You are on page 1of 17

FACULTY OF EDUCATION AND LANGUAGES

SEMESTER SEPTEMBER 2020

HBTL 4203
PENGGAYAAN BAHASA TAMIL II

NO. MATRIKULASI : 880229015170001

NO. KAD PENGNEALAN : 880229015170

NO. TELEFON : 0167761490

E-MEL : nithyraj@hotmail.com

PUSAT PEMBELAJARAN : JOHOR LEARNING CENTRE


கேள்வி 1.அ

வாக்கிய அமைப்பு ஒரு மொழியின் உயிர் ஆகும். எண்ணத்தின் போக்கை நேரே


உணர்த்துவது வாக்கிய அமைப்பே ஆகும். ஒரு மொழியின் உச்சரிப்பானது காலநிலையால்
மாறுபடலாம். முயற்சிச்சுருக்கத்தால் சொற்கள் சிதைந்து வேறுபடலாம். ஆனால், ஒரு மொழியின்
வாக்கிய அமைப்பு மட்டும் மாறுபடுவத்தில்லை. இது மொழிநூல் வல்லுநர் பலப்பல மொழிகளை
ஆராய்ந்து கண்ட உண்மை. அவ்வாறு பெருஞ்சிறப்பு வாய்ந்த இவ்வாக்கிய அமைப்பில் தற்பொழுது
சில இலக்கணப் பிழைகளைக் காணமுடிகிறது. தமிழ் மொழியில் பயனிலை, எழுவாயுடன் திணை,
பால், எண், இடம் இவற்றுடன் மாறுபட்டு இசைந்து வருவதாலே இலக்கணப் பிழைகள்
ஏற்படுகின்றன. அவற்றுள் ஐந்தனையைப் பார்ப்போம்.

முதலில், அஃறிணை ஒருமை பன்மை வினைமுற்றுகளில் பிழைகள் ஏற்படுகின்றன.


எடுத்துக்காட்டு;

1. கட்டுப்பாடுகள் இனிமேல் கிடையாது.


2. அங்கே நூறு அல்லது இருநூறு வீடுகள் இருக்கிறது.
3. வியப்பும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது.
4. இன்று செய்திகள் வராது.

என்ற வாக்கியங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.


இவ்வாக்கியங்களைக் கீழ்கண்டவாறு எழுத வேண்டும்.

1. கட்டுப்பாடு இனிமேல் கிடையாது அல்லது கட்டுப்பாடு கிடையா.


2. அங்கே நூறு அல்லது இருநூறு வீடுகள் இருக்கின்றன.
3. வியப்பும் கவலையும் ஏற்பட்டிருக்கின்றன.
4. இன்று செய்திகள் வாரா.

இப்பிழைகளை நீக்க நாம் இலக்கண விதிகளை மனத்தில் நன்கு நிலைநிறுத்திக்


கொள்ளல் வேண்டும். ‘து’, ‘று’ என்பவை அஃறிணை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஆகும்.
இவற்றை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் என்பர். ‘வண்டி வந்து சேர்ந்தது’ எனும்
வாக்கியத்தில் ‘வண்டி’ எனும் ஒருமை எழுவாய்க்கு ஏற்றவாறு ‘து’ விகுதி வந்திருப்பதைக் காண
முடிகிறது. அதேப்போல் ‘கோழி கூவிற்று’ எனும் வாக்கியத்தில் ஒருமை எழுவாய்க்குப்
பொருந்தும்படி ‘று’ விகுதி வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், ‘அ’ என்பது பலவின்பால் வினைமுற்று விகுதியில் உதிக்கும் சொல்லாகும்.


‘வண்டிகள் வந்து சேர்ந்தன’; ‘கோழிகள் கூவின’ எனும் இரண்டு வாக்கியங்களிலும் பன்மை
எழுவாய்களுக்கு இசையுமாறு ‘அ’ வினைமுற்று விகுதியாக இருக்கக் காண முடிகிறது.
இதனையடுத்து, இவ்வாக்கியங்களை எதிர்மறையில் அதாவது எதிர்மறுத்துக் கூறும்போது
பன்மை எழுவாய்க்கு ‘ஆ’ எனும் வினைமுற்று விகுதியாக வரும் என்பதை உணர வேண்டும்.
உதாரணத்திற்கு, ‘வண்டிகள் வந்து சேரா’; ‘கோழிகள் கூவா’ என்ற வாக்கியங்கள் பலவின்பால்
எதிர்மறை வினைமுற்று விகுதியாகும். இவ்விலக்கண கூறுகளை மனதில் தக்க வைத்துக்
கொண்டால் இப்பிழைகளைக் களையலாம். அதுமட்டுமல்லாமல், பள்ளிப்பருவத்திலிருந்தே
மாணவர்களுக்குப் பலவகையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சிகளே ஒருவரை
செம்மைப்படுத்தும். ஆகவே, கீழ்க்கண்டவாறு இலக்கணப் பயிற்சிகளின் மூலம் குறைகளைக்
களையலாம்.

எடுத்துக்காட்டு பயிற்சி; சரியான விடையைக் கோடிடுக.

1) நூலகம் அபராதம் (விதித்தனர், விதித்தது).


2) தீயணைப்பு வண்டிகள் (வந்தன, வந்தனர்).
3) மயில் (அகவிற்று, அகவின)

இரண்டாவதாக, பொதுவாக வாக்கிய அமைப்புகளில் காணும் இலக்கண பிழை


என்னவென்றால், மூவிடப்பெயர்களில் படர்கையில் எழும் பிழைகளே ஆகும். தன்மை, முன்னிலை
அல்லாத இடத்தினைப் படர்க்கை என்பர். இருவர்     பேசும்போது     அவர்களைக்     குறிப்பிடாமல்
வேறொருவரையோ அல்லது வேறொரு பொருளையோ குறித்துக் கூறும் சொல் படர்க்கை
இடப்பெயர் எனப்படும். இதனுள்ளும் இரு பிரிவுகள் உள்ளன.

1) படர்க்கை ஒருமை
2) படர்க்கைப் பன்மை

  தொல்காப்பியர் படர்க்கை ஒருமைப்பெயராகத் ‘தான்’ என்பதையும் படர்க்கைப்


பன்மைப்பெயராகத் ‘தாம்’ என்பதையும் குறிப்பிடுகின்றார். இவை வேற்றுமை உருபு ஏற்கும்போது
முறையே ‘தன்’ எனவும் ‘தம்’ எனவும் நெடுமுதல் குறுகுகின்றன. இதனை அறியாமல்,
பெரும்பாலோர் ‘தன்’, ‘தம்’ பயன்பாட்டில் இலக்கண பிழைகளை ஏற்படுத்துகின்றனர்.

எடுத்துக்காட்டு;

1) நேரு தன் தாய்நாட்டின் மதிப்பை உலகில் உயர்த்தி வந்தார். (தவறு)


2) நேரு தம் தாய்நாட்டின் மதிப்பை உலகில் உயர்த்தி வந்தார். (சரி)

இவ்வாக்கியத்தில் ‘தன்’ என்றிருப்பது தவறு, ‘தம் என்றிருக்க வேண்டும். ‘அவர் தன்


வீட்டுக்குப் போனார்’ என்று எழுதாமல் ‘தம் வீட்டுக்குப் போனார்’ என்று எழுதுதல் சிறப்பாகும்.
மரியாதைப் பன்மையாக இருப்பதால் தம் என்று எழுதுதலே சரியானதாகும். ஆகவே, கற்பித்தலின்
மூலம் மட்டும் இப்பிரச்சணையைக் களைய முடியாது. மாணவர்களுக்கு வாசிப்பு முறையையும்
கையாள வேண்டும்; காரணம் வாசிக்கும் போது இத்தகைய ‘தன்’, ‘தம்’, ‘தான்’, ‘தாம்’ போன்ற
சொற்கள் வரும்போது, அவற்றைச் சுட்டிக்காட்டினால் மாணவர்களால் அதன் பயன்பாட்டை அறிய
முடியும். பின் மாணவர்களை அவ்வாக்கியங்களைக் கோட்டிட்டு மீண்டும் வாசிக்கப் பணிக்கலாம்.
அவ்வாறு செய்யும்போது பயன்பாட்டை அறிந்து அதன் பிறகே அவர்களால் பிழையில்லா
வாக்கியத்தை எழுத முடியும். எனவே, இம்முறையைக் கையாண்டால் இப்பிரச்சணையைக்
களையலாம்.

மூன்றாவதாக, ‘ஒரு’, ‘ஓர்’ பயன்பாட்டில் பிழைகள் எழுகின்றன. அதாவது, ‘ஓர் ஊரில்’


என எழுத வேண்டிய இடத்தில் ‘ஒரு ஊரில்’ என்று எழுதுகின்றனர். மேலும், ‘ஒரு புத்தகம்’ என்று
குறிப்பிடாமல், ‘ஓர் புத்தகம்’ என்று குறிப்பிடுவதைத் தற்பொழுது நாம் கண்கூடாக
காணமுடிகிறது. இதற்கு முக்கியக் காரனம் ‘ஒரு’, ‘ஓர்’ பயன்பாட்டை அறியாததே காரணம்
ஆகும்.

இப்பிரச்சணையைக் களைய ‘ஒரு’, ‘ஓர்’ பயன்பாட்டை மனதில் ஆழமாக பதித்துக்


கொள்ள வேண்டும். வாக்கியங்களை எழுதினால் சரி என்ற கொள்கையை மாற்றி, சரியான
முறையில் இயற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும். ‘ஒரு நாய்’, ‘ஓர் அணா’ என்று எழுதுதல்
இன்னோசையை பயக்கும். வருமொழி உயிர்மெய்யெழுத்தில் தொடங்கினால் ‘ஒரு’ என்னுஞ்
சொல்லையும், வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் ‘ஓர்’ என்னுஞ் சொல்லையும் பயன்படுத்த
வேண்டும் என்பது விதியாகும். செய்யுளில் யாப்பிலக்கணம் கருதி இவ்விதி மாறுபட்டும் வரும்.
இவ்விதியையே இருமடங்கு, ஈருடல் என்பவற்றிற்கும் கொள்வர். தொல்காப்பியர் இவ்விதியை,
‘முதலீரெண்ணின் முன்’ எனும் எழுத்ததிகார 455 வது நூற்பாவில் கூறுகிறார் என்று
அறிந்திருந்தால் பிழைகளைக் களையலாம். ஆதலால், தொல்காப்பியம், நன்னூல் போன்ற
புத்தகங்களை வாசித்து இலக்கண விதிகளை அறிந்து பிழையற மாணவர்களுக்குக் கற்பித்தல்
வேண்டும். மேலும், இவ்விலக்கணங்களை மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்க விளையாட்டு
முறையே சிறந்தது. அச்செயல்கலின் மூலம் வேறொரு குறிக்கோளை அடைவதற்காகவன்று,
விளையாட்டுச் செயல்களில் மாணவர் தம்மையும் மறந்து ஈடுபடுகின்றனர். இச்செயலில்
அவர்களுக்குத் தீவிரக்கவர்ச்சியும், கவனமும் தாமாகவே எழுகின்றன. மாணவர்களின்
விளையாட்டுகளில் உடற்செயல்கள் மட்டுமின்றி கற்பனை போன்ற உளச் செயல்களும் இடம்
பெறுகின்றன. இவ்வாறு மொழி விளையாட்டுகளை நாம் மாணவர்களுக்கு வழிநடத்தும் போது
தாமாகவே மாணவர்கள் பிழைகளைத் தவிர்க்க வழிகளைத் தேடிக் கொள்கின்றனர்.

நான்காவதாக, ‘அது’, ‘அஃது’, ‘இது’, ‘இஃது’ எனும் சுட்டுப்பெயர்களில் இலக்கண


பிழைகளைப் பரவலாகக் காண முடிகிறது. அது - அஃது, இது - இஃது பயன்படுத்த வேண்டிய
முறை, வருமொழியின் முதல் எழுத்து, உயிர்மெய் எழுத்தாயின் அது, இது என்னும்
சுட்டுப்பெயரையும் உயிரெழுத்தாக இருப்பின் அஃது, இஃது என்னும் சுட்டுப்பெயரையும் பயன்படுத்த
வேண்டும். அவ்விதிகளை அறியாமல் தவறு இழைக்கின்றனர்.

எடுத்துக்காட்டு;

1) அஃது கன்று (தவறான வாக்கியம்)


அது கன்று (சரியான வாக்கியம்)
2) அது ஒரு புள்ளி (தவறான வாக்கியம்)
அஃது ஒரு புள்ளி (சரியான வாக்கியம்)

இப்பிழைகளைத் தவிர்க்க அதிக வாசிப்பு பயிற்சி மேற்கொண்டு, இலக்கண விதிகளை


அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு தேவையான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினால்,
இப்பிரச்சணையைக் களையலாம். இவை குறித்து தொல்காப்பியத்திலும் கூறப்படுவது
என்னவென்றால்;

‘முன்னுயிர் வருமிடத்து ஆய்தப்புள்ளி

மன்னல் வேண்டும் அல்வழி யான’ 424


இறுதியாக, எழுவாய், பயனிலைகளில் ஏற்படும் பிழைகளே ஆகும். ஒரு வாக்கியத்திற்கு
முக்கியமானது எழுவாய், பயனிலையே ஆகும். அவ்வாக்கியங்களில் எழுவாய், பெயர்ப்பயனிலை
பொருத்தமின்றி வருவதால் இலக்கண பிழை ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டு;

1) அவை பெரிய வீடு. (தவறான வாக்கியம்)


அவை பெரிய வீடுகள் (சரியான வாக்கியம்)
2) அவை பறவை. (தவறான வாக்கியம்)
அவை பறவைகள் (சரியான வாக்கியம்)

இப்பிழைகளைத் தவிர்க்க, பிழையற்ற நூல்களையும் இலக்கணங்களையும் வாசிக்க


மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு குறைந்தது இரு நூலேனும்
படிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். மாணவர்களுக்கு நூல்கள் படித்தலில் ஆர்வத்தை
உண்டாக்குவதற்கு நூலக பாட வேளையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறான
வாசிப்பு ஒரு மனிதனின் அறிவு திறத்தை மேலோங்கச் செய்யும். அவ்வாறு வாசிக்கும் போது,
மனதில் பசுமரத்தானி போல் பதிந்து, எழுதும்போது அமலுக்கு வந்துவிடும். அப்பழக்கம்
நாளடைவில் இலக்கண பிழைகளைத் தவிர்க்க உதவும்.
எனவே, இலக்கணப் பிழைகளைக் களைய ஒருவர் மட்டுமே முயற்சிக்காமல், அனைவரும்
தோள் கொடுத்தால் நம் செம்மையான மொழி என்றும் செழித்திருக்கும்.

கேள்வி 1.ஆ

ஒரு வாக்கியத்தில் எழுவாயும் பயனிலையும் இன்றியமையாத உறுப்புகள் ஆகும். எழுவாய்


என்பது வாக்கியம் உணர்த்தும் செயலுக்குக் காரணமான பொருளின் பெயரைக் குறிக்கும்.
வாக்கியம் எழுதுவதற்கு அப்பொருளே காரணமாய் அமைவதால்தான் அஃது எழுவாய்
எனப்படுகிறது. பயனிலை என்பது ஒரு வாக்கியம் உணர்த்தும் செயல் எந்தச் சொல்லில் நிறைவு
பெற்று விளங்குகிறதோ அந்தச் சொல்லைக் குறிக்கும். அது வினைமுற்றாகவோ,
பெயர்ச்சொல்லாகவோ அமைந்து வரும். பயனிலை, வினைமுற்றாயின் வினைப்பயனிலை எனவும்
பெயர்ச்சொல்லாயின் பெயர்ப்பயனிலை எனவும் அழைக்கப்பெறும்.
தமிழில் பொருள்களுக்கு வழங்கும் பெயர்களைத் தமிழ் இலக்கணிகள் முப்பெரும்
பிரிவுகளில் வகைப்படுத்தி அமைத்துள்ளனர். தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப்
பெயர் என்பனவே ஆகும். இவற்றுள் எந்தப் பெயர் வாக்கியத்தின் எழுவாயாக அமைகிறதோ
அதற்கேற்பப் பயனிலை அமைய வேண்டும். தன்மைப் பெயர் தன்மை வினைமுற்றையும்,
முன்னிலைப் பெயர் முன்னிலை வினைமுற்றையும், படர்க்கைப் பெயர் படர்க்கை வினைமுற்றையும்
பெறும். அவ்வாறு அமையும்போது திணை, பால், எண் ஆகியவற்றுக்கேற்பவும் வினைமுடிபு
அமைய வேண்டும். இவ்வாறு எழுவாய்க்கு ஏற்ப வாக்கியத்தின் பயனிலை அமைதலே இயைபு
எனக் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு இலக்கணங்களை அறியாது பலர் வாக்கியங்களில் இயைபுப்
பிழைகளைச் செய்கின்றனர்.

i. திணை இயைபுப் பிழைகள்

வாக்கியத்தில் உயர்திணைப் பெயர்களுக்கு அஃறிணை வினைமுடிபும், அஃறிணைப்


பெயர்களுக்கு உயர்திணை வினைமுடிபும் அமைந்து வருதல் திணை இயைபுப் பிழையுள்
அடங்கும்.

எடுத்துக்காட்டு;

1. என் அண்ணன் என்னைத் துரத்தியது.


2. காவலர்கள் வந்தது.
3. காவல் நிலையம் அவர்களைப் பாராட்டினார்கள்.
4. பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றன.

சரியான வாக்கியம்;

1. என் அண்ணன் என்னைத் துரத்தினார்.


2. காவலர்கள் வந்தனர்.
3. காவல் நிலையத்தினர் அவர்களைப் பாராட்டினார்கள்.
4. பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.

‘என் அண்ணன் என்னைத் துரத்தியது’, ‘காவலர்கள் வந்தது’ என்ற பிழைகள்


பேச்சுத் தமிழின் தாக்கத்தால் உண்டாகின்றன. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும்
இடையேயான வேறுபாட்டை உணராததே இப்பிழைக்குக் காரணமாகும். மேலும்,
தொழிற்பெயர், இடப்பெயர் முதலானவற்றுடன் சரியான விகுதி சேர்த்து உயர்திணைக்குரிய
பெயர்ச்சொல்லாக ஆக்குவதற்குத் தெரியாமையே பிழைகள் உண்டாவதற்குக் காரணம்.
‘காவல் நிலையம் அவர்களைப் பாராட்டினார்கள்’ என்பதில் பாராட்டுவது மனிதர்கள் மட்டுமே
செய்வது என்ற எண்ணம் உதித்திருக்கலாம். அதனாலே ‘ பாராட்டினார்கள்’ என்று
வினைமுடிவு தர கருதுகின்றனர். ஆனால், அதற்கு ஏற்ப ‘நிலையம்’ எனும் சொல்லுக்கு
எவ்வாறு உயர்தினை வடிவம் தர இயலும் என்பது தெரியவில்லை. அதனால்தான் ‘காவல்
நிலையத்தினர்’ என எழுதத் தெரியாது ‘காவல் நிலஇயம்’ என்று எழுதுகின்றனர்.

ii. பால் இயைபுப் பிழைகள்


பால் ஐவகைப்படும். ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
என்பனவே ஆகும். இவற்றுள் முதல் மூன்றும் உயர்திணைக்குரியன; ஏனைய இரண்டும்
அஃறிணைக்கு உரியன. இவற்றுள் பலர் செய்யும் பிழைகள் பலவும் ஆண்பால்,
பெண்பாலைத் தழுவியே நேர்கின்றன.

எடுத்துக்காட்டு;
1. தாயார் கத்தினான்.
2. அவன் கதவைத் திறந்தார்.
3. ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தான்.
4. வீட்டுக்காரர் பயமுறுத்தினான்.

சரியான வாக்கியம்;
1. தாயார் கத்தினார்.
2. அவன் கதவைத் திறந்தான்.
3. ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
4. வீட்டுக்காரர் பயமுறுத்தினார்.

இவ்வகைப் பிழைகள் நேர்வதற்குக் கவனக்குறைவும் ஆண்பால், பெண்பால்


ஒருமைப் பெயர்கள் மரியாதையைக் குறிக்கும்போது ஒரு விதமாகவும், அவ்வாறு
மரியாதை சூட்டாதபோது இன்னொரு விதமாகவும் வினைமுடிவு கொள்வதைச் சரியாகப்
புரிந்து கொள்ளாத நிலையுமே முக்கியக் காரணம்.

iii. இட இயைபுப் பிழைகள்


வாக்கியத்தில் இட இயைபானது தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்களுக்கு ஏற்ப
வினைமுற்றுகளை அமைத்து எழுவதாகும். ஆங்கிலத்தில் மூவிடப் பெயர்களுக்கு ஏற்ப
அவற்றின் பயனிலைகள் மாறி அமைவதில்லை. யாவும் ஒரே மாதிரியான பயனிலைகளையே
பெறும். ஒருமை, பன்மை பெயர்களுக்கான நிகழ்காலம் காட்டும் பயனிலைகளில் மட்டும்
மாற்றம் இருக்கும். அதுவும் ஒரேயொரு மாற்றமே. ஒருமைப் பயனிலையில் வினையின்
ஈற்றில் ‘s’ ஒட்டு இருக்கும். பன்மை பயனிலை ஈற்றில் ‘s’ ஒட்டு இராது. ஆங்கிலமே
அதிகம் பேசுகின்ற சூழலில் வளர்கின்றவர்களுக்கு தமிழில் இட இயைபு சிக்கலைத்
தோற்றுவிக்கிறது. அந்தச் சிக்கலால் ஏற்படும் குழப்பத்தாலேயே இவ்வகைப் பிழைகள்
தோன்றுகின்றன எனலாம்.

எடுத்துக்காட்டு;
1. திருடன் நகைகளைத் தரும்படி கேட்டேன்.
2. பிறகு திருடன் வீட்டின் உள்ளே சென்று கதவை மூடினேன்.
3. “அம்மாவைக் கொன்று விடுவான்,” என்று சொன்னான்.

இவை முறையே பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும்:

1. திருடன் நகைகளைத் தரும்படி கேட்டான்.


2. பிறகு திருடன் வீட்டின் உள்ளே சென்று கதவை மூடினான்.
3. “உங்களைக் கொன்று விடுவேன்,” என்று அம்மாவிடம் சொன்னான்.

முதலிரு வாக்கியங்களிலும் படர்க்கைப் பெயருக்குத் தன்மைப் பயனிலை வந்து இயைபு


கெட அமைந்துள்ளது. ஆனால், மூன்றாவது வாக்கியத்தில் ஏற்பட்டுள்ள பிழை சிறிது
கடினமான வகையைச் சார்ந்தது. நேர்க்கூற்று வாக்கியங்களை எழுதுவதை ஒட்டியது
இவ்வகைப் பிழை. இவ்வகை வாக்கியங்களை எழுதுவதில் போதுமான பயிற்சி
இல்லாமையாலேயே இத்தகைய பிழை உண்டாகிறது.
iv. எண் இயைபுப் பிழைகள்
பன்மை எழுவாய்க்கு ஒருமையிலும், ஒருமை எழுவாய்க்குப் பன்மையிலும் பயனிலை
அமைத்து எழுதுதல் இவ்வகைப் பிழையுள் அடங்கும்.

எடுத்துக்காட்டு;
பன்மை எழுவாய்-ஒருமை பயனிலை
1. இரு அண்டை வீட்டுக்காரர் ஒரு பக்கமாக வந்து அவளைத் துரத்திப் பிடித்தார்.
2. காவல் துறையினர் எல்லா விபரத்தையும் கேட்டார்.
3. காவலர்கள் திருடனைக் கைது செய்தார்.
4. திருமதி லிம்மின் பணமும் நகையும் அவரிடமே சேர்ந்தது.

ஒருமை எழுவாய்-பன்மைப் பயனிலை


1. அவர் திருடனைப் பிடிக்க ஓடினார்கள்.
2. அவர்களில் ஒருவர் காவல் காடியினுள் அனுப்பினர்.
3. திருமதி லிம் வேறுவழியின்றி ஆபரணங்களைத் திருடனிடம் கொடுத்தனர்.

தற்கால நடைமுறைத் தமிழில் ‘அவர்’, ‘இவர்’ முதலான சொற்கள் ஒருமையையே


குறிக்கும். ஆனால், ‘காவலர்’, ‘திருடர்’ முதலான சொற்கள் ஒருமையாகவும்
பன்மையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ‘அவர்’ முதலான சொற்கள் ‘வந்தார்’,
‘பிடித்தார்’ என்று ‘ ஆர்’ விகுதி ஈற்று வினைமுற்றுகளைப் பெற்று வரும். ஆனால்,
இரண்டாவது வகையிலான சொற்கள் பன்மை நிலையில் வரும்போது ‘ வந்தனர்’,
‘பிடித்தனர்’ முதலான ‘அர்’ ஈற்று வினைமுற்றுகளையே பெற்று வரும். சிலர் ‘வந்தார்கள்’,
‘பிடித்தார்கள்’ என்றும் ‘ஆர்’ எனும் விகுதியுடன் ‘கள்’ விகுதியும் சேர்த்து எழுதுவதுண்டு.

    
கேள்வி 2.அ

ஒருவர் தம் உள்ளக் கருத்துகளை வெளியிடும் வாயில்களாக அமைவன அவரின் பேச்சும்


எழுத்தும் ஆகும். இவற்றுள் எழுதுதல் என்பது தனித்திறன். அவ்வெழுத்து கதையாகவோ,
கட்டுரையாகவோ வெளிப்படலாம். கட்டுரை என்பது கட்டு+உரை என்ற இரு சொற்களின் கூட்டு
ஆகும். இதன் பொருள் சொல்ல விழையும் கருத்துகளைக் குறிப்பிட்ட சொற்களுக்குள் ஈர்க்கும்
முறையில் கட்டுக்கோப்பாக உரைத்தலாகும். இக்கட்டுரை பல வகைப்படும். அவை தர்க்கக்
கட்டுரை, செய்திக் கட்டுரை, விபரணக் கட்டுரை, பகுத்தாய்வுக் கட்டுரை, செயல்முறை
விளக்கக் கட்டுரை, ஒத்தன்மை விளக்கக் கட்டுரை, வகைப்படுத்துதல் கட்டுரை, எடுத்துரைத்தல்
கட்டுரை, புனைவுக் கட்டுரை மற்றும் ஒப்பட
ீ ்டுக் கட்டுரை ஆகும். ஒவ்வொரு கட்டுரை வகையும்
தன்னளவில் சில இயல்புகளைக் கொண்டுள்ளது.

ஒப்பீட்டுக் கட்டுரை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கிடையிலான


ஒற்றுமைகளையோ வேற்றுமைகளையோ ஒப்பிட்டு எழுதும் கட்டுரையாகும். வெவ்வேறு
மனிதர்களையோ, கொள்கைகளையோ, இடங்களையோ, தன்மைகளையோ அல்லது வேறு
கூறுகள் பற்றியோ அமைந்திருக்கும். ஒரு சார்நிலையிலேயோ சார்பில் நடுநிலையிலேயோ
இருக்கலாம். இம்முறையிலான கட்டுரையில் ஒற்றுமையினைப் பற்றியோ வேற்றுமைகளை
மையமாக வைத்தோ கூட கட்டுரை அமையலாம்.

ஓர் ஒப்பீடடு
் அல்லது மாறுபட்ட கட்டுரையை எழுதும்போது எழுத்தாளர் தனது
நோக்கத்தைத் தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளர் அவசியம் பார்வையாளர்களைக் கருத்தில்
கொள்ள வேண்டும். ஒப்பீட்டின் அடிப்படையையும் புள்ளிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களின் ஆய்வறிக்கையை முன் நிறுத்த வேண்டும். ஒப்பீட்டின் வழி அபிவிருத்தி செய்து ஒரு
முடிவை எட்ட வேண்டும். ஒப்பீடு மற்றும் மாறுபாடு உறுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எழுத்தில் ஒப்படு
ீ ஒத்த கூறுகளைப் பற்றி விவாதிக்கிறது. அதே நேரத்தில் எழுத்தில்
மாறுபாடு வேறுபட்ட கூறுகளைப் பற்றி விவாதிக்கிறது. ஒரு ஒப்பீட்டு மற்றும் மாறுபட்ட கட்டுரை
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கூறுகளை பகுப்பாய்வு செய்கிறது. அக்கூற்றில் உள்ள
ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை குன்றின் மேல் இட்ட விளக்கு போல் தெரியப்படுத்தும்.

ஒரு நல்ல ஒப்பீட்டு மற்றும் மாறுபட்ட கட்டுரையின் திறவுகோல் ஒரு அர்த்தமுள்ள வழியில்
இணைக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளை தேர்ந்தெடுப்பதாகும். ஒப்பீடு அல்லது
மாறுபாட்டை நடத்துவதன் நோக்கம் வெளிப்படையானதைக் குறிப்பது அல்ல, மாறாக நுட்பமான
வேறுபாடுகள் அல்லது எதிர்பாராத ஒற்றுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும்.
எடுத்துக்காட்டாக, இரண்டு இடங்களை முரண்படுவதில் கவனம் செலுத்த விரும்பினால் நுட்பமான
வேறுபாடுகளை முன்னிலைப்படுத்த வெவ்வேறு வகையான இடங்களை தேர்ந்தெடுக்காமல் ஒரே
வகையான இரண்டு இடங்களை ஒப்பட
ீ ்டு பார்ப்பதாகும். ஒத்த வகையிலான கூறுகளுக்கு
இடையில் வேறுபாடுகளை வரைவது அந்த வகையைப் பற்றி பார்வையாளர்களின் புரிதலை
அதிகரிக்கும். இது ஒப்பீடு மற்றும் மாறுபட்ட கட்டுரையின் நோக்கமாகும். எடுத்துக்காட்டு,
லங்காவி தீவு மற்றும் பங்கோர் தீவு என்பது ஒரே கூறாகும். லங்காவி தீவு மலேசிய நாடு என்பது
வெவ்வேறு வகையைச் சார்ந்ததாகும். எனவே, இதன் வழி நுட்பமான ஒற்றுமை வேற்றுமைகளை
கூற இயலாது.

ஒப்பிடுவதும் மாறுபடுவதும் ஒரு மதிப்பட


ீ ்டு கருவியாகும். கொடுக்கப்பட்ட தலைப்பைப் பற்றி
துல்லியமான மதிப்பீடுகளைச் செய்ய எழுத்தாளர் முதலில் ஒற்றுமை மற்றும் வேறுபாட்டின்
முக்கியமான புள்ளிகளை அறிந்து கொள்ள வேண்டும். ஒப்பிடுவதும் மாறுபடுவதும் பல பணியிட
மதிப்பீடுகளுக்கான முதன்மை கருவியாகும். ஊழியர்களை ஒப்பிட்டுப் பணியாளர்
முன்னேற்றங்கள், ஊதிய உயர்வு, பணியமர்த்தல் மற்றும் பணிநீக்கம் ஆகியவை
நடத்தப்படுகின்றன. நிறுவனங்கள், துறைகள் அல்லது தனிநபர்களை மதிப்பீடு செய்ய ஒப்பீடு
மற்றும் மாறுபாடு முறையை பயன்படுத்தலாம். இம்முறையைக் கொண்டு எழுதப்படும்
கட்டுரையானது ஒப்பீட்டு கட்டுரையை மிக அழகாக அமைத்துக் கொடுக்கும்.
ஒப்பீட்டுக் கட்டுரையை எழுதும் முன் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட போகிறோமா, மாறாக
ஒத்த கூறுகளுக்கு மாறாக அல்லது ஒப்பிட்டு மற்றும் மாறுபட்ட கூறுகளை ஒப்பிட போகிறோமா
என்பதனை முடிவு செய்து தலைப்பை நிர்ணயித்தல் அவசியம். பின் பார்வையாளரை ஈர்க்கும்
வகையில் முன்னுரையை எழுத வேண்டும்.

கட்டுரையின் உடல் பொருள் அல்லது தனிப்பட்ட புள்ளிகள் ஆகிய இரண்டு வழிகளில்


ஒன்றில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஒழுங்கமைக்கும் உத்தியானது எழுத்தாளரின்
நோக்கத்தையையும் பார்வையாளரையும் பொருத்தே அமைய வேண்டும். கூறுகளின் தன்மைகளை
அடிப்படையாகக் கொண்டு அணுகுமுறை இருக்க வேண்டும். சில கூறுகள் ஒரு கட்டமைப்பிற்கு
அல்லது மற்றொன்றுக்கு தங்களைக் கடனாக கொடுக்கக்கூடும். கூறுகளுக்கிடையிலான உறவை
எழுத்தாளர் பகுப்பாய்வு செய்யும் வழிகளில் வாசகரைக் குறிக்க ஒப்பீடு மற்றும் மாறுபட்ட
சொற்றொடர்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்தல் மிக அவசியம். எழுத்தாளர் கூறுகளை
பகுபாய்வு செய்து முடித்த பிறகு, கட்டுரையின் முக்கிய புள்ளிகளைச் சுருக்கமாகக் கொண்டு
ஆய்வறிக்கையை வலுப்படுத்தும் ஒரு முடிவை எழுத வேண்டும்.

ஒப்பீட்டுக் கட்டுரை ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்கக் கூடிய ஆற்றல் உடையது. இதன்


வழி அரிய மற்றும் சீரிய சிந்தனைகளை வாசிப்பாளர்களின் மனதில் புகுத்த முடியும்.
இவ்வொப்பீட்டுக் கட்டுரையை வாசிக்கும் போதே வாசிப்பாளர்களாலேயே சிறந்த முடிவை எடுக்க
இயலும்.

கேள்வி 2.ஆ

பயிராலே நிலம் அறிமுகமாவது போலவும் நிழலாலே உருவம் அறிமுகமாவது போலவும்


மொழியினாலே ஓர் இனம் உலகிற்கு அறிமுகமாகிறது என்பது வெள்ளிடை மலை. அம்மொழியோ
தன்மாட்டு மலர்ந்து மணம் வீசும் இலக்கியங்களாலேயே சுடர் விட்டெரியும். அவ்விலக்கியங்களே ஓர்
இனத்தின் நயத்தகு நாகரீகத்தினையும், வியக்கத்தகு சிந்தனைகளையும் முரசறைந்து
முழங்குவனவாகும். சீர்தத
் இலக்கியங்கள் ஒரு நாட்டின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் செய்யும்
தொண்டினை யாரும் துல்லியமாக கூறாமல் இருக்கலாம். ஆனால், இலக்கியத்தின் செல்வாக்கு
சமூகத்தை நகர்த்திச் செல்லும் காலத்தின் மீது படியும் முத்திரைகளை நுனித்து நோக்குவோர்க்குப்
புலனாகாமல் போவதில்லை.
மக்களின் பல்வேறு உணர்வு நிலைகளும் செயல்களும் பெருகிய எழுத்துப் பதிப்பே
இலக்கியம். இலக்கியம் மரபுகளை ஒட்டி நிலைத்திருக்கும் ஒரு கலையாகும். எண்ணற்ற
இலக்கியங்களும் போதுமான அளவு இலக்கணங்களும் தமிழ்மொழியில் உள்ளன. இலக்கியம்
கலைகளின் அரசி. நெஞ்சை அள்ளும் உவகையும் நெடுபயனாய உயர்வையும் தரவல்லது
இலக்கியம். இலக்கியம் ஒரு சமுதாய ஆவணமாக விளங்கும் பெருஞ்சிறப்பைக் கொண்டது.

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின்


சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள்
இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபு ரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை தமிழ் இலக்கியங்கள். இலக்கியத்தை காலத்தின்
அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம். அவை சங்க கால இலக்கியம், இடைக்கால
இலக்கியம் மற்றும் இக்கால இலக்கியம் என மு. வரதராசன் கூறியுள்ளார். இன்று தமிழ் மொழியில்
பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் பரந்து விரிந்து செல்கின்றது.

இவ்வரிசையில் மலேசியத் தமிழ் இலக்கியமோ ஏறக்குறைய 133 ஆண்டுகளுக்கும்


மேலான பழமை வாய்ந்ததாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செவிலித்தாய்களாக
விளங்கியவை பத்திரிக்கைகளாகும். இது போல் பல வாரியங்களும் அமைப்புகளும்,
இயக்கங்களும், நிலையங்களும், சங்கங்களும் மற்றும் துறைகளும் மலேசியாவில் தமிழ்
இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருப்பினும் இங்கு தமிழ் இலக்கியம் தொய்வு
கண்டு வருகிறது என்பது மறுபடத்தக்கது.

மலேசியாவில் தமிழ்க்கல்விக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் தொய்வு நிலை ஏற்பட்டு


வருவது யாவரும் அறிந்ததே. மலேசிய கல்வி சான்றிதழ் தேர்வில் மாணவர்கள் பத்துப் பாடங்கள்
மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்படும் என்ற முடிவு மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முடிவாகவே அமைந்துள்ளது. மாணவர்கள் தேர்வெழுத
அனுமதிக்கப்பட்டாலும் அதன் முடிவுகள் தனிச் சான்றிதழில் வழங்கப்படுவதனால் மாணவர்கள்
பெறுகின்ற மொத்த மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் அப்புள்ளிகள் சேர்க்கப்பட மாட்டாது.
எனவே, மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதை தவிர்த்து விடுவர் என்பது
உறுதி. பல பள்ளிகளில் அதன் நிர்வாகம் மாணவர்களைத் தமிழ் இலக்கிய பாடத்தை எடுப்பதற்கும்
அனுமதிப்பதில்லை. கால ஓட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கும் இந்நிலை வரலாம்.
அரசாங்கத்தின் திட்டம் ஒரு புறம் இருக்க நம் மலேசியத் திருநாட்டில் நம் சமுதாயத்தில்
எத்தனை பேர் தமிழ் இலக்கிய நூல்களை வாசிக்கிறோம் என்பதனை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அதிலும் தற்போதைய இளைய தலைமுறையினருக்குப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமே
இல்லாமல் போய் விட்டது எனலாம். மாணவர்களிடையே ஓரளவு வாசிக்கும் பழக்கம் உண்டு.
அதுவும் அறிவை பெருக்கிக் கொள்வதற்காக என்பது மிக சிலரிடையே உண்டு. பெரும்பாலோர்
தேர்வுக்காகவும் ஆய்வு கட்டுரைகளுக்காகவும் மட்டுமே வாசிக்கின்றனர். ஏணையோர் முகநூல்,
புலனம், வலையொளி மற்றும் சில தொடர்பு சாதனங்கள் வழி பெறும் தவல்களே அறிவு என
கருதுகின்றனர். இப்படி இருக்கையில் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சமுதாயம் நாளடைவில்
இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும் என்பது திண்ணம்.

தமிழ் இலக்கியம் என்பது அள்ளி அள்ளி பருக இனித்திடும் அமிர்தமாகவும் திண்ண


திண்ண திகட்டாத தேனாகவும் இருப்பது தமிழ் வாசிக்கத் தெரியாத மற்றும் தமிழ் பள்ளிக் கூடம்
செல்லாத பேதைகள் அறிய முடியாத ஒன்று. தமிழின் சிறப்பை அறியாத இவர்கள் தங்களது
தலைமுறையையே தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தமிழ்மணம் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களும் தமிழ் இலக்கியத்தின் தொய்விற்கு வித்திடுகின்றனர் என்றால் அது
மிகையாகாது.

தமிழனாக பிறந்து தமிழ் பேசவே வெட்கம் கொண்டு பிற மொழியில் பெருமையுடன் பேசி
சுற்றி வரும் மலேசிய தமிழர்களையும் நாம் தினமும் காண்கிறோம். ஆங்கில மொழியில் பேசுவதே
பெருமை என எண்ணி தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியையே அடிப்படை மொழியாக
கற்றுத் தருவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை தட்டிக் கேட்டால் “தமிழ்
சோறு போடுமா” என்ற மூர்க்க கேள்வியை முன் வைப்பர். தமிழ் சோறு போடும் என்று சாட்டை
அடித்து கூறினாலும் உண்மையை ஏற்காமல் நழுவிச் செல்லும் கூட்டம் இருக்க தமிழ் இலக்கியம்
தொய்வு அடைவதில் ஒன்றும் வியப்பில்லை என்றே தோன்றுகிறது.

தமிழ் இலக்கியத்தை வாழ வைக்க வேண்டிய எத்தனை தமிழர்கள் நல்ல தமிழில்


பேசுகின்றனர்? பெரும்பாலானோர் வழக்குத் தமிழிலோ அல்லது ஆங்கிலம் மற்றும் தேசிய மொழி
கலந்த தமிழிலோ மட்டுமே பேசுகின்றனர். இப்படி பட்டவர்கள் இலக்கிய தமிழை பேச்சிலோ அல்லது
வாசிப்பிலோ விரும்புவதில்லை. அப்படியே விரும்பினாலும் புரியாத காரணத்தினால் தொடர்ந்து
வாசிப்பதில்லை.
ஒரு மொழி வளரவோ அதன் இலக்கியம் வளரவோ படைப்பாற்றல் அத்தியாவசியமாகின்றது.
தமிழ் மொழியையே விரும்பி கற்காத நம் மக்கள் எவ்வாறு தமிழ் இலக்கிய படைப்புகளை
உருவாக்குவர் என்பதே மிகப் பெரிய கேள்வி. அப்படியே சில இலக்கியவாதிகள் படைத்தாலும் அந்த
புத்தகங்களை வாங்கி ஆதரவு வழங்குவோரின் எண்ணிக்கையும், விரும்பி படித்து பாராட்டுவோரின்
எண்ணிக்கையும் மிக குறைவு. எனவே, இலக்கிய படைப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து
கொண்டே வருவது இயல்பாகி வருகிறது.

எனவே, மலேசிய மண்ணில் தமிழ் இலக்கியத்தை மீண்டும் தழைத்தோங்கச் செய்ய


தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை அவசியம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். தமிழில்
பேசுவதை பெருமையாக எண்ண வேண்டும். தமிழ் நாளிதழ்கள், சஞ்சிகைகள் மற்றும் நூல்களை
அவசியம் வாங்கி வாசிக்க வேண்டும். நம் பிள்ளைகள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப்
பாடங்களை கட்டாயமாக எடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். தமிழ் மொழி இலக்கியங்களை
வாசித்து வாழ்வைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டிலுள்ள ஊடகங்கள் சிறந்த
வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும். ‘டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா’ (DBP) மொழி நிற்வனம்
தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தால் இலக்கியம் வளர்ச்சிப் பெறும்.

(2541 சொற்கள்)
மேற்கோள் நூல் பட்டியல்

1. சீனி நைனா முகம்மது, செ. (2014). நல்ல தமிழ் இலக்கணம். பினாங்கு: உங்கள் குரல்
எண்டர்பிரைஸ்
2. பேராசிரியர் கணபதி, வி. (2011). நற்றமிழ் கற்பிக்கும் முறைகள். சென்னை: இராயப்பேட்டை,
சாந்தா பப்ளிஷர்ஸ்
3. டாக்டர் சுப்புரெட்டியார், ந. (2010). தமிழ் பயிற்றும் முறை. சென்னை: மணிவாசகர் ஆப்செட்
பிரிண்டர்ஸ்
4. பேராசிரியர் பரந்தாமனார், அ.கி. (1998). நல்ல தமிழ் எழுத வேண்டுமா?. சென்னை:
கொடிமரத் தெரு, பாரி ஆப்செட் பிரிண்டஸ்
5. முத்தையா, சி. (1990). நல்ல தமிழ் கற்பித்தல் அணுகுமுறைகள். பாடத்திட்ட வரைபிரிவு
கல்வி அமைச்சு, சிங்கப்பூர்
6. http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512442.htm

You might also like