Professional Documents
Culture Documents
(திருநாவுக்கரசர் தேவாரம்)
பக்திப் பாடல்கள்:
பதிகம்:
அகவல், வெண்பா:
நாட்டுப் பாடல்:
் இசைப்பாடல்கள்:
மரபுசார்நத
சங்க காலத்தையும் நீதி நூல் காலத்தையும் அடுத்து, பக்தி இலக்கியக் காலத்தைத் தெளிவாக
உணரலாம். கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சைவ சமயப் பெரியவர்களான
நாயன்மார்களும், வைணச் சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றி, பக்திப் பாடல்கள் பாடி
ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள். நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த
பௌத்த, சைன சமயங்களை எதிர்தது
் மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடன் கூடிய பக்திப்
பாடல்கள் பயன்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியையே போற்றி, அதற்கு இசைவான
ஆடல் பாடல் முதலான கலைகளைப் பாராட்டினார்கள். பல வகைக் கலைகளையும் வளர்க்கும் இடமாகக்
கோயில்கள் ஓங்குவதற்கு அவர்களுடைய பக்தி இயக்கம் துணை செய்தது. மக்களிடையே
அவர்களின் இயக்கம் பரவுவதற்கு இசையோடு அமைந்த தமிழ்ப் பாடல்கள் உதவி புரிந்தன.
இடைக்காலத் தமிழில் முதல் காலப் பகுதியாக விளங்குவது பல்லவர் காலம். அக்காலத் தமிழ்
மொழியை அறிவதற்கு இலக்கியங்கள், இலக்கணம், கல்வெட்டுகள், செப்பேடுகள், சாசனங்கள்
முதலியன மிகவும் துணை புரிகின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏராளமான இலக்கியங்கள்
தோன்றிய காலமும் இதுவேயாகும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அ) சைவ நூல்கள்:
இவை தவிர, பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்ட தனியடியார்கள் பலர் பாடிய பாடல்களும், பக்தி
இலக்கியக் காலத்தில் சைவத்தை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்மொழி வளரவும் பெருந்துணை
புரிந்தன எனலாம்.
ஆ) வைணவ நூல்கள்:
ஆழ்வார்கள் பன்னிருவர் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நூல் தொகுதியைப் பல்லவர் காலத்
தமிழ்மொழியை அறிய உதவும் மற்றோர் ஆதாரமாகக் கொள்ள முடியும். எளிய தமிழ் உருவாக
இந்நூல்கள் காரணமாக அமைந்தன என்றும் கூறலாம். சங்கம் மருவிய காலத்தை அடுத்த இருண்ட
காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது. களப்பிரர் ஆட்சி
அகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோல் ஓச்சிய போது, சைவம் புத்துயிர்
பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.
பக்தி நெறி:
பக்தி இலக்கியம் ஒரு தனி உலகம். இதில்தான் எண்ணில் அடங்கா ஞானிகளும், யோகிகளும்,
சித்தர்களும், அருளாளர்களும் தோன்றி மண் நிறைந்த இந்த பூமியை புண்ணிய பூமியாய், புனித
பூமியாய் மாற்றியிருக்கின்றார்கள். வாழ்ககை
் யில் வறுமை வாட்டுகின்றது. நோய் துயரம் செய்கின்றது.
வயதின் மூப்பு முதுமையைத்தருகின்றது. மரணம் அச்சுறுத்துகின்றது. உண்மைதான், ஆனால்
அதற்காக ஒதுங்குவதா, ஓடுவதா, இது கூடாது. நிற்போம், நிலைப்போம். இந்த மண்ணில் நல்ல
வண்ணம் வாழலாம். இன்பமும் துன்பமும் இறையருளே. தீமை நன்மை முழுவதும் அவன் செயலே.
வறுமையும், செல்வமும் அவன் இன்னருளே. நோயைத்தருவதும், அந்நோயை நீக்கி நம்மை
ஆட்கொள்வதும் அவன் கடமையே. இலைகள் காய்ந்து சருகாவதைப்போல் மூப்பும் இயற்கையானது
தான். மரணத்தைக்கண்டு ஏன் அஞ்சவேண்டும். மரணம் நெருங்கும் போது எமன் வருவதைத்
தடுப்போம். இன்று முதல் கொண்டே இறைவனை வழிபட்டால் அவன் நம்மிடம் வந்து காத்தருள்வான்.
அவனுடைய திருவடி நிழலில் உயிர்கள் இன்பமடையும் என்பதே அவர்களின் நம்பிக்கை. இந்த
நம்பிக்கைதான் பக்தி நெறி எனப்படும்.
உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. அவற்றுள் சில மொழிகள் பேச்சு வழக்கும், சில எழுத்து
வழக்கும், சில எழுத்தும், பேச்சும் கலந்த வழக்கும் பெற்றுள்ளன. இலக்கிய வழக்குப் பெற்ற
மொழிகளுள் சில தனிச்சிறப்புப் பெற்றுள்ளன. அவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிஞர் தனிநாயக
அடிகளார். 'ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், லத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம்
இசையின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழியென்றும், இத்தாலி காதலின் மொழி என்றும்
கூறுவது பொருந்தும் என்றால்... தமிழ் பக்தியின் மொழி என்று கூறுவது பொருந்தும்' என்பார்.
இத்தகைய சிறப்புமிக்க பக்தியின் மொழியாகத் தமிழ் மொழி திகழ்வது நமக்கெல்லாம்
பெருமைக்குரியதாகும். இந்தப்பெருமை சும்மா வந்து விடவில்லை. பக்தியின் வரலாற்றைப் புரட்டுகின்ற
போது அடியவர்கள் பட்ட வேதனையும், இறைவன் ஆட்கொண்ட அருள் தன்மையும் நெஞ்சத்தை
நெகிழ வைக்கின்றன. நிம்மதியையும் தருகின்றன.
சங்கம் மருவிய காலம் இக்காலத்தில் தமிழகத்தில் களப்பிரர் என்ற அயல் இனத்தவர் ஆட்சியைக்
கைப்பற்றினர். அப்போது தமிழர்களின் இரு கண்களாகப் போற்றப்படும் சைவமும், வைணவமும்
செல்வாக்கிழந்தன. புறச்சமயங்களான சமணமும், பவுத்தமும் செல்வாக்குப்பெற்றன. இதனால்
தமிழும், இலக்கியமும் தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டன. கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில்
களப்பிரர்கள் அரசியல் செல்வாக்கை இழந்தனர். பல்லவர் ஆட்சி செல்வாக்குப் பெற்றது.
களப்பிரர்காலத்தில் காலூன்றிய சமணம் பல்லவர் காலத்தில் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியது.
அப்போதும் தமிழும், தமிழ்ச் சமயங்களும் ஒடுக்கப்பட்டன.
பன்னிரு திருமுறைகள்:
சோழர் காலம்:
'முறை' என்றால் 'நூல்'. 'திருமுறை' என்றால் 'புனிதமான நூல்' என்று பொருள்படும். சிவபெருமானைப்
பற்றி சைவ அடியவர்கள் பாடிய பாடல்களே பன்னிரு திருமுறையாகும்.
அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்,
வெள்ளி, சனி ஆகிய நாள்களும் ராகு-கேது என்பன போன்ற கோள்களும் ஒரு தீமையும் செய்யாது.
அவையெல்லாம் நல்லவைகளே. அடியவர்களுக்கு மிக நல்லவையே என்று அச்சமின்மையையும்,
ஊக்கமும் பிறக்குமாறு ஒரு பதிகம் பாடியுள்ளார்.