You are on page 1of 10

HBTL4303

TAKE HOME EXAMINATION

SEPTEMBER / 2020

HBTL 4303

LINGUISTIK BAHASA TAMIL

NO. MATRIKULASI : 860509387077001


NO. KAD PENGNEALAN : 860509387077
HBTL4203
பகுதி A : கேள்வி 1
அ)
மொழி என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும்
பயன்படுத்துவதற்கான வல்லமை ஆகும். மொழி என்பது வாயால் மொழியப்படும் ஒலியின்
ஈட்டத்தையே குறிப்பது ஆகும். மொழியினைக் கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல்
எனப்பெயர். மொழியியல் என்பது ஒரு மொழியை முறைபட ஆராய்வதற்குரிய ஒரு
துறையாகும். மொழியியலில் சில அடிப்படைகள் அல்லது உட்பிரிவுகள் கொண்டதாகும்.
முதலாவதாக, ஒலியனியல் ஆகும். அதற்கு முன்பதாக ஒலியியல் ஒரு குறிப்பிட்ட
மொழியில் காணப்படும் பேச்சொலிகள் தொடர்பான ஆய்வாகும். பேச்சொலிகள் பிறக்கும்
முறை, அவை பரப்பப்படும் முறை, கேட்கப்படும் முறை என மூன்று நிலைகளில்
துல்லியமாக ஆராய வழிகோலும் துறையாக இது திகழ்கின்றது. இத்துறைகள் அவற்றின்
தனிச்சிறப்பிற்கேற்ப பிற்பொலியியல், பௌதீக ஒலியியல், கேட்பொலியியல் என மூவகைத்
துறைகளாக விரிவாக்கம் கண்டுள்ளன.
ஒலியனியல் பேச்சொலிகளின் அமைப்பு முறையினைப் பற்றிப் பேசும் பிரிவாகும்.
ஒரு மொழியில் காணப்படும் மிகச் சிறிய பொருள் பொதிந்த ஒலிகளையே ஒலியன்கள்
என்கிறோம். இவை மீண்டும் மீண்டும் சிறு மாற்றல் அல்லது எவ்வித மாற்றமும் அமையப்
பெற்று உருவாக்கப்படலாம். இவ்வாறு ஒரு மொழியில் காணப்படும் மிகச் சிறிய பொருள்
மாற்றத்தினை ஏற்படுத்திக் கொடுக்கவல்ல ஒலிகளின் இயல்புகளை ஆராயும் துறையாகும்.
ஒலியன்கள் எவ்வாறான வரிசைக் கிரமத்தில் வந்து உருபன்களாகவோ சொற்களாகவோ
உருவாக்கம் பெறுகின்றன என்பதை ஒலியனியல் விவரிக்கின்றது.
தொடர்ந்து, உருபனியல் மொழியியலில் உட்பிரிவுகளில் ஒன்றாகும். சொற்களை
ஆய்வது உருபனியலாகும். ஒரு மொழியில் காணப்படும் பொருள் வழங்கவல்ல மிகச்
சிறிய எழுத்துக் கூட்டம் உருபன். சில உருபன்கள் தனித்த நிலையில் தமது பொருளை
வழங்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இன்னும் சில அவ்வாறு அமையாது. பிற
உருபன்களோடு இணைந்து மட்டுமே தமது பொருளினை வெளிப்படுத்தும் தன்மையினைப்
பெற்றிருக்கின்றன. முன்னது தனிநிலை உருபன் என்னும் பின்னது சார்புருபன் என்றும்
அழைக்கப்படுகின்றன. இவ்வாறு சொல்லிருவாக்கத்தில் ஈடுபடும் உருபன்களின்
தன்மைகளையும் அவற்றின் அமைப்பு முறையினையும் பற்றி ஆராயும் வழிவகைகளை
வழங்கும் துறையாக உருபனியல் விளங்குகிறது.
அடுத்ததாக தொடரியல் ஆகும். ஒலிகள் அசையாகி, அசைகள் உருபன்களாகி,
அவற்றின் தொடர்ச்சியால் எவ்வாறு தொடர்களும் வாக்கியங்களும் உருவாகின்றன

1
HBTL4203
என்பதனைப் பற்றிய இச்சிந்தனையை வழங்கும் துறையே தொடரியல் ஆகும்.
கோட்பாட்டியல் ஆய்வினில் மிக முக்கியமான இடத்தை இத்துறை பெற்றுள்ளது.
தொடரியல் ஆய்வானது உலக மொழிகள் அனைத்திலும் காணப்படும்
தொடரமைப்புகளும், வாக்கிய அமைப்புகளும் உருவாக்கப்படும் விதிகளும் எவ்வாறு
ஒன்றுபட்டும் மாறுபட்டும் செயல்படுகின்றன என்பதை ஆராய்வதாகும்.
இறுதியாக, பொருண்மையியல் மொழிலியலின் அடுத்த உட்பிரிவாகும். எல்லா
மொழிகளும் பொருள் உணர்த்தும் சொற்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. மொழியில்
காணப்படும் சொற்கள் வெளிப்படுத்தும் பொருண்மை மாறுபட்டு இருந்தாலும் அவை
குறிப்பிட்ட முறைகளிலே மாறுபடுகின்றன என்பதை விளக்கிக் காட்டும் துறையாகும்.
சொற்களும் அவை குறிக்கும் பொருளும் அடிப்படையில் ஒரு காரணத்தின்
அடிப்படையிலோ காரணமில்லாமலோ உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை
பயன்படுத்தப்படும் சூழல், அதனை வழங்கும் மக்களின் கலாச்சாரம், அவர்களது வாழ்வியல்
மரபு, தொடரியல் இயல்புக்கு ஏற்ப மாறுப்பட்டுக்கொண்டே போகும். இவ்வாறு மாறுபாடும்
அடையும் சொற்களையும் அவற்றின் இயல்புகளையும் முறையாக அடையாளம் கண்டு
அச்சொற்களுக்கும் அவை குறிக்கும் பொருள்களுக்கும் உள்ள தொடர்புகளின் காரணிகள்
யாவை என்பதனை அடையாளம் காட்டும் பிரிவாகும்.

பகுதி A : கேள்வி 1
ஆ)
ஒலியியல் என்பது பேச்சொலியை ஆராயும் ஓர் அறிவியல் துறையாகும். ‘இன்ன
ஒலியுறுப்பு இன்ன முறையில் இயங்குவதால் இன்ன ஒலி பிறக்கிறது’ என்று விளக்குவது
ஒலியியலாகும். ஒவ்வொரு மொழியையும் பேசும் பொழுது பற்பல ஒலிகள் தோன்றுகின்றன.
எல்லா மொழிகளும் பேச்சொலிகளைப் பயன்படுத்துகின்றன. அப்பேச்சொலிகளை
அறிவியல் முறைப்படி ஆராய்வதையே ஒலியியல் என்கிறோம். ஒலியை ஆராயும்
முறையில் மூன்று முறைகள் முக்கியமாகக் கருதப்படுகிறது.
முதலாவதாக பௌதிக ஒலியியல் ஆகும். இதில் பேச்சொலியின் பௌதிகத்
தன்மையை ஆராய்கின்றனர். ஒலியுறுப்புகளின் அசைவுகளால் அங்குள்ள காற்றணுக்களில்
உண்டாகும் அதிர்ச்சி அதனால் ஆகாயத்தில் உள்ள காற்றில் உண்டாகும் அதிர்ச்சி
ஆகியவற்றை ஆராய்கின்றனர். ஒலிஅலைகளாக வரும் இவற்றை அளந்து கணக்கிடலாம்.
இவற்றை அளந்து அறிய பலவிதமான அறிவியல் கருவிகளையும் கணிதத்தையும்
பயன்படுத்துகின்றனர்.

2
HBTL4203
அடுத்ததாக கேட்பொலியியல் ஆகும். இது மனிதனுடைய கேட்கும் தன்மையை
அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆராய்வது ஆகும். இது அவரவர் தன்மைக்கேற்ப
மாறும். இயல்புடைமையால் இது ஒலி ஆராய்ச்சிக்குப் பொருந்துவதன்று.
இறுதி முறையானது உச்சரிப்பொலியியல் ஆகும். இது மனிதனுடைய
உடலுறுப்புகளைச் சிறப்பாக ஒலியுறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒலியின்
பிறப்பை ஆராயும். இவ்வுறுப்புகளும், அவற்றின் அசைவுகளும் மனித இனத்திற்குப்
பெரும்பாலும் ஒன்றுபோல் இருப்பதால் இவ்வுறுப்புகளின் அசைவுகளின் அடிப்படையில்
ஒலியை ஆராய்வது எளிய விஞ்ஞான அடிப்படையான முறையேயாகும். உதடு, நா
இவற்றின் அசைவுகளை அறிந்து கொள்வதற்கு அதிகமான பயிற்சிகள் ஒன்றும்
தேவையில்லை. இவ்வுறுப்புகளை இயக்கி ஒலிகளை உண்டாக்கி ஒலிகளை ஆராய்வதே
உச்சொரிப்பொலியியல் எனப்படுகிறது.

பகுதி A : கேள்வி 3
கேள்வி 2 (அ)

பெயர்ச்சொற்கள் பொதுவாக நான்கு இலக்கணங்களைக் காட்டும்.

3
HBTL4203
‘பெயரினும் வினையினும் மெய்தடு மாற’ (தொல்-சொல்-297)
‘இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்
தமக்கியல் பிலவே (தொல்-சொல்-249)
அதாவது சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காய்ப் பிரித்து சொல்லியல்
அடிப்படையில் வகுத்துக் காட்டுவது தொல்காப்பியமாகும். பெயரும், வினையும் திணை,
பால், இடம் காட்டுவது ஒற்றுமை பெற்று விளங்குகின்றன.
பெயற்சொற்களானது வேற்றுமையை ஏற்கும். அறுவகை பெயர்சொற்களின்
வகைகளும் வேற்றுமையைக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, மரம் என்ற பெயர்ச்சொல்லுடன்
‘மரத்தை (இரண்டாம் வேற்றுமை உருபு ஐ) ஏற்றுக் கொள்கிறது. ‘மரத்திற்கு’ என நான்காம்
வேற்றுமை உருபையும் ஏற்று நிற்கும்.
தொடர்ந்து, பெயற்சொற்கள் வாக்கியங்களின் எழுவாயாகச் செயல்படும் என்பது
அதன் இலக்கணமாகும். எழுவாய் என்பது வாக்கியத்தின் முதல் சொல்லாகவோ அல்லது
காரணமாக அமையும் சொல்லாகும். எடுத்துக்காட்டாக, ‘மான் காட்டில் ஓடியது’ என்ற
வாக்கியத்தில் மான் எழுவாயாகும். எது காட்டில் ஓடியது என கேள்வி எழுப்பும்போது
வருகின்ற விடை எழுவாய் ஆகும். ஆகையால், மான் பொருட்பெயர் சார்ந்த
பெயர்சொல்லாகும்.
மேலும், பெயர்ச்சொற்கள் பெயரெச்சம் தழுவி முடியும் சொல்லாக நிற்கும்.
எடுத்துக்காட்டாக, ‘ கடைக்குச் சென்ற பையன் கீழே விழுந்தான்.’ என்ற வாக்கியத்தில்
பெயர்சொல்லானது பையன் ஆகும். வாக்கியத்தில் இடையில் வந்தாலும் பெயரெச்ச
சொல்லான ‘சென்ற’ என்ற சொல்லிற்குப் பின் அமைக்கப்படுகிறது.
இறுதியாக, பெயர்ச்சொற்கள் காலத்தை ஏற்காது. ஒரு வாக்கியத்தில் உள்ள
பெயர்ச்சொல்லானது மூன்று காலங்களையும் காட்டாது. எடுத்துக்காட்டாக, ‘மதிவாணன்
பேருந்தில் ஏறினார்.’ என்ற வாக்கியத்தில் மதிவாணனும் பேருந்தும் பெயர்சொற்களாகும்.
ஆனால்ம் அவ்விரு சொற்களும் எவ்வித காலத்தையும் காட்டவில்லை. வினைச்சொல்லான
‘ஏறினார்’ என்ற வினைச்சொல் காலத்தைக் காட்டுகிறது. அதனால்தான் தொல்காப்பியர்,
‘வினைஎனப் படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலைக்
காலமொடு தோன்றும்’ (தொல்-சொல்-198) என்கிறார்.
கேள்வி 3 (ஆ)
சொல் நிலையில் வினைச் சொல்லின் இலக்கணம் வினை கால ஏற்கும் என்பதாகும்.
வேற்றுமை கொள்ளாது என்பதும் அதன் சிறப்பிலக்கணமாகும்.
‘வினைஎனப் படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலைக்

4
HBTL4203
காலமொடு தோன்றும்’ (தொல்-சொல்-198)
வாக்கியத்திலும் வினைச் சொல்லானாது எழுவாயாக வராது என்றும் செயப்படுபொருள்
முடியும் சொல்லாகவும் அமையும் என்ற இலக்கணமும் வினைச் சொல்லிற்கு உண்டு.
வினை எனப்படுவது தமிழில் தெரிநிலை வினை என்றும், குறிப்பு வினை என்றும்
பாகுபடுத்தப்பட்டுள்ளது. காலம் தெளிவாக அறியப்படுவதும் செயல் பகுதியைக்
கொண்டதும் தெரிநிலை வினையாகும். தெரிநிலைவினை கால இடை நிலை பெற்றும் வரும்;
பெறாமலும் வரும். செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு
பொருள்களைத் தெரிநிலைவினை காட்டும் என்பர் நன்னூலார்.
செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே (நன்னூல்:319)
என்பது நன்னூல் நூற்பா.
எடுத்துக்காட்டாக, வரைந்தான் என்னும் வினைச்சொல்லைச் சான்றாக எடுத்துக்
கொள்வோம். இதனால் அறியப்படும் ஆறு செய்திகளையும் கீழே காண்க.

வரைந்தவன் - (செய்பவன்) ஓவியன்


வரைய உதவியது - (கருவி) தூரிகை
வரைந்த இடம் - (நிலம்) ஓவியக்கூடம்
வரைதல் - (செயல்) ஓவிய வரைவு
வரையப்பட்டது - (செய்பொருள்) ஓவியம்
வரைந்த காலம் - (காலம்) இறந்தகாலம்
இந்த ஆறு கருத்துகளையும் ஒரு வினைச்சொல் உணர்த்துவதை தெரிநிலை
வினையாகும். ஒரு தெரிநிலை வினைமுற்றுச் சொல்லில் பகுதியால் செயலும், விகுதியால்
வினை செய்தவரும், இடைநிலையால் காலமும் வெளிப்படையாகப் புலப்படும்.
எடுத்துக்காட்டாக,

செய்தான் - தெரிநிலை வினைமுற்று


செய் - பகுதி - செய்தல் என்னும் வினையைக் குறித்தது.
ஆன் - விகுதி - உயர்திணை ஆண்பாலைக் குறித்தது.
த் - இடைநிலை - இறந்தகாலம் குறித்தது.

5
HBTL4203

குறிப்பு வினை என்பது காலத்தைக் குறிப்பாகக் காட்டுவதும், பண்பு அல்லது


பெயரை அடிப்படைப் பகுதியாகக் கொண்டு பால் ஈறு பெற்று விளங்குவதும் ஆகும்.
குறிப்பு வினை கால இடைநிலை பெறவே பெறாது. குறிப்புவினை என்பது பொருள், இடம்,
காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறனுள் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு
தோன்றி, வினை உணர்த்துவதாக அமையும். இது, பேசுவோரின் குறிப்பிற்கேற்பக்
காலத்தைக் குறிப்பாக உணர்த்தும்.
பிற திணை பால்களுக்குரிய குறிப்பு வினைமுற்றுச் சொற்களும் இவ்வாறே
அமையும். தனியே பொன்னன், கரியன் எனும் பெயர்கள் குறிப்புவினைகள் ஆகா. தொடரில்
இவை பயனிலையாக வரும்பொழுதே குறிப்புவினைமுற்றுகள் ஆகும். ‘பொன்னன்
வந்தான்’ என்பதில் ‘பொன்னன்’ எழுவாயாக உள்ளது. ‘அவன் பொன்னன்’ என்பதில்
‘பொன்னன்’ பயனிலையாக உள்ளது. எனவே, இடமறிந்து குறிப்புவினை எது என அறிய
வேண்டும்.
குறிப்புவினைச் சொற்கள் பெரும்பாலும் வடிவத்தில் பெயர்ச் சொற்களாகவே
தோன்றுவதால், அவை தொடரில் வரும் இடத்தை வைத்தே குறிப்புவினையா என்பதை
முடிவு செய்யவேண்டும். தனியே இச் சொற்களைச் சொன்னால் இவை பெயரே ஆகும்.
குறிப்புவினை என்பதும் வினைக்குறிப்பு என்பதும் ஒரே பொருள்படும் சொற்களே
ஆகும். குறிப்புவினைச் சொல் வடிவால் காலம் காட்டுவதில்லை. எனவே, காலம் காட்டாது
என முடிவு செய்திடலாகாது. பேசுவோர், கேட்போர் குறிப்பிற்கேற்ப, காலத்தை அது
குறிப்பாக உணர்த்தும்.

பகுதி B : கேள்வி 1
ஓர் எழுத்து தனித்து வந்தொரு பொருளைத் தந்தாலோ ஒன்றனுக்கு மேற்பட்ட
எழுத்துகள் அடுத்தடுத்து வந்து ஒரு பொருளை உணர்த்தினாலோ அதன் பதம் என்கிறார்

6
HBTL4203
நன்னூலார். பதம் என்று கூறப்படுவது உருபனே ஆகும். ஒரு சொல்லின் ஓர் உருபனோ
ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்களோ இருக்கும்.
சொல்லியலில் மூன்று நிலைகள் உள்ளன. அவை முதலாவதாக தனி வடிவம் என
கருதப்படுகிறது. ஒரு அடிச்சொல்லே தனித்து நின்று சொல்லாதல் மிக எளிய
அமைப்பாகும். அச்சொற்களில் எதையும் பிரித்து அறிய வேண்டியதில்லை. இஃது தனி
வடிவம் எனப்படும். எடுத்துக்காட்டாக, மண், கல், வான், முன் ஆகிய சொற்கள்
சொல்லியலில் தனி வடிவம் சொற்களாகும்.
தொடர்ந்து, சொல்லியலில் இரண்டாவது வடிவமாகக் கருதப்படுவது ஒட்டு வடிவம்
ஆகும். இஃது அடிச்சொல்லோடு விகுதிகள் சேர்த்து ஒட்டி நின்றால் அதனை ஒட்டு
வடிவம் என்பர். எடுத்துக்காட்டாக, மண்ணை (மண் + ஐ), வானுடன் (வான் + உடன்),
செல்கிறான் (செல் + கிறு + ஆன்) ஆகும். மேலும், மலையன், பொன்னன முதலியவையும்
இத்தகையனவே ஆகும். சொல்லியலில் இவையே மிகவும் பிரித்தாராயப்படுகின்றன.
சேர்க்கை உருபன்கள் ஆக்க உருபுகளாகவும், பால், எண், இடம், வேற்றுமை முதலியன
காட்டும் உருபன்கள் இலக்கண உருபுகளாவும் அமைகின்றன.
மூன்றாவது வடிவமாக தொகை வடிவம் கருதப்படுகிறது. சொல்லியலில் இவையே
மிகவும் பிரித்தறியப்படுகின்றன. இரண்டு அடிச்சொற்கள் இணைந்து தொகைப்பட்டால்
அவை தொகை வடிவம் எனப்படும். மொழியின்கள் காணப்படும் இரு சொற்களைச்
சேர்த்து தொகைச் சொற்கள் உருவாக்கிக் கொள்ள தொல்காப்பியர் எச்சவியல் சூத்திரங்கள்
நமக்கு வழிகாட்டியாக அமைகின்றன. தொகை வடிவம் வழியாகப் புதிய சொற்கள்
உருவாக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கொல்யானை, நல்யாழ், மதிமுகம், வெற்றிலை
போன்ற சொற்களாகும்.

பகுதி B : கேள்வி 2
ஒவ்வொரு இனமும் பேசும் மொழிக்கு அடிப்படையான சில ஒலிகள் உள்ளன.
அந்த ஒலிகளை நம் முன்னோர்கள் எழுத்துகள் எனக் குறிப்பிடுள்ளனர். ஓசை
எழுப்பபடுவதாலும் எழுதப்படுவதாலும் எழுத்து எனப்பட்டது. எழுத்துக்கு இரு வடிவங்கள்

7
HBTL4203
உண்டு. ஒலிக்கப்படுவது ஒலிவடிவம் எனவும் எழுதப்படுவது வரிவடிவம் எனவும்
கூறப்படும். இதனைத் தொல்காப்பியர்,
’எழுத்தெனப்படுப
அகர முதல் னகர இறுவாய் முப்பஃது; என்ப
என்ற தொல்காப்பிய நூற்பாவின் வழி எழுத்தெனப்படுவது அகர முதல் னகர இறுவாய்
என்கின்றார். அஃதாவது தமிழ் எழுத்து ’அ’வில் தொடங்கி ’ன’வில் முடிகிறது என்கின்றார்.
உயிர் எழுத்துகளை தொல்காப்பியர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே
’ஔகார இறுவாய்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப’
என்கிறார். அதாவது இறுவாய் என்றால் இறுதி என்று பொருள்படும். பன்னீர் என்பது
பன்னிரண்டு எழுத்துகள் என்பதைக் குறிக்கிறது. மெய்யெழுத்துகளைப் பற்றி தொல்காப்பிய
நூலில்,
’னகார இறூவாய்
பதினெண் எழுத்தும் மெய்என மொழிப’
என்கிறார் தொல்காப்பியர். னகாரம் என்பது ’ன்’ எனும் எழுத்தும், பதினெண் என்பது
பதினெட்டு எழுத்துகள் உள்ளன என்பதையும் குறிக்கிறது.
நன்னூலில் எழுத்துகளைப் பற்றி கூறும் பொழுது
“மொழிமுதல் காரணம்ஆம் அணுத்திரள்ஒலி
எழுத்து, அது முதல், சார்பு, என இருவகைத்தே
உயிரும் உடம்பு ஆம் முப்பது முதலே” (நன்.58)
என்று எழுத்தானது முதலெழுத்து சார்பெழுத்து ஆகியவை ஆகும் நன்னூலில்தான் முதன்
முதலில் கூறப்பட்டது. தனித்து இயங்கும் தன்மை உடையவை முதலெழுத்து எனப்படும்.
மேலும், உயிரும் மெய்யும் - அகரம் முதல் ஔகாரம் ஈறாக உள்ள பன்னிரண்டு
எழுத்துகளையும் உயிர் என்றும் க-கர முதல் ன-கரம் ஈறாக உள்ள பதினெட்டும் மெய்
எழுத்துகள் என்பர் அறிவுடையோர் என்கிறார் நன்னுலார்.
தனித்து இயங்கும் ஆற்றலின்றி முதல் எழுத்துகளான உயிர், மெய்களைச் சார்ந்து
வரும் எழுத்துகள் சார்பெழுத்து எனப்படும்.
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும் (நன் 60)

8
HBTL4203
என்ற வரிகளின் வழி சார்பெழுத்துகள் பத்து வகையாகும். அவை உயிர்மெய், ஆய்தம்,
உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம்,
ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகும் என்கிறார்.
தொல்காப்பியர் சார்பெழுத்துகளை மூன்று என கூறியுள்ளார். தொல்காப்பியர்
தமிழில் ‘எழுத்து’ எனப்படுபவை ‘அ’ முதல் ‘ன்’ ஈறாகவுள்ள முப்பதே ஆகும். இசை
முதலெழுத்துக்கள் (அடிப்படையானவை) எனப்படும். இவற்றைச் சார்ந்துவரும்
தன்மையுடைய மூன்று சார்பெழுத்துகளும் உள்ளன. மூன்றலங்கடை -
மூன்றுமல்லாதவிடத்து. அவற்றைச் சேர்த்தால் முப்பத்துமூன்று என்பதாம் என்பதை
எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே
வழி சார்பெழுத்தைப் பற்றி உணர்த்துகிறார் தொல்காப்பியர். மேலும், அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன
என்ற செய்யுளின் வழி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் தமிழில்
சிறப்புத்தன்மைகளைக் கொண்டிருப்பதால். ‘சார்பெழுத்துகள் மூன்று’ என்று தொல்காப்பியர்
சிறப்புத்துக் கூறுகிறார்.
மேலும், இரு நூல்களிலும் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு மாத்திரை என
விளக்கியுள்ளனர். அதாவது உயிர் எழுத்துகள் ஒரு மாத்திரை அளவு கொண்டு ஒலிக்கும்
எனவும் மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவில் ஒலிக்கும் என்பதாகும்.

You might also like