You are on page 1of 13

கேள்வி 1 : நாளிதழ்களில் காணப்படும் சொற்பிரிப்புத் பிழைகளை அடையாளங்கண்டு குறிப்பிட்டு

அப்பிழைகளைக் களைவதற்கான விதிகளை இலக்கண அடிப்படையின் 750 சொற்களில்


பகுத்தாய்க.

இன்றைய காலகட்டத்தில் இன்னும் தமிழ் நாளிதழில் சொற்பிரிப்பு பிழைகளை இருந்த வண்ணம்


உள்ளன. இதற்கு மூலக்காரணமாக அமைவது எழுதிய கட்டுரைகள் மற்றும் படைப்புகளைத்
திருத்துவதும் கிடையாது. அப்படியும் முறையாகத் திருத்தினாலும் கவனக்குறைவின்
காரணத்தினால் இப்பிழைகள் எல்லாம் ஏற்படுகின்றது. இவற்றுள் பிழைகள் யாவும் பின்வருமாறு :

தமிழ்ப் பள்ளி

தமிழ்பப் ள்ளி எனும் சொல் பிரித்தெழுதக் கூடாது. தமிழ்பப் ள்ளி எனும் சொல் இருபெயரொட்டுப்
பண்புத்தொகை, அதாவது பொதுப்பெயரும் சிறப்புப் பெயரும் ஒட்டி வருவது ஆகும். தமிழ் என்பது
சிறப்புப்பெயர், பள்ளி என்பது பொதுப்பெயர். ஆகையால் தமிழ்பப் ள்ளி என்று சேர்த்து எழுத
வேண்டும். அப்படி பிரித்து எழுதினால், இது தவறான கூற்றாகும்.

இரக்கம் மனம்

இரக்கம் மனம் என்று எழுதுவது தவறாகும். இரக்க மனம் என்பது பண்புத்தொகையைக்


குறிக்கின்றது. இத்தொடர் பொதுப்பண்புத் தொகையாக இருக்கின்றது. ஆகையால், இதில்
மறைந்திருக்கும் ஆன, ஆகிய சொற்கள் போன்ற சொற்கள் பொருளின் தன்மையும் குணத்தையும்
குறிக்கின்றது. இரக்கம் என்பது குணத்தை குறிக்கின்றது. ஆகையால் எழுதும் போழுது இரக்க
மனம் என்று எழுதுவது சரியாகும்.

1
கை கால்

நாளிதழில் கை கால் என்று பிரித்து எழுதியிருப்பது


தவறாகும். காரணம் உம்மைத்தொகையின் உம் என்ற இடைச்சொல் மறைந்து வருவதால் பிரித்து
எழுத வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கை கால் பிரிக்கப்பட்டால், கையும் காலும் என்று பிரிக்க
வேண்டும்.

கவிதை எழுதினான்

கவிதை எழுதினான் என்பது உருபு மட்டும் மறைந்த தொகையாகும். இதில் ( கவிதை + ஐ +


எழுதினான்) ஆகும். இதில் இரண்டாம் வேற்றுமை உருபு மட்டும் மறைந்து கிடைக்கும்.

மரம் ஏறினான்

மரம் ஏறினான் என்பதும் மேற்கண்ட விதிக்கு பொருத்த அமைகின்றது. இதில் இல் உருபு மட்டுமே
மறைந்த தொகையாகும். ஆகையால் மரத்தில் ஏறினான் என்று எழுத வேண்டும்.

இரவு பகல்

இரவு பகல் என்று பிரித்து எழுதுவது தவறாகும். காரணம், இதில் உம்மைத்தொகை மறைத்துக்
கிடைப்பதால், இத்தொடரை இரவுபகல் என்று சேர்த்துதான் எழுத வேண்டும். அப்படியே பிரித்தாலும்
இரவும் பகலும் என்றுதான் எழுத வேண்டும்.

2
வீடுச்சென்றார்கள்

வீடுச்சென்றார்கள் என்பது வீட்டிற்குச் சென்றார்கள் என்றுதான் எழுத வேண்டும். இவைகள் கு


என்ற உருபு மறைந்துக் கிடப்பதால் சேர்த்து எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகையால்,
வீட்டிற்குச் சென்றார்கள் என்பதுதான் மிகவும் சரியான விடையாகும்.

அலை கடல்

அலை கடல் என்று எழுதுவது பிழையாகும். காரணம் அலை என்பது வினையடிச்சொல்லாகும். கடல்
என்பது பெயர்ச்சொல்லாகும். ஆகையால் வினைத்தொகையில் சேர்த்துதான் எழுத வேண்டும்.

அல்லி பூ

அல்லி பூ என்பதனை அல்லிப்பூ என்றுதான் எழுத வேண்டும். ‘ப்’ என்பது கண்டிபாக இருத்தல்
வேண்டும். காரணம் அல்லி என்பது சிறப்பு பெயர்: பூ என்பது பொதுப்பெயராகும். ஆகையால்
இவைகள் இணைந்து வரும்போது சொற்பிரிப்பு கூடாது.

நகை பெட்டி

நகை பெட்டி என்பதனை பிரித்து எழுதினால் பொருள் வேறுபடும். இவை நகைப்பெட்டி என்றுதான்
எழுத வேண்டும். காரணம் ‘நகையை வைக்கும் பெட்டி’ இதில் ஐ உருபும் வைக்கும் என்ற வினையும்
மறைந்திருப்பதால், கண்டிப்பாக பிரித்து எழுதக் கூடாது.

கேள்வி 2 : தொகை நிலைத் தொடரையும் தொகா நிலைத் தொரையும் ஒப்பிட்டு 750 சொற்களில்
கருத்துரைக்கவும்.

2.1 முன்னுரை

3
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு

சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது

இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர்

எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள்

தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள்

தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும். 

2.2 தொகைநிலை தொடர்

þÃñÎ ¦º¡ü¸û «øÄÐ «¾üÌõ §ÁüôÀð¼ ±ñ½¢ì¨¸Â¢Ä¡É ¦º¡ü¸û þ¨½óÐ ´§Ã ¦º¡ø§À¡ø ¦ºÂøÀð¼ ¡ø
«¾¨Éò ¦¾¡¨¸î¦º¡ø ±ý§À¡õ. ¦ÀÂ÷î ¦º¡ø§Ä¡Î Áü¦È¡Õ ¦ÀÂ÷î ¦º¡øÖõ, ¦ÀÂ÷î ¦º¡ø§Ä¡Î Å¢¨É¡øÖõ, ¦ÅüÚ¨Á
§À¡ýÈ ¦¾¡¼Ã¢Âø ¦¾¡¼÷À¢ý «ÊôÀ¨¼Â¢ø, «ð¦¾¡¼Ã¢Âø ¦¾¡¼÷¨À Å¢¾óÐ ¸¡ðÎõ ¯ÕÒ¸û Á¨ÈóÐ, ´Õ ¦º¡ø §À¡ø
¿¼ôÀÐ ¦¾¡¨¸î¦º¡ø ¬Ìõ. ¦À¡ÐÅ¡¸, ¦¾¡¨¸ ±ýÀÐ þÃñÊüÌõ §ÁüôÀð¼ ¦º¡ü¸Ç¢ý §º÷쨸¡¸ þÕó¾¡Öõ ÁÚӨɢø
«Ð ¿£ñ¼¦¾¡Õ ¦¾¡¼÷ ÅÊÅò¾¢ý º¢Õí¸¢Â ÅÊÅÁ¡Ìõ. ¦¾¡¼Ã¢Âø ÀñÒ¸¨Çò ¦¾Ç¢Å¡¸ ¯½÷òÐõ ¯ÕÒ¸Ùõ ¦¾¡ì¸¢
¿¢ýÚ ´Õ ¦º¡ø§À¡ø ¦ºÂøÀÎÅÐ, ¦¾¡¨¸î¦º¡ø. ¾Á¢ú ¦Á¡Æ¢Â¢ø ¸¡½ôÀÎõ ¦¾¡¨¸î ¦º¡ü¸Ç¢ý ±ñ½¢ì¨¸ ¬Ú ¬Ìõ.

2.2.1 வேற்றுமைத் தொகை 


‘நூல் படித்தான்’ என்னும் தொடர், ‘நூலைப் படித்தான்’ என விரியும். இதில், ‘ஐ’ என்னும் வேற்றுமை
உருபு மறைந்து வந்துள்ளது. வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும். ‘ஐ’
என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. ஆதலால், இத் தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயிற்று.

2.2.2 வினைத் தொகை


‘குடி நீர’் . இது, குடித்த நீர,் குடிக்கும் நீர,் குடிக்க இருக்கின்ற நீர் என முக்காலத்திற்கும் ஏற்பப்
பொருள் தரும்.  ஆனால்,  காலம் காட்டும் இடைநிலை மறைந்துள்ளது. இவ்வாறு, காலம் மறைந்து வரும்
பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.

2.2.3 பண்புத் தொகை 

4
‘செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப்
பெயர் விகுதியும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு, பண்பை விளக்கும் உருபு
மறைந்து (தொக்கு) வருவது பண்புத் தொகை. 

2.2.4 உவமைத் தொகை

‘தேன்மொழி’ என்பது ‘தேன்போன்ற மொழி’ என விரியும். இடையில், ‘போலும்’ என்னும் உவம உருபு
மறைந்து வந்துள்ளது. ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.

2.2.5 உம்மைத் தொகை 


‘இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து
வந்துள்ளது. ஆதலால் இது, உம்மைத் தொகை எனப்படும்.
 
2.2.6 அன்மொழித் தொகை
 
‘பொற்றொடி வந்தாள்’ என்பது ‘பொன்னால் ஆகிய தொடியை (வளையலை) அணிந்த பெண்
வந்தாள்’ என விரியும். பொன்னால் ஆகிய என மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும்
மறைந்து வந்துள்ளது. இவ்வாறு வேற்றுமைத் தொகையை அடுத்து, அல்லாத மொழி (அணிந்த, பெண்)
மறைந்ததால். இது, வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆயிற்று.

2.3 தொகாநிலைத் தொடர்

‘முற்றீரெச்சமெழுவாய்விளிப்பொருள்

ஆறுருபிடையுரியடுக்கிவைதொகாநிலை’

- நன்னூல்சூத்திரம் –

பெயர்ச் சொல்லோடு பெயர் சொல்லும், பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் சேர்ந்த இரண்டு
சொற்களும் தம்மிடையே உருபுகளும், காலமும் தொகாமல் வெளிப்படையாக வந்து, தொடர்
அமைந்தால் அதற்குத் தொகாநிலை தொடர் என்று பெயர். þÕ ¦º¡ü¸û þ¨½Ôõ §À¡Ð, «ÅüÈ¢ý þ¨¼Â
¢ø §¾¡ýÚõ ¯ÕÒ¸û ±Ð×õ Á¨È¡Áø/¦¾¡ì¸¢ ¿¢ü¸¡Áø ¦ÅÇ¢ôÀ¨¼Â¡¸ ÅÕŧ¾ ¦¾¡¸¡¿¢¨Äò ¦¾¡¼÷.
¦¾¡கா ¿¢¨Äò¦¾¡¼÷¸û þÃñΠŨ¸ôÀÎõ ; ´ýÚ, §ÅüÚ¨Áò ¦¾¡¼÷. Áü¦È¡ýÚ, «øÅÆ¢ò¦¾¡¼÷ .þÃñ¼¡õ
§ÅüÚ¨Á Ӿġ¸ ±Æ¡õ §ÅüÚ¨Á ®È¡¸ ¬Ú §ÅüÚ¨Áô ¦À¡ÕÇ¢ø ¯ÕÅ¡Ìõ ¦¾¡¼÷¸û, «ÅüÈ¢ø

5
þ¼õ¦ÀÈÅøÄ §ÅüÚ¨Á ¯ÕÒ¸û ¦ÅÇ¢ôÀ¼ò §¾¡ýÚÅÐ §ÅüÚ¨Áò ¦¾¡¼÷¸Ç¡Ìõ. §ÅüÚ¨Áò ¦¾¡¼÷À
¢ýÈ¢, ²¨É ÅÆ¢¸Ç¢ø ¦¾¡¸¿¢¨Äò ¦¾¡¼÷ ¯ÕÅ¡ÌÁ¡É¡ø, «Ð «øÅÆ¢ò¦¾¡¼÷ ±Éô ¦ÀÂ÷¦ÀÚõ.
«¾¡ÅÐ, §ÅüÚ¨Á «øÄ¡Áø þ¨Âó¾ ÅƢ¢ø «¨Áó¾ ¦¾¡¼÷¸û ±ýÚ ¦À¡ÕûÀÎõ. «¨Å ´ýÀÐ
Ũ¸ôÀÎõ.

2.3.1 எழுவாய்த் தொடர்

இளங்கோ வந்தார்’ - இதில், இளங்கோ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘வந்தார்’‘வந்தார்’


என்னும் பயனிலை வந்துள்ளது. இவ்வாறு, வரும் தொடர் எழுவாய்த் தொடர்.

2.3.2 விளித்தொடர்

கண்ணா ! வா! - இது, விளித்தொடர்

2.3.3 வினைமுற்றுத் தொடர்

கண்டனன் கற்பினுக்கு அணியை’ - இவ்வாறு, வினைமுற்று முதலில் வந்து பெயரைத்


தொடர்கிறது. ஆதலின் இது, வினைமுற்றுத் தொடர்

2.3.4 பெயரெச்சத் தொடர்

‘சிரித்த குழந்தை’ - இதில், ‘சிரித்த’ என்னும் எச்சவினை ‘குழந்தை’ என்னும் பெயர்ச் சொல்லைக்
கொண்டு முடிந்ததால் இது, பெயரெச்சத் தொடர்

2.3.5 வினையெச்சத் தொடர்

‘கண்டு மகிழ்ந்தான்’ - இதில் கண்டு என்னும் எச்ச வினை ‘மகிழ்ந்தான்’ என்னும் வினைமுற்றைக்
கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர்

2.3.6 வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

‘இலக்கணத்தை இயற்றினார்’ - இத்தொடரில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக


வந்து உள்ளதால், இது, வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

2.3.7 இடைச் சொற்றொடர்

6
மற்றொன்று’ - இத்தொடரில் ‘மற்று + ஒன்று’ - ‘மற்று’ என்னும் இடைச்சொல்லைத் தொடர்ந்து
‘ஒன்று’ என்னும் சொல் வந்துள்ளதால், இஃது இடைச் சொற்றொடர்.

2.3.8 உரிச்சொற்றொடர்

‘கடி நகர்’ - இத்தொடரில், ‘கடி’ என்பது உரிச்சொல். அதைத் தொடர்ந்து ‘நகர்’ என்னும் சொல்
வந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர்.

அடுக்குத் தொடர்

‘வாழ்க! வாழ்க!’ என ஒரே சொல், பலமுறை அடுக்கி வருவது, அடுக்குத் தொடர்.

3.0 ஒப்பீடு

சொற்கள் மொழியாயில் பயன்படும்போது, ஒன்றை ஒன்று தொடர்ந்து

நின்று பொருள் தருவகின்றன.அவை ஒன்றை ஒன்று தொடர்ந்து நிற்க

வேண்டுமாயின், ஆகக் குறைவாக இரண்டு சொற்களாவது வேண்டும்.

எனவே, ஒரு தொடரில் குறைந்த அளவு இரண்டு சொற்கள் இருக்க

வேண்டும். தமிழில் சொற்கள் சேர்ந்து பொருள்படும் தொடராகும் போது,

அதிலுள்ள பொருள் தொடர்புடைய அத்தனை சொற்களும்

வெளிப்படையாக தோன்றலாம். சிலவேளை தொடரிலுள்ள சொற்களுக்கு

இடையில் இருக்க வேண்டிய சொற்கள் சில சொற்கள் மறைந்தும்

இருக்கலாம்.

நாளிதழைப் படித்தேன்

இந்த தொடர் மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டு சொற்களைக் கொண்ட

தொடர்போலத் தோன்றினாலும், இதில் உண்னையில் நாளிதழ் என்ற

7
பெயர்ச்சொல், ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு, படித்தேன் என்ற

வினைச்சொல் ( நாளிதழ் + ஐ + படித்தேன்) என்று ஆக மூன்று சொற்கள்

இருக்கின்றன. இந்த மூன்று சொற்களின் எதுவும் மறையவில்லை;

எல்லாம் வெளிப்படையாக இருக்கின்றன. இதுவே தொடராகும்.

தமிழில் இவ்வாறு தொடர்களுக்கு இடையில், பொருள் குன்றாமலும்,

மாறாமலும், சில சொற்களை மறைத்துப் பயன்படுத்தும் முறை

மிகுதியாகவே கையாளப்படுகின்றது. இதனால் மொழியின் செறிவும்

சொற்சுருக்கமும் வாய்க்கின்றன.

இந்த இருவகைத் தொடர்களையும் வேறுப்படுத்திக் காட்டுவதற்காக

அவற்றுக்குரிய பெயர்களின், தொகுத்தல் என்ற சொல்

பயன்படுத்தப்படுகிறது. தொகுத்தல் என்ற சொல்லுக்கு மறைத்தல்

என்பதன் பொருள். வகுக்கப்பட்ட ஒன்றை வகை என்று கூறுவதுபோல,

தொகுக்கப்பட்ட தொடரை தொகை என்றும் குறிக்கிறது இலக்கணம்.

எனவே, தொடர்களின் யாதேனும் மறைந்திருக்கும் நிலை,

தொகாநிலையே ஆகும். மேலும், எதுவும் மறையாத நிலையிலுள்ள

தொடர், தொகாநிலைத் தொடர் எனப்படுகிறது. யாதேனும்

மறைந்திருக்கும் நிலையிலுள்ள தொடர் தொகை நிலைத் தொடர்

எனப்படுகின்றது.

நாளிழைப் படித்தேன் என்ற தொடர், தொகாநிலைத் தொடர்

நாளிழ் படித்தேன் என்ற தொடர், தொகைநிலைத் தொடர்

8
தொகைநிலைத் தொடர் சுருக்கமாகத் தொகை எனப்படும். தொகாநிலைத்

தொடர் சுருக்கமாகத் தொடர் எனப்படுகிறது. தொகாநிலைத் தொடரில்

எதுவும் மறையாமல், இருக்க வேண்டிய எல்லாச் சொற்களும் விரிந்தே

இருப்பதால், இது விரி என்ற சொல்லாலும் சுட்டப்படுகிறது. இதனைத்

தொடர் என்று கூறுவதைவிட, விரி என்று கூறுவதே பொருளுக்கு ஏற்ற

முறையில் பொருத்தமும் தெளிவும் ஆகும். எனவே, சுருக்கமாக

கூறும்போது, யாதேனும் மறைந்திருக்கிற தொடரைத் தொகை என்றும்,

எதுவும் மறையாமல் இருக்கிற தொடர் ஆகும்.

எதுவும் மறையாமல் விரிந்திருக்கிற தொகாநிலைத் தொடர்களையும்


யாதேனும் மறைந்துவரும் தொகைநிலைத் தொடர்களையும்
வகைப்படுத்திப் புரிந்துக்கொள்வது தமிழ் இலக்கணத்தில்
இன்றியமையாதது. ஏனெனில், இந்த வகைப்பாட்டுக்குச் சொற்புணர்ச்சி
இலக்கணத்தில் மட்டுமே உண்டு.

9
கேள்வி 3 : தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை உருபின் இன்றியாமையை ஆராய்ந்து 500 சொற்களில்
ஒரு கட்டுரை எழுதுக.

முன்னுரை

மனிதன் எப்போது பேசத்தொடங்கினான் என்பது இன்றும் அறிந்து கொள்ள


இயலாத மறையாக இருந்து வருகிறது. இலக்கியம் தண்டமிழ் மொழியில்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சி நிலையுற்று இருந்தது
என்பது சான்றோர் வாக்கு. இலக்கியம் தோன்றியப் பின்னரே இலக்கணம்
தோன்றுவது பண்டைக்கால இயல்பு. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை
வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும்.பொருளை வேறுபடுத்திக் காட்டத் துணை
செய்யும் உறுப்புக்கு வேற்றுமை உருபு என்று பெயர். இவ்வாறு வேறுபடுத்துவதால்தான் ஒரு
வாக்கியத்தின் பொருள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

எடுத்துக்காட்டாக,

சேரன் சோழன் வென்றான்


தமிழ்நாடு தில்லி பேச்சு
புலிகொல் யானை

என்ற தொடர்களைக் காணுங்கள். மேற்கண்ட தொடர்களின் பொருள் விளங்கவில்லை.

முதல் தொடரில் யார் யாரை வென்றது என்று பொருள் விளங்காமல் இருக்கின்றது.


சேரனைச் சோழன் வென்றானா? அல்லது சோழனைச் சேரன் வென்றானா? என்பது தெரியவில்லை.
பொருள் நன்கு விளங்குவதற்காகச் சேரன் என்னும் பெயரினை அடுத்து ‘ஐ’ என்னும் உறுப்பினைச்

10
சேர்த்துவிட்டால் ‘சேரனைச் சோழன் வென்றான்’ என்று பொருள் நன்கு விளங்குகின்றது.
இல்லையென்றால் சோழன் என்னும் பெயரினை அடுத்து ‘ஐ’ என்னும் உறுப்பினைச் சேர்த்துவிட்டால்
‘சேரன் சோழனை வென்றான்’ என்று பொருள் நன்கு விளங்குகின்றது.

இரண்டாம் தொடரில் தமிழ்நாட்டுடன் தில்லி பேச்சா? அல்லது தில்லியுடன் தமிழ்நாடு


பேச்சா? என்ற பொருள் விளங்காத நிலை ஏற்படுகின்றது. தமிழ்நாடு என்பதை அடுத்து ‘உடன்’
என்னும் உறுப்பினைச் சேர்த்துவிட்டால் ‘தமிழ்நாட்டுடன் தில்லி பேச்சு’ என்று பொருள் நன்கு
விளங்குகின்றது.

மூன்றாம் தொடராகிய ‘புலிகொல் யானை’ என்பதில் ‘புலியால் கொல்லப்பட்ட யானையா?’


அல்லது ‘புலியைக் கொன்ற யானையா?’ என்ற பொருள் ஐயம் உண்டாகின்றது. புலி என்னும்
பெயரினை அடுத்து ‘ஆல்’ என்னும் உறுப்பைச் சேர்த்துவிட்டால் ‘புலியால் கொல்லப்பட்ட யானை’
எனப் பொருள் ஆகின்றது. ‘ஐ’ என்னும் உறுப்பினைச் சேர்தத் ால் ‘புலியைக் கொன்ற யானை’ எனப்
பொருள்படுகின்றது.

இவ்வாறு சொற்றொடர்களில் தோன்றும் ஐயம் நீங்கி, பொருள்


நன்கு விளங்குவதற்காகப் பெயர்களோடு சேர்க்கப்படும்
உறுப்புக்கு உருபு என்று பெயர். பொருளை
வேறுபடுத்துவதற்கு வேற்றுமை என்று பெயர். இவ்வேற்றுமை தமிழில்
எட்டு வகைப்படும்.

ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப்பொருள்


வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை
(நன்னூல் : 291)

வேற்றுமை வகைகள்

பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதற்கு அதன் ஈற்றில் (இறுதியில்) சேர்க்கும்


சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படும். அவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலியனவாம்.

11
உருபு - இது வேற்றுமையைக் காட்டும் உருவம் அல்லது அடையாளம் ஆகும். முதல்
வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை,
ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என்று வேற்றுமை எட்டு ஆகும். முதல்
வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனவும், எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை எனவும் பெயர் பெறும்.

எடுத்துக்காட்டு

1) முல்லை மலர்ந்தது
2) அவள் முல்லையைச் சூடினாள்
3) முல்லையால் மணம் பெற்றாள்
4) முல்லைக்கு நீர் ஊற்று
5) முல்லையின் எடுத்த இதழ்
6) முல்லையினது நறுமணம்
7) முல்லைக்கண் வண்டுகள் மொய்த்தன
8) முல்லையே!  நீ மாலையில் மலர்கிறாய்!

மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் முல்லை என்னும் பெயர்ப்பொருள் எட்டுவகையாக


வேற்றுமை அடைந்திருக்கிறது.

விளக்கம்

1. முல்லை மலர்ந்தது முதல் வேற்றுமை; எழுவாய்ப் பொருள்

2. முல்லையை இரண்டாம் வேற்றுமை; ஐ என்பது இரண்டாம்


வேற்றுமை உருபு, செயப்படுபொருள்.

3. முல்லையால் மூன்றாம் வேற்றுமை; ஆல் : மூன்றாம் வேற்றுமை


உருபு, கருவிப்பொருள்.

4. முல்லைக்கு நான்காம் வேற்றுமை; கு : நான்காம் வேற்றுமை


உருபு, கோடல்பொருள். (கொள்ளுதல்)

5. முல்லையின் ஐந்தாம் வேற்றுமை; இன் : ஐந்தாம் வேற்றுமை உருபு,


நீஙக
் ல் பொருள்.

6. முல்லையினது ஆறாம் வேற்றுமை; அது : ஆறாம்


வேற்றுமை உருபு, கிழமைப்பொருள்.

12
(உடைமைப்பொருள்)

7. முல்லைக்கண் ஏழாம் வேற்றுமை; கண் : ஏழாம்


வேற்றுமை உருபு, இடப்பொருள்.

8. முல்லையே ! எட்டாம் வேற்றுமை; விளிப்பொருள். (அழைப்பு)

இந்த எடுத்துக்காட்டுகளில் முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் வேற்றுமை உருபுகள்


இல்லை. மற்றவற்றில் அவ்வுருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பெயர்ப்பொருளை
வேறுபடுத்தின.

இத்தொடர்களில் மூன்று உறுப்புகள் உள்ளன.

1) வேற்றுமையை ஏற்ற பெயர்


2) வேற்றுமை உருபு
3) பயனிலை

இம் மூன்றின் துணை கொண்டே வேற்றுமையை அறிதல் வேண்டும்.

13

You might also like