று வெளிப்படையாக மறுத்தலும் எல்லாரும்
சொல்லக்கூடியதுதான். அப்படிச் சொல்வதை விட்டுவிட்டு,
செய்ய முடியாததை முடியும் என்று சொல்லிக்கொண்டு காலம்
கடத்தலும், கொடுக்க முடிவதை இல்லை எனக் கூறி மறுத்தலும்
ஆகிய இரண்டும் உதவி கேட்போரை வாடச்செய்வது ஆகும்.
அன்றியும், கொடுத்துக் காப்பாற்றுபவரின் புகழை மங்கச்செய்யும்
செயலாகும்.
அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது.இனிக் காத்திருந்தாலும்
இதுதான் நடக்கப்போகிறது.எல்லாவற்றையும் தொலைநூரத்தில்
பார்க்கிறேன்.   அதனால், உன் குழந்தைகள் துன்பமின்றி வாழட்டும்.
நானும் வெயில் என்று நொந்துகொள்ளப்போவதும் இல்லை. பனி என்று
படுத்திருக்கப்-போவதும் இல்லை. கல்லைக் குடைந்துவைத்தது போன்ற
என் காற்றுத் தடுப்பாக உள்ள இல்லத்துக்குச் செல்கிறேன். அங்கே
நாணம் அல்லாமல் வேறொன்றும் தெரியாத என் மனைவி
கற்புக்கரசியை நினைத்துக்கொண்டு திரும்பிச் செல்கிறேன். 
உன் வாழ்நாள் பெருகட்டும்!...

புறநானூறு 197, பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்


குமரனார், பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய
பெருந்திருமாவளவன், திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
உரும் உடன்றன்ன உட்குவரு முரசமொடு 5
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே,
எம்மால் வியக்கப்படூஉமோரே,
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த  10
குறு நறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும் எம் வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பினோரே,
மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும்  15
உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம்,
நல்லறிவுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும, யாம் உவந்து நனி பெரிதே.
பொருளுரை: 
சோழ வேந்தன் பரிசில் தராமல் காலம் தாழ்த்துகிறான். புலவர்
சொல்கிறார். படைவலிமையால் வெற்றி கண்டவர் வேந்தராயினும்
இரக்க உணர்வு இன்றேல் அவனது பெருமையைக் கண்டு தான்
வியப்பதில்லையாம். வரகரிசிச் சோறும் கீ ரை உணவும் உண்ணும்
குறுநில மன்னராயினும் புலவரின் பெருமை உணர்ந்து
நடந்துகொள்வோரை வியந்து போற்றுவாராம்.
காற்றைப்போல் தாவிச் செல்லும் குதிரை, கொடி பறக்கும் தேர், கடல்
போல் ஆட்படை, தோற்றத்தால் மலையையும் மலைக்கவைக்கும்
களிறு இடி போல் முழங்கும் முரசம், இவற்றையெல்லாம்
கொண்டவராய் போரில் வெற்றி கண்டவர் ஆயினும்,
மண்ணகமெல்லாம் பரந்து நிற்கும் தானை (ஆட்சியாளர் குழு)
உடையவர் ஆயினும், வெற்றியின் அடையாளமாக ஒளிறும் பூண்
உடைய வேந்தராயினும் அவரது வெண்கொற்றக்குடைச் செல்வத்தைக்
கண்டு நான் வியக்கமாட்டேன்.
எம்மால் வியக்கப்படுபவர் ஆட்டுக்குட்டி மேய்ந்த பின்னர் வட்டு

முள்வேலியில் துளிர்த்துப் படர்ந்திருக்கும் முஞ்ஞைக் கொடியைச்
சமைத்து வரகரிசிச் சோற்றுடன் உண்ணும் சிற்றூர் மன்னர் ஆயினும்
என் பெருமையை உணர்ந்து நடந்துகொள்ளும் பண்பாளரே ஆவர்.
மிகப் பெருந் துன்பத்தில் உழன்றாலும் இரக்க-உணர்ச்சி
இல்லாதவருடைய செல்வத்தைப் பெற நினைக்கவும் மாட்டேன்.
நல்லறிவு உடையோர் வறுமையை எண்ணிப் பார்த்துப் பெருமை
கொள்வேன்
 

புறநானூறு 198, பாடியவர்: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்,


பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்,
திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை
“அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,
கடவுள் சான்ற கற்பின், சேய் இழை
மடவோள் பயந்த மணி மருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிக” என்று ஏத்தித்,  5
திண் தேர் அண்ணல் நின் பாராட்டிக்,
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்,
வேல் கெழு குருசில் கண்டேன்; ஆதலின்  10
விடுத்தனென், வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண் தமிழ் வரைப்பு அகம் கொண்டியாகப்,
பனித்துக் கூட்டுண்ணும் தணிப்பு அருங் கடுந்திறல்
நின்னோரன்ன நின் புதல்வர், என்றும்
ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும்  15
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க, இவர் பெருங்கண்ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்,
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும்,  20
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி,
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும்,
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின்  25
அடி நிழல் பழகிய அடியுறை
கடுமான் மாற மறவாதீமே.
பொருளுரை:   
பரிசில் வழங்கிய மன்னன் அவனது முன்னோர் போலப்
பெருங்கண்ணோட்டத்துடன் மனைவி மக்களோடு சிறப்புற்று
வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார்.
மன்னன் (நன்மாறன்) வேல்கெழு குரிசில்.
அருவி இறங்கும் மலை போல முத்தாரத்துடன் கூடிய
அகன்ற மார்பினை உடையவன்.
அவனைக் கடவுளாகவே கருதும் அவனது மனைவி, சேயிழை அணிந்த
மனைவி அவனைத் தழுவிப் புதல்வரைப் பெற்றாள்.
அப் புதல்வர் கிண்கிணி அணிந்த கால்களை உடையவர்கள்.
அப் புதல்வர் பொலிவு பெறுவார்களாக!
மன்ன! 
திண்தேர் அண்ணலாகிய உன்னை இப்படி உன்னைப் பாராட்டுகிறேன். 
உன்மேல் எனக்குள்ள காதல் பெருமையால் இப்படி உன்னைப்
பாராட்டிக் கனவிலும் அரற்றுக்கொண்டிருக்கிறேன்.
என் நெஞ்சம் காமர் நெஞ்சம். உன்மேல் ஆசை கொண்ட நெஞ்சம்.
இந்த என் நெஞ்சம் நிறைவு பெற்று மகிழவேண்டும்.
ஆலமர் செல்வன் சிவபெருமான் போலப் பெருமிதச் செல்வம்
படைத்தவனாக நீ இருப்பதைப் பார்க்கிறேன். 
ஆதலின் பரிசில் நலகவேண்டும் என்னும் வேண்டுகோளை உன்முன்
வைக்கிறேன்.
நின் கண்ணி (வேப்பம்பூ மாலை) வாழ்க!
தமிழ்நாடு முழுவதையும் நடுங்கும்படிச் செய்து அதனைக்
கொண்டியாகப் பெறும் திறமை உன்னிடம் உள்ளது. 
உன்னைப் போலவே உன் புதல்வர்களும் திறம் பெற்றவர்களாக
விளங்குகின்றனர்.
பகைவர்களை வாடும்படிச் செய்து அவர்களது அரும்பெருஞ் செல்வ
வளங்களை உன்னுடைய பொன்னகருக்குக் கொண்டுவந்து
வைத்திருக்கும் உன்னுடைய முன்னோர் போல நீயும் விளங்குகிறாய்.
அவர்களின் கண்ணோட்டம் போல நீயும் கண்ணோட்டம் நாளும்
பெருக்கெடுத்து ஓடுபவனாக இருக்கவேண்டும்.
பெருங்கடல் நீரைக் காட்டிலும், அதன் கடற்கரை மணலைக்
காட்டிலும், வானம் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையைக்
காட்டிலும், நீண்ட காலம் நீ வாழவேண்டும். 
உன் மனைவி மக்கள் விரும்பும் நலப்பேற்றுடன் வாழவேண்டும்.
நான் தொலைவிலுள்ள நாட்டில் வாழ்ந்தாலும், வானம்பாடிப் பறவை
மழைத்துளிக்காக ஏங்குவது போல உன் கொடைக்காக
ஏங்கிக்கொண்டே உன் தாள் நிழலில் வாழவேண்டும்.
கடுமான் (விரைந்து செல்லும் குதிரை) மாற! என்னை மறந்துவிடாதே!

புறநானூறு 199, பாடியவர்: பெரும்பதுமனார், திணை: பாடாண் துறை: பரிசில்


கடாநிலை
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே கலிகொள் புள்ளினம்
அனையர் வாழியோ இரவலர், அவரைப்
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் 5
உடைமை ஆகும் அவர் உடைமை,
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.
பொருளுரை:   
புலவர் பெரும்பதுமனார் பரிசில் வேண்டிப் பாடுகிறார்..
பழுத்திருக்கும் ஆலம்பழம் நேற்று உண்டோமே என்று அந்த மரத்தை
நாடிப் பறவைகள் மறுநாள் வராமல் இருப்பதில்லை.
அதுபோலக் கொடைவழங்கக் காத்திருக்கும் செயல்வரனிடம்
ீ இரவலர்
வருவது அவர்களிடம் உள்ள இல்லாமையே.
எனவே உடையவன் தன் உடைமையை இல்லாதவர்களின்
உடைமையாக ஆக்கித் தரவேண்டும்.
அவரது இல்லாமையைத் தன் இல்லாமையாக எண்ணிக்கொள்ள
வேண்டும்.

புறநானூறு 200, பாடியவர்: கபிலர், பாடப்பட்டவன்: விச்சிக்கோ, திணை:


பாடாண் துறை: பரிசில் கடாநிலை.
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி,
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!  5
நிணந் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்,
களங் கொண்டு கனலும் கடுங்கண் யானை,
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே!
இவரே, பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும், 10
“கறங்கு மணி நெடுந்தேர் கொள்க” எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
யானே பரிசிலன் மன்னும் அந்தணன்; நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி, சினப்போர் 15
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே.
பொருளுரை:   
கல்லக வெற்ப, விச்சிக் கோவே, இவர் பாரி மகளிர்.
கல்லக வெற்பன்
பனிக்காலத்திலே பழுக்கும் பசுமையான இலைகளை உடைய
பலாப்பழத்தைக் கவர்ந்து உண்ட கருமையான விரல்களை உடைய
கடுவன் என்னும் ஆண்குரங்கு தன் சிவந்த முகத்தை உடைய மந்தி
என்னும் பெண் குரங்கோடு சேர்ந்து பெருமலை அடுக்கத்தில்
மழைமாசி படராத மூங்கிலின் மேல் உறங்கும் வெற்புமலை
விச்சிக்கோவின் கல்லக-மலை.
விச்சிக்கோ
விச்சிக் கோவின் வேல் புலாலை உண்டு உண்டு செருக்குக் கொண்ட
தலையினை உடையதாம். போர்களத்தில் வெற்றி கண்டும் சினம்
தணியாத கொடிய பார்வையை உடையவனாம் விச்சிக்கோ. விச்சிக்கோ
கையில் அணிந்திருக்கும் பூண்காப்பு பகைவரைத் தாக்கி
வளைந்திருக்குமாம்.
பாரிமகளிர்
பருவம் இல்லாமல் எப்போதும் பூக்கும் கொடிமுல்லை தான் படரக்
கொம்பில்லை என்று நாவால் கேட்கவில்லை என்றாலும், குறிப்பால்
அறிந்து மணியொலிக்கும் தன் அரசுத் தேரை அந்த முல்லைக்
கொடிக்குக் ‘கொள்க’ எனக் கொடுத்த புகழ் பரந்துகிடக்கும் பாரியின்
மகளிர்.
கறங்குமணி நெடுந்தேர்
இக்காலத்தில் காவல்துறை உயர் அலுவலர்களின் ஊர்தியில்
ஊதோசை-மணி ஒலிப்பது போல் அக்காலத்தில் அரசனின் தேரூர்தியில்
மட்டும் கறங்கி ஒலிக்கும் மணி கட்டப்பட்டிருந்தது போலும்.
யான்
பரிசில் பெற்று வாழ்பவன்.
அந்தணன்
நீ
சிறப்பு மிக்க பகைவரை வணங்கச்செய்யும் வாட்போரில் வல்லவன்.
அடங்கா மன்னரை அடக்குபவன். உண்டு மடங்காத விளைச்சல் தரும்
நாட்டை உடையவன்.
கொண்மதி
நான் (பாரிமகளிரைக்) கொடுக்கிறேன்.
நீ பெற்றுக்கொள்க.

You might also like