You are on page 1of 11

HBTL4303

TAKE HOME EXAMINATION

SEPTEMBER / 2020

HBTL 4303

LINGUISTIK BAHASA TAMIL

NO. MATRIKULASI : 890206075428001

NO. KAD PENGNEALAN : 890206075428


HBTL4303

பிரிவு A

கேள்வி 1 (அ)

இன்று அறிவியலுக்கும், கலைக்கும் உள்ள வேறுபாடுகள் வேகமாக மறைந்து


வருகின்றன. கலைத்துறைகளெல்லாம் ஆராய்ச்சிக்கு அறிவியல் முறைகளைக் கையாண்டு
வருகின்றன. இவற்றில் அறிவியல் போக்கை மிகுதியாகக் கையாண்டு ஆராயும்
முறைகளைச் செம்மைப்படுத்திய கலைத்துறையே மொழியியல் ஆகும். மொழியியல் என்பது
ஒரு மொழியை முறைபட ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியியலில் சில
அடிப்படைகள் அல்லது உட்பிரிவுகள் கொண்டதாகும்.

முதலாவதாக, ஒலியனியல் ஆகும். அதற்கு முன்பதாக ஒலியியல் என்பது


பேச்சொலிகளை ஒலித்தல், கடத்தல் மற்றும் பெறுதல் என்பனவற்றை ஆய்வது
ஒலியியலாகும். ஒலியனியல் என்பது பேச்சொலிகளின் அலகுகளை அசைகளாகவும் பிற
பெரிய அலகுகளாகவும் ஒழங்குபடுத்துவதை ஆய்வது ஒலியனியலாகும். ஒரு மொழியின்
ஒலியனியல் அம்மொழியில் நிகழும் ஒலிகளின் ஒழுங்குமுறைகள் மற்றும்
அமைப்பொழுங்குதல் இவற்றின் வர்ணனையாகும். இத்துறைகள் அவற்றின்
தனிச்சிறப்பிற்கேற்ப பிற்பொலியியல், பௌதீக ஒலியியல், கேட்பொலியியல் என மூவகைத்
துறைகளாக விரிவாக்கம் கண்டுள்ளன.

ஒலியனியல் பேச்சொலிகளின் அமைப்பு முறையினைப் பற்றிப் பேசும் பிரிவாகும்.


ஒரு மொழியில் காணப்படும் மிகச் சிறிய பொருள் பொதிந்த ஒலிகளையே ஒலியன்கள்
என்கிறோம். இவை மீண்டும் மீண்டும் சிறு மாற்றல் அல்லது எவ்வித மாற்றமும் அமையப்
பெற்று உருவாக்கப்படலாம். இவ்வாறு ஒரு மொழியில் காணப்படும் மிகச் சிறிய பொருள்
மாற்றத்தினை ஏற்படுத்திக் கொடுக்கவல்ல ஒலிகளின் இயல்புகளை ஆராயும் துறையாகும்.
ஒலியன்கள் எவ்வாறான வரிசைக் கிரமத்தில் வந்து உருபன்களாகவோ சொற்களாகவோ
உருவாக்கம் பெறுகின்றன என்பதை ஒலியனியல் விவரிக்கின்றது.

தொடர்ந்து, உருபனியல் மொழியியலில் உட்பிரிவுகளில் ஒன்றாகும். சொற்களை


ஆய்வது உருபனியலாகும். ஒரு மொழியில் காணப்படும் பொருள் வழங்கவல்ல மிகச்
சிறிய எழுத்துக் கூட்டம் உருபன். சில உருபன்கள் தனித்த நிலையில் தமது பொருளை
வழங்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இன்னும் சில அவ்வாறு அமையாது. பிற
உருபன்களோடு இணைந்து மட்டுமே தமது பொருளினை வெளிப்படுத்தும் தன்மையினைப்
பெற்றிருக்கின்றன. முன்னது தனிநிலை உருபன் என்னும் பின்னது சார்புருபன் என்றும்
HBTL4303

அழைக்கப்படுகின்றன. இவ்வாறு சொல்லிருவாக்கத்தில் ஈடுபடும் உருபன்களின்


தன்மைகளையும் அவற்றின் அமைப்பு முறையினையும் பற்றி ஆராயும் வழிவகைகளை
வழங்கும் துறையாக உருபனியல் விளங்குகிறது.

அடுத்ததாக தொடரியல் ஆகும். ஒலிகள் அசையாகி, அசைகள் உருபன்களாகி,


அவற்றின் தொடர்ச்சியால் எவ்வாறு தொடர்களும் வாக்கியங்களும் உருவாகின்றன
என்பதனைப் பற்றிய இச்சிந்தனையை வழங்கும் துறையே தொடரியல் ஆகும்.
கோட்பாட்டியல் ஆய்வினில் மிக முக்கியமான இடத்தை இத்துறை பெற்றுள்ளது.
தொடரியல் ஆய்வானது உலக மொழிகள் அனைத்திலும் காணப்படும்
தொடரமைப்புகளும், வாக்கிய அமைப்புகளும் உருவாக்கப்படும் விதிகளும் எவ்வாறு
ஒன்றுபட்டும் மாறுபட்டும் செயல்படுகின்றன என்பதை ஆராய்வதாகும்.

இறுதியாக, பொருண்மையியல் மொழிலியலின் அடுத்த உட்பிரிவாகும். எல்லா


மொழிகளும் பொருள் உணர்த்தும் சொற்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. மொழியில்
காணப்படும் சொற்கள் வெளிப்படுத்தும் பொருண்மை மாறுபட்டு இருந்தாலும் அவை
குறிப்பிட்ட முறைகளிலே மாறுபடுகின்றன என்பதை விளக்கிக் காட்டும் துறையாகும்.
சொற்களும் அவை குறிக்கும் பொருளும் அடிப்படையில் ஒரு காரணத்தின்
அடிப்படையிலோ காரணமில்லாமலோ உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை
பயன்படுத்தப்படும் சூழல், அதனை வழங்கும் மக்களின் கலாச்சாரம், அவர்களது வாழ்வியல்
மரபு, தொடரியல் இயல்புக்கு ஏற்ப மாறுப்பட்டுக்கொண்டே போகும். இவ்வாறு மாறுபாடும்
அடையும் சொற்களையும் அவற்றின் இயல்புகளையும் முறையாக அடையாளம் கண்டு
அச்சொற்களுக்கும் அவை குறிக்கும் பொருள்களுக்கும் உள்ள தொடர்புகளின் காரணிகள்
யாவை என்பதனை அடையாளம் காட்டும் பிரிவாகும்.

கேள்வி 1 (ஆ)

ஒலியியல் என்பது பேச்சொலியை ஆராயும் ஓர் அறிவியல் துறையாகும். ‘இன்ன


ஒலியுறுப்பு இன்ன முறையில் இயங்குவதால் இன்ன ஒலி பிறக்கிறது’ என்று விளக்குவது
ஒலியியலாகும். ஒவ்வொரு மொழியையும் பேசும் பொழுது பற்பல ஒலிகள் தோன்றுகின்றன.
எல்லா மொழிகளும் பேச்சொலிகளைப் பயன்படுத்துகின்றன. அப்பேச்சொலிகளை
அறிவியல் முறைப்படி ஆராய்வதையே ஒலியியல் என்கிறோம். ஒலியை ஆராயும்
முறையில் மூன்று முறைகள் முக்கியமாகக் கருதப்படுகிறது.
HBTL4303

முதலாவதாக பௌதிக ஒலியியல் ஆகும். இதில் பேச்சொலியின் பௌதிகத்


தன்மையை ஆராய்கின்றனர். ஒலியுறுப்புகளின் அசைவுகளால் அங்குள்ள காற்றணுக்களில்
உண்டாகும் அதிர்ச்சி அதனால் ஆகாயத்தில் உள்ள காற்றில் உண்டாகும் அதிர்ச்சி
ஆகியவற்றை ஆராய்கின்றனர். ஒலிஅலைகளாக வரும் இவற்றை அளந்து கணக்கிடலாம்.
இவற்றை அளந்து அறிய பலவிதமான அறிவியல் கருவிகளையும் கணிதத்தையும்
பயன்படுத்துகின்றனர்.

அடுத்ததாக கேட்பொலியியல் ஆகும். இது மனிதனுடைய கேட்கும் தன்மையை


அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆராய்வது ஆகும். இது அவரவர் தன்மைக்கேற்ப
மாறும். இயல்புடைமையால் இது ஒலி ஆராய்ச்சிக்குப் பொருந்துவதன்று.

இறுதி முறையானது உச்சரிப்பொலியியல் ஆகும். இது மனிதனுடைய


உடலுறுப்புகளைச் சிறப்பாக ஒலியுறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒலியின்
பிறப்பை ஆராயும். இவ்வுறுப்புகளும், அவற்றின் அசைவுகளும் மனித இனத்திற்குப்
பெரும்பாலும் ஒன்றுபோல் இருப்பதால் இவ்வுறுப்புகளின் அசைவுகளின் அடிப்படையில்
ஒலியை ஆராய்வது எளிய விஞ்ஞான அடிப்படையான முறையேயாகும். உதடு, நா
இவற்றின் அசைவுகளை அறிந்து கொள்வதற்கு அதிகமான பயிற்சிகள் ஒன்றும்
தேவையில்லை. இவ்வுறுப்புகளை இயக்கி ஒலிகளை உண்டாக்கி ஒலிகளை ஆராய்வதே
உச்சொரிப்பொலியியல் எனப்படுகிறது.

கேள்வி 2 (அ)

மயங்கொலியன் எனப்படுவது தமிழ் மொழியில் மயக்கத்தைத் தருகின்ற சில


எழுத்துகளான ர-ற, ல-ள-ழ, ண-ந போன்ற எழுத்துகளை உச்சரிப்பதாகும்.
HBTL4303

இவ்வெழுத்துகளின் ஒலிப்பு, இதுவோ அதுவோ என்ற மயக்கத்தைத் தருவனவாக


இருக்கும். ஆதலின் இவற்றை மயங்கொலிகள் என்று வழங்குவர். இத்தகைய எழுத்துகளின்
வேறுபாடு அறியாமல் செய்கின்ற பிழைகள் பலவாகும். அவற்றை நீக்க அந்த
எழுத்துகளுடைய சொற்களின் பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்வது மிகவும்
இன்றியமையாதது ஆகும்.

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தக்க ஒரே வடிவிலான


எழுத்துருக்கள் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள்
கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின்போது நுண்ணிய
வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க
வைப்பவைகளாக இருக்கும். அதலால்தான் இவை மயங்கொலிச் சொற்கள் ஆகும்.

மயங்கலொலிகள் இருவகைப்படும். ஒன்று சிறுபான்மை மயக்கம் மற்றொன்று


முற்றிய மயக்கம் ஆகும். (X) என்ற ஓர் ஒலி, ஒரு சூழ்நிலையில் /A/ என்ற ஒலியனாகவும்
மற்றொரு சூழ்நிலையில் /B/ என்ற ஒலியனாகவும் கருதப்படுமானால் இதனைச்
சிறுபான்மை மயங்கொலியன் எனப்படும். பொதுவாக ஆங்கிலத்தில் உயிர்கள் இடையே,
அழுத்தம் பெற்ற உயிர்கள் அடுத்து ஒலிப்புடை நுனியண்ண வருடொலி வருகிறது. இஃது
இவ்விடத்தில் ஒலிப்புடை நுனினா நுனியண்ண அடைபொலியோடும், ஒலிப்பிலா மூச்சுடை
அடைபொலியோடும், கட்டிலாது மாறி வருகிறது. இவ்வாறு நுண்ணிய மாற்றொலிகளால்
மயக்கம் ஏதும் ஏற்படுவதில்லை. இதனால்தான் சிறுபான்மை மயங்கொலியன் என்கிறோம்.

பேசும் தமிழில் ஏழு குற்றுயிர்களும், ஏழு நெட்டுயிர்களும் ஒலியன்களாக


வருகின்றன. இவற்றை ஏழு குற்றுயிர் ஒலியன்களாகவும், ஒரு நெடில் /:/ ஒலியனாகவும்
கருதலாம். இவ்வாறு கருதும்பொழுது /i/ என்பதற்கு /i/ என்பது மாற்றொலி ஆகும். /:/
என்பதற்கும் (i) ஒரு மாற்றொலி ஆகும். இவ்வாறே மற்ற நெட்டுயிர்களும் ஏற்படும்.
மெய்களிலும் உயிர்களிடையே வரும் /n nn/ என்பன போன்ற இடங்களில் /n n:/ என்று
கொண்டால், (n) /n/ என்பதற்கும், /:/ என்பதற்கும் மாற்றொலியாக அமைகிறது.

ஒரே வகையான சூழ்நிலையில் வரும் (X) என்ற ஒலி, ஒரு மொழுது /A/ என்ற
ஒலியனாகவும், மற்றொரு பொழுது /B/ என்ற ஒலியனாகவும் கருதப்படுமானால், அதனை
முற்றிய மயங்கொலியன் என்கிறோம். முற்றிய மயங்கொலியனில் சூழ்நிலையைக் காண
முடியாது. இது பெரும்பாலும் தவறான ஆராய்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற
சிக்கலாகும்.
HBTL4303

கேள்வி 2 (ஆ)

பிறமொழியைக் கற்கும்பொழுது, அம்மொழியைச் சரியாக உச்சரிப்பதில் மூன்று


வகையான இடர்பாடுகள் தோன்றுகின்றன. தன் மொழியில், இல்லாத ஒலியன்கள் பிற
மொழியில் இருப்பது ஒரு வகையாகும். தன் மொழியில் மாற்றொலிகளாக இருப்பவை,
பிறமொழியில் ஒலியன்களாக இருப்பது மற்றொரு வகை ஆகும். இரண்டு மொழியிலும்
அவ்வொலியன்கள் இருந்தாலும் அவை வருகின்ற முறையில் ஏற்படுகின்ற வேறுபாடுகள்
மூன்றாவது வகை இடர்பாடாகும்.

ஒலியனியலில் சில கொள்கைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. அவற்றுள்


முதலாவதாக, மிகைப்பட எழுதுதல் ஆகும். ஓர் ஒலியனுடைய மாற்றொலிகளுக்கெல்லாம்
தனித்தனி வரிவடிவங்கள் கொடுத்து எழுதுதல் மிகைபட எழுதுதல் ஆகும். இந்தியை
தாய்மொழியாக கொண்டவன், ஆங்கிலத்தை எழுதும்பொழுது, மூச்சுசை
அடைப்பொலியன்களாகச் சொற்களின் முதலில் உயிரின் முன்பு வருகின்ற
அடைப்பொலிகளை எழுதுவான். ஆனால், அஃது ஆங்கிலத்தில் மாற்றொலியாகும். ஒலியன்
அன்று.

தொடர்ந்து, குறைபட எழுதுதல் ஒலியனியலில் காணப்படும் அடுத்த கொள்கைச்


சிக்கலாகும். இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட ஒலியன்களுக்கு அவை ஒரே ஒலி
எனக்கருதி ஒரே வரிவடிவைக் கொடுத்து எழுதுதல் குறைபட எழுதுவதாகும். ஆங்கில
மொழியில் மூச்சடை அடைப்பொலியன்கள் ஒலியன்களாக இல்லை. ஆகையால், அவன்
இந்தி மொழியை ஒலி எழுத்துகளில் எழுதும்பொழுது, மூச்சுடை அடைபொலியன்களை
மூச்சிலா அடைப்பொலியன்களாகவே எழுதிவிடுகிறான்.

மேலும், தவறாகப் பிரித்தலும் ஒலியனியலில் ஏற்படும் கொள்கைச் சிக்கலாகும்.


மயங்கி வருகின்ற இரு வேறு ஒலியன்களுக்கு அவை ஒரே ஒலி எனக் கருதி ஒரே
வரிவடிவைக் கொடுத்து எழுதுதலும் ஓர் ஒலியினை மயங்கி வருகிற இரண்டு ஒலியன்கல்
எனக் கருதி இரண்டு வரிவடிவுக் கொடுத்து எழுதுதலும் தவறாகப் பிரித்தலில் அடங்கும்.

இறுதியாக, தனிப்பட்டார் குறைகள் ஒலியனியலில் காணப்படும் கொள்களைச்


சிக்கலாகும். இத்தவறுகள் வராமல் தடுப்பத்தற்கு ஒரே வழி அழுத்தமான ஒலியியல்
பயிற்சியேயாகும். எழுதும்பொழுது, மிகவும் கவனமாக எவ்வளவு விரிவாக ஒலிகளைக்
குறைக்க முடியுமோ அவ்வளவு விரிவாகக் குறைக்க வேண்டும். தப்பும் தவறுமாக
எழுதப்பட்ட மூலங்களிலிருந்து இக்குறை எதனையும் நீக்க முடியாது. கவனமாக
HBTL4303

எழுதப்பட்ட பின்பும் ஐயங்கள் வந்தால் உணர்த்துவோனைப் பேசச் சொல்லிக் கேட்டு, நாம்


எழுதிக் கொண்டதைத் திருத்துவதே முறையாகும்.

பிரிவு B (கேள்வி 1)

ஒரு சொல்லின் ஓர் உருபனோ ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்களோ இருக்கும்.


உருபன் என்பதற்கு நன்னூலார் ஓர் எழுத்து தனித்து வந்தொரு பொருளைத் தந்தாலோ
ஒன்றனுக்கு மேற்பட்ட எழுத்துகள் அடுத்தடுத்து வந்து ஒரு பொருளை உணர்த்தினாலோ
அதனை பதம் என்கிறார. பதம் என்று இங்கு கூறப்படுவது உருபனே ஆகும். ஆகவெ,
உருபன் மற்றும் சொல் ஆகிய இரண்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
எடுத்துக்காட்டாக, ‘செய்தான்’ என்பது சொல் ஆகும். இதில் ‘செய் + த் + ஆன்’ என
மூன்று உருபன்கள் உள்ளன.

ஆகவே, உருபன்கள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உருபன்களால் ஆனதாக


அமையலாம். மேலும், இவ்வுருபன்கள் சொற்பொருளை மட்டுமின்றி இலக்கணப்
பொருளைச் சுட்டுவனாகவும் விளங்கும்.
HBTL4303

சொல்லியலில் மூன்று நிலைகள் உள்ளன. அவை முதலாவதாக தனி வடிவம் என


கருதப்படுகிறது. ஒரு அடிச்சொல்லே தனித்து நின்று சொல்லாதல் மிக எளிய
அமைப்பாகும். அச்சொற்களில் எதையும் பிரித்து அறிய வேண்டியதில்லை. இஃது தனி
வடிவம் எனப்படும். எடுத்துக்காட்டாக, கல், அவன், மாடு, மரம், பணம் ஆகியவைசொற்கள்
சொல்லியலில் தனி வடிவம் சொற்களாகும்.

தொடர்ந்து, சொல்லியலில் இரண்டாவது வடிவமாகக் கருதப்படுவது ஒட்டு வடிவம்


ஆகும். இஃது அடிச்சொல்லோடு விகுதிகள் சேர்த்து ஒட்டி நின்றால் அதனை ஒட்டு
வடிவம் என்பர். எடுத்துக்காட்டாக, பணத்தை (பணம் + அத்து + ஐ), செம்மை (செம் + மை),
சுவைத்தான் (சுவை + த் + ஆன்) ஆகும். மேலும், மலையன், கள்ளன், பொன்னன், அண்ணன்
முதலியவையும் இத்தகையனவே ஆகும். சொல்லியலில் இவையே மிகவும்
பிரித்தாராயப்படுகின்றன. சேர்க்கை உருபன்கள் ஆக்க உருபுகளாகவும், பால், எண், இடம்,
வேற்றுமை முதலியன காட்டும் உருபன்கள் இலக்கண உருபுகளாவும் அமைகின்றன.

மூன்றாவது வடிவமாக தொகை வடிவம் கருதப்படுகிறது. சொல்லியலில் இவையே


மிகவும் பிரித்தறியப்படுகின்றன. இரண்டு அடிச்சொற்கள் இணைந்து தொகைப்பட்டால்
அவை தொகை வடிவம் எனப்படும். மொழியின்கள் காணப்படும் இரு சொற்களைச்
சேர்த்து தொகைச் சொற்கள் உருவாக்கிக் கொள்ள தொல்காப்பியர் எச்சவியல் சூத்திரங்கள்
நமக்கு வழிகாட்டியாக அமைகின்றன. தொகை வடிவம் வழியாகப் புதிய சொற்கள்
உருவாக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கொல்யானை, நல்யாழ், மதிமுகம், வெற்றிலை
போன்ற சொற்களாகும்.
HBTL4303

கேள்வி 2

தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம் ஆகும்.


இது கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதை இயற்றியவர் தொல்காப்பியர்
ஆவார். பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற
இலக்கண நூல். இது, எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டு
இலக்கணங்களையும் கூறுகிறது.

’எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃது; என்ப’ என்ற


தொல்காப்பிய நூற்பாவின் வழி எழுத்தெனப்படுவது அகர முதல் னகர இறுவாய்
என்கின்றார். அஃதாவது தமிழ் எழுத்து ’அ’வில் தொடங்கி ’ன’வில் முடிகிறது என்கின்றார்.
மேலும், ’ஔகார இறுவாய் பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப’ என்கிறார். அதாவது
இறுவாய் என்றால் இறுதி என்று பொருள்படும். பன்னீர் என்பது பன்னிரண்டு எழுத்துகள்
என்பதைக் குறிக்கிறது. ஔ என்ற எழுத்தை இறுதியாகக் கொண்டு முடியும் பன்னிரண்டு
எழுத்துகளும் உயிர் எழுத்துகள் எனக் குறிப்பிடுகிறார்.
HBTL4303

மெய் எழுத்துகள் என்பது பொதுவாக அனைவரும் அறிந்திருப்போம். “மெய்யின்


இயற்கை புள்ளியோடு நிலையல்” என்பதை மெய்யெழுத்துகள் புள்ளியோடு
தோற்றமளிக்கும் என்பதை உணர்த்த தொல்காப்பியர் இவ்வாறு உணர்த்துகிறார். மேலும்,
மெய்யெழுத்துகளை ஒலிக்கும் கால அளவினை அரை மாத்திரை என தொல்காப்பியர்
“மெய்யின் அளவே அரையென மொழிப” என்கிறார்.

தொடர்ந்து, தொல்காப்பியர் “வல்லெழுத்து என்ப கசட தபற” என்கிறார். அதாவது


வல்லெழுத்து என்பது க், ச், ட், த், ப், ற் ஆகும். மெல்லினம் என்பதற்கு “மெல்லெழுத்து
தென்ப ஙஞண நமன” என்கிறார். அதாவது மெல்லெழுத்து என்பது ங், ஞ், ண், ந், ம், ன்
ஆகும். இறுதியாக இடையினம் என்பதற்கு “இடையெழுத் தென்ப யரல வழள” என்கிறார்.
அதாவது இடையின் என்பது ய், ர், ல், வ், ழ், ள் ஆகும்.

மேலும், மேற்குறிப்பிட்ட முதல் எழுத்துகளான முப்பதையும் ஒலிக்கும் கால


அளவினைப் பற்றி,

’அவற்றுள்
அஇஉ
எஒ எசூனுரு
அப்பால் ஐந்து
ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப’
அதாவது அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் குற்றெழுத்துகள்
ஆகும் என்கிறார்.

’ஆ ஈ ஊ ஏ
ஐ ஓ ஔ என்னும்
அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்தென்ப
என்கிறார். அதாவது, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழு எழுத்துகளும் இரண்டு
மாத்திரை அளவு கொண்டு ஒலிக்கின்ற நெட்டெழுத்துகள் ஆகும்.
HBTL4303

இருப்பினும், நன்னூலில்தான் முதலெழுத்து, சார்பெழுத்து என்ற பெயர்கள்


முதன்முதலில் காணப்பட்டுள்ளது. இக்கருத்தினை,

“மொழிமுதல் காரணம்ஆம் அணுத்திரள்ஒலி


எழுத்து, அது முதல், சார்பு, என இருவகைத்தே” (நன்.58)
எனும் நூற்பாவின் வழி மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும்
ஒலியாவது எழுத்து. இது முதல் சார்பு என இருவகைப்படும்.

“உயிரும், உடம்பும், ஆம் முப்பதும் முதலே” (நன்.59)


“உயிர்மெய், ஆய்தம், உயிர்அளபு, ஒற்றஅளபு
அஃகிய இ,உ,ஐ,ஔ,மஃகான்
தனிநிலை, பத்தும் சார்பு எழுத்து ஆகும்” (நன்.60)
என்ற நூற்பாக்களின் மூலம் உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள்
பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள் என்றும், உயிர்மெய், ஆய்தம்,
உயிரெளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம்,
ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்த குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் என்றும்
அறியமுடிகிறது.

மேலும், எழுத்துகளை உச்சரிக்கும்போது ஒலி அளவு நீண்டும் குறுகியும் ஒலிக்கும்


எழுத்துகளைச் சார்பெழுத்துகள் எனக்கூறுவர். எழுத்துகள் அளவு குறைந்து ஒலிப்பதைக்
குறுக்கம் என்றும், எழுத்துகள் அளவு நீண்டு ஒலிப்பதை அளபெடை என்றும் கூறுவர்.
மூன்று புள்ளிகளைக் கொண்டுள்ள ஆய்த எழுத்தும் சார்பெழுத்தின் வகையினைச்
சார்ந்ததாகும்.

You might also like