You are on page 1of 17

BAHAGIAN A

கேள்வி 1 (அ)

அ. அமைப்பு அடிப்படடையில் வாக்கியங்கள்

சொற்கள் பல தொடர்ந்து நின்று ஒரு கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது


சொற்றொடர் எனப்படும். சொற்றொடரை ‘ வாக்கியம்’ எனவும் வழங்குவர். வாக்கியத்தைக்
கருத்தை ஒட்டியும் அமைப்பை ஒட்டியும் வகைப்படுத்துவர். அவை, கருத்துவகை வாக்கியம்,
அமைப்புவகை வாக்கியம் என இரு வகைப்படும்.

வாக்கியங்களை அமைப்பு அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை,

i) தனி வாக்கியம்

ii) தொடர் வாக்கியம்

iii) கலவை வாக்கியம்

i) தனி வாக்கியம்

எடுத்துக்காட்டு:

(அ) பாண்டியர் தமிழை வளர்த்தனர்.

(ஆ) சேர, சோழ, பாண்டியர் மூவரும் தமிழை வளர்த்தனர்.

முதல் வாக்கியத்தில் ‘பாண்டியர்’ என்பது எழுவாய்; ‘வளர்த்தனர்’ என்பது பயனிலை;


‘தமிழை’ என்பது செயப்படுபொருள்.

இரண்டாவது வாக்கியத்தில் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்றும் எழுவாய்கள்;


‘வளர்த்தனர்’ என்பது பயனிலை; ‘தமிழை’ என்பது செயப்படுபொருள்.

இவ்வாறு,  ஓர் எழுவாயோ,  ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ வந்து,  ஒரே


பயனிலையைக் கொண்டு முடியும் வாக்கியம் தனிவாக்கியம் எனப்படும்..

எழுவாய் இல்லாமலும் தனிவாக்கியம் அமைவது உண்டு.

எடுத்துக்காட்டு:
(அ) தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும்.

இவ்வாக்கியத்தில் ‘நீ’ என்பது மறைந்து உள்ளது.

இவ்வாறு, எழுவாய் மறைந்து நிற்பதைத் ‘தோன்றா எழுவாய்’ என்பர்.

செயப்படுபொருள் இன்றியும் தனி வாக்கியங்கள் அமையும்.

எடுத்துக்காட்டு:

(அ) பாவை வந்தாள்

இவ்வாக்கியத்தில், செயப்படுபொருள் இல்லை.

இவ்வாறு, செயப்படுபொருள் இல்லாமல் வரும் வாக்கியத்தை, ‘செயப்படு பொருள்


குன்றிய வாக்கியம்’ என்பர்.

ii) தொடர் வாக்கியம்

எடுத்துக்காட்டு:

அ) செல்வி காலையில் எழுந்தாள்; கருத்துடன் கற்றாள்; வாழ்வில் உயர்நத


் ாள்.

ஆ) அன்பரசன் அயராது உழைத்தான்; அதனால் வெற்றிபெற்றான்.

இ) சமயம் என்பது நன்னடத்தை; வெறும் நம்பிக்கை அன்று.

மேற்காட்டிய வாக்கியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்று வந்துள்ளன;


கருத்துத் தொடர்புடனும் அமைந்துள்ளன.

இவ்வாறு, தனி வாக்கியங்கள் பல, தொடர்ந்து வருவதும், ஒரே எழுவாய், பல


பயனிலைகளைப் பெற்று வருவதும் தொடர் வாக்கியம் எனப்படும்.

iii) கலவை வாக்கியம்

எடுத்துக்காட்டு:

அ) நாடு முன்னேற வேண்டுமானால் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ


வேண்டும்.
என்னும் இவ்வாக்கியத்தில், நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பது
முதன்மை வாக்கியம். ‘நாடு, முன்னேற வேண்டுமானால்’ என்பது சார்பு வாக்கியம்.

ஆ) ‘ஆண் மக்களே! பெண் இனத்திற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை


கொடுங்கள்; அதுவே நாகரிகம்’ என்று திரு.வி.க கூறுவார்.

இவ்வாக்கியத்தில், திரு.வி.க. கூறுவார் என்பது முதன்மை வாக்கியம். ‘பெண்


இனத்திற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; அதுவே நாகரிகம்’ - என்பன சார்பு
வாக்கியங்கள்.

இவ்வாறு ஒரு முதன்மை வாக்கியம் அதனோடு தொடர்புடைய ஒரு வாக்கியத்துடனோ,


பல சார்பு வாக்கியங்களுடனோ பொருந்த வருவது கலவை வாக்கியம் ஆகும்.

கேள்வி 1 (ஆ)

வாக்கியங்களில்‌காணப்படும்‌பிழைகள்‌

நாம்‌எழுதும்‌வாக்கியங்களில்‌பல்வேறு பிழைகள்‌ஏற்படுகின்றன என்பது‌. பேசும்‌பொழுது


ஒலிப்பில்‌/உச்சரிப்பில்‌ பிழைகள்‌ எழுகின்றன; இலக்கணப்‌ பிழைகள்‌ ஏற்படுகின்றன;
சொல்லமைப்பு வரிசையில்‌ பிழைகள்‌ காணப்படுகின்றன. இவை எல்லாம்‌ மொழி வளத்தைக்‌
கெடுக்கக்கூடியவை; குழைக்கக்கூடியவை என்பதில்‌ ஐயமில்லை. மொழிவளம்‌ சிறப்பாக
அமைய மொழியமைப்பு மற்றும்‌ மொழிப்பயன்பாடு இரண்டிலும்‌ ஒருவருக்கு ஆற்றல்‌ அதிகரிக்க
வேண்டும்‌. எனவே, மொழியமைப்பில்‌ பிழைகள்‌ தவிர்க்கப்படவேண்டும்‌. மொழியைப்‌
பயன்படுத்துவதில்‌ஆற்றல்‌பெருக வேண்டும்‌.

வாக்கிய அமைப்பில்‌பிழைகள்‌

(i) ஒலி - எழுத்து: இவற்றில்‌ஏற்படும்‌பிழைகள்‌

(a) நேற்று எங்கள்‌ஊரில்‌நல்ல மலை பெய்தது.

மழை என்பது மலை என்று எழுதப்பட்டுள்ளது. இதனால்‌ பொருண்மை தவறு


நிகழ்கிறது. இது தவிர்க்கப்படவேண்டும்‌. /ல/, /ள/, /ழ/ போன்றவற்றின்‌ ஒலி
வேறுபாடுகள்‌உணரப்படவேண்டும்‌.

(b) அந்தப்‌பல்லியைப்‌பார்‌.

பள்ளி என எழுதப்பட வேண்டியது, பல்லி என்று எழுதப்படுவதால்‌ பிழை


ஏற்பட்டுள்ளதோடு பொருள்‌வேறுபாடும்‌ஏற்பட்டுள்ளது.

(c) அந்த இரண்டு மரம்கள்‌மிக உயரமானவை.

தமிழ்‌ மொழியில்‌ -ம்க- என்ற ஒலித்தொடர்‌ அல்லது எழுத்துக்கோவை


இடம்பெறுவதில்லை. மேலும்‌ புணர்சச
் ி விதியின்படி, (ம்‌ ங்‌/ - ௧) மாற்றம்‌
சுட்டப்படவேண்டும்‌.

எடுத்துக்காட்டு:

மரம்‌+ கள்‌= மரங்கள்‌

(d) னான்‌வேகமாக ஒடினேன்‌.

இதில்‌ “னான்”‌ என்று எழுதப்பட்டுள்ளது ஒலிப்பில்‌ வேறுபாடு காட்டாவிட்டாலும்‌,


தமிழ்‌எழுத்து முறைப்படி, மொழி முதலில்‌நகரமே எழுதப்பட வேண்டும்‌. இது எழுத்து
முறையில்‌ பின்பற்றப்படவேண்டிய விதி. அதாவது, “நான்‌” என்றே
எழுதப்படவேண்டும்‌.

(e) இங்கே ஒரு சிவன்‌கோஇல்‌இருக்கிறது.


தமிழ்‌ எழுத்தமைப்பு முறைப்படி, உயிரெழுத்து மொழியிடையேயும்‌
மொழியிறுதியிலும்‌ எழுதப்படுவதில்லை. எனவே, மொழி இடை - இறுதியில்‌
உயிர்மெய்‌எழுத்துகளை எழுதும்‌பயிற்சி நிறைய வழங்கப்படவேண்டும்‌.

(f) நீங்கள்‌சொன்னால்‌அவர்‌கேப்பார்‌.

“கேப்பார்‌” என்பது பேச்சு மொழியில்‌ பயன்படுத்தப்படும்‌ சொல்லாகும்‌.


பேச்சுத்தமிழின்‌ தாக்கத்தால்‌ எழுத்து மொழியில்‌ இந்தப்‌ பிழை ஏற்படுகிறது. பேச்சு
மொழியில்‌ இது சரியான பயன்பாடு என்றாலும்‌, நிலைபேறு எழுத்து வழக்கில்‌ இது
பிழைதான்‌.

(ii) சொல்லமைப்பில்‌: இலக்கணக்கூறுகளின்‌பயன்பாட்டில்‌ஏற்படும்‌பிழைகள்‌

வாக்கிய அமைப்பில்‌ இடம்‌ பெறும்‌ கூறுகளில்‌ இலக்கணம்‌ முக்கியமான பங்கினைப்‌


பெறுகிறது. அதனால்‌ பெரும்பாலான பிழைகள்‌ இலக்கண அமைப்பில்‌, குறிப்பாகச்‌
சொல்லமைப்பில்‌ஏற்படக்காண்கிறோம்‌.

(a) எளிய வாக்கியங்களில்‌இலக்கணப்‌பிழைகள்‌


 எழுவாய்‌- பெயர்ப்பயனிலை : பொருத்தம்‌

அவை பெரிய வீடு. : தவறான வாக்கியம்‌


அவை பெரிய வீடுகள்‌. : சரியான வாக்கியம்‌

அது வீடு – ஒருமை


அவை வீடுகள்‌- பன்மை
(ஒருமை - பன்மை விளக்கம்‌தருதல்‌)

 அவர்‌நல்லவர்‌: சரியான வாக்கியம்‌.


அவர்‌நல்ல : தவறான வாக்கியம்‌

நல்ல என்பது பெயரடையாகும்‌.


நல்லவர்‌என்பது பண்புப்பெயராகும்‌.

பெயரடை வாக்கியத்தில்‌ கருத்தை நிறைவு செய்யாது. இஃது எப்பொழுதும்‌


பெயருக்கு முன்னர்‌அடையாக வந்து வழங்கும்‌.
 அஃது ஒரு புத்தகம்‌. : சரியான வாக்கியம்‌
அந்த ஒரு புத்தகம்‌. : தவறான வாக்கியம்‌

'அது' எழுவாயாக வரும்‌. ஆனால்‌, அந்த' என்பது பெயரடையாகவே வரும்‌.

மேலே உள்ள வாக்கியத்தில்‌ புத்தகம்‌ என்பது ஒரு தொடராகும்‌. அஃது ஒரு


வாக்கியம்‌ அன்று. இவ்விதிகள்‌ தெளிவுப்படுத்தப்பட்டால்‌, இது போன்ற
பிழைகள்‌நிகழா.

கேள்வி 2 (அ)

ஒருவர் தம் உள்ளக் கருத்துகளை வெளியிடும் வாயில்களாக அமைவன, அவர்தம்


பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றுள் எழுதுதல் என்பது,    தனித்திறன்.    அவ்
எழுத்து,  கதையாகவோ,  கட்டுரையாகவோ வெளிப்படலாம். ‘ஒரு பொருளைப் பற்றி இலக்கண
முறையில் கட்டுரைப்பது கட்டுரை.’ ‘கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.’  உள்ளத்தில்
தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.  ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம்’.
இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு
பொருளைப் பற்றி, ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக்
‘கட்டுரை’ எனலாம்.

கெய்ரொ அமெரிக்கப்‌ பல்கலைக்கழகத்தைச்‌ சேர்நத


் தொம்‌ ஜோன்சன்‌ பரிந்துரைத்த
கட்டுரை எழுதுவதற்கான பத்துப்‌படிநிலைகளை இப்பொழுது பார்ப்போம்‌.
முதல்‌படிநிலை : ஆய்வு மேற்கொள்ளல்‌

கட்டுரை எழுதுதலின்‌ முதல்‌ படிநிலை கட்டுரை தொடர்பான தகவல்களைத்‌ தேடல்‌.


அதற்கு இணையம்‌, நூலகம்‌, ஆய்வுத்‌தரவுகள்‌முதலியவற்றை நாடலாம்‌. குறிப்பு எடுத்தல்‌. நல்ல
சிந்தனையாளர்களின்‌கருத்துகளில்‌மூழ்குதல்‌.

இரண்டாம்‌படிநிலை: பகுத்தாய்தல்‌

தேவையான தகவல்களைச்‌ சேகரித்த பின்‌வாசித்த கட்டுரைகளின்‌ வாதங்களை அலசி


ஆராய்க. காரண காரியங்களை ஏரணங்களை, சான்றுகளை அடையாளங்காண்க. அந்த
வாதங்களில்‌ உள்ள பலம்‌ பல்வீனஙங்களை அடையாளங்‌ காண்க. கட்டுரை எழுதுவதன்‌
தொடக்கமே மற்றக்‌கட்டுரையாளர்களின்‌கட்டுரைகளைப்‌பகுத்தாய்தலில்‌தொடங்குகிறது.

மூன்றாம்‌படிநிலை : கருத்தூற்று முறையில்‌சிந்தித்தல்‌

உங்கள்‌ கட்டுரைக்கு நீங்களே சுயமாகச்‌ சிந்தித்த கருத்துகள்‌ தேவை. அதற்கு நீங்கள்‌


ஏரணமாகச்‌ சிந்திக்க வேண்டும்‌. கட்டுரை தொடர்பாகப்‌ பல வினாக்களை எழுப்புங்கள்‌. விடை
காண முயலுங்கள்‌. சுயமான கருத்துகளோடு கட்டுரை எழுத அது உதவும்‌.

நான்காம்‌படிநிலை : கட்டுரைக்‌கரு

ஒவ்வொரு கட்டுரையும்‌ ஏதாவது ஒன்றைப்‌ பற்றியதாக இருக்கும்‌. அஃது என்ன என்று


அடையாளங்காணுங்கள்‌. முழு வாக்கியமாக அதை எழுதுங்கள்‌. கட்டுரைக்‌ கரு என்பது
கட்டுரையில்‌ நீங்கள்‌ முதன்மையாகக்‌ கூற விரும்புகிற கருத்து. ஒரு நல்ல கட்டுரையைக்‌
கட்டுரைக்‌கரு இல்லாமல்‌எழுத இயலாது.

ஐந்தாம்‌படிநிலை : கட்டுரை மேலோட்ட வரைவு உருவாக்குதல்‌(சட்டகம்‌)

அடுத்த நிலை கட்டுரைக்கான மேலோட்ட வரைவு உருவாக்குதல்‌. பத்தியை ஒரு வரி


வாக்கியத்தில்‌ எழுதுக. அதன்‌ கீழ்‌ புள்ளியைக்‌ கொண்டு பத்தியில்‌ எழுதவேண்டிய
குறிப்புகளைக்‌ குறிப்பிடுக. திட்டமிடுக; மாற்ற வேண்டியவற்றை மாற்றுக. வாதங்களை
ஒருங்குபடுத்துக. கட்டுரையை ஒழுங்குபடுத்துக.

ஆறாம் படிநிலை : முன்னுரை எழுதுதல்

கட்டுரைக்கான முன்னுரையை எழுதுக. முன்னுரை படிப்போரைக்‌கவரும்‌

வண்ணம்‌இருத்தல்‌வேண்டும்‌.
ஏழாம் படிநிலை : பத்திகள்‌எழுதுதல்‌

ஒவ்வொரு பத்தியும்‌ ஒரு கருத்தை மையமாக வைத்து எழுதப்பட வேண்டும்‌. பத்தியைக்‌


கருவாக்கியத்தோடு தொடங்குக. அதனைத்‌ தொடர்ந்து ஆதரவுக்‌ கருத்துகள்‌, சான்றுகள்‌,
விரிவுகள்‌, விளக்கங்கள்‌ முதலியவற்றைக்‌ கொண்டு உமது கருத்தைப்‌ பத்தியில்‌ தெளிவாகவும்‌
அழுத்தம்‌ திருத்தமாகவும்‌ எழுதுக. படிப்போர்‌ உங்கள்‌ முன்னால்‌ உட்கார்நத
் ிருப்பது போலவும்‌
நீங்கள்‌அவர்‌முன்னால்‌பேசுவது போலவும்‌நினைத்துக்கொண்டு எழுதுங்கள்‌.

எட்டாம் படிநிலை : முடிவுரை

கட்டுரையை நேர்த்தியான வகையில்‌ முடித்துவைத்து விட்டு வெளிவரவும்‌.


தொகுக்கலாம்‌; சிந்தனையைத்‌ தூண்டும்‌ வகையில்‌ அமைந்த கூற்றோடு நிறைவுசெய்யலாம்‌.
நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள்‌விடுக்கலாம்‌.

ஒன்பதாம் படிநிலை : மேற்கோள்‌

கடன்‌ வாங்கிய கருத்துகளை மறவாமல்‌ கட்டுரையில்‌ குறிப்பிடத்‌ தவறாதீர்கள்‌.


கருத்துக்கொடையாளர்களுக்கு உரிய மரியாதையை வழங்கத்‌தவறாதீர்கள்‌.

பத்தாம் படிநிலை : மொழி

எந்த எழுத்துப்‌ படைப்பாக இருந்தாலும்‌ அதில்‌ எழுத்துப்பிழைகள்‌, இலக்கணப்பிழைகள்‌,


வாக்கியப்‌ பிழைகள்‌, முதலியவை இருக்குமேயானால்‌ படிப்போர்‌ அதை விரும்பிப்படிக்கமாட்டார்‌.
கருத்தொருமை, பொருட்பொலிவு, ஒழுங்கு, நடை முதலியவை படிப்போரை ஈர்க்கும்‌ வகையில்‌
இருத்தல்‌வேண்டும்‌.
கேள்வி 2 (ஆ)

சிறுவயதிலேயே வாசிப்பதும் எழுதுவதும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவையாக


இருப்பதனால் கட்டுரை எழுதுவதற்கு பள்ளிக்காலத்திலேயே மாணவர்களுக்குக் கற்றுக்
கொடுக்கப்படுகின்றது. கட்டுரை உரைநடை வகையைச் சேர்நத
் து. அதாவது இது பாடலோ,
கவிதையோ அல்ல; அவை இன்னொரு இலக்கியவகை. உரைநடைக் கட்டுரையில் பலவகைகள்
உள்ளன. பொதுவான கட்டுரை, அழகியல் கட்டுரை, முன்னுரைக் கட்டுரை, ஆய்வுக்கட்டுரை,
விளக்கவுரைக் கட்டுரை, பிரசங்கக் கட்டுரை என்று இதைப் பலவகையாகப் பிரிக்கலாம்.
பொதுவான கட்டுரை என்பது எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் எழுதப்படுவது. அதைக்
கதைபோலக்கூட எழுதலாம். அத்தகைய கட்டுரைக்கு அதிக ஆராய்ச்சிகள் அவசியமில்லை.
மேற்கோள்கள் தேவையில்லை. வாசிப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அழகான
மொழிநடையில் அந்தக் கட்டுரை எழுதப்படலாம். பொதுவான கட்டுரை சொல்லவருகின்ற
விஷயத்தை மட்டும் விளக்குகிறதாக இருக்கும். கருப்பொருளை நளின நடையில் ஈர்க்கும்
விதத்தில் சொல்லுவது மட்டுமே அதன் நோக்கம்.

ஒரு நல்லக் கட்டுரையில் இருக்க வேண்டிய சில முக்கியக் கூறுகளை தேவநேயப்


பாவாணர் அழகாக கூறுகிறார். அவற்றுள் ஐந்தனை மட்டும் இப்போது பார்ப்போம்.

(i) ஒருமைப்பாடு
ஒரு கட்டுரை ஒரே பொருளைப்பற்றியதா யிருத்தல் வேண்டும்; பல பொருள்பற்றியதாயும்
மற்றொன்று விரித்தலாயுமிருத்தல் கூடாது. ஒவ்வொரு பாகியும் ஒவ்வொரு கருத்தையே
கொண்டிருத்தல் வேண்டும்.

(ii) பொருட்பொலிவு

சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் முறையில், பல சிறந்த கருத்துகள் செறிந்திருப்பது


கட்டுரைக்குச் சிறப்பாம். கட்டுரைப் பொருள் சரியாக வரையறுக்கப் பெறுவது
இன்றியமையாதது.

(iii) பத்தியமைப்பு

ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு தனிப்பத்தியில் அமைத்து வரைதல் வேண்டும். ஒரு


பெருங்கருத்தில் பல உட்கருத்துகளிருக்கு மாயின், அந்த உட்கருத்துகளையும் வெவ்வேறு
பத்தியிலமைத்தல் வேண்டும். தோற்றப் பொலிவு, படிப்பு வசதி, பொருள் தெளிவு ஆகிய மூன்றும்
பத்தியமைப்பின் பயனாம்.

(iv) நன்னடை

ஒரு மாணவன் தன் சொல்லறிவிற்கு ஏற்றபடி, எளிய சொற்களையும்


சொற்றொடர்களையுமாவது, உயர்நத
் சொற்களையும் சொற்றொடர்களையுமாவது
அமைத்தெழுதலாம். ஆயின், இலக்கணப்பிழை எதுவுமிருத்தல் கூடாது. ஆகவே, சொன்னடை
பலதிறப் படினும், இலக்கணநடை அவை எல்லாவற்றிற்கும் இன்றியமையாதது என்பதை,
நினைவிலிருத்துதல் வேண்டும்.

உயர்நத
் சொன்னடை என்பது, 'ஆண் யானை கத்தினது' என்பதைக் 'களிறு பிளிறினது'
என்று கூறும் தகுந்த சொன்னடையேயன்றி, 'யானை சென்றது' என்பதை 'வேழம் படர்ந்தது'
என்று கூறும் அருஞ்சொல் நடையன்று.

உயர்நடை எல்லார்க்கும் இயல்பாய் அமையாமையானும், பெரும்பாலும் அறிஞரைப்


பின்பற்றிப் பயில்வதாலேயே பலர்க்கு உயர்நடை அமைவதானும், நடையிறல் பிறரைப் பின்பற்றிப்
பயிலுந்திறம் கடியப்படுவதன்று. ஆயின், பின்பற்றப்படுவார் இலக்கண அறிவில்
உயர்நத
் ாராயிருத்தல் வேண்டும்.

பிறர் நடையைப் பின்பற்றுதலாவது, அவர் நடையைப் பன் முறை படித்தும் வரைந்தும்


பயின்று அதைத் தன்னடையாக்கிக் கொள்வதல்லது, அவர் எழுதியதில் ஒரு பகுதியை
உருப்போட்டுக் கொள்வதன்று. 'காக்கை அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையுங் கெட்டது
போல', பிறர்நடையைப் பின்பற்றும் திறமையில்லாதார் பிறர் நடையைப் பின்பற்றின், தன்நடையுங்
கெடுவரென்பது திண்ணம்.
(v) தெளிவும் துப்புரவும்

கட்டுரை முழுதும் இருண்ட மையில் தெளிவாக எழுதப்பெறல் வேண்டும். விளங்காத


அளவு கூட்டெழுத்தா யெழுதுதல் கூடாது. அடித்தடித் தெழுதாமல் ஒரே தடவையில்
செவ்வையாய் எழுதப் பழகிக்கொள்ளவேண்டும்.

எண்ணாமல் விரைந்தெழுதுவதினாலேயே பெரும்பாலும் அடித்தெழுத நேர்கிறது.


அடித்தெழுதுவதைச் சற்று எண்ணியெழுதினால், முதன்முறையிலேயே திருத்தமாய்
எழுதிவிடலாம். எழுத்துவேகத்தைப் படிப்படியாய்த்தான் மிகுத்தல் வேண்டும்.

BAHAGIAN B

கேள்வி 1

நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்தத


் ீர்கள் என்று கேட்டால் ,
அதற்கு பெரும்பான்மையானோர் பல எண்களைக் கூறுவார்கள். ஆனால், நீங்கள் கடந்த ஆண்டு
எத்தனை புத்தகம் வாசித்தீர்கள் என்று கேட்டால் பலரிடம் இல்லை என்று கூட பதில் வரும் .
நம்மிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது.

இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும்,


மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், ஆசிரியர், மாணவர்களின் புத்தகம் படிக்கும்
பழக்கத்தைக் களைந்துவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன எனலாம்.
ஆனால், புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும் இரசனையும்
தரவல்லது. புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. மனிதனின்
கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே என 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த
விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

நான்கு மாதக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாம் தொலைக்காட்சி முன்


அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் தொலைக்காட்சித் திரையைப் பார்க்க
ஆரம்பிக்கின்றது. குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா
இங்கேதான் ஆரம்பம். வாசிப்புத் திறன் இருக்கும் குழந்தைகள் பேச்சில் தெளிவும், ஞாபக
சக்தியும், கருத்தாழமும், சொல்வதைக் கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும், பொது
அறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.

நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்காக புத்தகம் அச்சிட்டு,


குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும்
இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை
செய்கின்றனர். உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும்
இருக்கின்றனர்.

நூல் வாசிப்பு என்பது சிந்தனையைத் தூண்டும் யோகா போன்றது; ஒரு தியான


நிலையைப் போன்றது; ஒரு உளவியல் தெரபியைப் போன்றது. வரலாறு படைக்க விரும்புவோர்
முதலில் வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் புத்தக
வாசிப்புப் பழக்கமே முதல் தகுதி என்று ஐரோப்பாவை தனது போர் வியூகத்தினால் ஆண்ட
மாவீரன் நெப்போலியன் சொல்லியிருக்கிறார். தனிமையையும், கவலையையும் விரட்டுவது
நூல்கள். வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே
வரம் பெற்றோர். ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு
மூடப்படுகிறது. மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள். குழந்தைகள்,
நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்களைப்
பரிசளியுங்கள்.

பெரும்பாலானோர் தங்களின் புத்தக ஆர்வத்தை குங்குமம், பொன்னியின் செல்வன் என


நிருத்திக்கொள்கின்றனர். நமக்கு முந்தைய தலைமுறையினரிடம் இருந்த அளவு வாசிக்கும்
பழக்கம் கூட நம்மிடையே இல்லை. அவர்கள் குறைந்தபட்சம் சமயம் சார்நத
் நூல்களை
வாசிக்கும் பழக்கத்தையாவது வைத்திருந்தனர். நம்மிடையே அதுவும் குன்றிவிட்டது. இதற்கு
தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணம் என்று பொதுப்படையாய் சொல்லிவிட முடியாது.
இணையத்தில் புத்தகம் வாசிக்கும் ஒரு கூட்டமும் உள்ளது. நானும் அந்த கூட்டத்தின் ஒரு
அங்கம் தான். அதனால் என்னால் இந்த கருத்தை ஏற்க முடியவில்லை. சிலர் சோம்பல்பட்டுக்
கொண்டு வாசிப்பது இல்லை. அவர்களால் நிச்சயம் இதை முழுவதுமாக படிக்க இயலாது. அறிவு
விசாலம் அடைதல், மொழியறிவை வளர்த்தல், சமூகத்தைப் பற்றியோ, ஒரு செய்தியைப்
பற்றியோ புதியதொரு பார்வையைக், கண்ணோட்டத்தைத் தருதல், என அந்த நூல் ஏதேனும்
காரணத்தைத் தன்னகத்தேக் கொண்டிருத்தல் வேண்டும். நாம் வாசிக்கும் நூல்களுக்கு
இத்தகைய அம்சங்கள் உண்டா???

வாசிக்கும் பழக்கம் இந்த தலைமுறையிடம் குன்றியதற்கு சில காரணங்களை நான்


குறிப்பிடுகிறேன். நம் கல்வி முறை. வாசித்தலை வெறுக்கும் அளவிற்கு மனனம் செய்தலை
மாணவர்களிடையே புகுத்தி வைத்திருக்கிறது. திருக்குறள் போன்றதொரு அருமையான நூல்
இருக்க முடியுமா? ஆனால் பள்ளி மாணவர்கள் அதனை வெறுக்கக் காரணம் என்ன? நாற்பது
குறள்களைக் கொடுத்து, அதில் இருபது குறள்களை மனப்பாடப் பகுதியில் சேர்த்துவிட்டு
தெரிந்தோ தெரியாமலோ மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தைக் கெடுத்துவிட்டனர். பாடப்
புத்தகத்தைக் காட்டிலும் சுஜாதா எழுதிய குறுந்தொகை விளக்கம் எளிதாய் இருப்பதன்
காரணமும் இது தான்.

நாம் சிறு வயதில் படித்த சிறுவர்களுக்கான புத்தகங்கள் அளவு இன்று வெளிவரும்


புத்தகங்கள் இல்லை என உறுதியாகக் கூறலாம். அதற்கு மேல் இன்றைய குழந்தைகள்
நிகழ்ச்சிகள் ஒரு சாபக் கேடு என்றே சொல்லலாம். ஒரு நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்ப
ஒளிபரப்புகின்றனர். அதில் தான் குழந்தைகள் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர்.
பெற்றோரும் அதனை ஒரு பொழுதுபோக்காக அனுமதிக்கின்றனர். இங்கு வாசிக்கும் பழக்கம்
முழுவதுமாக அடிபட்டுப் போகிறது.

பொதுவாக வாசித்தலை, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எள்ளிநகையாடும் ஒரு


கூட்டம் உண்டு. அவர்களுக்குப் பயந்தோ, அதுதான் பெருமை என்று நினைத்தோ சிலர்
வாசிப்பதே இல்லை. இதனைக் கல்லூரி மாணவர்கள் கண்கூடாகப் பார்க்கலாம். சிலர்
நேரவிரயம் எனவும் கருதுகின்றனர். அவர்களுக்கு வேறு தலையாய கடமைகள் இருக்கும்,
அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. இன்னும் சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதைப்
பெருமையாக எண்ணித் தமிழ் நூல்களை வாசிப்பதில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒன்று
சொல்லிக்கொள்கிறேன், எந்த மொழியாயினும் அது வாசிக்கும் நூலின் தரத்தைப்
பொருத்துதான் அமைகிறது. வாசிப்பதற்கு மொழியினால் பெருமையோ சிறுமையோ
கிடையாது.

வாசிக்கும் பழக்கம் இல்லை ஆனால், வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால்,


தங்களின் பழக்கத்தை மிக எளிமையான நூலில் இருந்து தொடங்கலாம். இல்லையேல் அது
கடினமாய்த் தான் இருக்கும். பிறருக்கு பரிசாய் நூல்களைக்கொடுக்கலாம். குறிப்பாக
குழந்தைகளுக்கு நூல்களைப் பரிசளியுங்கள். எவன் ஒருவன் அதிகம் வாசிக்கிறானோ
அவனால் தான் சபையில் சிறந்த முறையில் பேசவோ, சிறந்த நூல்களை எழுதவோ முடியும்.
இவ்விரண்டு ஆசைகள் உள்ளவர்கள் கட்டாயம் அதிகம் வாசியுங்கள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.


கேள்வி 2

தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை


அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில்
எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக்
கற்றுக் கொள்கின்றனர்’ என்கிறார்.

இந்த ஆங்கில பக்தி எப்படியெல்லாம் அறிவுத் திறனை சிதைக்கிறது?

முதலில் அது வகுப்பறையை உயிரோட்டமற்ற இடமாக மாற்றுகிறது. கற்பித்தல் என்பது


தெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்லும் பணி.
ஒரு ஆசிரியர் தனக்கு தரப்பட்ட பாடத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்படியான
சூழலை உருவாக்கினாலே போதும். மற்றவற்றை ஒரு மாணவனே கூட தேடிக் கண்டடைய எல்லா
வாய்ப்புக்களும் இன்று கிடைக்கின்றது. அந்த ஆர்வத்தை உருவாக்க எளிமையான
மொழிநடையும், உதாரணங்களும் கூடவே துடிப்பான உரையாடல்களும் தேவை. இந்த மூன்றையும்
சிதைப்பது ஆங்கிலத்தில் பேசவேண்டும் எனும் கட்டாய சூழல்.

மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம்


நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள
இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள். மாணவர்கள்  எளிதில் கவனம் சிதறும் இயல்பு
கொண்டவர்கள் என்பதால் அவர்கள் குறும்பு செய்யவோ அல்லது வேறு யோசனைக்கு
செல்லவோ நேர்கிறது. இது அதிகரிக்கையில் ஆசிரியர் ஆர்வமிழக்கிறார். இதுவே பள்ளி
ஒழுங்கீனத்தின் (பாடத்தை கவனிக்காதிருப்பது, வகுப்பு நேரத்தில் சேட்டைகள் செய்வது
உள்ளிட்ட) ஆரம்ப காரணி. மேலும் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப்பதால் ஆசிரியர் தமது
அறிவின் பரப்பை ஆங்கில மொழித்திறன் எனும் குறுகிய எல்லைக்குள் அடக்க
வேண்டியிருக்கிறது. இதனால் உதாரணங்களை அவர் தவிர்க்க நேரலாம். எதிர்திசையில்
மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க இயலாமல் போகிறது.

ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக


நிகழ்ந்துவிட இயலாது. ஒரு மொழியின் சமூக, அரசியல், பண்பாடு, கல்வி ஆகிய தளங்களில்
மற்றொரு மொழிபெறும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டே தாக்கமும் ஆதிக்கமும்
நிகழும் ஆங்கிலேயரின் ஆட்சி அகன்றாலும் ஆங்கில மொழியின் தாக்கத்திலிருந்து தமிழகம்
இன்னும் விடுபடவில்லை.

தற்பொழுதுள்ள காலகட்டத்தில் உலகத்தில் நிகழும் தொழில்கள், விஞ்ஞானச் செயல்கள்


பற்றிய தகவல்களை ஆங்கிலத்தின் மூலம்தான் பெறவேண்டியுள்ளது. தாய்மொழி பற்றிய தாழ்வு
மனப்பான்மையும், ஆங்கில மொழிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்ற எண்ணமும்
ஆங்கிலச் சொற்களை அதிகம் கையாளச் செய்கிறது. மொழியியல் அறிஞர்கள்
தமிழ்மொழியை பேச்சுத்தமிழ் என்றும், எழுத்துத் தமிழ் என்றும் இருவகையாகப் பிரிப்பர்.
தொடக்க நிலையில் எழுத்துத்தமிழ் கலப்பு இல்லாமல் தூய செந்தமிழாக்கதான் இருந்தது.
ஆனால் காலப்போக்கில் எழுத்துத்தமிழிலும் தென்றலாகவீச ஆரம்பித்தது. உலகின் ஒரு
பகுதியில் நிகழும் புதுமை நிகழ்சச
் ியை உலகின் பிறபகுதிகளுக்கு எடுத்துச் செல்லும்போது
அந்தப் புதுமை நிகழ்ச்சியின் செல்வாக்கு பிற மொழியில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக
அமைந்து விடுகிறது.

இந்தச் செல்வாக்கு பேச்சுமொழி, இலக்கிய மொழி இரண்டிலுமே ஊடுருவ


ஆரம்பிக்கின்றன. தாய் மொழியில் தேர்ச்சி உடையவர்களாலும், இருமொழி அல்லது பல மொழி
அறிஞர்களாலும் மட்டுமே பேச்சுத்தமிழில் கலந்து வரும் பிறமொழிச் சொற்களைக்
கண்காணிக்க முடிகிறது. பிறருக்கு எது தாய்மொழி எது வேற்றுமொழி என்னும்
மொழிபற்றியதான அறிவு இல்லாததால் பிறமொழிச் சொற்களைத் தங்களின் வசதிக்கேற்ப சில
உருபன்களைச் சேர்த்துப் பேசத்தொடங்குகின்றனர். ஆங்கிலச் சொற்களைத் தமிழ்மொழி
பேசுபவர்கள் மனமறிந்தும், சிலர் மனமறியாமலும் கலந்து பேசுகின்றனர். மட்டன், சிக்கன்
என்பதை தமிழ்ச்சொல் என்று நினைத்துப் பேசுகின்றனர். இது போன்று ஆங்கிலச்
சொற்களுக்கு தமிழாக்கம; தான் இது எனப் பிரித்து வெளிப்படையாகச் சொல்லத்
தெரியவில்லை. மேலும் பல சொற்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரே
பொருளுடையவைகளை ஒரு சிறப்பிடத்தில் ஒரு மொழிச் சொல்லையும், பிறிதொரு இடத்தில்
வேறுமொழிச் சொல்லையும் மாறாமல் பயன் படுத்துவதைக் காணமுடிகிறது. (எ-கா) ‘பெட்’
என்னும் ஆங்கிலச் சொல் லாட்ஜிலும் மருத்துவமனையிலும் பயன்படுத்துகிறார்கள். அதே
பொருளை வீட்டில் குறிப்பிடும் போது மெத்தை என்னும் தமிழ்ச் சொல்லும்
பயன்படுத்துகிறார்கள்.

நம் நாட்டில் இப்போது பெருகியுள்ள பண்பலை வரிசை என்னும் வானொலிகளில்,


பண்பற்ற சில செய்திகள் வருவதை நாம் காது குளிர கேட்கத்தான் செய்கிறோம் ;
மொழிக்கொலையையும் ஏற்கத்தான் செய்கிறோம். பாதி தமிழ் பாதி ஆங்கிலம் என்று கலப்படத்
தமிழ் பேசுகின்றனர்; தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் போல் ஒலிப்பதாகக் கருதி மென்று துப்பி
'லகர ளகர'க் கலவரம் புரியும் 'லகர பாண்டி'களாகி, 'இதுதான் ஊடகவியல் திறமை'
என்கின்றனர். தமிழின் சிறப்பெழுத்தாகிய "ழ' என்பதை ஒலிக்க முடியாமல் 'தமில் வால்க!'
என்பவர்களைக்கூட மன்னிக்கலாம். வேண்டுமென்றே தமிழில் உள்ள மடிநா ஒலியாகிய "ள'
என்பதை ஒழித்துக் கட்டுவதுபோல் "ல்' என்று நுனிநாக்குத் தமிழ் பேசுவதைப் பொறுத்துக்
கொள்ள முடியுமா? அவர்கல், வந்தார்கல், சொன்னார்கல், பெயர்கல் என்று ஒலிக்கின்றனர்.

தமிழை எதிர்க்கும் தமிழர்களுக்கு மலாய் மட்டுமில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை


தமிழும் தெரியவில்லை என்னும் நிலைமை. பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் 'வலது புறம்' 'இடது
புறம்' என்றால் தெரியாது. தமிழில் எண்கள் எழுதத் தெரியாது. பல தமிழாசிரியர்களுக்கும்கூட
இன்னும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குறிய விஷயமாகும். 'பதினெட்டு' என்றால்
தெரியாது, 'எய்ட்டீன்' என்று ஆங்கிலத்தில் சொல்லவேண்டும். 'நன்றி மறந்த தமிழர்கள்' என்று
கமலஹாசன் கூறினார். ஆம், 'நன்றி' என்று கூறமாட்டார்கள், 'தேங்க்ஸ்' என்பார்கள்.

தமிழ் தவிர பிற படிக்கத் தகுதியற்றவர்களும், மிகக் குறைந்த மதிப்பெண்


பெற்றவர்களும் இளங்கலை தமிழ் படிக்கிறார்கள்; பிற பாடம் படித்தவர்களும் முதுகலை தமிழ்
படிக்கிறார்கள்; இந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் தமிழ்பப் ாடத்தை
நடத்துகிறார்கள். தனியார்பள்ளி நிருவாகங்கள் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று
கட்டாயப்படுத்துகின்றன. குழந்தைகள் நிலைமையும் தமிழ் அறவே தெரியாத நிலை என்பதால்
"அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா' என்பதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துத்தான்
படிக்கின்றன.

தமிழை "டமில்' என்றுதான் சொல்லவேண்டும் என்பது இப்பள்ளிகளில் உள்ள சட்டம்;


"தமிழ் டீச்சர்' என்றால் அடிவிழும், "டமில் டீச்சர்' என்றுதான் கூறவேண்டும். ஆங்கிலப்
பள்ளிகளில் பள்ளி நேரத்தில் குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டனை. சில பள்ளிகளில்
"தண்டம்' கட்டவேண்டும். குழந்தைகள் வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசவேண்டும்; பெற்றவர்களும்
மற்றவர்களும் குழந்தையுடன் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள்
கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் வீட்டில் தமிழில் பேசும்
பெற்றோர்களுக்குத் "தண்டம்' விதிக்கும் நிலை வரலாம்.

"பாட்டன் தமிழை வீட்டிலாவது பேசுவோம்' என்று வெளிநாட்டுத் தமிழர்கள் தங்கள்


வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டார்கள். இன்று அதுவும் கெட்டது. "சொல்லில் உயர்வு தமிழ்ச்
சொல்லே! - அதைத் தொழுது படித்திடடி பாப்பா!' என்றார் பாரதியார். ஆனால் தமிழர்களின்
பிள்ளைகள் தமிழ் தெரியாமலே வளர்கின்றனர்.

இனி வரும் காலங்களில் ஆங்கிலச் சொல்லே தமிழ்ச் சொல்லாக மாறிவிடும் நிலை


வந்தாலும் வரும். பேச்சுத்தமிழில் அளவுக்கதிகமாக ஆங்கில மொழியின் தாக்கம் சென்றால்
தமிழ் மொழியின் நிலை என்ன? என்பதைச் சிந்தித் தோமேயானால், அதுவே நாம் தமிழ்
மொழிவளர்ச்சிக்குச் செய்கின்றத் தொண்டாகும் என்பதில் ஐயமில்லை.

You might also like