Professional Documents
Culture Documents
குறிப்பாக ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள் கனிஷ்ட இடை நிலைக்கு வருகின்ற போது, சில
மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கான காரணம்
ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் கற்க வேண்டியவற்றை கற்காமல் மேல் வகுப்புக்கு
வகுப்பேற்றப்படுவதனாலாகும். மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் அடைய வேண்டிய
தேர்ச்சிகளை இனங்கண்டு, எல்லா மாணவர்களுக்கும் ஆரம்ப கல்வியை சிறப்பான முறையில்
வழங்குகின்ற போது அவர்கள் மேல் வகுப்புகளிலும் சிறப்பாக இயங்குவார்கள். இல்லையேல்
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதையும் ஆசிரியர் உணர வேண்டும்.
மேலும் கற்றல் செயற்பாடானது மிகவும் சிறந்து அமைய வேண்டுமாயின் வகுப்பறை சூழலானது
பொருத்தமானதாகவும் விரும்பத்தக்க முறையிலும் அமைக்க வேண்டும் பாடசாலை சூழலைப்
பொறுத்து அமையும் சூழல் அமையும் பட்சத்தில் மாணவர்களின் வரவு விகிதம் அதிகரிப்பதோடு
கற்றலின் விருப்பமும் ஏற்படும்.
உ.தா.
வகுப்பறை உரையாடல்கள்:
எவை பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த உரையாடல்கள் பல தலைப்புகளில்
இருக்கும். விலங்குகள், பூக்கள், பறவைகள், வண்டிகள், என்று பல விசயங்களைப் பற்றி
உரையாடுவோம். இது ஒரு வித அருகாமையை ஏற்படுத்தும். இம்மாதிரி ஒரு உரையாடல் பூக்கள்
பற்றி நடத்தும்பொழுது பல கேள்விகள் மூலம் அவர்கள் பூக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்
என்பதைத் தெரிந்து கொண்டேன்.
உ.தா.
குழந்தைகள் எவற்றைக் கற்கிறார்கள்/ எவற்றைக் கற்பதில் சிரமப்படுகிறார்கள்?
பிரதிபலிப்பு:
கற்பித்தலின் போது ஏற்பட்ட மாற்றங்கள்.
நான் சொற்களைக் கரும்பலகையில் எழுதி அவற்றை வாசித்துக் காட்டினேன்.அப்போது அது
மாணவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தது. எனவே கற்பித்தலில்
மாற்றத்தை ஏற்படுத்தினேன். அதற்காகத்தான் நான் உருவாக்கிய “சொருகு அட்டையைப்”
பயன்படுத்தினேன். அவர்களுக்குப் புரிதலோடு கற்றல் நடைபெறவேண்டும், தொடர்பு படுத்திப்
படிக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக அமைந்ததால், பூக்களின் படங்கள் அடங்கிய
அட்டைகளைப் பயன்படுத்தினேன். முதலில் சொற்களை வாசிக்க வைத்து, அதிலிருக்கும்
எழுத்துக்களை வாசிக்க வைத்து பிறகு சொல்லை உருவாக்கவும் வைத்தேன். முதலில்
வார்த்தைகளில் உள்ள வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய வைத்தேன். இவ்வாறு குறியீட்டைக்
(Code) கண்டுபிடித்து வாசிக்கும் சுமையை நீக்கினேன்.
கற்றல்-கற்பித்தல் வளங்களை இன்னும் சிறப்பாகவும் நீணட
் நாள் உபயோகப்படும்படியும் தரமான
பொருட்களைக் கொண்டு செய்திருக்கலாம் என நினைத்தேன்.
அடுத்தது என்ன?
நோக்கம் --- செயல்திட்டம் --- செயல்முறை --- கற்றல் அடைவு (Objective - plan --- process ---
Outcome)
மாணவர்களின் தரம், வாழ்க்கைச் சூழல், ஆசிரியர் தம் தனித்திறன் முதலானவற்றிற்கு ஏற்ப மொழி
விளையாட்டுகளைப் பெருக்கவும் சுருக்கவும் செய்யலாம்.
ஆதலால் இவற்றை மனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப விளையாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.
ஆசிரியர் முன் ஆயத்தமில்லாமலேயே ஒரு கதையை நடிக்கும் வாய்ப்பினை வகுப்பில் வழங்கலாம். ஒரு கதையை
ஒரு முறை வகுப்பில் படித்து உணர்ந்தபின் வகுப்பிலேயே செய்யலாம். தேவையான பாத்திரங்களை நிர்ணயித்தல், யார்
யார் எந்தெந்தப் பாத்திரமாக இருந்து நடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் ஆகியவை முடிவுற்றதும்
குழந்தைகள் நடித்தலில் இறங்குவர். அவரவர் இடம் வந்தவுடன் வழக்கம்போல் உரையாடல்களை மனப்பாடம் செய்து
ஒப்புவிக்காமல் இடத்திற்கு ஏற்றவாறு எப்படிப் பேச வேண்டும் என்பதை அவர்களே தங்களால் இயன்றவரை
கற்பனையில் உறுதி செய்துகொண்டு பேச வேண்டும்.
உரையாடல்கள் முதலில் ஆசிரியர் எதிர்பார்க்கும் நிலைக்கு அமையாவிட்டாலும், பழகப்பழக இதில் நல்ல பயனைக்
காணலாம். இதில் கற்பனை வளர்ச்சிக்கு மிகுந்த இடம் இருக்கின்றது. ஆசிரியர்கள் இம் முறையைக் கையாளுவதற்கு
நிறைந்த பட்டறிவு உடையவர்களாகவும் இம்முறையில் தேர்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய நடிப்பை
இரண்டாம் வகுப்பிலிருந்தே தொடங்கலாம். அதிகமான பேச்சுக்கு இடமில்லாத மிகச் சிறிய கதையில் தொடங்கினால்
நாளடைவில் நல்ல பயனை அடையலாம். ஒரு திட்டப்படி பயிற்சி கொடுத்தால், குழந்தைகள் ஐந்தாவது வகுப்பினை
அடையும்பொழுது, இதில் நல்ல திறனை அடைவார்கள். இம் முறையில் வகுப்பிலுள்ள ஒரு குழு நடிப்பில்
இறங்கும்பொழுது, மீதியுள்ள குழந்தைகள் அதை நன்கு கவனித்துக் குறைகளைக் களைந்து நல்ல திருத்தங்களைத்
தரலாம். சிறிது நேரம் பயிற்சி பெற்றதும், நாடகம் நல்ல முறையில் அமையும். இம் முறையில் உருவாகும் நாடகங்களின்
உரையாடல்கள் இயற்கையாக இருக்கும். குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாம்
மேற்கொண்ட பாத்திரங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகள் சொற்களையும் நடிப்பினையும் கையாளுவர்.
குழந்தைகள் தத்தம் பகுதிகளை மனப்பாடம் செய்த பின் நடிக்கும் நடிப்பிலும் பயன் உண்டு. இதில் நினைவாற்றல்
வளரும். இதையும் வகுப்பிலேயே நடிக்கலாம். வகுப்பில் நாடக உடை, திரைச்சீலைகள், ஒப்பனைகள், காட்சிகள்
முதலியன வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லா நடிப்புகளிலும் உரையாடல்களில்
எடுத்தல், படுத்தல், நலிதல்களைக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளை உடைய குரல் அமையவேண்டும். செம்மையான
உச்சரிப்பு, தெளிவான ஒலிப்பு முதலியன முக்கியமான கூறுகள். நடிப்பு வலிந்தும் நலிந்தும் போகாமல் இயல்பாக
உயிருள்ளதாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளும் மன எழுச்சிகளும் உள்ளச்சுவைகளும், மெய்ப்பாடுகளும் பொங்கி
நிற்கவேண்டும். இசைக்கு அளவான வாய்ப்புகளைத் தரலாம்; அளவுக்கு மீறக்கூடாது. பாடத் தெரிந்தவர்தான் நடிப்பில்
கலந்து கொள்ளலாம் என்ற எண்ணமே குழந்தைகளிடம் வளரவிடக் கூடாது. அனைவருமே நடிக்க வேண்டும் என்ற
முறை வேண்டும். பள்ளி ஆண்டுவிழா, இலக்கியக் கழகவிழா போன்றவற்றில் மட்டிலும் கதை நிகழ்ந்த காலத்திற்கு
ஏற்ற திரைச்சீலைகள் ஒப்பனைகள் முதலியவற்றை மேற்கொள்ளலாம்.
இயல்பாகக் குழந்தைகளிடம் காணப்படும் அச்சம், கூச்சம், நடுக்கம், படபடப்பு, சொல்லின் கடைசி எழுத்தையும்
சொற்றெடரின் கடைசிச் சொல்லையும் விழுங்கல் ஆகிய குறைகளைப் போக்க நல்ல வாய்ப்புகள்
ஏற்படுகின்றன. பேச்சு, உரையாடல் முதலியவை வாய்மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பினை
வழங்குகின்றன. விளையாட்டு முறையில் கற்பதால் கற்றலில் பற்றை ஏற்படுத்துவதுடன் கற்ற பொருள்களும்
பசுமரத்தாணிபோல் மனத்தில் நன்கு பதியும். இம் முறை பொறிகளுக்கும் கற்பனைக்கும் நினைவாற்றலுக்கும்
உணர்ச்சிக்கும் நல்ல முறையீடு செய்கின்றது என்று சொல்லலாம். மன எழுச்சிக்குரிய மெய்ப்பாடுகள் நன்கு
வெளிப்பட வாய்ப்பினை அளிக்கின்றது.
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! இங்கு நீங்கள் காணவிருப்பது, கற்பித்தல் முறைகளுள் ஒன்றான செயல்திட்ட
முறை பற்றியாகும்.
மாணவர்க்குக் கற்பிக்கவேண்டிய பாடப் பகுதிகளைத் தனித்தனியாகத் தொடர்பற்ற முறையில் கற்பிப்பதற்குப்
பதிலாக, ஒரு செயல்திட்டத்தை மையமாகக் கொண்டு, பல பாடங்களையும் இணைத்துக் கற்பித்தலே செயல்திட்ட
முறையாகும்.
இதன் சிறப்புகளாவன,
செயல்திட்ட முறை என்பது, நேரடி அனுபவ முறைகளுள் மிகவும் பயனுடையது எனக் கூறப்படுகிறது.
தம் குறிக்கோள் நிறைவேறும் என்பதை அறியும் மாணவர்களுக்குச் செயலில் கவர்ச்சி ஏற்படுகின்றது; முழு
ஆர்வத்துடன் வேலையில் ஈடுபட வாய்ப்பு அளிக்கின்றது.
கற்றலில் சிறந்த உளவியல் கொள்கையான ‘செய்து கற்றல்’ என்னும் கொள்கையை இம்முறை பெரிதும்
பின்பற்றுகிறது.
செயலைத் தேர்நதெ
் டுத்தல்; திட்டமிடுதல்; நிறைவேற்றுதல்; மதிப்பிடுதல் என்னும் நான்கு படிநிலைகளைச்
செயல்திட்ட முறை கொண்டுள்ளது. இத்தகைய படிநிலைகளின் விளக்கங்களைப் பின்வருமாறு காண்போம்.
(இ) தேர்நதெ
் டுக்கப்படும் செயல்திட்டம் மாணவர்களுடைய அறிவு, திறன் ஆகியவற்றுக்கு
ஏற்றதாக அமைதல் வேண்டும்.
போகும்.
4.5.3.1.2 திட்டமிடுதல்
(ஆ) செயலைத் திட்டமிடத் தேவையான அறிவு பெற நூல் நிலையம் சென்று பன்னூலறிவு பெறச்
செய்தல் வேண்டும். எந்தெந்த நூல்களில் எந்தெந்தப் பகுதிகளைப் படிக்கலாம் என்பதற்கு
ஆசிரியர் வழிகாட்டலாம்.
4.5.3.1.3 நிறைவேற்றுதல்
(ஈ) இறுதிக் கட்டமான இந்நிலையில், சிக்கல் ஏதேனும் ஏற்பட்டு மாணவர்கள் திணறிச் செயலைக்
கைவிட்டுவிடாமல் ஆசிரியர் தகுந்த வழிகாட்டுதலைச் செய்ய வேண்டும்.
4.5.3.1.4 மதிப்பிடுதல்
(ஆ) ‘உடல் உழைப்புத் தாழ்வானது’ என்னும் கருத்து நீங்கி, உழைப்பின் உயர்வை மாணவர்கள் உணர
இத்திட்டம் வழிவகுக்கிறது.
(ஈ) குறித்த செயல்திட்ட வேலை, குறித்த காலத்திற்குள் முடியும் என்று சொல்ல முடியாது; காலம்
அதிகமாகும்.
செயல்திட்ட முறையில் சில குறைகள் இருந்தாலும் சிறப்பான நன்மைகள் இருப்பதால், பத்து வயதுக்கு உட்பட்ட
மாணவர்களுக்கு, செயல்திட்ட முறையைப் பயன்படுத்துவது நலம் உண்டாக்கும்.
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! அடுத்து, நீங்கள் காணவிருப்பது தனிப் பயிற்சி முறை (அல்லது) தனிப்படிப்பு
முறை. வகுப்பிற்கு 60 மாணவர்கள் இருப்பின் அவர்களுள் பத்துப்பேரே சிறந்தவராக இருக்கலாம்; இருபதுபேர்
வகுப்பிற்கு ஏற்றவராக இருக்கலாம். பிறர் பின்தங்கியவராகவே இப்பொழுது இருப்பதால் அவர்களிடத்திலே
பெருங்கருத்துச் செலுத்துவது ஆசிரியர் கடமையாகின்றது. பழங்காலத்திலே ஒருசில நல்ல மாணக்கர்களைக் கொண்டு
கல்வி புகட்டிய பேராசிரியர்களுக்கு எளிதாகியிருந்த இத் தனிப் பயிற்சி முறை இக்காலத்தில் எளிதானது இல்லை.
மாணவர்கள், ஆசிரியர் தந்துள்ள குறிப்பில் மாணவர்கள் படிக்கவும் எழுதவும் வேண்டிய மொழிப் பயிற்சிப்
பகுதியும், வாய்மொழிப் பயிற்சிப் பகுதியும், நூலகங்களுக்குச் சென்று குறிப்பெடுக்கும் பயிற்சிப் பகுதியும்
இடம்பெறும். இக் குறிப்பில், பாடத்தைப் படித்தற்குரிய துணைக் குறிப்புகளும் சில விளக்கங்களும் இருக்கும்.
இடையிடையே மாணவர்கள் தம் அறிவு வயது சூழ்நிலைகளுக்கேற்ப ஆசிரியர் நேரில் சென்று அவர்களுக்கு
உதவுகின்றனர். தாமாகவே முயன்று பணியாற்றி முடித்த உணர்வு மாணவர்கள்களுக்கு ஏற்படுகின்றது. ஆதலால்,
கல்வியைக் கற்பதில் ஊக்கமும் ஆக்கமும் பெறுகின்றனர்.
பள்ளிக்கூடத்திலோ அல்லது வேறு இடத்திலோ மாணவர்கள்கள் எளிதில் சென்று படிக்கும் இடத்தில் இந்த
ஏற்பாடுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செய்து வைப்பர். தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும், முறை
வைத்துக் கொண்டு பல வகுப்பு மாணவர்கள்களையும் ஒழுங்காகப் படிக்கின்றனரா எனக் கண்காணித்து
வருவர். இடையிடையே தனிப்பட்ட குறைபாடுடைய மாணவர்கள்களிடம் தனிக் கருத்துக் காட்டி வினாவிடை விளக்க
முறைகளில் அவர்களது ஐயங்களைத் தீர்த்து உதவுவார்.
ஒரு இளைஞன் அந்தரத்தில் மிதத்தல், நீரின் மேல் நடத்தல், தீயை விழுங்குதல் , முன் ஜென்ம
நிகழ்வுகளைக் கூறுதல்,எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தல் போன்ற தெய்வீக
சக்திகளைப் பெறவேண்டும் என்றும் அதைக்கொண்டு சமுதாயத்தில் பேறும் புகழும் சம்பாதிக்க
வேண்டும் என்றும் விரும்பினான். அவற்றைக் கற்றுத்தரக்கூடிய குருவை த் தேடித்தேடி
அலைந்தான்.நீண்டகாலமாக அவன் எதிர்பார்த்த மாதிரி அவனுக்கு ஒரு குரு கிடைக்கவில்லை
.கடைசியில் ஒரு துறவி அவனுக்கு " இது போன்ற தெய்வீக சக்திகளைக் கற்றுத்தரக்கூடிய ஒரு
குரு திபெத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள புத்த மடாலயத்தில் இருக்கின்றார் என்று
சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் போய் பார்தத ் ல் ஒருவேளை உன் விருப்பம்
நிறைவேறலாம் " என்று ஒரு யோசனை கூறினார் . கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில்
நடைப்பயணமாகவே பல மாதங்கள் சென்று இறுதியில் அந்த புத்த மடாலயத்தைச்
சென்றடைந்தான் . தலைமைக் குறுவைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினான் . அவரும்
அதைக் கேட்டுவிட்டு " தெய்வீக சக்திகள் தெய்வங்களுக்கு மட்டுமே உரியவை . தெய்வீகப்
பண்புகளைப் வளர்த்துக் கொண்ட மனிதர்களால் மட்டுமே அப்படிப்பட்ட சக்திகளைப் பெறமுடியும் ,
மற்றவர்கள் அதைக் கற்றுக் கொண்டாலும் விரைவில் இழந்துவிடுவார்கள் " என்றார் . அந்த
இளைஞன் கீழே விழுந்து குருவை வணங்கி " நான் இதைக் கற்றுக்கொள்ள நெடுந்தொலைவு
கடந்து வந்திருக்கின்றேன் , தாங்கள் மறுக்காது கற்றுத்தர வேண்டுகின்றேன் " என
மன்றாடினான். குருவும் அவனுக்குக் கற்றுத்தர சம்மதித்து மறுநாள் விடியற்காலையில் 4
மணிக்கு ஆற்றில் நீராடி, புத்தரை வணங்கிவிட்டு வரச் சொன்னார் . அவனும் அப்படியே வர,
குருவும் தெய்வீக சக்திகளைப் பெறுவதற்கான மந்திரங்களை அவன் காதில் மெல்லக் கூறினார்.
கொஞ்ச நேரம் தியானித்து விட்டு , " இந்த மந்திரத்தை எப்பொழுது உச்சரித்தாலும்
பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும். தவறினால் அந்த மந்திரத்தை மறந்து போவாய் என்றும்
மந்திரத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் பாம்பை மட்டும் நினைக்கக் கூடாது ஏனெனில் அது
தேவர்களிடமிருந்து தெய்வீக சக்திகளை விழுங்கிவிடக் காத்துக் கொண்டிருக்கின்றது ."
என்றார் . சில நாட்களுக்குப் பிறகு குருவிடம் விடை பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பினான்.
வரும் வழியிலேயே அந்த மந்திரங்களை சோதித்துப் பார்க்க விரும்பி , பிழையில்லாமல் உச்சரிக்க
வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் , பாம்பைப்பற்றி நினைக்கூடாது என்று சொன்னாரே என்று
பாம்பை நினைத்துக் கொண்டே மந்திரங்களைப் பிழையோடு உச்சரிக்க , அவன் ஊர் போய்ச்
சேர்வதற்கு முன்னரே கற்றுக்கொண்ட தெய்வீக சக்திகளை இழந்துவிட்டான்.கற்றுக் கொள்ளும்
போது , கற்றுக் கொள்ள வேண்டியவற்றோடு ,கற்றுக்கொள்ளக் கூடாதன வற்றையும் கற்றுக்
கொள்வதால் , அவைகளின் குறுக்கீட்டால் கற்றதைப் பயன்படுத்த முடியாத நிலையே
ஏற்படுகின்றது.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
மொசார்ட் (Wolfgang Amadeus Mossart )ஆஸ்ட்ரியா நாட்டில் 1756 பிறந்து 1756 – 1791
காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் இசை மேதை . 1993 ல் ரௌச்சர் (Rauscher) என்பார்
மொசார்ட்டின் சொனாட்டா(Sonata)(K448) இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப்
பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலியமாக
மேம்படுகிறது என்று கூறினார். இந்த அக நிலை மாற்றம் 10 -15 நிமிடங்களுக்கு மட்டுமே
இருந்தது . சில ஆராய்ச்சியாளர்கள் அதை உறுதி செய்தாலும் வேறு சிலர் இதை ஒப்புக் கொள்ள
மறுத்தனர். இசையில் மயங்கி தன் மனதைப் பறிகொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் துள்ளி எழும்போது
ஏற்படும் உற்சாகமே இப்படி வெளிப்படுகின்றது என்றும்,நுகர் உணர்வு இல்லாவிட்டால் இப்படி நிகழ
வழியில்லை என்றும், மொசார்ட் விளைவு என்று ஒன்றும் இல்லை என்றும் இவர்கள் கூறினார்கள்.
இதனால் ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து மொசார்ட் இசையின் தாக்கம் எவ்வாறு
இருக்கிறது என ஆராய்ந்தனர். எலிகளின் சுறுசுறுப்பு இசை கேட்ட பின் இயல்பு நிலையைக்
காட்டிலும் அதிகமாக இருந்தது. ரசிப்புத் தன்மை ,திறன் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக
அமைந்திருக்கவில்லை எனக் கண்டறிந்தனர்.சிறு வயதுக் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி
அளித்த போது அவர்கள் இசைப்பயிற்சி பெறாத குழந்தைகளை விட செயல் திறன்மிக்கவர்களாக
இருந்தனர்.இதை PET எனப்படும் பாசிட்ரான் உமிழ்வு வரைபடம் காட்டி(Positron emission
tomography ) மூலமும் காந்த ஒத்ததிர்வு வரைபடம் காட்டி மூலமும் மூளையை விரிவாக
ஆராய்ந்தனர். இசை கேட்டு ரசிக்கும் போது மூளையின் பல பகுதிகள் ஒரு சேர
தூண்டப்படுகின்றன. இசையின் சுருதி,தாளம்,பண்திறம் அதிர்வெண், ஒத்ததிர்வு,
சுரம்,ஒலிப்பண்பு,ஏற்ற இறக்கம் போன்ற பல இயற்பியல் தன்மைகள் மூளையின் வெவேறு
பகுதிகளினால் உணரப்படுகின்றன. அதாவது இசை மூளையின் பல பகுதிகளை சட்டென உறக்க
நிலையிலிருந்து இயக்க நிலைக்கு உயர்த்தி விடுகின்றது. அது போல ஒரு பொருளைக் கொண்டு
வினையாற்றும் போதும் மூளையின் வேறு பல பகுதிகள் தூண்டப்படுகின்றன. இப் பகுதிகள் யாவும்
இசை உணர் பகுதிகளுடன் மேற் பொருந்தியிருக்கின்றன (ovrerlap) .இதனால் இசை கேட்டுக்
கொண்டே வினையாற்றும் போது செயல் திறன் வெகுவாக மேம்படுகின்றது எனக்
கண்டறிந்துள்ளனர். ஆடிப் பாடி வேலை செய்தா அலுப்புத் தெரியாது .இசை கேட்டுக் கொண்டே
வேலை செய்தாலும் உற்சாகம் குறையாது. இதனால்தான் துணி துவைப்பவர்கள், தேய்ப்பவர்கள்
,தைப்பவர்கள் ,கட்டட வேலை செய்பவர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள் எனப் பலதரப்பட்ட
தொழிலாளிகள் சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுப்புத் தெரியாமல் வேலை
செய்கின்றார்கள் போலும். காதலர்களுக்கு இசை காதலை வளர்க்கும் மயக்கும்
மொழி.கோகுலத்தில் கண்ணன் தன் குழலோசையால் பசு மாடுகளைக் கவர்ந்தான். பாம்பாட்டி தன்
மகுடியால் பாம்புகளை மயக்கிப் பிடிப்பார். இசைக்கு இறைவனும் அடிமை என்று பக்திப்
பாடல்களைப் பாடுவார்கள்.இசையால் தாவரங்களின் வளர்ச்சி முடுக்கப்படுகின்றது எனப் பலரும்
சொல்லக் கேட்டிருக்கின்றோம். இசைக்கும், உயிரினங்களுக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு
இருப்பதையே இவை தொட்டுக் காட்டுகின்றன.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
மதிப்பூட்டிய கருத்தாழமிக்க பேச்சு (Value added speech) மிக முக்கியம். அதைப் பழகிக்
கொள்ளாவிட்டால் சராசரி மனிதனைப் போல நாமும் வாழ்ந்து விட்டுப் போக நேரிடும்.பொதுவாக
பெரும்பாலானோரின் பேச்சு 5 % வீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மீதி 95 %
பயனற்றவையாகவே இருக்கும். அதனால் யாருக்கும் யாதொரு பயனும் விளைவதில்லை. இந்த 95
% ல் 2 ௦ சதவீதம் தவிர்க்க இயலாதது. மீதி 80 சதவீதம் தேவையில்லாதது. இந்த 80 %
குறைத்துக் கொண்டால் பேச்சு பயனுள்ளதாக,எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்கும்.
எவ்வளவுக் கெவ்வளவு நம் சொல்லும்,செயலும் பயனுள்ளதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கு
அவ்வளவு நம்முடைய மதிப்பு சமுதாயத்தில் அதிகமாக இருக்கும்.
S என்றால் Story
எந்தக் கருத்தைக் கூறினாலும் அதைக் கேட்போர் உள்வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழி
அக்கருத்தை வழியுறுத்தி ஒரு கதையைப் புனைந்து கூறுவதுதான். உண்மைச் சம்பவங்கள்
ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் அதிகமாக அழுத்தமாக இருக்கும்.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
படிப்பது என்பது கடின உடல் உழைப்பில்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டே படிக்க முடியும். அது
தேவையான விவரங்களை வாழ்க்கைப் பயன் கருதி மூளையில் பதிவு செய்வதாகும் மனம் பூரண
ஒத்துழைப்புக் கொடுத்தால் இடையூறு இன்றி பின்னால் நினைவுபடுத்திக் கொள்வதற்கு எளிதாக
அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து கொள்ள முடிகின்றது .மூளையில் அழிந்து போகாமல்
நிரந்தரமாகத் தங்கி இருக்கும் பதிவுகள் மட்டுமே வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை
செய்கின்றன. ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதால் ,
தேவையான பதிவுகளை ச் செய்யத் தவறி விட்டாலோ அல்லது பதிவுகளை இழந்து விட்டாலோ
.வாழ்க்கையின் பிற்பகுதி தடுமாற்றத்திற்கு ஆளாகும் நிலையே ஏற்படும்
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
பள்ளியில் படிக்கும் போதே பிற மாணவர்களுடன் நட்புடன் பழகி , இணைந்து செயலாற்றும் பண்பை
வளர்த்துக்கொள்ள வேண்டும் .தவறிவிட்டால் பின்னர் சமுதாயத்தில் வாழும் போது தானும்
பிறருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முன் வருவதில்லை , பிறரும் நமக்கு ஒத்துழைப்பு தர
விரும்புவதில்லை . இது சமுதாயத்தின் மிகப் பெரிய பலவீனமாகும் . சமுதாய நலனை
மௌனமாய்ச் சீரழிப்பதில் இதன் பங்களிப்பு அதிகம் . ஒற்றுமையின் அவசியத்தை
ஒவ்வொருவரும் மாணவர்களாக இருக்கும் போதே உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் .அது
சாகாத சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி போன்றது
கணிதம்
கணிதப் பாடத்தில் ஓர் எண்ணோடு மற்றோர் எண்ணைக் கூட்ட அதன் மதிப்பு எப்போதும்
கூட்டப்படும் எண்களைவிடக் கூடுதலாகவே இருக்கும் . இது நமக்கு ஒரு கருத்தை வலியுறுத்திக்
கூறுவதாக இருக்கின்றது. நாம் இணைந்து வேலை செய்யும் பொது ,பயனுறு திறன் மிக அதிகமாக
இருக்கும். அது தனி ஒருவனால் பெறப்படும் பயனுதிறனை விட, அவருடைய செயல்திறன்
எவ்வளவு அதிகமாக இருந்த போதிலும். ,எப்போதும் அதிகமாகவே இருக்கும். எல்லோருடைய
அறிவு நுட்பமும் ஒன்றுபட்டுச் செயல்படும்போது தெரியாமல் செயல் தடைப்பட்டுப்போவதற்கு
காரணமில்லாமற் போகும்.அதனால் பிரச்சினைகளின்றி கடின முயற்சிகளைக் கூட எளிதாக
செய்து முடிக்க முடியும். ஒருவர் ஒரு வேலையைச் செய்ய ஐந்து நாட்கள் ஆனது. அதே வேலையை
ஐவர் சேர்ந்து செய்தால் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று ஒரு கணக்கைப் போட்டு தேர்வில்
மதிப்பெண் வாங்கினோம். ஆனால் அதே கணக்கை சமுதாய வாழ்க்கையில் போட்டுப்பார்த்து
பயன் பெறத் தவறிவிட்டோம்.வெறும் வாய்ப் பேச்சினால் ஒற்றுமை வந்துவிடுவதில்லை .அது
உண்மையில் மனதின் மௌன மொழிகளில் அடங்கி இருக்கின்றது .
வேதியியல்
உயிரியல்
தாவரவியல்
தாவரவியலில் ஒரு மரம் விளை பொருளைத் தருவதற்கு அது நிலத்தடியில் உள்ள வேர் மூலம் நீரை
உறிஞ்சி எடுத்து, புறவெளியில் உள்ள இலைகள் மூலம் கார்பன் டை ஆக்சைடையும் உறுஞ்சி ,சூரிய
ஒளியில் உணவுப் பொருளாய் தனக்கும் பிறருக்கும் உற்பத்தி செய்கின்றது அதன் இடைவிடாப்
பணியே இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ உறுதுணையாக இருகின்றது அதன்.அடிமரம் வீசும் காற்றால்
நிலை குலைந்து சாய்ந்து போய் விடாமல் காக்கின்றது. கிளைகளையும் இலைகளையும் உயர
எடுத்துச் செல்வதால் மரம் அதிக அளவு சூரிய ஆற்றலை உட்கவருகின்றது.அதனால் மரம் இன்னும்
உயர உயர வளருகின்றது.ஒற்றுமையுடன் செயல்பட்டால் மனிதன் இன்னும் உயர்வாக வாழலாம்
என்பதைத்தான் இது அறிவிக்கின்றது
இயற்பியல்
சூழலியல்
மின்ணணுவியல்
மின்ணணுவியலில் ஒரு டையோடு மின் சுற்றில் ஒரு சில வேலைகளைச் செய்யும். சில
டையோடுகள் ஒருங்கிணைந்து மின் சுற்றில் வேலையை செய்யும் போது அதன் செயல் திறன் பட
மடங்காகும். ஒருங்கிணைந்த சிலிகான் சில்லுகள் கனணியில் வியத்தகு பணிகளை விரைந்து
செய்கின்றன.குழுவாக ஒன்று கூடி வேலை செய்தால் பணிப் பளு இல்லை என்பதைத்தான் இந்த
சின்னச் சின்ன டையோடுகள் தெரிவிக்கின்றன .
மொழி
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
கல்வி தேடுதல் கற்கும் கல்வியை முழுமையூட்டுகின்றது . ஒரு சரியான இலக்கைத் தேர்வு செய்ய
இது வழி காட்டுகின்றது . அதனால் சுயமாக ஒரு இலக்கை நோக்கங்கொள்ள மாணவப்
பருவத்திலேயே வாய்ப்பு ஏற்படுகின்றது. இலக்கை நோக்கிய பயணத்தை விடாது தொடர
இயற்கையாகவே ஒரு உந்துதல் உள்ளுக்குள் ஊற்றெடுக்கக் காரணமாயிருக்கின்றது.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
தூய்மை என்பது புறத் தூய்மை மட்டுமல்ல அகத் தூய்மையும் தான்.அகமும் புறமும் நலமாக
இருந்தால் தான் உடலும் உள்ளமும் நலமாக இருந்து ஒத்தியங்கும் வலிமையைப் பெறும்.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
ஒரு குழந்தை பிற்காலத்தில் சிறந்த மாணவனாக வளர சில முக்கியமான பழக்க வழக்கங்களை
பின்பற்றி ஒழுக வேண்டும். அவை பின்வருமாறு .
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
ஒரு மாணவன் கல்வியை இழந்தான் என்றால் அது அவனுக்கு மட்டும் இழப்பு , ஆனால்
நல்லொழுக்கத்தை இழந்தான் என்றால் அது அவன் இருக்கும் சமுதாயத்திற்கே இழப்பு.
ஒழுக்கமின்மையால் ஏற்படும் இழப்பு கல்லாமையால் ஏற்படும் இழப்பை விடப் பல மடங்கு
அதிகம்.ஒழுக்கமில்லாத ஒருவருடைய முன்னேற்றம் அவருக்கு வேண்டுமானால் முன்னேற்றமாகத்
தோன்றலாம். ஆனால் உண்மையில் அது உறுதிச் சமநிலையில் இல்லாத (unstable equilibrium) ஒரு
முன்னேற்றமாகவே இருக்கும். அது நுண் கிருமிகளை போல விரைந்து பரவி தீவிரமாகி
சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சீரழித்து விடும் அபாயத்தைக்
கொண்டுள்ளது.நல்லொழுக்கத்தைப் போற்றுவதால் ஒருவர் தன்னோடு தன் இனத்தரையும்,
சமுதாயத்தையும் வளப்படுத்த முடியும். ஒருவர் முன்னேறுவது மற்றவர்களை
முன்னேற்றுவதற்குத்தான் என்பது இயற்கை . இயயற்கையின் விசாலமான
நடைமுறைகளிலிருந்தே இதை நாம் கற்றுத் தெளிய முடியும் . பெரும்பாலான மாணவர்
தோல்வியடைவது , திறமையின்மையாலோ , அறிவின்மையாலோ இல்லை. மாறாக சுய
விருப்பமின்மையாலும், முறையான வழிகாட்டுதல் இல்லாமையாலும் . அர்ப்பணிப்பு இன்மையாலும்
, ஒழுக்கமின்மையாலும் தான். இவை சமுதாயத்தில் மிகுந்து வருவதால் மாணவர்கள்
ற்றிக்கொள்ள வாய்ப்பாக அமைகின்றது. நல்லொழுக்கம் உறுதியாக இருந்தால் சமுதாயத்தில்
மிகுந்து வரும் எதிர்மறைக் காரணிகளை எளிதாக, வெகு இயல்பாக கட்டுப்படுத்தி விட முடியும்.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க எல்லோருக்கும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக
ஒழுக்கம் பொதுவாக எளிமையானதாகவே (S for Simple) இருக்கும். ஏனெனில் ஒழுக்கம்
காரணமாக ஒருவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாடுகளை அவரே
ஏற்றுக்கொள்வது என்பது எப்போதும் எளிமையானதே. கட்டுப்பாடுகள் போலியாக இருக்கும் போது
ஒழுக்கம் கடினமாகி விடுகின்றது அலைபாயும் மனதின் சுய விருப்பத்தைப் பொறுத்து அது
எளிமையானதாகவோ அல்லது கடுமையானதாகவோ தோற்றம் தரலாம் .தீய ஒழுக்கங்களை
மறைமுகமாகப் பின்பற்றி ஒழுகுவதற்கு ஒரு வலிமையான காரணம் எப்படி உள்ளுக்குள்
இருக்கின்றதோ அதைப்போல நல்லொழுக்கங்களையும் வெளிப்படையாகப் பின்பற்றி ஒழுக மனதால்
ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு காரணம் உறுதியாக இருக்கவேண்டும் .அப்போது தான் மன மாற்றமின்றி
வாழ்க்கை முழுதும் நல்லொழுக்கங்களை மட்டும் பின்பற்றி ஒழுக முடியும் .நல்லொழுக்கம்
சமுதாயத்தில் வாழும் மற்றவர்களுக்கு ஒரு நல்வழிகாட்டியாகவும் புதியவர்களுக்கு முன்
மாதிரியாகவும் இருந்தால் சாகாத சமுதாயத்தில் வாழும் மக்களுக்கு ஒரு நிரந்தரமான
பாதுகாப்பாக இருக்கும் . அந்த வாக்குறுதியே நலமான சமுதாயத்தின் உண்மையான அறிகுறி.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
குழந்தைகள் கல்வி கற்று அதிகமாய்ச் சம்பாதிக்க வேண்டும் ,உயர் பதவி வகிக்க வேண்டும் என்று
பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளும் அளவில்லாத முயற்சியில் ஒரு சிறிதளவு கூட
நல்லொழுக்கங்களை பிறழாது ஒட்டி ஒழுக வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
ஏனெனில் தன் பிள்ளைகள் சீரழிந்து வரும் சமுதாயத்தில் பிழைத்து வாழ நல்லொழுக்கங்களை
விட கொஞ்சம் தீய ஒழுக்கங்களும் தேவை என்ற தன்னம்பிக்கையை வளர்ந்துக்
கொண்டுள்ளார்கள்.அதனால் தீய ஒழுக்கங்களை கற்றுக் கொள்ளும் பிள்ளைகளுக்கு
திருத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போகின்றது. தீய ஒழுக்கம் மிகுந்த சமுதாயம் ஒரு
சில தீயவர்களுக்கு வேண்டுமானால் தாற்காலியமான நலம் பயக்கலாம் ஆனால் வளரும்
சமுதாயத்திற்குப் பாதுகாப்பற்றது , சாகாத சமுதாயத்திற்கு நிரந்தரமான நலமே பாதுகாப்பானது
என்பதை இவர்களாக உணர கல்வியில் ஒரு மாற்றத்தை ஆசிரியர்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Saturday, March 9, 2019
என்ற குறள் மூலம் வள்ளுவர் இக் கருத்தினை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.
கற்றவர்கள் கூட தவறான பாதையில் நடக்கும் நிலைக்கு இதுவே அடைப்படையாகின்றது. "பல
கற்றும் கல்லார் அறிவில்லாதார்" என்று இவர்களை அன்றைக்கே வள்ளுவர் இனங்காட்டியுள்ளார்.
தவறான இலக்குகளை நோக்கிப் பயணிக்கத் தூண்டும் எண்ணங்களின் ஆக்கிரமிப்பை
அனுமதிக்கும் மனம் , சரியான இலக்குகளைத் தேர்வு செய்து அதை எட்டுவதற்கான
முயற்சிகளைத் தடுத்து விடுகின்றது. சுய நலமிக்க எண்ணங்கள் சமுதாய நலத்தைப்
பாதுகாப்பதில்லை .இந்த சுயநலமிக்க எண்ணங்களை பெரும்பாலும் சமுத்தியதிலிருந்தே
ஒவ்வொருவரும் கற்றுக் கொள்கின்றார்கள். தனி மனித ஒழுக்கமும், சமுதாயத்தின்
ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையது . ஒரு சராசரி மனிதனை
அடையாளம் காட்டுவது அவன் வாழும் சமுதாயமே . ஒரு நல்ல சமுதாயத்தில் வாழும் மக்கள்
என்றைக்கும் நல்லோர்களாகவே இருப்பார்கள் .அது வளரும் தீய எண்ணங்களை யாரும்
அறிவதற்கு முன்பாகவே களை எடுத்து அழித்து விடுகின்றது.அப்படிப்பட்ட சமுதாயம் தனி
மனிதர்களின் வாழ்க்கைக்கு வலிமையான பாதுகாப்பாய் இருக்கும். ஒரு தீய சமுதாயத்தில்
வாழும் மக்கள் நல்ல புறத்தோற்றத்துடன் தீய அகத்தோற்றம் கொண்டிருப்பார்கள்.அங்கு தீய
எண்ணங்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து வருவதால் தனிமனிதர்களின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகின்றது. எனவே சாகாத சமுதாயத்தில் நாமும் நமக்குப் பிறகு நம் சந்ததியினரும்
பாதுகாப்பாய் வாழவேண்டுமானால் சமுதாய நலங்காகும் எண்ணங்களை வளப்படுத்திக்
கொள்ளவேண்டும். இதில் நாம் செய்யும் பிழைகள் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத
இழப்புக்களை ஏற்படுத்தும்
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
வாழ்க்கையின் பயனுறுதிறன்
வாழ்க்கையின் பயனுறுதிறன்
இதில் ஒவ்வொருநாளும் தூக்கத்திற்கு 8 மணி நேரமும் , காலைக் கடன் 2 மணி நேரமும். உணவு
சாப்பிடுதல் , காபி ,தேநீர் அருந்துதல், 2 மணி நேரமும் ஆடை அலகாரம் 1 மணி நேரமும் ,
தொலைக்க காட்சி, செல் போன் 3 மணி நேரமும் , பணி நேரத்தில் அரட்டை 2 மணி நேரமும் ,
கோயில் ,நடைப் பயிற்சி , விளையாட்டு ,வெட்டிப் பொழுது 2 மணி நேரமும் என மொத்தம் 20
மணி நேரத்தை செலவழிக்கத் தயக்க காட்டுவதில்லை. சமுதாயத்திற்குப் பயனுள்ளவாறு
செலவழிக்கக் கிடைக்குக் நேரம் 40 x 365 x 4. ஊழல் ,லஞ்சம் ,காலங் கடத்துதல் போன்ற
காரணங்களினால் பலர் செய்யும் சமுதாயப் பணிகளைக் கூட மக்களுக்குப் பயனுள்ளவாறு
செய்வதில்லை . இதனால் பயனுறு காலம் இன்னும் குறையவே இருக்கும் எனலாம்
.இக்கணக்கீட்டின்படி 80 ஆண்டுகாலம் வாழும் ஒருவரின் பயனுறுதிறன் [ (40 x 365 x 4)/ (80 x
365 x 24)] x 100 = 8.33 % பயனுறுதிறனை அதிகரிக்க கூடுதலாகத் தூங்கும் நேரத்தையும்,
ஒவ்வொருநாளும் வீணாகக் கழிக்கும் நேரத்தையும் குறைத்துக் கொள்வார்கள் . கிடைக்கும்
நேரத்தை எவ்வளவு பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதைப் பொறுத்தே
ஒருவருடைய வாழ்க்கையின் பயனுறுதிறன் அமையும்.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, சிலர் நன்றாகப்
படிப்பார்கள், சிலர் அப்படி இல்லை. சிலர் தேர்வுகளில் 100 க்கு 100 வாங்குவார்கள் சிலர்
குறைவான மதிப்பெண் வாங்குவார்கள், அதில் ஜீரோ வாங்குபவர்கள் கூட இருப்பார்கள்.
இதற்கான காரணத்தை நாம் சுயமாகச் சிந்தித்து அறிய வேண்டும்.. இல்லாவிட்டால் மாணவர்கள்
தங்கள் வாழ்க்கையைத் தாங்களே பாழாக்கிவிடக் காரணமாகி விடுவார்கள் .
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
creative thoughts
பூட்டும் சாவியும்
பல சாவிகள் திறக்கும் ஒரு பூட்டை விட பல பூட்டுக்களைத் திறக்கும் ஒரு சாவி மேலானது. அது
போல ஒரு பிரச்சனைக்குப் பல தீர்வுகள் என்பதை விட பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்பது
பயனுள்ளது . பல தீர்வுகள் இருப்பதாகச் சொன்னால் அது ஒரு சிலருக்கு அனுகூலமாகவும் வேறு
சிலருக்கு பயனற்றதாகவும் இருப்பதால் ஏற்றுக்கொள்ளுவதில் சிக்கல் ஏற்படுவது தவிர்க்க
இயலாததாகின்றது,
பூட்டு எங்கிருந்தாலும் சாவி எப்போதும் பையில் அல்லது கையில் இருக்க வேண்டும் என்பதற்காக
பூட்டு சிறியதாக, பெரியதாக எப்படி இருந்தாலும் சாவி எப்போதும் பூட்டை விட சிறியதாகவே
இருக்கும், ஒருவருடைய வீட்டிலுள்ள பூட்டுக்கள் அனைத்திற்குமுரிய சாவிகள் அவருடைய
கையில் இருப்பதைப் போல அவருடைய பிரச்சனைகள் அனைத்திற்கும் உரிய தீர்வுகள் அவருடைய
சிந்தனையில் இருக்கின்றன. சாவியைத் தொலைத்தவர்கள் மாற்றுச் சாவி தேடுவதைப் போல
சுய சிந்தனையற்றவர்களே தீர்வை வெளியில் தேடுவார்கள்.