Professional Documents
Culture Documents
1.0 முன்னுரை
“ ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… ” எனும் பாடல் வரியை
இசையின்றி வாசிக்கும் பொழுதே தானாக நம் சிந்தைனையில் அப்பாடலின் இசை காற்றைப்போல வீசி
நம்மை சிலிர்க்க வைக்கிறது அல்லவா ? ஆம் , இது தான் தமிழ்ச்சினிமாப் பாடல்களின் தனிச் சிறப்பாகும். “
ஒரு பாடலில் அணியைப் பார்ப்பது முக்கியமா? ” என்ற கேள்வி நிச்சியம் அனைவரின் எண்ணதிலும்
எழும். ஒரு பாடலில் அணியைப் பார்ப்பதன் மூலம் அப்பாடலை நாம் எந்த அளவிற்கு இரசித்து
இருக்கிறோம் என்று அறியலாம். இவ்வேறுபாட்டிற்கு காரணம் அணிகளே. உவமை அணி, உருவக
அணி சிலேடை, தற்குறிப்பெற்ற அணி, உயர்வு நவிற்சி அணி மற்றும் தன்மை அணி ஆகிவையையே
ஒரு பாடலுக்கு மேலும் அழகைச் சேர்க்கிறது.
1.1 உவமையணி
உவமையணி என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளும், பல பொருளோடு ஒரு பொருளும், ஒரு
பொருளோடு பல பொருளும் மற்றும் பல பொருளோடு ஒரு பொருளும் உவமை காட்டிச் சொல்லவது
உவமையணி.
வாசம் பூ மேடை போடுதம்மா
அம்மம்மா ஆனந்தம்...
“ முள்ளும் மலரும் ” எனும் படத்தில் இடம் பெற்றுள்ள “செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது
மோதுதம்மா” , என்ற பாடலிம் வழி பாடலாசிரியரான கண்ணதாசன் “ பெண்போல ஜாடை பேசுதம்மா ”
என்னும் வரியில் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். பெண் குணத்தை ஜாடை பேசுவதாக அமைவதை
உவமையாக கூறியுள்ளார். அதாவது இப்பாடல் வரி விளக்குவது என்னவெனில் பூவாசம் மேடை போட்டி
அவை பெண்கள் போன்று ஜாடை பேசிகிறது என்பதுதான். பெண்களின் இயல்பான குணத்தைப் “போல”
என்னும் உவமை அனியின் மூலம் பூவைப் பெண்ணிற்கு உவமை செய்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
கிழக்கு வாசல் எனும் திரைப்படட்டில் வெளிவந்த பாடல் . இப்பாடல் வரிகளில் ஆசிரியர் உருவக
அணியைக் கையாண்டுள்ளார். கிளியை பெண்ணுக்கு உவமைப்படுத்தியிருந்தாலும் அதனை உவமையாக
கூறாமல் கிளி என்று உருதியாக எழுதியிருப்பது உருவக அணியை குறிக்கிறது. கிளியை சொல்வது போல்
ஒரு பெண்ணை கவிஞர் கூறுகிறார்
தன்மை அணி என்பது தன்மை என்பது இயல்பு. ஒரு பொருளின் இயல்பை ‘ உள்ளது உள்ளப்படி’
‘நேரில் பார்த்தாற் போல’ விளங்குமாறு சொல்வது தன்மை அணியாகும். ‘அவ்வகைப்பட்ட
பொருளையும், அதன் உண்மைத் தன்மையை விளக்கும் சொற்களால் கூறுவது தன்மை அணி’ என்பது
இலக்கணம்.
‘வேட்டை விளையாடு’ எனும் படத்தில் இடம் பெற்றுள்ள “வெள்ளி நிலவே வெள்ளி வெள்ளி
நிலவே,” என்ற பாடலின் வழி பாடலாசிரியரான தாமரை மஞ்கள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல
இருடுதே ..பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே ! என்னும் வரிகளில் உவமை அணியைப்
பயன்படுத்தியுள்ளார். இப்பாடல் வரியானது மஞ்கள் நிறமுடைய வெயில் மாலை நேரம் ஆக ஆக
இருட்டுவதாகக் குறிப்பிட்டு உள்ளதை உள்ளவாறு கூறுவதால் இது தன்மை அணியாகும். அத்துடன்,
மாலையில் வேளையில் மெல்ல மெல்ல வெளிச்சம் குறைந்து இருள் சூழ தொடங்கும் என்று உயர்த்திக்
காட்டக்கூடிய அதிக வர்ணனைகள் இன்றி உள்ளதை உள்ளவாறு கூறுவதால் இவ்வரியிலும் தன்மை
அணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
1.4 சிலேடை அணி
ஒரு வகையாக நின்ற சொற்றொடர் பல வகையான பொருள்களின் தன்மை தெரிய வருவது சிலேடை
என்னும் அணி ஆகும்.
உயர்வு நவிற்சி அணி ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்தி, அளவுக்கு மேல் மிகுத்துக் கூறுவது. அதாவது
இரசனையுடன் உயர்த்திக் கூறுவது.
“ போய்ஸ் ” எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற “ எகிறி குதித்தேன் வானம் இடித்தது ” என்ற பாடலில் ”
வானவில் உரசியே பறந்ததும்ன் இந்த காக்கையும் மயில் என மாறியதே ” எனும் பாடலில் உயர்வு நவிற்சி
அணி பயன்படுத்தப்பட்டுள்ளது. கருமை நிறத்தோடு இருக்கும் காகம் வானவிலுடன் உரசியதும் மயிலாக
மாரது. ஆயினும் , தன் கர்ப்பனையால் காதலால் ஒருவன் தன்னை அழகாக பார்ப்பான் என்பதை உயர்வு
நவிற்சி அணியின் மூலம் அருமையாக வர்ணித்துக் கூறியுள்ளார் பாடலாசிரியர்.
ஒன்றுக்கு ஒன்று மாறுபடக் கூறுவது முரண் அணி ஆகும். அதாவது நன்மை, தீமை என்பன போல்
முரணான சொற்களை ஒரு செய்யுளில் அமைப்பது முரண் அணி ஆகும்.
ஒரு வகையாக வரும் தொடர் அல்லது சொல் பலபொருள் தருமாறு அமைவது சிலேடை என்னும்
அணியாகும். பெரும்பாலும் ஒரு தொடருக்கு இரண்டு பொருள் வரும். அரிதாக ஒரு தொடருக்கு
இரண்டுக்கு மேற்பட்ட பொருள் வருவதும் உண்டு.
போறாலே பொண்ணுத்தாய்